குணசேகர் ரிதுவிடம் கல்யாண விஷயம் பேசிய அதே நேரம் ராகவும், சென்னையில் இருக்கும் தன் பெற்றோருக்கு sykpe கால் செய்தான்...
வார நாட்களில் தீடிர் என்று பேசும் மகனிடம் ஆராச்சி பார்வை பார்த்தவாறு, திரையில் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தனர் சிவசுந்தரும்,சாருலதாவும்...
அவர்களின் நலத்தைப் பற்றி விசாரித்த ராகவ், மெதுவாகத் தான் அழைத்த விஷயத்தைப் பேச ஆரம்பித்தான்.. “அப்பா, அம்மா, நான் இது வரைக்கும் உங்க ரெண்டு பேர் கிட்ட இருந்து எதுவும் கேட்டது இல்ல...... இப்ப ஒண்ணு கேட்ட மட்டும் போறேன் ப்ளீஸ் டூ இட் பார் மீ......!!!" என்று சொல்லி அவர்களிடம்,
"அப்பா எனக்காக நான் சொல்றவங்களிடம் பொண்ணு கேட்க வேண்டும்!!!" என்று கூறி, குணசேகர் மற்றும் அவரின் குடும்பத்தைப் பற்றியும், ரிதுஷினியின் தற்போதைய நிலையைப் பற்றியும், சொன்னான் ராகவ்...
ராகவ் சொல்லி முடித்ததும், எதிர் பக்கம் இருக்கும் அவன் பெற்றவர்களிடம் சிறிது யோசனை தெரியவும், "எனக்குத் தெரியாது அப்பா, நீங்க தான் இத முடிச்சு குடுக்கணும்!!!" என்று பொறுமையாக வார்த்தைகளைக் கோர்த்து, அழுத்தமாகக் கூறினான்...
மகன் எதையும் சரியாகத்தான் செய்வான் என்று தெரிந்த சிவசுந்தருக்கு, மகனின் இந்த வேகம் அவன் மனநிலையை வெளிச்சம் போட்டு காட்ட, மகனின் வார்த்தையில் உள்ள அழுத்தத்தைப் புரிந்து கொண்டு, தன் மனைவியை மெதுவாகப் பார்த்தார்...
சாருலதாவிற்கும் மகன் ஆசையே பெரிதாய் தெரிய, சிவசுந்தரிடம் கண் அசைத்து அவர் சம்மதத்தைத் தெரிவித்தார்... மனைவியின் கண் அசைவில் அவளின் சம்மதத்தைப் புரிந்து கொண்ட சிவசுந்தர் ராகவிடம்," சரி ப்பா... இப்போ எதுக்கு நாங்க பேச வேண்டும்" என்று கேட்டார்...
சிவசுந்தரின் கேள்வியிலேயே அவரின் சம்மதம், மறைமுகமாகக் கிடைத்ததைப் புரிந்த ராகவ், தாயின் சம்மதத்தைத் தெரிய வேண்டி அவர் முகம் பார்த்தான்..
மகன் பார்வையைப் படித்த சாருலதா, ஒரு புன்சிரிப்பை பதிலாகக் கொடுத்தார்.. நொடிப்பொழுதில் இருவரின் சம்மதம் கிடைத்ததும், சந்தோஷம் அடைந்த ராகவ், சிவசுந்தரின் கேள்விக்கு,
"அப்பா ரிது வீட்டுக்கு நீங்க போங்க, நான் எதுக்கு உங்களை இப்ப போகச் சொன்னேன் என்று புரியும்... அங்க வச்சி எனக்குக் கால் பண்ணுங்க, நான் உங்க எல்லார்கிரையும் பேசுறேன்!!!" என்று கூறினான்...
இதற்கு மேல் மகனிடம் எதுவும் பேச முடியாது என்று புரிந்த சிவசுந்தர், "என்னவோ சொல்ற ராகவ், நாங்களும் நீ சொல்ற மாதிரி பண்றோம்....இது சரியா வருமா??" என்று கேட்டார்...
"எல்லாம் சரியா வரும் அப்பா, உங்க பையன் தப்பு பண்ண மாட்டான்... அந்த நம்பிக்கை உங்களுக்கு இருந்தா, நீங்க இதை ப்ரோசீட் பண்ணுங்க!!!" என்றான்...
மகனின் சாதுரியமான பேச்சுத் திறமையில் தனக்குள் சிரித்துக் கொண்ட சிவசுந்தர், " சரி ராகவ், எப்ப போய்ப் பேச வேண்டும்??" என்று கேட்டதுக்கு, "நாளைக்குப் போய்ப் பேசுங்க அப்பா..." என்று அவருக்குப் பதில் கூறினான் ராகவ்..
மகன் தந்தையின் உரையாடலை குறுக்கிடாமல் கேட்டுக் கொண்டிருந்த சாருலதா, அவர்கள் பேசி முடிக்கும் தருவாயில் ராகவிடம், " ராகவ் மருமகப்பொண்ணு பேரு ரிதுவா??" என்று கேட்டார்...
சாருலதா மருமகள் என்று கூறியதும், சிரித்த ராகவ்,"ஆமா அம்மா அவ முழுப் பெயர் ரிதுஷினி, ரிது என்று கூப்பிடுவாங்க.." என்று கூறினான்...
"மருமக பேரு ரொம்ப நல்லா இருக்கு ராகவ்..." என்று சந்தோசத்துடன் கூறிய அன்னையின் வார்த்தையில், அவளும் உங்களைப் போல் நல்லா இருப்பா அம்மா..." என்று கூறி தந்தையிடமும், தாயிடமும் சிறிது நேரம் பேசிவிட்டு வைத்தான்...
சிவசுந்தர், சாருலதாவிடம் போன் பேசி முடித்த ராகவ், அடுத்து வேறு ஒரு சிலரிடம் போன் பேசி, அங்கு நடந்தவைகள் எல்லாம் கேட்டு தெரிந்து கொண்டு, அவரிடம் தக்க நேரத்தில் தகவல் கூறியதற்கு நன்றி கூறி, போனை வைத்தான்.
அடுத்த என்ன செய்ய வேண்டும் என்று சிந்தித்தபடி, 'நாளைக்குக் குணசேகரிடம் என்ன பேச வேண்டும், எப்படிப் பேச வேண்டும்....' என்று மனதிற்குள் திட்டம் வகுத்துக் கொண்டான்...
எல்லாம் முடிவு எடுத்ததும், ஆபீஸ் செல்ல நேரம் ஆக, வேகமாகக் கிளப்பி ஆஃபீஸிற்குச் சென்றான். அதற்குப் பிறகு அலுவல் வேலை அவனைச் சூழ்ந்து கொள்ள மற்றதை பற்றி நினைக்க நேரம் இல்லாமல் போனது....
இவ்வாறு ரிது அந்நாளை துக்கத்தில் முடித்தாள் என்றால், ராகவோ அந்நாளை சந்தோஷத்தில் ஆரம்பித்தான்...
ரிதுவின் துக்கம் நிலைக்குமா, இல்லை ராகவின் சந்தோஷம் நிலைக்குமா!!!....
மாயங்கள் செய்வான்(ள்)...