நினைவில் தத்தளிக்கும் நேசமது 5:
யாஹ்வி:
மித்ரேந்தர் பசியில் அழ தொடங்க அவனை தூக்கிக்கொண்டு கீழே வந்தான் ஜித்தேந்தர்.
படியில் இறங்கும்பொழுது கீழே வரவேற்பறையை அடுத்து இருக்கும் ஹால் சோபாவில் அமர்ந்திருந்த நாச்சியாரை பார்த்துக்கொண்டே இறங்கினான்.
பிள்ளையின் மூச்சுக்காற்றை கூட சுலபமாய் கண்டுகொள்வது தாயின் மனம் அல்லவா !!! ஜித்தேந்தரின் காலடி ஓசையிலே அவன் வருவதை தெரிந்துகொண்டவர் அவன் முகத்தை பார்க்காமலே அவன் வரும் திசை பார்த்து தாடையை வலது தோள்பட்டையில் இடித்துக்கொண்டார். ( கோவமா இருக்காங்களாம் )
நாச்சியார் அவன் அருகில் வந்தபின்பும் கண்டுகொள்ளாமல் அமர்ந்திருக்க , மித்ரேந்தரை அவரின் மடியில படுக்கவைத்தவன் அவர் கோபத்திலும் குழந்தையை சரியாய் தாங்கிக்கொண்டதை பார்த்தப்படியே "அப்ப்ப்ப்பா!!!" என்று கத்தி தந்தையை அழைத்தான் .
இவனின் சத்தத்தில் உள் அறையில் இருந்தவர்," ஆத்தி ...!! என்னைய எதுக்கு கூப்புட்றான்??? இப்போ என்ன குண்டை போடப்போறான் தெரியலையே" என ஜெர்கான ரவி சார் அடிச்சி பிடிச்சி ஹால்க்கு வந்தார்.
"அப்பா...!! உங்க புள்ளைக்கும் அவனோட புள்ளைக்கும் பயங்கரமா பசிக்குதுபா. உங்க வைய்ப்ப எங்களுக்கு சாப்பாடு போட சொல்லுங்க" என ஜித்தேந்தர் பாவமாய் முகத்தை வைத்தான் .
என்னமோ ஏதோனு வந்த ரவி சார் இவன் சொன்னதைக்கேட்டு முழித்த முழியில் அம்புட்டு நேரமாய் கோவமாய் இருந்த நாச்சியார் வாய்விட்டு சிரித்தார்.(ஹாஹா !! அது ஒன்னும் இல்லைங்க நம்ப ஜித்து பாவா ஒரு வார்த்தை போசுறதே கஷ்டம் .... இப்படி தொடர்ந்து இவ்வளோ பெருசா பேசுனா மனுஷனுக்கு ஷாக்கா இருக்காதா ) .
தாய்தந்தையை பார்த்த இந்தர் நானும் புன்னகைக்கிறேன் எனும் பெயரில் மெல்லியதாய் இதழை விரித்தபடியே டைனிங் டேபிளில் அமர்ந்தான் .
அதில் அதிர்ச்சியில் இருந்து வெளிவந்த ரவி சார், " நாச்சி..!! என்னமா ??போ ....! அவனுக்காக ஆசை ஆசையா சமைச்ச, இப்போ புள்ள பசிக்குதுனு சொல்றான்ல ..போய் பறிமாறு"
நாச்சியாரோ தன் கையில் இருந்த மித்ரேந்தர் தன்னோட கண்ண உருட்டி உருட்டி சின்ன உதடை சுழிச்சி சிரிச்ச அழகை ரசிக்க ஆரம்பித்திருந்தார் .
தான் சொன்னபிறகும் போகாமல் இருந்த மனைவியிடம் , "நாச்சி..!!! " என அவரை அசைக்க,
" ஆங்!!" என நிமிர்ந்தவர் இந்தர் டைனிங் டேபிளில் இருப்பதை பார்த்து,"என்ன இங்க நிக்குறீங்க ?? போங்க போய் உங்க புள்ளைக்கு நீங்களே பறிமாறுங்க ...நான் இந்த குட்டிக்கு பால காய்ச்சி குடுக்கணும்" என்று குழந்தையை தூக்கிக்கொண்டு கிச்சன்க்கு சென்றுவிட்டார் நாச்சியார் .
டைனிங்டேபிளில் இருந்து இங்கு நடந்ததை பார்த்தும் பார்காததுபோல் இருந்த ஜித்தேந்தர் இதில் வாய்விட்டு சத்தமாய் சிரிக்க ஆரம்பித்தான்.
அதை சந்தோஷத்துடன் ,ஆச்சரியமாய் பார்த்த .. கிட்சனில் இருந்த நாச்சியாரும் ,ஹாலில் இருந்த ரவிசாரும் , "இந்த குழந்தை யார் ,என்னனு?? தெரியாது .....அவனும் சொல்ல மாட்டான் .ஆனா , இத்தனை மாசமா எதையோ பறிகொடுத்த மாதிரி இருந்தவன் இந்த குழந்தை வந்த பிறகு தான் வாய்விட்டு சிரிச்சிருக்கன் . கடவுளே !! இது இப்படியே தொடரனும் ..என் புள்ள சந்தோசம் தான் எனக்கு முக்கியம் , இனிமே இந்த குழந்தை இந்த வீட்டு பேரன் தான் ...நீ தான் எங்களுக்கு துணையா இருக்கணும் " என ஒன்றுபோல் வேண்டினர் .
பிசினெஸ் உலகை ஆட்டிப்படைக்கும் ரவிசக்கரவர்த்தி தன் மனைவியின் சொல்படி மகனுக்கு பரிமாறப்போக,
"அப்பா!!! நீங்களும் உட்காருங்க சேர்ந்தே சாப்பிடுவோம்" என சொல்லி அடுத்த ஷாக் கொடுத்தான் கொடுத்தான்.
"ஒரு மனுஷனுக்கு ஒரேநாள்ல எத்தனை அதிர்ச்சிடா குடுப்ப " என மைண்ட் வாய்சில் பேசிய ரவி சார் அமைதியாய் இருக்காமல் மகன் தான் நன்றாக பேசுகிறானே என்று," இந்தர்..!! இன்னிக்கு வெளிய எங்கையாவது போறியாபா" எனக் கேட்டார் .
(அவருக்கு மேலும் மேலும் அதிர்ச்சி கொடுத்து அவருக்கு ஹார்ட் அட்டாக் வரவைக்கவேண்டாம் என்ற நல்ல எண்ணத்தில்) அவனின் வழக்கமான பாணியாய்,"ஏன் கேக்குறீங்க" என கேள்வியை தோய்த்த பார்வை பார்த்தான் .
"ஆரம்பிச்சிட்டான்யா ஆரம்பிச்சுட்டான் ...!!! இப்ப தான் இவன் பேசுறானேன்னு சந்தோஷப்பட்டேன்...நீங்க எப்படி அப்படி எல்லாம் சந்தோஷப்படலாம்னு திரும்ப இப்போ கண்ணாலையே கேள்வி கேக்குறான் பாரு"என்று முனங்கியவர்,
அவன் இவரையே பார்ப்பதை உணர்ந்து, "இல்லப்பா... மார்னிங்கே உனக்கு முதல்ல வாழ்த்தை சொல்லலைனு நம்ப குட்டிமா ( சித்ரங்கதா ) பீல் பண்ணா. அதான் ஈவினிங் அவ வர நேரத்துக்கு நீ வீட்ல இருந்தா நல்லா இருக்கும்ல"
அவரின் இத்தனை பேச்சிற்கு ஜித்தேந்தர், " ம்ம்ம்ம்" என்று பதிலளித்தவன்....குழந்தையை தன் அன்னை பார்த்துக்கொள்வார் என நினைத்தபடி தன் அறைக்கு சென்றான்.
"இப்போ இவன் எதுக்கு ம்ம்ம்ம் சொன்னான் ?? வெளில போலன்னு அர்த்தமா இல்ல நான் பேசினத்துக்கு ம்ம்ம் சொன்னானா ???? நம்ப குடும்பத்துல எல்லோருக்கும் எட்டூருக்கு வாய் அப்றம் இவன் மட்டும் எப்படி இப்படி இருக்கான்" இப்படி இருக்குமோ அப்படி இருக்குமோ என கைவிரல்களை இங்கும் அங்கும் அசைத்து தீவிரமாய் யோசிக்க,
கிச்சனில் இருந்து பாப்பாவிற்க்கு பீடிங் பாட்டிலில் பால் கொடுத்தபடி வந்த நாச்சியார் இவரை பார்த்துவிட்டு, "டேய் குட்டி கண்ணா!! உன் தாத்தா என்னடா லூசு மாதிரி தனியா பேசிட்டு இருக்காரு " என்றதில் குழந்தைக்கு என்ன புரிந்ததோ கை இரண்டையும் தட்டி சிரித்தது .
"அடேய் குட்டி...! உன் பாட்டியோட சேர்ந்துட்டு உன் தாத்தாவ வம்பு பண்றியா படவா!!" என்றவருக்கு கைப்பேசி அழைப்பு வர அவர் உள்ளே சென்றதை கண்டுகொள்ளாமல் நாச்சியார் மித்ரேந்தருடன் ஐக்கியம் ஆகிட்டாங்க .
மேலே நின்று இதை பார்த்த ஜித்தேந்தர் , "ப்பா,ம்மா..!!! சாரி, என்னால உங்க கிட்ட இப்போ எதையுமே சொல்லமுடியாது . நீங்க என் புள்ளைய ஏத்துப்பீங்கனு எனக்கு தெரியும் . லவ் யூ சோ மச் டாட் அண்ட் மாம் ... சீக்கிரமே நான் உங்ககிட்ட எல்லாமே சொல்வேன்" என்று மனதுடன் பேசிக்கொண்டான் .
அப்பொழுது அங்கு ," அத்தம்மாமா!!!" என கத்திக்கொண்டு ஓடி வந்தது இருபத்திமூன்று வயது அழகிய தென்றல், பெயர் ஷாலினிவர்தன்.
ஷாலினிவர்தன் ..... நயன மொழி பேசும் நீள் விழிகளுக்கு சொந்தகாரி...அவள் இதழ்களின் மென்மை ரோஜாபூவின் இதழ்களின் மென்மையை ஒத்ததாய் எப்பொழுதும் அழகிய சிரிப்புடன் விரிந்திருக்கும் . (இந்த ஷாலினி தாங்க நம்ம விஷ்வாக்கு ஜோடியா வருவான்னு
நினைக்கிறேன்.ஆனா அவங்க எல்லோரும் என்ன நினைக்கிறாங்கன்னு தெரியலையே !!)
ஜித்தேந்தரின் தாத்தா பொன்சக்கரவர்த்திக்கு இரு மாவுகள் .ஒரு ஆண் : ரவி சக்கரவர்த்தி , ஓர் பெண்: சாவித்திரி , இவர்கள் இருவரும் சிவாஜி சாவித்திரி போல் பாசமழை பொழியலனாலும் ...நம்ப கில்லி விஜய் ஜெனிபர் மாதிரி என்ன தான் அடிச்சுக்கிட்டாலும் உள்ளுக்குள்ள பாசம் அள்ளும் .
ரவி சாருக்கும்- நாச்சியாருக்கும் கல்யாணம் நடந்த இரண்டு வருடத்திற்கு பிறகு சாவித்திரியை விரும்பி , பெண் கேட்டு வந்த ருத்திரவர்தனுக்கு நிச்சயம் செய்து... இப்படி ஒரு கல்யாணத்தை பார்த்தது இல்லை என்று ஊரே வியக்கும் அளவிற்க்கு பொன்சக்கரவர்த்தி நடத்தினார் .
ருத்திரவர்தனும் சாதாரண ஆள் இல்லை, பொன்சக்கரவர்த்தி போல் இந்திய அளவில் இல்லை என்றாலும் தமிழ்நாட்டுல பெரிய மரியாதையான பரம்பரை பணக்காரர்கள் தான்.
ருத்திரவர்தன்- சாவித்திரி வீடு இல்லை இல்லை ..மாளிகை சென்னை அண்ணா நகரில் உள்ளது, அவர்களின் ஒரே செல்வ(ல) புதல்வி தான் ஷாலினிவர்தன். சென்னையின் புகழ்பெற்ற கம்பெனியில் வேலை பார்க்கிறாள் .அவ ஏன் அங்க வேலை பாக்குறா?? என்ன பண்றா ??என்ன பண்ண போறான்னு?? யாருக்குமே தெரியாது ஒரே ஒருத்தன தவிர .
"அத்தம்மா!!!" கத்திக்கொண்டே வந்த ஷாலினி, அவர் கையில் இருந்த குழந்தையை பார்த்தவள் ..அதன் அழகில் ,"அத்தம்மா..! யார் இந்த பாப்பா??? க்யூட் இருக்கான்....அச்சோ இவன் தூக்கத்திலே சிரிக்கிறான் பாருங்களேன்...செம்மையா இருக்கு... கால் ,கை எல்லாம் எம்புட்டு குட்டியா ரெட்டா இருக்கு ...அச்சோ சோ ஸ்வீட் அத்தம்மா!!" என பால் குடித்தபடி உறங்கிவிட்ட குழந்தையை கொஞ்சினாள் . (விஷ்வாவுக்கு வாய்க்குறதுலாம் இப்படி தான் அமையுமோ கேப்பே விடாம பேசுது பாரு)
"ஹேய் போதும்டி ..!!!! சின்ன குழந்தைங்கண்ணா அப்படி தான் இருக்கும்.தூங்குற குழந்தையை கொஞ்ச கூடாது " என அவளை அதட்டிய நாச்சியார் ," ஆமா நீ என்ன தனியாவா வந்த??" என விசாரித்தார் .
ஷாலினி," பின்ன ??!! நீங்க பெத்த இரண்டு கழுதைல, ஒரு கழுதை கூட்டிட்டு போக வரேன்னு சொல்லிட்டு வரவே இல்லை இன்னொரு கழுதை பாசமா கூட்டிட்டு வந்து பாதியில கழட்டி விட்டுட்டு போயிடிச்சி " என கோபம் பாதியாய் சலிப்பு பாதியாய் சொல்லும் போழுதே ஒரு குரல் தேனாய் அவளின் காதில் பாய்ந்தது .
"டார்லிங் ...!!! எப்படா வந்த??? வந்த உடனே அத்தான பார்க்க வராம இந்த கிழவி கூட எதுக்குடா செல்லம் மொக்க போட்ற???" என கேட்டது வேற யாரும் இல்லைங்க நம்ம லவ் பாய் ரவி சார் தான். (நாச்சியார் கிட்ட மாமா, ஷாலினி கிட்ட அத்தானா உங்க பசங்கள விட உங்களோட லவ்ஸ் எங்கேயோ போகுது பின்றீங்க போங்க )
"ஹாய் டார்லோமா!!!!!! (டார்லிங் மாமா) வந்த உடனே என்னோட கண்ணு உங்களதான் தேடுச்சி ,ஆனா இந்த கிழவி என்னைய தடுத்து மொக்க போடுறாங்க டார்லோமா" ஷாலினியும் அவருடன் கூட்டு சேர்ந்ததில் , இவங்க கொஞ்சுறத பார்த்துட்டு நம்ப நாச்சியார் காளி அவதாரம் எடுப்பார் என்று எதிர்பார்த்தா சோ சாரி அவங்க மித்ரேந்தர் கூட பிஸி .
தன் அத்தம்மாவின் கவனம் தங்களின்மேல்இல்லை என்பதை பார்த்த பிறகு தான் ஷாலினிக்கு பாப்பா ஞாபகம் வந்தது. .
"அத்தம்மா ...!! நான் கேட்டதுக்கு நீங்க பதில் சொல்லவே இல்ல , யார் இந்த பாப்பா ?" கேட்டுக்கொண்டே குழந்தையை தூக்கினாள் .
கை மாறியதில் உறக்கம் கலைந்த குழந்தை அழத் தொடங்கினான். நாச்சியாருத், ரவியும் மாத்தி மாத்தி சமாதானம் செய்தனர்,இந்த ஷாலினி புள்ளயும் என்ன என்னமோ வித்தை காட்டினாள்.. ஆனாலும் மித்ரேந்தர் அழுகை நின்ன பாடில்லை .
குழந்தையின் அழுகை அதிகரித்ததில் ஜித்தேந்தர் அவசர அவசரமாக கீழே வர,
"மாமா ஏன் இவ்ளோ வேகமாவராங்க?? வெளியில் எங்கனா போறாங்களா ??ஆனா கேஷுவல் டிரஸில் இருக்காங்களே " ஷாலினி தனக்குள்ளே கேள்விகேட்டுக்கொண்டாள் .
நாச்சியாரிடம் இருந்து குழந்தையை வாங்கிய ஜித்தேந்தர், " நா பங்காரம்..!!! ஏமிரா ???எந்தா செய்யிலி???( என் தங்கமே என்னடா? என்ன செய்யுது )... லேதுரா லேது ...சூடு நாணா ஒச்சண்டிரா சூடுரா ( இல்ல டா இல்ல..பாரு அப்பா வந்துட்டேன் பாரு )" .
"என்னடி !!! திடிர்னு இவன் ஏதோ பேசுறான் ...ஆனா ஒண்ணுமே புரியலை!!" ரவி சார் நாச்சியார் காதில் மெதுவாய் முனங்க,
"அதான என் புள்ள அறிவெல்லாம் இருந்து இருந்தா நீங்க இப்படி வீட்டில் உட்கார்ந்து மொக்கை போட்டுட்டு இருப்பீங்களா" என அசால்டாக சொன்னவர் ,"குழந்தைக்கு என்ன ஆச்சு தெரியலையே" என பதறினார் .
"மாமா இப்ப நாணா-னா சொன்னாங்க ??? இந்த தெலுங்கு படத்துலலாம் அப்பாவை தான் அப்படி சொல்லி பார்த்திருக்குறோம். இவங்க ஏன் அந்த பாப்பா கிட்ட இப்படி சொல்றாங்க, இந்த பாப்பா யாரு ?? ஐயோ ஈஸ்வரா மண்டைய காய விடுறாங்களே" . (பாவம் ஷாலினி இருக்கற கொஞ்சூண்டு மூளையை வைத்து யோசிக்கிறாள்)
இன்று நான் வரிசையாய் அதிர்ச்சிகளை கொடுப்பேன் என ஜித்தேந்தர் சபதம் ஏதேனும் செய்தானா தெரியவில்லை , அங்கிருந்தவர்களுக்கு அடுத்த ஷாக்கை கொடுத்தான்.
ஜித்தேந்தர் சின்ன வயதில் இருந்தே நன்றாக பாடுவான் . ஆனால் கடந்த ஆறு மாதமாக பாடவும் இல்லை , பாடல் ஏதேனும் காதில் விழுந்தால் அந்த இடத்தில் இருப்பதும் இல்லை .இப்பொழுது அவனே தன்னுடைய குழந்தைக்காய் பாடியதை கேட்டு தான் அனைவரும் அதிர்ச்சி ஆகினர் .
மித்ரேந்தரை தூக்கி தன் நெஞ்சோடு பொத்திவைத்த ஜித்தேந்தர் நீண்ட நாட்களுக்கு பின் பாடினான்,
"
ஆராரோ ஆரிரரோ
அம்புலிக்கு நேர் இவரோ ....
தாயான தாய் இவரோ
தங்க ரத தேர் இவரோ ....
மூச்சிப்பட்டா நோகுமுன்னு
மூச்சடக்கி முத்தமிட்டேன் ...
நிழலுப்பட்டா நோகுமுன்னு
நிலவடங்க முத்தமிட்டேன் ...
தூங்காம நீ விளக்கி
தூங்காமத் தூங்குக் கண்ணே...
ஆராரோ ஆரிராரோ ...
ஆரிரோ ஆரிரரோ ...
ஆராரோ ஆரிரரோ ...
ஆரிரோ ஆரிரரோ ..."
இவன் பாட்டை கேட்டபடியே சிறுது சிறிதாய் அழுகையை நிறுத்திய குழந்தை உறங்க தொடங்கினான் .
இவன் பாடியதை வீட்டினுள் இருந்தவர்கள் மட்டுமல்லாமல் , அப்பொழுது தான் வீட்டிற்க்குள் நுழைந்த விஷ்வாவும் சித்ரங்கதாவும் கூட சந்தோஷமாய் பார்த்தார்கள் .
-கரைவாள்