"ரிது மா, நீ சென்னை வந்து பத்து நாள் ஆச்சே, எப்போ திரும்ப காலேஜிற்கு போக போற??" என்று கேட்டார். தந்தையின் கேள்வியில் அவர் முகம் பார்க்கதவாறு, "நாளைக்குப் போலாம் என்று நினைக்கிறன் அப்பா" என்றாள்.
தன்னிடம் வார்த்தைக்கு வார்த்தை பேசும் மகள் இன்று தான் கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் பேசுவதைப் பார்த்தது, அவளைப் பேச வைக்கும் பொருட்டு, "இன்னும் எவ்வுளவு நாள் மா இருக்குக் கோர்ஸ் முடிய??" என்று கேட்டார்.
"இன்னும் எயிட் மந்த்ஸ் தான் இருக்குப்பா கோர்ஸ் முடிய..." என்று அவர் கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் கூறினாள்.. இவர்கள் பேசிக் கொண்டிருக்க அதற்குள் இரவு உணவு தயார் செய்த ஆனந்தி மூவரையும் இரவு சாப்பாட்டிற்கு அழைத்தார்.
தந்தை முன் உணவை மறுக்க முடியாமல், மவுனமாக, டைனிங் டேபிள் சென்று, பேருக்கு ஏதோ சாப்பிட்டு விட்டு, அவள் அறைக்குச் சென்றாள் ரிதுஷினி...
அடுத்த நாள் காலையில் 10 மணி பிளைட்டிற்கு வீட்டில் இருந்து 8 மணிக்கெல்லாம் கிளம்பிக் கொண்டிருந்தாள் ரிதுஷினி, அறையில் இருந்து ட்ராவல் பாகுடன் வெளியே வந்த ரிது ஹாலில் பேப்பர் படிக்கும் குணசேகரன் முன்னாடி நின்று,
"அப்பா நீ போயிட்டு வரேன், நீங்க உங்க உடம்பை பார்த்துக்கோங்க.... நல்ல ரெஸ்ட் எடுங்க... நான் முடிந்தால் நெஸ்ட் மந்த் வர பார்க்கிறேன்.." என்று கூறினாள் அவர் முகம் பார்க்க சங்கடப்பட்டு..
"ஓகே ரிதுமா நீ பார்த்து போயிட்டு வா... ஐயம் ஆரைட் நொவ்" என்றார் குணசேகர் அவளிடம். இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது கிட்செனில் இருந்து ஆனந்தியும், மாடியில் இருந்து தருணும் ஹாலிற்கு வந்தனர்..
குணசேகரிடம் ஒரு தலை அசைப்பை கொடுத்து,ஆனந்தியிடம், "அம்மா நான் போயிட்டு வரேன்... அப்பாவை பார்த்துக்கோங்க... அப்படியே உங்களையும் கவனிச்சுக்கோங்க... நான் டெல்லி போயிட்டு போன் பண்றேன்" என்று சொல்லி அவரிடம் விடைபெற்று தருணுடன் வெளியே வந்தாள்..
தன் முகம் பார்க்காமல் செல்லும் மகளின் குற்றவுணர்ச்சியைப் புரிந்து கொண்ட குணசேகர், அவளை ஆறுதல் படுத்தும் விதமாக வாசல் கடக்கும் மகளை "ரிது" என்று அழைத்தார், குணசேகரன் குரலை கேட்டதும், திரும்பிய ரிது அவர் முகம் பார்த்தாள்..
ரிதுவின் பார்வையில் உள்ள வருத்தத்தைப் புரிந்து கொண்டவாறு,"பார்த்து போயிட்டு வா ரிதுமா" என்று சொல்லி அவர் கண்களை மூடி திறந்து அவளைப் பார்வையால் ஆறுதல் படுத்தினர்.
தந்தையின் ஆறுதலை படித்த ரிதுஷினி, அவள் பார்வையில் மன்னிப்பை யாசித்தவாறு,"சரி ப்பா..." என்று கூறி தலை அசைத்து அவரிடம் விடைபெற்று வெளியே வந்தாள் ...
ஏர்போர்டிற்குத் தருணுடன் செல்லும் போதும் அவனுடன் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை, தங்கையின் நிலை சிறிது காலம் இப்படித் தான் இருக்கிறது என்று புரிந்தாலும், இந்த முறை மவுனம் சாதிக்கும் தங்கையைக் காண வருத்தமுற்றவனாக, அவளிடம் பேச்சு வளர்க்க எண்ணி,
"ரிது, அப்பாவோட ஹெல்த் பத்தி நீ ரொம்ப ஒர்ரி பண்ணிக்காத, இனிமேல் அப்பாக்கு ஒரு டூ மந்த்ஸ் நான் கம்ப்ளீட் ரெஸ்ட் தான் குடுக்கப் போறேன்... நீ உன்னோட லாஸ்ட் இயர் ஸ்டடீஸ்ல கான்செண்ட்ரேட் பண்ணு!!!" என்று கூறி அவளை ஆறுதல் படுத்தினான்...
"ஓகே அண்ணா" என்று ஒற்றை வார்த்தையில் அவனின் கேள்விக்குப் பதில் கூறினாள்.. ரிதுவின் அண்ணா என்ன அழைப்பிலே அவளின் மனநிலையை அறிந்து அதற்கு மேல் வேற எதுவும் பேசவில்லை தருண்...
ஏர்போர்ட் வந்ததும், ரிப்போர்டிங் டைம் வந்ததும், ரிது உள்ளே போக எழுவதைப் பார்த்து, அவள் அருகில் வந்த தருண், அவள் தலையைத் தடவி ஆறுதல் படுத்தி, "பார்த்து போ ரிது, டெல்லி போயிட்டு போன் பண்ணு, டேக் கேர்" என்று சொல்லி அவளை வழியனுப்பி வைத்தான்..
தருண், அவள் தலையைத் தடவியதும், அவனின் அன்பில் நெகிழ்ந்த ரிது, கண்களில் வரத்துடிக்கும் கண்ணீரை உள் இழுத்து, "ஓகே அண்ணா பை" என்று கூறி அவனிடம் விடை பெற்று உள்ளே சென்றாள்...
விமானத்தில் ஏறிய ரிதுவிற்கு, மீண்டும் பழைய நினைவுகள் ஆட்கொண்டது.. இதற்காகவே முடிந்த அளவிற்கு அவளைத் தனியாக இருக்கும் படி பார்த்துக் கொள்ள மாட்டாள்..
தனிமையான நேரங்களில் முதலில், தான் செய்த செல், அதில் ஏற்பட்ட சந்தோசம், வருத்தம், கடைசியில் குற்றவுணர்ச்சி என்று கலவையான உணர்வுகளே, அவளைக் காயப்படுத்தும்...
கடந்த இரண்டு வருடத்தில், நடத்த சம்பவத்தில் இருந்து வெளியே வந்தது போல் மற்றவர்களிடம் காட்டிக் கொண்டாலும், இன்னும் அவளால் அன்நினைவுகளில் இருந்து முழுமையாக வெளியே வர முடியவில்லை..
இவ்வாறு கடந்த காலத்தைப் பற்றிச் சிந்தித்த படியே விமானப்பயணம், கழிந்தது ரிதுஷினிக்கு... டெல்லி இந்திரா காந்தி வினமான நிலையம் அடைந்ததும், தன்னுடைய ட்ராவல் பாகை எடுத்துக் கொண்டு, கால் டாக்ஸி புக் செய்து ஐ. ஐ. டி (IIT) டெல்லி கேம்பஸ் நோக்கி தன் பயணத்தை மேற் கொண்டாள்...
ஹாஸ்டல் சென்றதும், முதலில் வீட்டிற்குப் போன் செய்து தான் பத்திரமாக வந்து சேர்த்த தகவல்களை சொன்னாள்.. அடுத்து, என்ன செய்ய என்று தெரியாமல், சிறிது நேரம் தூங்கினாலாவது தன் கவலைகள் மறக்கும் என்று நினைத்து, தன் பெட்டில் படுத்துறங்கினாள்.
************************************