All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘கலாபம் கொ(ல்)ள்(லு) ளும் காதலா!!!’ - இரண்டாம் பாகம்

Status
Not open for further replies.

Sasimukesh

Administrator
"எதுவும் பேச வேண்டாம். உங்களுக்கு என்னைய கல்யாணம் பண்ணும் எண்ணம் முதலில் இருந்தே இல்லை. அப்படித்தானே." 'இது தெரிந்த கூத்து தானே. இதை அவனிடம் வேறு கேட்பாயா?' அவளது மனசாட்சி அவளைக் கேலி செய்தது.



"அப்படி எல்லாம் இல்லை சக்கு." அவன் அவசரமாக மறுக்க...



"பொய் சொல்லாதீங்க." என்று கத்தியவள் அன்று அவன் அவளுக்கு வைர நெக்லஸ் பரிசாகக் கொடுத்த போது சொன்னதை அவனிடமே சொல்ல...



சக்தீஸ்வரன் தன்னையே நொந்து கொண்டு அமர்ந்து இருந்தான். 'ஐயோ இந்தளவுக்குப் புத்திசாலியா யோசிக்காதேடி சகி' அவனால் மனதிற்குள் மட்டுமே மருக முடிந்தது. அவள் இப்படி மாற வேண்டும் என்று தானே அவன் நினைத்தது. ஆனால் அவளது இந்த மாற்றம் அவனுக்கு உவப்பாக இல்லை. வேப்பங்காயாய்க் கசந்தது.



"நீங்க உங்க அளவுல சரியா தான் இருந்து இருக்கீங்க. நான் தான் முட்டாள்த்தனமா உங்களைக் காதலிச்சுத் தொலைச்சுட்டேன். அதுவும் யாரை, எனக்குப் புருசனா வர போகிற உங்களை..." அவள் சொன்னது கேட்டு அவனது மனம் அடிப்பட்டுப் போனது என்றால்... அவளது மனம் உயிர் போகும் வலியில் அல்லவா துடித்தது. அவனது வலியை விட அவளது வலி அதிகம் அல்லவா.



"அப்படின்னா உன்னிடம் புருசன்னு யாரை கைக்காட்டி இருந்தாலும் காதலிச்சு இருப்பியா?" அவன் சற்று கோபத்துடன் கேட்டான். இது உரிமையால் வந்த கோபம். தன்னவள் தனக்கு மட்டும் என்கிற பொசசிவ்னெஸ் குணத்தால் வந்த கோபம்.



"ஆமாம்..." அவனது கோபத்திற்கு எல்லாம் அசராது அவள் பதில் அளித்தாள். அவளது பதிலில் அவன் தான் அசந்து போனான்.



"எனக்குக் காதல்ன்னா அவ்வளவு பிடிக்கும். ஆனா நான் யாரையும் காதலிச்சது இல்லை. எனக்கு வர போகிற கணவனை மட்டுமே காதலிக்கணும்ன்னு நான் நினைச்சேன். ஆனா நீங்க...?" இதைச் சொல்லும் போதே அவளது குரல் கமறியது.



'கலங்காதே சகி.' அவளை அள்ளி அணைத்து ஆறுதல் கூற அவனது மனம் ஆசை கொண்டது. ஆசை பட்டது எல்லாம் நடந்து விடுமோ என்ன?



"அதனால் தான் எனக்கு வர போகிற கணவனைக் காதலிக்கணும்ன்னு நான் நினைச்சேன். அதான் என் புருசனா மாமோய் கைக்காட்டிய உங்களைக் காதலிச்சேன்." பெண்ணவள் ஒருவனை மட்டும் நேசித்து அவனையே மணம் முடிக்க வேண்டும் என்கிற கொள்கை உடையவள் அல்லவா!



'ஓஹோ, எல்லாம் உங்க மாமாவுக்காகத் தானா? எனக்காக இல்லையா?' அந்த நிலையிலும் அவனது மனம் மனைவியிடம் செல்லமாய்க் கோபித்துக் கொண்டது.



"ஆனா நீங்க என்னை ஏமாத்திட்டீங்க." அவள் விழிகள் கலங்க அவனைக் கோபமாய்ச் சாடினாள். உண்மை தானே, அவன் அவளை நேசித்து இருந்தால் அவளை விட்டுக் கொடுக்கத் துணிவானா? அவளுக்கு மிகவும் வலித்தது.



"இல்லைடி ஏமாத்தலை." அவளது குற்றச்சாட்டில் அவன் பதறிப் போனான். அவனாவது அவளை ஏமாற்ற நினைப்பதாவது!



"அப்போ ஏன் இப்படிப் பண்ணினீங்க?" அவளது கேள்விக்கு அவன் என்னவென்று பதில் சொல்லுவான்.



இப்போதும் தன்னைப் பற்றி அவளிடம் கூற அவனுக்குப் பயமே. இதுக்கே இப்படி எகிறுகிறாள். இதில் தன்னைப் பற்றிய உண்மை அறிந்தால்? அந்த நினைவே அவன் வாயை மூடி கொள்ளப் போதுமானதாக இருந்தது.



"உங்களைக் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்னு நினைச்சு தானே... நான் உங்களைக் காதலிச்சேன். அப்பவே நீங்க என்னிடம் உண்மையைச் சொல்லி இருக்கலாமே. என்னைப் பிடிக்கலைன்னு... நானும் என் மனசை விட்டு இருக்க மாட்டேனே." அவளைக் காணவே அவனுக்குப் பரிதாபமாக இருந்தது. எல்லாவற்றிற்கும் காரணம் அவன் தானே. அவனுக்குத் தன் மீதே கோபம் வந்தது.



"உன்னைப் பத்தி எனக்குத் தெரியும் சக்கு. என் மீதான உன் விருப்பம் கூட, என்னுடன் திருமணம் நிச்சயம் பண்ணியதால் வந்த விருப்பம்ன்னு. அதான் வேறு மாப்பிள்ளை பார்த்தேன். திருமணத்துக்குப் பிறகு நீ அவனை நேசிக்கத் தொடங்கி விடுவேன்னு நினைச்சேன்." அவன் தனது தரப்பினை எடுத்துக் கூறினான். ஏன், எதற்கு என்று அவன் விளக்கம் கூறாத வரை அவனது இந்த வார்த்தைகள் பெண்ணவளை உயிரோடு குத்தி கிழிக்கும் என்பதை அவன் உணர்ந்திருக்கவில்லை. ஆணிற்குப் பெண் மனம் புரியவில்லையா?



"என்னைய பத்தி என்ன நினைச்சிக்கிட்டு இருக்கீங்க? என்னோட மனசு என்ன விளையாட்டு மைதானமா? உங்க இஷ்டத்துக்கு நீங்க விளையாடுறதுக்கு? ஒருத்தரை மனசில் நினைச்ச பொறவு... அதை ரப்பர் போட்டு அழிச்சிட்டு வேறு ஒருத்தரை நினைக்கிறதுக்கு..." சகுந்தலா ஆவேசமாகக் கேட்க... அவன் பதில் இல்லாது திணறினான்.



சகுந்தலா கேட்பதும் சரி தானே? அவள் மனதோடு விளையாட அவன் யார்? தனது விருப்பத்தை அவள் மீது திணிக்க அவன் யார்?



"ஏன் இப்படிப் பண்ணினீங்க? தர்சனா கூடச் சேர்ந்து என்னை மட்டம் தட்டி பேசியது, அடுத்து வேறு ஒருத்தனுக்கு என்னைய கல்யாணம் பண்ணி வைக்க நினைச்சது... இது எல்லாம் எதுக்குப் பண்ணினீங்க? ஏன், ஏன்???" அவள் மீண்டும் மீண்டும் அதே கேள்வியில் வந்து நின்றாள்.



தர்சனா அன்று நட்சத்திர விடுதி அறையில் நடந்ததைக் கூறிய போது சகுந்தலா அகமகிழ்ந்தாள் தான். அன்று அவன் கூறிய அனைத்து காரணங்களும் அவனது செயல்களில் காணாது போனதை அவள் உணர்ந்தே இருந்தாள். அவளது அடிமனதில் புதையுண்டு போன காதல் மெல்ல துளிர்த்ததும் அவன் மீதான நம்பிக்கையில் தானே. இப்போது அந்த நம்பிக்கையே ஆட்டம் கண்டு விட்டதே. கணவன் தன்னை விட்டு விலகி போவதிலேயே குறியாக இருந்திருக்கின்றான் என்றால்... அவன் மனதில் அவள் இல்லையோ! அந்த நினைவே அவளுக்குச் சொல்லொண்ணா வேதனையைத் தந்தது.



இந்தத் திருமணம் குழந்தைக்காக நடந்த திருமணம் தானா? அவன் தன்னிடம் நன்றாக நடந்து கொள்வது கூட வேறுவழியின்றிக் குழந்தைக்காகத் தானா? இல்லை சிறு வயது முதல் தன்னுடன் வளர்ந்தவள் என்கிற இரக்கத்தினாலா? என்ன காரணம்? என்று தெரியாது அவள் குழம்பி தத்தளித்தாள்.



மனைவியின் எல்லாக் கேள்விகளுக்கும் அவனிடத்தில் மௌனம் மட்டுமே. அவனால் வாய் திறந்து காரணத்தைக் கூற முடியவில்லை. இப்போது எதைக் கூறினாலும் தவறான அர்த்தம் கொள்ளப்படும் என்றெண்ணி அவன் அமைதி காத்தான்.



"என்னைய உங்களுக்குப் பிடிக்கலைன்னா நீங்க அப்பவே என் கிட்ட சொல்லி இருக்கலாமே. நீங்களும் சந்தோசமா வாழ்ந்து இருக்கலாம். நானும் சந்தோசமா வாழ்ந்து இருப்பேனே. இப்போ ரெண்டு பேரோட சந்தோசமும் போச்சே." அவள் சொல்லும் போதே அவளது விழிகளில் இருந்து கண்ணீர் வழிந்தது.



கணவன் பதில் பேசாது இருப்பதைக் கண்டு அவளாக ஒரு முடிவு செய்து, "அப்போ உங்களுக்கு என்னைய பிடிக்காது தானே." என்று கூறும் போதே அவளது முகம் வேதனையில் கசங்கியது.



"ஏய், அப்படி எல்லாம் இல்லைடி." அவன் மேலே பேசும் முன்னே அவள் கையமர்த்தி அவனைத் தடுத்தவள்,



"இதை எதுக்குக் கேள்வி கேட்டுக்கிட்டு... அது தான் உண்மை இல்லையா? உங்க உயரத்துக்கு என்னால் வர முடியாது. நான் எந்த விதத்திலும் உங்களுக்குப் பொருத்தம் இல்லை. இப்படி எதிலும் பொருத்தம் இல்லாத என்னைய கல்யாணம் பண்ண உங்களுக்குக் கசக்க தானே செய்யும். நான் ஒரு மக்கு... இது தெரியாம உங்களை நேசிச்சு, ஏமாந்து நிற்கிறேன். நீங்க சொல்ற மாதிரி நான் மக்கு தான், தத்தி தான்." என்றவள் கதறி அழ தொடங்கினாள்.



"சக்கு, அழாதே ப்ளீஸ்..." என்று அவன் ஆறுதல் கூற...



"அப்போ நீங்க கல்யாணத்துக்குச் சம்மதிச்சது மினிக்காகத் தான் இல்லையா? அதேமாதிரி இப்போ சம்மதிச்சது குழந்தைக்காகத் தான் இல்லையா?" அவளது காயம் கொண்ட மனம் கண்டதையும் இணைத்து பார்த்துத் தவித்தது.



தான் உயிருக்கு உயிராக நேசித்த ஒருவன் தன்னை வேறு ஒருவனுக்கு விட்டு கொடுக்க, தாரைவார்க்க முடிவு செய்து இருந்தான் என்பதை எந்தப் பெண் அறிந்தாலும்... சகுந்தலா போன்று தான் வேதனை கொள்வாள். பெண்ணவளின் வலி மிகவும் பெரியது.



சகுந்தலா வார்த்தைகளில் சக்தீஸ்வரன் அவளைத் தவிப்புடன் பார்த்தான். அப்போதும் அவளது நலனுக்காகத் தான் அவன் விலகி போனான். இப்போதும் அவளது நலனுக்காகத் தான் அவன் அவளைத் திருமணம் செய்து கொண்டான். இதை அவளுக்கு எப்படிப் புரிய வைப்பது என்று தெரியாது அவன் தோற்று போய் நின்றான். அப்படியே அவன் புரிய வைத்தாலும் அவள் தன்னை நம்புவாளா? அவனுக்குச் சந்தேகமாக இருந்தது.



"சக்கு, இங்கே பார். பழசை எல்லாம் மறந்து விடு. இப்போ நாம வாழ்ற வாழ்க்கையை மட்டும் நினைச்சு பார். நாம சந்தோசமா தானே இருக்கோம்." அவன் வேண்டாத நினைவுகளை மறந்துவிடச் சொல்லி அவளை வலியுறுத்தினான்.



ஆண் வலியை கடந்திட நினைக்க... பெண்ணோ வலியில் உழன்று கொண்டிருந்தாள். அவ்வளவு எளிதில் அவளால் இந்த விசயத்தைக் கடக்க முடியவில்லை.


"பேசாதீங்க, என் கிட்ட பேசாதீங்க." என்று கத்தியவள், "என்னைய யாரோ ஒருத்தனுக்குத் தாரைவார்த்து கொடுக்க நினைச்ச மனுசன் தானே நீங்க. உங்க கிட்ட நான் எப்படிக் காதலை எதிர்பார்க்க முடியும்? உங்க மனசில் நான் இல்லாதப்போ, நான் உங்க கிட்ட எப்படிக் காதலை எதிர்பார்க்க முடியும்? கட்டாயத்துக்காக, கஷ்டப்பட்டு நீங்க என்னைச் சகிச்சிக்க வேண்டாம்." சகுந்தலா கூறியது கேட்டு அவன் ஸ்தம்பித்துப் போனான்.



"ஏய், லூசுத்தனமா எதையாவது பேசணும்ன்னு பேசாதடி." அவன் அவளைக் கண்டு சத்தம் போட...



"வேண்டாம் எதுவும் பேசாதீங்க. இப்பவும் இந்தச் சக்கு மக்கு தான். ஆனா இந்த மக்கு பொண்ணுக்கும் மனசு உண்டு, அதில் காதல் உணர்வு உண்டு. எனக்கும் வர போகிற புருசனை பத்தின கனவு, கற்பனை உண்டு. ஆனா நீங்க எல்லாத்தையும் கலைச்சிட்டீங்க." அவள் கதறியழ...
 

Sasimukesh

Administrator
"கல்யாணத்துக்கு அப்புறம் நாம அப்படித்தானே வாழ்கிறோம். நீ ஏன் பழசை பிடிச்சு தொங்குற? இப்போது நடப்பதை மட்டும் பார். நான் உன் கிட்ட அன்பா இல்லையா? உன்னைச் சந்தோசமா வச்சுக்கலையா? சொல்லுடி." அவன் அவளது முகத்தினைத் தனது கரங்களில் தாங்கி அவளது விழிகளோடு தனது விழிகளைக் கலக்க விட்டபடி கேட்டான்.



"ஆனா என்னைய வேண்டாம்ன்னு ஒதுக்கி வச்சதும் நெசம் தானே." அவளது விழிகளில் இருந்து கண்ணீர் வழிந்து அவனது விழிகளைக் காண முடியாது தடுத்தது. அந்த நொடி அவனது விழிகளில் வழிந்த அவளுக்கான காதலை, அவளுக்கான பரிதவிப்பை அவள் காணாது போனாள்.



"சக்கு இங்கே பார். வயித்தில் குழந்தை இருக்கும் போது இத்தனை எமோசனல் கூடாது. அது குழந்தைக்கு நல்லது இல்லை." குழந்தையைக் காரணம் காட்டினாலாவது அவள் அமைதியாகிறாளா? என்பதைக் காண எண்ணி அவன் கூற...



"இப்பவும் குழந்தை தானா? நான் இல்லை அப்படித் தானே?" அதற்கும் அவள் குதர்க்கம் கண்டுபிடித்துக் கோபமாய்ச் சீற... அவளது வார்த்தைகளில் அவன் விக்கித்துப் போனான்.



சகுந்தலா அவனது கரத்தினை விலக்கி விட்டு எழுந்தவள் படுக்கையில் சென்று படுத்து கொண்டாள். அவனுக்குமே இதற்கு மேல் எப்படி அவளைச் சமாதானப்படுத்துவது என்று தெரியாது விழித்தான். அவனும் மறுபக்கம் வந்து படுத்தான். இருவருக்குமே அந்த இரவு தூங்கா இரவாகி போனது.



***************************



மறுநாள் காலையில் சக்தீஸ்வரன் தாமதமாக எழுந்தான். நேற்றிரவு அவன் தாமதமாகத் தான் உறங்கினான். அவன் விழித்ததுமே தனது மனைவியைத் தேட... அவள் அறைக்குள் இல்லை. ஒருவேளை கீழே சென்று இருப்பாளோ? என்று எண்ணியவன் அவசரமாகக் குளித்து விட்டு கீழே சென்றான். அங்கும் மனைவியைக் காணவில்லை. தோட்டத்தில் இருப்பாளோ என்று அங்குச் சென்று அவன் பார்க்க... அங்கும் அவள் இல்லை. அவன் மீண்டும் வீட்டிற்குள் வந்தான். அவன் ஓய்ந்து போனவனாய் சோபாவில் அமர்ந்தான். அப்போது சாந்தி அங்கே வர...



"சாந்திக்கா, சக்கு எங்கே?" என்று அவன் அவரிடம் கேட்க...



"மினி கூட ஹாஸ்பிட்டலுக்குப் போயிருக்கிறாள் சார்." என்று அவர் பதிலளித்தார்.



மனைவி மருத்துவமனைக்குப் போனதற்கான காரணம் அவனுக்குப் புரிந்து போனது. அவள் அவனைத் தவிர்க்க எண்ணுகிறாள் என்பது புரிந்தது. அவன் மீண்டும் அறைக்கு வந்தவன் தனது அலைப்பேசி மூலம் மனைவிக்கு அழைக்க... மறுபுறம் அழைப்பு எடுக்கப்பட்டது. ஆனால் எடுத்தது அவனது தங்கை பத்மினி.



"அண்ணா, அண்ணியை விட்டு பிரிஞ்சு இருக்க முடியலையோ? அதுக்குள்ள ஃபோன் பண்றீங்க?" பத்மினி அண்ணனை கேலி செய்தாள்.



"எப்படி உயிரை பிரிஞ்சிருக்க முடியும்? உயிர் வாழ முடியாது மினி." அவன் நேற்றைய நினைவில் தங்கைக்குப் பதில் அளித்தான்.



"அண்ணா..." அண்ணனின் பேச்சில் பத்மினி திடுக்கிட்டு போனாள்.



"ஹேய் மினி, ஒண்ணு இல்லை. உன்னோட அண்ணி என்னோட உயிர்ன்னு சொன்னேன்." அவன் சிரித்தபடி சொல்லவும் தான் பத்மினி நிம்மதி அடைந்தாள்.



"சக்கு எங்கே?" அவன் கேட்கவும்...



"இதோ இங்கே தான் இருக்கிறாள். இங்கே இருக்கும் நோயாளி குழந்தைகளுக்குக் கதை சொல்லி அவங்களைக் குஷிப்படுத்திக் கொண்டு இருக்கிறாள். அந்தக் குழந்தைங்க முகத்தில் சந்தோசத்தைப் பார்க்கும் போது எங்களுக்கும் சந்தோசமா இருக்கு." தங்கை சொன்னது கேட்டு அவனது முகத்தில் மகிழ்ச்சி தோன்றியது. எங்கே சென்றாலும் அவனது மனைவி தனது தடத்தினைப் பதித்து விடுவாள். அவன் கர்வமாக எண்ணி கொண்டான்.



"சக்கு கதை சொல்லுற விதத்தைப் பார்த்துட்டு எங்க டீன் அவள் கிட்ட தினமும் வர முடியுமான்னு கேட்டார். அவர் சக்குவோட வீடியோஸ் எல்லாம் பார்த்து இருப்பார் போலிருக்கு. சக்குவுக்கு ஒரே பாராட்டு மழை தான்." அதைக் கேட்டு அவனுக்குப் பெருமை தாங்கவில்லை.



"சக்கு இங்கே வர்றதுக்குத் தனிப் பேமெண்ட் தந்து விடுறதா டீன் சொன்னார். அதுக்குச் சக்கு என்ன சொன்னாள் தெரியுமாண்ணா?" பத்மினி கேட்டதும் அவன் குறும்புன்னகையுடன்,



"பேமெண்ட் வேண்டாம்ன்னு சொல்லியிருப்பாள்." என்று பெருமையுடன் தன்னவளின் மனதினை புரிந்தவனாய் அவன் கூறினான்.



"எப்படிண்ணா இப்படி?" பத்மினி வியக்க...



"அவள் என் உயிர்ன்னு சொன்னனேல்ல."



"உயிர்க்கும் மேலன்னு இப்போ தான் புரியுதுண்ணா." என்ற பத்மினி, "சக்கு கிட்ட ஃபோன் கொடுக்கவா?" என்று கேட்க...



"இல்லை, தொந்தரவு செய்ய வேண்டாம்." என்றவன் அழைப்பை துண்டித்து விட்டான்.



சக்தீஸ்வரன் மனைவியின் செயலை பற்றித் தான் யோசித்துக் கொண்டிருந்தான். இப்படியாவது அவள் தனது வேதனையை மறக்கட்டும் என்றே அவன் நினைத்தான். அதேசமயம் தனது தவறுகள் அதிகரித்துக் கொண்டே போவதை அவன் உணர்ந்தே இருந்தான். மனைவியை என்ன சொல்லி சமாதானப்படுத்துவது என்று அவனுக்குத் தெரியவில்லை. எல்லாமே அவள் மீதான அதீத காதலால் ஏற்பட்ட விளைவுகள் என்று எங்ஙனம் அவளிடம் உரைப்பது. அப்படி உரைப்பது என்றால்... அவன் தனது மறுபக்கத்தையும் சொல்ல வேண்டி வரும். அதை அவளிடம் சொல்ல அவனுக்கு அத்தனை பயமாக இருந்தது.



அன்று இரவு வரை சகுந்தலா சக்தீஸ்வரனின் விழிகளில் தென்படவில்லை. அவள் அவனிடம் கண்ணாமூச்சி ஆட்டம் ஆடி கொண்டிருந்தாள். அவனும் அவளை விட்டுப் பிடித்தான். இரவு இருவரும் அறைக்கு வந்தனர். வந்ததும் உடனே படுக்கச் சென்றவளை தடுத்தவன்,



"மாத்திரை ஒழுங்கா போடுறியா?" என்று அக்கறையுடன் கேட்க...



"இது என்னோட குழந்தை. உங்க அக்கறை ஒண்ணும் தேவை இல்லை." அவள் முகத்தில் அடித்தார் போன்று பேச...



"இது என்னுடைய குழந்தையும் கூட... என் குழந்தை மீது எனக்கு அக்கறை இருக்கக் கூடாதா?" அவன் அழுத்தம் திருத்தமாய்க் கேட்க...



"தேவை இல்லை. என் குழந்தையை எப்படிப் பார்த்துக்கணும்ன்னு எனக்குத் தெரியும். அப்படியே அதுக்கு ஏதாவது ஒண்ணானால் அதைப் பத்தி நீங்க கவலைப்பட வேண்டாம்." என்றவளை கண்டு அவன்,



"ஏய்..." என்றபடி கோபமாய் அடிக்கக் கையை ஓங்கி இருந்தான்.



குழந்தை கருவில் இருக்கும் போது யாராவது இப்படிப் பேசுவார்களா? ராட்சசி, என்ன வார்த்தை பேசி விட்டாள்? அவனுக்கு மனைவி மீது அத்தனை ஆற்றாமையாக இருந்தது. அவன் மீது கோபம் என்றால்... அதை அவனிடம் காட்டுவது தானே நியாயம்.



"என் மேலுள்ள கோபத்தில் மதியிழந்து வார்த்தைகளை விடாதே சக்கு. எப்போதும் ஒரே மாதிரி இருந்து விடாது. ஒரு வார்த்தை வெல்லும். ஒரு வார்த்தை கொல்லும். குழந்தை நல்லபடியா பிறக்கணும். அதுவரை தேவை இல்லாது பேசாதே." அவன் வேதனையுடன் கூறியவன் விலகி சென்று விட்டான்.



சகுந்தலா படுத்தவள் அழுகையில் கரைந்தாள். இந்த நொடி கூட அவளது மனம் அவனைத் தான் நாடுகிறது. அவனது பரந்த நெஞ்சில் முகம் புதைத்து அழுது தனது சோகத்தை ஆற்றிக் கொள்ள மாட்டோமா? என்று அவளது காதல் மனம் ஏங்கியது. காயப்படுத்தியவனிடமே அதற்கான மருந்தினை எதிர்பார்ப்பது காதலில் மட்டுமே சாத்தியம். அவள் அழுது கொண்டே தூங்கி போனாள்.



பால்கனியில் அமர்ந்து இருந்த சக்தீஸ்வரன் அடுத்து என்ன பண்ணுவது என்று பலத்த யோசனையோடு அமர்ந்து இருந்தான்.



அடுத்து வந்த இரண்டு நாட்கள் சக்தீஸ்வரனுக்குச் சகுந்தலாவின் பாராமுகத்துடன் சென்றது. இவர்களது பனிப்போரை யாரும் அறிந்திருக்கவில்லை. ஆனால் சர்வேஸ்வரனின் விழிகளில் இவர்களது ஒதுக்கம் தென்பட்டு விட்டது.



'நானே இவங்களைப் பார்த்துக் கண் வைத்து விட்டேனோ?' சர்வேஸ்வரன் மனதிற்குள் மருகினான். அவனால் மகன், மருமகளிடம் நேரிடையாகக் கேட்க முடியவில்லை. மனைவியிடம் புலம்பவும் முடியவில்லை.



சகுந்தலா சிறு விசயத்திற்குக் கூடச் சர்வேஸ்வரனிடம் புலம்பும் குணம் உடையவள். ஆனால் இப்போது அவள் தனது கணவனைப் பற்றி எதுவும் கூறாது இருப்பது கண்டு சர்வேஸ்வரனுக்கு வியப்பாக இருந்தது. அதனால் தான் அவன் அவர்களுக்கு இடையில் தலையிடாது ஒதுங்கி இருந்தான்.



அதேநேரம் அலுவலகத்தில் இருந்த சக்தீஸ்வரன் இந்த இரண்டு நாட்களும் நரகமாகச் சென்றதை எண்ணி மனம் வருந்தி கொண்டிருந்தான். இதற்கு மேல் அவனால் சகுந்தலாவின் புறக்கணிப்பை தாங்கி கொள்ள முடியாது. அதனால் அவன் ஒரு முடிவுக்கு வந்தான். அவன் மனைவியிடம் எல்லா உண்மையையும் சொல்லிவிட எண்ணினான். உண்மை தெரிந்த பிறகு அவள் அவனை அடித்தாலும் சரி, காரி துப்பினாலும் சரி... எது நடந்தாலும் அவன் அதை முழுமனதாக ஏற்றுக் கொள்ள முடிவு செய்தான். இனி எந்தவொரு காரணத்திற்காகவும் அவன் அவளை விட்டு விலகி போகப் போவதில்லை. எப்படி என்றாலும் அவள் வேண்டும் அவனுக்கு... இன்பமோ, துன்பமோ இறங்கி ஒரு கை பார்த்து விடலாம் என்று துணிச்சலுடன் முடிவு எடுத்தவனாய் அவன் வீட்டிற்குக் கிளம்பினான்.



அவனது மனநிலைக்கு ஏற்றார் போன்று காரிலிருந்த எஃப்எம்மில் இருந்து பாடல் ஒலித்தது. அதைக் கேட்டு அவனது உதடுகளில் தானாகப் புன்னகை தோன்றியது.



ரணகளத்திலும் குதூகலமாய் அவளின் நினைவுகள் அவனுள்!



"கோவக்கார கிளியே, எனை கொத்தி விட்டு போகாதே

அருவமானையைப் போல நீ புருவந்தூக்கி காட்டாதே

ஏதோ ஏதோ கொஞ்சம் வலி கூடுதே

அட காதல் இதுதானா?

ஏனோ ஏனோ நெஞ்சம் குடை சாயுதே

அட காதல் இதுதானா?"




தொடரும்...!!!
 

Sasimukesh

Administrator
அத்தியாயம் : 37



வீட்டிற்கு வந்த சக்தீஸ்வரன் நேரே தனது அறையை நோக்கி நடந்தான். மனைவி அங்கே தான் இருப்பாள் என்பது அவனது கணிப்பு. அவன் அறை கதவை திறந்து கொண்டு உள்ளே சென்ற போது அவன் நினைத்து போன்றே சகுந்தலா அங்கே தான் இருந்தாள். அவன் நேரே அவள் முன்னே போய் நின்றான். அவனது வரவினை உணர்ந்த அவனது மனையாள் அவனை நிமிர்ந்து பார்த்தாள். அவளது விழிகளில் வழிந்த உணர்வினை அவன் படிக்கத் தவறினான். அவன் தான் பதட்டத்தில் இருந்தானே.



"சக்கு..." என்று அவளை அழைத்தவன்... பிறகு இனிமேலும் எதையும் மனைவியிடம் இருந்து மறைக்கக் கூடாது என்றெண்ணி, "சகி..." என்று அவளை அழைத்தான்.



அப்படி அழைத்து விட்டு அவன் எதிர்பார்ப்புடன் அவளைப் பார்த்தான். அவளது முகத்தில் தோன்றும் மகிழ்ச்சியைக் கண்டு தானும் மகிழ வேண்டும் என்று நினைத்தவனுக்கு... அவளது வெறுமையான பார்வை ஏமாற்றத்தை கொடுத்தது. இருந்தாலும் தோல்வியை ஒப்புக் கொள்ள அவன் தயாராக இல்லை.



"இத்தனை நாட்களாய் சகி யாருன்னு கேட்டுட்டு இருந்தியே. அது நீ தான். நீ தான் என்னுடைய சகி." என்று கூறி அவன் புன்னகைக்க... இப்போதும் அவளது பார்வையில் எந்த மாற்றமும் இல்லை.



'இன்னமும் என் மீதான சகியின் கோபம் தீரவில்லை என்று நினைக்கின்றேன். இந்தச் சமயத்தில் நான் என்னுடைய முந்தைய தான்றோன்றித்தனமான வாழ்க்கை முறையைப் பற்றிச் சொன்னால்... சகியின் கோபம் இன்னமும் அதிகரிக்கக் கூடும். முதலில் அவள் மீதான எனது காதலை சொல்லி விடுவோம். அதன் பிறகு முந்தைய வாழ்க்கையைப் பற்றிச் சொல்லி கொள்ளலாம். அப்போது தான் அவளது கோபம் சிறிது மட்டுப்படும்.' அவன் தனக்குத் தானே ஆறுதல் கூறி கொண்டவன் தொண்டையைச் செருமி கொண்டு பேசலானான்.



"இப்போ நான் சொல்வது எல்லாம் உண்மை. இதை நீ நம்பி தானாக வேண்டும்." என்று பீடிகையோடு சக்தீஸ்வரன் சொல்ல ஆரம்பித்தான்.



"சின்ன வயசில் இருந்து நீ என் கூட வளர்ந்தவள் தான். இருந்தாலும் எனக்கு உன்னைப் பிடிக்காது. ஏன் தெரியுமா? நீ எப்போது பார்த்தாலும் என் கிட்ட வம்பிழுத்துக் கொண்டே இருப்ப. அதனால் தான்... நான் மேல் படிப்புக்காக வெளிநாட்டுக்கு சென்று விட்டு இங்குத் திரும்பி வந்த பிறகும் கூட இது தொடர்ந்தது. நீயும், நானும் ஏட்டிக்குப் போட்டியாகத் தான் நடந்து கொண்டோம்." அவன் அன்றைய காலக்கட்டத்தை நினைத்து தனக்குள் சிரித்துக் கொண்டான்.



"அப்படியே நாட்கள் சென்று இருந்தால் நன்றாக இருந்து இருக்கும். ஆனால் எல்லாம் ஒரு நாள் மாறியது. எனக்கு அம்மை போட்டப்போ நீ என்னை அவ்வளவு அக்கறையோடு கவனிச்சிக்கிட்ட. அப்போ தான் நான் உன்னைக் கவனித்துப் பார்க்க ஆரம்பித்தேன். உன்னோட ஒவ்வொரு அசைவுகளையும் ரசிக்க ஆரம்பித்தேன். என்னையும் அறியாது என் மனம் உன்னிடம் சாய ஆரம்பித்தது. அப்போது கூட நான் அதை உணரவில்லை." என்றவன் மனைவியின் முகத்தினைப் பார்க்க...



அப்போதும் அவள் அதே பார்வை தான். அவளது பார்வையில் எந்த மாற்றமும் இல்லை. அவனுக்குச் சலிப்பாக இருந்தது. 'அமைதி, அமைதி' சின்சான் போன்று அவனது மனம் அவனை அமைதிப்படுத்தியது.



"எனக்கு உடம்பு சரியாகி நான் வேலைக்குக் கிளம்பும் போது தான்... நீயும், அம்மாவும் பேசியதை நான் கேட்டேன். கேட்டதும் நான் அப்படியே அதிர்ந்து போயிட்டேன். என்னைக் கவனித்துக் கொள்வதற்காக நீ பீரியட்ஸை தள்ளி போடும் மாத்திரையைச் சாப்பிட்டு இருக்க... இது மூடநம்பிக்கை தான். இருந்தாலும் அந்த நேரம் எனக்குள் ஒரு சிலிர்ப்பு. எனக்காக ஒருத்தி அவளது உடல்நலனை கூட, அதுவும் தாய்மைப்பேறுக்கு தீங்கு வரும் என்று தெரிந்தும் மாத்திரையை உண்டது... எனது மனதினை அசைத்துப் பார்த்தது. அந்த நொடி நான் உன்னிடம் அப்படியே சரணாகதி அடைந்து விட்டேன். இதைக் கேட்கும் உனக்கு நம்ப முடியாது தான். ஏன்னா அப்போது எனக்கே என்னோட மாற்றம் நம்ப முடியாததாகத் தான் இருந்தது. அந்த நொடியில் இருந்து இதோ இந்த நொடி வரை நான் உன்னைக் காதலித்துக் கொண்டு இருக்கின்றேன்." என்றவன் அவளது அமைதியை கண்டு,



"அப்போதே நான் என் காதலை உன்னிடம் சொல்லியிருக்க வேண்டும். சொல்லி இருந்தால் இப்போது ஏற்பட்டு இருக்கும் வீண் பிரச்சினைகளைத் தவிர்த்து இருக்கலாம். உன்னிடம் காதலை சொல்லாது போனதற்குக் காரணம்... நான் உன்னைக் கீழாக நினைத்தல்ல. அப்படிக் கீழாக நினைத்து இருந்தால், காதல் என்ற ஒன்று வந்திருக்கவே வந்திருக்காது. இது வேறு. பிறகு சொல்கிறேன்." என்றவன் மேலே சொல்ல ஆரம்பித்தான்.



சகுந்தலா பதில் பேச வேண்டும் என்று எல்லாம் அவன் நினைக்கவில்லை. அவள் அவன் கூறுவதைக் காது கொடுத்து கேட்டால் மட்டும் போதும் என்று அவன் நினைத்தான். அதனால் தான் அவன் அவளது அமைதியை ஒரு பொருட்டாகக் கருதவில்லை.



"எங்கே இருந்து ஆரம்பிப்பது? ஆங், நீ ப்ரோட்டீன் மிக்ஸ்ன்னு நினைச்சு புரோட்டா மாவு கலந்து கொடுத்தியே. அன்றைய நாளிலிருந்து ஆரம்பிக்கின்றேன். அன்னைக்கு நீ பண்ணிய வேலைக்கு உன் மேலுள்ள கோபத்தில் தான்... நான் எப்போதும் போல் உன் தலையில் கொட்டினேன். ஆனால் உன்னோட தலையில் இருந்து ரத்தம் வந்ததைக் கண்டு நான் திகைத்து தான் போனேன். அப்போது தான் எனது விரலில் தர்சனா போட்ட மோதிரம் இருந்ததைக் கவனித்தேன். அதற்கு முந்தைய நாள் தான் அவள் அந்த மோதிரத்தை என் கைவிரலில் போட்டு விட்டாள். உன்னைக் காயப்படுத்திய அந்த மோதிரத்தின் மீது எனக்கு ஒரே கோபம். அந்தக் கோபத்தில் தான் தர்சனாவை வைத்தே அந்த மோதிரத்தை கழட்டி விடச் சொன்னேன். அப்போது அவள் தொட்ட எனது கைவிரலை துடைத்துச் சுத்தப்படுத்திக் கொண்டேன். உனக்குச் சொந்தமான என்னை வேறு யாரும் தொடுவது கூட எனக்குப் பிடிக்கவில்லை."



"அப்போது தான் தர்சனா என்னை முத்தமிட்டது. அந்தச் சமயம் தான் நீ அங்கு வந்த. ஆனால் நான் அதுக்கு முன்னேயே நீ வருவதைக் கேமிரா மூலம் பார்த்து விட்டேன். உன்னைக் கண்ட பிறகு தான் நான் தர்சனாவிடம் நெருங்கி நின்றது. உன் கண் முன்னே அவளிடம் நெருங்கி நின்று இழைய மட்டுமே நான் நினைத்தது. ஆனால் அவள் முத்தமிட்டது நான் எதிர்பாராதது. அதுவும் நல்லது தான் என்றெண்ணி நான் அமைதியாக இருந்தேன். நான் நினைத்தது போல் நீயும் அதை எல்லாம் பார்த்து விட்டாய். அது தானே எனக்கும் வேண்டும். ஏன் இப்படிச் சொல்கிறேன் என்று உனக்கு இப்போது புரியாது. ஆனால் நான் பேசி முடிக்கும் போது இதுக்கான அர்த்தம் உனக்குப் புரியும்." என்று புதிர் போட்டவன் தன் மனதில் இருப்பதை அவளிடம் சொல்ல ஆரம்பித்தான்.



"நீ என்னைப் பழிவாங்க காரம் போட்ட சாப்பாட்டை எடுத்துட்டு வந்த. நான் அதை ஒன்றும் பேசாது உண்டது எதற்காகத் தெரியுமா? தர்சனா முத்தமிட்ட வாய்க்குத் தண்டனை கொடுப்பதற்காக... ஆம், எனக்கு நானே கொடுத்துக் கொண்ட தண்டனை அது. அப்போ தான் நீ கனவு கண்டு கத்தின. உன்னோட நடவடிக்கை வைத்து நீ என்ன கனவு கண்டு இருப்பேன்னு எனக்குப் புரிந்தது. ஏன்னா நீ படிக்கும் கதைகள் அப்படி. என்ன பார்க்கிற? நீ படித்த கதை புத்தகத்தில் ஒன்றை எடுத்து நானும் படித்துப் பார்த்தேன். அதில் இப்படித்தான் ஒரு காட்சி வந்தது. நான் படித்த முதலும், கடைசியுமான புத்தகம் அது மட்டுமே. எப்படித் தான் அதை எல்லாம் நீ படிக்கிறியோ? மிடியலை." என்று அவன் அவளைக் கேலி செய்ய...



அப்போதும் சகுந்தலாவின் பார்வையில் மாற்றம் இல்லை. அவளது அமைதி அவனுக்குக் கோபமாகப் பட்டது. அது அவனுக்குப் புரிந்தாலும்... இனியும் சொல்லாது மறைப்பது தவறு என்றெண்ணி அவன் அவளிடம் சொல்லலானான்.



"உன்னோட ஒவ்வொரு அசைவும் எனக்கு அத்துப்படி. அப்படிபட்ட எனக்கு நீ பண்ணிய கள்ளத்தனம் தெரியாது போகுமா என்ன? நீயும் அதுக்கு ஏற்ற மாதிரி தான் உளறி கொட்டின... அப்படி இருந்தும் நீ வாய் எரிஞ்சதுக்கு மருந்தாக வெண்ணெய் கொடுத்த பாரு. அந்த அன்பு மனசு கண்டு என் மனம் நெகிழ்ந்து போச்சு. ஆனா இதை இப்படியே வளர விட எனக்கு விருப்பம் இல்லை. உன் கனவு பலிக்கக் கூடாதே. உன்னை என்னிடம் இருந்து விலக்கி வைக்க வேண்டுமே. அதற்கு நான் உனக்கு வில்லனாக மாற வேண்டும். அதனால் தான் நான் உனக்குக் கடுமையான தண்டனை கொடுத்தேன்."



"உன்னை வெயிலில் நிற்க வைத்துவிட்டு நான் மட்டும் என்ன சொகுசா ஏசியில் உட்கார்ந்து இருந்தேன்னு நினைச்சியா? நானும் வெயிலில் தான் காய்ந்தேன். நீ அனுபவித்த வலி, வேதனையை உன்னைவிட அதிகம் நான் அனுபவித்தேன். அப்படியாவது நீ என்னை வெறுத்து ஒதுக்கி விலகி போகணும்ன்னு நினைச்சேன். நானும் உன்னை மறந்து தள்ளி இருக்கணும்ன்னு நினைச்சேன். ஆனா ரெண்டுமே நடக்கலை. இதை நான் ஏற்கெனவே உன்னிடம் சொல்லி இருக்கேன்."



"நான் வெயிலில் கருத்து போனதை கண்டு தர்சனா என் அழகு போயிருச்சுன்னு குறை பட்டாள். ஆனால் நீயோ என்னுடைய உடல்நலனில் அக்கறை கொண்டு வெயிலில் நிற்காதீங்கன்னு சொன்ன. நீ உன்னுடைய அன்பால், அக்கறையால் உன்பால் என்னை ஈர்த்துக் கொண்டே இருந்த. ஹாஸ்பிட்டலில் இருந்து நீ வந்ததும்... என்னோட கையில் இருந்த ஐஸ்க்ரீமை கண்டு ஆசையா பார்த்த பாரு. அதில் உன்னோட குழந்தைத்தனம் தான் எனக்குத் தெரிஞ்சது. குழந்தைகளுக்குத் தான் தன்னைக் காயப்படுத்தியவங்களைத் தண்டிக்கத் தெரியாது. அப்படிப்பட்ட குழந்தை உள்ளம் கொண்டவள் நீ. உன்னுடைய வெகுளி மனசு தான் என்னை உன்னிடம் தலைக்குப்புற விழ வச்சது. இப்படிப்பட்ட உன்னோட அன்பை என்னால் எப்படி இழக்க முடியும்? அப்படி இருந்தும் நான் உன்னை விலக்கி வைப்பதில் குறியா இருந்தேன்."




"தர்சனாவை வேறுவழியில்லாது சகித்துக் கொண்டு இருக்கும் போது தான்... அவள் அவளுடைய பிறந்தநாள் விழாவுக்கு அழைப்பிதழ் கொடுக்க நம்ம வீட்டுக்கு வந்திருந்தாள். அப்போது நீ என் மீது தண்ணி பீய்ச்சி அடித்து விளையாடி கொண்டிருந்த. நான் பதிலுக்கு உன் தலையில் கொட்டி கொண்டு இருந்தேன். அதைக் கண்டு அவள் உன்னை வேலைக்காரின்னு கேவலமா பேசினாள். அந்த நொடி நான் அவளைத் திருமணம் செய்யும் முடிவில் இருந்து விலகி விட்டேன். உன்னை இழிவுப்படுத்திய அவள் எனக்கு வேண்டாம் என்று... அது ஒரு காரணம் என்றாலும்... உண்மையான காரணம் அதுவல்ல... என்னால் உன்னை மறந்து அவளை எப்படிக் கல்யாணம் செய்ய முடியும்? அவள் என்றில்லை, வேறு எந்தப் பெண்ணையும் என்னால் திருமணம் செய்ய முடியாது. உன்னைத் தவிர..." கடைசி வார்த்தைகளை உச்சரிக்கும் போது அவனது பார்வை அழுத்தமாய் மனைவி மீது படிந்தது.
 

Sasimukesh

Administrator
சகுந்தலாவோ அசையாது அதே பார்வையோடு சிலையாய் அமர்ந்து இருந்தாள். அவள் அவ்வப்போது கண்ணிமைகளைச் சிமிட்டுவது கண்டும், மூச்சு விடும் போது அவளது நெஞ்சுக்கூடு ஏறி இறங்குவது கண்டும் அவள் உணர்வோடு தான் இருக்கின்றாள் என்பதை அவன் உணர்ந்து நிம்மதி கொண்டான்.



"அன்னைக்கு நீ வேலை நடக்கும் இடத்துக்கு எனக்குச் சாப்பாடு எடுத்துட்டு வந்தியே. அப்போ நான் வெயிலில் நின்றுவிட்டு வியர்வையோடு வந்த போது... நீ உன் துப்பட்டா கொண்டு என்னுடைய வியர்வையைத் துடைச்ச அந்த நொடி… உன்னுடைய அருகாமையில், உன்னுடைய தொடுகையில் என்னுடைய அலைப்புற்ற காதல் மனம் அமைதி கொண்டது. அதுக்குப் பரிசா தான் நான் உனக்குப் பணம் கொடுத்தது. ஆனால் நீ அந்தப் பணத்தைக் கண்டு ஆசை கொள்ளாது... ஐஸ்க்ரீம் வாங்க மட்டும் தேவையான பணத்தை எடுத்துக்கிட்ட. பணத்தைக் கண்டு மயங்காத பெண்ணான உன்னைக் கண்டு நான் மயங்காது இருந்தால் தான் ஆச்சிரியமே." அவன் அன்றைய நாளின் தாக்கத்தில் மயங்கி நின்றான். பின் சுதாரித்துக் கொண்டு தான் பேச வந்ததைப் பேச ஆரம்பித்தான்.



"இத்தனை காதலை மனசில் வைத்துக் கொண்டு நான் உனக்கு மாப்பிள்ளை பார்த்தேன். அந்த மாப்பிள்ளை உன்னைப் பார்க்க வந்த போது... நான் எப்படித் துடித்தேன்னு எனக்கு மட்டும் தான் தெரியும். நல்லவேளை அவன் உன்னை வேண்டாம்ன்னு சொல்லிட்டு போயிட்டான். அன்னைக்கு நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. சாரி சகி, நீ சோகமா இருக்கும் போது நான் சந்தோசமா இருந்ததுக்கு. ஆனா என்ன செய்ய? காதல் கொண்ட மனம் எப்போதுமே முரணாகத் தானே யோசிக்கும்." அவன் அவளிடம் மன்னிப்பை யாசித்தான்.



"வினி நிச்சயத்தப்போ உன்னைப் பச்சை நிற பட்டுப்புடவையில் பார்த்த அந்த நொடி... நான் அப்படியே பிளாட்டாகிட்டேன். நீ போட்ட அதே கலரில் நானும் சட்டை போட்டேன். அன்னைக்குத் தான் நான் உன்னை விதம் விதமா ஃபோட்டோ எடுத்தேன். அந்த ஃபோட்டோவில் இருந்து தான் ஒரு ஃபோட்டோவை அன்னைக்குக் கோவிலில் பார்த்தோமே வாசு, அவன் கிட்ட காண்பித்தது."



"இப்படிப் பிளான் போட்டு நான் உன்னை விட்டு விலகி போக நினைக்க... உன் அண்ணன் என்னைய உன் கிட்ட கோர்த்து விடறான். அதுவும் தர்சனாவுடனான என் காதலை பிரிச்சிட்டதாய் சொல்லி வில்லன் சிரிப்பு சிரிச்சான். ஐயோ பாவம், எனக்கு அவனைக் கண்டு தான் சிரிப்பு வந்தது. ஏன்னா நான் காதலிப்பது உன்னை அல்லவா! இது தெரியாம அவன்..." அன்றைய நினைவில் சக்தீஸ்வரனுக்கு இப்போதும் சிரிப்பு வந்தது. அவன் மனைவியின் பொருட்டுச் சிரிப்பினை அடக்கி கொண்டான்.



"உன் அண்ணன் ஏன் எனக்கு வில்லனா மாறினான்னு உனக்குத் தெரியாது இல்லையா?" என்றவன் தான் வில்லன் வேலை பார்த்து நாராயணன், அனுபமா காதலுக்கு முற்றுப்புள்ளி வைத்ததைக் கூறினான். அதைக் கேட்டு சகுந்தலாவின் விழிகளில் சிறு திகைப்பு தோன்றியது.



"அப்பாடி, இப்பவாவது ரியாக்சனை மாத்தினியே." என்று நிம்மதி கொண்டவன் அனுபமா தோழிகளுடன் பேசியதை கூறியவன், அனுபமா நாராயணனுக்குச் சரிப்பட்டு வர மாட்டாள் என்றும் கூறினான். அவள் ஒன்றும் பேசாது அமைதியாக இருந்தாள். அது கண்டு நிம்மதி பெருமூச்சு விட்டவன் மேலே பேசலானான்.



"என் மனசில் காதல் இருந்த போதும், உன்னை விட்டு விலகி இருக்கத் தான் ஆசைப்பட்டேன். ஆனா உன் அண்ணன் என்னை மாட்டி விட்டதும்... அப்போது மினிக்காகத் தான் உன்னைக் கல்யாணம் பண்ண சம்மதிச்சேன். எப்படியாவது கடைசி நேரத்தில் கல்யாணத்தில் இருந்து விலகி போயிரணும்ன்னு நினைச்சேன். அப்போ கூட நீ என்னைக் கல்யாணம் பண்ணிக்கச் சம்மதிக்கலை. விஜய்சேதுபதி மாதிரி மாப்பிள்ளை வேணும்ன்னு அடம்பிடிச்ச... அதைக் கேட்டு எனக்கு அப்படியொரு கோபம் வந்தது. அந்த நொடி என்னோட காதல் மனம் வெளியில் வந்து, அவன் என்ன என்னை விட அழகா? என்று உன்னிடம் கோபப்பட்டது. காதலில் பொறாமை கூட அழகு தான் இல்லையா? உன்னால் எங்கேயோ இருக்கிற விஜய்சேதுபதி மேல் நான் பொறாமை கொண்டேன். இப்போ நினைச்சாலும் எனக்குச் சிரிப்பு தான் வருது. எவ்வளவு பெரிய ஆளா இருந்தாலும் காதல்ன்னு வந்துவிட்டால் கூடவே பொறாமையும் சேர்ந்து வந்து விடுகிறது. என்ன செய்ய... கடைசியில் அப்பா சொன்னதும் நீ கல்யாணத்துக்குச் சம்மதிச்ச. அப்ப கூட நான் உனக்கு மாப்பிள்ளை பார்ப்பதை நிறுத்தவில்லை."



"கனி உன் கிட்ட நான் உன்னைக் காதலோடு மணக்க சம்மதிக்கவில்லைன்னு சொன்னதுக்காக... நீ அவளிடம் என்னை நிரூபிக்கப் போராடின. நீ கேட்டதுக்காக நகை வாங்கிக் கொடுத்த என்னைய விடவா, காதல் பெருசுன்னு கனி கிட்ட நீ வாதாடின. நகையை வாங்கிக் கொடுக்கும் போதே எனக்குச் சந்தேகம் தான். நீ இப்படி எல்லாம் ஆசைப்பட்டுக் கேட்கும் ஆள் இல்லையேன்னு.... கற்றைப் பணத்தைக் கொடுத்தால் கூட உனக்குத் தேவையான பணத்தைத் தானே எடுப்ப. பிறகு தானே இந்த விசயம் எனக்குத் தெரிந்தது. இதைக் கேட்ட பின்பு நான் உன்னிடத்தில் மொத்தமாய்ச் சரணடைந்து விட்டேன்."



"அன்னைக்கு நாம எல்லாம் ஹோட்டலுக்குப் போன போது நீ தர்சனா கிட்ட பதிலடி கொடுத்தியே. நான் அவளைக் காதலித்து இருந்தால்... நான் அவளையே திருமணம் செய்து இருப்பேன்னு... அந்தப் புரிதல் வேறு எந்தப் பெண்ணிடம் இருக்கும், உன்னைத் தவிர. அன்று அவள் தான் எனக்கு முத்தம் கொடுத்தாள் என்று எவ்வளவு உன்னிப்பா கவனிச்சு இருக்க.?" என்று ஆச்சிரியமாகக் கேட்டவன் பின்பு சிரித்துக் கொண்டே, "உனக்குத் தான் கிஸ் சீன் ரொம்பப் பிடிக்குமே. ஓசியில் கிடைத்த சான்சை விட்டு விடுவியா? அதான் ரசித்துப் பார்த்தியோ?" அவன் அவளைக் கேலி செய்தான். அதற்கும் அவளது பதில் அமைதி மட்டுமே. அவன் பெருமூச்சு விட்டபடி மேலே பேச ஆரம்பித்தான்.



"வினி கல்யாணத்தப்போ கரண் அத்தானோட தம்பி கூட நீ கடலை போட்டியே. அதைப் பார்த்து எனக்கு அப்படி ஒரு கோபம் வந்தது. அதான் உன்னைத் தனியா கூட்டிட்டுப் போய்க் கண்டிச்சேன். அப்போ நீ ஒருத்தனுக்கு ஒருத்தி, ஒரு கல்யாணம், ஒரு காதல்ன்னு சொன்னப்போ அவ்வளவு சந்தோசமா இருந்துச்சு. அன்னைக்கு நைட் நீ தாம்பத்தியம் பத்தி கேட்டப்போ என்னால் என்னைக் கண்ட்ரோல் பண்ண முடியலை. நானும் மனுசன் தானே. அதனால் தான் நான் உன்னை நெருங்கி வந்தது." என்றவன் அந்த நாள் நினைவில் தனது தலையைக் கோதி கொண்டான்.



"இவ்வளவு ஏன் ஆதி கூட உன்னைத் தொட்டுப் பேசுறது எனக்குப் பிடிக்கலை. அதான் நான் உன்னை மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்று உன்னை அதே போல் தொட்டு காட்டி கோபப்பட்டேன். என்னுடைய கோபம் எல்லாம் உன்னைத் தொடும் வரை தான். உன்னைத் தொட்ட பிறகு என்னால் என்னைக் கண்ட்ரோல் பண்ண முடியலை. என்னோட நெருக்கத்தைக் கண்டு நீ பயந்த... அப்போது தான் உண்மை என்னைச் சுட்டதில் நான் உடனே உன்னை விட்டு விலகி விட்டேன்." அவன் ஒவ்வொரு நிகழ்விற்கும் அழகாக விளக்கம் கொடுத்துக் கொண்டு வந்தான்.



"அந்தச் சமயம் தான் பிரேம் ஆட்கள் உன்னைக் கடத்திட்டுப் போனது. அதைக் கேட்டு எனக்கு உயிரே போயிருச்சு. உன்னைக் காப்பாத்த ஓடி வந்து எல்லோரையும் ஆத்திரத்துடன் அடித்துப் போட்டால்... நீ குரங்கு மாதிரி மேலே தொத்திக்கிட்டு இருக்க... அதைப் பார்த்து என்னுடைய பதட்டம் எல்லாம் தணிஞ்சு சிரிப்பு வந்திருச்சு. என்னோட உயிர் எனக்குத் திரும்ப வந்தது போலிருந்தது. அதுக்குப் பிறகு நீ கொடுத்த லவ் டார்ச்சர் இருக்கே, அப்பப்பா... உன்னைக் கண்டு நான் தப்பிச்சு ஓடி ஒளிஞ்சேன். எனக்குப் பயமா இருந்துச்சு. என்னையும் அறியாம என் மனசை உன்னிடம் காட்டிவிடுவேனோ என்று... நீ என்னை விட்டு விலகி இருக்கணும்ன்னு நினைச்சு தான் நான் உன்னை மாறச் சொன்னது. நிச்சயம் நீ மாற மாட்டேன்னு எனக்கு நல்லா தெரியும். உன் லவ் டார்ச்சரில் இருந்து தப்பிக்க எண்ணி தான் நான் அப்படிச் செய்தது. கடைசியில் நான் நினைத்தது தான் நடந்தது. உன்னை மாற்ற வந்த டீச்சரை நீ மாற்றி விட்டாய்." அவன் அதை நினைத்துச் சிரித்தான்.



"உனக்கு ஒரு பக்கம் மாப்பிள்ளை பார்த்துக் கொண்டே... உனக்குக் கல்யாணத்துக்கு வேண்டிய புடவை, நகை, தாலின்னு எல்லாம் பார்த்து பார்த்துச் செய்தேன். இந்தக் கொடுமை எந்தக் காதலனுக்கும் வர கூடாது. காதலி கல்யாணத்துக்கு யாராவது இப்படிப் பார்த்து பார்த்து அக்கறையா வாங்கிக் கொடுப்பாங்களா? ஆனால் நான் செய்தேன். எல்லாம் உனக்காக, நீ சந்தோசமா வாழணுங்கிறதுக்காக..."



"அன்னைக்குத் தான் நான் உனக்கு வாங்கிக் கொடுத்த அந்த வைர நெக்லசை உனக்குக் கிப்ட்டா கொடுத்தேன். அத்தோடு நீ வாங்கிய செயினும். அதை நீயே எனக்குப் போட்டு விட்ட..." என்றவன் தனது கழுத்தில் இருந்த அந்தத் தங்க சங்கிலியை எடுத்து அவளிடம் காட்டினான்.



"தங்கம் போடாதவன் உனக்காக இதைப் போட்டு இருக்கேன் பார்." என்க... அவள் அமைதியாக அவனைப் பார்த்திருந்தாள்.



"திடுமென ஒருநாள் நீ என் கிட்ட வந்து நீங்க என்னைய காதலிச்சுக் கல்யாணம் பண்ண நினைக்கிறீங்களா? என்று கேட்ட போது... நான் உள்ளுக்குள் செத்துப் போயிட்டேன் சகி. மனசு நிறையக் காதல் வச்சுக்கிட்டு விலகி போவது எவ்வளவு பெரிய கொடுமை தெரியுமா? அதையும் நான் உனக்காகச் செஞ்சேன். எல்லாத்துக்கும் காரணம் உன் மீதான அக்கறை."



"அப்போ தான் நீ எனக்காகச் சுமங்கலி விரதம் இருந்த. நீ மனசளவில் என்னிடம் ரொம்ப நெருங்கிட்டன்னு எனக்குப் புரிஞ்சது. எனக்கு ரொம்ப உறுத்தலா இருந்துச்சு. உன்னைப் பத்தி நினைச்சிட்டு காரை ஓட்டும் போது தான் விபத்து ஏற்பட்டுச்சு. அப்போ கூட நீ நான் குணமாகணும்ன்னு எண்ணி கடவுளுக்கு வேண்டி மொட்டை அடிச்சு உன் காதலை நிரூபிச்ச."



"அந்த நிகழ்வுக்குப் பிறகு தான் நான் உன்னை விட்டு விலகுவதில் உறுதியா இருந்தேன். அப்போ தான் தர்சனா வலிய வந்து தலையைக் கொடுத்தாள். போதையில் இருந்த என்னை மயக்கி அவள் தனது காரியத்தைச் சாதிக்க நினைத்தாள். ஆனா நான் அவளை வச்சு என்னோட காரியத்தை நடத்திக்கிட்டேன். அந்தப் போதையிலும் அவளை நான் உணர்ந்தேன். விலக்கி வச்சேன். ஏன்னா என்னோட உடம்பும், உள்ளமும் உனக்கு மட்டுமே சொந்தம். வேறுவழியில்லாம இதுக்கு மேல் எதுவும் முடியாது என்ற நிலையில்... அவள் போதையில் தூங்கி விட்டாள் போலும்..."




அன்றைய நினைவில் சக்தீஸ்வரனின் முகம் இறுகி போனது. அவன் சற்று நேரம் இறுகி போய் நின்றிருந்தான். அவன் பேசி தானாக வேண்டும். ஆனால் பேச வார்த்தைகள் வரவில்லை. அவன் தொண்டையைச் செருமி கொண்டு பேச ஆரம்பித்தான்.
 

Sasimukesh

Administrator
"நள்ளிரவில் தான் எனக்கு முழிப்பு வந்தது. லேசாகப் போதை இருந்தது. தலையைக் குலுக்கி என்னைச் சமன் செய்து கொண்டேன். அப்போது தான் அருகில் படுத்திருந்த தர்சனாவை பார்த்தேன். நடந்த அனைத்தும் எனக்கு ஞாபகத்தில் வந்தது. தர்சனா இப்படி அமைதியாகப் படுத்து உறங்கும் ரகம் இல்லையே. எனக்குச் சந்தேகமாக இருந்தது. அவளது ஃபோனை எடுத்துப் பார்த்தேன். நான் நினைத்தது சரியே. என்னோடு நெருக்கமாக இருப்பது போன்று ஃபோட்டோ எடுத்து என்னுடைய அப்பாவுக்கு அனுப்பி வைத்து இருந்தாள். என்னுடைய நல்ல நேரம் அப்பா அந்த ஃபோட்டோக்களை இன்னமும் பார்த்திருக்கவில்லை. நான் நினைத்து இருந்தால் அதை அழித்திருக்க முடியும். ஆனால் நான் அதைச் செய்யவில்லை. இதையே சாக்காக வைத்து நம்ம கல்யாணத்தை நிறுத்த முயற்சி செய்தேன். அந்த நொடி எனக்கு உன் வாழ்க்கை மட்டுமே முக்கியமாகப் பட்டது. என்னுடைய மானம், மரியாதை, கௌரவம் எதுவும் எனக்கு ஞாபகத்தில் இல்லை. அடுத்த நொடி அந்த ஃபோட்டோக்கள் எல்லாத்தையும் தர்சனா அப்பா விருதாச்சலத்துக்கு அனுப்பி வச்சேன். அதுவும் இந்த ஹோட்டல் அட்ரசோடு... நான் நினைத்தது நடந்தது. இரண்டு குடும்பங்களும் இங்கே வந்தாங்க. நீயும் தான்... அதன் பிறகு நடந்தது எல்லாம் உனக்கே தெரியும். உன்னை விலக்கி வைக்க எண்ணித்தான் நான் தர்சனாவை யூஸ் பண்ணிக்கிட்டேன். மத்தபடி எந்தத் தவறும் அங்கே நடக்கலை. அது உனக்கே தெரியும் தானே. தர்சனாவே உன்னிடம் சொல்லி இருக்கிறாள் இல்லையா?" என்றவனைக் கண்டு அவள் அமைதியாகப் பார்த்திருந்தாளே ஒழிய... எதுவும் பேசவில்லை.



"இடைப்பட்ட நாட்களில் நான் மனோகரை பார்த்து, பேசி உனக்காகச் செட் பண்ணி வைத்து விட்டேன். அதுக்குப் பிறகு இங்கே இருந்து சில வேலைகளை முடித்து விட்டு தீவுக்குக் கிளம்பி விட்டேன். ஏன்னா இங்கேயே இருந்து உன் திருமணச் செய்தியை என்னால் கேட்க முடியாது. உன் திருமணத்தை என்னால் பார்க்க முடியாது. எல்லோரையும் விட்டு, முக்கியமாக உன்னை விட்டு தூர விலகி போக நினைத்தேன். ஆனால் நடந்தது வேறு. கடவுளோட பிளான் வேறு. நீ குழந்தை உண்டாகி இருக்கிறதை கண்டு அப்பா என்னை வரவழைத்தார். குழந்தை என்னுடையதுன்னு நீ சொல்லும் போது... என்னால் உன்னைக் கைவிட முடியலை. இது தான் சான்சுன்னு நான் உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். நான் உன்னைக் காதலிச்சு தான், உன்னை மனசார விரும்பித்தான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். அப்போ, இப்போ, எப்பவும் என் மனசில் நீ மட்டும் தான்டி இருக்க." என்றவன் சற்று நேரம் அமைதியாக நின்றான்.



திருமணத்தன்று மதியம் மனைவியை ஓய்வெடுக்கச் சொல்லி விட்டு அவன் சென்ற இடம்... முன்பு அவன் தங்கியிருந்த வீட்டிற்குத் தான். அன்று சகுந்தலா அவனைத் தேடி வந்த போது என்ன நடந்தது என்று அவனுக்குத் தெரிய வேண்டி இருந்தது. அதனால் தான் அவன் அங்குச் சென்றது. எல்லாவற்றையும் சோதித்துப் பார்த்தவன் சகுந்தலா கொடுத்த நகைப்பெட்டியை எடுத்துக் கொண்டு திரும்பி வந்தான். அதைப் பற்றி அவன் இன்னமும் மனைவியிடம் சொல்லவில்லை. சொன்னால் நிச்சயம் அவள் இன்னமும் குழம்பி போவாள். அவன் அந்த விசயத்தைத் தனது மனதிற்குள் போட்டு புதைத்துக் கொண்டான். அவர்கள் சந்தோசமாக இணைந்து வாழ்வதற்கு இந்த விசயம் தேவையில்லாத ஒன்று. அதனால் அவன் அதைச் சொல்லாது மறைக்க எண்ணினான்.



"கல்யாணத்துக்குப் பிறகு நான் என் காதலை உன்னிடம் பல வழியில் செயலில் காட்டினேன். யோசித்துப் பார், உனக்கே புரியும். நம்ம தீவுக்குப் பெயர் தீஷாலா என்று உனக்கே தெரியும். ஆனால் அந்தப் பெயரில் இருக்கும் எழுத்துகளுக்கு என்ன அர்த்தம் என்று தெரியுமா? அது நம்ம இருவரின் பெயரில் இருக்கும் எழுத்துகள் இணைந்ததுன்னு உனக்குத் தெரியுமா? சக்தீஸ்வரன் என்ற பெயரில் உள்ள தீ, ஷ, லா இரண்டும் உன் பெயரில் இருந்து எடுத்தது. நம் காதலுக்கு அங்கீகாரம் கொடுக்க நினைத்து வைத்தது இந்தப் பெயர்."



"அப்புறம் இன்னொரு முக்கியமான விசயம்... நம் திருமணப் பேச்சிற்கு முன்பு உன்னோட மாமா, அதான் என்னோட அப்பா வேறு ஒருத்தனை மாப்பிள்ளையாக உன்னிடம் காட்டி இருந்தால் கூட... நீ அவனைக் காதலிச்சுக் கல்யாணம் பண்ணி இருக்க மாட்ட சகி." அவன் அடித்துக் கூறினான். அவன் சொன்னது கேட்டு அவளது விழிகளில் யோசனை வந்தமர்ந்தது.



"ஏன்னா உன் மனசில் அப்போ, இப்ப இல்லை... எப்பவும் நான் தான், நான் மட்டும் தான் இருக்கேன். நீ முதலில் இருந்தே என்னைத் தான் மனசில் நினைத்துக் கொண்டிருக்கிறாய்... அதனால் தான் நீ என்னைச் சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்தாய், எனக்கு ஒன்று என்றால் நீ துடிதுடித்தாய். இது எல்லாம் காதல் இல்லாது வேறு என்ன? நிச்சயம் நீ இதை எல்லாம் உணர்ந்து என்னைக் காதலித்து இருக்காவிட்டாலும், அப்பா பார்க்கிற எந்த மாப்பிள்ளையையும் நீ திரும்பி கூடப் பார்த்து இருக்க மாட்ட. அப்படியே எல்லோரும் உன்னைக் கல்யாணத்துக்கு வற்புறுத்தினாலும் கூட... அந்த நொடி நீ உன் மனதில் இருக்கும் என் மீதான காதலை உணர்ந்து இருப்ப." என்றவனைக் கண்டு அவள் புரியாது பார்த்தாள்.



"உன் வாய் பேசலைன்னாலும்... உன் கண் இரண்டும் அழகாய் பேசுதடி சகி." அவன் அவளது விழிகளை ஆழ்ந்து பார்த்துக் கொண்டே சொன்னான்.



"இதுக்குச் சாட்சி எது தெரியுமா? உன்னோட ஃபோன் கேலரி. அன்னைக்கு நீ ஃபோனில் கிஸ் சீன் பார்க்கும் போது... நான் உன் ஃபோனை பிடுங்கி கொண்டேன் இல்லையா? அப்போது தான் நான் அதில் இருந்த போட்டோஸ் எல்லாம் பார்த்தேன். அதில் இருந்த ஃபோட்டோசில் முக்கால்வாசி போட்டோஸ் என்னுடையது தான். எந்த எண்ணத்தில் நீ எடுத்தேன்னு எனக்குத் தெரியாது. ஆனா அதில் உன் பிடித்தத்தைத் தான் நான் பார்த்தேன். என்னை உனக்கு ரொம்பப் பிடிக்கும் என்று அப்போது உணர்ந்தேன். அந்தப் பிடித்ததிற்குப் பெயர் காதல் இல்லாது வேறென்ன பெயர்?" அவன் சொன்னதைக் கேட்டு அவள் குழப்பத்துடன் அமர்ந்து இருந்தாள்.



"உனக்குக் குழப்பமா இருக்கலாம். இந்தளவுக்குக் கண்மூடித்தனமான காதலை வைத்து இருக்கும் நான்... ஏன் இவ்வளவு நாளாய் உன்னிடம் காதலை சொல்லாது இருந்தேன் என்று... ஆனால் அதுக்கு ஒரு காரணம் இருக்கு." என்று சொன்னவனது முகம் கருத்துப் போனது.



அவனுடைய கதைக்கான கிளைமாக்ஸ் நேரம் வந்துவிட்டது. அவன் மனதின் படபடப்பினை அடக்கி கொண்டு அவளிடம் தன்னைப் பற்றிச் சொல்லலானான். வெளிநாட்டில் புத்தி கெட்டுப் போய்த் தான்றோன்றித்தனமாய்த் தான் வாழ்ந்ததை அவன் அவளிடம் சொன்னான். அதன் பிறகு இங்கு வந்த இரண்டு வருடங்களில் அவன் எந்தப் பெண்ணையும் தொடவில்லை. அதன் பிறகு அவனைப் பார்க்க வந்த பெண் தோழி லிசி விரும்பி அழைத்தும் கூடத் தான் விலகி வந்துவிட்டதை அவன் அவளிடம் கூறினான். அவளிடம் காதலில் விழும் முன்னே அவன் மனதளவில் ஒழுக்கமாக வாழ கற்றுக் கொண்டான்.



"இப்போது சொல்... இப்படிப்பட்ட நான் எப்படி மாசற்ற உனக்குப் பொருத்தமாவேன்? என் தங்கைக்கு என்னைய மாதிரி ஒரு மாப்பிள்ளையைப் பார்ப்பேனா? நீயும் என் கூடவே வளர்ந்தவள் தானே... அப்படிப்பட்ட உனக்குத் துரோகம் பண்ண எனக்கு எப்படி மனசு வரும்? அதனால் தான் நான் உன்னை விட்டு விலகி போக நினைச்சது. என்னைப் போல் தறிகெட்டு போன தர்சனாவை கல்யாணம் பண்ண நினைச்சேன். அப்படியாவது உன்னை விட்டு விலக நினைச்சேன். ஆனா சத்தியமா முடியலைடி. அதனால் தான் வேறு முடிவு எடுத்தேன். உனக்குக் கல்யாணம் பண்ணி வச்சு விலக்கி வைக்க நினைச்சேன். அதுவும் முடியலை. உன் காதல் முன்னாடி நான் தோத்து போயிட்டேன்டி. உன்னைய இழக்க முடியாது நான் தவிச்ச போது தான்... கடவுள் திரும்ப எனக்கு ஒரு சான்ஸ் கொடுத்தான். அதை நான் இறுக்கி பிடிச்சிக்கிட்டேன்."



"நான் முதலிலேயே என் காதலை உன் கிட்ட சொல்லி இருக்கணும். சொல்லாதது என் தப்பு தான். இந்த அசிங்கத்தை எப்படி உன் கிட்ட நான் சொல்லுவேன்? உன் முகத்தைப் பார்க்க கூட எனக்குக் குற்றவுணர்ச்சியா இருந்தது. இப்போ நான் எல்லாத்தையும் உன் கிட்ட சொல்ல காரணம்... இனியும் நமக்கு இடையில் தவறான புரிதல் இருக்கக் கூடாதுன்னு தான். நீ என்னைத் திட்டு, அடி, என்ன வேணும்ன்னாலும் பண்ணிக்கோ. ஆனா பிரிஞ்சி போக மட்டும் நினைக்காதே." அவன் அவளிடம் கெஞ்சுதலுடன் இறைஞ்சினான்.



அப்போது தான் பெண்ணவள் அந்த வார்த்தைகளை உதிர்த்தாள்.



"நாம பிரிஞ்சிரலாம்." சகுந்தலா தலையைக் குனிந்து கொண்டு சொன்னாள். இவ்வளவு தூரம் அவன் விளக்கம் கொடுத்தும் மனைவி இப்படிச் சொல்லுகிறாள் என்றால்... அவள் அவனை வெறுத்து விட்டாளா? எது நடக்கக் கூடாது என்று அவன் நினைத்தானோ? அது தான் அங்கே நடந்து கொண்டிருந்தது.



சக்தீஸ்வரன் அதிர்ச்சியுடன் மனைவியைப் பார்த்தான். வார்த்தைகள் கொல்லுமோ? கொன்றதே... அந்த நொடி அவன் உயிரற்ற பிணமானான். அவன் சக்தி எல்லாம் வடிந்தார் போன்று அங்கிருந்த சோபாவில் தொப்பென்று அமர்ந்தான்.



அனுமன் நெஞ்சை பிளந்து காட்டியது போன்று அவன் தனது நெஞ்சில் இருக்கும் அவளது உருவ டாட்டூவை அவளிடம் காட்ட முடியும் தான். அவள் மீது அவன் வைத்திருக்கும் கண்மூடித்தனமான காதலை அவளுக்குச் சாட்சியத்தோடு அவன் அவளிடம் எடுத்துரைக்க முடியும் தான். ஆனால் அதைக் கூடச் செயல்படுத்த முடியாதபடி அவளது வார்த்தைகளில் அவன் செயலிழந்து போயிருந்தான்,



உடலில் மட்டுமா அவன் அவளது உருவத்தைச் சுமந்து கொண்டு இருக்கின்றான், உள்ளத்திலும் அவளை அல்லவா சுமந்து கொண்டு இருக்கின்றான். அவள் இல்லாது அவனால் வாழ முடியுமா??? நினைக்கும் போதே அவனுக்கு மூச்சடைத்தது.



“காதல் என்ற ஒன்று அது கடவுள் போல

உணரத்தானே முடியும் அதில் உருவம் இல்லை

காயம் கண்ட இதயம் ஒரு குழந்தை போல

வாயை மூடி அழுமே சொல்ல வார்தை இல்லை”



தொடரும்...!!!
 

Sasimukesh

Administrator
அத்தியாயம் : 38



ஊசி விழுந்தால் கூடச் சத்தம் கேட்குமே... அதே போன்று அந்த அறையினுள் கனத்த அமைதி நிலவியது. முதலில் சுதாரித்தது சக்தீஸ்வரன் தான். அவன் மெல்ல நிமிர்ந்து தனது மனைவியைப் பார்த்தான். சகுந்தலா தலையைக் குனிந்தபடி அமர்ந்து இருந்தாள். அவளது விழிகளில் இருந்து விழிநீர் இடைவிடாது தாரை தாரையாக வழிந்து கொண்டிருந்தது. பெண்ணின் கண்ணீர் நல்ல ஆண்மகனின் மனதினை வேதனையுற செய்யும். இதற்குச் சக்தீஸ்வரனும் விதிவிலக்கல்ல. மனைவியின் கண்ணீர் அவனை வேதனையுற செய்தது. அவளது கண்ணீருக்கு அவன் தானே காரணம். என்ன கூறி அவளது அழுகையை நிறுத்துவது என்று அவனுக்குத் தெரியவில்லை.



சக்தீஸ்வரன் சோபாவில் இருந்து எழுந்தவன் மனைவி முன்னே போய் நின்றான். அவனது வரவினை கூட உணராது அவள் அழுது கொண்டு இருந்தாள். சகுந்தலா இப்படி அமைதியாக உணர்வுகளை வெளிப்படுத்தி அவன் இப்போது தான் பார்க்கின்றான். கோபம் என்றாலும், மகிழ்ச்சி என்றாலும் தனது உணர்வுகளை ஆர்ப்பாட்டமாய் வெளிப்படுத்தும் சகுந்தலாவை தான் அவனுக்குத் தெரியும். ஆனால் இந்தச் சகுந்தலா புதியவள். அவனது சகி மாறிவிட்டாள் என்று நினைக்கும் போதே அவனுள் விரக்தி புன்னகை தோன்றியது. அவளது மாறுதலுக்கு அவன் தானே காரணம். அவன் அவள் முன்னே மண்டியிட்டு அமர்ந்தான்.



"சகி..." என்றபடி அவன் அவளது கரங்களைப் பிடிக்க வந்தான்.



சகுந்தலா சட்டென்று தனது கரங்களை விலக்கி கொண்டாள். அதைக் கண்டவன் மனதில் சொல்லொண்ணா வலி எழுந்தது. அவள் பிரிந்து விடலாம் என்று சொன்ன போது கூட அவனுக்கு இந்தளவுக்கு வலிக்கவில்லை. ஏனென்றால் அவனுக்குச் சிறிது நம்பிக்கை இருந்தது. மனைவியிடம் பேசி அவளைச் சரிக்கட்டி விடலாம் என்று... ஆனால் இப்போது அவளது விலகலில் அவனது நம்பிக்கை சற்று அடிவாங்கியது. காதலில் தன்மானம் பார்க்க கூடாது என்று உறுதி கொண்டவனாய் அவன் அவளிடம் பேசினான்.



"ஒரே வார்த்தையில் சொல்லிட்ட... நாம பிரிஞ்சிரலாம்ன்னு... நாம பிரியறதுக்கா நான் இவ்வளவு விளக்கம் கொடுத்தேன்? நாம ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சிக்கிட்டு சந்தோசமா வாழ தானே, நான் என்னைப் பற்றிய உண்மைகளை உன் கிட்ட சொன்னேன்." அவன் பொறுமையாக எடுத்து சொல்ல...



"இல்லை... எனக்கு நீங்க வேணாம். வேணவே வேணாம். எனக்கு விவாகரத்து கொடுத்துருங்க." அவள் அழுது கொண்டே சொன்னாள். அப்போதும் அவள் அவனது முகத்தை நிமிர்ந்து பார்க்கவில்லை.



"ப்ச், திரும்பத் திரும்ப அதையே சொல்லாதே சகி. பிரியறதுக்கா கல்யாணம் பண்ணினோம். எல்லாத்தையும் விட நம்ம குழந்தையை நினைச்சு பாரு. அதோட எதிர்காலத்தைப் பத்தி யோசிச்சு பாரு."



"இது என்னோட குழந்தை. இதைப் பார்த்துக்க எனக்குத் தெரியும்." அவள் உறுதியான குரலில் சொல்ல...



"தப்பு செஞ்சவன் திருந்த கூடாதா? திருந்தி வாழ கூடாதா? எனக்கு ஒரு சான்ஸ் கொடுடி. என் வாழ்க்கையில், என் மனசில் நீ மட்டும் தான்னு... நான் உன் கூட வாழ்ந்து நிரூபிக்கிறேன். கொஞ்சம் யோசிச்சு பாருடி சகி." கோடீஸ்வரனான அவன் இப்போது வாழ்க்கை பிச்சை கேட்டு அபலை பெண்ணிடம் கெஞ்சினான்.



இருவரது ஏற்றத்தாழ்வுகளைக் காதல் சமன் செய்ததோ!



"நான் எதுக்கு உங்களைப் பத்தி யோசிக்கணும்? நீங்க என்னைப் பத்தி யோசிச்சீங்களா? என் வாழ்க்கையை உங்க கையில் எடுத்துக்கிட்டு விளையாடும் அதிகாரத்தை யார் உங்களுக்குக் கொடுத்தது? உங்க இஷ்டத்துக்கு என்னைய கல்யாணம் பண்ண சம்மதிப்பீங்க. அப்புறம் வேறு ஒருத்தனுக்குத் தாரைவார்த்து கொடுக்க நினைப்பீங்க. பிறகு குழந்தைன்னு வந்ததும் என்னைய மிரட்டி தாலி கட்டுவீங்க. எல்லாமே உங்க விருப்பம் தான் இல்லையா? எனக்குன்னு ஒரு மனசு இருக்கிறது உங்களுக்கு ஞாபகம் இருக்கா, இல்லையா? எனக்கு முக்கியத்துவம் இல்லை, என்னோட உணர்வுகளுக்கு முக்கியத்துவம் இல்லை. அப்படி இருக்கும் போது... நான் எதுக்கு உங்களுக்கு, இந்தக் கல்யாணத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கணும்?" அவள் கோபமாய் அவனைச் சாடினாள். அவன் அவளது வார்த்தைகளில் விக்கித்துப் போனான்.



"காரணம் கேட்டால்... காதல்ன்னு கட்டுக்கதை அளப்பீங்க. ஆமா, பெரிய காவிய காதல்... கண்ட பெண்களோடு கூத்தடிச்ச உங்களுக்குக் காதல் ஒரு கேடு. கண்டவளுங்களைத் தொட்ட கையால் நீங்க என்னைத் தொடாதீங்க." அவள் அருவருப்புடன் முகத்தைச் சுருக்க...



அதைக் கேட்டு அவன் உள்ளுக்குள் மரித்துத் தான் போனான். அவனது உடல் தன்னிச்சை செயலாகப் பின்னால் சாய்ந்தது. தனது மூச்சுக்காற்று கூட அவளுக்கு அருவருப்பைக் கொடுத்து விடுமோ? என்று அவன் நினைத்து கொண்டானோ!



"சகி, உன் மனசில் நான் இல்லையா? நீ என்னைக் காதலிக்கலையா?" அவன் தவிப்புடன் அவளைப் பார்த்து கேட்டான்.



"என் மனசில் நீங்க இருந்தீங்க. நான் உங்களைக் காதலிச்சேன் தான். இல்லைங்கல்ல. ஆனா இப்போ எதுவுமே இல்லை. எப்போ வேறு ஒருத்தனுக்கு என்னைத் தாரைவார்த்து கொடுக்க நினைச்சீங்களோ... அப்பவே என் மனசில் இருந்து உங்களை விலக்கி வச்சிட்டேன். எப்போ வேற பொண்ணுங்க கூட வாழ்ந்தேன்னு நீங்க சொன்னீங்களோ... அப்பவே என் காதலும் செத்து போச்சு." அவள் கோபத்தோடு சொல்லியபடி கன்னங்களில் வழிந்த கண்ணீரை துடைத்து கொண்டாள்.



"காதல் எல்லாத்தையும் மன்னிக்கும்ன்னு கேள்விப்பட்டு இருக்கேன். நீ என்னை மன்னிக்கக் கூடாதா?" அவன் அவளைக் கெஞ்சுதலாய் பார்த்தான்.



"காதலிக்கவே தகுதி இல்லாத உங்களோட காதல் தப்பு. என்னை மனுசியாய் மதிக்காது என் மனசோடு விளையாடிய உங்க மீது நான் கொண்ட காதலும் தப்பு. மொத்தத்தில் நம்ம கல்யாணமே தப்பு." அவள் தன் நிலையில் உறுதியாய் நின்றாள்.



எவ்வளவுக்கு எவ்வளவு அவள் அவன் பின்னேயே சுற்றினாளோ! அதை விட அதிகமாய் அவனை விட்டு விலகுவதில் அவள் உறுதியாக இருந்தாள்.



"இது தான் உன் முடிவா?" இறுதியாகத் தனக்கு ஒரு வாய்ப்பு கிடைக்காதா? என்று அவன் ஆவலுடன் அவளைப் பார்த்தான்.



"ஒரு பொம்பளை பொறுக்கி கூட என்னால் வாழ முடியாது." அவள் அழுத்தம் திருத்தமாய்ச் சொல்ல...



"ஏய், என்னைய பார்த்தா உனக்கு எப்படித் தெரியுது? ரோட்டில் போகிற பொண்ணுங்களை எல்லாம் கையைப் பிடிச்சு இழுத்து வம்பிழுக்கும் பொறுக்கி மாதிரி இருக்கா? இல்லை பார்க்கும் பெண்களை எல்லாம் படுக்கைக்குக் கூப்பிடும் காமூகன் மாதிரி இருக்கா? பேசும் முன் யோசிச்சு பேசு." அவன் பொறுமை இழந்து பெரும் கர்ஜனையுடன் அவளை அடிப்பதற்காகத் தனது கரத்தினை உயர்த்தி விட்டான். அவளது 'பொம்பளை பொறுக்கி' என்கிற வார்த்தையில் அவனது காதல் மனம் அடிப்பட்டுப் போனது. அவனது பொறுமையும் காற்றில் பறந்து போனது.



சகுந்தலா அசராது, இமைக்காது அவனைப் பார்த்தபடி அசையாது அமர்ந்து இருந்தாள். முன்பிருந்த வெகுளி சகுந்தலா என்றால் பயந்து இருப்பாள். ஆனால் இவள் அவனைத் தைரியமாக எதிர்கொண்டாள்.



அவளது அசராத தன்மையில் தன்னை மீட்டு கொண்டவனாய், "ஏன்டி என்னைக் கொடுமைக்காரன் ஆக்கிற?" என்று அவன் கோபமும், ஆதங்கமுமாய்க் கேட்டபடி தனது கரத்தினைக் கீழே இறக்கினான்.



"இனிதான் நீங்க கொடுமைக்காரன் ஆகணுமா? ஏற்கெனவே நீங்க கொடுமைக்காரன் தான். நான் பாட்டுக்குச் சந்தோசமா சுத்திக்கிட்டு இருந்தேன். கல்யாணம், காதல்ன்னு என் வாழ்க்கையைத் திசை திருப்பி விட்டீங்க. அதாவது எனக்கு ஒழுங்கா அமைஞ்சதா? இல்லையே... பாதியில் விட்டுட்டு ஓடினீங்க. பிறகு வந்து தாலி கட்டினீங்க. இதோ இப்போ வந்து உங்க பழைய வாழ்க்கையைச் சொல்லி என் மனசை நோகடிக்கிறீங்க. என் வாழ்க்கையில் விளையாண்ட நீங்க கொடுமைக்காரன் இல்லாது வேறு என்ன?"



"அதுக்காக உண்மையைச் சொல்லாது வாழ சொல்றியா? பொய் ரொம்ப நாள் நீடிக்காது."



"நல்லவேளை இப்பவாவது உண்மையைச் சொன்னீங்களே. ரொம்பச் சந்தோசம்." என்று எகத்தாள குரலில் சொன்னவளை கண்டு அவன் விழிகளைச் சுருக்கினான்.



"இந்த உண்மையை நீங்க என் கழுத்தில் தாலி கட்டும் முன் சொல்லி இருக்கணும். அப்படி நீங்க சொல்லி இருந்தால்... நான் உங்க பக்கமே திரும்பி பார்த்திருக்க மாட்டேன். உங்களை வேண்டாம்ன்னு மாமோய் கிட்ட சொல்லி இருப்பேன். எனக்கு ராமன் மாதிரி புருசன் வேணும்ன்னு ஆசைப்பட்டேன். ஆனா எனக்கு வாய்ச்சது என்னவோ கிருஷ்ணன். எல்லாம் என் தலையெழுத்து." அவளுக்கு ஆற்றாமையில் விழிகளில் இருந்து கண்ணீர் வழிந்தது.



"அதெல்லாம் அப்போ... இப்போ நான் மாறிட்டேன்டி." அவன் கெஞ்சுதலுடன் எடுத்துரைக்க...



"இனிமேலும் மாற மாட்டீங்கங்கிறதுக்கு என்ன உத்திரவாதம்?" என்று கேட்டவளை கண்டு அவன் வாயடைத்துப் போனான்.



"என் கூட வாழ்ந்து பார்த்தால் தானே தெரியும். நீ அத்துக்கிட்டு போறதிலேயே குறியா இருக்கியே." அவன் இயலாமையுடன் சொல்ல...



"நீங்க என்ன பேசினாலும் என் முடிவு இது தான்." என்று உறுதியான குரலில் சொன்னவள்... பின்பு என்ன நினைத்தாளோ...



"கடைசியா பேசி முடிச்சிடறேன். நான் மக்கு தான், தத்தி தான். படிக்காத முட்டாள் தான். எல்லாப் பெண்களையும் போல எனக்கு நாசூக்கு, நாகரிகம் தெரியாது தான். அப்படிப்பட்ட எனக்கும் மனசு உண்டு, உணர்வுகள் உண்டு. அதே மாதிரி எனக்குன்னு ஒரு உலகம் உண்டு. அதில் நான் சந்தோசமா வாழ்ந்துட்டு இருந்தேன். என்னோட வாழ்க்கையில் குறுக்கே நீங்க தான் வந்தீங்க. நான் உங்க வாழ்க்கையில் வரவே இல்லை. நீங்களா வந்தீங்க, நீங்களா என்னைய அசிங்கப்படுத்திட்டு வேண்டாம்ன்னு தூக்கி எறிஞ்சிட்டு போனீங்க. அதுக்குப் பிறகு குழந்தையைக் காரணம் காட்டி மிரட்டி கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க. இதோ இப்போ இந்தக் கல்யாணத்தையும் கேலிகூத்தாக்கி வச்சிருக்கீங்க."



"இதில் என்னுடைய பங்கு ஏதாவது இருக்கா? நான் உங்க கிட்ட வந்து என்னைய கல்யாணம் பண்ணிக்கோங்கன்னு கெஞ்சினேனா? இல்லவே இல்லை. என்னுடைய குழந்தையைத் தனியா வளர்த்துக்கிற அளவுக்கு எனக்கு நெஞ்சில் உரம் இருக்கு. உடம்பில் தெம்பு இருக்கு. நான் யாரையும் நம்பி பிறக்கலை. என்னைய பார்த்துக்க எனக்குத் தெரியும்." அவளது ஒவ்வொரு வார்த்தைகளும் சாட்டையடியாய் வந்து விழுந்தது.



அவனுக்கு வலித்தது, மிகவும் வலித்தது. இத்தனை நாட்கள் தன்னுடன் இருந்தும் தான் அவளுக்கு ஒன்றுமே இல்லையா என்று... திருமணம் முடித்து அவள் அவனுடன் இருந்தது ஒன்றரை மாதங்கள் இருக்குமா? அந்த ஒன்றரை மாதங்களில் எத்தனை சந்தோசம்! எத்தனை இன்பம்! எல்லாவற்றையும் மறந்துவிட்டு பேசுகின்றாளே! அவனுக்குத் துக்கமாக இருந்தது.



"இந்தக் கல்யாணம் சரிப்பட்டு வராது. நாம பிரிஞ்சிரலாம். எனக்கு நீங்க விவாகரத்து கொடுத்துருங்க." அவள் முடிவாய் சொல்லிவிட்டு எழுந்து சென்றுவிட...



சக்தீஸ்வரன் மனைவியைத் தடுக்க இயலாது... அடுத்து என்ன செய்வது? என்று தெரியாது திகைத்து இருந்தான்.



******************************
 

Sasimukesh

Administrator
சக்தீஸ்வரன் தன்னை மீட்டுக் கொண்டு அறையை விட்டு வெளியில் வந்தவன் நேரே கீழே சென்றான். அங்கு வரவேற்பறையில் அனைவரும் இருந்தனர். எல்லோரும் வேலையை முடித்து விட்டு வந்துவிட்டனர் போலும்.



"எப்போ வந்த சக்தி? காபி குடிச்சியா?" உதயரேகா மகனை கண்டதும் கேட்டாள்.



"கொஞ்ச நேரத்துக்கு முந்தி தான் வந்தேன். இன்னும் காபி குடிக்கலை." என்றவன் மற்றவர்களின் விழிகளை உறுத்தாது இருக்க வேண்டி மனைவி அருகே சென்று அமர்ந்தான்.



"சக்கு, சக்திக்கு காபி எடுத்துட்டு வா." உதயரேகா மருமகளிடம் சொல்ல...



சகுந்தலாவும் மறுப்பு சொல்லாது எழுந்து சென்றாள். அவளது அமைதியை கண்டு அவன் நிம்மதி கொண்டான். கணவன், மனைவியின் ரகசியம் அம்பலம் ஏறவில்லை என்பதே அவனுக்குச் சற்று நிம்மதியை கொடுத்தது.



சகுந்தலா காபி கொண்டு வந்து கொடுக்க... அதை வாங்கிக் கொண்டவன் அவளைச் சீண்டும் பொருட்டு, "காபியில் உப்பு எதுவும் கலக்கலையே." என்று புன்னகையுடன் கேட்டான்.



"சாந்திக்கா தான் காபி கலந்தது." என்றவள் அமைதியாக அவன் அருகில் அமர்ந்தாள். அவளும் மற்றவர்கள் முன்னே 'ஷோ' காட்ட விரும்பவில்லை போலும்.



மனைவியின் செயலில் சற்றுத் தைரியம் வரப்பெற்றவனாய் சக்தீஸ்வரன் அவளது கரத்தினைப் பிடித்துத் தனது கரத்திற்குள் வைத்துக் கொண்டான். சகுந்தலா தனது கரத்தினைக் கணவனது பிடியில் இருந்து உருவி கொள்ள முயல... அவனோ புன்னகையுடன் அவளது கரத்தினை விடாது அவளது தவிப்பினை ரசித்துக் கொண்டிருந்தான்.



"நீங்க தொடுறது எனக்கு அருவருப்பா இருக்கு." அவள் அடிக்குரலில் சீற... அடுத்த நொடி அவன் திகைப்புடன் அவளது கரத்தினை விடுவித்தான்.



சகுந்தலா அவனைத் திரும்பியும் பார்க்காது தனது கரத்தினை விலக்கி கொண்டு சாதாரணமாக மற்றவர்களிடம் பேசலானாள்.



சக்தீஸ்வரன் மனைவியைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான். எல்லோரிடமும் அவள் சிரித்துச் சிரித்துப் பேசி கொண்டிருந்தாள் தான். ஆனால் அவளது சிரிப்பு அவளது கண்களை எட்டவில்லை. அதைக் கணவனான அவன் மட்டுமே கவனித்தான். அவளது கோபம் குறையவில்லை என்பது மட்டும் அவனுக்குப் புரிந்தது. அவளது கோபத்தை எப்படி மலையிறக்குவது என்று அவன் தனக்குள் யோசித்தபடி அமர்ந்து இருந்தான்.



"ரெண்டு நாளா சக்கு அமைதியா இருந்தது பார்த்து மனசுக்கு ரொம்பக் கஷ்டமா இருந்துச்சு. இப்போ தான் எனக்குச் சந்தோசமா இருக்கு." சர்வேஸ்வரன் மருமகளின் புன்னகையைக் கண்டு நிம்மதியுடன் சொன்னான்.



'உங்க மருமகளோட புன்னகையின் பின்னே இருக்கும் பெரும் கோபம், வலி உங்களுக்குத் தெரியாதுப்பா.' சக்தீஸ்வரன் மனதிற்குள் சொல்லி கொண்டான்.



இரவு உணவு முடிந்ததும் சக்தீஸ்வரன் தோட்டத்தில் நடந்து கொண்டு இருந்தான். சகுந்தலா அறைக்குச் சென்று விட்டாள் போலும். அவளின் சத்தம் கேட்கவில்லை. அப்போது பத்மினி அவனை நோக்கி வந்தாள்.



"என்னம்மா, தூங்க போகாம இங்கே வந்திருக்க?" என்று அவன் அக்கறையுடன் தங்கையைக் கண்டு கேட்டான்.



"இனிதான் தூங்கணும் போகணும் அண்ணா. டியூட்டி முடிஞ்சு கொஞ்ச நேரத்துக்கு முன்பு தான் வந்தேன்." என்று விளக்கம் சொன்னவள், "சக்கு எங்கேண்ணா?" என்று கேட்க...



"ரூமில் இருப்பாள்ன்னு நினைக்கிறேன்."



"சக்கு இப்போ ஓகேவாண்ணா?" தங்கை சொன்னது கேட்டு அவனது விழிகள் சுருங்கியது.



"எதுக்குக் கேட்கிற மினி?" அவன் யோசனையுடன் கேட்டான். ஒருவேளை தங்கையிடம் மனைவி தங்களது விசயத்தைச் சொல்லிவிட்டாளோ என்று அவனுள் பதட்டம் எழுந்தது.



"இன்னைக்கு ஹாஸ்பிட்டலில் பெரிய கலவரம் நடந்து போச்சுண்ணா." தங்கை சொல்லவும் தான் அவனுக்கு நிம்மதியானது. விசயம் அவர்களைப் பற்றியது இல்லை என்று...



"என்ன கலவரம்?"



"இன்னைக்கு ஒரு ரேப் கேஸ் வந்துச்சு. நாலஞ்சு பேரு சேர்ந்து ஒரு பெண்ணை..." என்றவள் மேலே சொல்லாது வேதனையுடன் நிறுத்தினாள். தங்கையின் வேதனை அவனுக்கும் புரிந்தது. அவன் அமைதி காத்தான்.



"பொதுவா ரேப் கேஸ் எல்லாம் எங்க ஹாஸ்பிட்டலில் எடுக்க மாட்டாங்க. கவர்மெண்ட் ஹாஸ்பிட்டல்ல தான் எடுப்பாங்க. ஆனா இந்தப் பொண்ணு சேர்மனுக்கு வேண்டிய பொண்ணுங்கிறதால எடுத்துக்கிட்டாங்க."



"ஓ..." என்றவன் மேலே என்ன பேசுவது என்று தெரியாது அமைதியாக இருந்தான்.



"அந்தப் பொண்ணோட நிலையைப் பார்த்து சக்கு பயந்து, அலறி, கத்தி, துடிதுடிச்சு போயிட்டாள். அவளைச் சமாதானப்படுத்துறதுக்குள்ள நான் ஒருவழியாகிட்டேன்." தங்கை சொன்னதும் அவன் திடுக்கிட்டுப் போனான்.



"இதை அண்ணன் கிட்ட ஒரு தங்கையா சொல்றதுக்குச் சங்கடமா தான் இருக்கு. ஆனா ஒரு டாக்டரா என்னால் உங்க கிட்ட இதைச் சொல்ல முடியும். பெண்களோட வலியை ஆண்களான நீங்க புரிஞ்சுக்கணும்ன்னு தான் நான் இதை உங்க கிட்ட சொல்றேன்." என்றவள், "அந்தப் பொண்ணுக்கு அளவுக்கு அதிகமா பிளீடிங் இருந்தது. அவளது இடுப்புக்கு கீழே இருந்த உடை எல்லாம் ரத்தத்தில் குளித்து இருந்தது. அதைக் கண்டு தான் சக்கு பயந்து அலறியது. சக்கு அலறியதை கண்டு எனக்கே பயமா போச்சு. அவளைக் கஷ்டப்பட்டுச் சமாதானப்படுத்தினேன்." என்று சொல்ல...



'ஓ காட்...' அவன் தன் மீதே கோபம் கொண்டு கோபத்தோடு கை முஷ்டியை இறுக்கினான். மனைவி இதைப் பார்த்து விட்டு வந்து கலக்கத்துடன் இருக்கும் போது தான்... அவன் தன்னைப் பற்றிக் கூறியது. நிச்சயம் அது அவளைக் காயப்படுத்தி இருக்கும். அந்தப் பெண்ணை வன்கொடுமை செய்தவர்களோடு அவள் தன்னை ஒப்பிட்டு பார்த்துக் கோபம் கொண்டிருக்க வேண்டும். அப்படித்தான் இருக்க வேண்டும்.



'உண்மையைச் சொல்றதுக்கு நல்ல நேரம் பார்த்த போ.' அவனது மனசாட்சி அவனிடம் சலித்துக் கொண்டது.



"சக்குவை நான் கொண்டு வந்து வீட்டில் விடறேன்னு சொன்னேன். வேண்டாம்ன்னு சொல்லிட்டு அவளே கிளம்பி வந்துவிட்டாள். அதுக்குப் பிறகு அவளுக்கு ஃபோன் பண்ணி பார்த்தேன். அவள் எடுக்கலை. இப்ப தான் டியூட்டியில் இருந்து வந்தேன். சக்கு ஓகே தானே?" என்று தங்கை மீண்டும் கேட்கவும்...



"ஓகே தான் மினி. சக்கு நார்மலா தான் இருக்கிறாள். நீ கவலைப்படாதே. போய்த் தூங்கு. குட்நைட்." அவன் தங்கையை அனுப்பி வைத்து விட்டு நேரே தங்களது அறைக்கு விரைந்தான்.



சக்தீஸ்வரன் அறைக்குள் சென்று பார்த்த போது சகுந்தலா உறங்கி போயிருந்தாள். அதைக் கண்டு நிம்மதி கொண்டவனாய் அவன் அங்கிருந்த சோபாவில் அமர்ந்தான். அவள் கோபப்பட்டுக் கத்தினால் கூட நல்லது தான். ஆனால் அவளது இந்த அமைதி கண்டு தான் அவனுக்குப் பயமாக இருந்தது. அடுத்து என்ன செய்வாளோ? என்று அவன் யோசித்தபடி இருந்தான். தொழிலில் பலவித கணிப்புகளைத் துல்லியமாகக் கணித்து வெற்றி பெறுகிறவனுக்கு... மனைவி பற்றிச் சரியாகக் கணிக்க முடியாது தடுமாறினான். அப்படியே அமர்ந்தபடி மனைவியைப் பார்த்தவாறு சக்தீஸ்வரன் உறங்கி போனான்.



மறுநாள் அதிகாலையில் கண்விழித்த சக்தீஸ்வரன் முதலில் தேடியது மனைவியைத் தான். கட்டிலில் படுத்திருந்த அவளைக் காணவில்லை. அதற்குள் எழுந்து விட்டாளா? என்று நினைத்தபடி அவன் குளியலறைக்குள் புகுந்தான். குளியலறையில் கமழ்ந்த சோப்பின் நறுமணத்தில் மனைவி குளித்து விட்டு தான் சென்று இருக்கிறாள் என்பது புரிந்தது. அவனும் வேகமாகக் குளித்து முடித்து விட்டு, வேறு உடை மாற்றிக் கொண்டு கீழே சென்றான்.



அவன் வரவேற்பறைக்கு வந்த போது யாரும் இன்னமும் எழுந்திருக்கவில்லை. சகுந்தலா மட்டும் பூஜையறையில் இருந்தாள். அவன் அவளை நோக்கி சென்றான். விழிகளை மூடியிருந்த சகுந்தலா கணவனது வரவினை கவனிக்கவில்லை. அவளது விழிகளில் இருந்து கண்ணீர் விடாது வழிந்து கொண்டிருந்தது. மனைவியின் கண்ணீரை கண்டதும் அவன் பதறி தான் போனான். அவனது வலக்கரம் மனைவியின் கண்ணீரை துடைக்க நீண்டு விட்டது. அந்த நொடி 'நீங்க தொடுறது எனக்கு அருவருப்பா இருக்கு' என்று அவள் கூறியது அவனது ஞாபகத்தில் வந்தது. அவனது எழுந்த கரம் தானாகத் தணிந்தது.



"சகி..." அவனது குரலில் அவள் பதறி போய் விழிகளைத் திறந்தாள். தனது குரலை கேட்டால் அவள் கோபமாகத் தானே பார்க்க வேண்டும்... எதற்கு இந்தப் பதற்றம்? அவன் விழிகளைச் சுருக்கியபடி அவளைப் பார்த்தான்.



"சாமியை கூட நிம்மதியா கும்பிட விட மாட்டீங்களா?" அவள் கோபமாய்ச் சிடுசிடுக்க...



'அதானே சகியாவது கோபத்தை விடுவதாவது.' அவன் தனக்குள் சிரித்துக் கொண்டான். இடுக்கண் வருங்கால் நகுக என்று சொன்னது அவனுக்குத் தான் பொருந்தும்.



"அழாதேடி..." அவன் அவளது கண்ணீரை சுட்டிக்காட்டி சொல்ல...



"இதைச் சொல்றதுக்குத் தான் காலங்கார்த்தால என் முன்னாடி வந்து நிற்கிறீங்களா?" அவள் கோபமாய்க் கேட்டுக் கொண்டே கண்ணீரை துடைத்து கொண்டாள்.



"நானே துடைச்சு விட்டு இருப்பேன். ஆனா நீ தான், நான் தொட்டால் அருவருப்பா இருக்குன்னு சொல்லிட்டியே. நான் கையாளாகாதவனாய் உன் அழுகையை வேடிக்கை பார்த்துக்கிட்டு இருக்கேன். இந்த நிலைமை எந்தக் கணவனுக்கும் வர கூடாது." அவன் இயலாமையுடன் சொல்ல...



"அது ஒழுக்கமான கணவனுக்கு... உங்களுக்கு இல்லை." அவள் வெடுக்கென்று பதில் கூற...

 

Sasimukesh

Administrator
சக்தீஸ்வரன் பதில் கூற வரும் முன், "புருசனும், பொண்டாட்டியும் எங்களுக்கு முன்னாடி எழுந்து வந்து பூஜையறையில் என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க? எங்களுக்கே டஃப் கொடுக்கிறீங்களே." என்று சர்வேஸ்வரன் மகன், மருமகளைக் கேலி செய்தபடி அங்கு வந்தான். உடன் உதயரேகாவும் இருந்தாள்.



"கணவன், மனைவியிடையே கரடி மாதிரி வந்துட்டு கேலி வேறா?" சக்தீஸ்வரன் பதிலுக்குத் தகப்பனை கேலி செய்தான்.



வெகுநாட்கள் கழித்துக் கேலி பேசும் மகனை கண்டு சர்வேஸ்வரன் மனம் நிறைந்தான்.



"அப்படி எல்லாம் இல்லை மாமோய். நீங்க வந்து பூஜை பண்ணுங்க." சகுந்தலா விலகி நின்றாள்.



சர்வேஸ்வரன், உதயரேகா இருவரும் பூஜை செய்ய... சிறியவர்கள் இருவரும் கை கூப்பி நின்றனர். பூஜை முடிந்ததும் உதயரேகா கணவனுக்குத் திருநீறு வைத்து விட்டாள். பிறகு சகுந்தலாவிடம் தீபாராதனை தட்டினை கொடுத்தவள்,



"உன் கணவனுக்கு வச்சு விடு." என்று புன்னகையுடன் சொல்ல...



"அது வந்து அத்தைம்மா..." என்று சங்கடத்துடன் நெளிந்தபடி சகுந்தலா கணவனைப் பார்த்தாள்.



"இப்போ என்ன செய்யப் போற? நான் உன்னை மாதிரி அருவருப்பா இருக்குன்னு எல்லாம் சொல்ல மாட்டேன். நீ என்னைத் தொட்டால் நான் சந்தோசம் தான் படுவேன்." சக்தீஸ்வரன் மனைவியின் காதில் ரகசியமாய் முணுமுணுத்தான்.



"அத்தைம்மா, நான் வீட்டுக்கு விலக்கு." என்று அவசரமாகக் கூறி விட்டு சகுந்தலா வேகமாக அந்த இடத்தை விட்டு அகன்று விட்டாள்.



மருமகள் சொன்னது கேட்டு உதயரேகா திகைத்து நிற்க... சர்வேஸ்வரனுக்குச் சகுந்தலா கூறியது கேட்கவில்லை போலும்.



"சக்கு என்ன சொல்லிட்டு போகிறாள்?" என்று சர்வேஸ்வரன் புரியாது பார்த்தான்.



சக்தீஸ்வரனுக்கு ஐயோ என்றாகி போனது. எந்தக் காரணம் சொல்ல வேண்டும் என்கிற விவஸ்தை இல்லாது போய்விட்டது. அவன் மனதிற்குள் மனைவியைத் திட்டி கொண்டான்.



"ம்மா, எனக்கும், சக்குவுக்கும் சின்ன ஊடல். அந்தக் கோபத்தில் தான் அவள் இப்படிச் சொல்லிவிட்டு போகிறாள். அவளுக்குப் பொய் சொல்லி கூடச் சமாளிக்கத் தெரியலை. அந்தளவுக்கு அவள் வெகுளி." அவன் சொன்னது கேட்டு உதயரேகா அமைதியாகி விட்டாள்.



சர்வேஸ்வரன் சற்று நகர்ந்ததும் உதயரேகா மகனை அழைத்தாள். அவனும் என்னவென்று அன்னையைப் பார்த்தான்.



"நீ சந்தோசமா இருக்கியா சக்தி?" அன்னை அவனது கன்னத்தை வாஞ்சையுடன் வருடியபடி கேட்க...



"என் சந்தோசத்துக்கு என்ன குறைம்மா? இந்த உலகத்தில் சந்தோசமானவன் நான் மட்டுமே." அவன் கர்வம் பொங்க சொல்ல...



"அதுக்கு இல்லை சக்தி. சக்குவை நினைத்து..." என்றவள் மேலே சொல்லாது மகனை கேள்வியாகப் பார்த்தாள்.



"எங்களுக்குக் குழந்தையே வர போகிறது. இப்போ போய் இந்தச் சந்தேகம் எல்லாம் தேவை தானா? அவள் எனக்கு நல்ல மனைவியாகத் தான் இருக்கிறாள்." அவன் மனைவியை விட்டு கொடுக்காது தாங்கி பேசினான்.



"நீ சந்தோசமா இருந்தால் எனக்குமே சந்தோசம் தான்." என்று கூறிய உதயரேகா பின்பு மகனது கரத்தினைப் பிடித்துக் கொண்டு,



"இடையில் நிறையக் கெட்ட விசயங்கள் நடந்து முடிஞ்சிருச்சு. எல்லாமே உன்னைக் கெட்டவனா, குற்றாவளியா காட்டுச்சு. ஆனா இப்போ வரை என்னால் அதை எல்லாம் நம்ப முடியவில்லை. என் மகன் கெட்டவன் இல்லைன்னு என்னோட ஆழ்மனசு சொல்லுது. என்ன நடந்து இருந்தாலும் நீ அதை எல்லாம் மறந்துட்டு சக்கு கூடச் சந்தோசமா வாழணும். அவளுக்கு வெளி உலகம் அதிகம் தெரியாது. நீ தான் அவளை ஒரு குழந்தை மாதிரி பார்த்துக்கணும்." என்று வேண்டி கேட்டுக் கொள்ள...



"இதை நீங்க சொல்லவும் வேண்டுமா? சக்கு என்னோட உயிர்ம்மா. என்னோட முதல் குழந்தை அவள் தான். நீங்க எதைப் பற்றியும் குழப்பிக்காம நிம்மதியா இருங்க." அவன் அன்னைக்கு ஆறுதல் கூறினான். மகனது ஆறுதல் வார்த்தைகளில் உதயரேகா நிம்மதி கொண்டாள்.



சக்தீஸ்வரன் அறைக்கு வந்தவன் நேரே சகுந்தலாவிடம் சென்று நின்றான். அவள் கேள்வியாக அவனை ஏறிட்டு பார்த்தாள்.



"லூசு, என்ன பேசிட்டு வந்திருக்க?" அவன் எடுத்ததுமே அவளைக் கடிந்தான்.



"இங்கே பாருங்க... லூசுன்னு சொல்லுற வேலை எல்லாம் வச்சுக்காதீங்க. அப்புறம் நான் மனுசியா இருக்க மாட்டேன்." அவள் கோபத்தோடு எகிற...



"சரிங்க மேடம்... லூசுன்னு சொல்லலை. ஓகேவா?" உடனே அவன் பணிவுடன் சொல்ல...



அதற்கும் சகுந்தலா அவனை முறைத்தாள்.



"புத்திசாலி மேடம், நீங்க என்ன பேசிக்கிட்டு வந்திருக்கீங்கன்னு உங்களுக்குப் புரிஞ்சதாங்க." அவன் கேலி குரலில் கேட்க... அவள் புரியாது விழிகளைச் சுருக்கினாள்.



"குழந்தை உண்டாகி இருக்கும் போது எப்படிடி பீரியட்ஸ் வரும்?" என்றவனைக் கண்டு அவள் திகைப்புடன் பார்த்தாள்.



"அதான் எனக்கு மூணு மாசமா வரலையா?" அவள் பேவென விழிக்க...



"வயித்தில் பாப்பா இருக்கும் போது பீரியட்ஸ் வராது." அவன் எடுத்து சொல்லவும்... அவள் அமைதியாகி விட்டாள். அவளுக்கு மாத விலக்கு மாதா மாதம் சரியாக வராது. அதனால் அவள் இதைப் பற்றி யோசிக்கவில்லை.



"இனி இது மாதிரி வெளியில் பேசாதே. அம்மா சந்தேகப்பட்டுக் கேட்டாங்க. நான் சமாளிச்சிட்டு வந்துட்டேன்." என்றவனைக் கண்டு அவளது முகம் கசங்கி போனது. அவள் தலையைக் குனிந்து கொண்டாள்.



"சகி, நீ தலைகுனியற அளவுக்கு ஒண்ணும் நடக்கலை. கணவன், மனைவிக்குள்ள இப்படிப் பேசுறது எல்லாம் சகஜம்." அவன் சொன்னதும் அவள் விலுக்கென்று அவனை நிமிர்ந்து பார்த்தாள்.



"நீ எனக்கு முதல் குழந்தைடி. என்னோட பொண்ணுக்கு இது பத்தி நான் சொல்லி கொடுக்க மாட்டேனா? அது மாதிரி தான் நீயும் எனக்கு..." அவன் கனிவுடன் அவளைக் கண்டு சொன்னான்.



அந்தக் கணம் பெண்ணவள் விழிகளில் வந்து போன உணர்வினை படிக்கும் அளவிற்கு ஆணவனுக்குத் திறமை இல்லை போலும்.



"நான் ஒண்ணும் குழந்தை இல்லை. நானும் அம்மாவாகப் போகிறேன்." அவள் வெடுக்கென்று கூறிக் கொண்டு துள்ளி எழுந்தாள்.



"பார்த்துடி, என் புள்ள இப்பவே வெளிய வந்துர போகுது." அவன் அவளைக் கண்டு கேலி பேசினான்.



மனைவி கோபமாக இருந்தாலும் தன்னிடம் சகஜமாகப் பேசுவது கண்டு அவனுக்குச் சந்தோசமாக இருந்தது. அதற்கும் அவனுடைய மனைவி முறைத்துக் கொண்டு இருந்தாள்.



"நேத்து ஹாஸ்பிட்டலில் நடந்ததை மினி என் கிட்ட சொன்னாள். உன்னோட கோபத்துக்குக் காரணம் அது தானா?" அவன் சொன்னது கேட்டு அவள் திடுக்கிட்டு அவனைப் பார்த்தாள்.



"உன் புருசன் அந்தளவுக்குக் கெட்டவன் இல்லை. பிடிக்காத பெண்ணின் கையைப் பிடிச்சு இழுத்து ரேப் பண்ணுறதுக்கு. என்னைய மாதிரி விரும்பி வர்ற பொண்ணுங்களைத் தான் நான் தொட்டேன். நீ கோபப்படுற அளவுக்கு நான் கெட்டவன் இல்லை." அவன் சொல்லி கொண்டே போக...



"ஐயோ, இது மாதிரி பேசுறதை நிறுத்துறீங்களா? எனக்கு ரத்தத்தோட இருந்த அந்தப் பொண்ணு தான் ஞாபகத்துக்கு வர்றா. எனக்குத் தலை சுத்துற மாதிரி இருக்கு." என்றவள் தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்து விட்டாள்.



"முதல்ல இந்தத் தண்ணியைக் குடி." அவன் பதட்டத்துடன் அங்கிருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்துக் கொடுத்தான். அவளும் மறுக்காது குடித்தாள்.



"இப்ப ஓகேவா?"



"ம்..." என்றவள் சோபாவில் சாய்ந்தமர்ந்து விழிகளை மூடி கொண்டாள்.



வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் மனைவியின் மனதினை மிகவும் பாதித்து இருக்கிறாள் என்பதை உணர்ந்த அவன் அமைதியாக விலகி சென்று விட்டான்.



காலை உணவு முடித்துச் சக்தீஸ்வரன் வெளியில் கிளம்ப... சகுந்தலாவும் வெளியில் செல்வதற்காக அங்கு வந்து நின்றாள். அவளைக் கண்டு புருவங்களைச் சுருக்கியவன்,



"மினி கூடப் போகலையா? சரி வா... நான் உன்னை ஹாஸ்பிட்டலில் இறக்கி விடுறேன்." என்று அவன் கூற...



"இல்லை வேண்டாம். நானே போயிக்கிறேன்." என்றவள் வாசலை நோக்கி நடக்க...



காரை விட்டு இறங்கிய சக்தீஸ்வரன் அவளின் பின்னேயே சென்றான்.



"சகி, எப்படிப் போகப் போற?"



"ஃகால் டாக்சி புக் பண்ணி இருக்கேன்." என்றவளை கண்டு,



"இத்தனை கார் இருக்கும் போது நீ எதுக்கு ஃகால் டாக்சியில் போகணும்?" அவன் கேட்கும் போதே வாடகை கார் வந்துவிட்டது.



கணவனுக்குப் பதில் சொல்லாது காரில் ஏறியவள் கார் கண்ணாடியை இறக்கிவிட்டபடி, "என் பின்னாடி வர்றது, வேவு பார்க்கிறது எதுவும் இருக்கக் கூடாது." என்று மிரட்டலாய் கூறி விட்டுக் கார் கண்ணாடியை ஏற்றி கொண்டாள்.



மனைவி சொன்ன பிறகே அவன் அந்தக் காரின் எண்ணை குறித்து வைத்துக் கொண்டான். அவள் சொன்னதை நினைத்து அவன் சிரித்துக் கொண்டே தனது காரிலேறி சென்று விட்டான்.



அடுத்த ஒரு மணி நேரத்திற்குப் பிறகு சகுந்தலா அந்தப் பெரிய மருத்துவமனையில் இருந்து வெளியில் வந்தாள். அன்று சக்தீஸ்வரன் அவளைப் பரிசோதிப்பதற்காக அழைத்துச் சென்றானே... அந்த மருத்துவமனை தான் இது...



சகுந்தலா உயிரற்ற உடலாய் எங்கோ வெறித்த பார்வையுடன் இலக்கின்றிக் கால் போன போக்கில் நடந்தாள்.



"யாரை குற்றம் சொல்லி நோவதம்மா,

என்னை ஏன் படைத்தாய் இறைவனே???

எல்லோரையும் போல் நானில்லையே,

ஆம், நானில்லையே... தனித்துத் தெரியும்

நான் தனியாகி போனேனோ?

மக்குவுக்குக் காதல் எதற்கு?

முட்டாளுக்கு வாழ்க்கை எதற்கு?

சாபமாகி போன நான் கருவிலேயே

அழிந்திருக்கக் கூடாதா?

என்னை ஏன் படைத்தாய் இறைவனே???"



தொடரும்...!!!
 

Sasimukesh

Administrator
அத்தியாயம் : 39



"சக்தி, சக்குவை காணோம்ப்பா. எங்களுக்குப் பயமா இருக்கு. நீ உடனே கிளம்பி வா." உதயரேகா மகனுக்கு அழைத்துப் பதறினாள்.



காலையில் வீட்டை விட்டு சென்ற சகுந்தலா மாலையாகியும் இன்னமும் வீடு வந்து சேரவில்லை. பத்மினியிடம் கேட்டால்... சகுந்தலா இங்கு வரவே இல்லை என்கிறாள். அதனால் தான் உதயரேகாவுக்குப் பயம் பிடித்துக் கொண்டது. உடனே மகனுக்கு அழைத்து விசயத்தைச் சொல்லி விட்டாள்.



அன்னை சொன்ன அடுத்த நொடி சக்தீஸ்வரன் அலுவலகத்தில் இருந்து உடனே கிளம்பி விட்டான். அவனுக்குமே பதற்றம் தொற்றிக் கொண்டது. அவனது கைவிரல் அலைப்பேசியில் இருந்து மனைவிக்கு அழைப்பு எடுத்துக் கொண்டே இருந்தது. அவளது அலைப்பேசி அணைத்து வைக்கப்பட்டு இருந்தது போலும். அழைப்பு செல்லவில்லை... அவனுள் பயம் எழுந்தது. அப்போது தான் அவனுக்குக் காலையில் அவள் சென்ற காரின் எண்ணை தான் குறித்து வைத்தது ஞாபகத்தில் வந்தது. அவன் உடனே அந்தக் கார் ஓட்டுநரின் அலைப்பேசி எண்ணை கண்டுபிடிக்கச் சொல்லி தனது உதவியாளருக்கு உத்தரவு போட்டான். அவரும் அவன் சொன்னதைக் கேட்டு உடனே கண்டுபிடித்துக் கொடுத்தார்.



சக்தீஸ்வரன் அந்தக் கார்க்காரனுக்கு அழைப்பு விடுத்தான். மறுபக்கம் அவனும் அழைப்பை எடுத்தான். சக்தீஸ்வரன் தாங்கள் வசிக்கும் பகுதியை குறிப்பிட்டுக் காலையில் சவாரிக்கு வந்ததை அவனுக்கு நினைவுப்படுத்தினான். அது பணக்காரர்கள் அதிகம் வசிக்கும் பகுதி. அங்குப் பெரும்பாலும் அந்தக் கார்க்காரன் சவாரிக்கு போவது கிடையாது. இன்று காலையில் தான் அவன் சவாரிக்காக அங்குச் சென்றது. அதுவும் அந்தப் பகுதியில் இருந்து வந்த ஒரே சவாரி அது. அதனால் கார்க்காரனுக்குச் சகுந்தலாவை நன்கு ஞாபகம் இருந்தது.



"காலையிலேயே அவங்களை ஹாஸ்பிட்டலில் இறக்கி விட்டுட்டேனே சார்." என்றதும் சக்தீஸ்வரன் அழைப்பை துண்டித்து விட்டான்.



கார்க்காரன் மருத்துவமனை என்றதும் சக்தீஸ்வரன் தங்கை வேலை பார்க்கும் மருத்துவமனை என்று நினைத்துக் கொண்டான். அதனால் அவன் இந்த விசயத்தில் சந்தேகம் கொள்ளவில்லை. மருத்துவமனை சென்ற சகுந்தலா எங்கே சென்றாள்? இது தான் அவனது மூளையைப் போட்டு குடைந்து கொண்டிருந்தது.



"என் மேல் கோபம் இருந்தால்... என்னைத் தண்டித்து விடு. இப்படிக் காணாது போய் வாழ்க்கை முழுவதும் நீ என்னைத் தண்டித்து விடாதே." அவன் புலம்பி கொண்டே காரை ஓட்டினான்.



வேகமாக வீடு வந்து சேர்ந்த சக்தீஸ்வரனுக்கு எல்லோரின் சோக முகம் கண்டு பதற்றமாக இருந்தது.



"சக்கு வந்துவிட்டாளா?" அவன் பதட்டத்தை மறைத்துக் கொண்டு கேட்க...



"இன்னும் இல்லைடா... அவளோட ஃபோனுக்குக் கூப்பிட்டாலும் எடுக்கவில்லை. ஒருவேளை அவளது ஃபோனில் சார்ஜ் இல்லையோ?" உதயரேகா பயத்துடன் சொன்னாள்.



சக்தீஸ்வரன் ஓய்ந்து போய் அமர்ந்தான்.



"கண்டுபிடிச்சிடலாம் சக்தி. கவலைப்படாதே." எல்லோரும் ஒரே விசயத்தை மாற்றி மாற்றிச் சொன்னார்கள்.



அதிசயமாக அவர்கள் யாரும் அவனைக் குற்றம் சாற்றவில்லை. அவன் மீது பழி சுமத்தவில்லை. எப்போதும் அவனிடம் எகிறிக் கொண்டிருக்கும் நாராயணன் கூட அவனைப் பாவமாகப் பார்த்தான். இப்போது எல்லோரும் அவனை நம்பினர்.



"சக்குவோட ஃபோன் நம்பரை வைத்து அவளோட லோகேசனை கண்டுபிடிக்கலாம் இல்லையா?" நாராயணன் சக்தீஸ்வரனிடம் கேட்டான்.



"கண்டுபிடிக்கலாம் தான். ஆனால் அவளது ஃபோனில் சார்ஜ் இல்லையே." சக்தீஸ்வரன் இயலாமையுடன் அவனைப் பார்த்தான்.



"கடைசியா எங்கே காட்டுதுன்னு பாரு சக்தி." நாராயணன் அவனிடம் சொல்லவும்...



சக்தீஸ்வரன் தனது அலைப்பேசியை எடுத்து அதற்கு என்று இருக்கும் அப்பின் உள்ளே சென்று பார்த்தான். இறுதியாக அவளது அலைப்பேசி காலையில் அவள் வீட்டில் இருந்து கிளம்பிய நேரத்தை தான் காட்டியது. அப்படி என்றால் காரில் ஏறியதும் சகுந்தலா அலைப்பேசியை அணைத்து விட்டாளா? எல்லாம் திட்டம் போட்டு தான் செய்து இருக்கிறாளா? அவனுக்கு ஐயோவென்றாகி போனது.



"என்னாச்சு சக்தி?" நாராயணன் கேட்கவும்,



"உன் தங்கச்சி ரொம்பப் புத்திசாலியாகி விட்டாள். காலையில் இங்கே இருந்து கிளம்பும் போதே ஃபோனை அணைத்து வைத்து விட்டாள். ஏன்டா இப்போ எல்லாம் அவள் இப்படிப் புத்திசாலித்தனமா யோசிக்கிறாள்?" சக்தீஸ்வரன் ஆதங்கத்துடன் கேட்டான்.



நாராயணன் என்ன பதில் கூற முடியும்? அப்போதாவது பத்மினி அண்ணனிடம் சகுந்தலா இன்று மருத்துவமனைக்கு வரவில்லை என்பதைச் சொல்லி இருக்கலாம். பெற்றோர் அவனிடம் கூறி இருப்பார்கள் என்று நினைத்தவள்... சகுந்தலா காணாது போனது பற்றிக் கவலை கொண்டாள்.



"கொஞ்சமாவது பொறுப்பு இருக்கா? கல்யாணமாகியும் இப்படிப் பொறுப்பு இல்லாம இருக்கிறாளே. ஒரு ஃபோன் போட்டு எங்கே இருக்கேன்னு சொல்லுவோம்ன்னு நினைப்பு இருக்கா?" விஜயா அழுது கொண்டே மகளைச் சாடினார். வெகுளி மகள் எங்கேயாவது போய்த் தவறான இடத்தில் மாட்டி கொள்ளக் கூடாதே என்கிற பயம் அவருக்கு...



சக்தீஸ்வரன் அவரை ஒரு பார்வை பார்த்ததும் அவர் வாயை மூடி கொண்டார்.



"சக்கு எங்கேயும் போயிருக்க மாட்டாள். எப்பவும் போல் தண்ணி தொட்டி கீழே படுத்து தூங்கி கொண்டு இருப்பாள்." என்ற சக்தீஸ்வரன் யாருடைய பதிலையும் எதிர்பார்க்காது மொட்டை மாடிக்கு ஓடினான்.



அங்கேயும் பார்த்தாயிற்றே... வீட்டினர் சொல்வதற்கு முன் அவன் மாடிக்கு சென்று இருந்தான்.



சக்தீஸ்வரன் மொட்டை மாடிக்கு வந்து தண்ணி தொட்டி கீழே பார்த்த போது... அந்த இடம் சகுந்தலா இல்லாது வெறுமையாகக் காட்சி அளித்தது. அவன் சக்தி வற்றினார் போன்று அந்த இடத்தில் மண்டியிட்டு அமர்ந்தான்.



எப்போதும் தண்ணி தொட்டி கீழே ஒளிந்து கொள்பவளை அவன் தேடி கண்டுபிடிக்கும் போது அவள், "கேப்டன், கண்டுபிடிச்சிட்டீங்களா?" என்று ஈயென்று பல்லை காட்டுவாள். அந்தக் காட்சி இப்போதும் மனதில் தோன்றி அவனைக் கண்கலங்க செய்தது.



ஒவ்வொரு முறை அவள் காணாது போகும் போதும், அவளைக் காணாது அவன் தவித்தது அவனுக்கு மட்டும் தானே தெரியும். அதனால் அவன் கோபம் கொண்டு அவளது தலையில் கொட்டுவான்.



"வலிக்குது கேப்டன்." என்று சிணுங்கி கொண்டே தலையைத் தடவி கொண்டு தண்ணி தொட்டி கீழே இருந்து வெளியில் வரும் சகுந்தலாவை... இப்போதும் அவனது மனம் எதிர்பார்த்தது. ஆனால் அவள் தான் அங்கே இல்லையே.



"எங்கேடி இருக்க?" அவன் அண்ணாந்து வானத்தைப் பார்த்துக் கத்தினான்.



சக்தீஸ்வரன், சர்வேஸ்வரன், நாராயணன், ஆதித்யா என்று எல்லோரும் தனித்தனியே சகுந்தலாவை தேடி அலைந்தனர். அவர்களுக்குத் தெரிந்து அவள் போகும் இடங்களில் எல்லாம் தேடி பார்த்து களைத்து விட்டனர். எல்லோரும் சோர்வுடன் வீட்டிற்குத் திரும்பினர். காவல்நிலையத்தில் புகார் அளித்து விடலாம் என்று சர்வேஸ்வரன் சொல்ல... எல்லோருக்குமே அது தான் சரியென்று தோன்றியது.



சக்தீஸ்வரன் தளர்ந்த நடையுடன் தங்களது அறைக்குள் நுழைந்தான். அவனுக்கு விவரம் தெரிந்த வயதில் இருந்தே இது அவனுடைய அறை தான். இந்த அறையில் அவனது தனிச் சாம்ராஜ்ஜியம் மட்டுமே. இதில் அவன் தான் ராஜா. அப்படித்தான் இதுவரை இருந்து வந்தது. ஆனால் இன்றோ அவனது அறை ராணி இல்லாத காரணத்தால் களையிழந்து காணப்பட்டது. அவனுமே அந்த அறை போன்றே களையிழந்து காணப்பட்டான்.



சக்தீஸ்வரன் நேரே வந்து சகுந்தலா படுத்திருந்த இடத்தில் படுத்து அவளது தலையணையில் முகத்தைப் புதைத்துக் கொண்டான். தலையணை உறையின் சலவை மணத்தை மீறி அவளது நறுமணம் அதில் வீசியது. அவன் ஆழ்ந்து சுவாசித்து அந்த நறுமணத்தைத் தன்னுள் நிரப்பிக் கொண்டான். ஏனோ அவளையே தன்னுள் அடக்கியது போன்று ஒரு பரவசம்.



"என்னைத் தவிக்க விட்டுட்டு எங்கேடி போன?" அவனது விழிகளில் இருந்து நீர் கசிந்து தலையணையை நனைத்தது. அவன் அதை உணர்ந்தாலும் தடுக்கவில்லை. மனதின் துக்கம் கண்ணீராக வெளியேறியது.



சகுந்தலாவுடனான அவனது நினைவுகளை அவன் இன்னிசையாய் மீட்டி கொண்டு இருந்தான். சிறு வயதில் ஆரம்பித்து இப்போது வரை பழைய நினைவுகளை அவன் அசை போட்டுக் கொண்டிருந்தான். அவனது வலி மிகுந்த மனதிற்கு அவளது நினைவுகள் மட்டுமே சுகத்தைக் கொடுத்தது.



தீவில் இருந்த போது பிருந்தா வருணின் பிறந்தநாளுக்குச் சர்பரைஸ் பார்ட்டி வைத்து கணவனை இன்பத்தில் திக்குமுக்காட வைத்து விட்டாள். அதைக் கண்டு சகுந்தலா அவனிடம்,



"கேப்டன், எனக்கும் சர்ப்ரைஸ் பார்ட்டி கொடுங்களேன்." என்று செல்லமாய்க் கெஞ்ச...



"பிருந்தா தான் வருணுக்குச் சர்ப்ரைஸ் பார்ட்டி கொடுத்தது. அப்படிப் பார்த்தால் நீ தான்டி எனக்குச் சர்ப்ரைஸ் பார்ட்டி கொடுக்கணும்." அவன் சிரித்துக் கொண்டே சொல்ல...



"போங்க கேப்டன்... உங்களுக்கு என் மேல் பாசமே இல்லை." என்று அவள் கோபித்துக் கொண்டாள்.



'பாசம் இல்லைடி. நிறையக் காதல் இருக்கிறது.' என்று அவன் மனதிற்குள் சொல்லி கொண்டான்.



அன்று மாலையே சக்தீஸ்வரன் மனைவிக்குச் சர்ப்ரைஸ் பார்ட்டி கொடுப்பதற்கான ஏற்பாட்டினை செய்து விட்டான். அவன் எப்போதும் போல் அவளைப் பள்ளியில் இருந்து அழைத்து வந்தான். அவனது உதடுகளில் ரகசிய புன்னகை உறைந்திருந்தது. நம் சக்கு பேச்சுச் சுவாரசியத்தில் கணவனது ரகசிய புன்னகையைக் கவனிக்கத் தவறி விட்டாள்.



மாலை மயங்கி இருள் கவிழ்ந்த நேரம் சக்தீஸ்வரன் மனைவியின் விழிகளை மூடி கடற்கரைக்கு அழைத்துச் சென்றான்.



"அன்னைக்கு மாதிரி கலர் கோழிக்குஞ்சுகளைக் காட்ட போறீங்களா?" அவள் ஆர்வத்துடன் ஆர்ப்பரிக்க...



"இல்லை..." என்று அவன் மறுப்பாய் தலையசைத்தான்.



அதுவா, இதுவா என்று அவள் ஒவ்வொன்றாய் கேட்டு அவனைப் படுத்தி எடுக்க...



"சர்ப்ரைஸ்... சொல்ல முடியாது." என்று அவன் கூறியதை கேட்டும்... வேதாளம் விக்கிரமாதித்தனிடம் கேட்டது போன்று விடாது கேள்விகளைக் கேட்டுக் கொண்டே அவள் வந்தாள்.



"சர்ப்ரைஸ்..." என்றபடி அவன் அவளது விழிகள் மீதிருந்து கரங்களை எடுக்க...



"என்ன கேப்டன், ஒண்ணுமே காணோம்." அவள் இருள் சூழ்ந்த இடத்தைச் சுற்றும் முற்றும் பார்த்தபடி கேட்டாள்.



பின்பு, "கொஞ்சம் பயமா இருக்கு." அவள் அவனது கரத்தினைப் பயத்துடன் பிடித்துக் கொண்டாள்.
 

Sasimukesh

Administrator
அப்போது சக்தீஸ்வரன் அங்கிருந்த மேசையில் வீற்றிருந்த ஒரு பொருள் மீதிருந்த துணியை அகற்றினான். அதைக் கண்டதும் சகுந்தலாவின் விழிகள் வியப்பில் விரிந்தது. ஒரு கண்ணாடி குடுவையின் உள்ளே மின்மினி பூச்சிகள் அடைத்து வைக்கப்பட்டு இருந்தது. அந்த இருள் சூழ்ந்த சூழலில் குடுவையில் இருந்த மின்மினி பூச்சிகள் மேசை விளக்கு போன்று அங்குப் பிரகாசமாக வெளிச்சத்தைப் பரப்பியது. அந்த வெளிச்சத்தில் சக்தீஸ்வரன் மனைவியின் முகத்தைக் காதலோடு பார்த்தான். அவளது முகத்தில் தோன்றிய உணர்வுகளைப் படித்து அவன் பரவசம் கொண்டான்.



"அச்சோ, அழகு மின்மினி பூச்சிகள்... எனக்கு ரொம்பப் பிடிக்கும்." என்று குதூகலித்தவள் அந்தக் கண்ணாடி குடுவையைக் கையில் எடுத்து பார்த்தாள்.



சகுந்தலா அந்தக் குடுவையை முத்தமிட... அவன் ஏக்கத்துடன் மனைவியைப் பார்த்திருந்தான்.



"கேப்டன், பாவம் மின்மினி பூச்சி... வெளியில் பறக்க விடலாமா?" அவள் பாவம் போல் கேட்க...



"உன் விருப்பம்..." அவன் கூறிய அடுத்த நொடி அவள் குடுவையைத் திறந்து விட... மின்மினி பூச்சிகள் விடுதலை அடைந்து சுதந்திரமாகப் பறக்க ஆரம்பித்தது.



சக்தீஸ்வரன் அங்கிருந்த மெழுகுவர்த்தியை பற்ற வைத்தான். சகுந்தலா அவனைக் கவனிக்கவில்லை. சுற்றிலும் பறக்கும் மின்மினி பூச்சிகளை மகிழ்ச்சியோடு பார்த்து கொண்டிருந்தாள்.



"சக்கு..." என்ற குரலில் அவள் திரும்பி பார்க்க...



சக்தீஸ்வரன் மண்டியிட்டு அவள் முன்னே சிகப்பு ரோஜா பூக்கள் நிறைந்த பூங்கொத்தை நீட்டி கொண்டிருந்தான். அவனது மனம் நிறையக் காதல் இருந்த போதும் அவன் அவளிடம் காதலை சொல்லவில்லை.



"கேப்டன், எனக்கு இது எல்லாம் பிடிக்கும்ன்னு உங்களுக்கு எப்படித் தெரியும்?" என்று கூறியபடி அவள் அந்தப் பூங்கொத்தை வாங்கிக் கொண்டாள்.



அன்று மின்மினி பூச்சி காட்டுவதாகக் கூறி அவளை அழைத்துச் சென்று ஏமாற்றியது, அன்று அவள் பூங்கொத்துக் கொடுத்த போது வாங்காது இருந்தது என்று... அனைத்திற்கும் சேர்த்து இன்று அவன் பிராயச்சித்தம் தேடி கொண்டான்.



"பூங்கொத்து மட்டும் தானா? இந்தக் கேப்டன் இல்லையா?" அவன் ஏக்கத்துடன் அவளைப் பார்த்தான்.



"உங்களைக் கொஞ்சுண்டு பிடிக்கும்." அவள் பூக்களின் மீது தலையைச் சாய்த்துக் கொண்டு மூக்கை சுருக்கியபடி கூற... அவளது அந்த அழகில் அவன் சொக்கி தான் போனான்.



பழையதை நினைத்துக் கொண்டிருந்த சக்தீஸ்வரன் அந்த நாள் ஞாபகத்தில், "ஆனா எனக்கு உன்னைய ரொம்பப் பிடிக்கும்டி சகி." என்று உருகி கரைந்தான். அதைக் கேட்க அவள் தான் அங்கில்லை.



***************************



"கரண், காரை நிறுத்துங்களேன்." தர்சனா காரை ஓட்டி கொண்டிருந்த கணவன் கரணிடம் திடுமெனக் கூறினாள்.



ஆம், ஒரு மாதத்திற்கு முன்னர்த் தான் இரு வீட்டாரும் இணைந்து இருவருக்கும் திருமணத்தை முடித்து வைத்திருந்தனர். திருமணத்திற்குப் பிறகு இருவருமே குடும்ப வாழ்க்கையின் அர்த்தம் உணர்ந்து வாழ்ந்தனர். திருமணத்திற்கு முன் இருவருமே நிறையத் தவறுகள் செய்திருந்தார்கள் தான். ஆனால் இப்போது மனம் திருந்தி அவளுக்காக அவன், அவனுக்காக அவள் என்று நிறைவான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். காலம் யாரை எப்படி மாற்றும் என்பதை யாரும் அறியார்?



"இங்கே எதுக்குத் தர்சி?" கரண் புரியாது கேட்டாலும்... மனைவி சொன்னதுக்காகக் காரை நிறுத்தினான்.



தர்ஷனா கார் கதவை திறந்து கொண்டு கீழே இறங்கி காருக்கு பின்னே செல்ல... அவனும் புரியாது காரை விட்டு இறங்கி அவளின் பின்னே சென்றான்.



"ஹேய், நீ சக்கு தானே... இங்கே என்ன பண்ணுற சக்கு?" தர்சனா அங்கு நடந்து சென்று கொண்டிருந்த சகுந்தலாவிடம் கேள்வி கேட்க...



சகுந்தலாவோ தர்சனாவின் கேள்விக்குப் பதில் அளிக்காது அவளைத் தாண்டி சென்று கொண்டிருந்தாள். தர்சனா எட்டி சென்று சகுந்தலாவை பிடித்து நிறுத்தினாள். சகுந்தலாவோ எங்கோ வெறித்த பார்வையுடன் நின்றிருந்தாள். அவள் தான் இந்த உலகத்தில் இல்லையே.



மருத்துவமனையில் இருந்து வெளியில் வந்த சகுந்தலா கால் போன போக்கில் நடந்து இங்கே வந்திருந்தாள். இந்த இடம் நகரத்து நெருக்கடியை தாண்டி ஊருக்கு ஒதுக்குப்புறமாய் இருக்கும் இடம். தர்சனா, கரண் இருவரும் கரணின் உறவினர் ஒருத்தரை பார்த்துவிட்டு திரும்பி வந்து கொண்டிருந்தனர். அப்போது தான் எதிர் திசையில் இருந்து சகுந்தலா வந்து கொண்டிருந்ததைத் தர்சனா கவனித்து விட்டாள். கரணுக்கு சகுந்தலாவை அடையாளம் தெரியவில்லை.



"யார் இந்தப் பெண்?" சகுந்தலாவின் தோற்றத்தை கண்டு கரண் முகத்தைச் சுளித்தான். சாதாரணத் தோற்றதுடன் இருக்கும் சகுந்தலா இப்போது வெயிலில் அலைந்து கருத்து மிகவும் சுமாரான தோற்றத்துடன் காணப்பட்டாள். அதைக் கண்டு தான் அவன் முகத்தைச் சுளித்தது.



"இவள் தான் சக்தியோட வொய்ப்." என்றதும் கரணின் பார்வை சற்று மரியாதையாக மாறியது. தர்சனா சக்தி, சக்தி என்று பிதற்றுவது தான் அவனுக்குப் பிடிக்காது. மற்றபடி அவனுக்குச் சக்தீஸ்வரன் மீது மரியாதை இருக்கிறது தான்.



"இந்தப் பெண் ஒன்றும் உன்னை விட அழகில்லையே?" கரண் யோசனையாகச் சகுந்தலாவை பார்த்தான். கணவன் கேட்ட கேள்வியைத் தான் அவள் தினமும் தனக்குள் கேட்டு கொண்டிருக்கிறாள். பதில் தான் கிடைத்த பாடில்லை.



தர்சனா கணவனுக்குப் பதில் கூறாது சகுந்தலா புறம் திரும்பி, "சக்கு, இங்கே என்ன பண்ணிக்கிட்டு இருக்க?" என்று மீண்டும் கேட்க... சகுந்தலா பதில் கூறாது வெறித்திருக்க...



"ஏதோ பிரச்சினைன்னு நினைக்கிறேன் கரண். இவளை இப்படியே விட்டுட்டுப் போறது நல்லது இல்லை. நாம இவளை கூட்டிட்டு போய் சக்தி வீட்டில் விட்டுட்டு வந்திரலாம்." தர்சனா கூறவும் கரண் மறுக்கவில்லை. காலம் கெட்டுக் கிடக்கிறது. பெண்ணவளை தனியே விட்டு விட்டு செல்ல அவனுக்கும் மனம் வரவில்லை. அதிலும் பெண்ணவள் இருக்கும் நிலை அவனுக்குமே பயமாக இருந்தது.



"சக்கு, காரில் ஏறு." கார் கதவை திறந்து வைத்தபடி தர்சனா கூறவும் தான்... சகுந்தலா உணர்வு பெற்றவளாய் சுற்றும் முற்றும் பார்த்தாள்.



"முதலில் காரில் ஏறு சக்கு. உன்னை உங்க வீட்டில் கொண்டு போய் விடுகிறேன்." தர்சனா சொன்னதும் சகுந்தலா இயந்திரம் போன்று காரிலேறி அமர்ந்தாள்.



கரண் காரை கிளப்பினான். சகுந்தலா எதுவும் பேசாது அமைதியாகி விட்டாள். அவளது மனதிற்குள் எதுவோ ஓடி கொண்டிருக்கிறது என்பது மட்டும் தர்சனாவுக்குப் புரிந்தது.



சக்தீஸ்வரன் வீட்டின் முன்னே காரை நிறுத்தினான் கரண். அவனும், தர்சனாவும் இணைந்து சகுந்தலாவை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றனர்.



"சக்தி..." தர்சனா குரலில் வரவேற்பறையில் அமர்ந்திருந்த எல்லோரின் பார்வையும் வாயிலை பார்த்தது.



தர்சனா அருகில் நின்றிருந்த சகுந்தலாவை கண்டு எல்லோருக்கும் சந்தோசமாக இருந்தது. அவளை மீண்டும் கண்டதும் எல்லோரின் விழிகளும் கலங்கி போனது. சக்தீஸ்வரன் வேகமாக மனைவியை நோக்கி விரைந்து வந்தவன்,



"சகி..." என்றபடி அவளை அணைக்க வந்தான். அந்த நொடி அவள் கூறிய வார்த்தைகள் அவனது நினைவுக்கு வர... அவன் அப்படியே கலங்கிய விழிகளுடன் அவளைப் பார்த்தபடி நின்று விட்டான்.



"என்னை விட்டுட்டு எங்கேடி போன?" அவன் கேட்ட கேள்விக்குச் சகுந்தலாவால் பதில் அளிக்க முடியவில்லை. அவள் புத்தி பேதலித்தார் போன்று மலங்க மலங்க விழித்தாள். அவளது கோலம் கண்டு சக்தீஸ்வரனுக்கு விழிகளில் கண்ணீர் நிறைந்து விட்டது.



தர்சனா சக்தீஸ்வரனை வியப்பாய் பார்த்தபடி நின்றிருந்தாள். அவள் அவனுடன் பழகிய போது எப்போதும் விரைப்புடன், இயந்திர மனிதன் போன்று சுற்றும் சக்தீஸ்வரனா இவன்? அனைவரையும் பார்வையால் ஆட்டுவிப்பவன் இப்போது மனைவியின் கடைக்கண் பார்வைக்கு ஏங்கி நிற்பதை கண்டு அவளுக்கு ஆச்சிரியமாக இருந்தது. என்ன முயன்றும் அவளின் மனதினோரம் சிறு வலி எழத்தான் செய்தது. எல்லோரும் மனிதர்கள் தானே. உணர்வுகள் ஒன்று தானே.



"உள்ளே வாம்மா தர்சனா. சக்குவை எங்கே பார்த்தீங்க?" சர்வேஸ்வரன் குரலில் தான் சக்தீஸ்வரன் தன்னுணர்வு பெற்றுத் தர்சனா புறம் திரும்பினான்.



அதற்குள் பத்மினி வந்து சகுந்தலாவை அழைத்துக் கொண்டு உள்ளே சென்று விட்டாள்.



"என்னோட சகியை பத்திரமா என்னிடம் கொண்டு வந்து சேர்த்ததற்கு ரொம்ப நன்றி." சக்தீஸ்வரன் இரு கரங்களைக் கூப்பித் தழுதழுத்த குரலில் அவளுக்கு நன்றி கூறினான். பின்னே அவனது உயிரை அல்லவா அவள் மீட்டுக் கொண்டு வந்து கொடுத்திருக்கிறாள்.



"பரவாயில்லை இருக்கட்டும்." என்று அவள் சக்தீஸ்வரனிடம் சொல்லியவள், பின்பு சர்வேஸ்வரன் புறம் திரும்பி,



"இவர் என்னுடைய கணவர் கரண். இவரோட ரிலேட்டிவ் வீட்டுக்கு போயிட்டு வரும் வழியில் தான் சக்குவை பார்த்தது." என்று சொல்ல...



சர்வேஸ்வரன் கரணை கண்டு நலம் விசாரித்து விட்டு உள்ளே சென்று விட்டான்.



"உனக்கு எப்போது கல்யாணமானது?" சக்தீஸ்வரன் அவளைக் கண்டு கேட்க...



சக்தீஸ்வரனின் வார்த்தையில் தர்சனா முகம் சுருங்கி போனது. அவனுக்குத் தன் நினைவு கூட இல்லை. இல்லை என்றால் தனக்குத் திருமணமானதை அவன் தெரிந்து வைத்து இருப்பானே. அவளுக்குச் சற்று வருத்தமாக இருந்தது.



"உள்ளே வாங்க மிஸ்டர்...?" சக்தீஸ்வரன் கரணை கண்டு இழுத்தான்.



"கரண்..." என்றபடி கரண் சக்தீஸ்வரனின் கரத்தினைப் பிடித்துக் குலுக்கினான்.



பிறகு இருவரும் பேசி கொண்டிருந்தனர். தான் சக்தீஸ்வரனிடம் கேவலமாக நடந்து கொண்ட போதும்... அதை அவன் கரணிடம் கூறாது நல்லவிதமாக நடந்து கொள்வது கண்டு தர்சனாவின் விழிகளில் கண்ணீர் நிரம்பியது.



இருவரும் விடைபெற்றுக் கொண்டு வந்து காரில் ஏறினர். கரண் காரில் இருந்த டிஷ்யூ காகிதத்தை எடுத்து மனைவியிடம் நீட்டினான். அவள் திகைப்புடன் அவனைப் பார்த்தாள்.



"என்ன என்னைப் பார்க்கிற? கண்ணில் இருக்கும் மை அழிஞ்சிருக்கு பார்." என்றவன் தானே அவளது கண் மையைத் துடைப்பது போல் அவளது கண்ணீரை துடைத்து விட்டான்.



"சக்தி சக்குவை இப்படிக் காதலிப்பான்னு நான் நினைக்கவே இல்லை. அவன் எப்போ பார்த்தாலும் சக்குவை மிரட்டி விரட்டுவான். அதனால் தான் நானும் கொஞ்சம் அசட்டையா இருந்துட்டேன். முதலிலேயே இந்த விசயம் தெரிந்து இருந்தால் நான் விலகி போயிருந்திருப்பேன்." அவள் குற்றவுணர்வுடன் சொல்ல...



"நானும் உன்னை மிரட்டி, அதட்டி கொண்டே தான் இருக்கேன். அதுக்காக உன்னைப் பிடிக்காதுன்னு அர்த்தமா? என்ன தான் நான் உன்னைத் திட்டினாலும்... அடுத்த நொடி நீ எனக்கு வேணும்ன்னு உன்னைத் தேடி தானே நான் ஓடி வர்றேன்." என்றவனைக் கண்டு அவள் திகைப்பாய் பார்த்தாள்.



கணவனது மனம் அவளுக்கு மெல்ல புரிய ஆரம்பித்தது. கரண் அவளது கரத்தில் முத்தமிட்டபடி,



"எனக்கு உன்னை ரொம்பப் பிடிக்கும். ஆனால் நீ என்னைக் கண்டுக்காம சக்தி பின்னாடி போன... நானும் விலகி வேற வழியில் போயிட்டேன். ஆனா இப்போ நீ மட்டும் தான்." கணவன் சொன்னது கேட்டு அவளது உள்ளத்திலும் காதல் பூ மலர்ந்தது. பெண்ணவள் இந்த அன்பை தானே சக்தீஸ்வரனிடம் எதிர்பார்த்தாள்.



"ஐ லவ் யூ கரண்." என்றவள் கணவனது கரத்தினைப் பற்றிக் கொண்டு அவனது தோளில் சாய்ந்து கொண்டான்.



கரண் புன்னகையுடன் காரை கிளப்பினான். காதல் அனைவரையும் மாற்றும் வித்தை கொண்டது. இவர்களது காதல் வெளிவர சகுந்தலா அவளையும் அறியாது காரணமாகி போனாள்.

 
Status
Not open for further replies.
Top