Sasimukesh
Administrator
"எதுவும் பேச வேண்டாம். உங்களுக்கு என்னைய கல்யாணம் பண்ணும் எண்ணம் முதலில் இருந்தே இல்லை. அப்படித்தானே." 'இது தெரிந்த கூத்து தானே. இதை அவனிடம் வேறு கேட்பாயா?' அவளது மனசாட்சி அவளைக் கேலி செய்தது.
"அப்படி எல்லாம் இல்லை சக்கு." அவன் அவசரமாக மறுக்க...
"பொய் சொல்லாதீங்க." என்று கத்தியவள் அன்று அவன் அவளுக்கு வைர நெக்லஸ் பரிசாகக் கொடுத்த போது சொன்னதை அவனிடமே சொல்ல...
சக்தீஸ்வரன் தன்னையே நொந்து கொண்டு அமர்ந்து இருந்தான். 'ஐயோ இந்தளவுக்குப் புத்திசாலியா யோசிக்காதேடி சகி' அவனால் மனதிற்குள் மட்டுமே மருக முடிந்தது. அவள் இப்படி மாற வேண்டும் என்று தானே அவன் நினைத்தது. ஆனால் அவளது இந்த மாற்றம் அவனுக்கு உவப்பாக இல்லை. வேப்பங்காயாய்க் கசந்தது.
"நீங்க உங்க அளவுல சரியா தான் இருந்து இருக்கீங்க. நான் தான் முட்டாள்த்தனமா உங்களைக் காதலிச்சுத் தொலைச்சுட்டேன். அதுவும் யாரை, எனக்குப் புருசனா வர போகிற உங்களை..." அவள் சொன்னது கேட்டு அவனது மனம் அடிப்பட்டுப் போனது என்றால்... அவளது மனம் உயிர் போகும் வலியில் அல்லவா துடித்தது. அவனது வலியை விட அவளது வலி அதிகம் அல்லவா.
"அப்படின்னா உன்னிடம் புருசன்னு யாரை கைக்காட்டி இருந்தாலும் காதலிச்சு இருப்பியா?" அவன் சற்று கோபத்துடன் கேட்டான். இது உரிமையால் வந்த கோபம். தன்னவள் தனக்கு மட்டும் என்கிற பொசசிவ்னெஸ் குணத்தால் வந்த கோபம்.
"ஆமாம்..." அவனது கோபத்திற்கு எல்லாம் அசராது அவள் பதில் அளித்தாள். அவளது பதிலில் அவன் தான் அசந்து போனான்.
"எனக்குக் காதல்ன்னா அவ்வளவு பிடிக்கும். ஆனா நான் யாரையும் காதலிச்சது இல்லை. எனக்கு வர போகிற கணவனை மட்டுமே காதலிக்கணும்ன்னு நான் நினைச்சேன். ஆனா நீங்க...?" இதைச் சொல்லும் போதே அவளது குரல் கமறியது.
'கலங்காதே சகி.' அவளை அள்ளி அணைத்து ஆறுதல் கூற அவனது மனம் ஆசை கொண்டது. ஆசை பட்டது எல்லாம் நடந்து விடுமோ என்ன?
"அதனால் தான் எனக்கு வர போகிற கணவனைக் காதலிக்கணும்ன்னு நான் நினைச்சேன். அதான் என் புருசனா மாமோய் கைக்காட்டிய உங்களைக் காதலிச்சேன்." பெண்ணவள் ஒருவனை மட்டும் நேசித்து அவனையே மணம் முடிக்க வேண்டும் என்கிற கொள்கை உடையவள் அல்லவா!
'ஓஹோ, எல்லாம் உங்க மாமாவுக்காகத் தானா? எனக்காக இல்லையா?' அந்த நிலையிலும் அவனது மனம் மனைவியிடம் செல்லமாய்க் கோபித்துக் கொண்டது.
"ஆனா நீங்க என்னை ஏமாத்திட்டீங்க." அவள் விழிகள் கலங்க அவனைக் கோபமாய்ச் சாடினாள். உண்மை தானே, அவன் அவளை நேசித்து இருந்தால் அவளை விட்டுக் கொடுக்கத் துணிவானா? அவளுக்கு மிகவும் வலித்தது.
"இல்லைடி ஏமாத்தலை." அவளது குற்றச்சாட்டில் அவன் பதறிப் போனான். அவனாவது அவளை ஏமாற்ற நினைப்பதாவது!
"அப்போ ஏன் இப்படிப் பண்ணினீங்க?" அவளது கேள்விக்கு அவன் என்னவென்று பதில் சொல்லுவான்.
இப்போதும் தன்னைப் பற்றி அவளிடம் கூற அவனுக்குப் பயமே. இதுக்கே இப்படி எகிறுகிறாள். இதில் தன்னைப் பற்றிய உண்மை அறிந்தால்? அந்த நினைவே அவன் வாயை மூடி கொள்ளப் போதுமானதாக இருந்தது.
"உங்களைக் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்னு நினைச்சு தானே... நான் உங்களைக் காதலிச்சேன். அப்பவே நீங்க என்னிடம் உண்மையைச் சொல்லி இருக்கலாமே. என்னைப் பிடிக்கலைன்னு... நானும் என் மனசை விட்டு இருக்க மாட்டேனே." அவளைக் காணவே அவனுக்குப் பரிதாபமாக இருந்தது. எல்லாவற்றிற்கும் காரணம் அவன் தானே. அவனுக்குத் தன் மீதே கோபம் வந்தது.
"உன்னைப் பத்தி எனக்குத் தெரியும் சக்கு. என் மீதான உன் விருப்பம் கூட, என்னுடன் திருமணம் நிச்சயம் பண்ணியதால் வந்த விருப்பம்ன்னு. அதான் வேறு மாப்பிள்ளை பார்த்தேன். திருமணத்துக்குப் பிறகு நீ அவனை நேசிக்கத் தொடங்கி விடுவேன்னு நினைச்சேன்." அவன் தனது தரப்பினை எடுத்துக் கூறினான். ஏன், எதற்கு என்று அவன் விளக்கம் கூறாத வரை அவனது இந்த வார்த்தைகள் பெண்ணவளை உயிரோடு குத்தி கிழிக்கும் என்பதை அவன் உணர்ந்திருக்கவில்லை. ஆணிற்குப் பெண் மனம் புரியவில்லையா?
"என்னைய பத்தி என்ன நினைச்சிக்கிட்டு இருக்கீங்க? என்னோட மனசு என்ன விளையாட்டு மைதானமா? உங்க இஷ்டத்துக்கு நீங்க விளையாடுறதுக்கு? ஒருத்தரை மனசில் நினைச்ச பொறவு... அதை ரப்பர் போட்டு அழிச்சிட்டு வேறு ஒருத்தரை நினைக்கிறதுக்கு..." சகுந்தலா ஆவேசமாகக் கேட்க... அவன் பதில் இல்லாது திணறினான்.
சகுந்தலா கேட்பதும் சரி தானே? அவள் மனதோடு விளையாட அவன் யார்? தனது விருப்பத்தை அவள் மீது திணிக்க அவன் யார்?
"ஏன் இப்படிப் பண்ணினீங்க? தர்சனா கூடச் சேர்ந்து என்னை மட்டம் தட்டி பேசியது, அடுத்து வேறு ஒருத்தனுக்கு என்னைய கல்யாணம் பண்ணி வைக்க நினைச்சது... இது எல்லாம் எதுக்குப் பண்ணினீங்க? ஏன், ஏன்???" அவள் மீண்டும் மீண்டும் அதே கேள்வியில் வந்து நின்றாள்.
தர்சனா அன்று நட்சத்திர விடுதி அறையில் நடந்ததைக் கூறிய போது சகுந்தலா அகமகிழ்ந்தாள் தான். அன்று அவன் கூறிய அனைத்து காரணங்களும் அவனது செயல்களில் காணாது போனதை அவள் உணர்ந்தே இருந்தாள். அவளது அடிமனதில் புதையுண்டு போன காதல் மெல்ல துளிர்த்ததும் அவன் மீதான நம்பிக்கையில் தானே. இப்போது அந்த நம்பிக்கையே ஆட்டம் கண்டு விட்டதே. கணவன் தன்னை விட்டு விலகி போவதிலேயே குறியாக இருந்திருக்கின்றான் என்றால்... அவன் மனதில் அவள் இல்லையோ! அந்த நினைவே அவளுக்குச் சொல்லொண்ணா வேதனையைத் தந்தது.
இந்தத் திருமணம் குழந்தைக்காக நடந்த திருமணம் தானா? அவன் தன்னிடம் நன்றாக நடந்து கொள்வது கூட வேறுவழியின்றிக் குழந்தைக்காகத் தானா? இல்லை சிறு வயது முதல் தன்னுடன் வளர்ந்தவள் என்கிற இரக்கத்தினாலா? என்ன காரணம்? என்று தெரியாது அவள் குழம்பி தத்தளித்தாள்.
மனைவியின் எல்லாக் கேள்விகளுக்கும் அவனிடத்தில் மௌனம் மட்டுமே. அவனால் வாய் திறந்து காரணத்தைக் கூற முடியவில்லை. இப்போது எதைக் கூறினாலும் தவறான அர்த்தம் கொள்ளப்படும் என்றெண்ணி அவன் அமைதி காத்தான்.
"என்னைய உங்களுக்குப் பிடிக்கலைன்னா நீங்க அப்பவே என் கிட்ட சொல்லி இருக்கலாமே. நீங்களும் சந்தோசமா வாழ்ந்து இருக்கலாம். நானும் சந்தோசமா வாழ்ந்து இருப்பேனே. இப்போ ரெண்டு பேரோட சந்தோசமும் போச்சே." அவள் சொல்லும் போதே அவளது விழிகளில் இருந்து கண்ணீர் வழிந்தது.
கணவன் பதில் பேசாது இருப்பதைக் கண்டு அவளாக ஒரு முடிவு செய்து, "அப்போ உங்களுக்கு என்னைய பிடிக்காது தானே." என்று கூறும் போதே அவளது முகம் வேதனையில் கசங்கியது.
"ஏய், அப்படி எல்லாம் இல்லைடி." அவன் மேலே பேசும் முன்னே அவள் கையமர்த்தி அவனைத் தடுத்தவள்,
"இதை எதுக்குக் கேள்வி கேட்டுக்கிட்டு... அது தான் உண்மை இல்லையா? உங்க உயரத்துக்கு என்னால் வர முடியாது. நான் எந்த விதத்திலும் உங்களுக்குப் பொருத்தம் இல்லை. இப்படி எதிலும் பொருத்தம் இல்லாத என்னைய கல்யாணம் பண்ண உங்களுக்குக் கசக்க தானே செய்யும். நான் ஒரு மக்கு... இது தெரியாம உங்களை நேசிச்சு, ஏமாந்து நிற்கிறேன். நீங்க சொல்ற மாதிரி நான் மக்கு தான், தத்தி தான்." என்றவள் கதறி அழ தொடங்கினாள்.
"சக்கு, அழாதே ப்ளீஸ்..." என்று அவன் ஆறுதல் கூற...
"அப்போ நீங்க கல்யாணத்துக்குச் சம்மதிச்சது மினிக்காகத் தான் இல்லையா? அதேமாதிரி இப்போ சம்மதிச்சது குழந்தைக்காகத் தான் இல்லையா?" அவளது காயம் கொண்ட மனம் கண்டதையும் இணைத்து பார்த்துத் தவித்தது.
தான் உயிருக்கு உயிராக நேசித்த ஒருவன் தன்னை வேறு ஒருவனுக்கு விட்டு கொடுக்க, தாரைவார்க்க முடிவு செய்து இருந்தான் என்பதை எந்தப் பெண் அறிந்தாலும்... சகுந்தலா போன்று தான் வேதனை கொள்வாள். பெண்ணவளின் வலி மிகவும் பெரியது.
சகுந்தலா வார்த்தைகளில் சக்தீஸ்வரன் அவளைத் தவிப்புடன் பார்த்தான். அப்போதும் அவளது நலனுக்காகத் தான் அவன் விலகி போனான். இப்போதும் அவளது நலனுக்காகத் தான் அவன் அவளைத் திருமணம் செய்து கொண்டான். இதை அவளுக்கு எப்படிப் புரிய வைப்பது என்று தெரியாது அவன் தோற்று போய் நின்றான். அப்படியே அவன் புரிய வைத்தாலும் அவள் தன்னை நம்புவாளா? அவனுக்குச் சந்தேகமாக இருந்தது.
"சக்கு, இங்கே பார். பழசை எல்லாம் மறந்து விடு. இப்போ நாம வாழ்ற வாழ்க்கையை மட்டும் நினைச்சு பார். நாம சந்தோசமா தானே இருக்கோம்." அவன் வேண்டாத நினைவுகளை மறந்துவிடச் சொல்லி அவளை வலியுறுத்தினான்.
ஆண் வலியை கடந்திட நினைக்க... பெண்ணோ வலியில் உழன்று கொண்டிருந்தாள். அவ்வளவு எளிதில் அவளால் இந்த விசயத்தைக் கடக்க முடியவில்லை.
"பேசாதீங்க, என் கிட்ட பேசாதீங்க." என்று கத்தியவள், "என்னைய யாரோ ஒருத்தனுக்குத் தாரைவார்த்து கொடுக்க நினைச்ச மனுசன் தானே நீங்க. உங்க கிட்ட நான் எப்படிக் காதலை எதிர்பார்க்க முடியும்? உங்க மனசில் நான் இல்லாதப்போ, நான் உங்க கிட்ட எப்படிக் காதலை எதிர்பார்க்க முடியும்? கட்டாயத்துக்காக, கஷ்டப்பட்டு நீங்க என்னைச் சகிச்சிக்க வேண்டாம்." சகுந்தலா கூறியது கேட்டு அவன் ஸ்தம்பித்துப் போனான்.
"ஏய், லூசுத்தனமா எதையாவது பேசணும்ன்னு பேசாதடி." அவன் அவளைக் கண்டு சத்தம் போட...
"வேண்டாம் எதுவும் பேசாதீங்க. இப்பவும் இந்தச் சக்கு மக்கு தான். ஆனா இந்த மக்கு பொண்ணுக்கும் மனசு உண்டு, அதில் காதல் உணர்வு உண்டு. எனக்கும் வர போகிற புருசனை பத்தின கனவு, கற்பனை உண்டு. ஆனா நீங்க எல்லாத்தையும் கலைச்சிட்டீங்க." அவள் கதறியழ...
"அப்படி எல்லாம் இல்லை சக்கு." அவன் அவசரமாக மறுக்க...
"பொய் சொல்லாதீங்க." என்று கத்தியவள் அன்று அவன் அவளுக்கு வைர நெக்லஸ் பரிசாகக் கொடுத்த போது சொன்னதை அவனிடமே சொல்ல...
சக்தீஸ்வரன் தன்னையே நொந்து கொண்டு அமர்ந்து இருந்தான். 'ஐயோ இந்தளவுக்குப் புத்திசாலியா யோசிக்காதேடி சகி' அவனால் மனதிற்குள் மட்டுமே மருக முடிந்தது. அவள் இப்படி மாற வேண்டும் என்று தானே அவன் நினைத்தது. ஆனால் அவளது இந்த மாற்றம் அவனுக்கு உவப்பாக இல்லை. வேப்பங்காயாய்க் கசந்தது.
"நீங்க உங்க அளவுல சரியா தான் இருந்து இருக்கீங்க. நான் தான் முட்டாள்த்தனமா உங்களைக் காதலிச்சுத் தொலைச்சுட்டேன். அதுவும் யாரை, எனக்குப் புருசனா வர போகிற உங்களை..." அவள் சொன்னது கேட்டு அவனது மனம் அடிப்பட்டுப் போனது என்றால்... அவளது மனம் உயிர் போகும் வலியில் அல்லவா துடித்தது. அவனது வலியை விட அவளது வலி அதிகம் அல்லவா.
"அப்படின்னா உன்னிடம் புருசன்னு யாரை கைக்காட்டி இருந்தாலும் காதலிச்சு இருப்பியா?" அவன் சற்று கோபத்துடன் கேட்டான். இது உரிமையால் வந்த கோபம். தன்னவள் தனக்கு மட்டும் என்கிற பொசசிவ்னெஸ் குணத்தால் வந்த கோபம்.
"ஆமாம்..." அவனது கோபத்திற்கு எல்லாம் அசராது அவள் பதில் அளித்தாள். அவளது பதிலில் அவன் தான் அசந்து போனான்.
"எனக்குக் காதல்ன்னா அவ்வளவு பிடிக்கும். ஆனா நான் யாரையும் காதலிச்சது இல்லை. எனக்கு வர போகிற கணவனை மட்டுமே காதலிக்கணும்ன்னு நான் நினைச்சேன். ஆனா நீங்க...?" இதைச் சொல்லும் போதே அவளது குரல் கமறியது.
'கலங்காதே சகி.' அவளை அள்ளி அணைத்து ஆறுதல் கூற அவனது மனம் ஆசை கொண்டது. ஆசை பட்டது எல்லாம் நடந்து விடுமோ என்ன?
"அதனால் தான் எனக்கு வர போகிற கணவனைக் காதலிக்கணும்ன்னு நான் நினைச்சேன். அதான் என் புருசனா மாமோய் கைக்காட்டிய உங்களைக் காதலிச்சேன்." பெண்ணவள் ஒருவனை மட்டும் நேசித்து அவனையே மணம் முடிக்க வேண்டும் என்கிற கொள்கை உடையவள் அல்லவா!
'ஓஹோ, எல்லாம் உங்க மாமாவுக்காகத் தானா? எனக்காக இல்லையா?' அந்த நிலையிலும் அவனது மனம் மனைவியிடம் செல்லமாய்க் கோபித்துக் கொண்டது.
"ஆனா நீங்க என்னை ஏமாத்திட்டீங்க." அவள் விழிகள் கலங்க அவனைக் கோபமாய்ச் சாடினாள். உண்மை தானே, அவன் அவளை நேசித்து இருந்தால் அவளை விட்டுக் கொடுக்கத் துணிவானா? அவளுக்கு மிகவும் வலித்தது.
"இல்லைடி ஏமாத்தலை." அவளது குற்றச்சாட்டில் அவன் பதறிப் போனான். அவனாவது அவளை ஏமாற்ற நினைப்பதாவது!
"அப்போ ஏன் இப்படிப் பண்ணினீங்க?" அவளது கேள்விக்கு அவன் என்னவென்று பதில் சொல்லுவான்.
இப்போதும் தன்னைப் பற்றி அவளிடம் கூற அவனுக்குப் பயமே. இதுக்கே இப்படி எகிறுகிறாள். இதில் தன்னைப் பற்றிய உண்மை அறிந்தால்? அந்த நினைவே அவன் வாயை மூடி கொள்ளப் போதுமானதாக இருந்தது.
"உங்களைக் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்னு நினைச்சு தானே... நான் உங்களைக் காதலிச்சேன். அப்பவே நீங்க என்னிடம் உண்மையைச் சொல்லி இருக்கலாமே. என்னைப் பிடிக்கலைன்னு... நானும் என் மனசை விட்டு இருக்க மாட்டேனே." அவளைக் காணவே அவனுக்குப் பரிதாபமாக இருந்தது. எல்லாவற்றிற்கும் காரணம் அவன் தானே. அவனுக்குத் தன் மீதே கோபம் வந்தது.
"உன்னைப் பத்தி எனக்குத் தெரியும் சக்கு. என் மீதான உன் விருப்பம் கூட, என்னுடன் திருமணம் நிச்சயம் பண்ணியதால் வந்த விருப்பம்ன்னு. அதான் வேறு மாப்பிள்ளை பார்த்தேன். திருமணத்துக்குப் பிறகு நீ அவனை நேசிக்கத் தொடங்கி விடுவேன்னு நினைச்சேன்." அவன் தனது தரப்பினை எடுத்துக் கூறினான். ஏன், எதற்கு என்று அவன் விளக்கம் கூறாத வரை அவனது இந்த வார்த்தைகள் பெண்ணவளை உயிரோடு குத்தி கிழிக்கும் என்பதை அவன் உணர்ந்திருக்கவில்லை. ஆணிற்குப் பெண் மனம் புரியவில்லையா?
"என்னைய பத்தி என்ன நினைச்சிக்கிட்டு இருக்கீங்க? என்னோட மனசு என்ன விளையாட்டு மைதானமா? உங்க இஷ்டத்துக்கு நீங்க விளையாடுறதுக்கு? ஒருத்தரை மனசில் நினைச்ச பொறவு... அதை ரப்பர் போட்டு அழிச்சிட்டு வேறு ஒருத்தரை நினைக்கிறதுக்கு..." சகுந்தலா ஆவேசமாகக் கேட்க... அவன் பதில் இல்லாது திணறினான்.
சகுந்தலா கேட்பதும் சரி தானே? அவள் மனதோடு விளையாட அவன் யார்? தனது விருப்பத்தை அவள் மீது திணிக்க அவன் யார்?
"ஏன் இப்படிப் பண்ணினீங்க? தர்சனா கூடச் சேர்ந்து என்னை மட்டம் தட்டி பேசியது, அடுத்து வேறு ஒருத்தனுக்கு என்னைய கல்யாணம் பண்ணி வைக்க நினைச்சது... இது எல்லாம் எதுக்குப் பண்ணினீங்க? ஏன், ஏன்???" அவள் மீண்டும் மீண்டும் அதே கேள்வியில் வந்து நின்றாள்.
தர்சனா அன்று நட்சத்திர விடுதி அறையில் நடந்ததைக் கூறிய போது சகுந்தலா அகமகிழ்ந்தாள் தான். அன்று அவன் கூறிய அனைத்து காரணங்களும் அவனது செயல்களில் காணாது போனதை அவள் உணர்ந்தே இருந்தாள். அவளது அடிமனதில் புதையுண்டு போன காதல் மெல்ல துளிர்த்ததும் அவன் மீதான நம்பிக்கையில் தானே. இப்போது அந்த நம்பிக்கையே ஆட்டம் கண்டு விட்டதே. கணவன் தன்னை விட்டு விலகி போவதிலேயே குறியாக இருந்திருக்கின்றான் என்றால்... அவன் மனதில் அவள் இல்லையோ! அந்த நினைவே அவளுக்குச் சொல்லொண்ணா வேதனையைத் தந்தது.
இந்தத் திருமணம் குழந்தைக்காக நடந்த திருமணம் தானா? அவன் தன்னிடம் நன்றாக நடந்து கொள்வது கூட வேறுவழியின்றிக் குழந்தைக்காகத் தானா? இல்லை சிறு வயது முதல் தன்னுடன் வளர்ந்தவள் என்கிற இரக்கத்தினாலா? என்ன காரணம்? என்று தெரியாது அவள் குழம்பி தத்தளித்தாள்.
மனைவியின் எல்லாக் கேள்விகளுக்கும் அவனிடத்தில் மௌனம் மட்டுமே. அவனால் வாய் திறந்து காரணத்தைக் கூற முடியவில்லை. இப்போது எதைக் கூறினாலும் தவறான அர்த்தம் கொள்ளப்படும் என்றெண்ணி அவன் அமைதி காத்தான்.
"என்னைய உங்களுக்குப் பிடிக்கலைன்னா நீங்க அப்பவே என் கிட்ட சொல்லி இருக்கலாமே. நீங்களும் சந்தோசமா வாழ்ந்து இருக்கலாம். நானும் சந்தோசமா வாழ்ந்து இருப்பேனே. இப்போ ரெண்டு பேரோட சந்தோசமும் போச்சே." அவள் சொல்லும் போதே அவளது விழிகளில் இருந்து கண்ணீர் வழிந்தது.
கணவன் பதில் பேசாது இருப்பதைக் கண்டு அவளாக ஒரு முடிவு செய்து, "அப்போ உங்களுக்கு என்னைய பிடிக்காது தானே." என்று கூறும் போதே அவளது முகம் வேதனையில் கசங்கியது.
"ஏய், அப்படி எல்லாம் இல்லைடி." அவன் மேலே பேசும் முன்னே அவள் கையமர்த்தி அவனைத் தடுத்தவள்,
"இதை எதுக்குக் கேள்வி கேட்டுக்கிட்டு... அது தான் உண்மை இல்லையா? உங்க உயரத்துக்கு என்னால் வர முடியாது. நான் எந்த விதத்திலும் உங்களுக்குப் பொருத்தம் இல்லை. இப்படி எதிலும் பொருத்தம் இல்லாத என்னைய கல்யாணம் பண்ண உங்களுக்குக் கசக்க தானே செய்யும். நான் ஒரு மக்கு... இது தெரியாம உங்களை நேசிச்சு, ஏமாந்து நிற்கிறேன். நீங்க சொல்ற மாதிரி நான் மக்கு தான், தத்தி தான்." என்றவள் கதறி அழ தொடங்கினாள்.
"சக்கு, அழாதே ப்ளீஸ்..." என்று அவன் ஆறுதல் கூற...
"அப்போ நீங்க கல்யாணத்துக்குச் சம்மதிச்சது மினிக்காகத் தான் இல்லையா? அதேமாதிரி இப்போ சம்மதிச்சது குழந்தைக்காகத் தான் இல்லையா?" அவளது காயம் கொண்ட மனம் கண்டதையும் இணைத்து பார்த்துத் தவித்தது.
தான் உயிருக்கு உயிராக நேசித்த ஒருவன் தன்னை வேறு ஒருவனுக்கு விட்டு கொடுக்க, தாரைவார்க்க முடிவு செய்து இருந்தான் என்பதை எந்தப் பெண் அறிந்தாலும்... சகுந்தலா போன்று தான் வேதனை கொள்வாள். பெண்ணவளின் வலி மிகவும் பெரியது.
சகுந்தலா வார்த்தைகளில் சக்தீஸ்வரன் அவளைத் தவிப்புடன் பார்த்தான். அப்போதும் அவளது நலனுக்காகத் தான் அவன் விலகி போனான். இப்போதும் அவளது நலனுக்காகத் தான் அவன் அவளைத் திருமணம் செய்து கொண்டான். இதை அவளுக்கு எப்படிப் புரிய வைப்பது என்று தெரியாது அவன் தோற்று போய் நின்றான். அப்படியே அவன் புரிய வைத்தாலும் அவள் தன்னை நம்புவாளா? அவனுக்குச் சந்தேகமாக இருந்தது.
"சக்கு, இங்கே பார். பழசை எல்லாம் மறந்து விடு. இப்போ நாம வாழ்ற வாழ்க்கையை மட்டும் நினைச்சு பார். நாம சந்தோசமா தானே இருக்கோம்." அவன் வேண்டாத நினைவுகளை மறந்துவிடச் சொல்லி அவளை வலியுறுத்தினான்.
ஆண் வலியை கடந்திட நினைக்க... பெண்ணோ வலியில் உழன்று கொண்டிருந்தாள். அவ்வளவு எளிதில் அவளால் இந்த விசயத்தைக் கடக்க முடியவில்லை.
"பேசாதீங்க, என் கிட்ட பேசாதீங்க." என்று கத்தியவள், "என்னைய யாரோ ஒருத்தனுக்குத் தாரைவார்த்து கொடுக்க நினைச்ச மனுசன் தானே நீங்க. உங்க கிட்ட நான் எப்படிக் காதலை எதிர்பார்க்க முடியும்? உங்க மனசில் நான் இல்லாதப்போ, நான் உங்க கிட்ட எப்படிக் காதலை எதிர்பார்க்க முடியும்? கட்டாயத்துக்காக, கஷ்டப்பட்டு நீங்க என்னைச் சகிச்சிக்க வேண்டாம்." சகுந்தலா கூறியது கேட்டு அவன் ஸ்தம்பித்துப் போனான்.
"ஏய், லூசுத்தனமா எதையாவது பேசணும்ன்னு பேசாதடி." அவன் அவளைக் கண்டு சத்தம் போட...
"வேண்டாம் எதுவும் பேசாதீங்க. இப்பவும் இந்தச் சக்கு மக்கு தான். ஆனா இந்த மக்கு பொண்ணுக்கும் மனசு உண்டு, அதில் காதல் உணர்வு உண்டு. எனக்கும் வர போகிற புருசனை பத்தின கனவு, கற்பனை உண்டு. ஆனா நீங்க எல்லாத்தையும் கலைச்சிட்டீங்க." அவள் கதறியழ...