All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ரேவதியின் "ஒரு புன்னகைப் பூவே!!!" - கதைத் திரி

Status
Not open for further replies.

revathyrey04

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இப்பொழுது ரேஷ்மா கிளம்பினால் வைஷ்ணவியின் வீட்டினை அடைய அரை மணி நேரத்திற்கும் மேல் ஆகும், தாங்கள் இப்போது இங்கு இருந்து கிளம்பி சரியான பாதையில் எவ்வளவு மெதுவாக வண்டியை செலுத்தினாலும் பதினைந்து நிமிடங்கள் தான் ஆகும் என்றே நான்கு வழி பாதையில் சென்றான். இன்னும் முகத்தினை தூக்கி வைத்து கொண்டு வருபவளை வண்டியின் கண்ணாடி வழியே கண்டவன் தாங்கள் செல்லும் பாதையின் இடதுபுறம் ஒரு சிறிய பாதை போன்ற மண் ரோடு செல்வதை கண்டவன் அதில் தன் வண்டியை திருப்பினான்.


தனி ரோட்டில் செல்லும் பொழுது கூட வைஷ்ணவியின் முகத்திலோ , கண்களிலோ சிறிதும் பயம் இல்லாது வாயினை இறுக மூடியபடி அமர்ந்திருந்தாள். சிறிது தூரம் சென்றதும் வண்டியை சடாரென நிறுத்தியதில் வண்டி ஒரு குலுங்களுடன் நின்றது. அப்படியேனும் அவள் அருகில் நெருங்கி அமர்வாள் என்ற நல்ல எண்ணத்தில்.. ஆனால் பலன் என்னவோ பூஜ்யம் தான்.


எங்கு அவள் தான் தருணுக்கும் தனக்கும் இடையில் ஒரு நபர் அமரும் இடைவெளி விட்டிருந்தாளே ? வண்டியை சடாரென நிறுத்தியும் வண்டியின் பின்புறம் பிடிமானத்திற்காக இருக்கும் கம்பியினை பிடித்து கொண்டாளே தவிர தருணின் மேல் தன் நுனி விரல் கூட படாது அமர்ந்திருந்தாள். அவளின் செயலில் தருணிற்கு சிரிப்பு தான் வந்தது. சிறு பிள்ளை போன்று முகத்தை தூக்கி வைத்திருந்தாள்.


வண்டி நின்றும் கீழே இறங்காது இருந்தவளை சீண்டும் எண்ணமும், யாரும் இல்லாத தனிமையில் தன்னவளினை நெருங்க எழும் ஆசையினையும் கட்டுப்படுத்த மிகவும் பிரயத்தனப்பட்டான். எனினும் அவளை சீண்டி பார்க்க ஆசை எழ வண்டியில் அமர்ந்தபடி குலுக்கினான். அதில் கடுப்பானவள் கீழே இறங்கி நின்று சுற்றிலும் பார்வையை ஓட்டினாள். இருந்தும் அந்த பார்வை அலசலில் பயம் இல்லாது போக அது தருணிற்கு விவரிக்க இயலாத உணர்வாக தோன்றியது.


ஏனெனில் உயிருக்கு உயிராக காதல் செய்யும் எந்த பெண்ணாக தன் உயிரின் மேலானவர்கள் மேல் அளவு கடந்த காதல் வைத்திருந்தாலும் இது போன்ற அசாத்திய நேரங்களில் பயம் கொள்வர். தன்னவள் தன் மேல் வைத்துள்ள கட்டுக்கடங்காத நம்பிக்கையில் தருணின் காதல் அளவிலடங்காத ஆட்டாற்று வெள்ளம் போல் பெருகியது.


“ஏன்டி யாருமே இல்லாத காட்டு பகுதி மாதிரி இருக்குற இடத்துல வண்டியை நிப்பாட்டி வச்சிக்கிட்டு உன் பக்கத்துல இவ்வளவு நெருக்கமா நின்னுட்டு இருக்கேன்,உன்னய எதாவது செய்துட்டான்ற மாதிரி பயமே வரலையாடி, இந்நேரம் இதே இது வேற பொண்ணா இருந்திருந்தா இந்த இருட்ட பார்த்துட்டு அட்லீஸ்ட் ஒரு சொட்டு கண்ணீராதும் விட்டிருப்பா, நீ என்னனா இப்படி என்ன உரசிட்டு நிக்கிற” என்று கூறியவன் தான் அவளை உரசியபடி நின்றிருந்தான்.


அதில் தருணை திரும்பி பார்த்தவள் “நீ வந்து பக்கத்துல நின்னுட்டு நான் உன்ன உரசுறேனா, இருக்கிற கடுப்புல எதும் பேசாம வண்டிய எடுக்கிற வழியை பாரு, அப்பறம் என்ன சொன்ன நீ என்ன எதாதும் செய்திடுவனு பயப்படனுமா, உன்னய பத்தி எனக்கு தெரியாது லவ் மட்டும் பண்ற சாமியார்னு தெரியாத ” என்றாள் கடுப்புடன். அதில் கடுப்பு எந்த அளவு இருந்ததோ அதே அளவு தருணின் மேல் நம்பிக்கையும் இருந்தது.


காதலை தன்னிடம் கூறிய நாட்களில் இருந்து எத்தனையோ முறை வெளியில் சென்றுள்ளனர்.. அப்போது எல்லாம் வைஷ்ணவியிடம் கடைபிடுக்கும் கன்னியம் அவள் அறிந்ததே. இருவரும் கை கோர்த்து கொண்டு பேசுவதும்,சில சமயங்களில் அவனின் தோலில் இவளாக தான் சாய்ந்து கொள்வாளே தவிர தருண் அல்ல. தருணை பொருத்த வரை தன்னவளை உரிமையுடன் திருமணத்திற்கு பின்பே நெருங்க வேண்டும் என நினைத்திருந்தான்.


இது நாள் வரை தன்னிடம், தன்னுடைய வார்த்தைகளுக்கு மதிப்பு குடுத்து விலகி இருந்த தன் மனம் கவர்த்தவனின் இன்றைய நெருக்கம் இன்னும் சில மாதங்களில் வெவ்வேறு இடங்களில் வேலை பார்க்க வாய்ப்பு வந்து விடும் என்று இப்பொழுதே பிரிவின் கலக்கத்தில் இருந்தவளிற்கு இந்த நெருக்கம் எல்லை இல்லாத ஆறுதல் தான், இருந்தாலும் அவனிடம் முறுக்கி கொண்டு தான் நின்றிருந்தாள். தன்னை சமாதானம் செய்வதற்கு தருண் என்னவெல்லாம் செய்ய போகிறான் என்று அறிந்து கொள்ளும் ஆவலில்.


ஆனால் தருணோ வைஷ்ணவியை அதிகம் யோசிக்க விடாது “யாரை பார்த்துடி சாமியாருனு சொன்ன, எதோ சின்ன புள்ள பாவம் படிக்கிற வரைக்கும் விட்டு வைப்போமே, அதும் நீ என்கிட்ட காலுல விழுகாத குறையா டிஸ்டன்ஸா இருப்போம்னு கெஞ்சினியேனு அமைதியா இருந்தா, என்ன சாமியார்னா சொல்ற, இப்போ பாருடி என் டார்லி இந்த சாமியார் என்ன எல்லாம் பண்றேன்னு, இந்த வாய் தான சொல்லுச்சு இந்த வாய்க்கு தண்டனை கொடுக்கனுமே” என்று அவளை மேலும் நெருங்கி நின்றவன் இந்த இருட்டில் யாரும் வரும் வாய்ப்பே இல்லை என்று இருட்டு தந்த சுதந்திரத்தில் அவளின் இதழில் வலது கையின் பெருவிரல் மற்றும் ஆள்காட்டி விரலை வைத்து வருடியவன் அடுத்த நிமிடம் வைஷ்ணவி யோசிக்கும் முன்பே அவனின் இதழ்களில் வைஷ்ணவியின் இதழ்கள் தொலைந்து காணாமல் போனது.


“இமைக்கும் விழிக்கும் உள்ள தூரம் கூட என்னால் உன்னை பிரிய இயலாது”


பூக்கும்.
 

revathyrey04

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் மை டியர் ப்ரண்ட்ஸ் அண்ட் லவ்லி சிஸ்டர்ஸ்,

"ஒரு புன்னகை பூவே" வின் அடுத்த அத்தியாயத்தை பதிவிடுகிறேன். படித்துவிட்டு தங்களின் கருத்துகளை நிறை குறைகளை கூறினால் நான் என்னை மேலும் வளர்த்து கொள்ள உதவும், கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் பதவிடுங்கள். உங்களின் வார்த்தைகளுக்கு மீ ஆவலுடன் வெய்ட்டிங்.

https://srikalatamilnovel.com/community/threads/ரேவதியின்-ஒரு-புன்னகைப்-பூவே-கருத்துத்-திரி.414/

இப்படிக்கு

உங்கள் அன்பு தங்கை ரேவதி :love::love:
 

revathyrey04

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
புன்னகை 19:

முதன் முதலில் அனுபவித்த இதழ் முத்தத்தினால் தங்களை மறந்த நிலையில் நின்றிருந்த வைஷ்ணவிக்கும், தருணுக்கும் தித்திப்பாய்இருந்தது. வைஷ்ணவிக்கு தருணிடம் இருந்து விலகும் எண்ணம் இல்லை என்பது போல் நின்றிருந்தாள். தருண் தான் அவளின் நிலையை எண்ணி இனியும் நின்றிருந்தால் நல்லது அல்ல என்று நினைத்தவன் விலக எத்தனிக்கும் பொழுது வைஷ்ணவி அனுமதித்தால் தானே, மேலும் மேலும் தருணை ஒன்றினாள். அவளே தன்னிடம் நெருக்கம் காட்டும் பொழுது விலக அவள் சொன்னது போல் சாமியார் அல்லவே. தருணும் மேலும் தன் இடைவெளியை குறைத்தான்.

வெகு நேரம் சென்று வைஷ்ணவியின் அலைபேசி ஒலியில் தன்னிலையில் இருந்து இறங்கியவன் அலைபேசியை எடுப்பதற்குள் நின்றிருந்தது. ரேஷ்மா தான் தருணின் அலைபேசிக்கு அடித்து அடித்து ஓய்ந்து போனவள் வைஷ்ணவிற்கு அழைத்தாள், அவளும் எடுத்தால் தானே, அதில் கடுப்பானவள் மீண்டும் அழைக்க அதை அட்டென்ட் செய்து காதில் வைத்த தருணின் காதில் புகை வந்து வர ஆரம்பித்திருந்தது. ரேஷ்மா தான் கத்தி கொண்டிருந்தாள்.

"ஏன்டா ரெண்டு பேரும் அப்படி என்னடா செஞ்சுட்டு இருந்தீங்க, நானும் எவ்வளவு நேரம் உங்களுக்கு போன் பண்ணிட்டே இருக்குறது,ஒரு பிள்ளையை வண்டியை எடுத்துட்டு வர சொன்னோமே இந்நேரம் வந்துட்டு நமக்காக காத்துட்டு இருப்பாளேனு நினைப்பு இல்லாம ரொமான்ஸா பண்ணிட்டு இருக்கீங்க, இன்னும் பத்து நிமிஷத்துல இங்க வரலை உன்னோட ஆளு வீட்ல போய் வண்டியை நிப்பாட்டிட்டு நான் பாட்டுக்கு போயிட்டே இருப்பேன் " என்று பொரிந்து தள்ளி கொண்டு இருந்தாள்.

அவளும் தருண் சொன்னது போல் வைஷ்ணவியின் வீட்டின் அருகில் வந்து நின்று பதினைந்து நிமிடங்கள் மேல் ஆகியும் வராதவர்களின் மேல் கொலை வெறியே எழுந்தது. ரேஷ்மாவின் கூற்றில் பதறிய தருண் "அடியே அப்படி ஏதும் வில்லங்கமா பண்ணி வைக்காதடி என்னோட வில்லன் விஷ்ணு அங்க இருப்பான்டி கேள்விக்கு பொறந்தவன், இவளை கேள்வி கேட்டே வறுத்து எடுப்பான்" என்றான்.

தருண் தன்னுடைய தம்பி விஷ்ணுவை வில்லன் என்று சொல்லியதில் கடுப்பாகி அடி வெளுத்துவிட்டாள் வைஷ்ணவி. அவளை அடக்கியவன் ரேஷ்மாவிடம் "இன்னும் பத்து நிமிஷத்துல வந்துடுவோம்,எதுவும் ஏடாகூடமா செஞ்சுடாதடி" என்றவன் அலைபேசியை அணைத்து விட்டு வண்டியை நோக்கி செல்லும் பொழுது மீண்டும் வைஷ்ணவி தொடர்ந்தாள். "ஏன்டா என் தம்பி என்மேல இருக்குற அக்கறையில என்கிட்ட கேட்டா அது உனக்கு வில்லன் மாதிரி இருக்கா, உன்ன நம்பாம தான்டா அவன் என்ன அக்கறையா கேக்குறான்" என்றவுடன் தருண் வைஷ்ணவியிடம் "ஹேய் என்னடி சொல்ற உன் தம்பிக்கு நாம விரும்புறது தெரியுமா?" என்றான் பதட்டத்தில், அவனின் பதட்டம் வீட்டில் இவனால் எதுவும் பிரச்சனை வந்து விடுமோ என்பதே, வீட்டில் பேசி சுமுகமாக திருமணத்திற்கு சம்மதம் வாங்க வேண்டும் என்பதே இவன் எண்ணம் (வீட்ல காதலிக்கிறதவே சொல்லலையாம், இதுல கல்யாணம் வர யோசிக்கிறியே ராசா ???)


வைஷணவியை நோக்கி திரும்பியவன் “நான் சாமியார் இல்லைன்னு ஒத்துக்கிறியா இல்லனா மறுபடியும் ப்ரூப் பண்ணனுமா டார்லி" என்று சரசமாக வினவியவன் மேலும் தன் சீண்டல்களை தொடர வழி செய்ய, வைஷ்ணவியின் முகத்தில் சில மணித்துளிகள் முன் நடந்த இதழ் முத்தம் கண் முன் விரிந்து வெட்க புன்னகையை பூக்க செய்தது.அதை தருணிற்கு காட்டாது வரவழைக்கப்பட்ட குரலில் "கொஞ்சம் வண்டிய எடுக்குறியா இல்லையாடா, நமக்காக ரேஷ்மா அங்க தனியா காத்துட்டு இருப்பா" என்றாள் வைஷ்ணவி.

வைஷ்ணவியின் கூற்றில் வண்டியை நோக்கி நகர்ந்தவன் அவள் ஏறுவதற்கு ஏதுவாக வண்டியில் அமர்ந்து வண்டியை உயிர்ப்பித்து நின்றவன் அவள் ஏறும்போது திரும்பி பார்க்க அப்பொழுது தான் கவனித்தான்,இவ்வளவு நேரம் அரங்கேறிய செயலில் அவளின் புடவை விலகி அவளின் பளீர் வெண்ணிற இடை அந்த இருள் சூழ்ந்த நேரத்திலும் தெரிந்தந்தில் சித்தம் தடுமாறியவன் வண்டியை விட்டு இறங்கினான். வைஷ்ணவியும் திடீரென அவன் இறங்கியதை பார்த்து கொண்டு இருக்கும் பொழுது அடுத்ததாக தருண் செய்த காரியத்தில் அதிர்வின் எல்லைக்கு சென்றவள் விழிகளை அகல விரித்து அசையாது நின்றாள்.
 

revathyrey04

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆதியின் அறைக்குள் நுழைந்த பிரபாகர் ரோஹித்தை வேலை விட்டு அனுப்பியதையும்,யாழினியிடம் தான் பேசியவைகளும், ரோஹித் கல்லூரி நாட்களில் தீக்ஷாவை காதலித்ததும்,அவள் மறுத்ததும் என்று அனைத்தையும் விடாது கூறியவன் ஆதியை பார்த்தான். பாறையென இறுகி இருந்த முகத்தினை கண்டவன் அவனின் கோபத்தினை புரிந்து கொண்டு "எவ்ரித்திங் ஆல்ரைட்...?" என்றான் பிரபாகர். ஏனெனில் தன் நண்பனும் கம்பெனியின் எம்டி யுமான ஆதியை பற்றி கல்லூரி காலங்களில் இருந்து நன்கு அறிந்தவன் ஆகிற்றே. "கம் ஆன் ஆதி, எதுக்கு இப்போ இவ்ளோ டென்ஷன் ஆகனும், அதான் அவனை வேலையை விட்டு தூக்கிட்டோமே, நீயும் சிஸ்டர தான் ஒன்னும் ஆக விடாம அவங்க வீட்ல விட்டுட்டியே, கால்ம் டௌன் டா" என்றான்.

அதில் தன் நண்பனை ஏறெடுத்து பார்த்தவன், "தெரியலைடா அவளை என்னோட கண் பார்வையிலே வச்சிருக்கணும்னு தோணுது,ஏதோ நடக்க கூடாதது நடக்க போகுதுனு மனசு கிடந்து அடிச்சுக்கிதுடா" என்று கரகரப்பான குரலில் பேசிய தன் நண்பன் பிரபாகர் முற்றிலும் புதிது, தான் அமர்ந்திருந்த இருக்கையில் எழுந்த பிரபாகர் நண்பனின் அருகில் சென்று அவனின் தோலில் தன் கரத்தினை வைத்து அழுத்தி குடுத்தவன் "எவ்ரிதிங் வில் பி பைன் ஆதி, நீ சிஸ்டர் பக்கத்துல தான இருக்க, உன்ன மீறி ஏதும் நடந்திடுமா, இல்லை நீ தான் நடக்க விட்டுடுவியா..?" என்றவன் மேலும் இன்னைக்கு நைட் வெளியே போலாம் ஆதி. இப்போ நான் கிளம்புறேன்டா .." என்றவன் வெளியில் சென்று விட்டான்.

பிரபா வெளியில் சென்றதன் பின்னும் தன் யோசனையில் ஆழ்ந்திருந்தால் ஆதி அவனிற்கு தீக்ஷா வை எப்போது கல்லூரியில் பார்த்தானோ அன்றிலிருந்து அவளின் கட்டுப்பாடான மணம் அவன் வசம் இல்லாது தீக்ஷாவின் புறம் சென்று விட்டது . அவளை எப்பொழுதும் தன் பார்வை வட்டத்திற்குள், தன் அருகில் வைத்து கொள்ள ஒவ்வொரு நிமிஷமும் மனம் ஏங்கியது.எதற்கு அசரதவன் தன்னவளிற்கு ஆபத்து நேரவில்லை என்றாலும் நேர சந்தர்ப்பம் வந்ததே அவனிற்கு அத்தகைய கலகத்தினை உண்டு செய்தது. உடனே தீக்ஷாவை காண வேண்டும் என்ற ஆவல் எழுந்த அதே நொடி கதவு திறக்கும் ஓசை கேட்டது.

ஆதியின் கதவினை தட்டி அனுமதி பெறாது யாரும் உள்ளே நுழைய முடியாது அவ்வாறு இருக்க யாரு என்று பார்த்தவனின் கண்ணனுக்கு தன் எண்ணத்தின் நாயகியாகிய பளீர் புன்னகையுடன் உள்ளே வந்தால். அதில் இவ்வளவு நேரம் ஆதியின் மனதில் எழுந்த சஞ்சலங்கள்,வருத்தம் அனைத்தும் சூரியனை கண்ட பனித்துளி போல் மாயமாய் மறைந்தது.ஆதியின் டேபிள் முன் வந்து நின்றவளை பார்த்தவன் எண்ணியது ஒன்றே ஒன்று தான், இந்த புன்னகை முகத்திற்காக எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்பதே உள்ளத்தில் அவளின் பால் ஆதியின் மனம் சாய்ந்தாலும் தன் கெத்தை விடாது "எஸ் மிஸ் தீக்ஷா, சொல்லுங்க," உங்களுக்கு டாஸ்க் மெயில் வந்துச்சா , எனி டவுட் ஆன் தட் என்று கடமை தவறாது எம் டி யின் தோரணையில் அமர்த்தலாக கேட்டால்
அதில் தீக்ஷாவின் முகம் காற்று போன பலூனாய் சுருங்கியது . இருந்தும் ஆதிக்கு சளைத்தவள் இல்லை என்பது போல் உடனே தன் முகபாவனையை மாற்றியவள் "எஸ் சர்ர் ,ரெசெவ் மெயில் ,டவுட் கேட்க்க தான் வந்தேன்" என்று அரைமணி நேரம் தன் கேள்வி கணைகளை தாக்கினால் ,அதில் ஆதி தான் "ஏன்டா இவகிட்ட போய் கேட்டோம் ,ராட்சசி மனசாட்சி இல்லமல்;மனுஷன படுத்துற " என்று நொந்து கொள்ள வேண்டியதையிற்று .

பின்னே நேற்று நடந்த ரோஹித்தின் பிரச்சனைக்கு, அவனை வேலையை விட்டு தூக்கியா செய்தியை யாழினியின் மூலம் சற்று நேரம் முன்பு கேள்விப்பட்டேன் பிரபாகர் ஆதியின் அறையை விட்டு வெளியில் செல்லும் வரை காத்துருந்தவாள் ,பிரபா வெளியில் சென்றதும் ஆதியை காண வந்தால் எம்.டியின் கெத்தினை காட்டினால் என்ன செய்வது? நேற்று காட்டிய ஆதியின் நெருக்கம் என்னவோ செய்ததில் இன்றும் அதே நினைப்பில் இருந்தவளின் மனம் முற்றிலும் அவனின் அருகாமையை ஒவ்வொரு நிமிடமும் எதிர்பார்த்தது.அவளின் கண் முன் ஆதியின் அறையை ஒவ்வொரு முறை வரும் பொழுதும் ஏதேனும் செய்தோ,வம்பு இழுத்து கொண்டோ இருக்கும் ஆதியின் செயல் நினைக்க வைக்கதாக இருக்கும், அதே போல் இன்றும் வேலையில் சேர்ந்த ஒரு மாத காலத்தில் நடந்த நிகழ்வு கண் முன் விரிந்தது.

"நீ என்னருகில் இல்லை என்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை நீ எனக்குள் இருக்கின்றாய் என்பது".

பூக்கும்.
 

revathyrey04

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் டியர் ப்ரண்ட்ஸ் அண்ட் லவ்லி சிஸ்டர்ஸ்,

ஒரு புன்னகை பூவே அடுத்த அத்தியாயத்துடன் வந்துட்டேன் படிச்சிட்டு சொல்லுங்கோ. ஒரு வார்த்தை கமெண்ட் வந்தாலும் நான் ரொம்ப ஹாப்பி. இது வரை லைக்ஸ் கமெண்ட்ஸ் குடுத்த ஆல் டியர்ஸ் தாங்க் யூ சோ மச்

http://srikalatamilnovel.com/community/threads/ரேவதியின்-ஒரு-புன்னகைப்-பூவே-கருத்துத்-திரி.414/

இப்படிக்கு உங்கள் அன்பு தங்கை ரேவதி 😍😍😍
 

revathyrey04

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
புன்னகை 20:

வண்டியில் வைஷ்ணவி ஏறி அமரும் பொழுது தான் கவனித்தான். சில மணித்துளிகள் முன் நிகழ்ந்த நிகழ்வின் உதவியில் அந்த இருளில் ஒளிர்ந்த அவளின் பளீர் வெண்ணிற இடையில் தன்னுடைய சித்தம் தடுமாறியவன்,வண்டியில் இருந்து இறங்கினான். வண்டியில் ஏறிய பின் மறுபடி இறங்கியவனை என்ன என்பது போல் பார்த்து கொண்டிருந்த வைஷ்ணவியின் முன் முழங்காலினை தரையில் ஊன்றி மண்டியிட்டவன் வைஷ்ணவி யோசிக்கும் முன் அவளின் பளீர் மென் இடையில் தன் வலிய கரங்களில் பற்றினான். அதில் அவளின் மெல்லிய தேகம் நடுங்க எழுந்த சிலிர்ப்பில் தருணை விட்டு விலக எத்தனித்தாள். விலக முயன்றாளே தவிர விலக அனுமதிக்கவில்லை அந்த கள்வன்.

இவ்வளவு நேரமும் அரங்கேறிய இதழ் முத்தங்கள் உணர்த்திடாத அவனின் ஸ்பரிசத்தினை அவனின் இந்த செயல் உணர செய்தது. அதில் கண்களை விரிய பார்த்திருந்தவள் அதன் பின் அவன் அவளின் இடையில் பதித்த இதழினை கண்டு உடல் முழுவதும் அதிர்வலைகள் சீறி பாய்ந்தது. வெளிப்படையாகவே அதிர்ந்து நின்றாள். அவளின் நிலையினை உணர்ந்தவன் தான் அமர்ந்திருந்த நிலையில் இருந்து எழுந்தவன் "என்னமா இந்த வாய் பேசுது,இப்போ ஒரே ஒரு முத்தத்துக்கு இப்படி பேசவே தெரியாத மாதிரி அமைதியா இருக்கியேடி டார்லி, உன்ன வச்சுட்டு என்ன பண்றது" என்று சீண்டி விட்டே வண்டியில் அமர்ந்து அதனை உயிர்ப்பித்தான்.

அதில் வாயாடியாய் திரும்பிய வைஷ்ணவி "ஏன்டா பண்றதெல்லாம் பண்ணிட்டு நல்லவன் சீன் வேற, இதுக்கு தான்டா உன்ன நம்பாம என் தம்பி கேள்வி கேட்குறான்" என்றாள் வைஷ்ணவி. அவளின் துடுக்கு பேச்சினில் இயல்பிற்கு திரும்பி விட்டாள் என்பதை உணர்ந்தவன் மேலும் பேசி அவளிடம் வாங்கி கட்டிக்கொண்டே வண்டியை கிளப்பினான். வண்டியில் ஏறி அமர்ந்தவள் வரும் பொழுது அமர்ந்தது போல் இல்லாது தருணின் முதுகினை உரசியபடியே அமர்ந்து வந்தாள். அதில் தனக்குள் சிரித்து கொண்டவன் இத்தனை நாட்கள் அவளின் அருகாமை இன்றி எவ்வாறு இருந்தோம் என்றே யோசித்து வந்தான்.

வண்டியினை ரேஷ்மா சொன்னது போல் அவள் நின்றிருந்த இடத்தினில் நிறுத்து, தன்னவளிடம் ஆயிரம் பிரியாவிடை கொடுத்தும்,ரேஷ்மாவிடம் பல திட்டுகளை வசவுகளை பெற்றுக்கொண்டே ரேஷ்மாவினை தன் வண்டியில் ஏற்றி கொண்டு அவளின் ஹாஸ்டல் நோக்கி அகன்றான்.
 

revathyrey04

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆதியின் அறைக்குள் நுழைந்த தீக்ஷாவிற்கு எப்பொழுதும் போல் இன்றும் ஒரு நிகழ்வு கண் முன் விரிந்தது

வேலையில் இருந்த ஒரு மாத இடைவெளியில் அன்றும் ஆதி தன் அறைக்கு தீக்ஷாவிற்கு போன் செய்த ஆதி தன் அறைக்கு வருமாறு அழைத்தவன் அவள் வரும் முன் இடத்திற்கு வந்து விடலாம் என்ற எண்ணத்தில் அவனின் அறையில் இருக்கும் உள்ளறைக்கு சென்று விட்டான்.ஆதி எப்பொழுதும் அலுவலக விஷயங்கள் பேச மட்டுமே அழைப்பான் என்றெண்ணிய தீக்ஷா செய்து கொண்டிருந்த வேலையினை அப்படியே விட்டுவிட்டு உடனே ஆதியின் அறைக்கு சென்றாள். அங்கு சென்று கதவினை தட்டி விட்டு அவனின் அனுமதிக்காக நின்றிருந்தாள். இரண்டு மூன்று முறை தட்டியும் பதில் இல்லாது உள்ளே நுழைந்தாள்.

ஆதியின் நாற்காலியில் அவன் இல்லாது போக அறையை சுற்றிலும் பார்வையை ஓட்டினாள். அவன் அங்கு இல்லை என்று பார்த்துக்கொண்டே அவனின் நாற்காலியை நெருங்கியவள் நினைவு சடாரென ஆதி அதில் அமர்ந்து வேலை பார்க்கும் தோரணை நியாபகம் வர சுற்றி பார்த்து கொண்டே அவனின் நாற்காலியில் அமர்ந்தாள். அமர்ந்ததும் அவனை போலவே இடது கையினை நாற்காலியின் இடது கைப்பிடியில் ஊன்றியும்,வலது கையினை லேப்டாபினிலும் வைத்து வேலை செய்வது போல் பாவலா காட்டிக்கொண்டு இருந்தாள்.

இவை அனைத்தையும் நமட்டு சிரிப்புடன் உள்ளறையில் இருந்து பார்த்தபடி சத்தமில்லாது அந்த அறை கதவின் மேல் சாய்ந்து நின்று பார்த்தவன் அவளினை கூப்பிட எத்தனிக்கும் பொழுது வெளிக்கதவு தட்டும் ஓசை கேட்டது. அதில் மேலும் தன் கெத்தினை கூட்டியவள் "எஸ் கம் இன்" என்ற கெத்தான தோரணையில் ஆதிக்கு இதயமே நின்று விடும் போல் இருந்தது.


ஏனெனில் யார் வேண்டுமானாலும் வரலாம்... வந்தால் இங்கு நடக்கும் கூத்தை கண்டு ஆதியின் ஸ்ட்ரிக்ட் ஆஃபீஸ் கெத்து போய்விடுமே என்ற அதிர்வில் தான் பார்த்தான்.


தன் சிலிர்ப்பை மறைத்தவள் அவனின் கைகளை உதற முயன்றவளை லாவகமாக தடுத்தவன் “ஒரே ஒரு தடவை பேபி ப்ளீஸ் ரொம்ப ஏங்கி போயிருக்கேன்ல” என்று அவளை நெருங்கி நின்றான் ஆதி. “எனக்கு நிறைய வேலை இருக்கு விடுங்க நான் போகனும், அப்பறம் கிளம்பும் பொழுது அது முடிச்சாச்சா இது முடிச்சாச்சான்னு உயிரை வாங்குவீங்க” என்றாள் எங்கோ பார்த்தபடி . அதில் விஷம சிரிப்புடன் “சரி இன்னைக்கு ஒன்டே உன்ன எதுவும் கேக்க மாட்டேன் சோ ஒரே ஒரு தடவை பேபி ப்ளீஸ்” என்றவன் மேலும் தொடர்ந்து “வீட்ல வந்து கல்யாணத்தை பத்தி பேசவா என்னால முடியலை பேபி” என்றான் கிறக்க குரலில்.
 

revathyrey04

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அதில் கண்களை அகல விரித்தவள் “இப்ப எதுக்கு ஆது கல்யாணத்தை பத்தி” என்று கண்களை சுருக்கினாள். அவளின் ஆது என்ற அழைப்பு மயக்க நிலைக்கு தள்ளி சென்றது. அவளின் செயலும் அழைப்பும் ஆதியை என்னவோ செய்து அவனில் எழும் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த இயலாது “இதுக்கு மேல இங்க நின்றிருந்ததா அவ்ளோ தான் நீ கிளம்பு பேபி” என்று அவளிடம் சொன்னவன் தனக்குள் சீக்கிரம் கல்யாணத்தை பற்றி பேச வேண்டும் என்று கூறி கொண்டான்.

அவளின் கன்னத்தை தட்டி கிளம்ப சொன்னவன் "உன்னோட பாச மலர் திரும்பி வந்தாலும் வருவான், உன் ப்ரண்ட் பாடு தான் திண்டாட்டம்"என்றான் ஆதி. தீக்ஷாவிற்கும் தன் தோழியின் காதல் பார்வையும், அவள் அறியாத பொழுது பிரபாவின் பதில் பார்வையும் பற்றி தெரியுமே. அதனால் சிரித்தபடி வெளியில் செல்ல கதவு வரை சென்றவள், மீண்டும் ஆதியின் அருகில் வந்து நின்றாள். அவன் என்ன என்பது போல் புருவத்தினை ஏற்றி இறக்க அவனே எதிர்பாரதா வண்ணம் எம்பி அவனின் கன்னத்தில் முத்தினை பதித்தவள் ஓடிவிட்டாள். அவளின் திடீர் செய்கையில் திகைத்தவன் பின் "வர வர கொழுப்பு அதிகம் ஆகிடுச்சு" என்று சிரித்தபடி தன்னுடைய வேலையை தொடர்ந்தான்.

தன் நினைவில் இருந்து மீண்டு வந்தவள் ஆதியை பார்த்து " பாவமே ஒரு ஜீவன் ரொம்ப கெஞ்சுதேனு கல்யாணத்துக்கு சரின்னு சொல்லலாம்னு வந்தேன்,நீங்க காட்டின கெத்துக்கு என்னோட முடிவை மாத்திக்கிட்டேன். இனி எப்போ எனக்கு தோணுதோ அப்போ வந்து சொல்றேன். அது வரைக்கும் என்கிட்டே நெருங்குனீங்க அவ்வளவு தான்" என்ற தீக்ஷாவின் கூற்றில் பதறிய ஆதி, "அய்யோ பேபி நான் சும்மா உன்னோட ரியாக்ஷன் பார்த்தேன், அதுக்காக இவ்வளவு பெரிய இடியா என் தலையில போடுவ சும்மா உன்ன சீண்டினேன்டி" என்று அவளின் அருகில் வந்தான். அதற்கு அவளோ "நான் சும்மா எல்லாம் சொல்லலை ஹூம் " என்று பழிப்பு காட்டியபடி ஓடிவிட்டாள் அவளின் செய்கையில் ஆதியின் மன அழுத்தம் அனைத்தும் மறைந்து முகம் முழுவதும் புன்னகையை தத்தெடுத்து கொண்டது.

அவளின் கன்னத்தை தட்டி கிளம்ப சொன்னவன் "உன்னோட பாச மலர் திரும்பி வந்தாலும் வருவான், உன் ப்ரண்ட் பாடு தான் திண்டாட்டம்"என்றான் ஆதி. தீக்ஷாவிற்கும் தன் தோழியின் காதல் பார்வையும், அவள் அறியாத பொழுது பிரபாவின் பதில் பார்வையும் பற்றி தெரியுமே. அதனால் சிரித்தபடி வெளியில் செல்ல கதவு வரை சென்றவள், மீண்டும் ஆதியின் அருகில் வந்து நின்றாள்.

அவன் என்ன என்பது போல் புருவத்தினை ஏற்றி இறக்க அவனே எதிர்பாரதா வண்ணம் எம்பி அவனின் கன்னத்தில் முத்தினை பதித்தவள் ஓடிவிட்டாள். அவளின் திடீர் செய்கையில் திகைத்தவன் பின் "வர வர கொழுப்பு அதிகம் ஆகிடுச்சு" என்று சிரித்தபடி தன்னுடைய வேலையை தொடர்ந்தான்.

தன் நினைவில் இருந்து மீண்டு வந்தவள் ஆதியை பார்த்து " பாவமே ஒரு ஜீவன் ரொம்ப கெஞ்சுதேனு கல்யாணத்துக்கு சரின்னு சொல்லலாம்னு வந்தேன்,நீங்க காட்டின கெத்துக்கு என்னோட முடிவை மாத்திக்கிட்டேன். இனி எப்போ எனக்கு தோணுதோ அப்போ வந்து சொல்றேன். அது வரைக்கும் என்கிட்டே நெருங்குனீங்க அவ்வளவு தான்" என்ற தீக்ஷாவின் கூற்றில் பதறிய ஆதி, "அய்யோ பேபி நான் சும்மா உன்னோட ரியாக்ஷன் பார்த்தேன், அதுக்காக இவ்வளவு பெரிய இடியா என் தலையில போடுவ சும்மா உன்ன சீண்டினேன்டி" என்று அவளின் அருகில் வந்தான். அதற்கு அவளோ "நான் சும்மா எல்லாம் சொல்லலை ஹூம் " என்று பழிப்பு காட்டியபடி ஓடிவிட்டாள் அவளின் செய்கையில் ஆதியின் மன அழுத்தம் அனைத்தும் மறைந்து முகம் முழுவதும் புன்னகையை தத்தெடுத்து கொண்டது.
 

revathyrey04

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அதன் பின் நாட்கள் அழகாக எந்தவித பிரச்சனையும் இன்றி உருண்டோடியது. ஆதி தீக்ஷாவின் உரையாடல்கள் அலுவலகம் மட்டும் இன்றி வீட்டிற்கு சென்றும் நேரம் காலம் பார்க்காது இரவு நேரங்களிலும் தொடர்ந்தது. வைஷ்ணவி தருணின் காதல் கல்லூரி நாட்கள் முடிவதை எண்ணி அவ்வப்பொழுது கவலை கொண்டாலும் அவர்களும் அழகாகவே நாட்களை கடத்தினர்.

காலேஜ் பார்ட்டி முடிந்து உருவான நெருக்கம் பின் இடைவெளி இல்லாது சென்றது. விஷ்ணுவிற்கு வைஷ்ணவியின் காதல் பற்றி தெரிந்தாலும் பிரான் மலையில் வைத்து கேட்டதோடு சரி அதன் பின் அவளாகவே தன்னிடம் சொல்லட்டும் என விட்டு விட்டான். வைஷ்ணவியும் நேரம் வரும் பொழுது தன் சகோதரனிடம் சொல்லிக்கொள்ளலாம் என விட்டுவிட்டாள்.

பிரபா தான் யாழினியிடம் மாட்டிக்கொண்டு முழிபிதுங்கி நின்றான். பின்னே தன்னிடம் காதல் காதல் பார்வை வீசிக்கொண்டும், வம்பு வளர்த்துகொண்டும் இருந்தவளிடம் பிரபா காதலினை செல்லும் பொழுது மறுத்தவனிடம் இடி போல் "நான் உங்களை காதலிக்கவில்லையே" என்றாள்.

இன்றோடு வேலையில் தீக்ஷாவும் யாழினியும் சேர்ந்து பத்து மாதங்கள் உருண்டோடியது யாருக்கும் காத்திருக்காது. கடந்த ஒரு வார காலமாக யாழினியின் யோசனையினில் இருந்த பிரபா யாழினியிடம் சொல்ல வேண்டும் என முடிவு எடுத்தான்.

மதியம் அலுவலக வேலையில் மூழ்கி இருந்த யாழினியை வெளியில் அழைத்து செல்ல ஆதியிடம் கெஞ்சி கூத்தாடி அழைத்து சென்றான். எப்பொழுதும் காரில் வருபவன் இன்று பைக்கில் வந்த தன் புத்திசாலித்தனத்தை எண்ணி தன்னை தானே மெச்சியபடி யாழினியுடன் செல்லும் முதல் பயணத்தை ரசித்து கொண்டு வந்தான். பின்னணியில் பாட்டு ஒன்று இல்லாத குறை தான்.

ஆனால் யாழினியோ பிரபாவை கடுப்பேற்றும் எண்ணம் மட்டுமே கருத்தினில் கொண்டு வேறு எதை எதையோ சம்மந்தம் இல்லாது பேசி கொண்டு வந்தாள். பிரபாவிற்கு தான் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது தன்னுடைய காதல் கை கூட போகும் சந்தோஷம் நினைத்து.

வேலையில் சேர்ந்த இவ்வளவு மாதங்களில் தன்னை தன்னுடைய மனதினை புரிந்தாலும் புரியாதபடி நடித்தவனை தான் கடுப்பேற்றினாள். அவளின் மேல் உள்ள எரிச்சலில் வண்டியின் வேகத்தினை அதிகரித்தவன் அழைத்து சென்று வண்டியை நிறுத்திய இடம் ஒரு பெரிய மாலின் முன்பு.


“அன்பு காட்டுவதில் ஜெயிப்பது நீயென்றால் உன்னிடம் தோற்பதும் எனக்கு வெற்றியே”

பூக்கும்.
 

revathyrey04

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் டியர் ப்ரண்ட்ஸ் அண்ட் லவ்லி சிஸ்டர்ஸ்,

ஒரு புன்னகை பூவே அடுத்த அத்தியாயத்துடன் வந்துட்டேன் படிச்சிட்டு சொல்லுங்கோ. ஒரு வார்த்தை கமெண்ட் வந்தாலும் நான் ரொம்ப ஹாப்பி. இது வரை லைக்ஸ் கமெண்ட்ஸ் குடுத்த ஆல் டியர்ஸ் தாங்க் யூ சோ மச்

http://srikalatamilnovel.com/community/threads/ரேவதியின்-ஒரு-புன்னகைப்-பூவே-கருத்துத்-திரி.414/


இப்படிக்கு உங்கள் அன்பு தங்கை ரேவதி 😍😍😍
 
Status
Not open for further replies.
Top