Indhumathi.s
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இவர்கள் பேசிக் கொண்டிருந்த சத்தத்தைக் கேட்டு ஹாலிற்கு வந்த ஆனந்தியிடம், "ஆனந்தி, இவங்க சிவசுந்தர், இவங்க சாருலதா, நம்ம ரிதுவை பொண்ணு கேட்டு வந்திருக்காங்க!!!" என்று அவர்கள் வந்திருக்கும் விஷயத்தைக் கூறினார்...
குணசேகர் கூறியதும், 'இது என்ன புதுக் குழப்பம்' என்று நினைத்து, வந்திருந்தவர்களிடம் வணக்கத்தைத் தெரிவித்து, அவர்களை வீட்டுத் தலைவலியாய் வரவேற்றார் ஆனந்தி.. "இது என் மனைவி ஆனந்தி" என்று சிவசுந்தர், சாருலதா தம்பதிக்கு ஆனந்தியை அறிமுகப் படுத்தி வைத்தார் குணசேகர்..
அவர்களைப் பார்த்து சிரித்த ஆனந்தி, கணவன் அருகில் அமர்ந்து கொண்டார்.. இவர்கள் பேசி கொண்டிருக்கும் போதே, ரிதுவை பிளைட் ஏற்றி விட்ட தருண், குணசேகரிடம் ஆபீஸ் விஷயமாக ஒரு முக்கியமான கையெழுத்து தேவை பட்டதால் அதை வாங்க வந்திருந்தான்...
ஹாலில் தந்தை மற்றும் தாய், புதியவர்களிடம் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்த படி உள்ளே வந்த தருணை, பார்த்த குணசேகர், தருண் அவர் அருகில் வந்ததும், இது தருண் என்னோட பெரிய பையன், ரிதுவிற்கு அண்ணா என்று கூறி தருணை அவர்களிடம் அறிமுகப் படுத்தினார்...
புதியவர்களிடம் ஒரு புன்சிரிப்பை கொடுத்த தருண், குணசேகரை கேள்வியாய் பார்த்தான், மகன் பார்வையைப் படித்த குணசேகர் அவனிடம்,
"தருண் இவங்க சிவசுந்தர் ரிசெர்வ் பேங்க்ல ஒர்க் பண்றாங்க, இவங்க சாருலதா அவங்களோட வைப், நம்ம ரிதுவை அவங்களோட மகனிற்குப் பொண்ணு கேட்டு வந்திருக்கிறாங்க" என்று மகனிற்கு அவர்கள் வந்திருக்கும் செய்தியைக் கூறினார் ..
குணசேகரிடம், புரியாத பார்வையைச் செலுத்திய தருண், சிவசுந்தர் சாருலதா தம்பதியை ஒரு பார்வை பார்த்து, குணசேகரிடம், "அப்பா ஒரு சைன் மட்டும் நீங்க போடணும் அதை வாங்க தான் வந்திருக்கிறேன்" என்று மென்குரலில் அவன் வந்திருக்கும் காரணத்தைக் கூறினான்..
மகன் காட்டிய இடத்தில் ஒரு கையெழுத்து போட்ட குணசேகர், தருணிடம், "நீயும் இங்க இரு கண்ணா, பைலை உன்னோட பி.ஏவை வந்து வாங்கிக்கச் சொல்லு என்று கூறி மகனை தன்னோடு இருக்கச் சொன்னார்..
"சரி ப்பா... நான் சுரேஷிற்குக் கால் பண்ணி வர சொல்றேன் என்று கூறி, அவன் பி.ஏ விற்குக் கால் செய்ய வெளியே சென்றான்.. போகும் மகனை பார்த்த குணசேகர், சிவசுந்தரை பார்த்து, "சாரி சார், பையன் என் கூட என்னோட பிசினெஸை பார்த்துக்கிறான்...
முக்கியமான சைன் ஏதோ நான் போடணும் போல, அதான் இப்ப வந்திருக்கிறான், ஒரு போன் பேச போயிருக்கிறான், இப்ப வந்திடுவான்" என்று அவரிடம் மன்னிப்பையும் வேண்டி, மகனும் இங்கு இருப்பான் என்று செய்தியையும் மறைமுகமாய்க் கூறினார் குணசேகர்...
"அதுக்கு என்ன சார், ஒன்னும் பிரச்சனை இல்லை , அவங்க வந்ததுமே பேசிக்கலாம்" என்று சிவசுந்தரும் மறைமுகமாய்த் தருணின் வருகையை உறுதி செய்தார்.. போன் பேசி முடித்த தருண், உள்ளே வந்ததும் குணசேகர் அடுத்து இருக்கும் ஒற்றைச் சோபாவில் அமர்ந்து கொண்டான்..
தருண் உட்காந்ததும், சிவசுந்தர் பேச ஆரம்பித்தார், " சார் ஆல்ரெடி சொன்ன மாதிரி நான் ரிசெர்வ் பேங்க்ல ஒர்க் பண்றேன், மை வைப் சாருலதா ஹோம்மேக்கர்... எங்களுக்கு ஒரு பையனும், பொண்ணும்..
பையன் பெயர் ராகவ்.. சென்னைல பி.இ முடிச்சிட்டு இங்க ஒரு சாப்ட்வேர் கம்பெனில ஒரு ரெண்டு வருஷம் ஒர்க் பண்ணான். இப்ப ஆன்சைடில், வெல்லிங்டன்ல த்ரீ இயர்ஸ்சா ஒர்க் பண்றான்..
பொண்ணு இங்க சென்னையில் தான் ஒரு காலேஜில் பி.இ பைனல் இயர் பண்ணறா... என்னோட பூர்விகம் சென்னை தான், என்னோட மனைவிக்கும் சென்னை தான்..
இது தான் சார் எங்க குடும்பம்.. நாங்க என்னோட பையனுக்குத் தான் உங்க பொண்ணைக் கேட்டு வந்திருக்கிறோம்" என்று தாங்கள் வந்திருக்கும் நோக்கத்தை நீண்டதொரு விளக்கமாய்க் கூறினார்...
சிவசுந்தர் பேசியதை கேட்ட குணசேகர், அவர் கூறிய செய்திகளை அமைதியாக உள்வாங்கிக் கொண்டு, ஆனந்தியையும் தருணையும் ஒரு பார்வை பார்த்தார்...
குணசேகரின் பார்வையில், அவர்கள் இன்னும் தெளிவாக வில்லை என்பதைப் புரிந்து கொண்ட சிவசுந்தர் மீண்டும் பேச ஆரம்பித்தார்..
"சார், நானும், என் மனைவியும் பிராங்கா எங்க பசங்க கிட்ட பழகுவோம், அவங்களோட சந்தோஷம் தான் எங்களுக்கு முக்கியம்... உங்க கிட்ட ஆரம்பத்தில் இருந்து பிரீயா பழகணும்னு நினைக்கிறேன், அதுனால எங்க வீட்டில் நேத்து நடந்ததைச் சொல்றேன்" என்று சொல்லி, ராகவ் பேசியதை கூறினார்..
குணசேகர் கூறியதும், 'இது என்ன புதுக் குழப்பம்' என்று நினைத்து, வந்திருந்தவர்களிடம் வணக்கத்தைத் தெரிவித்து, அவர்களை வீட்டுத் தலைவலியாய் வரவேற்றார் ஆனந்தி.. "இது என் மனைவி ஆனந்தி" என்று சிவசுந்தர், சாருலதா தம்பதிக்கு ஆனந்தியை அறிமுகப் படுத்தி வைத்தார் குணசேகர்..
அவர்களைப் பார்த்து சிரித்த ஆனந்தி, கணவன் அருகில் அமர்ந்து கொண்டார்.. இவர்கள் பேசி கொண்டிருக்கும் போதே, ரிதுவை பிளைட் ஏற்றி விட்ட தருண், குணசேகரிடம் ஆபீஸ் விஷயமாக ஒரு முக்கியமான கையெழுத்து தேவை பட்டதால் அதை வாங்க வந்திருந்தான்...
ஹாலில் தந்தை மற்றும் தாய், புதியவர்களிடம் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்த படி உள்ளே வந்த தருணை, பார்த்த குணசேகர், தருண் அவர் அருகில் வந்ததும், இது தருண் என்னோட பெரிய பையன், ரிதுவிற்கு அண்ணா என்று கூறி தருணை அவர்களிடம் அறிமுகப் படுத்தினார்...
புதியவர்களிடம் ஒரு புன்சிரிப்பை கொடுத்த தருண், குணசேகரை கேள்வியாய் பார்த்தான், மகன் பார்வையைப் படித்த குணசேகர் அவனிடம்,
"தருண் இவங்க சிவசுந்தர் ரிசெர்வ் பேங்க்ல ஒர்க் பண்றாங்க, இவங்க சாருலதா அவங்களோட வைப், நம்ம ரிதுவை அவங்களோட மகனிற்குப் பொண்ணு கேட்டு வந்திருக்கிறாங்க" என்று மகனிற்கு அவர்கள் வந்திருக்கும் செய்தியைக் கூறினார் ..
குணசேகரிடம், புரியாத பார்வையைச் செலுத்திய தருண், சிவசுந்தர் சாருலதா தம்பதியை ஒரு பார்வை பார்த்து, குணசேகரிடம், "அப்பா ஒரு சைன் மட்டும் நீங்க போடணும் அதை வாங்க தான் வந்திருக்கிறேன்" என்று மென்குரலில் அவன் வந்திருக்கும் காரணத்தைக் கூறினான்..
மகன் காட்டிய இடத்தில் ஒரு கையெழுத்து போட்ட குணசேகர், தருணிடம், "நீயும் இங்க இரு கண்ணா, பைலை உன்னோட பி.ஏவை வந்து வாங்கிக்கச் சொல்லு என்று கூறி மகனை தன்னோடு இருக்கச் சொன்னார்..
"சரி ப்பா... நான் சுரேஷிற்குக் கால் பண்ணி வர சொல்றேன் என்று கூறி, அவன் பி.ஏ விற்குக் கால் செய்ய வெளியே சென்றான்.. போகும் மகனை பார்த்த குணசேகர், சிவசுந்தரை பார்த்து, "சாரி சார், பையன் என் கூட என்னோட பிசினெஸை பார்த்துக்கிறான்...
முக்கியமான சைன் ஏதோ நான் போடணும் போல, அதான் இப்ப வந்திருக்கிறான், ஒரு போன் பேச போயிருக்கிறான், இப்ப வந்திடுவான்" என்று அவரிடம் மன்னிப்பையும் வேண்டி, மகனும் இங்கு இருப்பான் என்று செய்தியையும் மறைமுகமாய்க் கூறினார் குணசேகர்...
"அதுக்கு என்ன சார், ஒன்னும் பிரச்சனை இல்லை , அவங்க வந்ததுமே பேசிக்கலாம்" என்று சிவசுந்தரும் மறைமுகமாய்த் தருணின் வருகையை உறுதி செய்தார்.. போன் பேசி முடித்த தருண், உள்ளே வந்ததும் குணசேகர் அடுத்து இருக்கும் ஒற்றைச் சோபாவில் அமர்ந்து கொண்டான்..
தருண் உட்காந்ததும், சிவசுந்தர் பேச ஆரம்பித்தார், " சார் ஆல்ரெடி சொன்ன மாதிரி நான் ரிசெர்வ் பேங்க்ல ஒர்க் பண்றேன், மை வைப் சாருலதா ஹோம்மேக்கர்... எங்களுக்கு ஒரு பையனும், பொண்ணும்..
பையன் பெயர் ராகவ்.. சென்னைல பி.இ முடிச்சிட்டு இங்க ஒரு சாப்ட்வேர் கம்பெனில ஒரு ரெண்டு வருஷம் ஒர்க் பண்ணான். இப்ப ஆன்சைடில், வெல்லிங்டன்ல த்ரீ இயர்ஸ்சா ஒர்க் பண்றான்..
பொண்ணு இங்க சென்னையில் தான் ஒரு காலேஜில் பி.இ பைனல் இயர் பண்ணறா... என்னோட பூர்விகம் சென்னை தான், என்னோட மனைவிக்கும் சென்னை தான்..
இது தான் சார் எங்க குடும்பம்.. நாங்க என்னோட பையனுக்குத் தான் உங்க பொண்ணைக் கேட்டு வந்திருக்கிறோம்" என்று தாங்கள் வந்திருக்கும் நோக்கத்தை நீண்டதொரு விளக்கமாய்க் கூறினார்...
சிவசுந்தர் பேசியதை கேட்ட குணசேகர், அவர் கூறிய செய்திகளை அமைதியாக உள்வாங்கிக் கொண்டு, ஆனந்தியையும் தருணையும் ஒரு பார்வை பார்த்தார்...
குணசேகரின் பார்வையில், அவர்கள் இன்னும் தெளிவாக வில்லை என்பதைப் புரிந்து கொண்ட சிவசுந்தர் மீண்டும் பேச ஆரம்பித்தார்..
"சார், நானும், என் மனைவியும் பிராங்கா எங்க பசங்க கிட்ட பழகுவோம், அவங்களோட சந்தோஷம் தான் எங்களுக்கு முக்கியம்... உங்க கிட்ட ஆரம்பத்தில் இருந்து பிரீயா பழகணும்னு நினைக்கிறேன், அதுனால எங்க வீட்டில் நேத்து நடந்ததைச் சொல்றேன்" என்று சொல்லி, ராகவ் பேசியதை கூறினார்..