All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அனிதா ராஜ்குமாரின் "என்ன தவம் செய்தேன்" - கதை திரி

Status
Not open for further replies.

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இந்த பைக் ரேஸ் ,அதனால் இறப்பு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டது .நான் வசிக்கும் தெரு குறுகலான ஒன்று .நிறைய ரோடு பிளாக் போட்டு வைத்து இருப்பார்கள் .ஒரு நாள் இரவூ இப்படி நடந்த பைக் ரேஸ் மரணத்தில் தான் முடிந்தது .ரோடு பிளாக் இருப்பதை பார்க்காமல் ஹை பவர் பைக் ரேஸ் நடந்து ,வண்டி ஸ்கிட் ஆகி தூக்கி ஏறிய பட்ட இரு டீனேஜ் பிள்ளைகளின் தலை கோயில் சுவற்றில் மோதி ஸ்பாட் டெத் .அன்றில் இருந்து சிறு பிள்ளைகளுக்கு யாராவது பைக் ஓடினால் தொடர்ந்து சென்று திட்டி விட்டு தான் வருவேன் .போன் நம்பர் வாங்கி வீட்டினருக்கும் என்ன நடந்தது என்பதை சொல்லி விடுவேன் .இதை படிக்கும் யாராவது ஒருத்தரின் பிள்ளையோ ,தெரிந்தவர் ,உறவினர் பிள்ளையோ பைக் எடுத்தால் தயவூ செய்து குரல் கொடுங்கள் ...

நமது இந்திய தெருக்களுக்கு ரேஸ் தேவை அற்றது .யார் உயிர் போனாலும் இழப்பு இழப்பு தான் .
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
THAVAM 37(3)
1552649822751.png

"ஹலோ ACP மேடம் ...இது பிரைவேட் ப்ரொபேர்ட்டி ......அனுமதி இல்லாமல் நுழைய கூடாது ."என்றார் அந்த வக்கீல் .

"ஒரு கேஸ் விசாரணைக்காக சோனா மேடம் ,கஜேந்திரன் சார் எங்களுடன் வந்தால் நல்லா இருக்கும் ..."என்றாள் ராஜேஸ்வரி .

"என்ன கேஸ் .....மீண்டும் போதை மருந்து கேஸ் மாதிரி செட் செய்து வைத்து இருக்கீங்களா மேடம் ....போன தடவையாவது கொஞ்ச நாளுக்கு தான் சஸ்பெண்ட் பண்ணாக ...இந்த தடவை வேலையே போகணுமா என்ன .....?"என்றார் வக்கீல் வெகு நக்கலாக .

"இது போதை மருந்து வழக்கில்லை ....ஆட் கடத்தல் ......உங்களுக்கு தெரியவே தெரியாதா என்ன ?....எங்களுக்கு சுமன் எங்கு இருக்கிறான் என்று தெரிய வேண்டும் .....சுமன் பற்றி உங்க சோனா மேடத்திற்கு தானே எல்லாமே தெரியும் .....அவங்க தானே சுமன் சார் கூட திக் தோழி .....எந்த அளவுக்கு என்றால் கட்டிய கணவனை திருமண மண்டபத்தில் விட்டு ,கட்டிய தாலியை குப்பை தொட்டியில் போட்டு விட்டு செல்லும் அளவுக்கு .தன் பார்ம் ஹௌஸ்க்கு அவரை வர சொல்லி ஒரு பெண்ணை நைட் வரை வேலை என்ற போர்வையில் நிற்க வைத்து ,பின் வெளியே துரத்தி ,அவளை ஏதாவது செய்யும் அளவுக்கு ....என்ன மேடம் நான் சொன்னது சரி தானே ."என்றாள் ராஜேஸ்வரி அதை விட நக்கலாய் .

"எல்லை மீறி பேசறீங்க மேடம் ......சுமன் இவர்களின் தோழன் தான் ....அதற்காக எதை வேண்டும் என்றாலும் பேசி விட முடியாது ....உங்க மீது மானநஷ்ட வழக்கு போடுவோம் ....."என்றார் வக்கீல் .

"வளவள பேச்சு வேண்டாம் ...சுமனை தேடி வந்தோம் ....எங்கே இருக்கார் என்று தெரிந்ததை சொன்னால் நாங்க எங்க வேலையை பார்க்க போயிட்டே இருப்போம் ."என்றாள் ராஜி .

"நான் அவன் கூட பேசியே மாசக்கணக்கு ஆகுது ...எங்கே இருக்கான் என்பது எல்லாம் எனக்கு தெரியாது ...."என்று அலட்சியமாய் தோளை குலுக்கினாள் .((அடி பாவி ....என்னமா புளுகுறாயா ......)

"உங்க போன் கொடுங்க ...."என்றாள் ராஜேஸ்வரி .

"என் போன் தொலைந்து விட்டது என்று மூன்று நாட்களுக்கு முன் அண்ணா நகர் K 4 போலீஸ் ஸ்டேஷன்னில் கம்பளைண்ட் கொடுத்து இருக்கேனே ....வாக்கில் சார் ,மேடம் கிட்டே அந்த கம்பளைண்ட் ரிப்போர்ட் கொடுங்க ...80,000 ரூபாய் போன் மேடம் ...கொஞ்சம் சீக்கிரம் கண்டு பிடித்து தர சொல்லுங்க உங்க ஆட்களை ."என்றாள் புன்னகையுடன் -அப்படியே நல்ல பாம்பு படம் எடுப்பது போன்ற பிம்பத்துடன் .

"ஆமா எதுக்கு சுமனை தேடறீங்க ?டொனேஷன் ஏதாவது வேண்டுமா என்ன ....?"என்றாள் மீண்டும் .

"மதுராக்ஷி சங்கரனை காணவில்லை ..அதில் சுமன் ஈடுபட்டு இருப்பார் என்ற சந்தேகம் ...."என்றாள் ராஜேஸ்வரி .

"மதுராக்ஷி ............ஏன் தாத்தா அப்படி யாரைவது நமக்கு தெரியுமா என்ன .....இருங்க யோசிக்கிறேன் ..."என்று யோசிப்பது போல் கன்னத்தை தட்டி பாவனை செய்தவள் ,"சாரி ...நோ ஐடியா ....எங்க ஸ்டேட்டஸ் கூட கிட்டே நெருங்க முடியாதவங்களை எல்லாம் நான் நினைவில் வைத்து கொள்வதில்லை .....சுமன் அவ லவர் கிடையாதே ...இதோ நிற்கிறாரே ஜெய்ப்பூர் இளவரசர் மிஸ்டர் சூர்யா ....இவரை கேட்க வேண்டியது தானே ...இவருக்கும் அவளுக்கும் தான் நிச்சயம் நடந்தது ....ஒருவேளை உங்களை வேண்டாம் என்று என் புருஷன் கூட ஓடிட்டாளா ...இல்லையே இதோ நிற்கிறாரே என் புருஷன் அவர் கிட்டே கேளுங்க அவர் காதலி மதுரா எங்கே என்று ....இல்லை உங்க ரெண்டு பேரும் வேண்டாம் என்று வேறு எவன் கூடாவது படு ........"என்று ஆரம்பித்தவளை தூக்கி நிறுத்தி கன்னம் கன்னமாய் அறைந்தான் விஜய்
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அவனை பிடித்து இழுத்து நிறுத்தி வைப்பதற்குள் அங்கு இருந்தவர்களுக்கு போதும் போதும் என்றாகி விட்டது .அவனின் ருத்ரதாண்டவதோடு சூர்யாவின் கோபமும் சேர்ந்து கொள்ள அங்கு வக்கீல் நொண்டி நொங்கு எடுத்தான் .

ஒத்தை கையால் அவள் குரல்வளையை பிடித்து மேல் தூக்கினான் விஜய் .தரையில் இருந்து அவள் கால்கள் விடை பெற்றன

"என் மதுராவிற்கு மட்டும் ஏதாவது ஆகட்டும் ....உன் சாவூ என் கையால் தாண்டீ ...........அவ கால் தூசிக்கு ஈடு ஆகாத சாக்கடை நீயி ............யாரை பத்தி யார் முன்னாடி என்ன பேசறே .............யோவ் கஜா உன் பேத்தி கிட்டே சொல்லி வை ......என்னை மாதிரி மோசமானவன் வேறு எவனுமே இருக்க மாட்டான் .....சாவே மேல் என்று நீங்க நினைக்கும் அளவுக்கு உங்களை கொண்டு வந்து நிறுத்திடுவேன் ......"என்றவன் கீழே விழுந்து கிடந்த வக்கீலை நாலு மெதி மெதிதான்.

"சொல்ல போறியா இல்லை உன்னை இங்கேயே குழி தோண்டி உயிரோடு புதைத்து விடவா ....செய்ய மாட்டேன் என்று நினைக்காதே சோனா ......சுமன் எங்கடீ ....சொல்லு ...சொல்லு .............."என்றான் விஜய் அவளை புரட்டி எடுத்தவாறு .

அடி அதற்கு மேல் தாங்க முடியாதவள் ,"சத்தியமா தெரியாது .....அவன் சொல்லிட்டு எல்லாம் போகலை ."என்றாள் .

"ஏய் என்னமா நீ ....இவங்களை போட்டு அடிக்கறாங்க ...நீ பார்த்துட்டு சும்மா இருக்கே ....ஆக்ஷன் எடுமா ."என்றார் கஜா

"எதுக்கு சார் ஆக்ஷன் ....மேடம் அவங்களா போய் கதவில் மோதிட்டாங்க .....வக்கீல் சார் கால் வழுக்கி டைல் மேல் தண்ணீர் இருப்பதை பார்க்காமல் விழுந்துட்டார் ...இதுக்கு கதவையும் ,டைல்லையும் மா நான் அர்ரெஸ்ட் பண்ண முடியுமா சார் ....போங்க சார் ஏற்கனவே நீங்க மனநலம் பாதிக்க பட்டவர் என்ற டாக் சொசைட்டியில் இருக்கு ...இப்படி என் கண் முன்னே நடந்த அச்சிடேன்ட்க்கு எல்லாம் கேஸ் போட சொல்லி நீங்க லூசு என்று கண்பார்ம் செய்துடாதீங்க சார் ..."என்றவர்கள் அதற்கு மேல் அங்கு எதையும் விசாரிக்க முடியாது என்று புரிந்து விட கிளம்பினார்கள் .

அவர்கள் வாசல் தாண்டும் சமயம் ,"ஏன் மதுராவிற்கு நான் மட்டும் தான் எதிரியா என்ன ....அவ என் தங்கை .....அவளுக்கு நான் எப்படி எதிரி ஆவேன் .....என் புது போனில் மேக்னா என்று ஒரு பெண் நம்பர் இருக்கும் ...அவ தான் தினமும் போன் செய்து மதுரா செய்யும் வேலை எல்லாம் எனக்கு சொல்லிட்டே இருப்பா ...நான் கூட எவ்வளவோ சொல்லி பார்த்தேன் ......அவ என் தங்கை என்று ....அவ கேட்கலையே .....மதுரா மேல் செம கோபத்தில் இருக்கா ...அவ ஏன் மதுராவை கடத்தி இருக்க கூடாது ."என்ற சோனா ராஜியிடம் அவள் புது போனை கொடுத்தாள் .

இந்த ட்விஸ்ட் எதிர் பார்க்காத மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர் ...விஜய் மீண்டும் சோனாவை அறைய போக அவனை இழுத்து பிடித்த சூர்யா ,"கிளம்பலாம் "என்றான் .

அவர்கள் செல்லவும் வாய் விட்டு வெறியுடன் நகைத்தாள் சோனா .வெற்றி ,வெற்றி என்று எகிறியே குதித்தாள் .(எவ்வளவூ அடி வாங்கியும் திருந்தி தொலைக்குதா பாரு ........)

வெளியே வந்த விஜய் ,சூர்யாவின் கையை உதறி ,"விடுடா என்னை ....அவளை அங்கேயே கழுத்தை நெறித்து கொன்று இருப்பேன் ....இந்த மேக்னா லூசு எதற்கு இவ கிட்டே பேசிட்டு இருக்கு ?"என்றான் கோபத்துடன் .

"காம் டவுன் கருணா .....இது மேக்னா நம்பர் இல்லை ....மேக்னா பெயரை யூஸ் செய்து அவள் மேல் நம்ம கவனத்தை திசை திருப்ப அவங்க விளையாடுறாங்க ...என் கண்டைனர் எரித்து உன்னை மாட்டி விட போட்ட பிளான் மாதிரி ......வா கிளம்பலாம் ...."என்றவன் பேச்சை கேட்டு விஜய் கிளம்பி விட ராஜியும் ,சூர்யாவும் மட்டும் நின்றனர் .

"என்ன யோசிக்கிறீங்க சிஸ்டர் ...."என்றான் சூர்யா .

"எதற்கும் மேக்னாவை கஸ்டடி எடுத்து விசாரித்து பார்த்தால் என்ன ?"என்றாள் ராஜி .
 
Last edited:

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"தேவை இல்லை சிஸ்டர் ....இந்த நம்பர்ரில் பேசி சோனாவுடன் பாச பயிரை வளர்ப்பது மேக்னா இல்லை .....மதுரா .மேக்னா பெயரை பயன்படுத்தி சோனா உடன் மைண்ட் கேம் விளையாடிட்டு இருந்தது மதுராவே தான் .மதுரா சொல்றபடி தான் சில காலமாய் சோனா நடந்துட்டு இருக்கா ....."என்றவன் கருணா வீட்டில் இருந்து அவனோடு சேர்ந்து போட்டோக்களை எடுத்து சோனாவிற்கு அனுப்பியது ,ரூபிணி மேட்டர் சால்வ் சோனாவை தூண்டிவிட்டது ,தங்களின் நிச்சயம் பற்றி சொல்லியது என்று எல்லாவற்றையும் சொன்னவன் ,"இந்த விஷயம் மேக்னாவிற்கு கூட தெரியாது .கருணாவை நாங்க பல விஷயத்தில் இருட்டில் தான் வைத்து இருக்கிறோம் ....அவனை சுற்றி மதுரா என்ன செய்து வைத்து இருக்கிறாள் என்று அவனுக்கே தெரியாது .அவன் தம்பி சாகர் விவசாயம் படித்தவன் .அவனுக்கு பேங்க் லோன் கொடுப்பது போன்று பணம் ஏற்பாடு செய்தது ,ஒரு தொண்டு நிறுவனம் அவன் அப்பாவிற்கு பக்கவாத டிரீட்மென்ட் கொடுக்க ஸ்விஸ்க்கு அனுப்பியது ,தங்கும் செலவு ,உணவூ என்று எல்லா செலவூம் தன் சொந்த பணத்தில் இருந்து செய்து கொண்டு இருக்கிறாள் .அவ தாத்தா அவள் பெயருக்கு எழுதி இருந்த மொத்த சொத்தையும் என்னிடம் தான் விற்றாள் ."என்றான் சூர்யா .

"அப்போ உங்க திருமணம் ...............சிவகாமி பாட்டி போட்டோ பத்தி சொன்னாங்களே .....அப்போ அந்த குழந்தைங்க ...."என்றவளுக்கு தன் மொபைல் போனில் இருந்து இரு படத்தை காட்ட அதிர்ந்த ராஜி ,"என்ன ப்ரோ இது ..............கருணா பிரதர்ரா இப்படி ...............இந்த அளவுக்கு விளையாட்டு தனமாய் செய்துட்டு ,எப்படி சோனாவை மணந்தார் ............அப்போ இவ வாழ்க்கை .....பிள்ளைங்க ...............இதுல நீங்க எங்க வரீங்க ?"என்றாள் திகைப்புடன் .

அவர்கள் என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள் என்பதை விளக்கியவன் ,"எனக்கும் மதுராவிற்கும் தான் திருமணம் நடக்கும் ராஜி ...யார் நடுவே வந்தாலும் அவர்கள் தலை சீவ படும் ......என் மது எனக்கு மட்டும் தான் ராஜி ."என்றவன் பேச்சை கேட்டு வாய் விட்டு நகைத்தாள் .

"என்னவோ போங்க ........தலையை சுத்தி மூக்கை தொடுங்க .....எத்தனை பேர் பைத்தியம் பிடித்து அலைய போறாங்களோ .....கடவுள் தான் காப்பாத்தணும் ."என்றாள் ராஜி .(இனிமேல் தான் ஆகணுமா நாங்க .............)

"ஏங்க ...ஏன் இப்படி ...கருணா என்ன ருத்ராவா ?சாமி கும்பிட என்று கூட்டி போய் சடாரென்று தாலி கட்ட .......அதுமாதிரி அதிரடி ஆக்ஷன் ஹீரோவா VIJAI இருந்தா போகாத ஊருக்கு வழியை நாங்க ஏன் ரெடி செய்ய இப்படி மெனக்கெடறோம் .....அவன் ரொம்ப பாவம் ராஜி ....சின்ன வயசில் இருந்து தன் குடும்பத்திற்காகவே வாழ்ந்துட்டான் ....இனிமேலாவது அவன் நிச்சயம் சந்தோசமாய் ,நிம்மதியாய் இருக்கணும் ....நான் வில்லன் எல்லாம் இல்லங்க ...நானும் ஹீரோ தான் ...."என்றான் புன்னகையுடன் .

"எப்படிங்க .....வடிவேலு சொல்வாரே .....நானும் ரவுடி தான் ...ஹே நானும் ரவுடி தான் என்று அந்த மாதிரி நீங்க புது ட்ரெண்ட் "நானும் ஹீரோ தான் ...நானும் ஹீரோ தான் என்று கொண்டு வாரீங்களா என்ன .....ஹீரோயின் யார் கையை பிடிக்கறாங்களோ அவங்க தான் ப்ரோ ஹீரோ "என்றாள் ராஜி புன்னகையுடன் .

"அப்போ நான் தானே ஹீரோ ...மதுராவிற்கும் எனக்கும் தானே ஃப்ரைடே மேரேஜ் ...அப்போ நாந்தான் ஹீரோ சிஸ் ....."என்றான் சூர்யா டூத் பேஸ்ட் விளம்பரத்திற்கு பல்லை காட்டுபவன் ரேஞ்சுக்கு .

"யப்பா சாமி ஆளை விடுங்க .............நீங்க மது கழுத்தில் தாலி கட்ட முதலில் விஜய் விடறாரா பாருங்க ......தாலி கட்ட முதலில் மது வேண்டும் .....அதற்கு முதலில் சுமன் கிட்டே இருந்து அவங்களை காப்பாத்தணும் ....வாங்க ப்ரோ போலாம் ....."என்றாள் ராஜி .

அதுவரை இருந்த இலகு தன்மை மறைந்து அங்கே மீண்டும் அவர்கள் முன் இருக்கும் பிரச்சனை மீண்டும் இமய மலையாய் எழுந்து நின்றது .

அதே சமயம் காரில் சென்று கொண்டு இருந்த விஜய் கண்களில் இருந்து கண்ணீர் நிற்காமல் வழிந்து கொண்டு இருந்தது .தன் தலைவிதியை நினைத்து நொந்து போய் இருந்தான் .இருமுறை சுவர்க்கம் அவன் கையில் கிடைத்தும் அதை இன்னொருவனுக்கு தாரை வார்க்கும் தன் விதி என்ன டிசைன் என்று கடுப்பாகி போனது .இதில் சுமன் வேறு உள் வந்து இருக்கும் குழப்பம் பத்தாது என்று சீதையை சிறை எடுத்த இராவணன் மாதிரி தூக்கி போய் இருக்கான் .அந்த ராவணாவது சாபம் பெற்றவன் .விருப்பம் இல்லா பெண்ணை தொட்டால் தலை வெடித்து விடும் .இந்த அரக்கனுக்கு அப்படி எதுவுமே இல்லையே .

தங்களால் சுமன் உள்ளே நுழையாத படி லக்ஷ்மண கோடு தான் போட முடிந்தது .அதை தாண்டி அவனால் உள்ளே வந்து இருக்க முடியாது .ஆனால் அந்த இராவணன் பொய் மானை காட்டி ராமனின் கவனத்தை திசை திரும்பியதை போல் இவன் இங்கே உண்மையான மான் குட்டி சுபத்திராவை அல்லவா அல்லவா பணயம் வைத்தான் .குழந்தையை காப்பாற்ற இவர்கள் கவனம் அதில் இருக்க ,அந்த சமயத்தில் இவர்கள் பாதுகாப்பு வட்டத்தை கடந்து இருக்கிறாள் மதுரா அந்த சீதை கோட்டை தாண்டியதை போலவே .
fcaf224389cbdf3bb6c7071aa585499f.jpg

நெஞ்சின் பாரம் தாங்க முடியவில்லை .பயத்தை வெளி காட்டவில்லை என்றாலும் ஏற்க்கனவே அவன் கரங்களில் தானே ஒரு பெண்ணின் உயிர் பிரிந்தது .சூர்யாவின் மனைவி ரித்திகா இந்த சைத்தான் இடம் மாட்டி தானே வார்த்தைகளால் விவரிக்க முடியாத பல கொடூரங்களை அனுபவித்து உயிர் இழந்து இருந்தாள் . இந்த நொடி வரை ரித்திகா இருந்த கோர நிலை இவனை நிம்மதியாக உறங்க விட்டதில்லை . .அதன் தாக்கம் தானே இவனை ஹியூமன் ட்ராபிக்க்கு எதிராக போராட வைத்து கொண்டு இருக்கிறது . இன்று அதே கொடியவனின் பிடியில் அவன் உயிர் சிக்கி என்னென்ன இன்னல் அனுபவித்து கொண்டு இருக்கிறதோ ....எல்லாம் என்னால் ..என் காதல் தான் அவளை ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு ஆபத்தில் சிக்க வைக்கிறது .அப்பவே எல்லோரும் சொன்னார்களே சோனா ,சுமன் ,கஜா ,சொர்ணா யார் உயிரோடு இருந்தாலும் மதுராவை வாழ விடமாட்டார்கள் என்று படித்து படித்து சொன்னார்களே ."என்று மனசாட்சியின் குமுறல் கண்களில் கண்ணீராய் வெளியேற ஸ்டேரிங் வீல் மேல் தலை வைத்து அழுது கொண்டு இருந்தான் .

அதே சமயம் காரில் வந்து கொண்டு இருந்த ராஜேஸ்வரியின் மொபைல் ஒலி எழுப்ப ,எடுத்து பேசியவள் முகம் தீவிர யோசனையை தத்து எடுத்தது .உடனே விஜய்க்கும் சூர்யாவுக்கும் அழைத்தவள் அவர்களை தன் அலுவலகத்திற்கு வர சொன்னாள் .அரை மணி நேரத்தில் மூவரும் அங்கு சென்று அடைய ,அவள் ஆபீஸ் வாயில் முன் அமர்ந்து இருந்த உருவம்,இவர்கள் வருவதை பார்த்து மெல்ல எழுந்து நின்றது .

அந்த மனிதரை அங்கு எதிர் பாராத விஜயும் ,சூர்யாவும் அதிர்ந்து திகைத்து போய் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டு "சார் "என்ற அழைப்புடன் அவரை நோக்கி சென்றனர் .


PENANCE WILL CONTINUE..
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
THAVAM 37(4)

அந்த மனிதரை அங்கு எதிர் பாராத விஜயும் ,சூர்யாவும் அதிர்ந்து திகைத்து போய் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டு "சார் "என்ற அழைப்புடன் அவரை நோக்கி சென்றனர் .

கை காட்டி அவர்களை நிறுத்திய அவர் ,"உங்களிடம் பிறகு பேசறேன் ...எனக்கு மேடம் கூட பேச வேண்டிய முக்கிய விஷயம் இருக்கு ....சாரி "என்றார் .

"சார் !சூர்யா சார் பியானசி தான் சார் மதுரா .....அவங்க தான் மிஸ்ஸிங் .குழந்தையை காப்பாற்றி விட்டோம் சார் .அவங்களை தான் இவங்க ரெண்டு பெரும் தேடிட்டு இருக்காங்க "என்றாள் ராஜி

"ஈஸ்வரா !................இது வேறா "என்று முனகியவர் தள்ளாட அவரை கை தாங்களாக ராஜியின் அலுவலக அறைக்குள் கொண்டு சென்றனர் அங்கே இருந்த நாற்காலியில் அமர வைத்தனர் .

"யார் அங்கே ....சீக்கிரம் குடிக்க தண்ணீர் கொண்டு வாங்க ..."என்றாள் ராஜி .

ஒரு நிமிசத்தில் கான்ஸ்டபிள் ஒருவர் பிஸ்லெரி வாட்டர் கேன் கொண்டு வந்து நீட்ட அதை வாங்கி பருகினார் மாசிலாமணி -சுமனின் பாவப்பட்ட தந்தை .

ராஜி ,விஜய் ,சூர்யா கவனம் அவர் மீதே இருக்க ,தண்ணீர் எடுத்த வந்த கான்ஸ்டபிள் ராஜியின் டேபிளுக்கு அடியில் ஒட்டுக்கேட்கும் கருவியை ஒட்டி வைத்ததை யாருமே கவனிக்கவில்லை .ஒட்டியவன் ராஜி அறையில் இருந்து எவ்வித பதட்டமும் இல்லாமல் வெளியேறி போலீஸ் தலைமையகம் பார்க்கிங்கில் நிறுத்தி வைக்க பட்டு இருந்த ஸ்கார்பியோ வண்டியில் ஏறி அமர அவனை சுமந்த கார் வெளியேறியது .

"டன் பாஸ் ."என்றவன் பின்னால் திரும்பி பார்க்க அங்கு ப்ரளயகால ருத்ரனின் கோபத்தோடு அமர்ந்து இருந்தான் அவன் .அவன் முக அமைப்பு அவன் தமிழ்நாட்டுக்காரன் இல்லை என்பதை சொல்லாமல் சொன்னது .கிள்ளி விட்டால் ரத்தம் வரும் அளவு பால் ரோஸ் நிறத்தில் ,கிரேக்க சிற்பமாய் 5அடி 10 அங்குல உயரத்தில் பரந்த மார்பும் ,விரிந்த தோளும் பார்க்க ஏதோ ஹாலிவுட் ஹீரோ ரேஞ்சிக்கு இருந்தான் .

(இவன் யாருடா புது என்ட்ரி ?)

"பிரச்சனை எதுவும் இல்லையே ஜாவித் ?"என்றான் போலீஸ் உடையில் இருந்தவனை பார்த்து -தெளிவான தூய தமிழில்

"இல்லை ஜி .....அவங்க எல்லோர் கவனமும் மாசிலாமணி சார் மேல் தான் இருந்தது .கையில் பென் டிரைவ் மாதிரி வைத்து இருந்தார் .ACP வருவதற்கு முன்பே அவங்க கம்ப்யூட்டர் ஹேக் செய்துட்டேன் .அவங்க அங்கே எந்த பைல் ஓபன் செய்தாலும் நமக்கும் டிஸ்பிலே ஆகும் .....பக் ஒட்டிட்டேன் ....பேசுவதை கேளுங்க ."என்றான் ஜாவித் .

"குட் ஜாப் ..."என்ற அவன் புகழ்ச்சியை ஏதோ கடவுள் நேரில் வந்து பாராட்டியதை போல் நெக்குருகி நின்றான் ஜாவித் .

அவன் "ப்ரித்வி ஜெய் பிஷன் உதய் சிங்க்" -1688 ஜெய்ப்பூர் ஆண்ட அரசர் ரெண்டாம் ஜெய் சிங்க் வம்சாவளி கிளையில் வந்த தற்போதைய இளவரசர்களில் ஒருவன் .ராணி மங்களாம்பிகை ,அரசர் ராம் சந்திரா சிங்க் மகன் . .சூர்யாவின் மனைவி ரித்திகாவின் அண்ணன்
44e68ed723710890b6b773e3a982649d.jpg

.(நம்ம அடுத்த கதைக்கு ஹீரோ பா ....அதான் இன்ட்ரோ செய்ய உள்ளே கூட்டிட்டு வந்தேன் ....அடுத்த கதை சென்னையில் இருந்து ஜெய்ப்பூர் அரண்மனைகளில் நடக்கும் ....இதுவே இன்னும் முடிக்கலைன்னு சொல்வது கேட்குது .....முடிச்ச பிறகு தான் )
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அவன் காதுகளில் ஹெட் போன் மாட்டி கொண்டு ராஜி அறையில் நடப்பதை கேட்க ஆரம்பித்தான் .

"சொல்லுங்க சார் ...இவ்வளவூ தூரம் வந்து இருக்கீங்க ....சொல்லி இருந்தால் நானே வந்து இருப்பேனே ....என்ன விஷயம் சார் ?"என்றாள் ராஜி .

"நீங்க சுமனை பல்வேறு குற்ற வழக்கில் தேடுவதாக கேள்வி பட்டேன் மேடம் .........அதான் உங்களிடம் இதை கொடுத்து விட்டு போக வந்தேன் .அவன் குடி ,போதை ,பெண்கள் என்று தரம் கெட்டு அலைபவன் என்று தெரியும் ...ஆனால் கொலை ,ஆட் கடத்தல் ,பெண்களை துன்புறுத்தல் ,போதை மருந்து கடத்தல் என்று இன்டர்நேஷனல் அளவுக்கு குற்றங்களை செய்யறான் ,தீவிரவாதிகளுடன் நட்பாய் இருக்கிறான் என்பது இப்போ தான் தெரிந்தது ...அவன் அறையில் இந்த பென் டிரைவ் ஒளித்து வைத்து இருந்தான் ....வாங்கிக்கோ மா .....இதை தொட கூட கூசுது ....அவன் கிடைத்தால் சூட் அட் சைட் செய்து கேஸ் கிளோஸ் பண்ணிடுங்க ....அவன் ஒரு பக்கா சாடிஸ்ட் .வெறி பிடித்த psycho .கோர்ட்டுக்கு எல்லாம் கூட்டி வராதீங்க .....அவன் அரக்கன் ...பெட்டி பெட்டியா பணம் கொடுத்து எல்லோரையும் விலைக்கு வாங்கி ஈஸியா வெளியே வந்துடுவான் ....அவன் ஆள் பலம் அப்படி .........வெளியே வந்தால் இன்னும் எத்தனை குடும்பத்தை நாசம் செய்வானோ ..........கையில் கிடைத்த மறுநொடி ஸ்பாட்டில் வைத்து கொன்னுடுங்க .....அவன் தான் உங்களை முதலில் தாக்கினான் என்று எங்கே வேண்டும் என்றாலும் வந்து நான் சாட்சி சொல்றேன் .....ஹியூமன் ரைட்ஸ் என்று மனுஷனே இல்லாதவனுக்காக மூளை இல்லாத சில பைத்தியங்கள் வந்து கத்தும் ..........புடலங்கா ஹியூமன் ரைட்ஸ் ......அவனால் கொல்ல பட்ட ,விற்க பட்ட victims க்கு இல்லாத ரைட்ஸ் இந்த சாத்தானுக்கு எல்லாம் எதற்கு என்று கூட யோசிக்காத சில ஜென்மங்கள் மீடியா முன்பு கத்தும் .....அதற்கு எல்லாம் கவலை படாதீங்க .....என்ன செய்யணுமோ செய்துக்கோங்கோ .நான் சாட்சியாய் இருக்கேன் .வரேன் மா ...."என்றவர் தளர்ந்த நடையுடன் வெளியேற ,எவ்வளவூ கம்பீரமான மனிதர் மகனின் இழி செயல்களால் கூனி குறுகி போய் ,ஒரே நாளில் வயது ஏறி விட்டதை போல் காணப்பட்டார்

அவர் வெளியேற ஆஜானுபாகுவாய் 6 பேர் அவருடன் வெளியேறினார்கள் .இந்திய ராணுவத்தில் மேஜர்ராய் இருந்தவர் மாசிலாமணி .அவர் உடன் செல்பவர்கள் அவருடன் பணி புரிந்த அவர் குழு உறுப்பினர்கள் .எல்லோரும் 60 வயதுக்கு மேல் உள்ள மூத்த குடிமக்கள் .

மாசிலாமணி கொடுத்து சென்ற ஷாக்கில் இருந்து மீண்டவர்கள் ,அவர் கொடுத்து சென்ற பென் டிரைவ் லப்டோபில் இணைக்க அது சுமன் நடத்தி இருந்த சில கொடூரங்களுக்கு சாட்சியாய் இருந்தது .முதல் பைல் டெல்லி மினிஸ்டர் ஒருவரின் மகள் கொலையானதை ,அதற்கு காரணமானவர்களை வீடியோவாய் காட்டியது .அதில் சிலர் உயர்ந்த பதவியில் இருப்பவர்கள்.
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரெண்டாவது வீடியோ அந்த மினிஸ்டர் மகள் மரணத்திற்கு சாட்சியாய் இருக்கும் ஒருவன் -அவர்களில் ஒருவரின் கார் டிரைவர் -சிபிசிஐ டி வசம் இருப்பதாகவும் ,அவனை விசாரணைக்காக ,யாருக்கும் சந்தேகம் வர கூடாது என்று ட்ரெயின்னில் கூட்டி வர போவதாக ஒருவர் வந்து சொல்லி கொண்டு இருந்தார் . அதற்கு சிரித்த சுமன்

'இதற்கு எல்லாம் ஏன் டென்ஷன் ஆகிட்டு இருக்கீங்க ....எத்தனை உயிர் எடுத்து இருப்போம் ......தீபாவளி கொண்டாடிடலாம் ....'என்றான் வெறி பிடித்த சிரிப்புடன் .

'பிரச்சனை வராது இல்லை ...'

'ட்ரெயின் என்றால் 1000 கணக்கில் மக்கள் இருப்பாங்க '

'செத்து தொலையட்டும் ....

'நம்ம மேல் கவனம் திரும்பாது தானே .....?"

'ஏன் வர போகுது ...அதான் ஜாதி கலவரம் ,மத கலவரம் என்று ஆயிரம் லொட்டு லொசுக்கு இங்கே இருக்கே ....ட்ரெயின் பாம் வைப்போம் ....அதில் ஏதோ பண்டிகை என்று இந்த ...............மதத்துக்காரர்கள் போறாங்க ....பாம் வெடித்தவுடன் நாமளே அறிக்கை கொடுப்போம் .....இனி இந்த மதத்துக்காரர்களை கொன்று குவிப்போம் என்று ...அப்போ அது தீவிரவாதம் என்று மாறி போகஸ் தீவிரவாதிகள் மேல் போய்டும் ....'என்ன உண்மை தெரியாத சிலதுங்கள் பழி வாங்கறேன் என்று கிளம்பும் .அதில் கலவரம் இன்னும் வெடிக்கும் ....TRP ரேட்டிங்காக மீடியாவும் இதை ஊதி ஊதி பெரிசு ஆக்குவாங்க ...எலெக்ஷன் டைம் ...அரசியல் கட்சிங்க ஒன்றொன்றும் தாங்க தான் நாட்டை காக்க வந்த தியாகிங்க மாதிரி ஊளையிடுங்க .....ஆட்டு மந்தை மாதிரி மக்களும் FB /ட்விட்டர் என்று நான்கு நாட்களுக்கு பொங்குவாங்க .மலை மாதிரி 100 பக்க அட்வைஸ் மழை பொழியும் .அப்புறம் எல்லாம் மறந்துட்டு இந்த சீரியல் இவன் கூட அவ போனா என்று போயிட்டே இருப்பாங்க ....நம்ம வைத்து நடத்தும் முதியோர் இல்லத்தில் இதுவரை வெளியே தெரியாமல் பிள்ளைகளால் கை விட பட்ட 400 தாத்தா பாட்டியை டூர் என்ற பெயரில் வெளிநாடு அனுப்பி ,ஹார்ட் அட்டாக் என்று பொய் சொல்லி ,அவங்களை நாமளே கொன்று அவங்க உறுப்புகளை எல்லாம் எடுத்து விற்றோம் ...நாலு நாள் தமிழ்நாடு பொங்குச்சு ....ஒரே போஸ்ட் சிரியா குழந்தை பற்றி போட்டோம் .....சென்னையில் செத்து போனவர்களை விட்டுட்டு எங்கோ கண்காணாத நாட்டில் 5 வருடமாய் நடந்து கொண்டு இருக்கும் ஒரு உள் நாட்டு போருக்கு இப்போ கண்டனம் தெரிவித்தாங்க ....அந்த வழக்கு என்ன ஆனது எத்தனை பேர் கைது செய்ய பட்டர்கள் என்று ஒரு நியூஸ் இல்லை யாரும் இதற்காக எல்லாம் கவலை படவேயில்லை "என்றான் சுமன் வெகு நக்கலாக .

Ritesh-Deshmukh.jpg

'அதானே நம்ம போலியாய் நடத்தும் எத்தனை குழந்தை காப்பகங்களில் நல்ல அம்சமாய் உள்ளதுகளை தூக்கி வந்து ....இதோ பின்னால் தானே புதைத்து இருக்கோம் ....அதை எவனும் கண்டுக்க மாட்டான் ....சிரியா குழந்தையை தத்து எடுக்கிறேன் என்று என்னவோ கடையில் சாக்லேட் வாங்குது போல் எனக்கு ஒன்று என்று FB ஆர்டர் கொடுப்பானுங்க ....இங்கே உள்ள பிள்ளைகள் யார் கண்ணுக்கும் தெரியாது ...அது தானே நமக்கு வசதி ....லட்டு கணக்கா எல்லாம் சும்மா ...............'என்று மேலும் கேவலமாக பேச பார்த்து கொண்டு இருந்த மூவரின் ரத்தம் கொதித்தது .


PENANCE WILL CONTINUE....
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
THAVAM 37(5)

அடுத்த பைல் ரித்திகா கடத்தி வர பட்டத்தை காட்டியது .

'நான் தூக்கி வர சொன்னது அவன் தங்கை சந்திராவை ....இவளை ஏன்டா தூக்கி வந்தீங்க ....இவள் பெயரில்லா அந்த இடம் இருக்கு .....அந்த சூர்யா வைர சுரங்கம் .....அவன் வீட்டு மாப்பிளை ஆனால் அவன் சொத்துக்கு சொத்து .பெயருக்கு பெயர் .அவன் பெயரை வைத்தே நாம் செய்யும் எல்லா இல் லீகல் பிசினெஸ் எல்லாம் நடத்திக்கலாம் ....மாட்டினா கூட அவனை கை காட்டி தப்பி விடலாம் என்று பிளான் போட்டா .....சரி விடு ...இவ ஜெய்ப்பூர் இளவரசி இல்லை ......பால் ,வெண்ணை என்று சாப்பிட்டு சும்மா கும்முனு தான் இருக்கா ...."என்றவன் அவளை நெருங்க அதோடு அந்த வீடியோ முடிய ,அங்கு இருந்த கண்ணாடி டேபிள் சூர்யா ஓங்கி குத்திய வேகத்தில் உடைந்து விழுந்தது .
Nightmares-for-Ram-Charan-1865.jpg

"அண்ணா !என்ன இது .............கை கிழிந்து ரத்தம் வருது பாருங்க ....கருணா அண்ணா அவர் கையை தூக்கி பிடிங்க ....என்ன அண்ணா இது ...........அடி ரொம்ப ஆழம் அண்ணா .....தையல் தேவை .....டாக்டர் கிட்டே போக வேண்டி இருக்கும் ....."என்றாள் ராஜி .

அவள் சொன்ன எதுவும் சூர்யாவின் காதில் ஏறவே இல்லை ....கண்கள் சிவந்து எரிமலையாய் அமர்ந்து இருந்தான் அவன்

அவன் இருக்கும் நிலை புரிந்த விஜய் அவன் தோளில் கை வைத்து ஆறுதலாய் அழுத்தினான் .கண் மூடி தன் கோவத்தை கட்டுப்படுத்திய சூர்யா ,தன் மொபைல் எடுத்து உத்தமிற்கு அழைப்பு விடுத்தான் .

"சுமன் ஆட்கள் எத்தனை பேர் நம்ம கண்காணிப்பு வளையத்திற்குள் இருக்காங்க உத்தம் ?"என்றான் கோபம் அடங்கிய குரலில் .

"இருபது பேர் ஜி."என்றான் உத்தம் .

"எல்லோரையும் தூக்கிடு உத்தம் .............நம்ம இடத்தில் வைத்து ஒவ்வொருத்தனா எல்லாத்தையும் கட் செய்து எடுத்துடு ......ஒவ்வொரு பகுதியாய் அரை மணி நேரத்திற்கு ஒன்று வெட்டிடு ஒருத்தனை கட் செய்வதை மத்தவனுங்க பார்க்கணும் ......மரண பயம் ஒவ்வொருத்தனுக்கும் என்ன என்பது தெரியணும் ........இதை லைவ் ஷோவா ஒவ்வொரு PRONOGRAPHY வெப்சைட்டில் அப்லோட் செய் .....எவனாவது இந்த விஷயங்களை கூகில் தேடினா கூட இது மட்டும் தான் ரிலே ஆகணும் ....பெண்களை ,குழந்தைகளை போதை பொருளாய் மட்டுமே பார்க்கும் ஒவ்வொருத்தனின் கதி இதுவாக தான் இருக்கும் என்று பின்னாடி எல்லா மொழிகளிலும் அறிவிக்க படணும் .கீழே scroll ஓடணும் .அவனுங்க காண்டாக்ட் லிஸ்ட் இருக்கும் இதுக்குன்னே இருப்பானுங்க பாரு அவனுங்க எல்லாத்துக்கும் போகணும் ......ஹேக்கர் கூட்டி வந்து யாரும் கண்டுபிடிக்க முடியாத அளவு ENCRYPTION பண்ணிடு ..இனி ஒரு எந்தவொரு பெண்ணையும் ,குழந்தையும் தொட கூட ஒன்றுக்கு பத்து தடவை யோசிக்கணும் உத்தம் ........."என்றான் சூர்யா .
"டன் பாஸ் ..."என்ற உத்தம் அழைப்பை துண்டிக்க அடுத்த சில வினாடிகளில் கண்காணிப்பில் இருந்த சுமன் ஆட்கள் ஒவ்வொருவனாக தூக்க பட்டர்கள் .

"அண்ணா ............என்ன இது ................இப்படி எல்லாம் ....................செய்தா உங்க மேல் நடவடிக்கை எடுக்க வேண்டி வரும் ..."என்றாள் ராஜி .

"உன்னால் முடிந்ததை பார்த்துக்கோ ராஜி ."சொன்னது விஜய் .
mersal-vijay-angry-look-hd-wallpaper-6441357.png

"அண்ணா ...நீங்களுமா ..............VIGILANTISM எதற்கும் தீர்வூ இல்லை ...சட்டம் ,போலீஸ் ,கோர்ட் எது எல்லாம் ...."என்றவளை இடைமறித்த விஜய் ,"இருக்கட்டும் ....நாங்க வேண்டாம் என்று சொல்லலையே ....சட்டம் உங்க கடமையை 20 வருஷம் கழிச்சி செய்யட்டும் ...வாய்தா மேல் வாய்தா வாங்கி ,பொட்டி பொட்டியாய் பணம் வாங்கி கொண்டு தூங்கட்டும் ......இது எங்களுக்கான யுத்தம் ............உள்ளே வராதே .......பாதிக்க பட்ட எங்களுக்கு இல்லாத ஹியூமன் ரைட்ஸ் குற்றம் செய்தவர்களுக்கு எதற்கு -மாசிலாமணி சார் சொன்னது நூத்துக்கு நூறு உண்மை .இது மாதிரி அலைபவங்களில் ஒருத்தனை இந்நேரம் வெட்டி இருந்தாலும் அடுத்தவன் இதே தப்பை செய்ய யோசித்து இருப்பான்............கடத்தப்பட்டவ தன் உயிரை பணயம் வைத்து குழந்தையை அவ காப்பாத்திட்டா ....அவ கடத்தப்பட்டு ஏழு மணி நேரம் ஆகுது .இது வரை ....என்னத்தை ..............செத்து கொண்டு இருப்பவனுக்கு ரத்தம் தேவை என்று சொன்னால் அவன் செத்த பிறகு பால் ஊத்த தான் உங்க சட்டம் பயன்படும் ......லட்ச கணக்கில் ஆஃபீஸ்ர்ஸ் ஒவ்வொரு துறையிலும் இருக்கீங்க ....ஆனால் எத்தனை பேர் பீல்ட் ஒர்க் செய்யறீங்க ...உங்க AC அறையை விட்டு எத்தனை பேர் வெளியே வந்து உங்களுக்கு கீழே இருப்பவர்களின் வேலை மானிட்டர் செய்யறீங்க ....பிரதமர் ஒரு நாள் ஸ்வச்ஹ் பாரத்துக்கு கிளீன் செய்தார் என்று செகிரேட்டரி லெவல் வரை அனைத்து துறையிலும் துடைப்பத்தை எடுத்து கொண்டு ஓடினாங்க ....அது நாலு வருஷத்திற்கு முன் .........இந்த ஓட்டம் தினமும் இருந்தால் இந்தியா ஏன் இப்படி இருக்க போகுது ?????அப்படி ஒழுங்காய் வேலை செய்த உன் போன்ற நேர்மையான அதிகாரிகளுக்கு கிடைத்தது என்ன ட்ரான்ஸபெர் .....இந்த டெல்லி பெண் வழக்கை நீயும் உன் நண்பனும் தானே பார்த்தீங்க .....தூக்கி அடிச்சாங்க இல்லை ...ஏன் இதோ தான் பார்த்தோமே அதில் இருபவனுங்களே அவனுங்க தான் ."என்றவன் ,"வா சூர்யா ஹாஸ்பிடல் போகணும் ."என்றான் விஜய்
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
1552708595503.png
"கருணா சொல்வது நூத்துக்கு நூறு உண்மை என்று உனக்கே தெரியும் ராஜி .....நீங்க பீல்ட் வேலை செய்ய ஒரு பஸ்ஸில் இருந்து பிஞ்சு குழந்தை கீழே விழுந்து தலை நசுங்கி சாகனும் .ஒரு மொத்த பள்ளி குழந்தைகள் 100 கணக்கில் எரிந்து இறக்கணும் .200 முதியவர்கள் இறக்கணும் ......அனாதை ஆசிரமங்கள் பாலியல் வன்முறை கூடங்களாய் மாறனும் .....ஓடும் பஸ்ஸில் ஒரு பெண்ணை நாசம் செய்வார்கள் .....செய்த பிறகு புது சட்டம் வரும் .....அதை கூட முழுதாய் உங்களால் என்போர்ஸ் செய்ய முடியாது .....அந்த நேரத்தில் அந்த பெண் ஏன் அங்கே சென்றாள் ,என்ன உடை உடுத்தினாள் ,ஊசி இடம் கொடுக்காம என்று வசனம் வரும் ...ஆண் என்றால் அப்படி தான் இருப்பான் என்பார்கள் .....இதோ கேட்கிறானே suman நெஞ்சை நிமிர்த்தி "எவன் எதை புடுங்கிறான் என்று பார்க்கலாம் என்று இவனை மாதிரி நாதாரிங்க மார்தட்டும் நிலை எதனால் .....சட்டத்தில் மட்டும் அல்ல உன் போன்ற அதிகாரிகள் அலட்சியமும் தான் காரணம் ....பாலியல் வன்முறைக்கு ஆளான ஒரு முழு கிராமத்து 18 பெண்களுக்கு ...நீதி கிடைக்க 19 வருஷம் ஆகுது .....எந்த வழக்கை சொல்றேன் என்று புரியுது இல்லை .....சூட் அட் சைட் செய்து இருந்தால் தப்பி போய் சொந்த தாயையே கொல்லும் சந்தர்ப்பம் ஏன் வர போகிறது ....நீங்க நிதானமாய் வந்து பால் ஊத்துங்க மேடம் ,.....நாங்க செய்ய வேண்டியதை நாங்க பார்த்துக்குறோம் ."என்றான் சூர்யா

"நோ ....உத்தம்மிற்கு கால் செய்து அவன் செய்ய போவதை நிறுத்த சொல்லுங்க ....அதை செய்யாமல் நீங்க எங்கேயும் போக முடியாது உங்களை அர்ரெஸ்ட் செய்ய வேண்டி வரும் ."என்றாள் ராஜி வழியில் நின்று .

"ACP மேடம் .............நாங்க மதுராவை காணோம் என்று கம்பளைண்ட் கொடுக்க தான் வந்து இருக்கோம் ......மத்த எதுவும் எங்களுக்கு தெரியாது .....நீங்க என்னவோ எங்களை அர்ரெஸ்ட் செய்ய போறீங்களே ....அது எதுக்கு மேடம் ....சூர்யா கை அடிப்பட்டதுக்கா ...........இல்லை உங்க கண்ணாடி டேபிள் உடைந்ததுக்கா .மீதி எதையாது பேச வேண்டும் என்றால் சூர்யா வக்கீல் வருவார் .....அவர் கிட்டே பேசிக்கோங்கோ ......"என்றவர்கள் வெளியேற எதையும் செய்ய முடியாதவளாய் கையை பிசைந்து நின்றாள் .

அடுத்த நொடி கமிஷனர் ஆபீஸ்க்கு பென் டிரைவ் உடன் சென்றவள் நடந்ததை கூறினாள் .

" விட்டுடு ராஜி ...........நம்ம கை தான் கட்ட பட்டு இருக்கு ............அவர்களாவது எதையாவது செய்யட்டும் ....."என்றார் அவர் .

"சார் !என்ன சார் ..............இப்படி ஒவ்வொருத்தரும் கத்தி ,துப்பாக்கியை தூக்க ஆரம்பித்தால் நம்ம சிறைகள் போதாது சார் .பின் எதற்கு சட்டம் ,கோர்ட் எல்லாம் இருக்கு ?"என்றாள் ராஜி .

1552708728537.png
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"கோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை என்ன தெரியுமா 3.93-5 மில்லியன் கேஸ் ....இதில் ஹை ப்ரொபைல் கேஸ் மட்டும் தான் அவன் தீவிரவாதியாக இருந்தாலும் நடு இரவில் அவனுக்காக கோர்ட் கதவூ திறக்கும் ....ஒரு ஒட்டுமொத்த இனம் எங்களை எத்தினிக் cleansing (ethnic cleansing -இன அழிப்பு )செய்துட்டாங்க எங்களை காப்பாத்துங்க என்று நீதி கேட்டால் எங்களுக்கு நியாயம் வழங்குங்க என்று கேட்டால் அவர்கள் வழக்கை மனித நேயத்தோடு கூட எடுத்து கொள்ள முடியாது என்று சொல்லிவிட்டார்கள் .அரசியல் வாதிங்க நமக்கு மேல் உள்ள ஆஃபீஸ்ர்ஸ் சொல்லும் போது கண்ணை மூடிக்கறோம் இல்லே ....இதையும் அப்படியே விட்டுடு ....டெல்லிக்கு கால் செய்யணும் உட்கார் ..."என்றவர் டெல்லி போலீஸ்க்கு ,சிபிசி ஐ டி க்கு போன் செய்தார் .அடுத்த அரைமணி நேரத்தில் சூட் அட் சைட் ஆர்டர் வந்து சேர்ந்தது .

"பாரு இப்போ சட்டமே சொல்லிடுச்சு அவனை கொல்லலாம் என்று ."என்றார் அவர் வறண்ட புன்னைகையுடன் .

அந்த சமயம் ராஜிக்கு அழைப்பு வர ,"மேடம் நம்ம லாக் அப்பில் பெண் கடத்தல் வழக்கில் இருந்த மூன்று பேர் தப்பிட்டாங்க மேடம் "என்ற நியூஸ் வந்தது .

பெருமூச்சு விட்ட ராஜி ,"எப்படி தப்பினாங்க என்று தேடுங்க ."என்றவள் ,"லாக்அப்பில் இருந்தவர்களையும் விஜய் ,சூர்யா தூக்கிட்டாங்க சார் .....இனி அவங்க பிணம் கூட கிடைக்காது ...."என்றாள் தலையை பிடித்து கொண்டு .


"நாட்டின் ஜனத்தொகை குறையட்டும் ...இவனுங்க என்ன சுபாஷ் சந்திர போஸ்சா ,பகத் சிங்க்கா விடுமா ...அந்த பொண்ணு மதுராவை தேட என்ன நடவடிக்கை எடுத்து இருக்கே ...."என்றார்

அவர்கள் யாரை பற்றி பேச ஆரம்பித்தார்களோ அவள் -மதுரா மெல்ல கண் விழித்தாள் சிறு குழந்தையின் அழுகையை கேட்டு .கண்ணை சட்டென்று திறக்க முடியாமல் தலை பாரமாய் வலித்தது .உடம்பின் ஒவ்வொரு இடமும் வலி .....வலி ....வலி மட்டுமே .........

"தீதி .....தீதி .......தும் தீக் ஹோ ......குச் பீ நஹின் ...."என்றது ஒரு பெண் குரல் மிக மெல்லியதாக அவள் தலையை தடவி கொடுத்து (சகோதரி ....எப்படி இருக்கீங்க .....உங்களுக்கு ஒன்றும் இல்லை )
100615105239_1_540x360.jpg


கண்ணை திறந்த மதுராவிற்கு கும்மிருட்டு தான் தெரிந்தது .கை கால்கள் கட்ட பட்டு இருக்க முயன்று கைகளால் தரை ஊன்றி நிமிர்ந்து அமர்ந்த மதுரா ,சுவற்றில் சாய அது இரும்பாய் இருந்தது .என்ன நடந்தது என்று யோசித்த மதுராவிற்கு ஒவ்வொன்றாய் நினைவுக்கு வர ஆரம்பித்தது

PENANCE WILL CONTINUE.....
 
Status
Not open for further replies.
Top