All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் “ராதைக்கேற்ற ராவணன்!!!” - கருத்துத் திரி

Shanthigopal

Well-known member
எப்படி இருக்கீங்க ஸ்ரீ மேம்? இரு வெவ்வேறு காதல் பறவைகளும் தன் காதலை தன் இணைக்கு புரிய வைக்க அதிரடி நடவடிக்கை எடுத்த பதிவு...

ராதுவின் நடவடிக்கை கண்டு கண்ணன் புரிந்து கொண்டு கேட்டதற்கு ராதுவின் செயல் முழுதும் நனைந்தாகி விட்டது இனி முக்காடு எதற்கு என்பது போல் அட்டகாசமான அதிரடி நடவடிக்கை... கண்ணனே அவள் அதிரடி செயல்களை கண்டு முதலில் அதிர்ச்சியாகி பின் புன்னகைக்கும் அழகே அழகு... அப்பாடா! கண்ணனின் முகத்தில் இனி புன்னகையை எப்போதும் பார்க்கலாம்... அதிரடியான காதல்...

பாண்டியன் கோல்மாலை அறிந்து கொண்ட சரிதா... பாவம் இதிலும் பாண்டியன் சொதப்பி விட்டான்.. ஆனால் ஒரு மனநிலை பாதிப்படைந்த பெண்ணிற்கு உதவி செய்ய போன கணவனை... இத்தனை நாள் இந்த மாதிரி சந்தேகத்தின் பேரில் தான் பாண்டியனிடம் தள்ளி இருந்தாளா? பாண்டியன் கோபம் நியாயமானது... ஆனாலும் எதிர்பார்த்து காத்திருக்கும் மனைவியை அழைக்க போவானா? அப்படியே அழைத்து வந்தாலும் பாண்டியனை புரிந்து கொள்வாளா சரிதா?

அமைதியாக இருந்து அருந்ததி போட்டாலே ஒரு போடு... மனோ ஆட்டத்தை நம் கிருஷ் எப்படி நிறுத்துவானோ? இல்லை அருந்ததிக்கு புரிய வைக்க முயற்சிப்பானா?

அருமையான பதிவு ஸ்ரீ மேம்...
 

Chitra Balaji

Bronze Winner
Wooooooooow.... Super Super mam.... Semma semma episode..... அருந்ததி ah miratti இருக்கான் அந்த பாவி Mano.... Athuyum ava camp ku போய் இருக்கும் பொது video எடுத்து vechikitu..... Ava இந்த உண்மை ah வீடு la solli இருக்கலாமே.... இந்த பயம் தான் அந்த maari aalungaluku தைரியத்தை kodukuthu..... Vechi senjitaan arjun semma... Arjun kita மட்டுமாவது sollanum nu thoniche.... Seriyana thandanai avanuku.... அவல படிக்க sollitaan arjun avaluku avan pasthukkaapa இருப்பேன் nu....... Appo ithe maari oru suzhnilai ah irunthu இருக்கா அணு.... Athu thaan ava அவ்வளவு vethanai ah avan kita solra..... Eppadi அந்த suzhnilai la irunthu thappichaa nu theriyala....ava காதல் ah avan kita sollitaa... Arjun ethirpaaththa அந்த நாள் வந்துடுச்சி ... Seriya sonniga mam மாற்றம் namba kita irunthu வரணும் appo தான் சமுதாயம் மாறும்... Super Super mam
 

TM Priya

Well-known member
நீ உன் விருப்பப்படி சிறகடித்து பறந்து போ...நான் உன் பாதுகாப்பிற்காகக் கூடவே இருப்பேன் இப்படி ஒவ்வொரு அண்ணனும் இருந்தால் பெண்கள் அத்தனை இன்னல்களையும் கடந்துவிடுவார்கள்..அர்ஜுன் சூப்பர்.....அத்தியாயத்தின் இறுதி வரிகள் என்றும்போல் இன்றும் அசத்தல்...பெண்ணவள் கற்பை நிரூபிக்க த் தீக்குளிக்க வேண்டுமாம்..பெண்ணவள் கற்பை கடை பரப்பிய ஆணவனைத் தீக்கிரையாக்க யாரும் துனணிவதில்லையே.. Mass srimam...மாற்றம் நம்மில் இருந்தே தொடங்கவேண்டும்.....மனோ,பரசுக்கு சரியான தண்டனை.....டுடே எபி கலக்கல் மா.
 

Deebha

Well-known member
Wow.... very nice epi mam. Nam kudumba pengalai naam namba vendum enpathu super. Kan theekiraiyakiyathu super. Nee siragaduthu para naan endrum unnudan errupen endrathu arumai. Kanavan manaivi purithalai solliyathum arumai
 

Advikasri

New member
வாவ் அர்ஜுன் செம்ம செம்ம😍😍😍
ஒரு ஒரு ஃபேமிலிலையும் இப்படி ஒருத்தர் understanding aah இருந்த கூட போதும் இவளோ பெண்கள் life save ஆகும். Hats off u Arjun😍😍😍😘😘😘😘
ஶ்ரீ மா நிஜமா இப்படி இருக்கும் நு except பண்ணல 🤩🤩🤩
இன்னும் அனு என்ன தான் நினைக்கர நு புரியல, எத வெச்சி அவனா அசிங்க படுத்தின நு தெரியல😔😔😔😔
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ராதைகேற்ற ராவணன்...! - ஸ்ரீ கலாவின் எதிர் மறை காட்டும் நேர் நிலைக் காவியம்!


இனிய தோழி,





அண்ணனின் ஆரோகணத்தில்


தங்கையவள் ஆசுவாசம்!


கிருஷ்ணனவன் அவதாரத்தில்


ராதையவள் ஆலாபனை!





பெண்ணே!


நீ குடும்ப விளக்கு!


உன்னை உருக்கி


உலகை நிமிர்த்தும்...


உன்னதமானவள் நீ என்றால்...


உன்னை எரித்து


உலகை உருக்கும்...


வீணர்கள் வீழ நீ முயன்றால்...


குடும்ப விளக்கு


உலக விளக்காகாதோ...!





வீட்டுக்கு வீடு


நாட்டுக்கு நாடு


அண்ணனின் கரங்கள்


காக்கும் கரங்களானால்...


நோக்கும் பெண்ணெல்லாம்


மனிதமாய் உயிர்க்குமன்றோ!





கம்சனவன் சம்ஹாரம்


கிருஷ்ணாவதாரத்தில்


முதல் எட்டில் வந்ததென்றால்...


குருஷேத்திர களம் காண


காத்திருக்க வேண்டுமன்றோ...?





தங்கை மானம் காக்க


கண்ணைப் பறித்தவன்


தன்னவள் மானம் காக்க


தரணியை எரிப்பானா...?





வாழ்த்துக்கள் தோழி, நன்றி
 
Last edited:

Subasini

Well-known member
பெண்...


இந்த சமூகத்தில் கால காலமாக நடந்தேறும் துயரம் பெண்ணின் உடலை வைத்து அவளை அவமான படுத்த நினைக்கும் வக்ர எண்ணம்...


பெண்ணின் உடல் அறிவியல் ரீதியாக தான் இறைவன் படைத்தானே அன்றி அதை இப்படி அவளை அசிங்க படுத்த இல்லை என்பதை அழகாக அவள் எப்படி எல்லாம் கடந்து வர வேண்டும் என்பதற்கு உதாரணம் தான் அருந்ததி...


ஆதி மனிதன் வாழ்ந்த நிலை இருந்தால் இந்த அவலம் ஏற்பட வாய்ப்பு இருந்திருக்காதோ என‌ நிமிடத்திற்கு நிமிடம் சிந்திக்க தூண்டும் செயல் அருந்ததி நடந்தேறியது....


கடும் குளிர்க்கு பயந்துநாகரீகம் மாறி மனிதன் ஆடையை தன் வாழ்க்கையில் கொண்டு வந்தால் இந்த குளிரை காட்டிலும் கொடுரமாக மனித மனம் மாறி இருக்கிறது...


மனோரஞ்சன் என்ற பெயருக்கு பொருத்தமே இல்லாத இந்த வில்லனுக்கு இன்னும் தண்டனை தந்திருக்கனுமோ...


செம எபி ஸ்ரீ மா...


இப்ப தான் ஹீரோ வேலையை கரைட்டா அதுவும் அவன் தங்கைக்கு செய்திருக்கான்...
இருந்தாலும் ஒரு அண்ணனாக ஆரம்பத்திலேயே அவளை பாதுகாக்க தவறிட்டான் 😂😂😂 (ஹீரோவை குறை சொல்லுதல் என் கடமை)😂😂😂😂


அவளுக்கான காதலும் அன்பு அவன் மேல் வர காரணமான சூழலை படிக்கும் போது இன்னும் அவளின் துயரத்தை படிக்கும் போது இந்த ஹீரோ நிலை என்ன என தான் சிந்திக்க தூண்டுது...


கிருஷ்ணராஜூன்... கிருஷ் என்ற கிருஷ்ணனாக மாறிய தருணம் பெண்ணின் மானம் காக்க போராடியது தான் போல...


இந்த சூழலில் அவளுக்கு காதல் வருது என்றால் அவனிடம் எதையோ எதிர்பார்த்து தான் வராமல் இருந்து இருக்கா போல....


இனி வரும் எபி அவளுக்கானதாக இருக்க வாய்ப்பு இருக்கா என்ற கேள்வியோடு....


சூப்பர் எபி ஸ்ரீ மா.. அடுத்த எபிக்கு வெயிட்டிங் ❤️
 
Top