All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘அமரஞ்சலி’ - கருத்துத் திரி

Chitra Balaji

Bronze Winner
Super Super Super mam.... Semma semma episode.... Ashok தான் கனி ah அமர் oda kani ah பாத்துட்டு padichi போய் avalodaya apartment laye குடி வந்து avala love 😍 panni அவளையும் love 😍 panna vechi இருக்கான் avanodaya வயது theriyaamalaye avana love 😍 panni இருக்கா... Therinja பிறகு avoid panna aarambichita போல.... அமர் ku விஷயம் therinji avanga rendu perayum seththu vechitaan... Photo shoot முடிஞ்சி கல்யாணம் ah Super.... அமர் ku thaan avangalodaya anniyoniyam paaththu oru ஏக்கம் தனிமை உணர்வு எல்லாம்... But அஞ்சலி ah paathathum எல்லாம் maranjidichi.... Super Super mam...
 

Shanthigopal

Well-known member
எப்படி இருக்கீங்க ஸ்ரீ மேம்? அஞ்சலி மனதில் உள்ள காதலை வெளி கொணர எந்த எல்லைக்கும் செல்வானோ என நினைக்க வைத்த பதிவு...

Shooting எடுக்க அனைவரும் சென்றிருக்க அஞ்சலி அமர் மட்டும் தனி பயணம்... படகில் ஏற முடியாமல் ஏறிய அஞ்சலி கைப்படித்து இழுக்க அமர் கையோடு வந்தது அவன் பரிசு கொடுத்த கைக்கடிகாரம்... இருவருக்கும் நடந்த வாக்குவாத த்தில் கை கடிகாரத்தை கடலில் வீசி எறிய... வேண்டும் என்று கேட்ட அஞ்சலியும் கடலில் தத்தளித்து அமரால் மேலே இழுக்கப்பட்டு...

என்ன தான் நினைத்து கொண்டிருக்கிறான் அமர்??? பாவம் அஞ்சலி குளிரில் நடுங்க ஒரு சக ஜீவியா கூட அவன் நினைக்கவில்லையே என்ற மனவருத்தத்தில் நாங்கள் இருந்தால் நீயா என்னிடம் வருவதாக சொன்னாய் என்ற ஒரு bitஐ போட்டான் பாருங்க அடப்பாவி எந்த நேரத்தில் என்ன சொல்றான் என்பது போல இருந்த து எங்களுக்கு... ஆனால் அவனிடம் அவள் வந்த பிறகும் அவன் மனம் மரத்து போனதேன்??? ஏதோ நினைத்து புழங்கி கொண்டு உள்ளானோ?

கை கடிகாரத்தை திருப்பி கொடுத்து அவன் சொன்ன பதில்???

ஸ்ரீ மேம் என்னத்தான் சொல்ல நினைக்கிறீங்க அமர் மூலம் எங்களுக்கு??

அதை விட வேலை செய்பவர்களிடம் limitஆ பழகு சொன்னா பாருங்க.. அப்போது எல்லோரும் இருந்தால் அவளை அவமானப்படுத்தி கேவலப்பட செய்வானா? ரீனா அமருக்கு முத்தமிட்டதை கண்ட அஞ்சலி அடுத்தவன் புருஷன் தன் காதலன் என்று கண் கலங்க அதை கண்டு நீயும் முத்தமிட்டு கொள் என்பதும் அவனே புன்னகையுடன் அவளுக்கு முத்தமிட்டு செல்வதும் அவள் பாவம் அவன் அழகு புன்னகையில் மயங்கி கலங்கி நிற்பதும்...

ஒவ்வொரு காட்சியும் எங்கள் கண் முன் அற்புதமாய்... எப்படியோ எங்கள் மாய கண்ணன் புன்னகை புரிந்ததை கண்டு எங்களுக்கும் புன்னகை இப்பவாவது சிரிக்கிறானே என்று!! ஏதோ அவன் மனதை அரிக்கிறது என்னவென்று தான் தெரியவில்லை...

ஸ்ரீ மேம் கவிதை வரிகள் அற்புதம்.. காதலை காட்ட வேண்டாம் கோபம் மட்டும் போதுமே..
 

Banumathi Balachandran

Well-known member
ஒரு வழியாக அசோக் கனி ஜோடி சேர்ந்தாச்சு.
டேய் அமர் அஞ்சலியின் காதலை புரிந்து கொள்வாயா?
 

Subasini

Well-known member
அமரஞ்சலி....


சின்ன பையன் சொல்லி சொல்லி அவளை காதலில் விழ வைத்த அசோக் 😂😂


அட்டகாசமான அசோக்...
அசரடிக்கும் அவன் பேச்சு
அலடிக்காத அவன் அழகு
ஆர்பாட்டம் இல்லாத அவன் காதல்
ஆளை சுலட்டி அடிக்கும் அவன் பார்வை
இப்படி எல்லாம் ஒரே எபிசோடில் எழுத வச்ச அசோக் காதல் சாம்ராஜ்யத்தின் சாம்ராட் தான் 😂😂...


செம அழகு அவன் தன்னை விட பெரிய பெண் என்ற போதும் காதலில் வீழ்ந்து அதில் திடமாக நிற்கும் அவன் ஸ்டைல் சூப்பர்....
😉😉


தன்னை சுற்றி அரிதாரம் பூசிய காகித பூக்கள் தான் இருக்கிறது என்ற உண்மை தான் அவனை நிஜ பூவின் மனம் நுகர துடிக்கிறது...
ஆனால் நிஜமே கைகளில் வந்த போது அதை கசக்கி தான் நுகர தோன்றும் இது மனிதனின் இயல்பு 😂 அமர் அப்படி தான் போல...


ஸ்ரீ மா...
இந்த அமரு பொறாமை படராப்படி...
வானத்தை பார்த்து தலையை கோதராப்டி...
இனி சமையற்கட்டில் எங்க அப்பாவி புள்ளைய ஒரம் கட்டிவாப்பல அப்படி தானே 😂😂😂😁😁😁 இவன் எப்ப பாரு இப்படியே தான் பெரிய சீன் வண்டி...


சின்ன பையன் சாம்ராட் பாருங்கள் அச்சோ அப்படி ஒரு காதல்...


நிஜமான நேசமும் உண்மையான காதலும் உணரும் போது இந்த ஹீரோ என்ன செய்வான்....


வெயிலுக்காய் குடை
அவள் பிடிக்க
அவன் அறிவு
தான் மறைந்தது...


வெப்பமோ சுட
அவன் மனமோ
குளிர்ந்தது கோதையின்
பார்வையால்...


விழி மொழி
அவனை வீழ்த்த
வீழ்ந்ததோ ஆணின்
கர்வம்...


அடுத்த எபி படிக்க வெயிட்டிங் ஸ்ரீ மா...


சாம்ராட் ரொம்ப பிடிச்சிங் 😂😂
 
Top