All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் “ராதைக்கேற்ற ராவணன்!!!” - கருத்துத் திரி

Subasini

Well-known member
ராதைக்கேற்ற ராவணன்...
முடிவை நோக்கிய பயணம்...


ஆரம்பம் முதல் தன் மனைவி யாரென்று அவனே அவன் வாயால் சொல்லிவிட்டான்...


பெண்ணவள் எங்கேயும் சொல்ல வில்லை என்றாலும் அவன் மனைவியாக தான் இருந்திருக்கிறாள்...


கட்டியவனின் கோபமும் தாபமும் அவளை காணும் வரை தான் என்பதை இந்த ராவணன் புரிய வைத்துவிட்டான்....


அருமை தான் இவனை மெருகேற்றிய விதம்...


பாண்டியன்...


அவனின் மன அழகை கண்டு காதலிக்க தொடங்கிய மனைவி... என்றும் கூடவே தன் பின் சுற்றியவனின் காதலை உணர முடியாமல் தன் மாமனின் மேல் உள்ள அன்பு கண்ணை மறைத்தது...அதை பாண்டியனின் நல்ல உள்ளம் மறைத்த எல்லா எண்ணங்களை துடைத்து அவளின் மனதில் தனக்கென ஒரு இடத்தை ஆழமாக பதிய வைத்திருக்கிறது...


கண்ணன்...
நன்மையை மட்டுமே நினைத்து இவ்வளவு காலம் வாழ்ந்த உள்ளதில் தனிமை என்பது கொடுமை தான்..அதை ராதிகாவின் காதல் மாற்றும் தான் அதை அவன் உணர்ந்தான் என்றால் அவனுக்கு அவன் உலகம் அழகாய் மாறிவிடும் அல்லவா...


ஆண்யென மீசையை
முறுக்கிய தருணம்
பெண்மையை மதிக்கும்
பண்பு தான்...


ஆண் ஆணாக
வலம் வருவது
பெண்மையை
கொண்டாடும்
பாங்கு தான்...


ஆண் என்ற
கர்வம் கீரிடமென
சிரசை அலங்கரிப்பது
பெண்மையை சீராட்டும்
அழகில் தான்...


மொத்தத்தில் ஆண்
தன்னவளிடமே
தன்னை முழுமையாக
உணருவது அவளின்
காதலில் தான் ❤️❤️


அருமை ஸ்ரீ மா...


மனம் என்பது என்ன எதிர்பார்க்கிறது என உணர முடியாது அது நினைக்கும் யாவும் சரி என சொல்ல முடியாது என்பதற்கு சரிதா, ராவணன், கண்ணன் எல்லாம் சிறந்த உதாரணம் தான்...
தன் காதல் எது என்பதை உணர அவர்கள் எடுக்கும் காலம் தன் துணையை முழுவதுமாக உணர்ந்த காதலை உணருவது தான் அழகு...


அடுத்த எபிக்கு வெயிட்டிங்...


ராவணனாய் உனை
சிறையெடுத்த கணவனாக நான்...


கணவனாக உனை
கொள்ளையடித்த ராமனாக நான்...


காதலனாக உனை
உணர்ந்து உன் காவலனாக நான்...


காவியத்தில் உனை
ராணியாக்கி உன் சேவகனாக நான்...


காமமோ காதலோ உன்
மனமென்னும் மஞ்சத்தில் என்றும்
நான்...
ராதைகேற்ற ராவணன் இந்த
கிருஷ்ணராஜூனன்...
 

Chitra Balaji

Bronze Winner
Paaru da சரிதா அந்த மனநிலை பாதிக்கப்பட்ட பட்ட பொண்ண Hospital கொண்டு போய் sethutaa...... Avanuku ஒரே ஆச்சர்யம் ஆனா வெளிய kaatikala.... Avaluku thaan athu avvallavu kashtamaa irukku avan avala கண்டுக்கலை nu...... சரிதா avana love 😍 panna aarambichita..... அவன் kuppdimaalale.... Sir தான் ரொம்ப strict ah irukaaru...... Kannan avanuku theriyama laye ரசிக்க aarambichitaan.... Yaarum இல்லாத avanuku ava இருக்கனும் nu ninaikiraan..... Ava ஒரு வார்த்தை sollitaa nu எவ்வளவு apset aaitaan...... Arjun ku parivattam katti திருவிழா mudinjiduchi......அவல airport la paakurathu ku முன்னாடி la irunthe Mrs arjun ah me..... Super Super mam..... Semma semma episode
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ராதைகேற்ற ராவணன்...! - எழுத்தரசி ஸ்ரீ கலாவின் எதிர் மறை காட்டும் நேர் நிலைக் காவியம்!


இனிய தோழி,



இந்த கருத்து, கதை முடியும் வேளையில் வித்தியாசமாக கொடுக்க ஆசை. அதுவும் கட்டாயம் கொடுப்பேன். இது நம் தாமரையின் ஆசைக்காக இடையிலே உரை நடையில் கொடுக்க வந்தேன் தோழி. இது உங்கள் எழுத்தில் மயங்கிய மனத்தின் விமர்சனம் என்ற பெருமையுடன் சொல்ல விழைகிறேன்.


ராதைக்கேற்ற ராவணன், எதிர்மறை நிலையில் நின்று நேர்மறையாய் ஒரு செயலை நிலை நிறுத்த வந்த காவியம் இது என்பது திண்ணம்.

கிருஷ்ணன் என்றதும் குழல் ஊதும் கண்ணனும், காதல் கனியும் காருண்யமும் காட்டும் புன்னகை முகமும் மட்டுமே என்றும் மனதில் இசை பாடும் நேரத்தில், அர்ஜுனன் அவன் என்று வில்லவன் குறி தப்பாத வேகத்தில், வியூகம் உடைக்கும் காண்டீபன் அவன், மன்மத ராகத்தில் மகத்துவம் சொன்ன காதல் மன்னனும் அவனே என்று பெயர் பாடி, ராதைக்கேற்ற ராவணன் என்றால், இவன் காதலில் கிறுக்கன் என்றும் கொள்ளலாமோ? சீதையைக் கவர்ந்ததைத் தவிர ராவண நீதியில் எல்லாம் நேர்மையின் இலக்கணம் என்றால், இவன் எப்படிப்பட்டவன்? என்ற பெரிய கேள்வியுடன் ஆரம்பித்த கதையில்...

ராதேகிருஷ்ணா என்ற மோகனராகம் பாடுபவள் யார் என்ற கேள்வியில் ஆரம்பித்த நடையில் திகைத்து, தேடித் தேடி அனுதினம் கண்ணனை ஆலாபனை செய்பவள், திருமதி கிருஷ்ணன் என்று சொல்லி, திருப்பிய பாதையில், ராதையவள் பேதையாய், பரிதாபமாய் வாழ்க்கையில் சறுக்கிய பத்தினியவள் என்ற வழக்குடன், பழிக்குப் பழி என பலியாடாய் வீழ்ந்தாலும், நித்திய சிந்தையில் ராதையின் கிருஷ்ணன் நிர்மல சித்தனாய், சித்தம் கலக்கிய அழகில்...

ராவணனவன் ராமனாய், ஏக பத்தினி விரதனாய், அவதார புருஷனாய், அரங்கத்தில் அமர, அரங்கனின் நாயகி அவள், படி தாண்டிய பத்தினியாய், சித்தினி அவள் சித்தம் சிதைந்த மகள் ஊனப்பட்டு நிற்க, கை கொண்ட ராமனவன் நிற்கதியாய், மனம் குமுற, ருத்திர தாண்டவத்தில் சக்தியை அழித்த சிவனாய் ராவண அவதாரம் எடுக்க,

தப்பிப் பிழைத்த மகள், உயிர் காக்கும் உத்தமியாய், உரிமையுள்ள பத்தினியாய், மறுபடியும் உயிர்க்க, உணர்வில்லா கோமகனை, உயிர்ப்பிக்க ராதை அவள் தன்னையே கொடுக்க, பழியாய் ஏற்றாலும் பத்தினி அவள் பகுமானம் காத்து விட்ட ராமன் அவன் ஜெயிக்க, காவிய இலக்கணம் கருத்தாய் கவர்ந்தாலும்,

உற்றவரே, மற்றவராய் உயிர் குடித்த கரு கண்டு, ராவணன் அரிதாரம், ராதையே அவன் தாரம் என்பதனை விளக்க, ராமன் அவன் அவதாரம் என்பதனை முழக்க, ஊர்கூடி உத்தமியை, சதிபதியாய் கைபிடித்து, ஆண் என்ற கம்பீரம் காத்துவிட்ட காதல் மகன்.

அன்பனாய், அண்ணனாய், தனயனாய், நண்பனாய், பித்தனாய், அரக்கனாய், நக்கீரனாய், பண்பாளனாய், பகுமானனாய் நவரூபம் காட்டி நின்ற எழிலில், கிருஷ்ணனின் பாவங்கள் கம்பீர கானங்களாய் ஒலிக்க,

பாவப்பட்ட பத்தினியவள், பலியாடாய் மாற்றிய வழக்கில்... ராவணனவன் ருத்திர தாண்டவம் காண ஆவலுடன் காத்திருக்கும் வேளையிலே...

மற்றைய பாத்திரப் படைப்பில், மனதை புரட்டிய நடையின் சிறப்பில் எழுத்தரசியின் கம்பீரம்... காணக் காண பேரழகு!
கண்ணன் அவன் கம்பீரம் என்றால்
காருண்யத்தில் மன்னன் என்றும்,
பாண்டியன் அவன் காதல் பித்தன் என்றால்
பரிணாமத்தில் வித்தகன் என்றும்,
அன்பும் பண்பும் எங்கும் எப்போதும் வழுவாத எழுத்தரசியின் நடையில் சிலிர்த்து, லயித்து ரசித்து, மனம் தடுமாறிய நிலையில், மையக் கருவை எதிர் நோக்கிக் காத்திருக்கும் ஒரு அன்புத் தோழியின் மனமார்ந்த விமர்சனம் இது.


வாழ்த்துக்கள் தோழி, நன்றி.
 
Last edited:

Shanthigopal

Well-known member
எப்படி இருக்கீங்க ஸ்ரீ மேம்? அற்புதமான பதிவு... கிருஷின் ஆழமான காதலை படிப்படியாக ராதைக்கும் எங்களுக்கும் உணர்த்திய பதிவு...

கண்ணன் ராதுவின் பேச்சை கேட்டே அவள் ரசிகன் ஆகி விட்டான்... வாய் வார்த்தையாக விளையாட்டாக சொன்ன ஒரு சொல்லையே அவனால் ஜீரணிக்க முடியவில்லையே... அப்பப்பா!! என்னவொரு கோபம்... மனதிற்கு நெருக்கமானவர்களையே இது போல் பாதிக்கும்... ஆழமாக அழகாய் கண்ணன் மனதில் ராது இடம் பிடித்து விட்டாள்...

பாண்டியன் பிரிவில் சரிதா காதலை உணர்ந்துள்ளாள்... அவனுக்காகவே அந்த செல்வியை தேடி மருத்துவமனையில் சேர்த்து பார்த்து கொள்கிறாளோ? இருந்தாலும் அவள் பேசிய பேச்சு விளையாட்டாக திரிந்து கொண்டிருந்த பாண்டியனை யோசிக்க வைத்து பண் படுத்தி விட்டாள்.. அவனுக்கு சரிதா மேல் உள்ள கோபம் இறங்குமா? காத்திருக்கிறோம்...ஸ்ரீ மேம் பாண்டியனை நினைத்தாலே நமக்கு முகத்தில் ஒரு புன்னகை வரும் அது எப்போது வரும் என்ற ஆவலுடன்...

கிருஷ் அற்புதமான காதலன்... இவனை ராவணன் என்று யாராலும் சொல்ல முடியாது... கிருஷ்ணனாக ராதையின் மனதை அள்ளியவன்... அர்ஜூனாக தன் இலக்கே குறி என்று நினைத்து சாதித்து தன் தந்தைக்கே தன்னை உணர வைத்தவன்... பரிவட்டம் கட்டி கொண்டு மூத்த தலைமகன் என்று நிரூபித்தவன்.. தன் ஊரில் யாருக்கு சிறு இன்னல் என்றாலும் மனம் கொதித்து பொங்கி எழுபவன்... குடும்பத்தினர் அனைவரையும் புரிந்து அதற்கேற்றார் போல் நடந்து கொள்பவன்.. பெண்களுக்கு காவலன்... ஸ்ரீ மேம் தாங்கள் எதற்காக கிருஷ்ணார்ஜூன் என்ற பெயரை தேர்வு செய்தீர்கள் என்று இப்போது தான் புரிகிறது... மொத்தத்தில் ஆண்களுக்கே இலக்கணமானவன்...

அற்புதமானவன்... எல்லோர் மனதையும் அந்த கிருஷ்ணனை போல் மாய புன்னகை புரிந்து மனதை கொள்ளை கொண்டு விட்டான்..

அபாரமான பதிவு ஸ்ரீ மேம்.

வாழ்த்துக்கள்..
 

TM Priya

Well-known member
சூப்பர் மா...‌.சரிதா பாண்டியை புரிஞ்சிட்டா...பாண்டியன் கஷ்டம் ஒருவழியா முடிஞ்சிருச்சு....கண்ணனும் ராதிகாவை ஏத்துக்கிட்டான்..குழந்தை பாரத்தை அவளால் சுமக்க முடியாதுனு தான் வேண்டானு சொல்லிருக்கானா சூப்பர் மா...மணி அப்பா ஆகிட்டான்...இறுதி வரிகள் சூப்பர் மா..👌👌
 
Top