All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ரேவதியின் "ஒரு புன்னகைப் பூவே!!!" - கதைத் திரி

Status
Not open for further replies.

revathyrey04

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் sisters லவ்லி டியர் ப்ரண்ட்ஸ்,

இதோ ஒரு புன்னகை பூவே அடுத்த அத்தியாயம்....எங்கையும் தப்பாவோ....இல்லை தொடர்ச்சி இல்லாமலோ இருந்தாள் மன்னிச்சு...அந்த கருத்தையும் தெரியபடுத்துங்கள்...உங்களின் கருத்துக்கள் தான்...எனர்ஜி டானிக்.....மறக்காமல் கீழே உள்ள லிங்கில் கருத்துகளை பதிவிடுங்கள் டியர்ஸ்....

இது வரை லைக்ஸ் கமெண்ட்ஸ் போட்ட செல்ல சிஸ்டர்ஸ் ஆல் லவ் யூ........

https://srikalatamilnovel.com/community/threads/ரேவதியின்-ஒரு-புன்னகைப்-பூவே-கருத்துத்-திரி.414/page-25#post-156285

இப்படிக்கு
உங்கள் அன்பு தங்கை
ரேவதி முருகன்.......
 

revathyrey04

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
புன்னகை 27



ஷாலினியின் அறை கதவினை தட்டிவிட்டு அவளின் பொலிவு இழந்து இருக்கும் முகத்தினை கண்டு கோபத்துடன் உள்ளே நுழைந்தான் தர்ஷன். தர்ஷனை சுத்தமாக எதிர்பாராது அதிர்ந்து நின்றவளை நெருங்கிய தர்ஷன் எதுவும் பேசவில்லை. இரண்டு மாதங்கள் கண்டு தன்னவனை தன் அறையில் கண்டவள் உணர்ச்சிகள் மேலோங்க அவளின் கட்டுப்பாடுகளை மீறி “ஆது அத்தான்” என்று இறுக கட்டிக்கொண்டாள்.



ஷாலினியை திட்டலாம் என்று நெருங்கியவன் இந்த எதிர்பாராத அணைப்பில் எழுந்த இனிய அதிர்வில் முதலில் செய்வது அறியாது நின்றவனின் கரம் பின் ஆதூரமாய் அணைத்து கொண்டது. நீண்ட நெடிய நிமிடங்கள் நீடித்த அணைப்பு ஷாலினியின் தன்னுணர்வு பெற்ற பின்பே முடிவிற்கு வந்தது. முதலில் அணைப்பில் கட்டுண்டு இருந்தவள் தர்ஷனின் கரம் அவளின் முதுகினை ஆதரவாக தடவி ஆறுதல் செய்ததில் தர்ஷனை விட்டு விலகி நின்றாள்.



விலகி நின்றாள் என்றாள் ஷாலினியின் கரம் தர்ஷனின் முதுகில் இல்லை…அவ்வளவே…பின்னே இரண்டு மாதங்கள் கழித்து தன்னவளின் அருகாமையை அவ்வளவு சீக்கிரம் இழந்து விடுவானா…????



ஷாலினியின் உயரத்திற்கு சற்று குனிந்து நின்று பார்த்த தர்ஷனின் முகமும் ஷாலினியின் முகமும் மூச்சு காற்று படும் அளவு நெருங்கி இருந்தது… தன்னவளின் அழகிய முகத்தினை பார்வையால் தன் இதயத்தினுள் சேமித்து கொண்டிருந்தான். அந்த பொழிவு மங்கிய முகத்தில் தர்ஷனை கண்ட பின் சிறிதே பொழிவு வந்ததோ…ஒளி இழந்த கண்களில் ஒளி கூடியதோ……என்பது போன்ற ஆராய்ச்சி பார்வை பார்த்தான்…..அவளின் முகத்தினை பார்த்தவன் கலைந்து கிடந்த முடிக்கற்றைகளை அவளின் காதினோரம் ஒதுக்கினான்…பின் நெற்றியில் நேர்த்தியாக இல்லாது இடம் பெயர்ந்து இருந்த பொட்டினை சரியாக வைத்து விட்டான்……பின் அவளின் இதழினை வருடியவனின் எண்ணம் இதற்கு முன் நடந்த இதழ் தீண்டல்கள் கண் முன் விரிந்தது….



தர்ஷனின் விரல்களின் ஸ்பரிசம் ஷாலினியின் மேனியில் படும் ஒவ்வொரு தீண்டளிற்கும் சிலிர்த்து நின்றாள்….அவளின் உடல் மொழியின் சிலிர்ப்பில் தனக்குள் சிரித்து கொண்டான்…..நடந்ததை மறக்க முடியாது தவிக்கிறாள் என்று புரிந்து கொண்டவன் பின் நெடு நேரமாக நின்றிருந்ததால் அருகில் கிடந்த சோபாவில் அமர்ந்தான். அருகில் ஷாலினியையும் அமர்த்தி கொண்டான்…பின் அவளின் கைகளை எடுத்து தன் கைகளுக்குள் வைத்து கொண்டவன் பேச துவங்கினான்….





“அம்மு, என்மேல கோபமா இருக்கியாடா…….ரெண்டு மாசமும் உன்ன பார்க்காம…..உன்கிட்ட பேசாம எவ்வளவு கஷ்டமா இருந்துச்சு தெரியுமா, உனக்கும் அதே கஷ்டம் தான் இருக்கும், நீயும் அப்படி தான் கஷ்டப்படுவனு தெரியும், எதுக்குடா அப்படி உன்னையும் கஷ்டபடுத்தி, என்னையும் கஷ்டப்படுத்தி…முடியலைடா அம்மு, இவ்வளவு நாளும் நீயா என்ன கூப்பிடுவனு வெயிட் பண்ணி பார்த்தேன், இதுக்கு மேலயும் விட்டா எனக்கு கிறுக்கே பிடிச்சுரும் போல அம்மு, இனியும் சும்மா இருக்க முடியாது அம்மு….அடுத்த மாசமே கல்யாணம் பண்ண மாமாகிட்ட சொல்லி ரெடி பண்ண சொல்ல போறேன்” என்றான் தர்ஷன்…



இவ்வளவு நேரமும் தர்ஷனின் பேச்சினை கேட்டு கொண்டு இருந்தவள், கல்யாணம் என்றவுடன் அதிர்ந்து “அத்தான், ……எனக்கு……கல்யாணம்……வேணாம்……….” என்று திக்கி திக்கி கூறினாள் ஷாலினி. அவளின் திணறலான பேச்சினை கண்டு கோபம் பொங்க, பார்வையிலும், வார்த்தைகளிலும் அழுத்தத்தினை கூறியவன் “உன்கிட்ட கல்யாணம் வேணுமா வேணாமானு கேட்டதாக நியாபகம் இல்லையேடி……சரி….எதுக்கு இப்போ கல்யாணம் வேணாம்னு சொல்ற, உன்ன கல்யாணம் பண்ண எனக்கு தகுதி இல்லையா, உனக்கு நான் ஏத்தவன் இல்லையா அம்மு” என்று கேட்டதில் பதறி தான் போனாள்….



பின்னே தர்ஷனிற்கு தகுதி இல்லையா தன்னை கல்யாணம் பண்ண……….தனக்கு தான் இல்லை என்று அவனிடமும் சொன்னாள்…அடுத்து கேட்ட தர்ஷனின் கேள்வியில் என்ன பதில் சொல்வது என்று தெரியாது முழித்தாள்….”ஏன் அம்மு, ஒரு வேலை, இதே மாதிரி அசம்பாவிதம் நடந்திருந்தா…??? நடக்க விட்டிருக்க மாட்டேன். இருந்தாலும் நடந்திருந்தா….அப்போ என்ன செய்திருப்ப அம்மு…..??” என்று கேட்டதில் முழித்தாள்…..பின் மெதுவான குரலில் “கல்யாணம் ஆகி இருந்தால் என் பக்கத்துல தான் இருந்துருப்பீங்க, இப்படிலாம் நடக்க விட்டிருக்க மாட்டீங்க…..நான் உங்க பொண்டாட்டிய இருந்திருப்பேன்…….அப்போ இப்படி நடந்திருந்தாலும் உங்க பொண்டாட்டி அப்படின்ற எண்ணம் தான் இருக்கும், ஆனா இப்போ நான் உங்க மனைவி இல்லையே….காதலி….மாமன் மகள்…அவ்வளவே” என்று புத்திசாலி தனமாக பேசியவளை கண்டவனின் முகம் சற்று முன் தோன்றிய கோபத்தினை துணி கொண்டு துடைத்தார்போன்று புன்னகையினை பூசி கொண்டது….



தர்ஷன் தன்னுடைய இந்த பேச்சிற்கு கோபம் கொள்வான் என்று எதிர் பார்த்தவள்….அவனின் முன்னகை முகத்தினை கண்டு குழப்பம் கொண்டாள்…..அதே குழப்ப முகத்துடன் ஏறிட்டு பார்த்தவளை கண்டு கண்சிமிட்டி சிரித்தவன்.. அடுத்த சொன்ன வார்த்தைகளில் அதிர்ந்து ஸ்தம்பித்து நின்று விட்டாள்….
 

revathyrey04

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
காலையில் நன்கு உறங்கி கொண்டிருந்த யாழினியின் அலைபேசி அடித்து அவளின் தூக்கத்தினை தடை செய்ய முயன்று தோற்று நின்று போனது. தூக்கம் என்று வந்துவிட்டால் தன்னை எதுவும் நெருங்காது என்று நினைத்து உறங்கினாள் யாழினி…ஆனால் விடுவேனா என்பது போல் மீண்டும் மீண்டும் அழைத்ததில் போர்வையின் உள் இருந்து எட்டி பார்த்து கைகளால் தன்னை தொல்லை செய்த அலைபேசியை சிணுங்கியபடி எடுத்தாள்….அவளின் எண்ணப்படி பிரபாகர் தான் அழைத்திருந்தான்…அதனை கண்டு செல்ல கோபம் எழுந்தது. பின்னே இன்று சண்டே என்பதினால் தானாக எழுந்து போன் செய்யும் வரை தொந்தரவு செய்யாதே என்று முதல் நாள் இரவே செல்ல கொலை மிரட்டல்கள் வேற…..அதனை சிறிதும் கண்டு கொள்ளாது போன் செய்தவனை எடுத்தவுடன் “ஏன்டா, அவ்வளவு தூரம் சொன்னேல்ல, இப்போ பாரு இவ்வளவு சீக்கிரம் போன் பண்ற……என் தூக்கமே போச்சு” என சினுங்கியவளை கண்டு ஏகத்துக்கும் அதிர்ந்தான்…….



ஏனெனில் அவள் சொன்ன இவ்வளவு சீக்கிரம் என்று சொல்லியது மணி ஒன்பதிற்கும் மேல் ஆகியது…”அடியேய் மணியை பாருடி, இது உனக்கு சீக்கிரமா…...எந்திருச்சு கிளம்புடி, வெளிய போகனும்ல, வந்தேன்னு வை……ரொம்ப பேசுற வாயை ….” என்று சொல்லி கொண்டே போனான்……அதன் பின்னே யாழினிற்கு நியாபகம் வந்தது….இன்று வெளியில் செல்ல போக வேண்டும் என்று பிரபாகர் சொன்னது….என்று தன் தோழி தீக்ஷாலினி, மருத்துவமனையில் இருந்து திருச்சி சென்றாலோ அன்றில் இருந்து இப்பொழுது வரை வெளியில் செல்லவோ, அலுவவகதிற்கு முன்பு போல் செல்ல அந்த ஸ்பார்க் இல்லாது இருந்தாள்.







பிரபாகரிடம் பேசிவிட்டு போனை வைத்தவள் வெளியில் கிளம்பி சென்றாள்….யாழினி மற்றும் தீக்ஷா தங்கி இருந்த வீட்டினை காலி செய்து தற்பொழுது அலுவலகத்தில் தன்னுடன் பணிபுரியும் மற்ற பெண்கள் தங்கி இருக்கும் வீட்டில் தங்கி இருக்கிறாள்…தன் இல்லாது அந்த வீட்டில் தங்க விருப்பம் இல்லாதும், அவள் இல்லாது தங்கி இருப்பது முறையாக இருக்காது என்றும் காலி செய்தாள். வெகு நாட்கள் கழித்து வெளியில் செல்வதால் உற்சாகத்தினோடு சென்றாள்……….அவளின் உற்சாகம் இன்னும் சற்று நேரத்தினில் இரட்டிப்பு ஆகுமா……இல்லை குறையுமா…என்பது பிரபா அழைத்து செல்லும் இடத்தினை பொறுத்தே………



யாழினி தங்கி இருக்கும் ஏரியாவிலேயே வந்து வண்டியில் ஏற்றி கொண்ட பிரபா ஒரு மணி நேர பயணத்தின் பின் சென்று வண்டியை நிருத்தினான்……….வண்டி நின்றவுடன் இறங்க சொல்லிய பிரபா யாழினி இறங்கவும் தான் அணிந்திருந்த கூலர்சை கழட்டியவன் யாழினியின் கேள்வியான முகத்தினை கண்டு கண் சிமிட்டினான்……எதுவும் சொல்லாது நின்றவனை கண்டவள் பற்களை கடித்து கொண்டு “எங்க கூட்டிட்டு வந்துருகிங்க, நானும் இறங்குனதுல இருந்து பார்த்துட்டு இருக்கேன், சொல்லுவீங்கன்னு……..எதுவும் சொல்லாமா இப்படி சிரிச்சா என்ன அர்த்தம்” என்றாள்…..



அதற்கும் வசீகரமாய் சிரித்தானே ஒழிய வாயினை திறந்த பாடு இல்லை….தன் கேள்விற்கு பதில் பேசாது சிரித்தவனை கண்ட யாழினி காளி அவதாரம் எடுக்க தயாரானாள்….அதனை கண்டு யாழியினை கண்டு கையெடுத்து கும்பிடுவது போல் செய்தவன் போலி பயத்தினை முகத்தில் கொண்டு, ”ஆத்தா…மலையேரிடாத………ஒரு சர்ப்ரைசா இருக்கட்டும்னு தான் எதுவும் சொல்லாம இங்க கூட்டிட்டு வந்தேன்………” என்றவன் உள்ளே அழைத்து சென்றான்….அங்கு இவளிற்கு கிடைத்த வரவேற்பில் இன்பமாக அதிர்ந்தவள்…..பிரபாவினை முறைக்க முயன்று தோற்றவள் சிரித்து விட்டாள்…..
 

revathyrey04

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தருண் மற்றும் வைஷ்ணவியின் காதல் நாளுக்கு நாள் அதிகரித்ததே தவிர சிறிதும் குறைவில்லாது சென்றது….அவர்களின் மருத்துவ படிப்பும் முடியும் தருவாயில் இருந்தது…..இவ்வளவு நாட்களும் தருணை இனிமேல் அடிக்கடி சந்திக்க இயலாது என்று கவலையுடன் வளம் வந்து கொண்டு இருந்த வைஷணவி தற்பொழுது அதற்கு நேர்எதிராக மகிழ்ச்சியில் வானத்திற்கும் பூமிக்கும் குதிக்காத குறையாக சுற்றினாள்……….பின்னே திருச்சியில் உள்ள மிக பெரிய மருத்துவமனையில் தருண் வேலைக்கு பதிவு செய்யும் பொழுதே வைஷ்ண்வியிற்கும் சேர்த்தே செய்தான்…..முதலில் தருணிற்கு மட்டும் தான் பணியில் சேரும் படியான ஆர்டர் வரவும் சில பல பெரிய தலைகளின் உதவியுடன் வைஷண்விற்கும் சேர்த்து பணி வாங்கி குடுத்து………அவளின் மகிழ்ச்சியில் இவனும் மகிழ்ந்தான்……





வைஷ்ணவி தன் தருணுடன் இணைத்து பணி செய்ய போகிறோம் என்று மகிழ்ந்தாள் என்றால்………தன் மாமா வீட்டில்…ஷாலினியுடன் இனி அவளின் வீட்டில், ஆவலுடன் இருக்க போகிறோம் என்பதில் ஏகத்திற்கும் மகிழ்ந்தாள்……….ஷாலினியும் வைஷ்ணவி தன்னுடன் இன்னும் ஓரிரு மாதங்களில் தன்னுடன் இருக்க போகிறாள் என்று ஓரளவு மகிழ்ச்சி கொண்டாள்…..தருண் வைஷ்ணவிற்கும் தன்னுடன் சேர்த்தே வேலைக்கு விண்ணப்பித்ததும் இதுவே காரணம்……தற்பொழுது ஷாலினி சென்னையில் இல்லாது…வேலைக்கும் செல்லாது…வீட்டிலேயே அடைந்து கிடப்பவளை கண்டு ஒரு புறம் நண்பனை வருத்தம் கொண்டவன் மற்றொரு புறம் ஆதர்ஷனை நினைத்து இவளின் மேல் கோபமும் கொண்டான்….பின்னே ஒன்றுமே இல்லாத விஷயத்தினை பிடித்து தொங்கி கிடப்பவளை என்னவென்று சொல்வது……



ஆனாலும் தன் தோழியும் அந்த விபத்தில் இருந்து மீண்டு விரைவில் வந்து விடுவாள் என்றும்…இல்லை என்றாள் ஆதர்ஷன் மீண்டு வர வைப்பான் என்றும் சற்றே ஆறுதல் அடைந்தான்…எனவே சிறிது காலமேனும் வைஷ்ணவி ஷாலினியுடன் இருந்தாள் விரைவில் அந்த சம்பவத்தில் இருந்து வெளி வந்து விடுவாள் என்று இந்த ஏற்பாடு…..இப்பொழுது வரை தருணும் வைஷ்ணவியும் ஒருத்தரை ஒருத்தர் விரும்புவது ஷாலினிற்கு தெரியாது…..ஒரே காலேஜ் என்று மட்டும் தெரியும்….இருவரும் அறிமுகம் என்று மட்டுமே தெரியும்…..



தருணிற்கு தற்பொழுது வைஷ்ணவியை பார்க்க வேண்டும் போல் தோன்றியது…..நேற்றில் இருந்து விடாது காய்ச்சலில் அவதி படுபவளின் அருகில் இருந்து தான் பார்த்து கொள்ள வேண்டும் என்று எழுந்த உணர்வுகளை கட்டுபடுத்தியவன் வைஷ்ணவியிற்கு அழைத்தான்…..அந்த பக்கம் எடுத்த வைஷ்ணவி சோர்ந்த குரலில் “தரு………….” என்று அழைத்தாள்….அதை கண்டு சிரிப்பதா….இல்லை கோபம் கொள்வதா……இல்லை அவளிற்கு ஆறுதல் சொல்வதா என்று சத்தியமாக தெரியாது முழித்தான் தருண்…இருந்தும் “வைஷு…………இப்போ எப்படிடா இருக்கு, ஆர் யூ பீல் பெட்டெர் பேபி…? எதாவது சாப்டியா…..டேப்லட் எடுத்துட்டியா…..” என்றான்….அவனின் அக்கரையில் சிலிர்த்தவள் சிறிது செல்ல கோபத்துடன் சிணுங்கிய குரலில் “தரு………நானும் ஒரு டாக்டர் தான்…….எனக்கு ட்ரீட்மென்ட் எடுத்துக்க தெரியாதா….கே.ஜி பசங்ககிட்ட கேட்கிற மாதிரி கேட்கிற……” என்றதில் அந்த பக்கம் இருந்த தருண் விழுந்து…விழுந்து சத்தமாக சிரிக்க ஆரம்பித்து விட்டான்…………………அவனின் சிரிப்பில் வைஷ்ணவி சிணுங்க ஆரம்பித்தாள்….



“என்ன தரு…சிரிக்கிற….” என்றதில்………அதே சிரிப்போடு……..”நீயும் டாக்டர் தானு அப்ப அப்போ நானும் டாக்டர்….நானும் டாக்டர்னு நியாபகம் படுத்து டார்லி இப்போ மாதிரி…..” என்று கலாய்க்க ஆரம்பித்து விட்டான்………அதில் மேலும் சிணுங்கியவள் “தரு…………..ஏதோ நேத்து கொஞ்சமே கொஞ்சம் பயந்துட்டேன்…..அதுக்கு போய் இப்படி கலாய்கிற……” என்றதில் “ஏதேது….கொஞ்சமே கொஞ்சம் பயந்தியா…..போடி இவளே…..நல்லா மானத்தை வாங்கிட்டடி……..ஒரு சின்ன கேஸ்…..அதுக்கே இப்படி பயந்துட்ட….நீ எல்லாம் நாளைபின்ன எப்படி சர்ஜெரி……எமெர்ஜென்சி கேஸ் எல்லாம் பார்க்க போற…???” என்றான் தருண்.....



அவனின் கூற்றில் இருந்த உண்மையை புரிந்து தான் இருந்தாள்…இருந்தும் மருத்துவபடிப்பின் முடிவில் இருக்கையில் இந்த பயம் இருக்கவே கூடாது அல்லவா…….தான் பயந்தால் என்னால் எப்படி இன்னொரு உயிரிற்கு பாதுகாப்பும்,ஒரு மருத்துவராய் தன்னிடம் சிகிச்சைக்காக வருபவரிற்கும் ஆறுதல் அளிக்க முடியும்….என்று யோசித்தவள் எதுவும் பேசவில்லை….அவளின் பேச்சற்ற தன்மையினை தெரிந்து அவளின் மனதினை புரிந்து கொண்டவன்…”விடு வைஷும்மா……இப்போ தான கொஞ்சம் கொஞ்சம் நம்ம ட்ரீட்மென்ட் செய்துட்டு ப்ராக்டிஸ்ல்ல இருக்கோம்….போக போக பழகிடும்…..இப்போ எதை பத்தியும் கவலை படாம ரெஸ்ட் எடுடா…….” என்றவனின் கண்களில் நேற்று ப்ராக்டிஸில் நடந்த சம்பவம் கண்முன் வந்தது….




பூக்கும்.
 
Last edited:

revathyrey04

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ப்ரணட்ஸ்,

இதோ அடுத்த அத்தியாயம் போட வ வந்துட்டேன். ரொம்ப நாள் இடைவெளி. மன்னிக்கவும்,இனி தொடர்ந்து வந்திடுவேன்

படிச்சிட்டு கமெண்ட்ஸ் ப்ளீஸ்

 

revathyrey04

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
புன்னகை 28:

தன்னை கல்யாணம் செய்து கொள்வதற்கு தர்ஷனிற்கு தகுதி இல்லையா என்று கேட்டவனை கண்டு இல்லை என்றும் கல்யாணம் முன்னே முடிந்திருந்து இதே மாதிரி வகையான அசம்பாவிதம் எதிர்பாராமல் நடந்திருந்தால் தர்ஷனின் மனைவி என்ற எண்ணம் மட்டுமே இருந்திருக்கும் என்றும், இப்பொழுது தான் வெறும் காதலி…மாமன் மகள் என்று சொல்லியதற்கு தன்னுடைய கோபம் கொண்ட முகத்தினை வசீகரமான புன்னகை முகத்திற்கு மாற்றினான் தர்ஷன்.

தன் பதிலிற்கு நியாயமாக கோபம் தான் பட வேண்டும்….ஆனால் தர்ஷனின் புன்னகை முகம் குழப்பத்தை உண்டு பண்ணிய போதும்….அவனின் வசீகர சிரிப்பினை ஆழமாக தனது இதயத்தினுள் சேமித்து வைத்து கொண்டாள். அதன்பின் கூறிய தர்ஷனின் வார்த்தைகளில் “இதை எப்படி மறந்தோம்…???” என்று உச்சகட்ட அதிர்வினில் தர்ஷனை பார்த்தாள்.

ஷாலினியை நிதானமாக நெருங்கியவன், அவளின் கண்களை நேராக பார்த்தபடி தன் இடது கரம் கொண்டு ஷாலினியின் முகத்தினை தன் முகத்தின் அருகில் கொண்டு வந்து “என்னடி சொன்ன, கல்யாணம் ஆகி இருந்தா, என் பொண்டாடின்ற நினைப்பு மட்டும் தான் இருந்ததா….அப்போ அந்த நினைப்பு இப்போ இல்லையாடி… “ என்றவன் ஷாலினியின் கழுத்தில் இருந்த தங்க தாலி சங்கிலியை வெளியில் எடுத்து, அதில் தொங்கி கொண்டு இருந்த தாலியை ஷாலினியின் கண்முன் காட்டினான்….

ஆம்….ஷாலினின் தர்ஷனின் மனைவி ஆகி இதோடு கிட்டதட்ட ஆறு மாதங்கலேனும் ஆகியிருக்கும்….இருவரின் முகங்களும் ஒன்றோடு ஒன்று அருகில் உரசிக்கொள்ளும் தொலைவினில்….கண்கள் ஒன்றுகொன்று சந்தித்தபடி நின்றாலும்….அவர்கள் இருவரின் எண்ணங்களும் தங்களுக்கு திருமணம் நடந்த முறையை பற்றி தான் எண்ணியது.

ஆறு மாதங்கள் முன் தீக்ஷாலினியின் பெற்றோர் விஸ்வநாதனும், சசிபாரதியும் தங்களின் குலதெய்வ கோவிலிற்கு சென்றிருந்தனர்…எப்பொழுதும் தீக்ஷாலினியும் உடன் வருவது தான் வழக்கமே…அவளின் இஷ்ட தெய்வமும் அவர்களின் குலதெய்வம் தான்….இந்த முறை தான் சென்னையில் வேலையில் இருந்து இந்த ஒருதின விழாவிற்காக அலைய வேண்டும் என்று ஷாலினியின் தந்தை அடுத்த முறை சென்று வரலாம் என்று சொல்லிவிட்டது இவளிற்கும் சரி என்று தோன்ற செல்லவில்லை.

ஆண்டு சென்றவர்கள் வழக்கம் போல் திருவிழா ஆரம்பித்ததும் பால் குடம், பூக்குளி என அனைத்து நிகழ்வுகளையும் பார்த்து விட்டு சந்நிதானத்தில் இவர்கள் பூஜை பார்க்க சென்றனர்.. அங்கு தான் ஒரு வயதான பாட்டி சற்று முன் தன்னுடைய நேர்த்திகடனை செலுத்திவிட்டு இன்னும் சாமி ஆடிக்கொண்டு குறி சொல்லிக்கொண்டு இருந்தார்….நாம் பெண்கள் தான் சாமி பக்தி அதிகம் உள்ளவர்கள் ஆகிற்றே…எனவே ஷாலினியின் அன்னை பாரதியும் சென்று அந்த பாட்டியின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார்….


அப்பொழுது தான் அந்த பாட்டி குறி சொல்வதாய் நினைத்து தர்ஷனிற்கு நல்லதிலும் கெட்டது என்பது போல் பதில் அளித்தார்…பாரதியை கண்டு “உன்னோட குடும்பத்துல ஒரு பெரிய நல்லதும் நடக்கவும்…கெட்டது நடக்கவும் வாய்ப்பு இருக்கு….என்ன தாயி பாக்கிற….உன்னோட பொண்ணுக்கு மணம் முடிவு பண்ணியும் கல்யாண யோகம் இன்னும் நாள் தள்ளி போகுதுல…இது எல்லாம் அந்த பையன் நேரம் தாயி….அவனோட ஆயிசு உன்னோட பொண்ணு கையில….உன் மக தாலி தான் இப்போ அந்த பையனுக்கு ஆயிச குடுக்கும் தாயி….உன் பொண்ணுக்கும்…அந்த பையனுக்கும் கல்யாணம் பண்ணி ரெண்டு பெரும் ஆறு மாச நாளும் பிரிஞ்சு தான் இருக்கனு……அதுக்கு பிறவு நீங்க நினைக்காத அளவு அவுக ரெண்டும் சீரும் சிறப்புமா வாழுறத கண்ணு குளிர பாக்கலாம் தாயி…” என்று முடித்து விட்டு திரும்பி விட்டார்.
 

revathyrey04

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பாரதியும் விஸ்வநாதனும் கலங்கி போயினர்…..பின்னே தன்னுடைய உயிரான தங்கையை…அண்ணியை இழந்தவர்களே…தற்பொழுது தங்கள் மருமகனை பற்றியும் சொல்ல துடிததவர்களால் இதை சாதாரணமாக விட முடியவில்லை. வீட்டிற்கு வந்தவுடன் முதலில் தர்ஷனிற்கு அழைத்து இந்த வர இறுதியில் ஷாலினியையும், ஆதர்ஷனின் தந்தையும் அழைத்து கொண்டு மதுரைக்கு வர சொல்லியவர் ஷாலினிற்கு மதுரை செல்ல வேண்டும்…தர்ஷனுடன் வர சொல்லினார்.,..

அதன்படி ஷாலினியும் என்ன ஏது என்று கேட்காது அப்பா…அம்மா..பாட்டி என அனைவரையும் பார்க்க போகிறோம் என்றும்….அதும் தர்ஷனுடன் நீண்ட நேர பயணமும் என மகிழ்ந்து கிளம்பினார்கள்….அதிகாலையில் அனைவரும் வந்து சேர வீடே ஒரு திருவிழா கோலம் போல் இருந்தது…அதன்பின் ஷாலினியின் அன்னை ஷாலினியிடம் நெருங்கியவர் அவளை சிறிது ஒப்பனையோடு தயாராக்கினார். அவளும் இன்று அனைவருமே கோயிலிற்கு செல்வதால் தான் சேலையில் கிளம்ப சொல்கிறார் என்று எதுவும் மறுக்காது கிளம்பினாள்…..அதே போல் வைதேகி பாட்டியும் தர்ஷனை கோயிலிற்கு செல்வதால் வேட்டி சட்டை அணிய சொல்ல அவனுமே தனக்கு பிடித்தமான உடை என்பதினாலும்….கோயில் செல்கிறோம் என்றும் வெள்ளை வேஷ்டியும்…..சட்டையுமாய் கிளம்பி தயாராகி வெளியில் வந்தான்…

இவர்கள் இருவரை தவிர மற்ற அனைத்து குடும்ப உறுப்பினர்களுக்கும் கோயிலில் குறி சொல்லியது முதல் வைதேகி பாட்டியின் முடிவு அவசர கல்யாணம் வரை தெரியும்…அவர்களை பொறுத்த வரை தர்ஷனிடம் சொல்லலாம் தான்…அவனுமே கல்யாணம் எப்பொழுது என்றே சுற்றுகிறான்..ஷாலினி தான் படிப்பை காரணம் காட்டி இழுத்துக்கொண்டு இருக்கிறாள்….இதையும் மறுக்க தான் செய்வாள்…அதனால் அவளிடம் சொல்லவில்லை. தர்ஷனிடம் சொன்னால் கண்டிப்பாக உணர்ச்சியும்…மகிழ்ச்சியும் மிக ஷாலினியிடம் சொல்லிவிடுவான் என்று சொல்லவில்லை….அனைவரும் கிளம்பி வீட்டின் நடு முற்றதினில் வர…தர்ஷனின் கண்கள் ஷாலினியை விட்டு எங்கும் அகலவில்லை…இளம்பச்சை நிற பட்டும்….அதற்கு பொருத்தமாக சிறிய பார்டர் கொண்டு அரஞ்சு நிறத்தில் அமைத்த பட்டு புடவையும், இரண்டு அடுக்கு தங்க செயினும், கைகளில் தங்க புடவையின் நிறமான பச்சை ஆரஞ்சு நிற வளையல்களும் அணிந்து……முதுகு வரை இருந்த…எப்பொழுதும் போனியிலும், ப்ரீஹேரூம் என இருப்பவள் இன்று அதை நேர்த்தியாக பின்னலிட்டு மல்லிகை பூ வலது மற்றும் இடது புற தோளில் விழ தேவதையென நின்றிருந்ததாள்..

அவளுமே தர்ஷனை விழுங்கி விடுவது போல் தான் பார்த்தாள்….பின்னே முதல் முறை தன்னவன் பாரம்பரிய உடையில் இருப்பது ஆச்சரியமே….அவளின் எண்ணம் அனைவரும் வற்புறுத்தி இதை அணிய செய்திருக்க வேண்டும் என்பதே…ஆனால் தர்ஷன் எப்பொழுதும் பார்மல்சை விரும்ப மாட்டனே…தந்தையின் வற்புறுத்தலில் தான் ADS கம்பெனி செல்லும் பொழுது மட்டும் பார்மல்ஸ் அணிவது..இல்லை என்றால் அவனின் தந்தையிடம் யார் பாட்டு வாங்குவது….

“இங்க பாரு தர்ஷன்….நீ பார்மல்ஸ்ல போனா தான் ஆபீஸ் போற மாதிரி இருக்கும்…..நீ கரெக்டா போனா தான் வொர்கர்ஸ் கிட்ட நீ ஒழுங்கான ரெஸ்போன்ஸ் எதிர்பார்த்தாலும் கிடைக்கும்…நீ ஏனோ தானோன்னு போனா உன்ன என்ன நினைப்பாங்க….உன்னோட கம்பெனிக்கு வேணும்னா எப்படி வேணும் நாலும் போய்க்கோ….என்னோட கம்பெனிக்கு பார்மல்ஸ்ல போ” என்றதற்கு…”க்கும்……நா பார்மல்ஸ்ல போனா மட்டும் அங்க வேலை ஓடிருமா…எவருடா இவரு…..இந்த அங்கிள் ஷர்ட்ல போனா எவளாச்சும் நம்மல பார்பாளுங்களா………..இந்த ஓல்ட் மேன்க்கு நம்ம கஷ்டம் புரியாம பேசிட்டு….டிஷர்ட் ஜின்ன போட்டோம்மா….அப்படியே பந்தாவா என்பில்ட்ல பறந்தோமா அப்படின்னு இல்லாம….” என தனக்குள் மட்டும் தான் முணுங்க முடியும்.

அனைவரும் வெளியில் கிளம்பி வர தர்ஷன் ஒரு கையில் வேட்டியின் முனியை பிடித்து, மறுகையில் கார் சாவியை சுழற்றியவாறு வந்தவனை கண்டு ஷாலினி ஜொள்ளினாள் என்றால் அவளின் அருகில் நின்றிருந்த வைஷ்ணவி தலையில் அடித்து கொண்டாள். தர்ஷனின் அருகில் வந்த வைஷ்ணவி “அண்ணா உனக்கே ஓவரா தெரியலையா…………ரெண்டு தெரு தள்ளி இருக்குற கோவிலுக்கு கார்ல தான் போகனுமா…பேசாமா நடந்து வாங்க….” என்றதில் “என்ன கிண்டலா….ரெண்டுடுடுடுடுடு தெரு தள்ளி இருக்கு…அவ்ளோ தூரம் எப்டிம்மா இந்த டிரஸ்ல நடக்க…அப்பறம் போற வரவலுக எல்லாம் என்ன தான் பார்க்குங்க” என்று ஷாலினியை கண்டு கண்சிமிட்டினான்…ஷாலினியின் முறைப்பில் அமைதியாகியவன் “சரி சரி, வாங்க நடந்தே போவோம்” என்று தர்ஷனின் பேச்சிற்கு முன்பே அனைவரும் நடக்க ஆரம்பித்து இருந்தனர்…அதனை கண்டு “அச்சச்சோ….யாருப்பா அது…என் அத்தான் பேசிட்டு இருக்கும் போதே அவரு இமேஜெய் டேமேஜ் பண்ணுனது” என்று விஷ்ணு வந்தான்…அதன் பின் அனைவரும் பேசியபடி நடந்து வர..வழக்கம் போல் வைஷ்ணவி விஷ்ணு முன்னே நடக்க…….தர்ஷனின் கரம் ஷாலினியின் கரதிற்காக நீண்டது…..அவளும் ஆசையாக அவனின் கரத்தினை பற்றி நடக்க துவங்கினாள் …

அதன்பின் அனைவரும் கோவில் அடைந்தவுடன் சன்னிதானம் முன் நின்றவுடன் கலையரசி கைகளில் தாலியை எடுத்தவள் தர்ஷனிடம் குடுத்து ஷாலினிற்கு அணிய சொல்ல தர்ஷனோ இந்த உலகத்திலேயே நான் இல்லை என்பது போல் மகிழ்ந்து கனவுலகத்திற்கு மாயமானான். தர்ஷனிற்கு இது அதிர்வான செய்தியாக இருந்தாலும் இனிய அதிரவே..ஆனால் ஷாலினி தான் செய்வது அறியாது திகைத்தாள்…அதன்பின் பாரதி தான் தன்னுடைய மகளை தனியாக அழைத்து குறி சொன்ன விஷயத்தினை ஓரளவு வேறு மாதிரியாக சொல்லி ஒத்துக்க வைத்தவர் இப்பொழுது வெறும் பரிகாரம் போல் தான், அதனால் கல்யாணம் ஆறு மாதங்கள் கழித்து என்று சொல்லி சமாதானம் செய்தார்…

ஷாலினியும் தர்ஷனின் நலனிற்காக சரி என்றாள்…இருவரும் ஒன்றாக சாமியின் முன் நின்றனர். தர்ஷனின் கரம் ஷாலினியின் கழுத்தின் அருகில் கொண்டு சென்று அவளின் கண்களை பார்க்க, அவளும் தர்ஷனை தான் பார்த்து கொண்டு இருந்தாள்……அவளின் பார்வையில் தன்னை மறந்து நின்றவனை ஷாலினி தான் மீட்டு கொண்டு வந்தாள். “அத்தான்………என்ன லுக்கு விட்டது போதும்…எல்லாரும் நம்மளை தான் பார்க்கிறாங்க…….” என்றதில் “என்னோட அம்முவ….என்னோட பொண்டாட்டிய நான் பார்க்கிறேன்….இதுல மத்தவங்களுக்கு என்னவாம்….” என்றான் மலர்ந்த கன்னக்குழி சிரிப்புடன்….
 

revathyrey04

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
விஷ்ணு பொறுமை இழந்தவனாக “இங்க இவ்வளவு பேரு இருக்கும் போதே உங்க ரெண்டு பேரோட அக்கபோரு தாங்கலைப்பா….உங்க ரொமான்ஸை கொஞ்சம் தள்ளி வச்சுட்டு தாலியை கட்டினிங்கான நாங்க சாப்பிட போய்டுவோம்….நீங்களும் தனியா ரொமான்ஸ கன்ட்டின்யூ பண்ணிக்கலாம்…” என்றான்… அதில் அவனை திரும்பி பார்க்காமலே “போடா அரட்டை….இன்னும் காலேஜ் போறேன்னு தான்னு பேரு….ஒரு பொண்ண கரெக்ட் பண்ண முடியலை…நீ எல்லாம் ரொமான்ஸ் பத்தி பேசுற….” என்றுவிட்டு ஷாலினியின் கழுத்தில் தாலியை கட்டினான்….

மேளம் தாளங்கள் இல்லாமல்…ஐய்யர் மந்திரம் ஓதாமல்…..முன்னவே தெரியாது நடந்த எதிர்பாராத திருமணமாக இருந்தாலும் மணமக்கள் இருவரின் உள்ளமும் அவர்களின் குடும்பத்தாரின் உள்ளமும் நிறைந்து இருந்தது…..அதன் பின் அவர்களின் வீட்டிலிருந்து சிறு தொலைவில் இருந்த சிறியதும் அல்லாத பெரியதும் அல்லாத ஹோட்டலில் உணவினை முடித்துக்கொண்டு வீட்டிற்கு சென்றனர்.

வீட்டின் வாயிலில் கல்யாணமான இருவரிற்கும் வைஷ்ணவி நாத்தினார் முறையில் ஆராத்தி சுற்றி வீட்டினுள் வரவேற்று அமரவைத்தனர். ஷாலினி சொல்ல முடியாத மனநிலையில் இருந்தாள்….சந்தோஷமும்….இதனால் படிப்பிலும் தன்னவனின் மேலும் சரியாக கவனம் செலுத்த முடியுமா என்று தவிப்பும்..என இரு மனதில் இருந்தாள்…அவளினை கவனித்து கொண்டே இருந்தவன் “அம்மு….நீ என்ன யோசிக்கிறேன்னு புரியுது….உன்னோட படிப்பில கவனத்த செலுத்தினா என்மேல கவனம் வைக்க முடியாதுன்னு எனக்காக தான் பார்த்து கல்யாணத்தை தள்ளி போட்டனும் நீயே சொல்லிருக்க…பட் ஒன்னையும் தெரிஞ்சுக்கோ….இப்போ நடந்த சம்பிரதாய….கல்யனமாவே இருந்தாலும் நீ எனக்கு முழு உரிமை ஆகிட்ட…இப்போ நடந்தது ஜஸ்ட் ஜாதகத்திற்கு தான்…அதனால உன்னோட விருப்பத்தை பண்ண முடியாம போய்டுச்சு….பட் ஊர் கூட்டி பண்ண போற கல்யாணம் கண்டிப்பா..உன்னோட விருப்பபடி படிப்பு முடிஞ்சே வச்சுக்கலாம்….ஜஸ்ட் இன்னும் ஒன் இயர் தான….” என்றான்..

தர்ஷனின் பேச்சினில் அங்கு ஹாலில் இருந்த யாரையும் கவனிக்காத கண்டுகொள்ளாத ஷாலினி “தேங்க்ஸ் அத்தான்…தாங்க் யூ சோ மச்….என்ன புரிஞ்சுகிட்டதுக்கு…” என்று தர்ஷனின் தோளில் அவனின் இறுகிய வலுவேறிய புஜத்தில் சாய்ந்து கொண்டாள்…அவளின் தேங்க்ஸ் என்றதில் கோபம் கொண்டவன் …அதன் பின் தன் தோளில் சாய்ந்தவளை கண்டு சன்னமாக விசிலடிதவன் “கல்யாணம் முடிஞ்சோனே தான் என் பொண்டாடிக்கு தைரியம் வருது போல….இவ்வளவு பேரு இருந்தும் கண்டுக்காம இப்படி க்ளோசா இருக்குறது “தி கரேட் ஆதர்ஷனோட மனைவிக்கு அழகு” என்று அவனும் செல்லம் கொஞ்சினான். அதன் பின் இருவரும் வேலை படிப்பு என்று பிஸி ஆகிவிட்டனர்.


பழைய நினைவில் இருந்து மீண்டவர்கள் ஒருவருக்கொருவை பார்த்துகொண்டு நின்றார்களை தவிர பேசவில்லை. முதலில் மீண்ட தர்ஷன் “நீ யோசிச்சுட்டே இருன்னு விட்டா காலம் பூரா யோசிச்சாலும் நல்லா முடிவா எடுக்க மாட்ட…சோ இந்த அத்தானோட பேச்சை கேட்கிற என்னோட செல்ல அம்முவா பேசாமா கல்யாணத்துக்கு ரெடி ஆகுடி மை அழகு பொண்டாட்டி…” என்று அவளின் கன்னதினை வலிக்காது கி்ள்ளியவன் வெளியேறி விட்டான்.

பூக்கும்....
 
Last edited:
Status
Not open for further replies.
Top