All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘அமரஞ்சலி’ - கருத்துத் திரி

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அமரஞ்சலி - ஸ்ரீகலா அவர்களின் ஆத்மார்த்தமான நவரசக் காவியம், இது கலியுக ஓவியம் அதன் வர்ணங்கள் மேவிய வாழ்க்கையின் தாத்பர்யமே!

இனிய தோழி,

துரோகத்தின் பழி என்று
உரிமையை மீட்கப் போராட்டமோ...?
மன்னவனே!
உன்னவள் என்று உணர்ந்திருந்தால்
உயிர் போலக் காத்திருப்பாயே?
உணராமல் போன காலத்தில்
உயிர் குடித்த துரோகம்!
உணர்ந்து போன காலத்தில்
உயிர் குடித்த ரோகம்!
மோகமும் தாகமும்
கண்ணை மறைத்தாலும்
கருத்தை மறைக்காத கண்ணியம்!
பெண்ணவள் கண்ணில் கருத்தாய்
சின்னவள் உன்னில் உருத்தாய்
அன்னவள் தன்னில் நிலைத்தாய்!

காதலின் நேர்மையில்
காத்திருக்கும் கன்னியவள்,
மோதலின் பார்வையில்
பூத்திருக்கும் பெண்மையவள்,
உன்...
கூதலின் கூர்மையில்
கூடாகிப் போவாளோ...?

அக்கினிப் பரீட்சைக்கு
சீதை அவள் துணிந்து விட்டால்...
கைபிடிக்க ராமனாய்...
அவன் வருவானோ...?
ஆனால்...
ஏகபத்தினி விரதனின்
நேர் நின்ற நல்லாட்சியே...
பத்தினி அவள் பதிவிரதை
என்று நம்பாத உலகில்...
சித்தினி இவளுக்கு...
சிலை வடிக்குமா...?

நேர் கொண்ட பார்வையில்
சீர் கண்ட நேர்மையில்
வீறு கொண்ட வார்த்தைகள்
வீரியம் கொண்டால்...
அவன் ராமனே!

நேர் கொண்ட பார்வையில்
சீர் கண்ட நேர்மையில்
வீறு கொண்ட காதல்கள்
காரியம் வென்றால்...
அவள் சீதையே!

புண்பட்ட தத்துவத்தில் ஆண்
பண்பட்ட பக்குவத்தில் பெண்
கண்பட்ட மகத்துவத்தில் நாம்! - ஆம்

காதலில் பெண்
காவலில் ஆண்
காரிருளில் நின்றாலும்
நிலவு அவள் ஒளியில்
தன்னிறைவாய் அவன்!

வாழ்த்துக்கள் தோழி, நன்றி
 
Last edited:

Subasini

Well-known member
அமரஞ்சலி...

என்ன மாதிரியான நிலை...

அழகு மட்டுமே அவன் கண்ணுக்கு...

அவளை அழகாய் மாற்றியவனே அதை சிதைக்க முயலும் தருணம்...
அந்த நேரம் அவனுக்கு புரியவில்லை அழகு என்பது மனதை காட்டும் என்பது...

நிறம் மாறினால் அவளின் தரம் இறங்குமா நல்ல எண்ணம்...

என்ன அவளை பற்றிய தவறான கருத்துக்கள் அவன் மனதில் வலம் வந்தாலும் அவளுக்கான இயல்பு மாற்ற அவளால் முடியாது அதை அறியாத பேடி தான் இவன்...
அகம் அவன் அகத்தை மறைக்கிறது...

மேகம் மறைக்கும்
நிலவாய் அவள்...

இருண்ட உலகில் வலம்
வரும் ராணியவள்...

ஆயிரமாயிரம் விண்மீன்
இருந்த போதினும்

ஆதவனின் பார்வை அவளுக்கு இல்லை....

மனிதன் மனம் கருமை பூசும் காலம் அவன் உடல் திமிரு இருக்கும் போது தான் அதுவே உடலின் நிலை மாறினால் அவன் அறிவு தெளியும் அதற்கு அவன் இன்னும் பக்குவபட வேண்டும் அல்லவா...

ஸ்ரீ மா...

இவன் ஹீரோ இருக்கட்டும் ஆனால் இதெல்லாம் ரொம்ப தப்பு...

கருப்பு பார்க்கும் பார்வையில் இருக்கு அவனுக்கு யார் சொல்லுவா...
ரொம்ப வருத்த படுவான் மட்டுமே சொல்லிக்கிறேன்......
 

Banumathi Balachandran

Well-known member
நடித்து நடித்து மூச்சு முட்டி இறக்கும் தறுவாயிலாவது நீ என்னை உணர்ந்து எனக்கு விமோசனம் அளிப்பாயா
அருமை ஸ்ரீமா
 
Top