All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘அமரஞ்சலி’ - கருத்துத் திரி

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அமரஞ்சலி - ஸ்ரீகலா அவர்களின் ஆத்மார்த்தமான நவரசக் காவியம், இது கலியுக ஓவியம் அதன் வர்ணங்கள் மேவிய வாழ்க்கையின் தாத்பர்யமே!

இனிய தோழி,

துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ
இன்பம் சேர்க்க உற்றவரில்லா சின்னக் குயில்!
ஒற்றையாய் நின்று ஓங்காரம் செய்தால்
பிள்ளையாய் கண்டு தாவி அணைப்பவள்
அன்னையன்றி ஆருளரோ புவியினிலே!

நட்பில் நேர்மையாய்
வலம் வந்த கனிமகள்
நடப்பில் தாய்மையாய்
காக்கும் தலைமகள்!
பெண்ணே!
உன் குணத்தின் மேன்மையில்
மெய் மறக்கும் நேரம்...
உன் மனத்தின் மென்மையில்
மெய் சிலிர்க்கும் நேரம்...
உன் யௌவனத்தின் மேன்மையில்
மெய் திறக்க வந்தானோ...
யௌவன ராஜன்!

காதல்....!
ஒற்றைச் சொல்லை கேட்க
ஓராயிரம் வழி கண்டாலும்
ஓசையில்லா மொழியில்
ஓரமாய் நிற்பவள் நேர்மை!

கட்டிப் போட்டாலும்
கடிவாளம் இல்லா பரியாய்
பறக்கும் மனமே! - உன்
காதலின் இறுக்கத்தில்
கானலாய் போன வாழ்வில்
தேடலாய் நிற்பது
அன்பின் பாடலே!

அமரக் காதல் தேடும் இந்திரனே!
அமர்த்தலாய் ஆகர்சித்து
ஆரணங்கை ஆண்டுவிட
ஆழ்மனமும் தவித்தாலும்,
அறியாத காதல் போதையில்
அரவணைக்கப் போகும் நீ,
அவள் ஆழ்மனம் அறிய
அதிரடியாய் சாய்த்தாலும்,
அருவமாய் பெண்மையை
அடைக்கலமாய் எடுத்ததேனோ...?
ஏகாங்கியே!
ஏங்கும் மனம் எக்காளமிட்டாலும்
ஏந்தும் கரம் எந்திரமானாலும்
ஏக்கம் தீரா தாக்கத்தில்
ஏகனாய் நின்று எகத்தாளம் செய்து
ஏகமாய் எல்லாம் கைகொண்டாலும்
ஏற்றம் இல்லா காதல் வாழ்வில்
ஏமாற்றம் ஒன்றே எச்சமாய் ஆகுமோ?

தாயும் தாங்கவில்லை
தாரமும் தாங்கவில்லை
காதல் தாங்கினால்
கரையேறி வெல்வானோ...!

இருபதின் இலக்கணத்தில்
தலைக்கணம் இருந்தாலும்
தடுமாறும் தடங்களில்
தடம்மாறும் தளிர்களே!
தடுத்தாட்கொள்ளவே
தக்கவரும் வேண்டுமோ...!

வித்யாசமான மனங்களை
விதியோடு விளையாட்டாய்
வகைப்படுத்தும் பாணியிலே
எழுத்தரசி ஏற்றமாய்
ஏறிவிட்டார் ஏணியிலே!



வாழ்த்துக்கள் தோழி, நன்றி.
 

Subasini

Well-known member
அமரஞ்சலி...


பெண் மனம் என்றும் ஆழம் தான்...


அதை ஆழ்ந்து முத்தமிட்டு அறிந்த கொண்டான்...


ஆனால் அறிந்து கொண்டால் மட்டும் போதுமா...


இதழ் பிரித்து ஒரு வார்த்தை
அது இதயம் முழுதும்
வலம் வருமே...


மனம் திறந்து ஒரு சொல்
அது உடல் முழுதும்
பரவும் பரவசமே...


காதல் வார்த்தைகளால் அல்ல
உணர்வுகளால் உணரவேண்டிய
தருணம்...


நீ உணராமல் போனால் கூட இந்த உலகை வென்று வருவாய் ...
ஆனால் அதை உணர்ந்து இந்த உலகின் முன் மீண்டும் ஒரு தோல்வியை நீ எதிர்நோக்கி காத்திருக்கும் தருணம் உன்னால் மீண்டெழ முடியாமல் போய் விடும்...


பெண்ணின் உணர்வுகளோடு விளையாடுகிறான்...
அது தவறென உணர்ந்தே செய்கிறான்...


துரோகத்தை வென்றவன்
காதலின் முன் தோற்று துவண்டு போய் நிற்கும் போது என்ன செய்வான் இந்த அமரேந்தரன்...


பெண் மனதின் ஆழம் அறிந்தால் அதை உணர்ந்தால்...
பழி என்ற சொல் பலியாக அவள் முன் கிடக்காதோ...


நினைப்பதெல்லாம் இந்த அமரேந்தர் வாழ்வில் நடக்கவில்லை...
இதோ அவளை அவன் பழி வாங்க நினைப்பதும் நடக்குமா என இனி வரும் எபியில் பார்க்கலாம்.. ஸ்ரீ மா.. சரி தானே 😂....


இந்த எபி செம...


வேறு பெண்ணின் மணாளன் இவனுக்கு அவள் யாரிடம் பேசினாலும் பயமேன்...
ஓஓ இது தான் பழி வாங்கும் ஸ்டைல் போல 😂😂😂 possessive king 😂😂😂 மனைவி மேல் தான் இப்படி ஒரு உணர்வு வரனும் மை லார்ட் 😂😂😂
பழிவாங்கும் படலம்..
யாரை என்பது தான் இங்கே கேள்வி 😂..


சாம்ராட் ❤️❤️ கனியின் மனதை கனியவைக்கும் சாம்ராட்...
சூப்பர்...


அப்போ கனியிடம் அடங்கி அமைதியாக வலம் வருவான் அடாவடி பண்ணினாலும் அவள் கண்டிபையே காதலாக மாற்றும் திறன் படைத்தவன் இவனே 😂😂
அடுத்த எம்பிக்கு வெயிட்டிங்...
 

K.Venigovind

Well-known member
பால்வாடி கனிக்கு முன்னரே தெரியும் போல இருக்கு..உனக்கு 26 எனக்கு 24..
அசோக் சாம்ராட் பேரே நல்லா இருக்கு..கனி பட்டப்பேரெல்லாம் வச்சிருக்கயேமா :love::love:.. ..
 

Shanthigopal

Well-known member
எப்படி இருக்கீங்க ஸ்ரீ மேம்? அஞ்சலியின் வாயிலிருந்தே அவள் மனதிலிருப்பதை சொல்ல வைக்க நினைக்கிறானோ என நினைக்க வைத்த பதிவு...

வைத்தியின் வற்புறுத்தலால் பாரதிதாசன் பாடல் பாடும் அஞ்சலி பாடிக்கொண்டே அமர் செய்த செயல்களை நினைத்து வெறுத்து விரும்புக்கும் வெறுப்புக்கும் இடையே அல்லாடி அது கழிவிரக்கமாய் துக்கம் பொங்கி கண்ணீராய் வழிந்து கொண்டுள்ளதை கேட்டு பார்த்தப்படி வந்த கனிக்கு சின்ன பெண் மனம் நொந்து அழுது கரைவதை கண்டு அவளுக்கு ஆறுதல்படுத்த கை நீட்டி அழைக்க தாயை கண்ட கன்று போல் கனியின் கைகளில் புகுந்து இவ்வளவு நல்லவர்களுக்கு துரோகம் இழைத்து விட்டோமே என்று அழுது கரைய அமரோ மனதை இறுக்கி சிலை போல்...

கனியின் வற்புறுத்தலால் அஞ்சலி தன் காதலையே மூச்சாக நினைத்து மகிழ்ந்து காதல் பாட்டு பாடிய அவளை கனி பாராட்ட அமரோ சூர்யாவை நினைத்து பாடினாயோ என கேள்வி எழுப்ப... பொய் சொன்ன வாய்க்கு அவன் தண்டனை கொடுக்க... ஸ்ரீ மேம் முதலிலிருந்தே அமருக்கு அஞ்சலி மேல் சந்தேகம் தான்... இல்லையெனில் அவன் முத்தத்தில் கரைந்தவளை ஒரு மாதிரியான குரலில் எதிர்மறையாக சொல்வானா? இந்த இடத்தில் அவன் சந்தேகம் உறுதியாகி விட்டதோ?

சஞ்சயிடம் அஞ்சலி புன்னகையுடன் பேசுவதை கண்டு அவன் தொழில்முறை பேச்சுகளில் கவனம் சிதறி அவர்களை சத்தம் போட்டு பேச்சை நிறுத்தி இருப்பானா? நம்மிடம் ஒரு சிறு புன்னகைக்கும் பஞ்சம் ஆனால் சஞ்சயிடம் மட்டும்... இது பொறாமை தவிர வேறு உண்டோ? இதில் யாருக்காக வேண்டி கொண்டாய் என்ற நக்கல் வேறு..

அஞ்சலியிடம் அமர் அவள் மனதில் உள்ள உண்மையை வரவழைக்க நினைக்கிறானோ?

அற்புதமான பதிவு ஸ்ரீ மேம் ஒவ்வொரு நிகழ்வும் எங்கள் கண்ணில் உயிரோட்டமாய்...

கனியின் பெயரில் தொழில் ஆரம்பிக்கிறானா அமர் போல் நண்பன் கிடைக்க கனி என்ன தவம் செய்தாளோ? அசோக்கும் கனியும் முன்பே அறிமுகம் ஆனவர்களா? இது அமருக்கு தெரியுமோ? முதலில் தொழில் ஒப்பந்தம் பிறகு திருமண ஒப்பந்தம்... இனி இந்த ஜோடியின் ஆர்ப்பாட்டத்தையும் காண ஆவலுடன்...
 

vijirsn1965

Bronze Winner
ithu yaaru ashok ivanai mube kaniku theriyum polairukkerathe kani peyaril company aarambikkiraan enoanjaliku mattumvillanaki ponan enna seiya aval nadanththu kondamurai avvaaru aahivittathu superb very nice ud romba arumai mam(viji)
 

Bigboss_1995

Well-known member
ஜி வணக்கமுங்க… 🙏🙏🙏
நானும் அமர் மாதிரி ஒரு அப்பாவி அபலை பையன்தானுங்க… இந்த அஞ்சலி பொண்ணு பண்றதெல்லாம் பார்த்தா ஒரே ஆத்திரங்களா வருது.. நமக்கு இந்த fb id லாம் இல்லிங்கோ… ஹீரோயினுக்கு பொங்கல் வைக்கோனும்… இங்கிட்டு வைக்கட்டுங்களா 😊😊
 

ஶ்ரீகலா

Administrator
ஜி வணக்கமுங்க… 🙏🙏🙏
நானும் அமர் மாதிரி ஒரு அப்பாவி அபலை பையன்தானுங்க… இந்த அஞ்சலி பொண்ணு பண்றதெல்லாம் பார்த்தா ஒரே ஆத்திரங்களா வருது.. நமக்கு இந்த fb id லாம் இல்லிங்கோ… ஹீரோயினுக்கு பொங்கல் வைக்கோனும்… இங்கிட்டு வைக்கட்டுங்களா 😊😊
பானு நீங்களா? 🙄🙄🙄🤔🤔🤔
 
Top