Thoshi
You are more powerful than you know😊❤
நினைவில் தத்தளிக்கும் நேசமது 21:
அசம்பாவிதம் நேர போவதுபோல் ஓர் எண்ணம் மத்தியநேர கடல் அலையாய் மனதின் ஓரம் சலசலத்தாலும் , கூடவே அறிய பொக்கிஷத்தை அடைய போவதை போல மகிழ்ச்சியும் தோன்ற, இருவேறு விசித்திர உணர்வுகளுக்கிடையே தத்தளித்து கொண்டிருந்தாள் அவள்...
அதிலிருந்து வெளிவந்து மனம் தெளிவுறுவதற்க்காய், மூடிய விழிகளுக்குள் கருமணிகள் உருள, உதடுகள் எதையோ தீவிரமாய் முணுமுணுத்தவாறு, அகிலத்தை ஆளுபவளாய் தான் கருதும் அகிலாண்டேஸ்வரி முன் மனமுருக நின்றிருந்தாள் அவள்... மித்ராளினி.
"ங்க....ம்ங்க ....ஙங்க" என கை கால்களை உந்தி அவளின் கவனத்தை தன்புறம் திருப்ப முயன்று கொண்டிருந்தது அவளின் கைகளில் சிம்மாசனமிட்டிருந்த சின்னசிறு சிட்டு(மித்ரேந்தர்).
அவனின் சேட்டையையும், அவனை கைகளை ஏந்தியவாறு நின்றுகொண்டிருந்த மித்ராளினியையும் கண்களில் ஆச்சர்யத்துடன் பார்த்துக்கொண்டிருந்தாள் சித்ராங்கதா.
சிறுதுநேரமேனும் மித்ரேந்தரை தனியே விடாமல் திரியும் மித்ராளினி ஆகட்டும் , வந்த நாளில் தன் அண்ணனை தவிர எவரிடம் சென்றாலும் அழும் மித்ரேந்தர் மித்ராளினியிடம் இயல்பாய் ஒன்றியதாகட்டும் அனைத்தும் சித்ராங்கதாவிற்கு ஆச்சர்யம் தான்.
தன்னிடம் வர அழுத தன் அண்ணன் மகன் மித்ராளினியிடம் ஒட்டிக்கொண்டதில் சிறிதே சிறிது பொறாமை தோன்றினாலும் அவர்களை பார்க்கும் பொழுது...தாய் - மகனை பார்ப்பதுபோல தோன்ற , சில நாட்களில் எப்படி இருவருக்குள்ளும் இப்படி ஒரு பந்தம் என எண்ணம் அவளிற்குள் ஓடிக்கொண்டிருந்தது.
மித்ராளினி மற்றும் சித்ராங்கதா இருவரின் எண்ண அலைகளையும் அறுக்க செய்தது "சித்து " என்றழைத்த குரல்.
"ஏய் கீர்த்தி "என சித்ராங்கதாவும் பதிலுக்கு கத்த,
கண்களை திறந்த மித்ராளினி , எதிரில் தங்களை பார்த்தவாறு நின்றிருந்த மங்கையைக்கு ஓர் புன்னகையை உதிர்த்தவள் சித்ராங்கதாவிடம் , "இவங்க தான் நீங்க சொன்ன அந்த ப்ரெண்டா??" என கேட்டாள்.
"என்ன கேக்குறாங்க இவங்க ?" என ஒருநிமிடம் யோசித்த சித்ராங்கதா, "ஓஒ இவங்க நம்ப கார்ல வரும்போது சொல்லியதை வச்சி கேக்குறாங்க போலயே" என சரியாய் கணித்தவள், "ஆமா ஆமா "என அவசரமாய் சொல்ல,
"என்ன ??? என்னை பத்தி சொன்னாளா" என கீர்த்தி வியப்பாய் கேட்க,
"ஹீஹீ ஆமா டி !!! இன்னிக்கு நம்ப பார்க்குறதா இருந்தது தான" என அந்த "தான" வில் அழுத்தம் குடுக்க, எதிரிலிருந்தவள் திருதிருத்தாள்.
இவ வேலைக்காகமாட்டா என நினைத்த சித்ராங்கதா, " ஆங் !!! எங்களுக்கு நேரமாகுது மித்து , நாங்க கிளம்புறோம் ..சீக்கிரம் வந்துர்றேன், அதுவரைக்கும் இங்கயே இருங்க. நான் வந்த அப்றம் கிளம்பலாம் " என மித்ரேந்தருக்கு ஒரு அவசர முத்தமிட்டவள், கீர்த்தியை இழுத்து கொண்டு சென்றாள்.
அவர்கள் போவதை சிரிப்புடன் பார்த்துகொண்டிருந்த மித்ராளினி, மீண்டும் தன் வழிபாடை தொடர்ந்தாள்.
" ஏய் !!! எங்கடி இழுத்துட்டு போற?? கோவிலுக்கு வந்த இடத்துல உன்ன பார்த்தோமேனு கூப்பிட்டா ...நீ ஏதோ நம்ப ஏற்கனவே சொல்லிவச்சு பாக்குறாப்ல பேசி இழுத்துட்டு வர " என கீர்த்தி தன் கையை அவளின் பிடியில் இருந்து உதறி இடுப்பில் வைத்து முறைக்க,
சித்ராங்கதா பதிலுக்கு "ஹீஹீ!!!" என சிரிக்கிறேன் பேர்வழியென அசடு வழிந்தாள்.
"கருமம்...கருமம்! பல்லக்காட்டாதடி . ச்சே !! கேக்கவந்ததை மறந்துட்டேன் பாரு , அது நம்ப ஏஞ்சல் அக்கா தான ? நீ எப்படி அவங்க கூட?" என சந்தேகமாய் கேட்டாள்.
அவளின் கேள்வியில் வாயை பிளந்த சித்ராங்கதா, " அடியே கீர்த்தி! உனக்கும் அவங்க ஏஞ்சலாலாலா??? ஆமா உனக்கு எப்படி அவங்கள தெரியும் " என பதிலுக்கு கேள்வி கேட்டாள்.
"ஏண்டி மண்டைல எதாவது அடிகிடி பட்டுச்சா என்ன ???? அடியே !!!அவங்க நம்ப சீனியர் டி, அந்த வசந்தோட பேட்ச்".
சித்ராங்கதா,"என்னாதுது ! நம்ப சீனியராஹ்ஹ் , எனக்கு இது தெரியாம போச்சே " என மூக்கை சுருக்க,
"பக்கி நடிக்காதடி, எங்க எல்லோரையும் விட நீ தான எப்பவும் அவங்க இருக்க இடத்துலயே சுத்திகிட்டு திரியுரவ".
"இல்லடி! எனக்கு அவங்கள பார்க்கும்போது எங்கயோ பார்த்த மாதிரி இருக்கேனு நினைச்சேன். ஆனா நம்ப தினமும் எத்தனையோ பேர பார்க்குறோம் அப்படிதானோனு விட்டுட்டேன். ஆனா இது என்னடி புது கதை? நான் எப்போ அவங்க பின்ன சுத்துனேன் ?" என குழம்ப,
"நீ சொல்றது நம்புற மாதிரியே இல்லையே....ஏண்டி அந்த பி.எம் அ கூடவா நியாபகம் இல்ல "
"பி.எம் ஆஹ் ? அது யாரு டி."
"ஏய் நீ என்னடி எல்லாத்தையும் காந்தி செத்துட்டாரானு கேக்குறனு ஷாக்கா கேட்டு தொலையுற?..பி.எம் -னா போலீஸ் மச்சான் டி . இவங்களோட ஆளு.வெள்ளையா மாவு மாதிரி முகத்துல தாடி மீசைலாம் இல்லாம பக்கா சாக்லேட் ஹீரோ மெட்டிரியல் டி.எப்பவும் ஏஞ்சல் அக்காகாக நம்ப காலேஜ் வாசல்லயே டியூட்டி பார்ப்பாரேடி" என சிரிப்புடன் சொன்னவள் தொடர்ந்து,
"ஆளு சும்மா அப்படி இருப்பாரு .நம்ப காலேஜ்ல முக்காவாசி பொண்ணுங்க இவரை பார்குறத்துக்கே காலேஜ் வருவாளுங்க, அவளுங்க வச்ச பேருதான் போலீஸ் மச்சான். ஏன் எனக்கு கூட அவருனா ஒரு இது தான். உண்மைய சொல்லு உனக்கு அவரை தெரியாது "என விளையாட்டாய் கண்ணடித்தாள்.
கீர்த்தி சொல்லியதை கேட்ட சித்ராங்கதாவிற்கு உள்ளுக்குள் தானாய் அதிர்வலைகள் கிளம்பி அவளின் உணர்வலை பொங்கி வெள்ளபெருக்கெடுக்க முயற்சிக்க , உதடுகளோ சந்தேகமாய் "ஜிஷ்ணு" என சொல்லியது, ஆனால்... அவளின் உணர்வலையோ அவ்வாறிருக்கக்கூடாது என ஆர்பரித்துக்கொண்டிருந்தது .
இவள் சந்தேகமாய் அவனின் பெயர் சொல்லிய நொடிமுதல் அதற்க்கு பதில் சொல்ல கீர்த்தி எடுத்து கொண்ட அந்த பத்து வினாடிகளில் , மனித மனதின் இயல்பாய் சித்ராங்கதாவின் மனமும் எதையெதையோ எண்ணி கலங்கியது.
"பெயரா ?? எனக்கு எங்கடி அது தெரியும். போலீஸ் மச்சான்-ற பெயரு தான் தெரியும், அதுவும் நம்ப பொண்ணுங்கலாம் தான் அப்படி சொல்லி பேசிப்பாளுங்க " என கீர்த்தி சொல்லிய பதிலால் அவளின் கலக்கம் மறைய வாய்ப்பில்லாமல் போனது.
தனது மொபைல் கால் சத்தத்தில் அதில் ஒளிர்ந்த எண்ணை கண்ட சித்ராங்கதாவிற்க்கு, ஜிஷ்ணுவுடனான இன்றைய சந்திப்பு நினைவுவர கீர்த்தியிடம் விடைபெற்று கிளம்பினாள்.
அவளின் உருவம்தான் அங்கிருந்து நகர்ந்ததே ஒழிய, அவளின் மனமோ ஜிஷ்ணு, மித்ராளினி, கீர்த்தி, போலிஸ் மச்சான் என எண்ணியவாறு அங்கேயே சுழன்றது.
அன்று மித்ராளினி சிறுவயது முதல் உடன் வளர்ந்தவன் என ஒருவனை கூறியது, ஜிஷ்ணு ஒருநாள் தான் தேடியது இங்கிருப்பதை அறிந்து தான் வந்ததாய் கூறியது என இரண்டு காட்சிகளும் மாறிமாறி கண்முன் தோன்றின.
அவளின் மூளையோ தோன்றும் காட்சிகளில் குழம்பிப்போக பார்க்க, மனமோ "இல்லஇல்ல அது நம்ப ரவுடி பேபியா இருக்காது. அவர் என்னை பார்குறதுக்காகத்தான ஒவ்வொருநாளும் காலேஜ்க்கு வந்தாரு. அத்தோட இதுவரைக்கும் நான் இவங்கள அவர் கூட பார்த்ததே இல்லையே.இவ சொல்றத பார்த்தா அந்த போலீஸ்காரரும் மித்ராளினியும் ஜோடி மாதிரி தெரியுது, ஆனா நம்ப மச்சான் கண்ணுல நம்பள பார்க்கும்போதுதான டன்னு டன்னா காதல் வழியும்" என சொல்லி அவளை திடம் பெற செய்தது.
அவளின் திடத்தை சோதிப்பது போல் அவளின் மனசாட்சி," தினமும் வந்தவன் ஆறு மாசத்துக்கு மேல அந்த பக்கமே வரவேஇல்லையே, கீர்த்தி சொல்றத வச்சி பார்த்தா மித்ராளினி காலேஜ் முடிச்ச பிறகுனு தான கணக்கு வருது" என முனங்க,
"சோ..."என அதனின் தலையில் தட்டியவள், "நீ எதுக்கு தேவைஇல்லாததலாம் கணக்கு போடற. இப்போ என்ன? என் மச்சான் என்னை தான் காதலிக்கிறாரு அவர் என்னை பார்க்க தான் வந்தாருனு அவரே கொஞ்ச நேரத்துல சொல்லுவாரு . நீ என்கிட்ட கொட்டு வாங்காம ஓடிடு" என விரட்டினாள்.
-------------------------------------------------------------------------------------
அந்த விமானநிலையம் பரபரப்பாய் இயங்கி கொண்டிருந்தது.அப்படி அனைவரும் எதை தேடி ஓடுகின்றனரோ? எங்கு திரும்பிலும் அவசரஅவசரமாய் சென்று கொண்டிருக்கும் மக்கள்.
அங்கு காத்திருப்பிற்காய் போடப்பட்டிருக்கும் நாற்காலியிலும் ஒரு சிலரே அமர்ந்திருக்க, அவர்களும் கைகளில் இருக்கும் அலைபேசியிலும், மடுந்த மடிகணிணியினிலுமே தங்களை புதைத்திருந்தனர்.
"இன்னும் இரண்டு நிமிஷத்துல நம்ப கிளம்பனும் ஷாலினி" என அழுதுகொண்டிருப்பவளை கவனித்தும் கவனியாததை போல் சொன்னான் ஜித்தேந்தர்.
திடீரென அவன் பேசியதில் திடுக்கிட்ட ஷாலினி "அத்..அத் தான்...விஷ்....வி...விஷ்வா" என தடுமாறினாள்.
அவளின் கண்களை ஆழ்ந்து பார்த்த ஜித்தேந்தர் , "இன்னும் எத்தனை நேரம் அழுதுட்டு இருக்க போற ஷாலினி. நீ இங்க இருந்து அழுதா அவன் அங்க சரி ஆகிடுவானா ?இப்போவும் அப்பவும் அவனோட கஷ்டத்துக்கு நீ தான் காரணமா இருக்க நீ மட்டும் தான்" என்றவன் அவள் புரியாமல் விழிப்பதை கண்டு இடதுகை மோதிரவிரல் கொண்டு புருவத்தை நீவிக்கொண்டான் .
ஒருநொடியில் தன்னை நிதானித்துக்கொண்டவன் , அவளின் அருகில் அமர்ந்து , "நான் உன்கிட்ட இப்போ ஒருவிஷயம் தான் சொல்ல முடியும் ஷாலினி , இப்போ நீ அழுதுட்டு இருக்கிறதுல்ல எந்த பிரயோஜனமும் இல்ல. உங்களுக்குள்ள என்ன பிரச்சனைன்னு எனக்கு தெரியாது, அதே மாதிரி விஷ்வா உன்மேல வச்சிருக்க காதலோட அளவு உனக்கு தெரியாது. அத தெரிஞ்சிக்க முயற்சி பண்ணவேண்டாம் ஆனா அந்த காதல் காயப்படாம பார்த்துக்க" என்றவன் அங்கிருந்து எழுந்து சென்றான் .
அவன் பேசி சென்ற நொடி ஷாலினிக்கு விஷ்வாவின் வார்த்தைகளே எதிரொலித்தது " நான் விளையாட்டா இருக்கலாம் என் காதல் எப்பவும் விளையாட்டு இல்லை ". அவனின் காதல் வார்த்தையில் கரைந்தவளிற்கு , இந்த நிமிடமே அவனின் கைகளில் சரணடைந்து தன்னை பேசவிடாமல் கோபப்பட்டதற்கு அவனிடம் செல்ல சண்டையிட்டு கொஞ்ச வேண்டுமென ஏக்கம் வந்தது.
தன்னவன் தன் மேல் கொண்ட காதலில் அழுகை மறைந்து பெருமை வர , ஜித்தேந்தரை தொடர்ந்து நடந்தவள்" டேய் விஷ்வா! என்கிட்ட உன்னால கோபப்படமுடியுமா என்ன ? எருமமாடு என்னை அழவச்சிட்டல... மவனே வரண்டா உன் காத்தாயியோட புது அவதாரத்தை பார்க்க தயாரா இரு வந்துக்கிட்டே இருக்கேன் "என மனதினுள் விளையாட்டாய் நினைக்க , கரங்கள் கன்னங்களில் வழிந்த கண்ணீரை துடைக்க , உதடுகள் தங்களது புது அத்தியாயத்திற்கு வரவேற்ப்பாய் புன்னகையை சிந்தியது.
விமானத்தில் ஏறும் நொடிவரை ஜித்தேந்தர் எவருடனோ அலைபேசியில் பேசிக்கொண்டுவர , ஷாலினியின் சிந்தனை தன்னுயிரானவனை சுற்றியே இருந்தது.
விமானத்தில் அமர்ந்த நொடி ஷாலினியின் முகத்தை பார்த்த ஜித்தேந்தர் அங்கு அழுகை நின்று தெளிந்திருப்பதை கண்டு, விஷ்வாக்கு அடிப்பட்டிருக்குனு இவ கிட்ட எப்படி சொல்றது என யோசித்தவன் இறங்கிய பின் சொல்லிக்கொள்ளலாம் என முடிவெடுத்தான்.
ஷாலினியின் கலக்கத்தை கண்டவன் மனதின் சஞ்சலம் காரணமாய் விஷ்வாவின் நிலையை அவனின் பாதுகாப்பிற்க்காய் தான் நியமித்தவரிடம் தொடர்பு கொண்டு தெள்ளத்தெளிவாக அறிந்துகொண்டவன் ,
தலையில் அடிபட்டிருப்பதாய் கேட்டபொழுது அவனின் ஒருவருடம் முன்பான நிலை நினைவு வர விரைவாய் கட்டளைகளை விடுத்து இங்கிருந்தவாரே தன் தம்பியை காத்தான்.
இத்தனை நேரம் தனது மனத்திற்கான சஞ்சலத்தின் விடை தனது தம்பியின் நிலையே ஆகையால் இனி எதுவும் தவறாய் நேராது என தவறாக கணித்தவன், அந்நிம்மதியில் தன்னவளை காணும் நொடிகளை கற்பனை கண்டவாறு வந்தான்.
விமானம் தரை இறங்க தத்தம் மனதிலுள்ள பாரமும் இறங்கியதை உணர்ந்தவாறு ஜித்தேந்தரும், ஷாலினியின் சென்னை விமானநிலையைத்தின் வெளியே வந்தனர்.
அங்கு அவன் ஏற்கனவே கட்டளையிட்ட படி அவனின் காரும் அருகில் மற்றொரு காரும் இருக்க, ஷாலினி அவனை கேள்வியாய் பார்த்தாள்.
அவளின் கேள்வியை உணர்ந்த ஜித்தேந்தர், " விஷ்வா இப்போ உங்க வீட்ல தான் இருக்கான்.சோ " என்றவன் தன் பேச்சை நிறுத்தி மற்றொரு காரை காட்ட,
விஷ்வாவின் திடீர் நடைவடைக்கைகான காரணத்தை ஓரளவிற்கு யூகித்தவள் எந்தவித உணர்வையும் வெளிக்காட்டாமல் ஜித்தேந்தரை நோக்கி ஓர் புன்னகையை சிந்தி, " அத்தான் அக்காவை பார்த்தவுடனே எங்களை மறந்துராதீங்க. அண்ட் ஒன் மோர் திங் பார்த்து ரொம்ப நாள் ஆகுதுன்னு கடத்திட்டு கிடத்திட்டு போய்டாதிங்க, அப்றம் என் ஆள் உங்கள சும்மா விடமாட்டான் சொல்லிட்டேன் " என விளையாட்டாய் அவனை கிணடலடித்தவள் , தனக்கும் விஷ்வாவிற்க்கும் எப்பிரச்சனையும் வராது என மறைமுகமாய் உணர்த்தினாள்.
தனது காரில் அமர்ந்த ஜித்தேந்தருக்கு என்றுமில்லாவகையில் மகிழ்ச்சி கொப்பளிக்க மனதின் ஓரமிருந்த சஞ்சலத்தையும் மறந்து தனது காரை வீட்டை நோக்கி செலுத்தினான்.
இங்கு இனி அனைத்தும் சுகமே என தன்னவனை சந்திக்க சென்ற ஷாலினியின் கண்களை கலங்க செய்தது அங்கிருந்த விஷ்வாவின் நிலை.
*********************************************************************************
கோவிலின் நடை சாற்றும் நேரம் ஆகியதால் அருகிலிருந்த பூங்காவிற்கு வந்தவள் சித்ராங்கதாவிற்கு செய்தியை அனுப்ப மறக்கவில்லை.
பூங்காவின் மரநிழலில் அமர்ந்தவாறு மித்ரேந்தருடன் கொஞ்சி விளையாடியதில் நேரம் ஆகியதை அவள் கவனிக்கமறந்திருந்தாள்.
இன்னும் சித்ராங்கதா ஏன் வரவில்லை என யோசித்தவள், அவள் வருமுன் விஷ்வாவிற்கு அழைக்க வேண்டாம் என சொல்லி சென்றதில் என்ன செய்வது என விழித்துக்கொண்டிருந்தாள்.
திடீரென அவளின் மனம் படபடப்பாகியது, அவளின் வாழ்வின் முக்கிய அங்கம் அவளிடம் சேரப்போவதுபோல் ஓர் எண்ணம் அவளுள் ப்ரவாகமெடுத்தது. அதன் தாக்கத்தில் மித்ரேந்தரை தன்னோடு இறுக்கி அணைத்தவளின் கண்கள் வேகவேகமாய் சுற்றுப்புறத்தை ஆராய்ந்தது.
அதேநேரம் காரில் வந்துகொண்டிருந்த ஜித்தேந்தரின் மனதில் இனம்புரியா உணர்வு கட்டவிழ , அது தன்னவளிர்க்கானது என அறிந்திருந்தவன் அவள் அருகிலிருப்பதை உணர்ந்துகொண்டான். சாலையின் ஓரமாய் காரை நிறுத்தியவன், தன் ராணிமாவிற்க்கான தேடலை கண்களில் கொண்டு அவ்விடத்தை ஆராய ஆரம்பித்தான் .
அவனின் உடம்பில் உள்ள ஒவ்வொரு அணுவும் தன்னவளை காணப்போகும் ஆவலில் குதுகலித்து ஆட்டம் போட இதழ் மட்டுமில்லாமல் கண்களும் சேர்ந்து சிரித்தவாறிருந்தது.
இங்கு மித்ராளினியோ தன்னுள் ஏற்படும் உணர்வுகளுக்கு அர்த்தம் புரியாமல்போக அதை ஆராயமுற்படாமல் அறியமுற்பட்டாள். ஏதோ ஒரு சக்தி தன்னை தன்னுள் ஆழிப்பேரலையாய் சுருட்டிக்கொள்ள முற்படுவதை அறிந்தவள் தானும் அதில் சுருண்டுபோக ஆசைகொண்டாள் .
அவ்வுணர்வின் ஈர்ப்பில் மெதுவாய் அப்பூங்காவை விட்டு வெளிவந்தவளின் கண்கள் தன் தேடலை இன்னும் நிறுத்தவில்லை. தற்பொழுது யாரவது அவளிடம் எதை தேடுகிறாய் என கேட்டாலும் அவளிற்கு விடை அளிக்க தெரியாது. ஆயினும் அவளின் மனம் தன் இணை அங்கிருப்பதை உணர்ந்து அவளை அங்கு சேர்க்க எண்ணி உசுப்பியது.
முன்பைவிட வேகமாய் ஜித்தேந்தரின் இதயம் துடிக்கஆரம்பிக்க எங்கு தன் இதயம் வெளியேவந்துவிடுமோ என அச்சம் கொண்டானோ அது தன்னவளிற்கு சொந்தமானது என தன் கரம் கொண்டு அதனை பொத்திக்கொண்டான் .
வெளியே வந்த மித்ராளினியின் கண்கள் தன் இலக்கை அடைந்ததோ இல்லையோ அவளின் கரங்களில் இருந்த மித்ரேந்தர் தன் தந்தையை கண்டுகொண்டான்.
இவர்கள் நின்றுகொண்டிருந்த அந்த முக்கியசாலையின்( மெயின் ரோட்) மறுப்பக்கம் அவன் நின்றிருந்தாலும் தன் தந்தையை மிக சரியாக கண்டுகொண்டான் புத்திரன்.
"ம்நா......நா...ம்ங்க..னா..."என குதூகலித்தவன் அவளின் கைகளில் துள்ள , தடுமாறிய மித்ராளினி அவனை சரியாய் பிடித்தவாறு எதிரே கண்டாள்.
பார்த்தவள் பார்வையை விலக்கமுடியாதவாாறு அவனின் முகம் அவளுள் பதிந்து தன் உரிமையை உணர்த்தி அவளின் நினைவை அசைக்க, காதோரமாய் " ராணிமா நான் எவ்வளவு தூரத்துல இருந்தாலும் சரி, எவ்வளவு கூட்டத்துக்கு நடுவுல இருந்தாலும் சரி, உன்னோட இந்த பார்வை ஒன்னு போதும் டி எனக்கு, நீ இருக்க இடத்தை கண்டுபிடிக்க...இந்த ரெண்டு கண்ணுலையும் என்னை பார்குறப்போலாம் தெரியுற அந்த காதல் இருக்கே ப்ப்பாஆ ..... சும்மா காந்தம் மாதிரி என்னை கட்டி இழுக்குதுடி" என காதலில் பிதற்றும் குரல் அட்சரம் பிசகாமல் கேட்டது.
அதன் பிரதிபலிப்பாய் அவளின் கண்களிலும் அந்த குரலுக்கு குறைவில்லா காதல் வெளிப்பட எதிரிலிருந்தவனையே இமை கூட அசைக்காமல் பார்த்திருந்தாள்.
அந்த குரலின் சொற்கள் உண்மைதானோ ? இவள் தன்னையுமறியாமல் காதல் பொங்க அவனை பார்த்ததில் அவளின் அக்காந்தபார்வை அவன் சொன்னது போலவே அவனின் காதல் மனதை ஈர்த்த அடுத்தநொடி அவன் இவளின்புறம் திரும்பிருந்தான் .
ஏழு கடல் ஏழு மலை தாண்டி என இதை தான் சொல்வனரோ என ஓர் சந்தேகம் ஜித்தேந்தருக்கு எழுந்தது . அவளை கண்ட நொடி சத்தியமாய் அவனின் இதயம் ஒருமுறை துடிப்பதை நிறுத்தி பின் தன் இணையை கண்ட ஆனந்தத்தில் முன்பே விட வேகமாய் மீண்டும் துடித்தது .
அவளை கண்டவனோ தன் உயிர் தன்னுடல் சேர்ந்ததாய் உணர்ந்தான் . அவளை நிதானமாய் உச்சி முதல் பாதம் வரை பார்த்தவாறு தன்னவளை மெதுமெதுவாய் தன்னுள் உள்வாங்கினான்.
இருவருக்கும் இடையில் இருக்கும் இடைவெளி அதிகமாயினும், அருகில் செல்லும் நொடியில் கூட அவளை காணாமல் போக கூடாது என அங்கிருந்தே சிறிது சிறிதாய் ரசித்தவனின் உயிர் பூ இப்பொழுதுதான் பூத்ததாய் கொண்டாட்டமிட , கண்களோ அவளின் கைகளில் இருந்த தங்களின் மகவை கண்டு மின்னின .
ஏனோ அவள் தங்கள் மகவை ஏந்தியவாறு தன் வருகைக்காக காத்திருப்பதை தோன்ற அந்த உணர்வை ஆழ்ந்து அனுபவித்தவன் " உன்னோட பாவா வந்துட்டேன் டா ராணிமா " என முனங்கியவாறு ,அது நகரின் முக்கிய சாலை என்பதையும் உணராமல் அதை கடக்க ஆரம்பித்தான்.
அவனை கண்டுகொண்ட அவளின் இதயமும் அவனுடன் இணைய அவளை தூண்ட அவளின் மூளையோ அவன் யாரென அறிய பிரயாதனப்பட்டது. மூளையின் முயற்சியை இதயத்தின் மகிழ்வு தடுக்க உறவறியா உணர்வுடன் அவளும் அவனை நோக்கி தன் எட்டுக்களை எடுத்து வைத்தாள்.
காதலதை உணரும்
முதல் தருணம்
பூவின் மென்மையை
உணர வைப்பதெனில் ,
தொலைத்த காதலதை
மீண்டும் உயிரோட்டமாய் கண்டுகொள்ளும் நொடி ...
மழலையின் பாதமது
நெஞ்சில் உதைக்கும்
மென்மைக்கு ஒத்தானது...!!!
-கரைவாள்...
அசம்பாவிதம் நேர போவதுபோல் ஓர் எண்ணம் மத்தியநேர கடல் அலையாய் மனதின் ஓரம் சலசலத்தாலும் , கூடவே அறிய பொக்கிஷத்தை அடைய போவதை போல மகிழ்ச்சியும் தோன்ற, இருவேறு விசித்திர உணர்வுகளுக்கிடையே தத்தளித்து கொண்டிருந்தாள் அவள்...
அதிலிருந்து வெளிவந்து மனம் தெளிவுறுவதற்க்காய், மூடிய விழிகளுக்குள் கருமணிகள் உருள, உதடுகள் எதையோ தீவிரமாய் முணுமுணுத்தவாறு, அகிலத்தை ஆளுபவளாய் தான் கருதும் அகிலாண்டேஸ்வரி முன் மனமுருக நின்றிருந்தாள் அவள்... மித்ராளினி.
"ங்க....ம்ங்க ....ஙங்க" என கை கால்களை உந்தி அவளின் கவனத்தை தன்புறம் திருப்ப முயன்று கொண்டிருந்தது அவளின் கைகளில் சிம்மாசனமிட்டிருந்த சின்னசிறு சிட்டு(மித்ரேந்தர்).
அவனின் சேட்டையையும், அவனை கைகளை ஏந்தியவாறு நின்றுகொண்டிருந்த மித்ராளினியையும் கண்களில் ஆச்சர்யத்துடன் பார்த்துக்கொண்டிருந்தாள் சித்ராங்கதா.
சிறுதுநேரமேனும் மித்ரேந்தரை தனியே விடாமல் திரியும் மித்ராளினி ஆகட்டும் , வந்த நாளில் தன் அண்ணனை தவிர எவரிடம் சென்றாலும் அழும் மித்ரேந்தர் மித்ராளினியிடம் இயல்பாய் ஒன்றியதாகட்டும் அனைத்தும் சித்ராங்கதாவிற்கு ஆச்சர்யம் தான்.
தன்னிடம் வர அழுத தன் அண்ணன் மகன் மித்ராளினியிடம் ஒட்டிக்கொண்டதில் சிறிதே சிறிது பொறாமை தோன்றினாலும் அவர்களை பார்க்கும் பொழுது...தாய் - மகனை பார்ப்பதுபோல தோன்ற , சில நாட்களில் எப்படி இருவருக்குள்ளும் இப்படி ஒரு பந்தம் என எண்ணம் அவளிற்குள் ஓடிக்கொண்டிருந்தது.
மித்ராளினி மற்றும் சித்ராங்கதா இருவரின் எண்ண அலைகளையும் அறுக்க செய்தது "சித்து " என்றழைத்த குரல்.
"ஏய் கீர்த்தி "என சித்ராங்கதாவும் பதிலுக்கு கத்த,
கண்களை திறந்த மித்ராளினி , எதிரில் தங்களை பார்த்தவாறு நின்றிருந்த மங்கையைக்கு ஓர் புன்னகையை உதிர்த்தவள் சித்ராங்கதாவிடம் , "இவங்க தான் நீங்க சொன்ன அந்த ப்ரெண்டா??" என கேட்டாள்.
"என்ன கேக்குறாங்க இவங்க ?" என ஒருநிமிடம் யோசித்த சித்ராங்கதா, "ஓஒ இவங்க நம்ப கார்ல வரும்போது சொல்லியதை வச்சி கேக்குறாங்க போலயே" என சரியாய் கணித்தவள், "ஆமா ஆமா "என அவசரமாய் சொல்ல,
"என்ன ??? என்னை பத்தி சொன்னாளா" என கீர்த்தி வியப்பாய் கேட்க,
"ஹீஹீ ஆமா டி !!! இன்னிக்கு நம்ப பார்க்குறதா இருந்தது தான" என அந்த "தான" வில் அழுத்தம் குடுக்க, எதிரிலிருந்தவள் திருதிருத்தாள்.
இவ வேலைக்காகமாட்டா என நினைத்த சித்ராங்கதா, " ஆங் !!! எங்களுக்கு நேரமாகுது மித்து , நாங்க கிளம்புறோம் ..சீக்கிரம் வந்துர்றேன், அதுவரைக்கும் இங்கயே இருங்க. நான் வந்த அப்றம் கிளம்பலாம் " என மித்ரேந்தருக்கு ஒரு அவசர முத்தமிட்டவள், கீர்த்தியை இழுத்து கொண்டு சென்றாள்.
அவர்கள் போவதை சிரிப்புடன் பார்த்துகொண்டிருந்த மித்ராளினி, மீண்டும் தன் வழிபாடை தொடர்ந்தாள்.
" ஏய் !!! எங்கடி இழுத்துட்டு போற?? கோவிலுக்கு வந்த இடத்துல உன்ன பார்த்தோமேனு கூப்பிட்டா ...நீ ஏதோ நம்ப ஏற்கனவே சொல்லிவச்சு பாக்குறாப்ல பேசி இழுத்துட்டு வர " என கீர்த்தி தன் கையை அவளின் பிடியில் இருந்து உதறி இடுப்பில் வைத்து முறைக்க,
சித்ராங்கதா பதிலுக்கு "ஹீஹீ!!!" என சிரிக்கிறேன் பேர்வழியென அசடு வழிந்தாள்.
"கருமம்...கருமம்! பல்லக்காட்டாதடி . ச்சே !! கேக்கவந்ததை மறந்துட்டேன் பாரு , அது நம்ப ஏஞ்சல் அக்கா தான ? நீ எப்படி அவங்க கூட?" என சந்தேகமாய் கேட்டாள்.
அவளின் கேள்வியில் வாயை பிளந்த சித்ராங்கதா, " அடியே கீர்த்தி! உனக்கும் அவங்க ஏஞ்சலாலாலா??? ஆமா உனக்கு எப்படி அவங்கள தெரியும் " என பதிலுக்கு கேள்வி கேட்டாள்.
"ஏண்டி மண்டைல எதாவது அடிகிடி பட்டுச்சா என்ன ???? அடியே !!!அவங்க நம்ப சீனியர் டி, அந்த வசந்தோட பேட்ச்".
சித்ராங்கதா,"என்னாதுது ! நம்ப சீனியராஹ்ஹ் , எனக்கு இது தெரியாம போச்சே " என மூக்கை சுருக்க,
"பக்கி நடிக்காதடி, எங்க எல்லோரையும் விட நீ தான எப்பவும் அவங்க இருக்க இடத்துலயே சுத்திகிட்டு திரியுரவ".
"இல்லடி! எனக்கு அவங்கள பார்க்கும்போது எங்கயோ பார்த்த மாதிரி இருக்கேனு நினைச்சேன். ஆனா நம்ப தினமும் எத்தனையோ பேர பார்க்குறோம் அப்படிதானோனு விட்டுட்டேன். ஆனா இது என்னடி புது கதை? நான் எப்போ அவங்க பின்ன சுத்துனேன் ?" என குழம்ப,
"நீ சொல்றது நம்புற மாதிரியே இல்லையே....ஏண்டி அந்த பி.எம் அ கூடவா நியாபகம் இல்ல "
"பி.எம் ஆஹ் ? அது யாரு டி."
"ஏய் நீ என்னடி எல்லாத்தையும் காந்தி செத்துட்டாரானு கேக்குறனு ஷாக்கா கேட்டு தொலையுற?..பி.எம் -னா போலீஸ் மச்சான் டி . இவங்களோட ஆளு.வெள்ளையா மாவு மாதிரி முகத்துல தாடி மீசைலாம் இல்லாம பக்கா சாக்லேட் ஹீரோ மெட்டிரியல் டி.எப்பவும் ஏஞ்சல் அக்காகாக நம்ப காலேஜ் வாசல்லயே டியூட்டி பார்ப்பாரேடி" என சிரிப்புடன் சொன்னவள் தொடர்ந்து,
"ஆளு சும்மா அப்படி இருப்பாரு .நம்ப காலேஜ்ல முக்காவாசி பொண்ணுங்க இவரை பார்குறத்துக்கே காலேஜ் வருவாளுங்க, அவளுங்க வச்ச பேருதான் போலீஸ் மச்சான். ஏன் எனக்கு கூட அவருனா ஒரு இது தான். உண்மைய சொல்லு உனக்கு அவரை தெரியாது "என விளையாட்டாய் கண்ணடித்தாள்.
கீர்த்தி சொல்லியதை கேட்ட சித்ராங்கதாவிற்கு உள்ளுக்குள் தானாய் அதிர்வலைகள் கிளம்பி அவளின் உணர்வலை பொங்கி வெள்ளபெருக்கெடுக்க முயற்சிக்க , உதடுகளோ சந்தேகமாய் "ஜிஷ்ணு" என சொல்லியது, ஆனால்... அவளின் உணர்வலையோ அவ்வாறிருக்கக்கூடாது என ஆர்பரித்துக்கொண்டிருந்தது .
இவள் சந்தேகமாய் அவனின் பெயர் சொல்லிய நொடிமுதல் அதற்க்கு பதில் சொல்ல கீர்த்தி எடுத்து கொண்ட அந்த பத்து வினாடிகளில் , மனித மனதின் இயல்பாய் சித்ராங்கதாவின் மனமும் எதையெதையோ எண்ணி கலங்கியது.
"பெயரா ?? எனக்கு எங்கடி அது தெரியும். போலீஸ் மச்சான்-ற பெயரு தான் தெரியும், அதுவும் நம்ப பொண்ணுங்கலாம் தான் அப்படி சொல்லி பேசிப்பாளுங்க " என கீர்த்தி சொல்லிய பதிலால் அவளின் கலக்கம் மறைய வாய்ப்பில்லாமல் போனது.
தனது மொபைல் கால் சத்தத்தில் அதில் ஒளிர்ந்த எண்ணை கண்ட சித்ராங்கதாவிற்க்கு, ஜிஷ்ணுவுடனான இன்றைய சந்திப்பு நினைவுவர கீர்த்தியிடம் விடைபெற்று கிளம்பினாள்.
அவளின் உருவம்தான் அங்கிருந்து நகர்ந்ததே ஒழிய, அவளின் மனமோ ஜிஷ்ணு, மித்ராளினி, கீர்த்தி, போலிஸ் மச்சான் என எண்ணியவாறு அங்கேயே சுழன்றது.
அன்று மித்ராளினி சிறுவயது முதல் உடன் வளர்ந்தவன் என ஒருவனை கூறியது, ஜிஷ்ணு ஒருநாள் தான் தேடியது இங்கிருப்பதை அறிந்து தான் வந்ததாய் கூறியது என இரண்டு காட்சிகளும் மாறிமாறி கண்முன் தோன்றின.
அவளின் மூளையோ தோன்றும் காட்சிகளில் குழம்பிப்போக பார்க்க, மனமோ "இல்லஇல்ல அது நம்ப ரவுடி பேபியா இருக்காது. அவர் என்னை பார்குறதுக்காகத்தான ஒவ்வொருநாளும் காலேஜ்க்கு வந்தாரு. அத்தோட இதுவரைக்கும் நான் இவங்கள அவர் கூட பார்த்ததே இல்லையே.இவ சொல்றத பார்த்தா அந்த போலீஸ்காரரும் மித்ராளினியும் ஜோடி மாதிரி தெரியுது, ஆனா நம்ப மச்சான் கண்ணுல நம்பள பார்க்கும்போதுதான டன்னு டன்னா காதல் வழியும்" என சொல்லி அவளை திடம் பெற செய்தது.
அவளின் திடத்தை சோதிப்பது போல் அவளின் மனசாட்சி," தினமும் வந்தவன் ஆறு மாசத்துக்கு மேல அந்த பக்கமே வரவேஇல்லையே, கீர்த்தி சொல்றத வச்சி பார்த்தா மித்ராளினி காலேஜ் முடிச்ச பிறகுனு தான கணக்கு வருது" என முனங்க,
"சோ..."என அதனின் தலையில் தட்டியவள், "நீ எதுக்கு தேவைஇல்லாததலாம் கணக்கு போடற. இப்போ என்ன? என் மச்சான் என்னை தான் காதலிக்கிறாரு அவர் என்னை பார்க்க தான் வந்தாருனு அவரே கொஞ்ச நேரத்துல சொல்லுவாரு . நீ என்கிட்ட கொட்டு வாங்காம ஓடிடு" என விரட்டினாள்.
-------------------------------------------------------------------------------------
அந்த விமானநிலையம் பரபரப்பாய் இயங்கி கொண்டிருந்தது.அப்படி அனைவரும் எதை தேடி ஓடுகின்றனரோ? எங்கு திரும்பிலும் அவசரஅவசரமாய் சென்று கொண்டிருக்கும் மக்கள்.
அங்கு காத்திருப்பிற்காய் போடப்பட்டிருக்கும் நாற்காலியிலும் ஒரு சிலரே அமர்ந்திருக்க, அவர்களும் கைகளில் இருக்கும் அலைபேசியிலும், மடுந்த மடிகணிணியினிலுமே தங்களை புதைத்திருந்தனர்.
"இன்னும் இரண்டு நிமிஷத்துல நம்ப கிளம்பனும் ஷாலினி" என அழுதுகொண்டிருப்பவளை கவனித்தும் கவனியாததை போல் சொன்னான் ஜித்தேந்தர்.
திடீரென அவன் பேசியதில் திடுக்கிட்ட ஷாலினி "அத்..அத் தான்...விஷ்....வி...விஷ்வா" என தடுமாறினாள்.
அவளின் கண்களை ஆழ்ந்து பார்த்த ஜித்தேந்தர் , "இன்னும் எத்தனை நேரம் அழுதுட்டு இருக்க போற ஷாலினி. நீ இங்க இருந்து அழுதா அவன் அங்க சரி ஆகிடுவானா ?இப்போவும் அப்பவும் அவனோட கஷ்டத்துக்கு நீ தான் காரணமா இருக்க நீ மட்டும் தான்" என்றவன் அவள் புரியாமல் விழிப்பதை கண்டு இடதுகை மோதிரவிரல் கொண்டு புருவத்தை நீவிக்கொண்டான் .
ஒருநொடியில் தன்னை நிதானித்துக்கொண்டவன் , அவளின் அருகில் அமர்ந்து , "நான் உன்கிட்ட இப்போ ஒருவிஷயம் தான் சொல்ல முடியும் ஷாலினி , இப்போ நீ அழுதுட்டு இருக்கிறதுல்ல எந்த பிரயோஜனமும் இல்ல. உங்களுக்குள்ள என்ன பிரச்சனைன்னு எனக்கு தெரியாது, அதே மாதிரி விஷ்வா உன்மேல வச்சிருக்க காதலோட அளவு உனக்கு தெரியாது. அத தெரிஞ்சிக்க முயற்சி பண்ணவேண்டாம் ஆனா அந்த காதல் காயப்படாம பார்த்துக்க" என்றவன் அங்கிருந்து எழுந்து சென்றான் .
அவன் பேசி சென்ற நொடி ஷாலினிக்கு விஷ்வாவின் வார்த்தைகளே எதிரொலித்தது " நான் விளையாட்டா இருக்கலாம் என் காதல் எப்பவும் விளையாட்டு இல்லை ". அவனின் காதல் வார்த்தையில் கரைந்தவளிற்கு , இந்த நிமிடமே அவனின் கைகளில் சரணடைந்து தன்னை பேசவிடாமல் கோபப்பட்டதற்கு அவனிடம் செல்ல சண்டையிட்டு கொஞ்ச வேண்டுமென ஏக்கம் வந்தது.
தன்னவன் தன் மேல் கொண்ட காதலில் அழுகை மறைந்து பெருமை வர , ஜித்தேந்தரை தொடர்ந்து நடந்தவள்" டேய் விஷ்வா! என்கிட்ட உன்னால கோபப்படமுடியுமா என்ன ? எருமமாடு என்னை அழவச்சிட்டல... மவனே வரண்டா உன் காத்தாயியோட புது அவதாரத்தை பார்க்க தயாரா இரு வந்துக்கிட்டே இருக்கேன் "என மனதினுள் விளையாட்டாய் நினைக்க , கரங்கள் கன்னங்களில் வழிந்த கண்ணீரை துடைக்க , உதடுகள் தங்களது புது அத்தியாயத்திற்கு வரவேற்ப்பாய் புன்னகையை சிந்தியது.
விமானத்தில் ஏறும் நொடிவரை ஜித்தேந்தர் எவருடனோ அலைபேசியில் பேசிக்கொண்டுவர , ஷாலினியின் சிந்தனை தன்னுயிரானவனை சுற்றியே இருந்தது.
விமானத்தில் அமர்ந்த நொடி ஷாலினியின் முகத்தை பார்த்த ஜித்தேந்தர் அங்கு அழுகை நின்று தெளிந்திருப்பதை கண்டு, விஷ்வாக்கு அடிப்பட்டிருக்குனு இவ கிட்ட எப்படி சொல்றது என யோசித்தவன் இறங்கிய பின் சொல்லிக்கொள்ளலாம் என முடிவெடுத்தான்.
ஷாலினியின் கலக்கத்தை கண்டவன் மனதின் சஞ்சலம் காரணமாய் விஷ்வாவின் நிலையை அவனின் பாதுகாப்பிற்க்காய் தான் நியமித்தவரிடம் தொடர்பு கொண்டு தெள்ளத்தெளிவாக அறிந்துகொண்டவன் ,
தலையில் அடிபட்டிருப்பதாய் கேட்டபொழுது அவனின் ஒருவருடம் முன்பான நிலை நினைவு வர விரைவாய் கட்டளைகளை விடுத்து இங்கிருந்தவாரே தன் தம்பியை காத்தான்.
இத்தனை நேரம் தனது மனத்திற்கான சஞ்சலத்தின் விடை தனது தம்பியின் நிலையே ஆகையால் இனி எதுவும் தவறாய் நேராது என தவறாக கணித்தவன், அந்நிம்மதியில் தன்னவளை காணும் நொடிகளை கற்பனை கண்டவாறு வந்தான்.
விமானம் தரை இறங்க தத்தம் மனதிலுள்ள பாரமும் இறங்கியதை உணர்ந்தவாறு ஜித்தேந்தரும், ஷாலினியின் சென்னை விமானநிலையைத்தின் வெளியே வந்தனர்.
அங்கு அவன் ஏற்கனவே கட்டளையிட்ட படி அவனின் காரும் அருகில் மற்றொரு காரும் இருக்க, ஷாலினி அவனை கேள்வியாய் பார்த்தாள்.
அவளின் கேள்வியை உணர்ந்த ஜித்தேந்தர், " விஷ்வா இப்போ உங்க வீட்ல தான் இருக்கான்.சோ " என்றவன் தன் பேச்சை நிறுத்தி மற்றொரு காரை காட்ட,
விஷ்வாவின் திடீர் நடைவடைக்கைகான காரணத்தை ஓரளவிற்கு யூகித்தவள் எந்தவித உணர்வையும் வெளிக்காட்டாமல் ஜித்தேந்தரை நோக்கி ஓர் புன்னகையை சிந்தி, " அத்தான் அக்காவை பார்த்தவுடனே எங்களை மறந்துராதீங்க. அண்ட் ஒன் மோர் திங் பார்த்து ரொம்ப நாள் ஆகுதுன்னு கடத்திட்டு கிடத்திட்டு போய்டாதிங்க, அப்றம் என் ஆள் உங்கள சும்மா விடமாட்டான் சொல்லிட்டேன் " என விளையாட்டாய் அவனை கிணடலடித்தவள் , தனக்கும் விஷ்வாவிற்க்கும் எப்பிரச்சனையும் வராது என மறைமுகமாய் உணர்த்தினாள்.
தனது காரில் அமர்ந்த ஜித்தேந்தருக்கு என்றுமில்லாவகையில் மகிழ்ச்சி கொப்பளிக்க மனதின் ஓரமிருந்த சஞ்சலத்தையும் மறந்து தனது காரை வீட்டை நோக்கி செலுத்தினான்.
இங்கு இனி அனைத்தும் சுகமே என தன்னவனை சந்திக்க சென்ற ஷாலினியின் கண்களை கலங்க செய்தது அங்கிருந்த விஷ்வாவின் நிலை.
*********************************************************************************
கோவிலின் நடை சாற்றும் நேரம் ஆகியதால் அருகிலிருந்த பூங்காவிற்கு வந்தவள் சித்ராங்கதாவிற்கு செய்தியை அனுப்ப மறக்கவில்லை.
பூங்காவின் மரநிழலில் அமர்ந்தவாறு மித்ரேந்தருடன் கொஞ்சி விளையாடியதில் நேரம் ஆகியதை அவள் கவனிக்கமறந்திருந்தாள்.
இன்னும் சித்ராங்கதா ஏன் வரவில்லை என யோசித்தவள், அவள் வருமுன் விஷ்வாவிற்கு அழைக்க வேண்டாம் என சொல்லி சென்றதில் என்ன செய்வது என விழித்துக்கொண்டிருந்தாள்.
திடீரென அவளின் மனம் படபடப்பாகியது, அவளின் வாழ்வின் முக்கிய அங்கம் அவளிடம் சேரப்போவதுபோல் ஓர் எண்ணம் அவளுள் ப்ரவாகமெடுத்தது. அதன் தாக்கத்தில் மித்ரேந்தரை தன்னோடு இறுக்கி அணைத்தவளின் கண்கள் வேகவேகமாய் சுற்றுப்புறத்தை ஆராய்ந்தது.
அதேநேரம் காரில் வந்துகொண்டிருந்த ஜித்தேந்தரின் மனதில் இனம்புரியா உணர்வு கட்டவிழ , அது தன்னவளிர்க்கானது என அறிந்திருந்தவன் அவள் அருகிலிருப்பதை உணர்ந்துகொண்டான். சாலையின் ஓரமாய் காரை நிறுத்தியவன், தன் ராணிமாவிற்க்கான தேடலை கண்களில் கொண்டு அவ்விடத்தை ஆராய ஆரம்பித்தான் .
அவனின் உடம்பில் உள்ள ஒவ்வொரு அணுவும் தன்னவளை காணப்போகும் ஆவலில் குதுகலித்து ஆட்டம் போட இதழ் மட்டுமில்லாமல் கண்களும் சேர்ந்து சிரித்தவாறிருந்தது.
இங்கு மித்ராளினியோ தன்னுள் ஏற்படும் உணர்வுகளுக்கு அர்த்தம் புரியாமல்போக அதை ஆராயமுற்படாமல் அறியமுற்பட்டாள். ஏதோ ஒரு சக்தி தன்னை தன்னுள் ஆழிப்பேரலையாய் சுருட்டிக்கொள்ள முற்படுவதை அறிந்தவள் தானும் அதில் சுருண்டுபோக ஆசைகொண்டாள் .
அவ்வுணர்வின் ஈர்ப்பில் மெதுவாய் அப்பூங்காவை விட்டு வெளிவந்தவளின் கண்கள் தன் தேடலை இன்னும் நிறுத்தவில்லை. தற்பொழுது யாரவது அவளிடம் எதை தேடுகிறாய் என கேட்டாலும் அவளிற்கு விடை அளிக்க தெரியாது. ஆயினும் அவளின் மனம் தன் இணை அங்கிருப்பதை உணர்ந்து அவளை அங்கு சேர்க்க எண்ணி உசுப்பியது.
முன்பைவிட வேகமாய் ஜித்தேந்தரின் இதயம் துடிக்கஆரம்பிக்க எங்கு தன் இதயம் வெளியேவந்துவிடுமோ என அச்சம் கொண்டானோ அது தன்னவளிற்கு சொந்தமானது என தன் கரம் கொண்டு அதனை பொத்திக்கொண்டான் .
வெளியே வந்த மித்ராளினியின் கண்கள் தன் இலக்கை அடைந்ததோ இல்லையோ அவளின் கரங்களில் இருந்த மித்ரேந்தர் தன் தந்தையை கண்டுகொண்டான்.
இவர்கள் நின்றுகொண்டிருந்த அந்த முக்கியசாலையின்( மெயின் ரோட்) மறுப்பக்கம் அவன் நின்றிருந்தாலும் தன் தந்தையை மிக சரியாக கண்டுகொண்டான் புத்திரன்.
"ம்நா......நா...ம்ங்க..னா..."என குதூகலித்தவன் அவளின் கைகளில் துள்ள , தடுமாறிய மித்ராளினி அவனை சரியாய் பிடித்தவாறு எதிரே கண்டாள்.
பார்த்தவள் பார்வையை விலக்கமுடியாதவாாறு அவனின் முகம் அவளுள் பதிந்து தன் உரிமையை உணர்த்தி அவளின் நினைவை அசைக்க, காதோரமாய் " ராணிமா நான் எவ்வளவு தூரத்துல இருந்தாலும் சரி, எவ்வளவு கூட்டத்துக்கு நடுவுல இருந்தாலும் சரி, உன்னோட இந்த பார்வை ஒன்னு போதும் டி எனக்கு, நீ இருக்க இடத்தை கண்டுபிடிக்க...இந்த ரெண்டு கண்ணுலையும் என்னை பார்குறப்போலாம் தெரியுற அந்த காதல் இருக்கே ப்ப்பாஆ ..... சும்மா காந்தம் மாதிரி என்னை கட்டி இழுக்குதுடி" என காதலில் பிதற்றும் குரல் அட்சரம் பிசகாமல் கேட்டது.
அதன் பிரதிபலிப்பாய் அவளின் கண்களிலும் அந்த குரலுக்கு குறைவில்லா காதல் வெளிப்பட எதிரிலிருந்தவனையே இமை கூட அசைக்காமல் பார்த்திருந்தாள்.
அந்த குரலின் சொற்கள் உண்மைதானோ ? இவள் தன்னையுமறியாமல் காதல் பொங்க அவனை பார்த்ததில் அவளின் அக்காந்தபார்வை அவன் சொன்னது போலவே அவனின் காதல் மனதை ஈர்த்த அடுத்தநொடி அவன் இவளின்புறம் திரும்பிருந்தான் .
ஏழு கடல் ஏழு மலை தாண்டி என இதை தான் சொல்வனரோ என ஓர் சந்தேகம் ஜித்தேந்தருக்கு எழுந்தது . அவளை கண்ட நொடி சத்தியமாய் அவனின் இதயம் ஒருமுறை துடிப்பதை நிறுத்தி பின் தன் இணையை கண்ட ஆனந்தத்தில் முன்பே விட வேகமாய் மீண்டும் துடித்தது .
அவளை கண்டவனோ தன் உயிர் தன்னுடல் சேர்ந்ததாய் உணர்ந்தான் . அவளை நிதானமாய் உச்சி முதல் பாதம் வரை பார்த்தவாறு தன்னவளை மெதுமெதுவாய் தன்னுள் உள்வாங்கினான்.
இருவருக்கும் இடையில் இருக்கும் இடைவெளி அதிகமாயினும், அருகில் செல்லும் நொடியில் கூட அவளை காணாமல் போக கூடாது என அங்கிருந்தே சிறிது சிறிதாய் ரசித்தவனின் உயிர் பூ இப்பொழுதுதான் பூத்ததாய் கொண்டாட்டமிட , கண்களோ அவளின் கைகளில் இருந்த தங்களின் மகவை கண்டு மின்னின .
ஏனோ அவள் தங்கள் மகவை ஏந்தியவாறு தன் வருகைக்காக காத்திருப்பதை தோன்ற அந்த உணர்வை ஆழ்ந்து அனுபவித்தவன் " உன்னோட பாவா வந்துட்டேன் டா ராணிமா " என முனங்கியவாறு ,அது நகரின் முக்கிய சாலை என்பதையும் உணராமல் அதை கடக்க ஆரம்பித்தான்.
அவனை கண்டுகொண்ட அவளின் இதயமும் அவனுடன் இணைய அவளை தூண்ட அவளின் மூளையோ அவன் யாரென அறிய பிரயாதனப்பட்டது. மூளையின் முயற்சியை இதயத்தின் மகிழ்வு தடுக்க உறவறியா உணர்வுடன் அவளும் அவனை நோக்கி தன் எட்டுக்களை எடுத்து வைத்தாள்.
காதலதை உணரும்
முதல் தருணம்
பூவின் மென்மையை
உணர வைப்பதெனில் ,
தொலைத்த காதலதை
மீண்டும் உயிரோட்டமாய் கண்டுகொள்ளும் நொடி ...
மழலையின் பாதமது
நெஞ்சில் உதைக்கும்
மென்மைக்கு ஒத்தானது...!!!
-கரைவாள்...
Last edited: