All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அனிதா ராஜ்குமாரின் "என்ன தவம் செய்தேன்" - கதை திரி

Status
Not open for further replies.

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"ரூபிணியை மறந்துடீங்களே ....அவன் தங்கை மணந்து இருப்பது கஜாவின் சொந்தக்காரன் திவாகரை தானே ...ரூபிணி திவாகரன் மனைவியாக இருக்கும் வரை ,ஒரு அண்ணனாய் விஜய் சோனவை டைவோர்ஸ் செய்ய மாட்டான் .....அந்த ஒரு விஷயத்தை வைத்து தான் சோனா இந்த அளவூ ஆடியும் விஜய் தம்பி அமைதியா இருக்கார் ....சோனாவும் வெறி பிடிச்ச பைத்தியக்காரி .....அந்த அளவூ சுலபமா டைவோர்ஸ் எல்லாம் கொடுத்திட மாட்ட .....ஆனா இந்த தளைகள் எல்லாம் இல்லாதவன் சூர்யா .....அவனுமே மதுராவின் சம்மதம் ஒன்றுக்காக தான் காத்து இருக்கான் .....அவன் கட்டுப்படுவது மதுராவிடம் மட்டும் தான் .....ஆனா அமைதியா இருக்க மாட்டான் ....இதோ உங்களை இங்கே வரவழைச்சதே எடுத்துக்காட்டு ...எனக்கு வேலை ,தங்க பங்களா ,ரகுவின் ட்ரான்ஸபெர் என்று அவன் கண் பார்வையில் நம்மை கொண்டு வந்து விட்டான் ...."என்றார் பவானி .

"என்னது மதுராவிற்காக தான் எனக்கு இந்த வேலையா ?"என்றார் சங்கரன்

"அப்படியும் சொல்ல முடியாது ...உங்களின் திறமையும் அதிகம் தான் ...ஆனால் முக்கியமான காரணம் நம்ம மக தான் ...."என்றார் பவானி .

"அப்போ இங்கேயும் மதுராவை மாட்டி வைத்தது நான் தான் ....."என்றார் சங்கரன் தன்னை தானே நொந்து கொண்டு .

"நடந்ததை நினைத்து புலம்புவதில் பிரயோஜனம் இல்லை .....அடுத்து என்ன என்று யோசிங்க ...செய்த தப்பை எப்படி திருத்த முடியும் என்று பாருங்க .."என்றார் பவானி .

"நீயே சொல்லும்மா ...என்ன செய்யணும் என்று சொல்லு ...இனி அப்படியே நடக்கிறேன் ...."என்றார் சங்கரன் .

"நாளை காலை சூர்யாவை போய் பார்த்து பேசுங்க .....திரும்பவும் நம்ம குன்னூருக்கோ வேறு எங்காவதோ போக முடியுமா என்று பாருங்க ....இது வரை மதுரா ஸ்டெடியா தான் இருக்கா ...ஆனா பஞ்சையும் நெருப்பையும் பக்கத்தில் வைத்து இருப்பது ஆபத்து .....முடிந்த அளவூ இவங்க ரெண்டு பேரையும் விட்டு ராணிமாவை தூர கூட்டி போய் விட வேண்டும் ....அதற்கு முன் நல்ல வரனாய் பார்க்க வேண்டும் ....மதுராவின் கழுத்தில் திருமாங்கல்யம் ஏறும் வரை எனக்கு நிம்மதி இல்லை ."என்றார் பவானி .

"சரி பவானி ....நீ சொன்னபடியே சூர்யா கிட்டே பேசிடுறேன் ..."என்றார் சங்கரன் .

சாட்சிக்காரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலில் விழுவது மேல் என்ற கான்செப்ட் தான் என்றாலும் ,சூர்யா மதுராவை பொறுத்த வரை பிரச்சனை ஏற்படுத்தும் சண்டைக்காரன் இல்லை என்பது ஏனோ அந்த பெற்றோருக்கு புரியவில்லை .

மறுநாள் மேக மூட்டத்துடன் அந்த நாளை வரவேற்க சென்னைவாசிகள் தயாராகி கொண்டு இருந்தனர் .மழை நின்று இருந்தாலும் ,குளிர் சற்று அதிகமாகவே இருக்க ,போர்வைக்குள் கோழிக்குஞ்சினை போல் சுருண்டு படுத்து கனவுலகத்தில் மிதந்து கொண்டு இருந்தாள் மதுரா .

காதல் தேசம் படத்தின் "என்னை காணவில்லையே நேற்றோடு " background ஓட ,அப்பாஸ் ,வினீத்துக்கு பதில் அங்கு விஜய்யும் ,சூர்யாவும் தபுவிற்கு பதில் இவளை துரத்தி கொண்டு இருந்தனர் .கல்லூரி காலத்தில் ஆரம்பித்த துரத்தல் இன்றளவும் நின்றபாடாய் இல்லை என்பது தான் ஹைலைட் .

ennai kanavillaiye netrodu hd 1080p - YouTube

அப்பாடா ஒரு வழியாய் முடித்தார்கள் என்று இவள் கனவில் பெரு மூச்சு விட்டு நிமிர்வதற்குள் "டூயட் "பட பிரபு ,ரமேஷ் அரவிந்துக்கு பதில் இவர்கள் சோக கீதம் பாட ஆரம்பித்தனர் .

'ஏய் போதும் பா முடியலை 'என்று முடிப்பதற்குள்

சத்தத்தினால் கொண்ட பித்தத்தினால்
காதல் யுத்தத்தினால்
எமது இரத்தத்தினால்
கவிதை எழுதி வைத்தேன் தோழி
இரு கண் இருந்தால் வாசித்து போடி


கண் பார்த்ததும்
கெண்டை கால் பார்த்ததும்
உன்னைப் பெண் பார்த்ததும்
தள்ளிப் பின் பார்த்ததும்
சுட்டாலும் மறக்காது நெஞ்சம்
முற்றும் சொன்னதில்லை
தமிழுக்கு பஞ்சம்


கண்டிப்பதால்
என்னை நிந்திப்பதால்
தலையைத் துண்டிப்பதால்
தீராது என் காதல் என்பேன்
நீ தீ அள்ளி தின்ன சொல் தின்பேன்


உண்டென்று சொல் இல்லை
நில் என்று கொல் எம்மை
வா என்று சொல் இல்லை
போ என்று கொல்
இம் என்றால் உள்ளதடி சொர்க்கம்
நீ இல்லை என்றால் இடுகாடு பக்கம்


என்று கவிதையை சுட்டு சொல்லி காட்டி கையில் ஆளுக்கொரு தாலியோடு இவளை நெருங்கி வந்தனர் .
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"கடவுளே !"என்று அலறியபடி இவள் எழ ,இவளை எழுப்பி கொண்டு இருந்த பவானி இவள் அலறிய அலறலில் நான்கு அடி எகிறி குதித்தே விட்டார் .

நெஞ்சின் மேல் கை வைத்து தன்னை சமாளித்து கொண்டவர் ,"ஏண்டீ இப்படி காலங்காத்தால படுத்தி எடுக்கறே ....."என்றார் .

"ஹி ஹி ஹி ....ஒண்ணும் இல்லை மா ...கெட்ட கனவூ ....அதான் ....பேய்களா வந்துச்சா அதான் பயந்துட்டேன் ...ஹி ஹி ."என்றாள் மதுரா சமாளிப்பாக .

(விஜய்யும் ,சூர்யாவும் உனக்கு பேய்யா செல்லம் ......நல்லா வருவே மா நீயி ...)

"சரி சரி கிளம்பு ....அஷ்ட லட்சுமி கோயிலுக்கு போகணும் .....அர்ச்சனை செய்யணும் ....சீக்கிரம் ரெடி ஆகு ."என்றார் பவானி .

"என்னமா .....பூஜை புனஸ்கராம் என்று தடபுடல் படுது ...மிஸ்டர் சங்கரனின் கழன்று இருந்த நட் போல்ட் சரி ஆனதற்கா ......பாவம் மா கடவுள் ...கொஞ்சம் அவரும் மத்தவங்களை கவனிக்கட்டும் ....ஒட்டுமொத்தமாக நீங்களே குத்தகைக்கு எடுத்தால் எப்படி ஹிட்லர் மேடம் ???"என்றவள் அவர் கைகளுக்கு சிக்காமல் பாத்ரூமிற்குள் ஓடி ஒளிந்தாள் .

அவள் உள்ளே சென்று விட்டதை உறுதி படுத்தி கொண்ட பவானி ,"பூரணி !.....நான் சொன்னதை கேட்டியா ...என்ன சொன்னா ?"என்றார் .

(பவானி அம்மா சான்ஸ்சே இல்லை .....அம்மா என்பதை அடிக்கடி நிரூபிக்கறீங்க .)

"குழப்பத்தில் இருக்கா அத்தை .....ரெண்டு பேருமே நண்பர்கள் .....யாருக்கு துரோகம் செய்வது என்கிறாள் ....பெற்றோர்களை எப்படி வேதனை படுத்துவேன் என்றாள் ....நீங்க காட்டும் மாப்பிளைக்கு நோ ஆப்ஜெக்ஷன் என்று தான் நினைக்கிறன் ..."என்றாள் பூரணி .

பெருமூச்சு விட்ட பவானி ,"சரிம்மா கிளம்பி வாங்க ."என்று சொல்லி விட்டு டிபனை எடுத்து வைக்க சென்றார் .

கோயில் என்பதால் வெள்ளை நிற வெண்பட்டில் தயாராகி வந்த மதுராவின் அழகினை கண்டவர்கள் ஒரு கணம் உறைந்து தான் போனார்கள் .உத்தமும் ,ஆல்வினும் சிறந்த நண்பர்கள் என்பதை நிரூபிக்க மற்றவர்கள் அறியாமல் இவளை போட்டோ எடுத்து விஜய்க்கும் ,சூர்யாவிற்கு அனுப்ப தவறவில்லை .காலை டிபன் முடித்து அவர்கள் கிளம்ப மணி எட்டாகி விட்டது .
12342.jpg

"அம்மா !அப்பா எங்கே ?"என்றாள் மதுரா .

"ஆபீஸ் விஷயமா போய் இருக்கார் ....கோயிலுக்கு நேரா வந்துடுவார் ....கிளம்புங்க ...நல்ல நேரம் முடிவதற்குள் கிளம்ப வேண்டும் ."என்றவரின் குரலுக்கு கட்டுப்பட்டு அனைவரும் கிளம்பினார்கள் .

கார்த்திக் சும்மா இல்லாமல் ,"என்ன மதுரா .....இன்னைக்கு தான் குளிச்சியா என்ன ???அழுக்கு எல்லாம் போய் ரொம்ப வெள்ளையா இருக்கே ...."என்றான் .

"மவனே .....வாடி ....இன்னைக்கு புல்லா பூரணி கிட்டே எப்படி நெருங்கறே என்று பார்க்கிறேன் .....அவ கிட்டே பேசணும் ....கூட்டி வான்னு ரொமான்ஸ் பண்ண கேட்பே இல்லை ...அப்போ இருக்குடீ உனக்கு ..."என்றாள் மதுரா \"

ஐயோ தாயே ...அங்காள பரமேஸ்வரி ...அடிமடியில்லே கை வைக்காதே ...என் செல்லம் இல்லை ...என் கண்ணு குட்டி இல்லை ...என் புஜ்ஜு குட்டி இல்லை ...என் நாய் குட்டி இல்லை ....ப்ளீஸ் ப்ளீஸ் செல்லம்ஸ் ....இந்த கார்த்திக் பாவம் இல்லை ...."என்று கெஞ்சலில் இறங்கினான் .அவன் பிரச்சனை அவனுக்கு .

"இந்த மூளை முதலிலேயே இருந்து இருக்கணும் ....சாரி தம்பி ....punishment confirm ."என்றாள் மதுரா .

"செல்லமா நீ யாரு ...என்ன .....நீ ரொம்ப அழகா இருக்கிறதை தான் அப்படி சொன்னேன் .....உன்னை போய் அசிங்கம் என்று யாராவது சொல்வார்களா .....10 ஐஸ்கிரீம் வாங்கி தரேன் ...பேமிலி பேக் ...சரவண பவன் கூட்டி போறேன் .....ஒண்டர்லா கூட ஒரு நாள் கூட்டி போறேன் ...ப்ளீஸ் ...."என்றான் கார்த்திக் .

"சரி சரி பொழைச்சி போ ...பூரணிக்காக விடறேன் ...டீல் மறந்தே ...நீ காலிடா ....உன் பாஸ்போர்ட் என் கையில் ..."என்று கார்திக்க்கை கடுப்படித்த படி வந்தவளின் கால் வாசற்படியில் மோத தடுமாறி விழ போனவளை பவானியும் ,கார்திக்க்கும் விழாமல் பிடித்தனர் .

பவானிக்கு ஒரு கணம் இதயம் நின்று துடித்தது .கிளம்பும் போது இது என்ன அபசகுனமாய் என்று அவரால் நினைக்காமல் இருக்க முடியவில்லை .காலை எழும்பும் போதே அவர் மனதில் இனம் புரியாத சஞ்சலம் ஏற்பட்டு இருந்தது .காய்ச்சிய பால் திரிந்து போனது .எழுப்பிய போதே மகளின் அலறல் ...இப்பொது கிளம்பும் போது கால் இடறல் என்று ஒவ்வொன்றையும் மனம் முடிச்சு போட்டு குழப்பியது .

"கிளம்பும் போது கால் இடறுது ...உள்ளே வந்து உட்கார் ராணிமா ...தண்ணீர் குடிச்சுட்டு பத்து நிமிடம் கழிச்சு கிளம்பலாம் ..."என்றார் பவானி .

"அம்மா !"என்ற மதுராவின் சிணுங்கலுக்கு முறைப்பை பதிலாக கொடுத்தவர் ,"சொல்வதை செய் மதுராக்ஷி ."என்றார் .

அவரிடம் விவாதிப்பதில் பயன் இல்லை என்று புரிந்து கொண்ட மதுரா அவர் சொல்லியபடியே செய்து பிறகு ,பத்து நிமிடம் கழித்தே கிளம்ப சம்மதித்தார் அதுவும் அறை மனதாக தான் .அன்று செல்லவே அவருக்கு மனம் இல்லாமல் தான் போய் விட்டது .ஆனாலும் அனைவரையும் கிளம்ப வைத்த பிறகு ,தன் சஞ்சலத்தை சொல்லி நிறுத்த மனம் இல்லாதவராய் கிளம்பினார் .

ஒருவேளை அவரின் பயம் ,கவலை உண்மையாக போகிறது என்பது மட்டும் முன்னரே தெரிந்து இருந்தால் மகளை வீட்டுக்குள் வைத்து பூட்டி இருப்பாரோ

தன் அறையில் வேலை பார்த்து கொண்டு இருந்த விஜய்யின் மனமும் நிலை இல்லாமல் தான் தவித்து கொண்டு இருந்தது .எழும் போதே அவன் மனம் அமைதியாய் இல்லை .
0 (2).jpg

ஆல்வினுக்கு அழைத்தவன் ,"ஏதாவது பிரச்சனையா என்ன ?"என்றான் .

"பிரச்சனையா ...அப்படி எல்லாம் எதுவும் இல்லையே ...எல்லோரும் குடும்பமா பெசன்ட் நகர் அஷ்டலக்ஷ்மி கோயிலுக்கு கிளம்பட்டு இருக்காங்க ....நானும் ,உத்தமும் கூடவே தான் போறோம் ....ஏன் ஏதாவது நியூஸ் வந்ததா என்ன ?"என்றான் ஆல்வின் .

"நத்திங் ...யு கேர்ரி ஆன் ..."என்றவனின் குரலில் சுரத்து இல்லை என்பதை கண்ட ஆல்வின் ,மதுராவை தான் எடுத்த புகைப்படத்தை அனுப்பி வைத்தான் .

ஒருவேளை நடக்க போவதிற்கான எச்சரிக்கை தான் தங்களின் மனசஞ்சலம் என்பதை பவானி ,விஜய் இருவருமே உணர தவறி விட்டார்களோ .விதியும் தன் விளையாட்டை ஆரம்பித்து இருந்தது .பலரின் வாழ்வை மாற்ற போகும் அணுகுண்டு மதுராவால் வெடிக்க வைக்க பட ,ஆயுத்த பணி பெசன்ட் நகர் அஷ்டலக்ஷ்மி கோயிலில் இவளுக்காக காத்து இருந்தது இருவர் வடிவில் .

PENANCE WILL CONTINUE.....
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
WHO IS BEST SUITED FOR MADHURA AS HER SOULMATE---POLL-VIJAY/SURIYA WITH REASON


ஹை நட்புக்களே

என்ன தவம் செய்தேன் என்னும் என் முதல் முயற்சிக்கு உங்களின் இந்த ஆதரவுக்கு ,தினம் தாங்கள் போடும் ரெவியூக்கு கோடான கோடி நன்றி .

யார் மதுராவின் கரம் பிடிக்க போவது ???இந்த கேள்வி தினமும் பல்வேறு வடிவில் கேட்கப்பட்டு ,கதையின் முடிவினை அறிய நீங்கள் செய்யும் ப்ரஹ்மப்ரயத்தனம் புரிகிறது .

மன்னிக்கவும் இப்பொழுது உங்கள் ஆர்வம் பதில் கூறினால் படிக்கச் தோன்றும் எண்ணம் மறைந்து விடும் .சஸ்பென்ஸ் போய் விடும் .ரொமான்ஸ் நாவல் ஆக ஆரம்பித்த கதை திரில்லர் மாதிரி போகிறது என்று எதிர்பார்ப்போடு கூறும் உங்கள் பார்வை மாறி விடும் .சோ யார் காதல் தவத்திற்கு வரமாக மதுரா மறுவாள் என்பது சஸ்பென்ஸ் .
IMG_8827_1.jpg

அது அப்படியே இருக்கட்டும் ....கொஞ்சம் வாசகர்கள் ஆகிய நீங்களும் இந்த கதையின் இன்வோல்வ் ஆக ஒரு ஜாலி poll ..

Who is best suited for madhurakshi as her soul mate---vijay or suriya---poll and give your reason
22-1.jpg

உங்கள் ஓட்டினை பதிவூ இட்டு ,நீங்கள் விஜய் /சூர்யாவை ஏன் தேர்ந்து எடுத்தீர்கள் என்ற காரணத்தையும் பதிவூ இட்டு விடுங்கள் .
28442627658_58dd1b8f59_b.jpg

இல்லை மூன்றாவது நபர் ஒருவர் மதுராவின் கரம் பிடிக்க வைக்கலாமா ,இல்லை மெயின் கேரக்டர்கள் ஆனா மதுரா /விஜய் /சூர்யா இவர்களில் யாரையாவது கொன்று விடலாமா
download (1).jpg

இல்லை காதல் தேசம் படம் போல் "ஒரு நண்பனிற்கு சந்தோஷத்தையும் ,இன்னொரு நண்பனுக்கு துக்கத்தையும் என்னால் தர முடியாது "என்று கடைசி வரை மதுராவை யாரின் மனைவி ஆக்காமல் விட்டு விடலாமா
hqdefault (3).jpg

மொத்தம் உங்களுக்கு 5 option ...எதை தேர்ந்து எடுத்தாலும் அதன் காரணத்தை பதிவூ இட மறக்க வேண்டாம் .

இது ஜஸ்ட் போர் fun .

ஹாப்பி polling
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
THAVAM 32

முன்னே உத்தம் செல்ல ,நடுவே கிளம்பிய பொலிரோவில் பாலாஜி கார் ஓட்ட அவன் அருகே சுபா ,நடு இருக்கையில் பவானி ,மதுரா ,பூரணி ,பின் இருக்கையில் கார்த்திக் ,ரகு அமர்ந்து இருக்க ,பின்னால் வந்த காரினை ஆல்வின் ஒட்டி வந்தான் .
imageth6.jpg

இவர்கள் கோயிலுக்கு சென்று கொண்டு இருக்க ,சங்கரனோ சூர்யாவின் முன் அமர்ந்து இருந்தார் .அவ்வளவூ காலையில் அவரை தன் வீட்டில் சூர்யா எதிர் பார்க்கவில்லை .

"என்ன அங்கிள் ...ஏர்லி மார்னிங் வந்து இருக்கீங்க ?எனி ப்ரோப்லேம் ?"என்றான் .

"உங்க கிட்டே இதை நான் எதிர் பார்க்கவில்லை தம்பி ....பிறகு உங்களுக்கும் அந்த சுமனுக்கும் என்ன வித்தியாசம் ?"என்ற சங்கரனின் குற்றசாட்டு சூர்யாவை அதிர வைத்தது .
images (18).jpg

"புரியலை அங்கிள் ....எந்த விதத்தில் நான் சுமன் மாதிரி பிஹேவ் செய்தேன் என்று சொல்றீங்க ?"என்றான் மனதில் அடி வாங்கியவனாக .

"எனக்கு உங்க அலுவலகத்தில் வேலை ,என் மனைவிக்கு பிரின்சிபால் உத்தியோகம் ,என் மகனுக்கு சென்னை ட்ரான்ஸபெர் ,என் மகளுக்கு வேலை ...இங்கே பங்களா என்று ஒட்டுமொத்தமாக எங்களை சென்னைக்கே வரவழைத்தது எந்த நல்ல எண்ணத்தில் ?????உங்கள் கண் பார்வையில் என் மக இருக்க வேண்டும் என்பதற்காக தானே .....இது எதற்கான விலை தம்பி?"என்றார் சங்கரன் .

சூர்யாவின் முகம் கற்பாறையாக இறுகி விட ,கை முஷ்டிகளை அழுந்த மூடியவன் ,கண்களை மூடி ,மூச்சினை ஆழ்ந்து இழுத்து ,ஒன்று முதல் பத்து வரை எண்ணி ,கோபம் சற்று மட்டு பட்ட பிறகே பேச ஆரம்பித்தான் .
ramcharan-teja-photos-in-denim-shirt.jpeg

"இவ்வளவூ கேவலமாக மதுராவை பேசியது நீங்களாக இருப்பதால் பிழைச்சீங்க அங்கிள் ...வேறு எவனாவது இருந்தால் குடலை இந்நேரம் உருவி இருப்பேன் .....மதுராவிற்கு நான் விலை வைக்கிறேனா ....ஒன்று சொல்லுங்க ....மதுராவிற்கு அவள் குணத்திற்கு ,அன்புக்கு ,அந்த நல்ல மனதிற்கு யாராவது விலை வைக்க முடியுமா ???அப்படி விலை போகிறவள் தான் அவளா அங்கிள் ????தேவதையை ஆராதிக்க தான் அங்கிள் முடியும் ....மதுரா தேவதை பெண் .....அவளுக்கு போய் விலை அது இதுன்னு ......நான் நல்ல எண்ணத்தில் தான் செய்தேன் அங்கிள் .....என் மனைவி ரித்திகாவின் நிலை மதுராவிற்கு வந்து விட கூடாது என்ற நல்ல எண்ணத்தில் .....நானும் விஜய்யும் சென்னையில் தான் இருக்கோம் ...எங்க தொழில் எல்லாம் இங்கே தான் இருக்கு ....மதுராவை குன்னூருக்கு அனுப்பிவிட்டு எவ்வளவூ நாளுக்கு தான் ஆட்களை அனுப்ப முடியும் ..இல்லை வேலை விட்டு அங்கேயே தங்க முடியும் ....ப்ராக்டிகலா யோசிங்க ... சென்னை என்றால் நான் இருக்கேன் .....என் கவனம் சிதறினாலும் ,விஜய் இருக்கான் ....சிவகாமி பாட்டி இருக்காங்க ...மாத்தி மாத்தி எங்களால் காவல் இருக்க முடியும் ....நான் உத்தம் எல்லாம் வெளியே இருந்து தான் காவல் இருக்க முடியும் ....சுபா ப்ரெக்னெண்ட்டா இருக்கும் சமயத்தில் நீங்க ,ஆன்ட்டி ,ரகு ,கார்த்திக் தான் கூடவே இருக்க முடியும் 24 மணி நேரமும் ......பங்களா கூட செக்யூரிட்டி ரீசன் காக தான் அங்கிள் ஏற்பாடு செய்தேன் .....மதுரா என்னை நன்றாக புரிந்தவள் அங்கிள் ...அதனால் தான் இன்று வரை என் சட்டையை பிடித்து இது எல்லாம் எதற்காக விலை என்றுஉங்களைமாதிரி கேட்கவே இல்லை ....அவளுக்கு தெரியும் என்னை பற்றி .....நான் வெயிட் செய்வது ஊர் அறிய ,உலகம் அறிய மதுராவை என் மனைவி ஆக்க தான் அங்கிள் ....வேற தவறான எண்ணத்தில் இல்லை .....நான் காத்து இருப்பது மதுராவின் சம்மதம் என்ற ஒரு வார்த்தைக்காக மட்டுமே ....ஒரு முறை மதுராவை இழந்து நான் தவித்த நரகம் போதும் .அவளை மறக்கவும் முடியாமல் ,என்னை நம்பி மணந்தவளுக்கு துரோகம் செய்யவும் முடியாமல் பைத்தியம் பிடிக்காத குறையாய் நான் அலைந்து இருக்கிறேன் .இன்னொருத்தியை மணந்து இருந்தாலும் மதுராவின் மீது இருக்கும் என் காதலுக்கு யாரின் அக்மார்க் முத்திரையும் எனக்கு தேவையில்லை ...என் மனதிற்கு தெரியும் என் காதலின் அளவூ .முடிவூ மதுரா கிட்டே தான் இருக்கு ....சரி என்றாலும் ,இல்லை என்றாலும் என் கடைசி மூச்சு உள்ளவரை அவளின் நண்பனாக தான் இருப்பேன் அங்கிள்...... அவளை காதலிக்கும் முன்பு இருந்தே அவ என் பெஸ்ட் friend அங்கிள்.அது என்றுமே மாறாது .என் மதுராவை யார் தவறாக ஏன் அவ பெற்றோர் ஆகா இருந்தாலும் பேச அனுமதிக்க முடியாது ." என்று கர்ஜித்தவனை கண்டு சங்கரன் வெலவெலத்து போனார் .

பெண்ணிற்கு ஒரு சிறந்த ஆண் நண்பனாய் கிடைப்பது என்பது வரம் .அந்த வரம் மதுராவிற்கு இருவர் மூலம் கிடைத்து இருக்கிறது என்பதை அந்த தந்தை அந்த நிமிடம் உணர்ந்தார் .பெண்ணிற்கு நல்ல கணவன் காதலனாக இருப்பதை விட ,சிறந்த நண்பனாய் ,வழிகாட்டியாய் அமைந்து விட்டால் அதை விட சுவர்க்கம் இந்த பூமியில் இருந்து விட முடியுமா என்ன ????

பவானிக்கு தான் அத்தகைய நண்பனாக என்றாவது இருந்து இருக்கிறோமா என்று யோசித்த சங்கரன் சராசரி கணவன்மார்களை போல் தான் சிறந்த கணவனாகவே இல்லாத போது எப்படி சிறந்த நண்பனாக இருந்து இருக்க முடியும் என்று எண்ணாமல் இருக்க முடியவில்லை .
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இல்லறம் என்பது காதல் ,காமம் ,கடமையின் சங்கமம் மட்டும் இல்லை .அங்கு புரிந்துணர்வூ ,நட்பும் இருப்பது அவசியம் .தோள் தாங்கும் தோழமையும் வேண்டும் .கல்லூரியில் அனைத்துமாய் அமையும் தோழமை .கட்டிய கணவனையோ ,மனைவியையோ தனக்கு சமமாக ஏற்கும் தோழமை .எல்லாமாக நான் இருப்பேன் என்ற நம்பிக்கை கொடுக்கும் தோழமை .

'தன் மகள் பாக்கியம் செய்தவள் ....இப்படி சிறந்த தோழர்கள் கிடைப்பதற்கு .தன் மனைவி தான் வேண்டாததை எல்லாம் போட்டு குழப்பி கொண்டு இருக்கிறாள் ....இவர்கள் இருவரில் யார் கணவனாக மதுரா தேர்ந்து எடுத்தாலும் அவளின் வாழ்வூ சிறப்பாக அமைந்து விடும் என்பதில் சந்தேகம் இல்லை .'என்று எண்ணியவர் பெருமூச்சு விட்டு ,"மன்னிச்சுடுங்க தம்பி .....மகளின் வாழ்வூ என்றதும் பதறி போனோம் ....மஹாப்பெரும் பாவம் தான் உங்களை சுமன் உடன் இணை கூட்டி பேசியது .....ஆனா நீங்க எதை நினைத்தாலும் அதை எப்படியாது அடைந்தே தீருவீர்கள் ...மற்றவர்களின் எண்ணத்திற்கு மதிப்பு தர மாட்டிர்கள் என்று கேள்வி பட்டு இருக்கோம் .....உங்களிடம் கருணையை எதிர் பார்க்கவே முடியாது என்று கூட தான் ...அதான் எப்படி ஒட்டுமொத்த குடும்பத்தையும் இங்கேயே கொண்டு வந்த முறை தவறாக எண்ண வைத்து விட்டது ......இதற்கு இப்படியும் விளக்கம் இருக்கும் என்று யோசிக்க மறந்து விட்டோம் ....மன்னிச்சுடுங்க தம்பி ...உங்க நல்ல மனசு புரியாமல் ...."என்றார் சங்கரன் .

"லுக் அங்கிள் ...நீங்க கேள்வி பட்டது 100% உண்மை தான் ...எனக்கு தேவையானதை எல்லா விஷயத்தில் அடைந்தே தீருவேன் தான் ...நான் நினைத்தது நடக்காமல் இருக்க விட்டதும் இல்லை தான் ...நீதி ,நேர்மை ,நியாயம் ,அநியாயம் ,கருணை ,பாவம் எல்லாம் பார்ப்பவன் இல்லை தான் ...ஆனால் இதற்கு ஒரே விதிவிலக்கு மதுரா மட்டும் தான் .....அவள் மேல் எந்த அளவூ காதல் இருக்கிறதோ அதே அளவூ நட்பும் இருக்கு ,மரியாதையும் இருக்கு அங்கிள் .....என்றுமே அவள் வார்த்தைக்கு மட்டுமே கட்டுப்படுபவன் நான் அங்கிள் ....அவளை மீறி ,அவள் மனம் நோகும் வண்ணம் என்றுமே நான் செயல் பட்டதும் இல்லை ,இனி செயல் பட போவதும் இல்லை .....என்னால் ஒரு உத்திரவாதம் ,சாத்தியமே கூட செய்து தர முடியும் ...ஏன் எழுதியே வேண்டும் என்றாலும் தந்து விடுகிறேன் .....மதுராவிற்கு என்னாலும் ,விஜயாலும் என்றுமே கெடுதல் என்ற ஒன்று வரவே வராது அங்கிள் ....."என்றான் சூர்யா .

இதற்கு மேல் அவரால் என்ன பேச முடியும் ???மன பாரத்தோடு வந்தவர் யோசனையுடன் கிளம்பினார் கோயிலை நோக்கி .பவானியிடம் இது பற்றி நிறைய பேச வேண்டி இருக்கும் என்பதையும் ,மதுரா எந்த முடிவூ எடுத்தாலும் அதற்கு தான் துணை நிற்க வேண்டும் என்பதையும் ,புதிதாக வரன் கொண்டு வருவது தேவை அற்ற வேலை என்றும் முடிவூ செய்து கொண்டு தன் காரினை பெசன்ட் நகர் நோக்கி திருப்பினார்.

பெசன்ட் நகர்-அஷ்டலக்ஷ்மி திருக்கோயில்
8.jpg

ஓம்காரசேத்திரம் என்று அழைக்க படும் ஸ்தலம் .ஓம்கார வடிவில் கட்டப்பட்டு,வங்காள விரிகுடாவின் கடல் அலைகளின் ஓசையும் ,காற்றின் சப்தமும் "ஓம் "என்ற ஓசையினை ஏற்படுத்தும் அஷ்டாங்க விமான -எட்டு பகுதியாக கட்டப்பட்டு 1976 முதல் கும்பாபிஷேகம் நடத்தப்பட்ட திருக்கோயில் .மூன்று தளங்களை உடையதாகவும் ,திருமாலின் நின்ற ,அமர்ந்த ,சயனித்து கோலத்தை சுட்டி காட்டுவதாகவும் ,ஒரு மனிதனுக்கு தேவை படும் எட்டு செல்வங்களை -செல்வம் என்பது பணத்தினை மட்டும் குறிப்பதன்று, கல்வி, நீண்ட ஆயுள், நம்பிக்கைக்கு உரிய நண்பர்கள், வாழ்க்கைக்கு தேவையான செல்வம், உழைப்புக்கு தேவையான ஊதியம், நோயற்ற வாழ்க்கை, எதற்கும் கலங்காத மனவலிமை, அன்புள்ள கணவன் மனைவி, அறிவு ஒழுக்கம் ஆற்றல் கொண்ட குழந்தைகள், மேன்மேலும் வளரக்கூடிய புகழ், மாறாத வார்த்தை, தடங்கலில்லாத வாழ்க்கை, வருவாயைச்சிக்கனமாக செலவழித்து சேமிப்பு அதிகரித்தல், திறமையான குடும்ப நிர்வாகம், நமக்கு உதவக்கூடிய பெருமக்களின் தொடர்பு, பிற உயிர்களிடம் அன்பு செலுத்துதல் போன்றவற்றை குறிக்கும் எட்டு சக்திகளாக லஷ்மி எழுந்து அருளி இருக்கும் திருத்தலம் .

அந்த திருக்கோயிலின் முன் வந்து நின்ற மூன்று கார்கள் .முன் காரில் இருந்து ஆல்வின் இறங்க ,நடுவே இருந்து மதுராவின் குடும்பம் இறங்க ,பின் காரில் இருந்து உத்தம் இறங்கினான் .மற்றவர்கள் உள்ளே சென்று விட ,உத்தமும் ஆல்வினும் மட்டும் வெளியே நின்று விட்டனர் .காவல் காக்கிறார்களாம் ...

jalsa-more-rowdies.png

ஆனால் இவர்கள் யாருமே பின்னால் வந்து நின்ற ஆம்னி வேன் ஒன்றினை கவனிக்க தவறி விட்டனர் .அதில் உள் இருந்த ஐவர் பீகார் இளைஞ்சர்களை போல் இருந்தனர் .ஒவ்வொருத்தனின் முகமும் எந்தவித பஞ்சமா பாதகத்தினையும் செய்ய தயங்காதவர்கள் என்று தெள்ளத்தெளிவாக கட்டியம் கூறி கொண்டு இருந்தது .அதில் இருந்து ஒருவன் மட்டும் இறங்கி உள்ளே சென்றான்.

ஆல்வினும் ,உத்தமும் விஜிபி சிலை போல் வெளியே நின்று காவல் காக்கிறோம் என்று ஒருவரை ஒருவர் முறைத்து கொண்டு இருந்தனர் .அங்கு எப்படி விஜய்க்கும் சூர்யாவிற்கும் காதல் போட்டியோ இங்கு ஆல்வினுக்கும் ,உத்தமிற்கும் யார் சிறந்த அண்ணன் என்ற போட்டி .நல்லவேளை மதுராவின் வற்புறுத்தலால் "BODYGUARD "கெட்டப்பை விட்டு இருந்தார்கள் ...இல்லை என்றால் கோயிலுக்கு வந்தவர்கள் எல்லோரும் மிரண்டு ஓடி இருப்பார்கள் .
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மதுராவிற்கு காவல் காக்கிறோம் என்று வார்த்தைக்கு வார்த்தை சொல்லி கொண்டு இருந்த இரு காதலர்கள் ஆகட்டும் ,காவல் காக்க வந்தவர்கள் ஆகட்டும் ,அவளின் குடும்பத்தினர் ஆகட்டும் அனைவருமே சில பல விஷயங்களை மறந்து தான் விட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும் .

1.ஒரு மளிகை சாமான் கடைக்கு அவளை தொடர்ந்து சென்றதை போல் அல்ல ஒரு கோயிலில் அவளை காப்பது .

2.கோயில் என்பதற்கு ஒன்றுக்கு பல வாயில்கள் இருக்கும் .

3.அவ்வளவூ பெரிய கோவிலில் கும்பலாக செல்வதில் பாதுகாப்பும் உண்டு ,குறைகளும் உண்டு .

4.கூட்டாக செல்லும் போது கூட,ஒருவர் முன் ,ஒருவர் பின் என்று வந்தவர்கள் பிரிந்து செல்ல வாய்ப்பு அதிகம் .

5.பவானி கடவுளின் மேல் கவனத்திலும் ,கார்த்திக் பூரணியை டாவ் அடித்து கொண்டு வருவதிலும் ,பவானி அழைப்பில் வந்து இருந்த சந்திராவின் மேல் ரகு கவனத்தை திருப்பி இருக்க ,பாலாஜி நிறைமாத 6.கர்ப்பிணியான தன் மனைவி சுபாவின் மேல் கவனமாக இருக்க என்று ஒவ்வொருவரும் மற்றவர்கள் மதுராவின் மேல் கவனமாய் இருப்பார்கள் என்ற எண்ணத்தில் , கடைசியில் ஒருவருமே மதுராவை கவனிக்கவில்லை என்பது தான் உண்மை .

எப்பொழுதும் கவனத்துடன் நடக்கும் மதுராவும் காலையில் இருந்து தான் கண்ட கனவால் மனஉளைச்சலில் இருக்க ,பின்னால் இவர்கள் வருகிறார்களா என்பதை கவனிக்காமல் அவள் பாட்டுக்கு ஏதோ ஒரு ஞாபகத்தில் முன்னால் சென்று கொண்டே இருந்து விட்டாள் .

பின்னால் வந்தவர்களின் கவனமும் அதிகமாக சிதறும் வண்ணம் படியில் இறங்கி கொண்டு கொண்டு இருந்த சுபா கால் மடங்கி படியில் அமர ,ஏற்பட்ட பரபரப்பில் மதுரா என்ன ஆனாள் என்று யாருமே கவனிக்கவில்லை .சுபாவிற்கு முதல் உதவி அளிப்பதிலேயும் அவர்களின் கவனம் 10-15 நிமிடங்கள் மதுராவை யாருமே கவனிக்கவில்லை .அந்த சில நிமிட இடைவேளையில் பலரின் வாழ்வூ மாறுவதற்கான அச்சாரம் இட பட்டு விட்டது .விதி தன் விளையாட்டு ஆரம்பித்து விட்டதை நினைத்து சிரித்து கொண்டு இருந்தது .

கோயிலுக்கு வெளியே காவலுக்கு நின்ற இரு அண்ணன்களும் ,கோயிலுக்குள் இருந்த மதுராவின் குடும்பமும் மதுரா அந்த இடத்திலேயே இல்லை என்பதை கவனிப்பதற்குள் எல்லாமே கை மீறி போய் இருந்தது .

இருபதாவது முறையாக விஜய்யிடம் இருந்து ஆல்வினுக்கு அழைப்பு வந்தது .இந்த முறை 'என்ன ஆச்சு "என்று கேட்பதற்கு பதில் ,"ஆல்வின் ! மதுரா கிட்டே போனை கொடு ...நான் இப்பவே பேசியே ஆகணும் "என்றான் விஜய் .

"என்னடா இது ....ஏண்டா இப்படி படுத்தி எடுக்கறே ....மதுரா என்ன போர்களதுக்கா போய் இருக்கா ...உள்ளே சாமி கும்பிட குடும்பத்தோடு போய் இருக்கா டா ...வெளியே வந்ததும் கொடுக்கிறேன் ....இப்போ ஆளை விடு ."என்றான் ஆல்வின் .

"வாட் கம் அகைன் ....அவ உள்ளே சாமி கும்பிட போய் இருக்கா ...வெளியே வந்ததும் கொடுக்கறியா ???அப்போ நீ எங்கே இருக்கே ???என்றான் விஜய் பதறியவனாக .

"என்னடா கேள்வி இது ???கோயிலுக்கு வெளியே உத்தமோடு நின்று இருக்கேன் ...."என்றான் ஆல்வின் .

சில பல நிமிடங்கள் விஜய்யிடம் இருந்து பதில் வராது போகவே ,"டேய் ...லைனில் இருக்கியா ..."என்று பலமுறை ஆல்வின் கேட்டும் பதில் வரவில்லை ."கருணா !.....கருணா ....ஆர் யு தேர் மேன் ?"என்றான் ஆல்வின் .

"உள்ளே உடனே போ ஆல்வின் ....மதுரா கிட்டே இப்பவே போன் கொடு ....நான் பேசியே ஆகணும் ."என்றான் விஜய் .

"நான் எப்படிடா கோயிலுக்குள் ?"என்று ஆல்வின் தயங்கி நின்றான் .

"மவனே உன்னை சாகடிச்சுடுவேன் .....நீ கோயிலுக்குள் போனா என்ன அந்த சாமி சூலத்தை எடுத்து குத்த போகுதா இல்லை ஜீசஸ் உன்னை சிலுவையாலேயே அறைய போறாரா ....ஏன் கிறிஸ்துமஸ்க்கு உன்னோடு நான் சர்ச் வரவில்லை .கிருஷ்ணா ஜெயந்திக்கு கனகா அம்மா சமையலை நீ சாப்பிட்டதே இல்லை ...மிருதுளவொடு கோயிலுக்கு போனதே இல்லையா என்ன ...மனுஷன் இருக்கும் நிலை புரியுமா ...இப்போ தான் உனக்கு ஜாதி ,மதம் எல்லாம் DEBATE தோணுமா ...சொல்வதை செய்து தொலை டா ...மதுரா கிட்டே நான் பேசியே ஆகணும் ...அவ குரலை கேட்டால் தான் நிம்மதி எனக்கு ...உள்ளே போ ஆல்வின் உன் காலில் வேண்டும் என்றால் விழுகிறேன் ."என்றான் விஜய் .

முன்னர் ஒரு முறை நண்பன் இது போல் தவித்ததை நேரில் கண்டவன் என்பதால் ,மதுராவின் குரலை கேட்கும் வரை இவன் சமாதானம் ஆக மாட்டான் என்பது புரிந்து விட ,லைன் கட் செய்யாமலேயே ஆல்வின் கோயிலுக்குள் ஓட ஆரம்பித்தான் .அவன் உள்ளே செல்வதை கண்ட உத்தமும் அது வரை சூர்யாவிடம் பேசி கொண்டு இருந்த அழைப்பை கட் செய்யாமல் ஆல்வின்னை தொடர்ந்து உள்ளே சென்றான் .

கோயிலுக்குள் வந்த இருவரும் சிறிது நேரம் கழித்து ,சுபாவோடு மற்றவர்கள் அமர்ந்து இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தனர் .சந்திரா சுபாவின் காலில் சுளுக்கு பட்டையை ஒட்டி கொண்டு இருப்பதை கண்டனர் .

"என்ன என்ன ஆச்சு சுபா ?"என்றான் ஆல்வின் பதறியவனாக .

"ஒண்ணும் இல்லை அண்ணா ...கால் படி இறங்கும் போது சுளுக்கி கொண்டது .அதற்கு இத்தனை அலம்பல் செய்துட்டு இருக்காங்க எல்லோரும் ...ஒன்றுமே இல்லை .."என்றாள் சுபா .

"ஒகே சரி ...மதுரா எங்கே ?"என்றான் ஆல்வின் .

"அவ இங்கே இங்கேயாவது புளியவரை கிடைக்குமா என்று பிரசாத ஸ்டாலில் டேரா அடித்து இருப்பா ..பெருமாள் கோயில் புளியவரை ,மிளகு பொங்கல் என்றால் சும்மா விடுவாளா என்ன ?'என்ற ரகுவிற்கு ஹை பைவ் கொடுத்தான் கார்த்திக் .

பதில் பேசாத ஆல்வின் பிரசாத ஸ்டாலில் நோக்கி சென்று பார்க்க அங்கு ஈ ,காக்கை கூட இல்லை என்பதை கண்டவன் ஏதோ விபரீதம் என்று புரிந்து மீண்டும் அவர்களை நோக்கி வந்தான் .
hqdefault (7).jpg

"மதுரா அங்கே இல்லை .....மதுரா கடைசியா எப்போ பார்த்தீங்க ?"என்று ஆல்வின் கத்த ஒருவர் மற்றவரை பார்த்தார்களே ஒழிய யாருக்கும் ஒன்றும் தெரியவில்லை .பேந்த பேந்த முழிக்க மட்டுமே அவர்கள் முடிந்தது .

Untitled-3-copy-compressed-1-1.jpg

"கருணா !...மதுரா மிஸ்ஸிங் டா ."என்றான் ஆல்வின் ."கருணா லைன்னில் இருக்கியா டா நான் சொல்வது கேட்குதா .....மதுராவை காணவில்லை ."என்று அலறினான் ஆல்வின் .

PENANCE WILL CONTINUE.....
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
THAVAM 32(1)

மயங்கி சரிந்தார் பவானி .எது நடக்க கூடாது என்று அஷ்ட லக்ஷிமியையும் வேண்ட வந்தாரோ அங்கேயே மகள் காணாமல் போக சில ,பல நாட்களாய் தொடர்ந்து இருந்த மனஅழுத்தம் ,துக்கம் ,துயரம் என்று அவரை மயக்கி சாய்த்தது .

உத்தமும் சூர்யாவிற்கு தகவலை சொல்ல அடுத்த சில நொடிகளில் ஆளுக்கு ஒரு திசையில் ஓடினார்கள் மதுராவை தேட ....அதுவும் காலம் கடந்து .

விஜய் உடனே ராஜேஸ்வரிக்கு தகவல் சொல்ல ,அந்த ஏரியா இன்ஸ்பெக்டரை ஸ்பாட்டுக்கு அனுப்பி வைத்தவள் அவளும் கிளம்பி வருதாகவும் ,கண்ட்ரோல் ரூமிற்கு தகவல் கொடுத்து விடுவதாகவும் பதில் அளித்தாள் .

கோயிலுக்குள் மற்றொரு முறை ஆல்வினும் உத்தமும் தேட ,அவர்களின் கண்ணில் பதுங்கி பதுங்கி இவர்களை நோட்டம் இட்டு கொண்டு இருந்த பீகார் ரவுடி மாட்டினான் .அவன் மீது சந்தேகம் வர ஆல்வினும் ,உத்தமும் அவனை விசாரிக்க முன்னுக்கு பின் ஹிந்தியில் உளறி கொட்டி வகையாய் சிக்கினான் அவன் .மாட்டிய அவனை நொய்ய புடைத்து எடுத்தனர் ஆல்வினும் ,உத்தமும் .அடி தாங்க முடியாதவனாய் ,மதுராவை கடத்த தன் சகாக்களோடு வந்ததாகவும் ,வெகு நேரமாய் மதுராவை தான் அந்த இடத்தில தான் தேடி கொண்டு இருப்பதாகவும் ,அவளை கண்ட உடன் தன் கூட்டாளிகளுக்கு தகவல் கொடுப்பதாக இருந்ததாகவும் ,மதுரா வருவதற்காக அவன் காத்து இருப்பதாகவும் உண்மையை ஒத்து கொண்டான் .

மப்பிட்டியில் வந்த அந்த ஏரியா இன்ஸ்பெக்டர் நிரஞ்சனின் உதவியால் அங்கு வேன் அருகே இருந்த மற்ற ஆட்கள் கைது செய்ய பட்டு ராஜேஸ்வரியிடம் அழைத்து சென்றனர் .மற்றவர்களை கூட்டி கொண்டு பாலாஜி பவானிக்கு வைத்தியம் பார்க்க கிளம்பி விட ,ஆல்வின் ,உத்தம் ,ரகு ,கார்த்திக் மட்டும் சில போலீஸ்காரர்களோடு கோயில் அருகே ,பின் புறம் இருந்த கடைகளில் விசாரித்து கொண்டு இருந்தனர் .விஜய்யும் ,ஆல்வினும் நேராக ராஜேஸ்வரி அலுவலகத்திற்கு சென்றனர் .

அடுத்த இருபது வினாடிகளில் ,பெண்களுக்கு ஏதாவது என்றால் பத்ரகாளியாக மாறும் ராஜியின் டிரீட்மென்டில் பாதி உயிர் ஆகி இருந்தனர் அந்த ஐவரும் .

சூர்யாவும் ,விஜய்யும் வந்து சேர ,"இந்தாங்க லத்தி ..உங்களுக்கு பத்து நிமிஷம் டைம் ....உயிர் போன கூட கவலை படாதீங்க ..ஏற்கனவே பிஹாரில் இவங்க பேரில் பிடிவாரண்ட் ,சூட் அட் சைட் ஆர்டர் இருக்கு ....சமூகத்தின் விஷ செடிங்க இவங்க ....எதை பத்தியும் கவலை படாதீங்க ."என்றவள் இருவரிடமும் லத்தியை கொடுத்து விட்டு விசாரணை அறையில் இருந்து வெளியேறி விட்டாள் .
maxresdefault (4).jpg

கேட்கவும் வேண்டுமோ .....லத்தி எடுத்து விளாசி தள்ளி விட்டார்கள் விஜய்யும் சூர்யாவும் .அடி தாங்க முடியாமல் மயங்கி விழுந்தவர்களை தெளிய வைத்து அடித்து பின்னி துவைத்து எடுத்தார்கள் இருவரும் .ரத்த ஆறு ஓடியது என்று பேச்சுக்கு சொல்வார்களே ,அந்த அறையில் உண்மையான ரத்த ஆற்றினை இருவரும் ஓட வைத்தார்கள் .அந்த ஐவரும் அலறிய அலறலில் அந்த கட்டடம் முழுக்க எதிர் ஒலித்தது .

"வேண்டாம் பையா ....போதும் ...உண்மையை சொல்லிடறேன் ...விட்டுடுங்க .."என்று விஜய்யின் காலில் விழுந்தான் கோயிலில் சிக்கியவன் .

மதுராவை கடத்த சொல்லி தங்களுக்கு பணம் கொடுத்தது,தாங்கள் போதை மருந்து வாங்கும் மிஸ்ரா என்பவன் என்றும் ,மதுராவை மயங்க வைத்து ஓசூருக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பது மட்டுமே தங்களுக்கு கொடுக்க பட்ட தகவல் என்றும் சொல்லி கதறினான் அவன் .

ராஜேஸ்வரி அறைக்கு திரும்பியவர்கள் ,"இவங்க இல்லை ராஜீ .....இவங்க மதுராவை கடத்த தான் வந்து இருக்காங்க ...ஆனா மதுராவை இவங்க கடத்துவதற்கு முன்னே வேறு யாரோ கடத்தி இருகாங்க ....இவனுங்க புதுசா சுமன் இறக்கி இருக்கும் பீகார் கூலி படை என்று நினைக்கிறன் ."என்றான் விஜய் .

"நானும் அதே தான் நினைக்கிறன் அண்ணா ....இவங்க கடத்தலை ....மதுராவின் போன் ட்ரெஸ் செய்ததில் கடைசியாக போன் மீனம்பாக்கம் பக்கத்தில் இருந்து இருக்கு ....கால் செய்து பார்த்தேன் ....ரெண்டு ,மூன்று ரிங் போன பிறகு மொபைல் சுவிட்ச் ஆப் என்று வருது .ட்ரெஸ் செய்ய முடியலை .சென்னை விட்டு வெளியே செல்லும் எல்லா செக் போஸ்ட் அலெர்ட் செய்துடறேன் .....அந்த மிஷ்ராவை பிடிக்க ஆட்களை அனுப்பிட்டேன் ."என்றாள் ராஜேஸ்வரி .

"நான் சென்ட்ரல் ஹோம் மினிஸ்டர் கிருஷ்ணாசேகரிடம் பேசி விடறேன் ....அப்போ தான் உங்க துறைக்கு பிரஷர் வரும் ....இல்லை என்றால் பத்தோடு பதினொன்றாக இந்த கிட்நாப் போய் விடும் ...."என்ற சூர்யா மத்திய மினிஸ்டரிடம் பேச ,அவர் தமிழ்நாட்டு முதலமைச்சரிடம் பேசி ,அவர் கமிஷனர் இடம் பேச ,எல்லாவித ஒத்துழைப்பும் கொடுக்க வேண்டும் என்று ராஜிக்கு தகவல் வந்தது .மதுராவை கண்டு பிடிக்க எதை வேண்டும் என்றாலும் செய்து கொள்ளலாம் என்ற மறைமுக சம்மதம் .

பவானி ஹாஸ்பிடலில் அட்மிட் செய்ய பட்டு டிரீட்மென்ட் நடக்க சங்கரன் அங்கு வரவழைக்க பட்டு விவரம் சொல்ல பட்டது .காணாமல் போன மகளுக்காக பார்ப்பாரா ,மகள் காணாமல் போன பயத்தில் மயங்கி பேச்சு மூச்சு இல்லாமல் படுத்து விட்ட மனைவிக்காக பார்ப்பதா என்று புரியாமல் தலையை பிடித்து கொண்டு அமர்ந்து விட்டார் .
ராஜேஸ்வரி ஓசூர் போலீஸ் தலைமை அதிகாரியிடம் பேச வந்த தகவல்கள் சற்று மிரட்டலாகவே வந்தது .அந்த மிஸ்ரா என்பவன் பல தீவிரவாதிகள் குழுவுடன் தொடர்பில் இருப்பவன் ,ஆள்கடத்தல் ,ஆயுத கடத்தல் எல்லாம் சர்வ சாதாரணம் .பணம் கொடுத்தால் எதை வேண்டும் என்றாலும் செய்ய தயங்க மாட்டான் .உளவூ துறையின் கண்காணிப்பில் இருப்பவன் ....அன்று அவனையும் அவன் கும்பலையும் பிடிக்கும் ஆபரேஷன் நடந்து கொண்டு இருப்பதாகவும் ,என்கவுண்டர் நிச்சயம் என்று அறிவித்தான் ராஜேஸ்வரியின் நண்பன் .
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
டெட் எண்டு என்பார்களே அந்த நிலைமை தான் அவர்கள் விசாரிப்புக்கு .அடுத்து என்ன என்று புரியாமல் விஜய் ,சூர்யா ராஜேஸ்வரி குழப்பத்தில் ஆழ்ந்து விட்டனர் .ஏதாவது clue கிடைத்தலாவது எந்த திசையில் போவது,யாரை பிடித்து விசாரிப்பது என்று தெரியும் .கண்ணை கட்டி காட்டில் விட்டது போல் இருந்தது அவர்களுக்கு .

ஆனால் எதிர் பாராத இடத்தில் இருந்து அவர்களுக்கு தேவையான தகவல் வந்தது .தொலைத்ததை தொலைத்த இடத்தில் தேடினால் தானே கிடைக்கும் ....மதுரா தொலைந்த கோயில் பகுதியில் தங்கள் விசாரணையை இன்னும் தொடர்ந்து கொண்டு இருந்தனர் கார்த்திக் ,ரகு ,ஆல்வின் ,உத்தம் .அங்கு இருந்த ஒருவரையும் விடவில்லை .கோயிலுக்கு சாமி கும்பிட வந்தவர்கள் ,வியாபாரிகள் ,ஆட்டோ ஓட்டுனர்கள் ,ஹோட்டல் ,டீ கடை வைத்து இருப்பவர்கள் என்று ஒருத்தர் பாக்கி இல்லாமல் விசாரித்து கொண்டு இருந்தனர் .பட்ட பகலில் 100 பேராவது இருக்கும் இடத்தில் இருந்து யாருமே அறியாமல் ஒரு பெண்ணை கடத்துவது என்பது இயலாத காரியம் மட்டும் அல்ல முடியாத காரியம் .

தவிர கடத்த வந்த பீகார் குழுவும் மாட்டி இருக்க ,மதுரா எப்படி காணாமல் போனாள் ,தற்காப்பு கலையில் வல்லவள் ஆனா ஒருத்தியை யாரின் கவனிப்பையும் கவராமல் கடத்த முடியாது என்று அவர்கள் நம்பியதற்கு கை மேல் பலன் இருந்தது .

கோயிலின் பின் புறம் சிறு கடைகளை வைத்து இருந்தவர்கள் இவர்கள் மொபைல்லில் இருந்த போட்டோவை காட்டி விசாரித்து கொண்டு இருந்த போது ,அங்கு விளையாடி கொண்டு இருந்த அந்த வியாபாரிகளின் குழந்தைகள் இவர்கள் விசாரிப்பை கண்டு அருகே வந்தனர் .

"ஏய் ராசு ...இங்கே வாடா ..உன் ஹீரோயினியா பத்தி தாண்டா கேட்குறாங்க ..."என்று எவனையோ கூப்பிட்டது ஒரு பொடிசு .

அவர்கள் குரல் கேட்டு டீ விற்று கொண்டு இருந்த 12 வயசு ராசு அவர்களை நோக்கி வந்தான் .

"என்னா அண்ணாத்தை ?என்ன மேட்டரு ?"என்றான் அந்த சிறுவன் .

மொபைலில் அன்று எடுக்க பட்ட மதுராவின் படத்தை காட்டி ,"தம்பி !இந்த அக்காவை இங்கே எங்கேயாவது பார்த்தியா ?"என்றான் கார்த்திக் .

"என்ன அண்ணாத்தை இப்படி கேட்டுபுட்டே ...அது புது பட ஹீரோயினி தானே ...இங்கே தானே புது பட ஷூட்டிங் நடந்தது."என்றான் ராசு .

"என்னது பட ஷூட்டிங்கா ?"என்றான் கார்த்திக் அதிர்ந்தவனாய் .
maxresdefault (2).jpg
"பின்னே உன் கையிலே என்ன புருடவா உட்டுக்கிறேன் ?...செம்ம அழகு சார் ....அப்படியே தூளாகி வச்ச காமாச்சி அம்மன் விளக்கா என்னமா ஜொலிச்சாங்க ...கண்ணுலே நிக்குது ....அப்படியே சோகமா வந்து நின்னு இந்த கடலையே ஊத்து பார்த்துட்டு நின்னாங்க ....கண்ணு கலங்கிடுச்சு அவங்களுக்கு ...அப்போ தான் சார் ஹீரோ என்ட்ரி அசால்ட்டா கொடுத்தார் பாருங்க .......என்ன ஹெயிட் ,வெயிட் ,என்னா கலர் .....சுண்டுனா ரத்தம் வரும் ....ஹீரோயினை பார்த்து ஒரு ரியாக்ஷன் விட்டார் பார் மெர்சல் ஆயிட்டேன் .....ஹீரோ வருவார்னு ஹீரோயினி எதிர்பார்க்கவில்லை ....என்னமா ஒரு லுக் விட்டுச்சு தெரியுமா ????கண்ணு கலங்கி போச்சு .....என்னா பீலிங்கு ... கூடவே இன்னொரு கில்பான்ஸ் ...அது பாம்பாய் அல்வா கணக்காடக்கரா இருந்துச்சு .....டயலாக் வுட்டாங்க பாருங்க ...."என்றவன் அவர்கள் பேசிய வாய்ஸ் ,"நீ நீ நீ மதுரா தானே ...நீ இன்னும் சாகலையா ......இன்னும் உயிரோடவா இருக்கே ......"என்று ஹீரோ பேசிக்குனாரு ,கூட இருந்த ஹல்வா ,"நீ செத்துட்டேன்னு நினைச்சுட்டு இருக்கோம் .....இன்னும் நீ சாகலையா ...எப்படி நீ இன்னும் உயிரோடு இருக்கே ....?"ன்னு டயலாக் சொல்லிச்சு .....என் ஹீரோயினி என்னமா பீல் பண்ணுச்சு தெரியுமா ....அப்பலகா ....மயங்கிடுச்சு .....ஹீரோ பாஞ்சு ஓடி வந்து சும்மா மதுர வீரன் பொம்மிய தூக்கறா போல் தூக்கிட்டு காரில் ஏத்திட்டு போனார் ....என்ன சீன் தெரியுமா அண்ணாத்தை ..லவ்வோ லவ்ஸ் .....100 நாள் மாஸ் ....."என்றான் அவன் .
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இவன் சொன்னதை வைத்து பார்த்தால் மதுரா அவளாக கோயில் விட்டு வெளியே வந்து இருக்கிறாள் ...வெகு நேரம் கடலை பார்த்தவாறு கண்கள் கலங்க நின்று இருக்கிறாள் .அப்பொழுது அவளை தெரிந்த இருவர் ஒரு ஆணும் ,பெண்ணும் அவளை அடையாளம் கண்டு வந்து பேசி இருக்கிறார்கள் ....இன்னும் சாகாமல் இருக்கிறாய் என்று கேட்டு இருக்கிறார்கள் ....வேறு என்ன பேசினார்களோ ,ஏற்கனவே மன அழுத்தத்தில் இருப்பவள் மீண்டும் மயங்கி இருக்கிறாள் .அவளை அவர்கள் இருவரும் தூக்கி சென்று இருக்கிறார்கள் காரில் .

"தம்பி அந்த கார் சின்ன காரா ,பெரிய காரா ????என்ன கலர் ?"என்றான் ஆல்வின்

"அதான் அண்ணத்தை அக்டரு சிவகார்த்திகேயன் சார் கூட சூரி அண்ணா கூட போய் ஹீரோயினி கீர்த்தி சுரேஷ் கடையில் ஒரு காரை ஆட்டைய போடுவாங்கலே ...அது சார் ....வெள்ளை காலொரு ...சும்மா பிச்சிக்குன்னு போச்சு .எப்போ சார் படம் ரிலீஸ் ஆகும் ...என்னை கூட படம் புடுச்சங்கா ..நானும் படத்துல வாரேன்னு கேட்டதும் நம்ம பசங்க பேஜார் ஆகிட்டாங்க ."என்ற ராசுவிற்கு ஏதோ ஒரு பதில் சொல்லி கையில் 100 ரூபாயை திணித்து விட்டு தகவலை விஜய்க்கு தெரிவித்தார்கள் .

தகவல் வந்ததும் ராஜேஸ்வரி டிராபிக் போலீஸ் உதவியுடன் கார் சென்ற திசையை cctv கேமரா மூலம் பார்க்க அந்த கார் மீனம்பாக்கம் பக்கம் போவதாக காட்டியது .

அங்கு இருந்த போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் தர பட சுற்றி இருந்த இடங்களில் patrol அனுப்ப பட்டது .

மூன்று மணி நேரம் எந்த தகவலும் வராமல் பைத்தியம் பிடிக்காத குறையாய் தவித்து போய் விட்டனர் விஜய்யும் சூர்யாவும் .பவானிக்கு மயக்கம் தெளிந்து ,மகளை சுமன் கடத்தவில்லை என்பதால் நிம்மதி அடைந்தாலும் ,மதுராவிற்கு தெரிந்த வேறு யார் அவளை கொண்டு சென்றது என்று புரியாமல் தவித்து கொண்டு இருந்தனர் அனைவரும் .

எல்லா பக்கமும் அடை பட்டு விட ,என்ன செய்வது ,யாரை விசாரிப்பது என்று புரியாமல் மீண்டும் தொடங்கிய இடத்திலேயே நின்றது அவர்கள் விசாரணை .

விஜய் மட்டும் மதுராவின் மொபைல் நம்பருக்கு ட்ரை செய்வதை நிறுத்தவே இல்லை ....குறைந்தது இருநூறு முறையாவது விடாமல் அழைத்து இருப்பான் .ஒவ்வொரு முறை "மொபைல் சுவிட்ச் ஆப் "என்றே வந்தது .ஆனாலும் அவன் மனம் தளரவில்லை .அவள் மொபைல்லை அழைப்பதையும் நிறுத்தவில்லை .

ராஜேஸ்வரி அலுவலகத்தில் அதற்கு மேல் வேலை இல்லை என்று விஜய்யும் ,சூர்யாவும் "பிரிந்தாவனத்திற்கு "திரும்பி இருந்தனர் .பவானியும் அழைத்து வரப்பட்டு இருந்தார் .அனைவருமே அந்த வீட்டில் குழுமி இருந்தனர் .

போலீஸ் கொண்டு ராஜேஸ்வரி ஒரு புறம் தேட ,விஜய் ,சூர்யா தங்கள் ஆட்களை வைத்து வேறு தேடி கொண்டு இருந்தனர் .ஒரு நொடி கூட அமைதியாய் இராமல் பம்பரமாய் சுழன்ற அவர்கள் இருவரையும் திறந்த வாய் மூடாமல் பார்த்து கொண்டு இருந்தார் .

சூர்யாவை விட விஜய்யின் கோபம் ,கண்களின் சிகப்பு ,முகத்தின் இறுக்கம் ,அவன் தன்னை தானே முயன்று கட்டுப்படுத்தி இருந்த முறை என்று பார்ப்பவர்களுக்கு மரண பயத்தை ஏற்படுத்தியது .ஆல்வின்னையும் ,உத்தமையும் குதறி எடுக்காத குறை .சூர்யா கூட இவன் வெறியை கண்டு ஒரு நொடி திகைத்து பின் வாங்கினான் .

யார் எல்லாம் மதுராவை கடத்தி இருப்பார்கள் என்ற லிஸ்ட் தயாரிக்க பட்டு அவர்களை எல்லாம் துவம்சம் செய்து கொண்டு இருந்தான் .அவனை கட்டுப்படுத்தும் ஒரே ஆள் தான் மதுரா என்பது அங்கு இருந்தவர்களுக்கு புரிந்து விட ,அவள் தான் எங்கு இருக்கிறாள் என்பது தெரியவில்லையே .

விஜய் மட்டும் மதுராவின் மொபைல் நம்பருக்கு ட்ரை செய்வதை நிறுத்தவே இல்லை ....குறைந்தது இருநூறு முறையாவது விடாமல் அழைத்து இருப்பான் .ஒவ்வொரு முறை "மொபைல் சுவிட்ச் ஆப் "என்றே வந்தது .ஆனாலும் அவன் மனம் தளரவில்லை .அவள் மொபைல்லை அழைப்பதையும் நிறுத்தவில்லை .அவன் விடா முயற்சியின் பலனாய் மாலை மூன்று மணிக்கு அவள் மொபைல் ஆன் ஆகி ரிங் போக ,விஜய் சூர்யாவிற்கு ஜாடை காட்டினான் .ரிங் போக ஸ்பீக்கர்இல் போடப்பட்டது .

"சொல்லு விஜய் ...எதற்கு இத்தனை கால் செய்துட்டே இருக்கே ? "என்றது எதிர்முனை ----மதுரா தான் பேசினாள் .
images (27).jpg

அவள் குரலை கேட்ட விஜய்யின் கண்களில் இருந்து கண்ணீர் வழிய ஆரம்பித்தது .அவனையும் அறியாமல் கண்களை மூடி திறந்தவன் ,அவளுக்கு எதுவும் இல்லை என்பதால் மனபாரம் நீங்கியவங்க கால் மடங்கி தரையில் சரிந்து அமர்ந்தான் .

அதற்குள் ஓடிவந்த பவானி ,"ராணிமா ....எங்கேடா இருக்கே ....எந்த பாவிமா உன்னை கடத்தினது ...உன்னை ரொம்ப துன்பப்படுத்தறாங்களா ...அய்யா சாமி என் மகளை விட்டுடுங்க ...உங்க காலில் வேண்டும் என்றாலும் விழுகிறேன் ."என்று அழுது கதறினார் .

எதிர் முனை என்ன சொல்ல வருகிறது என்று புரியாமல் இவர் பாட்டுக்கு புலம்பலில் இறங்க ,"அம்மா !....நிறுத்துங்க "என்று கத்தினாள் மதுரா .

"என்னை யாரும் கடத்தலை அம்மா ...ஐ ஆம் ஆல்ரைட் .....நான் என் friends கூட தான் இருக்கேன் ....நீங்க பயப்படும் அளவூ எதுவும் இல்லை ."என்றாள் மதுரா சாவகாசமாக .

அதை கேட்ட அவர்களின் ரியாக்ஷன் எத்தகையது என்று கூறுவது கடினமே ...அவளுக்கு ஒன்றும் இல்லை என்று மகிழவதா இல்லை இவளை உண்டு இல்லை என்று ஆக்குவதா ?

"எங்கே இருகேடீ friends கூட இருக்கியா ....உன்னை காணோம் என்று பைத்தியம் மாதிரி தெரு தெருவாய் உன்னை தேடி அலைஞ்சுட்டு இருக்கேன் ....?"நீ கூல்லா friends கூட இருக்கேன்னு சொல்றே .....மவளே உன்னை என் கையால் கொன்றால் தாண்டீ எனக்கு நிம்மதி ....தினம் தினம் என்னை கொள்வதே உனக்கு வேலையா போச்சு இல்லை ....போறவ சொல்லிட்டு போறதுக்கு என்ன .......இங்கே செத்துட்டேன்டீ நீ காணோம் என்று கேள்வி பட்ட மறுகணம் ....." என்று உச்சஸ்தாயில் கத்தினான் விஜய் .
images (9).jpg

இவன் கோபத்திற்கு எந்த ரியாக்ஷன் மதுராவிடம் இருந்து வரவில்லை .அதற்கு மாறாக யாரோ ஒருவன் அலறும் சப்தம் கேட்டது ."ஏய் எருமை ...அடிக்காதேடி ....ஹேய் உண்மையில் வலிக்குது ....சாரி மா ...ரியலி சாரி .....நான் வேண்டும்னா அவங்க எல்லோர் காலில் விழுறேன் ...அடிக்காதேடீ ..என் செல்லம் இல்லை ...என் டார்லிங் இல்ல ...ப்ளீஸ் ப்ளீஸ் ."என்ற ஒருவனின் கொஞ்சல் ,கெஞ்சல் இங்கு இருந்தவர்களின் பிபி எகிற காரணமாக இருந்தது .

"'ஹே சாரி சாரி ...எல்லோரும் என்னை மன்னிச்சுடுங்க ....இந்த பிசாசை ரொம்ப நாள் கழிச்சி பார்த்தோம் ...பேசிட்டே இருந்த பிசாசு மயங்கி விழுந்துட்டா ....என்ன பண்றதுனே தெரியலை ...அதான் first எயிட் செய்துட்டு டாக்டர் கிட்டே காட்ட கூட்டி வந்தோம் ....இவ செய்த கூத்தில் உங்களுக்கு எல்லாம் இன்போர்ம் செய்யணும் என்பதே மறந்து போச்சு ...சாரி ...இப்போ தான் மேடம் கண் விழிச்சாங்க .....சாரி மன்னிச்சுடுங்க ...ப்ளீஸ் ."என்றான் அவன் .

"இப்போ கேட்டுச்சா .....இந்த பக்கிங்க ரெண்டும் நான் மயங்கி ககிடக்கும் போது கடத்திட்டு வந்து இருக்குங்க ....வீட்டுக்கு சொல்லணும் என்ற அறிவூ கூட இல்லாத மடசாம்பிராணிங்க......."என்றாள் மதுரா .

"இப்போ எங்கே இருக்கே .....சொல்லு வந்து கூட்டிட்டு போறோம் .."என்றான் விஜய் அடக்கி வைக்க பட்ட பொறுமையுடன் .

"டெல்லியில் "என்றாள் மதுரா கூல்லாக .


PENANCE WILL CONTINUE.....
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
THAVAM 32(2)

Samantha-Ruth-Prabhu-Without-Makeup6.jpg


"வாட் ....டெல்லினா சொன்னே ...கம் அகைன் ..."அவள் சொன்னதை கேட்டு அதிர்ந்தது விஜய் மட்டும் அல்ல அங்கு இருந்த அனைவரும் தான்

(எனக்கே பக்குன்னு தான் இருக்கு ....இப்போ நீ எதுக்கு இவங்க கூட டெல்லி போய் இருக்கே ???அதை விடு முதலில் இவங்க ரெண்டு பெரும் யாரு ?இது கடத்தல் தானா இல்லையா ????)

"டெல்லியில் தான் இருக்கேன் விஜய் ...ரெண்டு நாளில் திரும்பி வந்துடுவேன் ....டோன்ட் ஒர்ரி ."என்றாள் மதுரா .

"மதுராக்ஷி !...."என்ற சிம்ம கர்ஜனையாக ஒலித்தது விஜய்யின் குரல் ,"இங்கே நீ காணோம் என்றதும் போலீஸ் முதல் கொண்டு எத்தனை பேர் கடந்த எட்டு மணி நேரமாக உன்னை தேடி கொண்டு இருக்கிறோம் என்று உனக்கு தெரியுமா ......நீ என்ன என்றால் கூல்லாக ரெண்டு நாள் கழிச்சி வரேன் என்று சொல்றே ....உனக்கு உன் நண்பனோடு ஊர் சுத்த இது தான் நேரமா ....நீ ஓர் மேய போக நாங்க தான் பலியாடா ...ஒழுங்கா திரும்ப வந்து சேரு இல்லை உன்னை வகுந்துடுவேன் ....மவளே ....விட்டா ஓவர்ரா ஆடிட்டு போறே .....என்னை கொலைகாரன் ஆக்காதேடீ ....மரியாதை கெடும் முன் திரும்பிடு ..... "என்று .

vijay-from-bairavaa-image-credits-factskeeper-com_1180731.jpg
எதிர் முனையில் இருந்து சற்று நேரத்திற்கு சத்தமே வரவில்லை ."ஏய் அறிவூகெட்டவளே ...லைனைனில் இருக்கியா ....பேசி தொலை .....பேசுன்னு சொல்றேன் இல்ல .....கண்டவன் கூட சிரித்து பேச முடியும் ,கொஞ்சி குலாவா முடியும் ...உன்னை காணோம் என்று பதறி போய் இருக்கேன் ...வாயை திறந்து பேசி தொலைடீ ..."என்று மீண்டும் உறுமினான் விஜய் .

"பேசி முடிச்சுட்டியா விஜய் ....இல்லை வேறு ஏதாவது பாக்கி இருக்கா ???என்ன சொன்ன நான் ஊர் மேய போனேன் ,,இன்னோருத்தனோடு கொஞ்சி குலாவிட்டு இருக்கேன் ...........ரைட் .......என்னை என்ன என்று நினைச்சு இருக்கே விஜய் ....வார்த்தை அர்த்தம் ரொம்பவே தவறாக இருக்கு ....நான் எந்த மாதிரி நிலையில் இவர்களுடன் இருக்கேன் என்று உனக்கு தெரியுமா ?????என்னவோ சொன்னே ஊர் மேயறேன் என்று .....ஆமா நான் ஊர் ஊரா இப்போ அலைஞ்சுட்டு தான் இருக்கேன் ...என் வாழ்க்கையை தேடி ....என் கேள்விகளுக்கு விடை தேடி ....என் குழப்பத்திற்கு முடிவூ தேடி ....பைத்தியம் பிடிப்பது உனக்கு மாட்டும் இல்லை எனக்கும் தான் .....இதுக்கு எல்லாம் சொலுஷன் இவங்க கிட்டே இருக்கு .....எத்தனையோ ராத்திரி தூக்க மாத்திரை சாப்பிட்டு கூட தூங்க முடியாம விழிச்சுட்டே இருந்து இருக்கேன் ....மனபாரம் தாங்க முடியாமல் பிரஷர் ஏறி எத்தனை தடவை மயங்கி விழுந்து இருக்கேன் தெரியுமாடா உனக்கு ????அது இன்றோடு முடிவுக்கு வர போகுது ....இனி என் விஷயத்தில் யார் மூக்கை நுழைத்தாலும் இது தான் என்னை கடைசியாக பார்ப்பதாக இருக்கும் ...நான் விளையாட மாட்டேன் என்பது உங்களுக்கே தெரியும் ...சோ ஜஸ்ட் லீவ் மீ அலோன் .....டோன்ட் கால் மீ எனிமோர் .....குட் பை "என்றவள் கால் கட் செய்து மொபைல்லை சுவிட்ச் ஆப் செய்து ஹாண்ட்பாக்கில் தூக்கி போட்டாள் .
mahesh-hero2.jpg

இவள் பேச ஆரம்பித்ததும் திகைப்புடன் ஓட்டி கொண்டு இருந்த காரினை ஓரமாக நிறுத்தி விட்டு முழுவதுமாக இவளை பார்த்தார் போல் திரும்பி அமர்ந்தான் அவன் .சட்டென்று பார்பததற்கு தெலுங்கு பட ஹீரோ மகேஷ் பாபு போல் குழந்தை முகத்துடன் அழகனாய் இருந்தான் .அவன் பெயர் ஹர்ஷவர்தன் .அந்த பெண் அவன் தங்கை .பெயர் மேக்னா .இவள் காஜல் அகர்வால் போல் இருந்தாள் .இருவரின் தோற்றமே செல்வ செழிப்பில் வளர்ந்தவர்கள் என்பதை பறைசாற்றியது .


Kajal Agarwal_Image03_147434776410.jpg
(audi கார் வைத்து இருப்பவன் பின்னே ஏழையாகவா இருப்பான் ஹனி ?)

"பாவம் டீ karun....ஏன் இப்படி விழுந்து பிராண்டி வைத்தே ?"என்றாள் மேக்னா .
images (1).jpg

"யார் உன் ஹீரோ விஜய் தானே ...பாவமோ பாவம் தான் ....போடி வேலையத்தவளே ....பார்க்கா தான் லவர் பாய் முகத்தோடு இருப்பான் ...செம கல்நெஞ்சம் ....லவ் பண்ணலை ..லவ் பண்ணலை என்று சொல்லியே லவர் செய்யும் எல்லா வேலையும் செய்து வைப்பான் ...கேட்டா தத்துபித்துன்னு உளறி வைக்கும் லூசுடீ அவன் ....சரியான குழப்பவாதி ....அவனை போய் பாவம்ன்னு சொல்லாதே ...இந்த ரெண்டு ஓரங்கொட்டான் கிட்டே மாட்டி தவிக்கும் நாந்தேன் பாவமோ பாவம் ."ஆமா அவன் கூட காலேஜில் இருந்த போது தான் நீ விட்ட ஜொள்ளில் காலேஜ் பல வருஷம் தத்தளித்தது என்று கேள்வி பட்டு இருக்கேனே ...இன்னுமா அந்த ஹீரோஒர்ஷிப் நீ விடலை ...பார்த்துடீ அவனுக்கு மேரேஜ் ஆகி ஒட்டுமொத்த ராட்சசிகளின் தலைவி அவனுக்கு மனைவியா வந்து இருக்கா .....அவ லிஸ்டில் என்னை போல் மாட்டிக்காதே செல்லம் .....உன்னோட ஜொல் பேக்டரி மூடி வைமா .... என்றாள் மதுரா கடுப்புடன் .
 
Status
Not open for further replies.
Top