All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அனிதா ராஜ்குமாரின் "என்ன தவம் செய்தேன்" - கதை திரி

Status
Not open for further replies.

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"ட்ரெஸ் செய்ய முடியலை ...எங்கேயோ தலை மறைவாகி இருக்கான் ...அவன் இருக்கும் நிலையில் தனியே அவனால் செயல் பட முடியாது தான் ....யாரோ உதவிட்டு இருக்காங்க ..."என்றான் விஜய் .

"சரி இனி நான் பார்த்துக்கறேன் ....நீ தலை இடாதே ...மதுராவின் காவல் என் பொறுப்பு ..."என்றான் சூர்யா .
ar-murugadoss-plans-to-direct-ram-charan-48329e8d.jpg

"இந்த பிரசங்கத்தை வேறு யாரிடமாவது சொல்லு .....என் கடைசி மூச்சு உள்ள வரை மதுராவை காப்பது என் கடமை .....யார் வந்தாலும் அதை தடுத்து நிறுத்த முடியாது ....மதுராவிற்கான என் காவல் தொடரும் ."என்றான் விஜய் ரௌத்திரமாக .

"ரெண்டு பேரும் உங்க சண்டையை நிறுத்துங்க .....ரெண்டு பேருமே உங்களால் முடிந்த அளவூ காவல் ,பாதுகாப்பு மதுராவிற்கு கொடுங்க ....ஒன்றுக்கு ரெண்டு பாதுகாப்பு வளையம் இருப்பது நல்லது தான் ....இதுக்கு கூட அடிச்சுக்காதீங்க .....உங்க கவனம் இப்போ மதுராவின் பாதுகாப்பின் மேல் தான் இருக்கணும் ....இன்னொரு விஷயம் .....அவன் கையில் கிடைச்சா பாவம் ,புண்ணியம் பார்க்க வேண்டாம் .....அவனோடு யார் இருந்தாலும் அவர்களையும் விட்டு வைக்க வேண்டாம் ....."என்றார் சிவகாமி எஃகு போன்ற குரலில்
"சரி பாட்டி .....ஆனா அந்த ஆள் ....அவரும் சுமனோடு சேர்ந்து தான் இந்த கடத்தல் ,பாலியல் தொழில் ,ஹியூமன் ட்ராபிக் செய்வதாக தெரிகிறது .....எல்லாமே இவரின் பினாமி இடங்கள் ....இன்னும் இவருக்கு கருணை காட்ட வேண்டுமா ?"என்றான் விஜய் .

"சீனா டீல் முடியட்டும் .....விஜய் ....பிறகு முடிவூ எடுக்கலாம் ...."என்றார் சிவகாமி .

"பாட்டி !அந்த டீல் ஜெயிச்சா இவருக்கு பில்லியன் கணக்கான பணம் வந்து விடும் ....இவரை கையில் பிடிக்கவே முடியாது ...இப்போவே நிறைய கடன் வாங்கி தான் இந்த டீல் ஜெயிக்க போராடிட்டு இருக்கார் ...ஐ திங்க் இவரிடம் கொடுக்க பட்டு இருந்த பல பெரிய புள்ளிகளின் கருப்பு பணத்தை இதன் மூலம் வெள்ளையாக்க முயல்கிறார் .....இதில் ஜெயிச்சா அவரை அசைக்கவே முடியாமல் போகும் ...இப்போ தான் இவரிடம் பணம் கொடுத்து இருக்கிறவங்க வருமானம் வராமல் கோபத்தில் இருப்பதாக கேள்வி ...இது தான் சரியான சமயம் ...இப்போ அடிச்சால் நிச்சயம் எழவே மாட்டார் ....."என்றான் சூர்யா .

"அவர் ஜெயிக்க மாட்டார் சூர்யா ....அவரால் இதில் ஜெயிக்கவே முடியாது ....கரெக்ட் செக் மேட் வைத்து இருக்கேன் .....இதில் அவர் தோற்றால் அவரின் மேல் நாம் கை வைக்கவே வேண்டி இருக்காது ....மத்த எல்லாவற்றையும் யாரின் பினாமியாக இருக்கிறாரோ அவர்களே பார்த்துப்பாங்க ....நாம கை வைக்கவே வேண்டி வராது ...."என்றான் விஜய் கண்கள் மின்ன .
29379257006_fd87f450fe.jpg

"சரி கிளம்பறேன் .....ஏதாவது தேவை என்றால் கேட்க தயங்க வேண்டாம் ....உங்க சண்டையில் மதுராவை கோட்டை விட்டு விட போகிறீர்கள் ...கவனம் ....."என்ற சிவகாமி கிளம்ப ,அந்த ஹாஸ்பிடலின் தோட்டத்தில் ராஜியுடன் பேசி கொண்டு இருந்த ருத்ரா சிவகாமி சைகை காட்டியதும் ராஜியுடன் வந்து அவருடன் சேர்ந்து கொண்டான் .
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இவர்கள் பேசியது மட்டும் ராஜீ கேட்டு இருந்தால் மீண்டும் முருங்கை மரம் ஏறி இருப்பாள் ....அதான் பாட்டி முன்னெச்சரிக்கையாக ருத்ராவை ராஜியுடன் கோர்த்து விட்டு ,இவர் மட்டும் சூர்யா விஜயிடம் பேச வந்து இருந்தார் .

தன்னை சுற்றி நடப்பதை பற்றி கவலை படாமல் ,தன் தந்தை சங்கரனை பற்றி யோசித்து கொண்டு இருந்தாள் மதுரா .அடுத்த ரெண்டு மணி நேரத்தில் தலைமை டீன் "அம்மா போய் வா மா "என்று மதுரவையும் அவளின் இரு பாடிகார்ட் இருவரையும் பேக் செய்து விட்டு நிம்மதியாக தன் சேரில் அமர்ந்தார் .

அன்று மாலை எல்லா நியூஸ் சேனல்களிலும் பிளாஷ் நியூஸ் ஓடியது ."பிரபல மருத்துவமனையில் இளம் தொழில் அதிபர்கள் இருவர் தொழிற் பகை காரணமாக மோதல் ."என்று . மதுராவிற்காக அடித்து கொண்டது வெளியே வராமல் தொழிற் பகை என்று வந்தது .

இந்த நியூஸ் பார்த்த காஜா சுமனுக்கு அழைத்தார் ....
images (9).jpg

ஹ்ம்ம்ம் நானும் பார்த்தேன் ......நம்ம வேலை சுலபம் .....சூர்யாவை போட்டு தாளிட்டு பழியை விஜய் மீது போட்டுடலாம் ...யாருக்கும் நம்ம மேல் சந்தேகம் வராது ....அவன் தான் சிவகாமிக்கு ஹெல்ப் செய்யறவன் .....சோனாவை acp கிட்டே மாட்டி விட்டு இருக்கான் ...நம்ம இடங்களில் ரைட் செய்து பெண்களை மீட்டதும் சூர்யா தான் ....அவன் உயிரோடு இருக்க கூடாது ."என்றான் சுமன் .

"கொஞ்ச நாளுக்கு எந்த விவகாரமும் வேண்டாம் ......"என்றார் கஜா

"கண்டவனுக்கு பயந்து எல்லாம் இதை விட முடியாது .....ஏற்கனவே ஒரு ஷிப்மென்ட் மிஸ் ஆகிடுச்சு .....இந்த தடவை பீகார் ,சட்டிஸ்கர் போன்ற பின் தங்கிய மாவட்டங்களில் இருந்து பெண்களை பிடிக்க சொல்லி இருக்கேன் ...இந்த தடவை புதுசா காசு கொடுத்தா திருமணம் என்ற பெயரில் பெண்களை கூட்டி போனால் கூட ஏன் என்று கேட்க அங்கு எல்லாம் நாதி கிடையாது .......ஒரு மொத்த கிராமமே இப்படி தான் பெண்களை கடத்தி வந்து திருமணம் செய்து வைக்கறாங்க நியூஸ் வந்தது . நாம் தான் இதன் பின்னால் இருக்கிறோம் என்று யாருக்குமே தெரியாது ....அங்கு லோக்கல் ஆளை பிடித்து வைத்து இருக்கேன் ....சில பல லட்சம் கொடுத்து விட்டால் அவனே நாம் சொல்லும் இடத்திற்கு பெண்களை அனுப்பி விடுவான் ....எல்லாம் ரெடி .....அடுத்த ஷிப்மென்ட் 200-300 "என்றான் சுமன்

"பீகார் ,சட்டிஸ்கர் ?"என்றார் கஜா

"அங்கே தான் யாருக்கும் விஷயம் தெரியாது ....ஒருத்தனுக்கு 20 மனைவி இருந்தாலும் யாரும் ஏன் என்று கேட்பது இல்லை .....இன்னமும் 18-20 குழந்தைகள் ஒரு பெண் பெறுவது அங்கு எல்லாம் சர்வ சாதாரணம் .....அதில் கூட நமக்கு லாபம் தான் ...இது வரை அப்படி பிறந்த 20 குழந்தைகளை குழந்தைகள் இல்லாத வெளி நாட்டு தம்பதிக்கு விற்று இருக்கிறேன் ......செம பணம் .....இன்னமும் நிறைய குழந்தைகள் வேண்டும் என்று ஆர்டர் வருகிறது ....பொன் முட்டை இடும் வாத்து அறுக்க சொல்கிறாயா ?"என்றான் சுமன் .

"கொஞ்ச நாளைக்கு தான் சுமன் .....போலீஸ் டிபார்ட்மென்ட் கவனம் நம் மேல் தான் இருக்கு .தேவை இல்லாத ரிஸ்க் எடுக்க வேண்டாம் ...."என்றார் கஜா.

அதில் தான் த்ரில்லே இருக்கு .....இத்தனை வருடமாய் செய்து வருகிறேன் ....எவனும் என்னை கண்டு பிடித்தது இல்லை ....இனிமேலும் கண்டு பிடிக்க போவது இல்லை .....நீங்க தேவை படும் போது செய்யும் பண உதவியோடு நிறுத்திக்கோங்கோ ....நீங்க கொடுக்கும் பணம் 10 மடங்காக திரும்பி வந்து விடும் .....அதை தாண்டி இதில் உங்கள் அட்வைஸ் நான் கேட்கவில்லை .....சூர்யாவை போட்டு தள்ளும் பிளான் செய்து விட்டு சொல்றேன் ....ஆட்களை அனுப்பி வையுங்க ....சோத பசங்க வேண்டாம் .....புரிந்ததா ...."என்றான் சுமன் .

"எங்கே இருக்கே ?"என்றார் கஜா .

"அது உங்களுக்கு தேவை இல்லாதது .....என் ஆள் வருவான் .....பணம் கொடுத்து அனுப்புங்க ...."என்றான் சுமன் .

"ஏற்கனவே கொடுத்த பணத்திற்கு இந்த மாதம் வட்டி வரவில்லை சுமன் .....என்னிடம் பணம் கொடுத்து வைத்து இருப்பவர்களுக்கு என்ன பதில் சொல்வேன் ?"என்றார் கஜா .

"உன் புத்தியை காட்டாதே கஜா ......பெண்களை விற்று இருந்தால் இந்நேரம் பணம் வந்து இருக்கும் ...அதான் இந்த முறை முடியாமல் போச்சே .....எத்தனையோ தடவை வாங்கிய பணத்திற்கு பல மடங்கு திருப்பி கொடுத்து இருக்கேன் .....அதற்கு எல்லாம் கணக்கு கேட்கவா .....வாங்கி உள்ளே விட்டுக்க முடியுது இல்லை .....என்னை பகைச்சுக்காதே கஜா .......நான் ரொம்ப மோசம் ஆனவன் .....தொழிற் பார்ட்னர் என்றால் வரவில் மட்டும் அல்ல ,இது போன்ற லாஸ் கூட சமமாய் தான் ஏற்று கொள்ள வேண்டும் .....என்னை சீண்டி பார்க்காதே .....கொல்லவும் தயங்க மாட்டேன் ."என்றான் சுமன் .
864.png

முகம் வெளுத்து போனவராய் அழைப்பை துண்டித்தார் கஜா .

PENANCE WILL CONTINUE....
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
THAVAM 31(3)

அன்று மாலை ஹோட்டல் "ப்ளூ டைமென்ட் " executive அறையில் சூர்யாவின் வரவுக்காக காத்து இருந்தார் சங்கரன் .புதிய வேலை மாற்றம் ,கிடைத்து இருந்த பதவி உயர்வூ அவருக்கு தனி சோபையை கொடுத்து இருந்தது .தவிர சூர்யாவின் ஆட்கள் அவருக்கு கொடுத்த மரியாதையை கண்டு நெக்குருகி போனார் .பாவம் அது அவர் மகளுக்கான மரியாதை ,மகளை கவிழ்க்க மாமனாருக்கு வீச படும் வலை என்று யார் அவருக்கு சொல்வது ????நெல்லுக்கு பாயும் தண்ணீர் கொஞ்சம் புல்லுக்கும் பாய்கிறது .....அது தெரியாத அவர் ஒருவித கர்வமான மனநிலையில் தான் காத்து இருந்தார் .
இருக்காதா பின்னே ...தன் மகனின் பண்பு ,தங்களின் குடும்பத்தை பார்த்து ஒரு ராஜ வம்ச சம்பந்தம் வருகிறது என்பதே பெருமை தானே ....
அவரை வெகு நேரம் காக்க வைக்காமல் வந்து சேர்ந்தான் சூர்யா .அது வரை அவனை போட்டோவிலும் ,டிவி பேட்டிகளிலும் மட்டுமே பார்த்து பரவச பட்டு கொண்டு இருந்த சங்கரன் ,சூர்யாவை நேரில் கண்டதும் கடவுளை கண்ட பக்தன் கணக்காய் சங்கரன் பாவனை காட்ட சூர்யாவே ஒரு கணம் ஜெர்க் ஆகி தான் போனான் .

70708751.jpg

சந்தன நிற tuxedoவில் ஆண் அழகனாய் வந்து இறங்கியவனை அந்த ஹோட்டல்லில் இருந்த அனைத்து பெண்களின் கண்களும் மொய்த்தன என்றால் மிகையல்ல ....வயது வித்தியாசம் பாராமல் ஒரு சிலரால் தான் அனைவரின் பார்வையையும் தங்கள் மேல் திருப்ப முடியும் .....அப்படி ஒரு ஆகர்சனம் அவர்களிடம் இருக்கும் .அந்த வகையை சார்ந்தவர்கள் சூர்யாவும் விஜய்யும் .

"ஹலோ சார் ."என்று சூர்யா கை நீட்ட பாட்ஷா படத்தில் ரஜினியின் கையை பயபக்தியுடன் பிடிப்பார்களே அந்த மாதிரி ஒரு ரியாக்ஷன் அவர் முகத்தில் நிலவியது .

"ஹலோ ...சார் ...ஹலோ ...ஹலோ ."என்றார் சங்கரன் வாயில் தந்தி அடித்து .

"உங்களுக்கு ஆபீஸ் ,இங்கே தங்கி இருக்கும் ஹோட்டல் அறை ,அல்லோட் செய்து இருக்கும் வீடு எல்லாம் வசதியாக இருக்கா .....ஏதாவது குறை என்றால் சொல்லுங்க ...உடனே நிவர்த்தி செய்து விடலாம் ."என்றான் சூர்யா

"ஐயோ சார் .....இதுவே ரொம்ப அதிகம் சார் ....தவிர உங்க ஏற்பாட்டில் குறை ஏதாவது இருக்குமா என்ன ....?"என்றார் சங்கரன் .

"ப்ளீஸ் மிஸ்டர் சங்கரன் ...உங்களை விட வயதில் சின்னவன் ...உங்க மகன் மாதிரி ...என்னை போய் சார் என்று எல்லாம் கூப்பிட வேண்டாம் ....பெயர் சொல்லியே கூப்பிடுங்க ...."என்றான் சூர்யா .

"ஐயோ சார் நீங்க எவ்வளவூ பெரிய பிக் ஷாட் ...உங்களை போய் ...."என்று திணறினர் சங்கரன் .

"சிவகாமி பாட்டி உங்க கிட்டே பேசி இருப்பாங்க....உறவூ ஆக போறோம் ...இன்னும் என்ன போர்மாலிட்டீஸ் அங்கிள் ....ப்ளீஸ் ஜஸ்ட் கால் மீ சூர்யா ....ப்ளீஸ் டேக் யுவர் சீட் ."என்றவன் அவர்கள் அமர்ந்ததும் ,"வாட் டூ யு லைக் டு ஹவ் அங்கிள் ?ஹாட் ஆர் கோல்டு ?"என்றான்

"mushroom சூப் இஸ் குட் ."என்றார் சங்கரன் .

சூர்யா சைகை காட்கட அவர்களுக்குகாவே காத்து நின்ற அந்த ஹோட்டலின் செஃப் சூப் செய்து கொண்டு வர சென்றான் .

"தம்பி !...உங்களை அப்படி கூப்பிடலாம் தானே ...."என்றார் சங்கரன் .

"சூர் அங்கிள் ...ஆஸ் யு விஷ் ."என்றான் சூர்யா

"தம்பி!...உங்க ஸ்டேட்டஸ் க்கு பெரிய இடத்தில இருந்து எல்லாம் சம்பந்தம் வந்து இருக்கும் ....நாங்க அப்பர் மிடில் கிளாஸ் அவ்வளவூ தான் ...உங்க வசதிக்கு .....உங்க தங்கையை இளவரசி மாதிரி வளர்த்து இருப்பீங்க ....அந்த அளவூ வசதி எல்லாம் எங்களால் கொடுக்க முடியாது ....இல்லை நான் பேசிடுறேன் .....நீங்க எல்லா வசதி செய்து தருவீங்க என்று எதிர் பார்ப்பது ,இல்லை செய்து கொடுங்க என்று கேட்பது ரெண்டுமே சரி வராது .....நீங்க எதற்கும் ஒன்றுக்கு பல முறை யோசிச்சுக்கோங்கோ ....அதனால் தான் இன்னும் என் வீட்டினரிடம் கூட இதை பற்றி எதையும் சொல்லமால் இருக்கிறேன் .....திருமணத்திற்கு பிறகு வீட்டோடு மாப்பிளை ,தனி குடித்தனம் இது எல்லாம் எங்களுக்கு பழக்கம் இல்லை ....தவிர எனக்கு ஒரு மகளும் இருக்கா ...அவளுக்கு திருமணம் அண்ணனாய் செய்து வைத்து ,என் காலத்திற்கு பிறகு தட்டாமல் அவளுக்கு சீர் செய்யும் கடமையும் ரகுவிற்கு இருக்கு .....பெரியவங்க சொல்வாங்க பெற்றோருக்கு போடும் சாப்பாட்டுக்கும் ,கூட பிறந்தவளுக்கு செய்யும் சீருக்கும் ஒருத்தன் கணக்கு பார்க்க கூடாது ....அப்படி பார்த்தால் அவன் ஏழு தலைமுறை பாவத்தை தான் சுமக்கும் என்று ...இதில் எல்லாவற்றிலும் தோள் கொடுக்கும் ஒரு துணை தான் எங்கள் குடும்பத்திற்கு வேண்டும் .....என் மகளின் கடைசி மூச்சு இருக்கும் வரை ,நானே இல்லாமல் போனாலும் அவளை தாங்கும் கடமை கூட பிறந்தவனாய் ரகுவிற்கு உண்டு ....இதற்கு எல்லாம் உங்க தங்கை சரி வருவார்களா ....யோசித்து சொல்லுங்க ....பிறகு மன பொருத்தம் இல்லா விட்டால் வாழ்க்கை நரகமாக கூடாது இல்லையா ?"என்றார் சங்கரன் .

அவரை தான் குறைவாக எடை போட்டு விட்டோம் என்று புரிந்து போனது சூர்யாவிற்கு ....எந்த ஒரு மனிதனின் குணத்தையும் அந்த அந்த சூழ்நிலையே வெளி கொண்டு வருகிறது.உங்கள் தங்கைக்கும் குறை இருக்க கூடாது ,எங்களுக்கும் உங்கள் தன்கையால் மனவருத்தம் வர கூடாது என்று மிக தெளிவாக கோடிட்டு காட்டி விட்ட சங்கரனின் மேல் அவனுக்கு மதிப்பு வரவே செய்தது .

"அங்கிள் !....சிவகாமி பாட்டி எங்க வீட்டின் பெரியவங்க ....அவங்க உங்களை பற்றியும் ,எங்களை பற்றியும் தெரியாமல் சம்பந்தம் பேசி இருக்க மாட்டார் ....தவிர எங்களை வளர்த்தது பாட்டி தான் ....ரெண்டு குடும்பமும் ரொம்ப க்ளோஸ் .....அவங்க முடிவூ செய்யும் எதுவும் எங்க விஷயத்தில் என்றுமே தவறாய் போனது இல்லை .....ரகுவிற்கு சந்திரா சரியான இணை என்று அவர் சொல்லி இருக்கிறார் என்றால் உங்களின் எதிர்பார்ப்பு தெரியாமல் சொல்லி இருக்க மாட்டார் ....நீங்க எதிர் பார்த்த படியே தான் சந்திரா நடந்துப்பா ....உங்க மருமகளாய் இல்லை ...மகளாய் ....."என்றான் சூர்யா .

"ரொம்ப சந்தோசம் தம்பி ...சிவகாமி மேடம் முடிவூ செய்தால் அது சரியாக தான் இருக்கும் ......இருந்தாலும் நானும் சொல்லி விடுவது என் கடமை இல்லையா ....அதான் ...நீங்க தவறாக எடுத்து கொள்ள வேண்டாம் .....உங்க வீட்டு பெரியவங்க வரலையா ...."என்றார் சங்கரன் .
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வந்த சூப் ஒன்றை அவருக்கு நகர்த்தி வைத்தவன் ,"சாரி அங்கிள் ....லாஸ்ட் மந்த் டாடி ,மாம் வேர்ல்ட் டூர் போய் இருந்தாங்க ....அமெரிக்காவில் திடீர் என்று டாடிக்கு மைல்டு ஹார்ட் அட்டாக் வந்துடுச்சு .....சின்ன இதய வால்வு ப்ளாகஜ் இருக்கு ....2 வீக்ஸ் முன்னாடி தான் அபேரட் செய்தாங்க அங்கேயே .....ஹி இஸ் இன் பெட் ரெஸ்ட் .....கொஞ்சம் காம்ப்ளிகேஷன்ஸ் இருக்கு ...சோ பெட் விட்டு கூட அவர் நகர மாம் அங்கு அல்லோவ் செய்யறது இல்லை ....அவங்க கிட்டே விஷயம் பாட்டி சொல்லிட்டாங்க ....தே ஆர் ஹாப்பி ....வீடியோ கால்லில் உங்க கிட்டே பேசணும் என்று வெயிட் செய்துட்டு இருகாங்க .....பேசறீங்களா ....?"என்றான் சூர்யா .

"ஐயோ தம்பி ...என்ன நீங்க என் கிட்டே பெர்மிஸ்ஸின் எல்லாம் கேட்டுட்டு ...."என்றவர் சூர்யா தன் அன்னை ஸ்ரீ லட்சுமி ,தந்தை ஆதித்யா பிரதாப் வீடியோ கால் அழைத்தான் .

இருவரிடமும் பேசிய சங்கரனுக்கு கொஞ்சம் ,நஞ்சம் இருந்த தயக்கமும் அகன்று விட ,மனம் நிறைந்து இருந்தார் .பணக்காரர்கள் ,ராஜவம்சம் என்ற பந்தா எதுவும் இல்லாமல் பழகிய சூர்யாவின் பெற்றோர் அவருக்கு உடனே நண்பர்கள் ஆகி விட்டார்கள் .

"அண்ணா !....இவங்களுக்கு உடம்பு கொஞ்சம் முடியலை .....இப்போதைக்கு இவங்க அங்கே வர முடியாது ....நீங்க எல்லாம் எடுத்து செய்யுங்க ...நல்ல நாள் பார்த்து சொல்லுங்க ....அப்போ நான் மட்டும் வந்து நிச்சயம் முடிச்சுடறேன் .....இவர் உடல் கொஞ்சம் தேறிய பிறகு திருமணம் பற்றி யோசிக்கலாம் ...உங்களுக்கு எதுவும் மனவருத்தம் இல்லை தானே அண்ணா ?"என்ற லட்சுமியின் வார்த்தையில் அந்த அண்ணன் உருகி போனார் .

"மாப்பிள்ளை உடல் தேரட்டும் தங்கச்சி .....ரகுவிற்கு தங்கை ஒருத்தி இருக்கா ...தங்கையை வீட்டில் வச்சிட்டு அண்ணனுக்கு திருமணம் செய்தால் ஊர் உலகத்தில் ஏதாவது சொல்வாங்க மா ....மாப்பிள்ளை உடல் தேறும் முன் என் மகளின் திருமணத்திற்கு ஏற்பாடு செய்கிறேன் .....அதே மேடையில் நிச்சயம் வைத்து கொள்வோம் ....பிறகு உங்களுக்கு தோது படும் நாளில் திருமணம் நடத்தி கொள்ளலாம் .."என்றார் சங்கரன் .
ரு வீட்டாரின் மன நிறைவாக திருமண பேச்சு நிறைவேற ,"ரொம்ப சந்தோசம் அங்கிள்....இந்த சந்தோசத்தை கொண்டாட நைட் டின்னெர் என் ட்ரீட் ....ரெஸ்டாரண்ட் போகலாமா .....வாங்க அங்கிள் ."என்றவன் அவரோடு அந்த ஹோட்டல்லின் ரெஸ்டாரண்டுக்கு அழைத்து சென்றான் .

அவனுக்கு ஒரு மொபைல் அழைப்பு வர ,"எக்சிகியூஸ் மீ அங்கிள் ...."என்று கூறி அழைப்பை பேச சென்றான் .

அவன் சென்ற சில நிமிடங்களில் சங்கரனை நோக்கி வந்தனர் இருவர் .அவர்களை கண்ட சங்கரன் மிகவும் சந்தோசத்துடன் அவர்களை வரவேற்றார் .சிறு வயதில் அவர் கிராமத்தில் சங்கரன் வீட்டின் அருகே வசித்தவர் டேனியல்.

"ஹலோ அண்ணா ....பார்த்து பல வருஷம் ஆச்சு ....எப்போ அமெரிக்காவில் இருந்து வந்தீங்க ....?"என்றார் வந்த நபரை பார்த்து .
hit_list_tamil_movie_stills_1e58a58.jpg

"ஹை சங்கர் ...ஹொவ் ஆர் யு மேன் ....லாங் டைம் நோ சீ ....கடைசியா பார்க்கும் போது காலேஜ் படிச்சுட்டு இருந்தே இப்போ என்ன தலையில் இவ்வளவூ பிளாட் வாங்கி வச்சு தொப்பையும் தொந்தியுமா இருக்கே ..."என்றார் அவர் --டேனியல் .

"வயசு ஆகுது இல்ல அண்ணா ...அதான் .....எப்படி இருக்கீங்க அண்ணி ..."என்றார் சங்கரன் டேனியல் மனைவி ஜென்னியை பார்த்து .

"நல்லா இருக்கேன் தம்பி ....நீங்க எப்படி இருக்கீங்க ....வீட்டில் எல்லோரும் நலமா ..."என்றார் ஜென்னி

"எல்லோரும் நலம் அண்ணி ....நீங்க ரெண்டு அமெரிக்காவில் செட்டில் ஆகிட்டதாக சொன்னாங்களே ....இங்கே வந்துடீங்களா என்ன ?"என்றார் சங்கரன் .

"இல்லை இல்லை ...அமெரிக்காவில் செட்டில் ஆகிட்டோம் ...அந்த லைப் ஸ்டைல் பழகி போச்சு ....மகனும் மருமகளும் தான் இங்கேயே இருகாங்க .....வருஷத்திற்கு ஒரு தடவை வந்து பார்ப்போம் ....இதோ வந்துட்டாங்க ..."என்றவர் தன் மகன் கிறிஸ்டோபர் ,மருமகள் லீலாவை அறிமுகம் செய்து வைத்தனர் .

அறிமுகம் முடிந்ததும் உணவூ ஆர்டர் செய்து விட்டு ,அவர்கள் பேசி கொண்டு இருந்த சமயம் ,"ஆன்ட்டி லெட்ஸ் கோ நொவ் ."என்றார் லீலா சட்டென்று .

"என்ன லீலா ....டடின்னெர் ஆர்டர் செய்தாகி விட்டது ...என்ன ஏதாவது டெலிவெரி கேஸ் என்று ஹாஸ்பிடலில் இருந்து போன் வந்ததா என்ன ?எதற்கு இந்த hurry அண்ட் பர்ரி ?"என்றார் ஜென்னி .

எதையும் பேசாத லீலா கண் ஜாடை காட்ட ,அவர் குறிப்பிட்ட திசையில் பார்த்த ஜென்னி ரௌத்திரமானார் ."லெட்ஸ் கோ ....இந்த சாத்தான் இங்கே இருக்குன்னு தெரிஞ்சு இருந்தா வேறு ஏதாவது ரெஸ்டாரண்ட் சென்று இருக்கலாம் ....லெட்ஸ் மூவ் ."என்றவரின் பேச்சுக்கு மற்ற மூவரும் கட்டு பட்டு கிளம்பினார்கள் .

"என்ன அண்ணா ...என்ன ஆச்சு ?"என்று ஒன்றும் புரியாதவராய் பதறினார் சங்கரன் .
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அறை மணி நேரம் கழித்து மதுரா சுபாவோடு தங்கி இருந்த வீட்டின் காலிங் பெல் விடாமல் அடிக்க ஆரம்பித்தது .சென்னையில் நல்ல மழை பெய்து கொண்டு இருக்க ,இரவு குளிருக்கு அனைவரும் இழுத்து பொத்தி கொண்டு தூங்கி கொண்டு இருந்தவர்களின் தூக்கத்தை கலைத்தது அந்த அழைப்பு சத்தம் .என்னவோ ஏதோ என்று பதறிஅனைவரும் ஹாலில் குழும , கையில் கட்டையோடு ,எச்சரிக்கையாக கதவை திறந்தான் பாலாஜி .

கதவை திறந்தவன் அதிர்ந்து போனவனாய் ரெண்டு எட்டு பின் வைத்து நகர்ந்தான் வெளியே மழையில் நனைந்து சொட்ட சொட்ட நின்று இருந்த சங்கரனை கண்ட பிறகு .கண்கள் சிவந்து கிடக்க ,இலக்கற்று வெறித்து கொண்டு நின்றார் அவர் .

"அங்கிள் என்ன ஆச்சு ...ஆன்ட்டி கொஞ்சம் இங்கே வந்து பாருங்க ...அங்கிள் ஒரு மாதிரி நிற்கிறார் ."என்றான் பாலாஜி பவானியை நோக்கி .

முன் வந்த அனைவரும் சங்கரன் இருக்கும் நிலையை கண்டு ஒரு நொடி ஆடி தான் போனார்கள் .

"என்னங்க ...என்ன ஆச்சு .....ஏங்க ..இங்கே பாருங்க ..."என்று அவர் கன்னத்தை தட்டி அவரின் கவனத்தை தன் புறம் திருப்பினார் பவானி .

"பவானி !"என்றார் கிணற்றுக்குள் இருந்து பேசுபவர் போல் .

"பவானி தாங்க ...என்ன ஆச்சு உங்களுக்கு ....உள்ளே வாங்க ....டிரஸ் எல்லாம் நனைச்சு போய் இருக்கு ....உடம்புக்கு ஏதாவ்து வந்துட போகுது ....முதலில் வந்து டிரஸ் மாத்துங்க ....ரகு ஹீட்டர் போட்டு விடுடா ...சூடா குளிச்சுட்டு வரட்டும் ...மதுரா போய் ஹார்லிக்ஸ் கலக்கு ."என்றவர் கணவனுக்கு டடிரஸ் எடுத்து வைக்க உள்ளே போக முயன்றார் .

அவர் கையை பிடித்து நிறுத்திய சங்கரன் ,சற்று நேரம் அவரையே உற்று பார்த்து கண் கலங்க ஆரம்பித்தவர் ,பவானியின் மேல் சாய்ந்து கதறி அழ ஆரம்பித்தார் .

"மன்னிச்சுடு பவானி ...மன்னிச்சுடு ...நான் பாவி ....மகா பாவி ...ஐயோ உன்னை நம்பாமல் போனேனே ....நான் பாவி ......மன்னிச்சுடு ....என் ஆணவத்தால் கெட்டேன் ...."என்று உச்சஸ்தாயில் அலறியவரை கண்டு மற்றவர்கள் எதுவும் புரியாமல் குழம்பி நின்றனர் .

"என்னங்க ...என்ன ஆச்சு ...எதற்கு மன்னிப்பு அது இதுன்னு பெரிய வார்த்தை எல்லாம் பேசுறீங்க ...என்ன நடந்தது ?"என்றார் பவானி .

"அய்யோஓஒ ..நான் பாவி ...எனக்கு மன்னிப்பே கிடையாது ...என்னை மன்னிச்சுடு பவானி ..."என்று கிளி பிள்ளையாக சொன்னதையே சொல்லி புலம்பி ,அழுதார் அவர் .

maxresdefault (6).jpg
அவரை சமாதானம் செய்ய முயன்ற பவானியின் எல்லா முயற்சிகளும் தோற்று போக ,சிறு பிள்ளையாய் கதறி அழும் கணவனை அணைத்து தட்டி கொடுத்தவாறே நின்றார் .

பதினைந்து நிமிடங்களுக்கு பின் அவர் புலம்பல் நிற்க ,மதுரா கொண்டு வந்து கொடுத்த ஹார்லிக்ஸ் கணவனுக்கு புகட்டி விட்டார் பவானி .சூடான பால் உள்ளே இறங்கியதும் சற்று தெம்பு பெற்றவர் ,மீண்டும் பவானியை பார்த்து கண் கலங்கி ,"என்னை மன்னிச்சுடு பவானி ."என்றார் .

"என்னங்க ஆச்சு ....ஏன் இப்படி எல்லாம் பேசுறீங்க ...?"என்றார் பவானி

"ஒரு பாரில் எனக்கு ஞானோதயம் ஏற்பட்டது பவானி அதான் ..."என்றவர் ,"டேனியல் அண்ணா பற்றி சொல்லி இருக்கேன் தானே ...என் கிராமத்து வீட்டுக்கு பக்கத்தில் இருந்த அண்ணா ....அவரையும் அவர் குடும்பத்தையும் இன்றைக்கு ஹோட்டலில் பார்த்தேன் ...என்னோடு சாப்பிட அமர்ந்து ஆர்டர் கொடுத்தவங்க ,சாப்பிடாமலே கிளம்பிட்டாங்க "என்றார்

"ஏன் என்ன ஆச்சு ?"என்றார் பவானி .

"அது பார் அட்டாச்சுடு ரெஸ்டாரண்ட் ...அங்கு ஏதோ ஒரு பர்த்டே பார்ட்டி நடந்து கொண்டு இருந்தது ....அந்த பபார்ட்டியில் ஒரு பெண்ணை பார்த்து இவர்கள் கிளம்பிட்டாங்க ....அறை குறை ஆடையுடன் ,பார் டேபிள் மேல் ஏறி நின்று ஆடி கொண்டு இருந்தது.ட்ரிங்க்ஸ் ,சிகரெட் ,போதை மருந்து என்று எல்லாமே இருந்தது ..ஒழுக்கம் என்பது என்ன என்று கேட்பது போலெ இருந்தது அந்த கூட்டத்தின் நடவடிக்கை ...."என்றவரின் கண் முன் நடந்தது மீண்டும் ஓட ஆரம்பித்தது .

"சாரி சங்கர் ....அதோ அந்த பார்ட்டியில் பார் டேபிள் மீது ஆடும் பெண்ணுக்கும் எங்களுக்கும் ஆகாது ....அதான் ....நாங்க கிளம்பறோம் ..."என்றார் டேனியல் ஒரு பெண்ணை கை காட்டி .

அவர் கை காட்டிய இடத்தில் அரைகுறை ஆடையுடன் கையில் மது கோப்பையுடன் ஆடி கொண்டு இருந்தது யாரை அவர் மூத்த மகள் என்று தலை மேல் தூக்கி வைத்து கொண்டாடினாரோ அதே சோனா தான் .

SANKARAN இங்கு பவானியிடம் விளக்கி கொண்டு இருக்க ,மொபைலில் சூர்யாவை அழைத்த மதுரா அவனை குதறி எடுத்தாள் .

"எருமை ....எருமை ...நான் என்ன சொன்னேன் ...நீ என்ன செய்து வைத்தே ...மூளையை சேட்டு கடையில் அடகு வைத்து இருக்கியா என்ன ????....எப்பவுமே என் டாடி அழுதது இல்லை .....இன்றைக்கு சின்ன பிள்ளை போல் அழுதுட்டு இருக்கார் ...என்ன பிரபு குட்டி செய்தே ..."என்றாள் மதுரா .
Hamsa-Nandini-Stills-At-Bengal-Tiger-Audio-Launch-12.jpg

"சத்தியமா சொல்றேன் நடந்ததற்க்கும் எனக்கும் எதுவும் சம்பந்தம் இல்லை ...நீ சொன்னது போல் தான் கடற்கரையில் எல்லாம் ரெடி யா இருந்தது ....சோனாவும் அவ கூட்டத்தோடு அங்கு வருவான்னு தான் உத்தம் அங்கு ரெடி யா நின்றான் ...உன் டாடி தலைவிதி ...நான் இந்த பக்கம் போன் பேச சென்ற சமயம் யாரோ டேனியல் ,உன் டாடி அண்ணா என்று அழைத்து உறவூ கொண்டாடிட்டு பேசிட்டு இருந்தார் .அது மட்டும் இல்லாமல் கடற்கரைக்கு போக வேண்டிய சோனா ,என் ஹோட்டலில் யாருக்கோ பர்த்டே பார்ட்டின்னு வந்து செம கூத்து அடிச்சுட்டு இருந்தா ....அதை அந்த டேனியல் குடும்பம் பார்த்துட்டு ,உங்க டாட்டிக்கும் அவளை பற்றி புட்டு புட்டு வைத்துட்டாங்க ....அவங்க அண்ணன் மகனை எப்படி காதலிப்பதாக ஏமாற்றி ,அவனுக்கு போதை மருந்து பழக்க படுத்தி கடைசியில் அவன் suicide செய்து கொண்டதையும் ,6 மாதம் ஏதோ ஒரு காரணத்திற்காக அமெரிக்கா ஜெயிலில் இவள் இருந்ததற்கான ஆதாரத்தையும் ,சில பல போட்டோ ,இவள் கூத்து அடிக்கும் வீடியோ ,எத்தனை முறை abortion செய்து இருக்க என்று ஹார்பிக் போட்டு கழுவாத குறை ....இதற்கே உன் டாடி நெஞ்சை பிடிச்சுட்டு பேய் அறைந்தது போல் அமர்ந்து இருந்தார் .ஆனால் அடுத்து நடந்தது தான் ஹைலைட் ."என்றான் சூர்யா

"என்னடா நடந்தது ...திரில்லர் கதையை பாதியில் விடுவது போல் நிறுத்தாததே ...சொல்லி தொலை ..."என்றாள் மதுரா .

"அப்போ மாமனை கட்டிக்கறேன் என்று சொல்லு ...."என்றான் சூர்யா .

"எனக்கு மாமனே இல்லை .....இருக்கும் ஒரே மாமன் ருத்ரா அவனையும் ராஜி கரெக்ட் செய்துட்டா ....நோ லக் ...."என்றாள் மதுரா .

"நான் இந்த மாமன் ...உன் சொந்த மாமன் ,இந்த அத்தானை சொன்னேன் டீ சிட்டு ."என்றான் சூர்யா .

"அத்தான் ...சட்டை பொத்தான் என்று விளையாடாதே பிரபு ....என்ன ஆச்சு என் டாடிக்கு ?"என்றாள் மதுரா .

"ஹ்ம்ம் உன் அக்காக்காரி இருக்காளே ....அரை குறை ஆடையுடன் அடியவாறே உன் அப்பா மடியில் வந்து விழுந்தா ...அதில் இருந்து தெளியவே உங்க அப்பாவுக்கு எவ்வளவூ நாள் ஆகுமோ தெரியலை ....விழுந்ததும் இல்லாம ,அவரை கொஞ்சி வேறு வைத்தாள் ."டார்லிங் ....யு லுக் சோ செக்ஸி .....என் கூட டேட் வரியா ....ஐ வில் ஷோ யு ஹெவன் ....."என்று வேறு கூறி வைத்து ஹக் வேறு செய்தாள் .....சரி நாம பிளான் போட்டது தான் நடக்கலை ...கடவுள் அவராகவே பிளான் போட்டு நடத்தறார் எதுக்கு இன்வோல்வ் ஆகி தடுத்து நிறுத்தணும் என்று நானும் எதையும் செய்யலை ..மனுஷன் வெலவெலத்து போனார் ..அங்கேயே நாலு முறை வாமிட் வேறு எடுத்துட்டார் .....இப்போ உன் டாடி ஆல் கிளீயர் .....பிடித்து இருந்த சோனா என்னும் பேய் உங்க டாடியை விட்டுடுச்சு ...இனி மேலாவது உங்க வீட்டில் மதுரை ஆட்சி மலரும் என்று நினைக்கிறன் .... "என்றான் சூர்யா .


"தேங்க்ஸ் டா பிரபு குட்டி ...ஐம் சோ ஹாப்பி ....."என்றவள் அழைப்பை துண்டித்து விட்டு ஹாலுக்கு வர அதற்குள் சங்கரன் அனைத்தையும் கூறி முடித்து மீண்டும் அடுத்த கட்ட அழுகையை தொடங்கி இருந்தார் .

அவரை சமாதானம் செய்து ,மீண்டும் ஒரு கிளாஸ் பால் கொடுத்து தூங்க வைத்தனர் .அதில் இந்த முறை ரெண்டு தூக்க மாத்திரையை கலந்து இருந்தாள் மதுரா .இல்லை என்றால் இரவூ முழுவதும் இவர் செய்யும் அளப்பறையை யார் தாங்குவது ?மிக பெரிய அதிர்ச்சியில் இருக்கும் அவருக்கும் உறக்கம் என்பது இப்போதைக்கு தேவை .

PENANCE WILL CONTINUE....
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
THAVAM 31(3)

அடுத்த ரெண்டு நாட்களுக்கு மழை தமிழ்நாட்டை உலுக்கி எடுத்து கொண்டு இருக்க ,இவர்கள் வாழ்வில் குறிப்பிடும் படியாக எந்த நிகழ்வும் ஏற்படவில்லை .மழையை ரசித்து கொண்டு ,பவானி செய்து தரும் சூடான பலகாரங்களை உள்ளே தள்ளி கொண்டு இருந்ததையும் ,சூடாக டீ ,காபி அருந்துவதையும் ,விட்டு போன படங்களை பார்ப்பதுமாக மதுரா அண்ட் கோ லூட்டி அடித்து கொண்டு இருந்தது .

சங்கரன் தன் இயல்பு நிலைக்கு திரும்பி இருந்தார் .மதுராவை பாதுகாக்க விஜய் ,சூர்யா,மற்றவர்களும் செய்து உள்ள ஏற்பட்டுகளை பற்றியும் ,அதற்கு காரணமான சோனா ,சுமன் பற்றி தகவல்கள் அவரிடம் பவானி பக்குவமாக கூறினார் .ஒரு நாள் முழுவதும் மதுராவிடமும் ,பவானியிடமும் மன்னிப்பு கேட்டே வாட்டி எடுத்து விட்டார் சங்கரன் .

அவரும் சிவகாமி ,சூர்யாவிடம் ரகு பற்றிய திருமண விஷயம் தான் பேசியதாகவும் ,பவானி ரகு ,மதுராவுக்கு பிடித்து இருந்தால் மட்டுமே மேற்கொண்டு அவர்களிடம் திருமணம் பற்றி பேசுவதாகவும் கூறி அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார் .இனிமேல் இவர்களை கேட்காமல் எந்த முடிவும் எடுக்க போவதில்லை என்று சத்ய ப்ரமாணமே செய்து விட்டார் .

"மம்மி !.....டாடி இப்படி திருந்தி விட்டதால் தான் மழை இப்படி கொட்டோ கொட்டுன்னு கொட்டி தீர்க்குதோ ????"என்று பவானியை சீண்டி அவரின் பிரஷர் ஏற்றி கொண்டு இருந்தாள் மதுரா .ஏதோ அவளால் முடிந்தது .சாப்பிடும் சாப்பாடு ஜீரணம் ஆக வேண்டும் இல்லையா ?

இதற்கு நடுவில் மதுராவை கடுப்பு ஏற்றும் சில விஷயங்களும் நடந்தன என்றால் மிகையல்ல ....வேறு யார் ....அவளின் ரெண்டு பிரின்ஸ் சார்மிங்ஸ் தான் காரணம் .சுபாவோடு அவள் தங்கி இருக்கும் வீட்டின் பெயர் -"பிருந்தாவனம் ".அதன் அருகில் இருந்த மளிகை சாமான் கடைக்கு சென்றாள் .அவளுக்கு பிடித்த மழை .இளையராஜா மியூசிக் என்று கடையினுள் நுழைந்தாள் .கடை அண்ணாச்சி இவளின் நண்பர் .எங்கே சென்றாலும் நட்பை பெற்று ,அவர்களின் வீட்டில் ஒருத்தியாய் ஆகி விடுவது தான் இவளின் பழக்கம் ஆச்சே.

வழக்கமாக அண்ணாச்சியின் வாயை கிளறி ஊர் கதை ,உலக கதை கேட்டு விடுவாள் ....அன்று அவள் மட்டும் பேசி கொண்டு இருக்க ,அண்ணாச்சி பேந்த பேந்த முழித்து கொண்டு இருந்தார் .

"அண்ணாச்சி ....வாட் ஆச்சி ????வீட்டுல பூரி கட்டை பேசுச்சோ ...இம்புட்டு முழி முழிக்கறீங்க ..."என்றாள் மதுரா .

பதில் சொல்லாத அவர் அவளின் பின்னால் பார்க்க ,'நம்ம கேள்வி கேட்டால் இவர் என்ன பின்னால் லுக் விட்டுட்டு இருக்கார் ....சைட் அடிக்கறாரோ .....மாட்டி விட்டுடா போச்சு .....அண்ணாசி வீட்டில் இன்னைக்கு குழம்புக்கு பதில் இவரை போட்டு ஆன்ட்டி கொதிக்க வைக்க போறாங்க ...'என்று எண்ணியவாறே திரும்பினாள் .

அண்ணாச்சி அங்கே லுக் விட்டு கொண்டு இருந்தது கடைக்கு வந்த ஆன்ட்டிகளை பார்த்து இல்லை அவளுக்கு பின்னால் நின்று கொண்டு இருந்த இரு bodyguards பார்த்து .அந்த guards வேறு யாரும் அல்ல ...நம்ம ஆல்வினும் ,உத்தமும் தான் .full body guard கெட் up .கருப்பு கோட் சூட் ,கண்களுக்கு குலெர்ஸ் ,காதில் ப்ளூடூத் ஹெட்செட் என்று ஏதோ ஹாலிவுட் பட ரேஞ்சுக்கு நின்றவர்களை கண்டு மதுராவே ஒரு கணம் அலண்டு தான் போனாள்.

depositphotos_174779152-stock-photo-two-bodyguards-waiting-businessman-standing.jpg

கையில் AK 47 மட்டும் இல்லாதது ஒன்று தான் குறை .ஒரு புறம் சரிந்து பார்த்தவள் அவர்களின் கோட் உள்புறம் பிஸ்டல் இருப்பதை கண்டு கொண்டவளின் BP எக்கச்சக்கமாக ஏற ஆரம்பித்தது .

kareena-honours-bollywood-bodyguards-08.jpg

"ஏம்மா ...ஏதாவது கட்சி தொடங்கிட்டியா ...இல்லை யார் கிட்டேயாவது வாயை கொடுத்து மாட்டிகிட்டேயா ...பாதுகாப்பு எல்லாம் பலபடுது ???"என்று கேட்டு வைத்தார் ....அவருக்கு இவள் ஆப்பு வைக்க முயன்றால் ,சூர்யாவும் ,விஜயும் சேர்ந்து இவளுக்கு ஆப்பு அடித்து இருந்தனர் ....

நல்ல வேளை மழை காரணமாக அந்த கடையில் ரெண்டு ,மூன்று வாடிக்கையாளர்களை தவிர வேறு அதிகம் இல்லாதால் மதுராவின் மானம் கொஞ்சமாக தான் கப்பல் ஏறியது .

கான்பெரென்ஸ் அழைப்பு விடுத்தாள் மதுரா இருவருக்கும் ....ரெண்டு பேரும் எதிரில் இருந்து இருந்தால் அவள் கோப பார்வையில் பொசுங்கி இருப்பார்கள் .
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"என்னமா ?"என்றனர் இருவரும் கோரஸாக .

"என்ன நொன்னைமா வேண்டி கிடக்குது ....ரெண்டு பேரும் கையில் கிடைச்சீங்க ...கைமா தான் ."என்றாள் கடுப்போடு .

"என்ன மது ஆன்ட்டி நீ கேட்ட ஸ்னாக்ஸ் செய்து தரலியா என்ன ...இந்த அளவூ அனல் அடிக்குது ....நான் வேண்டும் என்றால் ஹோட்டலில் ஆர்டர் செய்யவா ?"என்றான் விஜய் நேரம் காலம் தெரியாமல் ...அவனுக்கு தெரிந்து இவள் கோபப்படுவது கேட்ட ஸ்னாக்ஸ் ,சாக்லேட் ,ஐஸ்கிரீம் கிடைக்காத போது தான் .அந்த எண்ணத்தில் கேட்டு வைத்து பயபுள்ள தனக்கு தானே ஆப்பு வைத்து கொண்டோம் என்பதை வெகு லேட்டா புரிந்து கொண்டான் .

(இவ சும்மாவே வச்சு செய்யறவ ...விஜய் கண்ணா இந்த நேரத்தில் இது உனக்கு தேவையா ?)

இவன் தான் மாட்டி கொண்டான் என்று பார்த்தால் ,இவன் சொன்னதை கேட்டு சூர்யா சிரித்து வைத்து ,"ஆப்பு வாங்குவோர் "லிஸ்ட்டில் VOLUNTEER சேர்ந்து கொண்டான் .

"டேய் !...உங்க ரெண்டு பேருக்கும் என்னை பார்த்தா கடோகஜன் போலவா இருக்கு ....தீனிப்பண்டாரம் என்று சொல்லாமல் சொல்லி காட்டரீங்களாடா ......"என்றாள் மதுரா எரிமலையாக .
orig_1369891053.jpg

"இதை நாங்க சொல்லவே இல்லை மதுரா .....உண்மை எது என்று உலகத்திற்கு தெரியும் ...."என்றான் சூர்யா .

"டேய் பிரபு .....வேண்டாம் .....கடுப்பு ஏத்தாதே ."என்றாள் மதுரா .

"சரி சரி ...கடையில் நின்று கத்தாதே ....எதற்கு போன் செய்தே சொல்லு ."என்றான் விஜய் .

"இதோ ஏதோ மனசுக்குள்ள நேவி சீல் ,அமெரிக்கன் ப்ரெசிடெண்ட் பாதுகாவலன் ரேஞ்சுக்கு எதுக்குடா இவங்க ரெண்டு பேருக்கும் FANCY ட்ரெஸ் காம்பெடிஷன் வைச்சு இருக்கீங்க .....பார்க்கறவங்க கண்ணு அவிஞ்சு போறதுக்கா ?????அண்ணாச்சி என்னை கிண்டல் செய்யறார் ....கட்சி ஆரம்பித்து இருக்கியா ...இல்லை வாய் கொடுத்து வாங்கி கட்டிகிட்டியா என்று ....எதற்கு டா இப்படி ஓவர் BUILT UP கொடுக்கறீங்க ரெண்டு பேரும் ......"என்று பொரிந்து தள்ளினார் .

'எங்களுக்கு இது தேவை தான் 'என்ற ரேஞ்சில் ஆல்வினும் ,உத்தமும் அவளை முறைத்தனர் .

"நீ எங்கே வெளியே போனாலும் அவங்க கூட வருவாங்க .....சுமன் தப்பிச்சுட்டான் என்பதை சுபா சொல்லி இருப்பாளே .....அதன் பிறகும் ஹாயா உலாத்திட்டு இருக்கே ...வீட்டில் தான் ரெண்டு தடி மாடுங்க கார்த்திக் ,ரகு இருக்கானுங்கலே ?????அவனுகளை எழுப்பி கடைக்கு அனுப்ப வேண்டியது தானே ....என்னை கடத்துங்க என்று நீயா வழி ஏற்படுத்தி தரே ?????....இப்போ நீ ஸ்னாக்ஸ் சாப்பிடலை என்றால் உலகம் அழிய போகுதா என்ன ....அண்ணாச்சி இன்னொரு சொந்த வீடு வாங்க வைக்காம விட போவதில்லை என்று கங்கணம் கட்டிட்டு அலையறியா என்ன ?"என்றான் விஜய் கோபத்துடன் .

"பைத்தியம் மாதிரி உளறாதே விஜய் .......சுமன் இன்னும் பத்து வருடம் கழிச்சி கடத்துவான் ...அது வரை இவங்க ரெண்டு பேரும் பின்னாலேயே வருவார்களா என்ன ....பி PRACTICAL ."என்றாள் மதுரா .

"PRACTICAL ...யு வாண்ட் மீ டு பி PRACTICAL ......எது நிதர்சனம் என்று சொல்லவா ....என் கையில் தான் ஒரு பெண்ணின் உயிர் போனது....அவளை பறி கொடுத்துட்டு தினம் தினம் புழுங்கி செத்துட்டு இருக்கிறவன் இதோ லைன்னில் தான் இருக்கான் . ....என் கண் முன்னால் தான் இது வரை மூன்று தடவை பல பெண்களை விடுவித்து இருக்காங்க ....இது வரை அர்ரெஸ்ட் ஆனவங்க எத்தனை பேர் தெரியுமா முப்பதிற்கும் குறையாது ....மாசம் மாசம் புதுசு புதுசா பீகார் ,ஜார்கண்ட் ,ஒதிஷா என்று ஆட்கள் கடத்தலுக்கு வராங்க ....இது எல்லாத்துக்கும் ஹெட் சுமன் என்று தெரியும் ...ஆனா ப்ரூப் இல்லை .....ஒரு கிளு கூட இல்லாமல் எங்கே எந்த பெண் வாழ்வு நாசம் ஆகும் என்று பதறி ஓடிட்டு இருக்கேன் .....இந்த லிஸ்டில் நீயும் சேர வேண்டும் என்கிறாயா .....இடியட் .....போய் தொலை என்று ஒரு வருசமா கத்திட்டு இருந்தேன் ...எங்க அப்பா சொன்னார் ஆட்டு குட்டி சொல்லிச்சுன்னு கல்லு கணக்கா இங்கேயே இருந்துட்டு ,அவ கொள்ளி கண்ணில் பட்டு வைச்சே .....அவ சும்மாவே கிரிமினல்லா யோசிப்பா .....அதான் உன்னை அழித்தே ஆகணும் என்று சுமனிடம் மாட்டி விட்டு இருக்கா .....நீ இருக்கும் நிலைமையின் தீவிரம் கொஞ்சமாவது ரியலைஸ் பண்ணு மது .....ப்ளீஸ் ஐ பெக் யு .....நீ எவ்வளவூ தான் கோவிச்சுக்கிட்டாலும் ஆல்வின் உன் கூட தான் இருப்பான் ....நோ arguements .பை ."என்ற விஜய் அழைப்பை துண்டித்து விட மதுரவால் எதையும் பேச முடியவில்லை .
atm-kuruvi-23-02-11.jpg
ஏன் நீ அமைதியா இருக்கே ....நீயும் எதையாவது சொல்ல வேண்டியது தானே பிரபு ."என்றாள் மதுரா உள்ளே போன குரலில் .

"சுவீட்டி !.....உனக்கே தெரியும் நாங்க எதை செய்வதாக இருந்தாலும் காரணம் இல்லாமல் செய்ய மாட்டோம் என்று .....நீ என்று வரும் போது ஒரு பிரைவேட் armyயே கூட உன் பாதுகாப்பிற்காக வைக்க ரெண்டு பேருமே தயங்க மாட்டோம் டா .....விஜய் கூட எனக்கு சண்டை இருக்கலாம் ....ஆனால் அவன் சொன்னது தான் நானும் சொல்வேன் ......போதும் ஒருத்தி அவனால் துடி துடித்து செத்தது போதும் .....உன்னையும் இழக்க என்னால் முடியாது ......இந்த விஷயத்தில் உன் பேச்சை நாங்க ரெண்டு பேருமே கேட்க மாட்டோம் ...தயவு செய்து இந்த விஷயத்தை பற்றி இதற்கு மேல் பேசாதே ....ஆல்வின் உடன் உத்தமும் உன் கூட தான் இருப்பான் ....பை "என்றான் சூர்யா .
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இதற்கு மேல் இவங்க ரெண்டு பேரிடமும் பேசி ,ஏற்பாட்டை நிறுத்துவது முடியாத காரியம் என்று புரிந்து விட ,பெருமூச்சொன்றை விட்டு ,வீட்டினை நோக்கி சென்றாள் மதுரா .மழையில் நனைந்தவாறு அவள் பின்னால் சென்றனர் மனதால் வந்த சகோதரர்கள் இருவரும் .ஒருவன் முன்னே ,ஒருவன் பின்னே ,இவள் நடுவில் என்று வீட்டினை அடைந்தாள் மதுரா .

இவள் குடையின் பாதுகாப்பில் வீடு வந்து சேர ,ஆல்வினும் ,உத்தமும் தொப்பலாக நனைந்து இருந்தனர் .அதை பற்றி கவலை படாமல் அவர் அவர் காரில் ஏற முயன்றனர் .

"அண்ணா !"என்ற மதுராவின் குரல் கேட்டு திரும்பினர் இருவரும் .

"உள்ளே வந்து தலையை துவட்டி ,ட்ரெஸ் மாத்துங்க அண்ணா .....ஜுரம் வர போகுது ..."என்றாள் மதுரா கண்ணில் நீரோடு .

"இல்லை மா ....வேண்டாம் ....."என்ற ஆல்வின்னை மதுராவின் கோப பார்வை தடை செய்தது .

"இப்போ ரெண்டு பேரும் உள்ளே வர போறீங்களா இல்லை மழையில் நடு ரோட்டில் அமர்ந்து நான் தர்ணா செய்யணுமா .....ஜன்னி வந்து செத்து தொலைச்சா சுமன் மாதிரி எவனுக்கும் நான் பயப்பட தேவை இருக்காது இல்லை ?"என்றாள் மதுரா கோபத்துடன் .

"ச்சூ மதுரா என்னமா ...இப்படி எல்லாம் பேசிட்டு இருக்கே ....நாங்க வரோம் ..."என்ற ஆல்வின் உத்தமோடு வீட்டினுள் சென்றான் .

உள்ளே வந்த மதுரா கார்த்திக்கிடம் ,"அவங்க ரெண்டு பேருக்கும் டவல் ,வேறு டிரஸ் எடுத்து கொடு ."என்று சொல்லி விட்டு தன் அறைக்கு சென்று விட்டாள் .

அறையினுள் இவள் துணியை மடித்து கொண்டு இருந்த பவானி ,"ஏய் என்னடீ ஏதோ முந்திரி பகோடா வேண்டும் ...செய்து கொடு என்று சொல்லிட்டு கடைக்கு போனே ....என்ன ஆச்சு முகமே சரி இல்லை ..."என்றார் .

எதையும் பேசாத மதுரா ஹால் நோக்கி கை காட்ட ,எட்டி பார்த்த பவானி தொப்பலாக நனைந்து நின்ற இருவரையும் கண்டு ஒரு கணம் அதிர்ந்து ,இவளை பார்த்தார் .

"போய் சூடா ஏதாவது டிபன் ,காபி போட்டு செஞ்சு கொடுங்க மா ..."என்றாள் வேதனையில் முகம் சுருங்க .

"ராணிமா ...உன் பாதுகாப்பிற்காக தானேடா ......"என்றார் பவானி .

"என் நோர்மல் லைப் இது இல்லை மா ...எனக்காக இவங்க ரெண்டு பேரும் வெயில் ,மாழைனு பார்க்காம ,தூக்கம் கெட்டு இருப்பதை கண்டால் மனசு வலிக்குதும்மா ....இவங்க பாசத்திற்கு என்னமா கைமாறு செய்ய போறேன் .....சொன்னா அவனுங்க ரெண்டு பேரும் என்னை குதறி எடுக்கறானுங்க ....."என்றாள் மதுரா .

"கொஞ்ச நாளுக்கு தான் மா ...எல்லாம் சரி ஆகிடும் ....நீ ரெஸ்ட் எடு ...நான் போய் அவங்களை கவனிக்கிறேன் ....அவங்களை பார்த்துட்டே இருந்தா உனக்கு மனசு கஷ்ட படும் ...நீ இங்கேயே இரு ."என்ற பவானி சென்று விட தன் அறையில் படுத்த மதுராவிற்கு மனது பாரமாகி போனது .

தன்னால் யாரும் கஷ்ட பட கூடாது என்று நினைப்பவள் அவள் .அவளாலேயே இன்று இருவர் மெய் வருத்தி அவளை காப்பதை அவளால் ஏற்க முடியவில்லை .அன்று இரவு உணவும் வீட்டில் வந்து தான் சாப்பிட வேண்டும் என்று மதுரா முடிவாக கூறி விட ,சாப்பிட்டு முடித்து கிளம்பியவர்களை மதுரா வெளியே விடவில்லை .

"மழை ரொம்ப அதிகமா பெய்யுது ....இங்கே ஹாலில் படுத்துகோங்கோ ....காருக்கு போக வேண்டாம் ...."என்றவளின் பேச்சை இருவரும் ஏற்க மறுக்க ,சூர்யாவையும் ,விஜய்யய்யும் மொபைல் லில் அழைத்தவள் ,"இங்கே பாருங்கோ ...நீங்க சொன்னது எனக்கு பிடிக்கவே இல்லை தான் ...ஆனாலும் நீங்க சொல்லிடீங்களே என்று இவர்கள் எனக்கு பாதுகாப்பு அளிக்க ஒத்து கொண்டேன் ....மழை ரொம்ப கொட்டுது ....குளிரும் அதிகமாக இருக்கு ....இவங்க ரெண்டு பேரும் தெருவில் இருக்க ,என்னால் சொகுசாக வீட்டினுள் தூங்க முடியாது .....ஒண்ணு இவங்க ரெண்டும் பேரும் இங்கேயே படுக்கட்டும் ...ரெண்டு நான் அவர்களோடு காரில் சென்று தூங்கறேன் ....மூன்று சொல்லாம கொள்ளாம கம்பி நீட்டிடுவேன் ....மூன்றில் எது என்று முடிவூ செய்து இவங்க கிட்டே சொல்லிடுங்க ..."என்றவளின் முதல் option ஏற்று கொள்ள பட்டு இருவரும் அங்கு ஹாலில் ஷிபிட் போட்டு காவல் காத்தனர் .

ஏதோ தன்னால் முடிந்தது அவ்வளவூ தான் என்று பெருமூச்சு விட்டு தன் அறைக்குள் வந்த மதுரா பூரணி இன்னும் தூங்காமல் விழித்து கொண்டு இருப்பதை கண்டாள் .பூரணி மதுராவின் அறையில் அவளுடன் தான் தங்கி இருக்கிறாள் ....இருவரும் திக் friends ஆகிவிட்டார்கள் .

"என்னடீ இன்னும் தூங்காம என்ன செய்துட்டு இருக்கே ....நைட் பேய் உலாத்தும் நேரம் ...போகும் போக்கில் உன்னை ஏதாவது பேய் தூக்கிட்டு போய்ட போகுதுடீ ....குட் நைட் ."என்றாள் மதுரா தன் படுக்கையில் படுத்து கொண்டு .

"ஒண்ணும் இல்லை மதுரா யோசிச்சுட்டு இருக்கேன் பா ."என்றாள் பூரணி .

"ஐயோ "என்று அலறியவாறு எழுந்து அமர்ந்த மதுரா ,"அது ரொம்ப ஆபத்து ஆச்சே ."என்றாள் .
ClUygRoWEAAT2dS.jpg

"ஆபத்தா ...எது ?"என்றாள் பூரணி ஒன்றும் புரியாமல் .

"அதான்மா நீ யோசிப்பது ....நீ எப்பவுமே லூசுத்தனமா தானே யோசிச்சு முடிவூ எடுப்பே ...அதான் நீ யோசிக்கிறேன் என்றதும் காபரா ஆகிடுச்சு ..."என்றவளை தலையணை எடுத்து மொத்தினாள் பூரணி .

சற்று நேரம் pillow fight நடக்க இருவரும் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க அமர்ந்தனர் ."ஐயோ கார்த்திக் ....ஒரு ராட்சசி கிட்டே சிக்கிட்டியே ...என்னமா மொத்தி எடுக்கறா ..."என்றாள் மதுரா

"மதுராக்ஷி ....."என்று கத்தினாள் பூரணி .

"ஏண்டீ என் பெயரை ஏலம் போடுறே ...எனக்கு என் பெயர் தெரியாதா என்ன ....?"என்றாள் மதுரா .

"ஐயோ சாமி .....உன் அறுவை தாங்க முடியலை ....நீ செய்யும் அலம்பலில் நான் கேட்க வந்ததையே மறந்துடுவேன் போல் இருக்கு .....உன் கிட்டே ஒண்ணு கேட்கணும் ."என்றாள் பூரணி .

"சாரி மா ....உனக்கு கொடுக்கும் அளவூ என் கிட்டே டப்பு லேது ..."என்றாள் மதுரா .

"ஜோக்கு ????சிரிப்பே வரலை ....நான் சீரியஸ் சா பேசணும் ராணி ...."என்றாள் பூரணி .

"சரி சொல்லு ....என்ன பிரச்சனை ..."என்றாள் மதுரா .

"பிரச்சனை எல்லாம் ஒண்ணும் இல்லை ...டவுட் அதான் ...."என்ற பூரணி தயங்கி ,தயங்கி ,"தப்பா நினைச்சுக்காதே ராணிமா .....கோவிச்சுக்காதே ......நீ செலக்ட் செய்து இருக்கே ?"என்றாள் .

"புரியலை ...எதற்கு ,யாரை செலக்ட் செய்து இருக்கேனா என்று கேட்கிறே ?"என்றாள் மதுரா .

"இல்லைப்பா ....கருணா மாமா ,சூர்யா அண்ணா ரெண்டு பேருமே உன்னை ரொம்ப டீப்பா லவ் செய்யறாங்க ......ஹாஸ்பிடலில் கருணா மாமா கோபத்தை கண்டு எனக்கு இதயமே நின்னு போச்சு .....அவருக்கு அவ்வளவூ கோபம் வரும் என்று அன்று தான் எனக்கு தெரியும் .....உனக்கு ஒன்று என்றால் அவர் துடிப்பதும் ,சூர்யா அண்ணா செத்தாங்க என்றே நினைச்சேன் ....எத்தனை பேர் தெரியுமா போராடி இருவரையும் பிரிச்சு விட்டாங்க ?????சூர்யா அண்ணா முதலில் கொஞ்சம் தடுமாறினாலும் அவரும் செமையா தான் சண்டை போட்டாங்க .....இவங்க ரெண்டு பேரில் யாரை நீ தேர்ந்து எடுக்க போறே .....இல்லை ஏற்கனவே தேர்ந்து எடுத்துட்டியா .....ஒருத்தர் விடோவ்ர் ...இன்னொருத்தருக்கு ஒரு பிசாசு மனைவி என்ற பெயரில் அவரை படுத்தி எடுத்துட்டு இருக்கு ....இவங்க ரெண்டு பேரில் யார் உன் சாய்ஸ் ???"என்றாள் பூரணி .

PENANCE WILL CONTINUE...
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
THAVAM 31(5)

""உன்னை தான் கேட்கிறேன் மதுரா ....விஜய் மாமா ,சூர்யா அண்ணா இருவரில் யார் உன் சாய்ஸ் ....உதை வேண்டுமா கேட்டுட்டே இருக்கேன் ....தோளை குலுக்கி உதட்டை பிதுக்கினால் என்ன அர்த்தம் ?"என்றாள் பூரணி .

"எனக்கே தெரியலை என்று அர்த்தம் கூமுட்டை .....உன் கிட்டே வலது கண் முக்கியமா ,இடது கண் முக்கியமா என்று கேட்டால் எதை சொல்வாய் .....அது போல் தான் சூர்யாவும் விஜய்யும் எனக்கு .....ரெண்டு பேருமே என் வெல் விஷேர்ஸ் ......என் நண்பர்கள் ...எதையும் எதிர் பார்க்காமல் உதவிட்டு இருக்காங்க ...ரெண்டு பேருமே என்னை விரும்பறாங்க .....இதில் யாரை தேர்ந்து எடுக்க சொல்றே ...."என்ற மதுரா விஜய் ,சூர்யாவின் லவ் ஸ்டோரி தனக்கு தெரிந்த அளவில் சொல்லி முடிக்க ,இப்பொழுது பூரணியால் எதையும் பேச முடியவில்லை .

samantha-ruth-prabhu_150824090410.jpg

"இப்போ புரியுதா என் நிலை ????பாவத்திலே மிக பெரிய பாவம் நம்பிய இதயத்தை உடைப்பது ....இருவரில் யாரை நான் தேர்ந்து எடுத்தாலும் அது மற்றவருக்கு மரண வலி தான் தரும் ...என் மானத்தை காப்பாற்றும் இரு நண்பர்களில் யாருக்கு துரோகம் செய்ய சொல்கிறாய் ????திருமணம் என்பது ஆண் பெண் சம்பந்த பட்டது மட்டும் இல்லை இரு குடும்பம் சம்பந்த பட்டது ....நான் என் பெற்றோருக்கு கட்டுப்பட்டவள் ....அம்மா ருத்ரா மூலம் குழப்பி வைத்ததை பார்த்தாய் தானே ...இருத்தலை கொல்லி எறும்பாய் இருக்கார் ...அவரால் இவர்களை ஏற்கவும் முடியவில்லை ....இவர்களின் பாதுகாப்பு வேண்டாம் என்று சொல்லவும் முடியவில்லை ....இவர்களில் யாரை தேர்ந்து எடுத்தாலும் என் பெற்றோருக்கு வலி ஏற்படுத்தும் பூரணி .....ஒருவேளை காதல் வந்தால் ,காதலுக்காக வீட்டை எதிர்த்து ,இத்தனை வருடம் எனக்கு பார்த்து பார்த்து செய்த பெற்றோரை ஜஸ்ட் லைக் தட் என்று உதறி தள்ளிட்டு போகும் அளவூ கல் நெஞ்சம் எனக்கு வருமா என்று தெரியலை .....இப்போ இதை பற்றி பேசும் அவசியம் இல்லை ...அவசரமும் இல்லை பூரணி .....நானே குழப்பத்தில் தான் இருக்கேன் ....என் கிட்டே வந்து யாரு யாருன்னு கேட்டா என்ன பதில் தான் சொல்ல முடியும் ????"என்றாள் மதுரா கண் கலங்க .

"அப்போ அங்கிள் ஆன்ட்டி வேறு யாரையாவது உனக்கு என்று முடிவூ செய்தால் ...."என்றாள் பூரணி .

"பூரணி !உன்னுடைய நடந்தால் ,போனால் ,வந்தால் என்ற எதிர்கால கேள்விக்கு விடை தெரியும் ஞானி நான் இல்லைம்மா ....இது வரை எந்த ஐடியாவும் எனக்கு இல்லை .......ஒருவேளை அது தான் கடவுள் என் தலையில் எழுதி வைத்து இருந்தார் என்றால் .....என் பாட்டி சொல்வாங்க ...காலம் பிரச்சனைகளை மட்டும் கொடுக்காது அதற்கு உண்டான வழியையும் காட்டும் என்று ....விதி விட்ட வழின்னு தான் இருக்கேன் ....நாளைக்கு என்ன நடக்கும் என்று யாருக்கு தெரியும் ....நத்திங் இன் மை ஹாண்ட்ஸ் .....போய் தூங்கு .....நடப்பது ,நடக்கும் போது பார்த்து கொள்ளலாம் ....."என்ற மதுராவின் குழப்பம் இப்பொழுது பூரணிக்கு வந்து விட்டது .

அதே சமயம் பவானியும் ,சங்கரனும் தங்கள் அறையில் பேசி கொண்டு இருந்தனர் .
maxresdefault (5).jpg

"ச்சே என்னால் தானே நம்ம பொண்ணு இத்தனை கஷ்ட படறா .....முன்னே பின்னே தெரியாதவங்க எல்லாம் இவளுக்காக போராடிட்டு இருக்காங்க ...ஆனா நான் பாவி .....மஹா பாவி பவானி ....நானே என் மகளை அந்த பிசாசு கிட்டே மாட்டி விட்டு இருக்கேனே ....."என்றார் சங்கரன் கண்கள் கலங்க .

"ரகுப்பா !......என்ன இது இன்னும் எத்தனை தடவை தான் கண் கலங்குவீங்க ....."அப்பா "என்று வாய் நிறைய அழைத்த பெண்ணை எப்படி சந்தேக பட முடியும் சொல்லுங்க ....நானே அவ கொஞ்சம் திமிர் பிடித்தவ என்று மட்டும் தான் நினைச்சேன் ....ஆனா இந்த அளவுக்கு சாக்கடையாக இருப்பாள் என்று எதிர் பார்த்தேனா என்ன ????கிட்ட தட்ட ஒரு வருஷம் நானும் தானே கண் இருந்தும் குருடாய் இருந்து இருக்கேன் ....விதி வேறு என்ன தான் சொல்ல முடியும் ...ஏதோ போதாதா காலம் ............நம்ம மக கஷ்ட படணும் என்று அவ தலையில் எழுதி இருக்கு போல் இருக்கு ....நீங்க மட்டும் காரணம் இல்லை ...நம்ம எல்லோரையும் அவ நல்லா யூஸ் செய்துட்டா .....விடுங்க பார்த்துக்கலாம் ."என்றார் பவானி .

"உன் வாய் தான் இப்படி சொல்லுது பவானி ...ஆனா முகம் சரி இல்லையே ....இன்னும் ஏதோ இருக்கு ...."என்றார் சங்கரன் .

"இது உங்களால் இல்லைங்க ...."என்றவர் விஜய் ,சூர்யாவின் காதல் கதையை சொல்ல ,சங்கரன் அதிர்ந்து போனார் .

"என்ன பவானி சொல்றே .....மாப்பிள்ளையும் ,சூர்யா தம்பியும் நம்ம பொண்ணை விரும்பரங்களா ?....."என்றார் காதில் கேட்டதை நம்ப முடியாதவராய் .

"ஹ்ம்ம் ஆமாம் ரகுப்பா ....திருப்பியும் வ்ரலாறு திரும்பி விடுமோ என்று தான் ருத்ராவை ,மதுராவிற்கு முடித்து விடலாம் என்று நினைத்தேன் ...."என்றவர் நடந்ததை சொல்லி முடிக்க சங்கரன் மீண்டும் கண் கலங்க ஆரம்பித்தார் .

"நம்ம பெண்ணுக்காக அட்லீஸ்ட் நீ இதையாவது செய்ய முயன்றே ...ஆனால் நான்...என் மகளின் வாழ்வை அழிக்க வந்த சனியனை தலையில் தூக்கி வைத்து ஆடியது மட்டும் தானே செய்தேன் .. .........என்னை எல்லாம் குடும்ப தலைவன் என்று சொல்லி கொள்ளவே அருகதை இல்லை தானே பவானி .???"என்றார் கண்ணீர் வழிய

"இங்கே பாருங்க .....நம்ப கூடாதவளை நம்பி விட்டோம் ....நம்பிக்கை வைத்த பிறகு சந்தேக படவும் கூடாது தான் ....ஏதோ கடவுள் புண்ணியம் ...இது வரை ராணிமா பத்திரமா இருக்கா ....இனி என்ன செய்து அவளை காக்க முடியும் என்று யோசிப்போம் ."என்றார் பவானி

"சொல்லு பவானி என்ன செய்யணும் ...அந்த சுமனையும் ,சோனாவையும் கொன்று விடட்டுமா ?"என்றார் சங்கரன் .

"ஏன் ரகுப்பா உங்களுக்கு இந்த வேண்டாத வேலை எல்லாம் ????மனசுக்குள் என்ன சினிமா ஹீரோன்னு நினைப்பா ???வயசான காலத்தில் கபாலி,காலா ரேஞ்சுக்கு கத்தி எடுக்கறேன் என்று காமெடி செய்துட்டு இருக்கீங்க ??? அதை எல்லாம் விஜய் ,சூர்யாவே பார்த்துப்பாங்க ....எனக்கு சுமன் ,சோனா பத்தி கவலை இல்லை ....என் பிரச்சனையே விஜய் ,சூர்யா தான் .....விஜய் கூட கணக்கில் வர மாட்டார் ...ஆனா இந்த சூர்யா வில்லங்கம் பிடித்தவன் ...தான் பிடிச்ச முயலுக்கு மூணு காலு என்று நிரூபித்த விடுவான் ....அவனை நினைத்தால் தான் பக்கு பக்குன்னு இருக்கு ...."என்றார் பவானி

"ஏன் விஜய்யும் தானே மதுராவை விரும்பறார் .??"என்றார் சங்கரன் .



"
 
Status
Not open for further replies.
Top