சில வருடங்கள் முன் ,
துருவ், கடற்கரையோரம் உள்ள தனது பங்களாவின் பிரும்மாண்டமான விருந்தினர் அறையில் துயிலில் இருக்க, அலைபேசியானது அலறியது.
"ம்ப்ச் ..ஹனி அந்த போனை ஆப் பண்ணு " என்று ஒரு பெண் அவனை அணைத்த படி தூக்கக் கலக்கத்தில் உளற, அவனோ
"ஷட் யூர் டேம் மவுத் சுவாதி " என்று கூறியவன் , அலைபேசி அழைப்பை ஏற்றான் .
மறுமுனையில் உதவியாளன் சூர்யா ,
" சார்! வீட்டு பால்கனி வழியா வந்து பாருங்க ! ஒரே ஃபேன்ஸ் கூட்டம் " என்று கூற , அவன் ஒன்றும் பேசாமல் தனது இரவு உடையான பைஜாமா மீது மேல் சட்டை எதுவும் போடாது, நைட் கோட் ஒன்றை அணிந்து வலிமையான தனது மார்பின் முன்பகுதி தெரியும் படி அணிந்துக் கொண்டு, கீழே இருக்கும் விருந்தினர் அறையில் இருந்து , வெளியே வந்தவன் , 2 படிகளாகத் தாவி தாவி தனது பிரதான படுக்கை அறைக்குள் நுழைந்து , அங்கிருக்கும் பரந்த பால்கனிக்குச் சென்றான். அங்கே இருந்து கீழே பார்க்க , தனது பங்களாவின் கேட்டின் முன் குழுமி இருந்த ரசிக பெருமக்கள்,
"ஹேப்பி பர்த் டே துருவ் " என்றும் "பிறந்த நாள் வாழ்த்துக்கள் தலைவா " என்ற போஸ்டர்களும் , குரல்களும் தென்பட்டு ஒலிக்க, துருவ் தனது கை அசைக்க, அங்கிருந்தக் குரலோசைகள் பன்மடங்கு காதைக் கிழிக்கும் அளவு அதிகரித்தது . அதில் மேலும் புன்னகைப் பூத்தவன் , சில பல முத்தங்களைப் பறக்க விட்டவன் ,
"லவ் யு கைஸ் " என்று கூக்குரல் இட்டான். அதில் அவன் ரசிக பெருமக்கள் மேலும் மகிழ்ச்சி அடைந்து கரகோஷம் எழுப்பினர் .
"தலைவா ! உன் ஆட்டோகிராப் ! " "தலைவா உன்னோட ஒரு செல்பி " "துருவ் என்னை கல்யாணம் பண்ணிக்க" என்ற குரல்கள் வேறு ஆரம்பிக்க, அவன் தனது பால்கனியில் இருந்து கீழே செல்ல எத்தனித்தான். அப்போது அவன் படுக்கை அறைக்குள் வந்த சுவாதி
"ஹனி நானும் ரெடி ! அப்படியே உன் பர்த் டே இல் நம்ம கல்யாண விஷயத்தையும் சொல்லிறலாம் " என்று முகம் நிறைய ஒப்பனையும், பளபளவென்று ஒரு உடையையும் போட்டுக் கொண்டு வர , அவளை ஒற்றை புருவம் தூக்கிப் பார்த்தவன் ,
"யார் கல்யாணம் சுவாதி” என்று கேலியாக கேட்க, சுவாதி துணுக்குற்று
“நம்ம கல்யாணம்ன்னு சொன்னேன் துருவ்” என்றாள், சற்று அழுத்தமாக.
“நம்ம கல்யாணமா..இன் யூர் ட்ரீம்ஸ் சுவீட்டி” என்று இளக்காரமாகக் கூறியவன், முகத்தைக் கழுவியப்பின், துடைத்துக் கொள்ளப் பயன்படுத்திய துவாலையை அவள் மீது எறிந்தான்.
“அப்போ! நேத்து ஐ லவ் யூ சொன்னியே அது! குடிச்சிட்டு உளறினியா?” என்று அவளும் சீறினாள்.
“இப்போ கூட ஐ லவ் யூ கைஸ்ன்னு வெளியே இருக்கிற ஃபேன்ஸ் கிட்ட சொன்னேன். அங்க அட்லீஸ்ட் 50 பொண்ணுங்க...நான் ஐ லவ் யூ சொல்லற பொண்ணுங்க எல்லாரையும் கல்யாணம் பண்ண முடியுமா..பாலி கேமி ஒரு க்ரைம், சுவீட்டி! ஜெயில் களி திங்க ஆசை இல்ல.
லுக்! வி போத் ஹேட் நீட்ஸ். அண்ட் நம்ம தேவைகள் எங்க முடியுமோ, அங்க முடிஞ்சிது. அதுக்காக நீ பீல் பண்ணலன்னு தெரியும்..உனக்கு வாய்ப்புகள் வேணும்..என்னோட அடுத்த படத்துல நீ தான் மெயின் ஹீரோயின். இப்போ ஈகுவேஷன் சால்வட்” என்று கூறினானே பார்ப்போம், அவள் முகத்தில் ஈயாடவில்லை.
அவனை பற்றி தெரியும், இருந்தாலும் முகத்தில் அடித்தார் போல் அவன் கூறியது, அவளைத் துன்புறுத்தியது, மனதளவில் அது பாதித்தது. ஆனால் அவளால் ஒன்றும் சொல்ல முடியாத நிலை. அவன் கூறுவது சரி தான், அவளுக்கு வேண்டியது பட வாய்ப்புகள், அதற்கு இம்மாதிரி எத்தனையோ ஆட்களைச் சமாளிக்க வேண்டும். அவனை மனதில்,
“சகவுண்ட்ரல்! ரோக்! “ என்று திட்டத் தான் முடிந்தது. திரைப்படத்துறையில் தனக்கென்று ஒரு இடம் தக்கவைக்கும் வரை, இம்மாதிரி நிகழ்வுகள் தொடரத் தான் செய்யும், என்ன செய்வது கடல் ஆழமானது என்று தெரிந்து குதித்து விட்டாள், இனி மூழ்காமல் மீள வேண்டும்.
அவள் யோசனையைக் கலைத்தவாறு துருவ்,
“சுவீட்டி! பின் டோர் வழியா போ” என்று கூற, அவள் தன்னைத் தானே கட்டுப்படுத்த முடியாமல்,
“ஏன் முன் வாசல் போனா என்ன ஆகும்?” என்று சற்று தெனாவெட்டாக கேட்டே விட்டாள்.
அதில் ஏதோ பெரிய ஹாஸ்யத்தைக் கேட்டது போல் சிரித்தவன்,
“என்ன ஆகும்? இப்போ நடிச்சு கிட்டு இருக்கியே ஒரு படம், அதிலிருந்து உன்னை தூக்கிடுவாங்க! ஏன்னா அந்த பட ஹீரோக்கும் எனக்கும் ஆகாதுன்னு ஊர் அறிஞ்ச சேதி!
நாளைக்கு என் அடுத்த படம் நின்னு போச்சுன்னா? என்ன செய்வ? “ என்று அகந்தையுடன் துருவ் கூற, மறுபடியும் அவள் ஸ்தம்பித்தாள். துருவ் போன்ற பெரிய கதாநாயகர்கள் தான் படத்தின் முக்கிய கதாபாத்திரமானக் கதாநாயகியை முடிவு செய்வர். அவர்கள் குறுக்கீடு இல்லாது, படம் வெளியே வராது. இதில் அதிகபட்ச பாதிப்பு சுவாதி போன்ற ஆரம்ப கட்டத்தில் இருக்கும் நாயகிகளுக்கு தான்.
ஆகையால் கிடைத்த வாய்ப்பை விட்டு விடாதே என்ற யாரோ கூறிய அறிவுரை அவள் காதில் ரீங்காரம் இட, அங்கிருந்து செல்ல எத்தனித்தாள்.
“ஸீ யூ சுவீட்டி! மிஸ் யூ! சீக்கிரம் பார்ப்போம்!” என்று அவளைக் கண்டு கண்ணடித்தவன், ஒரு பறக்கும் முத்தத்தைக் கொடுத்து விட்டு, ஒரு சாம்பல் நிற டி ஷார்ட், நீல நிற ஜீன்ஸ் பேண்ட் சகிதம் கீழே சென்றான். செல்லும் அவன் முதுகைப் பார்த்துக் கொண்டு இருந்தவளுக்கு, அவன் கூறிய கடைசி வாக்கியத்தில் கோபம் வந்தது.
“உன்னை நான் பார்க்க மாட்டேன், டேம் இட்” என்று முணுமுணுத்தாள், ஆத்திரத்தில்.
“சுவாதி மேம்! உங்களுக்கு கார் அரேஞ் பண்ணி இருக்கு. கொஞ்சம் முகத்தை மூடி கிட்டு போறீங்களா?” என்று சூர்யா அவளது யோசனையைக் கலைக்க, சுவாதி அங்கிருந்து சென்றாள்.
இங்கே தனது வீட்டின் முன்பகுதிக்கு வந்த துருவ், தனது ரசிக பெரு மக்களை கண்டு கை அசைத்து, அனைவரையும் உள்ளே அனுப்பும் படி சைகை செய்தான்.
எல்லோரும் உள்ளே ஓடி வர, அவர்கள் வாழ்த்துக்களைப் பெற்று கொண்ட துருவ், சூர்யா ஏற்பாடு செய்து இருந்த, ஒரு பெரிய கேக்கை தனது ரசிக பெருமக்கள் முன் வெட்டி, தனது பிறந்தநாளைக் கொண்டாடினான்.
கேக் துண்டுகளை, அவன் வீட்டில் வேலை செய்பவர்கள் விநியோகிக்க, அங்கு இருந்த ஒரு பெண், அவனிடம் வந்து, அவனுக்குக் கேக்கை ஊட்டிவிட்டு, அவன் எதிர்பாராத நேரத்தில் அவன் கன்னத்தில் முத்தமிட, அதில் அதிர்ச்சியும், ஆச்சரியுமாக அவன் முக உணர்வுகளுடன் ஒரு புகைப்படமும் எடுக்கப்பட்டது.
அந்தப் புகைப்படம், சமூக வலைதளத்தில் உலா வர, எண்ணற்றப் பிடித்தங்கள், கருத்துகள் வேறு அதற்கு!
“நடிகர் துருவ், ரசிக பெருமக்களுடன் இவ்வாறு தன் பிறந்தநாள் கொண்டாடினார் “ என்ற தலைப்பும். அதை பார்த்துக் கொண்டிருந்த அவள்,
“பொறுக்கி! மூஞ்சிய பாரு! ஈ ன்னு இளிச்சு கிட்டு! இவனை எல்லாம் “ என்று மனதில் அர்ச்சித்துக் கொண்டு இருந்தாள்.
“என்ன பாப்பா! பார்த்து கிட்டு இருக்கே? இந்த ஸ்மார்ட் போன் வந்தாலும் வந்திது.. எல்லாரும் அதையே தடவிக்கிட்டு, அதுல வரத ஏதோ ஒண்ணை பார்த்து சிரிச்சு கிட்டு, புலம்பி கிட்டு, பக்கத்துல என்ன நடக்குதுன்னு தெரியாம..” என்று ஆரம்பித்தார் அவளது அன்னை பார்வதி. பார்வதி அந்த காலத்தில் ஒரு துணை நடிகை, அதன் பின், தொலை காட்சி தொடர்களில் அம்மா வேடம், வேலைக்காரி வேடம் என்று தனது வயிற்றுப் பிழைப்பை ஓட்டிக் கொண்டு இருப்பவர்.
பார்வதியின் கேள்விக்கு ஒன்றும் கூறாது, அவள் தனது உதட்டுச் சாயத்தை சற்று மட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டாள்.
“அது ஏன் அழிக்கர பாப்பா? நல்ல தான் இருக்கு அந்த லிப்பு ஸ்டிக்கு. “ என்று அவர் கூறியதை காதில் வாங்கி கொள்ளவில்லை.
“டைரக்டர் தம்பி திருப்பி மேக் அப் போட்டு கிட்டு வான்னு சொல்ல போறாரு! அப்போ தான் உனக்கு புரிய போகுது. நான் அந்த கால நடிகை ன்னு ஒரு மட்டு மரியாதை இல்ல உனக்கு” என்று புலம்ப ஆரம்பிக்க, அங்கே வந்த அந்தப் படத்தின் இயக்குனர் மூர்த்தி,
“வாவ்! நக்ஷத்திரா! மினிமல் மேக் அப்! குட். சீன் ஞாபகம் இருக்குது இல்ல? அந்த குட்டி பொண்ணை கட்டிப்பிடிச்சு அவ கண்ணீரை துடைச்சு விட்டு, நீங்க சொல்லணும்,
‘உன் வாழ்க்கையில் இனி இருட்டு வராது, வரவும் விட மாட்டேன்’ . டையலாக் டெலிவரி போது, உங்க கண்ணுல தண்ணி நிக்கணும், ஆனா வெளிய வர கூடாது. க்ளிசிரின் அதுக்கு தேவையான அளவு யூஸ் பண்ணுங்க” என்று கூறி முடிக்க, நக்ஷத்திரா
“கிளிசரின் தேவை இல்ல சார்! இந்த நாட்டுல இருக்கற பல பெண்கள், குழந்தைகளுக்கு ஏற்படற கேவலம் இது. உண்மை நிலவரத்தை நினைச்சு பார்த்தாலே எனக்கு கண்ணீர் தானா வந்திரும். அட்லீஸ்ட் இங்க படத்தில் நீதி சட்டுன்னு கிடைக்குது. ரியல் லைஃப்ல லாயாராக ஆகி, நான் செய்யணும்ன்னு நினைச்ச ஒன்னு, அட்லீஸ்ட் படத்துல செய்யறேன். “ என்று கடைசியில் அவள் குரல் வேதனையில்.
அதனை உணர்ந்த மூர்த்தி, அவள் தோளை பிடித்து,
“நக்ஷத்திரா! டோன்ட் லூஸ் ஹோப்! இப்போ ஷாட்டுக்கு போகலாமா?” என்று வினவ, கடமை உணர்ந்த நக்ஷத்திரா, மூர்த்தியைத் தொடர்ந்து சென்றாள்.
காட்சிக்கு எல்லோரும் தயாராக, மூர்த்தி “ஆக்ஷன்” என்று கூறவும், நக்ஷத்திரா அந்த கதாபாத்திரமாக வாழ முனைந்து, வெற்றியும் கண்டாள்.
அவ்வளவு தத்ரூபமாக, அவள் நடிப்பு அமைய, இயக்குனர் ‘கட் கட்’ என்று சொன்னவுடன், எல்லோரும், அவள் நடிப்பை வியந்து பாராட்டினார்கள்.
அன்றைய படப்பிடிப்பு முடியும் தருவாயில், மூர்த்தி அவளிடம் ஒரு பரிசைக் கொடுத்து வாழ்த்தி,
“உனக்கு இந்த சினி பீல்டுல் நிறைய நல்ல எதிர்காலம் இருக்கு மா” என்று கூற, நக்ஷத்திரா
“இந்த சினி பீல்ட்க்கும் எனக்கும் இருக்கும் சம்பந்தம் இந்த படத்தோட முடியனும் ன்னு ஆசைப்படறேன் சார்” என்று பதில் உரைக்க, மூர்த்தி அவளது வெளிப்படையானப் பேச்சில் திகைத்து போனார்.
அதன் பின், நக்ஷத்திரா வீடு திரும்புகையில், பார்வதி எப்போதும் போல் புலம்பல்,
“அந்த டைரெக்டரு, அவ்வளவு சொல்லியும் உனக்கு என்ன பிடிவாதம் பாப்பா? ஆட்டோல தான் வீடு திரும்பணுமா? அவங்க தான் கம்பெனி கார் ஏற்பாடு செய்யறேன்னு சொன்னாருலே?” என்று ஆரம்பிக்க, நக்ஷத்திரா,
“அண்ணே! இங்க வண்டியை நிறுத்துங்க! “ என்று ஆட்டோவை நிறுத்தச் சொல்லி, பணத்தைக் கொடுத்து விட்டு, பார்வதியுடன் வீடு வந்தாள். வழி நெடுங்கிலும், பார்வதியின் புலம்பல் பேச்சு தான் , தனக்குக் காது என்ற உறுப்பு ஒன்றே இராதது போல் அவள் பாவித்தாள்.
வீட்டை திறந்துக் கொண்டு வந்த நக்ஷத்திரா,
“அம்மா! பாருங்க, இன்னிக்கி காரு கொடுக்கறேன்னு சொல்லுவாங்க, நமக்கும் அந்த வசதி பழகி போகும். ஆனா படம் முடிஞ்சத்தும் என்ன செய்வீங்க?” என்று கேட்க, பார்வதி கூலாக,
“அடுத்த கம்பெனி கார் கிடைக்கும்” என்றாரே பார்ப்போம், நக்ஷத்திரா அசராது
“இது தான் நான் முதலும், கடைசியுமா நடிக்க போற படம். “ என்று தீர்மானமாக உரைத்து விட்டாள்.
“யாரை கேட்டு நீ இதை முடிவு பண்ணின? “ என்று பார்வதி சீற ஆரம்பிக்க, நக்ஷத்திரா
“படிக்க போறேன். எனக்கு படிக்கணும், லாயர் ஆகணும். படத்துல லாயர் வேஷம் போடறதுல எனக்கு இஷ்டம் இல்ல. நிஜத்துல நான் கருப்பு கோட் போடணும்” என்று வாதாட , பார்வதி, கோபமாக
“நீ படிச்சு கிளிச்சது போதும். ஒழுங்கா அடுத்த படம் ஒன்னு வந்து இருக்கு. பெரிய பேனர், பெரிய ஹீரோ, நீ செகண்ட் ஹீரோயின். அட்வான்ஸ் வாங்கிட்டேன், அதுல தான் இந்த மாசம் கடன் கொஞ்சம் அடைச்சு இருக்கேன், ஒழுங்கா போய் நடி! இல்ல தெருவுல தான் நிக்கணும் நாம ரெண்டு பேரும்” என்று இது தான் தன் முடிவு என்று அறிவிக்க, நக்ஷத்திரா
“யாரை கேட்டு அட்வான்ஸ் வாங்கினீங்க? என்னால நடிக்க முடியாது! ஹீரோ சென்ரிக் மூவில ஹீரோயின், ஒரு வேஸ்ட் பீஸ், ஜஸ்ட் சாங் மட்டும் டான்ஸ், அப்பறம் தேவை படர இடத்துல, அவன் பின்னாடி நிக்கணும். அதுக்கு நான் வரல. வேணும்ன்னா நீங்க போய் நடிங்க, கதை சம்பந்தமே இல்லாத இடத்துல வர பாட்டுக்கு டான்ஸ் ஆடுங்க!” என்று அவளும் கத்த, பார்வதி அவளுக்கு ஒரு அறை கொடுத்து,
“நீ இந்த படம் நடிக்க தான் வேணும். ஹீரோ துருவ்” என்று கூற, நக்ஷத்திரா
“நான் செத்து, என் பொணத்த நடிக்க வைங்க, முடிஞ்சா” என்று தன் பிடியில் நின்றாள்.
அதே நேரம், துருவ் தனது காரில் அமர்ந்து இருந்தான். முன் இருக்கையில் அமர்ந்த சூர்யா, அவனிடம்
“ஏன் சார்! இதை போட்டோ எடுக்கவிடலே?” என்று தாளாது கேட்க, துருவ்
“உங்க அம்மா இப்போ எப்படி இருக்காங்க சூர்யா? ஆபேரேஷன் முடிஞ்சு பரவாயில்லையா?” என்று பேச்சை மாற்றினான்.அவன் கூற்றில் இருந்தே, அவனுக்குத் தான் பேச விரும்பியது பிடிக்கவில்லை என்று புரிந்து கொண்ட சூர்யா,
“நல்லா இருக்காங்க! எனக்கு பொண்ணு பார்க்கிற அளவுக்கு தேறிட்டாங்க” என்று கூற, புன்னகை முகமாய் துருவ்
“ம்ம்! தட்ஸ் குட். கேக்கவே சந்தோஷமா இருக்கு! நல்ல பார்த்துக்கோங்க அம்மாவை” என்று பதில் உரைக்க, சூர்யா தயங்கிய படி,
“அவங்க உங்களை நேரில் பார்க்க விரும்பினாங்க! நான் தான் நீங்க பிசின்னு சொல்லிட்டேன்.” என்று கூறியது தான் தாமதம், துருவ் தனது வாகன ஓட்டுனரிடம்,
“டேவிட்! காரை சூர்யா வீட்டுக்கு திருப்புங்க” என்று கூறிவிட்டான். அதிர்ச்சி மற்றும் ஆச்சர்யத்தில் சூர்யா,
“சார்..” என்று ஆரம்பிக்க, துருவ்
“உனக்கு பனிஷ்மெண்ட்! ரெண்டு நாள் நீ வீட்டுக்கு வர கூடாது! நான் பிசி யா இல்லையா நான் தான் முடிவு செய்யணும். நீ இல்ல! புரியுதா?” என்று கண்டிப்பாகக் கூறினாலும் அதில் குறும்பு தவிழ, சூர்யா ஒன்றும் கூறாமல் தனது முதலாளியை எண்ணி வியந்தான். துருவ் என்றுமே புரியாத புதிர் தான் அவனுக்கு.
சுவாதி போன்ற பெண்களிடம் ஒரு முகம், ரசிகர்களிடம் ஓரு முகம், சற்று நேரம் முன் அவர்கள் ஒரு இடம் சென்று இருந்தார்கள், அங்கே அவனா துருவ் என்ற விதத்தில் நடந்து கொண்டான்.
காலை முதல் இரவு வரை, சூர்யா அவனுடன் தான் இருக்கிறான், அப்படியும் துருவ்வை அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை. இப்போது அவர்களது சிறிய வீட்டிற்கு வேறு வருகை தர போகிறான், சூர்யாவால் நம்ப முடியவில்லை. துருவ் ஒரு முன்னணி நடிகன், 5 நிமிடம் ஏதேனும் ஒரு விழாவிற்குத் தலையைக் காட்ட வேண்டுமென்றால், அதற்கு அவன் வாங்கும் பணம், சூர்யாவுக்கா தெரியாது?
இன்று அவனோ எவ்வித பந்தா எதுவும் இன்றி, அவன் வீட்டில் அவன் அன்னையுடன் அரை மணி நேரம் இருந்தான். அவர் அளித்த உணவை உண்டான் எவ்வித தயக்கம் இன்றி.
அப்போது அவனுக்கு ஒரு முன்னணி நடிகை இடம் இருந்து அழைப்பு வர, அவனோ அதை ஏற்க வில்லை. சூர்யாவின் மூலம் தான் தற்போது பிஸியாக இருப்பதாக கூறும் படி கூறிவிட்டான்.
வீடு செல்லும் வழியில் சூர்யா,
“சார்! உங்களை என்னால் புரிஞ்சிக்க முடியல” என்று வெளிப்படையாகக் கூற, துருவ் ஒற்றை வார்த்தை பதிலாக,
“நானும்” என்று கூறிவிட்டு வெளியே வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான். கண்கள் மட்டும் தான் சுற்றுப்புறத்தைப் பார்த்தது, ஆனால் மனமோ பழைய ஞாபகங்களில் உழன்று போக, தனது வாலெட்-ஐ எடுத்து அதில் இருந்த ஒரு புகைப்படத்தை வருடினான்.
சில வாரங்கள் கழிந்த நிலையில், துருவ் தனது அடுத்தப் படத்திற்கு தயாரானான். அந்த படத்தில் தான் சுவாதி, கதாநாயகி ஆக நடிப்பதாக இருந்தது, ஆனால் இப்போது இல்லை. ஏனெனில் ஒரு குருட்டு அதிர்ஷ்டமாக, அவளுக்கு ஒரு ஹிந்தி படத்தில், பிரபல ஹிந்தி நடிகரின் தங்கை வேடம் கிடைத்து இருக்க, துருவ்வின் படத்தில் நடிக்க விருப்பம் இல்லை என்று சற்று அலட்சியமாகக் கூறிவிட்டாள் என்று சூர்யா துருவ்விடம் கூறிக் கொண்டு இருக்க, துருவ் பளு தூக்கும் முயற்சியில் ஈடுபட்டு கொண்டு இருந்தான், தனது தனிப்பட்ட உடற்பயிற்சி அறையில்.