All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அனிதா ராஜ்குமாரின் "என்ன தவம் செய்தேன்" - கதை திரி

Status
Not open for further replies.

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
THAVAM 33(3)

சட்டென்று தன் பைக் கை u டர்ன் எடுத்தவன் ,"கெட் ஆன் "என்றான் .மேக்னா ஏறி அமர மின்னல் என பாய்ந்தது அந்த பைக் தொறத்தி வந்தவர்களுக்கு எதிர் திசையில் .

"என்ன சார் அவங்களை அப்படியே விட்டுட்டு வரீங்க ?"என்றாள் அவனை அட்டை மாதிரி ஒட்டி கொண்ட மேக்னா .

"பின்ன என்ன மைக் டைசன் மாதிரி சண்டை போட சொல்றியா ...நான் என்ன சினிமா ஹீரோவா டியர் ????அவனுகளை பாரு ...என்னை பாரு ....இது எல்லாம் சண்டை போடும் உடம்பா ....???நான் மட்டும் இருந்தேன் என்றால் கூட துணிந்து இறங்கிடலாம் ....உன்னை காப்பாற்ற இருக்கும் ஒரே ஆள் இப்போதைக்கு நான் தான் ....என்னை அடித்து போட்டு உன்னை தொறத்தி வந்தால் ,,,எதுக்கு ரிஸ்க் ????ஓடுவது தப்பு இல்லை ..."என்றான் அவன் .

"இப்போ எங்கே போறோம் ?"என்றாள் மேக்னா குளிரில் உடல் நடுங்க

164706215-royal-enfield-wallpapers.jpg

"ஹாங் விண்வெளிக்கு .....ஆக்டர் கார்த்திக் தமன்னாஹ் கூட காரில் போயிட்டே இருப்பார் ...அது மாதிரி உன்னுடன் டூயட் பாடிட்டே உலகம் முழுக்க சுற்றி வர ஆசை ...லூசா நீ ...காலேஜ்ஜூக்கு தான் கூட்டி போறேன் ....."என்றான் அவன் கடுப்புடன் .

"இல்லங்க சாரி ...நீங்க யாருன்னே எனக்கு தெரியாது ...உங்களுக்கு என்னை தெரிஞ்சு இருக்கு ....இந்த காலத்தில் பொண்ணுங்க கொஞ்சம் அலெர்ட்டா இருக்கனும் இல்லை ...."என்றாள் மேக்னா .

சடன் brake போட்டு வண்டியை நடு ரோட்டில் நிறுத்தி திரும்பி பார்த்தான் அவளை ....."எப்படிங்க மேடம் அலெர்ட்டா இருக்கணும் ...கொஞ்ச நேரம் முன்னே பைத்தியக்காரத்தனம் செய்தாயே ....புதுசா வந்து இருக்கும் இடத்தில் அப்படீங்களா ?????என்னை யார் என்று தெரியாது தானே ....வாமா மின்னல் உன்னை மீண்டும் உன்னை தொரத்தி வந்த மச்சானுங்க கிட்டேயே விடுறேன் ...அவங்க உன்னை full லா தெரிஞ்சுப்பாங்க ....."என்றான் "full " என்ற வார்த்தைக்கு அழுத்தம் கொடுத்து .

"சாரி சாரி ...ரொம்ப சாரி ...காப்பாத்தி கூடி போகும் உங்களை சந்தேக பட்டு இருக்க கூடாது தான் ...இருந்தாலும் ..."என்றாள் மேக்னா .

"லீவ் இட் ....இந்த நைட் டைம் ,குன்னூர் ரோட்டில் என்ன செய்துட்டு இருந்தே மேக்னா ?"என்றான் அவன் .

என்ன வென்று சொல்வாள் ...காதல் கொடுத்த குருட்டு தைரியத்தில் எங்கே தன்னவனை அந்த மதுரா பிசாசு ,மோஹினி பேய் மயக்கி விடுமோ என்ற அச்சத்தில் ,அந்த கணமே அவனிடம் porpose செய்ய சென்றேன் ....என்றா சொல்ல முடியும் ?????

"சுத்தி பார்க்க வந்தேன் ..."என்று சரளமாக பொய் வெளி வந்தது .

"வாட் ....சுத்தி பார்க்க வந்தியா .....பார்க்க உனக்கு நேரம் காலம் இல்லை ...இடியட் ....முட்டாள் ...படிச்சவ தானேடீ நீ ....எத்தனை நியூஸ் பார்க்றே .....உன்னை எல்லாம் படிக்கச் அனுப்பினார்கள் பார் உன் வீட்டில் அவர்களை சொல்லணும் ...அறிவு கெட்டவ ...இனி இது போல் நைட் வெளியே வந்ததை பார்த்தேன் ...உன் கை காலை நானே உடைச்சுடுவேன் ....."என்று ஏறக்குறைய கர்ஜித்தான் அவன் .

பதினைந்து நிமிடத்தில் காலேஜ் வந்து விட கேட் அருகே சென்றவன் தன் ஹெல்மெட் கண்ணாடியை மட்டும் தூக்கினான் .

யார் என்று தெரிந்து கொண்ட வாட்ச்மேன் ,"உனக்கு இதே பொழைப்பா போச்சு ...என் வேலைக்கு வெட்டு வைக்காமா விட மாட்டே ...."என்றான் பைக் காரனிடம் .

"என்ன அண்ணே ...நாம என்ன அப்படியா பழகி இருக்கோம் ...இதோ பின்னால் இருக்கும் பெண்ணின் தாத்தா சீரியஸ் ...அதான் போய் பார்த்துட்டு வரலாம் என்று போனோம் .....திரும்பி வர நேரம் ஆயிடுச்சு ....சென்னை பொண்ணு வேற வழி சொல்ல தெரியலை ...இந்தாங்க அண்ணே .."என்றவன் அவர் கையில் 500 திணிக்க ,அவர் கதவை திறந்து விட்டார் .

"தேங்க்ஸ் அண்ணா ."என்றவன் தன் ஹெல்மட் வைஸரை இறக்கி விட்டு சர்ரென்று அவளை கொண்டு போய் லேடீஸ் ஹாஸ்டல் வாயில் முன் நிறுத்தினாள் .

இறங்கிய மேக்னாவிற்கு தான் முழுதாய் திரும்பி வந்த நிம்மதி ,சந்தோசம் .இறங்கி நின்றவள் ஒரு கணம் கண் மூடி நின்றாள் .

"தேங்க்ஸ் சார் ...நீங்க மட்டும் இல்லை என்றால் நினைத்து பார்க்கவே முடியலை ...ரொம்ப தேங்க்ஸ் ..."என்றவள் திரும்பி நடக்க அவள் கையை பிடித்து இழுத்து நிறுத்தினான் பைக்காரன் .

"என்ன சார் ?"என்றாள் மேக்னா

"என்ன டியர் ...நீ பாட்டுக்கு தேங்க்ஸ் சொல்லிட்டு கிளம்பறே ....இந்த மாமன் மனசு எப்படி தவிக்குது பாரு ."என்றான் அவன்
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
image-48922181-hd-wallpapers-kajal.jpg
திகைத்து நின்றாள் மேக்னா ....

(கத்தி போய் வாளு வந்தது டும் டும் டும் ....சட்டி போய் நெருப்பு வந்தது டும் டும் டும் )

"சார் ....சார் "வெறும் காத்து தான் வந்தது மேக்னா வாயில் இருந்து .

அதற்கும் அவன் ,"என்ன பேபி நீயி ...தேவர் மகன் ரேவதி போல் வெறும் காத்து தான் வருது உன் வாயில் இருந்து ....நீ என்னை பார்த்து "தித்திக்குதே "என்று பாடும் போதே நான் சரண்டர் .....என்னமா பாடுறே ...ஆளும் க=கல்கத்தா ரசகுல்லா ,காஷ்மீர் ஆப்பிள் மாதிரி தான் இருக்கே ....."என்ன விலை அழகே ....சொன்ன விலைக்கு வாங்க வருவேன் ....விலை உயிர் என்றாலும் தருவேன் ...இந்த அழகை கண்டு வியந்து நிற்கிறேன் ..."என்று வேறு பாட செய்தான் .

பேய் அடித்தது போலெ நின்றாள் மேக்னா .

"ஐயோ சார் அது உங்களை பார்த்து நான் பாடலை .....சும்மா சும்மா ...ஒரு போட்டிக்கு தான் ...கொஞ்சம் விளையாட தான் ."என்றாள் மேக்னா ---பின்னே மதுராவை வெறுப்பு ஏற்ற ,அவளை விட தான் உயர்த்தி என்று தன்னவனுக்கு நிரூபிக்க தான் பாடினேன் என்றா சொல்ல முடியும் ??

"பட் டார்லிங் .....நீ பாடியது என்னை பார்த்து தானே ....உன் விழி என்னும் வாட்கள் என்னை வெட்டி கொண்டு இருந்ததை தான் நான் கண்டேனே ....இன்னும் எதற்கு இந்த வெட்கம் ???கொஞ்சம் வா இந்த மாமன் பக்கம் ....ரெண்டு பேரும் போவோம் சொர்க்கம் ....."என்றவன் மேக்னா எதிர் பாராத போது அவளை கையை பிடித்து இழுக்க அவன் மேலேயே வந்து விழுந்தாள் மேக்னா .

அவள் இடையில் கை வைத்து அவளை வெகு அருகில் கொண்டு வந்தவனின் உடல் மௌன சிரிப்பில் குலுங்கி கொண்டு இருந்தது அவளின் முக பாவத்தை பார்த்து .

"என் இனிய தேவதையே ...பாட்டால் என்னை பைத்தியம் ஆக்கிய என் பேபி ......யு ஆர் மைன் .....ஒன்லி மைன் .....உன்னை இனி தொடர்ந்துட்டே இருப்பேன் .....இந்த மாமனுக்கு ஏத்த ரசகுல்லா நீ தான் கண்ணு ....நைட் ட்ரீம் மீட் செய்யலாம் ....பை டார்லிங் ....."என்றவன் ஒரு பிளையின் கிச் ஒன்றை அனுப்பி விட்டு கிளம்ப,மேக்னா தான் தலை சுத்தி நின்றாள் .

அவளின் அந்த தலை சுற்றலை மேலும் மேலும் அதிகரித்தான் அந்த பைக்காரன் .அவள் ஹோஸ்டேலுக்கு உள்ளே சென்று படுத்ததும் மொபைல் sms ,whatsapp "குட் நைட் மை டியர் காஷ்மீர் ஆப்பிள் " என்ற வாழ்த்துக்கள் அவளை பார்த்து இளித்தன .மறுநாள் காலை அவளுக்கு ஹாஸ்டல் முன் டெஸ்க்கில் ரோஜா பூங்கொத்து காத்து இருந்தது

"என் ஊட்டி ரோஜாவிற்கு இந்த ராஜாவின் காதல் ரோஜா ...!"என்ற வாசகங்களுடன்

(ஹா ஹா பிரமாதம் கவிதை கவிதை .....மூணு புள்ளி ஒரு ஆச்சரியக்குறி ......த்தூ ...கர்மம் ....)

அன்று மட்டும் அல்ல தொடர்ந்து ஒரு வாரத்திற்கு மேக்னா நொந்து நூடுல்ஸ் ஆகி போனாள் .அவள் வகுப்பில் ,அவள் வண்டியில் ,பார்சல் என்று விதம் விதமாய் அவளை வெறுப்பு ஏற்ற என்ற ஏதாவது ஒன்று வந்து கொண்டு இருந்தது .

கல்லூரி முடிந்து இவள் வெளியே வரும் போது அவனக்கு எப்படி தான் தெரியுமோ ...இவள் ஹாஸ்டல் போவதற்குள் அவன் பைக்கும் அவனும் ஆஜர் ஆகி விடுவார்கள் .....ஒரு ரவுண்டு இவளை சுற்றி அடித்து விட்டே அவன் கிளம்புவான் .
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அன்று சில காம்பெடிஷன் ,cultural ,ஆந்திரா சுற்றுலா பற்றி பேசி முடிக்க இரவூ எட்டு மேல் ஆனது .இவள் வெளியே வரவும் ,தொலைவில் அவன் பைக் உறுமல் சபதம் கேட்க ஓட்டமும் நடையுமாக அவள் நண்பர்கள் அமர்ந்து அமர்ந்து அரட்டை அடித்து கொண்டு இருந்த மரத்திற்கு கீழ் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க நின்றாள் .

"என்னடீ ...என்னவோ உசைன் போல்ட் போல் ஓடி வர ....ஒலிம்பிக்ஸ் ஓட்டத்தில் தங்க மெடல் வாங்க ஏதாவது பிராத்தித்து இருக்கியா என்ன .....?"என்றான் விஜய்

அவனுக்கு ஹை பைவ் கொடுத்த சூர்யா ,"மெடல் வந்தா எனக்கு ட்ரீட் கொடுக்கணும் மேக்னா ...."என்றான் .

(அடப்பாவிங்களா நீங்க ரெண்டு பேர் இங்கே நிற்க ,ஒரு வாரமாய் இவளை கதற விடுபவன் அப்போ யாரு ?????)

(காதல் பரிசு படம் பார்த்து இருக்கியா ?

(எது கமல் ,அம்பிகா ,ராதா நடிச்ச படம் தானே ...அந்த காலத்துல வந்துச்சே ..ஆமா இப்போ எதுக்கு அந்த படத்தை சம்மந்தா சம்மந்தம் இல்லமா இங்கே இழுக்கறே ???".)

(அதே தான் அதில் அம்பிகா கமல் தான் தன் குழந்தைக்கு அப்பா என்று நம்பிட்டு இருப்பார் ..கடைசியில் வேறு யாரோ தான் அந்த குழந்தையின் அப்பாவா இருப்பாங்க .....ஒருவேளை அந்த சீன் சுட்டுட்டியா ?சரி சரி முறைக்காதே ...இவனுங்க இங்கே இருக்கானுங்க ...அப்போ அங்கே பைக் உறுமல் யாரால் அதான் அப்படி கேட்டேன் ...நீ வேற நோ நியூ என்ட்ரி என்று செல்லம்ஸ் கிட்டே ஏற்கனவே சொல்லிட்டே ...மீதம் இருப்பது உத்தம் ,ஆல்வின் ---இவர்களையும் அண்ணன் என்று சொல்லி பாச பறவையை பறக்க விட்டுட்டே ...மீதம் இருப்பது கார்த்திக் ,ரகு ...இவங்க ரெண்டு பேருக்கும் இந்த அளவூ தில் இருக்குமா ????இல்லை சுமன்னா ???அவன் துச்சாதனன் வேலை தானே பார்ப்பான் ...இது மாதிரி போக்கே ,காப்பாத்தறது எல்லாம் அவன் அகராதியில் இல்லவே இல்லையே .......)

"உங்களுக்கு என்னை கிண்டல் செய்ய நேரம் காலமே கிடையாதா .....நானே பயந்து போய் ஓடி வரேன் ...இப்படி கிண்டல் அடிச்சுட்டு இருக்கீங்க ?"என்றாள் மேக்னா முகம் சுருங்க .

"பின்ன எப்படி டிரஸ் செஞ்சா டாக்ஸ் எல்லாம் confuse ஆகி தொரத்த தான் செய்யும் .....பாவம் அதுங்க கண்ணு அவிஞ்சு போய் கிடக்குதுங்க .....வாட் டு டூ ?"என்றான் சூர்யா .

"என்ன நக்கலா .....நானே அவன் தொல்லை தாங்க முடியாம தவிச்சுட்டு இருக்கேன் .....இந்த torture செய்யறதற்கு அந்த சனி என்னை காப்பாத்தாமலே இருந்து இருக்கலாம் ....உங்க கிட்டே சொல்ல வந்தேன் பாருங்க ..."என்று கிளம்ப போனவளை கை பிடித்து ,இழுத்து நிறுத்தினான் விஜய் .

"என்னடீ ஆச்சு ....யார் உன்னை torture செய்யறது ?"என்றான் முகம் சிவக்க .

நடந்ததை மேக்னா சொல்ல ,ஓங்கி ஒரு அறை விட்டான் விஜய் ."பையித்தியமாடீ நீ ....ஊர் சுத்தி பார்க்க நேரம் காலம் இல்லை உனக்கு ...அறிவு கெட்டவ....வர ஆத்திரத்திற்கு உன்னை கழுத்தை பிடித்து கொல்லனும் போல் இருக்கு ......ஒண்ணு கிடக்க ஏதாவது ஆகி தொலைத்து இருந்தது என்றால் உங்க அப்பா கிட்டே என்ன போய் சொல்வோம் .....உன் லட்சணம் தெரிந்து தான் கிளம்பும் போது அப்படி "என் பொண்ணை பார்த்துகோங்கோ என்று சொன்னார் போலெ இருக்கு ."என்றான் விஜய் கோபத்துடன் .

"விடு விஜய் ....ஆர்வ கோளாறு ......இதுவே பாடமாய் இருக்கட்டும் .....இனி இது போல் செய்து வைக்காதே ...."என்றான் சூர்யா .

அவர்கள் பேசி கொண்டு இருக்கும் போது உறுமலுடன் அவர்களுக்கு சற்று தொலைவே வந்து நின்றது அந்த பைக் .இந்த முறை பைக்கில் இருவர் .

"சூர்யா எடு அந்த ஹாக்கி ஸ்ட்டிக் ."என்று விஜய் கை நீட்ட ,சூர்யா ,ஆல்வின் ,உத்தம் ஆளாளுக்கு ஒரு ஹாக்கி ஸ்டிக் ,கிரிக்கெட் பேட் உடன் எழுந்து நின்றனர் .
13-275x397.jpg

பைக் உறுமிய படி இருக்க ,விஜய் சட்என்று முன் பாய ,பைக் ஹை ஸ்பீடில் அரை வட்டம் அடித்து வாயிலை நோக்கி கிளம்பியது .

"நில்லுடா பரதேசி .....எங்கே வந்து .....என்ன வேலை செய்யரே ...."என்று கத்திய படி விஜய் ,சூர்யா அண்ட் கோ பைக் தொரத்தி ஓடினார்கள் .

பைக் வேகத்திற்கு அவர்களால் ஈடு கொடுக்க முடியவில்லை .அதுவே பவர் பைக் ...ஆனால் அடுத்து நடந்தது யாரும் எதிர் பார்க்காதது ...வண்டி ஒட்டியவன் பின்னால் தொறத்தி வருபவர்களை பார்த்து கொண்டே வண்டி ஓட்ட ,ஸ்பீட் பிரேக்கர் முன்னால் இருப்பதை கவனிக்க தவற ,கடைசி நொடியில் வேகத்தை குறைக்க ,அதன் ஆட்டம் தாளாமல் பின்னால் இருந்தவன் அலறியபடி கீழ் விழுந்தான் .

தன் நண்பன் கீழ் விழுந்ததை கவனிக்காமல் அவன் வேகம் எடுத்து புயல் என காலேஜ் விட்டு வெளியேறினான் .கீழே விழுந்து கிடந்தவன் ,ஓடி வருபவர்களில் கையில் சிக்கினால் தான் சட்னி என்று புரிந்து விட ,எடுத்தான் ஓட்டம் கல்லூரி வகுப்பறைகளை நோக்கி
201810280102247121_Vijay-films-court-cases_SECVPF.jpg

மூன்று building எல்லாம் corridor மூலம் இண்டெர் connected ......200 குறையாத அறைகள் .காம்பௌண்ட் எகிறி குதிக்க நிறைய இடங்கள் .....இரவூ வேறு ....இதை வைத்து அவன் தப்ப முயல்கிறான் என்பது தொரத்தி வந்தவர்களுக்கு புரிந்தது

PENANCE WILL CONTINUE....
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
THAVAM 33(4)

சூர்யா கால் செய்து அழைக்க விஷயம் கேள்வி பட்டு ,ஹாஸ்டல் மாணவர்களும் சேர்ந்து தேடுதல் வேட்டையில் இறங்கினார்கள் .

"நம்ம காலேஜ் பசங்களுக்கு இந்த அளவூ தைரியம் வராது விஜய் ....இது வேறு காலேஜ் ஆளு என்று நினைக்கிறன் ...இந்த அளவூ காஸ்டலி பைக் இந்த கல்லூரி மாணவர்கள் இடம் கிடையவே கிடையாது ...."என்றான் சூர்யா யோசனையுடன் .

அவர்கள் வந்து நின்ற இடம் நான்கு புறம் பிரிந்தது .....சூர்யா கை காட்ட ஆளுக்கு ஒரு திசையில் பிரிந்து தேடியவாறு ஓடினார்கள் .


அதே சமயம் பைக்கில் சென்று கொண்டு இருந்தவன் ,"அப்பாடா தப்பிச்சோம் "என்று பெருமூச்சு விட்டவாறு பைக் நிறுத்தி திரும்பி பார்க்க பின்னால் இருந்த அவன் நண்பனை காணவில்லை .அதே சமயம் அவன் போன் அடிக்க ,எடுத்தவனை எதிர் முனை காதில் கேட்க முடியாத வார்த்தைகளால் சென்சார் செய்யும் அளவூ வார்த்தைகளை விட்டான் .

"நீ காம்பௌண்ட் பக்கம் வந்து நில்லு .....எனக்கு தெரியும் .....மாட்ட மாட்டேன் ....."என்றவாறு திரும்பிய அவன் திகைத்தான் .

துரத்தி வந்தவர்களில் ஒருவன் அவன் முன் கண்கள் சிவந்து ,கொலைவெறி கண்களில் தெரிய ,அரக்கன் போல் ஹாக்கி ஸ்டிக் உடன் எதிரே நிற்பதை கண்டவனுக்கு சர்வமும் ஆட்டம் போட்டது .....

"ஏண்டா நீயெல்லாம் ஒரு தாய் வயித்தில் தான் பிறந்தாயா ....கேடு கெட்டவனே .....பெண் என்றால் அவ்வளவூ கிள்ளு கீரையா உனக்கு .....உன்னை மாதிரி வெறி பிடிச்ச மிருகம் எல்லாம் உயிரோடு விட்டு வைக்கவே கூடாது ...செத்து தொலை ...."என்று கர்ஜித்தவாறு ,ஹாக்கி சஸ்டிக் தலைக்கு மேல் தூக்கி ஒரே போடாக போட தன் பலம் கொண்ட மட்டும் இறக்கினான் .

"ஐயோ .....அம்மாஆஆஆ "என்ற அலறலோடு அவன் கையை மேல் தூக்கியவாறு ,அடியில் இருந்து தப்ப கீழ் சரிய ,ஹாக்கி ஸ்டிக் தூக்கியவன் ,அவனை சட் என்று இழுத்து கதவின் பின் தள்ளி விட்டான் .தள்ளி விட்ட வேகத்தில் அவன் தலை சுவற்றில் மோத ஹெல்மெட் இருந்ததால் தலை பிளக்காமல் தப்பித்தான் .

அதே நேரம் இன்னொருவன் அந்த அறையின் முன் வந்து நின்று ,"அந்த நாய் கிடைத்தானா?"என்றான் .

உள்ளே இருந்த இவன் ,"இல்லை ....இ பிளாக் பக்கம் இருப்பதாக தகவல் வந்தது ....."என்றான்

"அதற்குள் எப்படி அவ்வளவூ தூரம் போனான் ...."என்றவாறு அவனோடு வந்தவர்கள் ஓட ,அவர்களின் காலடி சப்தம் நின்று அடங்கியதும் ,கதவை மூடி தாள் இட்ட அவன் ஹெல்மெட்டை தேய்த்து கொண்டு இருந்த அவனை நெருங்கி நின்றான் .

"எதற்கு உனக்கு இந்த வேண்டாத வேலை எல்லாம் ?????"என்றான் .

அவன் கீழே போட்ட ஹாக்கி ஸ்டிக் எடுத்து கொண்ட அவன் ,"கதவை திற .....இல்லை அடிச்சுடுவேன் ...."என்றான் .

"இப்படியே வெளியில் போனே ,அவனுங்க கையில் சிக்கினே உயிர் மிஞ்சாது ....கீழே போடு ...."என்றான் அவன் .

"கிட்டே வராதே ...வராதே ..."என்று அவன் பின்னால் சென்று சுவரில் மோதி நிற்க இவன் ஹெல்மெட்டை வெகு சாவகாசமாய் கழற்ற உள் இருந்து வெளி பட்டது சாட்சாத் நம்ம மதுராவே தான் .
samantha-akkineni-latest-HD-photoshoot-5.jpg

(நிறைய பேர் கரெக்ட்டா கெஸ் பண்ணிடீங்க ...அப்படி கெஸ் செய்தவர்களுக்கு லாலா கடை ஹல்வா பார்சல் ...ஹி ஹி ஹி )
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாக்கி ஸ்டிக் இவன் ஓங்கிய போதே எழுந்த அவளின் அலறல் அவனுக்கு அங்கு இருப்பது யார் என்று உணர்த்தி விட்டது .வெளியே தேடுபரவர்கள் வரும் சத்தம் கேட்டே அவளை அவன் இழுத்து கதவின் பின் புறம் தள்ளியது .

அவள் முகம் போன போக்கை கண்ட அவன் வாய் விட்டு சிரித்தான் ....இவள் முறைக்க ,"ஒகே ஒகே சிரிக்கல ..."என்றவனின் உடல் மௌன சிரிப்பில் குலுங்கியது .

"எதுக்கு இந்த வேலை ?"என்றான் அவன் .

"ஒண்ணும் இல்லை ஒரு வாரம் முன்பு மேக்னா நடு ரோட்டில் நாலு தடியன்க கிட்டே மாட்டிட்டா ...அந்த பக்கம் பைக் ரைட் செய்துட்டு இருந்த நான் தான் அவளை அங்கே இருந்து காப்பாத்தினேன் ....அவளுக்கு நான் யாருன்னே அடையாளம் தெரியலை ...ஒருவேளை பைக் பார்த்ததும் என்னை ஆண் என்று நினைச்சுட்டா போலெ இருக்கு .....சார் ...சார்ன்னு ஒரே நன்றி மழை .....இதுக்கு முன்னே போய் ஹெல்ப் செய்தா ,"உன் ஹெல்ப் எல்லாம் யார் கேட்டா ...எனக்கு தேவை இல்லைன்னு "நோஸ் கட் நான்கு முறை செய்துட்டா ...அதான் வச்சி செய்யலாம் .....கொஞ்சம் அலறட்டும் என்று சும்மா பயம் காட்டினேன் ..... "என்றாள் மதுரா முகம் அஷ்டகோணலாக ....

"உன் மேல் அவளுக்கு என்ன இத்தனை காண்டு ?"என்றான் அவன்

"என்னை கேட்டா ....எனக்கு என்ன தெரியும் ????அந்த ஆல்வின் தான் ஸ்டேஜ் ஏத்தி விட்டார் ....வேணாம் என்று சொல்லி கூட கேட்காம இவ தான் வீம்பா மேடை ஏறினா .....அங்கேயே என்னை வெட்டவா குத்தவா என்ற ரேஞ்சுக்கு தான் முறைச்சுட்டு இருந்தா ...ஏதோ நம்ம காலேஜ் வந்து இருக்காளேன்னு உதவி பண்ண போனா ஒருத்தி இப்படியா மேல பாஞ்சி கடிச்சி வைப்பா ......அதான் ..."என்றாள் மதுரா

(ஒஹ்ஹஹ் அதான் இந்த டயலாக் ---- நீ பாடியது என்னை பார்த்து தானே ....உன் விழி என்னும் வாட்கள் என்னை வெட்டி கொண்டு இருந்ததை தான் நான் கண்டேனே ....இன்னும் எதற்கு இந்த வெட்கம் ???கொஞ்சம் வா இந்த மாமன் பக்கம் ....ரெண்டு பேரும் போவோம் சொர்க்கம் .....?" என்று டயலாக் விட்டாயா மதுரா ?

மேக்னா எதிர் பாராத போது அவளை கையை பிடித்து இழுக்க அவன் மேலேயே வந்து விழுந்தாள் மேக்னா .
அவள் இடையில் கை வைத்து அவளை வெகு அருகில் கொண்டு வந்தவனின் உடல் மௌன சிரிப்பில் குலுங்கி கொண்டு இருந்தது அவளின் முக பாவத்தை பார்த்து
----ஆனாலும் மதுரா வச்சி செய்யறதில் உன்னை மிஞ்ச ஆளே இல்லை தான் .....பாவம் அந்த மேக்னா பொண்ணு ...நீ எவ்வளவூ terror என்று தெரியாமல் உன் கிட்டே வாய் கொடுத்து வாங்கி கட்டிக்கிச்சி .

"உனக்கு என்ன சினிமா ஹீரோ என்ற நினைப்பா .....நடு இரவில் பைக் ரைட் இப்போ ரொம்ப தேவை ....அவ மாட்டியது போல் நீ மாட்டி இருந்தே .....என்ன ஆவது ....அறிவு இல்லை ...முட்டாள் ....முட்டாள் ..."என்றான் அவன் கர்ஜனையோடு .

"நான் பைக் ரேஸ் கலந்து இருக்கேன் ...இன்னும் பிரைஸ் தான் வாங்கலை .ஊட்டி பைக் ரைடர்ஸ் கிளப் மெம்பெர் .....ரெண்டு மூணு வருசமா பவர் பைக் ஒட்டி எனக்கு பழக்கம் தான் .....ஐ லவ் ரைடிங் ....கிளப் மெம்பெர் புது பைக் வாங்கி வந்தார் ....அவருக்கு இப்போ உடம்பு சரியில்லை ....அதான் அவர் வரும் வரை நான் வைச்சு ஓட்டிட்டு இருக்கேன் .....சார் ...கொஞ்சம் அடங்குங்க .....ரொம்ப துள்ள வேண்டாம் .....எனக்கு கராத்தே ,takewando எல்லாம் தெரியும் .....competition போய் மெடல் எல்லாம் கூட வாங்கி இருக்கேன் ...."என்றாள் மதுரா .
de031967-bbbf-f974-e01d-583702000eb4.jpg

"காசு கொடுத்து தானே ..அதான் மா ...நீ வாங்கிய மெடல் காசு கொடுத்து தானே ...இல்லை ஜட்ஜ் கிட்டே போய் அழுதியா ?"என்றான் அவன் .

"என்ன லந்தா ....ஓவர் ரா தான் பேசிட்டு போறே ...ஏதோ நண்பன் என்பதற்காக சும்மா விடறேன் ....சிங்கத்தை சொறிஞ்சு எல்லாம் பார்க்க கூடாது .....சேதாரம் பலமாய் இருக்கும் ..."என்றாள் மதுரா முறைத்தவாறு .


"யாருங்க இங்கே சிங்கம் ......ஒஹ்ஹ நீங்களா உங்களை built up .....சகிக்கலை .....உன்னை எல்லாம் சிங்கம் என்று சொல்லி ஒட்டுமொத்த சிங்க கூட்டத்தை தற்கொலை செய்துக்க வைக்காதே தாயே ...ஏற்கனவே பாவம் எல்லாம் "endangered "ன்னு அரசாங்கம் சொல்லுது ."என்றவனை தொரத்தினாள் மதுரா .
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அவர்கள் இருந்தது கம்ப்யூட்டர் லேப் .....அறைக்குள் அறைக்குள் அறைக்குள் அறை என்று சென்று கொண்டே இருந்தது .மற்ற வாயில்கள் ஏற்க்கனவே மூட பட்டு இருக்க ,இவர்களிருந்த அறையையும் இவன் மூடி தாழ் இட்டு இருக்க ,இவர்களின் ஓட்டம் இவர்களை கடைசி அறையில் கொண்டு நிறுத்தியது .

சின்ன பிள்ளைகள் "மியூசிக்கல் chair "விளையாடுவதை போல் அந்த அறையில் இருந்த மேஜை ,நாற்காலியை சுற்றி "அவன் "ஓடி கொண்டு இருக்க ,மதுரா அவனை கொலை வெறியோடு தொறத்தி கொண்டு இருந்தாள் .

அவன் உயரத்திற்கு அவன் கால்களை எட்ட போட்டு ஓட ,அவனை பிடிப்பதற்குள் இவளுக்கு விழி பிதுங்கி ,நாக்கு எல்லாம் வெளியே தள்ளி விட்டது .மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க அங்கு இருந்த நாற்காலியில் அமர்ந்தாள் மதுரா .

அவனும் எச்சரிக்கையாக சற்று தொலைவில் நின்றான் .இவள் தான் ரயில் இன்ஜினுக்கு கரி அள்ளி போட்டவள் மாதிரி வேக மூச்சு வாங்கி ஆசுவாச படுத்தி கொண்டு இருந்தாலே ஒழிய அவன் வழக்கம் போல் "அவனின் " ஸ்டைல் உடன் ஒன்றுமே ஆகாதவனாய் நின்றான் .அவன் சுவாசம் கூட ஏறவில்லை என்பது தான் ஹைலைட் .

அவள் தன்னை நிலை படுத்துவதில் குறியாய் இருக்க ,அவனின் உள் இருந்த காதலன் விழித்து எழ இவளை புன்னகையுடன் ரசித்து கொண்டு இருக்க என்று இருவரும் அந்த லேப் கதவூ பூட்ட படுவதை கவனிக்கவே இல்லை .

"என்ன சிங்கம் மேடம் ....ஓங்கி அடிச்சா ஒன்றை டன் வெயிட் என்று பார்த்தா ...இப்படி காற்று போன பலூன் மாதிரி ஆகிட்டிங்க ....இது தான் உங்க சிங்க முகமா ...ரொம்பவே அசிங்கமா இருக்கு ...வெளியில் போய் சொல்லிடாதீங்க ......"என்றவன் எதிர் பாராத போது அவன் மேல் பாய்ந்து விட்டாள் மதுரா .

"வாய் ....வாய் ....என்ன ஓவர் ரா ஓட்டுறே ....உன்னை ...."என்று மொத்தி எடுத்தாள் அவனை .

"ஏய் ராட்சசி ...வலிக்குதுடீ ...விடு ...விடு ........விடுடீ ....."என்றவனை அடிப்பதை அவள் நிறுத்தவே இல்லை .

அவர்களின் அந்த செல்ல சண்டை எப்பொழுது திசை மாறியது என்று கேட்டால் அவனுக்கே தெரியாது .மனதிற்கு பிடித்த பெண் ...தன் ஆசை காதலி ...தன் கை வளைவில் என்றதும் அவன் தன்னை மறந்தான் .அங்கு "அவன் "என்ற சுயம் மறைந்து "அவளின் "காதலன்" என்ற உயிர்த்து எழுந்தான்
vdvdvdv-1.jpg

அது நாள் வரை தயக்கத்தால் அவன் காதலை சொல்ல முடியாமல் ,எங்கே கிடைத்த அவள் நட்பையும் இழந்து விடுவோமோ என்று மனம் முழுக்க காதல் இருந்தும் ,"நண்பன் "என்ற போர்வைக்குள் ஒளிந்து தன்னை தானே ஏமாற்றி கொண்டு இருந்தான் .இன்று அந்த தடைகள் எல்லாம் தகர்ந்து நின்றன

அது வரை தான் அடிப்பதை தடுத்து கொண்டு இருந்தவனுக்கு என்ன ஆனது என்ற வியப்புடன் நிமிர்ந்தவள் திகைத்தாள் .ஏனென்றால் முழுவதுமாய் அவன் மேல் சாய்ந்து படர்ந்த நிலையில் அவள் நின்று கொண்டு இருந்தாள் .காற்று கூட புக முடியாத நெருக்கம் .
1538201341-1271.jpg

அடிப்பதை அது வரை தடுத்து கொண்டு இருந்த அவன் கரங்கள்,அடிப்பதை தடுப்பதை விட்டு அவள் இடை தனக்கு சொந்தம் என்று ஒய்யாரமாய் அவற்றை பிடித்து கொண்டு இருந்தது .அவன் கண்கள் அவள் உயிர் வரை ஊடுருவி கொண்டு இருந்தது .கண்களால் "அடிமை சாசனம் "மற்றவருக்கு கொடுக்க முடியுமா .....காதலில் முடியும் என்று அவனுக்கு அவளும் ,அவளுக்கு அவனும் அடிமை ஆகி கொண்டு இருந்தனர் .காதலின் முதல் படியே முழு சரணாகதி தானே ...தான் என்ற சுயம் மறைந்து இன்னொரு உயிருக்காக உருகி துடிப்பது தானே .ஒரு உடலில் இரு உயிர்கள் .மீண்டும் புதிதாய் பிறக்க வைக்கும் இன்னொரு கருவறை .

அவன் தேக்கு போன்ற மார்பில் குத்தி கொண்டு இருந்தவளின் கைகள் அந்த பரந்து விரிந்த மார்பும் ,தோளும் தனக்கே சொந்தம் என்று கைகள் அவன் மார்பிலும் ,தோளிலும் உறவாடி கொண்டு இருந்தது .

மூளை என்ற ஒன்றே செயல் பட மறந்துபோனது .ஏற்க்கனவே அவ்வளவூ நெருக்கத்தில் நின்று இருந்தவர்களில் யார் மேலும் நெருங்கியது என்று அவனை கேட்டால் அவனுக்கு சொல்ல தெரியவில்லை .


அவன் கைகள் "அவள் தனக்கு மட்டுமே சொந்தம் "என்ற உரிமையில் அவள் இடையை விட்டு தங்க முலாம் பூசியது போல் மின்னி கொண்டு இருந்த அந்த கன்னங்கள் இரண்டையும் இரு கைகள் பிடித்து கொண்டன .

"வே ......வே ....வே ....வேண்டாம் ...."என்று தந்தி அடித்தாள் மதுரா .

"எனக்கு வேண்டும் .........நீ வேண்டும் ....எனக்கு மட்டுமே என்று கடைசி வரை வேண்டும் ...இனி யாரவது நீ யார் என்று கேட்டால் போய் சொல் அவர்களிடம் ....மிஸஸ் மதுராக்ஷி ..............................."நான் என்று ....என்றான் கண்கள் மின்ன .

(அடேய் ....என்ன பேருடா சொன்னே .....யாருடா நீயி .....)

PENANCE WILL CONTINUE.......
 
Last edited:

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
THAVAM 33(5)

"எனக்கு வேண்டும் .........நீ வேண்டும் ....எனக்கு மட்டுமே என்று கடைசி வரை வேண்டும் ...இனி யாரவது நீ யார் என்று கேட்டால் போய் சொல்ல அவர்களிடம் ....மிஸஸ் மதுராக்ஷி ..............................."நான் என்று ....என்றான் கண்கள் மின்ன .

(அடேய் ....என்ன பேருடா சொன்னே .....யாருடா நீயி .....)

எதையோ அவள் சுற்றும் முற்றும் தேட ,"என்ன தேடறே "என்றான் அவன் .இவன் எவ்வளவூ சீரியஸ்சா லவ் ப்ரொபோஸ் செய்யறான் ,இவ பாட்டுக்கு எதையோ தேடிட்டு இருந்தா அவன் கடுப்பு ஆகாம

"சுனாமி வருதான்னு பார்க்கிறேன் boss.......இப்போ தானே ஸிரோ வாட்ஸ் பல்பு 1000 வாட்ஸ் மாதிரி எரியுது .....என்ற புருசனுக்கு இப்போ தான் லவ் சொல்ல தைரியம் வந்து இருக்கு .....அதான் சுனாமி ஏதாவது வருதுன்னா பார்க்கிறேன் ........."என்றவளின் பேச்சில் அதிர்ந்து பின் தான் கேட்டது உண்மை தானா என்று விழித்து நின்றான் அவன் .

"ம ...ம ...மது ..........நீ நீ இப்போ என்னை என்ன என்று கூப்பிட்ட ?"என்றான் அவன் கேட்டதை நம்ப முடியாமல் .

(இருப்பா நாங்களும் அதே நிலைமையில் தான் இருக்கோம் ...)

"அய்யோ குழந்தை இப்போ தான் அ ,ஆ கத்துக்குது ......ஸிரோ வாட்ஸ் பல்பு என்று பார்த்தா காதும் அம்பேல் போல் இருக்கு .........என்னடீ மது உனக்கு வந்த சோதனை ....."என்று தலையை குலுக்கியவாறு நகர்ந்தவளை மீண்டும் தன் கை அணைப்பிற்குள் கொண்டு வந்தான் அவன் .

"என்ன சொன்னே மது .........."என்றான் அவன் விடாமல் .

"சொரைக்காய்க்கு உப்பு இல்லைன்னு சொன்னேன் என்ற பிராணநாதா ....."என்றாள் மதுரா புன்னகையுடன் .

"மது .........."என்றான் அவன்

"சரி சரி ......இந்த டூப் லைட் தான் எனக்கு பிடிச்சி இருக்கு ........."என்றவள் அழகான புன்னகையுடன் ,"என் கடைசி மூச்சு உள்ள வரை உன்னை காதலிக்கணும் .....சாகும் போது உன் மனைவியாய் சாகனும் .....ஒவ்வொரு நொடியும் உனக்காகவே சுவாசிக்கணும் ....உனக்காகவே வாழணும் ...... ஒவ்வொரு நொடியும் உன்னை மூச்சு முட்ட முட்ட காதலிக்கணும் .....உன்னை மாதிரியே அன்பா ,அக்கறையா என்னை பார்த்து கொள்ள 10 குட்டிஸ் வேண்டும் .....நீ தான் என் உயிர் ,என் சுவாசம் என்று இந்த ஊர் அறிய ,உலகம் அறிய உன் கை பிடிச்சிட்டு ராணியாய் வலம் வரணும்....இந்த உலகத்தின் முன் நான் உன் மனைவி .....மிஸ்டர் .............மதுராக்ஷி என்று சொல்லணும் .....இந்த வரம் தருவாயா ?"என்றவளை இழுத்து அணைத்தான் அவன் .
301590.jpg

மௌன கண்ணீரில் அவன் உடல் குலுங்கியது .வரம் கேட்காமலே அவன் காதல் தவத்திற்கு வரமாய் கிடைத்த வாழ்வூ அவள் .அவனை உயிர்ப்பிக்க வந்த அமிர்த கலசம் .காதல் கை கூடுமா என்று தவித்து ,துடித்து கொண்டு இருந்த அவனை ,அவன் காதலை அவன் சொல்லாமலே நிறைவேற்றி விட்டாள் அவனவள் ....அவன் காதலி ....இல்லை இல்லை அவன் மனைவி .அவன் உயிர் ,அவனின் சகலமும் .

சற்று நேரம் கண்ணீர் வழிய அவன் அணைப்பில் நின்றவள் ,"அய்யய்ய நீ அழு மூஞ்சு பையனா நீயி .....மதுரா அவசர பட்டுட்டியே ....இதுக்கே இந்த புள்ள இப்படி கண்ணீர் விடுது ...இன்னும் குறை காலத்துக்கு உன் கூட குப்பை கொட்டணுமே .....இந்த உடம்பு தாங்குமா .......சோ sad .....சோ sad .......கவலையே படாத மிஸ்டர் புரூஸ் ....கடையில் உறிச்ச வெங்காயமே வாங்கி வந்துடறேன் ...."என்றாள் அவனை நோர்மல் ஆக்கும் நோக்கில் .

"வாய் .....வாய் ........இந்த வாய் இருக்கே ....ரொம்ப ஓவர் ரா பேசுது ......அடக்கிடலாமா ?"என்றவன் அவள் இதழில் கவிதை எழுத ஆரம்பித்தான்
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
x1080-lMM.jpg

அவன் எழுதிய கவிதைக்கு அவள் பதில் சொல்லி கொண்டு இருந்தாள் .
என்றுமே முடியா தேடல் ........முத்தம் தானே என்று ஒதுக்கி விட முடியாத காதலர்களின் முதல் ஸ்பரிசம் .

இதழின் மௌன பாஷை
ஒருவர் உயிரை மற்றொருவக்கு செலுத்தும் மாய சக்தி
இருவர் மேற்கொள்ளும் காதல் என்ற யாத்ரீகத்தின் சங்கமம்
ரெண்டு அழி பேர் அலைகள் காதலால் எழும் அதிசயம்
இயற்கையால் உருவாக்க பட்ட மிக அழகான தந்திரம்

வார்த்தைகள் தோற்கும் போது ஆயிரம் காவியங்களை உருவாக்கி விடும் மகோனதம் .

எவ்வளவூ நேரம் தொடர்ந்ததோ அந்த முத்தம் ,கற்று கூட புக முடியாத அணைப்பு ,முதலில் தன் நிலை அடைந்தது அவன் தான் .

தன் கைகளில் காதல் மயக்கத்தில் உருகி நிற்கும் பெண் பாவையினை பார்த்தவனின் முகம் கனிந்தது .அவளை விட்டு விலகி நின்றான் அவன் .இன்னும் ஏற்பட்ட மயக்கம் நீங்காதவளாய் அவனை கண்ட அவளின் கன்னத்தை தட்டி விட்டு முழுவதுமாய் விலகினான் .

அவளே அவன் கைகளில் குழைந்து கொண்டு இருக்க ,இவனின் விலகல் அவளை வியப்படைய செய்தது .அவள் கண்களில் இருந்த கேள்வி அவனுக்கு புரியாமல் இல்லை .

"இதற்கு மேல் போவது சரி இல்லை மது .உன் அருகே என்னால் என்னை கட்டுப்படுத்த முடியும் என்று தோன்ற வில்லை ............இதற்கு மேல் போச்சுன்னா விளைவு மோசமாக தான் இருக்கும் .......நீ எனக்கானவள் தான் .ஆனால் அதை ஊர் அறிய சொல்லிட்டு விட்டு உன்னை நெருங்குவது தான் உனக்கு நான் செய்யும் மரியாதை .....என்னை நம்பி உன் மனதை என் கிட்டே கொடுத்து என்னை கௌரவ படுத்திய உன் பெண்மைக்கு உண்டான மதிப்பு கொடுக்க வேண்டியது என் கடமை ......உன் கணவன் என்று சொல்லிட்டே ...உன் மரியாதை ,கெளரவம் என் பொறுப்பாகிறது மது .....நானும் ஒரு பெண்ணோடு பிறந்தவன் தான் .....காதல் என்ற பெயரில் வரம்பு மீறுவது சரி இல்லை ......ஒரு நாள் வரும் .....உன் கழுத்தில் நான் கட்டும் திருமாங்கல்யம் உனக்கும் எனக்குமான உறவை உலகத்திற்கு சொல்லும் ....அன்று யாராலும் உன்னிடம் இருந்து என்னை விளக்க முடியாது ."என்றவனின் காதலில் மேலும் உருகி நின்ற மதுரா அவனை பின்னால் இருந்து அணைத்து கொண்டு ,"ஐ லவ் யு டா ..........என்னை விட்டு நீ போனாலும் ..உன்னை என்றுமே நான் விட்டு கொடுக்க மாட்டேன் .....உனக்காக இந்த உலகத்தையே எதிர்க்க வேண்டி வந்தாலும் செய்வேன் .......இன்று நீ கொடுத்த மதிப்பு மரியாதைக்கு பதிலாக நான் என்ன தான் செய்வேன் ........என் கடைசி மூச்சு உள்ள வரை உன்னை விரும்பிட்டே தான் இருப்பேன் .... என் உயிர் போவதாக இருந்தாலும் உன் கை அணைப்ப்பில் தான் போகும் ....."என்றாள் கண்கள் கலங்க .

அதன் பிறகு காலம் ரெக்கை கட்டி பறந்தது அவர்களுக்கு .புதிதாய் பிறந்த காதல்,கையில் சேர்ந்த பெருவாழ்வூ உலகத்தையே வண்ணமயமாக்கி கொண்டு இருந்தது .காரணமில்லாமல் சிரித்து ,சிணுங்கி ,சண்டை இட்டு என்று வாரங்கள் நொடிகளாய் மாறி கொண்டு இருந்தது .


தங்களின் காதல் மற்றவர்களுக்கு தெரியாமல் வெகு கவனமாக இருந்தார்கள் என்றால் மிகையல்ல .ஒரு பிரத்தியேக பார்வை ,சிறு புன்னகை,இரவினில் நேரம் காலம் தெரியாமல் ஸ்வீட் நத்திங்ஸ் பேசி டெலிபோன் கம்பெனி வளர்த்து விடுவது என்று பட்டும் படாமல் ,தொட்டும் தொடாமல் அவர்களின் காதல் வளர்ந்தது .
14-1355474759-nep-rev-03.jpg

இவர்கள் காதல் வானில் பறந்து கொண்டு இருக்க ,மதுராவின் மேல் காதல் கொண்ட மற்றொவன் இவளிடம் காதலை சொல்ல முடியாமல் ,முதலாமவன் போல் "நட்பை இழக்க விரும்பாமல் " சொல்லவும் முடியாமல் ,சொல்லாமல் இருக்க முடியாமல் தவித்து கொண்டு இருந்தான் ....அவனை அவனுக்கே தெரியாமல் காதலித்து கொண்டு ,அவன் மேல் பைத்தியமாய் மேக்னா

full.jpg
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அவர்கள் நால்வரின் வாழ்க்கை புரட்டி போடும் அந்த வாரமும் வந்தது "ஆந்திரா tour "என்ற பெயரில் .

"டேய் !.....நீ வரலையா ....."என்றாள் மதுரா தனிமையில் அவனை சந்தித்த போது .
1355891132_Nep-jiiva-samantha-6.JPG

"இல்லை .....வேலை இருக்கும்மா ...நீ போய் என்ஜோய் செய்துட்டு வா ....."என்றான் அவன் அவள் மடியில் படுத்த வண்ணம் அவள் கைகளுடன் விளையாடியவாறு .

"நீ இல்லாம போக பிடிக்கலை ....ரெண்டு வாரம் உன்னை பார்க்காம ,உன் கூட பேசாம எப்படிடா இருப்பேன் ....ஹ்ம்ம் ...முடியவே முடியாது ...நீ வந்தா நான் போறேன் ...இல்லைன்னா கான்செல் ....."என்றாள் மதுரா கண்கள் கலங்க .

"ஏய் லூசு ...நடிகர் சூர்யா காதலியை தேடி அமெரிக்காவே போகலாம் என்று ட்ரெண்ட் செட் செய்துட்டார் ...இங்கே இருக்கும் ஆந்திராக்கு போக என்னவூ எவ்வளவூ built up தேவையாடீ குட்டி ?......போர்களத்துக்கா போறே .....உனக்கு துணை வர ?????நல்லா என்ஜோய் செய்துட்டு வாடீ ....."என்றான் அவன் அவள் கன்னத்தை கிள்ளி .

மதுராவின் முகம் அப்பொழுதும் தெளியவில்லை ."என்னடீ குல்பி ...என்ன உன் பிரச்சனை ?"என்றான் அவள் இரு கன்னங்களையும் பிடித்து கொண்டு .

"ஹ்ம்ம் சும்மாவே உனக்கு விசிறி அதுவும் பொண்ணுங்க தான் அதிகம் .....என் முன்னாடியே பல்லை இளிச்சிட்டு வந்து வழிவாளுங்க .....எனக்கு தெரிந்தே இது வரை நாலு ப்ரோபோசல் வந்து இருக்கு .....நான் இல்லை என்றால் ....."என்றாள் மதுரா .

அடிங்க .....என்னை பார்த்தா என்ன 100 சைட் அடிச்சு ,50 கூட டேட்டிங் போய் ,10 காதலிச்சு சுத்துற பொறுக்கி மாதிரி இருக்கா .....லவ் செய்யும் உன் கிட்டேயே நான் டிஸ்டன்ஸ் மைண்டைன் செய்யறவன் ...உன்னையே சமாளிக்க முடியலை ...இதுல மத்தவங்களை ...சான்சே இல்லை கண்ணு தைரியமா போயிடு வா ...மீ ஒன்லி யுவர் ப்ரொபேர்ட்டி .....வேண்டும் என்றால் கழுத்தில் போர்டு மாட்டிக்கறேன் ....நான் "மதுரா தேவியாரின் ஏக போக உரிமை ...பார்ப்பவர்களின் கண்கள் நோண்ட படும் ,கிட்டே வந்தால் உயிர்க்கு உத்திரவாதம் இல்லை "என்று ????"என்றான் அவன் .
Neethane-En-Ponvasantham-Movie-Photos-7.jpg

"போடா .....உன்னை பத்தி எனக்கு தெரியாதா ...அந்த அளவூக்கு எல்லாம் உனக்கு தில் பத்தாது....ஸிரோ வாட்ஸ் பல்பு பையா நீயி ....உன்னை நம்பலாம் ...ஆனால் பொண்ணுங்க ஷார்ப் பா ...உன்னை மாதிரி அம்பி கிடைக்க ,அம்மாஞ்சி கிடைக்காதா என்று தேடிட்டே இருப்பாங்க ...."என்றவளை இழுத்து மீண்டும் அழுந்த முத்தமிட்டான் அவன் .

"விடு ...விடுடா ...விடு ..."என்ற அவளை எளிதாக அடக்கியவன் தன் தேடுதலை அவள் உதடுகளில் முடித்தே நிமிர்ந்தான் ...."யாருடீ அம்மாஞ்சி ....அம்பியா நானு ????மவளே எனக்கும் டைம் வரும் .....அப்போ தெரியும் இந்த ரெமோ பத்தி ...சரி போனா போகுதே சின்ன பொண்ணு ஆச்சேன்னு விலகி இருந்தா ....ஸிரோ வாட்ஸ் பல்புபாடி நான் .....காதலி கிட்டே எவனுமே யோக்கியன் கிடையாது ...ஏதோ போன போகுது ....நம்மை நல்லவன் என்று நம்பி புருஷன் என்று எல்லாம் நினைச்சுட்டு இருக்கேன்னு விலகி இருந்தா நக்கலா பண்றே .....இப்படியே ஏத்தி விட்டே ...நம்ம பசங்க தான் நம்ம கல்யாணத்தை நடத்தி வைப்பாங்க ....என்ன ரெடியா ?"என்று கண்களில் மின்னலொடு நெருங்கியவனை கண்டு அலறி ஓடினாள் மதுரா .


ஓடுபவளை துரத்தி பிடித்தான் அவன் ...."ஐயா சாமி ...நீ காதல் சக்ரவர்த்தி தான் .....ஸ்ரீ ராமனின் xerox copy நீ மட்டும் தான் ....இப்போ ஆளை விடு .....காஞ்ச மாடு கம்பம் கொல்லையில் பாய்ஞ்சா மாதிரி இருக்கு உன் நடவடிக்கை ......நீ உன் ஸ்பீட் கண்ட்ரோல் செய்யும்மா ...மீ பாவமோ பாவம் ..."என்று தன் காதை பிடித்து கொண்டு கேட்க வாய் விட்டு நகைத்தான் அவன் .

அவன் சிரிப்பை கண்களால் நிரப்பி மனதிற்குள் நிறைத்து கொண்டாள் மதுரா ."இப்போ சொல்லு என்ன காரணம் ...நீ போக மாட்டேன் என்று சொல்றதுக்கு ?"என்றான் அவன் அவளை அணைத்த படி .

அவன் தோளில் இருந்து வியப்புடன் நிமிர்ந்து பார்த்தாள் மதுரா ...."என்னடி கண்ணு சாசர் மாதிரி விரியுது ....உன் மனசுல இருப்பவன் நான் டீ ....நீ என்னே நினைக்கறே என்று கூடவா தெரியாது ...என்ன பேபி ...என்ன "என்றான் அவன்

"இல்லைடா ...மனசு என்னவோ சரி இல்லை .....ஏதோ பெரிசா கெட்டது நடக்க போகுதுன்னு மனசு சொல்லுது ....உன்னை பிரிந்துடுவேனோ என்று ரொம்பவே பயமா இருக்கு .........என்னை விட்டு போக மாட்டே இல்லை .....என் கூடவே தானேடா இருப்பே ....."என்றாள் மதுரா கண்கள் கலங்க .

PENANCE WILL CONTINUE.....
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
THAVAM 34

yeto-vellipoyindhi-manasu.jpg

அவன் சிரிப்பை கண்களால் நிரப்பி மனதிற்குள் நிறைத்து கொண்டாள் மதுரா ."இப்போ சொல்லு என்ன காரணம் ...நீ போக மாட்டேன் என்று சொல்றதுக்கு ?"என்றான் அவன் அவளை அணைத்த படி .

அவன் தோளில் இருந்து வியப்புடன் நிமிர்ந்து பார்த்தாள் மதுரா ...."என்னடி கண்ணு சாசர் மாதிரி விரியுது ....உன் மனசுல இருப்பவன் நான் டீ ....நீ என்னே நினைக்கறே என்று கூடவா தெரியாது ...என்ன பேபி ...என்ன "என்றான் அவன்

"இல்லைடா ...மனசு என்னவோ சரி இல்லை .....ஏதோ பெரிசா கெட்டது நடக்க போகுதுன்னு மனசு சொல்லுது ...என் பர்த்டே வேற வருது ....அந்த சமயம் உன் கூட இல்லாமல் இருப்பது ஒரு மாதிரி இருக்குடா ....நான் போகலை .....உன்னை பிரிந்துடுவேனோ என்று ரொம்பவே பயமா இருக்கு .........என்னை விட்டு போக மாட்டே இல்லை .....என் கூடவே தானேடா இருப்பே ....."என்றாள் மதுரா கண்கள் கலங்க .

"டேய் ...என்னடா இது ...உன்னை எவ்வளவூ தைரியசாலி என்று நினைத்து இருக்கேன் .....சின்ன புள்ளை கணக்கா அழுதுட்டு இருக்கே ....உன்னை விட்டு நான் எங்கே டா போக போறேன் .....அப்படியே போனாலும் ராட்சசி என் பின்னால் வந்து என் கண்ணை நொண்டிட மாட்டே நீ ......இந்த ரெண்டு மாதத்தில் படிப்பு முடியட்டும் .....நல்ல நாள் பார்த்து உன் வீட்டுக்கு வந்து சங்கரன் காலில் விழுந்தாவது இந்த இளவரசியை எனக்கு கட்டி கொடுங்க ......சமையல் கூட நானே செஞ்சுடறேன் ....என்று கேட்கிறேன் ஓகேவா .....இந்த பர்த்டே போகட்டும் .....அடுத்த பர்த்டே நீ என் மனைவியா இருப்பேடா ......அப்போ பாரு உன் புருஷ் performance .....இனி வரும் எல்லா பர்த்டே சேர்ந்தே தானடீ கொண்டாட போறோம் ...."உன்னை விட்டு ஓடி போக முடியுமா ...நாம் இருவர் அல்ல ஒருவர் இனி தெரியுமா ?""என்றான் அவன்
000.jpg

வாக்குறுதி கொடுத்த அவன் அறியவில்லை அந்த பிறந்த நாள் அவள் தலைவிதியை மாற்ற போகிறது என்று .இனி வரும் எந்த பிறந்தநாளிலும் தான் அவளுடன் இருக்க போவது இல்லை .....கனவில்,நான்கு சுவற்றுக்குள் மட்டுமே அவன் அவளுக்கான பிறந்த நாளை யாருமே அறியாமல் மட்டுமே கொண்டாடும் அவல நிலையில் இருக்க போகிறான்.ஊருக்கு ,வெளி உலகத்திற்கு அவன் இன்னொருத்தியின் கணவன்.கட்டிய மனைவியோடு பேருக்காவது சந்தோசமாய் வாழ்ந்தானா என்பது அந்த இறைவனுக்கு தான் வெளிச்சம் .

(இரு இரு ...சூர்யா ரித்திகாவோடு வாழ்ந்தானா ...தன்னை நம்பி கரம் பிடித்த பெண்ணை தள்ளி வைத்து அவளை உயிரோடு கொல்லும் வேலையை செய்து இருப்பானா ?விஜய் உண்மையானவன் ஆக இருந்தும் அவனை மதிக்காத ,திருமணத்தின் பவித்தரத்தை உணராத சோனா .யார் யாரோடு வாழ்ந்தது ????))


சரி என்று அப்போதைக்கு தலை ஆட்டினாலும் ,madhura முகம் தெளியவில்லை ...இவனை விட்டு விட்டு மற்றவர்களுடன் அவர்களின் சுற்றுலா தொடங்கியது .

Samantha-Ruth-Prabhu-Stills-18-290x290.jpg
tour முடிய மூன்று நாள் இருந்த நிலையில் அவர்கள் பயணம் கதிரி அடைந்தது .மேக்னா குடும்பம் அவர்களை வரவேற்றது .அவர்கள் குழு அங்கே தங்கி இருந்த வரை மேக்னா குடும்பம் தான் அவர்களின் உணவூ ,உறைவிடம் பொறுப்பு ஏற்றார்கள் .kadiriமற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இவர்கள் குடும்பத்திற்கு மிகுந்த செல்வாக்கு .
ஸ்பெஷல் பெரிமிஸ்ஸின் வாங்கி மதுரா அண்ட் கோ --மொத்தம் நால்வர் மட்டும் அவர்களின் பண்ணை வீட்டில் தங்க ஏற்பாடு செய்தார் மேக்னா தாத்தா .
Kadiri-temple-image-1.jpg

இவர்கள் வந்து தங்கி இருக்கும் சமயம் கடிரி நரசிம்மர் கோயில் ஆண்டு திருமண உற்சவம் கலை கட்டி இருந்தது .அன்றோடு ஒரு சிலரின் மகிழ்ச்சி காணாமல் போனது ....ஒரு சிலரின் வாழ்வூ மாற்றி அமைக்க பட்டது .....


கடந்த காலத்தை நினைத்து பார்த்தவன் ,அவளின் புகைப்படத்தை வைத்து பார்த்து கண்களில் இருந்து கண்ணீர் வழிய ஆரம்பித்தது .....அவனின் புகைப்படத்தை கையில் வைத்து கொண்டு கதறி கொண்டு இருந்தாள் MADHURA.
vlcsnap-2018-11-27-22h41m50s975.png
 
Status
Not open for further replies.
Top