All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அனிதா ராஜ்குமாரின் "என்ன தவம் செய்தேன்" - கதை திரி

Status
Not open for further replies.

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"நீ எனக்கு எதுக்கு ஹெல்ப் செய்யரே ...இதில் உனக்கு என்ன லாபம் ?"என்றாள் சோனா .

"எனக்கு என் திருமணம் நடக்கும் இல்லை ......நம்ம இருவரின் பாதையில் உள்ள நெருஞ்சி முள் போய்ட்டா நம்ம வாழ்க்கை நமக்கு தானே ?"என்றாள் மேக்னா .

"யாரை திருமணம் செய்ய இப்படி துடிக்கறே ?"என்றாள் சோனா சந்தேகமாக .

"அதை மதுரா திருமண மேடையில் வந்து தெரிஞ்சுக்கோங்க சோனா மேடம் ....நான் என்ன மதுரா மாதிரி லூசா ?நீங்க எருமை மாடு ஏரோபிளேன் ஒட்டுது என்றால் அதை நம்ப ....நம்ம இருவருக்கும் பொது எதிரி மதுரா ...அவ மேல் மட்டும் கான்செண்ட்ரட் செய்யுங்க .....நான் உங்களுக்கு உதவ வந்தேன் ....உதவிட்டேன் .....நீங்க தான் துணிஞ்சு இறங்குவீங்க ....இது தான் என் நம்பர் ...ஏதாவது தேவை என்றால் போன் செய்யுங்க ....இந்த விஷயம் நமக்குளேயே இருக்கட்டும் ....வேறு யாருக்கும் தெரிய வேண்டாம் ....."என்றாள் மேக்னா .

"ஏன் தெரிந்தால் என்ன .இதை செய் செய்யாதே என்று எனக்கு ஆர்டர் போட நீ யாரு ?"என்றாள் சோனா .

"நீங்க நூறு பேருக்கு கூட சொல்லுங்க ......எனக்கு என்ன வந்தது ...நீங்க ஜெயிக்கணும் என்பதற்காக சொன்னேன் .....இல்லை இந்த முறையும் தோத்து தான் போவேன் என்று நீங்க அடம் பிடித்தால் நான் என்ன செய்வேன் ...உங்க தலை எழுத்து அவ்வளவூ தான்ன்னு நான் போயிட்டே இருப்பேன் .....போன முறை பூ விஷயத்தில் ,சுமன் ecr ரோடு காமெடி எல்லாம் ரிசல்ட் எப்படி வந்தது என்று யோசித்து பாருங்க ....யோசிங்க சோனா ....உங்களை சுத்தி கருணா ஆட்கள் இருக்காங்க ...நீங்க ஒரு அடி வைப்பதற்குள் அவங்க 100 அடி முன்னால் இருக்காங்க .....உங்க பிளான் எல்லாம் சொதப்ப இதுவும் ஒரு காரணம் ....யுத்தத்தில் வெற்றியின் ரகசியமே ...எதிராளி எதிர்பாராத போது ,எதிர் பாராத இடத்தில இருந்து ,எதிர் பாராத முறையில் தாக்க வேண்டும் என்பதை சாணக்கிய தந்திரம் சொல்லுது .....element ஆப் surprise என்ற வார்த்தை கேள்வி பட்டு இருக்கீங்களா ....இப்போ அது உங்க பக்கம் இருக்கு ...இந்த பிளான் உங்களுக்கும் எனக்கும் மட்டுமே தெரியும் .....இப்போ சொல்லுங்க சத்திரியனாய் பல முறை தோற்க போகிறீர்களா இல்லை சாணக்கியனாகி யோசித்து ஜெயிக்க போகிறீர்களா ...யோசிங்க சோனா ....நல்லா நிதானமா யோசிங்க ................உங்களுக்கே புரியும் நான் என்ன சொன்னேன் என்று ............பை ."என்ற மேக்னா போனை துண்டித்து விட்டு அதுவரை பிடித்து வைத்து இருந்த பெருமூச்சினை வெளியிட்டாள் .

அவள் நிலையை பார்த்த அவன் அவளுக்கு தண்ணீர் பாட்டில் ஓபன் செய்து கொடுக்க அரை பாட்டில் காலி செய்தாள்

"சுப்பா ..........தலையால் தண்ணீர் குடிக்க வைப்பது என்று கேள்வி பட்டு இருக்கேன் ...இன்னைக்கு தான் அதை புரிஞ்சுக்கிட்டேன் ....ஆனா சும்மா சொல்ல கூடாது செம கிரிமினல் பிரைன் தான் அவளுக்கு ......இல்லைன்னா கருணா மாதிரி ஒருவனை இத்தனை வருடம் அடக்கி வைக்க முடியுமா என்ன ?"என்றாள்

"உன்னை நம்பினாளா .....?"என்றான் அவன் .

"தெரியலை ......மதுரா பின்னாடி கேமரா தூக்கிட்டு எவனாவது அலைய ஆரம்பித்தால் தெரிஞ்சுட்டு போக போகுது . "என்றாள் அவள் .

"ஏண்டீ ...அந்த சூர்யா என்ன அந்த அளவூ பொறாமை பிடித்த குரங்கா என்ன ?"என்றான் அவன் ஒரு மாதிரி குரலில்
-
"என்ன சொல்வது ....காலேஜ் டேஸ் பகை ஆச்சே .........இருக்காதா என்ன ...........திரும்பவும் அவன் லவ் ஆப் லைப் திரும்ப கிடைத்து இருக்கு ...நடுவில் விஜய் புகுந்து ஜொள் பேக்டரி ஓபன் செய்தா எரியமா போகுமா என்ன ?"என்றாள் அவள்

"உனக்கே ஓவர்ரா இல்லை இது ......பாவம் உன் புருஷன் .......செத்தான் உன் கையில் மாட்டி ....."என்றான் அவன் .

"இதுக்கே பயந்தா எப்படி ..............அந்த கிறுக்கு பிடிச்ச என்ற புருசனுக்கு இருக்கு தனி கவனிப்பு ........மாட்டினான் ..கதற கதற பிழிஞ்சி எடுக்க வேண்டியது தான் ......"என்றாள் மேக்னா .

"ஐயகோ நண்பா உனக்கு இந்த நிலைமையா வரணும் .............கடவுள் கூட உன்னை காப்பாத்த முடியாது ....இப்போ எங்கே ?"என்றான் அவன் .

"காரை மாத்தணும் ....உன் கார் அங்கே ஷாப்பிங் மாலில் இருக்குலை ....எடுத்துட்டு கிளம்பனும் ."என்றாள் மேக்னா .

அரைமணி நேரம் கழித்து மதுராவின் போன் அடித்தது .

"என்னமா ...."என்றாள் மதுரா .

"எங்கே இருக்கே ..............காலையில் போன் செய்தாங்க சமபந்தியம்மா வருவதாக ...இப்போ மணி மதியம் ஒண்ணு ....இன்னும் கிளம்பாம என்ன செய்துட்டு இருக்கே ..........?"என்றார் கடுப்போடு .
Revathi-as-Alagammai.jpg


"அம்மா அத்தை தான் நல்ல காரியம் பேச போவதற்கு முன் சாமி கும்பிடணும் என்று வடபழனி முருகன் கோயிலுக்கு கூப்பிட்டு வந்தாங்க ...அங்கே கல்யாணம் நடந்தது ...........ஐயோ அம்மா எனக்கு இல்லை ....முருகருக்கு அம்மா முருகருக்கு .....சொல்வதை ஒழுங்கா கேளுங்க ..........அதை முடிச்சிட்டு இப்போ தான் வரோம் ....இன்னும் ஒரு பதினைந்து நிமிடத்தில் வீட்டில் இருப்போம் ....."என்றாள் மதுரா .

"போன் செய்து லேட்டாகும் என்று சொன்னா குறைந்தா போய்டுவே .....நிச்சயமா உனக்கு கோயிலில் திருமணம் நடக்கலை தானே ...............என் கேட்கிறேனா .............உன்னை நம்ப முடியாது மகளே அதனால் தான் ....இந்த பூனையும் பால் குடிக்குமான்னு இருந்து நீ ரத்தத்தையே குடிக்கும் சிகப்புரோஜா பட பூனை ஆச்சே .....ஏன் இப்படி எல்லாம் பேசுறேன்னா ....வேண்டுதல் அதான் ....என் மகள் என்னை மீறி போய்ட்டா என்ற வேதனை ...இத்தனை வருடம் உயிர் கொடுத்து வளர்த்த பெற்றோர்களை விட ஒரே நாளில் வந்த காதலுக்கு மகள் முக்கியத்துவம் கொடுத்து விட்டாளே என்ற ஆதங்கம் ....தனக்கு தானே மாப்பிளை பார்த்து அதை பேசி உறுதி செய்து கொண்டு மாப்பிள்ளை வீட்டாருடன் வந்து திருமணம் பேசும் அளவுக்கு எங்களை என் மகள் ஒதுக்கி வைத்து விட்டாளே என்ற மரணவலி தான் மகளே ....சாரி மிஸஸ் மதுராக்ஷி சூர்யா பிரதாப் ..."என்றாள் பவானி கதறலாக .

"அம்மா !எதையும் மனம் விட்டு பேசும் நிலையில் நானும் இல்லை ...எல்லாதையும் விளக்க எனக்கு நேரமும் இல்லை ....அதை கேட்க உங்களுக்கு பொறுமையும் இல்லை ...........நானே என் வாழ்க்கை எனக்கு கிடைக்குமா ...கிடைத்தாலும் நிலைக்குமா என்ற பயத்தில் இருக்கிறேன் அம்மா .....சிரித்து சிரித்து பேசுவதால் எல்லாம் நன்றாக போகிறது என்று அர்த்தம் இல்லை அம்மா .....சிரிப்பு என்ற முகமூடிக்கு பின் கண்ணீரும் பல நேரங்களிலும் இருக்கும்மா ......நேரம் வரும் .... எல்லாத்தையும் சொல்றேன் ......இப்போ என்ன நடக்குதோ அதன் படி நடங்க ...."என்றாள் மதுரா .

மகளின் குரலில் இருந்த ஏதோ ஒன்று அந்த தாயின் மனதை பிசைய ஆரம்பித்தது .அடி வயத்தில் ஏதோ பயப்பந்து உருள ஆரம்பிக்க தவித்து போனார் .

"ராணிமா ...என்னடா ஒரு மாதிரி பேசுறே ....."என்றார் தவிப்புடன் .

"சொல்றேன் மா .....உன் கிட்டே சொல்லாமல் ?...........இப்படியாவது பேசுறேனே என்று சந்தோச படு ...இருக்கும் பிரச்னை தாங்க முடியாமல் பைத்தியம் பிடிக்காமல் இருப்பதே பெரிசு தான் அம்மா ......."என்றாள் மதுரா .
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"கண்ணா ....உனக்கு பிடித்து தானே மா சூர்யாவோடு திருமணம் என்று சொல்றே ...ஒருவேளை அவன் .....அவர் உன்னை ஏதாவது பயமுறுத்தி கோர்னெர் செய்து இருக்காரா என்ன ......அம்மாடீ அப்படி ஏதாவது என்றால் அம்மா இருக்கேண்டா ...உன்னை ஏதாவது torture செய்து ....அதனால் இந்த திருமணத்தை நடத்தணும் என்று சொல்றியாடா கண்ணா .....நீ இது மாதிரி எல்லாம் செய்பவள் இல்லையே .........என்னால் இன்னமும் நம்ப முடியவில்லை ..."என்றார் அவர் .

"ஆமாம் அம்மா ......ரொம்பவும் torture செய்யறான் காலையில் இருந்து ..............நானும் விடாமல் ஐஸ் கிரீம் வாங்கி கொடுடா என்று கெஞ்சிட்டு இருக்கேன் ..........பக்கி .....இளவரசன் ,பெத்த கோடீஸ்வரன் என்று பேர் .......கஞ்சூஸ் ஒரு ஐஸ் கிரீம் கூட வாங்கி கொடுக்கவே மாட்டேன் என்று சொல்லிட்டான் ...கேட்டா பனி காலமாம் ...எனக்கு ஒதுக்காதாம் .....எருமை ...பாருங்க அம்மா எப்படி எல்லாம் torture செய்யறான் ..........."என்றவளை எந்த லிஸ்டில் சேர்ப்பது என்றே பவானிக்கு புரியவில்லை .

(எங்களுக்கும் தான் .....கதை எழுதற ஹனி தான் சின் சான் சங்க vice ப்ரெசிடெண்ட் என்று பார்த்தால் அவ உருவாகும் கேரக்டர்ரும் அவளை மாதிரியே படுத்தி எடுக்குது ........குஷ்ட காலம் ....ச்சே கஷ்ட காலம் )

"மதுராக்ஷி ...."என்று கடித்த பற்களுக்கு நடுவே அவள் பெயரை பவானி கோபத்தில் கடித்து துப்ப ,மதுரா ஏதோ பேசும் முன் போனை வாங்கினான் சூர்யா .

"ஆன்ட்டி ...நான் சூர்யா பேசுறேன் .............உங்க மகளை பயமுறுத்தி ,torture செய்து எல்லாம் இந்த திருமணத்தை நான் நடத்தலை ...அதை எல்லாம் செய்வது உங்க ஆசை மகள் தான் ....அவளை பத்தி தெரிஞ்சும் இப்படி எல்லாம் கேக்கறீங்களே .............அவ கையில் மாட்டி சிக்கி ,திக்கி திணறி கொண்டு இருக்கும் நான் தான் பாவமோ பாவம் .....இன்னைக்கு காலையில் தான் என் அம்மா முதல் முறை இவளை நேரில் பார்த்தாங்க ....பார்த்து ,பழகிய ஒரு மணி நேரத்தில் ,"அம்மாடீ மதுரா ...என் கண்ணையே உன் கிட்டே ஒப்படைகின்றேன் ....அதில் வெங்காயம் கட் செய்யும் போது கூட கண்ணீர் வராம பார்த்துக்கோ "என்று என்று சொல்லிட்டாங்க .......ஒரு மணி நேரத்திற்கே அவங்களுக்கு இது எப்படி தண்ணீ தொளித்து விட்ட ,கீழ்ப்பாக்கத்தில் இருந்து எஸ்கேப் ஆனா முழு நட்டு போல்ட் கழன்ற கேஸுன்னு புரிஞ்சு போச்சு .....இத்தனை வருஷம் அவளை பெத்து வளர்த்து இருக்கீங்க ........அவளை பத்தி உங்களுக்கு தெரியாதா என்ன ????உங்களை நம்பி தான் ஆன்ட்டி என் கழுத்தை நீட்டறேன் .......... "என்ற சூர்யாவின் பேச்சை கேட்டு பவானி கொள்ளென்று சிரித்து விட்டார் .

"ஏதாவது பிரச்சனையாபா ..........இப்படி எடுத்தோம் கவிழ்த்தோம் என்று எதையும் செய்யறவ அவயில்லையே ....உன்னை குறை சொல்லணும் என்று இல்லையப்பா ..........அவளை புரிஞ்சு இருப்பதால் தான் இப்படி எல்லாம் யோசிக்க தோணுது ......."என்றார் பவானி .

"ஆண்ட்டி பிரச்சனை தான் .....அதை தீர்க்க தான் போராடிட்டு இருக்கோம் ......தீர்த்துடலாம் ......அவ தெளிவா தான் இருக்கா .....கூடவே நான் இருக்கேன் ஆன்ட்டி ....நீங்க கவலை படாதீங்க ...பொண்ணு கல்யாணம் ...உங்களை இத்தனை நாள் பிடித்து தொங்கி உங்களை படுத்தி கொண்டு இருந்த வேதாளம் உங்கள் தோளை விட்டு இறங்க போகுதுன்னு சந்தோஷ பட்டு ஸ்வீட் எடுத்து கொண்டாடுங்கள் ......மத்த விஷயத்தை அவளே உங்க கிட்டே சொல்வா .....அவளுக்கு தேவை இப்போ உங்க சப்போர்ட் தான் ஆன்ட்டி ........இன்னும் பத்து நிமிடத்தில் வந்து விடுவோம் ....எல்லோரும் போன பிறகு கேளுங்க ...மாப்பிள்ளை வரேன் ....சும்மா வரவேற்பு அதிரனும் ..........பை ஆன்ட்டி"என்றான் சூர்யா .

அதே சமயம் வானத்தை பார்த்தவாறு சோக கீதம் வாசித்து கொண்டு இருந்தான் விஜய் .


(இன்னுமா நீ அந்த இடத்தை விட்டு அசையலே ?")

நண்பனின் நிலை பார்த்து கையை பிசைந்து கொண்டு நின்று இருந்தனர் ஆல்வினும் ,பாலாஜியும் .அவர்களால் எதையும் செய்யவும் முடியவில்லை .அவர்கள் நண்பன் அப்படி பட்டவன் ஆயிற்றே .....இவன் கண்ணால் சமிக்கை கட்டினால் கூட போதுமே எதையும் அவனுக்காக செய்து முடிக்கும் அவர்கள் ,நண்பன் என்ன முடிவூ எடுப்பான் என்று புரியாமல் தலையை பிய்த்து கொள்ளாத குறையாய் நின்றனர் .தப்பே செய்யாமல் இருக்க அவர்கள் நண்பன் கடவுள் இல்லை ....நிறை குறை உள்ள சாதாரண மனிதன் ....மனிதர்களில் சிறந்தவன் ...ஆனால் இப்போ வானத்தை பார்த்து துடித்து கொண்டு இருப்பவன் தங்கையின் வாழ்வுக்காக எப்படி மாறுவான் என்று அவர்களால் கணிக்க முடியவில்லை ..


PENANCE WILL CONTINUE....
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஏம்ப்பா பிரச்சனை SOLVE செய்யாமல் யாருக்காவது யாரையாவது மேரேஜ் செய்து வைக்க முடியுமா என்ன ....சோனாவை குழப்பி ,சூர்யா -மதுரை திருமணத்தை நிறுத்த மேக்னா என்று தன்னை தானே சொல்லி கொண்ட பெண் காய் நகர்த்தி கொண்டு இருக்கிறாள் .கலங்கிய குட்டையில் தான் மீன் பிடிக்க முடியும் .

மணமேடை போ போ என்றால் அங்கே போய் சூர்யாவிற்கு மதுராவுடன் திருமணம் என்று முடித்து விடட்டுமா ???அப்போ மேக்னா பிள்ளைகளின் கணவன் விஜய் என்று ஆகும் ...ஓக்கவா ????

ஒரு UDக்கு 40,000 வார்த்தைகள் கொடுக்கிறேன் ...எங்கேயாவது நிறுத்தி தான் ஆக வேண்டும் ....அப்படி நிறுத்தும் இடம் அடுத்து என்ன என்ற கேள்வியுடன் நிற்பதை தடுக்க முடியவில்லை என்று முன்னரே சொல்லி விட்டேன் .

ட்ரெயின் விபத்தில் தாத்தா நரசிம்மனையும் ராமராஜு மகளையும் காப்பாற்ற போன மதுரா ஹோச்பிடலில் இருந்த சமயத்தில் சூர்யா ,விஜய் இருவரும் வெவேறு பெண்களை மணந்து கொண்டார்கள் ...நான்கு வருடத்திற்கு முன்பு ...அப்போ அந்த இடை பட்ட காலத்தில் சூர்யாவோ ,விஜய்யோ மதுராவை பார்க்கவே இல்லையா என்ற கேள்வி வருகிறது ............அதை சொல்ல வேண்டாமா

தவிர சுமன் ரெண்டு நாள் மதுராவை கடத்த கெடு வைத்துள்ளான் என்னும் போது அதை பற்றி சொல்ல வேண்டாமா .....

கதை முடிவை நோக்கி தான் போகிறது ....எந்த பக்கம் கொண்டு போகிறேன் என்பதில் தெளிவாகவே இருக்கிறேன் .

இதை ஒரு PUZZLE என்ற கண்ணோட்டத்துடன் அணுங்குங்கள் ....அங்கே அங்கே INTENTIONAL லா நிறைய CLUE கொடுத்து தான் வருகிறேன் .....ரொமான்டிக் திரில்லர் வகை .....

குழப்பமாய் இருப்பது போலே தெரிந்தால் ஒரு 6-7 UD முன் சென்று படித்து பாருங்கள் ....கதையின் CONTINUITY ...ஒரு UDக்கும் இன்னொரு UDக்கும் தொடர்பு விட்டு போகாமல் இருப்பது புரியும் .எங்கேயும் REPETATION வரவே வராது ...

பல வருட கதை எல்லாம் இல்லை .மதுரா என்ற பெண்ணின் வாழ்வில் ஒரு மாதத்தில் என்ன நடக்கிறது ,முன்பு என்ன நடந்தது என்று "அலைபாயுதே "படம் கடந்த காலம் ,நிகழ் காலம் என்று மாறி மாறி வருமே அதே போன்ற கான்செப்ட் .

கடந்த காலத்தை கேரக்டர்களின் டயலாக் மூலம் சொல்லாமல் மூன்றாம் நபரின் பார்வையில் இருந்து முடிந்த வரை சொல்லி இருக்கிறேன் .விஜய் டைரி குறிப்பாகட்டும் ,டைம் மெஷின் கான்செப்ட் ஆகட்டும் ,இனிமேல் வரும் விஜய் முதல் முறை மதுராவை இழந்து ,சோனாவை மணந்த இடைப்பட்ட கால பிலாஷுபாக் ஆகட்டும் மேலோட்டமாக தான் கொடுத்து இருக்கிறேன் ....

இத்தனை இடியாப்பா சிக்கல் மதுரா வாழ்வில் இருக்கும் போது உடனே மணமேடை ஏற வைக்க முடியாது ....ஆனால் அடுத்த udயில் நிச்சயம் முடித்து விடலாம் ...ஆனால் விஜய்யை அழைத்து கொண்டு சேது மதுராவின் வீட்டில் உட்கார்ந்து இருக்கிறார் .

இவர்கள் மதுராவிற்கும் -விஜய்க்கும் திருமணம் செய்ய ரெடி யா தான் இருகாங்க ...ஆனா விஜய் கேரக்டர் அடிப்படையே தன்னலம் அற்ற ஒருவன் .குடும்பத்திற்காக எதையும் செய்ய தயங்காதவன் .நிறை குறை உள்ள சாதாரண மனிதன் .குடும்பத்திற்காக காதலையும் துறந்து ஒரு பேயிடம் மாட்டி கொண்டு இருப்பவன் .

நமது நிஜ வாழ்க்கைகையில் எத்தனை பேரின் காதல் தோல்விகளை பார்த்து இருப்போம் ...அதில் முக்கால்வாசி குடும்பத்திற்காக தியாகம் செய்ததாக தான் இருக்கும் .ஏறக்குறைய 10 வருடங்களா குடும்ப தலைவனாய் தான் குடும்பத்தை தாங்கி கொண்டு இருப்பவன் ,மதுராவா ரூபிணியா என்று வரும் போது என்ன செய்வான் ???

அவன் குறையே தன் குடும்பத்தை உயிராக மதிப்பது தான் .ஒருவேளை குடும்பம் தேவை இல்லை என்று துணிந்து மதுராவை மணந்தாலும் சட்டப்படி அந்த திருமணம் செல்லாது என்னும் போது இதை எப்படி கொண்டு போவது ???? அவன் அப்படி செய்தால் இத்தனை நாள் குடும்பம் என்று அவன் இருந்தது போலியாகி விடும் .இப்படி பட்டவனை திருமண மேடை ஏற்ற வேண்டும் என்றால் வலுவான காரணம் இருக்க வேண்டும் .அதை நோக்கி தான் கொண்டு போகிறேன்

மேக்னா ,குழந்தைகளை விட வேறு வலுவான காரணம் தேவையா என்றால் இந்த லாஜிக் விஜய் அவர்களின் அப்பாவாக இருந்தால் மட்டுமே எடுபடும் ....ஒருவேளை அவன் இல்லை என்றால் எதை வைத்து அவனை மணமேடை ஏற்ற முடியும் ???அதற்காக தான் அந்த veil அணிந்த பெண் பிளான் போட்டு இருக்கிறாள்
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
THAVAM 36

தோட்டத்தில் அமர்ந்து வானத்தை வெறித்து கொண்டு இருந்த நண்பனை கண்ட ஆல்வினுக்கும் ,பாலாஜிக்கும் --மதுராவை இன்னொரு முறை இழக்க நேரிட்டால், இழந்தால் அவன் உயிர் தங்குமா என்ற கேள்வியே அவர்கள் அடிமனதை அரித்து கொண்டு இருந்தது .ஒரு முறை அவனை மீட்டு வருவதற்குள் அவர்கள் உயிரே போய் விட்டது என்று சொன்னால் கூட மிகையல்ல .

Ilaya-Thalapathi-Vijay-HD-Photos3.jpg

கத்ரி நரசிம்மர் திருவிழா முடிந்து மதுராவின் கல்லுரியில் இருந்து வந்த மற்றவர்கள் கிளம்பி விட ,முகேஷ் ரெட்டி மேக்னாவின் அப்பா ஸ்பெஷல் பெர்மிஸ்ஸின் வாங்கி மதுரா ,விஜய் ,ஆல்வின் ,பாலாஜி ,சுபா ,ராமராஜு அவர்கள் குடும்பம் ,நரசிம்ம ரெட்டி,அவர் மனைவி ,மருமகள் ,மருமகன் என்று பலர் விசாகப்பட்டினம் போன்ற ஊர்களுக்கு சுற்றுலா சென்று விட்டு திரும்பி கொண்டு இருந்தனர் .

அவர்கள் ஏற்பாடு செய்து இருந்த கார் ரிப்பேர் ஆகி விட ,மகளின் ஆசையை மீற முடியாமல் கடைசி நொடியில் கோரோமண்டல் எக்ஸ்பிரஸ்சில் அனைவருக்கும் ராமராஜு டிக்கெட் புக் செய்தார் .பலரின் வாழ்வை முடிக்க ,பலரின் வாழ்வை அடியோடு தடம் மாற்ற அந்த கோரோமெண்டல் எக்ஸ்பிரஸ் வந்து சேர்ந்தது .


கதிரியில் இருந்து சூர்யா வேலை என்று கிளம்பி விட அது தான் அவனை மதுரா கடைசியாக பார்த்தது .அதன் பிறகு நான்கு வருடங்கள் கழித்து அவன் அலுவலகத்தில் தான் அவனை மறுமுறை அவள் கண்டது .வேலை என்று சொல்லி சென்ற அவன் வாழ்வில் விதி அவன் தந்தை மூலம் விளையாட ,சில வாரங்களில் இந்தியாவை விட்டே அவன் சென்று விட்டு இருந்தான் .நடந்த ரயில் விபத்தில் அவன் காதலி ,தோழர்கள் மாட்டியதை அவன் அறியவில்லை என்றே சொல்ல வேண்டும் .அவனுக்கு சொல்லும் நிலையிலும் யாரும் இல்லை .

விசாகப்பட்டினம் ரயில் நிலையம் :அன்று
VIZAG_Railway_station (1).jpg


"டேய் ...எங்கேடா போய் தொலைந்தே .....ட்ரெயின் கிளம்ப போகுது ......"என்றான் ஆல்வின் ஆடி அசைந்து வந்த விஜய் முதுகில் ஓங்கி ஒரு அடி வைத்து .

"ஹி ...ஹி ...."

"வழியாதே ........சகிக்கலை ...மேட்டருக்கு வா .......எதுக்கு பம்மரே ?'என்றான் ஆல்வின்

"இல்லைடா ஆல் .........ஸ்டேஷனுக்கு வெளியே ....நகை கடை பார்த்தேன்டா ....அதான் என் மதுக்கு ஒரு செயின் வாங்கலாம் என்று போனேன் ......."என்று அசடு வழிந்த விஜயை பார்த்து தலையில் அடித்து கொண்டனர் நண்பர்கள் இருவரும் .

((ஓஹ் ஆல்வின் வீட்டில் மதுரா கையில் கிடைத்த செயின் இப்படி தான் வாங்க பட்டதோ ?)

"ஏன் இதை குன்னூர் இல்லை சென்னையில் போய் வாங்கினா என்ன ........அங்கே எல்லாம் உன் முகரைக்கு விற்க மாட்டாங்களா ?"என்றான் பாலாஜி .

"இல்லைடா மில்க் பையா ......மதுரா என் மேல் கோபமா இருக்காடா ...அதான் இதை கொடுத்து லவ் சொல்லி ,அவளை கூல் செய்யலாம் என்று .....8 மணி நேரம் இருக்கு இல்லை .....அதான் ஒரு ரொமான்ஸ்சுக்காக .........."என்றான் விஜய் .

"வண்டியை நிறுத்து .............முதலில் அவ உன் மேல் கோபபடும் படி அப்படி என்னத்தை நீ செய்து தொலைச்சே ...........திருவிழாவில் இருந்து தான் உனக்கு நேரமே சரியில்லையே ...........எதையாவது செய்து அவ கோபத்தை கிளறி விட்டு இருப்பதே உனக்கு வேலையாக போச்சு ....அது போதாது என்று இப்போ என்ன செய்து வைச்சே ராசா நீயி ?"என்றான் ஆல்வின்

"சொல்லு டா ...கேட்கிறான் இல்லே ............தங்கச்சி கோப படும் படி என்ன லூசுத்தனத்தை செய்து வைத்தே .....உன் இஞ்சி தின்ன குரங்கு ரியாக்ஷன் பார்த்தா மவனே ஏதோ ஏடாகூடமா செய்து வைத்து இருக்கே ....என்னடா எருமை ?"என்றான் பாலாஜி .

"இல்லைடா கிளம்பும் முன் பேசி கொண்டு இருந்தேன் ....இருந்தேனா ......அப்போ ........நம்ம கூட ஏன் சூர்யா வரலை ...........உனக்கும் அவனுக்கும் என்ன பிரச்சனை ...........நீ அவனை லவ் செய்தாயா என்று கேட்டு வைத்தேன் ......பிசாசு மலை ஏறிடுச்சு ...........என்னம்மா அடிக்கறா ..........புத்தூர் கட்டு போட வேண்டும் போலெ இருக்கு .....ஜாக்கி சான் தங்கச்சி போல் இருக்கு ......ஐயோ அம்மா .........."என்றவன் ஸ்டேஷன் முழுவதும் ஓட அவனை விரட்டி ,விரட்டி மொத்தி எடுத்தனர் ஆல்வினும் ,பாலாஜியும் .

இதை பார்த்து தங்கள் கோச் அருகே கைகைளை கட்டி கண்களில் எரிமலை மின்ன முகத்தை திருப்பி நின்று இருந்தாள் மதுரா .

"ஏண்டா ...........தங்கச்சி இடத்தில நான் இருந்தேன் உன்னை சாவடிச்சி இருப்பேன் ....ஏதோ தங்கச்சியா இருக்க போய் அடியோடு விட்டுச்சு .........ஏண்டா நீயும் அந்த சூர்யாவும் என்ன சைக்கோவா ............அவன் எப்போ பார்த்தாலும் ,"நீ கருணாவை லவ் செய்யறியா ?"என்று கேட்கிறான் ...நீயும் அவனை மாதிரியே எப்போ பார்த்தாலும் ,"நீ சூர்யாவை லவ் செய்யறீயா ?"என்று கேட்டு வைக்கிறே .....லூசாடா நீங்க ரெண்டு பேரும் ????ஏன்டா அந்த புள்ளையை போட்டு மாத்தி மாத்தி படுத்தி எடுக்கறீங்க .....உங்களை எல்லாம் ஷோகேஸ்சில் தாண்டா வைக்கணும் .....திருமணம் செய்து ,இன்னும் புள்ளை குட்டி ,பேரன் ,பேத்தி எல்லாம் எடுத்த பிறகு கூட இந்த கேள்வியை நீ விட மாட்டே அப்படி தானே ....போடா .....வாயில் பச்சையா ஏதாவது வந்துட போகுது ......"என்றான் ஆல்வின் கடுப்பாக .

"இல்லைடா .............கேட்டது தப்பு தான்னு புரியது ...ஆனா அவனை பத்தியே பேசிட்டு இருக்காடா .....அந்த எருமையும் சொல்லாம கொள்ளாம எஸ்ஸாகி என் உயிரை வாங்குது ....போனை கூட சுவிட்ச் ஆப் செய்துட்டு அப்படி என்ன கழட்டறான் என்று புரியலை ..........இதுவும் அவனுக்கு என்ன ஆச்சோ ...ஏது ஆச்சோ என்று பக்கத்தில் நான் ஒருத்தன் உருகி உருகி லவ் செய்வதை கண்டுக்காம புலம்பிட்டு இருந்தா மனுசனுக்கு பிபி ஏறுமா ஏறாதா .....நீயே சொல்லு ............எனக்கு மட்டும் எங்கே இருந்து தான் விதம் விதமாய் ,ரகம் ரகமாய் வில்லன்கள் வருவானுங்க என்றே தெரிய மாட்டேங்குது ...அதான் அந்த கடுப்பில் வாயை விட்டேன் ...மேடம் முருங்கை மரம் ஏறிட்டாங்க ........கூல் செய்து லவ் சொல்லலாம் என்று தான் .........."என்றான் விஜய் அசடு வழிய .

"யாரு நீயி .....லவ் ....போய் மதுரா கிட்டே சொல்ல போறே ............படையப்பா படத்தில் ரஜினி லவ் லெட்டர் எழுதி ரமேஷ் கண்ணா கிட்டே கொடுத்து அனுப்புவார் ...........அவரும் கொடுப்பார் ,கொடுப்பார் .....கொடுக்க ட்ரை செய்துட்டே இருப்பார் ...........நீயும் அதே இனம் கண்ணா ............நானும் பாலாஜியும் ஒவ்வொரு முறையும் நீ இந்த டைலொகு விடும் போது எல்லாம் பெட் கட்டுவோம் .....அதில் ஜெயிப்பது என்னவோ நானாக தான் இருந்தேன் .........உன்னாலேயே நான் பணக்காரன் ஆகிடுவேன் ராசா ....."என்றான் ஆல்வின் .

"என்னடா செய்யறது ..........மச்சியை சிங்கத்து கூட சண்டை போட சொல்லு ,கடலை குடிக்க சொல்லு ,எரிமலையில் குதிக்க சொல்லு சும்மா அசால்ட்டா செய்துடுவான் .....நெனைச்சி பார்க்கும் போது பாட்டு அருவியா கொட்டுது ...அதை சொல்ல முயலும் போது தான் ....வார்த்தை .....தான் முட்டுது ....(கமல் வாய்ஸ் )....என்னப்பா குழந்தை செய்வான் ?'என்றான் பாலாஜி .

"லவ் செய்து பாருங்கடா அப்போ புரியும் அவனவன் அவஸ்தை ..........கிட்டே போற வரை எல்லாம் நல்லா தான் இருக்கு .......கிட்டே போய்ட்டா இதயம் உசைன் போல்ட் ரேஞ்சுக்கு ஓடுது ...அது ஓடும் ஸ்பீடில் வெளியே வந்துடுமோன்னு தோணுது ...........இதுக்கே இப்படி..........கிட்டே போய் அவ முகத்தை பார்த்தாலே எல்லாம் அவுட் ஆப் போகஸ் ஆகி போகுது ...............என்ன நடக்குதுன்னே புரிய மாட்டேங்குது ........."என்றவனை பார்த்து விழுந்து விழுந்து சிரித்தனர் ஆல்வினும் ,பாலாஜியும் .

அதற்குள் மரண யாத்திரைகாண விசில் ஊத்தப்பட்டு விட அனைவரும் ட்ரெயின் ஏற அதுவும் பலரை பலிவாங்க பயணத்தை ஆரம்பித்தது .

சென்னை ,கேரளா வெள்ளம் எல்லாம் ஒரு வெள்ளமா என்று பட்டி மன்றமே நடத்தும் அளவு விஜய் விட்ட ஜொள்ளில் அந்த ட்ரெயின் படகு போலெ மிதந்து தான் போனது .

நள்ளிரவு வேளை வரை மதுராவின் கோபம் தணியவில்லை .கண்களில் எரிமலையை பொங்க விட்டு அவனை வறுத்து எடுத்து கொண்டு இருந்தாள் ..அவளை சமாதானம் செய்ய விஜய் செய்த எந்த முயற்சியும் பலன் அளிக்கவில்லை .அவன் படும் பாட்டை கண்டு தங்களுக்குள் சிரித்து கொண்டு இருந்தனர் அவன் நண்பர்கள் .
mqdefault (1).jpg

நடு இரவு ரெப்பிரேஷ் செய்ய மதுரா செல்ல அவள் பின்னேயே சென்றான் விஜய்

"மது !..............ஐம் சாரி ...................அப்படி நான் பேசி இருக்க கூடாது ..........என்னை மன்னிச்சுடும்மா .....புத்தி கெட்டு போய் அப்படி பேசிட்டேன் .....ஏன் அப்படி பேசினேன் என்று உனக்கு புரியலையா ........எல்லாம் ஒரு உரிமையில் தான் ...என்னை விட அந்த சூர்யா உனக்கு உயர்ந்தவனாகி விட்டானா என்ற பொறாமையில் ........ச்சே சொல்ல வந்ததை விட்டுட்டு நான் பாட்டுக்கு ஏதேதோ பேசிட்டு போறேன் .........ஐ "என்று அவன் ஆரம்பித்த போது கணத்த சப்தத்துடன் சுமன் வைத்த வெடிகுண்டு வெடித்ததில் பாலத்தில் சென்று கொண்டு இருந்த அந்த ரயில் தடம் புரண்டது
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பல பெட்டிகளில் நெருப்பு வேகமாய் பரவி தூங்கி கொண்டு இருந்தவர்களை தூக்கத்திலேயே பலி வாங்கி கொண்டது .மற்றொரு புறம் பல பெட்டிகள் பாலத்தில் இருந்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் விழுந்து மூழ்க ஆரம்பித்தது .
utkal-train-accident-759-copy.jpeg

ஒரு பக்கம் நெருப்பு ,இன்னொரு பக்கம் கரை புரண்டு ஓடும் தண்ணீர் .........ரெண்டிலும் மாட்டி வெளிவர முடியாமல் உயிர்கள் ஒவ்வொன்றாய் மரணிக்க ஆரம்பித்தது .எங்கும் மரண ஓலம் .வலியில் கதறி துடித்த மக்கள் .காப்பாற்ற யாராவது வர மாட்டார்களா என்ற உயிர் போகும் கடைசி நொடி போராட்டம் .பற்றி எறிந்துவாரு வெளி வந்து விழுந்தவர்கள் .கை கால் துண்டானவர்கள் .பார்க்க முடியாத கோராமை ஒரு கூட்டத்தின் வெறி செயலால் அரங்கேறி கொண்டு இருந்தது .
55970480982d6.jpg

மதுராவும் விஜய்யும் நின்று இருந்தது கதவின் பக்கம் என்பதால் ட்ரெயின் சாய ஆரம்பித்த உடனே மதுராவை தாங்கியவாறு அவன் வெளியே குதித்து விட்டு இருந்தான் .அதனால் அவர்களுக்கு எதுவும் அப்போதைக்கு ஆகவில்லை ...சுதாரித்து எழுந்து நின்ற அவர்களின் கண் முன்னே இருந்த பயங்கரம் அவர்களை தள்ளி இருக்கவிடவில்லை .

அத்தனை மரண ஓலங்கள் கேட்ட பிறகும் தனக்கு என்ன என்று நின்று இருந்தால் அவர்கள் மனிதர்கள் இல்லையே ....தங்களால் முடிந்த அளவூ மக்களை மீட்டு எடுத்து கொண்டு இருந்தனர் .நீச்சல் தெரிந்தவர்கள் தயங்காமல் ஆற்றில் குதித்து முழ்கிய பெட்டியில் இருந்தவர்களை காக்க போராடினார்கள் .
page-26.jpg

இந்த உயிர் -மரண போராட்டத்தில் விஜய்யும் மதுராவும் வெவ்வேறு பக்கம் பிரிந்து போனார்கள் .அந்த கூட்டத்தில் ,குழப்பத்தில் யார் எங்கு இருக்கிறார்கள் என்றே புரியாத நிலை .அதற்குள் விஷயம் கேள்வி பட்டு அக்கம் பக்கம் இருந்தவர்கள் ,ரயில்வே பாதுகாப்பு படை ,காவல் துறை போன்றோர் மீட்பு பணியில் ஈடுபட்டனர் .

கை கால் அடிபட்டு ஆல்வின் பாலாஜியுடன் கணக்கில் அடங்கா மக்களை விஜய் காப்பாற்றி நிமிர்ந்த போது தான் மதுராவின் நினைப்பே அவனுக்கு வந்தது .

"மதுவை பார்த்தாயா ஆல்வின் .......?"என்றான் இதயம் பயத்தில் துடிக்க ஆரம்பிக்க .

"இல்லையேடா ..........கடைசியா எப்போ பார்த்தேன்னு கூட நினைவுக்கு வரலையே ..........."என்றான் ஆல்வின் .அடுத்த நொடி ஆளுக்கு ஒரு புறம் அவள் பெயரை உரக்க கத்தி கொண்டே சென்றனர் .

இவர்கள் வந்த பெட்டிக்கு அருகே விஜய் வரும் சமயம் ,அந்தரத்தில் தொங்கி தீ பற்றி எரிந்து கொண்டு இருந்த அந்த பெட்டியில் இருந்து இவன் பெயரை உரக்க சொல்லி கூப்பிட்டாள் மதுரா .

"விஜய் !....ஸ்ரீக்கு முதுகில் பலத்த அடி ....என்னால் முடிந்த வரை கட்டை மேல் பெட் வைத்து கட்டி இருக்கேன் ....மயக்கத்தில் இருக்கா ...........மெல்ல அவளை மேலே இழுங்க ........."என்றவள் ஸ்ரீயை தூக்கி தர விஜய் அவளை மெல்ல கீழ் இறக்கி காத்து இருந்த டாக்டர்களிடம் ஒப்படைத்தான் .

"நீ கீழே இறங்கு மது ............நெருப்பு அதிகமா இருக்கு ....ட்ரெயின் இருக்கும் பொசிஷன் சரியில்லை .......ரிஸ்க் எடுக்காதே ...இறங்கு ......"என்றான் விஜய் .

"இரு விஜய் .....நரசிம்ம தாத்தா ,பாட்டி ...அங்கிள் ,ஆன்ட்டி எல்லாம் உள்ளே தான் மாட்டிட்டு இருக்காங்க ....அவங்களை எல்லாம் அப்படியே விட்டுட்டு வர சொல்றியா என்ன .....அவங்களை காப்பாத்தணும் ......."இரு இரு ...நீ ஏறாதே .......ட்ரெயின் ஆடுது .....நான் ஒவ்வொருத்தரையா கை பிடிச்சி தூக்கி விடுறேன் ........அவங்களை வெளியே இழுத்துக்கோ .........டைம் வேஸ்ட் செய்யாதே ..........."என்றவள் மெல்ல மெல்ல நரசிம்ம ரெட்டி குடும்பத்தை ,ராமராஜு வை கை பிடித்து வெளியே அனுப்பினாள் .

வெளியே வந்தவர்களுக்கு நன்றாக அடி பட்டு இருக்க ,அதிலும் தாத்தா நரசிம்மர் மயங்கி சரிய அவரை தூக்கி கொண்டு மருத்துவம் பார்க்கும் டென்டில் சேர்த்து விட்டு விஜய் திரும்பிய சமயம் ,அவர்கள் வந்த பெட்டி பலத்த சப்தத்துடன் வெடித்தது .இந்த தடவை இந்த பெட்டியில் வைக்க பட்டு இருந்த டைம் பாம் வெடிக்க அதனருகில் இருந்தவர்கள் தூக்கி வீச பட்டார்கள் .அப்படி தூக்கி வீச பட்டவர்களில் விஜய்யும் ஒருவன் .

என்ன நடந்தது என்று புரிந்து ,எழ முடியாமல் அவன் எழுந்து ,தள்ளாடி பல முறை விழுந்து ,அவன் ட்ரெயின் அருகே செல்வதற்குள் ட்ரெயின் முற்றிலும் எரிந்து கொண்டு இருந்தது .

"மது ..............மது.........."என்ற அவன் தீனமான அலறல் பெருங்குரலாக மாறி,தீ பற்றி எரியும் ட்ரைனிற்குள் அவன் பாய முயல அவனை இழுத்து பிடித்து தடுத்து நிறுத்தினார்கள் ஆல்வினும் ,பாலாஜியும் .

vlcsnap-2019-02-04-14h03m52s817.png
 
Last edited:

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"விடுங்க ....விடுங்கடா ............என் ...மது ..................மது .............அவளை காப்பாத்தணும் ..........சின்ன தூசு பட்டா கூட தாங்கா மாட்டடா என் மது ....நெருப்பு எரியுதுடா ....விடுங்கடா ....அவளை காப்பாத்தணும் ....ஐயோ விடுங்கடா ......மது ...............மது .........."என்று திமிறியவனை அடக்க அவர்களால் முடியவில்லை .
c2e6085935fc2795473ab36eb1dcd417.jpg

அவர்களை கீழே தள்ளி விட்டு தீ பற்றி எரியும் பெட்டியை நோக்கி ஓடியவனின் காலை பிடித்து இழுத்தது ஒரு பெண் கரம் .

"வி .........விஜி .............விஜய் ..........."என்று ஈன சுரத்தில் வெளிவந்த பெண்ணின் குரல் கேட்டு குனித்தவனின் இதயம் துடிப்பதை நிறுத்தி விட ,பொத்தென்று அவள் அருகே விழுந்தான் அந்த பெண்ணின் நிலை கண்டு .

"விஜி .............விஜி ...............விஜய் ...................."திக்கி திணறி வந்தது அவள் குரல் .
vlcsnap-2019-02-02-01h56m03s026.png

காண்பதை நம்ப முடியாதவனாய் நெஞ்சை பிடித்து கொண்டு இருந்தவன் அவள் கைகளில் இருந்த செயின் கண்டு அலறியே விட்டான் .அது அவன் மதுராவிற்காக வாங்கிய செயின் .

"மது .............மது ............பாருடா .........விஜய் டா .............கண்ணை திறமா ...........உனக்கு ஒன்றும் இல்லை மது ......"என்றவன் முற்றிலும் எறிந்த நிலையில் இருந்த அந்த பெண்ணை தூக்கி கொண்டு ஆம்புலன்ஸ் ஏறினான் .

அழகான அவன்தேவதையை அந்த கோலத்தில் கண்டே விஜய் உயிர் பாதி போய் விட்டது என்று தான் சொல்ல வேண்டுமோ ......
maxresdefault (14).jpg

அது பெரிய ஹாஸ்பிடல் தான் என்றாலும் ஒரே சமயத்தில் 5000 பேர் அடிபட்டு வந்து சேர்ந்தால் அதை சமாளிப்பதற்குள் டாக்டர்ஸ் திணறி விட்டனர் .சிகிச்சை செய்ய செய்ய மேலும் மேலும் மக்கள் ,உறவினர் கூட்டம் வந்து கொண்டே இருந்தது .

மறுநாள் மதியம் வரை போராடிய மதுராவின் உயிர் பிரிந்தது .அதை கேட்டு அழுது புரண்டவனை டாக்டர்ஸ் செடேடிவ் ஹெவி டோஸ் போட்டு தான் சமாளிக்க முடிந்தது .அவன் கதறிய கதறலை கண்டு அங்கு இருந்தவர்களும் சேர்ந்து தான் துடித்து போனார்கள் .அவனை ஹாஸ்பிடல் வராண்டாவிலேயே படுக்க வைத்து இருக்க ,விஷயம் கேள்வி பட்டு அழுது கொண்டு வந்த மதுராவின் பெற்றோர் துணியால் சுத்த பட்டு இருந்த மகளின் பிணத்தை தான் வாங்கி சென்றனர் .

பின்னே சென்ற இவர்கள் மதுராவின் ஈமச்சடங்கு முடியும் வரை உடன் இருந்தனர் .மதுராவின் குடும்பத்தினர் யாரிடமும் பேசும் நிலையில் இல்லை ....மயங்கி மயங்கி விழுந்த பவானியை ,கதறி துடித்த சங்கரனை கண் கொண்டு பார்க்கவே முடியவில்லை ஏற்கனவே எரிந்து போன உடல் என்பதால் அதிக நேரம் வீட்டினில் வைக்க அவர்களாலும் முடியவில்லை . இவர்கள் தங்களை பற்றி யாரிடமும் சொல்லாமல் கொள்ளாமல் திரும்பி விட்டனர் .

மதுராவின் சிதைக்கு தீ வைத்ததை கண்ட விஜய் மயங்கி விழுந்தான் .எவ்வளவூ தண்ணீர் தெளித்தும் அவன் மயக்கம் நீங்கவில்லை என்றதும் ஆல்வினும் ,பாலாஜியும் பயந்து போய் நண்பனை ஹாஸ்பிடலில் சேர்த்தனர் .விஜய்க்கு மயக்கம் நீங்கவே மூன்று நாட்கள் ஆனது .மயக்கம் தெளிந்தவன் பிரமை போலே விட்டதை கண் கூட சிமிட்டாமல் வெறித்து கொண்டு இருந்தான் .மற்றவர் பேசும் மொழியே புரியாதவன் போலெ தண்ணீர் குடிக்க ,உணவூ சாப்பிட கூட மற்றவர்கள் கட்டாயப்படுத்த வேண்டி இருந்தது .

"மது ............மது ...........என்னை விட்டு போகாதே மது ........என்னையும் கூட்டி போ ...........நானும் வரேன் மது ...உன்னை பிரிந்து என்னால் இருக்க முடியவில்லை மது .............என் செல்லம்லே .........உனக்கு தான் என் பாட்டு பிடிக்குமே ..............பாடட்டா .........."என்று இல்லதவளை நினைத்து கற்பனை செய்து பேசி ,சிரித்து ,உளறி ,பாட ஆரம்பித்தான் .

தூக்கம் என்பதே இல்லாமல் அவள் புகைப்படத்தை கையில் வைத்து கொண்டு பேசி கொண்டு பைத்தியம் போல் நடந்து கொண்டு ,கொஞ்சம் கொஞ்சமாய் இறந்தவனின் நிலை அந்த நண்பர்களை வாய் மூடி கதற வைத்தது .நடு இரவில் "மது "என்று அலறியவாறே எழுபவன் பைத்தியம் போலெ பலமுறை ஹாஸ்பிடல் வராண்டாவில் ஓடி இருக்கிறான் .

அவன் நிலை புரிந்து கொண்ட ஒரே நபர் அங்கு டாக்டர்ராய் இருந்த மிருதுளா மட்டுமே ...மனோதத்துவம் படித்த அவள் ,விஜய்யால் மதுரா இறந்த அதிர்ச்சி தாங்க முடியாமல் ,இல்லாத ஒருத்தியை இருப்பதாக உருவகம் செய்து அவளோடு வாழ்ந்து கொண்டு இருப்பதை புரிந்து கொண்டு மெல்ல மெல்ல அவனை மீட்டாள் .ஒரு வருடம் ....நீண்ட நெடிய ஒரு வருடம் ...விஜய் தேற தேவை பட்டது ....அவனை ஓர் அளவிற்கு மீட்ட நண்பர்கள் அவனிடம் உயிர்ப்பை கொண்டு வரமுடியவில்லை .கண்ணாடி பாத்திரத்தை கையாள்வது போன்றே அவனை பாதுகாத்து கொண்டு இருந்தனர் .

இதற்கிடையில் ஆல்வின் உடன் சேர்ந்து தொழிலிலும் கவனம் செலுத்த ஆரம்பித்தான் விஜய் .சிரிப்பு ,பேச்சு ,உயிர்ப்பு எல்லாம் மிஸ்ஸிங் தான் என்றாலும் இப்படியே இருந்து விட்டாலே போதும் என்ற நிலையில்தான் நண்பர்கள் இருந்தார்கள் .

இதற்கிடையில் ஹாஸ்பிடலில் ஆல்வினுக்கும் மிருதுளாவிற்கும் காதல் ஏற்பட்டு அது திருமணத்தில் முடிந்தது .
ஆல்வின் விஜய் செய்த ஆடை வடிவமைப்பு நிறுவனமும் நன்றாக முன்னேறி கொண்டு இருந்தது .அது போல் நடந்த ஒரு தொழில் துறை பார்ட்டியின் போது தான் விஜய் தலைவிதி மாறி போனது .
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வந்ததில் இருந்தே இவன் ஆண்மையில் ,இவன் அழகில் மயங்கி நின்ற சோனா வழக்கம் போல் தன் சாகஸத்தை காட்ட .மேல் மேல் விழுந்து பழகி ,மூன்றாம் பிறை சில்க் மாதிரி "பொன் மேனி உருகுதே "என்ற ரேஞ்சுக்கு ரத்தம் உறிஞ்சும் அட்டையாய் ஒட்ட ,ஏற்கனவே காதலியையை தவிர மனதால் கூட இன்னொரு பெண்ணை நினைக்காமல் ஏறக்குறைய 10 வருடமாய் வாழ்ந்து வரும் அவன் ருத்ரதாண்டவம் ஆடி விட்டான் .

அங்கு அவனுக்கு நாக்கில் சனி சேர் போட்டு அமர்ந்து கொண்டது ."உன்னை எல்லாம் ரோஷம் ,மானம் எந்த ஆம்பளையும் கட்ட மாட்டான் ."என்ற வார்த்தையை இவன் விட அதுவே அவனுக்கு வினையாகி அவனையே கட்டி தீருவது என்று சோனா சபதம் எடுத்து துப்பறிவாளர்களை கொண்டு இவன் ஹிஸ்டரி ,ஜாக்ராபிஹு எல்லாம் அலசி ஆராய்ந்து ,ரூபிணி கர்ப்பத்தை தனக்கு சாதகமாக்கி கொண்டாள் .

பணத்தால் திவகரின் குடும்பத்தை அடித்து ,ரூபிணி வாழ்வில் குளறுப்பிடி செய்து விஜய் கரம் பிடித்தாள் .திருமணம் முடிந்த ஒரே மணி நேரத்தில் அவள் நடத்திய கூத்து தான் எல்லோருக்கும் தெரியுமே .விஜய் அதை பத்தி எல்லாம் கவலை படவேயில்லை என்று தான் சொல்ல வேண்டும் .வழக்கம் போல் கனவூ உலகில் அவன் மதுராவோடு டூயட் பாடி கொண்டு இருந்தான் .

சோனாவுடன் தேனிலவூ செல்ல கஜா விஜய்க்கு tour ஏற்பாடு செய்து இருந்தார் .அதற்கு நண்பர்களுடன் கிளம்பி விட்டான் விஜய் .வெளியே தெரிந்தால் மானம் போகும் என்று கஜாவும் ஒரு சாட்சிக்காக -அதாவது விஜய்யும் ,சோனாவும் ஹனிமூன் போனார்கள் என்ற பிம்பத்தை உருவாக்கி விட்டார் .`

காஷ்மீர் ----பூலோக சுவர்க்கம் என்று அழைக்க படும் இடம் ....உண்மையில் அவனுக்கு சொர்க்கமாக தான் மாறி போனது அவன் தேவதையை கண்ட பின் .

ஆல்வின் ,மிருதுளா ,பாலாஜி ,சுபா ஹோட்டல் தோட்டத்தில் அமர்ந்து பேசி கொண்டு இருக்க ,விஜய் அவர்களுக்கு தனிமை கொடுத்து ,பாடல் கேட்ட படியே ,அதை பாடி கொண்டு மதுராவோடு வாக்கிங் செல்வதாக நினைத்து சென்று கொண்டு இருந்தான்

பாடல் பாடி முடித்து திரும்பினால் அந்த பாடலில் வருவது போல் பின்னால் நண்டு சிண்டு படையுடன் அவனை வெறுப்பேத்தி விட்டு ஓடி கண் சிமிட்டும் நேரத்தில் மறைந்து போனது மதுராவே தான் .ஒரு வேளை அவளையே நினைத்து கொண்டு இருப்பதால் இப்படி தோன்றுகிறது என்று நினைத்து தன்னை தானே சமாதானம் செய்து கொண்டான் அவன் .அவன் இருந்த மனநிலைக்கு எதிரே ஓடி போனவள் கனவின் பிம்பமாக தான் தோன்றினாள் .அவன் தான் எரிந்து போன அவள் உடலை ,உயிர் அற்ற அவன் உடலை கண்டவன் ஆச்சே .....பின் எதிரே ஓடி மறைந்தவள் கனவாக தானே இருப்பாள் .....இருக்க முடியும்


நடந்ததை இவன் நண்பர்களிடம் சொல்லி சிரிக்க இவன் மனநிலையை கண்டு அவர்கள் பதற ஆரம்பித்தனர் .வந்த இடத்தில் மூளை கலங்கி பைத்தியம் பிடித்து விட்டது என்றே முடிவுக்கு வந்தனர் .

ஆனால் அவன் பைத்தியமாக இன்னும் காலம் இருக்கு என்பதை ,மறுநாளே நடந்த சம்பவம் நிரூபித்தது .ஸ்விம்மிங் பூலில் நீச்சல் அடித்து கொண்டு இருந்தவன் ஸ்விம் செய்து முடித்து மேல் வர மீண்டும் நீச்சல் குளத்திற்குள்ளேயே விழுந்தான் அதுவும் ஓடி வந்து மோதிய பெண்ணோடு .

நீரில் அமிழ்ந்து எழுந்தவன் கோபத்தோடு திரும்ப ,அவன் மட்டும் இல்லை பூல் அருகே இருந்த அவன் நண்பர்களும் தண்ணீருக்குள் இருந்து விஜய் கை வளைவில் எழுந்த அவளை கண்டு ஸ்தம்பித்து போயினார்கள் .

இவர்கள் ஆணி அடித்தார் மாதிரி நிற்க ,பூல் கரையில் இருந்து நண்டு சிண்டுகளின் கோசம் இவர்களை நினைவுக்கு வர வழைத்து .குழந்தைகளின் மத்தியில் கார்த்திக் நின்று இவளை கேலி செய்து கொண்டு இருந்தான் .

"அப்பா ...அழுக்கு மூட்டை குளிச்சாச்சு ..........கோடிஜிலா இப்படி குளிச்சா தான் உண்டு .....அழுக்கு மூட்டை .....பூசணி மூட்டை ......ஹே ஹே ..."என்று குதித்தவனை இழுத்து ஸ்விம்மிங் பூலில் தள்ளி விட்ட மதுரா வேக வேகமாக சென்று விட்டாள் .

நண்பன் பேய் அறைந்தது போல் நிற்க முதலில் சுதாரித்த ஆல்வின் மேல் ஏறி கொண்டு இருந்த கார்த்திகை நிறுத்தினான் .

"ஹலோ ப்ரோ .....இப்போ போனது மதுராக்ஷி சங்கரன் தானே .."?"என்றான் .

"யெஸ் பாஸ் அதே பிசாசு தான் ...."என்றான் கார்த்திக் .

"அவங்க ட்ரெயின் விபத்தில் இறந்து ...நாங்க கூட வந்து இருந்தோம் .....இப்போ எப்படி ."என்றான் ஆல்வின் .

"நாங்களும் அப்படி தான் நினைத்தோம் பாஸ் .ஹாஸ்பிடலில் கூட இறந்துட்டான்னு உடலை வாங்கி வந்து எல்லா சடங்கும் செய்தோம் .....ஆனால் பாருங்க ஒரு வாரம் கழித்து "அம்மா "என்று வந்து நின்றவளை பார்த்து பேய் என்று நினைத்து எங்க ஆண்ட்டி பவானி மயக்கமே போட்டு விழுந்துட்டாங்க .....செத்தா கூட பேயாக வந்தாவது உங்களை எல்லாம் torture செய்வேன் என்று ஏற்கனவே சூல் உரைத்தவ அவ பாஸ் ......அல்லு உட்டுடுச்சு ......ராகவா லாரன்ஸை பேய் ஓட்ட கூப்பிடலாமா என்று கூட யோசித்தோம் ...கடைசியில் பார்த்தா ஆவி எல்லாம் இல்லை இந்த பாவி தான் உயிரோடு வந்து இருக்குன்னு தெரிஞ்சுது ....."என்றான் கார்த்திக் .

"எப்படீங்க இவங்க உயிரோடு இருக்கும் போது இறந்து விட்டதாக ஹாஸ்பிடல் சொன்னாங்க ....போய் கேட்கலையா ...?"என்றான் ஆல்வின் .

"கேட்கலையா ....சண்டையே போட்டோம் .....ஆனா அது அவங்க தப்பு இல்லைங்க ...இவ கூட இருந்த ஏதோ ஒரு லூசு ,அரை கிறுக்கு .....யாரோ ஒருத்தங்களை இவ தான் என்று நினைத்து ஹாஸ்பிடலில் "மதுராக்ஷி "என்ற பெயரில் சேர்த்து இருக்கு .....அவங்களும் நாங்க போய் கேட்டதும் இறந்து போன பெண் தான் மதுரா என்று நினைத்து உடலை எங்க கிட்டே கொடுத்து இருக்காங்க ....எரிந்து போன உடல் என்பதால் நாங்களும் துணியை எல்லாம் அகற்றாமலே எல்லா சடங்கும் செய்து முடித்தோம் .....ஒரு வாரம் கோமாவில் இருந்தவ ,"நான் யார் ...எங்கே இருக்கேன் "என்ற டைலொகு விட்டு ,ஹாஸ்பிடலை ஒருவழியாக்கி பின்னர் குன்னூருக்கு வந்து சேர்த்தா ....ஆன்ட்டி வேறு சென்டிமெண்டா பீல் செய்தாங்க அதனால் வீடு வேற வாங்கி குடி போய்ட்டாங்க ........ஏற்கனவே அரை கிறுக்கு அது ....அடிபட்டதில் முழு கிறுக்கு ஆகி சுத்திட்டு இருக்கு .....அதான் கொஞ்சம் இங்கே எல்லாம் கூடி வந்தால் பைத்தியம் தெளியும் என்று எவ்வளவூ ட்ரை செய்யறேன் ....எங்கே ..........அடங்க மாட்டேன் என்கிறாளே ..... "என்றான் கார்த்திக் .

"நீங்க அவங்களுக்கு என்ன வேண்டும் ?"என்றான் ஆல்வின் .

"நான் கட்டிக்க போற பொண்ணு சார் மதுரா .....எனக்கும் அவளுக்கும் தான் திருமணம் ஏற்பாடு ஆகி இருக்கு ...."என்றவன் தூரத்தில் இருந்து சங்கரன் கூப்பிட ,"ஒகே பாஸ் ...மாமா கூப்பிடறார் ....பார்க்கலாம் ..."என்றவன் சென்று விட்டான் .மயங்கி சரிந்தான் விஜய் .

PENANCE WILL CONTINUE...
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் நட்பூஸ்

எல்லோரும் எப்படி இருக்கீங்க .............என் இம்சை இல்லாமல் நல்லா தான் இருப்பீங்க .....

சாரி சாரி ரொம்பவே சாரி .இந்த தடவை உடல் நிலை சற்று மோசமாகி விட்டது .பீவர் ,கோல்டு ,சைனஸ் ப்ரோப்லேம்,தலைவலி , என்று எல்லாம் ஒரே சமயத்தில் வந்து விசிட் அடித்து கொண்டு இருக்கிறது .

நேத்து மீண்டும் ஹாஸ்பிடல் போக வேண்டியதாகி விட்டது .டாக்டர் மருந்துகளை மாற்றி இருக்கிறார் .புதன் x ரே எடுக்க வேண்டும் .....எந்த நட் போல்ட் கழன்று இருக்கிறது என்று தெரிய வேண்டுமாம் .

எதற்கு இந்த பதிவூ என்றால் வரும் வாரமும் எனக்கு லீவு வேண்டும் மை லார்ட்ஸ் .....உடல் தேறிய உடன் உங்களை படுத்தி எடுக்க ஓடி வந்துடறேன் .அதற்குள் தேறினால் ஒகே ....

இப்படி உடல் கெடும் அளவுக்கு அப்படி என்ன செய்து வைத்தேன் என்று யோசிக்கறீங்களா .........வீடு கிளீன் செய்தேன் ....டஸ்ட் அல்ர்ஜி ஆகி விட்டது ...போததற்கு வீட்டை சுற்றி புது வீடுகள் கட்டி கொண்டு இருக்கிறார்கள் .மகளை பள்ளியில் இருந்து கூட்டி வரும் போது சிமெண்ட் ,ஆஸ்பெஸ்டாஸ் ,தூசு ,புகை நடுவே பல முறை போனதன் ரிசல்ட் 2 வீக் படுத்தி எடுக்கிறது .

அதனால் மை லார்ட்ஸ் ...உடல் நலம் தேறும் வரை லீவு எடுத்து கொள்கிறேன் .....இந்த வாரம் சத்தியமாய் முடியாது ....அடுத்த வாரம் என்ன நிலைமையில் இருக்கிறேன் என்று அடுத்த வாரம் தான் தெரியும் .....

எனக்கு உடல் நலம் தேற இதற்காக எல்லாம் நீங்க எல்லாம் அலகு குத்தி ,தீ மிதித்து ,மொட்டை அடித்து ,மண் சோறு சாப்பிட எல்லாம் வேண்டாம்.(இன்னும் அடங்கலையா நீயி )

உங்களின் கெட் வெல்லுக்கு நன்றி .

ஒகே பா உத்தரவூ வாங்கிக்கறேன் ..........
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் நட்பூஸ்

எல்லோரும் எப்படி இருக்கீங்க ....

நான் ஓரளவூ நலம் .டாக்டர் இடம் போனால் அனுமார் வால் கணக்கா டெஸ்ட் எழுதி இம்சை படுத்தி எடுத்துட்டார் .கடப்பாரை போல் ஒரு கருவியை மூக்கில் ,நாக்கில் எல்லாம் சொருகி horror படம் காட்டி விட்டார் டாக்டர்காரு :eek::eek::eek:. க்ஸ்-ரே ,ct ஸ்கேன் சாராம்சம் மூக்கின் தசைகள் நகர்ந்து போய் இருக்கிறதாம் .(யாரை கேட்டு நகர்ந்து போச்சுன்னு தெரியலை ....:unsure::unsure::unsure:.)தவிர உள்ளே infection ஏற்பட்டு உள்ளதால் சைனஸ் பிரச்சனை .தூங்கும் போதும் தூங்கி எழுந்த மறுகணம் முதல் தீரா தலைவலி வருகிறதாம் .தூசு ,தும்பு படாமல் பார்த்து கொள்ள வேண்டுமாம் (சுவிஸ்க்கு ஒரு டிக்கெட் )நடக்கற காரியமா சொல்ல மாட்டேங்கிறாங்க .இது பரவாயில்லை பில் என்று நீட்டினார்கள் ....மயக்க மருந்து கொடுக்காமலே என்ற ஆத்துக்காரர் மயங்கிட்டார் .:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:

இப்போதைக்கு வீட்டுக்கு போம்மா என்று வெளியே தூக்கி போட்டுட்டாங்க .ஆளை விடுங்க என்று நானும் ஓடி வந்துட்டேன் .15 நாள் பெட் ரெஸ்ட் அண்ட் மெடிகேஷன் சொல்லி இருக்கார் .(அவருக்கு வேறு வேலை என்ன இருக்கிறது .அதன் பிறகு மீண்டும் ஸ்கேன் .தேவை என்றால் ஆபரேஷன் ):p:p:p


திரும்ப போனால் தானே ..........:devilish::devilish::devilish:

இந்த வாரம் முடியலை நட்பூஸ் ...இப்போ தான் ரிலீஸ் பண்ணாக ......மாத்திரை மருந்தின் உபயத்தில் தூங்கிட்டே இருக்கேன் .....

அடுத்த வாரம் ud கொடுக்க முயற்சி பண்றேன் ....வாக்குறுதி எல்லாம் கேட்க கூடாது ....;);)

enjoy your life with peace without me for now

i will be back:devilish::devilish::devilish:
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
THAVAM 36(1)

"நான் கட்டிக்க போற பொண்ணு சார் மதுரா .....எனக்கும் அவளுக்கும் தான் திருமணம் ஏற்பாடு ஆகி இருக்கு ...."என்றவன் தூரத்தில் இருந்து சங்கரன் கூப்பிட ,"ஒகே பாஸ் ...மாமா கூப்பிடறார் ....பார்க்கலாம் ..."என்றவன் சென்று விட்டான் .மயங்கி சரிந்தான் விஜய்

எதற்காக கார்த்திக் அவ்வாறு உளறி வைத்தான் என்பது கடவுளுக்கு தான் வெளிச்சம் .ஒரு வேளை மகள் திரும்ப கிடைத்த உடன் அவளுக்கு கார்திக்க்கோடு திருமணம் ஏற்பாடு செய்ய ஆரம்பித்து இருந்ததால் இருக்கலாம் .

ஆனால் இதற்க்காக எல்லாம் விஜய் மயங்கி விழவில்லை ...ஏறக்குறைய ஒரு வருடம் உயிரோடு இல்லாதவளை நினைத்து அவன் அணுஅணுவாய் துடித்து இறந்து கொண்டு இருக்க ,அவள் உயிரோடு தான் இருக்கிறாள் என்ற உண்மையை அவன் மனதால் ,மூளையால் ஏற்க முடியாத அதிர்ச்சி என்று தான் சொல்ல வேண்டுமோ .

மதுரா என்று நினைத்து ஏதோ ஒரு பெண்ணை இடுகாட்டில் அவர்கள் எரித்த பிறகு இவர்கள் யாரும் குன்னூர் பக்கமே போகவில்லை .அவளே இல்லாமல் போன பிறகு, அங்கு சென்று மேலும் மனம் வருந்த துணியவில்லை .போய் இருந்தால் மதுரா உயிரோடு இருக்கும் உண்மை தெரிந்து இவன் இப்படி துடிக்க வேண்டிய நிலைமையே ஏற்பட்டு இருக்காது தான் .ஆனால் விதி என்று ஒன்று இருக்கிறதே ....

மயக்கம் தெளிந்து எழுந்தவன் ஆயிரமாவது முறையாக மதுரா அதே ஹோட்டலில் உயிரோடு தான் இருக்கிறாள் என்பதை கேட்டு தெளிந்து கொண்டான் .ஒருவேளை கனவாக போய் விட்டால் .....ஒருமுறை அவளை இழந்து துடித்த மனதிற்கு பலமுறை சாட்சி எதிர்பார்த்ததோ என்னவோ .நண்பர்கள் அவனை இழுக்காத குறையாய் மதுரா முன் கொண்டு சென்று நிறுத்தினார்கள் .

கடவுளை கண்ட பக்தனாய் நெக்குருகி நின்றான் அந்த காதலன் .எவ்வளவூ நேரம் அதே இடத்தில் நின்று கண்களால் அவளை படம் எடுத்து மனதில் அவளை பதிய வைத்து கொண்டு நின்றானோ அவனுக்கே தெரியாது .உலகத்தின் அனைத்து சந்தோசத்தையும் உரிமையாக்கி கொண்டவன் போலே அவள் அருகே ஓட ஆரம்பித்தவன் ,சட்டென்று நின்றான் அவன் அருகே வந்தவளை கண்டு .

"ஹாய் டார்லிங் .............மிஸ் மீ ?'என்றவாறு வந்து நின்றது சாட்சாத் சோனா பிசாசே தான் .

தேவதையை நோக்கி செல்ல போனவன் ,நடுவே பிசாசை கண்டு அதிர்ந்து ,ஸ்தம்பித்து நின்றான் .இவன் தான் ஊர் உலகத்திற்கு சோனாவின் கணவன் ஆகி இருந்தானே ....இதை எப்படி மறந்தான் ?சோனாவின் கணவன் என்ற முத்திரையுடன் மதுராவிடம் எப்படி போக முடியும்???? .....விடை தெரியா கேள்வி பூதாகாரமாய் அவனை விழுங்க தொடங்கியது .மீண்டும் விதி அவனை தன் காதலை சொல்ல விடாமல் தன் வேலையை காட்டி அவன் நிலையை கண்டு சிரித்து கொண்டு இருந்தது .

சோனாவை அங்கு கண்ட உடனே vijaiஅங்கிருந்து அகன்று விட்டான் .....அதற்குள் ஆல்வின் மூலம் சோனா கொன்று இருந்த பெண் பற்றிய செய்தி வந்து சேர, விஜய்யும் அவன் நண்பர்களும் அதிர்ந்து போனார்கள் .இன்னொரு பெண்ணை காணவில்லை என்ற தகவல் வேறு ..அந்த இரண்டு பெண்களும் இவனுடன் பயின்றவர்கள் .இவன் மேல் அந்த ரெண்டு பெண்களுக்கும் கிரேஸ் உண்டு என்பதை விஜய் அறிவான் ....கிரேஸ் இருந்ததற்கே இந்த கதி என்றால் ....அவன் காதலித்த பெண் விவரம் மட்டும் சோனா அறிய நேரிட்டால் ....மதுராவின் கதி ????கடவுள் புண்ணியத்தில் மீண்டு வந்தவளை கொள்ளிவாய் பிசாசிற்கு பலி கொடுப்பதா ???

அப்பொழுது முடிவூ செய்தான் அந்த காதலன் ....காதலிக்காக அவன் காதலையே மறைப்பது என்று ....சொன்னால் மட்டும் என்ன ஆகி விட போகிறது?????.முதல் மனைவி என்ற உரிமையுடன் ,திமிருடன் தான் சோனா இருக்கிறாளே ....

நான்கு வருடம் நொடியில் கடந்து போனது .மதுராவே அறியாமல் அவளுக்கு தேவையான பாதுகாப்பினை மறைவில் இருந்து செய்ய விஜய் தயங்கவே இல்லை .அவளை பற்றிய தகவல்கள் அவனுக்கு வாரம் ஒருமுறை வந்து கொண்டே தான் இருந்தது .

பக்தனுக்கு கடவுள் அருகில் இருக்க வேண்டும் என்பது இல்லையே ....எங்கே இருந்தாலும் அவனின் தேவதை அவள் ...அவளை பூஜிக்க அவள் அருகில் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை தானே ....ஆனால் அதற்கும் ஆப்பு வைத்தாள் சோனா சங்கரன் மூலமாக .நான்கு வருடம் விலகி இரு(ற ) ந்தவனின் அருகே, மதுராவை கொண்டு வந்து சேர்த்த பெருமை சோனாவிற்கு உரியது .ஒரு வருடம் இருவரையும் படுத்தி எடுத்தாள் .

உள்ளே மலை அளவூ ,வானம் அளவூ காதலை வைத்து கொண்டு ,சிடுசிடு முகமூடி போட்டு நடித்து கொண்டு இருந்தான் விஜய் காதலியிடமும் பிசாசிடமும் .

இந்த நாடகத்திற்கு முடிவூ தான் என்ன ............முடிவினை அறிவிக்க வந்து நின்றது மதுராவை ,சூர்யாவை சுமந்த கார் .

(சுப்பா கடைசியா வந்துட்டியா மவராசி ...........சீக்கிரம் வந்து மேரேஜ் வேலையை தொடங்கு .........இல்லைனா மதுராவின் மாலை யாருக்கு ?விடை சொல்பவர்களுக்கு 1 கோடி என்று ஐ நா சபை அறிவிச்சாலும் ஆச்சரிய படுவதற்கு ஒன்றும் இல்லை .....இது உனக்கே ஓவர்ரா தெரியலை ?)

வேகமாக சூர்யாவின் குடும்பம் இறங்க ,உத்தம் நிச்சய பொருட்களை ஆட்களை கொண்டு உள்ளே வைத்தான் ...ஏறக்குறைய 200 சீர்வரிசை தட்டுகள் ......வைர ,தங்க நகைகள்,பணக்கட்டுகள் ,ஆடை போன்றவை மட்டும் 20 தட்டுகளுக்கு குறைவில்லாமல் .அதை வைக்க அந்த வீட்டில் இடம் போதாமல் போக ரெண்டாம் தளம் திறந்து விடப்பட்டது .முள் மேல் நிற்பது போன்ற உணர்வோடு தான் அங்கு இருந்தவர்கள் இருந்தார்கள் .

"வாங்க சமாந்தியம்மா ...வாங்க ...........வாங்க ..."என்று பவானியும் சங்கரனும் வரவேற்க சூர்யாவின் அம்மா ,தங்கை சந்திரா ,உத்தம் மட்டும் உள்ளே சென்றனர் .
 
Status
Not open for further replies.
Top