All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அனிதா ராஜ்குமாரின் "என்ன தவம் செய்தேன்" - கதை திரி

Status
Not open for further replies.

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"ச்சே ச்சே இவ்வளவூ கேவலமாக நடந்து கொள்வாய் என்று எதிர்பார்க்கவே இல்லை கருணாகரன் ......எனக்கு என்று ஒரு பெயர் இருக்கு ......இந்த கம்பெனிக்கு என்று ஒரு பிரெஸ்டிஜ் இருக்கு .......இந்த மாதிரி கீழ்த்தரமாக நடக்கும் உன்னை இனி மேலும் நம்பி இந்த கம்பெனியை விட்டு வைக்க முடியாது .....கார்மெண்ட்ஸ் கிரௌண்ட் ல மீட்டிங் ஏற்பாடு செய்து இருக்கேன் .....கம்பெனி பஸ் இங்கிருந்து கிளம்பும் .......வந்து சேரு ........அன்னாடம் காய்ச்சிக்கு கார் ஒன்று தான் குறைச்சல் .............முன்னே பஸ் ,ஆட்டோன்னு போனவன் தானே .......... அங்கே shareholders ,வேலையாட்கள் முன் உன்னை வேலை விட்டு தூக்கறேன் ............அப்போ தான் உன்னை இனி எவனுமே வேலைக்கு எடுக்க மாட்டான் .....நாலு நாள் பட்டினியா இருந்தே என்றால் அப்போ இந்த திமிர் ,ஆணவம் எல்லாம் காணாம போய்டும் ......."என்றவர் மற்றவர்களுடன் வெளியேறி கார்மெண்ட்ஸ் நோக்கி கிளம்பினார் .

"என்ன கருணா இது ?அந்த ஆள் ஏதோ பிளான் போட்டு உன்னை கார்னெர் செய்யறான் போல் இருக்கே பா ..."என்றார் சேது கவலையுடன் .
12107021_947393571965808_5621779444867314741_n.jpg

"இது எல்லாம் நேத்தே எனக்கு தெரியும் அப்பா .......அங்கே கார்மெண்ட்ஸ் கிரௌண்ட் டில் கம்பெனி ஷேர் ஹோல்டேர்ஸ் ,அங்கு வேலை செய்பவர்கள் ,மீடியா முன் அவர் நல்லவர் ,சூர்யாவின் கண்டைனர் எரிந்ததற்கும் தனக்கும் சம்மந்தம் இல்லை .....அதன் முழு காரணம் நான் என்று மீடியா முன்னிலையில் என்னை குற்றவாளி ஆக்கி விட பார்க்கிறார் ......சூர்யா சாதாரணமாக பேசினாலே எதிரிக்கு ஆப்பு ரெடி என்று அர்த்தம் ......அவன் வார்னிங்கே கொடுத்து விட்டான் இல்லையா அதான் நரி பம்முது ........ஊர் அறிய உலகம் அறிய என் மீது பழி போட்டு சூர்யாவிற்கு என்னை விரோதி மாதிரி காட்டி ,அவனை போட்டு தள்ள பிளான் ......அவன் இறந்து போனால் கோபத்தில் நான் தான் செய்ததாக எவிடென்ஸ் காட்டணும் இல்லை அதற்கு தான் இந்த மீட்டிங்.எவிடென்ஸ் தயார் செய்கிறார் அப்பா ..........தவிர இப்படி ஊர் அறிய என்னை வேலை விட்டு தூக்கினால் ,இவரை மீறி ,சூர்யாவை பகைத்து கொண்டு எனக்கு எவனும் வேலையே தர மாட்டான்.வேலை இல்லை என்றதும் அவரின் பேத்தி உயர் திரு சோனா தேவியாரின் காலில் சென்று தான் விழுவேன் ,அப்படி விழ வைக்க வேண்டும் என்பது தான் அடுத்த பிளான் ......அதான் கார் எல்லாம் எடுத்து கொண்டு பஸ்சில் வர சொல்லறார் .........இந்த வசதி ,வாய்ப்புக்காக நான் ஏங்க வேண்டுமாம் ........அப்படி ஏங்கி ...........சோனாவின் படுக்கை அறைக்கு செல்வேன் என்று கணக்கு போட்டு ..........என்னை அனுப்ப முயல்கிறார் உங்க மாமா "என்றான் விஜய் அலட்டி கொள்ளாமல் "மாமா "என்ற வார்த்தையை அழுத்தி கூறி .

அவன் சொன்னதை கேட்டு சேதுவின் கோபம் ஏற ஆரம்பித்தது .

"என்னப்பா இது .............எவ்வளவூ பெரிய விஷயம் ...........எவ்வளவூ கூலா சொல்றே .................கேட்கும் எனக்கே உள்ளே பதறுது ............இதை எல்லாம் எப்படி பா சமாளிப்பே .............மனுசனா அந்த ஆளு ..........."என்றார் சேது தலையை பிடித்து கொண்டு .

"உங்களுக்கு இத்தனை வருடம் கழித்து இப்போ தான் பல்பு எரியுதா என்ன ??????அப்போ இத்தனை வருஷம் அந்த ஆள் மனுஷன் என்றா நினைத்து இருக்கீங்க ...........சோ sad அப்பா ...."என்றான் விஜய் புன்னகையுடன் .

"போடா போக்கிரி ..............எந்த மாதிரி நேரத்தில் காமெடி செய்து இருக்கே நீ .............."என்றார் சேது .

"ஆமா இதற்கு எல்லாம் நேரம் காலமா fix செய்துட்டு இருக்க முடியும் .....உங்க மாமா இன்னும் அடிக்க போகும் கூத்து நிறைய இருக்கு ............மெயின் ஷோவே அங்கே கார்மெண்ட்சில் தான் இருக்கு ........கஜாவின் ட்ராமா என்றால் சும்மா அதிரும் இல்லே .............வாங்க அப்பா .....................ஷோ ஆரம்பிச்சுட போறாங்க............எனக்கும் ரொம்ப போர்ரா இருக்கு அப்பா .......சினிமாவிற்கு போய் ரொம்ப நாள் ஆகுது ....ஒரு நல்ல காமெடி ஷோ மிஸ் செய்துட போறோம் .......இந்த ஆபீஸ் உள்ளவர்களை அங்கே கூட்டி போக இருப்பதே ஒரு பஸ் ......சீக்கிரம் போகவில்லை என்றால் என்னை விட்டு கிளம்ப கூட ஏற்ப்பாடு செய்து இருப்பார் .......அதுவும் இல்லை என்றால் நடராஜா சர்வீஸ் தான் ......"என்றான் விஜய் .

இருவரும் அங்கு காத்திருந்த பஸ்ஸில் ஏற ,பஸ் இந்தர் கார்மெண்ட்ஸ் நோக்கி பயணப்பட்டது .அதே சமயம் இந்தியா முழுவதும் நியூஸ் சேனல் பிளாஷ் நியூஸ் .......இந்த மீட்டிங் பத்தி தான் ஓடி கொண்டு இருந்தது .விஜய் பற்றிய நியூஸ் என்றதும் அவனின் வரலாறே trp ரேட்டிங் காக அக்கு வேறு அணி வேறாக அலச பட்டது .
tt_tct_kc_vietluanfactory_pc.jpg

காரில் வந்து கொண்டு இருந்த மதுரா வந்த மொபைல் அழைப்பை ஏற்றவள் ,"வாட் ...............கம் அகைன் .............என்ன சொன்னே "என்றாள் திகைத்து போனவளாய் .

இவள் அலறிய அலறலில் ஹர்ஷா பதறி போய் காரினை ஓரம் கட்டி நிறுத்தியே விட்டான் .....

"என்னடி என்ன ஆச்சு ......எதற்கு இப்படி பேய் மாதிரி அலறி வைக்கிறே ....."என்றான் ஹர்ஷா .
maxresdefault.jpg

"அந்த கஜா விஜயயை கார்னெர் செய்ய பிளான் போட்டு ஏதோ மீட்டிங் ஏற்பாடு செய்து இருக்கானாம் .....எல்லா சேனல்லிலும் விஜய் பத்தி தான் நியூஸ் ஓடுதாம் .....மேக்னா தான் அதை பார்த்து டென்ஷன் ஆகி போன் செய்து விஷயத்தை சொன்ன இப்போ ........லைவ் மீட்டிங் ரிலே ஆகிறதாம் ...."என்றவள் தன் போனில் பிரபல நியூஸ் சேனல் ஒன்றின் லைவ் டெலிகாஸ்ட் ஒன்றை ஆன் செய்தாள் .
bangladesh-to-set-up-sez-for-chinese-investors_191348.jpg

பேக்டரி கிரௌண்டில் 5000 பேருக்கும் குறையாமல் தொழிலாளர்கள் கூடி இருந்தனர் .ஒரு புறம் ஹெட் ஆபீஸ் பணியாட்கள் .மறுபுறம் மீடியா என்று கூட்டம் அலை மோதியது .மேடை மீது சோனா ,கஜா,லாயர் ,உடன் வந்த பெண்ணிற்கு மட்டுமே சேர் போட பட்டு இருக்க ,விஜய் மேடைக்கு அழைக்க படவும் இல்லை .அவன் அமர நாற்காலியும் தர படவில்லை .

ராவணனின் அரசவையில் அன்று ஆஞ்சநேயருக்கு தான் இருக்கை தர பட வில்லை .....அங்கு இராவணன் ...இங்கு கஜேந்திரன் ராவணனையே மிஞ்சும் ஆள் இல்லையா .....விட்டால் ஸ்ரீராம சக்ரவர்த்திகே அமர ஆசனம் இல்லை என்று சொல்லும் நபர் .....சாதாரண மனுஷன் விஜய்கா இருக்கை தந்து விட போகிறார் . அதாவது அவனை டம்மி என்று உலகத்திற்கு சொல்லாமல் சொல்லும் செயல் .அப்படி செய்வதால் தன் தரம் தான் தாழ்ந்து போவதை கஜா உணரவில்லை. .....அது மட்டும் அல்ல அரசல்புரசலாக விஷயம் கசிந்து இருக்க அங்கு கூடி இருந்த தொழிலாளர்களின் கோபமும் மெல்ல ஏறி கொண்டு தான் இருந்தது .

ஆழம் தெரியாமல் காலை விடுவது என்பதற்கு எடுத்து காட்டாய் இருந்தது கஜாவின் செயல் .யானை தன் தலையில் தானே மண்ணை வாரி போட்டு கொள்ள ஆரம்பித்தது .

மைக் முன் சென்ற கஜா ,"என் கவனத்திற்கு வந்த விஷயம் ....அதனை பத்தி முடிவூ எடுக்கவே இந்த மீட்டிங் ஏற்பாடு செய்து இருக்கேன் ...."என்று ஆரம்பித்தவர் அங்கு இருந்த யாருக்கும் வணக்கத்தையோ ,வருகைக்கு நன்றியோ சொல்லி ஆரம்பிக்கவே இல்லை .அதாவது அங்கு குழுமி உள்ள 5000க்கும் குறையாத தொழிலாளர்கள் அவர்க்கு வேலைகாரர்கள் அவ்வளவூ தான் .....அவர்களுக்கு எதற்கு மரியாதை,வணக்கம் எல்லாம் ??????

PENANCE WILL CONTINUE.....
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ஹாய் நட்பூஸ் .......எல்லோரும் நலமா ......

நான் தான் ஹனியோட மனசாட்சி என்ட்ரி ஆகிட்டேன் ......ரொம்ப நாள் கழிச்சி லேப்டாப் பக்கம் வந்தால் செம்ம surprise அண்ட் வெள்ளம் .......அப்படியே பீலிங்ஸ் பொங்கி போச்சு .

ஹை ஹை என் பெரும் likeable ஆதார் லிஸ்ட் ல இருக்கே ......அப்படியே சும்மா நச்சுன்னு பறக்கும் பீல் கண்ணுஸ் ......

படம் பார்க்கும் பீல் ?????producer /டைரக்டர் /ஆக்டர் யார் காதிலாவது விழுந்ததா ?????அடுத்த R .J .ROWLING ரெடி .....யாருனுனு எல்லாம் தேடவே கூடாது ...அது நாந்தான் .....யாரு பா அங்கே எதோ சைடு டில் கமெண்ட் அடிக்கிறது ...



சென்னையை மீண்டும் கதற வைக்க நாளை காலை புறப்படுகிறேன் நட்பூஸ் .......நல்லா ஒரு வாரம் பேட்டரி recharge செய்துட்டேன் .வெள்ளி முதல் தவம் மீண்டும் தொடரும் ......முடியும் போது அதிக எபிசொட் நிச்சயம் தருவேன் .....

(இந்த ஹனியை நம்பாதீங்க ........மீண்டும் சிம்லா போறேன்ன்னு மூட்டை கட்டிடும் .......எதற்கு சொல்றேன் என்றால் ஆத்துக்காரர் நோர்த் ஈஸ்ட் போக பிளான் போட ஆரம்பிச்சுட்டார் .......உருட்டு கட்டை எடுத்துகோங்கோ ....இல்லைன்னா கன்னி தீவூ மாதிரி இழுத்து வைக்கும் .......)

உங்களை எல்லாம் மீட் செய்யாத போது ஏதோ மிஸ் ஆகும் பீல் ......உங்க கமெண்ட்ஸ் ,கழுவி ஊத்தறது எல்லாம் ஐ மிஸ் ரசகுல்லாஸ் .......நீங்க இல்லாம லைப் போரிங் .

(என்னமா ஐஸ் பார்த்தீங்களா ????ஒரு வாரம் வேறு ஸ்டேட்ல நல்லா tour போய்ட்டு உங்களை எல்லாம் மிஸிங்ன்னு எப்படி புளுகுது பாருங்க )

உங்க அன்புக்கு நன்றி ......இந்த வருடம் உங்களுக்கு எல்லா நலத்தையும் ,வளத்தையும் ,ஆரோக்கியத்தையும் அளிக்க இறைவனை பிராத்திக்கிறேன் .

அப்போ தானே தெம்பா உங்களை கதற அடிக்க முடியும் .....பிபி ,ஹார்ட் ப்ரோப்லேம் உள்ளவங்க பத்திரம் ....எதுக்கும் இன்சூர் செய்துக்கோங்க .....2019 முடிஞ்சு 2020 வந்தாலும் மதுராவின் காதலன் யார் ,யாரை மணப்பாள் என்று சொல்வதா வேண்டாமா என்று ஒரு சின்ன யோசனை .....

(சொன்னேன் இல்லை .....என்னா வில்லத்தனம் பாருங்க ......)
\
மிஸ்ஸு யு ஆல் .......
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
THAVAM 34(3)

c0c295119618b6fcea370f4e934ce368.jpg

மைக் முன் சென்ற கஜா ,"என் கவனத்திற்கு வந்த விஷயம் ....அதனை பத்தி முடிவூ எடுக்கவே இந்த மீட்டிங் ஏற்பாடு செய்து இருக்கேன் ...."என்று ஆரம்பித்தவர் அங்கு இருந்த யாருக்கும் வணக்கத்தையோ ,வருகைக்கு நன்றியோ சொல்லி ஆரம்பிக்கவே இல்லை .அதாவது அங்கு குழுமி உள்ள 3000க்கும் குறையாத தொழிலாளர்கள் அவர்க்கு வேலைகாரர்கள் அவ்வளவூ தான் .....அவர்களுக்கு எதற்கு மரியாதை,வணக்கம் எல்லாம் ??????


இங்கு சில காலம் மேனேஜிங் டைரக்டர்ராக பணி புரிந்த விஜய கருணாகரன் ,ஜெய்ப்பூர் இளவரச குடும்பத்தை சேர்ந்த சூர்யா பிரதாப் ரத்தன் சிங்க் அவர்களின் மேல் உள்ள பகையில் ,தொழில் பொறாமையில் சூர்யா சார்ருக்கு சொந்தமான கண்டைனர் ஒன்றை கொளுத்தி இருக்கிறார் ........செய்ததை இன்று காலையில் கருணாகரனே என்னிடம் ஒத்து கொண்டார் ........கருணாகரனின் இந்த வெறி செயலுக்கும் எனக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை ......இது கருணாகரனின் தனி பட்ட தொழில் பகை ......ரெண்டு நாட்களுக்கு முன் இவர்கள் இருவரும் தொழில் பகை காரணமாக ஹாஸ்பிடல் என்று கூட பாராமல் அடித்து கொண்ட செய்தி உங்களுக்கு நினைவூ இருக்கும் .......நான் கஷ்ட பட்டு வளர்த்த தொழில் இது போன்ற ஈன செயல்களால் அழிவதை என்னால் பொறுத்து கொள்ள முடியாது .....சூர்யா சார் கருணாகரன் மீது வழக்கு பதிவூ செய்தால் அதை என் குடும்பத்திலோ ,இங்கு தொழில் முறையிலோ யாரும் எதிர்க்க மாட்டோம் ......எங்களால் முடிந்த உதவி சூர்யா சார்ருக்கு செய்ய தயாராக உள்ளோம் .......தவிர கருணாகரன் இந்த தொழிலில் இருந்து பொய் கணக்கு காட்டி நெறைய வரி ஏய்ப்பு செய்து இருப்பதாகவும் ,பணம் கையாடல் கிட்ட தட்ட 10 கோடி அளவுக்கு பண மோசடி செய்து இருக்கிறார்.இவரிடம் தொழிலாளர்கள் போனஸ் என்று கொடுத்த பணம் அது .....இது வரை இங்கு உள்ள தொழிலாளர்களுக்கு அந்த பணம் கொடுக்க படவே இல்லை ."என்று பேசி கொண்டே போக கீழ் கூட்டத்தோடு கூட்டமாய் நின்று கொண்டு இருந்த விஜய் வந்த சிரிப்பை கட்டுப்படுத்த திணறி கொண்டு இருந்தான் .


"நான் சொன்னேனா இல்லையா அப்பா ........கஜா ஸ்கெட்ச் செமையா இருக்கும் என்று ......பாருங்க என்னமா performance கொடுக்கிறார் ......சிவாஜி தோத்தார் .........சினிமாவிற்கு புதிய வில்லன் கேரக்டர் ரா இவரை போடலாம் .......கதை ,வசனம் என்று எல்லா இடத்திலும் சும்மா பூந்து விளையாடுறார் இல்லையா அப்பா ?"என்றான் சேதுவிற்கு மட்டும் கேட்கும் வண்ணம் .


பதிலுக்கு அவனை முறைத்தார் சேது ,"என்ன விளையாட்டு வேண்டி கிடக்கு கருணா உனக்கு .....அந்த ஆளு பாட்டுக்கும் தன் இஷ்டத்திற்கு உன் மேல் இல்லாத பழி எல்லாம் போட்டுட்டு இருக்கான் .........நீயும் அந்த ஆளை பாராட்டிட்டு இருக்கே ......பொறுமைக்கும் ஒரு அளவூ உண்டு கருணா ......"என்றார் .


"இருங்க பா ......அதற்குள் எரிமலை ஆனால் எப்படி .......மூச்சு வாங்கிட்டு இன்னமும் ஏதோ என்னை பத்தி புகழ்ந்து சொல்றார் பாருங்க உங்க மாமா ......எல்லாம் மொத்தமாய் கேட்டு முடிச்சுட்டு அப்புறமாய் ரியாக்ஷன் காட்டுங்க ...."என்றான் விஜய் புன்னகையுடன்


"இது எல்லாவற்றையும் கூட பொறுத்து கொள்ளலாம் ......ஆனால் கருணா செய்த மிகவும் அருவருக்க தக்க இன்னொரு செயல் ஒன்று தான் ,இந்த தொழிலில் இனி கருணா இருக்கவே கூடாது என்று என்று என்னை முடிவூ எடுக்க வைத்தது .....இங்கே வா மா பூ ....."என்ற உடன் சோனா அருகில் அமர்ந்து இருந்த அந்த பெண் ---அவள் தோழி எழுந்து வந்தாள் .


அப்படியே பயந்து பயந்து வருவது போல் ஒரு நடை .....குடும்ப குத்துவிளக்கு போல் வணக்கம் வைத்தல் ,குனிந்த தலை நிமிராத அச்சம் ,மடம் ,நாணம் ,பயிர்ப்பு கொண்டவள் என்று பார்ப்பவர்கள் நம்பணும் என்று ஏகத்துக்கும் பதவிசு அவள் காட்ட ,அதை நம்பும் கேனையன் /கேணைச்சி அங்கு யாரும் இல்லை என்று பாவம் அவளுக்கு மட்டும் அல்ல அவளை கூட்டி வந்த அந்த அதி மேதாவிகளுக்கும் புரியவில்லை .
2feb5ca95a5741af5442d31329455441.jpg

"இவ என் பேத்தியின் தோழி பூ ....... இந்த தொழிசாலையில் தான் வேலை பார்க்கிறாள் .......இவ குடும்பம் மிகவும் ஏழை குடும்பம் ......இவள் சம்பாத்தியதை நம்பி தான் இவள் அப்பா ,அம்மா ,அண்ணா ,தங்கை ,அக்கா என்று பத்து பேர் இருக்காங்க .......குடும்ப வறுமை போக இவள் வேலைக்கு வந்தால் .............இந்த வேலை நிலைத்து இருக்க வேண்டும் என்றால் ......தன்னோடு இருக்க வேண்டும் என்று கருணாகரன் இவளுக்கு பாலியல் தொந்தரவூ கொடுத்து இருக்கிறான் ....இந்த பிள்ளை அதை வெளியே சொல்லவும் முடியாமல் ,கருணாவின் மிருகத்தனத்திற்கு அடிபணியவும் முடியாமல் .....என்னிடம் வந்து கதறி அழுதாள் ......அதனால் கருணாகரனை பதிவியில் இருந்து தூக்கறேன் ................."என்றவர் ஆஆஆஆ என்று அலறியவாறு கீழ் விழுந்தார் .

actor-ashish-vidyarthi-childhood-photos.jpg
சேது தான் கஜேந்திரனை அத்தனை பேர் முன்னிலையிலும் அடித்து இருந்தார் .சாது மிரண்டால் காடு தாங்காது என்பது இது தான் .
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"மனுஷனாயா நீயி ........அந்த புள்ளையை பத்தி இப்படி அபாண்டமாய் பழி சொல்றரியே ......நீ எல்லாம் நல்லாவா இருப்பே ........உனக்கு எல்லாம் நல்ல சாவே வராது ........அவன் ஸ்ரீராமன் .......காதலிச்சவளை தவிர வேறு எவளையும் மனதால் கூட நினைக்காதவன் .......அவன் பொம்பளை பொறுக்கியா .......அவன் இழிவானவனா .......போய்யா வாயில் பச்சையா ஏதாவது வந்துட போகுது ........ஏன்யா .........நிறைமாத கர்ப்பிணியான சிவகாமி அத்தையை நடு தெருவில் விட்ட நீரு நல்லவர் ........இன்னொருத்தியின் புருசனுக்கு ஊத்தி கொடுத்து அந்த ஆள் செத்த உடன் ,இன்னொரு பெண்ணை அவள் பணம் ,சொத்திற்காக ஏமாற்றி மணந்த நீர் யோக்கியன் ........என்ற மகன் கருணா கெட்டவனா ........இன்னொரு வார்த்தை பேசினே உம்மை இதே இடத்தில வெட்டி போலி போட்டுட்டுடுவேன் ......."என்றார் சேது உக்ர நரசிம்ம மூர்த்தியாய் .



"டாட் ....வாட் இஸ் திஸ் .......இப்படியா சீப் பெஹவியர் செய்வீங்க ........கருணா கேரக்டர் சரி இல்லை .....கிரண்டப்பா அதை எல்லோரும் தெரிஞ்சுக்கட்டும் என்று சொல்றார் ......ஆஆஆ "என்று அவளும் சேது கையால் அடி வாங்கி ,அடியின் வீச்சு தாங்க முடியாதவளாய் கீழே விழுந்தாள்


"வா டீ நான் பெத்த மகளே ........என்னடீ சொன்னே கருணா கேரக்டர் சரி இல்லையா ........அவன் தங்கை ரூபிணி கழுத்தில் கத்தி வைக்காத குறையாய் அவள் உயிரோடு விளையாடி கருணாவை கார்னெர் செய்து மணந்த நீ சொல்றியா அவனை பத்தி ..........சாக்கடை எல்லாம் கடவுளை பத்தி பேச கூடாதுடீ .......உன் வண்டவாளத்தை தண்டவாளம் ஏத்தவா .....?.......கல் ஆனாலும் கணவன் ,புள் ஆனாலும் புருஷன் என்று கணவனை தெய்வமாய் ,கணவன் கட்டிய திருமாங்கல்யத்தை உயிராய் நினைக்கும் பெண்கள் வாழும் நாடு இது ......மூதேவி .......நீ என்ன செய்தே .......ஒரே மணி நேரத்தில் அந்த திருமாங்கல்யத்தை கழற்றி குப்பை கூடையில் போட்டு விட்டு அந்த சுமனோடு ஹனிமூன்னுக்கு போனே .....கட்டிய கணவன் கூட போவது தான் ஹனிமூன் ......கண்டவனோடு நினைத்த நேரத்தில் சுத்துவது ,ட்ரிங்க்ஸ் ,சிகரேட் ,மிட்னயிட் பார்ட்டி ,பப் ,குடி கும்மாளம் ,கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று வாழும் உன்னை போன்ற ஈன பிறவிகளுக்கு எல்லாம் வேறு பெயர் இருக்கு ......இதுல நீ அவனை பத்தி கமெண்ட் அடிக்காரியா ....உனக்கு முதலில் அந்த தகுதியே இல்லை .......திருமணம் ஆகி நாலு வருஷத்தில் நீ தான் கருணாவை சுத்தி சுத்தி வருகிறே ....எப்படியாவது அவனை அடைய வேண்டும் என்று ........அவன் விரல் நகம் கூட உன் மேல் பட்டு இருக்கா சொல்லு ??????உரிமை உள்ள உன்னிடமே அவன் அப்படி நடந்தது இல்லை .......இதோ உன் தோழி .....சீதையின் மறு வடிவம் என்று ஷோ காட்டிட்டு நிற்கிறாளே ....இவளை தான் ஓடி ஓடி விரட்டினானா .......இங்கே இருக்கறவங்க என்ன லூசுன்னு நினைப்பா உங்களுக்கு .....இல்லை நீங்க சொல்வதை எல்லாம் நம்ப எங்களுக்கு என்ன புத்தி கெட்டு போய் இருக்கா ........உன்னை மாதிரியே சாக்கடையாக தானேடீ இருப்பா உன் தோழி .....கேடு கெட்ட ஜென்மங்கள் .......த்தூ இந்த பிழைப்புக்கு நாலு முழம் கயிற்றில் தொங்கிடலாம் ........"என்றவர் அந்த பூவிற்கும் ஒரு ஆயுத பூஜை நடத்தினார் .


"கஜா ......உமக்கு என்று பேர் இருக்கா என்ன ......பிரெஸ்டிஜ் இருக்கா என்ன ....இந்த தொழிலை நீர் வளத்தீரா ......காதில பூ சுத்திட்டு எவனாவது கேனையன் வருவான் அவனிடம் சொல்லு இந்த கதையை ........இந்த தொழிலை கடன் தொல்லை தாங்க முடியாமல் இழுத்து மூட போனது மறந்து போச்சா ......இன்று இந்திய அளவில் பேர் சொல்லும் அளவூ வளர்ந்து நிற்க காரணம் என் மகன் கருணாகரன் தான் .....அவன் மட்டும் இல்லை என்றால் இந்நேரம் திவாலாகி இருப்பே ............ ச்சை மனுஷ ஜென்மமாய் இருந்தால் இது எல்லாம் புரியும் .....உம்மை மாதிரி இதோ இவளை மாதிரி ஆளுங்க இருக்கும் இடத்தில இருப்பதே கேவலம் ......"என்றவர் மேடையில் மற்றவர் அதிர்ந்து நிற்கும் போதே வெளியேறி விட்டார் .

அவர் வெளியேறிய உடன் தொழில் சங்க தலைவர் எழுந்து நின்றார் .....


"வணக்கம் சார் ....நான் இந்த தொழில் சாலையின் தொழிற்சங்க தலைவர் .......நீங்க சொன்னது போலெ கருணா தம்பி போனஸ் கொடுக்காம எல்லாம் எல்லாம் எங்களை ஏமாத்தவில்லை ......இங்கு வேலை செய்யும் 5000 தொழிலாளர்களுக்கும் வங்கி கணக்கு ஆரம்பித்து ,சம்பளம் ,போனஸ் எல்லாம் நேரடி வங்கி கணக்கில் சேர்த்து விடுகிறார் .....எல்லோருக்கும் ஹெல்த் இன்சூரன்ஸ் ,விபத்து காப்பீடு ,எங்க பிள்ளைகளுக்காக செல்வ மகள் /செல்வ மகன் திட்டம் என்று எல்லாமே செய்து கொடுத்து தான் இருக்கிறார் ......வெளியே மத்த தொழிற்சாலைகளில் கொடுப்பதை விட 5% அதிக சம்பளம் இங்கு கிடைக்கிறது .......சொந்த வீடு ,நிலம் வாங்க ,படிப்புக்கு ,திருமணத்திற்கு என்று எல்லாவற்றிக்கும் கடன் கிடைக்க ஏற்பாடு செய்து இருக்கிறார் ......கிட்டத்தட்ட நீங்க இந்த தொழிற்சாலை ஆரம்பித்தது முதல் இங்கே வேலை செய்கிறேன் .......நீங்க மூடும் அளவூ போன தொழில் இது .....இன்று இந்த அளவிற்கு உயர்ந்து இருப்பதற்கு எங்க கருணா தம்பி தான் காரணம் .......தெரியாம தான் கேட்கிறேன் ....உங்களுக்கு என் பேராவது தெரியுமா .....ஆனா கருணா தம்பிக்கு இங்கு உள்ள எல்லோரை பற்றியும் நன்கு தெரியும் .....எங்க குடும்பத்தில் ஒருத்தர் தம்பி .......எங்க வயத்தில் அடிக்கும் கீழ்த்தரமான வேலை எல்லாம் உங்களை போன்றவர்களுக்கு வேண்டும் என்றால் வரும் .....கருணா தம்பி கை வெகு சுத்தம் ......."என்றார் அவர் கோபத்துடன் .


ஆடிட்டர் எழுந்து நின்று ,"சார் ....இந்த கம்பெனியின் ஆடிட்டர் நான் .......கருணா சார் பொறுப்பு ஏற்ற பிறகு அரசாங்கத்திற்கு கட்ட வேண்டிய எந்த வரியும் காட்டாமல் பொய் கணக்கு காட்டியோ ,வருமானமே இல்லை என்று பொய் கணக்கோ இருந்தது இல்லை ......இந்த ஆடிட்டிங் அரசாங்கம் ஆடிட்டர் ஒருவரும் சரி பார்த்து ஒப்புதல் அளித்து உள்ளார் .......அப்படி போலி கணக்கு காட்டியதன் ப்ரூப் எங்கே சார் .......இப்படி பொய் கணக்கு காட்டுவதாக வரி ஏய்ப்பு செய்ய துணை போனாலே ஆடிட்டர் லைசென்ஸ் கான்செல் ஆகும் சார் ......நீங்க கருணா சார்ரை மட்டும் அல்ல ......எங்களையும் ,அரசாங்க அதிகாரிகளையும் தகுந்த ஆதாரம் இல்லாமல் திருடர்கள் என்று சொல்லாமல் உலகத்திற்கு சொல்கறீர்கள் .....இதற்கு உங்கள் மேல் நாங்கள் மானநஷ்ட வழக்கு பதிவூ செய்யலாம் சார் ......."என்றார் .
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இன்னொரு பெண்மணி எழுந்து ,"சார் !இங்கே மொத்தம் 5000 தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள் .....இதில் 1875 பேர் பெண்கள் ........50 பெண்கள் சேர்ந்து ஒரு குழு என்று 37 குழுக்கள் உள்ளது .....ஒவ்வொரு குழுவிற்கும் ராணி ஜான்சி ,வள்ளியம்மை ,குயிலி ,முத்துலட்சுமி ரெட்டி ,ராணி சென்னம்மா ,ஜஹல்காரியா பாய் ,உமாபாய் ,சாவித்திரி பாய் ,கேப்டன் லட்சுமி சேகல் ,மூல்மதி ,ஜானகி அதி நாகப்பன் .....இது எல்லாம் என்ன என்று பார்க்கறீங்களா .....இந்த 37 குழுக்களின் பெயர் ....ஒவ்வொரு குழுவிற்கு ஒரு கண்காணிப்பாளர் ......அந்த குரூப் லீடர்களை கண்காணிக்கும் பொறுப்பு என்னுடையது ......ஒவ்வொரு குழுவிற்கு தனி அடையாளம் ,id கார்டு உண்டு .......ரெஜிஸ்டெரஷன் உண்டு ......அவர்களின் ஆதார் உட்பட எல்லா டீடெயில்ஸ் இங்கே என் கையில் இருக்கும் palm டாப்பில் உள்ளது ........இந்த 37 குழு தலைமை கண்காணிப்பாளர்களை விசாரித்து விட்டேன் .......கருணா சார் மேல் பழி போடும் அந்த பெண் இந்த தொழிற்சாலையில் வேலை பார்பவளே இல்லை .......அப்படி வேலை செய்பவளாக இருந்தால் எந்த குழுவில் இருக்கிறாளோ அந்த குழுவின் id எங்கே .....????ஒரு வேளை ஹெட் ஆபீஸ்சில் வேலை செய்பவளாக இருக்கலாம் ...."என்றார் அவர் .


"சான்ஸ் இல்லை .......ஹெட் ஆபீஸ் மதுராட்சி இருந்தவரை அவள் கண்காணிப்பில் தான் 30
பெண்கள் வேலை பார்த்தோம் .....அங்கு வேலை செய்யும் எல்லா பெண்களும் எங்களுக்கு அத்துப்படி .....இப்போ பெண்களின் கண்காணிப்பாளர் நான் தான் .....இந்த பெண் தலைமை அலுவலகத்திலும் வேலை செய்பவள் இல்லை ......இது கருணா சார்ரை இந்த வேலையை விட்டு தூக்க யாரோ செய்யும் சதி .......கருணா சார் இங்கு உள்ள பெண்களுக்கு ஒரு அண்ணன் ,தம்பி ,மகன் ,பேரன்,பாதுகாவலனாக ,இன்னும் சொல்ல போனால் ஒரு தந்தை ஸ்தானத்தில் இருந்து தான் எங்களை பார்த்து கொள்கிறார் .......வேலையை காட்டி கட்டிலுக்கு வா என்று சொல்லும் மனித மிருகமாய் அல்ல ....."என்றாள் சுபா கோபத்தோடு .


அதற்கு மேல் சும்மா இருக்க அங்கு உள்ள பெண்கள் என்ன கையால் ஆகாதவர்களா என்ன ........விஜய் மேல் பாச வெறி பிடித்தவர்கள் ஆயிற்றே ......அவர்களின் ரோல் மாடல் மீது அத்தனை கேவலமாக பழி போட்டு ஒருத்தி தப்பி விட முடியுமா என்ன ......அந்த பூவை பின்னி எடுத்து விட்டார்கள் ......


நிலைமையை சமாளிக்க ,பூவின் உயிராவது மிஞ்ச விஜய் தலை இட வேண்டியதானது .


"சோபா அக்கா ,சின்னம்மாக்கா ,சுபா ........நிறுத்துங்க மா ......நிறுத்துங்கன்னு சொல்றேன் இல்லையா .....ப்ளீஸ் நிறுத்துங்க ........போதும் உயிர் போயிட போகுது ........போலீஸ் கிட்டே ஒப்படைச்சிடுலாம் .......போதும் அக்கா ......ப்ளீஸ் நிறுத்துங்க எனக்காக ......"என்று அவன் மைக் முன் சென்று கெஞ்ச பூ நாரகாமால் தப்பித்தது .


PENANCE WILL CONTINUE....
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
THAVAM 34(4)

bairavaa-wallpaper-image-07.jpg

நிலைமையை சமாளிக்க ,பூவின் உயிராவது மிஞ்ச விஜய் தலை இட வேண்டியதானது .

"சோபா அக்கா ,சின்னம்மாக்கா ,சுபா ........நிறுத்துங்க மா ......நிறுத்துங்கன்னு சொல்றேன் இல்லையா .....ப்ளீஸ் நிறுத்துங்க ........போதும் உயிர் போயிட போகுது ........போலீஸ் கிட்டே ஒப்படைச்சிடுலாம் .......போதும் அக்கா ......ப்ளீஸ் நிறுத்துங்க எனக்காக ......"என்று அவன் மைக் முன் சென்று கெஞ்ச பூ நாரகாமால் தப்பித்தது .

"இங்கு உள்ள என் குடும்பத்திற்கு முதலில் என் வணக்கம் .....உங்களின் அன்புக்கு முன் என்ன கைமாறு செய்ய போகிறேன் என்று தெரியவில்லை ......நான் என்னை பற்றி நிரூபிக்க வேண்டிய அவசியமே இல்லாமல் செய்து விட்டிர்கள் ...... ஒரு மனிதனுக்கு காசு ,பணத்தை ,சொத்து ,சுகத்தை விட இப்படி சொந்தம்,நட்பு ,குடும்பம் கிடைப்பது தான் மிக பெரிய சன்மானம் ,உயர்ந்த கெளரவம் .நன்றி என்ற ஒரு வார்த்தை உங்கள் அன்புக்கு ஈடு ஆகாது .....கஜா சார்ருக்கு நான் இந்த தொழிற்சாலையில் மேனேஜிங் டைரக்டர் ஆக இருப்பது பிடிக்கவில்லை .....ஏதாவது ஒரு காரணம் சொல்லி என்னை வெளியே அனுப்பி விட்டு அவரின் பேத்தி அடுத்த டாடா ,பிர்லா ,தொழிலில் சூர புலி ,சோனா அவர்களை இந்த கம்பெனியை நிர்வகிக்க ஏற்பாடு செய்ய விரும்புகிறார் .....அதை என்னிடமே சொல்லி இருந்தால் நானே விலகி இருப்பேன் .....எதற்கு இப்படி தலையை சுற்றி மூக்கை தொட முயன்றார் என்று தெரியவில்லை ....வயசாகி போனால் இப்படி தான் யோசிக்க தோன்றும் ...முத்தும் முன்னே அவர் நல்ல மனநல மருத்துவரை காண்பது அனைவர்க்கும் நலம் .....உங்களுக்கு எல்லாம் என்னை பற்றி தெரியும் என்பதால் என் பெயர் கெடாமல் காப்பாற்றி விட்டிர்கள் ......நானும் என்னுடைய விளக்கத்தை கொடுக்க வேண்டும் இல்லையா .....சூர்யாவின் கண்டைனர் எரிந்ததற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை .....இந்த மாதிரி லூசு தனமாய் யோசிக்கும் ஆள் நான் கிடையாது ......எனக்கு எதிரியாய் இருப்பவனை அடியோடு அழித்து அவன் கல்லறை மேல் வெற்றி கொடி நாட்டுவது எல்லாம் என் ஸ்டைல் கிடையாது .......என் எதிரி என்னை நெருங்கவே முடியாத உயரத்திற்கு செல்வது தான் என் வழி ......என் திறமை ,உழைப்பு மேல் நம்பிக்கை வைப்பவன் நான் ......தீ குச்சியின் மீது இல்லை என்பது என்னை அறிந்தவர்களுக்கு தெரியும் .....பாவம் கஜா சார் ......இதை எல்லாம் தெரிஞ்சுக்க அவருக்கு நேரம் இல்லை .......ஒரு தப்பை செய்யாதவனிடம் வந்து நீ தான் தப்பை செய்தே என்று திரும்ப திரும்ப சொல்லி காட்டுவது எந்த அளவுக்கு கோபத்தை உண்டாகும் என்று கஜா சார்ருக்கு தெரியவில்லை ......அப்படி கோபத்தில் சொன்னதை வைத்து இவர் எட்டடுக்கு மாளிகையே கட்டுவர் என்று நினைக்கவில்லை .....கஜா சார் ....சூர்யாவின் கண்டைனர் கொளுத்தி அவனை வெல்ல நினைக்க நான் பொட்டை கிடையாது .....அப்படி நான் தான் செய்தேன் என்று மீண்டும் நீங்க சொன்னால் அதை இத்தனை பேரின் முன்னும் நிரூபிக்கும் கடமை உங்களுக்கு உண்டு ....என் மேல் பழி போடுவது நீங்க தானே ....அப்போ ப்ரூப் கொடுங்க சார் ......அட்லீஸ்ட் தீக்குச்சியுடன் நான் நிற்கும் போட்டோ போதும் ."என்றான் விஜய் நக்கலுடன் .


"அடுத்தது 10 கோடி பணம் திருடினேன் .....சார் நீங்க கொடுத்த பணம் தொழிலாளர்களிடம் சேர்த்து விட்டேன் ......அதற்கான கணக்கு ஆடிட்டர் இடம் இருக்கு ....5000 பேர் சைன் போட்டு வாங்கி கொண்ட பைலை காட்டுறேன் ......ஆடிட்டர் சார் ஏற்கனவே வரி ஏய்ப்புக்கு பதில் சொல்லி விட்டார் ......அடுத்தது பூ .......semma ட்ரிக் இது கஜா சார் ......உங்க ரேஞ்சுக்கு கையில் பிள்ளையோடு ஒருத்தி வந்து நிற்பா என்று எதிர் பார்த்தேன் ......சப்புன்னு போச்சு சார் ......சூர்யா கண்டைனர் ,பணம் திருடியது ,இப்போ இந்த பெண் என்று நீங்க மீடியா முன் என் மேல் ஆதாரம் இல்லாத குற்றசாட்டு சுமத்தியதற்காக என் வக்கீல் மிஸ்டர் சிம்மேஸ்வரன் மான நஷ்ட வழக்கு 30 கோடிக்கு தொடர ஏற்பாடு செய்து இருக்கிறார் .......கோர்ட்டுக்கு ஆதாரம் நீங்களே கொடுத்து விட்டீர்கள் .....நன்றி ........இவர் இத்தனை செய்ததற்கு பின் இவரிடம் வேலை செய்ய தன்மானம் உள்ள எந்த ஆண்மகனும் முன் வர மாட்டான் ......நான் ஆம்பளை ......இனி மேல் இவருக்கும் ,இவர் தொழிலுக்கும் எனக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை என்று இந்த ஸ்டாம்ப் பேப்பரில் எழுதி சைன் போட்டு இருக்கேன் ......இந்த நொடியோடு இந்தர் குரூப் ஆப் இண்டஸ்ட்ரீஸ்சுக்கும் எனக்கும் எந்த வித தொடர்பும் இல்லை ...."என்றான் விஜய் மிக கம்பீரமாக .

"தம்பி அப்போ உங்களுக்கு வேலை ............."என்றார் தொழிலாளர் ஒருவர் .


"அண்ணே ....கஜா சார் மண் குதிரை மாதிரி இவரை நம்பி பாக்அப் பிளான் இல்லாமல் இருக்க முடியுமா ......ஏற்கனவே "angel கார்மெண்ட்ஸ் "என் நண்பன் நடத்துகிறான் .....அவனோடு சேர்ந்து அங்கு வேலை பார்க்க போகிறேன் ....என்னை பற்றி கவலை வேண்டாம் ....நன்றி ......வருகிறேன் ..."என்றவன் சிங்க நடை போட்டு வெளியேறினான் .
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சேதம் விளைவிக்க வந்த கஜா புயலுக்கே ,ஜஸ்ட் லைக் தட் என்று அலட்டி கொள்ளாமல் தன் ஸ்டைலில் சேதம் விளைவித்து விட்டான் விஜய் .தாங்கள் அவனுக்கு வெறும் குழி மட்டுமே பறித்து வைக்க அவன் அதை தங்களுக்கு புதைகுழியாகவே மாற்றி விட்டான் என்று சேதாரம் பலமான பின் உணர்ந்தார் கஜா .விஜய் மானத்தை உலகத்தின் முன் வாங்கி அவனை செல்லா காசாக்க அவர் முனைய அது பூமராங் மாதிரி திருப்பி வந்து அவரையே தாக்கி அவர் ,சோனா இருவரின் அந்தரங்கத்தை கூவத்தை விட நாறடித்து விட்டது .அதற்கு எல்லாம் அவர்கள் கவலை படும் ஜென்மங்கள் இல்லை தான் என்றாலும் ஒட்டுமொத்தமாக ஒரே நேரத்தில் உலகத்தின் முன் ,மீடியா ஒட்டுமொத்த சோசியல் நெட்ஒர்க் முன் அடி வாங்கியது அவர்களை உலுக்கி தான் விட்டது

விஜய் இல்லாத இந்தர் இண்டஸ்ட்ரீஸ் எதிர்காலம் இனி என்ன ?"என்று அவர் முன்னாலேயே மீடியா விவாதிக்க ஆரம்பித்து விட்டது அதாவது செல்லா காசாக அவர் மாறி போனார் .


விஜயயை சோனா காலில் விழ வைக்க தான் அவர் முயன்றது .ஆனால் ஒரு விதத்தில் அது அவனுக்கு விடுதலையை கொடுத்து விட்டது .அந்த கணம் அவர் உணர்ந்தார் 5000 பேர் கொண்ட அன்பு சாம்ராஜயத்தின் சக்ரவர்த்தியை தான் பகைத்து கொண்டு இருக்கிறோம் என்பதை .

பணம் கொடுத்தால் கண்டைனர் கொளுத்துவது மட்டும் இல்லை ஆட்களை கூட போட்டு தள்ள அடியாட்கள் பல பணக்காரர்களுக்கு ,தொழில் அதிபர்களுக்கு உண்டு தான் .....ஆனால் இதில் என்ன வீரம் இருக்க போகிறது ????இல்லை இது தான் ஆண்மைக்கு அழகா ?????


அந்த காலத்தில் போர்க்களத்தில் முழங்கைக்கு மேல் வெட்டுக்காயம் உள்ள போர்வீரனை எந்த பெண்ணும் மணக்க முன்வர மாட்டார்களாம் .தன் மகனுக்கு முழங்கைக்கு மேலேயே ,முதுகிலோ காயம் இருந்தால் பெத்த தாய் கூட பால் கொடுத்த தன் மார்பினை வெட்டி கொள்ள வாளுடன் போனதாக அகநானூறு பாடல் ஒன்று இருக்கிறது .கஜா செய்தது முதுகில் குத்தும் கோழை தனம் .

வீரம்,ஆண்மை என்பது எதிராளியின் பொருட்களை கொளுத்துவது இல்லை ......அசராமல் நின்ற இடத்தில இருந்தே தனக்கு விரிக்க பட்ட வலையில் இருந்து தப்பி அந்த வலையில் பிடிக்க வந்தவனை மாட்டி விடுவது .சிவகாமி சொன்னது போல் "நாம் அடிப்பது ஒரு அடியாக இருக்க வேண்டும் .....அப்படி அடித்தால் எதிராளி மறுமுறை எழவே கூடாது "பாவம் கஜா இதை எல்லாம் தெரிந்து வைத்து இருந்தால் அத்தனை பேரின் முன் கொஞ்சமாவது மானத்தை காப்பாற்றி இருக்கலாம் .


விஜயயை அவர் ரவுடி ,திருடன் ,காமுகன் என்று தான் வெளிப்படுத்த முனைந்தார் ....ஆனால் விஜய்
உலகம் அறிய அவர் மூளை கலங்கி போய் பைத்தியம் பிடித்து இருக்கிறது என்று நேரிடையாகவே குற்றம் சாட்டி அதனால் தான் ,ஒன்றுமே தெரியாத ,எதற்கும் லாயக்கு இல்லாத சோனா தான் அந்த கம்பெனியின் முதலாளி என்று நியமிக்க துடிக்கிறார் ,அவர் மண் குதிரை ,உண்மையாய் உழைத்த தனக்கே இந்த நிலைமை என்றால் 5000 தொழிலாளர்களின் எதிர்காலம் என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம் என்று அவரின் அஸ்திவாரத்திற்கே வேட்டு வைத்து விட்டான் .
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தொழிலாளர்கள் ஒரு புறம் ,ஷேர் ஹோல்டேர்ஸ் குழு ஒரு புறம் என்று கூடி கூடி பேசினார்கள் .அங்கு குழுமி இருந்தவர்களின் இகழ்சி பார்வை ஒட்டுமொத்தமாய் தாக்க துண்டை காணோம் துணியை காணோம் என்று கஜா ,சோனா ,லாயர் ஓட்டம் எடுத்தனர் .பூவை மொத்தியது போலெ ஒட்டுமொத்தமாய் சேர்ந்து மொத்தினால் உயிர் மிஞ்சாது இல்லையா .....


விஜய் வெளியேற அவனோடு அங்கு வேலையை ரிசைன் செய்து விட்டு சுபா ,பாலாஜி ,இன்னும் இருபது பேர் கிளம்பி விட்டார்கள் .கஜா 10 அடி பாய்ந்தால் விஜய் 300 அடி பாய்ந்து முன்னால் இருந்தான் .அவன் அமைதி காத்தது பாசத்திற்காக தான் .ஒரு புறம் தங்கை .மறுபுறம் மனதால் கிடைத்த பெற்றோர் சேது ,கனகா .விஜய் போன்ற தன்மானம் மிக்கவன் அடிபணிவது என்றால் அது பாசத்திற்காக மட்டுமே தானே இருக்கும் இவர்களுக்காக தன்மானத்திற்கு ஏற்பட்ட இழுக்கு எல்லாம் தாங்கி கொண்டு இருந்தான் என்றாலும் அமைதியாய் இல்லை .


கஜா என்ற hyena இது போல் என்றாவது தன் சுயரூபத்தை காட்டிவிடும் என்று முன்கூட்டியே கணக்கு போட்டு தான் "angel கார்மெண்ட்ஸ் " அவன் ஆரம்பித்தது .நண்பனின் தொழில் என்று சொன்னாலும் அது விஜய் உருவாக்கிய தொழில் .அவன் நண்பன் ஆல்வின் நடத்துவதாக வெளி உலகத்திற்கு காண்பிக்க பட்டாலும் உண்மையில் விஜய் பிசினஸ் பார்ட்னர் அவன் நண்பன் ஆல்வின் அல்ல .நண்பி மதுராக்ஷி தான் .அவள் அறியாமலே அவளை ஒரு தொழில் நிறுவனத்தின் தலைவியாக்கி அழகு பார்த்து கொண்டு இருந்தான் அந்த காதலன் .

இன்று கஜா அடித்த கூத்தில் அவரிடம் கை கட்டி வேலை பார்க்கும் அவல நிலை மாறி அவனின் சொந்த உழைப்பில் மலர்ந்து ,இந்திய அளவில் ஆரம்பித்த இரு வருடங்களிலேயே நல்ல பெயர் பெற்று முன்னேறி கொண்டு இருந்தஅந்த தொழில் சாம்ராஜ்யத்தின் ஏகபோக சக்ரவர்த்தியாய் மாறி போனான் விஜய் .கஜா அந்த நிறுவனத்தையும் முடக்க எவ்வளவூ உள் வேலைகள் செய்து இருக்கிறார் .அவை வெற்றி பெறாமல் போனதன் மர்மம் பின்னால் விஜய் இருந்தது தான் என்று இப்பொது புரிந்தது அவருக்கு .


அந்த நேரலை பார்த்து பலர் பல விதத்தில் ரியாக்ட் செய்தார்கள் என்றால் மிகையல்ல .

காரில் சென்னை நோக்கி குடும்பத்துடன் கிளம்பி இருந்த மேக்னா தன் தந்தையிடம் ,"டாட் இனி அவர் கஷ்ட பட கூடாது .angel கார்மெண்ட்ஸ்சில் இன்வெஸ்ட் செய்யுங்க உடனே .......இந்தேர் கார்மெண்ட்ஸ் இனி எழவே கூடாது."என்றாள் .
tollywood-celebrities.jpg

இவள் விஜய் பின்னால் நிற்பது அவன் அவள் குழந்தைகளின் தகப்பன் ,அவளின் உலகம் அறியா காதலன் ,கணவன் என்ற முறையினாலா இல்லை உடன் படித்த நண்பன் என்ற காரணமான என்று எதிர்காலம் தான் பதில் சொல்ல வேண்டும் .

தன் அலுவலகத்தில் உத்தமோடு நேரலையை பார்த்து கொண்டு இருந்தான் சூர்யா .
19DMCRAMCHARAN.jpg

"என்ன பாஸ் இது ....அந்த ஆளுக்கு என்ன பைத்தியம் முத்தி போச்சா என்ன ?"என்றான் உத்தம் .

"ஒரு சமஷ்கிருத பழமொழி கேள்வி பட்டு இருக்கிறயா உத்தம் ????"விநாச காலே விபரீத புத்தி "என்று சொல்வார்கள் .அழிவூ ஆரம்பமாகும் போது நாம் யோசிப்பது கூட நம்மை அழிவை நோக்கி தான் கொண்டு செல்லுமாம் ....இவ்வளவூ காலம் ஆடி விட்டார் இல்லையா ....இது அறுவடை காலம் .செய்த பாவத்திற்கு எல்லாம் கணக்கு தீர்க்க தொடங்கி இருக்கிறது ....சும்மா சொல்ல கூடாது ......கிடைச்ச கேப்பில் எல்லாம் கருணா செமையா ஆப்பு சொருகிட்டான் ......அவர் போட்ட எல்லா பால் சிக்ஸர் அடிச்சுட்டான் .செம கெத்து தான் அவனுக்கு ."என்றவனின் மொபைல் அழைக்க அழைப்பவர் யார் என்று கண்டவன் ஒரு நொடி ஸ்தம்பித்து பின் துள்ளி எழுந்தான் .

"பேபி ....."என்ற குரல் அழைப்பது மதுராக்ஷி என்று உத்தமிற்கு உணர்த்தி விட்டது .
2a4fca53ff7ec8a810f627b2360071ed.jpg

"எங்கடீ போனே .....எப்படி இருக்கே .....ஆர் யு safe ?"என்று கேள்விகளை அடுக்கி கொண்டே போனான் .


PENANCE WILL CONTINUE....
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
vanthuten......vanthuten.......ungalai kathara vaikka meendum vanthuten......he he he...ennnal mudinthathu rasagullas.....

magna en vijayku help panranu enakum doubt ....athaan paa question mark potuten.

vijay escape from only industries......but official la sona is still his wife.

roopini life innum sona/gaja and co kaiyil thaan iruku....erkanave antha ponnu soga geetham vasichitu iruku......thivagar family ku pressure kodutha ....avan epadi react aavanu theriyathu......en thangai kalyaninu vijay sacrifice panitan.......ini en annan oru koyilnu nu roopini ethavathu mudivoo edupala????

kilambi varum madhu 1st hero vijay chellathuku phone seithu avanai paratama ethuku another hero suriyaku phone seiyuthu??????ivanum icecream partha kuzhanthai pole vazhiyaran......

porumai porumai....katai ellam thooka kodathu.........ella puzzles chennai noki thaan vanthutu irunkanga.....

andrakum chennaikum distance athigam rasagullas.....vanthu sera time agum la....speed da vantha policeku naan thaan fine katanum.....so the end podum pothu kooda ethavathu oru twist vaithe kolvom endru mikka magizhichiyudan sollitu naan apetu
 
Last edited:

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
a friend in this forum sent this ending.......padichitu epadi irukunu sollunga....really amazing...

I think Madhura loves Surya.. not Vijay...and Surya might be Meghanas love interest too. Cos Madhura understands Vijays love only after Sona brings her to Chennai....In the mean time Meghana had the one night stand with Surya and got her twins....

Now even though Madhura loves Surya, she decided to sacrifice her love for Meghana for the sake of the twins....And she believes in oru sol oru il.....( oruvanukku oruthi)And she may be marrying Vijay as she had understood his pure love already.... Meghana wants to kill Sona and invest in angel garments for Madhura as Madhura sacrificed her love for Meghana...And Surya on seeing his kids accepts Meghana and will disclose Sona's divorce papers to clear the way for Vijay and Madhura... fingers crossed...


sorry dear permission ketkama inge post seithuten.
 
Status
Not open for further replies.
Top