All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

sivanayani

விஜயமலர்
நயனி மா.. மொத்த ஆர்மிய என் பக்கமா திருப்பிட்டீங்க.. மகிழ்ச்சி😂😂😂😂😂😂😂

ஆனா.. உண்மையிலேயே.. என் புரிதலை தான் சொல்லிருக்கேன்..

அபய்.. அசாதாரணமானவன்..

அவனின் கோபம்.. காதல்.. பாசம்.. எல்லாமே அதீதம் தான்.. அதான் அவன் ஹீரோ..

தன் வாழ்வை தன் தமக்கை வாழ்வை சிதைத்தவனை.. வஞ்சம் வைத்து.. தண்டனை முடிவு செய்து பழி தீர்த்தவனும் அவனே..

அதே எதிரியின் மகளை.. உயிருக்கும் உயிராய் காதலித்து.. மை ஸோல்.. கரேஜ் .. லைஃப் னு புலம்புபவனும் அவனே..

அவளின் தந்தை இறந்தபின்.. தீர்ப்பு எழுதின பேனாவை உடைத்தது போல் அவளை.. தூக்கி எறிந்ததும் அவனே..
இன்று தனது மனையாளாய்.. மனதிற்கு இனிமை தரமாட்டாளா என்று ஏங்கி நிறபவனும் அவனே..

போதைமருந்து உட்கொண்டேனும்.. தன் தமக்கையின் உயிர்வலி.. மனச்சிதைவை
. விக்னேஷ்வருக்கு கொடுத்திட அவளை உடல் முழுக்க காயங்களாய் துடிக்க வைத்ததும் அவனே.. இன்று.. அவளின் கால்நகப் பெயர்வுக்கும் கலங்கி.. மார்பில் சுமப்பவனும் அவனே..

தம்பியாய் பழிவாங்கினான்.. கணவனாய் தனைத் தானே தண்டித்துக் கொண்டான்.. தகப்பனாய்.. மாமனாய் நெறி பிறழாதவன்.. காதலனாய் அவளின் காதலுக்காய் ஏங்கி நிற்கிறான்..

கடலில் கரைத்த காயமாய்.. அவளின் காதலை தேடுகிறான்..

இரு குழந்தைகளை பதினெடடுமணி நேரம் போராடி அறுவை சிகிச்சையில் பெற்றெடுத்தவள்.. இதைவிடப் பெரிய வலிசகித்து தானே வாழ்ந்தேன் என்றதும் கண்டிப் போகிறான்.. தான் அவளுக்கு தந்த வலிகளை எண்ணி..

அசிங்கம் என்ற ஒரு வார்த்தைக்கு அளவிலா சினம் கொண்டவன்.. அவளின் நிலையில் நின்று பாராதவன்.. அடிபட்டதும் துடித்துப் போகிறான்..

அவன் முரண்களின் மொத்த உருவம் தான்.. எனினும்.. .. மாறாக் காதல். உறவின் நேசம்.. அன்பான தகப்பனாய் மனம் கவர்பவன். .

போதுமா..🤗🤗🤗🤗🤗🤗🤗
சரி சரி அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன். வேற வழி... ஹீ ஹீ செம தாமரை.. சொல்ல வார்த்தைகள் இல்லை. என்னமா எழுதுறீங்கப்பா... ஒவ்வொரு வசனமம், அவனோட வழிய, ஆழத்தை சொல்லி இருக்கு... எஸ் முரணான காதலன், முரண்பாடான தலைவன்... நேர்மையான தந்தை, தம்பி, மாமன். ஆனால் அவளுக்கு மட்டும் மாறுபட்ட நாயகன். திருந்தி வாழத் துடிக்கும் அவனுக்கு, சோலைவனமாக வாழ்வு மலருமா? இல்லை பூமிக்குள் புதைத்து மரிக்க செல்வாளா? சில முறை செத்துப்பிழைத்தவள் அவள். பலமுறை செத்தும் மனதளவில் பிழைக்காதவன் அவன். மிக லைகா சொல்லி இருக்கீங்க. ரொம்ப நன்றிப்பா.. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
சம்பந்தியம்மா என்ற மகனை ஏற்றுக் கொண்டதை கொண்டாடும் விதமாக இனி வரும் 5 எபியும் மகனும், மருமகளும் ஒட்டிகிட்டே இருக்க வேண்டுமென 2 ஆர்மிகளின் சார்பாக வில்லியிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது..
வில்லி மேடம் எங்க மனு மீது சரியான நடவடிக்கை எடுக்கல... உங்களுக்கு வரும் சேதாரத்துக்கு நா பொறுப்பில்ல... அம்புடுத்தான் சொல்லிபுட்டேன்..
hee hee hee aiyo aiyo... intha ulakam innum enna nambikittirukke... enna panna.... ankaala varum aapaththai naan eppadi puriya vaippen. :love::love::love::love::love:
 

Pushpaprathap

Well-known member
மிளிரை தங்கம் என நினைத்து அன்று உரசிப் பார்த்தவன்,
இன்று வைரம் என நினைத்து பட்டைத் தீட்ட முயன்றவன்,
அந்தோ பரிதாபம் பட்டை நாமம் வாங்கினான்.

பட்டின் மிருதை ஒட்டிய மிருதையை,
தொட்டுச் சேர விழைந்தவன்,
இதயம் வெட்டுப்பட்டு கிடக்கிறான்.

உடைந்து விட்ட கண்ணாடித் துகள்களை ஒன்று சேர்த்து அதில் தன் முகத்தை பார்த்தவன்,
விகாரமாய் தெரிய, அந்தோ பரிதாபம்!

கிளியின் சிறகை ஒடித்தவன்,
பாலும் பழமும் கொடுத்தாலும்,
பாவம் கிளியோ பறக்கவில்லை.

மெல்லடியாள் சொல்லடியில்,
கல்லடி கண்டவன் வெல்வது எப்படி?

தோள் சேர்ந்தவன் அவள் கால் பிடித்தான்,
வேல் விழியாளோ சொல் வாள் பிடித்தாள்.

பஞ்சு என்ற அஞ்சனையின் பாதத்தை, தன் நெஞ்சத்தில் வைத்தான். மஞ்சத்தை நெருங்க,
அவளோ வஞ்சத்தை விழுங்க வைத்தாள். காதல் பஞ்சத்தில் மூழ்க வைத்தாள்.

நதி கடலில் சங்கமிக்க தயங்குவது, விதியின் செயலா?
இல்லை விஜியின் அருளா?

நதியின் அணையை இடிக்க எடுப்போம் கடப்பாரை!
முடிப்போம் தடுப்பாரை!
வெற்றிவேல்! வீரவேல்!
Wow மீனாமா... Very Beautiful... உங்க கவிதையில் நீங்கள் உபயோகித்த சொற்களினால் என் மனம் கவரப்பட்டதா அல்லது அது உணர்த்தும் பொருளால் கவரப்பட்டதா என்று சொல்லத் தெரியாமல் குழம்புகிறேன். மொத்தத்தில் சொற்குற்றமும் இல்லை பொருட் குற்றமும் இல்லை மொத்தப் பரிசுப் பணமும் உங்களுக்கே.... செம சூப்பர்😍😍😍👍👍💝💝💝🥇🥇🥇
 

தாமரை

தாமரை
சரி சரி அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன். வேற வழி... ஹீ ஹீ செம தாமரை.. சொல்ல வார்த்தைகள் இல்லை. என்னமா எழுதுறீங்கப்பா... ஒவ்வொரு வசனமம், அவனோட வழிய, ஆழத்தை சொல்லி இருக்கு... எஸ் முரணான காதலன், முரண்பாடான தலைவன்... நேர்மையான தந்தை, தம்பி, மாமன். ஆனால் அவளுக்கு மட்டும் மாறுபட்ட நாயகன். திருந்தி வாழத் துடிக்கும் அவனுக்கு, சோலைவனமாக வாழ்வு மலருமா? இல்லை பூமிக்குள் புதைத்து மரிக்க செல்வாளா? சில முறை செத்துப்பிழைத்தவள் அவள். பலமுறை செத்தும் மனதளவில் பிழைக்காதவன் அவன். மிக லைகா சொல்லி இருக்கீங்க. ரொம்ப நன்றிப்பா.. :love::love::love::love:
:smiley2::smiley2::FlyingKiss::FlyingKiss:
 
Top