All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அனிதா ராஜ்குமாரின் "என்ன தவம் செய்தேன்" - கதை திரி

Status
Not open for further replies.

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
THAVAM 34(5)

CkKf0aCVEAEmm-u.jpg

"பேபி ....."என்ற குரல் அழைப்பது மதுராக்ஷி என்று உத்தமிற்கு உணர்த்தி விட்டது .

"எங்கடீ போனே .....எப்படி இருக்கே .....ஆர் யு safe ?"என்று கேள்விகளை அடுக்கி கொண்டே போனான் .

"பிரபு குட்டி ....கொஞ்சம் மூச்சு வாங்கிட்டு எதிராளியையும் பேச விடு ....ஐம் safe .....சென்னைக்கு தான் வந்துட்டு இருக்கேன் ......மீதி விவரம் பிறகு சொல்றேன் .......அந்த கஜா நியூஸ் பார்த்தியாடா .?"என்றாள் மதுராக்ஷி .

"ஹ்ம்ம் ......இப்போ தான் உத்தம் கேட்டான் அந்த ஆளுக்கு என்ன பைத்தியம் முத்தி போச்சான்னு ?"என்றான் சூர்யா .

"இப்போ நீ என்ன செய்யரே ...."என்ற மதுரா சில இன்ஸ்ட்ருக்ஷன்ஸ் கொடுக்க ,"எதுக்கு டீ இப்போ இது .....கருணாவே சமாளிச்சுப்பான் ......என்ன ரூபிணியை வைத்து ஏதாவது விளையாட பார்ப்பார் ......அதற்கு தான் யோசிக்கிறேன் ."என்றான் சூர்யா அவள் சொன்னதை கேட்டு .

"இனி ரூபிணி என்ற தளை விஜய் வாழ்க்கையில் இருக்க கூடாது பிரபு ."என்றாள் மதுரா .

"என்னடீ .......சிம்பதியா இல்லை அவன் பக்கம் சாய்ந்துட்டியா .......அவன் எட்டாக்கனி பேபி .....சோனா பேய் செத்தால் கூட கஜா ,சுமன் ,சொர்ணா உன்னை அவனோடு வாழ விட மாட்டாங்க .....வீணாக மனக்கஷ்டத்தை உண்டாகி கொள்ளாதே ....."என்றான் சூர்யா .

"என்னடா செல்லம்ஸ் .....ரொம்ப காண்டு ஆகற மாதிரி இருக்கு .......அங்கே கருகுற வாசனை இங்கே ஹைவே வரை வருதுமா .......சொன்னதை செய்யுடா மங்கூஸ் மண்டையா ....மீதத்தை வந்து சொல்றேன் ......அப்புறம் காஞ்சிபுரத்தில் நல்ல பட்டு புடவை கடை எதுன்னு தெரியுமா ?"என்றாள் மதுரா .

"என்ன கலர் ,டிசைன் என்று catalogue பார்த்து சொன்னாய் என்றால் நைந்து தர ஆளே இருக்கு ....அதில் ஒரிஜினல் சாண்டல் எல்லாம் add செய்து 10 வருஷத்திற்கு அந்த வாசனை போகாமல் இருக்கும் புடவைகள் கூட ரெடி செய்து தருவார்கள் ......ஆமா இப்போ இந்த டீடெயில்ஸ் எல்லாம் உனக்கு எதற்கு ?"என்றான் சூர்யா .

"என்னப்பா இப்படி கேட்டுட்டே ........ கல்யாணம் செய்துக்க போறேன் ....தமிழ்நாட்டில் கல்யாண பெண் பட்டு புடவையில் தானே பா திருமணம் செய்துப்பாங்க ......அதற்கு தான் புடவை ......"என்று மதுரா மின்னாமல் முழங்காமல் nuclear பாம் ஒன்றை வீச சமாளிக்கும் ஆற்றல் கொண்ட அந்த தொழில் அதிபன் அவளால் மீண்டும் உறைந்து நின்றான் .

இவள் விஜய்க்கு உதவ சொல்லி சூர்யாவை கேட்டது இவள் காதலித்தவன் விஜய் என்பதாலா இல்லை மேக்னாவின் கணவன் என்பதாலா ?இவள் திருமணத்திற்கு சூர்யாவிடம் பட்டு புடவை பற்றி விசாரித்தது நண்பன் என்ற முறையில் கேட்டாளா இல்லை மணக்க போகிற காதலன் என்ற உரிமையில் கேட்டாளா என்பது கடவுளுக்கே வெளிச்சம் .

அவள் பாட்டுக்கு போன் செய்து தனக்கு திருமணம் என்ற குண்டை வெடிக்க வைத்து விட்டு அழைப்பை துண்டித்து விட்டாள் .......கீழ்ப்பாக்கத்தில் சேர்ந்து விடலாமா இல்லை கேரளா சென்று ஆயுர்வேத ட்ரீட்மென்ட் எடுக்கலாமா என்று மண்டை காய்ந்து நின்றது சூர்யா தான் .


(நீ மட்டும் இல்லை பா ....இந்த மதுரவாலும் ,ஹனியாலும் நிறைய பேர் இப்படி தான் ரொம்ப காலமாய் புலம்பிட்டு இருக்காங்க ........பிபி ,ஹார்ட் அட்டாக் வருதுன்னு அழாத குறையாய் கேட்டும் ரெண்டும் நம்மளை வைச்சு செய்யுது கண்ணா ......ஆல் fat ச்சே fate )
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"என்ன ஜீ ....லைன்னில் மதுரா பெஹன் தானே .....என்ன சொன்னாங்க ....எங்கே இருக்காங்க .....ஆபத்து எதுவும் இல்லை தானே ?"என்று அண்ணனாய் தவித்து கேட்டான் உத்தம் .

"அவளே தான் ......"என்ற சூர்யா தன் போனினை டேபிள் மேல் தூக்கி போட்டு தலையை பிடித்து கொண்டு அமர்ந்தான் .

"என்ன ஜீ ....எப்பவுமே மதுரா கிட்டே பேசுனா நியூ இயர் வானவேடிக்கை மாதிரி அப்படி ஒரு ஒளி வெள்ளம் உன் முகத்தில் தெரியும் ......இப்போ என்ன அழுது வடியுது ......?"என்றான்

"ஹ்ம்ம் உன் தங்கையை காதலித்து தொலைத்தேன் பாரு ......வேற எப்படி இருப்பேன் .....அவ பாட்டுக்கு எங்கேயோ இருந்து எனக்கு திருமணம் ....பட்டு புடவை எங்கே எடுப்பது என்று கேட்டு கடுப்பு அடிக்கறா ......பத்து பனிரெண்டு என்று சைடு ட்ராக் ஒட்டுறவன் கூட நிம்மதியா இருப்பான் போல் இருக்கு .....இவ ஒருத்தியை லவ் செய்துட்டு முடியலை ......வச்சு செய்யறா ......."என்றான் சூர்யா அழாத குறையாய் .

வாய் விட்டு நகைத்தான் உத்தம் ."இப்படி மதுரா கிட்டே மாட்டி முழிக்கறது நமக்கு என்ன புதுசா ஜீ .....விவேக் சொல்வது மாதிரி ரைட் இண்டிகேட்டர் போட்டு ,லெப்ட் பக்கம் கை காட்டி ஸ்ட்ரெயிட்டா போய்டுவாளே .........வந்த உடன் காலில் வேண்டும் என்றாலும் விழுந்து உங்க கன்னி தீவூ லவ்ஸ்சுக்கு ஒரு முடிவூ கட்டுப்பா....உன்னை நம்பி 5000 ரூபாய் ஆல்வின் உடன் பெட் வேறு கட்டி இருக்கேன் .......என் முதலாளி ஒரு கஞ்சூஸ் ....சரியாய் சம்பளம் கூட கொடுப்பது இல்லை ......5000 எல்லாம் எனக்கு பெரிய விஷயம் ஜீ ...."என்ற உத்தமை வெட்டவா குத்தவா என்று முறைதான் சூர்யா .

"அட பாவிங்களா ......நீங்க சேர்ந்து கும்மி அடிக்க நான் தான் கிடைச்சேனா .......எதுக்குடா பெட் கட்டி வைத்து இருக்கீங்க ?"என்றான் சூர்யா .

"அதான் பாஸ் ....மதுரா தேவியாரின் சுயம்வரத்தில் ஜெயிக்க போவது நீயா இல்லை அந்த விஜய்யா என்று தான் 5000 பெட் .எங்களுக்கும் பொழுது போகணும் இல்லை ......நான் உன் மேல் தான் பெட் கட்டி இருக்கேன் .....ஆல்வின் விஜய் மேல் ......12th எக்ஸாம் எழுதிட்டு ரிசல்ட் டுக்கு வெயிட் பண்ற மாதிரி ஒரே பரபரப்பாக வைத்து இருக்கீங்க பா எங்களை ........பக் பக்ன்னு இருக்கு .....இப்போ மதுராவே மேரேஜ் என்று ஆரம்பித்து இருக்காங்க ......நான் சீக்கிரம் ஒரு நல்ல டாக்டர் பார்த்துட்டு என் ரத்த கொதிப்பு ,இதயம் எல்லாம் ஒழுங்கா இருக்கான்னு செக் வேற செய்யணும் இல்லை ...."என்றான் உத்தம் முகத்தை பாவமாய் வைத்து கொண்டு .

"எங்க நிலைமை உனக்கு வேடிக்கையா இருக்கா உத்தம் ?"என்றான் சூர்யா வந்த சிரிப்பை அடக்கிய படி .

"என்ன பண்றது பாஸ் ......நிலைமை அப்படி ........ஆனா சும்மா சொல்ல கூடாது ....இப்படி ஒரு பல்கோண காதல் கதை எங்கேயுமே கேள்வி பட்டது இல்லை .....ஒன்றா இரண்டா மதுரா தேவியருக்கு வந்த காதல் ப்ரோபோசல்கள் .......காலேஜ் டேஸ் அவங்களுக்கு காவல் காத்தே என் முடி கொட்டி போச்சு ....இப்போ ஆள் ஆளுக்கு மேரேஜ் ப்ரோபோசல் என்று வந்தால் ......உலகம் தாங்கவே தாங்காது பாஸ் .......ஆனா செம்மயா தான் இருக்கு ....."என்றான் உத்தம் .

"ஜோக்ஸ் அபார்ட் ......"என்ற சூர்யா சில instructions கொடுக்க ,அடுத்த அரை மணி நேரத்தில் தமிழ்நாட்டின் முக்கிய நியூஸ் சேனல்கள் அவன் அலுவலகத்தில் ஆஜர் ஆனார்கள் .இவன் பேட்டி நேரலையாக ஒளிபரப்பானது .

"அனைவர்க்கும் வணக்கம் .....சற்று முன் இந்தேர் இண்டஸ்ட்ரீஸ் கஜேந்திரன் கொடுத்த பேட்டியினை பார்த்தேன் .......தவறான தகவல் பரவுவதால் ஏற்படும் பாதிப்புக்கு அவர் கொடுத்த பேட்டியே சிறந்த உதாரணம் .எப்படி என்றால் மீடியாவில் நானும் ,விஜய கருணாகரனும் ஹாஸ்பிடலில் குழாய் அடி சண்டை போட்டது போலவும் ,கட்டி புரண்டு ,உருண்டு அடித்து கொண்டது போலவும் ,மூன்றாம் உலக போறே நடந்தது போலவும் "இளம் தொழில் அதிபர்கள் தொழிற் பகை காரணமாக மோதல்"என்று நியூஸ் ஒளிபரப்பானது ......அதை உண்மை என்று நம்பி எவனோ ஒரு பொட்டை என் கண்டைனர் கொளுத்தி விட்டான் .அதை நியூஸ் பார்த்து விட்டு தீர விசாரிக்காமல் கஜேந்திரன் விஜய் தான் செய்து இருப்பான் என்று முடிவுக்கு வந்து உலகத்தின் முன் அவமான பட்டு நின்றது தான் மிச்சம் ."என்றான்

"அப்போ ஹாஸ்பிடலில் உங்களுக்கும் கருணா சார்ருக்கும் சண்டை நடக்கவே இல்லை என்று சொல்றீங்களா மிஸ்டர் .சூர்யா ?"என்றார் ஒரு ரிப்போர்ட்டர் .

"சார் அதை தானே தமிழில் இப்போ சொன்னேன் .....அது போலியான நியூஸ் ."என்றான் சூர்யா .

"அதற்கு என்ன ஆதாரம் சார் ?"என்றார் மற்றொருவர் .


"இது என்னடா வம்பா போச்சு ....சண்டை நடந்து அதை பற்றி ஆதாரம் கேட்டால் காட்டலாம் .....நடக்காத சண்டைக்கு எப்படி ஆதாரம் கொடுக்க முடியும் ???கொஞ்சமாவது லாஜிக்க்க கேள்வி கேளுங்க .......சண்டை நடந்தது ,ரத்த ஆறு ஓடியது என்று TRP ரேட்டிங்காக யாரோ வாய் வார்த்தையாக சொன்னதை நம்பி அது உண்மையா பொய்யா என்று கூட தீர விசாரிக்காமல் நியூஸ் போட்டது நீங்கள் ......போடும் முன் என்னையோ ,இல்லை கருணாவையோ யாருமே "இப்படி நடந்ததா "என்று கூட விசாரிக்கவில்லை .....விசாரிக்காமல் நியூஸ் போட்டுட்டு சண்டை நடக்காததற்கு ஆதாரம் என்னை கேட்டால் ?....சண்டை நடந்தது என்று சொன்ன நீங்க தான் அதற்கான ஆதாரத்தை கொடுக்கும் கடமை கொண்டவர்கள் .....நானோ ,கருணாவோ இல்லை ...."என்றவனின் அதிரடியில் அங்கு இருந்தவர்கள் பேந்த பேந்த முழித்தனர் .
ram_charan_teja_new_look_hairstyle_01.jpg


அவன் கேட்ட ஆதாரம் எதுவுமே எந்த நியூஸ் சேனல் இடமும் இல்லை என்னும் போது அவர்கள் செய்தது எவ்வளவூ பெரிய குற்றம் என்று உணர்ந்து மௌனமானார்கள் .

"விஜய் என் காலேஜ் மேட் ......குன்னூர் காலேஜ் 6 மாதம் ஸ்டுடென்ட்ஸ் EXCHANGE ப்ரோக்ராம்மில் என் கூட தான் படித்தான் ......அந்த பேட்ச் மேட் ,காலேஜ் ப்ரோபஸ்ஸோர் ,பிரின்சிபால் யாரை வேண்டும் என்றாலும் கேட்டு பாருங்க ,நாங்க அடித்த லூட்டி ,"முழுகாத ஷிப் பிரிஎண்ட்ஷிப் "என்று நகமும் சதையுமாக நானும் கருணாவும் இருந்ததை சொல்வார்கள் .....இதோ எங்கள் காலேஜ் போட்டோ."என்றவன் கண் காட்ட அமைக்க பட்டு இருந்த வெள்ளை SCREEN இவர்களின் கல்லூரி கால புகைப்படங்களை ஸ்லைடு ஷோவாக காட்டியது .
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"தவிர என் மனைவி ரித்திகா ACCIDENTடில் இறந்தது உங்களுக்கு தெரியும் .....அந்த சமயம் நான் வெளிநாட்டில் இருந்தேன் ......அவரை காப்பாற்ற போராடியது என் நண்பன் கருணா தான் .தேவை பட்ட ரத்தம் கொடுத்து ,நான் வரும் வரை என் மனைவி உடன் ஹாஸ்பிடலில் இருந்ததும் அவன் தான் .......தவிர அவனின் "ANGEL கார்மெண்ட்ஸ் " இன்வெஸ்ட் செய்ய போகிறேன் ...கிட்டத்தட்ட 50 கோடி .....என்னுடைய எல்லா ஷாப்பிங் மால் ,EXPORT தொழிலில் அவன் கம்பெனி ஆடைகள் தான் விற்க படுகிறது .....பொன் முட்டை போடும் வாத்தினை அறுக்க அவனும் முட்டாள் இல்லை ......அவ்வளவூ கோடி அவனை நம்பி இன்வெஸ்ட் செய்ய போகும் எனக்கு அவன் எதிரியும் இல்லை .... தவிர ஒரு பெரிய டவுட் ....தொழிற் பகை ...தொழிற் பகை என்று நியூஸ் ஓடியது .....நான் இருப்பது ரியல் எஸ்டேட் ,க்ரானைட் பிசினஸ் ....கருணா இருப்பது TEXTILE துறை ......இதில் எப்படி எங்களுக்குள் தொழிற் பகை வர முடியும் ?????அவன் துறை வேறு என் துறை வேறு ....இது கூடவா யோசிக்க மாடீர்கள் ?"என்றான் சூர்யா .


வெகு நேரம் அங்கு கனத்த மௌனம் நிலவியது .ரிப்போர்ட்டர்ஸ் ஒருத்தருக்கு ஒருத்தர் பேசி கொண்டார்கள் .

"அப்போ மிஸ்டர் கஜேந்திரன் சொன்னது ????மிஸ்டர் கருணாவை அவர் வேலை விட்டு தூக்கியது ?"என்றார் ஒருவர் .

"கருணாவே சொன்னது போலெ உயர்திரு கஜேந்திரனுக்கு வயசாகி விட்டது ......கண்டதை யோசித்து தவறாக முடிவூ எடுக்க ஆரம்பித்து விட்டார் ....அது அவர் நடத்திய கேலிக்கூத்து ,ஒரு காமெடி ஷோ என்று தான் உங்களுக்கே தெரியுமே .....நான் வேறு தனியாக சொல்லனுமா என்ன ??????அங்கு அவனை தங்கள் குடும்பத்தில் ஒருவனாக தலையில் வைத்து கொண்டாடும் ஆட்களே கஜேந்திரனை கிளீன் போல்ட் ஆக்கி விட்டார்கள் ..........கருணாவும் கஜா கூறிய அனைத்து குற்றச்சாட்டுகளையும் பொய் என்று உலகறிய நிரூபித்து விட்டான் கருணாவை வேலை விட்டு தூக்கியது அடி முட்டாள் தனம் என்று தான் நான் சொல்வேன் ..."இந்தேர் இண்டஸ்ட்ரீஸ் "என்றால் கஜேந்திரன் என்ற பெயர் மறைந்து கருணாவின் பெயர் நிலைநின்று ரொம்ப காலம் ஆகி விட்டது .......கருணா இல்லாத அந்த தொழில் கேப்டன் இல்லாத கப்பலுக்கு சமம் .......தொழில் பற்றி abcd கூட தெரியாத ,பார்ட்டி ,பப் ,ஆண் நண்பர்கள் என்று மட்டுமே இ வ்வளவூ காலம் சுத்தி கொண்டு இருந்த சோனா ,தண்ணீர் குடிக்க கூட வேலையாள் வந்து எடுத்து கையில் தர வேண்டும் என்று எதிர்பார்க்கும் சோனா ,எத்தனையோ நெளிவூ சுளிவூ உள்ள ,நேரம் காலம் பார்க்காமல் உழைப்பு மட்டுமே கொடுக்க பட வேண்டிய ஒரு தொழிலை எப்படி நிர்வகிப்பார் என்று கஜேந்திரன் நினைத்தார் என்று தெரியவில்லை . "என்றான் சூர்யா .

"அப்போ உங்கள் கண்டைனர் எரிக்கப்பட்டது ?"என்றான் ஒருவர் .

"பைத்தியக்காரத்தனத்தின் உச்சக்கட்டம் ......கருணா கிட்டே சொன்னதை மீண்டும் சொல்கிறேன் .....அதுவே அதர பழசான வண்டி ....நானே அதை கயிலான் கடையில் போட சொல்லி இருந்தேன் ......அதை எரித்தால் நான் நடு தெருவுக்கு வந்து விடுவேன் என்று நினைப்பதை எல்லாம் ............உங்களுக்கே புரிந்து இருப்பேன் தவிர இந்த காலத்தில் ஒரு ப்ரொபேர்ட்டி எரிவதால் எந்த இழப்பும் ஏற்பட்டு விடாது என்பது தான் உண்மை ....கோடி கோடியாக பணம் கடன் வாங்கியாவது செய்யும் தொழிலை இன்சூர் செய்யாமலா இருப்போம் ????ப்ரொபேர்ட்டி இன்சூரன்ஸ் ,அங்கு உள்ள மூலதன பொருட்கள் இன்சூரன்ஸ் ,வேலை செய்யும் ஸ்டாப் முதற்கொண்டு அரசாங்க ,தனியார் இழப்பு காப்பீடு உண்டு .எரிக்கப்பட்ட கண்டைனர் மதிப்பு என் தொழில் ஈட்டும் ஒரு மணி நேர வருமானத்திற்கு ஈடு கூட ஆகாது .........இந்த சூர்யாவிற்கு எதிரியாக இருக்க கூட தகுதி வேண்டும் .....அது இல்லாத தொடை நடுங்கிங்க எல்லாம் இப்படி தான் செய்வாங்க ......"என்றான் சூர்யா தோலை குலுக்கி .

"உங்களுக்கு எதிரி என்று யாரை நினைக்கறீங்க ?"என்றார் ஒருவர் .

"இப்போ சில வருடமாய் சென்னையில் ஹியூமன் டிராபிக் ரிங் இடம் இருந்து கிட்ட தட்ட 300 பெண்களை,இளம் குழந்தைகளை காப்பாற்றி கொண்டு இருக்கிறார்கள் தெரியும் தானே .......அந்த ஆபரேஷன் ACP ராஜேஸ்வரி மேடம் கூட சேர்ந்து நான் செய்வதால் இருக்கலாம் ... "
07-30-18_HumanTrafficking_UK_Textimage2.jpg

"அதை பற்றி விரிவாக சொல்ல முடியுமா ?"

"இது பல பில்லியன் டாலோர் புரளும் தொழில் ......உலக அளவில் நெட்ஒர்க் உண்டு ....இதற்க்காக தனியாக FUND ஆரம்பிக்க பட்டு பெண்களை எப்படி எல்லாம் ஏமாற்றி கடத்த முடியும் என்று ட்ரைனிங் கூட கொடுப்பார்கள் இதில் சிரிப்பதற்கு எதுவுமே இல்லை .....நான் சொல்வது கட்டு கதையும் இல்லை ...சிகாகோ tribune என்ற வெளிநாட்டு பத்திரிகையில் siddartha மஹாநாத என்ற ரிப்போர்ட்டர் இதை பற்றி எழுதி உள்ளார் ...அவர் எழுதிய ஆண்டு 1947.....நாம் சுதந்திரம் பெற்ற அதே ஆண்டில் இருந்து 1956 வரை 29,000 பெண்கள் இது போன்ற ட்ரைனிங் பெற்ற பல்வேறு குழுக்களிடம் இருந்து மீட்க பட்டு உள்ளதாக அப்பொழுதே சொல்லி இருக்கிறார் ......Trafficking-map of victims-profits - region[1].png

இன்றோ குறைந்தது 4.5 மில்லியன் இருந்து ---10 மில்லியன் வரை உலகத்தில் பெண்கள் ,குழந்தைகள் பாலியல் தொழிலுக்காக உலக அளவில் கடத்த படுகிறார்கள் என்கிறது சர்வதேச தொழிலாளர் நல அமைப்பின் ஆய்வூ அறிக்கை ....வெளியே தெரியாத கோரம் எத்தனையோ ........
24ec438cb0abda97859e5e16e3434207--stop-human-trafficking-slavery-today.jpg

இவர்களின் குறி கல்லூரி பெண்கள் .ஒரு பெண்ணை டார்கெட் வைத்து விட்டால் ,காதல் என்ற பெயர் வைத்து கொண்டு காதலிக்க வைக்க பைக் ,வீடு முதற் கொண்டு அந்த பெண் மடங்கும் வரை பின்னாலேயே சுற்றுவார்கள் ......FACEBOOK ,இன்ஸ்டாகிராம் ,ட்விட்டர் ,வாட்ஸாப்ப் இவர்களின் வேட்டை அரங்கம் .....ஆதி முதல் அந்தம் வரை எந்த லொகேஷன் இந்த கணம் இருக்கிறோம் என்று தான் அறிய முடிகிறதே ....தவிர SELFIE மோகம் ,நின்றால் நடந்தால் குடும்பத்தின் ஒட்டுமொத்த போட்டோ அப்லோட் செய்வது என்று,குழந்தைகளின் பிறந்த நாள் ,புது டிரஸ் என்று எல்லா போட்டோவும் அப்டேட் செய்துட்டே இருக்கும் பெண்கள் அவரர்களே அறியாமல் இது போன்ற குழுக்களின் வலைக்குள் வருகிறார்கள் .இப்படி பதிவூ ஏற்றப்படும் பெண்கள் ,பெண் குழந்தைகள் மட்டும் அல்ல ஆண் குழந்தைகளின் போட்டோக்கள் PRONOGRAPHY என்ற ஆபாச வலை தளத்திற்கு கூட செல்கிறது .போட்டோ ஷாப்பிங் செய்து நிர்வாண உடம்புக்கு இந்த பெண்கள் ,குழந்தைகளின் முகங்கள் ஓட்ட வைக்க பட்டு இலவசமாகவே விற்கப்படுகிறது ....இது எங்கோ ஏதோ உகாண்டாவில் நடப்பது இல்லை .....உங்கள் பக்கத்து வீட்டில் கூட நடக்க வாய்ப்பு உண்டு என்று NIA-NATIONAL INVESTIGATION AGENCY OF INDIA---ANTI TERRORIST ORGANISATION எனப்படும் தேசிய புலனாய்வு முகமை அறிக்கை தாக்கல் செய்துள்ளது ......நான்கு சுவற்றுக்குள் எந்த கீழ்த்தரமான வேலை வேண்டும் என்றாலும் செய்யலாம் என்ற மனப்பான்மை தான் சிறு குழந்தைகளை கூட விட்டு வைப்பது இல்லை ......இதை எதிர்த்து தான் போராடி கொண்டு இருக்கிறோம் .....சோ இப்படி சதையை வித்து ஈன தொழில் செய்யும் எவனோ ஒருவன் செய்த வேலை ."என்றான் சூர்யா .

"இப்படி செய்வதால் அவர்களுக்கு என்ன பயன் சார் ?"என்றார் ஒருவர் .

"
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"நான் இல்லாமல் போனால் இந்த ஹியூமன் டிராபிக் ரிங் எதிர்த்து சமூக பொறுப்புடன் யார் வருடக்கணக்காய் போராட போகிறார்கள் ....இதோ இந்த நியூஸ் பார்க்கும்,இல்லை படிக்கும் மக்களில் எத்தனை பேர் இதற்காக போராட முன் வருவார்கள் என்று நினைக்கிறீர்கள் ....ஒன்று இரண்டு கூட தேறாது .....அய்யயோ ....இப்படியெல்லாமா நடக்குது ...கலி முத்தி பூச்சு ....பாவம் ......தலைவிதி என்று புலம்பிட்டு சமூக வலைத்தளத்தில் ஒரு கமெண்ட் அடித்துட்டு ,ஷேர் செய்வதோடு கடமை முடிந்தது என்று எந்திரன் 3.0 வருமா ,விஷாலுக்கு இந்த வருடமாவது திருமணம் நடக்குமா ,இந்த டிவி தொடரில் இவ இவன் கூட போனா ...அவன் இவளை வைத்துட்டு இருக்கான் என்பதோடு முடிந்து விடும் ...ஷேர் செய்து விட்டால் உலகத்திற்கே உயிர் கொடுத்து போராடி விட்டதாக ஒரு கர்வம் வந்து விடும் ....சொந்த மகள் ,மகன் போன் வைத்து என்ன செய்கிறார்கள் ,அவர்கள் நண்பர்கள் யார் ,சுற்றி உள்ளவர்கள் எப்படி பட்டவர்கள் என்று கூட அறியாமல் 8AM -7PM பணத்தின் பின் ஓடி விட்டு அப்புறம் எல்லாம் நாசம் ஆனதுக்கு பிறகு புலம்பி ,கதறி அழுது என்ன பயன் ?"என்றான் சூர்யா
70708751.jpg

"அப்போ மக்களுக்கு சமூக பொறுப்பு உணர்ச்சி இல்லை என்று சொல்றீங்களா ?.....மெரினாவை மறந்து விட்டு சொல்லாதீங்க ."என்றார் ஒருவர் .

"சார் ஜல்லிக்கட்டிற்காக மெரினாவில் அத்தனை பேர் கூடியது ஒன்ஸ் இன் எ மில்லியன் ஈவென்ட் ......நான் அந்த பக்கமே போகலை சார் ......நான் கேட்பது எத்தனை பேர் குடும்பத்தோடு தங்களின் தெருவில் உள்ள ஆனதை இல்லம் ,பெண்கள் மறுவாழ்வூ மையத்தில் சென்று அங்கு VOLUNTEER வேலை செய்கிறார்கள் என்று தான் கேட்கிறேன் ....இங்கே சென்னை என்று எடுத்து கொண்டால் கிட்டத்தட்ட எனக்கு தெரிந்து 20 குறையாத தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ,மறுவாழ்வூ மையங்கள் உள்ளன .....தீபம் ,சென்னை VOLUNTEERS ,CRY ,IVOLUNTEER ,பூமி என்று பல வாய்ப்புகள் இருக்கின்றன .இந்திய அளவில் JAGURTHI ,PRAJAWALA ,OASIS குளோபல் RESCUE FOUNDATON ,DESTINY RESCUE ,FREEDOM FIRM ,ஸ்டாப் இந்தியா ,DASRA ,PRERANA ,END SLAVERY NOW ,என்று ஆயிரக்கணக்கான அமைப்புகள் இந்தியாவில் போராடி கொண்டு இருக்கின்றன .....இவர்கள் வெப்சைட் சென்று பாருங்க ஒவ்வொரு கதையும் அத்தனை கோராமையா இருக்கும் .....இதை எல்லாம் படித்து விட்டு சாப்பாடு கூட நான்கு நாட்களுக்கு இறங்காது ...இதை எல்லாம் சொல்வதால் நான் என்னமோ தர்ம தாதா என்று கற்பனை எல்லாம் செய்து விடாதீங்க ......சில அமைப்புகளுக்கு பணம் அனுப்பி விட்டு INCOME TAX EXCEPTION கிடைக்குமா என்று நினைப்பவன் தான் ......அதையும் தாண்டி உயிர் கொடுத்து போராடி களத்தில் இறங்கி பாடுபட்டு தான் 300 பேர் காப்பாற்ற பட்டார்கள் ......இனி மேலாவது நான்கு சுவற்றுக்குள் இல்லாமல் ,களத்தில் இறங்கி வேலை செய்துட்டு அதன் பிறகு அதை பற்றி பக்கம் பக்கமாக எழுதுங்கள் உங்க சோசியல் மீடியாவில் ......நன்றி வணக்கம் ."என்றவனின் பேட்டியை பார்த்த கஜா அண்ட் கோவின் முகம் விகாரமாக ,காரில் மதுரா புன்னகைத்து கொண்டு இருந்தாள் .

போன் ஒலி எழுப்ப ,"செம்ம டா பேட்டி .....நச்சுன்னு இருந்துச்சு ..."என்றாள் மதுரா .
IndiaTv6faec9_samantha-ramcharan-film.jpg

"உன்னை நீயே பாராட்டி கொள்ளாதே பேபி ......கதை ,வசனம் ,DIRECTION எல்லாம் தாங்கள் தான் ...நீ கொடுத்த ஸ்கிரிப்ட் .....PERFORM மட்டுமே அடியேன் உடையது ......."என்றான் சூர்யா .

PENANACE WILL CONTINUE....
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
THAVAM 35

SURIYA பேட்டியை பார்த்த கஜா அண்ட் கோவின் முகம் விகாரமாக ,காரில் மதுரா புன்னகைத்து கொண்டு இருந்தாள் .

போன் ஒலி எழுப்ப ,"செம்ம டா பேட்டி .....நச்சுன்னு இருந்துச்சு ..."என்றாள் மதுரா .

"உன்னை நீயே பாராட்டி கொள்ளாதே பேபி ......கதை ,வசனம் ,DIRECTION எல்லாம் தாங்கள் தான் ...நீ கொடுத்த ஸ்கிரிப்ட் .....PERFORM மட்டுமே அடியேன் உடையது ......."என்றான் சூர்யா .

"பரவாயில்லை சிஸ்யா .....இந்த குருவை மிஞ்சிட்டே .......உனக்கு சினிமாவில் நல்ல எதிர்காலம் இருக்கு ......"என்றாள் மதுரா .

"என்னடீ நக்கலா ?"

"இல்லை கண்ணா கிண்டல்ஸ் ....."என்றாள் மதுரா .

"உனக்கு எப்படிடீ கருணா ACP ராஜேஸ்வரி உடன் சேர்ந்து போராடுவது தெரியும் ?????அதை செய்வது நான் என்று கஜா அண்ட் கோ நினைத்து இருப்பது எப்படி தெரியும் ?"என்றான் சூர்யா .
images (26).jpg

"பிரபு குட்டி ....என்னை என்ன மரத்தை சுத்தி டூயட் பாட தான் லாயக்கு என்று நினைத்து விட்டாயா என்ன ?????காலேஜ் டைம் எத்தனை சோசியல் ஒர்க் செய்து இருக்கேன் .....குன்னூரில் செயல் பட்ட ஒரு விபசார விடுதியை கூட மூடி இருக்கிறேன் தானே ......மதுரா SILENT லவர் கேர்ள் கிடையாதுன்னு இன்னுமா உனக்கு புரியலை ....."
"ஏன் தெரியாம .....அதான் ஜான்சி ராணி ,ராணி மங்கம்மா ரேஞ்சுக்கு செயல் பட்டு ,குன்னூரில் நடு ரோட்டில் அவனுங்க கையில் சிக்க இருந்தியே .....நானும் உத்தமும் வரவில்லை என்றால் உன்னை அலேக்கா பார்சல் செய்து துபாயில் விற்று இருப்பார்கள் .....அன்னைக்கே உன்னை வார்ன் செய்தேனா இல்லையா ....இது மாதிரி தனியா போய் நாட்டை காப்பாத்தறேன் ,புரட்சி செய்யறேன் என்று மாட்டிக்கொள்ளாதே என்று ......பட்டும் நீ திருந்தவே தில்லையாடி ?????"என்றான் சூர்யா கடுப்புடன் .

"நான் எல்லாம் திருந்தினால் நாடு தாங்காது தம்பி .....தவிர என்னை காக்க நீ என்ன army இறக்கிட மாட்டே ????சூர்யா இருக்க பயம் ஏன் ....."

"இப்படி பேசியே ஆளை ஒருவழி ஆக்கி விடு ......என்னவோ போ .....உனக்கு செக்யூரிட்டி வேலை பார்த்தே எனக்கும் கருணாவுக்கு பாதி உயிர் போய் போய் வருது .....ஒண்ணு இந்த குரங்கு வேலை எல்லாம் செய்யாமல் நீ அடங்கி இருக்கணும் .....இல்லை செய்ய விடாம நாங்களாவது அடக்கி இருக்கணும் .....ரெண்டுமே நடக்கும் காரியம் இல்லை ....இந்நேரம் வேறு எந்த பெண்ணாவது இருந்தால் வெளியே வரவே பயந்து நடுங்கி இருப்பாங்க ....."என்றான் சூர்யா .
ram-charan.jpg

"அது எல்லாம் அந்த காலம் சூர்யா .....அப்டேட் ஆகு தம்பி ......இந்த காலத்தில் எனக்கு என்ன என்று நடக்கும் அநீதிகளை தட்டி கேட்காமல் விட்டால் எங்கேயோ பற்றும் தீ நாளை நம் வீட்டை பொசுக்கி விடலாம் .....தெருவில் சாக்கடை ஓடுது என்று புலம்பி பிரயோஜனம் இல்லை ...இறங்கி சுத்தம் செய்ய வேண்டியது தான் ....மனிதன் படத்தில் ஒரு பாடல் வரும் கேட்டு இருக்கியா ?

மனிதன் மனிதன்
எவன்தான் மனிதன்?
வாழும்போதும் செத்து செத்து பிழைப்பவன் மனிதனா?
வாழ்ந்தபின்னும் பேரை நாட்டி நிலைப்பவன் மனிதனா?
பிறருக்காக கண்ணீரும்
பிறருக்காக செந்நீரும்
சிந்தும் மனிதன் எவனோ அவனே மனிதன் மனிதன் மனிதன்.
மனிதன் மனிதன்
எவன்தான் மனிதன்?
வாழும்போதும் செத்து செத்து பிழைப்பவன் மனிதனா?
வாழ்ந்தபின்னும் பேரை நாட்டி நிலைப்பவன் மனிதனா?
பிறருக்காக கண்ணீரும்
பிறருக்காக செந்நீரும்
சிந்தும் மனிதன் எவனோ அவனே மனிதன் மனிதன் மனிதன்.
அடுத்தவீட்டில் தீப்பிடிக்க
நினைப்பவன் மனிதனா?
அந்தநேரம் ஓடிவந்து அணைப்பவன் மனிதனா?
அடுத்தவீட்டில் தீப்பிடிக்க நினைப்பவன் மனிதனா?
அந்தநேரம் ஓடிவந்து அணைப்பவன் மனிதனா?
கொடுமைகண்டு கண்ணைமூடி கிடப்பவன் மனிதனா?
கோபம்கொண்டு நியாயம்கேட்டு கொதிப்பவன் மனிதனா?
கெடுப்பவன் மனிதனா எடுப்பவன் மனிதனா
கொடுப்பவன் எவனடா அவனே மனிதன்…
மனிதன் மனிதன்…


 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நான் மேற்சொன்ன பாடலில் வரும் உயிர் உள்ள மனித ஜென்மமாய் இருக்க நினைக்கிறன் சூர்யா.வெந்ததை சாப்பிட்டு ,வேளை வந்தால் போய் சேரும் வாழ்க்கை வாழும் டயிப் நான் கிடையாது.என்னை பற்றி தெரிந்தே இந்த கதாகாலாட்சேபம் இப்போ ரொம்ப தேவையா ?"என்றாள் மதுரா .

"சரி விடு ...விடு உனக்கு ரிஸ்க் எடுப்பது ரஸ்க் சாப்பிடுற மாதிரி தான் ...ஒத்துக்கறேன் ......ஆமா கருணா விஷயம் எப்படி தெரியும் ?

"நான் தான் ஜான்சி ராணி ஆச்சே ....ராணி ஒற்றர் வேலை எல்லாம் செய்யும் பா ....எப்படியோ விஜய் தான் இந்த RESCUE ஆபரேஷன் செய்வது என்று தெரிய வந்தது ....அதை விடு ..."என்றாள் மதுரா .

"இல்லைடீ அவன் தான் பின்னால் இருந்து ஹெல்ப் செய்யறான் என்று தெரிந்தால் அவன் உயிருக்கே ஆபத்து ....அதான் ....அது எப்படியோ மல்டி MILLIONAIRE என்பதால் என்னை என்னவோ பேட்மேன் ரேஞ்சுக்கு கஜா அண்ட் கோ ஒரு பிம்பத்தை உருவாக்கி விட்டார்கள் .....கருணாவிற்காக அதை ஒப்பு கொள்ள வேண்டியதாக இருக்கிறது .."என்றான் சூர்யா .

"மை லிப்ஸ் ஆர் சீல்டு ...... டோன்ட் ஒர்ரி டா ....உங்க கூட்டு களவாணி தனம் எல்லாம் வழக்கம் போல் வெளியே போகாது ...ஜமாய்ங்க ....."என்ற மதுரா அழைப்பை துண்டித்து விட்டு தன் ஹாண்ட்பாக் திறந்து அதன் உள் இருந்த பென்டிரைவ் ஒன்றை எடுத்து பார்த்து புன்னகைத்தாள் .

ஆல்வின் வீட்டில் இருந்து அவள் தூக்கி வந்த டைரி உடன் இருந்த பென் டிரைவ் அது ....விஜயினுடையது ....அதில் தான் அவன் காவல் துறை உடன் சேர்ந்து செய்யும் RESCUE ஆபரேஷன் பத்தி தேதி வாரியாக விவரித்து இருந்தான் .

அதை வைத்து தான் விஜய் வைத்த ஆப்பு பத்தாது என்று கஜாவிற்கு இவள் சூர்யா மூலம் இன்னும் ஆப்பினை பலமாக அடித்து வைத்தது .மதுராவிற்கு SITUATION PRESENCE ஆப் மைண்ட் என்று சொல்வார்களே அது மிகவும் அதிகம் .....அதிகமாக பேசுவது கிடையாது தான் என்றாலும் எந்த சூழ்நிலையை அசராமல் சமாளிக்கும் நம் தாய்மார்களின் போராட்ட குணம் அவளிடம் அதிகமாகவே உண்டு .பார்ப்போம் இந்த குணம் பிற்காலத்தில் சுமனிடம் இருந்து அவனின் வக்கிரத்திடம் இருந்து காப்பாற்றுகிறதா என்று .........இல்லை மணமாலைக்கு பதில் மலர் வளையம் ஆர்டர் கொடுக்க வேண்டி வருமா
52870099.jpg

மற்ற பெண்களின் மானத்தையும்,உயிரையும் காப்பாற்ற போராடும் இவளால் தன்னை காத்து கொள்ள முடியுமா ?

300 பெண்களை எந்த சேதாரமும் இல்லாமல் மீட்ட கருணா ,அவனை காப்பாற்ற உலகின் முன் அவன் செய்யும் RESCUE பணியை தான் செய்வதாய் ஏற்ற சூர்யா இவர்களால் தங்களின் பாதுகாப்பு வளையத்தில் உள்ளவளை காப்பாற்ற தான் முடியுமா ????

திருமண கனவோடு இவள் ..........இவளை நாசமாக்கியே தீர்வது என்ற வெறியில் வெறி பிடித்த கேடுகெட்டவன் .....இவள் திருமண மேடை நோக்கி செல்வாளா இல்லை சுமனால் ஹாஸ்பிடலில் குற்றுயிராய் கிடப்பாளா .....
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அதே சமயம் தன் லேப்டாப்பில் இந்த இன்டெர்வியூ பார்த்து விட்டு அலுவலகம் வந்த ருத்ரா தன் பாட்டியின் அறைக்கு ஓடினான் .
Vikram_Prabhu_at_Arima_Nambi_Audio_Launch.jpg

"பாட்டி !...அந்த கஜா .............."என்றவனை சிவகாமியின் அழகிய புன்முறுவல் வரவேற்றது .

"பார்த்தேன் ......கெடுவான் கேடு நினைப்பான் என்பது இது தான் ......கருணாவை கிளீன் போல்ட் ஆக்க முயன்று கருணாவும் ,சூர்யாவும் வைத்த ஆப்பில் ......இந்த ஆள் துண்டை காணோம் துணியை காணோம் என்று ஓடியதை .....எவ்வளவூ கண் கொள்ளா காட்சிடா அது .........அன்பால் தொழில் உலகின் முடி சூடா மன்னன்டா அவன் .....அவனை கிள்ளு கீரையாக நெனைச்சு இருக்கு அந்த லூசு ......"என்றார் சிவகாமி .

"அப்போ அந்த சீனா டீல் பேசுபவர்களை நம்ம பக்கம் வழக்கம் போல் டிவேர்ட்ட் செய்துடுறேன் ....அந்த ஆளுக்கு வைக்கும் கடைசி ஆப்பு பாட்டி ....இனி அந்த ஆள் காலி .....நடுத்தெருவில் தொழில் அழிந்து நிற்க போகிறான் ......"என்றான் ருத்ரா .

"வெண்ணை திரண்டு வரும் வேளையில் பண்ணையை உடைத்த கதையா போச்சு .......அந்த சீனா டீல் எந்த வகையிலாவது முடியனும் ருத்திரா ........இதில் நீ எதையும் செய்யாதே .....அந்த டீல் முடிஞ்சே ஆகணும் ....வேறு யார் அதை தடுக்க முயன்றாலும் விட கூடாது என்று நம் பக்கம் உள்ளவர்களுக்கு கோட் மெசேஜ் அனுப்பி விடு "என்றார் சிவகாமி .

"என்ன பாட்டி .......அந்த டீல் செய்து முடித்து export செய்து விட்டால் அந்த ஆள் ஜெயித்து விடுவான் .150-200 கோடி வருமானம்.இந்த டீல் காட்டி வெளிநாட்டில் வேறு பல டீல் பிடித்து விட்டால் ஸ்டெடி ஆகிடுவான் ......இத்தனை நாள் நாம் பட்ட கஷ்டத்திற்கு எல்லாம் பலன் இல்லாமல் போய்டும் பாட்டி .... நிறைய பெரும்புள்ளிகளின் கருப்பு பணம் ,வங்கி கடன் ,தன் மொத்த சொத்து அடமானம் வைத்து இந்த டீல் முடிக்க எல்லா வழியிலும் முயன்று கொண்டு இருக்கிறான் ....நீங்களே அவனை ஜெயிக்க வைத்து விடுவீங்க போல் இருக்கே பாட்டி ......"என்றான் ருத்ரா.

"ருத்ரா !......ஒரு பழமொழி கேட்டு இருக்கியா கண்ணா நீயி ...கண்ணால் காண்பதும் பொய் ...காதால் கேட்பதும் பொய் ...தீர விசாரிப்பதே மெய் என்று ......."என்ற சிவகாமி வாய் விட்டு நகைக்க ருத்ராவும் ,வெற்றியும் அவரின் சிரிப்புக்கு காரணம் புரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர் .

"அம்மா !...............என்னமா சொல்றீங்க ..............புரியலை ..............."என்றார் வெற்றி குழப்பத்துடன் .

"அந்த ஆள் கானல் நீரை தேடிட்டு இருக்கான் வெற்றி ...........இந்த கானல் நீர் அந்த ஆளின் தாகத்தை தீர்க்காது ....உயிரை எடுக்கும் .....கேம் ஸ்டார்ட்ஸ் ..........நாம்ம இனி கை கட்டி வேடிக்கை பார்த்தால் போதும் ............டாமினோஸ் என்ற விளையாட்டு கேள்வி பட்டு இருக்கியா .....நூத்துக்கணக்கான பிளாக் அடுக்கி வைத்து ,ஒரு பிளாக் தள்ளி விட்டால் அது நிற்காமல் கடைசி பீஸ் வரை விழும் ....அப்படி ஒரு ஆட்டம் ஏற்கனவே ஆரம்பித்து நடந்து கொண்டு இருக்கிறது வெற்றி ................அந்த விளையாட்டின் கடைசி பீஸ் விழுந்தால் ருத்ரா சொன்ன கஜாவின் அத்தனையும் தடம் இல்லாமல் அழிந்து விடும் ............பொறுமை ..........வெற்றி ..........."என்றார் சிவகாமி .

"பாட்டி !............எனக்கும் அப்பாவுக்கும் தெரியாமல் ஏதாவது பிளான் அரங்கேற்றி கொண்டு இருக்கீர்களா என்ன ?"என்றான் ருத்ரா சந்தேகத்துடன் .

பதில் சொல்லாத சிவகாமி வாய் விட்டு நகைக்க ஆரம்பித்தார் .

அதே சமயம் காரில் தங்கள் வீட்டினை நோக்கி சென்று கொண்டு இருந்தனர் கஜாவும் ,சோனாவும் .

காரில் இருந்த முழு விஸ்கி பாட்டிலை தன் தொண்டைக்குள் கொட்டினார் கஜா ......நெஞ்சில் எரிந்து கொண்டு இருந்த நெருப்பினை என்ன செய்தும் அவரால் அணைக்க முடியவில்லை .....நம்பியார் கையை பிசைந்து கொண்டு இருந்து போலெ பிசைந்து கொண்டு இருக்க மட்டுமே அவரால் முடிந்தது .என்ன யோசித்தும் அவரால் அடுத்து என்ன என்று யோசிக்க முடியவே இல்லை .

PENANCE WILL CONTINUE....
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நோ நோ நோ கோபம்
நட்பூஸ் ...இப்போ தான் ஒரு தோழி மெயில் அனுப்பி கிழி கிழின்னு கிழிச்சி காயவச்சாங்க ....

என்னவோ மதுரா ரெட்டர்ன் ஆனா உடனே திருமணம் என்று ஒரு மாசமாய் ஹல்வா கிண்டி கொடுத்துட்டு இருக்கே ...இப்போ என்ன னா ஒரு பொண்ணு உயிர்க்கு போராடும் போட்டோ போட்டுட்டு ,மதுரா சுமன் கிட்டே மாட்டி உயிர் விடுவாளா என்ற ரேஞ்சுக்கு எடுத்துட்டு போறேன்னு கதற வச்சுட்டாங்க ...

நான் என்னப்பா செய்யறது ....கதை போகும் போக்கில் சுமன் என்ற ஒருவன் சோனா பங்களாவில் உடல் நலம் தேறி வருவதையே மறந்து விட்டேன் ....அப்புறம் தான் ஏதோ குறையுதேன்னு யோசிச்சா இவன் மீதம் இருக்கான் .....வில்லன் வில்லேன்னு சொல்லிட்டு ஒரு ஆக்ஷன் இல்லைனா எப்படி .....அதான் கதை போக்கை மீண்டும் கொஞ்சம் மாற்ற வேண்டி வந்தது .....

இதனால் எல்லோருக்கும் தெரிவிப்பது என்ன வென்றால் யார் மதுராவின் கரம் பிடிக்க போவது என்பதை 2050 வந்து அறிந்து கொள்ளும் படி அறிவிக்கிறேன் ...அப்பொழுதும் அதற்கான முடிவூ தெரியுமா என்பது சந்தேகம் தான் .

(என்னது எடு அந்த கடப்பாரையை யா ...நோ நோ சும்மா உள்ளுலயிக்கி .......)

சீக்கிரம் கல்யாண சமயல் சாதம் சாப்பிடலாம் மக்கா ....

aana when enpathu suspense
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
THAVAM 35(1)

ஒட்டுமொத்த உலகத்தின் முன் கேலி பொருள் ஆக்க பட்டு விட்டதை போல் உணர்ந்தார் .போலீஸ் ஸ்டேஷன் படி அது வரை ஏறி இராதவர் அன்று முதல் முறையாய் ஏறி இருந்தார் .அவர் ஏற்பாடு செய்த பூவால் வந்த வினை .கருணாவின் சொல் படி அந்த பூ மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைக்க பட ,பூவின் மேல் மானநஷ்ட வழக்கு வேறு பதிவூ செய்ய பட்டது .
govind-namdev_730x419.jpg

இவர்களை காப்பாற்ற இவரின் வக்கீல் பூவிற்கு பைத்தியம் ,தீர விசாரிக்காமல் தாங்கள் பூவை நம்பி விட்டதாக ,இனி இது போல் நடக்காது என்று எழுதி கொடுக்க வைத்து மீட்டு வந்தார் .இவர்கள் போடும் பிச்சை காசுக்கு ஆசை பட்டு பைத்தியம் என்ற பெயர் கிடைத்தது தான் பூவிற்கு மிச்சம் .தங்களை காப்பாற்றி கொள்ள அந்த கடவுளே வந்தாலும் அவரை குற்றவாளி ஆக்கி விட்டு எப்படி தப்புவது என்று குறுக்கு வழியில் யோசிப்பவர்கள் அவர்கள் என்ற உண்மை வெகு தாமதமாக உணர்ந்தாள் அவள் .

உண்மையை வெளியே சொன்னால் கொன்று விடுவதாக வேறு மிரட்டி வைத்தனர் .அதற்கு பயந்து பைத்தியம் போலெ நடிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ள பட்டாள் அந்த பூ .....சோனாவின் பணத்திற்கு ஆசைப்பட்டு ,அவள் சொன்ன படி ஆடிய பூவிற்கு கிடைத்தது என்னவோ உலகத்தின் முன் பைத்தியக்கார பட்டம் மட்டும் தான் .அவர்கள் பணபலத்தால் வெளியே ...அந்த பணத்திற்கு ஆசை பட்ட இவள் மனநல மருத்துவமனையின் அறைக்குளே

அந்த பெண் இன்ஸ்பெக்டர் ராஜீ மாதிரியே கறார் பெண்மணி ....விசாரணை என்ற பெயரில் இவர்களை நன்றாக தாளித்த பிறகே வெளியே விட்டார் .

காரில் சென்று கொண்டு இருந்த இவர்களுக்கு தலைவலி ,தலை சுற்றல் ...விட்டால் ஹார்ட் அட்டாக்கே வந்து விடும் நிலைமையில் இருந்தார்கள் .

அப்பொழுது கஜாவின் போன் ஒலிக்க ஆரம்பித்தது .டிஸ்பிலே அழைப்பது யார் என்று காட்ட ,கஜாவின் முகம் வெளிறி போனது .சுமன் அழைத்து கொண்டு இருந்தான் .

"ஹலோ ..."என்று ஆரம்பிப்பதற்குள்,சுமன் ,காதிலேயே கேட்கவே முடியாத சென்சார் செய்யும் வார்த்தைகளை கொண்டு ,வயசானவர் என்று கூட பார்க்காமல் திட்டி தீர்த்து விட்டான் .....புலி வால் பிடித்தவனின் கதையாகி போனது அவர் வாழ்க்கை .
Kanjoos-foodie.png

"இனி என்னை கேட்காமல் எதையவது செய்து வச்சே ....மவனே .....அது தான் நீ கடைசியாக உயிரோடு இருக்கும் தினம் .....அப்போ அப்போ வார்னிங் எல்லாம் கொடுத்திட்டு இருக்க மாட்டேன் ......உன்னை புதைக்கவோ ,எரிக்கவோ கூட உடம்பு கிடைக்காது ...........தெரியும் தானே என்னை எதிர்த்த எத்தனை பேர் இருந்த இடமே தெரியாமல் போய் இருக்கிறார்கள் என்று .......அந்த லிஸ்டில் சேர வேண்டாம் என்றால் நான் சொல்வதை மட்டும் கேட்டு நடந்தால் போதும் ........உன் வீட்டில் நான் அனுப்பும் ஆட்கள் வந்து இருப்பாங்க .....அவங்க என்ன இன்ஸ்ட்ருக்ஷன்ஸ் சொல்ராங்களோ அதை மட்டுமே செய்தால் போதும் ......வேற எந்த......................நீ புடுங்க வேண்டாம் ....புரிந்ததா ????"என்றான் சுமன் அரை மணி நேர கத்தலுக்கு பிறகு .

அதாவது கஜா சுமனால் ஹவுஸ் அர்ரெஸ்ட் செய்ய பட்டார் ....அவன் உத்தரவூ இல்லாமல் மூச்சு விட கூட கூடாது என்ற அளவுக்கு கட்டுப்பாடு .அவரின் வீடு மொத்தம் சுமன் கண்காணிப்பு வளையத்துக்குள் .வெளி உலகத்திற்கு சுமன் ஆட்கள் பாடி கார்ட்ஸ் ....ஆனால் உண்மையில் அவர்களின் கைதி இவர் .

தலையை பிடித்து கொண்டு காரில் இருந்து இறங்கினார் கஜா தன் "கஜா போர்டில் ".அவர் பலர் வாயில் ,வயத்தில் அடித்து ,பலரின் சாபத்தோடு ஆசை ஆசையாய் கட்டிய கோட்டை இன்று அவருக்கே சொந்தம் இல்லை .

ஹாலில் குழுமி இருந்தனர் அங்கு வேலை செய்பவர்கள் .அவர்களை அதிகாரம் செய்து கொண்டு இருந்தார் சொர்ணா .இருக்கும் தலைவலி போதாது என்று இது வேறா என்று நொந்து கொண்டார் கஜா .
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"என்ன சொர்ணா ......என்ன நடக்குது இங்கே ?எதற்கு இவங்க எல்லாரையும் நிறுத்தி வைத்து சண்டை போட்டுட்டு இருக்கே ....?"என்றார்

"ஹ்ம்ம் எனக்கு வேண்டுதல் அதான் ......நன்றி இல்லாத நாய்ங்க ....ஒட்டுமொத்தமா வேலையை விட்டு நிற்கறேன் என்று துள்ளுதுங்க ....அதான் வெட்டி பொலி போட்டுடுவேன் என்று மிரட்டிட்டு இருக்கேன் .....நம்ம போட்ட பிச்சையில் வாழ்ந்துட்டு இப்போ இப்படி துள்ளுதுங்கனா யார் கொடுத்த இடம் எல்லாம் உங்க பொண்டாட்டியும் ,உங்க ரெண்டாவது பொண்ணும் ,மாப்பிளை என்று கொண்டு வந்தீங்களே ஒரு தெரு நாய் அந்த ஆள் கொடுத்த தைரியம் .......அவங்க ஒட்டுமொத்தமா வீட்டை விட்டு போய்ட்டாங்களாம் ...அதனால நாங்களும் போறோம் என்று துள்ளுதுங்க இதுங்க ...."என்றார் சொர்ணா .

எந்த மனிதனை தெரு நாய் என்று சொன்னாரோ அதே சேதுவிற்கு வலை விரிக்க ,தங்கை கணவன் இன்னொரு சகோதரன் ,மகன் போன்றவன் என்பதை மறந்து தான் செய்த சாகசங்களை அந்த நேரம் ஏனோ மறந்து விட்டார்.

"யார் வீட்டை விட்டு போனது சொர்ணா ?"என்றார் கஜா -இருக்கும் பிரச்சனையில் இது வேறா என்றாகி போனது அவருக்கு .

"வேறு யார் உங்க மனைவி ,அவரின் ஆசை மகள் கனகா ,அவளின் புருஷன் சேது தான் வீட்டை விட்டு சென்றது ."என்றார் சொர்ணா .

"என்னது .....மரகதம் வீட்டை விட்டு வெளியே போய்ட்டாளா ?"என்ற கஜா கேட்டதை நம்ப முடியாதவராய் சோபாவில் பொத்தென்று அமர்ந்தார் .

அது வரை தன்னை எதிர்த்து ஒரு வார்த்தை கூட பேசியிராத மனைவி ,குரலே எழும்பாமல் பேசும் மனைவி ,தன் வேலைகளை கண்டும் காணாமல் இருந்த ஊமை கோட்டான் ..இன்று தன்னையே எதிர்த்து வீட்டை விட்டு வெளியேறியதை அவரால் ஜீரணிக்கவே முடியவில்லை .

மனைவிமார்களின் அமைதி என்பது பயத்தால் வருவது அல்ல ...சில சமயங்களில் மனம் வெறுத்து போனதால் வருவது ...நீ இனி என் வாழ்வில் தேவையே இல்லை என்று கணவனை ஒதுக்கி விடுவதால் வருவது
உள்ளே குமுறி கொண்டு இருக்கும் எரிமலையின் வெப்பம் காரணமாய் வருவது என்று ஏனோ அவருக்கு புரியாமல் போனது .

ரெண்டு உயர்ந்த ,நல்ல குணவதிகள் மனைவியாய் கிடைத்தும் ,இருவருடனும் வாழாமல் வாழ்க்கையை தொலைத்து நிற்கும் அவல நிலை கஜாவிற்கு .....தனக்கு இருமுறையும் கிடைத்தது எவ்வளவூ பெரிய சுவர்க்கம் என்று புரியாமல் அகம்பாவத்தால் ,திமிரால் என்னவோ சாவே தனக்கு கிடையாது என்ற நினைப்புடன் இவரை போன்ற பல பேர் ஆடித்தான் தான் பார்க்கின்றனர் ....ஆட விட்டு படைத்தவனும் வேடிக்கை பார்த்து விட்டு அடக்கி தான் விடுகிறான் ....புரிந்தவன் ஞானி .....புரிந்து கொள்ள முயற்சிப்பவன் சம்சாரி .....புரியாதவன் அழிவை நோக்கி செல்பவன் .

"மம்மி ......க்ராண்ட்மா கிட்டே இருந்தது எல்லாம் காஸ்டலி ஜெவெல்ஸ் ......அதை எல்லாம் எடுத்து போக எப்படி அல்லோவ் செய்தீங்க ????இட்ஸ் மைன் .....எல்லாம் வைரம் ....ஒண்ணு செய்யலாமா வைர நகை திருடிட்டாங்க என்று அவங்க மூணு பேர் மேலையும் கேஸ் போடலாமா ????நமக்கு ஜெவெல்ஸ் கிடைக்கும் ......அவங்களும் இதுக்குதண்டனை அனுபவித்தது போல் இருக்கும் ?""என்றாள் சோனா கண்கள் மின்ன .
Hamsa-Nandini-item-song-in-Gopichand-Movie-1327.jpg

"தேவையே இல்லை டாலி ......வெளியே போறேன் என்று சொல்பவர்கள் எல்லாத்தையும் அள்ளி போக விட்டு வேலை பார்ப்பேனா என்ன .......வெறும் கையாக தான் டாலி வெளியே தொறத்தி விட்டேன் ......."என்றார் சொர்ணா .

"அதானே பாத்தேன் ........வெல் டன் .......வேணும் தெருவில் போய் பிச்சை எடுக்கட்டும் .......இருக்கும் இடம் எவ்வளவூ பெரிய சுவர்க்கம் என்று தெரியாமல் ஆடி பார்த்தாங்களே ..........செத்து தொலையட்டும் .........."என்றாள் சோனா .

(ஆமா மா நீ என்னவோ சாக வரம் பெற்று இருக்கும் ரேஞ்சிக்கு பேசு ...................உனக்கு தான் ஏற்கனவே சங்கு ஊதியாச்சு லே ................இன்னும் உன் ஆட்டம் அடங்கவே மாட்டேங்குதே ......................)
 
Status
Not open for further replies.
Top