All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘அமரஞ்சலி’ - கருத்துத் திரி

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அமரஞ்சலி - ஸ்ரீகலா அவர்களின் ஆத்மார்த்தமான நவரசக் காவியம், இது கலியுக ஓவியம் அதன் வர்ணங்கள் மேவிய வாழ்க்கையின் தாத்பர்யமே!

இனிய தோழி,


பால்வாடி என்றாலும்

சாம்ராஜ்ய அசோகனின்

அன்பின் தேடலில்

அரவணைக்கும் ஆரணங்கு!

நட்பிலும் கற்பிலும்

அன்பிலும் பண்பிலும்

கனியவள் காருண்யம்

கலங்கரை விளக்கமே!

தன்னைக் கொண்டாடும்

காதல் தேடும் மன்னவனே! – நீ

பெண்ணை பந்தாடினால்

பக்கம் வருமோ பால்மனமே…?

தன்னைக் கண்டாடும்

கூதல் தேடும் மன்னவனே! – நீ

பெண்ணை துண்டாடினால்

பக்கம் வருமோ அஞ்சுகமே…?

தன்னை மன்றாடும்

காதல் தேடும் மன்னவனே! – நீ

பெண்ணை கொண்டாடினால்

பக்கம் வாராதோ பால் நிலவே!

தன்னை தின்றோடும்

கூதல் தேடும் மன்னவனே! – நீ

பெண்ணை மன்றாடினால்

பக்கம் வாராதோ தேன் மலரே!



சின்னவளே!

நேர்மையில் நின்றாலும்

காதலின் கனியமுதே! – உன்

கிள்ளை மொழி கண்டால்

கிறங்காத மனமும்

கிரக்கத்தில் வேகாதோ?

வாய்மையில் வென்றாலும்

கூதலின் பனிமலரே! – உன்

பிள்ளை மொழி கண்டால்

இறங்காத மனமும்

இரக்கத்தில் சாயாதோ…?

இரக்கமும் கிரக்கமும்

இல்லாத வாழ்க்கையில்

காதலின் கண்ணியங்கள்

காலவதி ஆகிடுமோ?

இல்லை….

காதலே மெய்யென்று – அதன்

காயமே பொய்யென்று,

அன்புருவாய் நிகர் நின்று

அமுத கானம் பாடினால்…

கூட்டுக்குள் முடங்காமல்

கூவிடுமோ காதலின் உயிர் வலி!

அவன் தேடும் காதல்

அவள் மூடும் காதல்

கொல்லாமல் கொன்றாலும்

கொண்டாடும் கோலாகலமே!




வாழ்த்துக்கள் தோழி, நன்றி
 
Last edited:

Shanthigopal

Well-known member
எப்படி இருக்கீங்க ஸ்ரீ மேம்? அசோக் கனியின் அழகான காதலையும் அதை கண்ட அமருக்கும் தான் காதலிக்கப்படுவது புரிந்து விட்டது என நினைக்க வைத்த பதிவு...

கனி தன் வீட்டின் அருகிலேயே குடியிருந்த அசோக்ஐ காதலித்து தங்கள் நிறுவனத்திற்காக ஆண் மாடலிங் தேடும் போது அசோக்கின் அனைத்து சரித்திரமும் வெளியாக கூடவே அவன் வயது கனியை விட இரண்டு வயது குறைவு உட்பட... ஆனால் காதலுக்கு வயது ஒரு பொருட்டே அல்ல என கனிக்கு அமர் புரிய வைத்து நான் பார்த்த மாப்பிள்ளை அசோக்.. ஷூட்டிங் முடிந்தவுடன் கல்யாணம் என்றது அழகென்றால் தன் காதலன் மேல் கோபமே இருந்தாலும் தன் நண்பன் சொன்னான் என்ற ஒரே காரணத்திற்காக சரி என்பது போல் ஒப்புதல் அளித்தது அழகோ அழகு... அதுவும் கனி அமரிடம் எல்லோருக்கும் நல்லது செய்யும் உனக்கு மட்டும் ஏன் இப்படி என்பது மனதை கஷ்டப்படுத்தியது... அருமையான நண்பர்கள்.. இதுபோல் நண்பர்கள் கிடைப்பது ஒரு வரம்.. அற்புதம்..

அசோக் ஒரு தீவிற்கே சொந்தக்காரன்... அவன் நிறுவனத்திற்கு அவனே மாடல்... அப்போது அழகன் மற்றும் பணக்காரன்... இருந்தும் கனியை பார்த்த மாத்திரத்தில் காதல் கொண்டு அவளுக்காகவே இவள் குடியுருப்பு பக்கத்திலேயே வந்து அவளை தென்றலாக தாலாட்டி காதலிக்க வைத்து வயது குறைவால் பிரிந்தாலும் மறுபடியும் அமர் மூலமாக அவளிடம் வந்து கனியில் வாழ்வில் பூக்களை மலர செய்தான்... அருமையானவன்...

ஸ்ரேயாவிடம் அசோக் பேசுவதை கண்டு கனி முறைக்க அவளை கெஞ்சலுடன் சமாதானம் செய்ய இதை கண்ட அமருக்கு தனிமை உணர்வு... இந்த தனிமை உணர்வில் மனம் வெறுத்து அமர்ந்திருந்த அமரிடம் டீனா பேச வர அவளிடம் ஏனோதானம் என மழுப்பி அனுப்பி விட்டு திரும்பி பார்த்தால் நம் அஞ்சலி இவனை முறைத்து கொண்டு இருப்பதை கண்ட நம்மவருக்கு...

ஹா! ஹா! அஞ்சலி அவனை விரும்புகிறாள் இப்போ நிச்சயம் ஆகிவிட்டது அவனுக்கு... அஞ்சலி அவளாய் காதலை அமரிடம் வெளியிடும் நாள் எந்நாளோ??? கனிக்கும் ஏதோ சந்தேகம் வந்தே கேட்கிறாள்.. அமரின் சமாளிப்பா? இல்லை அவனே அவனை ஏமாற்றி கொள்கிறானா?

பாடல் வரிகள் அருமை ஸ்ரீ மேம்...
 
நல்லா இருக்கு
கனி அசோக் காதல் கதை

சஞ்சய் என்ன தப்பு செய்தான்

அமர் மனைவி கர்ப்பமா
அதை தான் சொல்றானா
இதுக்கு யார் காரணம்?

அடக்கடவுளே
 
Top