All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அனிதா ராஜ்குமாரின் "என்ன தவம் செய்தேன்" - கதை திரி

Status
Not open for further replies.

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அதை கேட்டு மேக்னாவின் முகம் சிறுத்து விட ,தங்கையின் முகமாறுதலை கண்ட ஹர்ஷாவின் முகம் யோசனையை தத்து எடுத்து .தங்கை வருந்துவது பிடிக்காதவனாய் பேச்சை திசை திருப்பினான்

"இப்போ எதுக்கு தேவை இல்லாம பொய் சொன்னே டெல்லியில் இருக்கோம் என்று .....உண்மையை சொல்லிட்டு செய்யலாம் தானே ...."என்றான் ஹர்ஷவர்தன் .

"நான் இருக்கும் இடம் தெரிந்தது ஹெலிகாப்டர் வாங்கியாவது என்னை தேடி வந்துடுங்க ரெண்டு லூசுங்களும் .....நல்லது செய்யறேன் என்ற built up உடன் ....வள்ளுவர் கிரண்டப்பாவே " பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின்" குற்றம் அற்ற நன்மையைத் தரும் என்றால் உண்மை சொல்ல வேண்டிய இடத்தில் பொய்யும் சொல்லலாம் என்று சொல்லிட்டு போய்ட்டார் ....ரெண்டு நாள் என் குழப்பம் எல்லாம் தீரட்டும் ....நீ காரை எடு ஹர்ஷ் ."என்றாள் மதுரா .

கார் மீண்டும் ஓட ஆரம்பிக்க ,ஜன்னலின் வழியே வெளியே பார்த்தவளுக்கு தூரத்தில் தென்பட்ட திருவேங்கட மலை சிகரம் அவளையும் அறியாமல் கை குவிக்க வைத்தது .கண்கள் தானாக மூட ,மனதினுள் எழுந்து நின்ற வெங்கடேச பெருமாளிடம் தன் கோரிக்கையை வைத்தாள் .
1-day-chennai-to-tirupati-sightseeing-tour-package-private-car-header.jpg

"பாலாஜி !....திருப்பதி வந்தால் வாழ்வில் திருப்பம் வரும் என்று பெரியவர்கள் சொல்வார்கள் ....உன் சன்னிதானத்திற்கு வர முடியவில்லை ...இங்கே இருந்தே உன்னை வணங்குகிறேன் ...என் வாழ்வை உன்னிடம் ஒப்படைத்து விடுகிறேன் ....எந்த திருப்பம் வர வேண்டும் என்று நீ நினைக்கிறாயோ அதை ஏற்படுத்து."என்று இவள் வேண்ட ,எங்கிருந்தோ கோயில் மணி ஒலித்து இவள் கேட்ட வரத்தை கொடுக்க இறைவன் சித்தமாகி விட்டான் என்று சொல்லாமல் சொல்லியது .

மீனம்பாக்கத்தில் பிலைட் ஏறியவர்கள் திருப்பதி ஏர்போர்ட்டில் இறங்கி அங்கிருந்து காரில் பயணம் செய்து மாலை ஆறு மணி அளவில் ,ராயலசீமாவில் அமைந்து இருந்த கதிரி ஊரினை வந்து அடைந்தனர் .மெயின் ஏரியாவை தாண்டி ஒரு மஹாப்பெறும் தோப்புக்கு நடுவே இருந்த அந்த பண்ணை வீட்டின் வாயிலின் முன் நின்றது அவர்கள் கார் .
best-indian-house-models-Photo1.jpg

அந்த வீட்டின் முன்புறம் பெரிய துளசி மாடம் அமைக்க பட்டு அதற்கு இரு சுமங்கலி பெண்கள் லட்சுமி அஷ்டகம் சொல்லி பூஜை செய்துகொண்டுஇருந்தனர் .ஒருவர் வயதான சுமங்கலி .பார்க்க அந்த கால நடிகை பண்டரிபாய் போல் இருந்தார் கை எடுத்து கும்பிட தோன்றும் தெய்வீக பெண் வடிவம் .மஞ்சள் பூசிய மங்களகரமான முகம் .இன்னொருவர் நாற்பது வயதில் சுகன்யா போல் இருந்தார் .

ஹர்ஷாவும் ,மேக்னாவும் காரின் அருகேயே நின்று விட ,உள்ளே சென்ற மதுராவின் கண்களுக்கு இவர்கள் தான் முதலில் பட்டர்கள் .வாயில் கதவின் மேல் சாய்ந்து நின்று தன்னை சமாளித்து கொண்ட மதுராவின் கண்கள் அவளையும் அறியாமல் கலங்கி போனது .தாரை தாரையாய் கண்ணீர் வழிய அதற்கு மேல் சமாளிக்க முடியாதவளாய் "பாட்டி "என்று கத்தி கொண்டே ஓடியவள் அந்த பெரியவரின் காலில் போய் விழுந்தாள் .
220px-Pandari_Bai.jpg

கண் மூடி பூஜையில் இருந்தவர் காலில் கண்ணீர் பட கண் விழித்து குனிந்து பார்த்தார் .பார்த்தவரின் கண்கள் கலங்க ஆரம்பித்தது ."ஏழுகுண்டலவாடா ....வெங்கட்ரமணா .....மா பங்காரு தள்ளி ...நீ வச்சிண்டா ...."(என் தங்க மகளே ...நீ வந்துட்டியா )"என்றவர் மதுராவை இழுத்து அணைத்தார் .

உடன் இருந்த அந்த பெண்மணியும் மதுராவை அணைத்து கொள்ள அங்கு ஒரு பாச மழை அருவியாக பாய்ந்து ஓடியது .தன் வயதையும் பொருட்படுத்தாமல் மதுராவை இழுத்து கொண்டு உள்ளே ஓடினார் அந்த முதியவர் .

"(தெலுங்கு பாஷை உரையாடல்கள் தமிழில் கொடுக்க பட்டு உள்ளது .)

"என்னங்க ...யார் வந்து இருக்காங்க பாருங்க ..நம்ம வேண்டுதல் வீண் போகலைங்க .....நம்ம பேத்தி நமக்கு திருப்பி கிடைச்சிட்டாங்க ...டேய் ஸ்ரீநிவாஸா வந்து பாருடா உன் மக திரும்ப வந்துட்டடா "என்று தன் வயதிற்கு மீறிய குரலில் சத்தம் போட்டு கத்தி கொண்டே மதுராவை இழுத்து கொண்டு உள்ளே ஓடினார் srilakshmi

"யாரு ?"என்று கேட்டவாறே எழுந்து வந்தார் அந்த முதியவர் .கை எடுத்து கும்பிட தோன்றும் தெய்வீகம் அவரிடமும் .பார்க்க கே.விஸ்வநாத் போல் இருந்தார் .
director-k-vishwanath.jpg

தன் கண்ணாடியை துடைத்து மீண்டும் மாட்டி பார்த்தவர் கண்களில் இருந்து கண்ணீர் வழிய ஆரம்பித்தது .

"வந்துட்டியா மதுரா ....இந்த பாவியின் உயிர் போகும் முன்பே வந்துட்டியா என் குலம் காத்த தெய்வமே ..."என்று மதுராவை அணைத்து கதறினார் அந்த பெரியவர் நரசிம்ம ரெட்டி

" இப்போ மழை பெஞ்சு ஊரே வெள்ளத்தில் மிதந்தது ..நீங்க வேற ஆரம்பிக்காதீங்க ...சுப்பா முடியலை இவங்க பாச மழை ...."என்றவாறு வந்தான் ஹர்ஷா .

அவன் கிண்டல் அடித்தாலும் அவன் கண்களும் கலங்கி தான் இருந்தது .அதற்குள் குரல் கேட்டு மேல் இருந்து வந்தார் நரசிம்ம ரெட்டியின் மகன் முகேஷ் ரெட்டி .ஹர்ஷா .மேக்னாவின் தந்தை ,நரசிம்ம ரெட்டி ,ஸ்ரீலக்ஷ்மியின் மகன் .பிரபல தொழிலதிபர் ,கோடீஸ்வரர் .
1437265811-1662.jpg

"மா தள்ளி ...."என்று ஓடிவந்தவரை சென்று அனைத்து கொண்டாள் மதுரா ,"அப்பா "என்ற கூவலுடன் .

"எப்படிடா ஹர்ஷா இவளை கண்டு பிடித்தே ?"என்றார் அவர் அன்னை கஜலக்ஷ்மி .

"என்ன பண்றது ...எல்லாம் தலைவிதி ....ஒரு சொலவடை சொல்வார்களே ---கொடுமை கொடுமைன்னு கோயிலுக்கு போனால் அங்கு ஒரு கொடுமை ஜங்கு ஜங்குன்னு ஆடிட்டு வந்ததா மாதிரி ,இந்த ராட்ஷசியை பார்த்தோம் ....ஆவி தான் வந்துடுச்சோன்னு பயந்தா இந்த பாவி தான் உயிரோடு இருக்கு ."என்றவனை ஓட ஓட விரட்டினாள் மதுரா .

இவன் முன்னாள் ஓட மதுரா துரத்த என்று அந்த வீடு பல வருடங்களுக்கு பின்னர் கலகலத்து இருந்தது .

"மாம்மய்யா கோல்போயினா .....(மாமா தோத்துப்போயிட்டாரு )என்ற ரெண்டு இளம் குரல் கேட்டு மதுரா சடன் பிரேக் போட்டு நின்றாள் .

அவர்கள் ஓடி கொண்டு இருந்த ஹாலின் அருகே இருந்த மாடிப்படியில் நின்று இருந்தனர் ரெட்டையர் இருவர் .இருவரும் ஆறு ஆறு வயது இருக்கலாம் .ஒரு ஆண் ,ஒரு பெண் .பார்ப்பதற்கு மாஸ்டர் ராகவன் ,பேபி நைனிகாவை போலெ இருந்தார்கள் ....
33316494_907828869425362_5746725173294268416_n.jpg
'யார் இந்த ரெண்டு அழகான மான் குட்டிங்க ?அடப்பாவி ஹர்ஷா உன்னை ஆறு வருஷம் பார்க்கலை ஒத்துக்கறேன் ...அதற்குள் டூயல் ரிலீசா ?????சார் செம்ம பாஸ்ட் தான் போல் இருக்கே 'என்று ஹர்ஷாவின் பக்கம் ஒரு கோப லுக் விட்டவள் ,அந்த குழந்தைகளின் அருகே சென்று அவர்கள் உயரத்திற்கு மண்டியிட்டு அமர்ந்தாள் .

PENANCE WILL CONTINUE....
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
THAVAM 32(3)

_downloadfiles_wallpapers_1600_1200_samantha_ruth_prabhu_actress_16448.jpg

"ஹாய் டார்லிங்ஸ் .....ஐ ஆம் மதுராக்ஷி ....மது ...நீங்க யாரு ?"என்றாள் .

பெண் குழந்தை அருகில் நின்ற அவள் அண்ணனின் காதில் ஏதோ சொல்ல ,அவனும் தலை அசைத்து ஆமோதித்தான் .

"நீங்க angel லா ?"என்றான் அவன் .

எந்த குழந்தை அவளை பார்த்தாலும் முதலில் கேட்கும் கேள்வி அதுவாக தான் இருக்கும் ....அவள் முக அமைப்பா ,புன்னகையின் முழு முகவரி என்று பறையறிவிக்கும் முகமா ,குறும்பில் மிளிரும் கண்களா ,இல்லை அவள் அருகே செல்லும் போதே தோன்றி விடும் அமைதியா ஏதோ ஒன்று குழந்தைகளை அவ்வாறு கேட்க வைத்து விடும் .

"ஹே எப்படி கண்டு பிடிசீங்க குட்டிஸ் ....இங்க ரெண்டு குட் பேபீஸ் இருக்காங்க வந்து விளையாடிட்டு போங்க என்று ஹர்ஷா தான் சொன்னாங்க .....உங்க பேர் என்ன ?"என்றாள் மதுரா .

"நான் கிருஷ்ணா ,இவ சுபத்ரா ....."என்றான் சிறுவன் .
'
ரெண்டு குழந்தைகளையும் அப்படியே வாரி எடுத்து அணைத்து கொள்ள வேண்டும் என்ற பேராவல் மதுராவிற்கு வந்தது .அந்த அளவூ லவ்லி கிட்ஸ் .பார்த்த நொடியே அவள் மனதை கொள்ளை கொண்டு விட்டனர் இருவரும் .அவர்களின் ஏதோ ஒன்று இவளை கவர்ந்தது .

"சொல்லுங்க கிட்ஸ் ...இந்த தேவதை கிட்டே இருந்து உங்களுக்கு என்ன வேண்டும் ...மாஜிக் போட்டு வரவழைச்சுடறேன் ...சாக்லேட் ,பிஸ்கட் ,ஐஸ்கிரீம் எது வேண்டும் என் டார்லிங்ஸ்க்கு .. "என்றாள் மதுரா .

ரெண்டு குழந்தையும் தங்களுக்குள் தீவிரமாக டிஸ்கஸ் செய்ய ,மதுராவிற்கு சிரிப்பாக வந்தது .தலையை அசைப்பதும் ,கண்ணை சுருக்குவதும் ,வாயில் விரல் வைத்து யோசிப்பதும் என்று அவளை மேலும் கவர்ந்தனர் இருவரும் ."சோ ஸ்வீட் ."என்றாள் மதுரா தன்னையும் அறியாமல் .

இருவரும் முடிவுக்கு வந்து விட்டார்கள் போலெ ,சுபத்ரா மீதம் இருந்த படி இறங்கி வந்து மதுராவின் மேல் சாய்ந்து நின்று அவள் கன்னத்தை பிடித்து ,"angel !.....எங்க டாடியை கூட்டி வரியா ...அங்கே விஷ்வா ,நந்தா ,ஹரிணி எல்லோருக்கும் அப்பா இருக்காங்க ....எவ்வளவூ ஜாலியா விளையாடுறாங்க தெரியுமா .எனக்கும் க்ரிஷுக்கும் தான் டாடி இல்லை ...நீ தான் angel ஆச்சே ஒன் டே டாடி ஆபீஸ் வேலைக்கு லீவு கொடுத்து அனுப்பேன் ....நாங்க எங்க டாடியை 1 டைம் பார்த்துக்கறோம் .அம்மா கிட்டே கேட்டா டாடியை கூட்டிட்டே வரமாட்டேங்கிறா ....ப்ளீஸ் ப்ளீஸ் ."என்றாள் கண்ணில் நீர் வழிய .

அதிர்ந்து போய் திரும்பினாள் மதுரா .கண்களை மூடி பாரம் தாங்க முடியாதவளாய் தூணின் மேல் சாய்ந்து நின்று கொண்டு இருந்தாள் மேக்னா .அங்கு இருந்தவர்களின் முகமும் அந்த குழந்தைகள் யாரின் பிள்ளை என்று சொல்லாமல் சொல்லியது .அது வரை இருந்த கலகலப்பு மாறி ஏதோ பேய் பிடித்தது போல் அனைவரின் முகமும் வெளிறி போனது .
maxresdefault (1).jpg

'இவங்க மேக்னா பிள்ளைகளா ?....அவள் கணவன் எங்கே ...டைவோர்ஸ் ஆகிவிட்டதா இல்லை இறந்துட்டானா ?'என்று யோசித்தவள் ,'இப்படி என்றால் இவர்களின் ரியாக்ஷன் இப்படி இருக்க வேண்டிய அவசியம் என்ன ?ஏதோ முள்ளின் மேல் நிற்பது போல் .....சொல்ல கூடாத ரகசியம் பகிர பட்டது போல் .....எதற்கு இந்த தவிப்பு ,துடிப்பு ,கலக்கம் எல்லாம் ????'என்று யோசித்தவளை தடை செய்தது கிருஷ்ணாவின் அழைப்பு .

மதுராவின் அருகே வந்து நின்ற அவன் அவள் முகத்தை தன் புறம் திருப்பி ,"ப்ளீஸ் angel ...நாங்க குட் கிட்ஸ் தானே ....எனக்கு எங்க டாடியை கூட்டிட்டு வரியா ..ப்ளீஸ் ."என்று கண்ணை சுருக்கி ,முகத்தை பாவமாய் வைத்து கேட்க ஷாக் அடித்தது போல் ஸ்தம்பித்து போனாள் மதுரா .

கிருஷ்ணாவின் அந்த கண் சுருக்கம் ,கொஞ்சல் ,மனேரிசம் எல்லாம் உண்மையை சிதறு தேங்காய் போல் உடைத்து காட்டி விட்டது .ஆனால் பார்ப்பதை தான் அவளால் நம்ப முடியவில்லை .அவர்கள் யாரின் குழந்தை .அவர்கள் தேடும் தந்தை யார் என்று விளங்கி விட்டது அவளுக்கு .தெரிந்து கொண்டதை உறுதி செய்ய மதுரா மேக்னாவை பார்க்க அவள் தலை தானாக கவிழ்ந்தது .

'இது எப்படி சாத்தியம் ...இங்கே அவன் பாதையும் மேக்னாவின் பாதையும் இணைந்தது ? அவர்களின் இணைப்புக்கு ஆதாரமாய் ரெண்டு உயிர்கள்.எப்படி ...எப்படி ....'மதுரா திணறி போனாள் என்றால் மிகை அல்ல .
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"க்ரிஷ் ,தாரா ....நீங்க கேட்ட போமெரியன் வாங்கி வந்து இருக்கேன் .... கம் லெட்ஸ் கோ ."என்று ஹர்ஷா குழந்தைகளை அழைத்து கொண்டு தோட்டத்திற்கு சென்று விட ,அழுகையுடன் மேக்னா உள்ளே சென்று விட்டாள் .

"அம்மா!.....என்னமா இது ?"என்றாள் மதுரா கஜலட்சுமியை பார்த்து -இத்தனை வருடம் இவர்கள் அவனை எப்படி விட்டார்கள் .அவனும் பொறுப்பை தட்டி கழிப்பவன் அல்லவே ....ஏதோ தப்பு நடந்து இருக்கிறது .

முந்தானையில் வாய் மூடி அழுதார் லட்சுமி .கண்ணை மூடி தன் அறைக்கு சென்று விட்டார் நரசிம்மனும் ,முகேஷும் .பூஜை அறைக்குள் சென்று விட்டார் ஸ்ரீலக்ஷ்மி .

கஜலக்ஷிமிக்கும் யாரிடமாவது தன் துயரத்தை சொல்லி அழ வேண்டும் போல் இருந்ததோ என்னவோ மதுராவின் தோளில் சாய்ந்து அழுது விட்டார் .அவரை சற்று நேரம் அழ விட்டு அவர் சமாளித்து கொண்டார் என்றதும் அவர் பருக தண்ணீர் கொடுத்தாள் .

"போய் பேசி பார்க்கவே இல்லையா ....எப்படி இவ்வளவூ காலம் ஏதும் செய்யாம விட்டீங்க ?"என்றாள் மதுரா .

"குடி போதையில் இருந்து இருக்கிறான் மதுரா ."என்றார் அவர் .

"வாட் ...குடியா ?"அவளுக்கு தெரிந்து அவன் குடிக்கவே மாட்டானே ....இவர் குடி என்கிறார் .

"அப்பா போய் பேசினாங்களா ?"என்றாள் மதுரா .

"யாரிடம் என்று மா போய் பேசுவது ....அவன் யார் என்றே இவளுக்கும் தெரியவில்லை .....அவன் செய்த பாவத்திற்கு என் மகள் சிலுவை சுமக்கிறா .எல்லாம் விதி ."என்றார் அவர் .

'என்ன சொல்ராங்க இவங்க ...யாருன்னு தெரியலையா ....க்ரிஷின் முக ஜாடை பார்த்து கூடவா இன்னும் யார் என்று புரியவில்லை ....அது எப்படி மேக்னாவிற்கு தெரியாமல் போகும் ....சான்சே இல்லை ...இவ தான் ஏதோ கோல்மால் செய்து இருக்கா ....அப்பா தொழிற் துறையில் இருப்பவர் .அவர் கண்களுக்கு உருவ ஒற்றுமை எப்படி தெரியாமல் போனது ?????ஹர்ஷாவுக்கு கூடவா அடையாளம் தெரியவில்லை ....'என்று தலையை பிய்த்து கொண்டாள் .

"அப்பாவும் ,நானும் ,மாமா .அத்தை ,ஹர்ஷா கூட எவ்வளவூ சொல்லி விட்டோம் .நடந்த தவறுக்கு நீ பொறுப்பு அல்ல .நடந்தது ஒரு விபத்து என்று எண்ணி மறந்து விடு ...குழந்தைகளை நாங்க பார்த்துக்கறோம் ...நீ வேறு திருமணம் செய்து கொள் என்றதற்கு மூன்று மாதம் எங்களிடம் பேசவும் இல்லை ...கருவை களைத்து விடு என்றதற்கு உடன் படவில்லை ....ஏதோ போய்ட்டு இருக்கு மதுரா ....ச்சே பாரு ...வந்த புள்ளைங்க பசியா இருக்கும் ...சாப்பாடு கூட எடுத்து வைக்காம ....சின்னு ....சாப்பாடு எடுத்து வை ..."என்றவாறு உள்ளே போனார் .

மதுரா நினைத்தது தான் நடந்து இருந்தது ....நிச்சயம் இது மேக்னாவின் வேலை தான் .அவள் அறிந்த வரை பொறுப்பு என்று வந்து விட்டால் அதை தட்டி கழிப்பவனே அல்ல .விஷயம் இது வரை அவன் செவிகளுக்கு போகவில்லை ....போய் இருந்தால் தெரிந்து இருக்கும் அவன் ருத்ரதாண்டவம் ......யாரோ என்று அப்பாவும் ,ஹர்ஷாவும் நினைத்து இருப்பதால் உருவ ஒற்றுமை .மேனரிசம் இவர்கள் கண்களில் படவில்லை .கண்ணுக்கு முன் உள்ளதை மூளை ஏற்கவில்லை . எதற்கு இவளுக்கு இந்த வேலை ....அப்போ காலேஜ் டேஸ்ல நான் போட்ட கணக்கு தப்பு கிடையாது ....இவ காதலிக்கறா என்று தோன்றியது நிஜம் ....'என்று தன் எண்ணத்தில் உழன்று கொண்டு இருந்தவளின் அருகில் வந்து அமர்ந்தான் ஹர்ஷா .
Mahehs-Babu-Samantha.jpg

இது உனக்கு செட் ஆகலை .."என்றான் .

"என்னதுடா ?"என்றாள் மதுரா

"இந்த சீரியஸ் லுக் ...இந்த ஆழ்ந்த சிந்தனை ...இது எல்லாம் மூளை உள்ளவங்க செய்யறது அதை களிமண் மட்டுமே இருக்கும் நீ ஏன் செய்யரே ...."என்றான் ஓடுவதற்கு தயாராக .

வேறு ஒரு சமயமாக இருந்து இருந்தால் அவனை ஒருவழி செய்து இருப்பாள் .இன்றோ உண்மை அவளை கட்டி போட்டு இருந்தது .

பேபி ....உனக்கு இது செட் ஆகலை என்று சொல்லிட்டேன் ...பிரியா விடு .....பார்த்துக்கலாம் ...நிச்சயம் மனம் மாறி வேறு திருமண வாழ்க்கை ஏத்துப்பா ....ரிலாக்ஸ் "என்றான் ஹர்ஷா .

"லூசாடா நீயி ....கண்ணை என்ன பேங்க்கில் அடமானமா வைத்து இருக்கே ...பெத்த டாக்டர் என்று வெளியே போய் சொல்லிடாதே ...காரி துப்பிட போறாங்க ....அவ உங்களை எல்லாம் ஏமாத்திட்டு இருக்கா ...அவளை போய் நம்பிட்டு இருக்கீங்க ...உங்களை விட அவளை எனக்கு நல்ல தெரியும் ...."என்றாள் மதுரா கோபமாக .
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"லூசு மாதிரி பேசுறது நீ தான் ...ஒரு பொம்பளை பொறுக்கி ...குடி போதையில் இவளிடம் தவறாக நடந்து கொண்டான் என்பதற்கு இவளை குறை சொல்வது நியாயம் இல்ல ..உன்னிடம் இருந்து சாத்தியமா எதிர் பார்க்கவில்லை மதுரா ."என்றான் ஹர்ஷா .
samantha.jpg


"டேய் அறிவூ கொழுந்தே ...கிருஷ்ணாவின் முக ஜாடை ,அவன் மேனரிசம் கூடவா உனக்கு தெரியலை ....இதுக்கு 'என் நண்பன் போல யாரு மச்சான் ?"என்று ஷோ வேறு காட்டினே ...குடி போதை என்பது வேண்டும் என்றால் உண்மையாக இருக்கலாம் ...ஏனென்றால் நிதானமாக இருக்கும் போது பெண்களிடம் அவன் கண்ணியம் காப்பவன் ....தப்பாக கூட எந்த பெண்ணையும் பார்க்காதவன் ...குடி போதையில் நடந்தது என்னவோ உண்மை தான் ...ஆனால் யார் என்றே தெரியாது என்று உன் உடன் பிறப்பு சொல்வது 100% அக்மார்க் பொய் ......அவளுக்கு அவனை தெரியும் .....விழுந்து விழுந்து அவனை காதலிச்சவ ...."என்றவள் அவன் குழப்பம் தெளியாததை கண்டு ,"உனக்கெல்லாம் டெமோ தான் லாயக்கு ...உன் மொபைல்லில் கிரிஷ் picture இருக்கா ..எடு அதை"என்றவள் தன் மொபைல்லில் இருந்து ஒரு படத்தை எடுத்தாள் .

"இப்போ க்ரிஷ் படத்தை நல்லா பாரு ....பார்த்துட்டியா ...இப்போ என் மொபைல் பாரு ...."என்றவளை லூசா நீ என்ற லுக் விட்டு வேண்டா வெறுப்பாக பார்க்க ஆரம்பித்தவனின் கண்கள் தன் முன்னால் இருப்பதை நம்ப முடியாமல் விரிய ஆரம்பித்தது .

"என்ன இப்போ தான் பல்பு எரியுதா சஞ்சய் ராமசாமி ?"என்றாள் மதுரா .

"மது ..மது ..இது எப்படிடீ சாத்தியம் ..இவனா கிரிஷ் அப்பா ???எப்படிடீ ....
"தெரியலை டா ..."என்றவள் அந்த ஹால்லில் மாட்டி இருந்த மேக்னா ,குழந்தைகளின் படத்தை பார்த்து பெரு மூச்சு விட்டாள் ."வா டா ...கொஞ்சம் வெளியே உலாத்திட்டு வருவோம் ."என்றவளோடு பிரமை பிடித்தது போல் சென்றான் ஹர்ஷா
Kajal.jpg

கையில் இரு போனையும் மாறி மாறி பார்த்தவன் ,"நண்பன் என்று நினைத்து வீட்டினில் விட்டால் உண்ட வீட்டுக்கே எப்படி கெடுதல் செய்து இருக்கானேடீ ....இவனை கொன்றால் கூட என் ஆத்திரம் அடங்காது ....பாவி பாவி ....."என்றான் கை முஷ்டிகள் இறுக .

"லூசு மாதிரி உளறாதே ஹர்ஷ் ...கொலை எல்லாத்துக்கும் சொலுஷன் இல்லை ....கிரிஷ் ,சுபத்திரா பற்றி யோசிக்கவே இல்லையா நீ ????சத்தியம் கூட செய்வேன் இவன் தப்பானவன் இல்லை ஹர்ஷா ...உனக்கே அது நல்லா தெரியும் .....எத்தனை பெண்கள் இவன் மீது விழுந்து பழகுவாங்க ....ஆனா எந்த பெண்ணின் நிழலையும் இவன் தொட்டது கூட கிடையாது ..... ஆனா இவன் தான் குழந்தைகளின் அப்பா ....அது மட்டும் confirm .மேக்னா பொய் சொல்லலாம் ஜீன்ஸ் பொய் சொல்லாது .....3 மாதம் ஸ்டுடென்ட்ஸ் exchange ப்ரோக்ராம்ல எங்க காலேஜ் ஜூக்கு வந்த 10 பேரில் இவளும் அடக்கம் ...வந்த நாள் முதலாகவே இவ நடந்த விதம் சரியே இல்லை ...ஹட்ச் டாக் மாதிரி இவன் பின்னாடியே தான் சுத்திட்டு கிடப்பா .....கூப்பிட்டு விசாரிப்பதற்குள் இவன் எனக்கு தெரிஞ்சவங்க வீட்டு பொண்ணு ...ரொம்ப பயந்த சுபாவம் .....என்னை மட்டும் தானே தெரியும் என்று சப்போர்ட் செய்தான் ...நானும் என் வேளையில் பிஸியா இருந்ததில் இவங்களை ஆழ்ந்து கவனிக்கலை .....இவனை பற்றி உனக்கே தெரியும் .இன்னும் இவனுக்கு குழந்தைகளை பற்றி தெரிந்து இருக்கவில்லை என்று தான் நினைக்கிறன் ......தெரிஞ்சுது உன் தங்கச்சியை எவனாலும் காப்பாத்த முடியாது என்பது மட்டும் உறுதி .....தவிர சுமன்,சோனா வேறு இருக்காங்க ....குழந்தைகளை பற்றி தெரிஞ்சது இன்னொரு துருப்பு சீட்டுன்னு விளையாடி பார்த்துடுவாங்க ."என்றாள் மதுரா யோசனையுடன் .

"இப்போ என்ன தாண்டீ செய்ய சொல்றே ?"என்றான் ஹர்ஷா .

"இத்தனை வருஷம் அமைதியா தானே இருந்தே ...இன்னும் கொஞ்ச நாள் அமைதியா இரு ஹர்ஷ் .....என் வாழ்க்கையை தேடி வந்தேன் ....மனதில் பாரத்தோடு ....இப்போ தான் பாதை தெரிந்து இருக்கு ....உன் தங்கச்சி அவ பசங்களை சேர வேண்டிய இடத்தில சேர்த்து வைப்பது என் பொறுப்பு ......நான் இருக்கேன் ....நான் பார்த்துக்கறேன் ......நைட் அவ கிட்டே பேசி விஷயத்தை வாங்கிட்டு சொல்றேன் ."என்றாள் மதுரா .

PENANCE WILL CONTINUE.....
 
Last edited:

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
HAPPY ENDING NA ELLORUKUM PAIR IRUKANUM....naanga kadisi varai the endil kooda puthu vitha twist vaithalum surprise padave koodthu........erkanave oruthanga comment la tirupachi arivaa ready ya iruku ...vijay pasanga endru sonnenga home ke vanthuduven nu payamuruthi vaichalum....satrum manam thalaratha vikramathiyan mathiri naanga twist koduthute irupome enpathai solli kolgiren.....ithuke epadi sanchuteengale....innum madhuravai kai pidika povathu yaaru contest arambikave illai chellams.....

may be next week or this weekend madhura marriage will be fixed.....

madhura marriage ku thayar agitaa...
.mapillai -----no idea
venue----no idea
marriage nadakuma-nadakathaa----no idea

mapillai.....its her choice.i think she will choose when she returns from rayalaseema....


so ponnu veetukarangala srikalatamilnovel kudumbathirku invitation anupa padum.....all expenditure ungaladathu....thirumana mandapathirku vanthaal no guarntee for ungal uyir.....so be prepared for all.

mozhi ezhutharavanga c/o anitha endru write seithu check,cash,paytm,ola all will be accepted.limit 2000 kizhe kuraiya koodathu....illai endral boss film shivaji mathiri room allot seiya padum....:devilish::devilish::devilish::devilish:.apadiyum varathavarrgaluku sona/suman/gaja/sorna veedu thedi varuvanga.

hearty welcome to all for the nadakalam,nadakamal pogalam ennum madhuravin marriage ku.

me escape
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
THAVAM 32(4)

c-14-5.jpg

அதற்குள் வேலைக்கார பெண் சாப்பிட இவர்களை அழைக்க ,ஒரு வித மௌனத்தில் கழிந்தது அவர்களின் இரவூ உணவூ .குழந்தைகள் வழக்கம் போல் தாத்தா ,பாட்டியுடன் உறங்க செல்ல மேக்னாவின் அறைக்கு சென்றாள் .இவள் நிச்சயம் வருவாள் என்பதை எதிர் பார்த்து மேக்னாவும் உறங்காமல் தான் காத்து இருந்தாள் .

உள்ளே வந்த மதுராவின் கூர் பார்வையை தாங்க முடியாமல் தலை தானாக கவிழ்ந்தது மேக்னாவிற்கு .

எதையும் பேசாமல் வந்த மதுரா ,ஓங்கி ஒரு அறை விட்டாள் ."நீயா இப்படி ஒரு பாவத்தை செய்ய துணிந்தே .....அதிர்ந்து கூட பேச மாட்டியே மேக்னா ....நீயா இப்படி ...இவ்வளவூ கேவலமாக நடக்க உன்னால் எப்படிடீ முடிஞ்சது ???எப்படிடீ மனசு வந்தது உன் குடும்பத்திடம் உண்மையை மறைக்க ....மறைக்க கூடிய விஷயமாடீ இது ....எதை நினைத்து டீ இப்படி செஞ்சு வச்ச .....க்ரிஷ் முக அமைப்பு ஒன்று போதும் மேக்னா அவன் யார் மகன் என்று ஒருவர் தெரிந்து கொள்ள ....சொல்லு சொல்லுடீ ...சொல்லு "என்று கன்னம் கண்ணமாய் அறைந்தவள் ,"சொல்லு சொல்லு அவன் உன்னை கெடுத்தானா .....உன் வாழ்க்கையை அவன் தெரிஞ்சே நாசம் செய்தானா .....சொல்லு டீ ...சொல்லு ...உன் குடும்பத்திடம் நீ அவன் மேல் சொல்லிய குற்றசாட்டு உண்மையா ....இப்போ சொல்ல போறியா இல்லையா ?"என்றாள் மதுரா அடியை நிறுத்தாமல் .

"ஆமா பொய் தாண்டீ சொன்னேன் .....அவருக்கு இப்படி நடந்ததே நினைவில் இருக்காது .....அவர் அன்று தன் வசத்தில் இல்லை ......இதற்கு முழு பொறுப்பு நான் மட்டும் தான் .....அவர் இல்லை ....ஏன் பொய் சொன்னேன் என்கிறாயா ?????உன்னால் தான்டீ ...உனக்காக தாண்டீ .....நீ எங்க வாழ்வில் வந்ததால் தான் என் காதல் அவரிடம் சொல்லாமலே அழிஞ்சு போச்சு .....நீயெல்லாம் என்ன பெண் ...ஒருத்தர் அந்த அளவூ உன்னை காதலிப்பது கூட தெரியாமல் கண் ,காது என்று எல்லாவற்றையும் இரும்பு கவசம் போட்டு மூடி வைப்பாயா என்ன ????ஜடம் போலெ இருந்தே ...அந்த மனுஷன் உன் கிட்டே காதலை சொல்ல முடியாமல் தினம் தினம் என் கண் முன் செத்து செத்து பிழைச்சார் டீ . எனக்கு நினைவூ தெரிந்த நாள் முதலாய் அவரை தான் காதலித்தேன் .....நினைவில் வாழ முடியாத வாழ்க்கையை கனவில் வாழ்ந்தேன் ....தினம் தினம் மூச்சு விடுவது ,உண்பது ,உறங்குவது ,பேசுவது ,சிரிப்பது என்று எல்லாமே அவர் ஒருவருக்காக என்று நான் அவராய் மாறி எத்தனையோ வருஷம் ஆச்சுடீ .....கனவூ எது நினைவூ எது என்று புரியாமல் பைத்தியம் பிடித்து அலைஞ்சு இருக்கேன் .....எல்லாம் நல்ல படியாய் போய் இருக்கும் ...என் parents கிட்டே பேசி எங்க திருமணத்தை நடத்தி இருப்பேன் .....நீ உள்ளே வராமல் இருந்து இருந்தால் .......நீ வந்தே எல்லாம் முடிஞ்சி போச்சு ...உன்னை தவிர அவரின் கண்களுக்கு வேறு யாருமே தெரியலை ...காணக்கிடைக்காத தேவதை நீயாம் .....அவன் மனைவியா வாழ்ந்துட்டு இருக்கும் என்னிடம் போய் வந்து சொல்லறார் நீ அவர் angel என்று ....நானும் மனுசி தான் டீ ."என்றவள் மதுரா அதிர்ந்து நிற்பதை பார்த்து விரக்தியாய் சிரித்தாள் .
Kajal-Aggarwal-In-Do-Lafzon-Ki-Kahani-Movie-Sad-Wallpaper-580x370.jpg

"கேவலமா நான் நடந்துட்டேனா ....என்ன கேவலத்தை நீ கண்டே மதுரா ....என் புருஷன் என்னை தொட்டார் ....என் காதலுக்கு அவர் கொடுத்த பரிசு என் பசங்க ...என்னடீ பார்க்கறே அவர் எப்படி என் புருஷன் என்றா ?"என்றவள் தன் ஆடைக்குள் இருந்த திருமாங்கல்யத்தை இரு கரங்களால் பிடித்து மதுராவிற்கு நேராக காட்டியவள் ,"மதுரையில் மீனாக்ஷி திருமணம் நடக்கும் போது ,சுமங்கலி பெண்கள் என்ன செய்வார்கள் தெரியுமா புது திருமாங்கல்யத்தை தங்களுக்கு தானே அம்மனுக்கு திருமணம் நடக்கும் போது கட்டிப்பாங்க .....என் கண் முன் அவர் கோயில் இருந்தார் .....அவர் காட்டுவதாக நினைத்து கொண்டு இறைவன் சன்னதியில் எனக்கு நானே கட்டி கொண்ட திருமாங்கல்யம் இது ...வேடிக்கை என்ன தெரியுமா .....முதன் முதலில் எனக்கு என்று அவர் கடையில் என்ன வாங்கிறோம் ஏது வாங்கறோம் என்று கூட தெரியாமல் கையில் கிடைத்ததை ,உன்னை பார்த்து கொண்டே தூக்கி கொடுத்தார் .....அவர் கொடுத்தது இந்த திருமாங்கல்யத்தை தான் ....அவரை என் கணவனாக தான் நினைத்தேன் ...நினைப்பேன் ,கடைசி மூச்சு உள்ள வரை அவரை தான் நினைச்சுட்டே இருப்பேன் ...அவர் தொடும் போது தடுக்க என்னால் முடியவில்லை......என் புருஷனோடு நான் வாழ்ந்த ஒரு நாளுக்கு உனக்கெல்லாம் காரணம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை .....சர்தான் போடி ."என்றாள் மேக்னா ஆங்காரமாய்

இது எது மாதிரியான காதல் ?????.மேக்னாவின் காதல் மதுராவை மிரட்டியது என்றே சொல்லலாம் ....அவனை பற்றி பேசும் போது அவள் கண்ணில் தெரிந்த காதல் ,முகத்தில் ஒரு பரவசம் ....அவன் என்னை காதலிக்கவில்லை என்றாலும் அவனை நான் காதலித்து கொண்டே இருப்பேன் என்னும் வைராக்கியம் ,அவன்கொடுத்தான் என்ற ஒரே காரணத்திற்காக இவளாகவே கட்டி கொண்ட திருமாங்கல்யம்,அதற்கு இவள் உண்மையை வாழ்வது .....இது என்ன மாதிரியான வெறி பிடித்த காதல் ????

ஊர் அறிய லட்சம் பேர் முன்னிலையில் நடந்த திருமணத்தில் ஊர் உலகத்திற்கு கட்டப்பட்ட திருமாங்கல்யத்தை கழற்றி குப்பை தொட்டியில் போட்டவளும் இதே நாட்டில் தான் இருக்கிறாள் ,கட்டவே இல்லை என்றாலும் தன்னவன் கட்டி விட்டதாக நினைத்து அதற்கு மரியாதை கொடுத்து வாழ்பவளும் அதே நாட்டில் தான் இருக்கிறாள் .....
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"ஏன் மேக்னா ...எவ்வளவூ சிக்கல் .....அவன் கிட்டே பேசி இருக்கலாம் இல்லை ...உனக்காக இல்லை என்றாலும் பிள்ளைகளுக்காக ...உன்னால் முடியவில்லை என்றால் அட்லீஸ்ட் அப்பா ,அம்மா இல்லை ஹர்ஷா கிட்டே சொல்லி இருக்கலாம் தானே .....ஏன் இவ்வளவூ காலம் வீண் அடிச்சே ?"என்றாள் மதுரா கண்ணில் நீர் வழிய .
cc28f31b20526f6a2a8c69c39a2b06ca.jpg

"ராசி இல்லை மதுரா ...முதல் முறை காதலிப்பதை சொல்ல போனேன் ...."நான் மதுராவை காதலிக்கறேன் ...இன்று என் பிறந்த நாள் ...அவ கிட்டே ப்ரொபோஸ் செய்ய போறேன் விஷ் மீ என்று வந்து நின்றார் ....அதன் பிறகு என்ன நடந்ததோ உன்னை பிரிந்து தேவதாஸ் போல் சுற்றி கொண்டு இருந்தார் ...அப்போ ஆரம்பித்தது தான் குடி பழக்கம் எல்லாம் ....ஒரு நாள் ரோட்டில் அசிஸிடெண்ட் ஆகி இருந்தார் ...நான் தான் அவரை அவர் வீட்டில் கொண்டு போய் விட்டேன் ...."என்றவள் முகம் விசிக ,"அன்று தான் அவரின் மனைவி ஆனேன் ...".இவங்க உருவானது தெறிந்து அவரிடம் தான் ஓடினேன் .....ரொம்ப லேட்டா ஓடிட்டேன் போல் இருக்கு ...நான் போய் நின்ற நேரம் அவருக்கு திருமணமே முடிஞ்சு இருந்தது ....."ஒவ்வொரு முறையும் அவரிடம் சொல்லும் போது இப்படி எதாவது ஒரு தடை ...அவருக்கு திருமணம் ஆனா பிறகு உண்மை இவர்களிடம் சொன்னால் எங்கே இவர்கள் பிரச்சனை கிளப்புவார்களோ , அவர் திருமண வாழ்க்கை பாதிக்க படுமோ என்று 'யார் என்றே தெரியாத ஒருவன் குடிபோதையில் 'என்று சொல்லிவிட்டேன் ...அவராவது சந்தோசமாக இருக்கட்டுமே ...என்றுமே எனக்கு கிடைக்காத வாழ்க்கை .... சோ பெருசா இழந்த மாதிரி தோணலை ....அப்பா ,அம்மா ,நான் ஹர்ஷா எல்லாரும் ஆஸ்திரேலியா போய்ட்டோம் ...அங்கே தான் குட்டிஸ் பிறந்தாங்க ....போன மாசம் தான் தாத்தாவுக்கு மைல்டு ஹார்ட் அட்டாக் என்று இந்தியாவிற்கே வந்தோம் ....லைப் அது பாட்டுக்கு நிம்மதியா போகுது மதுரா."என்றாள் மேக்னா அங்கு இருந்த சோபாவில் பொத்தென்று அமர்ந்தவாறு .

"ஆமா ...எனக்கு தான் வில்லியா நீ வந்தே ...என் காதலுக்கு சங்கு ஊதி பால் தெளிச்சுட்டே ....உனக்கு என்ன வந்தது ....உன்னை ஏன் அவர் திருமணம் செய்யலை .....தன் காதல் என்றால் உலகத்தையே எதிர்த்து நின்று இருப்பாரே ....."என்றாள் மேக்னா யோசனையாக .

விரக்தி புன்முறுவல் இந்த தடவை மதுராவின் முகத்தில் தோன்றியது .தன் பிலாஷுபாக் (அதான் பா கொசுவத்தி சுருள் ஓட ,எபிசொட் ஒன்றில் இருந்து மேக்னாவிற்கு REPLAY செய்தாள் மதுரா .
wsUXHdU.jpg

"என்னடீ சொல்றே ......அப்போ நீ லவ் செய்யலையா ....?"என்றாள் நெஞ்சை கையில் பிடித்து கொண்டு .

"உன்னவரை லவ் செய்யலை ....."என்றாள் மதுரா .

"அப்படி என்றால் .....?"என்றாள் மேக்னா திகைப்புடன் .

"நீ பேசி புரிய வைத்து இருக்க வேண்டும் என்று அர்த்தம் ......அவனிடம் பேசி இருந்தாய் என்றால் உண்மை உனக்கே தெரிந்து இருக்கும் .....இத்தனை காலம் இந்த தவ கோலம் உனக்கு தேவை இல்லை என்று அர்த்தம் .....எல்லாம் உனக்கு சாதகமாக இருக்கிறது என்று அர்த்தம் ."என்றாள் மதுரா .

"அப்போ உனக்கு இத்தனை வருடமாய் ...."என்ற மேக்னாவின் கேள்விக்கு உதட்டை பிதுக்கினாள் மதுரா .

"என் கேள்விகளுக்கு விடை இங்கு தான் கிடைச்சுது மேக்னா ....இனி அதற்காக போராட வேண்டும் ...உன்னையும் உன்னவரிடம் சேர்க்க வேண்டும் .....சேர்த்துடலாம் ....குட் நைட் ..."என்ற மதுரா மேக்னாவின் அறையை விட்டு வெளியேற ஸ்தம்பித்து நின்றாள் மேக்னா .

தன் அறைக்கு வந்த மதுரா தன் கழுத்தில் தொங்கி கொண்டு இருந்த மொபைல் போன் எடுத்து அதில் ரெகார்ட் ஆகி 'இருந்த மேக்னாவின் பேச்சை மீண்டும் replay செய்தவளின் முகத்தில் மெல்லிய புன்னகை படர்ந்தது . அதை ஹர்ஷா கொடுத்து இருந்த லேப்டாப்புக்கு மாற்றியவள் , தாத்தா நரசிம்ம ரெட்டி கொடுத்து இருந்த சில ஆல்பம்களையும் ,வீடியோ கேசட்டையும் மீண்டும் மீண்டும் பார்த்தாள் . அவள் கேள்விகளுக்கான விடை ஐந்து வருடங்களுக்குமுன் கத்ரி நரசிம்ம சாமி கோயில் உற்சவத்தில் இருந்தது சூர்யா ,விஜய் ,ஹர்ஷா ,மேக்னா ,இவள் ரூபத்தில் .

கண்ணில் நீர் வழிய பித்து பிடித்ததை அமர்ந்து இருந்தவளின் தோளின் மீது கரம் வைத்து அழுத்தினார் தாத்தா நரசிம்மன் .உடன் ஹர்ஷா .இருவரின் முகமும் சொல்லவொண்ணா வேதனையை ஏற்று இருந்தது .
images (3).jpg

"அழாதேம்மா ...வேண்டாம் ...இவ்வளவூ காலம் என்னை காப்பாற்ற போய் நீ அழுதது போதும் ....எதுவும் நம் கை மீறி போய் விடவில்லை ....மன தைரியத்தை விடாதே கண்ணா ."என்றார் .
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"என் அப்பா ,அம்மாவை நினைத்து பார்த்தால் தான் ...பயமா இருக்கு தாத்தா ....அம்மாவிற்கு முன் இருந்தே ரெண்டாம் தரம் என்பது பிடிக்கவில்லை .....நிறைய போராடனும் போல் இருக்கு தாத்தா ..இப்போ இது தெரிஞ்சதுன்னா ...."என்றாள் மதுரா .

"நடந்தது கடவுளின் திருவிளையாடல் அன்றி வேறு எதுவும் இல்லை மா .....யார் யாருக்கு யார் என்று பிறக்கும் போதே அவர் தீர்மானித்து விட்டது ...உனக்கும் அவனுக்குமான பந்தமும் அப்படி பட்டது தான் ....உன் கையில் எதுவும் இல்லை ...அவன் ஆடும் ஆட்டம் இது ...அவனுக்கு தெரியும் எப்போ எதை கொடுக்கணும் என்று ....கடவுளின் மேல் பாரத்தை போடு ...அவன் பார்த்துப்பான் .....சொல்ல மறந்துட்டேன் ....ராமராஜூ அவன் மகள் ஸ்ரீநிதியுடன் வந்து இருக்கான் ....நாளை ஹர்ஷா உன்னை கூட்டி போவான் ....போய் பேசு ...அவன் உதவி தேவை படும்......உன் தலைவிதியை அவனை வைத்து தானே கடவுள் எழுதினார் ....அவன் கிட்டே எல்லாத்தையும் சொல்லிட்டேன் ...."என்றார் நரசிம்மன் .

"சரி தாத்தா ......மேக்னா ....வந்து அவ ..."என்று தடுமாறினாள் .
viswa.jpg

"உங்களுக்கு எல்லாம் மூத்த தலைமுறை என்றால் இளப்பம் ...அவ மறைக்க பார்த்தாலும் விதி விடுமா ....க்ரிஷ் அப்படியே அவங்க அப்பா ஜாடை இல்லை மதுரா ...விதை ஒன்று போட்டால் சுரை ஒன்றா காய்க்கும் ?"என்றார் அவர்

"தாத்தா !அப்போ உங்களுக்கு அவன் தான் க்ரிஷ் ,தாரா அப்பான்னு ..."என்று அதிர்ந்தான் ஹர்ஷா .

"ஏண்டா ....நீங்க தான் லூசு ...நானுமா ????நீ பெரிய டாக்டர்...அவன் friend ...உங்க அப்பன் ஒரு பிசினஸ் மேன்...அவன் பிசினெஸ் பார்ட்னர் .....வெளியில் சொல்லிடாதீங்க ....ஏண்டா மேக்னா பற்றி தெரியும் தானே ...அவள் விருப்பம் இல்லாமல் எதையாவது யாராவது செய்ய வைக்க முடியுமா ????கராத்தே,takwando கற்றவள் ,அவள் தன்னை ஒருவன் தொட வந்தால் உயிரோடு விட்டு இருப்பாள் என்றா நினைக்கறே ...அட்லீஸ்ட் தன்னை காப்பாற்றிக்க முடியலை என்றால் தன்னை தானே அழித்து கொண்டு இருப்பாள் .....அவளும் சொல்றாள் ...நீங்களும் லூசுங்க மாதிரி கேட்டுட்டு இருக்கீங்க .... சரி இதை கூட விடு ...முன் பின் தெரியாதவனுக்கு யாரவது இவ்வளவூ சந்தோச படுவாங்களா ...அப்படி பாதிக்க படும் பெண்கள் மனதளவில் எப்படி பாதிக்க பட்டு இருப்பாங்க ...டாக்டர் தானேடா நீ ....அவ என்னைக்காவது அப்படி இருந்தாளா ???? ...குழந்தைங்க உண்டாகி இருப்பதை சொன்னவள், முன் பின் தெரியாதவனின் பிள்ளைக்கு யாரவது இவ்வளவூ சந்தோச படுவாங்களா .முன் நாள் எங்கு சென்றாள் நினைவூ இருக்கா ?எப்படி போனா ரொம்ப சந்தோசமா..இவ போன போது யாரின் திருமணம் நடந்தது ?????மதுராவை தவிர நீங்க யாருமே யோசிக்கலை ...."என்றார் அவர் .

"அப்போ ஏன் தாத்தா நீங்க எதையும் அப்பா கிட்டே சொல்லலை ...தெரிந்து இருந்தா அவனை உண்டு இல்லை என்று செய்து இருக்கலாமே .."என்றான் ஹர்ஷா .

"இன்னுமாடா உனக்கு மூளை வேலை செய்யலை ...அவனுக்கு தான் திருமணம் ஆகிடுச்சுலே ....எப்படி டா சொல்ல முடியும் ???? தவிர உன் தங்கச்சி தான் தியாகச்செம்மல் ஆச்சே ....அவன் சட்டையை பிடித்து இருந்தாலும் காதல் பித்தில் இவர் இல்லை என்று சாத்தியமே செய்து இருப்பா .....இனி பிரச்சனை என்று வந்தால் சுலபமா solve செய்துடலாம் .....சுமன் ,சோனா எல்லாம் பெரிய ஆளே இல்லை ....அதான் நெஞ்சு வலிக்குதுன்னு சும்மா ஹாஸ்பிடல்லில் படுத்து ட்ராமா போட்டேன் ....குடும்பமே அலறி அடிச்சி ஓடி வந்துடீங்க .....இனி மூக்கணாங்கயிறை கட்டிட வேண்டியது தான் ."என்றார் அவர் .

"என்னது நடிசீங்களா ....தாத்தா ..."என்று கோபமானன் ஹர்ஷா .
images.jpg

"டேய் அடங்குடா பேராண்டி ....சும்மா தையத்தக்கான்னு குதிக்காதே ....சுளிக்கிக்க போகுது ....அப்படி நடிச்சதில் தான் வந்தீங்க ...இல்லைன்னா உங்க அப்பன் ,என் மவன் பிசினெஸ் பிசினஸ் என்ற அவன் முதல் மனைவியை விட்டு வந்து இருக்க மாட்டான் ....உன் தொங்கச்சியும் அவார்ட் வாங்கும் அளவூ கர்ணன் மாதிரி லூசு தானம் செய்துட்டு இருப்பா ....உங்களுக்கு எல்லாம் வேப்பிலை அடிச்சா தான் வாழ்க்கையின் நிதர்சனம் புரியும் ....நெருப்பு கோழி மாதிரி தலையை மண்ணில் புதைத்து கொண்டால் பிரச்சனை என்ன ஷேர் ஆட்டோ ஏறியயா போகும் ?????...நீ கவலை படாதே மதுரா வேப்பிலை உன் ஆளுக்கு ரெடி செய்து வச்சுக்கோ .....அடிச்சு தெளிய வச்சுடலாம் ...அவன் செய்து இருக்கும் பைத்தியக்கார தனத்திற்கு ....."என்றார் அவர் புன்னகையுடன் .

அவரை அணைத்து கொண்டாள் மதுரா .."நிச்சயம் தாத்தா .....ஏற்கனவே ஐந்து வருடம் லேட் ....சீக்கிரம் இது எல்லாதிருக்கும் முடிவூவுக்கு கொண்டு வர வேண்டும் ....கொண்டு வந்திடலாம் .....சொல்லி கொடுத்த குரு நீங்க இருக்கும் போது என்ன கவலை ....ஜமாய்ச்சுடலாம் ..."என்றவளின் கன்னங்களை தட்டி விட்டு ஹர்ஷாவுடன் அவர் தன் அறைக்கு சென்றார் .

அவர்கள் சென்றதும் கதவை தாள் இட்டவள் ,அதன் மேலேயே சாய்ந்து நின்றாள் .கண்கள் கலங்கி தானாக கண்ணீர் பொழிய ஆரம்பித்தது .


திருக்கோயில் உற்சவ வீடியோவை ஓட விட்டவள் ,வாய் மூடி ஆற்றுவார் தேற்றுவார் இன்றி கதறி கதறி அழுதாள் . அவளோடு சேர்ந்து வெளியே வானமும் மழையாய் தன் கண்ணீரை கொட்டியது

PENANCE WILL CONTINUE....
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
THAVAM 32(5)

அதே சமயம் விஜய்யின் போன் ஒலிக்க ஓடி சென்று எடுத்தவன் ,"மது "என்றான் ஆசையோடு .குரலில் ஒட்டுமொத்த ஏக்கத்தையும் ,காதலையும் வைத்து அழைத்தான் .எதிர் முனையில் இருந்து சற்று நேரம் எந்தவித சப்தமும் கேட்காமல் போக ,"மது .....பேசு "என்றான் ஹஸ்கி வாய்ஸ்சில்

images (5).jpg

"நம்பரை பார்க்க மாட்டியா ......நான் சூர்யா ."என்றது எதிர்முனை கடுப்போடு .

காற்று போன பலூன் போல் சுருதி இறங்கி போன விஜய் ,"என்ன சொல்லு ."என்றான் எரிச்சலாக .

"பேபி போன் அட்டென்ட் செய்தாளா ...ஏதாவது பேசினாயா ...எங்கே இருக்கா ...ஆபத்து ஒன்றும் இல்லையே ..."என்றான் மூச்சு கூட விடாமல் .
download.jpg

"என் மதுவை பேபின்னு கூப்பிடாதே ...நாராசமா இருக்கு ..."என்றான் விஜய்

"உன் மதுராவா ....எப்போ கண்ணா அவ உன் மது ஆனா ????ஒருவேளை அப்படி ஆவதற்கு உன் காதல் மனைவி சோனா தேவியார் கிட்டே பெர்மிஸ்ஸின் வாங்கிட்டியா விஜய் செல்லம் ....ஒரு பொண்டாட்டி இருக்கும் போது இன்னொரு பெண்ணை கட்ட முடியாது ப்ரோ .....நான் சொல்லலை ...சட்டம் சட்டம் சொல்லுது .."என்றான் சூர்யா .

"என்ன ப்ரோ பதிலை காணோம் ....சரி சரி விடு .....பேபி போன் செய்தா அல்சேஷன் மாதிரி குலைச்சு வைக்காதே ....அவளை கண்ட்ரோல் செய்ய நினைக்காதே .....சாப்ட் டா கேளு .....அன்னைக்கு பேசி வைத்தது போல் லூசு தனமா செய்து வைத்தே நானே உன்னை கொன்னுடுவேன் .....அறிவூஇருக்கடா ...யாரை பார்த்து என்ன வார்த்தை பேசி வைச்சே ...."என்றான் சூர்யா .

"அடங்குடா சிம்பன்சி .....அவளை உசுப்பி விட தான் சொன்னேன் என்று உனக்கும் தெரியும் ,அவளுக்கும் தெரியும் ....அப்பாவது சீக்கிரம் திரும்ப இங்கே வந்துடுவா என்று தான் சொன்னேன் ...நீயும் அதனால் தான் நான் அப்படி பேசும் போது அமைதியா இருந்தே ....பிறகு எதற்கு இப்போ பெரிய பருப்பு மாதிரி கோனார் நோட்ஸ் தூக்கிட்டு வரே ..... ஓவர் ரா ஆடாதே கொரில்லா ....உடம்புக்கு ஒத்துக்காது ..."என்றான் விஜய் .

"அரசியல் ல இது எல்லாம் சகஜமப்பா ...கண்டுக்க கூடாது ......அது சரி வழக்கமா நீயும் நானும் தான் ஏதாவது செய்துட்டு பேபி கிட்டே மாட்டிட்டு முழிப்போம் ......அவன் எவன் டா புது ஆடு ...தானா தலையை கொடுத்து அவ கிட்டே வாங்கி கட்டிக்காரன் .....லூசா அவன் ?"என்றான் சூர்யா .

"எனக்கு ESP பவர் எல்லாம் இல்லை ...இங்கே இருந்தே யார் அவன் என்று கண்டுபிடிக்க ...நானும் யோசிச்சி பார்த்துட்டேன் ....தெரிஞ்ச குரல் மாதிரி தான் இருக்கு ...ஆனா கிளிக் ஆக மாட்டேங்கிறது ..."என்றான் விஜய் யோசனையுடன் .

"யோசிக்காதே ப்ரோ ...யோசிக்கவே யோசிக்காதே ...மண்டை காஞ்சுடும் .....ஒன்றா இரண்டா மதுரா தேவியாருக்கு FOLLOWERS ......பாதி அவனுங்களா இவளை பார்த்து இம்ப்ரெஸ் ஆகி வருவானுங்க ....பாதி சொந்தம் ,பந்தம் என்று இறங்குவானுங்க .....ஒரு சுயவரம் வைத்தால் சிதம்பரம் கிரௌண்ட் FULL ஆகிடும் ..இதுல அவன் எவன் என்று கண்டுபிடிப்பது ....எங்கே இருந்து தான் நமக்கு BP ஏத்த என்றே லைன் கட்டி வருவானுகோ என்றே தெரியலை ...."என்றான் சூர்யா .

(அடப்பாவிங்களா ...என்னங்க டா நடக்குது இங்கே ???? அக்னி நட்சத்திரம் பிரபு கார்த்திக்ன்னு பார்த்தால் ,'நீங்க ரெண்டு பேரும் மூழ்காத ஷிப் friendship 'என்று ஸ்டேஜ் ஏறி படுவீங்க போல் இருக்கே ....அப்போ எதுக்குடா அப்படி ராம்போ ரேஞ்சுக்கு சண்டை போடீங்க ?நீங்க ரெண்டு பேரும் நண்பர்களா பகைவர்களா .....)

"என்னவோ இது புதுசா நடப்பது போல் அலுத்துக்கறே .....ஐந்து வருடத்தில் இன்னுமா உனக்கு இது புதுசா தோணுது ?"என்றான் விஜய்
(ஓவர் டா இது எல்லாம் )
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"அதை சொல்லு ....ஆஹ் சொல்ல மறந்துட்டேன் ....எவன் டா அவன் உன் பெயரை சொல்லி என் கண்டைனர்ரை கொளுத்தி விட்ட கிறுக்கன் ...கொளுத்தியது தான் கொளுத்தினான் ...நானே காயலான் கடைக்கு போடலாம் என்று வைத்து இருந்த அதர பழைய கண்டைனர் கொளுத்தி இருக்கான் ...அதுவும் ஆர்டர் இறக்கி விட்டு வந்த காலி கண்டைனர் ....வர வர வில்லன்கள் எல்லாம் காமெடியன் ஆகிட்டு வரானுங்க ...."என்றான் சூர்யா வியப்பாக .

"அதுவா அதான் நேத்து ஹெட்லைன்ஸ் ஓடிச்சு இல்லே ..."மருத்துவமனையில் இளம் தொழில் அதிபர்கள் தொழிற் பகை காரணமாக மோதல் என்று ...அதை எந்த அரை கிறுக்கோ உண்மை என்று நம்பி செய்து இருக்கு ...மிஞ்சி போனால் இப்போ கரண்ட் ட்ரெண்ட் கஜாவும் ,சுமனும் தான் அவனுங்க தான் உன் மேல் கொலை வெறியில் இருக்கானுங்க ...நான் ராஜீ உடன் செய்யும் rescue ஆபரேஷன் எல்லாம் நீ செய்வதாக தான் அதுங்க நம்பிட்டு இருக்கு .ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் அடிக்க ட்ரை செய்யறானுங்க ...உன்னை க்ளோஸ் செய்துட்டு அந்த பழியை என் மேல் போட்டால் அவனுங்க ரூட் கிளியர் ."என்றான் விஜய் அலட்டி கொள்ளாமல் .

"எது நேத்து ஹாஸ்பிடல்ல பாக்ஸிங் செய்ததா ????இன்னுமாடா நம்ம ரெண்டு பேரையும் இந்த உலகம் நம்புது ????ஏன் டா உன் செக்டார் வேற ...என் செக்டார் வேற ...இதுல எப்படி டா தொழிற் பகை வர முடியும் ???யோசிக்க கூட மாட்டானுகளா ???கடுப்பு ஏத்தறாங்க மை லார்ட் ."என்றான் சூர்யா .

"அப்படி அவனுங்க லூசா இருப்பது தான் நமக்கு நல்லது ....இப்போ நீ இன்னேரம் பிரெஸ் மீட் அழைத்து காரசாரமான கண்டனத்தை தெரிவிக்கணும் ....இதற்கு காரணமானவர் யாராய் இருந்தாலும் தகுந்த நடவடிக்கை எடுக்க படும் ...இதுவே கடைசி வார்னிங் என்று ஸ்டேட்மென்ட் கொடு ...போலீஸ் ஆபீஸ் கம்பளைண்ட் பைலை செய் .... ஐ திங்க் இதை வைத்து கம்பெனி பெயர் கெட்டு விட்டது என்று சொல்லி என்னை வெளியேற்ற கஜா பார்ப்பார் ........"என்றான் விஜய் .

"எது அந்த சீனா ஆர்டர் .....ஏதாவது ஹெல்ப் வேணுமா ???"என்றான் சூர்யா .

"தேவை பட்டா நானே கேட்கிறேன் ....ஆமா கேட்கணும் என்று நினைத்தேன் ....மதுரா மயங்கும் அளவுக்கு அப்படி என்னத்தை அவ கிட்டே சொல்லி வைச்சே ?"என்றான் விஜய் .

"ப்ரொபோஸ் செய்தேன் ..."என்றான் சூர்யா

"கம் அகைன் .....ப்ரொபோஸ் செய்தாயா ....அதுவும் அவ மயங்கும் அளவூ ?"என்றான் விஜய் பற்களை நர நர என்று கடித்தவாறு

"ஹ்ம்ம் ...என்னத்தை கேட்டா என்று அந்த கடவுளுக்கு தான் வெளிச்சம் ....திரும்பி பார்த்தா மயக்கத்தில் இருக்கு லூசு ...சரி என்னை விடு ....நீ அதற்கு முன் நீ என்ன செய்தே ...மிருதுளா டாக்டர் கிட்டே சொல்லிட்டு இருந்தாங்க .... "என்றான் சூர்யா

'என்ன செய்தேன் .....கமல் ஹாசனுக்கு ஹார்ட் அட்டாக் வரும் அளவூ, முத்த மன்னனாய் மாறி மதுராவின் உதட்டை கடித்து வச்சேன் ...அதோடு நின்றேனா ...சென்சார் போடும் அளவூ ,அவள் மயங்கி விழும் அளவூ போனேன் 'என்று சொல்லு பார்க்கலாம் என்று சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் ஆஜர் ஆனா மனசாட்சி கேலி செய்தது .
370ed78b-6117-4c9a-baad-513c71336e93_1024.jpg

"சரி சூர்யா இன்னொரு கால் வருது ....மதுரா ன்னு நினைக்கிறன் .....பேசிட்டு கூப்பிடறேன் .."என்றவன் சூர்யா அழைப்பை துண்டித்து விட்டு பிடித்து இருந்த மூச்சினை வெளியிட்டான் .

(செம கேடி தான் டா விஜய் நீயி ...கமல் கேட்டார் நொந்து போயிடுவார் ....இப்போ ட்ரெண்ட் விஜய் தேவர்கொண்டா தான் பா ....இன்னும் அப்டேட் ஆகணும் விஜய் நீ ?...ஒகே மீ எஸ்கேப் ...ஹனி இப்போ இந்த ஆராய்ச்சி ரொம்ப தேவை என்று முறைக்குது .....)

ஆல்வின் வீட்டின் மாடி அறையில் அப்போது இருந்தான் விஜய் ..மொபைல் தூக்கி கட்டிலில் போட்டவன் ,ஸ்கெட்ச் பேட் எடுத்து மதுராவை வரைய ஆரம்பித்தான் .போட்டோவோ ,மாடல்லோ இல்லாமல் மனதில் ,மூளையில் ,ஒவ்வொரு செல்லிலும் பதிந்து போய் இருந்த அவளின் உருவம் அழகாய் அவன் கை வண்ணத்தில் உருவானது .
e94da21dfd5f049122955cbab245bb48_shashidhar-iamshashidharb-twitter-samantha-ruth-prabhu-drawi...jpeg

நான்கு ஐந்து படம் கடகட வென்று வரைந்து வைத்தவன் ,சாய்ந்து அமர்ந்தான் ...மதுராவின் ஓவியத்தை பார்த்தபடி.
மூன்று பேர் ---விஜய் ,மேக்னா ,சூர்யா தங்கள் அறையில் படுத்தவாறு ,தங்கள் விதி மாறி போன அந்த 3 மாதத்தினை மீண்டும் நினைத்து பார்த்தார்கள் .

24125638_163908057688915_7207221788617474048_n.jpg

((((ஹை friends ...இது விஜய்/சூர்யா /மேக்னாவின் பிளாஷ்பாக் ...பிரைவசி அது என்று குதித்தார்கள் ...என் செல்லம்ஸ் உங்களுக்காக கெஞ்சி கேட்டு ,என் இம்சை பிடிச்ச மனசாட்சி உடன் டோரேமான் /நோபிடா டைம் மெஷின் வாங்கி இவங்க லைப்குள் நுழையறோம் ...நடு நடுவே access denied என்று வெளியே தள்ளி விடுவார்களாம் ---அப்போ அவங்க என்ன பேசுறாங்க என்று எனக்கு கேட்காது ...கேட்டால் தானே அதை உங்களுக்கு சொல்ல முடியும் ....சோ அப்படி ப்ளாகஜ் வந்தது என்றால் அதற்கு நான் பொறுப்பல்ல ....பிரைவசி மா பிரைவசி ....சோ என்னை எப்படி torture செய்யலாம் என்று யோசிக்காமல் அவங்க கூட பயணிப்போம் .ரெடி ஸ்டார்ட் தி டைம் மெஷின் .))))

e0eb6d-time machine 2 (4).jpg

med_1411644187_1403284603_image.jpg


(நடு நடுவே எனக்கும் என் லொள்ளு பிடித்த மனசாட்சிக்கும் டிஸ்கஷன் நடக்கும் ...சிகப்பு நான் ,வயலட் என் மனசாட்சி .....லெட்ஸ் ஸ்டார்ட் தி மியூசிக் )
 
Status
Not open for further replies.
Top