All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

என் வானின் துருவ(வ்) நக்ஷத்தி(ரா)ரம் - கதைத் திரி

Status
Not open for further replies.

Thishi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்யாயம் - 16


"குட் மார்னிங் சின்னமா " என்ற அழைப்பில் தான் அவளுக்கு அடுத்தநாள் விடிந்தது. கிட்டத்தட்ட 60 வயது மதிப்புள்ள பெண் ஒருவர் தான் அவளை எழுப்பிவிட்டார். அவளது முகத்தை ஆர்வமாக அவர் பார்க்க, இவளோ வாயில் வழிந்த எச்சில் உணர்ந்து போய், தலைமுடி கலைந்து, உடை ஏனோ தானோ என்று 10 நாளாக குளிவிக்கப்படாத நாய் குட்டி போல் இருக்க, தன்னை உற்று உற்றுப் பார்ப்பவரிடம்,


"நான் நடிகை இல்ல ! காலையில் எல்லாரும் இப்படி தான் இருப்போம் ! நேச்சுரலா " என்று வேறு சொல்ல, அந்த பெண் பாக்கியம்


"நீ யாருனு எனக்கு தெரியும் ! அந்த சைட் பாத்ரூம் ! குளிச்சிட்டு, புடவை கட்டிக்கிட்டு வா" என்று அன்பாகக் கனிவான ஆணை ஒன்றை பிறப்பிக்க, நக்ஷத்திரா திடீரென ஏதோ நோபல் பரிசுக்குரிய விஞ்ஞான கண்டுபிடிப்பைக் கண்டுபிடித்தார் போல்,


"நீங்க தான் அந்த துருவ்வோட அம்மாவா!!" என்று கணவனை மிகவும் மரியாதையாக விளித்து, புத்திசாலித்தனமாகக் கேட்டு வைக்க, அந்நேரம் அந்த அறைக்குள் துருவ்வும் நுழைந்தான்.


பாக்யம், துருவ்வை வினோதப் பார்வைப் பார்க்க, துருவ் அவரை பார்வையாலே சமாதானம் செய்து வெளியே செல்லும் படி அறிவுறுத்தினான்.


அவரும் சென்றுவிட, நக்ஷத்திரா


"அவங்க தான் உன் அம்மாவா ?" என்று கேட்க, துருவ்


"விஷ் ஷி வாஸ் " என்று கூற, நக்ஷத்திரா


"அப்போ உங்கம்மா எங்கே ?" என்று என்றும் இல்லாத திருநாளாக தனது மாமியாரைப் பார்க்க மிகவும் ஆர்வம் கொண்டாள்.


"குளிச்சிட்டு வா ! அப்பறம் என்னோட அம்மாவை பார்க்கலாம்" என்று அவளிடம் சொல்ல, நக்ஷத்திரா



"நான் குளிக்காம பாடி ஸ்ப்ரே போட்டுக்கிட்டு வந்தா, பார்க்க மாட்டாங்களா ?" என்று குதர்க்கமாகக் கேட்க, துருவ்


"இந்த வீட்டு நாய்க்கு பாடி ஸ்ப்ரே பிடிக்காது , கடிச்சு வைச்சுரும்" என்று முகத்தில் துளி அளவு கூட உணர்வில்லாது அவளைக் கிண்டல் செய்ய, அவளோ அவனை முறைக்க, துருவ் சிறிதளவு இடது உதட்டை வளைத்து,


"குதர்க்கம் உனக்கு பக்கத்து வீடுன்னா, எனக்கு குதர்க்கம் மிடில் நேம் ! சோ …" என்று வாயை ஜிப் செய்வது போல் பாவனை செய்து,


"கெட் ரெடி ! பிரேக் பாஸ்ட் சாப்பிடு ! டேப்ளெட்ஸ் வேற சாப்பிடணும்" என்று கூறியது மட்டுமல்ல, அவளுக்கு உடைகள் எங்கு இருக்கிறது என்று காண்பித்தும் கொடுத்தான்.



சற்றும் மாறாத அவர்கள் நிலை, அப்படித்தான் அவள் நினைக்கிறாள் . அவளை இந்நிமிடம் வரை எக்கேடோ கெட்டு போகட்டும் அவன் நட்ட நடுவாற்றில் விடவில்லை என்பதை அவள் சிந்திக்கவில்லை. அது மட்டுமா ! அவளது கூற்றுப்படி அவன் பெண்கள் விஷயத்தில் சரியானவன் இல்லை என்றால் அவள் மீது ஏன் இந்த அக்கறையும் அன்பும் ?


அன்று ரவி வர்மா வீட்டில் கண்டக் காட்சி மற்றும் வேறோர் விஷயம் மட்டுமே அவளது நினைவில்!



பெருமூச்செறிந்தவள், திரை சீலையைத் திறக்க, வெளியே கண்ட காட்சியில் மெய்மறந்து நின்றாள். எதோ மலைப்பகுதியில் இருக்கிறாள் என்று புரிந்து கொண்டாள். அழகானப் பூந்தோட்டம் அவள் கண் முன் விரிந்து பரந்து கிடந்தது.


பூந்தோட்டத்தில் நடுவே வரை மரம், செடி கொடிகள்! ஓங்கி வளர்ந்த பலா மரங்கள், மா மரங்கள், தோட்டத்தைத் தாண்டி காபி செடிகள். அதன் நடுவே பாக்கு மரங்கள், அதில் மீது பரவி விடப்பட்ட மிளகு கொடிகள் என்று பனி மறைக்காத இடங்களில் அந்த இயற்கை காட்சி தெளிவாக அவளுக்குத் தெரிந்தது.


கண்ணக்கு எட்டாத பகுதில் எங்கும் பனி மட்டுமே! பனி மகள், விடியல் வந்ததில் வெட்கப்பட்டு மறைந்து செல்ல ஓடியபடி, காபி தோட்டத்தைத் தனது சுண்டு விரலால் ஸ்பரிசித்து செல்வது போல் அவளுக்குத் தோன்றியது, இயற்கை அன்னை முன் யாரும் அழகல்ல என்பது அந்தக் காட்சி இருக்க, உடனே தனது அலைபேசியை உயிர்ப்பித்தாள்.


அவள் கண்களில் பட்ட நிஜத்தை, நிழலாக்கினாள். அந்த பூந்தோட்டத்தில் இருந்து காப்பி தோட்டத்திற்குச் செல்ல ஒரு சிறிய கேட் இருந்தது, ஏதோ சொர்க்கத்தின் நுழைவாயில் போல அது அவளுக்கு தென்பட்டது. வெளியே சென்று படமாக்க அவளது இச்சை பெருக, அதை உடனே செயலாற்றினாள்.


"ஹேய் ! தாரா ! எங்க போறே ?" என்ற துருவ்வின் குரலை எப்போதும் போல் அசட்டை செய்தாள். பங்களா விட்டு வெளியே வந்தவளுக்கு தனது அறை எந்த திசையில் இருந்தது என்று கண்டுபிடிக்க முடியவில்லை. சுற்றிச் சுற்றி வந்தவளுக்கு, அந்த பங்களா பழக்கமானது போல தோன்றியது . எங்கே பார்த்து இருக்கிறோம் என்று யோசிக்க ஆரம்பித்தவளுக்கு திடீரென உடல் தூக்கி வாரிப் போட்டது.


ஒருவேளை இது...இது...என்று அவளது சிந்தனை நிறைவு பெரும் முன், துருவ்


"கோல்ட் வரும் !" என்று ஒரு சால்வையை எடுத்து போர்த்தி விட்டான் அவள் மீது.


"இது என்ன இடம் ?" என்று அவனையே கேள்வி கேட்க, அதை எதிர்பார்த்து இருந்தவன் அவளுக்கு இப்போதே எல்லாவற்றையும் சொல்ல விருப்பம் இல்லை.


"இது ஒரு பங்களா !" என்று மட்டும் சொல்ல, நக்ஷத்திரா இடுப்பில் கைவைத்து கொண்டு முறைத்து


"எந்த ஊர் இது ?" என்று அடுத்து துவக்க, துருவ்


"சக்லேஷ்பூர் ! பெங்களூர் தாண்டி வெஸ்டர்ன் காட்ஸ் பக்கம் ! இது நம்ம காப்பி எஸ்டேட்! நம்ம பங்களா ! இப்போ உள்ள வா ! அப்பறம் விசாரணை செய்யலாம்" என்று அவளை வற்புறுத்தி உள்ளே அழைத்துக் கொண்டு வந்தான்.


அப்போதும் விடாது,


"இது உன்னொட புது தொழிலா ? இந்த கடத்தல் ப்ரம் சென்னை டு சக்லேஷ்பூர் ?" என்று நக்கல் தெறிக்க அவள் கேட்க, அவனா விடுவான்?


"புது பிசினஸ் வந்து, அடங்காத குதிரையை அடக்கி, அதுக்கு மேனர்ஸ் சொல்லி கொடுக்கறது தான் ! யு நோ நீ லக்கி, உனக்கு நோ பீஸ்" என்று அவளுக்குப் பதிலடி கொடுத்தான். என்ன பேசினாலும் இவனைப் பேச்சில் ஒன்றும் செய்ய முடியாது என்று அவள் வீட்டை நோக்கிச் சென்றாள்.



சற்று நேரம் முன், புகைப்படம் எடுக்க வேண்டும் என்ற அவசரத்தில் அவள் வீட்டின் உள்ளைக் கண்டுகொள்ளாது, ஓடினாள். ஆனால் இப்போது உன்னிப்பாகப் பார்க்க ஆரம்பித்தாள்.



வீட்டைச் சுற்றி ஒரு வராண்டா, அதில் நாற்காலிகள் போடப்பட்டு, பூந்தொட்டியில் செடிகள் என்று அழகாக திருத்தமாக வைக்கப்பட்டு இருந்தது. அந்த மாதிரி அமைப்பு ஆங்கிலேயர்கள் மிகவும் விரும்புவர்.



ஆம், ஆங்கிலேய கால பங்களா அது. பல அடுக்குகள் அல்லாது,ஒரே ஒரு அடுக்கு மட்டும் கொண்டு, பெரிய சுற்றளவில் கட்டப்பட்டு இருந்தது. வரவேற்பு அறையில் ஆங்கிலேய கால சாமான்கள் நிரம்பி வழிந்தன.



மர தரையின் மீது, கார்பெட்டுக்கள், கனல் மூட்டுவதற்கு உரிய இடம், பெரிய அளவு ராஜ கம்பீரமான சோபா, வரவேற்பறையின் நடுவே தொங்கும் பெரிய அளவு சாண்டிலியலர் விளக்கு ஜன்னல் ஓர சாய்வான நாற்காலி, ஒரு மேஜை மீது அலங்கார பொருட்கள் மற்றும் முகம் பார்க்கும் கண்ணாடி, அந்த கால ஓவியங்கள் ஒரு புறம், மற்றொரு புறம் பெரிய தொலைகாட்சிப் பெட்டி, மினி பார் என்று பழமையும், புதுமையும் கலந்து அந்த வரவேற்பறை இருந்தது.




ஒவ்வொன்றாக பார்த்துக் கொண்டு வந்தவள் பார்வை, ஓரிடத்தில் நிலைக்குத்த, துருவ்வும் அவளது பார்வை நின்ற திசையைப் பார்த்தான். அங்கு பெரிய அளவு ஓவியமாக ஒரு பெண்ணின் உருவப்படம் இருந்தது. அவரை எங்கோ பார்த்தது போல் அவளுக்குத் தோன்றியது, அந்த புகைப்படப் பெண்ணையும், துருவ்வையும் மாறி மாறிப் பார்க்க, துருவ்


"என்னோட அம்மா தான் ! " என்று அவளது சந்தேகத்தைத் தீர்த்து வைக்க, நக்ஷத்திராவிற்கு இன்னும் குழப்பம் தீர்ந்த பாடில்லை. இவரை முன்பு பார்த்து இருக்கிறோம் என்ற எண்ணம் திடமாக துவங்க, அவள் மேலும் கேள்வி கேட்கும் முன்,


"அவங்க ஜாடை எனக்கில்லை !" என்று அவள் சிந்தனையைத் திசைத்திருப்ப முயல, நக்ஷத்திரா


"தெரியுது ! நீ உன் அப்பா ஜாடையா இருக்கலாம்" என்று கூறி முடிக்க, துருவ்வின் முகம் இறுகியது.


"போதும் ! போ, ரெப்ரெஷ் யூர்செல்ப்" என்று அவளை அவளது அறைக்கு விரட்டினான்.



அதில் எப்போதும் போல் அவள் அவனை முறைத்தபடியே,


"கண்ட்ரோல் ஃப்ரீக் !" என்று திட்டிவிட்டுத் தான் சென்றாள். அவனோ வெறுமையாக தனது தாயின் புகைப்படத்தைப் பார்த்து கொண்டிருந்தான்.


ஒருவேளை அவர் இன்று இருந்து இருந்தால்... என்ற எண்ணம் தோன்றாது இல்லை அவனுக்கு.







பாக்யம் கூறியபடி அவள் புடவை காட்டிக்கொள்ளவில்லை, எப்போதும் போல், யார் பேச்சும் கேட்காத பழக்கம் உடையவளுக்கு முன் பின் தெரியாத ஒருவர் சொல்வதை எவ்வாறு கேட்கத் தோன்றும் !


தனது இஷ்டப்படி உடை அணிந்து வந்தவளை பாக்யம் ஒருமாதிரி பார்க்க, நக்ஷத்திரா,




"நீங்க என் மாமியாரா இருந்தாலும் இதை தான் செஞ்சிருப்பேன் !" என்று நக்கல் தெறிக்க கூற, துருவ்


"பாக்யம் மா ! இவ இப்படித்தான் ! காலையில் என்னவோ செய்யணும்னு சொன்னீங்களே ! என்ன அது ?" என்று பேச்சை மாற்ற, பாக்யம்


"நீங்களும் அதுக்கு வரணும் சின்னையா!" என்று இருவரையும் அழைத்துக் கொண்டு பூஜை அறைக்கு இழுத்துச் சென்றார்.



ஆங்கிலேய கால பங்களாவில் பூஜை அறை என்ற ஒன்று கிடையாது. நீலகண்டன் தான் அதை வரவேற்பறை தாண்டி தனியாக ஓர் இடமாக உருவாக்கினார். அதில் சுவாமி படங்களை தவிர, நீலகண்டனின் படமும், அவன் அன்னை சந்தியாவின் படமும் இருந்தது.


துருவ்வின் அன்னையை நக்ஷத்திரா, அடையாளம் கண்டு கொள்ள


"உன் அம்மா இப்போ …" என்று கஷ்டப்பட்டு அவனது உயரத்திற்கு எம்பி காதில் கிசுகிசுக்க, அவன் முகத்தை அதே நேரம் திருப்ப, அவனது இதழ்கள் அவளது இதழ்களைத் தீண்டும் அபாயம் நேரிட, நக்ஷத்திரா அது நடவாது இருக்க, சற்று பின்னால் சாய்ந்து விழப் போக, அவள் இடையில் கரம் கொடுத்து, துருவ் தாங்கினான். இதை எல்லாம் கண்ட பாக்கியம்


"சின்னையா ! இது பூஜை ரூம்" என்று கடிய வேண்டியதாயிற்று. அவளைச் சீராக நிறுத்தி வைத்தவன்


"மை மாம் இஸ் நோ மோர் !" என்று அழுத்தமாக அவன் கூற, நக்ஷத்திராவிற்கு உள்ளுக்குள் ஏதோ ஒன்று உடைய ஆரம்பித்தது.



ஒன்று இறந்தவரை பற்றி தவறாக பேசி விட்டாள்! அவர் உயிரோடு இருந்தாலும் அவள் பேசியது தவறு தான்.

மற்றோன்று அவன் அன்னை அவளுக்கு மிகவும் தெரிந்தவர் போல இருந்தார். இந்நேரம் அவரது பெயரைக் கேட்கவும் அவளுக்குத் தயக்கம்!



முகத்தில் வேதனை சாய, அவள் பூஜை அறையை இலக்கில்லாது பார்க்க, அடுத்த அதிர்ச்சியாக பாக்யம் ஒரு தட்டில் பூ, பழம், திருமாங்கல்யம் போன்றவற்றை வைத்து இருந்தார். அதைக் கண்ட துருவ்வின் முகம் இறுக, அவரோ இவர்கள் இருவரின் மன உணர்வுகள் புரியாது,


"சின்னையா ! நீங்க நம்ம சம்பிரதாயத்தை நம்ப மாட்டீங்கனு தெரியும் ! ஆனா அது எப்போதும் சரியா வராது ! இன்னிக்கி நல்ல நாள், உங்க அம்மா முன்னாடி, பெரியய்யா முன்னாடி சின்னமாவுக்கு தாலியை கட்டுங்க" என்று உரிமையாகப் பேச, துருவ் அவரை தீர்க்கமாக பார்த்து


"தாலி கட்டலைன்னா எங்க உறவு மாற போறதில்லை, சாரி பாக்யம் மா ! இது வேணாம் !நாங்க இப்படி இருக்கறது தான் பெட்டர் !" என்று சொல்லிவிட்டு அவன் அங்கிருந்து சென்றும் விட்டான். பாக்கியத்தின் முகத்தில் வேதனை சாய, நக்ஷத்திரா ஒருபுறம் நிம்மதி அடைந்தாலும், மறுபுறம் ஏனோ அவனது இந்த மறுப்பு அவளுக்கு ஒருமாதிரி இடைஞ்சலாக இருந்தது, சிறிய அளவு முள் பாதத்தில் தைத்தால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது.



பாக்யம் வருத்தத்துடன் சந்தியாவின் புகைப்படத்தைப் பார்த்து,

"நீங்க இல்லாம போயிட்டிங்கனு அன்னிக்கி மட்டுமல்ல, இன்னி வரைக்கும் வருத்தமா இருக்கு ! இப்படி இருப்பாரா நம்ம சின்னையா ?" என்று புலம்பி, கண்ணீர் வடிக்க, நக்ஷத்திரா அவரது கண்ணீர் தாங்க முடியாது,


"அது அவர் ...கொஞ்சம் அவருக்கு வேற டென்சன் ! அதான் !" என்று சமாதானம் செய்ய முயல, பாக்யம் அவளைப் பிடித்து கொண்டார் .


"அதென்ன தாலி கட்ட கூடாதுனு டென்ஷன் !" என்று அவளை பிடித்துக் கொள்ள, நக்ஷத்ரா என்ன பதில் கூறுவதென்று தெரியாது விழி பிதுங்கினாள்.


அவரிடம், தான் அவனுடன் சேர்ந்து வாழ விருப்படவில்லை, ஆகையால் ஒருவேளை அப்படிச் சொன்னான் என்று அவளால் சொல்லவும் முடியவில்லை. கூடிய சீக்கிரம் தனக்கு தாலி காட்டுவார் என்றும் சொல்ல முடியவில்லை. ஏதேதோ சொல்லி சமாளித்து ஒருவழியாக அவரிடம் இருந்து விடைபெற்றுக் கொண்டாள்.


வரவேற்பறை வந்தவளை, துருவ் ஒரு நாய் குட்டியுடன் வரவேற்றான். அதுவும் அதை மடியில் வைத்துக் கொண்டு அவன் கொஞ்சிக் கொண்டிருக்க, நக்ஷத்திரா அவனிடம் சந்தியா பற்றி தவறாக பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வந்தவளுக்கு, ஒரு குழந்தையை மடியில் வைத்து கொஞ்சுவது போல், அவன் நாய்குட்டியை வைத்து கொஞ்சி கொண்டிருப்பதைப் பார்த்து, பற்றிக் கொண்டு வந்தது.


ஒருவேளை எல்லாம் சரியாக இருந்திருந்தால், தன் வயிற்றில் ஓர் உயிர் இருந்திருக்கும், அது அவளது வாழ்வாதாரமாக இருந்திருக்கும். ஆனால் அவள் மறுபடியும் யாருமற்ற அனாதை ஆகிவிட்டாளே என்பது மட்டும் தான் அவளது அமைதியற்ற மனம் அவளுக்கு எடுத்துக் கூறியது.
 

Thishi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அவன் எம்மாதிரி நிலையில் இருந்தான், இப்போது எப்படி இருக்கிறான், அவனுக்குத் துக்கம் இல்லையா என்று யோசிக்க மறந்தாள். அழுகை பீறிக்கொண்டு வர, இங்கே இருந்தால் தனது பலவீனத்தை அவன் கண்டு கொள்வான் என்று அவள் விருட்டென்று தனதறைக்குச் சென்று விட்டாள். அவனோ அப்போது தான் தனது சிந்தனையில் இருந்து வெளி வந்து, தானாக அவன் மடியில் அமர்ந்த அந்த நாய்குட்டியைத் தூக்கி கொஞ்ச ஆரம்பித்தான்.




பேச்சுக்கள் இல்லா காலை உணவு நேரத்தில், அந்த நாய்க்குட்டியின் சத்தம் ஒன்றே. எரிச்சல் அடையச் செய்யும் சத்தமல்ல, தன்னை கவனிக்க வேண்டும் என்ற கொஞ்சல் சத்தம் அது. அவளது காலடியில் சென்று, அவளது சல்வாரை பிடித்து இழுக்க ஆரம்பிக்க, அவள் கீழே குனிந்து அதனை எடுத்துக் கொண்டாள்.


"பேர் ரஃப்ஃபில்ஸ்(ruffles)" என்ற உபரி தகவல் கொடுத்த துருவ்விடம்



"நீ நாய் பண்ணை வச்சு இருக்கியா!!" என்ற குதர்க்கம் விடாத அவள் கேள்வி!


எதனை குறிப்பிடுகிறாள் என்று அவனுக்கு புரியாது இல்லை. அங்கே சென்னை வீட்டில் இருந்த அவனது செல்லப் பிராணி 'ரெக்ஸ்' -ஐ தான் குறிப்பிடுகிறாள் என்று புரிந்து கொண்டான்.



கூர்மையான பல், நாக்கு எப்போதும் வெளியே தொங்கும் வேட்டை நாய் வகைரா அது. பயமுறுத்தும் டைனோசர் வகைகளில் ஒன்றான டைனோசரஸ் ரெக்ஸ் - ஐ பின்பற்றி அதன் பெயர் ரெக்ஸ்.



அவள் அவன் வீட்டிற்கு வந்த அன்று, அது அவளை நோக்கி பாய்ந்து வர, என்ன செய்வது என்று அறியாது அருகில் இருந்த அவனை இறுக்கிக் கட்டிக் கொண்டாள். தன்னை அணைத்தவளை அன்றைய துருவ் சும்மா விடுவானா?



"இந்த ராட்சனை இவ்வளோ டைட்டா கட்டி பிடிக்கற அளவு உனக்கு என்னை பிடிக்குமா?" என்று திமிர் கொண்டு வினவ, அவளோ


"சீ" என்று அவனை நிந்தித்து விலகினான். அவனா அசருவான்!!


"கொஞ்ச நேரம் முன்னாடி நான் வேணும்...அப்போ இந்த சீ எங்க போச்சு" என்று அவனும் விடவில்லை. ஒருமுறை அவளை ரெக்ஸ் கடிக்க வர, அதன் பின் அதை வேறொரு இடத்திற்கு மாற்றி விட்டான். ஆனாலும் அவளுக்கு ரெக்ஸ் உடனான கசப்பான உணர்வு இன்றளவும் மாறாது இருக்கத் தான் செய்தது.



அது இன்றும் வர, துருவ்



"ம்ம்..நாய் பண்ணை மட்டுமா! ஒரு குட்டி சாத்தான் பண்ணையும் தான் இருக்கு இங்க" என்று அவளைக் கலாய்த்தான். அதை இயல்பாக அவளுக்கு எடுத்துக் கொள்ள முடியாது, மடியில் இருந்த ரஃப்ஃபில்ஸ் கீழே விழுமாறு அவள் எழுந்து அவ்விடம் நீங்க, அந்த பாவமான நாய்குட்டியோ வலியில் கத்த ஆரம்பித்தது.


"நக்ஷத்திரா!" என்று அவன் குரல் ஆங்காரமாக ஒலிக்க, அவள் கோபத்துடன் திரும்பிப் பார்த்தாள், கைகளைக் கட்டிக்கொண்டு.


"என்ன இது? ஒரு 5 அறிவு உள்ள ஜீவராசியை இப்படி தான் ஹர்ட் பண்ணுவியா? அறிவு இருக்காடி ராட்சசி! அதுக்கு வலிச்சா எங்க வலிக்கதுன்னு சொல்ல தெரியுமா! மோரான்" என்று என்றுமில்லாது சற்று அதிகமாகக் கத்தியே விட்டான். அவனைத் துச்சமாக பார்த்தவள்,


" நான் 6 அறிவு உள்ள ஒரு ஜீவ ராசி! அன்னிக்கி கத்தினேனே! வேண்டாம்னு கெஞ்சினேன். அப்போ இந்த ஜீவ காருண்ய கொண்டவர் எங்க போயிருந்தார்? இப்போ தான் அவர் பொறாந்து, தவழ்ந்து, பேச படிச்சு பேசறாரா?" என்று அவனை ஆணியில் அடித்தார் போல் கேட்க, துருவ்வால் ஒன்றும் பேச முடியவில்லை.. அவள் சொன்னது உண்மை. துளியும் அதிகப்படி இல்லை.


அவன் காயப்படுத்தினான், உடலால் மனதால்! அவளோ காயப்பட்டவள்! பேசுவாள்! கேட்டுத் தான் ஆக வேண்டும். கோபம் பெருக அவனை தன் பார்வையால் சுட்டெரிக்க, அவனோ பதில் அறியாது வெறுமையாகப் பார்த்தான், ரஃப்பில்ஸ் தான் தன் வலி மறந்து, அவனை ஆறுதலாகப் பார்த்தது.


அமைதியாகப் பொழுது கழிய, பின்னேரம் சீதோஷண மாறுதல் மற்றும் அவளது பலஹீனமான உடல், அழுகை காரணம், அவளுக்கு ஜுரம் வர, அவனை நிரகரித்தாலும் அவன் தான் அவளைப் பார்த்துக்கொண்டான்.



"ப்ராயசித்தமா! நீ சாவனும்! அதான் பிராயச்சித்தம்! கொடுமையான சாவு உனக்கு கிடைக்கணும்! " என்று உதடுகள் டைப் அடித்தாலும் அவள் கூற, அவன் தன் வருத்தத்தைத் தன்னுள் விழுங்கிக் கொண்டான். காதல், அன்பு என்ற வார்த்தைகள் எல்லாம் அவளுக்குத் தற்போது குடலை பிரட்டும் வார்த்தைகள். அவன் சொல்லப் போவதில்லை.



அதற்கு பதில், அவன் அலட்டாது


"உனக்கு எந்த வார்த்தை இதுக்கு சரியா இருக்கும்னு தோணுதோ சொல்லிக்கோ! யூர் கால் ஹனி பன்ச்" என்று கூற, அவளோ அவன் கையில் இருந்த மருந்தை தனக்கு இருக்கும் பலத்தை கொண்டு, வீசி அடித்தாள்.


"நான் செத்து போக இன்னும் டைம் இருக்கு! இதை பத்தி ஏற்கனவே பேசிருக்கோம்! அதை நீ கண்குளிர பார்க்க நீ ஸ்ட்ராங் ஆகணும்!அதுக்கு தான் டேப்லெட்ஸ்! இல்ல ஊசி போடணும்! உனக்கு ரெக்ஸுக்கு அடுத்து ஊசி தான் அதிகம் பயம்! சோ வாட் டு யு வான்ட்?" என்று வினவ, அவனுக்கு எப்படி தனக்கு ஊசிக்கு பயம் என்று தெரியும் என்பதைச் சிந்திக்கவில்லை.


அவள், அத்தனை தூரம் முடியாவிடினும்


"கெட் லாஸ்ட்" என்று சீற, துருவ் இவள் இதெற்கெல்லாம் சரியாக வர மாட்டாள் என்று


"யூர் விஷ்! மை கமாண்ட்" என்று அவளைச் சரியாக்க, மருத்துவரை அழைத்தான்.



அவளுக்கு ஊசி போடுவதை தவிர வேறு வழி இருக்க வில்லை. அதற்கு அவள் செய்த ரகளையில் துருவ் அவளை இறுக்கப்பிடித்துக் கொண்டான். அவர் என்னடா இது என்று துருவ்வைப் பார்க்க, அவளோ திமிறல் அடங்காது இருக்க, பாக்கியமும் வந்தார். துருவ் அவள் கைகளைப் பிடிக்க, பாக்யம் அவள் கால்களைப் பிடித்து கொள்ள,மருத்துவர் ஒருவாறு அவளுக்கு ஊசி போட்டார். அன்றைய ஞாபகம் அவனுக்கு!


"சாம்! இந்த டாக்டர் மாமா பேட்.. ஊசி வேண்டாம்னு சொல்லு" என்று கத்திக் கதறி அழுத அவனது சிக்கு தான் அவனுக்குத் தெரிந்தாள்.


அதன் பின், மருந்துகளை அவனிடம் கொடுத்து விட்டு என்ன செய்ய வேண்டும் என்று புத்திமதி கூறிவிட்டு சென்றார். பாக்யம் துருவ்விடம்



"பாப்பா இன்னும் மாறலே!" என்று அவள் இருக்கும் போதே சொல்ல, துருவ் டக்கென்று அவள் கேட்டு இருப்பாளோ என்று திரும்பிப் பார்த்தான்.


உடல் சோர்வு மற்றும் வேதனை அவள் முகத்தில் தெளிவாக தெரிந்தது. அதனுடன் கோபமும். அவன், தன்னைப் புரிந்து கொண்டு அவள் தன் மீது அன்பு செலுத்த வேண்டும் என்று எண்ணவில்லை. அவள் காதலித்தாலும், இல்லாவிட்டாலும் அவன் அவளைக் காதலிப்பான். அவன் வேண்டுவது அவள் தன் மன உளைச்சலில் இருந்து வெளிவர வேண்டும்.



இது பரந்து விரிந்து இருக்கும் உலகம். யாரும், மற்றவர்க்கு நிரந்தரம் அல்ல, அவனவன் தான் அவனவனுக்கு நிரந்தரம். அவள் நக்ஷ்த்திரமாக வானில் ஜொலிக்க வேண்டும். இதற்குத் தான் அவன் பாடுபடுகிறான்.


ஆனால் எல்லோருக்கும் மேல் ஒரு சக்தி உண்டு, அதை இயற்கை என்று கூறினாலும் சரி, கடவுள் என்று கூறினாலும் சரி , அந்தச் சக்திக்கு அப்பாற்பட்டு இந்த மனித இனம் இல்லை.


ஆதி மனிதனையும் மனுஷியையும் படைத்த சக்தி தான் அவர்களுக்குள் காதலை உருவாக்கியது என்றால், அந்த சக்தியால் நக்ஷத்திராவுக்குள் காதலை உருவாக்க முடியாதா துருவ்வின் மேல் !


அவளது கோபத்தை தாங்குபவன், அவளது காதலைத் தாங்குவானா ? அதுவும் மரணம் அவனை தீண்டும் தூரத்தில் இருக்கும் போது!!

 

Thishi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் - 17


ஜுரம் அவளைப் பாடாய் படுத்தி எடுத்தது. சோர்வு, அயர்ச்சி என்று முக்கால்வாசி நேரம் படுக்கை வாசம் தான். துருவ் அவளைப் பார்க்க வந்தால் அவன் மீதான கோபத்தைக் கூட அவளால் காண்பிக்க முடியவில்லை.



"நிறைய டைம் இருக்கு. இப்போதைக்கு என்னோட கால் ஷீட் உனக்கு தான்" என்று அவளது மனப்போக்கை கண்டு அறிந்தவன் கூற, அவளால் அவனை முறைத்து கூட சரியாக பார்க்க முடியவில்லை.



"யு வில் பே பார் திஸ்" என்று அவனது பேச்சை, அகங்காரம் என்று எடுத்துக்கொண்டு அவள் சீற, அவனோ அவளது நெற்றியில் சூட்டை கண்டெடுக்க உதவும் தர்மாமீட்டர் கொண்டு, அவளது ஜூரத்தைச் சோதித்து விட்டு,



"டாலர் ஆர் யூரோ" என்று கடுப்படித்தான். அதாவது இதெற்கெல்லாம் நீ ஒரு விலை கொடுப்பாய் என்று அவன் கூறியதற்கு தான், இப்பதில்.





"திமிரா ? " என்று அவள் எகிற,


அவனோ,



"உனக்கு புருஷனா இருக்க முக்கியமான ஒரு தகுதி-திமிர், ஹனி பன்ச் !" என்று அவனும் விடவில்லை.


வார்த்தை விளையாட்டு அல்ல அது ! அவளை எப்படியாவது அவன் மீது கொண்டுள்ள கோபத்தை வெளியில் கொண்டு வந்து அவளைச் சரி செய்யும் முயற்சி. மனதிலே எல்லாவற்றையும் வைத்திருந்தால் அது வேறு விதமான நோயில் தான் முடியும்.


அவளது கோபமே அவளை சரி செய்ய ஆரம்பித்தது. இவனை எப்படியாவது உண்டு இல்லை என்று ஆக்க வேண்டும் என்று அவளும் மனதில் கங்கணம் கட்டிக் கொண்டாள். அவளை துருவ் மற்றும் பாக்யம் தவிர மற்றோரு ஜீவராசியும் அடிக்கடி பார்த்து விட்டு போகும் !


ரஃப்ஃபில்ஸ் தான் ! வெள்ளை நிறமல்லாது சற்று மட்டுப்பட்ட நிறத்தில், கொஞ்சம் புசுபுசு லேப்ரடார் வகை நாய்க்குட்டி அது ! ரெக்ஸ் போல் பயம் காட்டும் வகை அல்ல. பாவமாக அவளைப் பார்க்கும்! அவளுக்கே தான் அதை கீழே தள்ளி விட்டது தவறு என்று தெரியும் ! எந்த வித தவறும் செய்யாத நாய்க்குட்டி மேல் ஏனெனிந்த கோபம் !


அவளது படுக்கை மீது ஏறி அவள் அருகே பாவமாக அவள் புறம் வந்து அமர்ந்து கொள்ளும். அவளுக்கும் அது பிடிக்கும், எடுத்து அதனை கொஞ்ச ஆரம்பித்து, அவர்கள் இடையே நட்புறவு வளர ஆரம்பித்தது.


கொஞ்சம் உடல் நிலை சரியாக, ரஃப்ஃபில்ஸ் மற்றும் நக்ஷத்திரா வீட்டுக்குள் ஓடிப் பிடித்து விளையாட ஆரம்பிக்க, துருவ் இருவரையும் ஆதுரமாகப் பார்த்தான். அவள் சிறுபிள்ளை பருவத்தில் தவற விட்ட நொடிகள் அவை ! கண்டிப்பாக எல்லாவற்றையும் மீட்டு எடுப்பது என்பது நடக்காத காரியம் .


ஆனால் கொஞ்சம் கொஞ்சம் அவனால், அவளது சின்னச் சிறு சந்தோஷங்களை மீட்க முடியும் ! அப்போது அவனுக்கு ஒரு அழைப்பு வர, நேரே அதை அவளிடம் கொடுத்தான் !


அலைபேசியில் பெயர் 'ட்ரபிள்' என்று எழுதப்பட்டு இருக்க, அவளோ அவனை புதிராகப் பார்த்தாள் !


"உனக்கு வேண்டப்பட்டவர் ! எனக்கு வேண்டாத இம்சை " என்று சொல்லிவிட்டு அவன் சென்று விட, அவள் அழைப்பு முடிவதற்குள் எடுத்தாள்!


மறுபுறம் ரஞ்சன் தான்.


"ஹேய் நக்ஷி ! ஹவ் ஆர் யு பேபி ?" என்று அவன் எப்போதும் போல் ஆரம்பிக்க, அவளுக்கு அந்த 'பேபி' என்ற வார்த்தை உவப்பாக இல்லை . ஒருவேளை தான் துருவ்வின் மனைவி என்ற வாசகம் அவளைப் பாதிக்க ஆரம்பித்ததோ என்னவோ !


"சொல்லு ரஞ்சன் ! ஹவ் ஆர் யு " என்று மிகவும் புறப் பண்புக்களுக்குரிய நிலையில் அவள் பேச ஆரம்பித்தாள். ரஞ்சனுக்கு அது சுருக் என்று தைத்தது !


"லார்ட் லபக்தால் எல்லாம் மறந்து போச்சா ?" என்று கேட்டே விட்டான் ! ஒரு நிமிடம் பெருமூச்சு மட்டுமே அவள் பதில்,


"ஃபைன்! லீவ் இட் ! எங்கே இருக்கே? உன் செல் நாட் ரீச்சபிள்ன்னு வந்தது ! சென்னை விட்டு எங்கே போனே ? உன்னை டார்ச்சர் பண்ணறானா அவன்? நான் இருக்கேன் உனக்கு! எனகே இருக்கேனு சொல்லு ! இப்போ வரேன் ..." என்று பிதற்ற ஆரம்பிக்க, நக்ஷத்திரா,


"ரஞ்சன் ! ஸ்டாப் இட் ! " என்று கத்தியே விட்டாள்.


"அம் ஆல்ரைட் ! அண்ட் என்னை பார்த்துக்க எனக்கு தெரியுமே!


துருவ்வுக்கும் எனக்கும் உள்ளதை நாங்க டீல் பண்ணிப்போம் ! தேங்க்ஸ் பார் யூர் கான்செர்ன் ! பை" என்று முகத்தில் அடித்தார் போல் சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்தாள்.



அவளது மனம் ஏனோ நிம்மதி இன்றி தவித்தது. இந்த அழைப்பு வந்ததும் துருவ்வின் நடவடிக்கையைக் கவனித்தாள்! அவன் அந்த அறையில் இல்லவே இல்லை.


அவள் மீதான நம்பிக்கையா அல்லது ரஞ்சனின் லக்ஷ்ணம் இது தான் என்று அறிந்து இருந்தானா ? எதுவாக இருந்தாலும் அவன் நல்ல ஆண்மகனாக நடந்து கொண்டான் . கணவன் மனைவி ஆனாலும், அவரவர்க்குத் தனிப்பட்ட வட்டம் ஒன்று உண்டு, அதில் மற்றவர் தலையிட கூடாது ! அதைத் தான் அவன் செய்தான் !


அவன் தனது காபித் தோட்டத்திற்குச் சென்று விட்டான் என்று தெரிந்து கொண்டு அவனைத் தேடிச் சென்றாள். எப்போது வேண்டும் என்றாலும் மழை வரும் என்று பருவம் இருக்க, கருமேகங்கள் ஓங்கி உயர்ந்த மரங்களை முட்டுவது போல் வானத்தில் ஓவியம் ! வான்மகனும், நிலமகளும் தொடுவானத்தில் தீண்டியும் தீண்டாமலும் அவளுக்குத் தென்பட்டது ! அவளும் அவனும் போல் அது ! அப்படி தான் உணர்ந்தாள்!


வெளியே மேகத்தின் நிறம், எப்போது வேண்டும் என்றாலும் மழை வரும் போல் இருந்தது. வான் மகன், நில மகளைத் தீண்டியும் தீண்டாது போல் இருக்க, நக்ஷத்திராவிற்கு அது அவர்கள் நிலை போல் இருந்தது. சேர்ந்து இருக்கிறார்கள் ஆனால் இல்லை. அதானே அவர்கள்!


அவனைக் கண்டெடுத்து,


"இந்தா உன் செல்போன்!" என்று கொடுத்துவிட்டு கைகளைக் கட்டிக் கொண்டு நின்றாள்.




குளிர்ந்த காற்று வீச, சால்வை போற்றிக் கொண்டு வராத தன் முட்டாள்தனத்தால், அவள் நடுங்க ஆரம்பித்தாள். அவளது நிலையை பார்த்தவன், உடனே அவளைத் தூக்கிக் கொண்டு வீட்டை நோக்கி ஓட ஆரம்பித்தான்.


ரஜாய் ஒன்றை போற்றி, அதற்கும் அடங்காது அவளை குளிர் வாட்ட, கனலை மூட்டி அதன் அருகே அவளைத் தூக்கிக் கொண்டு சென்றான். அப்படியும் அவள் நடுங்க, தன் மீது அவளைச் சாய்த்து, பின்னர் ரஜாயை போற்றி, மெல்ல மெல்ல அவன் உடல் சூடு, கனல் தரும் வெப்பம், ரஜாய் தந்த சூட்டில் அவள் நடுக்கம் குறைந்தது.


அவள் நடுக்கம் குறைந்ததும், அவளை நீங்கியவன், அவள் அருகாமையில் தன்னுள் நிகழ்ந்த உணர்வு பேரலையை அடக்கிக் கொண்டவன்,பேண்ட் பாக்கெட்டுக்குள் கையை விட்ட படி,


"கூறு கெட்ட கிறுக்கச்சி" என்று திட்டினான். அவன் இம்மாதிரியான திட்டை அவனிடம் இருந்து முற்றிலும் எதிர்பார்க்கவில்லை. அந்த அதிர்ச்சியில் இருந்து மீளாது இருக்க, அவன் தொடர்ந்து


"அதான் வெளிய பார்க்கறேலே! மழை வருது! குளிர் இருக்கு..நான் இப்போவே என் செல் போன் வேணும்னு கேட்டேனா? உடம்பு இப்போ தான் சரியா ஆகிக்கிட்டு வருது! உன்னை ஒழுங்கா பார்த்துக்கே தெரியல, இதுல இவ எல்லாம்.. " என்று ஏதோ சொல்ல வந்தவன் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டான்.


இரவு உணவு முன்னே அவளுக்கு ஜூரமும் வர, அவளை தொட்டு ஜுரம் இருக்கிறதா என்று அவன் கைகளை நீட்ட, அவள் அவன் கையைத் தட்டியும் விட்டாள்.


"இந்த புண்ணாக்கு ரோஷத்துக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல, லூஸ் ஹெட்" என்று அவள் கரங்களை தன் கரங்களுக்குள் அடக்கியவன், மருந்தையும் கொடுத்து,


"உன் வாய்க்கு இருக்கற பலம், உடம்பில் இல்லே! இந்த லட்சணத்தில் என்னை எப்படி பழி வாங்க போறே?" என்று வேறு சீண்டினான்.


அவளை இரவு நேரத்தில் தனியாக விட முடியாது என்று அவன் தான் அன்று இரவு அவள் அறை சோபாவில் வாசம் செய்ய, பின்னிரவு குளிர் ஜுரம் போல் உடல் தூக்கித் தூக்கிப் போட, அவன் அவளை அணைத்துக் கொண்டு அவள் படுக்கையில் தஞ்சம் அடைய, அவளோ ஆங்காரமாக


"டேக் ஆ. .. ஃப் யூர் ஷி****** ஹேண்ட்ஸ், கெட் அவு.. ட் " என்று பற்கள் டைப்படிக்க கத்த, அவன் அவளை நீங்கியவன்


"ஓகே ஹனி பன்ச், அஸ் யு விஷ்" என்று கைகளைக் கட்டிக்கொண்டு நிற்க, அவளது உடல் பலஹீனம் அவளுக்கு உடல் அளவில் சோர்ந்து போகச் செய்து வேதனையைக் கொடுத்து என்ன செய்வது என்று தெரியாத நிலைக்கு தள்ளிவிட, அவளது நிலையைக் கண்டவன் அவளை தன்னுள் புதைத்துக் கொண்டான், அவள் எதிர்ப்பை மீறி!


"ஜஸ்ட் ஷட் அப் அண்ட் கெட் பெட்டர்" என்று கடியவும் செய்தான். கொஞ்சம் கொஞ்சமாக அவள் உடல் சரியாகிக் கொண்டு வந்தது, அவள் வாயில் தெரிந்தது.


மேலை நாடுகளில் ஒரு உருமாறும் கற்பனை விலங்கு உண்டு. அதன் பெயர் வேர்வுல்ஃப். அதாவது மனித உருவில் இருந்து ஓநாயாக மாறும் வல்லமை பெற்றது, அதற்கும் ரத்த காட்டேரிகளுக்கும் சுத்தமாக ஆகாது, மனித உருவில் அதன் உடல் மிகவும் சூடாக இருக்கும்.


அதைக் குறித்து இவள்



"நீ என்ன வேர்வுல்ஃபா ! இவ்வளவு ஹாட்டா இருக்கே" என்று ஆரம்பிக்க, அவன் தான் விடாக் கண்ணன் ஆயிற்றே


"நீ ரத்த காட்டேரின்னா நான் வேர்வுல்ஃப் தான்" என்று அவளுக்குப் பதிலடி கொடுக்க, அவளுக்கு ரோஷம் பொத்துக் கொண்டு வர,


"யு…." என்று ஆரம்பிப்பதற்குள் அவன் அவள் வாயை அடைக்க, முத்த தண்டனை கொடுக்க ஆரம்பித்தான்.


நெடு நாள் கழித்த அந்த இதழ் சங்கமத்தில், வேகமாக ஒரு மோகம் அவனுள் பரவ ஆரம்பித்தது. முதலில் அவள் திமிறினாலும், அவனுள் அவள் இதழ்கள் வாகாய் அடங்க, மோகம் பெருக்கெடுத்து அடுத்த நிலைக்கு செல்லத் தயாராக அவனது கரங்களும் அதற்கு ஏதுவாக நடக்க, அவனது காதல் பெருக்கை ஒரு கட்டத்தில் தாள முடியாது வலியால் முனங்க ஆரம்பிக்க, துருவ் அவளைப் பட்டென்று விட்டான்.



தன்னை சமன்படுத்த நேரம் எடுத்தவன்


"டோன்ட் கெட் இண்டு ட்ரபிள் அகேன்" என்று அவளைச் சாடி விட்டு செல்ல, அவளோ, அவனது நியாயமில்லாப் பேச்சில் வெகுண்டு எழுந்தாள்.
 

Thishi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அடுத்த நாள் அதற்காக அவனைச் சாட, அவனோ மிகவும் கூலாக,


"இன்னும் வேணுமா ? அம் ரெடி !" என்று கூற, அவளோ வாய் அடைந்து போனாள்.


"யு பா……" என்று கத்தப் போக, அந்நேரம் பாக்யம் வந்து


"சின்னையா ! ஒரு பொண்ணு உங்களை பார்க்க வந்திருக்கு !" என்று கூற, துருவ் யாரடா இது என்று பார்க்கப் போனான். நம் அம்மிணி தான் ஆர்வக்கோளாறு களஞ்யம் ஆயிற்றே, அவளால் சங்கே சும்மா இருக்க முடியுமா? அவளும் அவனைப் பின்தொடர, அங்கே வரவேற்பறையில் ரோஹிணி !


அவள் யார் என்று அறியாதவள் அவர்கள் சம்பாஷணையை ஒட்டுக் கேட்க ஆரம்பித்தாள்.


"துருவ் ! நீ கண்டிப்பா சொல்ல மாட்டேனு நான் எதிர்பார்த்தேன் , ஸ்டில் மனசு கேக்கலே ! அதான் வந்தேன்! ஹவ் ஆர் யு? ஹவ் இஸ் நக்ஷத்திரா ?" என்று இயல்பாகக் குசலம் விசாரிக்க, அவளை இறுக்கமாக பார்த்துக் கொண்டு இருந்தவன்,


"ஜஸ்ட் கெட் லாஸ்ட் " என்று மட்டும் தான் கூறினான் , ஆனால் அதில் இருந்த உஷ்ண அளவில் ரோகிணியின் முகம் சோர்ந்து போனது. அவனுக்காக அவள் கஷ்டப்பட்டு இந்த இடத்தை அறிந்து கொண்டு வந்தால், எப்பேர்ப்பட்ட வரவேற்பை அவன் கொடுக்கிறான்.


"நான் என்ன தப்பு பண்ணினேன் துருவ் ? ஏன் என்னை வெறுக்கறே ? நம்ம ரிலேஷன் உனக்கு ஒண்ணுமில்லையா? ஐ வாண்ட் யு துருவ் அஸ் மை …." என்று அவள் பேசிக் கொண்டே போக, துருவ் அதனை இடைமறித்து,


"உன் கழுத்தை பிடிச்சு வெளிய தள்ளற அளவு எனக்கு கோபம் இருக்கு ! அதை தான் நான் செய்யணும்ன்னு நீ ஆசைப்பட்டா, செய்யறேன்" என்று தயவு தாட்சண்யம் பார்க்காது அவன் கூற, கண்களில் இருந்து வழியப் போன கண்ணீரை கஷ்டப்பட்டு உள் வாங்கியவள் ,


"இங்க வந்தது என்னை பொறுத்தவரை தப்பில்லைனு நினைச்சுகிட்டு இருந்தேன் ! பட் நீ ! இதயமே இல்லாதவன் ! இனி உன்னை தேடி நான் வரவே மாட்டேன் ! ஐ ஸ்வெர்" என்று சூளுரைத்து விட்டுச் சென்று விட்டாள்.


எதையுமே சரியாக, தவறாக புரிந்து கொள்வதில் முனைவர் பட்டம் மட்டும் பெறாத நக்ஷத்திரா, சும்மா இராது


"சோ அந்த பொண்ணையும் நீ ஏமாத்திட்டியா ? அதான் நியாயம் கேக்க வந்தாளா ? ஆமாம் அவளுக்கு அறிவே இல்லியா ? நீ ஒரு கேடு கெட்டவன், வுமனைசர்ன்னு தெரிஞ்சும் உங்கிட்ட வந்து ஏமாந்து போயிட்டாளா ? நீ ஏமாத்தின லிஸ்டில் இவ எத்தனாவது பொண்ணு ? "என்று தன் போக்கில் பேசிக்கொண்டே போக, ஏற்கனவே ரோகிணியின் வரவால் கோபத்தில் இருந்தவன் தனது அருமை மனைவி பேச்சில் இன்னும் கோபம் தலைக்கேற, அவளை நெருங்கியவன், சற்றும் எதிர்பார்க்காது, அவளை ஓங்கி அறைந்தான். அவள் முடி கற்றுக்கள் அவள் முகத்தில் அங்கும் இங்கும் அலைபாய, தன் கோபத்தை இன்னும் விட முடியாது, அவள் கன்னச் சிவப்பில் தன் கரம் பதிந்ததை பொருட்படுத்தாது,


"இன்னும்மொருவார்த்தை பேசினே ! ஐ வில் கில் யூ ! உன்னோட ஃபெமினிசத்தில் இன்னொரு பொண்ணை தப்பா பேசணும்னு இருக்கா ? சீ என்ன பொண்ணு நீ ! மூளை இல்லாத ராட்சசி " என்று கர்ஜிக்க, அந்த அறையை முற்றிலும் எதிர்பார்க்காத அவன் கன்னம் மட்டும் எரியவில்லை, அவளது மனதும் தான் !


அவனது "சீ" இல் அவள் தான் மிகவும் தாழ்ந்து போய் விட்டோம் என்று உணர்ந்தாள். அவளுக்கு என்ன உரிமை இருக்கிறது, முன்பின் தெரியாத பெண்ணைப் பற்றிப் பேச! அவன் சொன்னது நியாயம் தானே ! அவனுக்கும் அவளுக்கும் இருக்கும் பிணக்கு வேறு. அவன் என்றாவது தன்னைப் பற்றி தவறாகப் பேசி இருக்கிறானா ? இவ்வளவு ஏன் ரஞ்சன் கூப்பிட்ட போது, மரியாதைக் கருதி அவளுக்குத் தனிமை கொடுத்து விட்டு சென்றானே! ஒரு வார்த்தை அதன் பின் அவள் என்ன பேசினாள், ரஞ்சனிடம் என்று கேட்டானா ? மனைவிக்கு இருக்கும் தனிப்பட்ட வட்டத்தை அவன் மதித்து தான் இருக்கிறான், ஆனால் அவள்?




தான் பேசியது தவறு என்று உணர்ந்தவள், அவனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று விரும்பினாள். ஆனால் அவனோ காபி தோட்டத்திற்கு சென்றவன், வீடு திரும்ப மாலை மேல் ஆயிற்று. வரும் போது ரோஹிணியுடன் வந்தான்.


"இன்னிக்கி நைட் ஸ்டே பண்ணிட்டு, மார்னிங் நான் உன்னை பார்க்க கூடாது !" என்று அவளிடம் கறாராக பேசிவிட்டு தனது அறைக்குச் செல்ல முனைந்தான்.


ரோஹினி அவனுக்கு சளைக்காது,


"ஒன்னும் தேவையில்லை உன்னோட இந்த விருந்தோம்பல்" என்று கத்த, அறை வரை சென்றவன்,


"ஓகே கெட் லாஸ்ட், யாரோ ஒரு அரசியல்வாதி செத்து போயிட்டான்னு இனி பஸ் ஓடாம, தெருவுல நின்னுகிட்டு இருந்தே அண்ட் நைட் நேரத்தில், வெஹிக்கில் இல்லாம, டிராவல் பண்ண முடியாதுன்னு உனக்கும் தெரியும்.


ஸ்டில் உனக்கு இங்க இருக்க முடியலைன்னா, காந்திஜி சொன்னதை தாராளமா டெஸ்ட் பண்ணு! ஐ கேர் அ டேம்" என்று இவன் கத்த, பாக்யம் நடுவில் புகுந்து,


"நீ இங்க இருமா ! சின்னையா சொன்னதை கேளு" என்று அறிவுறுத்தினார். அவன் சொல்வது பிடிக்காவிட்டாலும் அதில் இருக்கும் உண்மை உணர்ந்து விருந்தினர் அறைக்குச் செல்லப் போக, நக்ஷத்திரா அவள் கண்ணில் பட்டாள்.


ரோஹிணியை பார்த்து புன்னகை பூக்க வேண்டுமா இல்லை என்ன செய்ய வேண்டும் என்று புரியாது நக்ஷத்திரா நிற்க, ரோஹிணி அவளைக் கண்டு மரியாதை நிமித்தம் புன்னகை பூத்தாள்.


பதிலுக்கு புன்னகை சிந்திய நக்ஷத்திரா அவளிடம் பேசப் போக, கழுகிற்கு மூக்கு வேர்த்தது போல், துருவ்வின் குரல் மாடியில் இருந்து கேட்டது !


"நான் உன்னை இங்க தங்க சொன்னேன், அதுக்கு அர்த்தம் இங்க இருக்கறவங்க கூட பேசி பழக இல்லை , இட்ஸ் ஜஸ்ட் எ ரூஃப் டு ஸ்டெ டுநைட், கிட்டத்தட்ட ஒரு லாட்ஜ் மாறி, என்ன!! நீ பைசா கொடுக்க வேண்டாம்" என்று கடுமையாக அவன் குரல் ஒலிக்க, ரோஹிணி பேசாது விருந்தினர் அறைக்குச் சென்று விட்டாள்.




அவனிடம் மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும் என்று நக்ஷத்திரா மாடி ஏறினாள். மாடிப்படியின் சுவற்றில் கணக்கில்லாத புகைப்படங்கள். அந்த மாடி படி நிறைவு பெறும், அறையின் அழகோ, கம்பீரமோ அவள் மனதில் பதியவில்லை. அவன் முகம் மட்டும் தான் பிரதானமாக தெரிந்தது. மாடி ஏறும் அவளை பார்த்து கொண்டு இருந்தவன் முகத்தில் கடுமை கொஞ்சம் கூட குறையவில்லை. அவன் வளர்த்து கொண்டிருக்கும் தாடியைத் தாண்டி அந்த கடுமை பளிச்சிட்டது !


அவளுக்கு முதன் முறையாக தான் செய்த தவறில், அவனது கடுமை அளவுக்கு அதிகமாகப் பயத்தைக் கொடுக்க, வார்த்தைகள் வெளியே வராது உள்ளுக்குள்ளே திக்கித் திணற ஆரம்பித்தாள்.


"வந்து ...ஐ வாண்ட் …." என்று அவள் மொழி அறிந்தும், வெளிப்படுத்த முடியாது திணற


"கெட் லாஸ்ட் நக்ஷத்திரா !" என்று ஒரேடியாக அவளை, அவளது மன்னிப்பை நிராகரித்தான். இந்நாட்களில் பெரும்பாலும் அவளை அவன் தாரா என்றோ ஹனி பன்ச் என்றோ தான் விளிப்பான்! ஆனால் இந்த நக்ஷத்திரா என்ற அவளுடைய இயற்பெயர் அவளுக்கு கேட்கப் பிடிக்கவில்லை. அவனது கோபத்தின் அளவு அவளுக்கு புரிய ஆரம்பித்தது, இருந்தாலும் மன்னிப்பு கேட்க வருபவளை இப்படி தான் அவமானப்படுத்துவானா ? அந்த எண்ணம் அவளது ரோஷத்தை கோபம் கொண்டு அதிகரிக்க, அவளும் அவனிடம் மன்னிப்பு கேட்கக் கூடாது என்று முடிவு செய்து கொண்டாள்.


ரோஹிணி அடுத்தநாள் சென்று விட்டாள். யாரிவள்? வந்தாள் , சென்றாள், மறுபடியும் வந்தாள் , மீண்டும் சென்றாள் என்ற கேள்விகள் நக்ஷத்திராவின் மனதைக் குடைந்தாலும், அவளுக்கு யாரிடமும் கேட்கப் பிடிக்கவில்லை. துருவ்வோ கோபத்தின் உச்சாணிக் கொம்பில் இருந்து இறங்கவும் இல்லை. அவளை வேண்டுமென்றே வம்பிழுக்கும் துருவ்வை அவளையும் அறியாது கொஞ்சம் கொஞ்சமாக நாட ஆரம்பித்தாள்.


ஆயினும் அவனுக்கு அகம் உண்டென்றால், தனக்கும் உண்டு என்றும் அவளும் தனது கோபத்தைக் குறையாது நிறுத்தி வைக்க, அவளுக்கு மனநல சிகிச்சை அளிக்க ஓர் பிரபல மருத்துவர், பெங்களூரில் இருந்து வாரம் 2 முறை இங்கு வர ஆரம்பித்தார், ஹெலிகாப்டரில்.


ஆம் ! துருவ்விற்குச் சொந்தமாக ஒரு ஹெலிபிகாப்டர் வேறு உண்டு ! முதல் நாள் சிகிச்சை கழிந்த பின், துருவ்விடம் அவள் சும்மா இராது,


"இந்த சந்தனம் அதிகம் இருந்தான்னு ஒரு வாக்கு உண்டு, தெரியுமா?" என்று அவனது ஹெலிகாப்டரைக் காண்பித்து வம்பிழுக்க, அவனோ அவள் இடையில் கரம் கொடுத்து, அவள் எதிர்பாராத நேரத்தில் வளைத்துப் பிடித்து, அவள் முகத்தை நெருங்கினான். அதில் அதிர்ச்சி அடைந்தவள் உதடுகளை உள்ளிழுத்துக் கொள்ள, துருவ் ஒரு மந்தகாசப் புன்னகையைக் கிண்டல் கலந்து சிந்திவிட்டு,


"நுணலும் தன் வாயால் கெடும்னு இன்னொரு வாக்கும், உண்டு ஹனி பன்ச் ! சோ பெட்டர் ஷட் யூர் மவுத் " என்று காதலுடன் மிரட்டவும் தவறவில்லை. அவளுக்கு அவனது குணம் கொஞ்சம் கொஞ்சமாகப் புரிய ஆரம்பித்தது. அவள் தான் அவனைச் சீண்ட ஆரம்பித்தாள், ஆகையால் அவனும் பதிலடி கொடுக்க ஆரம்பிக்க, அது அவர்கள் இருவரையும் இப்படி ஒரு சூழ்நிலையில் நிறுத்திவிட்டது.


மனநலச் சிகிச்சைகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, நக்ஷத்திரா மெல்ல மெல்ல, தன்னுடைய மற்றொரு பகுதியை மருத்துவரிடம் பகிர்ந்து கொள்ள ஆரம்பித்தாள். அது துருவ்வும் அறியாத பகுதி! அவள் மனதில் இருக்கும் ஆயிரம் வேதனைகள் அறியாது போனான் அவன் ! அவளும் அதை யாரிடமும் பகிர்ந்துக் கொள்ள விருப்பமும் கொள்ளவில்லை, கட்டியக் கணவன் ஆனாலும்! அந்த மனநிலைக்கு அவள் வரவுமில்லை.



முதலில் தன்னுடைய வேதனைகளை அவள் தாண்டினால் தான் அடுத்த நிலைக்கு அவள் வருவாள் என்று மருத்துவர் ஷோபா உணர்ந்தாள். ஷோபாவை துருவ் தனது சிறுவயது முதல் அறிவான், ஏனென்றால் அவனும் அவரிடம் சிகிச்சைப் பெற்று இருக்கிறான். இருவரின் குழந்தைப்பருவமும் கடுமைகள் மற்றும் கொடுமைகள் நிறைந்தன.



துருவ்வின் வாழ்வில் பணம் இருந்தும், அவன் தன் வேதனைகளை முக்கியமான சொந்தம் இல்லாது அனுபவித்தான். ஆனால் இவள், பணமும் இல்லாது, முக்கியமான சொந்தமும் இல்லாது அனுபவித்தாள்.




*********

ஒருபுறம் மனநலச் சிகிச்சைகள் நடந்து கொண்டிருக்க, அதில் அவள் பெரும்பான்மையான குழந்தைப்பருவ விஷயங்களைப் பகிர்நது கொண்டாலும், இன்னும் அவள், துருவ்-நக்ஷத்திரா சம்பந்தப்பட்ட விஷயங்களைச் சொல்ல முனையவில்லை, ஷோபா நிதானமாக அவளைக் கையாண்டார்.


"ஷி இஸ் லைக் அன் ஆனியன் ! வெங்காயத்தை உரிக்க உரிக்க கண்ணுல தண்ணி வர மாறி, அவளோட கதைகளை அவ இப்போ திருப்பி பார்த்து பண்ணி கண்ணீர் விடறா ! சூழ்நிலை காரணம் பேசாம இருந்தா, தைரியமா இருக்கணும்ன்னு இருந்திருக்கா ! பட் அது தான் இவ மனசளவில் இப்படி ஆகவும் காரணம். அழுதா, புலம்பினா என்ன ஆகும்னு கேக்கலாம், பட் நிறைய நேரம், அழுகை என்பது துக்கத்தை போக்கற கருவியும் தான். சீக்கிரம் சரியாவா" என்று அவனது நம்பிக்கை கெடாது உரைத்து விட்டுச் சென்றார்.


ஒரு மாலைப் பொழுதில் அவன் நீச்சல் குளத்தில் நீந்திக் கொண்டிருந்தான். வானிலை நன்றாக இருந்தால், துருவ் அங்கிருக்கும் நாட்களில் தவறாது நீந்துவான். சற்று உயரத்தில் ஒரு டைவ்விங் போர்டில் இருந்து நீரில் ஒரு அம்பு போல் சீராகக் குதித்து, கைகளை நேர்த்தியாக வீசி தண்ணீரைக் கிழித்து அவன் நீந்துவதைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.


ரோஹிணி விஷயத்தில் அவள் இன்னும் அவனிடம் மன்னிப்பு கேட்கவில்லை. அவனும் கோபத்தைக் கைவிட்டான் என்று சொல்வதை விட, அதை மறக்க முயன்றான். பல விஷயங்களில் அவள் நிலை மாறி இருந்தாலும் அவன் விஷயத்தில் இன்னும் கோபம் குறையாது தான் இருந்தது. நீச்சலை முடித்துவிட்டு அவளிடம் இருந்து சற்று தூரத்தில் இருக்கும் சாய்வு நாற்காலியில் அவன் உட்கார்ந்து கொண்டான், வெயிலை அனுபவித்துக் கொண்டு, அவளை கவனித்துக் கொண்டே ! அவளும் புத்தகம் படிப்பது போல் அவனைத் தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.


அவனையே பார்த்து கொண்டிருந்தவள் பார்வையில் ஏதேதோ எண்ணங்கள். கடந்த காலத்தின் சுவடுகள் அதில் இருக்க, அதை அவள் உள்வாங்கினாலும், சரியாகக் கிரகிக்க முடியாது திணறினாள்.


அவன், அதைக் கண்டு கொண்டான். பார்வை மாற்றங்களை அவன் புரிந்து கொண்டான். அவளது திணறலை ரசித்தான், அத்துடன் விட்டால், அது அவன் இல்லையே.


ஈரம் சொட்டச் சொட்ட, திடமான உறுதியான அடிகளுடன் அவள் முன் நின்றான். அவன் நின்ற கோலத்தில் லஜ்ஜை அடைய, கையில் இருக்கும் புத்தகத்தை வைத்து முகத்தை மறைத்து கொண்டாள்.


அந்தப் புத்தகத்தைக் கீழே இறக்கி,


"முழுசா நனைஞ்ச அப்பறம் எதுக்கு புக்கு" என்று கிண்டலாக உரைத்தான். தன்னைக் கண்டு கொண்டதில் அவளுக்கு இன்னும் வெட்கம்! அவனைக் கண்ட வெட்கம் அல்ல, தன்னைக் கண்டு கொண்டானே என்ற கோபம் கலந்த வெட்கம்.


"ஒரு மண்ணாங்கட்டியும் இல்ல, உன்னை எல்லாம் யார் பார்க்கிறா! இந்த ஓவர் நினைப்பு, திமிரில் தானே நீ.." என்று ஏதோ சொல்ல வந்தவளின் வாயை கையால் பொத்தியவன்,


"எனக்கு சொந்தமானதை எடுத்துகிட்டேன், ஹனி பன்ச். " என்று அகங்காரம் தெறித்து அவன் பதில் உரைக்க, அவளோ


"வெட்கமா இல்ல! உனக்கு! என்னால ஒன்னும் முடியாது..அப்படி தானே நினைக்கறே! தென் யூ ஆர் ஸோ ராங்! உனக்கு கொடுக்க வேண்டிய தண்டனை கொடுக்காம விட மாட்டேன்" என்று அழுகையை அடக்கிக் கொண்டு கத்த, அடுத்த நிமிடம், அவள் அவன் மாரளவு உயரத்தில் இருந்தாள்.


"விடுடா! என்னை! யூ ரோக்! ஐ வில் கில் யூ" என்று அவன் மார்பில் முடிந்த அளவு குத்திப், பிராண்டிப் பார்த்தாள். ஆனால் எங்கே! இரும்புக்கும், பஞ்சிற்கும் உள்ள வேறுபாட்டில் அவள் தோற்று போக, அடுத்த நொடி, பஞ்சை போல் மென்மையானவள் உள்ளம் குளிர, அவன் அவளைத் தண்ணீரில் தவழவிட்டான் சற்று உயரத்தில் இருந்து. அதாவது அவளை தொபக்கடீரென்று தண்ணீரில் போட்டான் .



அவளுக்கு நீச்சல் தெரியும் என்று நினைத்துக் கொண்டு அவன் அவளைத் தண்ணீரில் போட, அவளோ தத்தக்கா பித்தக்கா என்று நீந்த முயன்று மூழ்க ஆரம்பித்தாள்.



அப்போது துருவ் நீரில் மீண்டும் குதித்து, அவளை இழுத்து கரையில் சேர்த்து, அவள் சீராகும் வரை நிதானித்தான்.


"உனக்கு ஸ்விம்மிங் தெரியாது?" என்று அவளைத் தீர்க்கமாக வினவ, அவள் இருமிக் கொண்டே


"நான் என்ன உன்னை மாறி பார்ன் வித் சில்வர் ஸ்பூன்னா, நான் பார்ன் வித் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் ஸ்பூன்" என்று எரிந்து விழுந்தாள்.



அதில் அவளது பணநிலை பளிச்சிட, துருவ் தன் தவறை உணர்ந்தான். நீச்சல் என்ற கலை,தொடர்ந்து பயிலாவிட்டால் இப்படித் தான் ஆகும்.


"சாரி! இப்ப கத்துக்கலாம் நீ! ஒன்னும் குறையலே" என்று அவள் எழும்பக் கை கொடுக்க, அவளோ அதைப் பற்றாது,


"அவசியம் இல்ல" என்று நறுக்கென்று பதில் உரைக்க, துருவ்


"ஒருநாள் நீ என்னை கொல்ல முன்னாடி, நான் உன்னை தண்ணியில் தள்ளி விட்டா என்ன ஆகும் உன்னோட பழிவாங்கும் படலம்?" என்று அவள் பாணியில் செல்ல, அவளோ அலட்சியமாக


"அதுக்கெல்லாம் உனக்கு தைரியம் கிடையாது" என்று கூற, அவளை மீண்டும் நீரில் தள்ளி விட்டான். இம்முறை ஆழமில்லாத பகுதியில். அதில் அவள் எப்படியோ மீண்டு கரை ஏற, அவனோ அவளைக் குறும்பாகப் பார்த்து,


"என்ன சொல்லறே? கத்துக்கறியா இல்ல …" என்று அவளைத் தலை முதல் கால் வரை பார்த்தான்.


"கத்துகிட்டு தொலைக்கறேன்" என்று எரிச்சல் பட்டுக்கொண்டே கற்றுக் கொள்ள ஆரம்பித்தாள்.



மனநல மருத்துவம், நீச்சல், யோகா, தற்காப்பு பயிற்சி என்று நாட்கள் செல்ல அவள் மனநிலை கொஞ்சம் கொஞ்சம் மாற ஆரம்பித்தது. முக்கியமாக அவள் வாயில் இருந்து வரும் வார்த்தைகள் பக்குவமான வார்த்தைகளாக மாற ஆரம்பித்தாலும், அவ்வப்போது அவனைத் திட்டாது இல்லை.


அதை அவன் பொருட்படுத்தாது அவளைச் சரி செய்வதில் முனைந்தான். ஆனால் அவளுக்குள் அவன் மீதான அபிப்பிராயமும் மாற ஆரம்பித்தது. தான் அப்படி நினைத்தவனா இவன்.. இல்லையே இவனுள் இருக்கும் துருவ் தான் நினைத்தவாறு இல்லையே என்று அவள் எண்ணங்கள் மாற, அவளுக்குள் சேகரித்து வைத்திருந்த அவன் மீதான உணர்வு ஒரு நாள் விசுவரூபம் எடுத்து இது காதல் என்று உணர்ந்து அவள் முழு மனதாக அவனை,


'துருவ்' என்று கத்தி அழைக்க, மரணமும் அவனை அழைத்தது. அவன் நின்ற நீர்ப்பகுதி செந்நீராக மாற, நக்ஷத்திரா அவனைக் காப்பாற்றும் வழி தெரியாது தவிக்க, துருவ்வை நோக்கி மரணம் முன்னேறியது.


 

Thishi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்யாயம் - 18




அந்த ஆங்கிலேய காலத்து பங்களாவில் துருவ் மிகவும் ஓய்வாக உணர்ந்தான். வேலைக்கு இனி கொஞ்ச நாள் செல்லவும் வேண்டாம். மனதிற்கு இனியவள் அவனுடன்..வேறு என்ன வேண்டும், ஏகாந்தமான இயற்கை சூழ்நிலை, அழகான மலைப் பிரேதேசம், சிலுசிலுவென்று அடிக்கும் சுத்தமானக் காற்று, ஓங்கி வளர்ந்து இருக்கும் பைன்(pine) மரங்கள், நாலாபக்கமும் காபித் தோட்டம் என்று எல்லாம் அவன் மனதிற்கு இதமாக இருந்தது.


நக்ஷத்திராவிற்கும் அன்று மனம் ஏனோ பழைய மலர்ச்சியில் இருந்தது. அவள் இங்கு வந்ததில் இருந்து மழை தான். ஏனோ இன்று தான் சூரியன், மேகச் சிறையில் இருந்து வெளியே வந்து அவளது நாளை பிரகாசமாக ஆகிவிட்டார் போன்று அவளுக்குத் தோன்றியது.


குளித்து முடித்து, தனக்காக அவன் வாங்கி வைத்து இருந்த உடைகளை பார்வை இட்டவள், முடிவில் ஒரு வெள்ளை நிற டாப்ஸ், சற்று முட்டிக்கு கீழ் வரை வரும் நீல நிற பாவாடை அணிந்து கொண்டு பங்களா வெளியே வந்தாள். எப்படி தனக்கு கனகச்சிதமாக உடைகள் வாங்கி வைத்து இருக்கிறான் என்று அவள் யோசிக்காத நாளில்லை. அதில் வேறு ஒரு ஐயமும் அவளுள் எழுந்தது, கேட்கத்தான் விருப்பம் இருக்கவில்லை.


வெளியே,அங்கும் இங்கும் பார்வை இட்டவளின் கண்ணில் பட்டது என்னவோ ஒரு பெரிய சப்போட்டா மரம். அதில் நல்ல பெரிய பெரிய சப்போட்டா பழங்கள் தொங்க, ஏனோ அவளால் அதனைப் பார்த்துவிட்டு சும்மா போக முடியவில்லை. அவளுக்கு சப்போட்டா பழங்கள் மிகவும் இஷ்டம்.


அதன் பக்கத்தில் தான் அவனும் அமர்ந்து இருந்தான். கையில்லாத சாம்பல் நிற பனியன், கருப்பு நிற ட்ராக்ஸ் என்று தன் இருக்கையில் அமர்ந்து தினசரி வாசித்துக் கொண்டு இருந்தவனை அங்கிருந்த பெண் தொழிலாளிகள் பார்த்து விட்டு குனிந்து வேலை செய்வதும், மீண்டும் அவனைப் பார்த்து விட்டு வேலை செய்வதுமாய் இருக்க, நக்ஷத்திராவிற்கு அதனைக் காண ஏனோ கோபம் வந்தது.


ஆனால் நொடிப்பொழுதில் அந்த கோபத்தை விழுங்கி விட்டு தன் இலக்கான சப்போட்டாப் பழங்களைப் பறிக்க அதன் அருகே வந்து கை நீட்டிப் பறிக்க முயன்றாள்.


அவள் உயரத்திற்கு அந்த பழங்கள் பல்பு கொடுக்க, இவள் குதித்து அதனைப் பறிக்க முயல, அவளது மேல் சட்டை சற்று விலகி அவளது வெளீர் இடை அவன் கண்ணுக்கு விருந்தாக அமைய, அவன் மனக் கட்டுப்பாடு அவனை விட்டு மெல்ல மெல்ல விலக ஆரம்பித்தது.


அவள் வரும் அரவம் கேட்ட போதே தினசரியை விலக்கியவன், அவள் குதித்துப் பழத்தைப் பறிக்கும் போது, கண்களை அவள் மீது இருந்து விலக்க முடியாமல் தவித்தான். ஆனால் அவளோ அங்கு இருந்த யாரையும் கண்டு கொள்ளவில்லை. அங்கு வேலை செய்துக் கொண்டு இருந்த சில ஆண்களும் அவளைக் காண, துருவ்விற்குச் சற்று கோபம் எட்டிப் பார்த்தது.


நேரே அவள் பின்னால் சென்றவன், அவளைத் தூக்கி,



"இப்ப பறிச்சிக்க" என்று கூற, அவள் திடீரென தன் உயரம் அதிகமானதால் முதலில் அதிர்ச்சி அடைந்து , பின்னர் அதற்குக் காரணம் துருவ் என்று அறிந்து ஆத்திரம் அடைந்தாள்.


"என்னை கீழ விடு! என்னடா பண்ணற பொறுக்கி, பிரம்ம ராட்சசா!" என்று அவன் வலுவான தோளில் தன் மலர் கரங்கள் கொண்டுக் குத்த ஆரம்பித்தாள். அவ்வப்போது இந்த பிரம்ம ராட்சசன் என்னவோ அவள் வாயில் இருந்து வரத்தான் செய்யும். மனநல மருத்துவம் அவளை மாற்றி இருந்தாலும், முற்றிலும் அவள் சில நேரங்களில் பழைய நக்ஷத்திரா தான்.


அவள் அடிகள், அவனைப் பொறுத்தவரை அடியின் கணக்கில் வராமல், நல்ல மசாஜின் கணக்கில் வர, அவன் அதைப் பொருட்படுத்தாமல்,


"சீக்கிரம் எடு! இல்லன்னா இப்படியே உன்னை தூக்கிக்கிட்டு இருக்க எனக்கு பிரோப்ளேம் இல்ல" என்று அவளை துருவ் வம்பிழுத்தான்.


"ஒரு மண்ணும் வேண்டாம். கீழே விடு என்னை இல்ல கழுத்தை நெறிச்சிடுவேன்" என்று அவள் கைகள் அவன் கழுத்தை நோக்கி பயணிக்க, துருவ் , நக்ஷத்திராவைத் தொப் என்று கீழே போட்டான்.


"ஆஆ.." என்று கத்தியவள்,


"அறிவு இருக்காடா உனக்கு? இப்படியா என்னை கீழே போடுவே? இடியட்" என்று திட்ட ஆரம்பிக்க, துருவ் நக்கலாக


"யூர் விஷ் வாஸ் மை கமாண்ட்! மை க்வீன்!" என்று ஆங்கிலேயே பாணியில் குனிந்தவன்,


"அதுக்காக நீ பண்ணற எல்லாத்தையும் பார்த்து கிட்டு சும்மா இருக்க முடியாது. ட்ரெஸை மாத்து" என்று கூறிவனின் குரலில் அவ்வளவு ஆதிக்கத் தன்மை இருந்தது.


"என் ட்ரெஸ், என் இஷ்டம் அதை கேட்க நீ யார்?" என்று எகிற ஆரம்பிக்க, அவனோ எப்போதும் தன் வில்லன் சிரிப்பை உதிர்த்து, தாடியைத் தடவிக் கொண்டு


"வெல்! நீ என்னோட க்வின் மட்டும் இல்ல, என்னோட பர்சனல் பிராபெர்டி. அதை ஒரு ஷோகேஸ் பொம்மையா மத்தவங்க பார்க்க நான் அனுமதிக்க மாட்டேன்.


நீ மாத்தலைன்னா என்ன, ஐ கேன் டு இட் ஃபார் யூ" என்று சுற்றும் முற்றும் என்று எதையும் கவனிக்காமல் அவளைக் கைகளை ஏந்திக் கொண்டு வீட்டை நோக்கிச் செல்ல, அவளோ


"விடு டா என்னை! " என்று விடாமல் கத்திக்கொண்டே அவனையும் அடித்தவள், அவன் கைகளில் இருந்து திமர ஆரம்பித்தாள்.


அவனோ அதை எப்போதும் போல் கண்டு கொள்ளவில்லை. அவளது அறையும் வந்து விட, அவன் சொன்னதைச் செய்தாலும் செய்து விடுவான் என்பதை உணர்ந்தவள்


"ப்ளீஸ் கீழ விடு, நானே மாத்தறேன்." என்று தன் இயல்பை மீறி கெஞ்ச, அவனும் போனால் போகட்டும் என்று விட்டான்.


"நீ தாரளாமா ஸ்கிர்ட் அண்ட் டாப்ஸ் போட்டுக்க! ஆனா அப்படி போடும் போது அதுக்கு ஏற்ற மாறி இரு.குரங்கு மாறி குதிக்காதே! காட் இட்! மை அன்பு கண்மணி, பியூடிப்புல் காதலி,செல்ல ராட்சசி!" என்று அவள் கன்னத்தைத் தட்டியவன், அவள் இன்னும் தன்னை முறைப்பதைக் கண்டு,


"என்ன, நான் சொன்னதை பண்ண போறியா? இல்ல நான்...." என்று கேலியாக ஒற்றை புருவம் உயர்த்தி கேட்க,


"ரூம் விட்டு வெளிய போய் தொலை! மாத்தி தொல்லைக்கறேன், பிரம்ம ராட்சசா!" என்று வாயிலை நோக்கி கரம் காட்ட, அவள் விரல் முனையில் முத்தமிட்டவன்


"ம்ம், ஷுயர்!" என்று அவளைப் பார்த்துக் கண்ணடித்து, உதட்டைக் குவித்துப் பறக்கும் முத்தத்தை பறக்க விட்டு அந்த அறையை விட்டு வெளியே செல்ல, இவளோ அவனைப் பார்த்து உதட்டை வலித்துக் காண்பிக்க, அவனுக்கு அவளை அப்போது சும்மா விட இஷ்டம் இருக்கவில்லை.


அவளை நெருங்க, அவளோ விலக எத்தனிக்க, தன் கைச்சிறையில் வாகாய் அவளைச் சிறைப்பிடித்தான். அவனது நெருக்கத்தில் அவன் வாசம் அவள் நெஞ்சில் நிறைந்து அவள் இதயம் வெளியே எப்போது வேண்டும் என்றாலும் எகிறி குதிக்கலாம் போல் ஆக,


"இது தப்பு துருவ்" என்று தனது அதிர்வை மறைத்து நேராக அவன் முகம் பார்த்து இவள் சொல்ல, அவனோ


"சில தப்புகள் சில சமயம் சரி, ஹனி பன்ச்" என்று முகம் நோக்கி முன்னேற, அவள் அறை தட்டப்பட, துருவ் தனது உணர்வு பிரவாக நிலையில் இருந்து வெளி வந்தான்.


ஷோபா வந்து விட்டார் என்ற செய்தி பகிறப்பட, துருவ் அவளை தற்சமயம் நீங்கினான்.


அன்று தான், ஒருவாறு துருவ்-நக்ஷத்திரா நிலைப் பற்றி ஷோபா புரிந்து கொண்டார்.


"சோ, யு தின்க் ஹி இஸ் அ மோரான்!!" என்று ஷோபா வினவ, நக்ஷத்திரா ஒரு நிமிடம் திகைத்தாலும்


"பொண்டாடின்னா, பிசிகள் ரிலேஷன் போர்ஸ் செய்யறது சரியா?" என்று குரல் உயர்த்தாது அழுத்தமாக வினவினாள். ஆம்! இப்போதெல்லாம் அவள் கத்திக் கூப்பாடு போடுவதில்லை, அதற்கு பதில் அமைதியாக விஷயங்களைக் கையாண்டுப் பார்க்கிறாள்.


அதற்காக தனது நோக்கத்தில் இருந்து தழைந்து போகவும் இல்லை. அழுத்தம், எதிராளி என் பேச்சை கேட்டுத்தான் ஆக வேண்டும் என்ற ஆளுமை அவள் உடல் மொழியில் கூடி இருந்தது. அதை மனதில் மெச்சிக் கொண்ட ஷோபா



"நான் ரைட்டுன்னு சொல்லவே இல்லை. உன் பார்வையில் அவன் எப்படி இருக்கான்னு தான் சொன்னேன். நாட் மை பெர்சனல் ஒப்பினியன்" என்று அவர் தெளிவாகக் கூற,நக்ஷத்திரா


"பட் அவர் கெட்டவரா இருந்தா, ஏன் என்னை இப்படி… எனக்கு ஏன் இதெல்லாம் செய்யணும், இதென்ன ப்ராயசித்தமா?" என்று தன் குழப்பதைக் கூற, ஷோபா



"அது நீயும் அவனும் சம்பந்தப்பட்ட விஷயம். அவன் தள்ளி இல்ல, நீயே கேக்கலாம்" என்று கூறிவிட்டு அவளது குழப்பத்தை முகத்தில் கண்டவர்,



"யு நோ! அவன் செய்ஞ்சது தப்பு தான். பட் நீ பேசினது சரியா?" என்ற கேள்வியை அவள் முன் வைத்தார். அதில் அவள் முகம் கன்றித் தான் போனது.



"தகாத வார்த்தைகள் கூட குற்றம் தான் நக்ஷத்திரா" என்று அவளது சிந்தனையைத் தூண்டி விட்டு விடைப் பெற்றுக் கொண்டார்.



அன்று முழுவதும் அவள் சுய அலசலில் ஈடுபட்டாள். அவனைப் பற்றி அவள் என்ன கேள்விப்பட்டாள், அவன் எவ்வாறு தன்னிடம் இப்போது நடந்து கொள்கிறான். ஒரு மூன்றாம் ஆளாக அவள் தங்கள் கடந்த காலத்தைப் பிரட்டினாள்.



அவனும் அவளும் சந்தித்த தருணங்கள், அவள் முதன் முதலில் அவனைப் பார்த்து கண்ணாடியில் உதிர்த்த வார்த்தை!


ஒருவேளை அதை அவன் உணர்ந்தானா? வாய்ப்புகள் அதிகம்! பின்னணி குரல் கொடுக்க, திரைப்படங்களில் வாய் அசைப்பு மட்ட திரைப்பட கலைஞர்கள் காண்பார்கள். அப்போது அந்த வாயசைப்பிற்கு ஏற்ற வசனம் பேச வேண்டும்.



கிட்டத்தட்ட 15 படங்களுக்கு மேல் நடித்தவனுக்கு இது சுலபமான வேலை! தள்ளி இருந்ததால், அவள் குரல் கேட்டிருக்கா விட்டால், அவளது வாயசைப்பு அவனுக்கு தெரியாதா போயிருக்கும்?


முதலில் வம்பை ஆரம்பித்தவள் அவள், ஆயினும் அவன் அவளுக்காக அன்று , அதாவது பார்ட்டி கழிந்த நள்ளிரவு அவளைத் தேடி வந்தான்! அவனுக்கு என்ன அவசியம்!


எக்கேடோ கெட்டு போகட்டும் என்று விடவில்லை. ஏன் இந்த அக்கறை அன்றில் இருந்து அவனுக்கு? அப்போதே அவளைப் பிடிக்குமா அவனுக்கு?


பழைய நிகழ்வுகள் ஒன்றன் பின் வலம் வர, தனது தவறுகள் அவளுக்கு விளங்க ஆரம்பித்தன. அதே நேரம் அவனும் 100% நல்லவன் இல்லை என்று அவள் மூளை போதித்தது.


'அப்போ நீ 100% உத்தமியா நக்ஷத்திரா?' என்று மனம் கேட்க, தலையில் கை வைத்து கொண்டு உட்கார்ந்து விட்டாள்.


"காபி! ப்ரெஷ்லீ க்ரவுன்டட்" என்று அவள் முன் ஒரு கோப்பை நீட்டப்பட, நக்ஷத்திரா குரலுக்கு உரியவன் துருவ் என்று உணர்ந்து


"தேங்க்ஸ்!" என்று வாங்கிக் கொண்டு


"நீ ஏன் எனக்கு இதெல்லாம் செய்யறே?” என்று கேட்க, அவன் அவள் எதை கேட்கிறாள் என்று புரிந்துக் கொண்டாலும், தெரியாது போல,


"இன்னிக்கி கிச்சனில் பாக்யம் மா மட்டுமே ! வீகென்ட் வர வேணாம்னு சொன்னாலும் வந்திருக்காங்க ! சோ அவங்களுக்கு நான் ஹெல்ப் பண்ணறேன் ! ஜஸ்ட் செர்விங் !" என்று நீண்ட விளக்கம், உலக தொலைக்காட்சியில் முதன் முறையாக கொடுக்க, அவளோ


"ஐயோ ! நான் என்ன கேக்கறேன் ! நீ என்ன சொல்லறே ?" என்று எரிச்சல் அடைய, துருவ் அலட்டாது தோளைக் குலுக்கிக் கொண்டான். அமைதியாக இருவரும் வெளியே தெரியும் பச்சை பசேல் காபி தோட்டத்தைப் பார்த்துக் கொண்டு காபியை அருந்த, தன்னுடைய சந்தேகங்களை அவள் கேட்க ஆரம்பித்தாள்.


"இந்த எஸ்டேட்டுக்கு எப்போதுமே சந்தியா எஸ்டேட்ஸ் தான் பேரா ?" என்று கேட்க, அவன்


"இல்ல, என்னோட அம்மா இறந்து போன பின் மாத்தினோம் !" என்று சுருக்கமாகப் பதில் கொடுக்க, அவள்


"அதுக்கு முன்னாடி ?" என்று குறுக்கு விசாரணையைத் தொடர, துருவ் இவளுக்கு எல்லா உண்மைகளை இப்பொது சொல்லக் கூடிய தருணம் இல்லை என்று உணர்ந்து கொண்டவன் அவளைக் கடுப்படிக்க,


"நட் போல்ட் கழண்ட நக்ஷத்திரா எஸ்டேட்டஸ்" என்று கூற, நக்ஷத்திரா உண்மையில் காண்டானாள்.


"ஒழுங்கா பேசு, ஒழுங்கா மரியாதையா கேளுன்னு சொல்லுவே ! ஆனால் கேட்டா மட்டும் பதில் வராது ! நீ சரியான ஹிப்போக்ரேட் " என்று அழுத்தமாகச் சாட, துருவ்


"எவ்வளவு சீக்கிரம் கண்டுபிடிச்சிட்டே? " என்று இகழ்ந்தான். அது மட்டுமா அவளுக்கு பாக்யம் கொடுத்த தட்டில் இருந்த வெங்காய பக்கோடாவைப் பிடுங்கிச் சாப்பிட்டான்.


"என்னோடது அது! எடுக்காதே ! நீ போய் கிச்சன்இல் இருந்து வேற எடுத்துக்க! குரங்கே " என்று அவள் சொன்னதெல்லாம் அவன் கேட்டால் தானே !


"முன்ன சுண்டைக்காய் மாறி கசப்பா, தம்மாத்துண்டு இருந்தே ! இப்போ கொஞ்சம் பெங்களூர் தக்காளி மாறி ஆகிக்கிட்டு வரே ! இப்படியே சாப்பிட்டா, நீ இங்கிருந்து போகும் பொது, டிஸ்கொ பம்கின் தான்..ம்ஹூம் ஏர் பலூன் தான் , ஹனி பன்ச்!" என்று அவளது தற்போதைய சற்று பூசிய உடல் வாக்கை குறிப்பிட்டுக் கேலிச் செய்ய, அவள் ரோஷக்காரி ஆனாள்.


"ஹவ் டேர் யு !" என்று அவனைப் பிடித்து நாலு மொத்து மொத்த வர, அவனோ அவளது பிடியில் சிக்காது ஓட ஆரம்பித்தான். அவளும் சிறு பிள்ளை போல் அவனைப் பின்பற்றி ஓட, இருவரையும் பார்த்த பாக்கியத்தின் கண்ணில் அந்த கால ஞாபகங்களின் சுவடுகள் !
 

Thishi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அவன் அளவு அவளால் வேகமாக ஓட முடியவில்லை. ஒன்று தேறிக்கொண்டு வரும் உடல் நிலை, மற்றொன்று அவள் கால்களின் நீளம் ! குட்டை பெண் அவள், ஆகையால் கால்களும் குட்டை தான் ! அவன் கூறும் சுண்டைக்காய் தான் அவள்!


அவளது திணறலைப் பார்த்தவன் வேண்டும்மென்றெ ஓரிடத்தில் நிற்க, அவனை பிடித்துக் கொண்டாள். அவன் ஒரு சிறு சரிவு பக்கத்தில் நின்றுக் கொண்டிருக்க, அவள் அவனைப் பிடித்ததில் சற்று நிலை தடுமாறி, சரிய அவனுடன் அவளும் சரிந்தாள். அழகான வெல்வெட் போன்ற புல்வெளியில், அவனது மார்பில் அவள் அடக்கமாக வீற்று இருக்க, அதிகம் வெயில் அல்லாது, குளிரும் அல்லாது மென்மையான தென்றல் தீண்டும் பொழுதில் வண்ணத்துப் பூச்சிகள் அங்கும் இங்கும் பூக்கள் நடுவே பறந்து ஓட, அந்த ரம்மியமான பொழுதின் நொடிகளை இருவரும் ஆழ்ந்து உள்வாங்கி அனுபவித்தனர்.

துருவ் அருகே நக்ஷத்திரா! எவ்வித சண்டையும் சச்சரவும் அன்றி !



பட்சிகளும், பூக்களும், வானமும், பட்டாம் பூச்சிகளும் மட்டுமே அந்த நொடிகளின் சாட்சி ! கடந்து வந்த பாதைத் தருணங்கள் எதுவும் அவர்களைத் தீண்டவில்லை! இனி இம்மாதிரி இருவரும் இப்படி அமைதியாக இருப்பார்களா என்று அறியார்கள் ! ஆகையால் தான் என்னவோ கடவுள் அந்நொடிகளை அவர்களுக்கே அவர்களுக்காக மாற்றி அமைத்தாரோ என்னவோ !



இருவரும் தங்கள் முன் விரிந்து பறந்து இருக்கும் வானத்தைப் பார்த்துக் கொண்டிருக்க, நக்ஷத்திராவால் அதிக நேரம் அந்த அமைதியை நீட்ட முடியாது,


"நீ என்னை லவ் பண்ணறியா ?" என்று முன்பு கேட்ட அதே கேள்வியைக் கேட்டாள்.


பதில் அவளுக்குத் தெரியும் ! இருந்தாலும் அவன் வாயால் கேட்க விரும்பினாள் . அவனா உண்மையை சொல்ல போகிறான்? அவளுக்கு அவன் காதல் தெரிந்தாலும் தானாக அதை அவன் என்றுமே கூறப் போவதில்லை என்ற உறுதியை எப்போதோ எடுத்து விட்டான்.


திரும்பி அவள் முகத்தைப் பார்த்தவன்,


"ஐ லவ் யூர் .." என்று இழுக்க, அவன் விவகாரமாகத் தான் சொல்லப் போகிறான் என்று உணர்ந்தவள், அவனது வாயைத் தன் கரம் கொண்டு பொற்றினாள் !


"வேணாம் ! நீ ஒன்னும் சொல்ல வேண்டாம் ! " என்று அவனது பேச்சை அடக்க, அவன் குறும்பு குறையாது, அவளது உள்ளங்கையை முத்தமிட, அவள் பட்டென்று தனது கரத்தை எடுத்தாள். இருவரும் எழுந்து உட்கார்ந்துக் கொள்ள, அவள் எதிர்பாராத முத்தத்தில், கையைத் துடைத்துக் கொண்டே


"சீ ! என்ன இது ! ஐ டோன்ட் லைக் இட்" என்று சீற, அவனோ


"அப்போ நான் !...." என்று அவளது மாதுளை இதழ்களைப் பார்த்து கொண்டே கூற ஆரம்பிக்க, அவள் முகம் வானத்தில் மறையும் சூரியனின் சிவப்பைத் தத்தெடுக்க ஆரம்பிக்க, அவள் அவனது பார்வையைத் தாங்க முடியாது தலையைத் தாழ்த்திக் கொண்டாள். தான் செய்வது சரியல்ல என்று உணர்ந்தவன்


"வெக்கமா நக்ஷத்திரா ! இந்த ரே****** பார்த்து அதெல்லாம் உனக்கு வருமா ? " என்று குதர்க்கமாக அவளைச் சீண்ட ஆரம்பித்தான். அதுவரை நிலவிக் கொண்டிருந்த அவளது பெரும்பான்மையான சாந்த நிலையை அதை சற்று குழப்பியது ! அவனுக்கு அவளைப் பிடிக்கும் என்று அறிவாள் ! பின்னர் ஏன் அவளைச் சீண்டிப் பார்க்கிறான் வேண்டும் என்றே என்ற கோபம் வர,


"ஐ ஹேட் யு துருவ் !" என்று சீறிவிட்டு அவள் முகத்தைத் திருப்பிக் கொள்ள, அவன் அதில் திருப்தி அடைந்தவன்


"327!" என்று சொல்ல, அந்த எண்ணை அவன் ஏன் சொன்னான் என்று தெரியாது விழித்தாள் !


"அப்படினா ? " என்று கேட்க, அவன் எழுந்து கொண்டு அவளுக்கும் கைக்கொடுத்து


"அப்படினா நீ என்கிட்ட 327 முறை ஐ ஹேட் யு னு சொல்லிருக்கேனு அர்த்தம்" என்று விளக்கம் கொடுக்க, அதில் அவள் இன்னும் கடுப்பானாள்.



ஆனால் அதை அவனைப் போல் காண்பிக்காது இருக்கப் படித்தவள், அவன் கையைப் பற்றிக் கொண்டே எழுந்து,


"நான் அப்போ ஐ லவ் யுனு சொன்னா கவுண்ட் எடுப்பியா ?" என்று சாமர்த்தியமாக மடக்க, துருவ் அந்த நொடி சற்று திணறித் தான் போனான் ! அது அவன் முகத்திலும் பளிச்சிட, அவள் புன்னகைப் பூத்து,


"நான் எல்லா நேரமும் மெச்சூரிட்டி இல்லாதவ கிடையாது ! அதுவும் இப்போ இனி கிடையவே கிடையாது ! பயப்படாதே! நான் சொல்ல மாட்டேன் " என்றும் அவனை வார்த்தை விளையாட்டில் வீழ்த்திய வெற்றியில் அவள் வீட்டை நோக்கிச் செல்ல, அவனோ அவளை வெறுமையாகப் பார்த்தான்.


********

ஒருநாள் விட்டு ஒருநாள் அவளுக்கு நீச்சல் பயிற்சி இருக்கும். அன்று நீச்சல் பயிற்சி தினம். பயிற்சியாளர் அவனே, அன்றும் இன்றும். முதல் நாள் நீச்சல் உடை அணிய மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்து, பின்னர் தன்னுடைய உடை எதுவும் சரியாக நீச்சல் அடிக்க வாகாய் இல்லாது போக, அவள் தழைந்து, அவன் வாங்கி வைத்திருந்த நீச்சல் உடையைப் பார்த்தாள்.



உடலை வெளிச்சம் போட்டு காட்டாது நாகரீகமாக அமைக்கப்பட்டு இருந்தது. அதை கையில் எடுத்து அவள் பார்க்க, அவன் பின்னால் இருந்து


"எனக்கு உன்னை தெரியும். சோ அது மாறி தான் வாங்கி இருக்கேன். நீ இஷ்டப்படி ட்ரெஸ் போட்டுக்க தடை இல்ல, பட் அளவுக்கு அதிகமா தோணிச்சுன்னா நானே உன்னை திட்டுவேன்" என்று சொல்ல, அவள் முகத்தில் ஓர் தெளிவு பிறக்க



"அன்னிக்கி அந்த டான்ஸ் ரிகெர்சல் போது, என் ட்ரெஸ் கிழிஞ்சு, ம்ம்..நீ என் ட்ரெசை கிழிச்சு...எனக்கு ஸ்பேர் ட்ரெஸ் நீ தான் வாங்கி தந்தியா?" என்று கேட்டே விட்டாள்.



திகைப்பு இருந்தாலும் முகத்தில் பிரதிபலிக்காது,


"வாவ்! இப்போ தான் இந்த புள்ள வளருது" என்று நக்கல் அடித்து விட்டுச் செல்ல எத்தனிக்க, அவள் தீர்க்கமாக


"பதில் சொல்லு! உன் வேலை தானே?" என்று விடாது நச்சரிக்க, அவன் ஒரு நீண்ட பெருமூச்செறிந்து


"நான் செஞ்ச தப்பை சரி பண்ணினேன். அவ்வளவு தான்" என்று தெளிவாகக் கூற, அவள் நேரிடையாக


"அப்போ நீ எனக்கு பண்ணினது?" என்று கேட்க, அவன் முகம் செத்து போனது. அதற்கு விடை அவனிடம் உண்டு, ஆனால் இப்போது விடை தேடும் நேரமில்லை.



" இப்போ ஸ்விம் பண்ண வா" என்று சொல்லிவிட்டு நீச்சல் குளத்திற்குச் சென்று விட்டான். அவன் முகம் மாறியதை அவள் கண்டுகொண்டாள். அவன் அதற்குப் பதில் அளிக்காவிடினும் அவன் மனதில் ஏதோ இருக்கிறது என்று புரிந்துக் கொண்டாள். இவ்வளவு நாள் அவனுடன் இருப்பதில் அவன் போக்கு ஒருவாறு அவள் கிரகித்து இருந்தாள். ஒரு நாள் அவன் என்ன நினைக்கிறான் என்று தெரியும் என்று நம்பினாள்.


இதே பழைய நக்ஷத்திராவாக இருந்தால், தாம் தூம் என்று குதித்து இருந்திருப்பாள், ஆனால் அவளுள் இருக்கும் முதிர்ச்சி கொஞ்சம் கொஞ்சமாக வெளியில் வர ஆரம்பித்த தருணம் அது, ஆகையால் அவனைப் பின்பற்றி நீச்சல் குளம் சென்றாள்.





நல்ல ஆசானாக அவளுக்கு நீச்சல் படிப்பித்தான். அதில் அவளுக்கு நீச்சல் மட்டுமா வந்தது, அவன் மீதான சில ஐயப்பாடுகள் வலுப்பெற்றன. ஆனால் வரை அறுத்து ஒன்றும் அவளால் கூற முடியவில்லை. ஏற்கனவே அந்த பங்களா, சந்தியாவின் புகைப்படம் கொடுக்கும் குழப்பமான நினைவுகள், பாக்யத்தின் தன்னலமில்லா அன்பு, எங்கோ பரிச்சியமானது போல் தோன்றும் அவர் முகம், ஷிம்லா நிகழ்வு என்று எதை யோசித்தாலும் அவளுக்கு ஒரு முடிவான பதில் தெரியாது தலைவலி தான் மிச்சம்.



அவனிடம் ஏனோ நேரிடையாகக் கேட்க மனமும் இல்லை. யோசித்து கொண்டே நீச்சல் அடித்து விட்டு மல்லாந்து நீரில் படுத்து கொண்டிருக்க, துருவ் 2-3 முறை அவளைக் கூப்பிட்டும் அவள் சிந்தனைக் கலையாது நிற்க, துருவ் அவளை நிமிர்த்தினான்.


"நக்ஷத்திரா இன் வண்டர் லேண்ட்! ரெஸ்ட் எல்லாம் போதும். கமான், ஃப்ராக் ஸ்டைல் ஸ்விம்மிங் இப்போ! " என்று தவளை நீந்தும் முறை போல் நீந்தி காண்பிக்க, அவளுக்கு அது புரிந்தாலும் ஏனோ சரியாக வரவில்லை. காலில் நரம்பு பிடித்துக் கொண்டது போல் இருக்க, வலியில் கத்தி விட்டாள்.


"என்ன ஆச்சு?" என்று அவன் பதட்டம் அடைய, அவள் முகம் சுணங்கி



"நரம்பு பிசகின மாறி..இட்ஸ் பேட்" என்று நீரில் நிற்க கூட முடியாது தவிக்க, அவளது வலியைக் காணச் சகிக்காது அவளைத் தூக்கிக் கொண்டு நீரில் இருந்து வெளியே கொண்டு வந்து சாய்வு நாற்காலியில் கிடத்தி,


"எங்க வலிக்குது?" என்று அவள் கால்பகுதியைத் தொட்டு ஆராய்ச்சி செய்ய, அவளுக்கோ கூச்சம் வந்து தொலைத்தது.



"இட்ஸ் ஓகே..நான் பார்த்துக்கறேன்" என்று அவள் மறுத்தும் அவன் விடவில்லை.



"நக்ஷத்திரா ! அஸ் யூர் ட்ரையினர் நான் ஏதாச்சும் ரெமெடி சொல்லனும்னா நான் பார்த்தா தான் சொல்ல முடியும். அண்ட் நான் உன்னோட…." என்று சொல்ல வந்தவன் ஏனோ அவளது நிறைவான முகம் பார்த்தவன் சொல்லாது,


"லெட் மி ஸீ !" என்று அவளுக்கு நரம்பு பிடித்தப் பகுதியை ஆராயப் போனான். அவனது எண்ணங்களை மட்டுமே அவனது கரங்கள் செயலாற்ற, அவனையே பார்த்துக் கொண்டிருந்தவள், முகத்தில் ஒரு வித அமைதி மட்டுமே.


அவளை மீண்டும் தூக்கிக் கொண்டு வீட்டுக்குள் செல்ல, அவனது கைகளில் தவழ்ந்தபடி நக்ஷத்திரா,


"துருவ் ! அப்போ என் காலை செக் பண்ண முன்னே என்ன சொல்ல வந்தே ?" என்று அவனிடம் போட்டு வாங்க முயற்சிக்க, அவன் அவளது குரலில் உள்ள வேறுபாட்டினை உணர்ந்தவன் சற்று அதிர்ந்து போனான். அதில் கேலி மட்டுமா இருந்தது, உரிமை உள்ளோர் மீது காட்டும் பாசமான கேலி கலந்த குறும்பும் இருந்தது. முன்னர் துருவ் கெட்டவன் என்ற நோக்கில் அவள் குரல் தொனிக்கும், இன்று அவளுக்கு மிகவும் வேண்டபட்ட பிரியமானவன் என்ற தொனியில் ஒலிக்கிறதோ என்று திகைத்தான்.


இது இப்படி ஆகக்கூடாது என்று தானே அவன் விழைகிறான், இதுவோ வேறு விதமாக செல்லப் போவது போல் தோன்ற, முதலில் அவளை இறக்கியவன்,



"கொஞ்சம் நடக்க ட்ரை பண்ணு" என்று அவளை வரவேற்பறையில் விட்டு செல்லப் போக அவளோ, அவனை முறைத்துத் தள்ளினாள்.


"பாக்யம் மா கிட்ட மருந்து தடவி விட சொல்லறேன்" என்று அவளுக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்பது போல் செல்ல ஆரம்பித்தான்.


செல்லும் அவனைப் பார்த்தவளுக்கு குழப்பங்கள் அதிகரித்தன. ஏனோ இயலாமையில் கோபம் வர,


"ஐ ஹேட் யு துருவ்!" என்று அவன் காது கேட்க கத்தினாள். அவனும் திரும்பிப் பார்த்து



"330" என்று புன்னகை முகமாக சென்று விட்டான்.


அவள் ஏன் இவன் இப்படி என்று தவிக்க, அவனோ தன்னுள் இருக்கும் கணவன் துருவ்விற்கும், சிக்கு மீது துரும்பு விழுந்தால் கூட தாங்காத சாம்மிற்கும் இடையே தத்தளித்துக் கொண்டிருந்தான். ஒருவேளை அப்போதே அவன் யார் என்று தெரிந்து இருந்தால்?


************


"இப்போ எங்க போக போறோம்" என்று ஜீப்பில் அமர்ந்து கொண்டு கேட்டுக் கொண்டிருந்த நக்ஷத்திராவின் பேச்சை அவன் காது கொடுத்து கேட்கவேயில்லை. அவள் மீண்டும் மீண்டும் கேட்க

"ஷுஷ், வாயை மூடிக்கிட்டு வா, என்கூட..எல்லாம் உனக்கு பிடிச்ச இடத்துக்கு தான்" என்று அதட்ட, அதற்கு மேல் அவள் பேச வில்லை.

ஏற்கனவே கிட்டத்தட்ட கடத்தல் மாதிரி தான், இங்க அழைத்துக் கொண்டு வந்து இருக்கிறான். அதற்கு மேல் பெரிதாக என்ன நடக்கக் கூடும் என்று விட்டுவிட்டாள்.


காட்டுப்பகுதி வந்தவுடன், ஜீப் சற்று மெல்லமாகச் செல்ல ஆரம்பித்தது. கரடு முரடான பாதையில் அவன் என்னத்தான் லாவகமாக செலுத்தினாலும், அவள் தன் இருக்கையிலிருந்து சில சமயம் மேலும் கீழும் குதித்தாள். ஒருமுறை அதனால் ஜீப்பின் மேல் பகுதியில் இடித்துக் கொண்டாள். தலையை தேய்த்தபடி, அவள் எரிச்சலுடன் அவனை பார்க்க, அவன் ஓட்டுவதில் மிகவும் கவனமாக இருந்தான். அந்த ஜீப் பயணம் ஒருவழியாக முடிவுக்கு வர, ஜீப்பை நிறுத்திவிட்டு விசிலடித்தவன்,


"வா, இறங்கு. இங்க தான் உன்னை கூட்டிட்டு வரணும்னு ஆசைப்பட்டேன், என் செல்ல ராட்சசி" என்று கூறியபடி, அவள் இறங்குவதற்கு ஏதுவாக ஜீப்பின் கதவை திறந்து விட்டான்.



அவனை முறைத்தபடி இறங்கியவள், தன் கண் முன்னால் விரிந்த இயற்கை அன்னை பரிசாக அளித்த காட்சியில் மெய் சிலிர்த்தாள்.


காட்டின் நடுவே ஒரு ஓடை, சலசல வென்று பாயும் சுத்தமான காட்டு நீர். எந்த வித கட்டுப்பாடு இன்றி ஓங்கி வளர்ந்து இருக்கும் மரங்கள், ஓயாமல் கேட்கும் வண்டின் ரீங்காரம், ஆங்காங்கே மலர்ந்து இருக்கும் அவள் இதுவரை கண்டு இராத பூக்கள், அதன் மேல் மொய்த்து கொண்டு இருக்கும் பெரிய பெரிய பட்டாம்பூச்சிகள், சற்றே பெரிய வித்தியாசமான நிறங்களில் தட்டாம்பூச்சிகள் என்று இயற்கை அன்னை வாரி வாரி வழங்கி இருந்த அழகினை அவள் கண்களும், மனதும் படம்பிடித்து கொண்டன.


உதடுகளில் பல நாட்கள் கழித்து தானாகத் தோன்றிய மனம் விட்ட புன்னகை, கண்களில் ஒரு வித பூரிப்பு என்று அவள் அந்த ஓடை மேல் கட்டப்பட்டு இருந்த ஒரு மரமேடை மீது நின்றாள். சற்று குளிர்ந்த காற்று வீச, கைகளைக் கட்டிக்கொண்டு, ஓடையில் நீந்திக் கொண்டு இருந்த மீன் குஞ்சுகளை ரசித்துப் பார்க்க, அவன் அவள் பின்னால் பூனை போல் நடந்து வந்து,


"பே.." என்று கத்த அவள்

"ஆ.." என்று கூக்குரல் இட்டபடி கைகளை நீச்சல் அடிப்பது போல் முன்னும் பின்னும் ஆட்டி ஓடையில் விழ போக, அதற்குள் லாவகமாக அவள் இடையில் தன் வலிய கரம் கொடுத்து அவளைப் பிடித்து நிறுத்தி, நிமிர்த்தினான். திரும்பியவள், மிகவும் அபாயகரமான நெருக்கத்தில் அவன் இருப்பதை உணர்ந்து சற்று பின்னே நகர்ந்து, மீண்டும் ஓடையில் விழப்போக, மீண்டும் அவன் அவள் இடைப் பிடித்து தாங்கி,


"நான் தானே! இப்போ எதுக்கு, ஃபிலிம் ஒட்டற? " என்று அவளைக் கடிந்தான்.


அவளும் சளைக்காமல்,


"நீ!! அதுனால தான் நான் இப்படி நடக்க வேண்டி இருக்கு. நல்ல பியூடிப்புல் பிளேஸ். அதோட அழகை ரசிச்சுக்கிட்டு இருந்தேன். டோட்டல் மூட் அவுட் உன்னால" என்று வேண்டுமென்றே அவனைப் பற்றி ஒன்றை அறிந்து கொள்ள வேண்டும் என்று கத்த, தனது தாடியைத் தடவியபடி அவளைக் கூர்ந்துப் பார்த்தவன்,


"வா, உன் மூடை சரி பண்ணறேன்" என்று கூறியபடி, சட்டென்று அவளை இழுத்துக் கொண்டு அவள் கத்தி, திமிறி, விலகும் முன் ஓடையில் அவளுடன் விழுந்தான். அவர்கள் இருவரும் விழுந்தது ஓடையின் ஆழமான பகுதியில், ஆகையால் தண்ணீர்க்குள் மூழ்கி அவள் வெளியே வர, அவள் உடுத்தி இருந்த அடர் நீல நிற குர்தாவும், இளம் பழுப்பு நிற லெக்கிங்க்ஸும் முழுதும் நனைந்து விட்டது. அவன் முன்னமே ஓடையில் நீந்துவதற்கு ஏதுவாக அடர் பழுப்பு நிற முழு நீச்சல் உடையில் இருந்தான்.


வலுவான கரங்களை முன்னே செலுத்தி அவன் ஒரு சுற்று நீந்தி விட்டு அவளிடன் வந்து,


"இந்த சில் தண்ணில உன் கோவம் குறைஞ்சுதா?" என்று முகத்தில் சொட்டிக் கொண்டு இருந்த ஈரத்தை வடித்தபடி கேட்க, அவள் கோபம் அதிகமாகி, தன் மென் கரங்களைக் கொண்டு அவனை தள்ளி விடப் பார்க்க, இயல்பிலேயே மெல்லிய உடல் அமைப்பை கொண்டவள்,

தினப்படி உடற்பயிற்சி மற்றும் ஜிம்மின் உபயத்தால், கிரேக்க கடவுள் போன்று பரந்த தோள்களும், முறுக்கேறிய உடல் அமைப்பையும் கொண்ட அவனை அவளால், ஒரு சென்டிமீட்டர் கூட தள்ள முடியவில்லை. தனது உடை ஈரமானதில் மேலும் வெறுப்படைய, தண்ணீரைக் கோபத்தில் அடித்து,



"சீ, போடா பிரம்ம ராட்சசா" என்று தனது வெறுப்பை வார்த்தைகளால் உமிழ்ந்தாள். அதையெல்லாம் அவன் கண்டுகொள்ளவே இல்லை. அவளை மேலும் நெருங்கியவன், அவள் நாடியை வலுக்கட்டாயமாக பிடித்து தன்னைப் பார்க்க வைத்தவன்,


"நீ தானே ரெண்டு நாள் முன்னாடி என்னை ஜெயில்ல அடைச்சு போட்ட மாறி இருக்கு, என்னை கடத்தி கிட்டு வந்திட்டே ன்னு புலம்பின. சரி வெளில கூட்டிகிட்டு வந்தா, என்ன சொன்ன பிரம்ம ராட்சசன்னா. எந்த காலத்து தமிழ் அது. இந்த பொண்ணுங்களே இப்படி தான். வெளியே கூட்டிகிட்டு போகலன்னா திட்டுவீங்க, கூட்டிட்டு போனாலும் திட்டு. ஷப்பா, ஒருத்தியை ஹாண்டில் பண்ண எனக்கு இந்த பாடு, அவன் அவன் எப்டி தான் ரெண்டு மூணுன்னு மேனேஜ் பண்ணறானோ" என்றுப் பேச, அவன் கைகளை தட்டிவிட்டு,


"இப்போ நான் கம்ப்ளீட்டா நனைஞ்சாச்சு. என்னை தண்ணீர்ல தள்ளி விட முன்னாடி அதை யோசிச்சியா?" என்று மீண்டும் பொரிய, அவனோ நகைத்த படி,


"நீ ரீசெண்ட்டா ஆர்டர் பண்ணின ஒரு ஸ்விம் சூட், வேற ஓரு ட்ரெஸ் எல்லாம் எடுத்து வச்சு இருக்கேன். போய் போட்டுக்கிட்டு வா. என்ஞ்சாய் தி வாட்டர். அப்பறம் லன்ச் இங்கேயே சாப்பிடலாம். இட்ஸ் அ ஜங்கள் பிக்னிக்" என்று அவளை உடை மாற்ற அனுப்பினான்.

மெல்ல மேலே ஏறி சென்றவள், அவனைத் திரும்பிப் பார்க்க, அவள் என்ன கேட்க வருகிறாள் என்று அவன் புரிந்துக்கொண்டு,


"அங்க ட்ரீ ஹவுஸ் இருக்கு. போய் சேஞ் பண்ணிக்க. அண்ட் ரெண்டு நாள் முன்னாடி ஒரு சிறுத்தை இங்க வருதுன்னு சொன்னாங்க" என்று அவளுக்குத் தகவல் அளிக்க, அவள்


"ஹான்" என்று சற்றே பீதி அடைந்தாள்.

அவள் பதட்டத்தை ரசித்த அவன்,


"டோன்ட் வர்றி, உன்னை பார்த்தா அது ஒன்னு பயத்தில் ஓடி போயிடும் இல்ல உன் அழகுல மயங்கி விழுந்துடும்" என்று கேலி செய்ய, அவனை முறைத்துவிட்டு, மர வீடு நோக்கி சென்றாள்.


********

நீச்சல் உடையை அணிந்துக் கொண்டு வந்தவள், ஓடை வந்தவுடன், ஏனோ மிகவும் கூச்சமாக உணர்ந்தாள். அவன் முன்னால் நீச்சல் உடையில் செல்ல விருப்பப்படவில்லை. 80'ஸ் பட ஹிந்தி கதா நாயகிகள் ஒரு சிலர் அணிந்த மோனோகினி நீச்சல் உடையைத் தான் அணிந்திருந்தாள்.



கட்டிய கணவன் ஆனாலும் அவளுக்கு பயங்கர தயக்கம். அவள் வருவதை உணர்ந்த அவன், அவளை கண்டு ஒரு நிமிடம் அவள் அழகில் தன்னைத் தொலைத்து,


"ராட்சசி!கொல்லறா! டேய் துருவ் வேணாம் இவ பக்கம் போகாதே" என்று தனக்கு தானே வலியுறுத்திக் கொண்டு, தள்ளி இருந்த பாறைகள் பக்கமாய் இருக்கும் ஓடைப் பகுதிக்குச் சென்று நீச்சலடிக்கத் துவங்கினான். அவன் தள்ளிச் சென்றதால், சற்று நிம்மதியாக உணர்ந்தவள், இயல்பை மீட்டுக் கொண்டு, முன்னே அவன் இருந்த பகுதிக்குச் சென்று நீச்சலை ஆரம்பித்தாள்.


இருவரும் செய்த நீச்சலினால் எழும்பிய நீரின் ஓசை தவிர வேறெதுவும் சில நேரத்திற்கு கேட்கவில்லை. திடீரென


"அய்யோ அம்மா" என்ற அவளது கூக்குரல் கேட்க, அவன் சற்று பதறி, ஒருவேளை சிறுத்தை தான் வந்து விட்டதோ என்று எண்ணி வேகமாக அவள் இருக்கும் பகுதிக்கு நீச்சல் செய்து வந்தான். ஆனால் அங்கு கண்ட காட்சியில், அவனுக்குச் சிரிப்பு பீறிட்டு கொண்டு வந்தது.


சற்று பெரிய அளவில் ஆன மீன்கள் அவளைச் சுற்றி, மெல்ல அவளைக் கடித்து கொண்டு இருக்க, அவளோ,


"ஹேய், ஷூ..போ..வந்தே மீன் குழம்பு வச்சிடுவேன்" என்று அவைகளைத் தள்ளிவிட்டுக் கொண்டும், தண்ணீரில் பரதநாட்டியம் ஆடிக் கொண்டும், மிரட்டிக் கொண்டு இருந்தாள். அவள் புறம் வந்தவனை கண்டு, என்ன தோன்றியதோ அவள், அவனை நெருங்கி,


"பாரு எல்லாம் உன்னால, என்னை இதுக கடிச்சி பிடுங்குதுங்க. " என்று குற்றம் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே, ஒரு தண்ணீர் பாம்பு அவள் அருகே நீந்தி வர, பயத்தில் அவனை இறுக்கக் கட்டிக்கொண்டாள். பயத்தாலும், குளிராலும் அவள் உடல் நடுங்க, அவளை ஆறுதல் செய்ய அவனும் அவளை கட்டிக்கொண்டு முதுகை வருடிக் கொடுக்க, சில நொடிகளில் தன்னிலை அடைந்த அவள்,


"போயிடிச்சா" என்று வினவியபடி அவனை விலக எத்தனிக்க அவனோ அவளை விடாமல், இறுக்க பிடித்துக் கொண்டு, அவள் முகம் நோக்கினான்.


கண்மணிகள் கபடி விளையாட அவன் பார்வையைச் சந்தித்த அவள், அதில் வழிந்த உணர்வுகளில் என்ன செய்வது என்று அறியாமல் எச்சிலை விழுங்க, அவனோ சிறிது அளவு கூட ஒப்பனை இல்லாத அவள் முகம், அங்கும் இங்கும் ஓடி விளையாடும் கண்மணிகள், கூர்மையான மூக்கின் நுனியில் இருக்கும் ஒரு தண்ணீர் துளி, பதட்டத்தில் துடிக்கும் இதழ்கள்,மேலும் கீழும் செல்லும் தொண்டை குழி என்று இருப்பவளை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருந்தான். அவளது கணவனாக மாறி, கொண்டையை ஒரு கையால் அவிழ்த்து, அவள் முகம் நோக்கிச் செல்ல, சற்று முன் வரை அவனை மிரட்சி உடன் பார்த்து பின்னர் அவனது உணர்வு தாக்கத்தைப் பிரதிபலித்த அவள் கண்கள், பீதியைத் தத்தெடுக்க, துருவ் என்ன ஆயிற்று என்று பார்வையாலே வினவினான்.


நடுங்கும் கரங்களால், அவள் அவன் பின்னால் ஒரு புள்ளியைக் காண்பிக்க, அங்கே ஒரு சிறுத்தை நின்று கொண்டு இருந்தது, அவனை காவு வாங்க!



நக்ஷத்திராவை முழுவதும் மறைத்தவன், சிறுத்தையைத் தனியே சந்திக்கத் தயாராக, அவள்



"துருவ் வேணாம்! போகலாம், ப்ளீஸ்.. அப்படியே சைலேண்ட்டா கிளம்பலாம்" என்று பயத்தில் உளறிக் கொட்ட, துருவ் அவள் புறம் திரும்பாது,



"நீ அப்படியே போ! நான் சிறுத்தையோட கவனத்தை என் மேலே வைக்கறேன்! போ!" என்று அவளை விட்டு நீங்கி சிறுத்தையை நோக்கி முன்னேற, அவள் அவனை இறுக்கப் பிடித்துக் கொண்டாள்.


"என்ன பைத்தியகாரத்தனம் இது துருவ்! வீண் வேலை இது. இட் வில் கில் யு" என்று அவனிடம் சீற, அவளது பிடியில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டவன்,



"எனக்கு கொடூரமான மரணம் வேணும்னு கேட்டே ஞாபகம் இருக்கா! ஹியர் இட் இஸ்" என்று உணர்வில்லாது அவள் உயிரை கொல்லாது கொன்று விட்டு தன் விதியை அவன் தீர்மானிக்க, அவள் அவன் பேச்சில் வாயடைத்து போய் நிற்க, அதன் பின் நிகழ்ந்தவை அவர்களை மீண்டும் ஒருமுறை தடம் புரள செய்தது. அது….


 

Thishi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்யாயம் - 19


"கிறுக்கனாடா நீ ! லூசு லூசு!" என்று நக்ஷத்திரா தனது கீச்சுக் குரலில் கத்த ஆரம்பிக்க, துருவ்


"ஷுஷ் ! கத்தாதே ! நீ போ ! போன்னு சொல்லறேன்லே போடி !" என்று அவ்விடத்தை விட மாட்டேன் என்று இருக்கும் அவளை அப்புறப்படுத்த அவன் திவீரம் காட்டினான். ஆனால் அவளோ


"நீயும் வா !" என்று அவனைப் பிடித்து இழுத்துக் கொண்டு அவள் செல்லப் பார்க்க, இவர்களின் காதல் சண்டையைப் பார்த்த சிறுத்தை இது வேலைக்கு ஆகாது என்று தண்ணீரில் குதித்தது, சீறிப் பாய்ந்து. அது ஒன்றும் பெரிய சிறுத்தை அல்ல, குழந்தை சிறுத்தையும் அல்ல. சற்றே வளர்ந்த சிறுத்தை. பொதுவாக பெண் சிறுத்தைகள் காட்டுப் பகுதிகளில் ஆண் சிறுத்தைகள் போலவோ, அல்லது புலிகள் போலோ , இது தான் என்னுடைய இருப்பிடம் என்று வரையறுக்காது. அவைகள் எல்லா இடங்களுக்கும் செல்லும் இயல்பு கொண்ட மிருகங்கள்.


ஆகையால் அந்த குணா அதிசியத்தைக் கொண்ட இந்தச் சிறுத்தை முற்றிலும் எதிர்பாராத விதமாக இந்த இடத்தில் ப்ரசன்னமாக, துருவ்வோ இவளைப் பாதுகாக்க எப்படியாவது தன்னை அந்தச் சிறுத்தை முன் நிறுத்தி அதன் கவனத்தைத் திசைத் திருப்பப் பார்க்க, அவளோ அவளது க்ரீச் க்ரீச் சத்தத்தால், சிறுத்தையின் கவனத்தைத் தன் மீது செலுத்திக் கொள்ள, அந்த நிஜ சிறுத்தைக்கு இந்த சிங்கப் பெண்ணை மிகவும் பிடித்துப் போனது.


துருவ் என்ற 6 அடி ஆண்மகனை விட, 5 அடிக்கு இருக்கும் இவள் தனக்கு ஏற்ற இரையாக இருக்க ஏற்றவள் என்று அது முடிவெடுக்க, சிறுத்தையின் கவனம் அவள் மீது சென்றதை துருவ் கண்டுகொண்டான்.



அது அவளை நோக்கி முன்னேற, இவளோ இவனை எப்படியாவது தன்னுடன் அழைத்துக் கொண்டு செல்லவேண்டும் என்பதில் குறியாக இருக்க, சிறுத்தையின் இலக்கு அர்ஜுன இலக்காக அவள் மீது பாய, துருவ் சிறுத்தைக்கும் அவளுக்கும் இடையே புகுந்தான்.


ஒரு பாறை மீது நின்ற அந்த பூனை வம்சாவளியைச் சேர்ந்த மிருகமானது ஒரே பாய்ச்சல் அவள் மீது பாய, துருவ் அரணாக நின்று அவளைப் பாதுகாத்தான். அதில் அவனுக்குக் காயம். அவள் மீது பாயப் போன சிறுத்தையை தன் மீது பாயுமாறு பார்த்துக் கொண்டவன், அதனை தூக்கி வீசி அடிக்க முயல, சிறுத்தை மற்றோர் பாறை மீது போய் விழுந்தது. நல்ல வளர்ந்த பெரிய சிறுத்தையின் எடை 70 கிலோவிற்கு மேல் இருக்கும். ஆனால் இது பெரிய சிறுத்தை அல்லவே, ஆகையால் அதன் எடை 40-50 கிலோவுக்குள் இருக்க கூடிய வாய்ப்பினால் துருவ்வால் அதனைத் தள்ளி விட முடிந்தது.


நக்ஷத்திராவின் நகங்கள் எல்லாம் சிறுத்தையின் நகம் முன் ஒன்றுமே இல்லை. பெடிக்யூர் செய்யப்படாத வலுவான கூர்மையான நகங்கள் அவை, அதன் கீறலல்கள் ஏற்படுத்திய காயங்கள் என்று சொல்வதை விட அவை விழுப்புண்கள் தான்.


அவனது குருதி ஓடையில் கலக்க, நக்ஷத்திரா,


"துருவ் !" என்று அலறினாள். அவளது அலறல்கள் அந்த காட்டுப்பகுதி முழுவதும் எதிரொலிக்க, படபடவென்று பறவைகள் பறக்கும் சத்தம் ஒலித்து ஓய, ஓர் மயான அமைதி அவ்விடத்தில்.



அடிபட்டச் சிறுத்தையாக, அடுத்து தனது இலக்கு துருவ் என்று அந்தச் சிறுத்தை நிச்சயித்துக் கொள்ள, துருவ்வும் அதை எதிர்கொள்ளத் தயாரானான்.


"நக்ஷத்திரா ! கோ நவ்" என்று அவன் சீற, அவளோ அவனைச் சூழ்ந்த செந்நீரை பார்த்தபடி அதிர்ச்சியில் உறைந்து போயிருக்க, துருவ் தனது காயங்களின் வலியைப் பொறுத்துக்கொண்டு கத்த, தன்னைக் காயப்படுத்தியவனைத் தாக்க சிறுத்தையும் தயாரானது.



சிறுத்தையின் கண்கள் அவனை விட்டு அகலாதிருக்க, நக்ஷத்திரா எனும் சிலைக்கு உயிர் வந்தது. ஜீப்பில் ரேடியோ பேசி இருப்பது ஞாபகம் வர, நீரில் இருந்து கரைக்குச் செல்ல எத்தனிக்க, சிறுத்தை இப்பொது இவனைத் தாக்கவா அல்லது அவளைத் தாக்கவா என்று சற்று ஐயப்பட்டு நின்றது போலும், அவனையும் அவளையும் மாறி மாறி கவனிக்க, துருவ் பாதுகாப்பு முயற்சியாக ஆதி மனிதன் வழியில் கையில் பாறாங்கல்லின் ஒரு உடைந்த பகுதியை வைத்துக் கொண்டு இருக்க, முடிவாக சிறுத்தை இவனைத் தாக்குவது உசிதம் என்று முடிவெடுத்துக் கொண்டது.


அவன் மீது பாய, தன் கையில் இருக்கும் சற்றே பெரிய கல்லைக் கொண்டு அதனை எதிர்தாக்குதல் செய்து, அதனைத் தள்ளி எறிய முயற்சி எடுக்க, அதே நேரம் திபுதிபு என்று மக்கள் ஓடும் சத்தமும் கேட்டது. அவனுக்குச் சமீபத்தில் அந்த ஓசை கேட்க, சிறுத்தை தண்ணீரில் இருந்து மேலே எழும்பி இனி இங்கிருப்பது உசிதமில்லை என்று காட்டுக்குள் ஓடப்பார்த்தது. ஆனால் அதற்குள் அதன் மீது மயக்க ஊசி கலந்த அம்பு எய்யப்பட, அது சுருண்டு பாறையில் விழுந்தது.



"ஃபாரஸ்ட் ஆபிஷியல்ஸ்!மிஸ்டர்.துருவ் !இது உங்களோட ப்ராப்பர்டி தானே ?" என்று தங்கள் அடையாள அட்டையைக் காண்பித்தபடி காட்டு இலாகா அதிகாரிகள் உள்ளே வந்தனர்.


"ரெண்டு நாள் முன்னே இங்க ஒரு சிறுத்தை வந்ததுன்னு கேள்வி பட்டேன் , பட் இன்னிக்கி எங்க ஜங்கிள் பிகினிக்-க்கு கம்பெனி கொடுக்க வரும்னு எதிபார்க்கலே " என்று துருவ் தனது வலியைப் பொறுத்துக்கொண்டு அவர்களுக்குக் கைகுலுக்க,


"இட்ஸ் ஓகே ! உங்க கைக்கு ட்ரீட்மெண்ட் தேவை, டோன்ட் ஸ்ட்ரையின்" என்று அவனை, அவன் ஸ்தாபித்த சின்னஞ் சிறிய கிளினிக்கிற்கு அழைத்துச் சென்றார்கள். கூட நக்ஷத்திராவும்.


அவள் யார், துருவ்விற்கு என்ன வேண்டும் என்று கேள்வியாகப் பார்க்க, அவளே முன்வந்து

"நான் அவரோட மனைவி, நக்ஷத்திரா !" என்று அறிமுகப்படுத்திக் கொள்ள, அவர்கள் புன்னகைப் பூத்து கைகுலுக்க, துருவ்வோ ஒன்றும் பேசாது, மாறிக்கொண்டு இருக்கின்ற அவளது மனநிலையை ஆராய்ந்தபடி இருக்க, மருத்துவர் அவனுக்கு சிகிச்சை அளிக்க வர, அவர்கள் எல்லோரும் அவன் இருக்கும் சிகிச்சை அறைக்கு விட்டு வெளியே சென்றனர்.


திரை சற்று விலகி இருக்க, அவன் பார்வை அவள் மீது தான் பதிந்து இருந்தது.


"மிஸ்டர்.துருவ் ! கொஞ்சம் எங்களோட கோ ஆப்பேரேட் செய்யறீங்களா ?" என்று மருத்துவர் அவனது கவனத்தைத் திசைத் திருப்ப, துருவ் மனதே இல்லாது அவள் மீதானப் பார்வையை அகற்றினான்.


அவனது காயங்களுக்குக் கட்டு போடப்பட்டது, நக்ஷத்திராவிற்கு அவன் அறைக்குச் செல்ல அனுமதி அளிக்கப்பட, அவனை அவ்வாறு அடிப்பட்டு, ஓர் நோயாளியாகப் பார்க்க அவளுள் ஏதோ ஒன்று அவளுள் நொறுங்குவது போல் உணர்ந்தாள்.


தன் உணர்வுகளை மறைத்துக் கொண்டு,


"பெரிய பழுவேட்டரையருக்கு 64 விழுப்புண்கள் உண்டாம், தி க்ரேட் கல்கி சார் எழுதி இருக்கார் பொன்னியின் செல்வனில் , துருவ்! நீ அதில் நடிக்க போனா, அந்த காரெக்டர் உனக்கு சூட் ஆகும் " என்று கிண்டல் அடித்தபடி அவன் அருகே வந்து அவனது கட்டுக்களை ஆராய, துருவ் அவளது கலக்கத்தை முதலில் பார்த்தவன்,


"அப்போ தி பியுட்டிபுல் நந்தினி என்னோட வைப்பா வருவா ! பரவாயில்லையா ? ஐ லவ்.." என்று இழுத்து அவள் முகத்தில் வரும் உணர்வுகளைப் படம்பிடிக்க முயல, அவளோ நிச்சலமாக இருக்க, துருவ் ஏமாந்தாலும் வெளிக்காட்டாது,


" ஹர் " என்று வேறு அவனும் கிண்டலைத் தொடர, அவள் ஆழமாக அவனைப் பார்த்து ஒரு ஆளுமையானப் புன்னகையைத் தவழ விட்டவள்,


"படத்தில் தானே உனக்கு வேறே ஒரு ஜோடி ! அது நிழல், நான் நிஜம் துருவ்!" என்று அவனை ஊடுருவிப் பார்த்தாள். அதில் சற்று திடுக்கிட்டாலும், அவன் சமாளிப்பாக


"நிழல் சில சமயம் நிஜமாகும் நக்ஷத்திரா " என்று முகத்தை சாதாரணமாக வைத்துக் கொண்டுச் சொல்ல, நக்ஷத்திரா


"ம்ம்..ட்ரை தான் பண்ணி பாரேன் ! நான் அந்த சிறுத்தை இல்லே, மோர் டேஞ்சரெஸ் " என்று மிரட்ட, அவன் தனது ட்ரேட்மார்க் நக்கல் புன்னகையைப் பதிலாகக் கொடுத்து ,


"தெரியுமே ! நீ தான் என்னோட …." என்று அவள் முகத்தில் வழிந்த புன்னகையைக் கண்டு நிதானித்தவன்,


"யூர் ஆர் எ டெவில் வியரிங் சாண்டல்ஸ் " என்று சொல்ல, அவள் புன்னகை மாறாது,


"எனக்கு ஹீல்ஸ் பிடிக்காது, ஆகையால் என்னோட கணவர் எனக்கு வாங்கி தரலே " என்று பதிலடி கொடுத்தாள்.


டெவில் வியர்ஸ் பிராடா என்ற சொடற்றொடர் உண்டு. அந்த தலைப்புடன் ஒரு ஹாலிவுட் படமும் வந்தது. பிராடா(prada) என்பது ஓர் உயர் தர குதிகாலணி, சாத்தான் தலையில் கொம்பு முளைத்து தான் வர வேண்டும் என்று அவசியமில்லை, அதிக மதிப்புள்ள துணிமணிகள் மற்றும் காலணிகள் அணிந்து கொண்டும் வரலாம் என்று பொருள்படும், அந்த டெவில் வியரிங் பிராடா என்ற சொற்றோடருக்கு .



ஆனால் இங்கே நக்ஷத்திரா சாதாரண காலணிகள் அணிந்து கொண்டு இருந்தமையால், அவன் அதைச் சற்று மாற்றிக் கூறினான்.


காச் மூச் என்று கத்தாது, தனக்கு ஏற்றார் போல் பதிலடி கொடுக்கும் இந்த நக்ஷத்திரா புதியவள் இல்லை, சில நாட்களாக அவன் பார்த்துக்கொண்டு வரும் குமரிப் பெண் நக்ஷத்திரா.


"இம்ப்ரஸிவ்" என்று கூறியவனுக்கு ஓய்வும் தேவைப்பட்ட, அதை உணர்ந்தவள், அவனுக்குச் சாய்வாக வைக்கப்பட்டு இருந்த தலையணையைச் சரி செய்யப் போன போது தான் அதைப் பார்த்தாள். இன்று ஒரே நாளில் இரண்டாவது முறையாக அவளை அதிரச் செய்தான் அவன்.


கண்களில் கண்ணீர் அவள் கட்டுப்பாடின்றிப் பிராகிக்க, சிலையாய் மாறு என்று யாரோ சாபம் கொடுத்து விட்டது போல் அவள் மாற, துருவ்


"லெட் மி ஸ்லீப்" என்று தலையணை மீது சாயப் போக, அவள் அவனது வெற்று முதுகில் கைவைத்து


"என்ன இது துருவ்?" என்று முதுகின் ஒரு பகுதியை அழுத்திக் கேட்க, தான் சட்டை இல்லாது போனதில் அவள் எதை அவள் பார்க்கக் கூடாது என்று நினைத்தானோ, அதை அவள் பார்த்து விட்டாள் என்று உணர்ந்தான்.


"நத்திங்!" என்ற பதிலில் அவள் சமாதானம் ஆவாளா என்ன? இத்தனை நாள் நீச்சல் செய்யும் போது அவன் ஏன் சட்டை அணிந்து கொண்டு நீந்தினான் என்பதை புரிந்து கொண்டாள். ஒரு முறை அவள் கேட்ட போது கூட,


"எதுக்கு நான் ஃப்ரீ ஷோ காட்டனும்!" என்று குதர்க்கமாகப் பதில் அளிக்க, நக்ஷத்திரா


"அப்போ முன்னாடி எல்லாம் ஆனா ஊன்ன்னா என்னை பார் எந்தன் 8 பேக்ஸ் பார் ன்னு இருந்தே. அது ப்ரீ ஷோ இல்லியா ? எந்த மடத்துக்கு போனே இவ்வளவு அறிவாளி ஆக, சொல்லு நானும் சேர்ந்து பார்க்கறேன்! " என்று அவள் கடுப்படித்ததை அவன் பொருட்படுத்தவில்லை.


பதில் கூறாத அவனை, அவள் முறைத்து மட்டுமே பார்க்க முடிந்தது. பதில் சொல்ல மாட்டேன் என்று அடம் பிடிக்கும் குழந்தை அல்ல அவன்.


'ஆமாம்! நான் இப்படி தான்' என்று திமிர் பிடித்துக் கொண்டு இருப்பவன். அவனே கூறும் வரை, ஒன்றும் செய்ய முடியாது என்று புரிந்து கொண்டாள்.


ஆனால் அதன் பின் இப்படி ஒரு புண்ணானக் கதை இருக்கும் என்று அவள் நினைத்துப் பார்க்கவில்லை. முதுகு முழுவதும், முள் வைத்த சவுக்கினால் அடித்து இருப்பான் போல், காயங்கள்! காயங்களா, அவை ரத்த களரி அவளைப் பொறுத்தவரை! ஏதோ விபத்து போல் அவளுக்கு தோன்றவில்லை. யாரோ அவனை அடித்து இருப்பார்களா..சே சே வாய்ப்பே இல்லை. இவனாக தான் செய்து இருக்க வேண்டும்..ஏன்.. வேண்டுதலா? இப்படி எல்லாம் கேள்விகள் அவள் மனதில் வலம் வர ஆரம்பித்தன.



இது இடையே, அவள் காணாமல் போன போது நடந்து இருக்க வேண்டும் என்று தீர்மானமாக நம்பினாள். ஏனென்றால் அவள் தான் அவன் மனைவி என்று அவளுக்கு தெரியாத காலத்தில், அவன் சராசரி கணவனாகத் தான் அவளிடம் நடந்து கொண்டு இருக்கிறான். அவள் முன் உடை மாற்றும் போது, அவனது பரந்த முதுகைப் பார்த்து இருக்கிறாள். எவ்வித காயம் இருந்தது இல்லை. ஆனால் இன்று அவன் முதுகு முழுவதும் காயம், சாட்டை அடித் தழும்புகள்!


'ஏன்' என்ற கேள்வி எழும்பாது இல்லை. அவளுக்குக் கஷ்டமாக இருந்தது.


"நான் தூங்கலாமா?" என்று அவன் குரல் சோர்வாக ஒலிக்க, அவள்


"ஒரு நிமிஷம்! இது என்னனு சொல்லு?" என்று அவன் முதுகில் காயத் தழும்பு இருக்கும் இடத்தை தொட்டு காண்பித்து கேட்க, அவன் முகத்தில் அப்படி ஒரு இறுக்கம்.


"விசிட்டர்ஸ் டைம் முடிஞ்சாச்சு" என்று அவளை அப்புறப்படுத்த முயற்சித்தான். அவனுக்கு அவன் உயரம் அளவு பிடிவாதம் உண்டு என்றால், அவளுக்கும் உண்டு ! என்ன அது 5 அடிக்குள் இருக்கும் பிடிவாதம்.


"பரவாயில்லை. இந்த கிளினிக் எஸ்டாபிலிஷ் பண்ணினவரோட வைஃப், சோ, சம் சலுகை இருக்கும், அதை யூஸ் பண்ண போறேன்" என்று சட்டமாக அவன் முன் ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டுக்கொண்டு உட்கார்ந்தாள், கைகளைக் கட்டிக் கொண்டு.
 

Thishi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அவளது கூர்மையானப் பார்வை முன் அவனால் கண்கள் மூடி தூங்க முடியவில்லை. கண்களைத் திறந்தவன்,


"என்னடி வேணும்?" என்று எரிச்சலுடன் மொழிய, அவள் அந்த 'டி' யைப் பிடித்துக் கொண்டு



"இந்த டி உரிமையா சொல்லறேலே...நான் யாரு உனக்கு அப்போ...வைஃப்..தமிழில் மனைவி.. சோ என்கிட்ட சொல்லியே ஆகணும்" என்று அழுத்தமாகக் கேட்க, அவனோ


"ம்ப்ச்..உனக்கு தேவையில்லா விஷயம். மைண்ட் யூர் வர்க்" என்று மூக்கறுத்தான்.


"இது தான் என் வேலை துருவ்!" என்று அவளது பிடிவாதத்தில் மற்றோர் கோணத்தைக் காட்ட, துருவ்,



"லிசன்!" என்று ஆரம்பிக்கவும், ஷோபா அங்கே வருவதற்கும் சரியாக இருந்தது.


"சின்னு!" என்று உரிமையாக அவனிடம் பேச ஆரம்பிக்க, நக்ஷத்திரா சற்று திடுக்கிட்டாள். ஏனென்றால் அவர் துருவ்வை இவ்வளவு உரிமையாகக் கூப்பிட்டு பார்த்ததே இல்லை. அவர்கள் உறவு சமீப கால உறவு என்று அவளுக்குத் தோன்றவில்லை. அவர் மதியம் மேல் அவர் வருவதாக இருந்தது. அவர் வந்தபின், துருவ்விற்கு இம்மாதிரி அடிபட்டு இருக்கிறதை கேட்டு அறிந்து கொண்டு நேரில் காண வந்து விட்டார்.


சின்னு என்ற விளிப்பில், அவளது குழப்பத்தைப் பார்த்தவன்,


"டாக்டர்.ஷோபா உனக்கு, ஷோபா ஆன்டி எனக்கு! என் அம்மாவோட பிரென்ட்" என்று மட்டும் தான் சொன்னான், அவரிடம் அவனும் ஒரு காலத்தில் சிகிச்சை பெற்றான் என்பதைச் சொல்லவே இல்லை.


"ஹவ் ஆர் யு சின்னு! " என்று அக்கறையாக அவனிடம் கேட்டபடி அவனது சிகிச்சை பற்றிய விவரங்களைப் பார்க்க, துருவ்



"அம் ஆல்ரைட்! கொஞ்சம் ரெஸ்ட் வேணும்" என்று கூறியவன் குரலில் சோர்வு அதிகமாக இருக்க, ஷோபா


"ம்ம்..பொண்டாட்டியை காப்பாத்த போய் விழுப்புண்கள்.. ப்ராவோ" என்று அவனை இதமாகக் கேலி செய்ய,


"இல்லே! சிறுத்தை செத்திருக்கும்" என்று அவருடன் இணைந்து அவளைக் கேலி செய்ய, நக்ஷத்திரா பெரிய ஹாஸ்யத்தைக் கேட்டார் போல்


"ஹா ஹா..சிரிச்சுட்டேன்! டாக்டர், ஹி இஸ் நாட் ஆல்ரைட், பாருங்க இவன்...இவர்..முதுகில்" என்று அவன் முதுகை வெளிச்சம் போட்டுக் காண்பித்துக் கோர்த்து விட்டாள். துருவ் ஆத்திரத்தில் பல்லைக் கடிக்க, நக்ஷத்திராவோ கண்ணும் கருத்துமாய் அவனது காயங்களைப் பறைசாற்றிக் கொண்டிருந்தாள்.



ஷோபாவும் திடுக்கிட்டுப் போக, துருவ்


"நக்ஷத்திரா! லீவ் இட்ன்னு சொன்னேன்" என்று கோபத்தைக் காண்பிக்க, ஷோபா


"நானும் நீயும் பேசணும் சின்னு" என்று தீர்க்கமாக உரைக்க, துருவ்வால் ஒன்றும் சொல்ல முடியவில்லை.


நக்ஷத்திரா வெளியே செல்ல, துருவ்வும் ஷோபா மட்டும் அந்த அறையில்.


"வாட் நான் சென்ஸ் துருவ்?" என்று பொரிய ஆரம்பிக்க, துருவ் அவரை நேரே பார்த்தான். அதில் குழப்பமோ, கலக்கமோ அறவே இல்லை.


"ஐ டிசேர்வ்ட் இட், தட்ஸ் ஆல்" என்று பேச்சை முடிக்கப் பார்க்க, ஷோபா இடைமறித்து


"கட் தி க்ர***,துருவ்" என்று கண்டிப்பு அவர் குரலில் கூட, துருவ் அவரிடம் தான் சொல்ல வேண்டிய விஷயங்களைச் சொன்னான், சுருக்கமாக.


நெற்றியில் முடிச்சுகள் விழ, ஷோபா அவனைப் பார்க்க, துருவ் ஒன்றும் அலட்டிக்கொள்ளவே இல்லை.


"சோ, நான் எதையும் நியாயப்படுத்த போறதில்லை. ஐ நோ வாட் டு டூ! எனக்கு இப்போ ஒண்ணே ஒன்னு தான் தெரியணும்" என்று தனது கேள்வியை முன்நிறுத்தினான்.


ஷோபா தன் உணர்வுகளை அடக்கிக் கொண்டு, அவனுக்குப் பதில் அளித்து விட்டு அவ்விடம் நீங்கும் முன், அவன் அருகே வந்து, நெற்றியில் முத்தமிட, துருவ்வின் மனம் ஏனோ சுணங்கியது.



"நான் உங்களை ஏமாதிட்டன்லே" என்று அவன் கேட்டான், குரலில் அப்படி ஒரு வருத்தம்.


ஷோபாவிற்கு அவன் மகன் போல் தான், இருந்தாலும் சொந்த மகன் அல்லவே. அவன் கன்னத்தைத் தட்டிவிட்டு விடைப்பெற்றுக் கொள்ள


அவனுக்கு சந்தியாவின் ஞாபகங்கள் பெருக,


"ஐ மிஸ் ஹர் !" என்று சொல்லியே விட்டான். இதே வார்த்தைகளை அவன் தனது தாய் இறந்தபோது ஒரே ஒரு முறை சொன்னான், ஏனோ அன்னை இறந்த போது, இறுகிப் போனவன், அழவே இல்லை. மனிதக் கல்பாறைகள் அப்படித் தான் உருமாறுகின்றனரோ ?


"நான் உன்கிட்ட அப்பறம் பேசணும் ! நவ் டேக் ரெஸ்ட்" என்று அவர் சொல்லிவிட்டு, அறை வாசல் வரை செல்ல, துருவ்


"எதுவும் என்னோட முடிவை மாத்தாது!" என்று சற்று உரக்கவே கூறினான். அவனைப் பார்க்க திரும்பியவர் ,


"உனக்கு மேலே ஒருத்தன் இருக்கான் சின்னு !" என்று பதிலளிக்க, துருவ் ஒரு வெறுமையானப் புன்னகையைச் சிந்தி,


"ஓ ! அதான் சுவத்துலே ஓர் உயரத்துல போட்டோ மாட்டறீங்களோ!" என்று தன் கடவுள் நம்பிக்கையைப் பறைசாற்ற,


"எப்படி வேணாலும் வச்சுக்கே ! அவர் வழியில் தான் நீயும், நானும், அவளும் " என்று சற்று தள்ளி உட்கார்ந்துக் கொண்டு இருக்கும் நக்ஷத்திராவைக் காண்பிக்க, அவன் முகம் சொல்லொண்ணா வேதனையைத் தத்தெடுத்தது.


நக்ஷத்திராவிடம் சென்ற ஷோபா,

"அவன் ரெஸ்ட் எடுக்கட்டும், உன்கிட்ட ஒன்னு கேக்கணும் ! டு யு லவ் ஹிம்?" என்று நேரிடையாக விஷயத்திற்கு வர, அவளோ திடுக்கிட்டுப் போனாள். இம்மாதிரியானக் கேள்வியை அவரிடம் இருந்து எதிர்பார்த்து இருந்திருக்கமாட்டாள்.


"பார்டன் !" என்று அவள் மீண்டும் கேட்க, ஷோபா


"லிசன் ! அவனோட ஷோபா ஆன்டியா கேக்கறேன் ? அவனை உனக்கு பிடிக்குதா ?" என்று மீண்டும் அதே கேள்வி, தமிழ் மொழியில், அவ்வளவே!


அவள் முகத்தை மட்டுமே ஷோபாவின் கண்கள் பார்க்க, நக்ஷத்திரா ஒரு நிமிடம் நிதானித்து,


"தெரியலே, பிடிக்குது, ஆனா கோபமும் வருது ! கடவுள் பாதி, மிருகம் பாதி பாட்டு மாறி ! அவனை..ஸ்ஸ்ஸ்..அவரை புரிஞ்சிக்க ட்ரை பண்ணறேன் ! பட் ஹி இஸ் எ ஹார்ட் நட் ! இந்த ஆமை ஓடு இருக்குதே, அது மாறி அவர் மனசு ! எப்போ வேணாலும், அந்த ஒட்டுக்குள்ள போயிடுவார் " என்று தான் உணர்ந்ததைச் சொல்ல, ஷோபா மெலிதாகப் புன்னகைத்தவர்


"ம்ம், ஆல் தி பெஸ்ட், அந்த ஆமையை வெளியே எடுக்க !" என்று கூறிவிட்டு விடைபெற்றுக் கொண்டார். அவர்கள் இருவர்க்கும் பொதுவான ஒரு குணம் உண்டு, அதை ஷோபா அறிவார் ! பிடிவாத குரங்குகள் இருவருமே ! யார் பிடிவாதம் இனி வெல்லுமோ ?


அன்று மாலையே வீடு திருப்பினர் ! மாடியில் இருக்கும் தனது அறைக்குச் செல்லப் போனவனைக் கடிந்து,


"லூசாடா நீ !" என்று வேறு திட்டு அவளிடம் இருந்து. ஒரே அறையில் அவர்கள் இருவரும் இருந்து இருக்கிறார்கள் இதன் முன் ! அன்றெல்லாம் வராத ஏதோ ஒரு அசௌகரிய உணர்வு இன்று அவனுக்கு வர, அதைக் கண்டுகொண்ட அவனது மனையாட்டி,


"பயப்படாதே !உன் கற்புக்கு நான் கியாரண்டி !" என்று வேறு நக்கல் அடிக்க, அவன் எதுவும் சொல்லாது படுத்துக்கொண்டான். இருவரில் அவள் சற்று அவனிடம் பேச்சுக்கள் கொடுத்தால், இவனோ நழுவும் மீனாக இருக்க, 2 தினங்களில் அவனை நன்கு பார்த்துக் கொண்டு, அவன் காயங்களுக்கு மருந்திட்டு, தனது கடமைகளை அவள் செவ்வனே செய்ய, அவளை ஒன்றும் கூற முடியாது அவன் தத்தளித்தான்.


மருந்திடும் அவளையே ஒற்று நோக்கும் அவனைப் பார்த்து என்ன என்பது போல் அவள் பார்க்க, அவனோ


"என்ன பிரதி உபகாரமா ?" என்று வெறுமையானக் குரலில் கேட்க, அவளோ


"குதர்க்கமான கேள்விக்கு நான் பதில் சொல்லறதில்லை " என்று அவள் வைத்த மருந்தினால் வந்த எரிச்சலில் அவன் 'ஸ்ஸ்ஸ்' என்று முனங்கியத்தைக் கண்டு கொள்ளாது பதிலடி கொடுக்க, துருவ் அதற்கு மேல் ஒன்றும் பேசவேயில்லை. அவளோ அவன் நெற்றியில் முத்தமிட்டு


"சீக்கிரம் சரி ஆகிடும்" என்று கூற, அவனோ அதிர்ந்து அவளைப் பார்க்க,


"ஹலோ! என்ன ஷாக் வேண்டி இருக்கு..திஸ் இஸ் ஜஸ்ட்.." என்று ஆரம்பிக்க, அவள் வாயை அவன் கையினால் மூட, அவளோ அன்று அவன் செய்தது போல், அவனது உள்ளங்கையில் முத்தமிட, தன் கரத்தை வெடுக்கென்று எடுத்தவன்


"உன் லிமிட்டை தாண்டாதே" என்று கறார் குரலில் கூற, அவளோ அவனைப் போல், ம்ஹ்ம் அவனை விட என்று தான் கூற வேண்டும்.


நக்கல் நாயகியாக,


"ரியலி!" என்று கேட்க, அவன் முகம் கருத்துப் போனது!




2 நாட்கள் கழித்து, காபி தோட்டத்திற்குச் செல்லப் போனவனைத் தடுத்து நிறுத்தி, அவள் தானே செல்கிறேன் என்று செல்ல, அது வேறு விதத்தில் அவர்களை பாதிக்கப் போகிறது என்று அறிந்திருக்கவில்லை . ஏனென்றால்.....



ஏனென்றால் அங்கே அவள் பார்த்த ஒருவர் அவளது வாழ்வு இம்மாதிரி ஆவதற்கு ஒருவிதத்தில் காரண கர்த்தா ! காபி தோட்டத்திற்குச் சென்றுவிட்டு, 1.5 நேரத்துக்குள் வீடு வந்து விட்டாள் ! விசும்பியபடி வந்தவளை துருவ் கேள்வியாகப் பார்க்க, பாக்யம் பதறியபடி


"என்ன ஆச்சு சின்னம்மா ?" என்று ஆறுதல் அளிக்க முயல, அவளோ அழ ஆரம்பித்தாள்.


இவளா அழுகிறாள் ! 100 பேரை அழ வைப்பாளே என்று யோசித்தவன் என்னத்தான் இருந்தாலும் கேட்போம் என்று, படித்துக் கொண்டிருந்த புத்தகத்தைக் கீழே வைத்து விட்டு,



"இப்போ என்ன ஆச்சு? ஏன் அழறே ?" என்று ஆரம்பித்தான்.


கண்களைத் துடைத்துக் கொண்டு, அவள்,


"அம் சாரி ! முடிஞ்சா என்னை மன்னிச்சிரு " என்று கூறிவிட்டு தனது அறையில் ஐக்கியம் ஆக, இவனும் சற்று நேரத்தில் தானாகவே சரி ஆகிவிடுவாள் என்று விட, அவளோ சாப்பிட வராது படுத்தி எடுத்தாள்.


"என்னடி பிரச்சனை உனக்கு ! வந்து சாப்பிடு " என்றும் அவன் கடிய, அவளோ அவனை கட்டிக்கொண்டு


"நிறைய தப்பு பண்ணிட்டேன் துருவ் ! மன்னிப்பே கிடையாது எனக்கு !" என்று புலம்ப, அவனோ


"இப்போ என்ன பண்ணினேன்னு சொல்லறியா ?" என்று கடுமையாக வினவ, அவள் விசும்பல் அடங்காது,


"உன்கிட்ட பேசவே தகுதி இல்லே " என்று மட்டும் கூறிவிட்டு தனது அறையிலேயே முடங்க, என்னடா இது என்று இவன் புரியாது விழி பிதுங்கினான்.


சற்று நேரத்தில் அவனது காபி தோட்டத்தில் வேலைப் பார்க்கும் ஒருவர் அவனை சந்திக்க வர, அவனுக்கு என்ன ஆயிற்று என்று விளங்க, அவளிடம் கிட்டத்தட்ட ஒரு வாரம் பேசாது மௌன யுத்தம் நடத்தினான். அவள் தான் செய்தது தவறு என்று அவனிடம் மன்னிப்பு கேட்க முயன்றாலும் அவன் அசரவேயில்லை. எப்போதும் அவள் விஷயத்தில் சற்று தாழ்ந்து அவளைப் புரிந்து கொள்ளும் அவன், ஏனோ இவ்விஷயத்தில் பிடிவாத மலையின் உச்சியில் இருந்து இறங்கவேயில்லை!


இதன் முன் நடந்த விஷயங்கள் எல்லாவற்றுக்கும் சேர்த்து வைத்து அவன் சற்றும் இறங்கி வராது இருக்க, அவள் பொறுமை இழந்து


"நான் தப்பு பண்ணினேன், ஒத்துக்கறேன் ! அதுக்காக இப்படி தான் பேசாம இருந்து டார்ச்சர் செய்வியா ! நீ எதோ பெரிய உத்தமன் மாறி !" என்று பழைய நக்ஷத்திராவாக எகிறி குதிக்க, அவனோ அவளைத் துளைக்கும் பார்வை ஒன்று பார்த்து,


"என்னை தப்பு பண்ண தூண்டியது நீ ! என்னோட தப்பை எப்படி டீல் செய்யறதுன்னு எனக்கு தெரியும் ! யு ஆர்...எ பியூட்டி வித் அவுட் எனி ப்ரையின் " என்று கத்த, அவளும் விடவில்லை


"நியாப்படுத்தாதே ! நீ செஞ்சது க்ரைம் ! லா புக்கில் இல்லேன்னாலும் நீ செஞ்சது குற்றம் தான்" என்று அவளும் கத்த, துருவ் ஒன்றும் கூறாது செல்லப் போக அவன் கையைப் பிடித்து தடுக்கப் பார்க்க, அவன்


"லீவ் மி நக்ஷத்திரா " என்று அவளது கைகளை உதறிவிட்டு சென்று விட்டான்.


என்றும் இல்லாது இன்று அவளைத் தன் செயலுக்குக் காரணம் சொல்லி விட்டான். நியாயம் இல்லாப் பேச்சு அவளைப் பொறுத்தவரை! அவன் செய்தது, அவள் கூறியது போல், சட்டப்படி குற்றம் இல்லாவிடிலும், தர்மப்படி குற்றமே. இந்தியச் சட்டப்படி, கல்யாணம் ஆன பிறகு, கணவன் தன் மனைவியை தாம்பத்ய வாழ்விற்கு வற்புறுத்தினால் அது குற்றமல்ல. மனைவியின் வயது 15-18 க்குள் இருந்தால் மட்டுமே அது குற்றம்.


இதனால் பாதிக்கப்படும் பெண்கள் ஏராளம். பல மேற்கத்திய நாடுகளில் இம்மாதிரியான செய்கை, குற்றம் என்று தான் கருதப்படுகிறது. என்றாவது ஒருநாள் இவ்விஷயத்தில் மாற்றம் வரும் என்ற நம்பிக்கை நக்ஷத்திராவிற்கு இருந்தாலும், அவன் கூறியதை அவளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.


அவன் கண்ணோட்டத்தில் அவள் அவனைப் பற்றிய தேவை இல்லாத கருத்தை உருவாக்கி கொண்ட விதம் தவறே! எதையும் யோசிக்காது அவளாக ஏற்படுத்திக் கொண்ட எண்ணங்களே இங்கு வில்லன். இருவருக்கும் அவரவர் கருத்துக்களே சரி என்ற பிடிவாதம் வேறு.


இருவரும் தத்தம் பிடியில் நிற்க, நக்ஷத்திரா அவனைப் பார்த்து முறைத்துக் கொண்டே, நீச்சல் குளத்தின் ஸ்பிரிங் போர்டில் ஏறினாள். அவளுக்கு அடிப்படை நீச்சல் மட்டுமே தெரியும். டைவிங் தெரியாது. அதற்கு தனிப் பயிற்சி உண்டு. 1 மீ ஸ்பிரிங் போர்ட்டின் நேர் கீழ், இருக்கும் தண்ணீரின் ஆழம் 11.5 அடி இருக்கும். இதுவோ 5 மீ ஸ்பிரிங் போர்ட், நீரின் ஆழம் 12.5 அடி கள். எந்தத் தைரியத்தில் குதித்தாள் என்று அவள் அறியாள். ஆனால் குதித்து விட்டாள், குருட்டுத் தைரியத்தில்.


5 அடிப் பெண், 12.5 அடி தண்ணீருக்குள். வெளியே வராது 2 நொடிகள் மேல் ஆக, துருவ் அவள் குதித்த இடத்தை வெறுமையாக நோக்கினான்.



 

Thishi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்யாயம் - 20


நீரில் இருந்து சில நொடிகள் மேலே வந்தவள், மீண்டும் நீரில் மூழ்க, துருவ் நீரில் குதித்தான். குளத்தின் ஆழத்திற்கு அவள் சென்று கொண்டிருக்க, துருவ் வேகமாக நீந்தி, அவளைப் பிடித்துக் கொண்டு ஒருவழியாக மேலே எழும்பினான்.


நீரில் மூழ்கப் போகும் ஒருவரைக் காப்பாற்றும் போது, காப்பாற்ற வருபவரும் மூழ்க அதிக வாய்ப்பு உண்டு. நல்லவேளை அந்த மாதிரியான அரும் பெரும் சேவையை நம் நாயகி செய்யவில்லை, ஆகையால் துருவ்வின் ஆயுட் காலம் அங்கே நீட்டிக்கப்பட்டது. அவளை இழுத்துக் கொண்டு மேலே கிடத்தியவன், அவள் அளவுக்கு அதிகமாக உட்கொண்ட நீரை வெளியே எடுத்து, அவளைச் சீர் செய்தான்.


அவள் சரியானதும்,

"யு ஆர் புல் ஆப் *****" என்று கடுமையாகக் கத்தவும் செய்தான். அவனது இந்த கோபம், சற்று அளவுக்கு அதிகமாகத் தோன்றியது. ஏற்கனவே மன வெதும்பி இருந்தவள், மீண்டும் ஓர் கூட்டுக்குள் போய் தஞ்சம் அடைய, அவனால் அதை ஏற்றுக் கொள்ளவும் முடியவில்லை. ஷோபா ஒருமுறை கேட்டு, பாக்யம் பல முறை கேட்டு, அவனது மனமும் படாத பாடு பட்டது.


இதெற்கெல்லாம் காரணம் அவளே ! முதல் கோணலை ஆரம்பித்தது அவளே ! இல்லையென்றால் ...அவர்கள் இந்நேரம் வேறு விதமாக இருந்திருப்பார்களோ ...அவன் அறியான் ! ஆனால் அவள் இவ்வாறு எடுப்பார் கைப்பிள்ளைப் போல் இருப்பாள் என்று அவன் நினைக்கவில்லை.


ஆற்றாமையின் விளைவு கோபம், அவன் மீதும் தான் ! அவளது சோர்ந்த முகம், சரியான தூக்கம் இல்லாதததால் அவள் முகம் சுருங்கி, கண்கள் கீழ் கரும்வளையம் கரும் மேகம் போல் உருவாக, அதனால் மனதால் அதிகம் அவதிப்பட்டவனும் அவனே!


அவளைத் தரதரவென்று இழுத்துக் கொண்டு தனதறைக்குச் சென்றவன், ஓர் துப்பாக்கியைக் கொடுத்து


"இந்தா ! இதுக்கு ஷூட்டிங் தெரியணும்னு அவசியம் இல்லே ! நான் எங்கேயும் போக போறதில்லை, அப்படியே உன்னோட பொன்னான கையால் ட்ரிக்கரை பிரெஸ் பண்ணினா, உன்னோட கனவு நிறைவேறும் அண்ட் ரிலீவ் மி அவுட் ஆப் மை மிசேரி " என்று ஆத்திரத்துடன் அவளைப் பார்க்க, ஏற்கனவே மனம் வேதனைப்பட்டுக் கொண்டு இருந்தவள்,


"ப்ளீஸ் துருவ் ! உனக்கு என்னை மன்னிக்கறது கஷ்டம் ..ஐ நோ ! பட் நான் ...தெரிஞ்சே செய்யலே ! அது எதேச்சையாக நடந்ததான்னு தெரியலே ..பட் நான் தப்பு செஞ்சிட்டேன் ..ஒருத்தரை பத்தி தெரியும் முன்னே, நானா ஏதேதோ நினைச்சது தப்பு ! ப்ளீஸ் மன்னிசிரு !" என்று மன்னிப்பை யாசிக்க, அவனோ



"நீ செஞ்சதோட விளைவு உனக்கு இப்போ தெரியாது ! யு நோ! யு கில்ட் மை ஹார்ட் அண்ட் சோல்! நாம ரெண்டு பேரும் ….ஜஸ்ட் பர்கெட் இட் …" என்று கத்திவிட்டு சென்றும் விட்டான். அவனது பேச்சில் கோபம் உண்டு, அதைத் தாண்டி கடந்த காலத்தில் நடந்தது தான் இன்றும் தொடரப் போகிறது என்ற வலியும் இருந்தது. அவனது கைத்துப்பாக்கியை வைத்துக் கொண்டு அவனது மன வருத்தங்களை அவள் ஏந்திக் கொண்டாள்.


அவன் செய்தது தவறே ! அதில் ஐயமில்லை ! ஆனால் அவள் செய்தது? அதுவும் தவறு தான் ! வேண்டுமென்றே ஒரு தவறான புரிதல் என்று கூட சொல்லலாம் ! ஒருவரை மற்றொருவர் கணிக்க வெளி நபர்களின் கருத்துக்களை, அவர்கள் பார்வையைப் பெரிதும் நாடுகின்றனர் ! ஆனால் அது எப்போதும் சரியாக இருப்பதில்லை, அது தான் இங்கே நடந்தது.


சென்னையில் அவளது வீட்டின் பக்கத்தில் ரேகா என்ற ஒரு பெண் இருந்தாள். அழகி. அழகென்றால் ஆபத்து என்று சொல்வர் அது அவள் விஷயத்தில் சரி ஆயிற்று! அவளது அழகைப் பார்த்து,



"ரேகா, நீ சினி பீல்டுக்கு போனா, சூப்பரா ஒரு ரவுண்டு வருவே !" என்று பலர் அவளுக்குத் தூபம் போட, படிப்பு எதற்கு என்று அதில் பெரிதும் நாட்டமில்லாது 12 ஆம் வகுப்பு முடித்தவுடன் கல்லூரி செல்லாது, நடனம், நடிப்பு என்று தனது கால்களை நடிப்புத் துறையில் பதிக்க முயன்றாள். பள்ளியில் படிக்கும் போதே சிற்சில வேஷங்கள் கிடைத்தாலும், பெரிய ஹீரோவின் படம் அல்லது ஏதேனும் ஒரு படத்தில் பிரதான கதாபாத்திரம், நடித்தால் தானே வாய்ப்புகள் பெருகும் என்று வாய்ப்புகளைத் தேடி அலைய, துருவ் அப்போது புகழ் பெற்று கொண்டிருக்கும் ஒரு நடிகன், அவனது புது படத்தில் நடித்தால் நன்றாக இருக்கும் என்று ஒருநாள் அவனை நாடி அவனது கேராவேனுக்கு செல்லப் போக, 15 வயது சிறுமிப் பெண்ணான நக்ஷத்திரா


"அக்கா, சினி பீல்டில் நாளைக்கு சான்ஸ் இல்லேன்னா என்ன செய்வீங்க ?" என்று வருத்தமான ஆதங்கத்துடன் கேட்க, ரேகா அவளது பேச்சினை ஒதுக்கி,


"நல்ல ஆக்டரோ, ப்ரொட்யூசரோ இல்லே, டிரேக்டரையோ பார்த்து கல்யாணம் பண்ணிக்கிட்டு செட்டில் ஆகிடுவேன்" என்று திமிருடன் பதில் அளிக்க, நக்ஷத்திரா விடாது,


"படிக்கற வயசுல படிச்சா தான் நல்லது, அப்பறம் உங்க இஷ்டம் !" என்று ரேகா படிக்க மாட்டேன் என்று இருப்பதைப் பார்த்து வருந்த, ரேகாவோ


"உனக்கு படிக்கணும்ன்னா படி ! எனக்கு தேவையில்லே " என்று சொல்லிவிட்டு, அவனது கேராவேனுக்குள் புகுந்தாள். அங்கே துருவ் மட்டுமல்ல, நக்ஷத்திராவின் முதல் படத்தின் தயாரிப்பாளரும் இருந்தார். அழகான ரேகாவைப் பார்த்தவருக்கு மனதில் ஏதேதோ எண்ணங்கள். அதை அந்த நிமிடம் துருவ்வும் படிக்காதுப் போனான்!


கரம் கூப்பிய ரேகா,

"துருவ் சார் ! உங்க புது படத்துலே, எனக்கு ஒரு சான்ஸ் கேட்டு வந்தேன். நான் நல்ல டான்ஸ் ஆடுவேன் ! நடிப்பு கூட நல்ல வரும் ! சா**** அம்மா, நய******** அவங்க படம் எல்லாம் ஒன்னு விடாம பார்ப்பேன்! அவங்கள மாறி நானும் பெரிய ஹீரோயினா வரணும்னு ஆசை" என்று கடகடவென்று பேச, அப்போது வளர்ந்து கொண்டு வரும் நடிகன் என்ற முறையில் துருவ், தயாரிப்பாளரைக் காண்பித்து,


"இவர் தான் ப்ரட்யூசர் ! இவர் தான் பைனல் செய்யணும்" என்று சொல்ல , ரேகா அவரைப் பார்க்க, அவரோ


"இன்னிக்கி ஈவினிங் என்னோட கெஸ்ட் ஹவுசில் டிஸ்கஷன் இருக்கு, அங்கே வாயேன் !" என்று அந்த விருந்தினர் மாளிகையின் முகவரியைக் கொடுக்க, துருவ்விற்கு அது ஏனோ சரியாகப்படவில்லை. அவனால் அப்போது ஒன்றும் கூறவும் முடியவில்லை.


ஆனால் இவளை எச்சரிக்க வேண்டும் என்று தோன்றியது ! அதற்குள் துருவ் நடிக்க வேண்டிய காட்சிக்கு நேரமாக, துருவ் அதற்கு செல்ல, ரேகாவும் அந்த தயாரிப்பாளரும் அவ்விடம் நீங்கினார்கள்.



ரேகாவிடம் தான் காட்சியில் நடிக்க செல்லும் முன், சிறிது நேரம் காத்திரு என்று சொல்லிவிட்டு சென்று இருந்தான். ஆனால் அவன் காட்சியில் நடித்து முடித்து விட்டு வரும் போது, அவளைக் காணவில்லை. அவளது அலைபேசி எண்ணும் அவனிடத்தில் இருக்கவில்லை. அவன் மனதிற்கு சரியாக ஒன்றும் படாது போக, இயக்குனரிடம் சொல்லிவிட்டு, அந்த விருந்தினர் மாளிகைக்கு விரைந்தான்.


அவன் எதை நினைத்து பயந்தானோ, அது தான் அங்கே நடக்கவிருந்தது. தயாரிப்பாளர், ரேகாவை வீட்டில் விடுகிறேன் என்று கூறி, காரில் செல்லும் போது, தனது மாலைச் சந்திப்பு இன்னும் சற்று நேரத்திலேயே விருந்தினர் மாளிகையில் நடக்க போகிறது என்று சொல்லி, சாமர்த்தியமாக அவளை விருந்தினர் மாளிகைக்கு அழைத்துக் கொண்டு வந்து விட்டார். அங்கே அவரும், மைக்கேலும் அவளிடம் தவறாக நடக்க முயல, தன்னைக் காப்பாற்றிக் கொள்ள, ஒரு அறையில் தன்னைத் தானே பூட்டிக் கொண்டவள்,


"இந்த கதவை உடைச்சோ, இல்லே சாவி போட்டு திறந்தோ வர முடியாதா எங்களால?" என்ற மைக்கேலின் கர்ஜனைக்குப் பயந்தாலும் மானம் உயிரை விட பெரிது என்று,


"என்னை நானே கொல்ல எவ்வளவு நேரம் ஆகும்னு நினைக்கறே ?" என்று அவளும் விடவில்லை. வெளியில் இருந்து கதவு உடைக்கப்படும் ஓசை கேட்க, ரேகா, அந்த அறையின் பால்கனியில் இருந்து கீழே குதித்து உயிரை மாய்த்துக் கொள்ள முடிவு செய்தாள்.



அவள் அந்த பால்கனியில் இருந்து குதிக்கத் தயாராக, துருவ்வும் தனது பாதுகாப்புப் படையுடன் அங்கே வர சரியாக இருந்தது. அவனைப் பார்த்தவளுக்கு என்னச் சொல்வது என்று தெரியவில்லை. மனதில் ஒருவித பயமும், பலமும் சேர்ந்து என்ன செய்வது என்று புரியாத நிலை.


"ரேகா ! டோன்ட் ஜம்ப்! நான் உனக்காக தான் வந்திருக்கேன் " என்று கூக்குரல் இட்டவன், அந்த மாளிகைக்குள் செல்ல, சற்று நேரத்தில் அந்த அறைக்கதவு உடைக்கப்பட்டு அவளை மீட்டு எடுத்தான். அவளை மீட்டு எடுக்கும் வரை, துருவ் இருந்த நிலை அவனே அறிவான். எங்கேனும் அவள் தற்கொலை செய்து கொள்ளாது இருக்க வேண்டுமே என்று பயந்தான். நல்லவேளை அவன் மீது எதோ நம்பிக்கை அவளுக்கு. அவளை மீட்டு எடுத்தவன்,




"கம்ப்ளெயிண்ட் பண்ணு ! நான் இருக்கேன் உன் கூட " என்று உறுதி அளிக்க, அவளோ காயப்பட்டு இருக்கும் அவளை நாசம் செய்ய முயன்றோரின் முகத்தில் காறி உமிழ்ந்தவள்,


"என்னோட அம்மா -அப்பா செத்திருவாங்க !" என்று குலுங்கிக் குலுங்கி அழுதாள். அவளை அழைத்துக் கொண்டு செல்லும் முன், அவன் மைக்கேல் மற்றும் அந்த தயாரிப்பாளரிடம்


"இன்னிக்கி மட்டும் தான் தப்பிச்சீங்க ! நெஸ்ட் டைம் ....." என்று தனது ஆள்காட்டி விரலைக் காட்டி மிரட்ட, அவர்கள் இருவரின் முகத்தில் அவன் மீது அளவில்லாத வெறுப்பு தான் இருந்தது. ஆனால் அவர்களால் அவனை ஒன்றும் செய்ய முடியவில்லை, ஏனென்றால் அவனது பணம் மட்டுமல்ல, அவனது வளர்ச்சியும் தான்.


ரேகா இனி வீட்டிற்குச் செல்ல மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்தாள். துருவ் எவ்வளவு எடுத்துக் கூறியும் அவள் கேட்கவில்லை. அவள் வீட்டாரைப் பொறுத்தவரை அவள் அன்றில் இருந்து காணாமல் போய் விட்டாள். அவள் துருவ்வின் காராவேனுக்குள் செல்வதை மட்டும் தான் நக்ஷத்திரா பார்த்தாள். அதன் பின் வீடு திரும்பி விட்டாள்.



அவளது வீட்டாரிடம் அதைக் கூற, அவர்களும் அந்த படப்பிடிப்பு தளத்தில் வேலை செய்வோரிடம் விசாரிக்க, ரேகா கடைசியாக எதோ காரில் ஏறிப் போனாள் என்றும் ஒரு சிலர், அவள் வெளியில் இருக்கும் பஸ் நிலையத்திற்கு சென்றாள், துருவ்வுடன் பேசிக் கொண்டு இருந்தாள், அவனுடன் சென்று இருக்கலாம், ஒரு வயதானவருடன் கடைசியாகக் காணப்பட்டாள் என்றும் விதவிதமாக பதில்கள் வர, என்ன ஏது என்று புரியாது விழி பிதுங்கினர். காவல் நிலையத்தில் புகார் கொடுக்க தயக்கம். அவர்களுக்கு இன்னும் 2 பெண் பிள்ளைகள் வேறு. அவள் தங்களை விட்டு ஒரேடியாக சென்று விட்டாள் என்று முடிவு கட்டி அவர்களும் காலப் போக்கில் அந்த வீட்டைக் காலி செய்து விட்டு வேறிடத்தில் குடி பெயர்ந்தனர்.


ஆனால் நக்ஷத்திராவின் மனதில் அன்றில் இருந்து துருவ் மீது ஒரு கெட்டவிதமான கருத்து உருவாக, பத்திரிகைகளில் அவனைப் பற்றி வந்த செய்திகளும் அதற்கு தூபம் போட்டது. துருவ் என்பவன் ஒரு "காஸநோவா" (பெண்களை வசியப்படுத்தி தனது இச்சைகளுக்கு இணங்கச் செய்பவன் என்ற பொருள்) என்ற கருத்தை மறைமுகமாக பத்திரிக்கை செய்திகளும், புகைப்படங்களும் வலியுறுத்த, அவனது நல்லப் பக்கங்களை அவன் காட்டவும் விரும்பவில்லை. அவனைப் பொறுத்தவரை நடிப்பு என்பது அவனது தொழில், அதில் அவன் என்ன செய்கிறான் என்பது தான் அவனுக்கு முக்கியம். அவனைப் பற்றிய துணுக்குச் செய்திகள் அல்ல.


தன்னைப் பற்றிய செய்திகளை அவன் மறுக்கவும் இல்லை, ஏற்கவும் இல்லை, ஆனால் இவளோ அவனை ஒரு 'பொம்பள பொறுக்கி' ஆகத்தான் பார்த்தாள். ஆனால் அவளது கருத்து இப்படி மாறும் என்றும் அவளே எதிர்பார்க்கவில்லை. மனைவி ஆனாலும், தன்னிடம் அவன் அன்று நடந்த முறை தவறு என்ற எண்ணம் மாறவில்லை ஆனால் அதே நேரம், அவனது நல்லப் பக்கங்களை அவள் இன்று காண்கிறாள். அதில் அவள் தன்னை நினைத்து கூனிக் குறுகினாள்.


ஏனென்றால் யாரும் வேண்டாம்மென்று இருந்த ரேகாவை துருவ் மேற்கொண்டு படிக்க வைத்தான். இன்று அவள் அவனது காபி தோட்டத்தில், கணக்கியல் பிரிவில் வேலையும் செய்கிறாள். ரேகாவும் நக்ஷத்திராவும் ஒருவரை ஒருவர் முன்பே அறிவர் என்று அவனுக்கு இப்பொது தான் தெரியும். ரேகாவைப் பார்த்த நக்ஷத்திரா அவளைப் பிடித்து சாட, அவள் நிதானமாக எல்லாவற்றையும் கூற, துருவ் எப்படி பட்டவன் என்று புரிந்து கொண்டாள். அது மட்டும் அல்ல, ரேகா தன்னுடைய பெற்றோரைக் கண்டு பிடித்து, இப்பொது அவர்களும் அவளுடன் !



சிதறிய குடும்பம் இன்று ஒன்றாக! துருவ்வினால் மட்டுமே அது நிகழ்ந்தது என்றும் கூறலாம். ஆனால் இருவருக்கும் இருக்கும் ஒரே சொந்தம், அவர்கள் மட்டுமே! அவர்கள் இணைந்து இருக்க வேண்டுமென்றால், அது அவன் கையில் தான். என்ன செய்யப் போகிறானோ !



**************************



மௌனம் என்ற ஆயுதம் மிகவும் பலமானது ! எதிரியை வீழ்த்தும் என்பது தெரிந்ததே ! இங்கு அவள், அவனது எதிரில் இருப்பவள் மட்டுமே ! எதிரி அல்லவே ! அவனவள் அவள் ! அவளை அந்த மௌனம் குத்தி காயப்படுத்தியது !


என்னத்தான் முயன்றாலும், அவன் பிடி கொடுக்கவில்லை. அவள் கேட்க வேண்டிய மன்னிப்புகள் ஏராளம் ! ஏதோ ஒரு விதத்தில் பரிச்சயம் ஆனவர் போல் தோன்றும் சந்தியாவின் புகைப்படத்தையே அவள் பார்த்துக் கொண்டிருக்க, துருவ் அந்த நிமிடத்தைச் சொல்லொண்ணாத் தவிப்புடன் பார்த்தான்.



ஒருநாள் அவளுக்கு அவன் யார் என்று தெரியும் போது, தான் எதிர்பார்க்கும் ஒன்று நிகழ்ந்தால் அவனுக்கு அது ஒரு விதத்தில் நிம்மதியைக் கொடுக்கும், ஆனால் பெண்ணிவளை அவனால் கணிக்க முடியவில்லை. எதை அவன், அவள் செய்ய மாட்டாள் என்று நினைக்கிறானோ, அதைத் தான் அவள் செய்கிறாள். அவன் பால் அவள் தற்போது உணரும் ஒன்று அவன் சுத்தமாக எதிர்பாராதது. அவன் அதை எதிர்பார்த்த தினங்களில் அவள் அவ்வாறு உணர்ந்து இருந்தால்….அவர்கள் இப்படியா இருந்திருப்பார்கள் ?


"அத்தையை ஏங்கேயோ நான் பார்த்திருக்கேன் " என்ற ஒற்றை வாக்கியத்தில் அவனை மிகவும் துன்புறுத்தினாள் நக்ஷத்திரா . முதலில் 'அத்தை' என்ற அடைமொழி. இரண்டு, அவள் சொன்ன ஒன்று உண்மைதான். ஆனால் அவளது சிறுவயதில் சந்தியாவைப் பார்த்து இருக்கிறாள், அவளுக்கு அப்போது வயது 6. அவள் சந்தியாவை மறந்து போனது ஒன்றும் வியப்பில்லை. அதே போல அவனையும்! தனது முகத்தைக் கையினால் அழுத்தப் பற்றி துடைத்துக் கொண்டவன்,


"ஓஹோ !" என்று மட்டும் சொல்ல, அந்த "ஓஹோ" வில் அவனுக்கு கோபம் சற்று மட்டுப்பட்டு இருக்கிறது என்று உணர்ந்தாள். இருந்தாலும் அவளுக்கு இது முக்கியமான விஷயம், அவனுக்கு அது வெறும் "ஓஹோ"-வா என்று சிறு கோபம் எட்டிப் பார்க்காது இல்லை.


"என்ன டிசைன் டா நீ" என்று கேட்டே விட்டாள். அதற்கு அவன் எப்போதும் போல், ஒன்றும் கூறாது செல்லப் பார்க்க, அவள் விடாது


"ஒன்னு ம***** சார் படம் மாறி, ஒத்தை வார்த்தை பதில், இல்லே க***** சார் படம் ஒன்னு 'பே**** ப****' . என்ன? என்னை பார்த்தா காமெடியா இருக்கா உனக்கு ?" என்று எகிற, அவன் கண்டுக் கொள்ளாதுச் சென்றே விட்டான்.


அவளுக்கு வரும் ஆத்திரத்துக்கு அவன் தலையில் எதையாவது போட வேண்டும் என்று தோன்ற, அவள் கண்ணில் வாகாய் அங்கே ஒரு பூஞ்சாடி சிக்கியது. எடுத்து தூர தூக்கி அவனை மீது எறிந்தால் என்ன என்ற எண்ணம் வலுப்பெற, அதை எடுக்கவும் போனாள். ஆனால் துருவ்வைக் காப்பாற்ற, பாக்யம் வந்ததால், அவன் தலைத் தப்பியது.


தனக்கு தெரிந்த வழியில் அவனை வழிக்குக் கொண்டு வர அவள் எடுத்த முதல் முயற்சி சத்தியாகிரகம். உண்ணாப் போராட்டத்தை அவள் கையில் எடுத்தாள்.


என்ன நடந்தாலும் அவன், அவளுடன் தான் சாப்பிடுவான். ஆனால் இரவு உணவு உண்ண அவள் வராது போக, துருவ், பாக்கியத்தைக் கேள்வியாகப் பார்க்க,


"சின்னம்மா வரலே! கதவை தட்டினேன், பசியில்லேனு சொல்லிட்டாங்க " என்ற மறுமொழி கிடைக்க, துருவ் வேறு வழியில்லாது அவளது அறைக்கதவைத் தட்டினான்.


"சாப்பிட வா !" என்று கூக்குரல் இட, அவளோ பதிலே பேசவில்லை.



அவனுக்கு பொறுமைப் பறக்க, அங்கிருந்து சென்றே விட்டான். அவன் கதவை உடைப்பான், நிழல் திரைப்பட நாயகன், நிஜத்திலும் அது போல் செய்வான் என்று எதிர்பார்த்தப் பேதைக்கு அது மூக்கறுப்பு தான்.


அவன் தன் போக்கில் சாப்பிட ஆரம்பிக்க, அவள் வெளியே வந்தாள், கோபத்துடன் !


"என் மேலே அவ்வளோ தான் அக்கறையா ?" என்று சாட ஆரம்பிக்க, அவன் நானை பிய்த்து சாப்பிட்ட படி,


"உனக்கு பசிச்சா நீயே சாப்பிடுவே!குழந்தை இல்லே நீ !" என்று இறுக்கமானக் குரலில் கூற, நக்ஷத்திரா ஆத்திரத்துடன் அவனது நானை அவன் கையில் இருந்து பிடுங்கி


"என்னை விட இந்த நான் தான் உனக்கு முக்கியம் இல்லியா !" என்று அதைச் ஒரே மூச்சில் சாப்பிட, அது அவள் தொண்டையில் போய் சிக்கிக் கொள்ள, அவளைப் பார்த்து கொண்டு இருந்தவன், பாக்யம் தண்ணீரை அவளுக்குக் கொடுக்கும் முன், அவனே கொடுத்து,


"வாட் யு சோ, சோ ஷல் யு ரீப் " என்று 'வினை விதைத்தவன் வினை அறுப்பான்' என்பதின் ஆங்கில இணையைக் கூற, இருமி சரியானவள்


"அம் ரீப்பிங் ஆல்ரெடி" என்று தான் வினையை அறுத்துக் கொண்டு தான் இருக்கிறேன் என்று வேதனையுடன் கண்களில் நீர் வழிய கூற, அவனோ அவளுக்கு என்ன பதில் சொல்ல என்று தெரியாது மனம் குமறினான். அவள் வினையை அறுத்துக் கொண்டு இருக்கிறாள் என்றால், அவன்?


தனது பதிலை விட செயல் தான் சாலச் சிறந்தது என்று புரிந்தவன்,


"சாப்பிடு தாரா ! நிறைய பசி இருக்கு உனக்கு" என்று அமைதியாகக் கூற, அவனது தாரா என்ற அழைப்பில் சற்று சாந்தமாகி, அவன் அருகிலேயே அமர்ந்து உண்டாள்.
 

Thishi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஊறுகாய் பாட்டிலில் இருக்கும் கடைசி வடு மாங்காயைத் தேடி கண்டுபிடித்து,


"இன்னும் கொஞ்சம் சாதம் ! துருவ் !அந்த தயிரை பாஸ் பண்ணு" என்று ஆணையிட்டுக் கொண்டு சாப்பிட, அவளை பார்த்து கொண்டு இருந்தவன் கண்களில் ஒரு வித வாஞ்சை .


சாப்பிடும் அவளைக் கண்டு அவன் பசி போனது போலும், அவளையே அவன் பார்த்துக் கொண்டிருக்க, அவள் தன் விரல்களில் இருக்கும் தயிர் சாதத்தை சப்பிக் கொண்டு


"என்ன பார்க்கறே ? ஐ லவ் தயிர் சாதம் அண்ட் இப்படி தான் தயிர் சாதம் சாப்பிட பிடிக்கும் எனக்கு" என்று சொல்ல, அவன் ஒரு சிறிய புன்முறுவல் பூத்து,



"ஐ நோ !" என்று கடந்த காலத்தை நினைத்துக் கூற, அவள் அதை அவன் நிகழ் காலத்தில் எப்போதோ கண்டு, இதைச் சொல்கிறான் என்று எடுத்துக் கொள்ள தோன்றினாலும் ஏதோ ஒன்று அவளைத் தடுத்தது.


சாப்பிட்டு முடித்துவிட்டவளை பாக்யம்,


"இவ்வ்ளோ பசியை வச்சுக்கிட்டு ஏன் பாப்.….சின்னமா பசி இல்லன்னு சொன்னீங்க ?" என்று வினவப் போக, நக்ஷத்திரா உரிமையாக அவரது முந்தானை தலைப்பில் கையைத் துடைத்து கொண்டு,



"என்னை பாப்பானு கூப்பிடுங்க ! முன்னே என்னோட அம்மா அப்படி கூப்பிடுவாங்க ! அப்பறம் இன்னொருத்தங்க நீங்க கூப்பிடற மாறி கூப்பிடுவாங்க, ஆனா அவங்க ....பர்கெட் இட்....நீங்க அப்படியே கூப்பிடுங்க ! ஐ பீல் ஹோம் " என்று சொல்லிவிட, துருவ்வின் முகம் போன போக்கை நல்லவேளை அவள் பார்க்கவில்லை.



"பாப்பானு கூப்பிடறேன் ! ஆனால் சாப்பிடாம இருக்க கூடாது" என்று அவள் அன்னை இடத்தில் இருந்து கண்டிப்புடன் கூற, அவளும்

"எஸ் பாக்கியம் அத்தே" என்று கலகலப்பானாள்.



கலகலக்கும் அவளை எப்படி எடுத்துக் கொள்வது என்று துருவ் தடுமாறினாலும் வெளியில் காட்டாது இருக்க அவனது நடிப்புத் தொழில் கைகொடுத்தது.


தன்னை உற்று நோக்கும் அவனை,


"என்ன அப்படி பார்க்கறே ? நான் ரொம்ப அழகா இருக்கேனா?" என்று விளையாட்டாகக் கேட்க, அவன் ஒன்றும் சொல்லாது, முக்கியமாக அவளைச் சீண்டாது,


"குட் நைட் !" என்று மட்டும் சொல்ல, அவள்,


"ஐ நோ யு ! உனக்கு என் மேலே கொஞ்ச பொறாமை ! லைக் இப்போ பாக்யம் அத்தே .." என்று ஆரம்பிக்க, அவன் சற்று அவளை முறைத்து விட்டு, பின்னர் வெறுமையாக அவளைப் பார்க்க,


"உனக்கு அவங்க பாக்யம் மா, சோ எனக்கு அத்தே ! அண்ட் அவங்க சொன்னா இந்த அடங்கா பிடாரன் கொஞ்சம் கேக்கறான், சோ சம் வேர், நீ அவங்களை அம்மா மாறி பார்க்கறே , நான் அதுனால் என் மாமியார் மாறி பார்க்கறேன், இப்போ நாங்க ரெண்டு பேரும் ராசி ஆகி, உன்னை பாடு படுத்த போறோம்னு உனக்கு கொஞ்சம் பயம்" என்று ஆள்காட்டி விரலில் ஒரு சின்னப் பகுதியைக் காட்டி கூற, அவன்


"நிறைய பேசி டையர்டா இருப்பே, போய் தூங்கு ! ஷோபா ஆன்டி நாளைக்கு வருவாங்க " என்று அவளை நீங்க, மாடிப் படி ஏறும் அவனையே பார்த்து கொண்டு இருந்தவள்,


"துருவ் !" என்று விளித்தாள், சற்று சத்தமாக.


என்ன என்பது போல் அவன் அவளைக் கேள்வியாகப் பார்க்க, உடனே ஓடி அவனை நாடியவள்


"என்னை நீ காப்பாத்தி, இன்னிக்கி இப்படி உன் முன்னாடி உயிரோட நிக்க வச்சு இருக்கே ! யு ஆர் எ குட் மேன் ! அண்ட் நிறைய தேங்க்ஸ் அண்ட் ஆல்சோ சாரி சொல்லணும் ! மே பி இந்த வாழ்க்கை முழுக்க சொல்லுவேன்னு நினைக்கிறேன். நமக்குள்ள நடந்த அது …..நான் அதை பத்தி பேச விரும்பலே. ஒருவேளை நடக்காம இருந்தான்னு நினைக்க தோணுது, ...ஏன்னு தெரியலே..ஆனா நீ என்னை பாதிக்கறே ..எங்கையாவது உன்கிட்ட வெக்கம் இல்லாம ஐ லவ் யு னு சொல்லிடுவேன்னா...தெரியலே...பட் எனக்கு உன் கூட இருக்கணும்

இப்படி பேசாம என்னை தண்டிக்காதே ! அம் ….பார்வதி மா என்னை நல்லாத்தான் வளர்த்தாங்க ! அவங்க வளர்ப்புனு என்னோட வாய்க்கு காரணம்னு சொல்ல முடியாது..நான் மாறுவேன்னு நான் நம்பறேன். நீயும் என்னை நம்பு ப்ளீஸ்" என்று கண்களில் நீர் தளும்ப அவள் கூற, அவனை உருக்கி கொன்றே விட்டாள், அவனது செல்ல ராட்சசி.


அவனுக்கு ஆயிரம் விஷயங்கள் உண்டு சொல்ல, ஆனால் சொல்லும் நேரம் இதுவல்லவே. அவன் மட்டும் அவளிடம் பேசாது, பாரா முகம் காட்டி சந்தோஷமாகவா இருந்தான். அல்லவே ! எங்கே பேசினால், எல்லாவற்றையும் சொல்லுவ விடுவானோ என்ற பயமும் தான். அவள் நெருங்க நெருங்க, அவன் விலகினால் தான் அவளுக்கு நல்லது என்று உறுதி பூண்டு விட்டான். முன்னர் அவளைச் சீண்டும் போது, அவள் சீறுவாள். அந்த கோபத்தை அவள் கைவிடக்கூடாது என்று அவன் விரும்பினான். ஆனால் இன்று அவளோ அவனை விரும்ப ஆரம்பித்து விட்டாள். அது அப்பட்டமாக அவளது கண்ணில், உடல் மொழியில் தெரிகிறது.


வாய் வார்த்தையால் அவன் கூறவில்லை. அவனும் தான் கூறியது இல்லை. அதற்காக காதல் இல்லை என்று ஆகி விடுமா ?


அவளது காதலை ஏற்கும் நிலையில் அவன் இல்லை. ஆனால் தன்னிடம் தன் மீது நம்பிக்கை வை என்று கெஞ்சும் இவளை அவனால் வெறுமை, கடுமை என்ற முகமூடி போட்டுக் கொண்டு விரட்ட இஷ்டமில்லாது,


"இட்ஸ் ஓகே தாரா ! போய் தூங்கு" என்று சமாதானமாக அவளிடம் கூற, முற்றிலும் எதிர்பாராத தருணத்தில் அவனை அணைத்துக் கொண்டவள், ஆர்வமாக அவன் முகத்தைப் பார்த்து, கண்ணில் நீர் வழிய


"தேங்க யு துருவ் !" என்று கூறிவிட்டு சற்று எம்பி, அவனது தாடி வைத்த கன்னத்தில் தனது முத்திரையைப் பதித்து ஓடியே விட்டாள். அதுவும் தனது அறைக்கதவைத் தாளிடும் முன்,


"ப்ளீஸ் ஷேவ் பண்ணு !இதை அடிக்கடி நான் சொல்லற மாறி வைக்காதே" என்று மறைமுகமாக இனி அவன் கன்னத்தில் எப்போது வேண்டுமென்றாலும் தனது அன்பை வெளிக்காட்டுவாள் என்று சொல்லியே விட்டாள்.



'கத்தி கத்தி கொன்னா, இப்போ கொஞ்சி கொஞ்சி கொல்லறாளே' என்று நினைக்காது அவனால் இருக்க முடியவில்லை. அவள் மீதான ஈர்ப்பு அவனுக்கு பெருகத் தான் செய்தது, அதற்கு அத்தாட்சி அவன் அடுத்த நாள், தனது தாடி அவதாரத்தை விடுத்து மண்ணின் மைந்தனாக கம்பீரமான மீசையுடன் காட்சி அளிக்க, அவள், அவனை முகமலர பார்த்து,


"இம்ப்ரெஸிவ், ஹாண்ட்ஸாம் அண்ட் வேற என்ன சொல்ல? மை கிரீக் காட்" என்று அவனைப் பார்த்து கண்ணடித்து, அவனை அதிரச் செய்தாள்.


அதில் அவன் முகம் சிவந்து போனதோ என்று யோசிக்கும் அளவு, அவன் முகம் சிவந்து பின்னர் உடனே எப்போதும் போல் ஆக,


"இந்த பலா சுளை இருக்குலே , அதை எடுக்க ரொம்ப கஷ்டப்படணும் ! அந்த மாறி தான் நீ ! என்னோட துருவ் முன்னே இந்த தாடிக்குள்ள சேப்பா, ஈஸியா மறைஞ்சு போவான், பட் …." என்று அவன் கன்னத்தைப் பிடித்து மென்மையாக கிள்ளியவள்,


"இப்போ என்னோட துருவ் என்கிட்ட இருந்து சீக்கிரமா எஸ் ஆகவே முடியாது...உன்னோட பெர்சனல் பாடி கார்ட் , அதான் அந்த தாடிப் பையனை உன்னோட வீட்டம்மா வேலைய விட்டு துரத்தியாச்சு" என்று உரிமைக் கலந்து பேச, அதன் பின் அந்த தினம் அவன் அவளிடம் பேசவேயில்லை.



அப்போது தான் அவள் அதை உணர்ந்தாள். சற்று உரிமையாக அவனிடம் பேசினால், அவன் பேசா மடைந்தன் (மடந்தையின் பெண்பால் !!!) ஆகிவிடுகிறான். அப்படிப்பட்ட அமைதி புறா துருவ்வை அவளுக்குப் பிடிக்கவில்லை, வம்பிழுக்கா விட்டாலும், தன்னிடம் ஒழுங்காகப் பேசும் துருவ்வை அவள் மிகவும் நாடினாள். இருந்தாலும் அவனைப் பற்றி


'ஆமாம் ! இவரு மட்டும் பேசினா நான் பேசணும் ! போடாங் ….' என்று தூய சென்னைத் தமிழில் மனதில் வையாது இல்லை.


சமாதானமாக அடுத்த தினம் அவனிடம்

"சரி சரி, நான் தான் உன் பொண்டாட்டின்னு உனக்கும் எனக்கும், ரெஜிஸ்டர் ஆபீசுக்கும், மீடியாக்கும் மட்டும் தெரிஞ்ச ரகசியமா இருக்கட்டும். இனி நான் உன்கிட்ட நான் தான் உன்னோட வைஃப்னு சொல்ல மாட்டேன். அதுக்காக மூஞ்சிய தூக்கி வைக்காதே ! சகிக்கலே ! எதோ கொஞ்சம் ஹாண்ட்சமா இருக்கே, அந்த கொஞ்ச நஞ்ச அழகு நீ மூஞ்சிய தூக்கி வச்சா...என் வாயாலே எப்படி சொல்லுவேன்...நீயே உன் முகத்தை பாரு " என்று அவனை ஓர் ஆளுயர கண்ணாடி முன் கொண்டு நிறுத்தினாள்.


அவன் முன் நின்று, அவன் முக பாவனைகள் போல் அவளும் முகத்தை வைத்துக் கொள்ள, இந்த சிறுபெண்ணின் சாமர்த்தியமான விளையாட்டுப் பேச்சில் அவன் கவரப்பட்டு, புன்னகைப் பூக்க, அவனைக் கண்ணாடியில் பார்த்துக் கொண்டே,தனது கையைப் பின்னால் எடுத்துக் கொண்டு, அவனது கன்னக்குழியில் தனது ஆள்காட்டி விரலை வைத்தவளுக்கு கடந்த கால ஞாபகம் ஒன்று வர, ஒரு நிமிடம் தன்னையும் மீறி அவனை


"சாம் !" என்று விளித்தாள். அதில் துருவ் கல்லாய்ச் சமைந்தான்.
 
Status
Not open for further replies.
Top