All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அனிதா ராஜ்குமாரின் "என்ன தவம் செய்தேன்" - கதை திரி

Status
Not open for further replies.

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"அட சே ..............போய் பனோயில் ஊத்தி கழுவு உன் கூவ வாயை .....................இந்தா இத பிடி ...............நான் கூட இம்மாம் ஆடிட்டு இருக்கியே ................பண திமிறுன்னு தான் நெனச்சேன் .....................ஆனா நீ எல்லாம் மனுஷ ஜென்மமே கிடையாது ....................அந்த இரு புண்ணியவதிகளை பத்தி பேசினா உன் பொணம் கூட வேகாது ...........பெரியம்மா தீர்க்கதரிசி ......................நீ இப்படி எல்லாம் யோசிப்பேன்னு தான் இந்த வீடியோ எடுக்க சொல்லி என்னிடம் சொன்னாங்க .....................நான் கூட நம்ம பாப்பா மா ..................அதை போய் இப்படி எல்லாம் சொல்லாதீங்க என்று சொன்னேன் .......................நீ இருக்கும் இடத்தில நின்றால் கூட எங்களுக்கு நல்ல சாவூ வரவே வராது ..................."என்ற வேலைக்கார பெண்மணி அம்புஜம் ஒரு செல் போன் ஒன்றினை அங்கு இருந்த டீ பாய் மேல் விட்டெறிந்து விட்டு மற்ற வேலை ஆட்களுடன் வெளி ஏறினார் .

அந்த போனில் இருந்த வீடியோ ஆன் செய்தாள் சோனா .அங்கு சொர்ணா இவர்களை வெறும் கையோடு வீட்டை விட்டு வெளியேற்றும் காட்சி பதிவூ ஆகி இருந்தது .இன்னொரு வீடியோவில் மரகதம் பேசி இருந்தார் .

"முதல் வீடியோ பார்த்து இருப்பே சோனா ..............நாங்க மூவரும் போட்டு இருக்கும் உடையோடு தான் வெறும் கையாக தான் வெளியேறி இருக்கிறோம் .......பத்து பைசா கூட எடுத்துட்டு போகலை ....நாங்க அணிந்து இருக்கும் உடை கூட என் பேரன் கருணா அவன் சம்பளத்தில் வாங்கி கொடுத்த உடைகள் தான் ......உன் தாத்தா கட்டிய தங்க திருமாங்கல்யம் பூஜை அறையில் இருக்கு .....வெறும் மஞ்ச கயிறு மட்டும் தான் என் கழுத்தில் இருக்கு .............கனகா கழுத்தில் இருப்பது சேது வீட்டினர் போட்ட திருமாங்கல்யம் ...........நாங்க நகை மொத்தத்தையும் திருடிட்டு போய் விட்டதாக நீயும் சொர்ணாவும் போலீஸ் கம்பளைண்ட் கொடுக்க கூட தயங்க மாட்டீங்க என்று தெரியும் ...அதற்கு தான் இந்த ஆதாரம் ....இதன் இன்னொரு காப்பி என்னிடம் இருக்கு ...........இதை அழித்து விட்டு எங்களை மாட்டி விடலாம் என்று கனவூ காணாதே ..........எங்க வீட்டில் போட்ட ........நன்றாக கவனி என் அப்பா ,அம்மா எனக்காக என்று கொடுத்த என் பரம்பரை நகை எல்லாம் உன் தாத்தா எப்போவோ தொழில் செய்யறேன் ,பங்களா கட்டறேன் என்று வாங்கி கொண்டார் ...........நகை பற்றி கேட்பதாய் இருந்தால் அவரை கேளு ...........அதை அவர் என்ன செய்தார் ,யாருக்கு தூக்கி கொடுத்தார் என்பது எல்லாம் எனக்கு தெரியவே தெரியாது ...........எங்கள் மூவர் பேரில் இருந்த தொழில் பங்குகளை கூட உன் தாத்தா வக்கீல் முன் எப்பவோ மாற்றி எழுதி வாங்கி கொண்டார் .........சந்தேகம் இருந்தால் வக்கீல் இடம் கேட்டுக்கோ .......வேலையாட்களுக்கு கருணா கொடுத்த காசில் ஏற்கனவே முன்பணம் கொடுத்து விட்டோம் ............கருணா உன் தாத்தா நடத்திய காமெடி ஷோவிற்கு பிறகு இந்த வீட்டினுள் நுழையவே இல்லை .அதற்கு நாங்க எல்லோரும் சாட்சி ..............மீதம் உள்ள நகை ,பணம் ஒளித்து வைத்து விட்டு அவன் மேல் பழி போட நினைக்காதே ......"என்றதுடன் அந்த வீடியோ முடிந்தது .

"டாமிட் டாமிட் ....................இதுங்களை ஒண்ணுமே செய்ய முடியலையே ...............கருணா கருணா என்று உயிர் விடுதுங்க ................அந்த தெரு நாயை கதற வைக்கணும் .......................கதற வைக்கணும் .....................அந்த பிச்சைக்காரன் என்னை ஜெயிக்கவே கூடாது ..................விட மாட்டேன் .....................அவன் கதறணும் ............."என்று வெறி கொண்டவள் போலே கத்திய சோனா போனை தூக்கி போட்டு உடைத்து போதாது என்று அங்கு இருந்த விலை மதிப்பான பெல்ஜியம் டீ பாய்யினை உடைத்து தள்ளினாள் .

""சோனா !...............ரிலாக்ஸ் .............டென்ஷன் ஆனா உனக்கு தான் உடம்புக்கு ஒத்துக்காது ............நிதானமா யோசி .........என்ன செய்தால் அவங்க கதறுவாங்க என்று யோசி ..........அதை விட்டு இங்கு எல்லா பொருளையும் உடைத்தால் நஷ்டம் நமக்கு தான் ................அப்பா !................நீங்க எப்போ இவங்க கிட்டே இருந்து மொத்த ஷேர் எழுதி வாங்கிடீங்க .............?"என்றார் சொர்ணா .

"3 மாதம் முன்பு ...................."என்றார் கஜா ஏதோ யோசனையோடு .

"சார் !...................அது மாதிரி எந்த டாக்குமெண்ட்ஸ் என் கண் பார்வைக்கு வரவே இல்லையே ......................நான் அப்படி எந்த டாக்குமெண்ட்ஸ்சிலும் பெரிய மேடம் கிட்டே உங்க மகன் ,மருமகன் sign வாங்கவே இல்லையே ....."என்றார் வக்கீல் .

"நீ வாங்கலை .............காசிலிங்கம் வாங்கி வைத்தான் ................"என்றார் கஜா .

"சார் .!............அப்படி ஒரு டாக்குமெண்ட் காசிலிங்கம் இதுவரை என் கிட்டே கொடுக்கவே இல்லையே சார்.எங்கே சார் காசிலிங்கம் ....கூப்பிட்டு விசாரிங்க .... ....."என்றார் வக்கீல் .

"அவங்க அம்மாவுக்கு உடம்பு சரி இல்லை என்று லீவு கேட்டு ஊருக்கு போய் இருக்கான் ...............வந்துடுவான் ......"என்றார் கஜா


(ஓ ........காசிலிங்கம் ............சிவகாமி ஏற்கனவே ஒரு முறை ருத்ராவிடம் இந்தர் இண்டஸ்ட்ரீஸ் ஷேர் பற்றி பேசும் போது இந்த ஆளை பற்றி விசாரித்து இருகாங்கலே ......... ஆமா அந்த காசிலிங்கம் வந்துட்டு தான் மறுவேலை பார்ப்பான் .....அவன் தான் மரகதம் ,கனகா ,சேது ஷேர்களை சிவகாமி பாட்டி பேருக்கு மாத்தி எழுதி கொடுத்துட்டு ,அவங்க கொடுத்த காசோடு சிங்கப்பூரில் குடும்பத்தோடு செட்டில் ஆகிட்டானே .................உம்ம கம்பெனி ஷேர் உங்களுது கிடையாது ..............)


"போன் போட்டா எடுக்கவே மாட்டேன் என்கிறானே ......அவனே எதற்கும் லாயக்கு கிடையாது ....இவ்வளவூ பெரிய வேலை எல்லாம் அவனை நம்பி ஏன் சார் கொடுத்தீங்க ????இப்போ பாருங்க ..............கையெழுத்து வாங்கின டாக்குமெண்ட்ஸ் என் கிட்டே கொடுக்காம அவன் பாட்டுக்கு ஊருக்கு கிளம்பி போய்ட்டான் ."என்றார் வக்கீல் .

"பார்த்துக்கலாமய்யா .................எங்கே போய்ட போறான் .....ஆரம்பத்துல இருந்து என் கூடவே இருப்பவன் ..........என் ஊரை சேர்ந்தவன் ....................வேணும் என்றால் நம்ம ஆள் யாரையாவது அனுப்பி வாங்கி வர சொல்லு ....அங்கே அந்த அளவுக்கு டவர் எல்லாம் கிடைக்காது ..........."என்றார் கஜா அலட்டி கொள்ளாமல்

உண்மை மட்டும் தெரிந்தது கஜாவிற்கு நிச்சயம் ஹார்ட் அட்டாக் உறுதி .....எந்த தொழிலுக்காக விஜயை பழி போட்டு வெளியே அனுப்ப முயன்றாரோ ,எந்த தொழிலை வைத்து இழந்தவற்றை மீட்டு விடலாம் என்று கோடிக்கணக்கில் பேங்க் லோன் ,வீடு அடமானம் ,பினாமி கொடுத்து வைத்து இருக்கும் மொத்த பணம் என்று போட்டு இருக்கிறாரோ அந்த தொழிலே அவ்ருக்கு சொந்தம் இல்லை ............

சிவகாமி நினைத்து இருந்தால் ஒரே நாளில் தொழிலை டேக் ஓவர் செய்து இருக்க முடியும் ....ஆனால் அவரும் அந்த சீனா டீல் முடியவேண்டும் என்று ரொம்பவே அமைதி காக்கிறார் ....அப்படி என்ன தான் இருக்கிறது அந்த டீல்லில் ???????எதற்காக அந்த டீல் சிவகாமி விட்டு கொடுத்தார் ......எதற்காக அந்த டீல் தடங்கல் இல்லாமல் முடிந்தே ஆகணும் என்று ருத்ராவின் கையை கட்டி போட்டார் ?????...............பதில் காலத்திடம் .

கஜா ,சொர்ணா ஷேர் பற்றி பேசி கொண்டு இருக்க ,தன் செல்போன் எடுத்து அகிலாவிற்கு ----திவாகரின் தாய்க்கு டயல் செய்தாள் சோனா .விஜய்க்கு அடுத்த தளை ....உலகத்திற்கு முன் தான் குற்றம் அற்றவன் என்று நிரூபித்த விஜய்யால்,நீ ஆச்சு உன் வேலை ஆச்சு என்று தூக்கி போட்டு வெளியேறிய விஜய் இந்த நெருப்பு வளையத்தை தாண்ட தான் முடியுமா ?????அவனின் acheles ஹீல் ரூபிணி தானே ......அதை வைத்து அவனை திருமணமே செய்தவள் சோனா ............மீண்டும் அவனை தன் கண்ட்ரோலுக்கு கொண்டு வர அகிலாவை முடுக்கி விட்டாள் சோனா .

இவர்கள் பேசி கொண்டு இருக்கும் போது தடி தடியாக நால்வர் வந்து இறங்கினார்கள் .


"நாங்க சுமன் சார் அனுப்பி வந்து இருக்கோம் .............சார் சொல்றபடி கேட்டு நடக்க சொன்னாங்க .....இல்லை என்றால் உயிருக்கு உத்திரவாதம் இல்லை "என்ற எச்சரிக்கை விடுத்து கொண்டு .

கஜா ஒன்று நினைத்து விஜயை குறி வைக்க ,அது பலரால் திருப்ப பட்டு சுமன் மூலம் அவருக்கே ஆப்பாக திரும்பி வந்து இருந்தது .அவரின் வீட்டில் அவரே கைதியாகி போனார் .கூடா நட்பு கேடாய் முடியும் என்று முன்னோர்கள் சும்மாவா சொல்லி வைத்தார்கள் ????
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அதே சமயம் ஆல்வின் வீடு அருகேயே இருந்த இன்னொரு வீட்டில் பால் காய்ச்சி குடி ஏறினார்கள் மரகதம் ,கனகா ,சேது .அவர்களின் இந்த தடால் அடியான முடிவினை விஜய்யே எதிர் பார்க்கவில்லை .

"எதற்கு பாட்டி இப்படி செஞ்சீங்க ?"என்றான் விஜய் நூறாவது முறையாய் .

ஆல்வின் போன் செய்து இவர்கள் வீட்டை விட்டு வெளியேறிய விஷயத்தை சொன்னதில் இருந்து ,அவர்கள் வாடகை வீட்டில் குடிபுகுந்த அந்த கணம் வரை அவனின் புலம்பல் நிற்கவில்லை .அவர்கள் சொன்ன எந்த சமாதானமும் அவனிடம் எடுபடவில்லை .

"கருணா !.............இப்போ என்ன போச்சுன்னு இப்படி டென்ஷன் ஆகி குதிச்சிட்டு இருக்கே ?"என்றார் மரகதம் .

"அந்த ஆள் நான் கொடுத்த அடியிலே காண்டு ஆகி இருப்பார் ...போத குறைக்கு சூர்யா வேறு ஆப்பை நன்றாக சொருகி இருக்கான் .......இப்போ நீங்க வேற சொல்லாம கொள்ளாம இப்படி வீட்டை விட்டு வெளியேறி இருக்கீங்க ................எதற்கு பாட்டி இந்த வேண்டாத வேலை ?"என்றான் .

"ஏண்டா பேராண்டி ...............ஒரு வாய் கஞ்சி ஊத்த இப்படியா மூக்கால் அழுவே ??????நாங்க அதிகமா எல்லாம் சாப்பிட்டு உன் சொத்தை அழிச்சிட மாட்டோம் ......நாங்க என்ன மதுராவா ?""என்றார் நக்கலாக .

"இப்போ இந்த ஜோக் ரொம்ப தேவை பாருங்க "என்றான் விஜய்
b4273c464207d0d9f0dae39a2b11596f.jpg

"இங்கே பாரு நாங்க நாலையும் யோசித்து தான் இந்த முடிவுக்கு வந்து இருக்கோம் ....இது வரை என்னவெல்லாமோ ஆடிட்டர் அந்த மனுஷன் ..............ஆனா சூர்யா பேட்டி பார்த்த பிறகு தான் அந்த ஆளு பல கேடு கெட்ட தொழில் எல்லாம் பார்த்துட்டு இருக்கார் என்று புரிந்தது ............நீயும் எதையும் சொல்லாமலே மறைத்து வைத்துட்டே .பணத்துக்காக இவர் எதை வேண்டும் என்றாலும் செய்வார் என்று தெரியும் தான் ...........பண வெறி பிடித்த பேய் ...........ஆனா பெண்களை ,குழந்தைகளை விற்கும் கும்பலோடு இவருக்கு தொடர்பூ இருக்கிறது என்று தெரிந்த பிறகு .............அந்த பாவ பட்ட காசில் அங்கு எஜமானியாக இருப்பதை விட தெருவில் நின்று பிச்சை எடுத்து விடலாம் ...............அவர்கள் அடிக்கும் கூத்தை பார்த்து மனசு ஏற்கனவே செத்து போய் இருந்தேன் கருணா ................அந்த நரகத்தை கூட நாங்க மூவரும் உனக்காக மட்டுமே சகித்து கொண்டு இருந்தோம் ...............நாங்க அங்கே இருந்ததால் தான் சிவகாமி கூட அந்த ஆளை விட்டு வைத்து இருக்கா ..............இன்னும் எவ்வளவூ காலத்திற்கு தான் அந்த ஆளை விட்டு வைத்து ஆட விட முடியும் ????யாரவது அந்த ஆளுக்கு முடிவுக்கு கட்டுவதாக இருந்தால் எனக்காக என்று யோசித்து தயங்க கூடாதே .....அதான் ..............தவிர இது வரை எங்களுக்காக வாழ்ந்து விட்டோம் .......வாழ்ந்தோமா என்று கூட தெரியலை ............ஆனா இனியாவது உனக்காகவும் ,பூரணிக்காகவும் வாழ்ந்துட்டு போகிறோம் ..."என்றார் மரகதம் விரக்தியுடன்

458576-samnatha.png
இப்படி ஒவ்வொருவர் வாழ்வூ ஒவ்வொரு திசையில் புயலில் மாட்டிய காத்தாடியாய் சின்னாபின்னமாகி கொண்டு இருக்க ,இவர்களின் ரட்சகியாய் ,பலரின் வாழ்வினை அடியோடு மாற்றி போட மதுரா சென்னை வந்து சேர்ந்தாள் .

(அம்மா தாயே ......பரதேவதை ................வந்துட்டியா ............வா வா ..........வா .....வயத்துல மில்க் வார்த்தே ....இல்லை ஹனி நிலைமை படு திண்டாட்டம் தான் .....)

PENANCE WILL CONTINUE.....
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
THAVAM 35(2)

இப்படி ஒவ்வொருவர் வாழ்வூ ஒவ்வொரு திசையில் புயலில் மாட்டிய காத்தாடியாய் சின்னாபின்னமாகி கொண்டு இருக்க ,இவர்களின் ரட்சகியாய் ,பலரின் வாழ்வினை அடியோடு மாற்றி போட மதுரா சென்னை வந்து சேர்ந்தாள் .

fcc0a2d4e44418505f44e3e777a6ce56.jpg

அப்பொழுது தான் உறங்க ஆரம்பித்தான் உத்தம் சிங் தன் அறையில் .மதுரா வேறு திருமணத்தை பற்றி பேசி விட்ட பிறகு சூர்யாவிடம் சிக்கி ,திக்கி ,திணறி அப்பொழுது தான் மீண்டு உறங்க ஆரம்பித்து இருந்தான் .காதலிப்பவர்களை விட அவர்களின் நட்பு வட்டம் தான் இவர்கள் செய்யும் அலம்பல் ,லொள்ளு போன்றவற்றால் பெரிதும் பாதிக்கப்படுவது.விஜய்க்கு ஒரு ஆல்வின் ,சூர்யாவிற்கு ஒரு உத்தம் என்று மாட்டி விழி பிதுங்கி போய் இருக்கிறார்கள்.

"குரு கிருபா "-கடவுளின் அருள் " என்ற பெயர்ப்பலகை தாங்கிய சூர்யாவின் மாளிகையின் முன் வந்து நின்றது ஹர்ஷாவின் கார் .

(இந்த புள்ள தான் தங்கி இருக்கும் வீட்டுக்கு போகாம நடுராத்திரியில் எதுக்கு சூர்யா வீட்டுக்கு வந்து இறங்குது ??????ஹனி ரூட்மாறுதே .:eek::eek::eek::eek:.............ஆல் ரசகுல்லாஸ் கடுப்பு ஆகிடுவாங்க ..........பார்த்து செய்யு )

இண்டர்காம் ஒலிக்க தூக்கம் கலையாமல் அதை அட்டென்ட் செய்தான் உத்தம் ,"ஹலோ "'

"ஜீ ......ஒரு பெண் பாஸ் பார்க்கணும் என்று வந்து இருக்காங்க ..."என்றான் வாட்ச்மன் ஹிந்தியில் .

"பாஸ் தூங்கிட்டார் ...யாராய் இருந்தாலும் நாளை காலை பி.ஏ கிட்டே ஆபீஸ்சில் அப்பாய்ண்ட்மென்ட் வாங்கிட்டு வந்து பார்க்க சொல்லு .....உனக்கே தெரியும் தானே ...பாஸ் பெண்களை எல்லாம் நைட் டைம் மீட் செய்ய மாட்டார் என்று ......"என்றான் உத்தம் .

"சொல்லிட்டேன் ஜீ ..........வேலை கேட்டு வந்த பெண் மாதிரி தெரியலை ......ஆனா பாஸ் மீட் செய்யாமல் போகவே மாட்டேன் என்று சொல்லறாங்க ......கூட வந்து இருப்பவரை பார்த்தால் பெரிய இடத்து பையன் போல் இருக்கு ......உங்க தங்கச்சியாம் ஜீ இவங்க ..."என்றான் வாட்ச்மன் .

"ஹே எனக்கு தங்கச்சியே கிடையாதுன்னு உனக்கு தெரியும் தானே ...எவளோ என் தங்கச்சி என்று சொன்னா அதை நம்பிடுவியா ????கழுத்தை பிடித்து வெளியே தள்ளு ...."என்றான் உத்தம் கடுப்புடன் .-அவன் கஷ்டம் அவனுக்கு .......குளிர் காலத்தில் இழுத்து போர்த்திட்டு தூங்கிறவனை போய் நடு ராத்திரி ரெண்டு மணிக்கு வந்து எழுப்பினா ?????

"உன்னை அண்ணா என்று அழைப்பதற்கு இப்படி தான் கழுத்தை பிடித்து வெளியே தள்ளுவியா பாய் ????"என்ற பெண்குரலை கேட்டு விழுந்து அடித்து எழுந்து அமர்ந்தான் உத்தம் .

"மதுரா பெஹன் "என்றான் உத்தம் கேட்ட குரலை நம்ப முடியாமல் .

"இப்போ சொல்லு பெஹன் .....அது இதுன்னு .............உன்னை சமுத்திரம் பட பிரோதெரஸ் ரேஞ்சிக்கு நினைத்து இருந்தால் .....நீ கழுத்தை பிடித்து வெளியே தள்ளவா சொல்றே ?"மலர்களை போல் தங்கை உறங்குகிறாள் "என்று பீலிங்ஸ் விடுவேன்னு பார்த்தா தங்கையே இல்லைன்னு சொல்லி என் லிட்டில் ஹார்ட் ,என் சின்ன இதயத்தை இப்படியா உடைப்பே உத்தம் ஜீ ?"என்றாள் மதுரா கிண்டலாக .

அவள் குரலை கேட்டதும் தன் அறையில் இருந்து ஓட்டம் எடுத்தவன் ,அவள் பேசி முடிக்கும் முன் வெளி கேட்டை திறந்து நின்றான் .

(அந்த பயம் இருக்கணும் இல்ல ...எங்க தலை ,எங்க சிங்கம் ,வருத்த படாத லொள்ளு சபா தலைவி சூறாவளி ,சூரவல்லி ,இருந்த இடத்தில இருந்தே அசராமல் அடிக்கும் எங்க எரிமலை கண்டு .....கொஞ்சம் பில்ட் அப் அதிகமாக தான் கொடுத்திட்டோமோ!!!!!! .நம்ம மதுரா குட்டி தானே பரவாயில்லை )

"ஓகே ஹர்ஷ் ....நீ கிளம்புடா .......சொன்னது எல்லாம் நினைவூ இருக்குலே .....சொன்னபடியே செய்துடு ......ஏதாவது வேண்டும் என்றால் கால் செய்யறேன் ...."என்றவள் ஹர்ஷா கிளம்ப ,உத்தமோடு சூர்யாவின் வீட்டிற்குள் நுழைந்தாள் .

(மணமகளே மருமகளே வா வா ....உன் வலது காலை எடுத்து வைத்து வா வா ...என்று BGM இங்கே போடணுமோ இல்லை எங்கே ,எந்த வீட்டில் போடணும் என்று தெரியலையே:oops::oops::oops::oops: ....ஆமா ஹர்ஷா கிட்டே என்னத்தை செய்ய சொல்லி சொல்லி இருக்கே ?):unsure::unsure::unsure::unsure:

"என்ன பெஹன் இந்த நேரத்தில் இங்கே என்ன செய்யரே ?"என்றான் உத்தம் .

"சட்டி பானை செய்யறேன் அண்ணா ......"என்றாள் மதுரா .

"பெஹன் ........"என்ற உத்தமின் கடுப்பான குரலை கேட்டு புன்னகைத்தாள் மதுரா .

"மாமா உன் பையனை கொடுன்னு கேட்க வந்து இருக்கேன் ...........போனில் தான் சின்னத்தம்பி கிட்டே சொன்னேன்லே ...திருமணம் என்று ............அதான் மாப்பிளையை தேடி வந்து இருக்கேன் ......"என்றாள் மதுரா .

"விளையாடாதே பெஹன் ...பீ சீரியஸ் ...."என்றான் உத்தம் .

"சீரியஸ் ஆக இருக்க இது என்ன ஹாஸ்ப்பிடலா ....சரி சரி .........சீரியஸ்சா தான் அண்ணா சொல்றேன் ...திருமணத்திற்காக தான் இங்கே வந்து இருக்கேன் ...சூர்யாவை பார்த்து நிறைய பேசணும் ...........அதான் இதை முடிவூ செய்துட்டு என் வீட்டுக்கு போகலாம் என்று வந்துட்டேன் ....டிராவல் செய்தது ரொம்ப டயர்ட்டா இருக்கு ப்ரோ .....தூங்கணும் ............எங்கே தூங்க ???/ஹால்லா இல்லை ஏதாவது ஸ்டார் ரூம்மா ?"என்று அந்த மாளிகையை கண்டு நக்கல் அடித்தவளை கண்டு தலையில் ஓங்கி ஒன்று வைத்தான் உத்தம் .

"அருந்த வாலு ...........வா வா ............எப்பவுமே இங்கே உனக்காக என்று ஒரு அறை தயாராக இருக்கும் ..........ஜீ ஏற்பாடு ....காலேஜ் டைம்லேயே உன்னை இங்கே கூட்டி வந்து காட்டணும் என்று ரொம்பவே துடிச்சார் .....உன் விருப்பபடியே ஒரு எண்டயர் ப்ளோர் உனக்காக என்று ரெடி செய்து வைத்து இருக்கார் .........."என்றான் உத்தம் .

கேட்டில் இருந்து மளிகை வரை செல்ல கோல்ப் கார் என்று சொல்ல படும் சிறிய வகை வண்டி வேறு இருந்தது .அதில் மதுராவுடன் மாளிகையை நோக்கி சென்றான் உத்தம் .இரவூ விளக்கு ஒளியில் சொர்கபுரியாய் மின்னி கொண்டு இருந்தது அந்த மாளிகை .

0e0ff5b7d140f33f269a8dff171ccec2.jpg
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
உள்ளே அந்த மாளிகையின் பிரம்மாண்டம் ஏதோ சினிமா பட செட் போல் மிரட்டியது .உள்ளுக்குள் லிப்ட் வேறு .அதில் நுழைந்த உத்தம் நான்காம் ப்ளோர் பட்டன் அழுத்த இவர்களை சுமந்த லிப்ட் மேல் நோக்கி பயணம் ஆனது .

"கிரௌண்ட் ப்ளோர் சாப்பிடும் அறை ,விருந்தினர் அறைகள்,கான்பிரென்ஸ் ரூம், மினி சினிமா தியேட்டர் ,இண்டோர் ஸ்விம்மிங் பூல் இருக்கு .முதல் ப்ளோர் பாஸ்சின் பெற்றோர் இருப்பாங்க ,ரெண்டாம் தளம் சந்திரா பெஹன் இருப்பாங்க .முன்றாம் தளம் பாஸ் இருக்கார் .நான்காம் தளம் உனக்காகவே பாஸ் கட்டி இருக்கார் பெஹன் ."என்றான் உத்தம் .
_1_main_entryway.jpg

லிப்ட் கதவூ திறக்க அவள் முன் விரிந்தது பிரம்மாண்டம் கதவூ .அங்கு யூனிபோர்ம் அணிந்து நின்று இருந்த பெண் இவர்களை கண்டதும் தலை வணங்கி ,கதவினை திறந்து விட்டாள் .உத்தம் கை காட்ட முன்னே சென்ற மதுராவின் முன் விளையாட்டு மைதானம் கணக்காய் விரிந்தது முன் பக்க ஹால் .அதை தாண்டி செல்லவே ஒரு சைக்கிள் தேவை படும் அளவூ நீளம் ,அகலம் .
fb6f2246396433.5607d0550e11e.jpg

எல்லாமே பளிங்கு ,க்ரானைட் ....ராஜ வம்சம் என்றால் சும்மாவா என்ன
small-pool-room-problems-house-design-ideas-desig-and-best-indoor-swimming-humidity-glamorous-...jpg

மதுராவின் முகம் புன்னகையால் ஒளிர்ந்தது அந்த அறையை கண்டு ....அந்த அறையே ஒரு மினி வீடு போலெ இருந்தது என்றால் மிகையல்ல .....ஆனால் அதில் அவளை பெரிதும் கவர்ந்தது ,அந்த அறையின் நடுவே சுவற்றில் மிக பெரிய படம். ப்லோ அப் செய்ய பட்டு மாட்ட பட்டு இருந்தது .அதில் இவள் அமர்ந்து இருக்க ,இவளின் தோள் மேல் கை வைத்தவாறு நின்று இருந்தனர் விஜயும் ,சூர்யாவும் .

அதை கண்டு கண் கலங்க நின்ற மதுராவின் தோளை தட்டி கொடுத்த உத்தம் ,"சாப்பிட்டியா பெஹன் ?"என்றான் அவள் கவனத்தை திசை திருப்பும் விதமாக ..

"ஹ்ம்ம் ஆச்சு ..ஹர்ஷா கூட வரும் வழியிலேயே சாப்பிட்டாச்சு ....."என்றாள் மதுரா .

"என்னமா இன்னும் உன் முகம் தெளியலை ...என்ன விஷயம் ?"என்றான் உத்தம் .

"இதுக்கும் எனக்கும் எப்படி அண்ணா பொருந்தும் ??????இப்படி ஒரு மாளிகையில் இருந்தவர் எதற்காக அண்ணா ஒன்றுமே இல்லாதவர் மாதிரி என் வீட்டு சாப்பாட்டை அப்படி வாங்கி சாப்பிட்டார் ?தினமும் ரோல்ஸ் ராய்ஸ் ,புகாட்டி காரில் வலம் வருபவர் என் கூட என் ஓட்டை வண்டியில் வந்துட்டு இருந்தார் .இப்படி ஒரு மாளிகையில் வாழ்ந்தவர் தான் வண்டி ரிப்பேர் செய்ய கூட காசு இல்லை என்று என்னிடம் புலம்பிட்டு இருந்தாரா ..........."என்றாள் மதுரா கண்கள் கலங்க .

"பெஹன் ........இது வெறும் கல் ,மண் கொண்டு கட்டப்பட்ட மாளிகை ...அதற்கு உயிர்ப்பு கொடுப்பது அங்கு வாழ்பவர்களின் வாழ்கை தான் .......பாஸ்சோ அவர் பெற்றோர்களோ என்றுமே பணம் ,காசுகிற்கு மதிப்பு கொடுக்கத்தவர்கள் .....மனிதர்களை மனிதர்களின் குணத்திற்காக மதிப்பவர்கள் .....பூர்வீக சொத்து ..அதை ஆயிரம் மடங்கு பெருக்குகிறார்கள் .....அதனால் எத்தனையோ லட்சம் குடும்பம் பிழைக்கிறது .......இது எல்லாம் தரும் சந்தோசத்தை விட உன்னுடன் நீ சொன்ன ஓட்டை வண்டியில் உன் நண்பனாய் திரிந்த காலம் தான் பாஸ்க்கு பொற்காலம் .......கோடிக்கணக்கான மதிப்பிலான காண்ட்ராக்ட் கிடைக்கும் போது மகிழாதவர் உன்னுடன் இருந்த காலத்தில் தான் சந்தோசமாக இருந்ததை நேரில் கண்டவன் நான் பெஹன் . அது தொடர்ந்து தன் கடைசி மூச்சு உள்ளவரை வேண்டும் என்று நினைக்கிறார் ....ஒரு முறை தான் உங்களால் சேர முடியாமல் போய் விட்டது .........அதற்கே அவர் பாதி உயிர் போய்டுச்சு ....உடன் இருந்து பார்த்தவன் நான்மா ............இனிமேலாவது நீங்க ரெண்டு பேரும் சந்தோசமாய் இருக்கணும் மதுரா .இரு பாஸ் எழுப்பறேன் ......நீ வந்து இருப்பது தெரிந்தால் ரொம்ப சந்தோச படுவார் ."என்றான் உத்தம் .

"வேண்டாம் அண்ணா ...காலையில் பேசிக்கறேன் ...இப்போ தூங்கட்டும் ............எனக்கும் மனசு சரி இல்லை .....இப்போ வேண்டாம் ......"என்றாள் மதுரா .

"சரி மா ...இதில் சூடா பாதம் பால் இருக்கு ....பாத்ரூம் அங்கே ......குட்நைட் மா ....வெளியே காவலுக்கு ஷில்பா இருப்பா ......ஏதாவது வேண்டும் என்றால் அவ கிட்டே கேளுமா ...இல்லைன்னா ஒரு கால் எனக்கு செய் ....உடனே வந்துடுறேன் ....."என்றான் உத்தம் .
bedroom-designs-ideas-luxurious-as-wells-pretty-photo-luxury-small.jpg

உத்தம் கிளம்பி விட தன்னை தூய்மை செய்து கொண்டு வந்தவள் ,சூடான பாதம் பால் குடித்து விட்டு அடுத்து என்ன செய்வது என்று யோசித்தவாறே ,அவர்களின் ப்லோ அப் பார்த்தவாறு கண் அயர்ந்தாள் .
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மறுநாள் காலை பொழுந்து விடிந்த பிறகும் உறக்கம் தெளியாமல் மதுராவோடு கனவில் டூயட் பாடி கொண்டு,விஜயோடு சண்டை போட்டு கொண்டு இருந்தான் சூர்யா .


(இப்போ எதுக்கு இந்த பாட்டு ????சிம்பாலிகா மதுராவல் இருவரில் ஒருவன் நிச்சயம் கீழ்ப்பாக்கம் என்று சொல்றியாமா ...:oops::oops::oops:ஏற்கனவே நிறைய பேர் அங்கே தான் டிரீட்மென்ட் எடுத்துட்டு இருக்காங்களாம் ....எல்லாம் உன் உபயம் தான் ஹனி:p:p:p:p .)

கனவில் டூயட் அவன் பாடி கொண்டு இருக்க ,ஒரு பக்கெட் தண்ணி அவன் தலையில் கொட்டப்பட்டது ---உபாயம் வேறு யார் எல்லாம் மதுரா தேவியாரின் திருவிளையாடல் தான் .

"ஐயோ அம்மா ............."என்று அலறியபடி எழுந்து அமர்ந்தான் சூர்யா .

"என்ன சின்ன தம்பி ...............உங்க வீட்டுல மட்டும் வீட்டுக்குள் மழை பெய்யுது ...........சரியான ஓட்டை ஒடிசல் வீடு பா உனது ...."என்ற குரல் கேட்டு அதிர்ந்து போனான் அவன் .

தனக்கு எதுவுமே தெரியாத மாதிரி கையில் காபி உடன் சோபாவில் அமர்ந்து இருந்தாள் மதுரா .
samanthas-still-from-aaa-movie-201606-1464950913.jpg

"சோ சோ ............பாவம் இந்த குடிசையை கட்டும் போது பார்த்து கட்டவில்லையா சின்னத்தம்பி ....எப்படி ஒழுகுது பாரு .........."என்றவளை என்ன செய்வது என்று புரியாமல் அமர்ந்து இருந்தான் சூர்யா .

"உன் வேலை தானா இது ...................அதானே பார்த்தேன் .............எவண்டா அது இவ்வளவூ தைரியமாய் இந்த வேலையை செய்தது என்று ............எருமை .............தூங்கறவங்க மேலே இப்படி தான் தண்ணி கொட்டி எழுப்புவியா என்ன ............பாரு ...........பெட் எல்லாம் எப்படி நனைஞ்சு போச்சு "என்றான் சூர்யா .

"ரொம்ப அலட்டிக்காதே ...மேலே வாட்டர் ப்ரூப் கவர் போட்டு இருப்பதை பார்த்துட்டு தான் ஊத்தினேன் ..... "என்றாள் மதுரா அவனுக்கு ஒழுங்கு காட்டியவாறு .

"டேய் மகனே கொஞ்சம் அடங்கு ......இப்படி எல்லாம் நீ குளிச்சா தான் உண்டு ..........."என்றபடி வந்த சூர்யாவின் அம்மா ஸ்ரீலக்ஷ்மி அசப்பில் நடிகை நதியா போல் இருந்தார் .
hqdefault (1).jpg

சந்திரா ரகுவின் திருமணத்தை பேசி முடிக்க வெளிநாட்டில் இருந்து கிளம்பி வந்து இருந்தார் .காலையில் எழுந்த உடன் அறிமுக படலம் எல்லாம் மதுராவிற்கும் இவருக்கும் முடிந்து விட்டது .

நேரம் ஆகியும் மகன் எழுந்து கொள்ளாமல் அலும்பல் செய்து கொண்டு இருக்க ,அவனை சுப்ரபாதம் பாடி எழுப்பும் பணி மதுராவிற்கு வழங்க ,அதன் எதிரொலி தான் சூர்யாவின் தண்ணீரில் முக்கிய கோழி நிலை .....சும்மா வாயால் எல்லாம் எழுப்ப மாட்டோம்லே

மதுராவும் ,ஸ்ரீயும் ஹை பைவ் கொடுத்து கொண்டனர் .அதை கண்டு கண்களை உருட்டிய சூர்யா ,"அவ ஏற்கனவே ஜங்கு ஜங்குன்னு ஆடுவா ...இதுல வேற சலங்கை கட்டி ஏத்தி விடுங்க ......அதுவே வானரம் ................"என்றான் சூர்யா .

"போடா ...குழந்தையை போய் அப்படி எல்லாம் பேசாதே ...."என்றவர் மதுராவை அணைத்து கொள்ள ,மதுரா மீண்டும் ஒழுங்கு காட்டினாள் .

"குழந்தை ..........யாரு இவளா .............ஆமாமா ...தொட்டிலில் போட்டு தாலாட்டி பீடிங் பாட்டில் கொடுங்க ........."என்ற சூர்யா தலையில் அடித்து கொண்டான் ---வாயில் விரல் வைத்து சப்புவது போல் நடித்த மதுராவை கண்டு .

"போதும் சகிகளை .............இப்படி எல்லாம் செய்தால் விட்டு விடுவேன்னு நினைக்காதே ...........யாரை கேட்டு கோயிலில் இருந்து நீ பாட்டுக்கு சொல்லாம கொள்ளாம முன்னே பின்னே தெரியாதவங்ககூட போனே ????எங்கு இருந்து தைரியம் வந்தது ??????சுமன் என்ற ஒருத்தன் உன்னை டார்கெட் செய்து இருக்கான் நினைப்புல இருக்கா .........ஒருத்தியை காப்பாத்த முடியாம நான் பட்ட நரகம் தெரியுமாடீ உனக்கு ??????ஒட்டுமொத்த போலீஸ் துறையை உன்னை தேட சொல்லி படுத்தி எடுத்தோம் .....தெரு தெருவா உன்னை தேடி விஜய் பைத்தியக்காரன் மாதிரி அலைந்தான் ......உத்தம் ,ஆல்வின் ,கார்த்திக் ,ரகு என்று எல்லோரையும் படுத்தி எடுத்தது போதாது என்று உன் அம்மாவையும் ஹாஸ்பிடலில் சேர்த்துட்டு ரெண்டு நாள் கழிச்சி சாவகாசமா வந்துட்டு தண்ணீர் ஊற்றி விளையாடி மனுஷனை வெறுப்பு ஏற்றிட்டு இருக்கே நீ ...........நாலு வாங்கு வாங்குவதை விட்டுட்டு நீங்களும் இவ கூட சேர்ந்துட்டு விளையாடிட்டு இருக்கீங்க மா ...."என்றான் சூர்யா கோபத்தோடு .
RamCharan-latest-wallpapers (4).jpg

நான் ஒண்ணும் முன்னே பின்னே தெரியாதவங்க கூட எல்லாம் போகலை ......விஜய் கூட படிச்சாளே ,நம்ம காலேஜ்ஜூக்கு கூட ஸ்டுடென்ட்ஸ் exchange ப்ரோக்ராம் வந்த ...மேக்னா --அவளும் ,அவ அண்ணா ஹர்ஷா கூட தான் போனேன் ............நான் எங்கே போனேன் ......பக்கிங்க ....சொல்லாம கொள்ளாம தூக்கி போயிடுச்சுங்க .....எழுந்து பார்த்தா ............ஆந்திரா பக்கம் போய்ட்டு இருக்கோம் ..."என்றாள் மதுரா முகத்தை அஷ்டகோணல் ஆக்கி கொண்டு .

"வெயிட் ....வெயிட் .............ஆந்திரா பக்கம் போனியா ????போனில் டெல்லியில் இருக்கேன்னு தானே சொன்னே ....என்னடீ மாத்தி மாத்தி சொல்றே ..........கேக்கிறவன் கேனையன் மாதிரி தெரியுதா என்ன .............போலி போட்டுடுவேன் .................எங்கே ,எதற்கு போனே .........ஒழுங்கா சொல்லி தொலை .."என்று கர்ஜித்தான் சூர்யா
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"ஆமா ஆந்திரா தான் போனேன் .....அங்கே போறேன்னு சொல்லி இருந்தா நீயும் விஜய்யும் ஒரு பிலைட் வாங்கியாவது கிளம்பி வந்து என் காதை பிடித்து தர தரன்னு இழுத்துட்டு வந்து இருப்பீங்க .....அதான் இருக்கும் இடத்தை மாத்தி சொன்னேன் ....இப்போ எதுக்கு இப்படி ரொம்ப துள்ளுறே ?என்றாள் மதுரா .

"விட்டேனா கன்னம் பழுத்துடும் .............திமிராடீ .............டெல்லி என்றதும் போகணும் என்று குதிச்சான் கருணா ....அவனை அடங்குவதற்குள் மனுசனுக்கு உயிரே போய்டுச்சு ...........இது என்ன அந்த கால சினிமா படம் என்று நினைப்பா உனக்கு ....ஹீரோயின் பிலைட் ஏறி போனதும் ஹீரோ லூசு மாதிரி ஏர்போர்ட்டில் ஏக்கத்தோடு நிற்க ,எண்டு போடுவாங்களே ..........அப்படித் கை கட்டி நிற்க நாங்க என்ன கேனையன்களா ?????டெல்லி என்ன உலகத்தின் எந்த மூலைக்கு நீ சென்றாலும் பின்னாலே வரும் தில் இருபவனுங்கடீ ...."என்றான் சூர்யா கடுப்போடு

"சரி பா சாரி ......நீங்க ரெண்டு பேரும் ஜேம்ஸ் பாண்டுக்கு பக்கத்து வீட்டுகாரனுங்க தான் .....டூ மேன் ஆர்மி தான் சாமி ஒத்துக்கறேன் .......டெல்லி என்ன புளூட்டோ ,மில்கி வே தாண்டி போனா கூட ராக்கெட் பிடிச்சாவது வந்து சேர்ந்து காப்பாத்திடுவீங்க ............நீங்க ரெண்டு பெரும் சூர புலி ,சிங்கம் ,யானை,கழுதை ,குதிரையெல்லாம்னு ஒத்துக்கறேன் சாமி ..........இப்படி கொதறாதே ......"என்றாள் மதுரா கை எடுத்து கும்பிடா குறையாய் .

இவன் எவ்வளவூ பீலிங் உடன் பேசி கொண்டு இருக்கிறான் ,என்னவோ காமெடி ஷோ பார்ப்பது போலெ ,ஜஸ்ட் லைக் தட் என்று செய்த காரியத்தின் வீரியம் புரியாமல் ,ரெண்டு பேரின் மன உணர்வினை மதிப்பளிக்காமல் உளறிட்டு இருக்கும் மதுராவை என்ன செய்வது என்று புரியாமல் பற்களை நறநறவென கடித்தான் ....பாவம் அவனால் முடிந்தது அது மட்டும் தான் .

அவளை மீறி நடந்த ஒன்றிற்கு இத்தனை தூரம் கோனார் நோட்ஸ் தேவையா என்பது மதுராவின் வாதம் ....அவள் இருந்த மனநிலையில் மற்றவர்களை பற்றி யோசிக்கவா முடியும்? .....வாழ்க்கை அந்தரத்தில் ஊஞ்சல் ஆடி கொண்டு இருக்கும் போது ,பெர்மிஸ்ஸின் எல்லாம் வாங்கி கொண்டா இருக்க முடியும் ?....இவன்கள் இருவரும் இவளை போகவிட்டு தான் மறுவேலை பார்ப்பார்கள் .....உடன் வருகிறேன் என்று படுத்தி எடுத்து ,இன்று இவள் தெரிந்து கொண்டு இருக்கும் சில பல உண்மைகளை வெளி வர விடாமல் செய்தும் இருப்பார்கள் .....சில சமயங்களில் சுயநலமாய் சிந்திப்பதும் தேவையாகிறது பலரின் வாழ்கை மாற்ற பட வேண்டும் என்றால் என்பது மதுராவின் நிலை .

"சூர்யா ..,.....ரிலாக்ஸ் .............மதுரா காரணம் இல்லாம எதையும் செய்ய மாட்டா என்று உனக்கே தெரியும் தானே .......சொல்ல கூடிய நிலையில் இருந்தால் அவளே கூப்பிட்டு சொல்லி இருப்பா தானே .......அவ தான் மயக்கம் ஆகிட்டா என்று அவ நண்பர்கள் போனில் சொன்னதாக சொன்னாயே .....பின் என்னப்பா .....ஏதோ முக்கியமானது பேசணும் என்று குழந்தை நைட் முதல் இங்கே வெயிட் செய்யறா ....போ போய் ரெப்பிரேஷ் ஆகிட்டு வா ....."என்றார் ஸ்ரீலக்ஷ்மி .

"வாட் ............நைட் முதல் இங்கே இருக்காளா .............நீ வீட்டுக்கு போகவே இல்லையா .....நீ வந்து இருப்பது யாருக்காவது தெரியுமா இல்லையா ?"என்றான் சூர்யா கடுப்புடன் .

"கதிரில இருந்து நேரா இங்கே வந்துட்டேன் பிரபு ...........உன் கூட பேசணும் .............இன்னும் யாருக்கும் தெரியாது நான் ரிட்டர்ன் ஆனது ............உன் கிட்டே பேசிட்டு வீட்டுக்கு தான் போகணும் ...."என்றாள் மதுரா குரல் இறங்கி போனவளாய் .

ஏதோ சொல்ல முயன்ற சூர்யாவை தடுத்த ஸ்ரீ ,"போ கண்ணா .............போய் ரெப்பிரேஷ் ஆகிட்டு வா .........அவ முகத்தை பார்த்தாலே தெரியலையா விஷயம் ரொம்ப பெரிசுன்னு ..........போப்பா ...........நாங்க பால்கனியில் வெயிட் செய்யறோம் ......மதுரா என்னமா சாப்பிடுறே .........?"என்றார் ஸ்ரீ சூர்யா குளிக்க கிளம்பியதும் .

"பிரபு வந்துடட்டும் மா .........எதுவானாலும் ஒகே ....."என்றவள் அவர் இண்டர்காம் மூலம் கிச்சனுக்கு இன்ஸ்ட்ருக்ஷன்ஸ் கொடுத்து முடிக்க ,"அப்பா எப்படி மா இருக்கார் ?"என்றாள் மதுரா .

"ஹி இஸ் ரிகாவேரின் வெரி வெல் .........ட்ராவல் செய்யும் அளவூ ஹி இஸ் இன் குட் ஹெல்த் ......பொண்ணு மேரேஜ் முடிவூ ஆனதில் இருந்து அவரை கையில் பிடிக்க முடியலை மதுரா ..........என் கூடவே இந்தியா வரேன்னு ஒரே பிடிவாதம் ......கொஞ்சம் உடல் தேரட்டும் என்று சொல்லி விட்டு வந்து இருக்கேன் ...உன் பாரெட்னஸ் பார்த்து பேசிட்டு நிச்சயம் முடிச்சுட்டு டேட் முடிவூ ஆகிடுச்சுனா அவரை போய் கூட்டி வந்துடுவேன் .........ஆமா நீ என்ன முடிவூ செய்து இருக்கே மதுரா சூர்யாவை பத்தி ?ஏற்கனவே திருமணம் ஆனவன்,விடோயர் என்று ஹெசிட்டேட் செய்யறியா ?"என்றார் ஸ்ரீ .

பெருமூச்சு விட்ட மதுரா ,"சூர்யா வந்துடட்டும் மா .....இன்னைக்கே திருமணம் பேசி முடிக்க தான் வந்து இருக்கேன் ....."என்றாள்

"ரொம்ப சந்தோசம் மதுரா ......ரெண்டு பிள்ளைகளின் திருமணத்தையும் ஒரே நாளில் பார்க்க போகிறேன்.அங்கிள் கேட்டா ரொம்ப சந்தோச படுவார் .....என் மகன் என்பதற்காக சொல்லவில்லை மதுமா .....சூர்யா ரொம்ப நல்லவன் ....உன்னை உள்ளங்கையில் வைத்து தாங்குவான் ....ஜெம் ஆப் எ பெர்சென் அவன் ....நீங்க ரெண்டு பெரும் made for each other ."என்ற ஸ்ரீ தன் கழுத்தில் இருந்த வைர நகையை கழற்றி மதுராவின் கழுத்தில் போட்டு மதுராவை அணைத்து கன்னத்தில் முத்தம் ஒன்றை வைத்தார் .
0e123975107cbbaabafafef1b4c88f77.jpg

குளித்து விட்டு வந்த சூர்யாவின் கண்களில் பட்டது அந்த ஸீன் தான் ."என்னமா நடக்குது இங்கே ?ஓவர் ரா பாசம் வழியுது ?"என்றான் நக்கலாக .

"உனக்கு ஏண்டா புகையுது ???நான் என் மருமகளை கட்டி பிடிப்பேன் ...முத்தம் கொடுப்பேன் ...உனக்கு என்ன வந்தது ?"என்றார் ஸ்ரீ

"என்னது மருமகளா ?"என்று திகைத்த சூர்யாவின் கண்களில் பட்டது மதுராவின் கழுத்தில் ஸ்ரீ அணிவித்து இருந்த அவர்களின் பரம்பரை வைர நகை .

கண்கள் பார்ப்பதை நம்ப முடியாமல் விரிய ,கண் முன் நடப்பதை நம்ப முடியாதவனாய் பொத்தென்று அங்கே இருந்த சோபாவில் அமர்ந்தான் சூர்யா .கடைசியில் அவன் காதல் தேவதை அவனுக்கே என்று அவன் கரம் பிடிக்க வந்து விட்டாளா .....!!!!!

"பேபி ............பேபி ............."என்றவனால் அதற்கு மேல் பேச முடியாமல் குரல் உடைய ,கண்கள் கலங்கி விட கையை மட்டும் அவளை நோக்கி நீட்டினான் .

அழகாய் புன்னகைத்த மதுரா எழுந்து சென்று அவன் கையை பிடித்து கொண்டு அவன் தோளில் சாய்ந்து கொண்டாள் .

maxresdefault (1).jpg

PENANCE WILL CONTINUE......
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பேபீஸ் ...மதுராவோட மேரேஜ் முடிவாகிடுச்சு ......எப்படியோ ஆந்திராவில் இருந்து வந்த உடனே எல்லாம் ஜெட் வேகத்தில் முடிவூ ஆகிடுச்சு ........மாமியார் மருமகளுக்கு வைர நகை போட்டு முடிவூ சேய்துட்டாங்க ...............சோ அடுத்து மேரேஜ் ப்ரொக்ராம்ஸ் ஸ்டார்ட் ஆகிடும் ......


ஹீரோயின் ஹீரோ தோளில் சாஞ்சாச்சு ......

யாரையோ மறக்கறோமே .................ஒரு நம்ம காதல் மன்னன் விஜய் .............சரி போ பா "உனக்கான சோங் டெடிகேஷன் "இதோ




(honeyyyyyyyyyyyyyyyyyyyyyyy...................kaiyil kidaiche mavale nee gaali....)
me escape
 
Last edited:

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
THAVAM 35(3)

IndiaTv6faec9_samantha-ramcharan-film.jpg

அன்றைய காலை பொழுது வழக்கம் போல் உதித்தாலும் ,மதுரா முடிவூ செய்த திருமணம் என்ற சூறாவளி பலரின் தலைவிதியை மாற்றி போட ஆரம்பித்தது .

பிரிந்தவனத்தில் தங்கி இருந்த பவானி தன் கையில் இருந்த செல் போனை தவற விட்டு பேய் அடித்தது போல் நின்றார் .அவரின் அந்த நிலையை கண்டு மற்றவர்கள் அவர் அருகே ஓடி வந்தனர் .சங்கரன் பல முறை உலுக்கிய பிறகே பவானி சகஜ நிலைக்கு திரும்பினாலும் அவரின் முகம் தெளியவில்லை .

"என்னடி யாரு போனிலே ?"என்றார் சங்கரன் மனைவியை இந்த அளவுக்கு நிலை குலைய வைக்கும் செய்தி அப்படி என்ன என்று புரியாதவராய் .

"சூர்யா தம்பியோட அம்மா ,சம்மந்தியம்மா பேசினாங்க ..........இன்னும் கொஞ்ச நேரத்தில் திருமணம் பேச வருகிறார்களாம் ."என்றார்

"என்னமா இது ..........ரகுவிற்கு சந்திராவிற்கும் ஏற்கனவே பேசி வைத்தது தானே .....இதுல நீ அதிர்ச்சியாக என்ன இருக்கு ?"என்றார் சங்கரன் .

"அவங்க ரகு சந்திரா திருமணத்தை மட்டும் நடத்த வரலையே ...........நம்ம மக மதுராவை சூர்யாவிற்கு முடிக்கவும் தானே வாரங்களாம் ..."என்றாள்
பவானி .

"என்னது .............!!!!"பல குரல்கள் ஒரே சமயத்தில் திகைப்போடு ஒலித்தது .


"மதுரா இங்கே இல்லாத நேரத்தில் இது என்ன புது குழப்பம் ...இந்த பொண்ணு வேற சொல்லாம கொள்ளாம டெல்லி போய் இருக்கு ...எதுக்குனும் தெரியலை ...எப்ப வரும்னும் புரியலை .....இதுல இது என்ன புது பிரச்சனை "என்றார் சங்கரன் கைகளை பிசைந்து கொண்டு .

"உங்க மக நேத்து ராத்திரியே சென்னை வந்துட்டாளாம் ....சூர்யா வீட்டில் தான் தங்கி இருக்கா ....அவ தான் சூர்யாவை விரும்புவதாகவும் அவங்க கிட்டே சொல்லி இருக்கா .....அதை கேட்டு தான் சம்மந்தியம்மா ரெண்டு திருமணத்தையும் நிச்சயம் செய்ய இப்போ வந்துட்டு இருக்காங்க ......"என்றார் பவானி வறண்ட குரலில் .

அதிர்ச்சி ,திகைப்பு ,ஸ்தம்பிப்பு என்ற எல்லாவற்றையும் ஒரே சமயத்தில் குத்தகைக்கு எடுத்து நின்று இருந்தனர் அந்த குடும்பத்தினர் .

பாலாஜியின் கைகள் தானாக விஜய்க்கு அழைப்பு விட ,விஷயத்தை கேள்வி பட்ட விஜய் பல வினாடிகள் சுவாசிக்கவும் மறந்து போனவனாய் சிலையாக நின்றான் .நெஞ்சின் ஒரு இடத்தில் உருவான வலி உடல் முழுக்க பரவ அமர்ந்து இருந்த சேரில் இருந்து கீழே விழுந்தவன் நெஞ்சை பிடித்து கொண்டு "ஐயோ அம்மா "என்று ஓங்கி கதற ஆரம்பித்தான் .

aav.jpg

அவன் நிலையை கண்டு பதறி அடித்து ஓடி வந்தனர் சேது ,கனகா ,மரகதம் ,ஆல்வின்,மிருதுளா .எதை சொல்லியும் அவனை சமாதானம் செய்ய முடியவில்லை அவர்களால் .அவன் கையில் இருந்து கீழே விழுந்த செல்போனை எடுத்து பேசிய ஆல்வின் பாலாஜியை குதறி எடுத்து விட்டான் .

"என்னடா அப்படி சொல்லி தொலைச்சே ..........அவன் நெஞ்சை பிடிச்சிட்டு கதறிட்டு இருக்கான் .....அறிவூ இருக்கா இல்லையா ......எது அவனிடம் சொல்வதாய் இருந்தாலும் என்னிடம் சொல்லு ...நான் நேரம் பார்த்து பக்குவமாய் சொல்லிடறேன் என்று எத்தனையோ முறை சொல்லி இருக்கேன் ..........மூளையை அடகு வைத்து இருக்கியா என்ன .... "என்று நிறுத்தாமல் வறுத்து எடுத்தான் ஆல்வின் .

"ஆல் ............ஆல் ................ஸ்டாப் இட் மேன் ............என்னத்தை பொறுமையா ,நிதானமா சொல்ல போறே ......மதுரா கழுத்தில் சூர்யா தாலி கட்ட போவதையா ..............என்னடா பேச்சை காணோம் .....என்ன சொல்றேன்னா ...ராமர் சீதைக்கு சித்தப்பான்னு .....மதுரா நேத்து நைட்டே டெல்லியில் இருந்து ரெட்டர்ன் ஆகிட்டாளாம் ....நேரா சூர்யா வீட்டுக்கே போய் இருக்கா ....அவனை தான் விரும்பறேன்ன்னு அவன் கிட்டேயே சொல்லி இருக்கா .......அவன் என்ன விஜய்யா .....குடும்பம் ,சொந்தம் எல்லாம் பார்க்கா ......காலை விடிந்தும் விடியாமல் அவங்க அம்மாவை கூட்டிட்டு நிச்சயம் செய்ய வந்துட்டு இருக்கான் ...இதை எப்படி பாலிஷ்ஷா சொல்லுவே சொல்லு பார்க்கலாம் ..... இப்போ என்ன செய்யறதா .......நீயும் அவனும் சேர்ந்து சட்டியும் பானையும் செய்யுங்க ......போய் சொல்லு அந்த கூமுட்டை கிட்டே ......அவன் தானே அவளுக்கு திருமணம் செய்யணும் என்று ஒத்தை காலில் நின்று தவம் இருந்தான் ...அவன் தவம் பலித்து விட்டது ....அவன் காதலி இன்னொருவனின் மனைவியாக போகிறாள் ....அவனை "எங்கிருந்தாலும் வாழ்க "என்று பாட சொல்லு ....அவனுக்கு பாட சொல்லியா தரணும் ????......லூசாடா அவன் ...சோனா எல்லாம் ஒரு ஆள்ன்னு ...............இப்போ மட்டும் ரூபிணி அப்படியே ரொம்ப சந்தோசமா வாழ்ந்துட்டு இருக்கலாமா ?????.....டேய் போடா ...கண் இருப்பவன் எல்லோருக்கும் தெரியும் அவ எந்த லட்சணத்தில் வாழ்ந்துட்டு இருக்கான்னு ....அவளும் வாழலை ...இவனையும் வாழ விடாமல் சாகடிச்சிட்டு இருக்கா .............இந்த பைத்தியமும் ஒருத்தன் விடாம அவளுக்கு மாப்பிளை பார்க்க சொன்னவன் தானேடா ..............இப்போ எதுக்கு நெஞ்சை பிடிச்சுட்டு கதறான் ?????இவனும் சோனவை விவாகரத்து செய்து தொலைக்க மாட்டான் .....மதுராவையும் விட முடியாமல் தவிப்பான் ......கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என்றால் ......அந்த பொண்ணு மதுரா தெளிவா தான் இருக்கு ...அது தான் எப்பவுமே ப்ராக்டிகலா இருக்குமே ......இந்த குழப்பவாதிக்கு அந்த அதிரடி ஆட்டக்காரனே சரி என்று பச்சை கொடி காட்டிடுச்சு ......வந்து திருமண வேலைகள் நிறைய இருக்கும் பார்க்க சொல்லு அவனை ...."என்று ஆடி விட்டான் பாலாஜி --ஸ்பீக்கரில் போட பட்டு இருக்க அவன் பேசியது எல்லாம் அங்கு இருந்த அனைவர்க்கும் மிக தெளிவாகவே கேட்டது .
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பாலாஜி போன் வைத்து விட கண்கள் கலங்கி அமர்ந்து இருந்தவனை கண் கொண்டு பார்க்க முடியவில்லை அவர்களால் ...எத்தனை கம்பீரமான ஆண்மகனையும் தகர்த்து விட கூடிய சக்தி காதலுக்கு உண்டு தான் .
maxresdefault (11).jpg

இங்கே கதறி கொண்டு இருப்பவன் தான் அவளுக்கு மாப்பிள்ளை பார்த்தவன் என்றால் நம்ப முடிகிறதா என்ன ?...புலி வருது ...புலி வருது என்ற அவன் பொய்யை மதுராக்ஷி நிஜம் ஆகிவிட்டாள் .அவன் எது அவளுக்கு நடக்க வேண்டும் என்று எதிர்பார்த்தானோ அது நடக்க போகிறது ....ஆனால் அதை ஏற்று கொள்ள அவனால் எப்படி முடியும் ????முடியாமல் தான் இப்படி உயிர் போகும் வலியில் துடித்து கொண்டு இருக்கிறான் .

"இப்போ என்ன நடந்து போச்சுன்னு இப்படி கதறிட்டு இருக்கே கருணா .........சூர்யா என்ன மதுரா கழுத்தில் தாலியே கட்டி விட்டானா என்ன ................நிச்சயம் செய்ய தானே வருகிறான் ...........நாங்க போய் பேசறோம் ....என் மகனுக்கு உங்க மகளை கொடுங்கன்னு ....எவன் குறுக்கே வரான்னு பார்க்கிறோம் .....கிளம்புடா ............காதலிச்சவளை தூக்கி போய் தாலி கட்டுவதை விட்டுட்டு நெஞ்சை பிடிச்சுட்டு உக்கார்ந்து இருக்கே ..........கிளம்புன்னு சொல்றோம் இல்லை ..........."என்ற சேது அவனை இழுத்து போகாத குறையாய் காரில் ஏற்றி விட்டார் ...அவர்களை சுமந்த அந்த கார் மதுரா தங்கி இருக்கும் பிரிந்தவனத்தை நோக்கி போக ஆரம்பித்தது .

அதே சமயம் சென்னையின் மற்றொரு பக்கம் இருந்து பிரிந்தவனத்தை நோக்கி சீறி பாய்ந்து வந்து கொண்டு இருந்தது மற்றொரு கார் .அந்த காரினை புன்னகையோடு ஓட்டி கொண்டு இருந்தான் சூர்யா முழு மாப்பிள்ளை கெட் அப் ....பட்டு வேட்டி சட்டையில் பார்ப்பவரின் நெஞ்சை கொள்ளை யிட்டு கொண்டு இருந்தான் அந்த ஆணழகன் .
Ram-Charan-Dhruva-Pre-Release-Event-Date-Finalized-1.jpg

பின்னால்அவன் அன்னையோடு கேலி செய்து பேசி கொண்டு இருந்தாள் அவன் பேபி .....அவனால் மதுராவை விட்டு கண்ணை திருப்ப முடியவில்லை ......ரீர்வியூ மிரர் மூலம் அவளையே தான் பார்த்து கொண்டு இருந்தான் .சட்டென்று அவன் புறம் திரும்பியவள் தன் புருவத்தை தூக்கி "என்ன "என்று கேட்க ஒன்றும் இல்லை என்று தலை அசைத்தான் சூர்யா .

'என்ன விதமான பெண் இவள் ???அவனால் வியக்காமல் இருக்க முடியவில்லை ......அவளின் தெளிவான சிந்தனை ,அணுகுமுறை ,பிரச்சனைகளை சுலபமாக களைந்து விடும் திறன் வழக்கம் போல் அவள் மேல் அவனின் மரியாதையை உயர்த்தியது ...நட்பாகட்டும் ,காதல் ஆகட்டும் இவளை மிஞ்ச இனி ஒருத்தி பிறந்து வருவது கூட சந்தேகம் தான் .இவளை போல் இவள் ஒருத்தி மட்டுமே இருக்க முடியும் .

சூர்யா மதுராவால் வானத்தில் பறந்து கொண்டு இருந்தான் என்றால் மிகையல்ல என்று சொல்ல தான் வேண்டும் .வறண்ட பாலைவனமான அவன் வாழ்வை சோலைவனமாக்கி அல்லவா இருக்கிறாள் .மீளவே முடியாத நரகத்தில் துடித்து கொண்டு இருந்தவனை சொர்க்கத்தின் அதிபதி ஆக்கி அல்லவா விட்டு இருக்கிறாள் இந்த தேவதை பெண் .....உண்மை தான் தேவதைகள் வரம் கொடுக்கவே பிறந்தவர்கள் ....முக்கியமாக அவன் பேபி .
1374259815-1608.jpg

கடந்த மூன்று மணி நேரத்தில் அவன் வீட்டில் நடந்ததை மெல்ல அசை போட ஆரம்பித்தான் சூர்யா .

குளித்து விட்டு வந்த சூர்யாவின் கண்களில் பட்டது அந்த ஸீன் தான் ."என்னமா நடக்குது இங்கே ?ஓவர் ரா பாசம் வழியுது ?"என்றான் நக்கலாக .

"உனக்கு ஏண்டா புகையுது ???நான் என் மருமகளை கட்டி பிடிப்பேன் ...முத்தம் கொடுப்பேன் ...உனக்கு என்ன வந்தது ?"என்றார் ஸ்ரீ

"என்னது மருமகளா ?"என்று திகைத்த சூர்யாவின் கண்களில் பட்டது மதுராவின் கழுத்தில் ஸ்ரீ அணிவித்து இருந்த அவர்களின் பரம்பரை வைர நகை .

கண்கள் பார்ப்பதை நம்ப முடியாமல் விரிய ,கண் முன் நடப்பதை நம்ப முடியாதவனாய் பொத்தென்று அங்கே இருந்த சோபாவில் அமர்ந்தான் சூர்யா .கடைசியில் அவன் காதல் தேவதை அவனுக்கே என்று அவன் கரம் பிடிக்க வந்து விட்டாளா .....!!!!!

"பேபி ............பேபி ............."என்றவனால் அதற்கு மேல் பேச முடியாமல் குரல் உடைய ,கண்கள் கலங்கி விட கையை மட்டும் அவளை நோக்கி நீட்டினான் .

அழகாய் புன்னகைத்த மதுரா எழுந்து சென்று அவன் கையை பிடித்து கொண்டு அவன் தோளில் சாய்ந்து கொண்டாள் .
 
Last edited:
Status
Not open for further replies.
Top