All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அனிதா ராஜ்குமாரின் "என்ன தவம் செய்தேன்" - கதை திரி

Status
Not open for further replies.

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
THAVAM 38

என்ன நடந்தது என்று யோசித்த மதுராவிற்கு ஒவ்வொன்றாய் நினைவுக்கு வர ஆரம்பித்தது .

மேக்னா ஷாப்பிங் மாலில் குழந்தை காணோம் என்று ஓடி வந்தது ,சுபத்ராவை தேடி அலைந்தது ,ஒரு பெண் கடத்தியவனை அடையாளம் காட்டியது,மானிட்டர் அறையில் இருந்த தன் மொபைலுக்கு வாட்ஸ்அப்பில் சுபத்ரா கை கால் கட்ட பட்ட நிலையில் இருந்த போட்டவும் ,புது நம்பர்ரில் இருந்து உடனே அழைப்பும் வர வெளியே வந்து பேசினாள் .

"ஹாய் டார்லிங் ......மிஸ் மீ ............. "என்றது எதிர்முனை .

Kanjoos-foodie.png
"வூ இஸ் திஸ் ?"என்றாள் மதுரா -சுமன் குரல் அதுவரை கேட்டு அறியாதவளுக்கு அவன் தான் அழைக்கிறான் என்பது தெரியவில்லை .

"டென்ஷன் ஆகாதே பேபி ...நீ வரலைன்னா தான் இப்படி நடப்பேன் ..............போட்டோ ,வீடியோ வேறு அனுப்பி வைப்பேன் ...அது எல்லாம் வேண்டாம் என்றால் நீ வந்தால் அந்த பெண்ணை விட்டுடுறேன் ....டீல் ஓகேவா ....வா செல்லம் ...சீக்கிரம் ...வாடா ...மாமா வைட்டிங் உனக்காக ......"என்றான்

அவன் சொல்படி நடப்பதை தவிர வேறு வழியில்லை மதுராவிற்கு .யாருக்கும் சொல்லாமல் அந்த பிஞ்சை காப்பாற்ற தான் பலியாக வேண்டியது முக்கியம் என்று தோன்றி விட சுமன் சொல்லிய படி வந்து நின்ற காரில் ஏறினாள் .

கார் அங்கு இருந்து விரைந்து கிளம்ப ,உள்ளே மயக்க நிலையில் இருந்தாள் சுபத்ரா .அங்கு ஷாப்பிங் மால் சரியாக மயக்க மருந்து கொடுக்க பட்டுஇருக்கவில்லை ....கார் ஒரு ரவுண்டு அடிக்கும் போதே சுபத்ரா விழித்து விட ,குழந்தை முன் பின் தெரியாதவர்களை கண்டு அழ ஆரம்பித்தாள் .கடத்தி வந்தவன்கள் வட மாநிலத்தவர்கள் .அவர்கள் சொல்வது புரியாமல் மேலும் அழ ,மாட்டை அடிப்பது போல் அடித்த அடியில் குழந்தை மயங்கி இருந்தாள் .

காரில் கார் ஓட்டுபவனோடு சேர்ந்து மேலும் மூன்று பேர் இருந்தார்கள் .அந்த சீட்டில் அரக்கர்கள் போல் அவர்கள் மூவர் அமர்ந்து இருக்க ,குழந்தையை அணைத்த படி மதுரா அவர்களின் கால் அருகே அமர்ந்து இருந்தாள் .

1552886872356.png

கார் வேகம் எடுத்து சென்று கொண்டு இருக்க ,அவள் கை ,கால் ,வாய் கட்டாதவர்கள் ,"கத்தாதே ......வழியில் யாராவது போலீஸ் வண்டி நிறுத்தி விசாரித்தால் ,குழந்தைக்கு உடல் நலம் இல்லை டாக்டர் கிட்டே கூட்டி போகிறோம் என்று மட்டுமே சொல்ல வேண்டும் புரிந்ததா ............மீறி ஏதாவது செய்தே ..........."என்றவன் சுபாத்ராவை காட்டி தன் கழுத்தில் கை வைத்து அறுப்பது போல் சைகை செய்தான் .

"குழந்தை என்று கூட பார்க்க மாட்டோம் .....சங்கை அறுத்துட்டு போயிட்டே இருப்போம் ...........புரிந்ததா ?'என்றான் .

'சரி 'என்று தலையாட்டிய மதுராவிற்கு எங்கே சென்று கொண்டு இருக்கிறோம் என்று கூட அறிந்து கொள்ளமுடியவில்லை .சன் ஷேட் ஒட்டப்பட்டு இருந்த காரில் இருந்து வெளியே அவளால் பார்க்க முடியவில்லை .நடுவே அந்த நால்வருக்குள் சண்டை வேறு வந்தது .ஹிந்தியில் காச் மூச் என்று ஒருத்தனை மற்றவர்கள் திட்டியது மட்டும் இல்லாமல், பலமாக அடிக்க அவன் மூக்கு உடைந்து ரத்தம் கொட்ட ஆரம்பித்தது .சுமன் புது ஆம்னி வேன் வாங்க அடிபட்டவனிடம் லட்ச கணக்கில் கொடுத்து இருக்கிறான் .அவன் அந்த பணத்தை குடி ,போதை ,பெண் என்று செலவழித்து விட்டு இந்த ஓட்டை வண்டியை விலைக்கு வாங்கி இருக்கிறான் .காரில் எதுவுமே சரியாக இல்லை .ஒரு பக்க கதவூ லாக் ஆகவேயில்லை .அதற்கு தான் அந்த அடி ,உதை எல்லாம் .
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இவர்கள் இப்படி கத்தி கொண்டே வர ,வண்டி ஒட்டிக்கொண்டு இருந்தவன் சட்டென்று ,"டேய் நிறுத்துங்கடா ....அங்கே பாருங்க ....அந்த ACP பொம்பளை நிக்குது ......"என்றான் .

அடுத்த நொடி அவர்களுக்கு முகம் வெளிறி போய் வெளியேவே பார்த்து கொண்டு இருந்தார்கள் .இருவர் ஒரு பக்க கதவின் அருகே இருந்து எட்டி எட்டி பார்க்க ,மற்றொருவன் சரியாக மூடாத கதவின் அருகே இருந்து எட்டி பார்த்து கொண்டு இருந்தான் .அவர்களின் கவனம் தன் மேல் இல்லை என்பதை கண்ட மதுரா தன் துப்பட்டாவை எடுத்து சுபத்ராவின் வயிற்றில் முடிச்சு போட்டு ,கயிறு போல் குழந்தையை சுற்றி சுத்தி விட்டாள் சுமன் அவளிடம் பேசியதில் இருந்து அவளின் பிளான் முதலில் குழந்தையை காப்பாற்றுவதாக மட்டுமே இருந்தது .குழந்தை அப்போதைக்கு அவளுக்கு பாரமே .குழந்தையை பணயம் வைத்து தன்னை கடத்தியது போல் 'இதை செய்யவில்லை என்றால் குழந்தையை ....'என்று ஒவ்வொன்றுக்கும் துண்டில் புழுவாய் பயன் படுத்துவார்கள் .தான் மட்டும் இருந்தால் ஏதாவது செய்து கூட தப்பி விடலாம் .ஆனால் சுபத்ரா என்ற குழந்தையின் பாதுகாப்பிற்கு அவள் தான் அந்த நேரம் முழு பொறுப்பு என்னும் போது குழந்தையை எப்படி தப்ப வைப்பது என்று மட்டுமே அவளுக்கு யோசனை ஓடி கொண்டு இருந்தது

நீ வந்தால் குழந்தையை விட்டு விடுகிறேன் என்று சொன்ன சொல்லை காப்பாத்த சுமன் என்ன மனிதனா ..இந்த குழந்தையையும் பாலியில் தொழிலுக்கு தான் பயன் படுத்துவான் என்பதில் அவளுக்கு துளியும் சந்தேகம் இல்லை .அவளுக்கு அந்த சமயம் இருந்தது மினிமம் 5 வினாடிகள் மட்டுமே ....அதற்குள் குழந்தையை அங்கு இருந்து அகற்றியாக வேண்டிய கட்டாயம் .ராஜி பெயரை கேட்டதும் அடுத்த நொடி அவள் பிளான் உருவாகி விட்டது அவள் மனதில் .சரியாக மூடாத கதவின் மூலம் குழந்தையோடு வெளியே குதித்து விட வேண்டும் என்று .

டிராபிக் கிளியர் ஆகி கார் மெதுவாய் வேகம் எடுத்த நொடி ஒருத்தன் மட்டுமே அமர்ந்து இருந்த வலப்பக்க கதவின் அருகே ஏற்கனவே நகர்ந்து அமர்ந்து இருந்தவள் ,அவன் எதிர் பாராத போது தன் பலம் முழுவதும் பயன் படுத்தி அவன் வயித்தில் குத்த ,வலியில் அவன் சுருண்டான் .என்ன ஏது என்று மற்றவர்கள் சுதாரிக்கும் முன் கார் கதவை திறக்க அது கால் வாசி மட்டுமே திறந்தது .ஒரு நொடி திகைத்தவள் ,குழந்தை மட்டுமே திறந்த கதவின் வழியாக தப்பிக்க முடியும் என்பதை உணர்ந்து சிறிதும் யோசிக்காமல் "ராஜேஸ்வரி "என்று அலறியவள் ,குழந்தையை நடு ரோட்டில் உருட்டி விட்டாள் .

தார் ரோட்டில் உருண்ட குழந்தை ட்ராபிக்கில் எந்த வண்டியின் டயர் அடியில் சிக்கி விட கூடாது என்று துப்பட்டாவை பிடித்து கண்ட்ரோல் செய்தவள் ,சுபத்ரா கார் விட்டு சற்று உருண்டதும் துப்பட்டாவை சரியான நொடியில் விட்டாள் .இல்லையென்றால் சினிமாவில் காட்டுவது போலெ வேகமாக செல்லும் காரின் பின் குழந்தை ரோட்டில் இழுக்க பட்டு இருப்பாள் .

அதற்குள் அந்த மூவரும் சுதாரித்து மதுராவின் முடியை பிடித்து உள்ளே இழுத்து பூட்ஸ் காலால் அவளை ஒன்றாக உதைக்க ஆரம்பித்தனர் .தலையை கார் கதவில் பல தடவை மோத வேறு செய்தனர் .ஒருத்தனாய் இருந்தால் ஏதாவது சமாளித்து இருக்கலாம் தான் .ஆனால் குறுகிய இடத்தில் தரையில் படுத்தவாறு இருந்த நிலையில் இருந்து மூன்று பேரினை சமாளிக்க அவளால் முடியவில்லை அப்போதைக்கு குழந்தை போல் சுருண்டு படுத்து தன்னை தானே பூட்ஸ் கால்களின் மிதியில் இருந்து தப்பித்து கொள்வது தான் பெரிதாக தோன்றியது .அப்படி இருந்தும் வயிற்றிலும் ,மார்பு கூட்டிலும் ,முதுகிலும் பல மிதிகள் விழுந்த வண்ணம் இருந்தது .அதில் ரெண்டு ,மூன்று மார்பு எலும்புகள் ஹேர்லைன் முறிவூ ஏற்பட்டு வலி உயிர் போனது . .கதவில் தலை மோதபட்டதில் மயக்கம் வேறு வர ,அடியின் வலியோடு சேர்ந்து மயக்கம் அவளை ஆட்கொண்டது .

குழந்தை சுபத்ராவிற்கு இனி எந்தவித ஆபத்தும் இல்லை என்ற நினைவே புன்னகைக்க வைக்க ,மெல்ல ஏற்பட்ட மயக்கத்தில் ஆழ்ந்து விட்டாள் மதுரா .மெல்ல மெல்ல நடந்தவை நினைவில் ஓடி முடிய ,ஹேர்லைன் FRACTURE ஆகி இருந்த மார்பு எலும்புகளின் வலி மெல்ல மெல்ல வலியை கொடுக்க ,பெருமூச்சு விட்டவாறு தன்னை சமாளித்து நிமிர்ந்தவளின் கண்களுக்கு குமிருட்டு தான் தெரிந்தது .
3491326-a-small-shipping-barge-taking-containers-across-the-harbour-hong-kong.jpg

கை வைத்து தான் சாய்ந்து இருந்த சுவர் போன்ற கடினத்தை தொட்டு பார்த்தவள் தான் இருப்பது கப்பல் கண்டைனர் என்பதையும் ,அந்த கண்டைனர் கப்பலில் ஏற்றப்பட்டு விட்டதையும் கப்பல் ஆட்டத்தினை வைத்து புரிந்து கொண்டாள் .

"!பயப்படாதே ...........உனக்கு ஒன்றும் இல்லை ..........இங்கே நீ தனியா இல்லை ......இருட்டை பார்த்து பயப்படாதே ...."என்றது முதலில் பேசிய பெண்குரல் ஹிந்தியில் .

கண்டைனர் சுவாசிக்க போட பட்டு இருந்த சிறு சிறு ஓட்டை வழியாக உள்ளே வந்த லைட் வெளிச்சத்தின் மூலம் உள்ளே இருந்தவர்களின் வடிவத்தை அவளால் காண முடிந்தது .வலியோடு முன் குனிந்தவள் தன் அனார்கலி சுடிதாரின் பேண்ட்டில் இரு தொடைகளின் உட்புறம் ,ஸ்பெசல் ஆக அவள் முன்தினம் தைத்து வைத்து இருந்த பாக்கெட்டில் இருந்து சிறு பென் டார்ச்சு ஒன்றினை எடுத்து ஒளிர விட்டாள் .
டார்ச் லைட் ஒளி கண் முன் இருந்த கோராமையை படம் பிடித்து காட்டியது .ஏறக்குறைய 100 பெண்கள் கை கால்கள் சங்கிலியால் கட்ட பட்ட நிலையில் அந்த கன்டைனரில் இருந்தனர் .5 பச்சிளம் பிள்ளைகள் வேறு அங்கு இருந்தன .ஒவ்வொரு பெண்ணின் முகமும் பல கொடுமைகளை தாங்கிஇருக்க, பார்ப்பவர்களின் கண்கள் தானாக நிச்சயம் கலங்கி விடும் .சில பெண்களின் முகத்தில் ,உடம்பில் அங்கங்கு ரத்தம் உறைந்து காய்ந்து போய் இருந்தது .ஹாங் காங் மசாஜ் விடுதிகளில் அரைகுறை ஆடையோடு கண்ணாடி பெட்டகத்தில் நிற்க வைப்பார்கள் .அதே போன்ற ஆடை மட்டுமே அங்கு இருந்தபெண்களின் உடலில் இருந்தது .

குப்பென்ற கெட்ட வாடை வேறு அங்கு வீச மதுராவிற்கு குமட்டி கொண்டு வந்தது .தன் ஆடை நுனி வைத்து மூக்கினை மூடி கொண்டாள் .
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அவள் செய்வதை கண்டு வாய் விட்டு நகைத்தனர் அங்கு இருந்த பெண்கள் அந்த நிலையிலும் .
1552887876119.png

"இது பைவ் ஸ்டார் ஹோட்டல் இல்லைம்மா ...........தின்றது ,கழிக்கிறது எல்லாம் உள்ளே தான் ...அதுவும் இத்தனை பேருக்கு சேர்த்து 5 பக்கெட் தான் கொடுப்பாங்க ....எல்லோருக்கும் அது தான் பாத்ரூம் .......அதை ரெண்டு நாளைக்கு ஒருமுறை தான் எடுத்து போய் நம்மை கொட்ட வைப்பானுங்க .......ஆனா தினமும் இங்கு இருப்பவனுங்க கூட அவனுங்க இழுத்து போகும் போது போகணும் ... ....சாட்டை அடி ,பெல்ட் ,பூட்ஸ் கால் உதை எல்லாம் கிடைக்கும் .....இது தான் இங்கே கொடுக்க படும் டிரஸ் .....எவ்வளவூ தாராளம் பார்த்தாயா ........பனி ,குளிர் எதுவாய் இருந்தாலும் இது மட்டுமே உடை ."என்றவளின் பேச்சை கேட்டு அங்கு இருந்தவர்கள் சிரித்தார்கள் .

"என்ன அப்படி பார்க்கறே ....இந்த நிலையிலும் சிரிக்கிறோம் என்றா .....10 நாளா இப்படி தானே இருக்கோம் .....ராஜ உபசாரம் ......உனக்கும் பழகிடும் "என்றாள் இன்னொருத்தி .

"இந்த கப்பல் எங்கே போக போகுது ?"என்றாள் மதுரா .

"தாய்லாந்துன்னு பேசிக்கிட்டாங்க ..............அங்கு இருந்து சிங்கப்பூர் ,ஹாங் காங்கில் பிரித்து பிரித்து மாட்டை விற்பது போல் ஏலம் போட்டு விற்பானுங்க .........."என்றாள் மூலையில் இருந்து ஒருத்தி .

"நீங்க எல்லாம் ...........இவனுங்க கிட்டே எப்படி மாட்டினீங்க ........."என்றாள் மதுரா .

"ஒவ்வொருத்தர் இங்கே மாட்டிய விதம் பல வகை ..........உங்க முன்னே இருக்கிறவள் நைட் வேலைக்கு போய்ட்டு வந்த போது கடத்திட்டானுங்க ....பக்கத்துல இருக்கிறவளை அவ புருஷனே வித்துட்டான் ....நான் காதல் என்ற பெயர் செய்து கொண்டு வந்த ஒருவனை நம்பி வீட்டை விட்டு நகை பணத்தோடு ஓடி வந்தேன் .கல்யாணம் செய்யறேன் என்று உருகி உருகி வாக்கு கொடுத்தான் .....நம்பினேன் ....கல்யாணம் செய்யலை ...ஆனால் ஊருக்கே பங்கு போட்டு கொடுத்துட்டான் ......இதோ இவ பார்ட்டிக்கு போகிறேன் என்று தோழிகளோடு போனா அங்கே போதை மருந்துக்கு அடிமை படுத்தி ...அதற்காகவே வீட்டை விட்டு வெளியேறி மாட்டி கொண்டா .....இந்த குழந்தைங்க அவனுங்க நடத்தும் அனாதை ஆசிரமம் ,அரசு ஹாஸ்பிடல் என்று கடத்தி வந்துட்டானுங்க ."என்றாள் இன்னொருத்தி .
31103339890_6f31d8f047_k-998x713.jpg

"ஒண்ணு விபசாரத்தில் ஈடுபடுத்துவானுங்க ...இல்லையா ஏதாவது பணக்காரன் வீட்டில் வேலைக்காரியாக அடிமையாக இருக்கணும் ......இல்லை உறுப்புகளுக்காக கொன்று விடுவானுங்க ...........உலகத்தில் மண்ணுக்கு போற உடம்பை யாருக்காவது பயன் படடுட்டும் என்று இறந்த பின் ஆர்கன் டொனேஷன் அனைவரும் செய்தால் இதற்காக என்று கள்ள மார்க்கெட் ஏன் உருவாக போகிறது ..........ஒவ்வொருத்தரின் இயலாமை ,முயலாமை எங்களை போன்றோர்களை எங்கே கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது ........... இந்த பிஞ்சுகள் என்ன பாவம் செய்தது ...யாரோ ஒருத்தரின் காதல் என்ற முகமூடி போர்த்திய காமத்திற்கு பலியானது இந்த குழந்தைகள் தானே "என்றவள் முகத்தை மூடி கதறி அழுதாள் .

X7ji_j3A_400x400.jpg
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கண்ணீர் வழிய அமர்ந்து இருந்தாள் மதுரா .அருகே இருந்த பிஞ்சு குழந்தையின் கை விரலை இவள் தொட தனக்கு காத்து இருக்கும் கொடுமைகளை அறியாமல் கை கால் உதைத்து சிரித்து கொண்டு இருந்தது அந்த பெண் சிசு .

1552888203870.png
இங்கு யாரை குறை சொல்வது ?பாம்பாய் தெருக்களில் கூவி கூவி தங்களை தாங்களே விற்பனை செய்து கொள்ளும் பெண்கள் ,தெருக்களில் ,கண்ணாடி ஷோ கேஸ்கலில் அவர்களை நிறுத்துபவர்கள் . காதல் என்ற பெயரால் ஏமாற்ற படும் பெண்கள் , நடுத்தெருவில் போகும் போது கடத்தப்படும் பெண்கள் .............இவர்களை திரௌபதிகள் ஆக்கி விட்டு அதில் குளிர் காயும் துச்சாதனன்கள் ,இவை நடப்பது தெரிந்தும் கௌரவ சபை போல் அமைதி காக்கும் பொது மக்கள் .எங்கோ பற்றி எரியும் தீ -எனக்கு அதில் என்ன சம்பந்தம் இருக்கு என்று சோசியல் மீடியாவில் மட்டும் பொங்கி விட்டால் போதும் என்று நினைக்கும் கலங்கரை விளக்கங்கள் .சதை விற்று அதில் வரும் பணத்தை பெட்டி பெட்டியாய்வாங்கி கொண்டு சட்டத்தை இயற்றுபவர்கள், அதை செயல் படுத்துபவர்கள் ,அதை காப்பாற்றுபவர்கள் என்று எல்லோருமே காந்தியின் மூன்று குரங்கினை பின் பற்றுபவர்கள் .
1552888249881.png

"இங்கே பாரு ....டார்ச் லைட் வைத்து இருப்பதால் என்னவோ பெரிய ஜான்சி ராணி ரேஞ்சுக்கு ,ஜாக்கி சான் தங்கை ரேஞ்சுக்கு எல்லாம் கற்பனை வளர்த்துட்டு இங்கே இருந்து தப்பி போகலாம் என்று பகல் கனவூ காணாதே ...போன வாரம் ஒருத்தி அப்படி தான் செஞ்சா .....சாவே மேல் என்று கதற வைத்துட்டாங்க .....அந்த பொண்ணு இவனுங்க செய்ததது தாங்க முடியாம ஸ்பாட் டெத் ஆகிடுச்சு ....இதோ இவ நேத்து கூட்டி வந்தானுங்கோ .....மேடம் ரொம்ப துள்ளினா போல் இருக்கு ....அடி ,உதை மட்டும் இல்லாம கையை உடைத்துதுட்டாங்க .....அவனுங்க எது செய்தாலும் அமைதியா இருந்துடு உடம்பு புண் ஆகாது ......இல்லை வெறி பிடித்து எதை வேண்டும் என்றாலும் செய்வானுங்க .""என்றாள் ஒருத்தி .

அவர்கள் மேலும் ஏதோ சொல்ல போன சமயம் வெளியே இருந்து கதவூ திறக்கும் சப்தம் கேட்க ,"ஏய் அந்த டார்ச் ஆப் செய் .....இல்லைன்னா அதுக்கு வேற ஏதாவது செய்வானுங்க .....முள் சவுக்கோடு தான் வருவாங்க ...."என்றவளின் குரலில் அப்படி ஒரு மரண பயம் .

PENANCE WILL CONTINUE.....
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
hai natpoos

இங்கு நடப்பதாக கூற பட்டு situation உண்மை ரிப்போர்ட் அடிப்படையை கொண்டு எழுதப்பட்டவையே .கதைக்காக என்று எழுதவில்லை . இங்கு சொல்ல பட்டு இருக்கும் பெண்களுக்கு எதிராக நடப்பதாக சொல்ல பட்டு இருக்கும் கொடுமைகள் மிக மிக குறைவாக தான் சொல்லி இருக்கேன் .....தேசிய மனித உரிமைகள் ஆணையம் ,அமெரிக்கா போலீஸ் துறையின் "ஸ்பெஷல் victims unit " பெண்கள் வன்கொடுமைகள் ரிப்போர்ட் ஒவ்வொரு கொடுமையையும் விவரித்து சொல்கிறது .based on those reports the dialogues are written

4601af48c389e37d418f79fe386896b0--prostitution-in-india-infographics.jpg

There Are An Estimated 24.9 Million People Trapped In Forced Labor Via Human Trafficking Worldwide.In September 2017, the International Labor Organization (ILO) estimated that 24.9 million men, women, and children were victims of human trafficking around the globe.

According to the United Nations Office on Drugs and Crime's 2016 Global Report on Trafficking in Persons, 54 percent of all trafficking victims in 2014 were trafficked for the purpose of sexual exploitation.
35_52_infographic.jpg

Polaris' National Human Trafficking Hotline said it was notified about 6,244 cases of sex trafficking in 2017 alone.

The most common forms of sex and labor trafficking are, according to Polaris, illicit massage businesses, bars, strip clubs, or cantinas, and other more broadly defined "illicit activities."

இது போல் கண்டைனர் கடத்த படும் பெண்களுக்கு உண்ண ,குடிக்க ,ரெஸ்ட் ரூம் எல்லாம் ஒரே இடம் தான் .இப்படி வரும் பெண்கள் குறைந்தது 20-25 நாட்கள் உள்ளேயே இருப்பார்கள் .பாதி பேர் இறந்தும் விடுவார்கள் பெண்களை கடத்தி பல வருடங்கள் அடிமையாக வீட்டில் வைத்து இருப்பதும் உண்டு .
behind-the-brothel-can-we-break-the-human-trafficking-cycle-1-638.jpg

உடல் உறுப்புகளுக்காக கடத்த பட்டு கொள்ள படும் பெண்கள் ,குழந்தைகள் ,முதியவர்கள் பலர் உண்டு .சென்னை சம்பவமே சிறந்த உதாரணம் .

15/7/2017 அன்றே என்னுடைய ஆர்கன் டொனேஷன் பற்றிய விவரத்தை எழுதி வைத்து விட்டேன் .கீழ் கொடுக்க பட்டுள்ள தமிழ்நாடு அரசாங்க ஆர்கன் டொனேஷன் form கூட பூர்த்தி செய்து விட்டேன் .கதைக்காகவோ ,மற்றவர்களின் பாராட்டுக்காகவோ,publicity stunt kaga இதை செய்யவில்லை நட்புக்களே .....என் தாத்தா இறந்த உடன் அவர் கண்களை 10 வருடங்களுக்கு முன்பே டோனட் செய்து விட்டார் .அதை பார்த்து 2017 நானும் அவரை பின்பற்றி எழுதி விட்டேன் .இதை படித்து யாராவது ஒருவர் உடல் உறுப்பு தானம் செய்ய முன் வந்தால் மிகவும் சந்தோச படுவேன் .


மாற்றம் என்பது நமது நடவடிக்கையில் உள்ளது என்பதை நம்பி மற்றவர்களுக்கு சொல்லும் முன் அதை கடை பிடித்து கொண்டு இருக்கிறேன் .இறந்த பிறகும் வாழ நான் முடிவூ செய்து விட்டேன் ...அப்போ நீங்க ????

உடல் தானம் செய்ய விரும்புவோர்

Tamil Nadu Organ Sharing Registry – Share Organs Save Lives

View attachment 9903
 
Last edited:

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
THAVAM 38(1)

அவர்கள் மேலும் ஏதோ சொல்ல போன சமயம் வெளியே இருந்து கதவூ திறக்கும் சப்தம் கேட்க ,"ஏய் அந்த டார்ச் ஆப் செய் .....இல்லைன்னா அதுக்கு வேற ஏதாவது செய்வானுங்க .....முள் சவுக்கோடு தான் வருவாங்க ...."என்றவளின் குரலில் அப்படி ஒரு மரண பயம் .

human-trafficking-slavery-istock_650x400_81461234131.jpg
மற்றவர்களும் ஏதோ சாவை எதிர் பார்ப்பது போல் முகம் வெளுத்து சுவற்றோடு சுவராக ஒண்டி கொண்டார்கள் .அவர்கள் சொன்னது போல் டார்ச் ஆப் செய்த மதுரா ,பக்கத்தில் இருந்தவளின் கையில் அதை கொடுத்து விட்டு கண் மூடி படுத்து விட்டாள் .அவள் படுக்கவும் ,கதவூ திறக்கவும் சரியாக இருக்க ,உள்ளே நுழைந்தனர் மாமிச மலை போல் சாட்டையுடன் மூவர் .அங்கு இருந்தவர்களை பயமுறுத்த என்றே சாட்டையை சுழற்றியவர்கள் அதை கண்டைனர் சுவற்றில் அடிக்க ,அதன் சப்தம் அந்த நிசப்தத்தில் மிக பலமாக ஒளித்து இதய துடிப்பை ஒரு கணம் நிறுத்தியது .

அதில் ஒருவன் மதுராவின் அருகே வந்து அவள் கன்னத்தை பிடித்து தட்டினான் .அவன் முகம் யோசனையில் சுருங்க ,பின்னால் நின்றவர்கள் நோக்கி திரும்பியவன்\,"இந்நேரம் இவளுக்கு மயக்கம் தெளிந்து இருக்கணுமே ....என்னடா செய்து தொலைத்தீங்க .....மேட்டர் முடிச்சுடீங்களா என்ன ?"என்றான் கோபத்துடன் .

"ஐயோ அண்ணே .....அப்படி எல்லாம் இல்லை அண்ணே ....நீங்க தான் தெளிவா சொல்லி இருக்கீங்களே .....கடத்தி வரும் பெண்களை இங்கே சர்ஜி உத்தரவூ இல்லாம தொட கூடாது ....அவர் தான் முதலில் .......அது ஒண்ணும் இல்லை அண்ணே .....தூக்கி வந்த அந்த குழந்தையை தப்ப விட்டுட்டா .....அதான் கார் கதவில் தலையை நாலு தடவை சும்மா மோதினோம் .....நாலு மிதி மிதித்தோம் ...அதில் எலும்பு ஏதாவது உடைந்து இருக்கும் அண்ணே ...."என்றவனின் கன்னத்தில் இடியென இறங்கியது அவன் கரம் .

"இவளுக்கு ஏதாவது ஆச்சு ....சர்ஜி உங்களை போலி போட்டு இருப்பார் ....அவர் வரும் நேரம் ....இவளை தூக்கி போய் அவர் அறையில் விடுங்க .....சர்ஜி எப்போ வேண்டும் என்றாலும் படகில் வந்து விடுவார் .இன்னும் 15 நிமிடத்தில் கப்பல் கிளம்பி விடும் ...ஹ்ம்ம் ...தூக்கிட்டு வாங்க அவளை ..."என்றவன் வெளியேற ,மதுராவை தூக்கி தோளில் போட்டு கொண்டு அவர்கள் வெளியேற மீண்டும் கண்டைனர் கதவூ வெளியே பூட்ட பட்டது .

ஒருத்தனின் தோளில் இருந்த மதுரா ஒற்றை கண்ணை திறந்து பார்க்க ,அது சிறிய வகை கண்டைனர் கப்பல் என்பதும் ,அது நடுக்கடலில் சுமன் வருகைக்காக நங்கூரம் இடப்பட்டு காத்து இருக்கிறது என்பதையும் புரிந்து கொண்டாள் .அவள் இருந்த கண்டைனர் போலவே இன்னும் மூன்று கண்டைனர் அங்கு இருப்பதையும் அதில் இருந்து பெண்களை வெளியே கொண்டு வருவதும் ,உள்ளே தள்ளுவதுமாக இருப்பதை கண்டாள் .பாதுகாப்பும் பலமாக இருந்தது .

கீழ் தளத்தில் சுமன் அறை இருக்க அங்கு அவளை கொண்டு வந்து அமர வைத்து ,கை கால்களை நைலான் ரோப் கொண்டு கட்டி போட்டனர் .அந்த அறையை துடைத்து கொண்டு இருந்தவன் மதுராவின் முகத்தை பார்த்து திகைத்து போனான் .

"டேய் இங்கே என்ன பண்றே ....சமையல் அறையை விட்டு எதற்கு இங்கே வந்தே நீயி ...."என்றான் ஒருவன் .

"சார் சாப்பிடாம வரராம் ......அவருக்கு சாப்பாடு கொண்டு வந்தேன் .....அறை ரொம்ப அழுக்கா இருந்தது .சர்ஜிக்கு அது பிடிக்காதே ...அதான் துடைச்சிட்டு இருந்தேன் ...."என்றான் அவன் .

"சரி சரி ...கிளம்பு ...சர்ஜி வரும் நேரம் ....வா வா எங்களுக்கும் பசிக்குது ....சாப்பாடு ரெடி செய்யு ..."என்றவர்கள் கதவை பூட்டி வெளியேற கண்ணை திறந்தாள் மதுரா .


முதல் வேலையாக அந்த அறையை சுற்றி கண்ணை ஓட்டினாள் ....."பேட்ட "படத்தில் மார்க்கெட் சண்டை காட்சியில் ரஜனி என்னென்ன பொருட்களை பயன்படுத்தி அடிக்கலாம் என்று அனலைஸ் செய்வது போலே அந்த அறையில் உள்ள எந்தெந்த பொருட்கள் தன் பாதுகாப்பிற்கு பயன் படும் என்பதை மதுராவின் கண்கள் ஆராய்ந்து கொண்டு இருந்தது .

கண்கள் ஆராய்ச்சியில் ஈடுபட நாற்காலியின் பின்புறம் வைத்து ஒன்றின் மேல் ஒன்றாய் கட்ட பட்டு இருந்த கைகளை மெல்ல அசைத்தாள் மதுரா .கீழ் கையின் விரல்கள் மேல் இருந்த மற்றொரு கையின் மணிக்கட்டினை அழுத்த ஆரம்பித்தது .மணிக்கட்டின் அருகே அவள் அணிந்து இருந்த அனார்கலி சுடிதாரின் கை அகல பட்டை அழகுக்காக தைக்க பட்டு இருந்தது .அந்த பட்டையை மெல்ல அவள் முன்னும் பின்னும் அழுத்தி கொண்டு இருக்க அதன் உள் இருந்து வெளிப்பட ஆரம்பித்தது ஆக்சா பிளேடு .

actress_samantha_green_churidar_photoshoot_stills_6777f68.jpg

1552987038712.png
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அதே சமயம் சத்தம் ஏற்படுத்தாமல் கப்பலின் பின் புறம் வந்து நின்றது ஒரு கறுப்பு நிற பைபர் படகு ஒன்று அந்த நள்ளிரவின் இருட்டை பயன் படுத்தி .அதில் எந்த பாகமும் வெளியே தெரியாமல் தலை முதல் பாதம் வரை கறுப்பு உடை அணிந்து இருந்த உருவங்கள் கயிற்றினை கப்பல் மேல் போட்டு ,அதை பிடித்து மெல்ல மேல் ஏற ஆரம்பித்தனர் .நள்ளிரவூ என்பதால் அதிக அளவூ வெளிச்சம் கப்பலில் இல்லாததாலும் ,இவர்கள் பேய்யை போல எவ்வித சப்தமும் எழுப்பாமல் நடந்ததாலும் இவர்கள் உள்ளே வந்ததை யாரும் அறியவில்லை .

7025184989_043010a6b8_b.jpg

அதே சமயம் சுமன் வந்த படகு அந்த கப்பலை அடைய ,அவன் மேல் ஏற வாக்கிங் ராம்ப் இரக்கபட்டது .கப்பல் தளத்தில் வந்து நின்ற அவன் கேட்ட முதல் கேள்வியே "மதுரா எங்கே ?"என்பது தான் .


அதே சமயம் சமையல் அறை கதவை தாள் இட்ட அவன்,மதுராவை சுமன் அறையில் பார்த்து திகைத்தவன் ஒரு மூலையில் இருந்த பரண் போன்ற அமைப்பில் இருந்து துணியில் சுற்றி வைக்க பட்டு இருந்த கறுப்பு பெட்டியில் இருந்து sateliite போன் ஒன்றை எடுத்தான் .

g3fxxo7o6a411.jpg

சில நம்பர் அழுத்தியவன் எதிர் முனை எடுக்க பட ,340008562133 ஆபரேஷன் ஜாக்கெல் ....."என்றான் .
6820993-Ship-s-Kitchen-0.jpg

"அடுத்த சில வினாடிகளில் ,யெஸ் திஸ் இஸ் ராஜேஸ்வரி ......யார் இது ?"என்றது ராஜியின் குரல்.

"திஸ் இஸ் ஸ்பெஷல் ஆஃபீஸ்ர் designation (special officer designation )ப்ரைம் மினிஸ்டர் ஆன்டி ஹியூமன் ட்ராபிக் டாஸ்க் போர்ஸ் ஆஃபீசர் (prime minister anti human traffic task force officer )ACP ரஞ்சித் சாகர் பேசறேன் ....விஜய் தம்பி ....மதுராவை சுமன் கடத்தி "கிளியோபாட்ரா "என்ற கப்பல் கண்டைனர்ரில் அடைத்து வைத்து இருக்கிறான் ....மொத்தம் 300 பெண்கள்,10-15 குழந்தைகள் இருக்காங்க ....கப்பல் desitnation தாய்லாந்து ......கப்பல் கிளம்பிடுச்சு ...இன்னும் பதினைந்து நிமிடத்தில் இந்திய கடற்புற எல்லையை விட்டு தாண்டிடும் ...அதன் பிறகு நம்ம கண்ட்ரோல் இல்லை ...என்னால் முடிந்த அளவூ மதுராவை காப்பாற்றுவேன் என்று அண்ணாவிடம் சொல்லிடுங்க ......ஆனால் உங்க உதவி இல்லாம மத்த பெண்களை காப்பாற்ற முடியாது .சீக்கிரம் வாங்க ......எல்லை ரோந்து படை எதுவும் இந்த பக்கம் வராம பார்த்துகோங்கோ ....இல்லயென்றால் மொத்த கண்டைனர் கடலில் தள்ளிடுவாங்க ....."என்றான் கம்பீரமாக .

"டேய் !நீ எப்போ போலீஸ் சேர்ந்தே ...விவசாயம் தானேடா பார்த்து கொண்டு இருந்தே ...நீ எப்போ அந்த கப்பலுக்கு போனே ....."என்றான் விஜய் திகைப்புடன் .

"போன தடவை கண்டைனர்ரில் இருந்து பெண்களை காப்பாற்றிய போது இவங்க ஆட்கள் ஒட்டுமொத்தமாய் ராஜி மேடம் பிடிச்சுட்டாங்க ....எப்படியும் புது ஆட்களை recruit செய்வாங்க என்று எங்க டீம் தயாராக இருந்தோம் .....சமையல் வேலைக்கு ஆள் தேவை பட்டது ...உள்ளே நுழைஞ்சிட்டேன் ...இப்போ இந்த பிளாஷ் பாக் ரொம்ப தேவை பாரு ....ஏன்டா ...விவசாயம் என் உயிர் .போலீஸ் வேலை என் உடல் என்று டயலாக் விடணுமா என்ன ?????இப்போ இந்த ஹிஸ்டடி தேவையா .........அவனவன் இருக்கும் நிலை தெரியாம காமெடி பண்ணிட்டு........... வந்து பொண்ணை காப்பாத்துடா லூசு ..... மொத்தம் 25 பேர் காவலுக்கு இருக்காங்க .......முடிந்த அளவூ உங்களை expose செய்து கொள்ள வேண்டாம் ......நீங்க வருவதை பார்த்துட்டாங்க எல்லா எல்லாம் முடிந்தது .....நீங்க வருவதற்குள் இங்கே ஏதாவது செய்து வைக்க முடியுமா என்று பார்க்கிறேன் ."என்றவன் அழைப்பை துண்டித்து விட்டு சமையல் அறையின் பின்புற கதவை திறக்க 7 மெஷின் கன் அவன் முகத்துக்கு நேர நீட்டப்பட்டது .

"யார் நீ ..............இப்போ யார் கூட பேசிட்டு இருந்தே ..."என்றான் அந்த கறுப்பு உடை அணிந்த கூட்டத்தில் உயரமாய் இருந்தவன் .

அவர்கள் சுமன் ஆட்கள் இல்லை ஏதோ சிறப்பு காவல் படை என்பது புரிந்து விட ,தன்னை மீண்டும் அறிமுகம் செய்து கொண்டவன் ,"ஐயம் ACP ரஞ்சித் சாகர் .அண்டர் கவர் போலீஸ் ஆஃபீஸ்ர் .ஆபரேஷன் ஜாக்கல்.இப்போ ACP ராஜேஸ்வரி மேடம் கிட்டே பேசிட்டு இருந்தேன் .....இங்கே 300 பெண்கள் ,15 குழந்தைகள் கடத்த பட்டு இருக்கிறார்கள் .அதில் என் குடும்பத்தை சேர்ந்த மதுராக்ஷி இருக்கிறார்கள் ....அதை பற்றிய தகவல் சொல்லிட்டு இருந்தேன் . "என்றான் தன் முழு உயரத்திற்கு நிமிர்ந்து .

அந்த ஏழு பேர் விலகி நிற்க பின்னால் இருந்து முன் வந்த ஒருவர் தன் முகத்தை மூடி இருந்த மாஸ்க் அகற்றி ,"நான் மாசிலாமணி ....இந்தியன் ARMY EX மேஜர் .இவன் (உயரனமானவனை காட்டி )இந்திய ARMY மேஜர் விக்ரமாதித்யன் .என் மாணவன் .இவங்க என்னுடன் முன்பு பணி ஆற்றிய முன்னால் ராணுவ வீரர்கள் ....அந்த அப்பாவி பெண்களை காப்பாத்தவும் ,சுமனை கொன்று விடவும் தான் வந்து இருக்கோம் ....முதலில் மதுராவை காப்பாற்றலாம் வாப்பா ."என்றார் மாசிலாமணி .
 
Last edited:

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அவரை தடுத்து நிறுத்திய சாகர் ,"இல்லை சார் .....இந்த கப்பலில் மொத்தம் சுமன் ஆட்கள் 25 பேர் இருக்காங்க ....ஏதாவது ஆபத்து என்றால் இங்கு உள்ள மூன்று கண்டைனர் கடலில் தள்ளிடுவாங்க ....போன வாரமே கடல் ரோந்து படை வருவதை பார்த்து அப்படி தான் செய்தானுங்க இவங்க ...முதலில் இந்த 25 பேர் காலி செய்தால் தான் 300 பெண்களை காப்பாற்ற முடியும் ....மதுரா ஒருத்தங்களுக்காக இந்த 300 பேரை என்னால் பலி கொடுக்க முடியாது சார் .....முதலில் இவங்களுக்கு காபியில் தூக்க மாத்திரை கலக்கி கொடுக்கிறேன் ....அப்போ தான் இவன்களை சமாளிக்க முடியும் .....ஒருத்தன் உஷார் ஆனாலும் பிரச்சனை தான் ."என்றவன் சொல்வதில் உள்ள உண்மை புரிய அவர்கள் அந்த சமையல் அறையில் மறைந்து நின்றார்கள் .

3627648f5cf35e825f48f74d0968eca5.jpg

காபி கொடுக்கும் போதே சாகருக்கு திக் திக் என்று அடித்து கொண்டது .எவனாவது ஒருத்தனுக்கு சந்தேகம் வந்தாலும் முதலுக்கே மோசம் என்ற நிலை ......கப்பல் முழுவதும் பாதுகாப்பில் இருந்த 25 பேருக்கும் கொடுத்து விட்டு வருவதற்குள் சாகருக்கு போதும் போதும் என்றாகி விட்டது .மருந்து வேலை செய்து ,அவர்கள் மொத்தமாய் மயங்க எடுத்து கொண்ட நேரம் வரை ,எது எங்கே தவறாய் போகுமோ என்று தான் இவர்கள் எதற்கும் தயாராய் இருந்தார்கள் .
ஒன்றிற்கு ரெண்டு தடவை எல்லோருக்கும் கொடுத்து விட்டோமா இல்லை எவனையாவது விட்டு விட்டோமா என்று மிகவும் கவனமாய் ,முகத்தில் எந்த உணர்ச்சியையும் காட்டாமல் அந்த வேலையை செய்து முடிக்க வேண்டி இருந்தது .ஒரு வாரமாய் அந்த கப்பலில் நடந்த பல்வேறு கொடுமைகளுக்கு அவன் மௌன சாட்சியாய் இருந்தான் .

ஒரு நாடு நன்றாய் இருக்க ஒரு குடும்பத்தை இழக்கலாம் என்ற நிலை அவனுடையது .பாதிக்க படும் ஒரு பெண்ணிற்காக பார்த்தால்,இந்தியா மட்டும் இல்லாமல் உலகம் முழுதும் பரவி இருந்த சுமன் குழுவின் நெட்ஒர்க் பற்றி தெரிய வேண்டி இருந்தது .எல்லாத்தையும் கண்டும் ,காணாமல் அவர்கள் முன் நிற்பவன் ,பாத்ரூமில் தண்ணீர் திறந்து விட்டு அந்த சத்தத்தில் வாய் மூடி கதறி அழுத நாட்கள் பல .பல இரவுகளில் அவன் தூங்கியதும் இல்லை .

undercover வேலையில் உள்ளவர்களின் சாபமே அது தான் ...கண் முன் ஆயிரம் நடந்தாலும் "greater good "என்பார்கள் அதற்காக அனைத்திற்கும் மௌன சாட்சியாய் இருக்க வேண்டியது கட்டாயம் .இதற்கு ஏதாவது முடிவூ கட்ட வேண்டும் என்று தான் அவன் காத்து இருந்தது .சுமன் வருவதாகவும் ,சாப்பாடு வேண்டும் என்ற கட்டளை வந்ததும் தயாராகி விட்டான் சாகர் .சாப்பாடு வைப்பது போன்று சுமன் அறைக்குள் நுழைந்தவன் ,அதை சுத்தம் செய்யும் சாக்கில் அவன் நெட்ஒர்க் பத்தி தகவல் கிடைக்கிறதா என்று தேடும் போது தான் மதுராவோடு அவர்கள் உள்ளே வந்தது .அந்த ராட்சச கூட்டத்தின் உள்ளே மதுராவை கண்டதும் அவன் இதயம் துடிப்பதை நிறுத்தி தான் விட்டது .

அதற்குள் அவர்கள் 'இங்கே என்ன செய்கிறாய் 'என்று கேட்க ,சுத்தம் செய்வதாக சொல்ல அவனோடு அவர்கள் வெளியே சென்று விட்டார்கள் .சுமன் கோபம் அனைவரும் அறிந்த ஒன்று ,அவன் சொல்படி தான் அனைத்தும் இருக்க வேண்டும் ,நடக்க வேண்டும் என்று நினைப்பவன் .அறை சுத்தமாய் இல்லை என்றதும் ஒரு முறை அறை சுத்தம் செய்பவனை 2 நாட்களுக்கு தலை கீழாக கட்டி தொங்க விட்டவன் அவன் .அதனால் சாகர் சுத்தம் செய்கிறேன் என்றதும் யாரும் எதிர் கேள்வி கேட்கவில்லை .

அவன் போலீஸ் துறையில் சேர்ந்து ஐந்து வருடம் ஆகி இருந்தது .அதிகமாய் அவன் செல்வது இது போன்ற ரகசிய ஆபரேஷன்களுக்கு தான் .அவன் குடும்பத்திற்கே தெரியாது அவன் நடவடிக்கை .தெரிந்து கொள்ளும் நிலையிலும் அவர்கள் இல்லை என்பது தான் உண்மை .அவன் தாய்க்கு தந்தையை கவனித்து கொள்ளவே நேரம் போதாது .விஜய் சோனா என்ற பேயிடம் சிக்கி இருப்பவன் .ரூபிணி வாழ்வை வாழ தெரியாமல் அதை தேடி கொண்டு இருப்பவள் . இதில் அவன் விவசாய மீட்டிங் ,பொது கூட்டம் என்று பெயர் செய்து கொண்டு போவதையா இவர்கள் கவனிக்க போகிறார்கள் .

அப்பொழுது தான் டெல்லி மத்திய அமைச்சர் மகள் கொலை செய்யபட்டது .அதை முதலில் விசாரித்து கொண்டு இருந்த ராஜேஸ்வரியும் அவள் தோழனும் ஆளுக்கு ஒரு மூலைக்கு ட்ரான்ஸபெர் என்ற பெயரில் தூக்கி அடிக்க பட்டனர் -சரியாக கேஸ் கொண்டு போகவில்லை என்ற reprimend வேறு .அதற்கு வலு சேர்ப்பது போல் ட்ரெயின் குண்டு வெடிப்பு வேறு .அந்த சமயம் தான் பிரதமர் தலைமையில் ரகசிய ஆட்கடத்தல் தடுப்பு பிரிவூ ஸ்பெஷல் போர்ஸ் உருவாக்க பட்டது .ஏற்கனவே பல மாநிலங்களில் இருப்பது தான் என்றாலும் இன்டர்நேஷனல் அளவில் பல்வேறு குழுக்களுடன் செயல் படும் அளவோ சுதந்திரம் இந்த குழுவிற்கு கொடுக்க பட்டது .

அப்பொழுது தான் தமிழ்நாட்டில் சில வருடங்களாய் பெண்கள் அதிக அளவில் காப்பாற்ற பட்டு வருவதும் அதுவும் ரித்திகா மரணத்திற்கு பிறகு என்ற அறிக்கை வந்தது .டெல்லி வழக்கிற்கும் ,ரித்திகா மரணத்திற்கும் சில ஒற்றுமைகள் இருப்பதை சாகர் கண்டு பிடித்தான் .கை ,கால்கள் கட்ட பட்ட முறை ,உடம்பில் இருந்த பல காயங்கள் ஒன்று போல் இருக்க ,அவன் டெல்லி குழு தமிழ்நாட்டை கண்காணிக்க ஆரம்பித்தது .பெண்களை மறைமுகமாய் காப்பாற்றி கொண்டு இருப்பது அவன் அண்ணன் விஜய் தான் என்பது தெரியவர அவனை சாகர் ஆட்கள் கண்காணிக்கும் போது தான் மதுரா ,சுமன் ,சோனா,கஜா ஆங்கிள் இவர்களுக்கு தெரிய வந்தது.
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நடுவே ராஜியும் ,விஜயும் சேர்ந்து சென்னை துறைமுகத்தில் இருந்து கடத்தப்பட இருந்த பெண்களை காப்பாற்ற சுமன் புது ஆட்களை வேலைக்கு எடுக்கும் போது சாகர் உள்ளே நுழைந்து விட்டான் . .

சாகர் அதி சக்தி வாய்ந்த தூக்க மாத்திரை கலந்த காபி அனைவர்க்கும் கொடுக்க அடுத்த 15-20 நிமிடத்தில் குடித்த ஒவ்வொரு அரக்கனும் மயங்கி விழ ஆரம்பித்தார்கள் .அவர்கள் ஒவ்வொருவரையாக கட்டி போட்டு ,300 பெண்களை காப்பாற்றி ,அதே கண்டைனர் ரில் அந்த அரக்கர்களை போட்டு பூட்டினார்கள் .

"இவங்க 25 பேரும் உயிரோடு இருக்கணுமா ?"என்றான் மேஜர் விக்ரம் கண்கள் சிவந்து .
1552988151615.png


"இப்போதைக்கு இருக்கட்டும் .மயக்கம் தெளியட்டும் விக்ரம் .......அதன் பின் கன்டைனரோடு ஜல சமாதி செய்துடலாம் ....மயங்கி கிடக்கும் போது சாக அடிச்சா ,இவன்கள் கையால் இது வரை இறந்து போன பெண்களின் வலி ,வேதனைக்கு என்ன தான் நீதி ?இவனுங்களை கோர்ட்டில் ஆஜர் படுத்தினால் ,எவனாவது ஒரு பணத்திற்கு விலை போன வக்கீல் ,நீதியை நிலை நாட்ட போறேன் என்று ஏதாவது மனித உரிமை போராளி சவுண்ட் கொடுப்பாங்க .....பொது மக்களின் வரி பணம் தான் இந்த நாய்ங்க மூணு வேலை சாப்பிட ,சிறையில் பாதுகாப்பபாய் இருக்க வேஸ்ட் ஆகும் ......இங்கேயே முடிச்சிடலாம் விக்ரம் ."என்றார் மாசிலாமணி

மாசிலாமணியும் மற்றவர்களும் பெண்களை பார்த்து கொள்ள ,சாகர்ரும் ,விக்ரமும் சுமன் அறைக்கு ஓடினார்கள் மதுராவை காப்பாற்ற ....

சாகர் ஊர் ,உலகத்தை காப்பாற்றி விட்டு,நிதானமாய் வரும் போது மதுரா உயிரோடு இருப்பாளா ?கதவை உடைத்து விட்டு இருவரும் உள்ளே நுழைய அங்கு கண்ட காட்சியில் திகைத்து போய் நின்றார்கள் இருவரும் .

15-20 நிமிடங்களுக்கு முன்

சுமன் அந்த கப்பல் தளத்தில் வந்து இறங்கி ,மதுராவை பற்றி விசாரிக்க ,அதே சமயம் சாகர் ராஜியிடம் பேச ஆரம்பித்து இருந்தான் .

வெற்றி பெற்று விட்டோம் என்ற வெறியோடு கீழ் தளத்தில் இருந்த அவன் அறைக்கு வந்தான் .இந்த சந்தர்ப்பத்திற்கு தானே அவன் இத்தனை நாட்கள் காத்து இருந்தது .
ThankGod-Bappa.jpg

"மதுரா .............மதுரா ................"அவள் பெயரை உச்சரிக்கும் போதே அவனுக்கு ஜிவ்வென்று ஆனது .சோனா போட்டோ காட்டிய உடன் மதுராவின் மேல் வெறியாகி போனான் .விஜய் /சூர்யா இருவரில் ஒருவன் அவனை அடித்து ,துவைத்து வெளி மாநிலத்திற்கு மதுராவை காக்க என்று அனுப்பிய போதே அவன் முடிவூ செய்து விட்டான் .மதுராவை நாசம் செய்தே தீருவது என்று .

சோனா அழகி தான் என்றாலும் அவள் அவனுக்கு பழங்கஞ்சி.ஆனால் மதுராவிடம் இருந்த ஏதோ ஒன்று அவளை அடைந்தே தீர வேண்டும் என்ற எண்ணம் தினம் தினம் அவனை படுத்தி கொண்டு இருந்தது .

கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றவன் இத்தனை நாள் போட்டோ /வீடியோவில் மட்டுமே பார்த்த ஒருத்தியை நேரில் பார்த்ததும் ஒரு கணம் அவள் அழகை கண்டு திகைத்து தான் போனான் .சில பெண்களிடம் மட்டும் தான் ஒரு கிரேஸ் என்று சொல்ல படும் ஈர்ப்பு விசை அதிகமாய் இருக்கும் .சோனா போன்ற பெண்களின் அழகு தீவட்டிக்கு சமம் .ஓவர்ராய் இருக்குமே தவிர இப்படி வார்தைகளால் விவரிக்க முடியாத ஒரு தெய்வ தன்மை பெற்று இருக்காது .

"ஹாய் டார்லிங் ....அட் லாஸ்ட் என் அந்தப்புரத்திற்கு வந்துட்டே போல் இருக்கே .......சும்மா சொல்ல கூடாதுடீ எதுக்கு அவனுங்க ரெண்டு பெரும் இப்படி மாத்தி மாத்தி உன்னை அடைகாத்தாங்க என்று ........அதான் பைத்தியம் மாதிரி உன்னை சுத்தி சுத்தி வரானுங்கோ ...........இத்தனை அழகை இத்தனை நாள் எதுவும் செய்யாமல் சும்மாவா விட்டு வைத்து இருப்பானுங்க .......இனி நான் இருக்கேன் கண்ணு உனக்கு ......"என்றான் சுமன் விகாரமான இளிப்புடன் கதவை மூடி தாழ்இட்டு ,கண்களால் அவளை துகில் உரிந்த படி அவளை நெருங்கினான் .

"ஐயோ சுமன் ...ப்ளீஸ் என்னை விட்டுடு எதுவும் செய்துடாதே ...எனக்கு நாளை மறுநாள் திருமணம் ...ப்ளீஸ் ....உன் காலில் வேண்டும் என்றால் விழறேன் .....என்னை எதுவும் செய்துடாதே சுமன் ...ப்ளீஸ் ...ப்ளீஸ் ...."என்று அவள் கெஞ்ச வாய் விட்டு நகைத்தான் சுமன் .

"காலில் எல்லாம் விழ வேண்டாம் பேபி .....அங்கே வந்து விழு போதும் .....கவலை படாதே ஒரு 4-5 வருஷம் என்னோடு இரு ......அப்புறம் பழைய செருப்பு என்று தோன்றிடும் ....அப்போ போய் அந்த வீர தீர சுரர்களில் யாரையாவது ஒருத்தனையோ இல்லை ரெண்டு பேரையுமோ கட்டிக்கோ ....யார் வேண்டாம் என்றது .....இந்த சுமன் கிட்டே மோதினானுங்க இல்லை ......இங்கே நடப்பதை வீடியோ எடுத்து அனுப்பறேன் ...பார்த்து ரசிக்கட்டும் .......என்னவோ பாடி கார்ட்ஸ் வேலை பார்த்தாங்களே ....இப்போ உன்னை எண்னிடம் இருந்து காப்பாற்ற எவன் வருவான் .......அப்போ தான் ............"என்று பேசி கொண்டே இருந்தவன் திகைத்து பேச்சை நிறுத்தினான் .

PENANCE WILL CONTINUE......
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் நட்பூஸ் ...உங்க ரெவியூ ,ஊக்கத்திற்கு நன்றி .

கதை முடிந்த அளவூ இந்த மாத இறுத்திக்குள் முடித்து விட தான் முயன்று வருகிறேன் ....எனக்கும் என் மகளுக்கும் தேர்வூ நெருங்குகிறது அதனால் தான் .

புது புது ஆட்களை இன்ட்ரோ செய்யறதற்கு காரணம் ---உதய் சிங்க் ,ரஞ்சித் சாகர் ,மேஜர் விக்ரமாதித்தியன் இவர்கள் எல்லாம் வெவேறு கதைகளின் ஹீரோ ப்பா ....வருவாங்க மதுரா திருமணத்திற்கு விஷ் செய்வாங்க போய்டுவாங்க .......இந்த திருமணத்தில் இருந்து இவர்களின் தனி கதை என்று எழுதும் போது ஸ்டார்ட் ஆகும் .இவர்களுக்கும் என்ன தவம் செய்தேன் னுக்கும் உள்ள உறவூ அவ்வளவூ தான் .....

மதுராவின் திருமணம் மற்ற கதைகளின் ஆரம்ப இன்ட்ரோ மட்டுமே ......மேஜர் விக்ரம் மாசிலாமணியோடு போய் விட்டான் அடுத்த மிஷன் நோக்கி .

உதய் சிங்,ரஞ்சித் சாகர் திருமணத்தில் இருப்பாங்க .

மற்ற கதைகள் மண்டைக்குள் நண்டு மாதிரி குடைஞ்சிட்டு தான் இருக்கு .....இன்னும் எழுதியதை டைப் செய்யவில்லை .....இப்போதைக்கு விஜய் /சூர்யா /மதுரா மட்டுமே நம் டார்கெட் பேபீஸ் ......

THANKS
 
Status
Not open for further replies.
Top