All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அனிதா ராஜ்குமாரின் "என்ன தவம் செய்தேன்" - கதை திரி

Status
Not open for further replies.

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அவர்களின் நெருக்கத்தை பார்த்து ஸ்ரீயும் ,உத்தமும் கண் கலங்க நின்று இருந்தனர் .எது நடக்க வேண்டும் என்று கடவுளிடம் அவர்கள் இத்தனை நாள் வேண்டி கொண்டு இருந்தார்களோ அந்த வேண்டுதலுக்காக வரம் மதுரா ரூபத்தில் சூர்யாவிற்கு கிடைத்து விட்டது .அவர்களுக்கு மட்டும் வேறு என்ன வேண்டும் ...மகனின் நல் வாழ்வூ தானே .....அவன் மனசை கவர்த்தவளே மீண்டும் அவன் கை பிடிக்க வந்து விட்டாள் .....அவர்களுக்கு தேவையான தனிமையை கொடுத்து விட்டு இருவரும் வெளியே செல்ல முயல மதுராவின் குரல் அவர்களை தடை செய்தது .

"என்ன ப்ரோ ...எடுத்து வந்த டிபன் அப்படியே கொண்டு போய் உள்ளே தள்ளலாம் என்று பிளான்னா .....ரொம்ப பசிக்குது ....எடுத்து வந்த trolley அப்படியே இங்கே வையுங்க பார்க்கலாம் ..."என்றாள் மதுரா .


ஒரு கணம் அவர்கள் திகைத்து மீள ,உத்தம் கொண்டு வந்த டிபன் ட்ரொலியை அவர்களின் அருகே கொண்டு வந்து மூவருக்கும் பரிமாறினான் .

"உட்காருங்க ப்ரோ ...நீங்களும் சாப்பிடுங்க .....நிறைய பேசணும் ."என்றாள் மதுரா .

அவளை கண்ட படி ,வானத்தில் பறந்து கொண்டே வழக்கத்தை விட அதிகமாகவே சாப்பிட்டான் சூர்யா .

( அட என்னங்கடா நடக்குது இங்கே ...இந்த ரூட்டில் வேற ட்ரெயின் விட்டு இந்த ஹனி காபரா படுத்துத்து )

'சொல்லுமா மதுரா ....திருமணம் எப்போ வைச்சுக்கலாம் ?"என்றார் ஸ்ரீ .
Birthday-Special--Side-Actress-Nadhiya-Unseen-Photos-Collections-19.jpg

"இந்த வாரம் வெள்ளிக்கிழமை ஆன்ட்டி ....அன்னைக்கு ரொம்ப நல்ல நாள் ......கதிரி நரசிம்மருக்கு திருமண நாள் வேறு ......எனக்கு ரொம்ப பிடிச்ச கடவுள் அவர் ....."என்றாள் மதுரா புன்னகையுடன் .

"ஹே என்ன நீ பாட்டுக்கு தேதி எல்லாம் சொல்லிட்டு போறே ...உன் அப்பா அம்மாவை கேட்க வேண்டாமா ...இல்லை எல்லா ஏற்பாடும் செய்ய தான் வேண்டாமா ....இன்னும் ஐஞ்சு நாளில் திருமணம் என்று நீ பாட்டுக்கு சொல்லிட்டு போறே ....."என்றான் சூர்யா திகைத்தவனாய் .

"ஐஞ்சு நாளில் எல்லா ஏற்பாட்டையும் செய்ய முடியலைன்னா நீ எதுக்கு ஜெய்ப்பூர் ராஜ பரம்பரை,வியாபார காந்தம் ,மல்டி மில்லியனேர் என்று பீலா விட்டுட்டு சுத்திட்டு இருக்கே ..........மேரேஜ் என்றதும் இந்நேரம் சென்னையின் மிக பிரபல ,ப்ரம்மண்டமான திருமண ஹால் புக் செய்து இருக்க வேண்டாம்டா தடிமாடு .....ஒரு வருஷம் ஆனாலும் நடந்த திருமணத்தை பத்தி உலகமே பேசும் அளவூ செய்ய வேண்டாம் ..........என்னவோ புலம்பிட்டு இருக்கே .........சரி சரி நீ ஒத்து வர மாட்டே ...நான் வேற மாப்பிள்ளை ஏற்பாடு செய்துக்கறேன் ..."என்றவளின் காதை பிடித்து திருகினான் .

"இந்த வாய் இருக்கே ........அடங்கவே அடங்காது இல்லை .................உன்னை ............."என்றவனின் கன்னத்தை கிள்ளி விட்டாள் மதுரா .

"மதுராமா ...இது எல்லாம் ரொம்ப ஓவர் ....திருமணத்திற்கு முன்பே என் மகனை எப்படி கொடுமை படுதறியே ....திருமணம் முடிந்தால் .................மகனே உன் பாடு அதோ கதி தான் ......உன் நிலைமை எப்படியாடா ஆகணும் .....கிளியை வளர்த்து காட்ஜில்லா கிட்டே மாட்டி விட்ட கதையாய் போச்சேடா உன் நிலைமை .....இந்த அநியாயத்தை கேட்க ஆள் இல்லையா ?"என்று புலம்பினார் ஸ்ரீ புன்னகையுடன் .

"ஒய் மாமியாரே ....என்ன லந்தா ...............உம்மை முதியோர் இல்லத்திற்கு பேக் செய்யணுமோ ......இந்நேரத்திற்கு திருமணத்தை சீக்கிரம் முடி என்று மகனுக்கு screw கொடுப்பேன்னு பார்த்த அந்த லூசு கூட சேர்ந்துட்டு ட்ராமாவா போட்டுட்டு இருக்கே .......என்ன சொல்லாம கொள்ளாம வைர நகையோடு ஆஃபீடீ ஆகிடுவேன் ..."என்றாள் மதுரா .

"யாரு நீயி ...........சான்ஸே இல்லை ...நகையோடு ஓடுவது எல்லாம் உன் ஸ்டைல் இல்லேம்மா ............கத்தியை அடிவயித்தில் சொருகிட்டு போயிட்டே இருப்பே ...."என்றார் ஸ்ரீ .

"full form தான் இருக்கீங்க .......புழைச்சிப்பீங்க ...........என்னை பத்தி தான் தெரியுது இல்லை ....அப்புறம் உங்க புள்ளையை screw கொடுப்பதை விட்டுட்டு என்னை கலாய்ச்சிட்டு இருக்கீங்க .... "என்றாள் மதுரா .

"சரி சரி அவ விருப்பப்படியே செய்யேண்டா ............உனக்கும் பத்து கழுதை வயசாகுது ............நானும் பேரன் பேத்தின்னு உடம்பில் தெம்பு இருக்கும் போதே வளர்த்துடுவேன் இல்லை ..............பவானி ,சங்கரன் நாம சொன்ன வேண்டாம் என்றா சொல்லிட போறாங்க ...........சம்மதம் சொல்ல வேண்டியவளே க்ரீன் சிக்னல் கொடுத்துட்டா ......இன்னும் என்னடா .........மதுரா சொல்வது போல் ராஜவம்சம் என்று சொல்லிட்டு இதை கூட செய்ய முடியலைன்னா எப்படி ............"என்றார் ஸ்ரீ .

"அதானே இப்பவே ஆரம்பிச்சா தானே ............5 மணப்பெண் வேற ரெடி ஆவது என்ன சும்மாவா ????ஐஞ்சு நாளே ரொம்ப கம்மி ..........."என்றாள் மதுரா .
 
Last edited:

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"என்னது 5 கல்யாண பெண்ணா .......ஏய் ...நான் ராஜவம்சம் தான் அதற்காக அரண்மனை அந்த புரத்தை எல்லாம் நிரப்பும் ஐடியா இல்லேமா எனக்கு ...........உன்னை வச்சு சமாளிப்பதே முடியாது .........இதுல இன்னும் ஐந்தா .........?"என்று அலறினான் சூர்யா .

"தோடா ..............மாடர்ன் தசரதன் 60,000 பொண்டாட்டி கட்ட கிளம்பிட்டார் ..............லூசு .............மாடசாம்பிராணி ......மணப்பெண் என்று சொன்னது -----ACP ராஜேஸ்வரி ,சந்திரா ,பூரணி ,நானு ,அப்புறம் மேக்னாவை தான் ......"என்றாள் மதுரா .

"என் சொத்து காலி ...........போறவங்க வரவங்களுக்கு திருமணம் செய்ய நான் தான் இளிச்சவாய் கிடைத்தேனா ...........நாலுல சந்திரா நீ கூட ஒகே ...என் தங்கை ,என்னை கட்டிக்க போறவ என்று செலவூ செய்யலாம் .....ராஜிக்கு ருத்ரா இருக்கான் தானே ......அவன் கிட்டே இல்லாத பணமா ....... .............இதுல அந்த லூசு மேக்னா தீடிர் என்று எங்கு இருந்து குதிச்சா ????அவளுக்கு தான் அவங்க அப்பன் கோடிக்கணக்குல சேர்த்து வைச்சுட்டே போறாரே ..... "என்றான் சூர்யா குழப்பத்துடன் .

"இப்படி தான் ................"என்ற மதுரா தன் ஹாண்ட்பாக்கில் இருந்து பல போட்டோக்களை எடுத்து போட்டாள் ,போட்டாள் போட்டு கொண்டே இருந்தாள் .
maxresdefault (2).jpg

"என்னடீ இது .....................கருணாவா இப்படி .........................எப்போ ..........எப்படி ............."என்று திகைத்து போய் எழுந்தே நின்று விட்டான் சூர்யா .

அவன் மட்டும் இல்லை ஸ்ரீகும் ,உத்தமிற்கும் கூட பேரதிர்ச்சி தான் .....

"மதுரா என்னடீ இது ...........கருணாவா இப்படி .............அவன் பெண்கள் கிட்டே இப்படி எல்லாம் நடக்கவே மாட்டானே ...........குடும்பம் அது இதுன்னு ஓவர் செண்டிமெண்ட் பார்ப்பவன்டீ அவன் ............அவன் இப்படி நடந்து கொண்டான் என்பதை நம்பவே முடியலை ............"என்றவன் பொத்தென்று மீண்டும் கட்டிலில் அமர்ந்தான் .

"ALL IS FAIR IN LOVE AND WAR கேள்வி பட்டது இல்லையா டார்லிங் நீயி ?.............இதுக்கு ஏன் எவ்வளவூ டென்ஷன் நீ ஆகறே .............?அவன் வாழ்க்கை அவன் முடிவூ ...............வாழ்க்கையில் சில சமயம் ஏன் எதற்காக சில சம்பவங்கள் நடக்கிறது என்பது புரியாது தான் ..........ஆனால் ஆட்டி வைப்பான் அவன் ...........நம்மை மீறி சிலது நடக்கும் போது தான் வாழ்க்கையின் நிதர்சனம் புரிகிறது இல்லையா சின்னத்தம்பி ."என்றாள் மதுரா .

"அப்போ மேக்னா ..............."என்றவனின் முன் ஒரு வீடியோவை ஓட விட்டாள் மதுரா ........கத்ரி பார்ம் ஹவுஸ்சில் இரவூ மதுராவிடம் மேக்னா கத்தியது ஓடியது .

பார்த்தவர்களால் தாங்கள் கண்டதை நம்ப முடியாமல் தலையை பிடித்து கொண்டு அமர்ந்து இருந்தனர் .

"அப்போ இந்த பசங்க ....மேக்னா பசங்களா ..............அப்போ பசங்களோட அப்பா .............."என்றான் சூர்யா .

"இன்னுமா அடையாளம் தெரியலை .................."என்றாள் மதுரா .

வெகு நேரம் அங்கு கனத்த மௌனம் நிலவியது .கண் முன் காண்பதை மூளை கிரகிக்க முடியாமல் தவித்து கொண்டு இருந்தது என்றால் மிகையல்ல .அவர்கள் அறிந்த விஜய கருணாகரனுக்கும் அங்கு போட்டோ ,வீடியோ காட்டிய விஜய்க்கும் குறைந்தது 100 வித்தியாசம் விடலாம் .அவர்கள் அறிந்த மேக்னா என்ற பெண்ணோடு நிழல் ஓத்து போகவில்லை .

"ஏதாவது போட்டோ ஷாப் செய்து விளையாடறியா மதுரா ?"என்றான் சூர்யா திகைப்பு நீங்காதவனாக

"தோ டா .....நான் என்ன லூசா இல்லை சாடிஸ்ட் என்று நினைப்பா உனக்கு எருமை ????ஒரு பெண்ணின் மானத்தோடு கூட புத்தியுள்ள ,நல்ல குடும்பத்தில் பிறந்த எவளாவது விளையாடுவாளா ????....இது உண்மை ........நடந்ததற்கு சாட்சியாய் உயிர் உள்ள இரு ஜீவன்கள் இருக்கு "என்றாள் மதுரா


"கருணாவிற்கு இது தெரியுமா ?"என்றான் சூர்யா .

"அந்த ஆளுக்கு எது தெரியும் தெரியாதுன்னு எனக்கு எப்படி தெரியும் .........தெரியாது தான் நினைக்கிறன் ................இல்லைன்னா ருத்ரதாண்டவம் ஆடிட்டு இருப்பானே ..........அவ காலேஜ் நாளில் காதலிக்கறா என்று சொன்னதை நீங்க ரெண்டு பேருமே நம்பலை ............அந்த லூஸு காதலன் தான் உலகம் என்று மூளை குழம்பி அலைஞ்சுட்டு இருந்து இருக்கு ............காதலை அவ சொல்ல வந்த சமயம் "உள்ளம் கேட்குமே" பட ஷியாம் ,லைலா கதையாகி போச்சு .....அவ தன் காதலன் கிட்டே ப்ரொபோஸ் செய்ய வந்த சமயம் ,அந்த லூசு "நான் மதுராவை லவ் செய்யறேன் ...அவ கிட்டே ப்ரொபோஸ் செய்ய போறேன் ........ஒகே "என்று சொல்லி இருக்கு .கதிரி கோயிலில் என்னை சைட் அடிச்சுக்கிட்டே காதலில் இருக்கும் அவ கிட்டே போய் தாலி கயிறை கிப்ட்டா கொடுத்தா ......அவளும் இது தான் சாக்குன்னு ,அவன் கட்டுவதாக நினைத்து தனக்கு தானே கட்டிட்டு மனைவியா வாழ்துட்டு இருக்கா ....."என்றாள் மதுரா பெருமூச்சோடு .

"அப்போ இந்த பசங்க எப்படி ..........?"என்றார் ஸ்ரீ .

"குடி ............குடி குடியை மட்டும் இல்லை ............காதலிப்பவளையும் கெடுக்க வைக்கும் .....என் புருஷன் என்னை தொட்டார் ............உனக்கு என்ன வந்தது என்று கடிச்சு வைக்கிறா .....இடி ,மின்னல் ,மழை,குடியுடன் உடன் லவ் காம்பினேஷன் ரொம்பஆபத்தானது ........ரிசல்ட் ட்வின்ஸ் "என்றாள் மதுரா .

"அவ பாமிலிக்கு தெரியுமா ?"என்றான் சூர்யா .

"லூசு சொல்லலை .................முகம் தெரியாதவன் கெடுத்துட்டான் என்று சொல்லி வைச்சு இருக்கு .....அவர்களும் ஏற்பட்டு இருந்த ஷாக்கில் பசங்களின் முக ஜாடை கவனிக்க தவறி விட்டார்கள் ....ஆனா தாத்தா நரசிம்மர் மட்டும் கண்டு பிடிச்சிட்டார் ....குழந்தை உண்டானதும் போய் சொல்ல ஓடி இருக்கா ...இந்த தடவை சொல்ல போனவள் அட்சதை தூவிட்டு திரும்ப வந்துட்டா ............அதன் பிறகு திருமண வாழ்வில் புயல் வீச கூடாது என்று குடும்பத்தோடு ஆஸ்திரேலியா போய்ட்டா .........தாத்தா தான் ட்ராமா போட்டு திரும்ப வரவழைத்து இருக்கார் .... அவளுக்கு கோயிலில் அவ கட்டி கொண்ட தாலியே பெரிதாக இருக்கலாம் ....ஆனால் சமுதாயத்தின் முன் அங்கீகாரம் வேண்டும் சூர்யா .....இப்போ குட்டிஸ் சின்னதுங்க ......மத்தவர்களின் குத்தல் வார்த்தை எல்லாம் புரியாது தான் என்றாலும் வளர்ந்துட்டா மனசு உடைஞ்சு போய்டுவாங்க ..............ஆனா இப்போ கூட அப்பா இல்லை என்ற வருத்தம் இல்லாமல் இல்லை ......ANGEL நாங்க குட் கிட்ஸ் ...........எங்க டாடி கூட்டிட்டு வாரீங்களா என்று என்னை கட்டி பிடிச்சு கெஞ்சுதுங்க ரெண்டும் ............அதற்கு தான் இந்த திருமணம் .............உன் சொத்து யாருக்கு வேண்டும் ........மகளுக்கு திருமணம் என்றால் மொத்த செலவையும் அவரே பார்த்துப்பார் .............உன்னை மாதிரி கஞ்சூஸ் இல்லை ............"என்றாள் மதுரா அவன் தலையில் குட்டி ....

வெகு நேரம் அங்கு மௌனமே நிலவியது .....

"இது சரி வரும் என்று நினைக்கிறாயா மதுரா .............சோனாவை மறந்துட்டு பேசாதே ..............அவ எது செய்யவும் தயங்கவே மாட்டா ............"என்றான் சூர்யா .

"எல்லாம் ஒரு குருட்டு நம்பிக்கை தான் சின்னத்தம்பி ..........100% வெற்றி பெரும் என்று சொல்ல முடியாது தான் ........செய்து பார்ப்போம் .........வந்தால் மலை ..........போனால் கயிறு தானே .............முயன்று பார்த்தோம் என்று ஒரு நிம்மதி தானே .........எதுவுமே செய்யாமல் அழுதுட்டு இருப்பதற்கு .............ஏதோ செய்தோம் என்று இருக்கட்டுமே ........."என்றாள் மதுரா .

1510206343-1005.jpg

PENANCE WILL CONTINUE....
 
Last edited:

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஐயோ ஐயோ ..............இருங்க பா இப்போ தான் மேரேஜ் வேலை ஸ்டார்ட் ஆகி இருக்கு ...அதற்குள் பொங்கினா எப்படி நட்பூஸ் ...அதற்குள் i hate யூ எல்லாம் நமக்குள் தேவையா ?????murder அளவுக்கு போகும் அளவூ இதில் ஒன்றுமே இல்லை ....

ஏற்க்கனவே சொல்லி இருக்கிறேன் .....டயலாக்ஸ் வைத்து எந்த முடிவுக்கும் வராதீங்க என்று .....

"அப்போ இந்த பசங்க ....மேக்னா பசங்களா ..............அப்போ பசங்களோட அப்பா .............."என்றான் சூர்யா .

"இன்னுமா அடையாளம் தெரியலை .................."என்றாள் மதுரா .

இந்த டயலொக் மட்டுமே கொடுத்து உள்ளேன் ............அடையாளம் தெரியலையா ????ஆனா அது யாரின் அடையாளம் என்று மதுரா சொல்லவில்லை ....நானும் சொல்லவில்லையே ....அஸுக்கு புசுக்கு சொல்லிடுவோமோ ....

நாங்க சின் சான் பார்ட்டிங்கோ .....மத்தவங்களை டென்ஷன் ஆக்கிட்டு நாங்க ரிலாக்ஸ் சா இருப்போமுங்கோ

மதுரா போட்டோ காட்டினாள் ....ஒகே ...........அது என்ன போட்டோ என்ற description கொடுக்கவே இல்லையே நட்பூஸ் ....kavanikanum....clue will be in all places where you least look:devilish::devilish::devilish::devilish::devilish:

அந்த போட்டோவில் விஜய் இருக்கிறான் ........மேக்னா இருக்கிறாள் ........ரெண்டு பெரும் ஒன்றாக இருந்தார்களா என்று சொல்லவே இல்லையே :geek::geek::geek::geek:

இன்னும் கதை இருக்கு ,மேரேஜ் மண்டபம் கூட இன்னும் புக் செய்யலை .வில்லன் என்ற built அப் கொடுத்துட்டு சுமனை படுக்க வைத்தே இருக்க முடியுமா ????

இன்னும் ரொம்ப நெஞ்சு வலி ,தலை சுற்றல்,திக் பக்கங்கள் இருக்கும் போது இதற்கே டென்ஷன் ஆனா எப்படி ....உங்களுக்கான சாங் டெடிகேஷன் நட்பூஸ் :eek::eek::eek::eek:


 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
THAVAM 35(4)

"எல்லாம் ஒரு குருட்டு நம்பிக்கை தான் சின்னத்தம்பி ..........100% வெற்றி பெரும் என்று சொல்ல முடியாது தான் ........செய்து பார்ப்போம் .........வந்தால் மலை ..........போனால் கயிறு தானே .............முயன்று பார்த்தோம் என்று ஒரு நிம்மதி தானே .........எதுவுமே செய்யாமல் அழுதுட்டு இருப்பதற்கு .............ஏதோ செய்தோம் என்று இருக்கட்டுமே ........."என்றாள் மதுரா .

maxresdefault (1).jpg

எதையும் பேசாத சூர்யா எழுந்து போய் அறையில் இருந்த லாக்கர் திறந்து ,சோனா கையெழுத்து போட்டு இருந்த விவாகரத்து பத்திரிகையை கொண்டு வந்து மதுராவிடம் கொடுத்தான் .

படித்து பார்த்து நெற்றி சுருக்கிய மதுரா ,"அடேய் .............நீ லவர் பாய் என்று பார்த்தால் வில்லன் ரேஞ்சு வேலை எல்லாம் செய்து இருக்கே .........உன்னை நம்பவே கூடாதுடா 420..."என்றவள் அவனை மொத்தி எடுத்தாள் .

"அடங்குடீ காட்ஜில்லா .............பின்னே நான் என்ன கருணா மாதிரி லூசா .........எங்கு இருந்தாலும் வாழ்க என்று பாட ....????..........இனிமேல் இது எதற்கு எனக்கு ..........எங்கே அந்த காதலுக்கு மரியாதை தராதவன் எப்போ பார்த்தாலும் போட்டிக்கு வந்துட்டே இருக்கானே ....அதான் எனக்கு ஒரு சேப்டிக்கு வாங்கி வைச்சேன் ....ஆனா இப்போ தான் அதுக்கு யூஸ் இல்லாம நீ செய்துட்டியே ..... .கருணா வாழ்க்கைக்காவது பயன் படட்டும் .....சோனா ரொம்ப துள்ளினா யூஸ் செய்துக்கோ ...........ஏற்கனவே என் அங்கிள் இதை வெளியே தெரியாமல் ரெஜிஸ்டர் செய்து தான் இருக்கார் ......கருணாவின் போலி சைன் கூட நானே போட்டுட்டேன் .........சோனா முகத்தில் அவனை சைன் போட்டு தூக்கி போட சொல்லிட்டு அவன் வாழ்வை மீட்டுக்க சொல்லு ."என்றான் சூர்யா .

"சொல்றதுக்கு எல்லாம் சுலபம் தான் சூர்யா ..............உனக்கு தளைகள் எதுவும் இல்லை ............நீ சுதந்திர பறவை ......இப்பொழுதே நீ தாலி கட்டுவதை யாரும் தடுக்க முடியாது .ஆனா விஜய் நிலைமை அது இல்லையே ..........ரூபிணி ஒருத்தி போதுமே .............அவன் முடிவுகளை தகர்த்து போட ........பெத்த மக மாதிரி தங்கையை தூக்கி வளர்த்தவன் அவன் .......அவன் முடிவுகள் ரூபிணியை வாழ்வை மையமாக கொண்டே இருக்கும் என்று உனக்கு தெரியாதா ?"என்றாள் மதுரா

"என்னவோ போ ...............தேவை இல்லாத தலைவலியை எல்லாம் இழுத்து போட்டுக்கறே .............அப்புறம் குத்துதே குடையுதேன்னு புலம்பினா கொன்னுடுவேன் .............என்ன செய்யணும் என்று பிளான் போட்டு இருப்பியே ...சொல்லு அதான் அடிமை செமையா சிக்கிட்டேன் இல்லே ...."என்றான் சூர்யா .

பேசினார்கள் ,பேசினார்கள் ...பேசிக்கொண்டே இருந்தார்கள் ..........ரெண்டு மணி நேரம் ஆகியும் இவர்களின் பேச்சுவார்த்தை முடிவூக்கு வரவில்லை .


"அவ்வளவூ தாண்டா ...........வேற ஏதாவது தேவை படும் போது சொல்றேன்டா ............"என்றாள் மதுரா .

"தலை சுத்தி மூக்கை தொடுறது போலெ இருக்கு .............இந்த விவாகரத்து பத்திரத்தை அவன் கையில் கொடுத்து சைன் போட சொல்லு ......போட முடியாது அது இதுன்னு துள்ளினால் நாலு தட்டு தட்டிடிலாம் ..........கையை ,காலை உடைத்தாவது அவனை மணமேடை ஏற்றிடலாம் கண்ணம்மா ."என்றான் சூர்யா .

"கூமுட்டை இதை செய்வதாக இருந்தால் இந்நேரம் செய்து இருக்க முடியாது என்றா நினைக்கறே ....அவன் அதற்கு எல்லாம் அசரும் ஆள் இல்லை ...அது ரூபிணி என்ற கண்ணாடி அணிந்த குதிரை .....அதை தாண்டி போகாது ......சில்லன்னு ஒரு காதல் பட காலேஜ் சூர்யா மாதிரி அடிதடி என்று அநியாயத்தை எதிர்த்து கட்டையை எல்லாம் தூக்கியவன் தானே டா அவன் .....இப்போ .......ஒரு வருசமாய் கிட்டே இருந்து சோனா கிட்டே அவன் மாட்டி சிக்கி திக்கி திணறியதை கிட்டே இருந்து பார்த்தவடா நானு .......மிரட்டினால் எல்லாம் அவன் கிட்டே வேலைக்கே ஆகாது .....ஆமா நான் தான் செய்தேன் ..............உன்னால் முடிந்ததை பார்த்துக்கோ என்று மனதை உடைக்கிறோம் என்று கூட கவலை படவே மாட்டான் ,கையில் இருக்கும் வாழ்க்கையை இழக்கிறோம் என்று கூட பார்க்கவே மாட்டான் ......பெரிய தியாக செம்மல் என்று நினைப்பு ......... அந்த அளவூ அழுத்தம் ...... அவனா முன் வர வேண்டும் .......அப்படி வந்தா தான் உண்டு ..........இல்லைன்னா பட்டை நாமம் தான் ......பார்க்கலாம் சின்னத்தம்பி ......எங்கே போய்ட போறான் ............அவனை விடு நம்ம மேட்டருக்கு வா ..........எல்லாம் ரெடி ஆகிடும் இல்லை ..........?"என்றாள் மதுரா .

"என் இதய ராணிக்கு இல்லாததா .......நீ எள் என்றால் உன் அடிமை ரெடியாய் இருப்பேன் என்று உனக்கு தெரியாதா ப்ராணசகி ?"என்றான் சூர்யா அவளை அணைத்த படி .

"சரி வா கிளம்பு போகலாம் ...டைம் ஆகுது ..."என்றாள் மதுரா .

"போவோமா ஊர்கோலம் ????"என்று ராகம் இழுத்தவனை முறைத்தாள் மதுரா .

"ஓகே பேபி முறைக்காதே ...உன் அளவுக்கு எல்லாம் பாட முடியாது ..........ஏதோ என்னால் முடிந்தது ....எங்கே போகணும் முதலில் அதை ஜொள்ளு ."என்றான்

"அது ரொம்ப தான் வழிஞ்சிட்டு இருக்கு ...........டாம் கிளோஸ் கரோஜி ....."என்ற மதுரா ,"முதலில் வடபழனி முருகன் கோயில் .....அங்கே கல்யாணம் ......."என்றவளை பேச விடாமல் ,


"வாடி வாடி வாடி என் ஸ்வீட் பொண்டாட்டி .....நான் தாங்க மாட்டேன் தூங்க மாட்டேன் நீ இல்லாட்டி ..........நிலவை கொண்டு வா ....கட்டிலில் கட்டி வை .......மேகம் கொண்டு வா மெத்தை போட்டு வை .............இன்று முதல்............"என்று ஆரம்பித்தவனை ஓட ஓட விரட்டி அடித்தாள் மதுரா
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"பக்கி பக்கி புத்தி போகுது பாரு .................உனக்கும் எனக்கும் திருமணம் என்றா சொன்னேன் ..........எருமை ......வடபழனி முருகன் கோயிலில் முருகருக்கு கல்யாண உற்சவ கட்டளை ஏற்பாடு செய்து இருக்கு அந்த லூசு மேக்னா .........முருகன் கிட்டே ஹெவி கோரிக்கை ......ஒரு லூசுக்கும் .....இன்னொரு லூசுக்கும் திருமணம் நடந்தே ஆகணும் என்று .....பெட்ரோ மாஸ் லைட்டே தான் வேண்டுமாம் .......போய் அங்கே ஒரு அட்டெண்டென்ஸ் போட்டுட்டு .......... மகளே உன் வாழ்வை மீட்டு கொடுப்பது என் வேலை ...முருகர் பாவமோ பாவம் ....அவரை போட்டு படுத்தி எடுக்காதே ..........."என்று ஆறுதல் சொல்ல வேண்டும் ..........எனக்குன்னு வந்து வைக்குது பாரு தரகர் வேலை ..........இதே புழைப்பா போச்சு ..........கார்த்திக் -பூரணி ,ரகு-சந்திரா ,ராஜி -ருத்ரா ,இன்னும் விஜய் ,மேக்னா .............என்று மாமி வேலை பார்க்க வேண்டி இருக்குது .........எல்லாம் என் தலையெழுத்து ."என்றாள் மதுரா .

"ஏய் பட்டு ஒரு பழமொழி கேள்வி பட்டது இல்லையா செல்லம் ????............ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளருமாம் .........நீ செய்யும் மாமா ...சே மாம்மி வேலைக்கு தான் உன் டார்லிங் நான் உன் கரம் பிடிக்க ஓடி வந்துட்டேனே ................இதை விட வேறு என்ன வேண்டும் ?"என்றான் சூர்யா கண் அடித்தவாறு .

"அடி ஆத்தி .............உன் போக்கே வர வர சரி இல்லை .............wrong ரூட்டில் போறே ............."என்றாள் மதுரா .

"திருமணம் என்று பச்சை கொடி காட்டிய பின் இது எல்லாம் இல்லாமலா ?????.......அதுவும் ஹல்வா கணக்கா ,ரசகுல்லா மாதிரி சும்மா நச்சுன்னு இருக்கேடீ பட்டு .......சரி சரி டென்ஷன் ஆகாதே ............கிளம்பு டைம் ஆகுதுல ?"என்றான் சூர்யா .

உத்தம் பம்பரமாய் சுழன்று கொண்டு இருந்தான் .....ஸ்ரீ சொல்லி முடித்த 20 நிமிடத்தில் நிச்சயத்திற்கு தேவையான அனைத்து பொருட்களும் 2 செட் வேனில் ஏற்றி விட்டான் .

"மதுரா .........உன்னை நம்பி தான் என் மகனை விடறேன் .........பார்த்து செய்யி .............பய பார்ப்பதற்கு தான் terror பீஸ் ஆனா உள்ளே பூ மாதிரிமா ..........."என்றார் ஸ்ரீ .

"அதாவது உங்க கண்ணையே என் கிட்டே கொடுக்கறீங்க ...அதுல ஆனந்த கண்ணீரை தான் பார்க்கணும் என்று சொல்றீங்க அப்படி தானே ..............வச்சு செஞ்சுட்டா போச்சு .............காதலிக்கறேன் என்று பீலா விட்டுட்டு ட்ரெயின் விபத்தில் இருக்கேனா செத்தேனா என்று கூட தீர விசாரிக்காமல் ,அடுத்த செகண்ட் ரெண்டு பெரும் புது மாப்பிளை ஆனவங்க தானே உங்க புள்ள ரெண்டு பெரும் ...........அதுக்கே இவன்களை கதற விடணும் ........."என்றாள் மதுரா கடுப்போடு .

"ஐயோ அப்படி எல்லாம் இல்லை மதுராமா ......சூரியவோடு அப்பா மேல தொழிற் பகை காரணமாய் அட்டாக் செய்துட்டாங்க ....அவர் பிழைப்பதே ரொம்ப கஷ்டம் என்று எல்லா டாக்டரும் சொல்லிட்டாங்க மா ......கிரிட்டிக்கல் ஆபரேஷன் பிழைப்பது கூட டவுட் என்று சொல்லி தான் எல்லா ஏற்பாடும் செய்தாங்க ....அவருக்கும் தான் பிழைப்போம் என்ற நம்பிக்கை இல்லை ...........அதான் சாகிறதுக்கு முன் ஒரு பிள்ளையின் திருமணத்தையாவது பார்க்கணும் என்று உயிரை கையில் பிடித்து கொண்டு கேட்டார் .....அப்போ நீ உயிரோடு இருப்பதே எங்களுக்கு தெரியாது .........வெடிச்ச ட்ரெயின் பெட்டியில் தான் நீயும் இருந்தே என்று முடிவூ கட்டிட்டோம் ..........இவரை விட்டு ,தொழிலை விட்டு சூரியவாலும் நகர முடியலை ....கடைசி ஆசை என்று கேட்பவருக்காக தான் சூர்யா ரித்திகாவை மணந்தது ...............இவன் அவங்க அப்பாவுக்கு என்று பார்த்தால் கருணா தம்பி அவன் தங்கைக்காக பார்க்க வேண்டியதாகி போச்சு .....அவ வயத்தில் திவாகரின் கருவை சுமந்துட்டு இருந்தா .............திருமணம் நடந்தே ஆகா வேண்டிய நிர்பந்தம் சோனா உருவாக்கிடா ...........தங்கையின் மானம் ,குடும்ப கவுரவம் என்ற கத்திக்கு அவன் பலியாக வேண்டியதாகி விட்டது .....இந்த விஷயம் கூட சோனா உடன் அவனுக்கு மேரேஜ் நடந்து விட்டதை உத்தம் சொல்லி தான் எங்களுக்கே தெரிந்தது .......இல்லை என்றால் அந்த திவாகரை ஒரு வழி செய்து இருப்போம் ................விதி .............எல்லோரும் கஷ்ட பட வேண்டும் என்று இருக்கு ...........இனிமேல் என் மருமக வீட்டுக்கு வரும் வேளையாவது எல்லாம் நல்லதாய் நடக்கட்டும் ...........கிளம்புங்க .............மதுரா வீட்டில் போய் நிச்சயம் செய்யணும் இல்லை ..........உத்தம் ஜோசியர் கிட்டே போன் செய்து பேசிடு ............."என்றார் ஸ்ரீ .

"இருங்க ஆன்ட்டி ..............கும்பலா போய் நிச்சயம் என்று சொன்னா .............எல்லோருக்கும் ஹார்ட் அட்டாக் வருவது நிச்சயம் ............முதலில் போன் செய்து சொல்லுங்க .............ஷாக் அடங்க டைம் தேவை படுமே .....எல்லாரும் சுதாரிக்கணும் இல்லை .........ஓவர் ரா அடிச்சா தாங்க மாட்டாங்க .....நான் வேற ஜோதிகா மாதிரி "திருமண மலர்கள் தருவாயா ?"என்று பாடணும் இல்லை "என்றாள் மதுரா புன்னகையுடன் .

"தெளிய வச்சு தெளிய வச்சு அடிக்கணும் என்று சொல்றே ..............நல்லா வருவே மா நீயி ..........."என்ற ஸ்ரீ மதுரா சொல்லிய படியே போன் செய்து பவானி குடும்பத்தின் இதயத்தை மட்டும் இல்லாமல் விஜய் இதயத்தையும் சேத படுத்தினார் .

பால்கனி அருகே சென்று நின்ற மதுராவின் தோளில் கை வைத்து அவள் தலை மீது தன் தலையை வைத்தவாறு அவள் தோளில் கை போட்டு விடிந்த வானத்தை அமைதியாய் ரசித்து நின்றான் சூர்யா .ஆர்ப்பரித்து கொண்டு இருந்த அவன் உள்ளம் அமைதியாகி விட்டது ....காரணம் அவன் கை வளைவில் இருக்கும் பெண்.

"சூர்யா ...........டேய் செவிடு சூர்யா ..........."என்றாள் அவன் கை வளைவில் நின்ற மதுரா .

"சொல்லுடீ எருமை ..............இப்படி கத்தாதே ............காது கொய்ங் என்கிறது ............. "என்றான் .

அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்தா மதுரா ,"சூர்யா !.............will you marry மீ ??????"என்றாள் கண்கள் கலங்க .
:eek::eek::eek::eek::eek::eek::eek::oops::oops::oops::oops::oops::oops:o_Oo_Oo_Oo_Oo_Oo_O

அவன் கண்களும் கலங்கி தான் போனது ....அவன் கண்களில் வழிந்த கண்ணீர் அவள் கன்னத்தில் பட்டு வழிய ஆரம்பித்தது .

"யெஸ் i will marry you my precious baby ........."என்றான் அவன் .

அதன் பிறகு அங்கு மௌனமே குடிகொண்டது .வார்த்தைகள் அங்கு தேவை இல்லை தானே .

"பேபி !......ஒரு பாட்டு பாடேன் ............"என்றான் சூர்யா .


மதுரா சூர்யா தோளில் சாய்ந்து டூயட் பாடி கொண்டு இருக்க ,வாழ்வே மாயம் கிளைமாக்ஸ் ஸீன் கமல் மாதிரி இருந்த விஜய்யை சுமந்து வந்த கார் பிரிந்தாவனத்தை அடைந்தது
14-1360833747-vaazhve-maayam-600.jpg

.உள்ளே நுழைந்தவர்களை அங்கு இருந்த யாருமே எதிர்பார்க்கவில்லை .அவர்களே ஒருவித அவஸ்தையோடு நிச்சய ஏற்பாட்டினை செய்து கொண்டு இருந்தார்கள் .மகள் தங்களை மீறி போனதை ஏற்கமுடியாமல் ,அதை வெளியில் காட்டவும் முடியாமல் ,பேருக்கு புன்னகையுடன் வலம் வந்து கொண்டு இருந்தனர் .இதில் இவர்கள் வேறா என்று நினைக்காமல் இருக்க முடியவில்லை .

"வாங்க .............வாங்க ............."என்று முன்னே சென்று வரவேற்றனர் சங்கரன் ,பவானி குடும்பத்தினர் .
 
Last edited:

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தலை அசைபோடு உள்ளே வந்த அவர்களின் யாரின் முகமும் சரியில்லை என்பதை பவானியின் கண்கள் கண்டு கொண்டன .

"காபி ,டீ ........என்ன குடிக்கறீங்க ...?"என்றார் பவானி .

"எதையும் சாப்பிடும் நிலையில் நாங்க இல்லை சம்மந்தியம்மா ..."என்றார் சேது எங்கோ பார்த்து கொண்டு .

அடுத்து என்ன பேசுவது என்று புரியுதா ஒருவித சங்கடம் அங்கு நிலவ ஆரம்பித்தது .எதையும் பேசாத விஜய் பின்னே தோட்டத்தில் மல்லிகை பந்தலின் அடியில் இருந்த மதுரா வழக்கமாய் அமரும் சேரில் அமர்ந்து வானத்தை வெறிக்க ஆரம்பித்தான் .

விஷயம் கேள்வி பட்ட முதலில் அவன் அதிர்ந்து வலி தாங்க முடியாமல் கதறி விட்டது உண்மை தான் .இன்னும் மரணவலி இருந்து கொண்டு தான் இருக்கிறது .ஆனால் நிதர்சனம் என்ற ஒன்று இருக்கிறதே .....காரில் வரும் போது வழக்கம் போலெ அது விளங்கி விட்டது அவனுக்கு .புரிந்ததை அவனால் ஏற்றுக்கொள்ள தான் முடியலை ......"எங்கிருந்தாலும் வாழ்க "என்று பாடும் மனநிலைக்கு தான் அவன் வந்து இருந்தான் .

(மறுபடியுமா ............முதலில் இருந்தா !!!!!!...........ஆரம்பிச்சிட்டியா உன் தியாக செம்மல் ,மெரினா சிலை வேலையை .....நான் கூட நீ அழுததை ,துடித்ததை பார்த்து ,மதுரா வீட்டிற்குள் நுழையும் போது அதிரடியாய் அவ கழுத்தில் தாலி சூர்யா கண் முன்னே கட்டுவே என்று எதிர்பார்த்தேன் ...............உன் கிட்டே ரொம்ப கஷ்டம் )

சேதுவும் ,மரகதமும் தான் இதை விடுவதாக இல்லை ....ரெண்டில் ஒன்று பார்க்கும் முடிவோடு தான் வந்து இருந்தனர் .காரில் ரெடியாக நிச்சயதார்த்த தட்டு வழியில் வாங்கி வந்தே இருந்தனர் விஜய்யின் எதிர்ப்பை மீறி .

(அதானே பார்த்தேன் ..............நீயாவது மணமேடை ஏறிவிட போவதாவது ????கயிறு கொண்டு தர தரவென்று இழுத்து போனால் கூட வேலைக்கு ஆகாது .)

அதே சமயம் கோயிலுக்கு கிளம்பிய மதுராவை தடுத்து நிறுத்தினர் ஸ்ரீ முறைப்புடன்

"என்ன மாமியாரே ...........முறைப்பு எல்லாம் ஓவர்ரா இருக்கு ....வாட்ஸ் தி மேட்டர் ?"என்றாள் மதுரா அவர் தோளில் கை போட்டபடியே .

"கோயிலுக்கு தானே போறேம் ............ஒரு புடவை கட்ட மாட்டியா ?"என்றார்

"எதுக்கு கோயிலுக்குள் இருக்கும் புதையலை எல்லாம் எடுக்கறதுக்கா ?????ரெண்டாவது விஷயம் என்னை ரெண்டு பக்கிங்க கோயிலில் இருந்து தான் தூக்கி போச்சுங்க ............டிரஸ் எல்லாம் பேக் செய்யும் நிலைமையிலா நான் இருந்தேன் ....அங்கே போய் கடை கடையா ஏறி ஷாப்பிங்கா போக முடியும் ????நானே மேக்னா டிரஸ் போட்டுட்டு சுத்திட்டு இருக்கேன் ......இதுல பட்டு புடவை ..மூணாவது எனக்கு சாரி கட்டவே தெரியாது சாரி ............கோயிலுக்கு கட்டு என்று காமெடியா செய்யறீங்க ????"என்றாள் மதுரா இடுப்பில் கை வைத்து அவரை முறைத்த படி .

"ஓஹ் இதுல இப்படி ஒரு இது இருக்கா ............நீ வா என் கூட ..............."என்றவர் தன் அறைக்கு கூட்டி சென்றார் .

"மம்மி ...............நைட்குள்ள கிளம்பிடுவீங்களா இல்லை ரெண்டு நாள் நாங்க வெயிட் செய்யணுமா நீங்க ரெடி ஆக ?"என்று கலாய்த்தவனின் நடு மண்டையில் ஓங்கி கொட்டு கொட்டினாள் மதுரா .

"நல்லா போடு மதுரா ...............பாண்ட் சட்டை எடுத்து மாட்டிட்டு வரும் உனக்கு எட்டு முழம் புடவை கட்டும் எங்களை பார்த்தா சிரிப்பா இருக்கா என்ன .......உனக்கு தனியா சொல்லணுமா என்ன ...........உத்தம் பட்டு வேஷ்டி சட்டை வாங்கி வைத்து இருக்கான் பாரு ....மாத்திட்டு கிளம்பு .....உத்தம் சந்திரா ரெடியான்னு பாருப்பா . இன்னொரு தடவை எல்லா பொருளும் வாங்கியாச்சா என்று செக் செய்துக்கோ கண்ணா .....கோயிலில் ஏற்பாடு எல்லாம் எப்படி போகுதுன்னு விசாரிச்சிக்கோ .......என் ரெண்டு பிள்ளைகளுக்கும் இன்று நல்லது செய்ய போறோம் அதனால் கோயிலில் அன்னதானத்திற்கு ஏற்பாடு செய்துடு .....சுத்தி இருக்கும் அனாதை இல்லங்கள் ,முதியோர் காப்பகம் எல்லாத்துக்கும் கூட உணவிற்கு ஏற்பாடு செய்துடு கண்ணா . ????"என்றார் ஸ்ரீ .

"நான் பார்த்துக்கறேன் மாதாஜி ....நீங்கோ ரெடி ஆகி ரிலாக்ஸ்சா வாங்கோ ....."என்றான் உத்தம் .

5e743a2a59a6aa67a59b28a5928aa0b7.jpg

அடுத்த அரை மணி நேரத்தில் அவர்கள் கிளம்பி வடபழனி முருகர் கோயிலை அடைந்தனர் .மேக்னா குடும்பம் ஏற்கனவே வந்து இருந்தனர் .முகமன் முடிந்து திருக்கல்யாண உற்சவத்தை பார்க்க கிளம்பினார்கள் .முருகரின் திருக்கல்யாண உற்சவத்தோடு ஆதரவூ அற்ற 50பெண்களுக்கு தாத்தா நரசிம்மர் தலைமையில் சீரோடு கல்யாணம் நடத்தி வைக்க பட்டது .

"காங்கிராட்ஸ் மதுரா .....கேள்வி பட்டேன் ............உனக்கு இன்னைக்கு நிச்சயம் என்று ..............ரொம்ப சந்தோசம் ."என்றாள் மேக்னா .

"எல்லாம் அவன் செயல் ."என்றாள் மதுரா விஷம புன்னகையுடன் .

('இந்த "அவன்"யாரு ----கடவுளை சொல்கிறாளா இல்லை விஜய்யை நக்கல் அடிக்கிறாளா ?உன் கேரக்டர்ரை புரிஞ்சுக்கவே முடியலையே )

"இப்போ எப்படி இருக்கு மனசு- கடவுள் கிட்டே பாரத்தை இறக்கி வைத்த பிறகு ......என் டியர் லார்ட் முருகை ...பழனி மலையில் இருந்து ஹிமாலயாவிற்கே போய்டலாம் என்று முடிவூவுக்கு வரவைத்துட்டே ..............உன் கோரிக்கையை கேட்டு பாவம் அவர் ......உன் வாழ்வை மீட்டு தருகிறேன் என்று சொன்னேன் தானே ...."என்றாள் மதுரா .

"ஆமா இவ பெரிய ரஜினி சொல்வதை தான் செய்வா ....செய்யறதை தான் சொல்வா .....உனக்கு நினைவூ சின்னம் எழுப்பிடறேன் ........போடி சட்டெர் box ......வா வா ஆன்ட்டி விருந்தே ஏற்பாடு செய்துட்டு இருக்காங்க ............போய் கொட்டிகலாம் ....போய் உன் நிச்சயம் வேலை வேற செய்யணும் இல்லை . "என்றாள் மேக்னா முன்னே சென்றவாறு .

அவள் கையை இழுத்து நிறுத்திய மதுரா ,"இரு நில்லு ...பிரேக்கை போடு ..............நீ எங்கே வரே ?????எல்லோரையும் கூட்டிட்டு வீட்டுக்கு போ .....நீயும் குழந்தைகளும் இப்போ யார் கண்ணிலும் படறது சரியாய் படலை ......நேரா மேரேஜ்க்கு வந்து சேரு ....."என்றவள் மேக்னா ஏதோ பேச போக கை காட்டி தடை செய்தாள் மதுரா .

"லுக் மேக்னா ...நான் நான்கையும் யோசித்து தான் சொல்றேன் ............சோனா கண்ணில் குழந்தைங்க பட்டா ரொம்ப ஆபத்து ...........அவளும் அவள் ஆட்களும் பஞ்சமா பாதகத்திற்கும் அஞ்சாதவர்கள் ....இப்போ விஜய் ,சூர்யா ரெண்டு பேர் மீதும் செம்ம காண்டில் இருக்காங்க .....இவங்களை நேரா எதிர்க்க மாட்டாங்க ....வீட்டில் உள்ளவர்களை ஏதாவது செய்தால் தான் மனதளவில் இவர்கள் இருவரும் நிலைகுலைய வைக்க முடியும் என்று பிளான் போட்டுட்டு தான் இருப்பாங்க ....சொல்வதை கேளு ....எங்க யாருடனாவது உன்னையோ ,குழந்தைகளையோ பார்த்தால் விபரீதம் ஆகிடும் ....எல்லா வேலையும் செய்துட்டு சொல்றேன் ....நேரா வெள்ளிக்கிழமை திருமண மண்டபத்திற்கு வந்துடு ......இப்போ கிளம்புங்கோ ..."என்றவளின் பேச்சில் இருந்த உண்மை புரிய மேக்னா குடும்பத்தினர் கிளம்பினார்கள் .

கிளம்பும் போது குட்டிஸ் ரெண்டும் மதுராவின் கன்னத்தை ஒருவழி ஆக்கி விட்டனர் ...அத்தனை உம்மாஸ் ....ஒரே நாள் தங்கி இருந்தாலும் என்னவோ காரணத்தால் இவளிடம் ரெண்டும் ஒட்டி கொண்டனர் .புன்னகையோடு அவர்களுக்கு விடை கொடுத்தனர் மதுராவும் சூர்யாவும் .

"அப்புறம் டார்லிங் ....நம்ம மேட்டருக்கு வரியா ?"என்ற சூர்யா அவள் தோளில் கை போட்டு கொண்டு தங்கள் காரில் எற இதை வெறியோடு பார்த்து கொண்டு இருந்தது சோனாவின் கண்கள் .மதுராவின் புன்னைகையை காண காண அவளுக்கு உடல் முழுதும் தீ பரவியதை போல் பற்றி எரிந்தது .
22-1.jpg

ஸ்டேரிங் வீலை பலங் கொண்ட மட்டும் ஓங்கி குத்தினாள் மதுராவின் முகம் என்று நினைத்து .மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க பொறாமையில் ,வெறியில் கையில் கத்தியோ ,துப்பாக்கியோ ,கோடாரியோ இல்லையே என்று வாய் விட்டு காருக்குள் இருந்தே கத்த ஆரம்பித்தாள் .வெறி ....பழி வாங்கும் வெறி .....பாகுபலியில் பல்வாள் தேவன் இறந்த உடலை psyco மாதிரி 100 தடவையாவது கோடரியால் வெட்டிட்டே இருப்பானே அதே அளவு வெறி .....

மேக்னாவோடு இவர்கள் சிரித்து கொண்டு இருக்கும் போட்டோவை சுமனுக்கு அனுப்பி வைத்தவள் ,போனில் ,"அவளுக்கும் அந்த சூர்யாவிற்கும் திருமணம் நடக்க போகிறது .............நீ அட்சதை தூவி வாழ்த்து பாடு ........ஒரு பொட்டச்சியை தூக்க முடியலை .....த்தூ .............நீ எல்லாம் ஆம்பளைன்னு வெளியே சொல்லிட்டு திரியதே ......"என்றாள் .
ek-villain-photo.jpg

"ஏய் என்ன வாய் ரொம்ப ஓவர் ரா போகுது ...........என் கூட இருக்கும் போது தெரியலையா நான் ஆம்பளையா இல்லையா என்று ...........சூர்யா என்ன எந்த கொம்பன் வந்தாலும் அந்த மதுராவை நான் அடைவதை தடுக்க முடியாது ............அந்த சூர்யாவிற்கு இதே பொழைப்பா போச்சு ....அவன் பொண்டாடிட்டுக்கு எல்லாம் என் கையால் தான் கச்சேரி என்று ...........ஆனா அவனுக்கு பொண்டாட்டியா வரவ ஒவ்வொருத்தியும் ............தான் இருக்காளுங்க .............அவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு .....அவன் தாலி கட்டும் முன்னே மதுராவோடு எனக்கு முதல் ராத்திரி ,பகல் எல்லாம் முடிஞ்சு இருக்கும் ............ஹா ஹா ஹா ............"என்று ஊளையிட்டது குறி வைத்து விட்ட நரி .

PENANCE WILL CONTINUE...
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
செவ்வாய்க்கிழமை ----UD

டீஸர் ---1

"இந்தாங்க சார் நீங்க கேட்ட போட்டோ ............"என்றான் ஒருவன் ஒதுக்கு புறமான இடத்தில காரில் இருந்தவனிடம் .

கத்தை பணத்தை தூக்கி கொடுத்த அவன் ,"தேவை பட்டால் சொல்கிறேன் ..............இப்போ ஊரை விட்டு கிளம்பு "என்றான் காரில் இருந்தவன் .
1548913090400.png

டீஸர் ---2

"ஹலோ சோனா ஹியர் "

"ஹாய் சோனா ..............என் பெயர் மேக்னா ...............என்னை உங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை ............நான் அனுப்பின போட்டோவை பார்த்து இருப்பீங்க ...............இனிமேல் மதுரா நிம்மதியா இருக்கணுமா ?"என்றாள் மேக்னா
1548913129404.png

டீஸர்---3

"நிகழும் விளம்பி வருடம் ,தை மாதம் ....வெள்ளிக்கிழமை அதாவது பிப்ரவரி 15ஆம் நாள் பெரியோர்களால் நிச்யத்தியவண்ணம் ஜெய்ப்பூர் வாதான் ரத்தன் சிங் அவர்களின் பேரனும் ,ஸ்ரீலக்ஸ்மி ரத்தன் சிங் அவர்களின் குமாரனும் ஆன சிரஞ்சீவி சூர்யா பிரதாப் ரத்தன் சிங்க் அவர்களுக்கும் ,சென்னை சங்கரன் ,பவானி தம்பதியரின் திருநிறை செல்வி ஸௌபாக்யவதி மதுரக்ஷிக்கும் 9.00-10.30குள் கன்னிகா தானம் செய்ய முடிவூ செய்ய பட்டு உள்ளது .தட்டை மாத்திகோங்கோ ...."என்றார் ஐயர்

ram-wife-b-2-2-012.jpg
 
Last edited:

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Enaku neraya doubt..after seeing kids y Vijay will not marry megna..what's the need for dragging Vijay for marriage.. if megna knows madhu is arranging her marriage with Vijay why she is planning against madhu...

தங்களின் ரெவியூக்கு நன்றி .

காலேஜ் சமயத்தில் மதுராவின் மனம் கவர்ந்தவன் யார் என்று இப்போதைக்கு சொல்ல இயலாது .அது சூர்யாவாக இருக்கலாம் ,இல்லை விஜய் ஆகா இருக்கலாம் ...ஆனால் இவர்கள் இருவரும் காதலித்தது மதுராவை .

ஏன் பிரிய வேண்டி வந்தது எப்படி வேறு பெண்களை இருவரும் மணக்க நேரிட்டது என்பதை ஸ்ரீ விளக்கி விட்டார் .

விஜய் தந்தை ஸ்ட்ரோக் வந்து படுத்த படுக்கை ஆகி விட்ட பிறகு ,தங்கையை மகளாக வளர்த்தவன் விஜய் என்று முன்னரே சொல்லி விட்டேன் .....ரூபிணியின் வாழ்க்கை பணயமாக இருக்கும் போது அவன் டைவோர்ஸ் என்று போக துணிய மாட்டான் ....இல்லை என்றால் தங்கையின் திருமணத்தை முதலிலேயே நிறுத்தி இருப்பானே .

இப்பொழுது இந்தேர் இண்டஸ்ட்ரீஸ் விட்டு சென்றதற்கு punishment ஆக தான் சோனா ரூபிணி கணவன் திவாகரின் பணத்தாசை பிடித்த பெற்றோர்களுக்கு போன் செய்து screw கொடுத்தது .அங்கு என்ன ட்ராமா நடக்கிறது என்று இன்னும் தெரியவில்லை .

அண்ணனின் வாழ்வுக்காக ரூபிணி விபரீதமான முடிவூ எடுப்பாளா என்பது பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும் .

இப்படி ஒரு வாழ்வூ வேண்டுமா என்பதை ரூபிணி தான் முடிவூ எடுக்க முடியும் .டைவோர்ஸ் அல்லது காதல் கணவனை பிரிந்து இருக்க முடியாமல் தற்கொலை என்பது எல்லாம் ரூபிணி கையில் தான் இருக்கிறது .அவள் எந்தவித முயற்சியும் எடுக்காமல் தனக்கு தானே மேற்கொண்டு இருக்கும் சிறை தண்டனை விட்டு வெளியே வராமல் அழிச்சாட்டியம் செய்து கொண்டு இருக்கும் வரை விஜய் தைரியமாக எந்த வித முடிவும் எடுக்க மாட்டான் .ஆனால் சாவதை தவிர வேறு எந்த முடிவூ எடுத்தாலும் அவளுக்கு பக்க பலமாக இருப்பான் என்பது மட்டும் நிஜம் .

சந்தோசமாக வாழாத ஒரு வாழ்வூ தங்கைக்கு தேவையா என்று பொங்கி எழுந்து அவளை மீட்டு எடுத்து வரும் வேலை செய்வதாக இருந்தால் இவ்வளவூ வருடம் அவன் கை கட்டி நிற்க வேண்டிய அவசியமே இல்லையே ....தங்கையின் வாழ்க்கைக்கு காவலாக இருக்கிறான் .....அவள் முடிவுக்கு கட்டு பட்டு இருக்கிறான் ....இந்த வாழ்க்கை தான் வேண்டும் என்று முடிவூ எடுத்து அனைவரையும் படுத்தி எடுத்து கொண்டு இருக்கும் ரூபிணி மனது மாறினாள் உண்டு

குழந்தைகள் ஒருவேளை அவனுடையதாக இருந்தாலும் ஊர் அறிய சோனா என்ற முதல் மனைவி உயிரோடு இருக்கும் வரை மண மேடை எற மாட்டான் ....சோனாவும் தியாக செம்மல் கிடையாது .....குழந்தைகள் ஒருவேளை இருந்தால் ,விட்டு கொடுப்பதற்கு .ஒரு வேளை அவனுடையதாக இருந்தாலும் இப்பொழுதைக்கு வெளியே சொன்னாலும் குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து ஆகி விடும் .சுமன் என்ற குழந்தைகளை விற்கும்---அதுவும் பாலியல் தொழிலுக்கு virkum கயவன் இருக்கும் வரை குழந்தைகளின் தகப்பன் யார் என்று தெரிய வருவது கூட ஆபத்து தான் .அதனால் தான் கோயிலில் நிச்சயத்திற்கு வருகிறேன் என்ற மேக்னாவை கூட மதுரா வேண்டாம் என்று சொன்னது .
அனைத்து பக்கமும் சூழ்நிலை அவனை கைதியாக்கி வைத்து இருக்கிறது ....

சேதுவும் ,மரகதமும் தான் விஜய்க்கு மதுராவோடு நிச்சயம் நடத்த அவனை இழுத்து வந்தது .ஆனால் அவன் மீண்டும் முருங்கை மரம் ஏறி கொண்டு இருக்கிறான் .

மேக்னா வில்லியா ?????போக போக தான் தெரியும் ........அவள் குழந்தைகளின் அப்பா யாராய் இருந்தாலும் ,விஜய் /சூர்யாவை தவிர வேறு யாரும் இருக்க போவது இல்லை என்றாலும் மதுராவை ஒரு நெருஞ்சி முள்ளாக ,தன் வாழ்வை சிதைத்து விட கூடிய ஆற்றல் உள்ளவளாக கருதுகிறாளோ என்னவோ ..........

குழந்தைகளின் அப்பா யார் என்று மதுரா ,சூர்யா ,மேக்னா பாமிலிக்கும் தெரியும் .....இருந்தாலும் ஏதோ ஒரு காரணத்திற்காக வெளியே சொல்வதை தாமத படுத்துகிறார்கள் .....கதையின் போக்கில் அந்த முடுச்சு அவிழும் ...
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
THAVAM 35(5)

சுமனிடம் மதுராவை சோனா மாட்டி விட்ட பதினைந்து நிமிடம் கழித்து , இருவர் ஆல்வின் வீட்டின் அருகே காரில் காத்து கொண்டு இருந்தனர் ஆண் ,பெண் இருவர் .அதில் பெண் சால்வையால் முகத்தை மூடி இருந்தாள் .கண்கள் மட்டுமே வெளியே தெரிந்தது .அந்த ஆண் தொப்பி அணிந்து கண்களுக்கு குலர்ஸ் போட்டு இருந்தான் .

(என்னது இன்னும் ரெண்டு புது கேரக்டர்ரா ...தாங்காது ஹனி தாங்கவே தாங்காது .....

இப்போ சொன்னேனா இவங்க ரெண்டு பேரும் புது கேரக்டர் என்று ????எல்லாம் தெரிஞ்ச ஆளுங்க தான் ......மாறு வேஷத்தில் இருக்காங்க .

"என்னது மாறு வேசமா .........எது ஒரு ஒரு தொப்பி ,கண்ணாடி போட்டு இருந்தா அது உங்க ஊரில் மாறு வேசமா ...80களில் வந்த வந்த படங்களில் தான் ஒரே ஒரு மச்சத்தை வைத்து கொண்டால் வில்லனுக்கு ஹீரோவை அடையாளம் தெரியாது ...........அதை விட இது கொடுமையா இருக்கே ..........இது மாறு வேஷம் என்றால் அப்போ கமல் தசாவதாரத்தில் ,ரஜினி எந்திரனில் ,விஜய் சேதுபதி சீதக்காதியில் ,விக்ரம் ஐ யில் போட்டது எல்லாம் ????......அந்த பெண்ணாவது பரவாயில்லை கண்ணு மட்டும் தான் வெளியே தெரியுது .......சரி சரி முறைக்காதே )

"ஆமா இப்போ எதுக்கு வேற காரில் வர சொன்னே ....என் காருக்கு என்ன குறைச்சல் ?"என்று எகிறினான் அவன் .

"ஒரு குறையும் இல்லை ............நாம போகும் இடம் அப்படி ...............உன் ஆட்கள் தானே சொன்னாங்க ...சோனா வீட்டை சுத்தி புதுசா காவல் பலமாய் இருக்குன்னு ...கார் நம்பர் வைத்து ட்ரெஸ் செய்துட்டா .......நான் யார் என்று தெரிய கூடாது இல்லை ...........அதான் ..."என்றாள் அவள் .

"இரு இரு ..............நீ யாருன்னு தான் எனக்கு தெரியுமே ..........."என்றவனை முறைதான் அவள் .


"உனக்கு என்னை தெரியும் என்று எனக்கும் தெரியும் ........ஜோக் அடிப்பதாக நினைத்து இப்படி கடிச்சி வைக்காதே ............ரத்தம் வருது ............அதோ அவன் தானே உன் ஆள் ..........வந்துட்டான் பாரு ....நம்பகமானவன் தானே ......"என்றாள் அவள் .

"ரொம்ப நம்பகமானவன் ......நாம் சொன்ன இடத்தில இருக்கும் பொருளை மட்டுமே எடுத்து வருவான் ...உயிரே போனாலும் இதை வெளியே சொல்ல மாட்டான் ...........சின்ன வயதில் இருந்து அவன் எங்க கிட்டே தான் வேலை செய்கிறான் ....உனக்கு சந்தேகமாக இருந்தால் ஊருக்கு அனுப்பி விடுகிறேன் ......"என்ற அவன்,வேலையாள் அருகில் வர பேச்சை நிறுத்தி கார் ஜன்னலை இறக்கி விட்டான் .

"எதுவும் பிரச்சனை இல்லை தானே ....."என்றான் காரில் இருந்தவன் .

"இல்லை பாஸ் ...... போனதோ வந்ததோ தெரியாது ......இந்தாங்க நீங்க சொன்ன கவர் .....பிரித்து எல்லாம் பார்க்கலை "என்றான் அவன் .

"இப்போ இதை நான் கேட்டேனா ...உன்னை பத்தி எனக்கு தெரியாதா ...... இந்தா பணம் ..........."என்றான் காரில் இருந்தவன் .

"சும்மா இருங்க பாஸ் ....உங்களுக்காக உயிரையும் கொடுப்பேன் என்று தெரியும் தானே ...யார் கேட்டா உங்க கிட்டே பணத்தை ......உள்ளே வையுங்க ."என்றான் உரிமையான கோபத்துடன் .

"அது இல்லைடா உன் மேல் சந்தேகம் பட்டு இல்லை ....உன் குடும்பத்தை பார்க்கணும் என்று சொன்னே இல்லை ........போய் தங்கிட்டு ரெண்டு மூணு வாரம் கழிச்சி வா ....ரொம்ப வருசமாய் உன்னை அவங்களும் பார்க்கலை தானே .....போய் பார்த்துட்டு வா ..............இங்கே இருக்க வேண்டாம் ...."என்றான் காரில் இருந்தவன் .

பணத்தை பெற்று கொண்டு அவன் கிளம்பி விட ,அவன் எடுத்து வந்து கொடுத்த கவர்ரை உள்ளே இருந்தவளிடம் கொடுத்தான் அவன் .

"அடுத்து எங்கே மேடம் ...?"என்றான் அவன் .

"நம்ம ஜிகிரி தோஸ்து சோனா வீட்டுக்கு ..."என்ற அவள் கவர் திறந்து உள்ளே இருந்த போட்டோக்களை எடுத்தாள் .

28333-a.jpg 29400927_204026880369889_6676109744861609984_n.jpg


1549336587322.png

அது விஜய் மதுராவுடன் நெருக்கமாய் இருப்பது போல் பக்கம் பக்கமாக vijaiவரைந்து வைத்த ஓவியங்கள் ,காலேஜ் டேஸ் புகைப்படங்கள் .அதை கண்ட அவள் முகத்தில் கசந்த புன்முறுவல் தோன்றியது .கண்கள் கோபத்துடன் சிவந்து எரிமலையாய் தீயை கக்க ஆரம்பித்தது .

"டென்ஷன் ஆகாதே ..............ரிலாக்ஸ் ............நம்ம கையை விட்டு எதுவும் மீறி போகலை ......உன் வாழ்க்கை உனக்கு திரும்ப கிடைக்கும் ......அழாதே ..........கண்ட்ரோல் ..............உனக்காக எதை செய்யவும் நான் தயங்க மாட்டேன் என்று புரியாதா ............நிச்சயம் இது ஒர்க் அவுட் ஆகும் ...........நீ நல்லா இருக்கணும் என்றால் சில உயிர்கள் போக வேண்டும் என்றாலும் எதற்கும் துணிந்து தான் இறங்கி இருக்கிறேன் ......எதை பத்தியும் கவலை படாதே ...............ரிலாக்ஸ் ..."என்றவனின் தோளில் சாய்ந்து கதறி தீர்த்து விட்டாள் .

'கடவுள் இவளுக்கு இன்னும் கொஞ்சம் கருணை காட்டி இருக்கலாம் ....இந்த அளவூ சோதித்து இருக்க வேண்டாம் .'என்று நினையாமல் இருக்க அவனால் முடியவில்லை .அவள் தன்னை தானே தேற்றி கொண்டதும் அவர்கள் கார் "கஜா போர்ட் "முன் போய் நின்றது அடுத்த அறை மணி நேரத்தில் .

"யார் வேணும் ...?"என்றான் கேட்டில் புதிதாய் நின்ற சுமன் ஆள் .

"சோனா மேடம் கிட்டே இதை கொடுக்கணும் ....கொடுத்துடுங்க ....."என்றவள் அவன் மேலே எதுவும் கேட்கும் முன் விறுவிறுவென காரில் ஏறி விட ,கார் கிளம்பியது .கேட்டில் கார் நம்பரை நோட் செய்து சுமனிற்கு அனுப்பி வைத்தான் ..கவர்ருக்குள் இருந்த போட்டோவினையும் தன் மொபைல் மூலம் போட்டோ எடுத்து சுமனிற்கு அனுப்பி வைத்தான் .

அதை கண்ட சுமனின் வெறி ஆளக்கவே முடியாத ஆளவூ தாறுமாறாய் ஏறி போனது .

"சார் இந்த போட்டோ என்ன செய்ய ?சோனா மேடம் கிட்டே அனுப்பிடவா ...இல்லை அப்படியே மறைத்து விடவா ?"என்றான் கேட்டில் நின்ற காவல் காப்பவன் சுமனிடம் .

"கொடுத்துடு .....திம்மா ......மதுராவை கண்காணிக்க ஆட்கள் சொல்லி இருந்தேனே என்ன ஆச்சு ....?"என்றான் சுமன் .

"இன்னும் ரெண்டு நாளில் தூக்கிடலாம் சார் .....வேவு பார்க்க ஆரம்பிச்சாச்சு ....ஆனால் அவங்களை சுத்தி நிறைய காவல் இருக்கு ......கொஞ்சம் ரிஸ்க் தான் சார் ..."என்றான் திம்மா .

"உனக்கு லட்சம் லட்சமாய் கொட்டி கொடுப்பது வெட்டி கதை சொல்ல இல்லை திம்மா .....எத்தனை பெண்களை குழந்தைகளை கடத்தி இருப்போம் .......இவ என்ன பெரிய இவளா ....ஒத்தை பொட்டச்சியை தூக்க முடியலை என்றால் நீ எல்லாம் உன்னை ஆம்பளை என்று சொல்லிட்டு திரியாதே .....அவளை சிக்க வைக்க ஏதாவது பிளான் செய் .....ஏதாவது வீக்னெஸ் அவளுக்கு இருக்கும் ....அதை யூஸ் செய் ....கைக்கெட்டும் தூரத்தில் அவளை நம்ம ஆட்கள் எப்பொழுதும் பாலோவ் செய்துட்டே இருக்கட்டும் ...டைம் கிடைத்தால் சட்டென்று தூக்கிட சொல்லு ......ரெண்டு நாள் தான் டைம் ...........மதுரா என் பெட்ரூமில் இருக்கணும் ......இல்லை சாத்தப்பன் நிலை தெரியும் தானே ..........கடலில் கல்லை கட்டி ஜலசமாதி செய்தது நினைவுக்கு இருக்கா ?.........அப்போ ரெண்டு நாளில் சொன்னதை செய்து காட்டு ."என்றான் சுமன் .

உலகத்தின் மிக கொடிய ,வடிகட்டின ஒண்ணாம் நம்பர் ராட்சசனிடம் மாட்டிய தன் நிலையை நினைத்து ஆயிரமாவது முறையாய் திம்மா தன்னை தானே நொந்து கொண்டான் ....அவனால் முடிந்தது அது ஒன்று மட்டும் தான் .சுமன் சொன்ன படியே போட்டோவை வீட்டினுள் இருந்த சோனாவிற்கு அனுப்பி வைத்தான் திம்மா .
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அந்த போட்டோவை யாருக்கு வந்த விருந்தோ என்று சலிப்பாக பார்த்த சோனாவின் இதயம் கண்டதை நம்ப முடியாமல் ஒரு கணம் நின்று பின் துடித்தது .அதிர்ச்சி தாங்க முடியாதவளாய் அடுத்து என்ன என்று கூட யோசிக்க முடியாமல் நெஞ்சை பிடித்து கொண்டு சோபாவில் பொத்தென்று அமர்ந்தாள் .

கருணா ஒருத்தியை விழுந்து விழுந்து காலேஜ் டேஸ்சில் உயிர்க்கு உயிராய் லவ் செய்தான் ,அவளுக்காக ஸ்டேஜ் ஏறி பல பாடல் பாடி இருக்கிறான் ,பைத்தியமாய் அலைந்து இருக்கிறான் என்பதை எல்லாம் துப்பறிவாளர்களை வைத்து ஏற்கனவே சோனா அறிந்து வைத்து இருந்தது தான் .ஆனால் எவ்வளவூ முயன்றும் அவர்களால் அவன் காதலித்த அந்த பெண் யார் என்றே தெரிந்து கொள்ள முடியவில்லை .யாருக்கும் தெரிந்து இருக்கவில்லை ......அவ்வளவூ ரகசியமாய் வைத்து இருந்தார்களா இல்லை ஒரு தலை காதலா என்று கூட குழம்பி தான் போனாள் .கிட்டத்தட்ட ஒட்டுமொத்தமாய் அவனுடன் படித்த பெண்களின் கனவூ நாயகனாய் தான் அவன் இருந்தான் .

அப்படி சொன்ன ஒவ்வொருத்தியையும் துண்டு துண்டாய் வெட்டி போட முடிந்தால் கூட சோனா சந்தோஷ பட்டு இருப்பாள் .அத்தனை பேரையும் போட்டு தள்ள முடியாது என்பதால் ,அவர்களில் மூன்று பேரை மட்டும் டார்கெட் செய்தாள் .ஆனால் ஏற்கனவே ஒரு கொலை செய்து விட்டு இருந்த அவளை கஜாவும் ,சுமனும் தான் தடுத்து இருந்தனர் . அதனால் இன்னொருத்தியை முடிந்த அளவூ torture செய்து மனநிலை பாதிக்க வைத்து ,பைத்தியக்கார ஹாஸ்பிடல்லில் சேர்த்து சந்தோச பட்டாள் .

கடைசியாக மாட்டியவள் மதுரா .....இவளை கொண்டு கருணாவை torture செய்ய ஆரம்பித்தாள் ."தான் ஆடா விட்டாலும் தன் சதை ஆடும் "என்பது போலெ காதலித்தவளுக்காக இவன் துடிக்க மாட்டானா,அதை கண்டு ரசிக்க மாட்டோமா என்று தான் பிளான் போட்டது .

ஆனால் அவன் எமகாதகனாய் இருந்தான் .'உனக்கும் பெப்பே உங்க தாத்தனுக்கும் பெப்பே' என்று கண்ணில் விரலை விட்டு ஆட்டி கொண்டு இருந்தான் .இவளுக்குமே கருணா காதலித்தது ஒருவேளை மதுராவை இல்லையோ என்று தோன்ற ஆரம்பித்து இருந்தாலும் ,டைம் பாஸ்க்கு இவர்களை படுத்தி எடுத்து கொண்டு இருந்தாள் .அதில் ஒரு சந்தோசம் .பொழுது போகணும் இல்லை .

ஆனால் அந்த போட்டோக்கள் உண்மையை வெட்டவெளிச்சமாக்கி கொண்டு இருந்தது .எப்படி அவளை முட்டாள் ஆக்கி இருக்கிறார்கள் என்று வெறி ஏறி கொண்டு இருந்தது .தோல்வி தோல்வி .....ரெண்டு பிச்சைக்கார நாய்கள் அவளை தோற்கடித்து இருந்ததை அவளால் ஜீரணிக்கவே முடியவில்லை .

அவர்கள் மேல் இருந்த கோவத்தை எல்லாம் தன் அறையில் இருந்த பொருட்களின் மேல் காட்டினாள் .ஓய்ந்து போய் அமர்ந்து மொபைல் ஒலித்தது .

"ஹலோ சோனா இயர் ...."என்றாள் .

"ஹலோ சோனா ..........நான் அனுப்பிய போட்டோவை பார்த்து இருப்பீங்க .....என்னை உங்களுக்கு தெரியாது ....என் பெயர் மேக்னா .....இனிமேலும் அந்த மதுரா நிம்மதியாய் இருக்கணுமா ...?"என்றது எதிர்முனை .

(இந்த புள்ளைக்கு எதுக்கு இந்த வேலை ????மதுரா கூட இருக்கும் போது பேசப்பறவையை பறக்க விடுது ....அவ இந்த பக்கம் போனா வேற மாதிரி பிஹாவ் செய்யுது ......ஸ்ப்ளிட் பெர்சோனாலிட்டியா .....சந்திரமுகி ஜோதிகா மாதிரி ....சரி சரி டென்ஷன் ஆகாதே .....எனக்கும் பொழுது போகணும் இல்லை ............அதான் உல்லுலாயிக்கி )

விலுக்கென்று நிமிர்ந்து அமர்ந்தாள் சோனா ,"யார் நீ ...உனக்கு எப்படி இந்த போட்டோ கிடைத்தது ?'
hamsa-nandini-hot-n-spicy-stills-1.jpg

"அது முக்கியமில்லை ....இதை வைத்து மதுராவையும் ,உங்க புருஷன் விஜய்யையும் என்ன செய்ய போறீங்க என்பது தான் அதி முக்கியம் ."என்றாள் மேக்னா .

"உனக்கு எதுக்கு அது ????போட்டோவை கொடுத்தியா அதோடு உன் வேலை முடிந்தது ....எனக்கு என்ன செய்யணும் என்று தெரியும் .....பணம் வேணுமா வாங்கிட்டு போயிட்டே இரு ......உன் கிட்டே சொல்லணும் என்று எனக்கு அவசியம் இல்லை ."என்றாள் சோனா .

"ரொம்பவே அவசியம் இருக்குங்க சோனா மேடம் .....அந்த கேடுகெட்ட மதுராவால் நானும் தான் என் காதலை இழந்து தவிக்கிறேன் .....என் புருஷன் எனக்கு இல்லாமல் போனதற்கு காரணமும் அந்த சனியன் தான் ...பேரை பார் மதுராக்ஷியாம் ......வெளக்கமாத்துக்கு பட்டு குஞ்சம் ஒன்று தான் குறை ...சனியன் எங்கே இருந்து இருந்து தான் மத்தவங்க புருஷன்களை ஆட்டைய போடுறதுக்குன்னே வருவாளுங்க என்று தெரியலை .......எவன் புருஷன் கிடைப்பான் என்று அலையுது ...த்தூ .....என்ன ஜென்மம் ..............இப்படி இருந்தவளுக்கு தான் எல்லா யோகமும் அடிக்குது ......அந்த ஜெய்ப்பூர் இளவரசன் சூர்யா பிரதாப் உடன் பபிப்ரவரி 15 இவளுக்கு திருமணம் ...."என்றாள் மேக்னா .

"வாட் ............?"உட்ச பட்ச அதிர்ச்சியில் கத்தியே விட்டாள் சோனா .சூர்யா மதுராவை லவ் செய்கிறான் என்று மட்டுமே இவள் நினைத்தாள் ...காலையில் இருவரையும் ஒன்றாக பார்க்கும் போது கூட சும்மா சுத்திட்டு இருக்காங்க என்று தான் நினைத்து அதை பொறுக்க முடியாமல் தான் சுமனிடம் மாட்டி விட்டது .ஆனால் திருமணமே முடிவாகி விட்டதை கேட்டு அந்த கணமே தனக்கு உயிர் போய் விடாதா என்று கூட தோன்றி விட்டது .

(நாங்களும் அதுக்கு தான் காத்திட்டு இருக்கோம் ...நெஞ்சம் மறப்பதில்லை நம்பியார் மாதிரி குத்து கல்லாட்டம் தான் இருக்கே .எங்கே எல்லாரையும் போட்டு தள்ளி விட்டு தான் போவே போலே இருக்கே ............ஸ்டெடியா தான்மா இருக்கே நீயி ....)

"ஹலோ ...ஹலோ ....சோனா மேடம் .....என்ன ஆச்சு ......மயக்கம் போட்டு விழுந்துடீங்களா ...இல்லை விஷயம் கொடுத்த அதிர்ச்சி தாங்க முடியாம ஓரடியாய் போய் சேர்ந்துடீங்களா?"என்ற மேக்னாவின் குரலில் நிச்சயம் இருந்தது நக்கல் ,கிண்டல் தான் .

அதை கேட்டு அருகில் இருந்தவன் தன் வயித்தை பிடிச்சுட்டு சிரிக்க ஆரம்பித்தான் .

சோனா இருந்த நிலையில் அதை எல்லாம் அவள் கவனிக்கவில்லை ."உனக்கு எப்படி இது தெரியும் ?"என்றாள் .

"எப்படி தெரியாமல் போகும் ............நான் தானே மணப்பெண் ..............தோழி .....கூடவே கூஜா தூக்கணும் இல்லை .... "என்றாள் மேக்னா .

"சரி நான் பார்த்துக்கறேன் ....."என்றாள் சோனா .

"என்ன பார்த்துப்பீங்க சோனா ....என்ன பிளான் ?"என்றாள் மேக்னா .

"அதை எல்லாம் உன்னிடம் சொல்லணும் என்ற அவசியம் எனக்கு இல்லை ....."என்றாள் சோனா .

"இருக்குங்க .............ஏன் கேட்கிறேன் என்றால் நீங்க பிளான் எல்லாம் நல்லா தான் போடறீங்க .....பிளான் எதை செய்தாலும் பிளான் பண்ணி செய்யணும் (வடிவேல் குரல் )என்ற உங்கள் எண்ணம் எல்லாம் நல்லா தான் இருக்குங்க ....ஆனால் பாருங்க அது நடக்கும் போது உல்ட்டாவாகி ...நீங்க தான் மண்ணை கவிட்டு இருக்கீங்க ....ஒரு முறை இருமுறை இல்லை தொடர்ச்சியா எல்லா முறையும் .....எக்ஸாம்பிள் சொல்லவா ...பூவை வைத்து செய்தீர்களே ஒரு காமெடி ...."என்றாள் மேக்னா .

"சரி .....இந்த போட்டோவை மீடியா முன் காட்டி மதுராவிற்கும் ,கருணாவிற்கு affair ,என்று அவள் மானத்தை வாங்க போகிறேன் ....அதற்கு மேல் அவளும் அவ குடும்பமும் உயிரோடு இருப்பார்களா என்ன ?"என்றாள் சோனா .

"ச்சூ ....மீண்டும் மீண்டும் ஒரே பிளான் ....அதான் எல்லாம் சொதப்புது சோனா மேடம் .....ஒரு நாள் ரெண்டு நாள் பேசுவாங்க ...அதன் பிறகு ஏதாவது சினிமா நடிகையின் பின் மக்கள் போய் விடுவாங்க ....தவிர அவளை காப்பாத்த ருத்ரா ,சிவகாமி ,சூர்யா என்று எல்லோருமே இருப்பாங்க .....ஏற்கனவே பூவை வைத்து இது மாதிரி ஒரு பிளான் போட்டு மானம் போனது போதாதா ...இதுவும் சொதப்பும் ...."என்றாள் மேக்னா .

"அப்போ என்ன செய்ய சொல்றே ....மதுரா சூர்யாவை மேரேஜ் செய்யட்டும் ...நாம போய் அட்சதை தூவிட்டு வருவோமா ...."என்றாள் சோனா நக்கலாக .

"கண்டிப்பா சோனா மேடம் ..........கூப்பிட்டாலும் கூப்பிடாமல் போனாலும் அந்த திருமணத்திற்கு நாம போய் தான் ஆகணும் .....ஒட்டுமொத்த மீடியாவும் அங்கே இருக்கும் .....சோ அவ மணமேடை ஏறிய பின் இதை சூர்யா கிட்டே சொன்னா ............அவள் திருமணம் நிற்கும் .....ஒட்டுமொத்த மீடியா முன் அவ கேரக்டர் ஸ்பாயில் ஆன பிறகு எவன் அவளை காப்பாத்த வருவான் .....சூர்யா கொஞ்சம் ரோஷக்காரன் ....மேடை வரை வந்து இப்படி என்று தெரிந்தால் பொறாமையில் திருமணத்தை நிறுத்தி விடுவான் ."என்றாள் மேக்னா .

"இதே ஐடியா தான் பூ விஷயத்திலும் செய்தேன் .....நீயே தானே சொன்னே ....அது எப்படி ஸ்பாயில் ஆச்சுன்னு ...திரும்பவும் அதையே செய்ய சொல்றே ...இப்போ மட்டும் சூர்யாவும் மத்தவங்களுக்கு மதுராவை காப்பாற்ற வர மாட்டாங்க என்று எதை வைத்து சொல்றே ...."என்றாள் சோனா .

"அதற்கு தான் இனிமேல் திருமணம் வரை மதுராவையும் ,கருணாவையும் ரொம்ப கிளோஸ்சா வாட்ச் செய்து வீடியோ எடுக்கணும் .....ரெண்டு பேரும் நெருக்கமாய் இல்லை என்றாலும் இருப்பது போன்ற illusion உருவாக்க வேண்டும் ...எவ்வளவூ முடியுமோ அவ்வளவூ முறை இருவரையும் சந்திக்க வைக்கணும் .....ஏற்கனவே கருணா மதுராவை ரொம்ப டீப்பா லவ் செய்யறார் ....பஞ்சையும் நெருப்பையும் பக்கத்தில் வைத்து அது பத்துவதை வீடியோ எடுத்து திருமண மேடையில் திருமணத்திற்கு பதில் இதை ஓட விடுங்க ....இதை யார் பொய் என்று நிரூபிக்க முடியும் .....விஜய்யும் உங்க கையில் ரூபிணியின் வாழ்க்கை இருக்கும் வரை அவசர பட்டு வாழ்வூ தருகிறேன் என்று எல்லாம் கிளம்ப மாட்டார் .....அதை அந்த ஒரு மேட்டரை வைத்து தானே அவரை இத்தனை வருடமாய் உங்க அடிமையாய் இருக்க வைத்தீங்க .....அதை மீண்டும் யூஸ் செய்ய உங்களுக்கு சொல்லியா தரணும் ?விஜய் உங்க கையில் ,சூர்யா பொறாமையில் ,மதுரா சுடுகாட்டில் ."என்றாள் மேக்னா .
 
Status
Not open for further replies.
Top