All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அனிதா ராஜ்குமாரின் "என்ன தவம் செய்தேன்" - கதை திரி

Status
Not open for further replies.

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"சொல்லுங்க பெரியப்பா .என்ன செய்து வைத்தார் உங்க மகன் ."என்றாள் .

"கடவுள் புண்ணியத்தில் எதையும் இந்த தடவை இழுத்து விடலை .....பேச போன இடத்தில் திவாகர் குடும்பம் இல்லாமல் திரும்ப வந்து இருக்கான் ....நல்லவேளை இவன் போகும் போது அந்த இம்சை அரசர்கள் எங்கேயோ போய்ட்டாங்க .அவர்களின் நம்பர் நாட் ரீச்சபிள் என்று வருது ......தப்பிச்சோம் டா சாமி ....இல்லைனா சோனா இழுக்கும் இழுப்புக்கு எல்லாம் போய் இருப்பான் ...மாப்பிள்ளையும் வந்து பேசிட்டார் ....ரெண்டு பேரும் ஊட்டிக்கு கிளம்பிட்டாங்க ....."என்றார் சேது .

"பிரேக் போடுங்க பெரியப்பா ....திவாகர் குடும்பம் தானாக எங்கும் போகலை .....மேக்னா அப்பா தான் தூக்கிட்டார் .....பெங்களூர் பல கோடி ரூபாய் மோசடி செய்து இருக்காங்க ...தவிர முன்னர் சோனா கொடுத்த பல கோடி ரூபாய் வீடு ,தொழில் ஆரம்பிக்க பணம் ,இப்போ கொடுத்து அனுப்பி வீட்ல அவங்க வைத்து இருந்த பொட்டி போட்டியாய் பணம்,வெளிநாட்டு டாலோர் எல்லாத்துக்கும் கணக்கு கேட்டு INCOME TAX ,ENFORCEMENT DIRECTORATE எல்லாம் களத்தில் இறக்கி விட்டு இருக்காங்க .....தவிர அவங்க ரெண்டாவது மகன் அங்கு பெண்களிடம் ஓவர்ரா வாலாட்டி இருப்பான் போல் இருக்கு ..ப்ளாகார்ட் இதுக்கும் திருமணம் ஆனவன் .....அது தான் போலீஸ் பெங்களூருக்கு கொண்டு போய் நொங்கி நொங்கு எடுத்துட்டு இருக்காங்க .....சோனா தான் விஜய்யை மணக்க ,கர்ப்பிணி பெண்ணை பணயம் வைத்து திருமண ஏற்பாடுகளை செய்ய என்று கொடுத்ததாக வாக்குமூலம் கொடுத்து இருக்காங்க .....சோ நாளைக்கு சோனா அவளை போன்ற அப்பாவியை பணத்துக்காக ஏமாற்றி விஜய் தான் கட்டாய திருமணம் செய்தார் என்று புகார் கொடுத்தால் அந்த பொய்யை உடைக்கணும் இல்லை ....."என்றாள் மதுரா .

"செய்தாலும் செய்வா தான் ......அவளை கொல்ல வருவதாக கூட ஆதாரம் ரெடி செஞ்சு வச்சு ,அவ கையை அவளே கிழிச்சிட்டு கூட நீங்க தான் செய்ததாக புகார் கொடுப்பா ......அவளை விட்டு தள்ளு .....இன்விடேஷன் பார்த்துட்டு பேய் அடிச்சா மாதிரி இருக்கான் ......தேவதாஸ் படம் ஓட்டிட்டு இருக்கான் ...டைவோர்ஸ் பேப்பரில் சைன் வாங்கிடவா மா ....."என்றார் சேது .

"தேவை படாதுன்னு தான் நினைக்கிறன் ...ஏற்கனவே இன்னொரு டைவோர்ஸ் பேப்பரில் சூர்யா சோனாவிடம் சைன் வாங்கி வச்சுட்டார் ....விஜய் கையெழுத்தையும் அவரே போட்டுட்டார் .....ஆமா உங்க மகன் எப்போ மனம் வந்து சைன் போடுவார் என்று இலவூ காத்த கிளியாக வெயிட் செய்ய முடியுமா என்ன ....மேக்னா ,குழந்தைகளின் வாழ்க்கை பார்க்க வேண்டாமா ....இவர் உங்க கிட்டே நீட்டிய பத்திரத்தில் சைன் போட்ட உடன் அந்த பத்திரத்தை கொடுத்து ,மேக்னா மேட்டர் சொல்லிடலாம் என்று இருந்தேன் . .....எங்கே ரூபிணி வந்ததும் அவருக்கு வேறு எதுவுமே வழக்கம் போல் கண்ணில் படவே இல்லையே .....இப்படி நடக்கும் என்று எதிர் பார்த்தது தானே பெரியப்பா .....நாளைக்கு புடவை எடுக்க போறோம் .பை பெரியப்பா ."என்றவள் அழைப்பை துண்டிக்க அதுவரை நடந்த உரையாடலை கேட்ட பவானி கண்ணீரோடு சங்கரனின் தோளில் சாய்ந்தார்

"ச்சூ ....மா இப்போ எதுக்கு டாம் ஓபன் செய்யறீங்க .....சொல்லுங்க இப்படி அழுவதால் எல்லாம் சரியாகி விடும் என்றால் சொல்லுங்க ....கோகுலத்தில் சீதை படத்தில் வருவது போல் குடும்பமே சேர்ந்து கட்டி பிடித்து அழலாம் ....எனக்கு என் ஹிட்லர் தான்மா இப்போதைக்கு வேண்டும் ...நானே ஏதோ என்னை தேற்றி கொண்டு எதை தின்னால் பித்தம் தெளியும் என்ற நிலையில் எதையோ செய்துட்டு இருக்கேன் .....உங்க அழுகை என்னை கோழை ஆக்கி விடும் அம்மா .....வேண்டாம் ......அழாதீங்க ....ப்ளீஸ் ..."என்றவளின் பேச்சை கேட்டு முயன்று புன்னகைத்தார் பவானி

"தட்ஸ் மை ஹிட்லர் ....குட் நைட் அம்மா ,அப்பா ,ரகு பையா ..."என்றவள் தன் அறைக்கு சென்று விட ,அவளின் குடும்பம் கலங்கி நின்றது .
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
யாரின் கண்ணீருக்காகவும் ,சந்தோசத்திற்காகவும் காத்து இராமல் மறுநாள் பொழுது மிக அழகாகவே விடிந்தது .ஆனால் அந்த நாள் எத்தனை பேருக்கு நல்ல நாளாக அமைய போகிறது என்பது தான் கேள்விக்குறியே .

மறுநாள் சுடிதாரில் ரெடி ஆகி வந்தவளை பவானி கொத்து பரோட்டா போட்டார் .
4690dd179e1aa4efc3ce7d99c46bd845.jpg

"அடியேய் ...உனக்கு திருமணம் என்று கொஞ்சமாவது அறிவூ இருக்கா ....இப்போ எதுக்கு இந்த கோணிப்பையில் வந்து நிற்கிறே ...அழகாய் லட்சணமாய் கல்யாணம் பெண் போலே புடவையில் வருவதை விட்டு எருமை எருமை ...ஆள் தான் மரம் போல் வளர்ந்து நிற்கறே ....அறிவூ கொஞ்சமாவது வேண்டாம் .....போடி போய் நல்ல புடவையாய் கட்டு ....."என்றார் பவானி நீண்ட தர்க்கத்தை எதிர் பார்த்து கவுண்டர் கொடுக்க .

எதையும் பேசாத மதுரா அவரை ஒரு மாதிரி பார்த்து வைக்க ,பவானி வயத்தில் புளியை கரைத்தது .

"சில விஷயங்கள் உங்களுக்கு தெரியாமல் இருப்பது தான் நல்லதுமா ......ஏன் எதுக்குன்னு கேள்வி கேட்காதீங்க .....நடக்கும் போது உங்களுக்கே புரியும் .....திருமணம் வரை என்னால் புடவை கட்ட முடியாது அம்மா ....."என்றவள் அவள் குரலில் திகைத்து நின்ற பவானியின் கன்னத்தில் முத்தம் கொடுத்து இறங்கி சென்றாள் .

"என்னங்க இவ இன்னைக்கு ஒரு மாதிரி பேசிட்டு போறா .....இவ இது மாதிரி எல்லாம் பேசுறவளே இல்லையே .....எனக்கு என்னவோ கெட்டது நடக்க போகுதுன்னு தோணுதுங்கோ "என்றார் பவானி .

"பவா !.....வேண்டாம் மா .....ஏற்கனவே நம்ம பொண்ணு நிறைய தாங்கிட்டு இருக்கா .....என்ன செய்யணும் எதை செய்யணும் என்று தெளிவா தான் இருக்கா ....அவ இப்படி சொல்றானா ஏதோ காரணம் இருக்கும் .....இத்தனை வருடத்தில் அவ சொன்னது எதுமா தப்பாய் போய் இருக்கு ......குழந்தையை அவ போக்கில் விடு .....இப்போதைக்கு அவள் முயற்சிகளுக்கு சப்போர்ட்டா இருப்போம் .....அவளை ஒன்றும் இல்லா விசயத்திற்கு எல்லாம் தொந்திரவூ செய்யாதே ....கிளம்பு .....சிரிச்சிட்டே கிளம்பு ...ராணிமா பார்த்துட்டே இருக்கா பாரு ."என்றவர் பேச்சை கேட்டு அவர்கள் கிளம்பினார்கள் .

ரெண்டு இன்னோவா கார்களில் பாடி -அண்ணா நகரில் மிக ப்ரஹ்மாண்டமாய் அமைந்து இருந்த அந்த மூன்று அடுக்கு ஷாப்பிங் மால் முன் சென்று இறங்கினார்கள் .

"யப்பா ...எவ்வளவூ பெரிசாய் இருக்கு ......வெளியில் இருந்து பார்க்க என்னவோ சினிமா செட் மாதிரி இருக்கு ."என்றாள் மதுரா அண்ணாந்து அந்த ஷாப்பிங் மால் பார்த்து .

"சென்னையில் திருமணம் முதல் வளைகாப்பு வரை எல்லா பொருட்களும் ஒரே இடத்தில் கிடைக்கும் இடம் ....கடை பெயரை படிச்சியா டார்லிங் ."என்றபடி அவள் அருகே வந்து நின்றான் சூர்யா .


வேண்டாவெறுப்பாய் கடை பெயரை படித்த மதுரா தூக்கி வாரி போட சூர்யாவை பார்த்தாள் ."மை ஏஞ்சல் "என்ற பெயர் பலகை அது யாரின் கடை என்று கட்டியம் கூறியது .

"அதே தான் டியர் ...."என்றான் சூர்யா அவள் தோளில் கை போட்டு .

"ஊர் உலகத்தில் வேறு கடையே உனக்கு கிடைக்கலையா கழுதை ....."என்றாள் மதுரா அவன் கைகளை தட்டி விட்டு .

"இருக்கு .....ஆனால் இங்கே தானே எல்லாமே இருக்கும் ......என்னை மேரேஜ் செய்ய போறே ....வருங்காலத்தில் இப்படியும் எங்கேயாவது அவனை மீட் செய்து தானே ஆகணும் ...அப்போ ஜெர்க் ஆக கூடாது இல்லை கண்ணு நீ ...அதற்கு தான் ட்ரையல் ......"'எல்லாமெயில்' அழுத்தம் கொடுத்தான் சூர்யா

"உனக்கு பைத்தியம் தான் பிடிச்சி இருக்கு சூர்யா ...தெரு தெருவாய் சட்டையை கிழிச்சுட்டு சுத்த போறே .....வேறு கடைக்கு போகலாம் வா .....கிளம்புடா எருமை ...இளிக்காதே ...சகிக்கலை ...."என்றாள் மதுரா .

"என் முகம்,என் பேச்சு உனக்கு எப்படிம்மா சகிக்கும் ....நாங்க என்ன ஸ்டேஜ் ஏறி "என்ன அழகு எத்தனை அழகு "என்று பாடி இருக்கோமா ,இல்லை பைத்தியம் பிடிச்சா மாதிரி கடைக்கு எல்லாம் "மை ஏஞ்ஜல்"பெயர் வைத்து உயிரோடு இருக்கும் காதலிக்கு ஷாஜஹானை மிஞ்சிய நினைவூ சின்னம் எழுப்பி இருக்கோமா ....நான் ஏழை செல்லம் ......இந்த அளவுக்கு எல்லாம் காதலை சொல்ல நமக்கு தெரியாது தான் ...."என்றான் சூர்யா ஸ்டைலாக தோளை குலுக்கி .

"ஐயா சாமி ...உங்க சொற்பொழிவூ முடிஞ்சுதா யுவர் ஆனார் ....வாரீங்களா உள்ளே போலாம் ...அங்கே உங்க அம்மாவும் எங்க அம்மாவும் கை காட்டி கூப்பிடுறாங்க ...வா சாமி .....வந்த இடத்தில் பஞ்சாயத்தை கூட்டாதே ராசா ....."என்றவள் முன் ஒரு கார் வேகமாய் வந்து நிற்க அதில் இருந்து பிள்ளைகளுடன் குதித்து இறங்கினாள் மேக்னா .

"ஏய் எருமை ....இங்கே என்ன செய்யரே ..............."என்றாள் மதுரா திகைப்புடன் .

"ஷாப்பிங் மாலுக்கு தூங்கவா வருவாங்க ...ஷாப்பிங் செய்ய தான் ....ஹாய் அம்மா ....ஹாய் ஆன்ட்டி ..."என்றவாறு அவள் ஓட தலையில் அடித்து கொண்டு அவள் பின்னே ஓடினாள் மதுரா அவளை தடுத்து நிறுத்த .

அதற்குள் ஆல்வின் கடைக்குள் இருந்து வந்து அவர்களை வரவேற்று உள்ளே அழைத்து சென்றான் .

"எங்கே இருக்கான் அவன் ."என்றான் சூர்யா உள்ளே வந்ததும் வராமலும் .

"மேலே அவன் அறையில் இருக்கான் ....சோக கீதம் வாசிச்சிட்டு ....."என்றான் ஆல்வின் .

அந்த ஷாப்பிங் மாலில் தன் அறையில் டேபிள் மேல் இருந்த கைகளில் தலை வைத்து சாய்ந்து இருந்தான் விஜய் .முதல் மரியாதை படத்தில் ராதா ஸ்டேஷனில் இறங்கிய உடன் வீட்டில் சிவாஜிக்கு ஜெர்க் ஆகும் .அதே போல் மதுரா அந்த ஷாப்பிங் மால் உள்ளே கால் வைக்கவும் இவனுக்கு ஜெர்க் ஆகி தலை தூக்கி பார்த்தவனின் கண்களில் மானிட ரில் உள்ளே நுழைந்து கொண்டு இருந்த மதுரா தெரிய எடுத்தான் ஓட்டம் கிரௌண்ட் பிளோர் நோக்கி .

"5 மினிட்ஸ் ஆகுமா ?"என்றான் சூர்யா .

"மிஞ்சி போனால் ஒன் மினிட் ......"என்றான் ஆல்வின் .

"எதை பத்தி பேசிட்டு இருக்கீங்க ?"என்றாள் மேக்னா குழப்பத்துடன் .

"மெட்ரோ ட்ரெயின் மேல் இருந்து கீழே வந்து சேரும் டைம் பத்தி ....."என்று சூர்யா சொல்லி முடிக்கவும் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க அந்த தளத்திற்கு விஜய் ஓடி வந்து நிற்கவும் சரியாகி இருந்தது .

"சொன்னேன் இல்லைஜி ....."என்றான் ஆல்வின் வந்த சிரிப்பை அடக்கிய படி .

விஜய் விழிகள் சந்திராவுடன் அரட்டை அடித்து சிரித்து பேசி கொண்டு இருந்த மதுரவையே விழுங்கி விடுவது போல் பார்த்து கொண்டு இருந்த்தது .கண்களால் அவளை நிரப்பி மனதிற்குள் புதையலாய் சேமித்து கொண்டு இருந்தான் .வாணவேடிக்கைகள் அவன் முகத்தில் வெடிக்க ,புன்னகையால் அவன் முகமே ஒளிர ஆரம்பித்தது .பத்து அடி அவளை நோக்கி வைத்து இருப்பான் ,மதுராவிற்கும் அவனுக்கும் இடையே நந்தி மாதிரி,சீன பெருஞ்சுவர் மாதிரி வந்து நின்றான் சூர்யா .

(சூரி ..............உன்னை கொத்து பாராட்டோ போட்ட தான் சரி ....அவனே எப்போவது தான் லவர்ரா மாறுவான் ....அந்த நேரம் நீ வந்து கும்மி அடிக்கலைன்னு யாரு அழுதா ?)

"ஹலோ விஜய் ?...இது உன் கடையா மேன் ......இப்போ தான் ஆல்வின் சொன்னான் .....நைஸ் "என்றான் சூர்யா

(உலக மஹா மெஹா நடிபுடா சாமி )

"தேங்க்ஸ் ."என்று சொன்ன விஜய்யின் கண்கள் அவன் முகத்தை பார்க்கவேயில்லை .வாய் மட்டும் பதில் சொல்ல அவன் உள்ளுக்குள் குணா ரேஞ்சுக்கு "மது....மது "என்ற தவத்தில் இருந்தான் .

"தேங்க்ஸ்டா ......உன்னால் தான் என் டார்லிங் மது எனக்கு கிடைத்து இருக்கா ...காண கிடைக்காத பொக்கிஷம் அவ ......நீ மட்டும் நேத்து சைன் போட்டு இருந்தே அங்கேயே உன்னை ஷூட் செய்து இருப்பேன் .....துப்பாக்கியுடன் தான் வந்தேன் ......ஜஸ்ட் மிஸ்ஸு .....உன் மனைவி சோனாவின் தாலி பாக்கியம் உன்னை காப்பாத்தி இருக்கு ......லக்கி கய்டா நீ ....ஆனா இந்த பாவி பசங்க இப்படி செய்துட்டாங்களே விஜி .....இனி என்ன செய்ய போறே ....உத்தம சிகாமணி சோனா உடன் வாழ போறியா ....ஆனா சுமன் விடுவானா என்று தெரியலையே ....இல்லை உன் தங்கை பிள்ளைகள் இனி பொறந்தால் அதற்கு தாத்தா வேலை பார்க்க போறீங்களா ?....உடம்பு நோவாத வேலை ஒன்று இருக்கு ....அதை செய்யரீங்களா ...அதான் பா சந்நியாசம் வாங்கி ,கஷாயம் கட்டி காசிக்கு போறது ....ட்ரெயின் டிக்கெட் நான் எடுத்து தரேன் விஜி ."என்றவனை வெட்டவா குத்தவா என்று முறைதான் விஜய் .

உன் முறைப்பு என்னை என்ன செய்யும் என்று அவனை அதற்கு மேல் முறைதான் சூர்யா .clash ஆப் தி titans -கண்களால் யுத்தமே நடத்தி கொண்டு இருந்தார்கள் இருவரும் .

"ஹாய் விஜய் "என்றபடி அங்கு வந்து சேர்ந்தாள் மதுரா .

(தெய்வமே வந்துட்டியா )

சட்டென்று முகம் காட்டும் ரியாக்ஷன் மாற்றி கொண்ட விஜய் மீண்டும் குணவாகி போனான் .

(உனக்கு கீழ்ப்பாக்கம் தான்டா )

"பெரியப்பா கிட்டே எங்க மேரேஜ் இன்விடேஷன் கொடுத்தோம் .....வந்துதுங்களா ......கண்டிப்பா திருமணத்திற்கு உங்க மனைவி சோனாவோடு தான் வரணும் .....கண்டிப்பா எதிர் பார்த்துட்டு இருப்பேன் விஜய் .....நீங்க மட்டும் சைன் போட்டு இருந்தீங்க எனக்கு ரொம்ப சங்கடமாய் போய் இருக்கும் ....பெரியப்பா வாய் விட்டாரா அதான் டைவோர்ஸ் பேப்பர் நீட்டினேன் ....நல்லவேளை வழக்கம் போல் என் வாழ்வை ரூபி வந்து காப்பாத்திட்டா .....ஏன்னா நான் சூர்யாவை ரொம்பவே லவ் செய்யறேன் விஜய் .....எங்க மேரேஜ் வாழ்க்கை நன்றாக இருக்க உங்க பிளெஸ்ஸிங்ஸ் நிச்சயம் வேண்டும் ......உங்க கடை சான்ஸ்சே இல்லை ...எவ்வளவூ வெரைட்டி .....நிச்சயமாய் என் வளைகாப்பிற்கும் இங்கே வந்து தான் புடவை ,குழந்தை பிறந்தால் உடை எடுப்போம் விஜய் ....."என்றவளை "ஏய் "என்ற கர்ஜனையோடு கை ஓங்கி விட்டான் விஜய் .

அவளை தன் புறம் இழுத்து அவள் மேல் விழ வேண்டிய அடியை தன் தோளில் தாங்கி நின்றான் சூர்யா .

"அவ உண்மையை தானே சொல்றா விஜய் ?எதற்கு உனக்கு இத்தனை கோவம் வருது ?....எங்கள் திருமணம் முடிந்தால் அடுத்த கட்டம் அவளின் வளைகாப்பு தானே ....என் பிள்ளைகளின் தாய் அவள் தானே ...இவளை திருமணம் செய்துட்டு இன்னொருத்தியையா நான் தாய் ஆக்க முடியும் ?சட்டம் ஒத்துக்காது விஜய் .....அவ ஆசை என்ன தெரியுமா ...ஒரு கிண்டர்கார்ட்டன் ஆரம்பிக்கும் அளவுக்கு அத்தனை பிள்ளைகள் வேண்டுமாம் .....வருஷத்திற்கு ஒன்று ரிலீஸ் செய்து கொண்டே இருக்க போகிறோம் ....ஒகே விஜய் ...சீ யு மேன் ...அங்கே என் அத்தை அதான் என் டார்லிங் மதுவோட அம்மா கூப்பிடுறாங்க ....இன்னும் 2 நாளில் திருமணம் ...வேலை தலைக்கு மேல் இருக்கு ...டார்லிங்க நீ வா மா ."என்றவன் விஜய் அதிர்ந்து நிற்கும் போதே மதுராவின் தோளில் கை போட்டு அவளை புடவை பிரிவுக்கு அழைத்து சென்றான் .

PENANCE WILL CONTINUE...
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
THAVAM 37(1)

ஒவ்வொரு புடவையாய் அவள் மேல் வைத்து சூர்யா அழகு பார்க்க எரிமலையின் சீற்றத்தோடு நின்று கொண்டு இருந்தான் விஜய் .நடுவே அவனை திரும்பி பார்த்த மதுரா அவனுக்கு ஹாய் காட்டவும் மறக்கவில்லை .

(ரொம்ப முக்கியம் பாரு )


"அவா ஜோடி பொருத்தம் ரொம்ப நன்னா இல்லை .....கட்டிக்க போறவ மேல என்ன அக்கறை பாருங்க ....சேமமா இருக்கட்டும் ."என்றவாறு சென்ற ஒரு தம்பதி அவன் கோபத்திற்கு எண்ணெய் கிணறையே தோண்டி விட்டு சென்றனர்

கோபத்தோடு அவர்கள் அருகே சென்றவனை பிடித்து நிறுத்தி வேறு பக்கம் இழுத்து சென்றான் ஆல்வின் .

"விடுடா அவனை கொன்றால் தான் என் கோபம் ஆறும் .....எவ்வளவூ தைரியம் இருந்தால் என் மது மேல் கை வைப்பான் ."என்று திமிறினான் .

"உன் மதுவா ?....இது இப்போ இருந்து சார் ...நேத்து சைன் போடாம ஓடி உனக்காக பேசிய எங்க முகத்தில் கரியை பூசிய போது தெரியலையா அவளை உன் மது ஆக்க தான் நாங்க போராடிட்டு இருக்கோம் என்று .....ஒரு வார்த்தை சொல்லிட்டு போனாயாடா?...நீ நல்லவனா இரு ....வேணாம்களை ....உன் குடும்பத்தை தாங்கோ தாங்கு என்று தாங்கு ...யார் வேண்டாம் என்றது ...ஆனால் உன் குடும்பமா அவளா என்று வரும் போது ஒவ்வொரு தடவையும் அவளை உதறி தள்ளிட்டு போறே பாரு ..மனுஷனாடா நீயி .....அவளாவது நிம்மதியா அவளை ராணி மாதிரி உள்ளங்கையில் தாங்கும் ஒருவனோடு சந்தோசமாய் இருக்கட்டும் ....."என்றான் ஆல்வின் .

"என்னடா இப்படி பேசறே .....அவ என் ......உயிர்டா ....அவ தான் என் ........ உனக்கே தெரியும் தானே ...........எல்லாம் தெரிந்த நீயே இப்படி பேசலாமா ."என்றான் விஜய் .

"எல்லாம் தெரிந்தால் தான் சொல்றேன் .....நீ அவளுக்கு சரி பட்டு வர மாட்டே கருணா ....உன் குடும்பமா அவளா என்று வந்தால் நீ மீண்டும் முருங்கை மரம் ஏறிடுவே .....அவளுக்கே என்னை மாப்பிள்ளை பார்க்க வைத்தவன் தானேடா நீயி ......போ போய் மூலையில் அமர்ந்து நல்லா யோசிச்சு பாரு உனக்கே புரியும் ......கிளம்புடா ...எல்லோரும் இங்கேயே பார்த்துட்டு இருக்காங்க பாரு .....உன்ற மனைவி கிட்டே போட்டு கொடுத்தால் வேறு வினையே வேண்டாம் ...அவங்க வாழ வேண்டியவங்க ராசா ...கிளம்பு நீ ...."என்ற ஆல்வின் அவனை இழுத்து கொண்டு சென்றான் .

இது எல்லாவற்றையும் தூரத்தில் இருந்து பார்த்து கொண்டு இருந்த ஒரு முகம் கூம்பி போனது .கண்கள் கண்ணீரை சிந்த ,மனதின் பாரம் தாங்க முடியாமல் தலை குனிந்து நின்று தன்னை சமாளித்தாள் மதுரா .

"அங்கே என்ன பார்வை வேண்டி கிடக்கு ......இங்கே முகூர்த்த புடவை எடுக்கறாங்க இல்லை ...என்ன புதுசா லவ்ஸ் பிறக்குதோ ......உனக்கும் எனக்கும் தான் திருமணம் ...காட் இட் ...மவளே வேறு ஏதாவது செய்து வைத்தே உன் சாவூ என் கையால் தாண்டீ ....நான் விஜய் இல்லை ......கொன்று புதைச்சுடுவேன் ."என்றான் சூர்யா கோபத்துடன் .

"நத்திங் ."என்றவள் முயன்று புன்னகைத்து ,புடவை எடுப்பதில் மீண்டும் கவனத்தை செலுத்தினாள் .

"ஐயோ !....என் பொண்ணை காணோம் ..."என்று அலறியபடி ஓடி வந்தாள் மேக்னா .

1552275826705.png
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
விஜய் கீழ் தளத்திற்கு வந்த உடனே பிள்ளைகள் இருவரையும் கூட்டி கொண்டு குழந்தைகளை ஆடை பகுதிக்குள் நுழைந்து விட்டு இருந்தாள் மேக்னா .திருமணம் வரை பிள்ளைகள் அவன் கண்ணில் பட கூடாதே .

சிறு பிள்ளைகள் இருவரும் ரொம்ப துறு துறு வேறு ...தனியாக சமாளிப்பது என்பது அவளால் முடியவில்லை .பையன் ஒருபுறம் ஓடினால் ,மகள் ஒரு புறம் ஓட ஆரம்பித்தாள் .இருவரையும் பிடித்து இழுத்து ஒரு இடத்தில் நிற்க வைத்து ஆடைகளை அவர்கள் செலக்ட் செய்வதற்குள் அவளுக்கு பைத்தியம் பிடிக்காத குறை .

இதில் நடுவே வேறு கடையில் ஒருவன் ஒரு பெண்ணிடம் சிலுமிசம் செய்ய அங்கு கூடி இருந்தவர்கள் அவனை மொத்தி எடுத்தனர் .என்ன பிரச்சனை என்று ஒரு கணம் அந்த பக்கம் மேக்னா பார்வை திருப்ப இந்த பக்கம் சுபத்ரா குட்டி காணாமல் போனாள் .குழந்தைகள் ஆடை பகுதி முழுவதும் தேடி பார்த்தும் கூட சுபத்ரா கிடைக்கவில்லை என்றதும் நெஞ்சில் யாரோ சம்மட்டியால் அடித்தது போன்ற வலியை மேக்னாவால் தாங்க முடியவில்லை .அங்கு பணி செய்து கொண்டு இருந்தவர்களுக்கும் ஒன்றும் தெரியவில்லை .

கிருஷ்ணாவை இழுத்து கொண்டு மற்றவர்களிடம் விஷயத்தை கூறிய மேக்னா மயங்கி சரிந்தாள் .குழந்தையை காணாத பயத்தை அந்த தாயுள்ளதால் ஏற்க முடியவில்லை .அவளை தூக்கி கொண்டு ஹர்ஷா காருக்கு ஓட பின்னால் அவள் அன்னையும் ,பாட்டியும் ,கிருஷ்ணாவும் கிளம்பினார்கள் .

கடை மூட பட்டது .இண்டு இடுக்கு விடாமல் தேடியும் குழந்தை கிடைக்கவில்லை .இவ்வித தடயமும் இன்றி குழந்தை காணாமல் போய் இருந்தாள் .cctv கேமரா reply செய்து பார்த்தும் சுபத்திரா தானாக வெளியே சென்றது போலவோ ,யாரவது தூக்கி போனது போலவோ தெரியவில்லை .இவர்கள் தான் வாயிலின் அருகேயே நின்றார்களே .....யாரும் பார்க்காமல் ஒரு குழந்தையை கடத்த முடியுமா என்ன ...முடியும் என்று நிரூபணம் ஆகி இருந்தது .

"போலீஸ்க்கு போய்டலாம் .....அவங்க தேடும் பாணியே வேறு மாதிரி இருக்கும் .....குழந்தை கிடைக்கும் வரை கடை லாக் டவுன் என்று அறிவித்து விடு ஆல்வின் ...."என்றவன் அவன் சொன்னதை செய்ய ,"ஆமாம் ...மேக்னாவிற்கு எப்போ திருமணம் நடந்தது .....இவ்வளவூ நாள் எங்கே இருந்தாள் ?...நீங்க யாராவது அவ மேரேஜ்க்கு போனீங்களா ?ரெண்டு குழந்தை ...ட்வின்ஸ் ....அவ கூட என்னிடம் சொல்லவே இல்லை பாருங்களேன் ...."என்ற விஜய் பேச்சை கேட்டு பலர் ஜெர்க் ஆனார்கள் .

போன வேகத்தில் ஓடி வந்த ஆல்வின் ,"கருணா இவர் சுபத்ராவை பார்த்தாய் சொல்றார் ."என்றான் பின்னால் வந்த பெண்மணியை காட்டி .

"என்னமா பார்த்தீங்க ....."என்றான் சூர்யா .

"பிங்க் கவுன் போட்டு ,டிஸ்னி பிரின்சஸ் பிரிண்ட் ஆனா இளவரசி கவுன் குழந்தை போட்டு இருந்தது சார் ....அந்த டிரஸ் போன வருடம் என் பேத்திக்கு நான் எடுத்தேன் ...குழந்தையும் செம அழகாய் இருந்ததால் கவனித்தேன் சார் ...அந்த கோர்னெர்ருக்கு தான் குழந்தை போனா "என்றவர் ஒரு மூலையை கை காட்டினார் ...."நான் கூட இப்படி தனியா போகுதே காலம் கெட்டு கிடக்கே என்று பின்னால் போக தான் முயன்றேன் சார் ...ஆனால் இங்கு அதற்குள் ஒருத்தன் ஒரு பெண்ணிடம் தகாத முறையில் நடந்தான் என்று பெரிய ரகளை ஆகி விட்டது ...என் கவனம் அதில் போனதால் அப்படியே நின்று விட்டேன் ....ஒரு ஒரு நிமிடம் தான் இருக்கும் என் கவனம் கலைந்து ....அதற்குள் ஒருவன் தாடி வைத்தவன் ஒரு பெரிய trolley போன்ற பையோடு போனதை பார்த்தேன் சார் .வடநாட்டுக்காரன் மாதிரி இருந்தான் சார் ....துணி கடைக்குள் வரவனுக்கு எதுக்கு இத்தனை பெரிய trolley பாக் என்று அப்போவே சந்தேகமா தான் இருந்தது .போகும் போது வேறு அந்த சில்மிஷம் செய்தவனை பார்த்து கட்டை விரல் வேறு தூக்கி காட்டிட்டு போனாங்க ."என்றார் அவர் .

ஒரு கணம் அதிர்ந்து நின்றார்கள் அங்கு இருந்தவர்கள் .குழந்தையை கடத்தி சென்றது இரு நபர் குழு .ஒருவன் மற்றவர்களின் கவனத்தை திசை திருப்ப ,பெண்ணிடம் வம்பு செய்து இருக்கிறான் .அந்த சமயம் கேமரா கண்காணிப்பு இல்லாத பகுதிக்கு குழந்தை வந்ததும் அதை மயங்க வைத்து ,trolley பாகின் உள் வைத்து யாரும் சந்தேக படாத வண்ணம் கடத்தி இருக்கிறார்கள் .
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"மேடம் இந்த கேமராவில் பார்த்து சொல்ல முடியுமா ...யார் என்று ?"என்றான் விஜய் .

கொஞ்ச நேரம் ஓடிய மானிட்டர் பார்த்த அந்த பெண் ,"இதோ போறானே ...இவன் தான் சார் ....."என்றார் .

எந்தவித பதட்டமும் இல்லாமல் வெகு நிதானமாய் அவன் பையை இழுத்து சென்று வெளியே காத்து இருந்த காரில் ஏற கறுப்பு blinders ஒட்டப்பட்டு இருந்த அந்த மாருதி ஆம்னி வண்டி வேகம் எடுத்தது .

1552277317305.png

அதற்குள் அந்த பகுதி இன்ஸ்பெக்டர் வந்து சேர்ந்து விட அவரிடம் விஷயம் சொல்ல பட்டது .குழந்தை பெரிய இடத்து ஆள் என்றதும் கமிஷனர் ,மினிஸ்டர் அளவுக்கு அழைப்புகள் பறந்தன .ராஜேஸ்வரிக்கும் விஷயம் சொல்ல பட்டது .குழந்தையை தேட பல்வேறு பக்கத்திற்கு விஜய் ,சூர்யா ,ஆல்வின் ஆட்கள் பறந்தார்கள் .டிராபிக் கேமரா பதிவுகள் அலசப்பட்டன .

"ரிலாக்ஸ் கருணா ...குழந்தையை கண்டு பிடிச்சுடலாம் ....டோன்ட் ஒர்ரி ...."என்றார் இன்ஸ்பெக்டர் விஜய்யின் நண்பன் .

அதற்குள் கமிஷனர் ஸ்பாட்டுக்கு வந்து சேர்ந்தார் .அவரிடம் எடுத்து கொண்டு இருக்கும் நடவடிக்கைகளை சொன்னார்கள் .

"குழந்தையோட அம்மா எங்கே ?"என்றார் அவர் .

"மயங்கிட்டாங்க ...ஹோச்பிடலுக்கு அவங்க பிரதர் கூட்டிட்டு போய் இருக்கார் சார் ..."என்றான் விஜய் .

"ஒகே அங்கே போய் அவங்களை பார்த்துட்டு நான் கிளம்பறேன் ....போலீஸ் டிபார்ட்மென்ட் மொத்த உதவியும் உண்டு ."என்றவர் விடை பெற்று கிளம்ப ,நீண்ட ,நெடிய மூன்று மணி நேரம் கழித்து தகவல் எதுவும் வராது போகவே அந்த கடையில் இருந்தவர்களை கிளம்ப சொன்னான் சூர்யா .

அவர்களை வீட்டில் விடும் பொறுப்பினை ஏற்ற உத்தம் ,அவர்களை பாதுகாப்பாய் அழைத்து செல்ல வந்தான் .ஹாஸ்பிடல் ,வீடுகளுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்படுத்த பட்டது .

"வாங்க ஆன்ட்டி ..என்ன தயங்கி தயங்கி நிற்கறீங்க ....இங்கே நாம செய்வது எதுவும் இல்லை ...சூர்யாவும் விஜய்யும் பார்த்துப்பாங்க ...வாங்க ஆன்ட்டி .."என்றான் உத்தம் .

"அதற்கு இல்லை தம்பி .....சூர்யா ராணிமாவை எங்காவது அனுப்பி இருக்காரா என்ன ?ரெண்டு மணி நேரமாய் அவளை பார்க்கலை ......கடைசியாய் இவங்க ரெண்டு பேர் கூட தான் மானிட்டர் அறைக்கு சென்றாள் ."என்றவரின் பேச்சை கேட்டு அங்கு இருந்தவர்கள் திகைத்து ,உறைந்து நின்றார்கள் .

"இல்லை அத்தை அவளை நான் எங்குமே அனுப்பலையே ....கருணா நீ எங்கேயாவது அனுப்பினாயா ?"என்றான் சூர்யா .

" "நான் எங்கேடா அனுப்ப போகிறேன் ?"என்றான் விஜய் திகைப்புடன் .

"ஒருவேளை ஹாஸ்பிடல் போய் இருக்களோ என்னவோ ..."என்றார் பவானி தனக்கு தானே சமாதான படுத்தி கொண்டு .

ஹர்ஷாவை அழைத்து கேட்க சந்திரா தான் அவர்கள் உடன் வந்ததாக சொன்னான் .அடுத்த நொடி கடையில் இவளை தேடி அலைந்தார்கள் .

தேடி அலைந்து மீண்டும் மானிட்டர் அறைக்கு வந்தவர்கள் மீண்டும் விடீயோவை ஓட விட ,சற்று நேரத்தில் அந்த அறை விட்டு மதுரா வெளியே செல்வது தெரிந்தது .யாருடனோ போனில் பேசி கொண்டு வெகு வேகமாக வெளியேறியவள் கடை வாயிலில் ஒரு கணம் தயங்கி நின்றாள் .தன் போனை அங்கு இருந்த குப்பை தொட்டியில் போட்டவள் திரும்பி கேமராவை பார்த்து முணுமுணுத்தாள் .

அவள் சொன்னது புரிந்து அதிர்ந்து நின்றார்கள் ஆண்கள் இருவரும் .

"ஐ லவ் யு "முணுமுணுத்து விட்டு இறங்கி சென்றவள் நேரே அந்த வேனில் ஏறினாள்

PENANCE WILL CONTINUE.....
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் நட்பூஸ்

எல்லோரும் மிக நன்றாகவே இருப்பீர்கள் என்று நம்பிக்கையுடன் இங்கு நான் .

நாளைக்கு கொடுக்க வேண்டிய UD இன்னைக்கே கொடுத்துட்டேன் ரசகுல்லாஸ் .சோ நாளைக்கு எதிர் பார்க்க வேண்டாம் .வெள்ளி அடுத்த UD வரும் .....முன்னாலேயும் வரலாம் ..நோ உத்திரவாதம் ....ஆரம்பிச்சுட்டியா என்று கேட்கறீங்களா ஹி ஹி ஹி

என் மகளுக்கு எக்ஸாம் நடக்குது .10,12 எல்லாம் இல்லை ....மூணாப்பு ....அதுக்கு இவ்வளவூ BUILT UP தேவையா என்று நினைக்கிறீங்களா ......பஞ்சரத்தில் கோழியை போட்டு அடைப்பதும் எங்க வீட்டு தலையை படிக்கச் உட்கார வைப்பதும் ரொம்ப குஷ்டம் ...ச்சே கஷ்டம் .

நாலு கத்து கத்தி ,என் BP எகிற வைத்து வந்து தலை படிக்கச் உட்காரும் ஸ்டைல் ரொம்பவே அலாதி .நான் படிக்கும் போது கூட எவன்டா எக்ஸாம் எல்லாம் கண்டுபிடித்த மவரசன் என்று கேட்டது இல்லை .....ஆனா இப்போ பீலோ பீல் .


எனக்கும் எக்ஸாம் வருது .....ரொம்ப படிக்கிறேன் என்று ஓவர் அலப்பறை தான் செய்துட்டு இருக்கேன் .நானும் ரவுடி தான் ,நானும் ரவுடி தான் ....அதே தாங்க .

ஐயோ UDக்கு ஆப்பா என்று சொல்வது கேட்கிறது .....நோ UD வரும் ....ஆனா முன்னே பின்ன இன்று போல் வரும் .....

சீக்கிரம் முடிச்சுட்டா என் டெஸ்ட் புக் கொஞ்சம் லுக்ஸ் விடலாம் என்று தான் ...ஆனா புக் எடுத்தாலே தூக்கம்ஸ் கமிங் .....

UD போட்ட உடனே மலை போல் குவியும் கமெண்ட் பார்த்து கண்ணு வேற்குது மக்கா ....நான் அதிகமா ரிப்ளை செய்வது இல்லை தான் .....என் பதிலுக்கு காத்து இராமல் கமெண்ட் போட்டு கொண்டே இருக்கும் உங்கள் பாசத்தை சொல்ல நோ வார்த்தை .உங்கள் கமெண்ட்ஸ் தான் எனக்கு பூஸ்ட் ,ஹார்லிக்ஸ் எல்லாம் .தட்டி கொடுத்து தோள் தாங்கும் உங்களுக்கு டன் கணக்கில் நன்றி .

கட்டையை தூக்கி அடிக்க வரவங்க கொஞ்சம் மெதுவா அடிங்க ...மீ ரொம்ப சின்ன பாப்பா ......அழுதுடுவேன் .

இவ்வளவூ தூரம் எழுதுவேன் என்று நானே எதிர் பார்க்கலை ....நடுவில் பஸ் பிரேக் டவுன் ஆகிடும் என்று தான் நினைத்தேன் .....ஆனால் .உங்கள் ஊக்கம் தான் விடாமல் எழுத வைத்து கொண்டு இருக்கிறது .கதை எப்படி போகிறது ,பிடித்து இருக்கிறதா என்று ரொம்ப சீக்கிரமா கேட்டுட்டேன் இல்லை .....ஹி ஹி ஹி
 
Last edited:

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மது "லவ் யு "சொன்னதை கேட்டு ரணகளத்துலேயும் குதூகலமா என்று நினைக்கறீரங்கன்னு புரியுது .....ஆனா அதுவே கடைசி வார்த்தையா இருந்தா ...யாருக்கு சொல்ல வேண்டுமோ அவர்களுக்கு இனி சொல்ல முடியாத நிலை மதுரா இருந்தால் ----அதான் டிக்கெட் வாங்கிட்டு சுமன் மூலம் பிரீ பாஸ் வாங்கி மேலே போய்ட்டா .....:eek::eek::eek::eek:

சிம்பதிக்காக ஹீரோயின் கிளோஸ் ??????:unsure::unsure::unsure::unsure::whistle::whistle::whistle:

ஏதோ நம்மால் முடிந்த பத்த வைக்கிறது ...............பத்த வச்சாச்சு :devilish::devilish::devilish::devilish::devilish:
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
THAVAM 37(2)

"ஐ லவ் யு "என்று சொல்லி இருந்தாள் மதுரா .

பின் வெகு வேகமாக இறங்கி அவள் நடக்க மீண்டும் அதே மாருதி ஆம்னி கார் அவள் அருகே நிற்பதும் ,அதில் அவள் ஏறுவதும் தெரிந்தது .குழந்தையை பணயமாய் வைத்து மதுரா கடத்தி இருக்கிறார்கள் .குழந்தையின் உயிர் காக்க மதுராவும் தன்னை பலியிட்டு கொண்டு இருக்கிறாள் .கடைசியில் சொன்னது போலவே சுமன் ஜெயித்து காட்டி இருந்தான்

26riteish-deshmukh1.jpg.

ஏமாற சொன்னது நானோ
என் மீது கோபம் தானோ
மனம் மாறி போவதும் ஏனோ
எங்கே நீ சென்றாலும் விடுவேனோ
லெப்ட் ரைட் லெப்ட் ரைட்
அபௌட் டர்ன்


என்று காருக்குள் பாடிய பிளேயர் ஓடு ,சேர்ந்து பாடுகிறேன் என்று கர்ண கொடூரமாய் கத்தி கொண்டு இருந்தான் ருத்ரா .அவன் அருகே ஓடும் காரில் இருந்து குதிக்கவும் முடியாமல் ,அவன் குரலை கேட்கவும் முடியாமல்,கார் ஒட்டியபடி குமுறி கொண்டு இருந்தாள் அவன் மனைவி ராஜேஸ்வரி .(சுப்பா ஹீரோ இதை செய்வான் என்று எதிர் பார்த்தா சைடு கேரக்டர் எல்லாம் ஹீரோ ரேஞ்சுக்கு அலப்பறை செய்யறானுங்களே ...மிடில )

4765-Vikram-Prabhu.jpg


சொல்லாமல் கொள்ளாமல் கோயிலில் அவன் தாலி கட்டியதில் இருந்து அவனோடு அந்த நொடி வரை அவள் பேசவில்லை .லாக்கப்பில் தூக்கி போட்டு நொங்கு எடுக்க தான் அவளுக்கு ஆசை .ஆனால் அவள் தாயின் உடைநிலைக்காக தானே இப்படி செய்தான் என்று அமைதி காத்தாள் ...அவன் மேல் காதல் வேறு இருக்கிறதே .நேற்று மதியமே அவள் தாய்க்கு ஆபரேஷன் நடந்து அவர் உடல் தேறி வருகிறார் .மகளின் திருமணத்தை பார்த்த சந்தோசம் .

தன் ஆஃபீஸ்ச்சில் தங்கி விட தான் அவள் முயன்றது .அதற்கு சிவகாமி பாட்டி விடவேயில்லை .(நீ ஆஃபீஸ்ச்சில் தங்கவா அவன் உனக்கு தாலி கட்டி இருக்கான் ....போ மா சும்மா காமெடி பண்ணாதே )காலையில் இருந்து அவள் காரில் ஏறி கொண்டு இறங்காமல் ,அவள் எங்கே சென்றாலும் ஹட்ச் டாக் மாதிரி அவளை தொடர்ந்து கொண்டு இருந்தான் ருத்ரா .அவளை கூல் செய்கிறானாம்
jyothika_150486937130.jpg

'நீ என்ன வேண்டும் என்றாலும் குரங்கு தனம் செய்துக்கோ ....உனக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை' என்று முறுக்கி கொண்டு இருந்தாள் ராஜி இவன் தொல்லையில் இருந்து எப்படி தப்புவது என்று புரியாமல் காரை ஒட்டி கொண்டு வந்தவள் அண்ணா நகர் ரவுண்டுடான அருகே டிராபிக் ஜாம் ஆகி இருக்க ,அதை விசாரிக்கும் சாக்கில் கீழ் இறங்கினாள் .கூடவே இறங்கினான் ருத்ரா .(ராமனுக்கு சீதை இருக்கும் இடம் தான் மிதிலா ......விட மாட்டோம் ல ...)

"என்ன ஆச்சு .....பீக் ஹௌர்ல டிராபிக் கிளியர் செய்யாம என்ன செய்துட்டு இருக்கீங்க ......."என்று அவள் முழங்க ,டிராபிக் போலீசார் அவளுக்கு சலூட் வைத்து நடந்ததை சொல்ல ஆரம்பித்தார்கள் .

"மேடம் !.....சின்ன வயசு பசங்க மேடம் ....பதினேழு கூட இருக்காது .....மெயின் ரோட்டில் ரேஸ் வைத்து இருக்கானுங்க ...ஹெல்மெட் கூட போடலை .....ஸ்பீட் பிரேக்கர் இருப்பது தெரியாம ஹை ஸ்பீட் வந்ததில் வண்டி ஸ்கிட் ஆகி ,தலை போய் ரோடு டிவைடரில் மோதி ஸ்பாட் டெத் மேடம் இருவரும் .....ஹை பவர் பைக் மேடம் .....அம்புலன்சிற்கு சொல்லி இருக்கு ...கண்ட்ரோல் ரூமிற்கு தகவல் கொடுத்துட்டோம் ...கூட வேறு பைக்கில் வந்த பையன்களை பிடித்து வைத்து இருக்கோம் மேடம் .....எல்லாம் பணக்கார வீட்டு பசங்க .....விசாரிச்சேன் ......அவர் பிள்ளையாம் ....அதோ அழுதுட்டு இருக்கார் மேடம் அவரும் அவர் மனைவியும் ."என்றார் போலீஸ்காரர் .

8447898214_bde0ab5bb8_b.jpg
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அந்த பணக்காரரின் அருகே சென்றவள் ,"வெரி சாரி போர் யுவர் லாஸ் சார் ..."என்றவள் அருகே நின்ற பையன்களையும் ,அவர்களின் தோழிகளையும் ,"இவங்களை விட்டுடுங்க ...இவங்க ப்ரெண்ட்ஸ் மேல் கொலை வழக்கு பதிவூ செய்து ஜீப்பில் ஏத்துங்க ..."என்றாள் .

"மேடம் "என்று பல குரல்கள் அலறின .

"என்ன ......எதுக்கு இவ்வளவூ ஷாக் ...சொத்து சேர்த்தா மட்டும் போதாது மிஸ்டர் ...பசங்க என்ன செய்யறாங்க ,யார் கூட நட்பாய் இருக்காங்கா என்பதை எல்லாம் நீங்க தான் கவனிக்கணும் .....காசு இருக்கு என்ற திமிரில் லட்ச ரூபாய் கொடுத்து பவர் பைக் இப்போ உங்க பிள்ளைகளுக்கு தேவை தானா .....நம்ம இந்திய ரோடுகளுக்கு இந்த பைக் எல்லாம் ஒத்து வருமான்னு அறிவூ வேண்டாம் .....7,256 பேர் 2017 தமிழ்நாட்டில் மட்டும் ரோடு அச்சிடேன்டில் இறந்து இருக்காங்க . இந்திய அரசியல் சட்டம் படி மேஜர் ஆகாத பசங்களுக்கு பைக் வாங்கி கொடுத்தால் அவங்க ப்ரெண்ட்ஸை தான் தூக்கி உள்ளே போட முடியும் .....இவங்க எல்லாம் சின்ன பிள்ளைங்க ....ஒரு நாள் என்றாலும் 18 வயசு ஆகாத பால் குடி மாறாத பிள்ளைங்க சார் இவங்க நான் சொல்லலை சட்டம் சொல்லுது ....சட்டம் சொல்லுது ...இப்போ ஒன்றுக்கு ரெண்டு உயிர் போய் இருக்கு ..........முதலில் பசங்களை எப்படி ஒழுங்கா வளர்கிறது என்று தெரியலை ....8 வயசிலேயே மொபைல் போன் ,பத்து வயசில் லேப்டாப் ....பாக்கெட் மணி .....என்ன கர்மத்தை பார்த்து தொலைக்காரங்க ,,யாரோடு இருக்காங்க என்று கவனிக்க விட்டுட்டு பிறகு குத்துதே குடையுதே என்றால் அரசாங்கம் ,நீதி மன்றம் ,காவல் துறை மட்டும் என்ன செய்ய முடியும் ?.....FIR பைல் செய்துட்டு மாஜிஸ்திரேட் முன் ஆஜர் படுத்துங்க .......டிராபிக் கிளியர் செய்யுங்க ...கமோன் குயிக் ...."என்றவள் மற்ற காவலர்களுடன் சேர்ந்து டிராபிக் சரியாக உதவினாள் .


மெல்ல மெல்ல சேர்ந்து இருந்த டிராபிக் சரியாக ,AMPA SKYWALK பக்கம் திரும்பிய காரில் இருந்து ,"ராஜேஸ்வரி "என்ற குரல் டிராபிக் சத்தத்தையும் மீறி அந்த இடத்தில் ஒலிக்க ,கார் கதவூ திறந்த நிலையில் ,அந்த காரில் இருந்து ஒரு குழந்தை தூக்கி வெளியே உருட்டி விடப்பட்டாள் .

அதிர்ந்து நின்றது டிராபிக் .சட்டென்று பிரேக் அடிக்கும் சப்தம் காதினை செவிடு ஆக்கியது .கண் மூடி திறப்பதற்குள் நடந்து விட்ட அந்த செயல் கண்டு சுதாரித்து ராஜேஸ்வரியோடு ,ருத்ரா ,மற்ற போலீசார் குழந்தையை நோக்கி ஓட சிலர் காரை துரத்தி ஓடினார்கள் .

மெயின் ரோட்டில் டிராபிக் சிக்னல் அருகே கொதிக்கும் தார் ரோட்டில் மயங்கி கிடந்த குழந்தையை சிலர் ஓடி சென்று தூக்கினார்கள் . கூடி விட்ட கூட்டத்தை விளக்கி கொண்டு உள்ளே சென்ற ராஜேஸ்வரியும் ருத்ராவும் அது சுபத்திரா என்பதை அறிந்து திகைத்தார்கள் .
little-girl-sleeping-on-road-450w-189480746.jpg

கன்னத்தில் தட்டி ,தண்ணீர் தெளித்து கூட குழந்தை எழவில்லை என்றதும் ராஜீ குழந்தையை தூக்கி கொண்டு காருக்கு ஓட ,டிரைவர் சீட்டில் பாய்ந்து அமர்ந்து காரை கிளப்பினான் ருத்ரா .

"குட்டிமா ...கண் திறந்து பாரு மா ....."என்று ராஜீ குழந்தையை கண் விழிக்க வைக்க எவ்வளவூ முயற்சிக்க குழந்தை கண்களை திறக்கவேயில்லை .

எவ்வளவோ கொடூரங்களை பார்த்த அதிகாரி தான் அவள் ,ருத்ராவும் பல உயிர்களை பலி வாங்கியவன் தான் ,ஆனால் அந்த பிஞ்சு குழந்தையின் நிலை அவர்களின் இரும்பு மனதையும் கசக்கி பிழுந்து எடுத்துதது .குழந்தை என்று கூட பாராமல் கன்னம் ரெண்டும் கன்னி போகும் வரை அறைந்து இருந்தார்கள் அந்த கன்னங்களில் கை தடம் வெகுவாக பதிந்து இருந்தது ,உதடு கிழிந்து ரத்தம் வழிந்து கொண்டு இருந்தது .
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மதுராவின் சால்வை குழந்தையின் வயிற்றை சுற்றி முடிச்சிட்டு ,கயிறு போல் பயன்படுத்த பட்டு இருந்தது .மெயின் ரோட்டில் குழந்தை உருட்டும் போது ,உருளும் குழந்தை எதிரே வரும் எந்த பஸ்சிலும் காரிலும் மாட்டாமல் இருக்க .குழந்தை காரை விட்டு போதிய அளவூ உருண்டதும் அந்த சால்வையின் பிடியை மதுரா விட்டு இருக்கிறாள் என்பதை அவர்கள் புரிந்து கொண்டார்கள் .இந்த அளவுக்கு யோசித்த மதுரா ஓடும் காரில் இருந்து குழந்தையுடன் குதித்து இருக்கலாமே ஏன் குதிக்கவில்லை என்ற பெரும் கேள்வி அவர்களை பூதகரமாய் எழுந்தது

அதற்குள் சுந்தரம் மெடிக்கல் போட்டுண்டேஷன் SMF என்று அழைக்க படும் ஹாஸ்பிடல் வர குழந்தை அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்க பட்டாள் .

கண்ட்ரோல் ரூமில் இருந்து தகவல் வர ,"சாரி மேடம் ....அந்த காரை துரத்தி போனார்கள் ....அந்த பெண்ணை காப்பாற்ற முடியலை ...."என்ற தகவல் வந்தது .

விஷயம் விஜய்க்கும் ,சூர்யாவிற்கும் ருத்ரா தெரிய படுத்த ,குழந்தை கிடைத்து விட்டாளே என்று சந்தோச படுவதா இல்லை அவளை காப்பாற்றி விட்டு மாட்டி கொண்டு இருக்கும் மதுராவை நினைத்து பயப்படுவதா என்றே அவர்களுக்கு புரியவில்லை .

அனைவரும் ஹோச்பிடலுக்கு வந்து சேர தலைமை டாக்டர் ,"குழந்தைக்கு ஒன்றும் இல்லை ....ஹெவி செடேடிவ் கொடுத்து இருக்காங்க ...நல்லவேளை சீக்கிரம் கொண்டு வந்தீங்க ...இல்லைன்னா அந்த டோஸேஜ்க்கு மூளை இதயம் அபக்ட் ஆகி உயிருக்கே ஆபத்து ஆகி இருக்கும் .....பாவிங்க சின்ன குழந்தை என்று கூட பார்க்காமல் மாட்டை அடிப்பது போலெ அடித்து இருக்கானுங்க ......உடல் முழுக்க கன்னி போய் இருக்கு .....நல்லவேளை வேறு எந்த கெடுதலும் குழந்தைக்கு நடக்கவில்லை .கை கால் ,ரிப் கேஜ் கொஞ்சம் அடி பட்டு இருக்கு ...காரில் இருந்து உருட்டி விடப்பட்டதால் இருக்கலாம் ....தூக்கி போட்டு இருந்தால் தார் தரையில் பட்டு தலை சிதறி இருக்கும் ......ரொம்ப சின்ன பிள்ளை வேறு .....SKULL அந்த அளவுக்கு அடி பட்டு இருந்தால் தாங்கி இருக்காது ....நல்லவேளை ப்ரெசென்ஸ் ஆப் மைண்ட் இருக்க போய் உருட்டி விட்டு இருக்காங்க .....ரெஸ்ட் எடுக்கட்டும் ...குழந்தையே கண் விழிக்கட்டும் ."என்றார் .
ஒரு பக்கம் போலீசார் ,மறுபக்கம் விஜய் ,சூர்யா ஆட்கள் சென்னையை ஜல்லடை போட்டு சலிக்காத குறை .100கும் மேற்பட்டோர் இது போல் போதை மருந்து ,ஆட்கடத்தல் போன்றவற்றில் ஈடுபடும் இடங்களில் சென்று தேட சென்றனர் .ஏர்போர்ட் ,டோல் பூத் ,ட்ரெயின் ஸ்டேஷன் ,என்று எல்லா மாநிலங்களிலும் ஆட்கள் நிறுத்த பட்டனர் .தாராவி ,காமத்தி புரா போன்ற இடங்களில் பெண்களை வாங்கும் தலைமை ஆட்கள் கண்காணிப்பு வளையத்திற்கு கொண்டு வரப்பட்டார்கள் .

சோனா,கஜாவை தேடி ஒரு குழு செல்ல அதில் ராஜேஸ்வரி ,விஜய் ,சூர்யா இருந்தனர் .அந்த குழு சென்று நின்ற இடம் கஜாவின் ரெஸோர்ட்களில் ஒன்று .மூன்று நாட்களாய் அங்கு தான் அவர்கள் இருக்கிறார்கள் என்ற தகவலை அவர்களை கண்காணிக்க ராஜேஸ்வரி நியமித்து இருந்த போலீஸ் தகவல் சொன்னார்கள் .

உள்ளே நுழைந்தவர்களை பார்த்து வெகு நக்கலாக ,ஏளனத்துடன் ஒரு லுக் விட்டாள் சோனா .நினைத்ததை சாதித்து விட்ட வெற்றி களிப்பு அவள் கண்களில் மிக நன்றாகவே தெரிந்தது.உடன் கஜா ,அவர்களின் வக்கீல் .

hamsanandini34.jpg
வந்த கோபத்தை விஜய் ,சூர்யா மிகவும் கஷ்டபட்டு அடக்கி இருந்தார்கள் .கை முஷ்டி இறுக ,முகத்தில் எந்தவொரு ரியாக்ஷன் காட்டாமல் நிற்க வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு .விட்டு இருந்தால் துண்டு துண்டாய் அவர்களை வெட்டி போடும் அளவுக்கு வெறியில் தான் இருந்தார்கள் .

PENANCE WILL CONTINUE
 
Status
Not open for further replies.
Top