Thoshi
You are more powerful than you know😊❤
நினைவில் தத்தளிக்கும் நேசமது 14 :
காலை முதல் வேலை செய்த களைப்பில் ஆதவன் ஓய்வெடுக்க செல்ல , பூமி அழகிய பார்க்கும் ஆவலுடன் எட்டிப்பார்த்தது வான்மதி.
ஜிஷ்ணு அனைவரிடமும் விடைபெற்று கிளம்பிய சிறிது நேரத்தில் அங்கு வந்தார்கள் ரவி சக்ரவர்த்தியும் , ருத்திர வர்த்தனும் .
"டார்லிங் ......"என சத்தமாக கத்திக்கொண்டே வந்த ரவி சக்கரவர்த்தியை கண்ட ஷாலினி அவரிடம் செல்ல , அதற்குள் அவர்களை நெருங்கி வந்திருந்தவர் நாச்சியாரின் தோள்களில் கைபோட்டு , "என்ன நாச்சி...!??? மாமா வெளியூர் போயிட்டு வரேன் பல நாள் நம்பள பார்க்காம தவிச்சி போய்ற்பாரேனு நினைச்சி வரும்போது வாசல் நிக்கணும்னுலாம் இல்லையா "என முகம் சுருக்கியவர் தொடர்ந்து,"ஆனாலும் மாமன பார்க்காம கொஞ்சம் இளச்சிட்ட போல "என சிரிப்புடன் அவரின் கன்னத்தை நிமிண்டினார்..
அனைவரின் முன்பு அவர் செய்ததில் கன்னங்களில் செம்மை பூச பொய் கோபத்துடன் அவரை தள்ளிய நாச்சியார் , "ம்ம்க்கும்.... !!!! இவர் போர்க்கு போயிட்டு வராரு நான் ஆரத்தி எடுத்து வரவேற்க்குறன்... பேரன் வந்தும் கொஞ்சமாச்சி அடங்குறார பாரு " என பக்கத்தில் இருந்த மித்ராளினியிடம் பொய்யாய் சலித்தார்.
இத்தனை நேரம் ரவிசக்கரவர்த்தியின் பேச்சை முகம் மலர கேட்டுக் கொண்டிருந்தவள் நாச்சியாரின் சலிப்பில் வாய்விட்டு சிரித்து ,"ஆனா ஆண்ட்டி.. நீங்களும் அதை ரசிக்கிறீங்க தான் போலயே" என கண்சிமிட்டியபடி அவரின் சிவந்த முகத்தை தொட்டவளின் காதை செல்லமாய் திருகியவாறு,"நீயும் சரியான வாலு தான் போலயே" என்றார் நாச்சியார்.
அவளை கண்ட சக்கரவர்த்தி , "யார் இந்த ஏஞ்சல் ??"என்றும்.... ருத்ரவர்த்தன் ," யார் இந்த பெண்??" என்றும் ஒரே நேரத்தில் கேட்டனர் .
இத்தனை நேரம் அமைதியாய் இருந்த விஷ்வா ," அவங்க யாருன்றது இருக்கட்டும்.. நீங்க ரெண்டுபேரும் கொஞ்சம் திரும்பிப் பாருங்க ஒரு புயல் உங்களைத் தாக்க வருது..அதுல சிக்கி மீண்டு வந்திங்கனா இவங்க யாருனு பாப்போம் "என மித்ரேந்தரை தூக்கியவன், நாச்சியாரையும் மித்ராளினியையும் அழைத்துக்கொண்டு சென்றான்.
அவனின் பேச்சில் திரும்பி பார்த்த இருவரும் அங்கு இடுப்பில் கை வைத்து முறைத்து கொண்டிருந்த ஷாலினி கண்டு திருட்டு முழி முழிக்க... முதலில் சமாளித்த ரவி சக்கரவர்த்தி , "டார்லிங் எப்படா வந்த ??? நான் வரது தெரிஞ்சு என்னை பார்க்கறதுக்காக ஓடிவந்தியா டார்லிங்" என கேட்டவர், "ம்ம்ம்..... நல்லவேளை டார்லிங் நீ வந்துட்ட நான் உன்ன பார்க்காம உருகி போய்ட்டேன் தெரியுமா" என அப்பாவியாய் சொல்ல , அவரின் பேச்சில் வாயடைத்த ருத்ரவர்தன் சொல்லவந்ததை மறந்து முழித்தபடி நின்றதில், ஷாலினி சிரித்துவிட்டாள் .
"ஹாஹா , டார்லோமா ...நீங்க சரியான மாஸ்டர் பீஸ் போங்க"என சொல்லி சொல்லி சிரித்தாள் .
பின் ரவி சக்கரவர்த்தி சாப்பிட அமர ...விஷ்வாவோ ," அப்பாடா புயல் கரைய கடந்துடுச்சி போலேயே" என சொல்லிகொண்டே அங்கு வந்தவன் ருத்ரவர்தனுடன் அமர்ந்து பேச ஆரம்பித்தான் .
"அத்தம்மா ..!! நான் போய் சித்து ரூம்ல பிரெஷ் ஆகிட்டு வந்துட்றேன்" என சற்று தள்ளி ருத்ரவர்தனுடன் பேசிக்கொண்டிருந்த விஷ்வாவின் காதில் கேட்பதை போல் கத்தி சொல்லிய ஷாலினியின் முகம் கடந்த முறை நடந்ததை எண்ணி சிவந்தாலும் மனம் அவனின் அருகாமைக்காய் ஏங்கியது .
விஷ்வாவிற்கும் அந்நினைவில் கால்கள் அவள் பின் செல்ல தூண்ட ருத்ரவர்தனிடம் ," மாமா ...! டைம் ஆகிடிச்சி நீங்க சாப்பிடுங்க "என அவ்விடம் விட்டு நகர்ந்தான்.
அப்பொழுது மித்ராளினி, "பசி இல்லை" என குழந்தையை மடியில் வைத்து கொண்டு நாச்சியாரிடம் மறுத்துகொண்டிருக்க.. அதை கண்டு அவளிடம் வந்தவன் மித்ரேந்தரை தூக்கி கொண்டு , "ஏஞ்சல் !!!! உங்களுக்கு இன்னும் முழுசா குணமாகல மெடிசின்ஸ் எடுக்கிறதுக்காகவாது சாப்பிடணும் .. வாங்க " என அவனே அவளை டைனிங்டேபிள் வரை கூட்டிச்சென்று பரிமாறினான்.
அவனின் செயலை நாச்சியாரும், ரவி சக்கரவர்த்தியும் சிரிப்புடன் பார்க்க ருத்ரவர்த்தன் மட்டும் யோசனையுடன் பார்த்தார் .மித்ராளினியை சாப்பிட வைப்பதில் ஷாலினியை மறந்து விஷ்வா அங்கயே அமர்ந்திருக்க.....ஷாலினியோ விஷ்வா வருவானென்று சித்ராங்கதாவின் அறைக்கு செல்லாமல் கதவின் முன் நின்று படிகளையே பார்த்திருந்தாள்.
சாப்பிட்டு முடித்த மித்ராளினியிடம் அவளை ரூமிற்கு சென்று ரெஸ்ட் எடுக்க சொல்லிய விஷ்வா மித்ரேந்தரை அமர்ந்திருந்த ரவி சக்கரவர்த்தியிடம் கொடுத்துவிட்டு அவளுக்கு தேவையான மருந்துகளை கொடுப்பதற்கு அவளுடன் சென்றான்.
சரியாய் அவள் ரூமினுள் சென்ற நேரத்தில் வீட்டினுள் நுழைந்தார்கள் ஜித்தேந்தரும் ,சித்ராங்கதாவும்.
அங்கு அமர்ந்திருந்த ருத்திரவர்தனை கண்ட ஜித்தேந்தர் , "எப்படி இருக்கீங்க மாமா ??? சாப்டிங்களா ???" என விசாரித்தான்.
"இல்லப்பா....பாப்பா பிரெஷ் ஆகிட்டு வரேன் சொன்னா அதான் சேர்ந்து சாப்பிடலாம்னு இருக்கேன் ..போ பா நீ போய் சாப்பிடு ரொம்ப டயர்ட் ஆஹ் தெரியுற " என்ற ருத்ரவர்தனிடம் ஒற்றை தலையசைப்புடன் விலகி மித்ரேந்தரை தேடிச் சென்றான்.
பின்னால் வந்த சித்ராங்கதா அமைதியாய் படியேறுவதை அறை விட்டு வெளி வந்த விஷ்வா பார்த்து விட்டு ," என்னாச்சி இவளுக்கு ??? எப்பவும் இவ வீட்டுக்கு வந்துட்டான்னு ஊருக்கே தெரியுரமாதிரி கத்திக்கிட்டே வருவா இப்போ இவ்ளோ அமைதியாய் போறா???" என தனக்குள் கேட்டவன் அனைவரும் இருந்ததில் பிறகு தனியாய் அவளிடம் பேச வேண்டுமென மனதில் குறித்துக்கொண்டான் .
மேலே விஷ்வாவிற்காக காத்திருந்த ஷாலினி அவன் வராததால் காத்திருப்பு கோபமாக மாற வேகமாய் கீழ் இறங்கினாள்.
படியில் ஏதோ யோசனையுடன் வந்த சித்ராங்கதாவை பார்த்து ,"இவளுக்கும் இவ அண்ணனுக்கும் தான் மூளையே இல்லயே அப்றம் எதுக்கு யோசிக்கறா ??"என," சித்து...ஏ சித்து "என்று அவளை உலுக்கினாள் .
இவளது உலுக்கலில் நினைவு வந்த சித்ராங்கதா , "ஆங்... என்னடி ???எதுக்கு இப்போ என்ன குலுக்கி விளையாட்ற ??"என கேட்க,
அவளின் கேள்வியில் வெறியானவள் ,"அடியே பாவம் புள்ள பேய் அடிச்ச மாதிரி வருதேன்னு விசாரிக்க வந்தா ...குளுக்கி விளையாட்றேன்னா சொல்ற.!!!! என்னடி ஆச்சு உனக்கு??"
சித்ராங்கதா , "ஆங் ... ஒண்ணுமில்லடி . தலை வலிக்குது நான் போய் தூங்குறேன் ...நீ அம்மா கிட்ட எனக்கு சாப்பாடு வேணாம்னு சொல்லிடு ப்ளீஸ்" என வேகமாய் சொல்லியவள் தன் அறைக்கு சென்று விட்டாள்.
........................................................................................................................................................................................................................
டைனிங்ஹாலில் தன் தந்தையின் மடியில் இருந்த மித்ரேந்தரை தூக்கினான் ஜித்தேந்தர் . தனது நாணாவின் ஸ்பரிசத்தை கண்டுக்கொண்டு தூக்கத்திலே சிரித்த குழந்தையின் கன்னத்தில் முத்தமிட்டு குழந்தையின் துயில் கலையாவண்ணம் நெஞ்சோடு அணைத்தான்.
நாச்சியாரிடம் பசியில்லை என்றவன் அனைவரிடமும் ஒற்றை தலையசைப்புடன் விடைபெற்று தன் அறை சென்றான்.
இரவுஉணவு அமைதியாய் முடிய அனைவரும் உறங்குவதற்காக அவரவர் அறை சென்றனர் .
நடுஇரவு :
மாலையில் தூங்கியதால் தூக்கம் வராமல் விழித்திருந்தாள் மித்ராளினி . விஷ்வாவோ பக்கத்தில் இருந்தும் ஷாலினியிடம் பேசாததில் நித்ராதேவியை அணைக்க முடியாமல் அறையில் நடந்துகொண்டிருந்தான்.
ஜித்தேந்தரோ வழக்கம்போல் தன்னவளின் புகைப்படத்திடம் லயித்திருந்தான் .
மூன்று இதயங்களும் தூங்காமல் தவித்திருக்க அந்த விதியும் ஜித்தனிடம் விளையாட ஆசை கொண்டது போல் , சரியாய் மித்ரேந்தர் விழித்து அழ ஆரம்பித்தான் .
குழந்தை பசியில் அழுவதை கண்டுகொண்ட ஜித்தேந்தர் அவனை தூக்கியவாறு அறைவிட்டு வெளிவந்து படிகளில் இறங்க, அவனின் இதழ்களோ மகனின் அழுகையை குறைப்பதற்காக பாடலை இசைத்தன .
ஆாிரோ ஆராாிரோ
இது தந்தையின் தாலாட்டு....
பூமியே புதிதானதே இவன்
மழலையின் மொழி கேட்டு....
ஓ ....தாயாக தந்தை மாறும்
புதுக் காவியம்....
ஓ .....இவன்
வரைந்த கிறுக்கலில்
இவளோ உயிரோவியம்...
இரு உயிா் ஒன்று
சோ்ந்து இங்கு
ஓா் உயிா்
ஆகுதே ....
கருவறை இல்லை
என்ற போதும் சுமந்திடத்
தோணுதே ...விழியோரம்
ஈரம் வந்து குடை கேட்குதே.....
ஆாிரோ ஆராாிரோ
இது தந்தையின் தாலாட்டு....
பூமியே புதிதானதே இவன்
மழலையின் மொழி கேட்டு....
இவனின் குரலை கேட்டு ஒரு நொடி அதிர்ந்த மித்ராளினி வேகவேகமாய் அறை விட்டு வெளி வர, அதே நேரம் தூக்கம் வராமல் இருந்த விஷ்வாவும் ஜித்தேந்தர் படிகளில் இறங்குவதை கண்டு தானும் இறங்கியவன் ,
"அண்ணா மித்துகுட்டிய குடுங்க ... நான் வச்சிக்கிறேன் "என்றான்.
"இந்த நேரத்தில் என்ன செய்ற!!"என்பது போல் பார்த்த ஜித்தேந்தர் ஒன்றும் பேசாமல் மித்ரேந்தரை குடுத்துவிட்டு கிட்சனுள் நுழைந்தான்.
அப்பொழுது அங்கு வந்த மித்ராளினி , குழந்தை விஷ்வாவின் கைகளில் இருப்பதை பார்த்து ,"இவரா இப்போ பாடினாரு ...ஆமா இவர் குழந்தை தான அப்போ இவர் தான் பாடிற்ப்பாரு...ஆனா அந்த குரல்" என குழம்பிய மனதுடன் அவனிடம் பேசாமலே தன் அறை சென்றாள்.
விதியதற்க்கு
விளையாட ஏதுமில்லையோ ??
கைகளில் இருக்கும் பொம்மலாட்டத்தின்
கயிறுகளை
அருகிலிழுத்தும்...
பிரித்தும் ...
விளையாடுகிறது !!
பூமி அழகியை ரசித்தது போதும் இனி அவள் என்பொறுப்பு என்று வான்மதிக்கு விடைக்கொடுத்து உதயமானன் கதிரவன்.
வழக்கம்போல் அதிகாலையிலயே எழுந்து பூஜை செய்து கொண்டிருந்த நாச்சியார் காலடிச்சத்தத்தில் திரும்பி பார்த்தார்.
மித்ரேந்தரை தூக்கி கொண்டு வந்துகொண்டிருந்தான் ஜித்தேந்தர் . வெளியே செல்வது போல் உடை அணிந்திருப்பவனை கண்டவர் கேள்வியாய் அவனை நோக்க ,
"மாம் ....!!! நான் மும்பை கிளம்பறேன் வர டூ டேய்ஸ் ஆகும் ...மித்துக்குட்டி ஆஹ் பார்த்துக்கோங்க அவன் எழுந்தப்பரும் எனக்கு வீடியோ கால் பண்ணுங்க, பாய் !!" என அவசரஅவசரமாக பேசிய ஜித்தேந்தர் அவர் கேள்விகேட்பதற்கு இடமளிக்காமலே சென்றுவிட்டான் .
நாச்சியாரோ , "ம்ம்க்கும்.....!!! ஒன்னு பேசவே மாட்டான்...தப்பித்தவறி பேசுனா மத்தவங்கள பேசவிடாம அவன் மட்டுமே பேசிட்டு போவான் " என புலம்ப ஆரம்பித்துவிட்டார் .
அந்த நேரத்தில் தடதட என மீண்டும் காலடி சத்தம் கேட்க , "அட என்ன இது?? இந்த வீட்ல என்னையும் கண்ணப்பாவையும் தவிர இந்நேரத்துக்கு வேற யாரும் எழுந்துக்க மாட்டார்களே !!!யாரு வரது" என்று ஆச்சரியமாய் திரும்பியவர் அங்கு சித்ராங்கதா வேகமாய் இறங்கி வருவதை கண்டு...
"ஏய் ...என்னடி அதிசயமா இவ்ளோ சீக்கிரம் எழுந்துட்ட.??"
தன் அன்னையின் கேள்வியில் முதலில் முழித்தவள் பின் , "மாம் ட்ரைனிங்க்கு மார்னிங் வர சொல்லிர்ந்தாங்க 'என்றாள்.
நாச்சியார் , "அதுக்குன்னு இவ்ளோ காலையிலயா டி ? மணி 5.30 தான் ஆகுது ".
சித்ராங்கதா , "மாம் ...!! ப்ளீஸ் டைம் ஆகுது. நான் வந்து உங்களுக்கு பதில் சொல்றேன் "என நகர்ந்தவள் பின் நின்று," மாம் ....!!!அப்பா வந்துட்டாரா ??" என கேட்க அதில் நாச்சியார் அவளை முறைக்க ,
"அடடா எதுக்கு இப்போ மாம் காளி மாதா மோட்க்கு மாறுறாங்க .. ஏதோ தப்பா கேட்டுட்டோம் போலயே....சித்து குட்டி எஸ் ஆகிடுடி செல்லம்" என மனதில் பேசியவள்,
"ஹீஹீ மாம்..!!! நான் அப்றம் அப்பாக்கு போன் பண்ணி பேசுறேன் . பாய் பாய் மாம் "என அவரின் கன்னத்தில் முத்தமிட்டுவிட்டு ஓடிவிட்டாள் .
அவளின் செயலில் சிரித்தவர் மித்ரேந்தரை தொட்டிலில் படுக்க வைத்துவிட்டு , விட்ட பூஜையை தொடர சென்றார் .
சிறிது நேரத்தில் அனைவரும் எழுந்து கொள்ள ஹாலிற்கு வந்த மித்ராளினி தொட்டிலில் இருந்த மித்ரேந்தரை தூக்கி மடியில் கிடத்தியவாறு சோபாவில் அமர்ந்துக்கொண்டாள் .அவளை பார்த்து புன்னகை சிந்திய ஷாலினி விஷ்வாவின் வரவை எதிர்பார்த்திருந்தாள்.
ருத்ரவர்தனோ மித்ராளினியை பார்த்து புன்னகைத்தவர் ஷாலினியிடம் , "பாப்பா அம்மா நம்பள சீக்கிரம் வர சொன்னாடா ..கிளம்பலாமா "என கேட்டார்.
அங்கு வந்த ரவி சக்கரவர்த்தி , "என்ன மாப்பிள்ளை!!! இப்போ தான எழுந்திங்க கொஞ்ச நேரம் கழிச்சி சாப்பிட்டு போங்க "என சொல்ல...
ருத்ரவர்தானோ , "இல்ல மச்சான்...!!! உங்க தங்கச்சி காலையில இருந்து பத்து தடவைக்கு மேல போன் பண்ணிட்டா.நேத்தும் வீட்டுக்கு போலல ,பாப்பாவும் இங்கயே இருந்துட்டா அதான் ".
நாச்சியார் , "ஏங்க.. அண்ணா சொல்றது சரிதான்.... அண்ணியும் அங்க தனியா இருப்பாங்கள , நீங்க கிளம்புங்க அண்ணா சாயந்திரம் அண்ணியை கூட்டிட்டு வாங்க" என,
"சரிமா ...!!!நாங்க கிளம்பறோம்.. வரோம் மச்சான் " என்றவர் மித்ராளினியிடமும் ,"போயிட்டு வரோம்மா " என விடைபெற்றார் .
ஷாலினி விஷ்வாவிடம் பேசுவதற்காக வந்தவள் கடைசி வரை பேசாததில் வருத்தத்துடன் கிளம்பினாள்.
சிறிது நேரம் கழித்து ஹால்லிற்கு வந்த விஷ்வா அங்கிருந்த மித்ராளினியிடம் பேசிகொண்டே குழந்தையுடன் விளையாடினான். வேறு யாரும் தென்படாததில் "அம்மா.... " என்றழைத்தவன் ,' மா !!!! என்ன யாரையுமே காணோம் " என கேட்டான்.
நாச்சியார் ," சித்து குட்டியும் , கண்ணப்பாவும் ஏதோ முக்கியமான வேலை இருக்குனு சீக்கிரம் கிளம்பிட்டாங்க டா .உங்க மாமாவும் ,ஷாலினியும் இப்போ தான் அண்ணி போன் பண்ணாங்கன்னு போனாங்க" என பதிலளித்ததில்,
'அட இவளுக்கு என்கூட பேசணும்னு தோணவே இல்லையா , அதுக்குள்ள கிளம்பிட்டா " என்று யோசித்தபடி விஷ்வா அமைதியாய் இருக்க,
அவனை கண்டுகொள்ளாத நாச்சியார் ,தங்களின் பேச்சில் முழித்துக் கொண்டிருந்த மித்ராளினியிடம் , "நீ இன்னும் என் பெரிய பையனையும் , பொண்ணையும் பார்க்கலைலமா . அவங்க நேத்து நீ தூங்க போனப்பறம் தான் வந்தாங்க ...தோ இப்பவும் அவசர அவசரமா கிளம்பி போய்ட்டாங்க ".
இப்பொழுது இடையில் குறுக்கிட்ட விஷ்வா , "மா ....!!அந்த குரங்கு எதுக்கு இவ்ளோ சீக்கிரம் போயிருக்கு??" என கேட்க,
அவனின் மண்டையில் கொட்டி, "எப்பப்பாரு அவளை எதாவது சொல்லிட்டே இருப்பியாடா "என்றவர், மித்ராளினியிடம் "சித்து குட்டி இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துருவாமா...கண்ணப்பா தான் வர ரெண்டு நாள் ஆகும் "என்றார்.
...........................................................................................................................................................
திருவல்லிக்கேணி போலீஸ் குவார்ட்டஸ் :
இன்று காலையில் மித்ராளினியை பார்க்க போகவேண்டுமென்று நினைத்து வெளியே செல்லாமல் குவார்ட்டஸை சுற்றி ஓடிக்கொண்டிருந்தான் ஜிஷ்ணு.
சிறிது நேரம் ஓடியவன் ,உடலில் வழியும் வியர்வையை தோளில் இருந்த துண்டினால் துடைத்தவாறு தன் வீட்டை நோக்கி நடந்தான்.
வீட்டீன் கதவு திறந்திருந்ததில் விழியில் ஆராய்ச்சியுடன் சுற்றி பார்த்தவன் ...கதவின் பின் வீட்டினுள் நடக்கும் ஓசை கேட்டு எப்பொழுதும் தன் பேண்டில் வைத்திருக்கும் துப்பாக்கியை எடுத்து கையில் வைத்துகொண்டு கதவை தட்டினான் .
காலடி சத்தம் கதவை நெருங்க துப்பாக்கியை இறுக்கி பிடித்தவன் கதவு திறந்த நொடி அதை எதிரிலிருப்பவரின் நெற்றியில் வைத்திருந்தான் .
"அய்யயோ ....!!! உன்ன லவ் பண்றது ஒரு குத்தமாய்யா. என்னை இப்படி போட்டு தள்ள பார்க்குற" என கத்தியது சாட்சாத் நம்ப சித்ராங்கதா தான்.
அவளை தன் வீட்டினுள் எதிர்பார்க்காத ஜிஷ்ணுவின் நினைவுகளோ இரண்டாம் முறையாய் அவளை கண்ட நொடிகளுக்கு பயணப்பட்டது.அவனின் உறைநிலையில் அவளின் மனமும் அவனுடன் ஜோடி சேர்ந்து அந்த நொடிகளுக்கு பயணபட்டது.
உணர்வலை:
அன்றொருநாள் கல்லூரிக்கு நேரமானதால் வழக்கமாய் போகும் வழியில் அல்லாமல் குறுக்கு வழியில் வேகமாய் சென்று கொண்டிருந்தவள் எதிரே ஒருவன் மற்றவனை அடிவெலுப்பதை பார்த்து தனது ஸ்கூட்டியை நிறுத்திவிட்டு வேகமாய் அங்கு சென்றாள் .
இவள் அருகில் சென்ற நேரம் அடித்துக்கொண்டிருந்தவன் சட்டென்று துப்பாக்கியை எடுத்து நீட்ட நடுவில் சென்ற இவளின் நெற்றியை உரசியது துப்பாக்கியின் முனை .
ஒரு நிமிடம் அதிர்ந்த சித்ராங்கதா எதிரே இருப்பவனை கண்டு விழிவிரித்தவள் , அதிர்ச்சி போய் அவனை ரசிக்க ஆரம்பித்துவிட்டாள் .( சைட் அடிக்க உனக்கு நேரம் காலமே இல்லையாமா).
அவள் முன் இத்தனை நேரம் சண்டையிட்டதில் வியர்வை வழிய நின்றிருந்தான் ஜிஷ்ணு ...தன்முன் நிற்பவளை ஒரே பார்வையிலே கண்டுகொண்டவன் கண்கள் மின்ன அவளின் கை பிடித்து தன் புறம் இழுத்து, அவளின் கண்களை பார்த்தவாரே எதிரே இருந்தவனின் நெஞ்சில் தோட்டாவை பாய்ச்சினான் .
தோட்டாவின் சத்தத்தில் கலைந்தவள் அவனின் முகத்தையே விழியெடுக்காமல் பார்க்க அவளின் அப்பார்வையில் அவனின் நெஞ்சில் மகிழ்ச்சி ரகசியமாய் ஊற்றெடுத்தது .
அதை கண்களில் காட்டா வண்ணம் அதற்க்கு கருப்பு நிற கண்ணாடியை அணிந்தவன் , கைகளால் பின்னந்தலையை கோதியவாறு அங்கிருந்து செல்ல அவனின் உதடுகளோ ரகசிய சிரிப்பில் வளைந்திருந்தன.
செல்லும் அவனை கண்ட சித்ராங்கதாவோ , "நம்ப ஆள் பார்க்க தான் பெசஞ்ச மாவு மாதிரி இருக்கான் ஆனா சரியான அதிரடி பார்ட்டி போல....ப்ப்ப்பா எப்படி அடிக்கிறான் !!!! போலீஸ்னா இப்படியா அடிப்பாங்க??? சரியான ரவுடி பேபி "என முணுமுணுத்தவாறு தன் ஸ்கூட்டியின் அருகில் சென்றாள்.
அதன் பின் அவனை அவளது கல்லூரியின் வாயிலில் அடிக்கடி பார்க்க நேரிட , "நம்ப ஆள சைட் அடிக்க நம்ப பிரண்ட் ஆஞ்சநேயர் உதவி பன்றாரு போலயே "என விளையாட்டாய் எண்ணியவளின் எண்ணத்தை தவிடு பொடியாக்க விதி காத்திருந்தது.
-கரைவாள்
காலை முதல் வேலை செய்த களைப்பில் ஆதவன் ஓய்வெடுக்க செல்ல , பூமி அழகிய பார்க்கும் ஆவலுடன் எட்டிப்பார்த்தது வான்மதி.
ஜிஷ்ணு அனைவரிடமும் விடைபெற்று கிளம்பிய சிறிது நேரத்தில் அங்கு வந்தார்கள் ரவி சக்ரவர்த்தியும் , ருத்திர வர்த்தனும் .
"டார்லிங் ......"என சத்தமாக கத்திக்கொண்டே வந்த ரவி சக்கரவர்த்தியை கண்ட ஷாலினி அவரிடம் செல்ல , அதற்குள் அவர்களை நெருங்கி வந்திருந்தவர் நாச்சியாரின் தோள்களில் கைபோட்டு , "என்ன நாச்சி...!??? மாமா வெளியூர் போயிட்டு வரேன் பல நாள் நம்பள பார்க்காம தவிச்சி போய்ற்பாரேனு நினைச்சி வரும்போது வாசல் நிக்கணும்னுலாம் இல்லையா "என முகம் சுருக்கியவர் தொடர்ந்து,"ஆனாலும் மாமன பார்க்காம கொஞ்சம் இளச்சிட்ட போல "என சிரிப்புடன் அவரின் கன்னத்தை நிமிண்டினார்..
அனைவரின் முன்பு அவர் செய்ததில் கன்னங்களில் செம்மை பூச பொய் கோபத்துடன் அவரை தள்ளிய நாச்சியார் , "ம்ம்க்கும்.... !!!! இவர் போர்க்கு போயிட்டு வராரு நான் ஆரத்தி எடுத்து வரவேற்க்குறன்... பேரன் வந்தும் கொஞ்சமாச்சி அடங்குறார பாரு " என பக்கத்தில் இருந்த மித்ராளினியிடம் பொய்யாய் சலித்தார்.
இத்தனை நேரம் ரவிசக்கரவர்த்தியின் பேச்சை முகம் மலர கேட்டுக் கொண்டிருந்தவள் நாச்சியாரின் சலிப்பில் வாய்விட்டு சிரித்து ,"ஆனா ஆண்ட்டி.. நீங்களும் அதை ரசிக்கிறீங்க தான் போலயே" என கண்சிமிட்டியபடி அவரின் சிவந்த முகத்தை தொட்டவளின் காதை செல்லமாய் திருகியவாறு,"நீயும் சரியான வாலு தான் போலயே" என்றார் நாச்சியார்.
அவளை கண்ட சக்கரவர்த்தி , "யார் இந்த ஏஞ்சல் ??"என்றும்.... ருத்ரவர்த்தன் ," யார் இந்த பெண்??" என்றும் ஒரே நேரத்தில் கேட்டனர் .
இத்தனை நேரம் அமைதியாய் இருந்த விஷ்வா ," அவங்க யாருன்றது இருக்கட்டும்.. நீங்க ரெண்டுபேரும் கொஞ்சம் திரும்பிப் பாருங்க ஒரு புயல் உங்களைத் தாக்க வருது..அதுல சிக்கி மீண்டு வந்திங்கனா இவங்க யாருனு பாப்போம் "என மித்ரேந்தரை தூக்கியவன், நாச்சியாரையும் மித்ராளினியையும் அழைத்துக்கொண்டு சென்றான்.
அவனின் பேச்சில் திரும்பி பார்த்த இருவரும் அங்கு இடுப்பில் கை வைத்து முறைத்து கொண்டிருந்த ஷாலினி கண்டு திருட்டு முழி முழிக்க... முதலில் சமாளித்த ரவி சக்கரவர்த்தி , "டார்லிங் எப்படா வந்த ??? நான் வரது தெரிஞ்சு என்னை பார்க்கறதுக்காக ஓடிவந்தியா டார்லிங்" என கேட்டவர், "ம்ம்ம்..... நல்லவேளை டார்லிங் நீ வந்துட்ட நான் உன்ன பார்க்காம உருகி போய்ட்டேன் தெரியுமா" என அப்பாவியாய் சொல்ல , அவரின் பேச்சில் வாயடைத்த ருத்ரவர்தன் சொல்லவந்ததை மறந்து முழித்தபடி நின்றதில், ஷாலினி சிரித்துவிட்டாள் .
"ஹாஹா , டார்லோமா ...நீங்க சரியான மாஸ்டர் பீஸ் போங்க"என சொல்லி சொல்லி சிரித்தாள் .
பின் ரவி சக்கரவர்த்தி சாப்பிட அமர ...விஷ்வாவோ ," அப்பாடா புயல் கரைய கடந்துடுச்சி போலேயே" என சொல்லிகொண்டே அங்கு வந்தவன் ருத்ரவர்தனுடன் அமர்ந்து பேச ஆரம்பித்தான் .
"அத்தம்மா ..!! நான் போய் சித்து ரூம்ல பிரெஷ் ஆகிட்டு வந்துட்றேன்" என சற்று தள்ளி ருத்ரவர்தனுடன் பேசிக்கொண்டிருந்த விஷ்வாவின் காதில் கேட்பதை போல் கத்தி சொல்லிய ஷாலினியின் முகம் கடந்த முறை நடந்ததை எண்ணி சிவந்தாலும் மனம் அவனின் அருகாமைக்காய் ஏங்கியது .
விஷ்வாவிற்கும் அந்நினைவில் கால்கள் அவள் பின் செல்ல தூண்ட ருத்ரவர்தனிடம் ," மாமா ...! டைம் ஆகிடிச்சி நீங்க சாப்பிடுங்க "என அவ்விடம் விட்டு நகர்ந்தான்.
அப்பொழுது மித்ராளினி, "பசி இல்லை" என குழந்தையை மடியில் வைத்து கொண்டு நாச்சியாரிடம் மறுத்துகொண்டிருக்க.. அதை கண்டு அவளிடம் வந்தவன் மித்ரேந்தரை தூக்கி கொண்டு , "ஏஞ்சல் !!!! உங்களுக்கு இன்னும் முழுசா குணமாகல மெடிசின்ஸ் எடுக்கிறதுக்காகவாது சாப்பிடணும் .. வாங்க " என அவனே அவளை டைனிங்டேபிள் வரை கூட்டிச்சென்று பரிமாறினான்.
அவனின் செயலை நாச்சியாரும், ரவி சக்கரவர்த்தியும் சிரிப்புடன் பார்க்க ருத்ரவர்த்தன் மட்டும் யோசனையுடன் பார்த்தார் .மித்ராளினியை சாப்பிட வைப்பதில் ஷாலினியை மறந்து விஷ்வா அங்கயே அமர்ந்திருக்க.....ஷாலினியோ விஷ்வா வருவானென்று சித்ராங்கதாவின் அறைக்கு செல்லாமல் கதவின் முன் நின்று படிகளையே பார்த்திருந்தாள்.
சாப்பிட்டு முடித்த மித்ராளினியிடம் அவளை ரூமிற்கு சென்று ரெஸ்ட் எடுக்க சொல்லிய விஷ்வா மித்ரேந்தரை அமர்ந்திருந்த ரவி சக்கரவர்த்தியிடம் கொடுத்துவிட்டு அவளுக்கு தேவையான மருந்துகளை கொடுப்பதற்கு அவளுடன் சென்றான்.
சரியாய் அவள் ரூமினுள் சென்ற நேரத்தில் வீட்டினுள் நுழைந்தார்கள் ஜித்தேந்தரும் ,சித்ராங்கதாவும்.
அங்கு அமர்ந்திருந்த ருத்திரவர்தனை கண்ட ஜித்தேந்தர் , "எப்படி இருக்கீங்க மாமா ??? சாப்டிங்களா ???" என விசாரித்தான்.
"இல்லப்பா....பாப்பா பிரெஷ் ஆகிட்டு வரேன் சொன்னா அதான் சேர்ந்து சாப்பிடலாம்னு இருக்கேன் ..போ பா நீ போய் சாப்பிடு ரொம்ப டயர்ட் ஆஹ் தெரியுற " என்ற ருத்ரவர்தனிடம் ஒற்றை தலையசைப்புடன் விலகி மித்ரேந்தரை தேடிச் சென்றான்.
பின்னால் வந்த சித்ராங்கதா அமைதியாய் படியேறுவதை அறை விட்டு வெளி வந்த விஷ்வா பார்த்து விட்டு ," என்னாச்சி இவளுக்கு ??? எப்பவும் இவ வீட்டுக்கு வந்துட்டான்னு ஊருக்கே தெரியுரமாதிரி கத்திக்கிட்டே வருவா இப்போ இவ்ளோ அமைதியாய் போறா???" என தனக்குள் கேட்டவன் அனைவரும் இருந்ததில் பிறகு தனியாய் அவளிடம் பேச வேண்டுமென மனதில் குறித்துக்கொண்டான் .
மேலே விஷ்வாவிற்காக காத்திருந்த ஷாலினி அவன் வராததால் காத்திருப்பு கோபமாக மாற வேகமாய் கீழ் இறங்கினாள்.
படியில் ஏதோ யோசனையுடன் வந்த சித்ராங்கதாவை பார்த்து ,"இவளுக்கும் இவ அண்ணனுக்கும் தான் மூளையே இல்லயே அப்றம் எதுக்கு யோசிக்கறா ??"என," சித்து...ஏ சித்து "என்று அவளை உலுக்கினாள் .
இவளது உலுக்கலில் நினைவு வந்த சித்ராங்கதா , "ஆங்... என்னடி ???எதுக்கு இப்போ என்ன குலுக்கி விளையாட்ற ??"என கேட்க,
அவளின் கேள்வியில் வெறியானவள் ,"அடியே பாவம் புள்ள பேய் அடிச்ச மாதிரி வருதேன்னு விசாரிக்க வந்தா ...குளுக்கி விளையாட்றேன்னா சொல்ற.!!!! என்னடி ஆச்சு உனக்கு??"
சித்ராங்கதா , "ஆங் ... ஒண்ணுமில்லடி . தலை வலிக்குது நான் போய் தூங்குறேன் ...நீ அம்மா கிட்ட எனக்கு சாப்பாடு வேணாம்னு சொல்லிடு ப்ளீஸ்" என வேகமாய் சொல்லியவள் தன் அறைக்கு சென்று விட்டாள்.
........................................................................................................................................................................................................................
டைனிங்ஹாலில் தன் தந்தையின் மடியில் இருந்த மித்ரேந்தரை தூக்கினான் ஜித்தேந்தர் . தனது நாணாவின் ஸ்பரிசத்தை கண்டுக்கொண்டு தூக்கத்திலே சிரித்த குழந்தையின் கன்னத்தில் முத்தமிட்டு குழந்தையின் துயில் கலையாவண்ணம் நெஞ்சோடு அணைத்தான்.
நாச்சியாரிடம் பசியில்லை என்றவன் அனைவரிடமும் ஒற்றை தலையசைப்புடன் விடைபெற்று தன் அறை சென்றான்.
இரவுஉணவு அமைதியாய் முடிய அனைவரும் உறங்குவதற்காக அவரவர் அறை சென்றனர் .
நடுஇரவு :
மாலையில் தூங்கியதால் தூக்கம் வராமல் விழித்திருந்தாள் மித்ராளினி . விஷ்வாவோ பக்கத்தில் இருந்தும் ஷாலினியிடம் பேசாததில் நித்ராதேவியை அணைக்க முடியாமல் அறையில் நடந்துகொண்டிருந்தான்.
ஜித்தேந்தரோ வழக்கம்போல் தன்னவளின் புகைப்படத்திடம் லயித்திருந்தான் .
மூன்று இதயங்களும் தூங்காமல் தவித்திருக்க அந்த விதியும் ஜித்தனிடம் விளையாட ஆசை கொண்டது போல் , சரியாய் மித்ரேந்தர் விழித்து அழ ஆரம்பித்தான் .
குழந்தை பசியில் அழுவதை கண்டுகொண்ட ஜித்தேந்தர் அவனை தூக்கியவாறு அறைவிட்டு வெளிவந்து படிகளில் இறங்க, அவனின் இதழ்களோ மகனின் அழுகையை குறைப்பதற்காக பாடலை இசைத்தன .
ஆாிரோ ஆராாிரோ
இது தந்தையின் தாலாட்டு....
பூமியே புதிதானதே இவன்
மழலையின் மொழி கேட்டு....
ஓ ....தாயாக தந்தை மாறும்
புதுக் காவியம்....
ஓ .....இவன்
வரைந்த கிறுக்கலில்
இவளோ உயிரோவியம்...
இரு உயிா் ஒன்று
சோ்ந்து இங்கு
ஓா் உயிா்
ஆகுதே ....
கருவறை இல்லை
என்ற போதும் சுமந்திடத்
தோணுதே ...விழியோரம்
ஈரம் வந்து குடை கேட்குதே.....
ஆாிரோ ஆராாிரோ
இது தந்தையின் தாலாட்டு....
பூமியே புதிதானதே இவன்
மழலையின் மொழி கேட்டு....
இவனின் குரலை கேட்டு ஒரு நொடி அதிர்ந்த மித்ராளினி வேகவேகமாய் அறை விட்டு வெளி வர, அதே நேரம் தூக்கம் வராமல் இருந்த விஷ்வாவும் ஜித்தேந்தர் படிகளில் இறங்குவதை கண்டு தானும் இறங்கியவன் ,
"அண்ணா மித்துகுட்டிய குடுங்க ... நான் வச்சிக்கிறேன் "என்றான்.
"இந்த நேரத்தில் என்ன செய்ற!!"என்பது போல் பார்த்த ஜித்தேந்தர் ஒன்றும் பேசாமல் மித்ரேந்தரை குடுத்துவிட்டு கிட்சனுள் நுழைந்தான்.
அப்பொழுது அங்கு வந்த மித்ராளினி , குழந்தை விஷ்வாவின் கைகளில் இருப்பதை பார்த்து ,"இவரா இப்போ பாடினாரு ...ஆமா இவர் குழந்தை தான அப்போ இவர் தான் பாடிற்ப்பாரு...ஆனா அந்த குரல்" என குழம்பிய மனதுடன் அவனிடம் பேசாமலே தன் அறை சென்றாள்.
விதியதற்க்கு
விளையாட ஏதுமில்லையோ ??
கைகளில் இருக்கும் பொம்மலாட்டத்தின்
கயிறுகளை
அருகிலிழுத்தும்...
பிரித்தும் ...
விளையாடுகிறது !!
பூமி அழகியை ரசித்தது போதும் இனி அவள் என்பொறுப்பு என்று வான்மதிக்கு விடைக்கொடுத்து உதயமானன் கதிரவன்.
வழக்கம்போல் அதிகாலையிலயே எழுந்து பூஜை செய்து கொண்டிருந்த நாச்சியார் காலடிச்சத்தத்தில் திரும்பி பார்த்தார்.
மித்ரேந்தரை தூக்கி கொண்டு வந்துகொண்டிருந்தான் ஜித்தேந்தர் . வெளியே செல்வது போல் உடை அணிந்திருப்பவனை கண்டவர் கேள்வியாய் அவனை நோக்க ,
"மாம் ....!!! நான் மும்பை கிளம்பறேன் வர டூ டேய்ஸ் ஆகும் ...மித்துக்குட்டி ஆஹ் பார்த்துக்கோங்க அவன் எழுந்தப்பரும் எனக்கு வீடியோ கால் பண்ணுங்க, பாய் !!" என அவசரஅவசரமாக பேசிய ஜித்தேந்தர் அவர் கேள்விகேட்பதற்கு இடமளிக்காமலே சென்றுவிட்டான் .
நாச்சியாரோ , "ம்ம்க்கும்.....!!! ஒன்னு பேசவே மாட்டான்...தப்பித்தவறி பேசுனா மத்தவங்கள பேசவிடாம அவன் மட்டுமே பேசிட்டு போவான் " என புலம்ப ஆரம்பித்துவிட்டார் .
அந்த நேரத்தில் தடதட என மீண்டும் காலடி சத்தம் கேட்க , "அட என்ன இது?? இந்த வீட்ல என்னையும் கண்ணப்பாவையும் தவிர இந்நேரத்துக்கு வேற யாரும் எழுந்துக்க மாட்டார்களே !!!யாரு வரது" என்று ஆச்சரியமாய் திரும்பியவர் அங்கு சித்ராங்கதா வேகமாய் இறங்கி வருவதை கண்டு...
"ஏய் ...என்னடி அதிசயமா இவ்ளோ சீக்கிரம் எழுந்துட்ட.??"
தன் அன்னையின் கேள்வியில் முதலில் முழித்தவள் பின் , "மாம் ட்ரைனிங்க்கு மார்னிங் வர சொல்லிர்ந்தாங்க 'என்றாள்.
நாச்சியார் , "அதுக்குன்னு இவ்ளோ காலையிலயா டி ? மணி 5.30 தான் ஆகுது ".
சித்ராங்கதா , "மாம் ...!! ப்ளீஸ் டைம் ஆகுது. நான் வந்து உங்களுக்கு பதில் சொல்றேன் "என நகர்ந்தவள் பின் நின்று," மாம் ....!!!அப்பா வந்துட்டாரா ??" என கேட்க அதில் நாச்சியார் அவளை முறைக்க ,
"அடடா எதுக்கு இப்போ மாம் காளி மாதா மோட்க்கு மாறுறாங்க .. ஏதோ தப்பா கேட்டுட்டோம் போலயே....சித்து குட்டி எஸ் ஆகிடுடி செல்லம்" என மனதில் பேசியவள்,
"ஹீஹீ மாம்..!!! நான் அப்றம் அப்பாக்கு போன் பண்ணி பேசுறேன் . பாய் பாய் மாம் "என அவரின் கன்னத்தில் முத்தமிட்டுவிட்டு ஓடிவிட்டாள் .
அவளின் செயலில் சிரித்தவர் மித்ரேந்தரை தொட்டிலில் படுக்க வைத்துவிட்டு , விட்ட பூஜையை தொடர சென்றார் .
சிறிது நேரத்தில் அனைவரும் எழுந்து கொள்ள ஹாலிற்கு வந்த மித்ராளினி தொட்டிலில் இருந்த மித்ரேந்தரை தூக்கி மடியில் கிடத்தியவாறு சோபாவில் அமர்ந்துக்கொண்டாள் .அவளை பார்த்து புன்னகை சிந்திய ஷாலினி விஷ்வாவின் வரவை எதிர்பார்த்திருந்தாள்.
ருத்ரவர்தனோ மித்ராளினியை பார்த்து புன்னகைத்தவர் ஷாலினியிடம் , "பாப்பா அம்மா நம்பள சீக்கிரம் வர சொன்னாடா ..கிளம்பலாமா "என கேட்டார்.
அங்கு வந்த ரவி சக்கரவர்த்தி , "என்ன மாப்பிள்ளை!!! இப்போ தான எழுந்திங்க கொஞ்ச நேரம் கழிச்சி சாப்பிட்டு போங்க "என சொல்ல...
ருத்ரவர்தானோ , "இல்ல மச்சான்...!!! உங்க தங்கச்சி காலையில இருந்து பத்து தடவைக்கு மேல போன் பண்ணிட்டா.நேத்தும் வீட்டுக்கு போலல ,பாப்பாவும் இங்கயே இருந்துட்டா அதான் ".
நாச்சியார் , "ஏங்க.. அண்ணா சொல்றது சரிதான்.... அண்ணியும் அங்க தனியா இருப்பாங்கள , நீங்க கிளம்புங்க அண்ணா சாயந்திரம் அண்ணியை கூட்டிட்டு வாங்க" என,
"சரிமா ...!!!நாங்க கிளம்பறோம்.. வரோம் மச்சான் " என்றவர் மித்ராளினியிடமும் ,"போயிட்டு வரோம்மா " என விடைபெற்றார் .
ஷாலினி விஷ்வாவிடம் பேசுவதற்காக வந்தவள் கடைசி வரை பேசாததில் வருத்தத்துடன் கிளம்பினாள்.
சிறிது நேரம் கழித்து ஹால்லிற்கு வந்த விஷ்வா அங்கிருந்த மித்ராளினியிடம் பேசிகொண்டே குழந்தையுடன் விளையாடினான். வேறு யாரும் தென்படாததில் "அம்மா.... " என்றழைத்தவன் ,' மா !!!! என்ன யாரையுமே காணோம் " என கேட்டான்.
நாச்சியார் ," சித்து குட்டியும் , கண்ணப்பாவும் ஏதோ முக்கியமான வேலை இருக்குனு சீக்கிரம் கிளம்பிட்டாங்க டா .உங்க மாமாவும் ,ஷாலினியும் இப்போ தான் அண்ணி போன் பண்ணாங்கன்னு போனாங்க" என பதிலளித்ததில்,
'அட இவளுக்கு என்கூட பேசணும்னு தோணவே இல்லையா , அதுக்குள்ள கிளம்பிட்டா " என்று யோசித்தபடி விஷ்வா அமைதியாய் இருக்க,
அவனை கண்டுகொள்ளாத நாச்சியார் ,தங்களின் பேச்சில் முழித்துக் கொண்டிருந்த மித்ராளினியிடம் , "நீ இன்னும் என் பெரிய பையனையும் , பொண்ணையும் பார்க்கலைலமா . அவங்க நேத்து நீ தூங்க போனப்பறம் தான் வந்தாங்க ...தோ இப்பவும் அவசர அவசரமா கிளம்பி போய்ட்டாங்க ".
இப்பொழுது இடையில் குறுக்கிட்ட விஷ்வா , "மா ....!!அந்த குரங்கு எதுக்கு இவ்ளோ சீக்கிரம் போயிருக்கு??" என கேட்க,
அவனின் மண்டையில் கொட்டி, "எப்பப்பாரு அவளை எதாவது சொல்லிட்டே இருப்பியாடா "என்றவர், மித்ராளினியிடம் "சித்து குட்டி இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துருவாமா...கண்ணப்பா தான் வர ரெண்டு நாள் ஆகும் "என்றார்.
...........................................................................................................................................................
திருவல்லிக்கேணி போலீஸ் குவார்ட்டஸ் :
இன்று காலையில் மித்ராளினியை பார்க்க போகவேண்டுமென்று நினைத்து வெளியே செல்லாமல் குவார்ட்டஸை சுற்றி ஓடிக்கொண்டிருந்தான் ஜிஷ்ணு.
சிறிது நேரம் ஓடியவன் ,உடலில் வழியும் வியர்வையை தோளில் இருந்த துண்டினால் துடைத்தவாறு தன் வீட்டை நோக்கி நடந்தான்.
வீட்டீன் கதவு திறந்திருந்ததில் விழியில் ஆராய்ச்சியுடன் சுற்றி பார்த்தவன் ...கதவின் பின் வீட்டினுள் நடக்கும் ஓசை கேட்டு எப்பொழுதும் தன் பேண்டில் வைத்திருக்கும் துப்பாக்கியை எடுத்து கையில் வைத்துகொண்டு கதவை தட்டினான் .
காலடி சத்தம் கதவை நெருங்க துப்பாக்கியை இறுக்கி பிடித்தவன் கதவு திறந்த நொடி அதை எதிரிலிருப்பவரின் நெற்றியில் வைத்திருந்தான் .
"அய்யயோ ....!!! உன்ன லவ் பண்றது ஒரு குத்தமாய்யா. என்னை இப்படி போட்டு தள்ள பார்க்குற" என கத்தியது சாட்சாத் நம்ப சித்ராங்கதா தான்.
அவளை தன் வீட்டினுள் எதிர்பார்க்காத ஜிஷ்ணுவின் நினைவுகளோ இரண்டாம் முறையாய் அவளை கண்ட நொடிகளுக்கு பயணப்பட்டது.அவனின் உறைநிலையில் அவளின் மனமும் அவனுடன் ஜோடி சேர்ந்து அந்த நொடிகளுக்கு பயணபட்டது.
உணர்வலை:
அன்றொருநாள் கல்லூரிக்கு நேரமானதால் வழக்கமாய் போகும் வழியில் அல்லாமல் குறுக்கு வழியில் வேகமாய் சென்று கொண்டிருந்தவள் எதிரே ஒருவன் மற்றவனை அடிவெலுப்பதை பார்த்து தனது ஸ்கூட்டியை நிறுத்திவிட்டு வேகமாய் அங்கு சென்றாள் .
இவள் அருகில் சென்ற நேரம் அடித்துக்கொண்டிருந்தவன் சட்டென்று துப்பாக்கியை எடுத்து நீட்ட நடுவில் சென்ற இவளின் நெற்றியை உரசியது துப்பாக்கியின் முனை .
ஒரு நிமிடம் அதிர்ந்த சித்ராங்கதா எதிரே இருப்பவனை கண்டு விழிவிரித்தவள் , அதிர்ச்சி போய் அவனை ரசிக்க ஆரம்பித்துவிட்டாள் .( சைட் அடிக்க உனக்கு நேரம் காலமே இல்லையாமா).
அவள் முன் இத்தனை நேரம் சண்டையிட்டதில் வியர்வை வழிய நின்றிருந்தான் ஜிஷ்ணு ...தன்முன் நிற்பவளை ஒரே பார்வையிலே கண்டுகொண்டவன் கண்கள் மின்ன அவளின் கை பிடித்து தன் புறம் இழுத்து, அவளின் கண்களை பார்த்தவாரே எதிரே இருந்தவனின் நெஞ்சில் தோட்டாவை பாய்ச்சினான் .
தோட்டாவின் சத்தத்தில் கலைந்தவள் அவனின் முகத்தையே விழியெடுக்காமல் பார்க்க அவளின் அப்பார்வையில் அவனின் நெஞ்சில் மகிழ்ச்சி ரகசியமாய் ஊற்றெடுத்தது .
அதை கண்களில் காட்டா வண்ணம் அதற்க்கு கருப்பு நிற கண்ணாடியை அணிந்தவன் , கைகளால் பின்னந்தலையை கோதியவாறு அங்கிருந்து செல்ல அவனின் உதடுகளோ ரகசிய சிரிப்பில் வளைந்திருந்தன.
செல்லும் அவனை கண்ட சித்ராங்கதாவோ , "நம்ப ஆள் பார்க்க தான் பெசஞ்ச மாவு மாதிரி இருக்கான் ஆனா சரியான அதிரடி பார்ட்டி போல....ப்ப்ப்பா எப்படி அடிக்கிறான் !!!! போலீஸ்னா இப்படியா அடிப்பாங்க??? சரியான ரவுடி பேபி "என முணுமுணுத்தவாறு தன் ஸ்கூட்டியின் அருகில் சென்றாள்.
அதன் பின் அவனை அவளது கல்லூரியின் வாயிலில் அடிக்கடி பார்க்க நேரிட , "நம்ப ஆள சைட் அடிக்க நம்ப பிரண்ட் ஆஞ்சநேயர் உதவி பன்றாரு போலயே "என விளையாட்டாய் எண்ணியவளின் எண்ணத்தை தவிடு பொடியாக்க விதி காத்திருந்தது.
-கரைவாள்
Last edited: