Thoshi
You are more powerful than you know😊❤
நினைவில் தத்தளிக்கும் நேசமது :
வத்தலக்குண்டு :
பாண்டியர்கள், சோழர்கள் ,நாயக்கர்கள் என பெறும் அரசர்கள் வம்சம் ஆண்ட பெரிய பெரிய குன்றுகளை தன்னுள் அடக்கி அருமையாக காட்சி தந்த வெற்றிலைக் குன்றே தற்போது பெயர் நழுவி வெத்தலக் குண்டு என்று அழைக்கப்படுகிறது. வத்தலகுண்டு பசுமைக்கு பெயர் போன ஊர், வாழைப்பழம் மற்றும் தேங்காய்காகவே அவ்வூரில் கூட்டம் கூடும்.கொடைக்கானல் போகும் மக்கள் நிச்சயம் இதை தாண்டி தான் போவார்கள்.
வத்தலகுண்டு திருநகரில் அமைந்துள்ளது அந்த வீடு .காலையிலே அந்த வீடு ரொம்ப பரபரப்பா இருக்கு, என்னவாயிருக்கும் சரி வாங்க போய் பாப்போம்.
என்னடா இது கேட்டே (gate) இம்மாம் பெருசா இருக்கு ?? Gate னா நம்ப ஊர்ல இருக்க மாதிரி இல்ல ...அழகா தேக்குமரத்திலயே செஞ்சிருக்காங்க . கேட்டிலேயே ஒருபுறம் அழகா ராமரும் சீதையும் இணைந்து இருப்பது போலவும் மற்றொரு பக்கம் கிருஷ்ணரின் குழலிசையில் ராதை மயங்கி ஆடுவது போலவும் வடிவமைத்திருந்தனர் . வீட்டிற்கு வருபவர் அனைவரும் இறைவனின் அழகைக் கண்டு ,அவனின் ஆசீர்வாதத்துடன் உள்ளே நுழைவது போல் அமைந்திருந்தது. கேட்டை திறந்து உள்ளே போனாள் இரண்டு புறமும் அழகழகாய் பூக்களுடன் மரங்களும் அமைந்திருந்தன. உள்ளே நுழையும் பொழுதே பூக்களின் வாசம் நாசியை தாக்கியது . நிச்சயம் வீட்டிற்கு வருபவர்களின் மனம் மகிழ்ச்சியை தத்தெடுக்கும் . அந்த பூக்களை எல்லாம் ரசித்துக் கொண்டே உள்ளே நடந்தால் , போர்டிகோவுடன் கூடிய மாளிகைதான் வெள்ளை நிறத்தில் அழகான இளவரசி போல் கண்களுக்கு விருந்தானது . சரி உள்ள போய் பார்ப்போம் .. நில்லுங்க நில்லுங்க உள்ள போற அவசரத்துல வாசல்ல இருக்க கோலத்தை பாக்காம போறோம் . எவ்ளோ அருமையா இருக்கு , பக்கத்திலேயே அழகான ஒரு சின்ன தொட்டியில் நீர் நிரப்பி அதில் பூக்கள் அமைந்திருந்தது மனதைக் கொள்ளை கொண்டது .
இவ்வளவு பெரிய கோலம் போட்டு இருக்கிறார்கள் ஏதேனும் விசேஷமாக இருக்குமோ யோசித்துக் கொண்டே உள்ளே சென்றால் , அம்மாளிகையின் ஹாலில் அனைவரும் பரபரப்பாக இருந்தனர்.வேலையாட்கள் அனைவரும் சிரத்தையுடனும் முகத்தில் மகிழ்ச்சியுடனும் வேலை செய்கையில் நெற்றியில் அழகான பெரிய பொட்டுடன் நீல நிற பட்டுப்புடவை உடுத்தி பார்ப்பதற்கே அழகாய் அமைதியுடன் இருந்தார் அந்த அம்மாள் . அவர் அங்கு வந்த அப்பெரியவரை கண்டு... " யுகாதி சுபகன்க்ஷாலு " என்று கூறி காலில் விழுந்தார். அவரும் தீர்க்க சுமங்கலியாக இரு என்று ஆசீர்வதித்து " யுகாதி பண்டுகா" என்றார் . மாமா காரு மித்து இன்னும் எழ வில்லையா ?? என தன் மாமனார் கோதண்டராமனிடம் கேட்டார் ருக்குமணி . மித்து குட்டி காலையிலயே சீக்கிரமா எழுந்துட்டாமா ருக்குமணி நான் தான் தூங்குடானு அனுப்பி வைச்சேன் .பாவம் குழந்தை நேத்து வீட்டுக்கு வரத்துக்கே மணி ஒன்று ஆகிடுச்சுல, அதான் தூங்கட்டும் என்று அனுப்பினேன் என மருமகள் தன் கணவனிடம் கேட்டதற்கு பதிலளித்தவாரே அங்கு வந்தார் ஜானகியம்மாள் . அவரைக்கண்டு அத்தகாரு நீங்களும் ஆசிர்வாதம் பண்ணுங்க " யுகாதி பண்டுகா ".
பின்பு நான் போய் அவருக்கு காபி கொடுத்துட்டு வரேன் என்று புன்னகையுடன் சொல்லிவிட்டு அவ்விடத்திலிருந்து அகன்றார் ருக்மணி அம்மாள்.
அம்மாளிகையின் மூத்த தம்பதி, கோதண்டராமன் மற்றும் ஜானகியம்மாள். அவர்களின் புத்திரன் கோகுலக்கண்ணன் மனைவியே ருக்குமணி. இருவரும் தற்பொழுதும் மிகுந்த காதலுடன் மனமொத்த தம்பதியாய் உள்ளனர் . இவர்களின் காதலுக்கு பரிசாக பிறந்தவளே மித்ராளிணி .
காப்பி எடுத்துக்கொண்டு அறைக்கு சென்ற ருக்மணியை கண்டு கோகுலக்கண்ணன் விழி விழி விரித்து நின்றார் . எப்படியடி நீ மட்டும் இந்த வயதிலும் அப்பொழுது பார்த்தது போல அழகாகவே இருக்க எனக்கேட்ட அவரின் கண்களில் காதல் வழிந்தது . அதைக் கண்டு உள்ளுக்குள் காதல் பெருகினாலும், காலையிலே ஆரம்பிச்சிட்டீங்களா இந்த காப்பிய முதல்ல குடிங்க பூஜை வேற இருக்கு சீக்கிரம், சீக்கிரம் கிளம்பி வாங்க. நான் போய் அத்தைக்கு உதவி செய்யணும் சொல்லி விட்டு வெளியேறினார் . இந்த வயதிலும் வெட்கம் கொண்டு செல்லும் தன் மனைவியைக் எப்பொழுதும் போல் இப்பொழுதும் ரசனையுடன் கண்டார் கோகுலக்கண்ணன் .
அம்மாளிகையின் ஓர் அறையில் அழகை மொத்தமாக குத்தகை எடுத்ததுபோல இருந்தாள் அப்பெண் . இவளை படைத்த பொழுது பிரம்மனும் மயங்கித்தான் போயிருப்பானோ என்று எண்ணழகுடன் அவ்வழகை பற்றிய கர்வம் சிறிதுமின்றி மெல்லிய புன்னைகையை இதழ்களில் தவழவிட்டவாறு அமர்ந்திருந்தவள் தனது கால்விரல் நகங்களுக்கு வண்ணம் பூசி கொண்டிருந்தாள் மித்ராளினி .( ரொம்ப buildup பண்றோமோ சரி பண்ணுவோம் காசா பணமா ...)
திடீரென அவள் இதயம் வேகமாக துடித்தது . அதன் காரணம் அறிந்தவளின் முகம் வெட்டகத்தை பூசியது தன்னவனின் வரவை அறிந்து .நிமிர்ந்து அவ்வறை முழுவதும் தன் கண்களால் அலசினாள் . எவருமே இல்லை ஆயினும் அவளின் உள்ளுணர்வு கட்டியம் கூறியது அவளவன் அங்கிருப்பதை . தேடியவள் ஒன்றும் அறியாததை போல் திரும்பவும் தனது விரல் நகங்களுக்கு வண்ணம் பூச செல்கையில் அவள் முன் அமர்ந்து அவளின் கையில் இருந்து அதை வாங்கி தானே வண்ணம் பூசினான் அவன் ...அவன் ஜித்தேந்தர் ......மித்ராளிணியின் பாவா ....
பாவா நுவ்வு எந்தா செய்யிலி ??( பாவா நீங்க என்ன செய்யிறீங்க )...னுசொல்லிகிட்டே கால்களை பின்னுக்கிழுத்தால் .அவள் கால் பாதத்தை விடாமல் பற்றிகொண்டே..
நான் என் பொண்டாட்டிய அழகு பண்றேன் நீ என்னடி தடுக்கிறது ...
பொண்டாட்டியா ? பாவா நம்மளுக்கு இன்னும் கல்யாணம் ஆகல நினைவிருக்குதா ..
ஆஹான் ....அப்படியா என்று தன்னவளை பாவாடை தாவணியில் முதல் முறையாக காண்பதால் அவளின் அவ்வழகில் மயங்கி ...பற்றிய அவள் பாதங்களில் தன் இதழ்கள் கொண்டு முத்திரை பதித்தான் . அவனுடன் வாயடித்துக்கொண்டிருந்தவள் அவனின் இச்செயலில் பேச்சற்று போனாள்....அம்மோனைநிலையை சிறிது நேரம் தொடர்ந்த பின் ஜித்தேந்தர் தான் முதலில் வெளிவந்து .... " happy yugathi da " என்று கூறி தன் பின் இருந்த கவரை எடுத்து அவளிடம் கொடுத்து ராணிமா உன் பாவா உனக்காக கொண்டுவந்தது இன்னிக்கு நீ இதுல இருக்கறதுதான் போடணும் .....
ஆனா பாவா ஜினுவும் டிரஸ் எடுத்து குடுத்துருக்கானே எப்பவும் அவன் குடுக்கரததான் போடுவேன் .
அவள் பதிலை கேட்டு முகம் வாடினாலும் அதை நொடியில் மறைத்து சரிடாமா நீ அதே போட்டுக்கோ என சிரிப்புடன் கூறினான் .
அவன் சிரிச்சிக்கிட்டே சொன்னாலும் ,ஒரு நொடிதான்னாலும் அவனோட முகம் வாடியதை தெரிஞ்சிக்கலைனா எப்படி ஜித்தேந்தரோட இத்தனை காதலுக்கு அவ சொந்தக்காரி ஆகிருப்பா.
எழுந்து உள்ளே சென்றவளை கண்டு ஜித்தேந்தர், அமைதியாய் அமர்ந்திருந்து அங்கு இருந்த தன்னவளின் புகைப்படங்களை ரசித்து கொண்டிருந்தான் . அப்புகைப்படங்களை கண்டவன் அவளுக்காக வாங்கிய புடவையில் அவளை கற்பனை செய்துகொண்டிருந்தான் . அவனது கற்பனையின் எதிரொலியாய் அவன்முன் வந்து நின்ற தன்னவளை கண்டு அவன் சுற்றுப்புறம் மறந்தான் .
ஜித்தேந்தர் அவளுக்காக பாத்து பாத்து அவளுக்கு ஏத்த மாதிரி வாங்கியிருந்த அந்த சிகப்பு நிற பட்டுப்புடவையில் அதற்க்கு ஏற்ப நகைகள் அணிந்து நின்றிருந்தளை கண்டு அவன் பார்வை மாறியது .
அதை கண்டு வெட்கத்தில் முகம் சிவக்க திரும்பி நின்றாள்.அவளின் பின் நெருங்கி நின்றவன் விரிந்திருந்த அவளின் கூந்தலை ஒதுக்கி அவளின் தோள் வளைவில் முத்தமிட்டான் .அவளின் உடல் சிலிர்த்து அடங்கியது . தனது தொடுகையில் சிலிர்க்கும் தன்னவளிடம் கிறங்கி மேலும் அவளிடம் அச்சிலிர்ப்பை ஏற்படுத்தினான் . அவனின் செயலில் பெண்ணவள் உணர்வின் பிடியில் தவித்தாள் ...தன்னவளின் தவிப்பரிந்து விலகியவன் ..பின்பு மென்மையாய் அவளை அனைத்து சகஜநிலைக்கு கொண்டுவர ,ராணிமா என்னடா நீங்க உங்க யுகாதி க்கு வந்த பாவா க்கு எதுவும் சாப்பிடலாம் தர மாட்டிங்களா என கேட்டான் .
அவ்வளவு நேரம் உணர்வின் பிடியில் சிக்கி தவித்தவள் அக்கேள்வியில் அச்சோ பாவா மறந்தேபோய்ட்டேன் பாருங்க ....இந்நேரம் பூஜை முடிஞ்சிருக்கும் நான் போய் உங்களுக்கு கொண்டுவரேன்னு சொல்லிட்டு கீழ போனவளை பார்த்துட்டேய் அங்கிருந்த கட்டிலில் அமர்ந்தான் .
பூஜை முடிந்தபின் வந்த மகளை கண்டு திட்டுவதற்கு வாயை திறந்த ருக்குமணி பட்டுப்புடைவையில் மணப்பெண் பெண் போல் அழகாய் வந்த மகளைக்கண்டு திருப்தியாய் புன்னைகைத்தார் .
மித்துகுட்டி நம்ப ஜிஷ்ணு எடுத்துக்குடுத்த புடைவையா இது பரவாலையே பயல் நல்லா தான் எடுத்துருக்கான் - ஜானகியம்மாள் வழக்கம்போல் அங்கு இல்லைனாலும் அவங்க செல்ல பேரன வம்பிழுக்குறாங்க .
அவர் சொன்னதை கேட்டு பேச்சை மாற்றி அம்மா எனக்கு பசிக்குது என்றாள் மித்ராளினி .
முதல்ல போய் சாமி கும்பிட்டுவிட்டு வா ...வந்து உனக்கு வேணும்ன்றதா எடுத்துட்டு போ...அவ அவங்க அம்மா சொன்னதுபோல பூஜை அறை சென்று கும்பிட்டவள் பின்பு ஒரு தட்டில் வேண்டியது அனைத்தையும் எடுத்து வைத்து கொண்டு செல்வதை கண்ட கோகுலக்கண்ணன் இங்கயே சாப்புடுமா னு சொன்னதுக்கு இல்ல நானா நான் மேலே போய் சாப்ட்டுக்குறேன் னு சொல்லிட்டு வந்துட்டாள் .
(யாரும் ஏன் தெலுங்கு பேசலானுலாம் கேக்கப்படாது........ஏன்னா அவங்க ரொம்ப வருஷமா இங்க இருக்கறதுனால தமிழ் தான் பேசுவாங்க ஹீஹீ எனக்கு தெலுங்கு தெரியாதுன்னு நான் சொல்லவே இல்ல சரியா )
அவ எடுத்துட்டு வந்ததலாம் பார்த்துட்டு நம்ப ஜித்தேந்தர் .. அடியே என்னடி இதுலாம் தின்ன வச்சே ஆள close பண்ணிடுவாங்க போலனு கண்ணுமுழி பிதுங்குற மாதிரி முழிச்சதை பார்த்து பாவா என சிணுங்கியவள் அவன் அருகில் கட்டிலில் அமர்ந்து தான் கொண்டுவந்ததை பத்தி சொல்ல ஆரம்பிச்சிட்டா .
பாவா இதுக்கு பெயர் போபட்டு ....உங்க ஊர்ல போலி சொல்லுவிங்கள அதே தான் மைதா மாவுல செய்வாங்க ....இது பச்சடி இந்த இடத்துல ஜித்தேந்தர் ராணிமா பாவா கிட்சேன் பக்கம் தான்டா போகல ஆனா நல்லா சாப்புடுவேன் ...இத பச்சடினு சொன்னா பச்சப்புள்ள கூட நம்பாது ....அவன் சொன்னதை கேட்டவள் , பாவா என்றவாறு இடையில் கை வைத்து அவனை முறைத்தாள் . அதில் அவனது பார்வை அவளின் புடைவையின் இடைவெளியில் மேய்ந்தது. அதை கண்டவள்
பாவா என கத்தி இப்போ என்ன சொல்லவிடுங்கனு சொல்லிட்டு ....இது ஒன்னும் நீங்க பிரியாணிக்கு சாப்புட்ற பச்சடி இல்ல ...இதுல இனிப்பு , உவர்ப்பு ,கசப்பு , துவர்ப்பு னு நாலு சுவையும் இருக்கும் ....நம்ப வாழ்க்கையும் இப்படி எல்லா சுவையும் கலந்து தான் இருக்கும்னு சொல்றதுக்குத்தான் இங்கலாம் புத்தாண்டன்னைக்கு இத செய்வாங்க ... போபட்டுவ பச்சடில தொட்டு சாப்பிட்ட செம்மையா இருக்கும் .அப்றம் இது பாயசம் ...இது புளியோதரை னு அவ ஒன்னு ஒன்னா சொல்றத கவனிச்சானோ இல்ல பேசும்போது அவ கண்ணு உருளரத்தையும் தலை ஆட்டும்பொழுது கம்பலும் சேர்ந்தாடுவதை கண்டானோ ....கட்டிலில் அமர்ந்து அவளை மட்டுமே பார்த்துக்கொண்டு அவனும் அவனை தவிர வேறுலகு இல்லை என்பதை போல அவளும் அந்நேரத்தை அனுபவித்தனர் ...
போபட்டு
பச்சடி
.............................................
வத்தலக்குண்டு :
பாண்டியர்கள், சோழர்கள் ,நாயக்கர்கள் என பெறும் அரசர்கள் வம்சம் ஆண்ட பெரிய பெரிய குன்றுகளை தன்னுள் அடக்கி அருமையாக காட்சி தந்த வெற்றிலைக் குன்றே தற்போது பெயர் நழுவி வெத்தலக் குண்டு என்று அழைக்கப்படுகிறது. வத்தலகுண்டு பசுமைக்கு பெயர் போன ஊர், வாழைப்பழம் மற்றும் தேங்காய்காகவே அவ்வூரில் கூட்டம் கூடும்.கொடைக்கானல் போகும் மக்கள் நிச்சயம் இதை தாண்டி தான் போவார்கள்.
வத்தலகுண்டு திருநகரில் அமைந்துள்ளது அந்த வீடு .காலையிலே அந்த வீடு ரொம்ப பரபரப்பா இருக்கு, என்னவாயிருக்கும் சரி வாங்க போய் பாப்போம்.
என்னடா இது கேட்டே (gate) இம்மாம் பெருசா இருக்கு ?? Gate னா நம்ப ஊர்ல இருக்க மாதிரி இல்ல ...அழகா தேக்குமரத்திலயே செஞ்சிருக்காங்க . கேட்டிலேயே ஒருபுறம் அழகா ராமரும் சீதையும் இணைந்து இருப்பது போலவும் மற்றொரு பக்கம் கிருஷ்ணரின் குழலிசையில் ராதை மயங்கி ஆடுவது போலவும் வடிவமைத்திருந்தனர் . வீட்டிற்கு வருபவர் அனைவரும் இறைவனின் அழகைக் கண்டு ,அவனின் ஆசீர்வாதத்துடன் உள்ளே நுழைவது போல் அமைந்திருந்தது. கேட்டை திறந்து உள்ளே போனாள் இரண்டு புறமும் அழகழகாய் பூக்களுடன் மரங்களும் அமைந்திருந்தன. உள்ளே நுழையும் பொழுதே பூக்களின் வாசம் நாசியை தாக்கியது . நிச்சயம் வீட்டிற்கு வருபவர்களின் மனம் மகிழ்ச்சியை தத்தெடுக்கும் . அந்த பூக்களை எல்லாம் ரசித்துக் கொண்டே உள்ளே நடந்தால் , போர்டிகோவுடன் கூடிய மாளிகைதான் வெள்ளை நிறத்தில் அழகான இளவரசி போல் கண்களுக்கு விருந்தானது . சரி உள்ள போய் பார்ப்போம் .. நில்லுங்க நில்லுங்க உள்ள போற அவசரத்துல வாசல்ல இருக்க கோலத்தை பாக்காம போறோம் . எவ்ளோ அருமையா இருக்கு , பக்கத்திலேயே அழகான ஒரு சின்ன தொட்டியில் நீர் நிரப்பி அதில் பூக்கள் அமைந்திருந்தது மனதைக் கொள்ளை கொண்டது .
இவ்வளவு பெரிய கோலம் போட்டு இருக்கிறார்கள் ஏதேனும் விசேஷமாக இருக்குமோ யோசித்துக் கொண்டே உள்ளே சென்றால் , அம்மாளிகையின் ஹாலில் அனைவரும் பரபரப்பாக இருந்தனர்.வேலையாட்கள் அனைவரும் சிரத்தையுடனும் முகத்தில் மகிழ்ச்சியுடனும் வேலை செய்கையில் நெற்றியில் அழகான பெரிய பொட்டுடன் நீல நிற பட்டுப்புடவை உடுத்தி பார்ப்பதற்கே அழகாய் அமைதியுடன் இருந்தார் அந்த அம்மாள் . அவர் அங்கு வந்த அப்பெரியவரை கண்டு... " யுகாதி சுபகன்க்ஷாலு " என்று கூறி காலில் விழுந்தார். அவரும் தீர்க்க சுமங்கலியாக இரு என்று ஆசீர்வதித்து " யுகாதி பண்டுகா" என்றார் . மாமா காரு மித்து இன்னும் எழ வில்லையா ?? என தன் மாமனார் கோதண்டராமனிடம் கேட்டார் ருக்குமணி . மித்து குட்டி காலையிலயே சீக்கிரமா எழுந்துட்டாமா ருக்குமணி நான் தான் தூங்குடானு அனுப்பி வைச்சேன் .பாவம் குழந்தை நேத்து வீட்டுக்கு வரத்துக்கே மணி ஒன்று ஆகிடுச்சுல, அதான் தூங்கட்டும் என்று அனுப்பினேன் என மருமகள் தன் கணவனிடம் கேட்டதற்கு பதிலளித்தவாரே அங்கு வந்தார் ஜானகியம்மாள் . அவரைக்கண்டு அத்தகாரு நீங்களும் ஆசிர்வாதம் பண்ணுங்க " யுகாதி பண்டுகா ".
பின்பு நான் போய் அவருக்கு காபி கொடுத்துட்டு வரேன் என்று புன்னகையுடன் சொல்லிவிட்டு அவ்விடத்திலிருந்து அகன்றார் ருக்மணி அம்மாள்.
அம்மாளிகையின் மூத்த தம்பதி, கோதண்டராமன் மற்றும் ஜானகியம்மாள். அவர்களின் புத்திரன் கோகுலக்கண்ணன் மனைவியே ருக்குமணி. இருவரும் தற்பொழுதும் மிகுந்த காதலுடன் மனமொத்த தம்பதியாய் உள்ளனர் . இவர்களின் காதலுக்கு பரிசாக பிறந்தவளே மித்ராளிணி .
காப்பி எடுத்துக்கொண்டு அறைக்கு சென்ற ருக்மணியை கண்டு கோகுலக்கண்ணன் விழி விழி விரித்து நின்றார் . எப்படியடி நீ மட்டும் இந்த வயதிலும் அப்பொழுது பார்த்தது போல அழகாகவே இருக்க எனக்கேட்ட அவரின் கண்களில் காதல் வழிந்தது . அதைக் கண்டு உள்ளுக்குள் காதல் பெருகினாலும், காலையிலே ஆரம்பிச்சிட்டீங்களா இந்த காப்பிய முதல்ல குடிங்க பூஜை வேற இருக்கு சீக்கிரம், சீக்கிரம் கிளம்பி வாங்க. நான் போய் அத்தைக்கு உதவி செய்யணும் சொல்லி விட்டு வெளியேறினார் . இந்த வயதிலும் வெட்கம் கொண்டு செல்லும் தன் மனைவியைக் எப்பொழுதும் போல் இப்பொழுதும் ரசனையுடன் கண்டார் கோகுலக்கண்ணன் .
அம்மாளிகையின் ஓர் அறையில் அழகை மொத்தமாக குத்தகை எடுத்ததுபோல இருந்தாள் அப்பெண் . இவளை படைத்த பொழுது பிரம்மனும் மயங்கித்தான் போயிருப்பானோ என்று எண்ணழகுடன் அவ்வழகை பற்றிய கர்வம் சிறிதுமின்றி மெல்லிய புன்னைகையை இதழ்களில் தவழவிட்டவாறு அமர்ந்திருந்தவள் தனது கால்விரல் நகங்களுக்கு வண்ணம் பூசி கொண்டிருந்தாள் மித்ராளினி .( ரொம்ப buildup பண்றோமோ சரி பண்ணுவோம் காசா பணமா ...)
திடீரென அவள் இதயம் வேகமாக துடித்தது . அதன் காரணம் அறிந்தவளின் முகம் வெட்டகத்தை பூசியது தன்னவனின் வரவை அறிந்து .நிமிர்ந்து அவ்வறை முழுவதும் தன் கண்களால் அலசினாள் . எவருமே இல்லை ஆயினும் அவளின் உள்ளுணர்வு கட்டியம் கூறியது அவளவன் அங்கிருப்பதை . தேடியவள் ஒன்றும் அறியாததை போல் திரும்பவும் தனது விரல் நகங்களுக்கு வண்ணம் பூச செல்கையில் அவள் முன் அமர்ந்து அவளின் கையில் இருந்து அதை வாங்கி தானே வண்ணம் பூசினான் அவன் ...அவன் ஜித்தேந்தர் ......மித்ராளிணியின் பாவா ....
பாவா நுவ்வு எந்தா செய்யிலி ??( பாவா நீங்க என்ன செய்யிறீங்க )...னுசொல்லிகிட்டே கால்களை பின்னுக்கிழுத்தால் .அவள் கால் பாதத்தை விடாமல் பற்றிகொண்டே..
நான் என் பொண்டாட்டிய அழகு பண்றேன் நீ என்னடி தடுக்கிறது ...
பொண்டாட்டியா ? பாவா நம்மளுக்கு இன்னும் கல்யாணம் ஆகல நினைவிருக்குதா ..
ஆஹான் ....அப்படியா என்று தன்னவளை பாவாடை தாவணியில் முதல் முறையாக காண்பதால் அவளின் அவ்வழகில் மயங்கி ...பற்றிய அவள் பாதங்களில் தன் இதழ்கள் கொண்டு முத்திரை பதித்தான் . அவனுடன் வாயடித்துக்கொண்டிருந்தவள் அவனின் இச்செயலில் பேச்சற்று போனாள்....அம்மோனைநிலையை சிறிது நேரம் தொடர்ந்த பின் ஜித்தேந்தர் தான் முதலில் வெளிவந்து .... " happy yugathi da " என்று கூறி தன் பின் இருந்த கவரை எடுத்து அவளிடம் கொடுத்து ராணிமா உன் பாவா உனக்காக கொண்டுவந்தது இன்னிக்கு நீ இதுல இருக்கறதுதான் போடணும் .....
ஆனா பாவா ஜினுவும் டிரஸ் எடுத்து குடுத்துருக்கானே எப்பவும் அவன் குடுக்கரததான் போடுவேன் .
அவள் பதிலை கேட்டு முகம் வாடினாலும் அதை நொடியில் மறைத்து சரிடாமா நீ அதே போட்டுக்கோ என சிரிப்புடன் கூறினான் .
அவன் சிரிச்சிக்கிட்டே சொன்னாலும் ,ஒரு நொடிதான்னாலும் அவனோட முகம் வாடியதை தெரிஞ்சிக்கலைனா எப்படி ஜித்தேந்தரோட இத்தனை காதலுக்கு அவ சொந்தக்காரி ஆகிருப்பா.
எழுந்து உள்ளே சென்றவளை கண்டு ஜித்தேந்தர், அமைதியாய் அமர்ந்திருந்து அங்கு இருந்த தன்னவளின் புகைப்படங்களை ரசித்து கொண்டிருந்தான் . அப்புகைப்படங்களை கண்டவன் அவளுக்காக வாங்கிய புடவையில் அவளை கற்பனை செய்துகொண்டிருந்தான் . அவனது கற்பனையின் எதிரொலியாய் அவன்முன் வந்து நின்ற தன்னவளை கண்டு அவன் சுற்றுப்புறம் மறந்தான் .
ஜித்தேந்தர் அவளுக்காக பாத்து பாத்து அவளுக்கு ஏத்த மாதிரி வாங்கியிருந்த அந்த சிகப்பு நிற பட்டுப்புடவையில் அதற்க்கு ஏற்ப நகைகள் அணிந்து நின்றிருந்தளை கண்டு அவன் பார்வை மாறியது .
அதை கண்டு வெட்கத்தில் முகம் சிவக்க திரும்பி நின்றாள்.அவளின் பின் நெருங்கி நின்றவன் விரிந்திருந்த அவளின் கூந்தலை ஒதுக்கி அவளின் தோள் வளைவில் முத்தமிட்டான் .அவளின் உடல் சிலிர்த்து அடங்கியது . தனது தொடுகையில் சிலிர்க்கும் தன்னவளிடம் கிறங்கி மேலும் அவளிடம் அச்சிலிர்ப்பை ஏற்படுத்தினான் . அவனின் செயலில் பெண்ணவள் உணர்வின் பிடியில் தவித்தாள் ...தன்னவளின் தவிப்பரிந்து விலகியவன் ..பின்பு மென்மையாய் அவளை அனைத்து சகஜநிலைக்கு கொண்டுவர ,ராணிமா என்னடா நீங்க உங்க யுகாதி க்கு வந்த பாவா க்கு எதுவும் சாப்பிடலாம் தர மாட்டிங்களா என கேட்டான் .
அவ்வளவு நேரம் உணர்வின் பிடியில் சிக்கி தவித்தவள் அக்கேள்வியில் அச்சோ பாவா மறந்தேபோய்ட்டேன் பாருங்க ....இந்நேரம் பூஜை முடிஞ்சிருக்கும் நான் போய் உங்களுக்கு கொண்டுவரேன்னு சொல்லிட்டு கீழ போனவளை பார்த்துட்டேய் அங்கிருந்த கட்டிலில் அமர்ந்தான் .
பூஜை முடிந்தபின் வந்த மகளை கண்டு திட்டுவதற்கு வாயை திறந்த ருக்குமணி பட்டுப்புடைவையில் மணப்பெண் பெண் போல் அழகாய் வந்த மகளைக்கண்டு திருப்தியாய் புன்னைகைத்தார் .
மித்துகுட்டி நம்ப ஜிஷ்ணு எடுத்துக்குடுத்த புடைவையா இது பரவாலையே பயல் நல்லா தான் எடுத்துருக்கான் - ஜானகியம்மாள் வழக்கம்போல் அங்கு இல்லைனாலும் அவங்க செல்ல பேரன வம்பிழுக்குறாங்க .
அவர் சொன்னதை கேட்டு பேச்சை மாற்றி அம்மா எனக்கு பசிக்குது என்றாள் மித்ராளினி .
முதல்ல போய் சாமி கும்பிட்டுவிட்டு வா ...வந்து உனக்கு வேணும்ன்றதா எடுத்துட்டு போ...அவ அவங்க அம்மா சொன்னதுபோல பூஜை அறை சென்று கும்பிட்டவள் பின்பு ஒரு தட்டில் வேண்டியது அனைத்தையும் எடுத்து வைத்து கொண்டு செல்வதை கண்ட கோகுலக்கண்ணன் இங்கயே சாப்புடுமா னு சொன்னதுக்கு இல்ல நானா நான் மேலே போய் சாப்ட்டுக்குறேன் னு சொல்லிட்டு வந்துட்டாள் .
(யாரும் ஏன் தெலுங்கு பேசலானுலாம் கேக்கப்படாது........ஏன்னா அவங்க ரொம்ப வருஷமா இங்க இருக்கறதுனால தமிழ் தான் பேசுவாங்க ஹீஹீ எனக்கு தெலுங்கு தெரியாதுன்னு நான் சொல்லவே இல்ல சரியா )
அவ எடுத்துட்டு வந்ததலாம் பார்த்துட்டு நம்ப ஜித்தேந்தர் .. அடியே என்னடி இதுலாம் தின்ன வச்சே ஆள close பண்ணிடுவாங்க போலனு கண்ணுமுழி பிதுங்குற மாதிரி முழிச்சதை பார்த்து பாவா என சிணுங்கியவள் அவன் அருகில் கட்டிலில் அமர்ந்து தான் கொண்டுவந்ததை பத்தி சொல்ல ஆரம்பிச்சிட்டா .
பாவா இதுக்கு பெயர் போபட்டு ....உங்க ஊர்ல போலி சொல்லுவிங்கள அதே தான் மைதா மாவுல செய்வாங்க ....இது பச்சடி இந்த இடத்துல ஜித்தேந்தர் ராணிமா பாவா கிட்சேன் பக்கம் தான்டா போகல ஆனா நல்லா சாப்புடுவேன் ...இத பச்சடினு சொன்னா பச்சப்புள்ள கூட நம்பாது ....அவன் சொன்னதை கேட்டவள் , பாவா என்றவாறு இடையில் கை வைத்து அவனை முறைத்தாள் . அதில் அவனது பார்வை அவளின் புடைவையின் இடைவெளியில் மேய்ந்தது. அதை கண்டவள்
பாவா என கத்தி இப்போ என்ன சொல்லவிடுங்கனு சொல்லிட்டு ....இது ஒன்னும் நீங்க பிரியாணிக்கு சாப்புட்ற பச்சடி இல்ல ...இதுல இனிப்பு , உவர்ப்பு ,கசப்பு , துவர்ப்பு னு நாலு சுவையும் இருக்கும் ....நம்ப வாழ்க்கையும் இப்படி எல்லா சுவையும் கலந்து தான் இருக்கும்னு சொல்றதுக்குத்தான் இங்கலாம் புத்தாண்டன்னைக்கு இத செய்வாங்க ... போபட்டுவ பச்சடில தொட்டு சாப்பிட்ட செம்மையா இருக்கும் .அப்றம் இது பாயசம் ...இது புளியோதரை னு அவ ஒன்னு ஒன்னா சொல்றத கவனிச்சானோ இல்ல பேசும்போது அவ கண்ணு உருளரத்தையும் தலை ஆட்டும்பொழுது கம்பலும் சேர்ந்தாடுவதை கண்டானோ ....கட்டிலில் அமர்ந்து அவளை மட்டுமே பார்த்துக்கொண்டு அவனும் அவனை தவிர வேறுலகு இல்லை என்பதை போல அவளும் அந்நேரத்தை அனுபவித்தனர் ...
போபட்டு
பச்சடி
.............................................
Last edited: