All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

Introduce Yourself And Make Friends

Srinisaran

Member
என் பெயர் சரண்யா. வசிப்பது சிங்காரசென்னை.என் 12 வயதிலிருந்து புத்தகங்கள் படித்து வருகிறேன். புத்தக கண்காட்சியில் அப்பா வாங்கி தந்த சிவகாமியின் சபதம் நாவல் தான் என்னை புத்தக பைத்தியமாக்கியது. சரித்திரம், க்ரைம் நாவல்களில் இருந்து குடும்ப நாவல்களின் பக்கம் என் கண்களை திருப்பிய பெருமை என் அத்தையையே(அப்பாவின் தங்கை) சாரும்.அவர்கள் ரமணிமாவின் மிகப்பெரிய விசிறி.ரமணிமா கலெக்ஷன் எல்லாமே அவர்களிடமிருந்து வாங்கி படித்திருக்கிறேன்.கவிதைகள் சிறுகதை என கல்லூரி காலங்களில் எழுத்தூலகில் மெதுவாக என் தடங்களை பதித்தேன்.புக்க கையில எடுத்தா உலகமே அழிஞ்சா கூட உனக்கு தெரியாதுன்னு அம்மா திட்டிகிட்டே இருப்பாங்க. கூப்படறது கவனிக்கலன்னு கையில இருக்கிற புக்க அம்மா கிழிச்சி தூக்கி போட்ட அனுபவம் கூட உண்டு. எல்லாம் கல்யாணத்திற்கு முன்னாடி வரைக்கும்தான். மச்சினர், நாத்தனார்,கொழுந்தன் என பெரிரிரிய குடும்பம்.நீண்ட நெடிய பத்து ஆண்டுகளுக்கு பிறகு இப்ப இரண்டு மாதங்களாக புது போனின் உபயத்தால் இந்த தளத்தின் அறிமுகம். தொடர்பற்று போன இத்தனை ஆண்டுகளில் எத்தனை மாற்றம். ஏதோ கோமா ஸ்டேஜில் இருந்து மீண்ட மாதிரி எல்லாமே புதுசா தெரியுது. ஸ்ரீ மேமின் கதைகள் தனி ஸ்டைல்தான். Jb ன் கதை கூறும் பாங்கு ரொம்ப அழகாகா இருக்கு. விஐய மலரின் ஸ்டண்ட் சீன்கள் கண்முன் படமாய் ஓடுது. விஷ்ணு பிரியாவின் எழுத்துநடை ரொம்ப பிடிச்சிருக்கு. தீபாஷ்வினியின் சிவாகுட்டி ச்சோ ஸ்வீட் . வாழ்க்கைல மிஸ் பண்ணதெல்லாம் திருப்பி கெடச்சமாதிரி ஒரு ஃபிலிங். தேங்க்யூ ஸோமச் ஸ்ரீக்கா.
 

Thoshi

You are more powerful than you know😊❤
￰￰ஹாய் அக்காஸ் ..., நான் யமுனா , சென்னை பொண்ணு ...எனக்கு கவிதை எழுதுறது ரொம்ப பிடிச்ச விஷயம் ...schl daysla iruntheநா கவிதை எழுதுறேன் (ரொம்ப வருஷம் லாம் இல்ல அக்கா இப்ப தான் clg mudikka poren )அப்போ நானே எனக்கு வச்சிக்கிட்டு பெயர்தான் " thoshi தோஷி ...நான் இப்போ கதைகள் படிக்கிறதுக்கு முதல் காரணம் எங்க history mam ...7th std ￰புக்ல ராஜராஜசோழன பத்திவரும் அப்போ தான் mam எங்களுக்கு ￰￰பொன்னியின் செல்வன் பத்தி அம்புட்டு ரசனையாசொன்னாங்க ...அப்போ அத படிக்கனும்னு library poi படிக்க ஆரம்பிச்சவ தான் ....அப்டியெய் கல்கியோட சிவகாமியின் சபதம் ,பார்த்திபன் கனவு , அலை ஓசை படிச்சி அப்றம் thiriller ku thedi rajeshkumar , indra sowndarajan , suba lam padichiru irunthen ........அப்றம் rc mam novels படிச்சிட்டு இருக்கும் போது ஸ்ரீமாவோட "விழியில் விழுந்து இதயம் நுழைந்து " படிச்சேன் semma novel rmba naal athukullaey suthitu irunthen aprum ￰அவங்க நாவல் எல்லாம் படிக்க ஆரம்பிச்சேன் ..... (Hehe என்னடா iva intro ￰குடுக்க சொன்ன வாழ்கை வரலாறு சொல்றான்னு நீங்க நினைக்கிறது புரிது)
எனக்கு இந்த sitela எல்லா authors கதைகளும் ரொம்ப பிடிக்கும் ....all அக்காஸ் r my favoooo....
 

Daisy Josephraj

Well-known member
என் இனிய நட்பின் உறவுகளே! உங்களிடம் என்னை அறிமுகப்படுத்திக் கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இங்குள்ள எழுத்தாளர்கள், வாசகர்கள், குழுமத்திற்கு நான் முற்றிலும் புதியவள். எழுத்துலகில் நான் இளையவள். என்னுடைய இரண்டு புத்தகங்கள் நோஷன் ப்ரெஸ் மூலமாகவும், அருணோதயம் பதிப்பகம் மூலமாகவும் வெளிவந்திருக்கிறது. என்னுடைய முதல் குழந்தை 'உயிர்ப்பிக்கப்பட்ட கனவுகள்' என்னுடைய வெகு நாளையக் கனவு. இரண்டு பாகங்கள் இணைந்த மிக நீண்ட நாவல். அதைத்தான் இப்பொழுது பதிவேற்றம் செய்து கொண்டிருக்கிறேன். முதல் பாகம் முடிந்து இராண்டாம் பாகம் வேகமாக ஓடிக் கொண்டிருக்கிறது. . ஒரு பெரிய முக்கோணத்திற்குள் இணையும் மூன்று முக்கோணக் காதல் கதைகள்,,,அந்த முக்கோணத்தின் மையப் புள்ளி சாந்தி! அனைத்து உறவுகளையும் தன் அன்பு,பாசம், காதல் மற்றும் தியாகம் மூலம் உறவுப் பாலம் அமைத்து இணைக்கிறாள். இரண்டாவது நாவல் இரவில் உதித்த சூரியன் அதன் குழந்தை போன்று சிறிய நாவல். முடிவில் என்னுடைய மூன்றாவது நாவலான 'கனவே கலையாதே' நாவலுடன் நான் வந்து சேர்ந்த பாலைவனச் சோலைதான் ஸ்ரீகலாவின் குழுமம். அவர்கள் என்னை இரு கரம் கொண்டு அரவணைத்துக் கொண்டார்கள். என் முன்றாவது நாவல் அவர்கள் பதிப்பகத்தின் மூலம்தான் வந்துள்ளது. இந்தக் கதை உலகில் தத்தித் தத்தித் நடை பழகிகொண்டிருக்கும் என்னை வாசகர்களாகிய நீங்களும் அரவணைத்துக் கொள்வீர்கள் என்ற முழு நம்பிக்கை எனக்குள்ளது. தொடர்ந்து படியுங்கள் வாசக அன்பர்களே. உங்கள் மேலான கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். இந்த புதியவளுக்கு நீங்கள் அனைவரும் கொடுத்திருக்கும் வரவேற்பு மிகப் பெரியது. என் நாவலைப் படிக்கும் அனைவரிடமிருந்தும் உங்களின் கருத்துகளையும், விருப்புகளையும் எதிர்பார்க்கிறேன். எதிர் மறையான கருத்துக்களையும் இரு கரம் நீட்டி வரவேற்கிறேன். நன்றி வாசகர்களே. டெய்சி ஜோசப்ராஜ்
 

Hema Sriram

Well-known member
Hi friends.😍
Me Hema Sriram. Successful homemaker.😊

Rendu pasanga. 👫Smooth life. Marriage agi tenth year.❤ Ennoda dp la irukarathu ennoda ponnum,payanum.

Timepass ku intha site ku vanthen. But browser la ovvoru writer kum separate page podra alavu involve agiten. 🤩

First book padika start panthey daddy kitta irunthu than. Aduthuvum yarukum theriyama study bookulla vechi PONNIYIN SELVAN than start pannen.😅 Apa 9 std. Ippa vara husband ku theriyama bed sheet kulla vechi padikiren.
Situations mariduchu , but padikarathu marala😋

Tats myself. 🤔Perusa ethuvum illa. 👍
 

Santhi Lakshmi

New member
ஹாய்!, நான் சந்தானலஷ்மி . சென்னையில் வசிக்கிறேன்.படிப்பது (கதைகள் மட்டும்) பிடிக்கும்.நாவல் எழுத ஆசை பயமாக உள்ளது.
 

தாமரை

தாமரை
ஹாய்!, நான் சந்தானலஷ்மி . சென்னையில் வசிக்கிறேன்.படிப்பது (கதைகள் மட்டும்) பிடிக்கும்.நாவல் எழுத ஆசை பயமாக உள்ளது.
சாந்தா மா...தைரியம் வர வைக்க...என்னைப் பாருங்க... 😊😊😊😊😊😊😊ஹா....நம்மால் முடியும் னு தோணிரும்😘😘😘😘👍👍👍👍👍👍👍

waiting for your mass entry
 

Mithu😍

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் செல்லங்களா:love::love: ,
நான் ஸ்வேதா எனக்கு விவரம் தெரியாத வயசுலயே என்னை கேக்காம இந்த பேரை வச்சுட்டாங்க சோ நான் இங்க எனக்கு பிடிச்ச மாதிரி மித்து னு வச்சுக்கிகிட்டேன் :LOL::LOL:.நான் மதுரைக்கார பொண்ணுங்க :cool::cool:. கதை படிக்க காரணம் எங்க அம்மா தான் அவங்க தான் விழுந்து விழுந்து படிப்பாங்க படிக்க ஆரம்பிச்சா எல்லாத்தையும் மறந்துருவாங்க. அப்படி என்ன தான் இந்த கதைல இருக்குனு பார்க்க தான் நான் படிக்க ஸ்டார்ட் பண்ணேன் ஸ்டார்ட் பண்ணது மட்டும் தான் எனக்கு நியாபகம் இருக்கு என்னால நிறுத்த முடியலை இப்போ. பர்ஸ்ட் லைப்ரரி ல புக்ஸ் எடுத்து படிச்சுட்டு இருந்தேன் அப்படியே புக்ஸ் தேடி தேடி ஆன்லைன் பக்கம் வந்தேன். நான் ஒரு சைலன்ட் ரீடர் அப்பறம் தான் எனக்கு கதை எழுதணும்னு ஒரு ஆசை வந்துச்சு சோ எழுத ஸ்டார்ட் பண்ணிட்டேன். த்ரெட் ஸ்டார்ட் பண்ணி குடுத்த ஸ்ரீ மா க்கு ரொம்ப நன்றி:love: என்னோட கதையையும் படிச்சு லைக்ஸ் கமெண்ட்ஸ் போட்டு சப்போர்ட் பண்ற அனைவருக்கும் நன்றி:love::love::love: இதான் என்ன பத்தி ஒரு சின்ன இன்ட்ரோ:LOL::LOL::LOL:(idhu intro va nu santhega pada koodathu idhan intro nambanum;);):p)
வாங்க பழகலாம் fraandssss:love::love:
 

Mithu😍

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi friends.😍
Me Hema Sriram. Successful homemaker.😊

Rendu pasanga. 👫Smooth life. Marriage agi tenth year.❤ Ennoda dp la irukarathu ennoda ponnum,payanum.

Timepass ku intha site ku vanthen. But browser la ovvoru writer kum separate page podra alavu involve agiten. 🤩

First book padika start panthey daddy kitta irunthu than. Aduthuvum yarukum theriyama study bookulla vechi PONNIYIN SELVAN than start pannen.😅 Apa 9 std. Ippa vara husband ku theriyama bed sheet kulla vechi padikiren.
Situations mariduchu , but padikarathu marala😋

Tats myself. 🤔Perusa ethuvum illa. 👍
Akka unga pappaass soo cuteee:love::love:
 

Mithu😍

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சாந்தா மா...தைரியம் வர வைக்க...என்னைப் பாருங்க... 😊😊😊😊😊😊😊ஹா....நம்மால் முடியும் னு தோணிரும்😘😘😘😘👍👍👍👍👍👍👍

waiting for your mass entry
Hifi lotus akka:love::love:Santha akka neenga ennai parungaa nane ezhudhuren:LOL::LOL:neenga dhairiyama ezhudhunga waiting for ur story:love:
 
Top