All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘அமரஞ்சலி’ - கருத்துத் திரி

Shanthigopal

Well-known member
எப்படி இருக்கீங்க ஸ்ரீ மேம்? தலைவனுக்கு தன்னை தவிர எவரும் தலைவியை பார்க்க கூட கூடாது என்ற பொறாமை குணம் வெளியான பதிவு..

அஞ்சலி தன்னை இந்தியாவிலிருந்து வரும் போது அழைத்து கொண்டு வந்த மனிதன் என்பதாலேயே சாதாரணமாக சஞ்சயிடம் பேசியவள் அவள் அழகை கண்டு ரசித்து ஒரு photo எடுத்ததற்கு... ஸ்ரீ மேம் அஞ்சலி எங்கே இருந்தாலும் அமர் எப்போதும் அவளை கவனித்து கொண்டே இருப்பானா? பாவம் சஞ்சயை உள்ளே கூட வரவிடாமல் வாசலிலேயே அவன் கைபேசியை வாங்கி அவள் photoவை அழித்து இதில் சஞ்சய்க்கு அறிவுரை வேறு.. அதுவும் இல்லாமல் இவள் என்னுடையவள் என்ற செய்கையை சஞ்சய் முன்னணியிலேயே... பாவம் சஞ்சய்! இனிமேல் அவனை வீட்டிற்கு வரவிடுவான்...

அவன் போன பிறகு அமர் செய்த செயலால் முகம் திருப்பிய அஞ்சலியை என்னிடம் ஒரு புன்னகைக்கு பஞ்சமோ என்பது... அரை மணி நேரத்தில் இரண்டாயிரம் கிளிஞ்சல் எடுத்து வர சொல்வது.. முடிவில் அவள் அழகை குறைக்க தானா? அப்பப்பா! என்னவொரு பொறாமை!! தண்டனை சொல்லி அஞ்சலியை அணைத்த அமர் இவள் மயங்கி சரியவும் அவளை தூக்கி கொண்டு அவள் அறையில் படுக்க வைத்து.. அவளை விழக்க வைத்து.. அவள் பயத்தை கண்டு?? துப்பட்டாவை அவளிடம் எறிந்து விட்டு சென்றவன்... குற்ற உணர்வில் தான் மூன்று நாட்கள் அவளை அவன் பேச்சால் கூட வதைக்கவில்லையோ? வைத்தி அற்புத மனிதன்.. அவளுக்கு இங்கிருந்து சென்று விட சொல்லி அறிவுரை வழங்க வைத்திக்கு அனைத்தையும் சொல்லியவள் எனக்கான அக்னிப்பரிட்சை என்பதும் என்னை விட அவரை நான் நம்புகிறேன் என்பதும் அற்புதம் ஸ்ரீ மேம்...

ஒவ்வொரு காட்சியும் எங்கள் கண்முன் அற்புத ஓவியங்களாய்...

தம்பி தங்கையின் பேசிய அஞ்சலியை அவளின் முக பாவனைகளை கண்டு நடிகை என்பது...

அற்புதமான கவிதை வரிக்கள் ஸ்ரீ மேம்... அதுவும் அந்த கடைசி வரிகள் மனம் பிழிந்து அழுகைக்கே சென்று விட்டது...

விறுவிறுப்பான பதிவு...
 

Shanthigopal

Well-known member
எப்படி இருக்கீங்க ஸ்ரீ மேம்? அமர் அஞ்சலி யின் வாயிலிருந்தே சில விஷயங்களை வர வைக்க நினைக்கிறானோ என்று நினைக்க வைத்த பதிவு...

அமர் அஞ்சலியை வைத்தியை விட்டு வர சொல்ல பாவம் வீட்டில் எங்கு தேடியும் அவள் இல்லாமல் போக வைத்தியின் உந்துதலால் அமர் அஞ்சலி யை தேடி கொண்டு கடற்கரை செல்ல இவனை கண்டு அவள் படகின் மறைவிலிருந்து வர...

அருமை ஸ்ரீ மேம்.. ஒவ்வொரு காட்சிகளும் எங்கள் கண் முன் எதார்த்தமாய்...

ஏன் ஸ்ரீ மேம் அவள் வந்த நாள் தானே அவனை பார்த்தவுடன் அதிர்ச்சியாகி அணைத்தவுடன் குழைந்து கண் மூடி ரசித்தது... அதை இத்தனை நாட்கள் அமர் மண்டையில் குடைந்து கொண்டே இருந்ததா இதை இவளிடம் எப்போது கேட்கலாம் என்று... அப்பப்பா! நிஜமாகவே கத்தி முனையில் தான் விசாரித்தான் அவளை... ஆனாலும் அவள் யோசித்து பணத்திற்காக என்பது... அவள் காதல் நெஞ்சத்தை அமர் ரணமாக்கி கருக செய்து விட்டான்...

என்னவென்று சொல்வது... அப்போது அவள் ஏமாற்றினாள்... இப்போது அவன் முறை... இருந்தாலும் அமரின் மேல் எங்களுக்கு நம்பிக்கை உள்ளது அஞ்சலியை புரிந்து கொள்வான் என்று... இல்லையெனில் எவ்வளவு தான் அவளிடம் அத்து மீறினாலும் அவளுக்கு வலிக்க செய்து இவனும் ஒன்றும் சந்தோஷமாக இல்லையே?

கனியை கண்ட அஞ்சலி சந்தோஷிக்க அவளை கண்ட கனி அதிர்ச்சியாகி பேசாமல் செல்வதே அவளுக்கு தண்டனை தானே.. கனி அமரிடம் அஞ்சலியைப் பற்றி விசாரித்தது அதற்கு அமரின் பதில் கழுவும் மீனில் நழுவும் மீனாய்...

அற்புதமான விறுவிறுப்பான பதிவு ஸ்ரீ மேம்...

அதுவும் கடைசியில் கொஞ்சம் புரியவில்லை முதலில் அந்த நாட்டின் காலநிலையை பற்றி சொன்னீங்க... அவன் வெம்மையில் குமிறிக்கொண்டு... அப்புறம் அமர் அஞ்சலியை கண்டு எனக்குதான் நீ இருக்கிறாயே என்பது... அச்சோ! அவனை குளிர்விக்க அவளா?

நிறைய கேள்விகள் மனதில்...
 
Top