All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ரேவதியின் "ஒரு புன்னகைப் பூவே!!!" - கதைத் திரி

Status
Not open for further replies.

ஶ்ரீகலா

Administrator
ஹாய் பிரெண்ட்ஸ்,

இதோ அடுத்து ஒரு புதிய எழுத்தாளரின் அறிமுகத்துடன் வந்துவிட்டேன்... எப்போதும் போல் இவருக்கு உங்களது ஊக்கத்தினை அளித்து உற்சாகப்படுத்துங்கள்... நிறைகளை கூறி ஊக்குவித்து, குறைகளை சுட்டிக்காட்டினாலும் அவரது திறமையை தட்டி கொடுக்க மறந்துவிடாதீர்கள்... கதையைப் பற்றி அவரே வந்து கூறுவார்... நன்றி மக்களே...

அன்புடன்,

ஶ்ரீகலா :)
 

revathyrey04

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
First thank you so much sri sis. Ketoney Ena nambi thread create pani kuduthathuku.


Hai all my sisters,
Na intha site la oru silent reader ah irunthen.
Na 3 years story read panitu irunthathula enakum eluthanum nu asai vanthuruchu.nala varuma nu therla.try pani pakalam nu story elutha ipo ready agiruken. Ungaloda adharava enaku kudupanga nu namburen. First story Ethum Thapu iruntha correct panunga. I will correct it

Once again thank u so much sri sis.

Sikiram Enoda first Ud oda varen
 

revathyrey04

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் சிஸ்டர்ஸ்,

என்னுடைய முதல் அத்தியாத்துடன் வந்து விட்டேன். முற்றிலும் முதல் முயற்சி. படித்து விட்டு உங்கள் கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் பதிவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன். ஏதேனும் குறையாக இருந்தாலும் சொன்னால் முடிந்தது வரை மாற்றிக் கொள்கிறேன்.

ரேவதியின் "ஒரு புன்னகைப் பூவே!!!" - கருத்துத் திரி
 
Last edited:

revathyrey04

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
புன்னகை 1 :

“ராதை மனதில் ராதை மனதில் என்ன ரகசியமோ

கண் ரெண்டும் தந்தியடிக்க கண்ணா வா கண்டுப்பிடிக்க

(ராதை மனதில்..)


கொள்ளை நிலவடிக்கும் வெள்ளை ராத்திரியில் கோதை ராதை நடந்தாள்

மூங்கில் காட்டில் ஒரு கானம் கசிந்தவுடன் மூச்சு வாங்கி உறைந்தாள்

பாடல் வந்த வழி ஆடை பறந்ததையும் பாவை மறந்து தொலைந்தாள்

நெஞ்சை மூடி கொள்ள ஆடை தேவை என்று நிலவின் ஒளியை எடுத்தாள்

நெஞ்சின் ஓசை ஒடுங்கிவிட்டாள்

நிழலை கண்டு நடுங்கிவிட்டாள்

கண்ணன் தேடி வந்த மகள்

தன்னை தொலைத்து மயங்கிவிட்டாள்

தான் இருக்கின்ற இடத்தினில் நிழலையும் தொடவில்லை

எங்கே எங்கே சொல் சொல்

கண் ரெண்டும் தந்தியடிக்க கண்ணா வா கண்டுபிடிக்க

(ராதை மனதில்...)



என சிநேகிதி திரைப்பட பாடலிற்கு ஏற்ப மேடையில் ஆடிக்கொண்டிருந்தார்கள். பாடல் சத்தத்தை விட அந்த அரங்கத்தில் எழுந்த மாணாக்கர்களின் விசில் சத்த்தமும்,கரகோஷங்களும் அரங்கத்தில் அதிர வைத்தனர். பழைய பாடலே என்றாலும், இன்றும் அனைவருக்கும் பிடித்த பாடலே..!

மேடையில் நடுநாயகமாக அடர் சிவப்பு நிறத்தில் லெஹன்ஹா அணிந்து,தலை முடியை இரு பக்கமும் எடுத்து சென்ட்டர் க்ளிப் போட்டு விரித்து விட்டு, ராதையின் பாவத்தை முகத்தில் கொண்டு வந்து ஆடினாள் தீக்ஷா.



“ஊருக்கண்ணு உறவுக்கண்ணு
உன்ன மொச்சுப் பாக்கும் நின்னு
சின்ன மகராசன் வரான்
மீச முறுக்கு
எங்க மண்ணு தங்க மண்ணு
உன்ன வைக்கும் சிங்கமுன்னு!

முத்துமணி ரத்தினத்தைப் பெத்தெடுத்த ரஞ்சிதம்
ஊருக்குன்னே வாழு கண்ணு அம்மாவுக்கும் சம்மதம்
எந்த இடம் வலிகண்டாலும் கண்ணுதானே கலங்கும்
கண்ணுபோல எங்களுக்கு காவலா நீ வரணும்..

ஆளப்போறான் தமிழன் உலகம் எல்லாமே
வெற்றிமக வழிதான் இனிமே எல்லாமே
வீரன்னா யாருனு இந்த நாட்டுக்கே அவன் சொன்னானே
வாயில்லா மாட்டுக்கும் அட நீதிய அவன் தந்தானே”

என்று மாணவர்கள் ஆடிம் பொழுதே தீக்ஷா வரவே அடுத்த கரகோஷம் எழுந்தது.

“Male : OMG ponnu….
ILY kannu….
ASAP kooda va nee

BAE…neeemaa
BFF naan maa..
ROFL pannalaama…

Female : IMO… nininee nee
Aaaiyiram ponna paarpa nee..
IDK ennanna enna
Evloo pudikkum sollu nee….”

என்று நான்கு மாணவர்களின் நடுவில் ப்ளு நிற ஜீன்ஸ் அணிந்து, வெள்ளை நிற குர்த்தியும், லூஸ் ஹார் விட்டிருந்தாள் தீக்ஷா.

“தீக்ஷா தீக்ஷா தீக்ஷா…” என ஆட ஆட கத்தினர். அவ்வளவு ஃபேன்ஸ் அவளிற்கு.

தீக்ஷா செக்கச் சிவேலென்று, மான் விழிகளில் மையிட்டு, நவநாகரிக தேவதையென நட்சத்திரமாக ஜொலித்துக் கொண்டிருந்தாள்.

கல்லூரியின் இருபத்தி ஐந்தாவது வெள்ளி விழா மற்றும் ஆண்டு விழாவிற்கான நிகழ்ச்சி தான் இது.

“தீக்ஷா கலக்கிட்ட டி… இருக்குற ஆடியன்ஸ் மொத்தமும் விட்ட ஜொள்ளுல காலேஜே மிதக்குது டி...பாத்து” என யாழினி வாரினாள்.

“தீக்ஷா உன்கிட்ட கொஞ்சம் பேசனும் ஜஸ்ட் ஃபை மினிட்ஸ் “ என அவள் வகுப்பு மாணவன் ரோஹித் வந்து நின்றான். “ஏற்கெனவே சொல்லிட்டேன்ல, ஐ டோன்ட் ஹாவ் இன்ட்ரஸ்ட் ஆன் யூ” என்றாள்.

இதே போல் இரண்டு முறை காதலிப்பதாக சொன்ன போது பக்குவமாக மறுத்திருந்தாள். மறுபடியும் பழைய பல்லவியை பாடியதால் கடுப்பாகியது. ஆனாலும் அமைதி காத்தாள்.

“என்னடி, அழகா இருக்கேன்ற திமிறா.. லவ்வ சொன்னா ரொம்ப பண்ற. என் மேல மட்டும் தான் இன்ட்ரஸ்ட் இல்லையோ. ஸ்ட்டேஜ்ல மட்டும் நாழு பசங்க கூட ஈஈஈஈ னு இளிச்சுட்டு ஆட்ற” என்ற முடிப்பதற்குள் ரோஹித்தின் இடது கன்னத்தில் தீக்ஷாவின் வலது கரம் இடியென இறங்கியது.


“நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை -டிக்கன்ஸன்”


பூக்கும்..
 
Last edited:

revathyrey04

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் மை லவ்லி சிஸ்டர்ஸ்,

என்னுடைய இரண்டாவது அத்தியாயத்துடன் வந்து விட்டேன். ஒரு ஆர்வத்துல இன்றைக்கே வந்து விட்டேன். படித்து விட்டு தயவு செய்து உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
நீங்கள் பதிவிடும் ஒவ்வொரு கருத்தும் தான், நான் எப்படி என் கதை உங்களுக்கு பிடித்த மாதிரி உள்ளதா என்று தெரிந்து கொள்ள முடியும். நிறைகள் தான் என்றில்லை, குறைகளையும் சொல்லுங்கள். மாற்றிக் கொள்ள முயற்சிக்கிறேன் நட்பூஸ்.


ரேவதியின் "ஒரு புன்னகைப் பூவே!!!" - கருத்துத் திரி

மறந்துறாதீங்க கமெண்ட்ஸ

இப்படிக்கு

அன்புடன் உங்கள் ReY babyma 😍
 
Last edited:

revathyrey04

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
புன்னகை 2 :


சென்னையில் போக்குவரத்து நெருக்கடியிலும், தனது ஜாகுவார் XJ ஐ புயல் வேகத்தில் செலுத்திக் கொண்டிருந்தான். வேகம்,கோபம், எதிராளிகளை அடியோடு வீழ்த்திவிடும் அளவு விவேகம்,எதிரில் நிற்போரை தன் கூரிய விழிகளால் எடை போதும் திறமை வாய்ந்த, தொழிலில் கால் பதித்த மூன்று வருடங்களில் பல நட்புகளையும், பல பல எதிரிகளையும் சம்பாரித்து வைத்திருக்கும் இளம் தொழிலதிபர்.

தன்னிடம் நெருங்குபவர்களை சிரிக்கத் தெரியாது என்று கூறும் அழுத்தமான உதடுகளாலும், ஒற்றை பார்வையிலும் தள்ளி நிறுத்தி விடுவான்.

ADS Group Of Companies

அந்த பெரிய கேட்டை செக்யூரிட்டி திறந்த நொடி சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவு கடந்து தங்களுடைய சாம்ராஜியமான, முழுவதும் கண்ணாடியால் அலங்கரிக்கப்பட்டு இருந்த தங்களின் எட்டு மாடி கோட்டைய்க்குள், சிறிதும் காரின் வேகத்தினை குறைக்காமல், மேலும் கூட்டி,புயல் வேகத்திலேயே தனது மைலாப்புரத்தில் உள்ள முதன்மை அலுவலகத்தில் நிறுத்தி,தனது டிரைவர் காரை அடைய குறைந்தபட்ச இடைவேளியே என்றாலும், அது வரையுமே தன்னால் பொறுத்துக் கொள்ள இயலாது என்பது போல், மேலும் உறும விட்டுக் கொண்டிருந்தான். தனது முதலாளி வரும் போது தான் இருக்க வேண்டும், அதற்குள் தனது வேலையை முடித்து விட்டு திரும்பி வந்து விடலாம் என்றென்னி சென்ற தன் மடத்தனத்தை நொந்துகொண்டு, கிட்டத்தட்ட ஓடி வந்து மூச்சு வாங்க நின்றான். தனது காரை விட்டு கீழ் இறங்கியதும், கார் கீயை வாங்க நின்றிருக்கும் தனது டிரைவரிடம் கோபப் பார்வையை வீசி கீயை குடுத்துவிட்டு அகன்றான்.

தன் முதலாளி தன்மை இத்தோடு விட்டதற்கே தனது குல தெய்வத்திற்கு பெரிய அவசர கும்பிடு ஒன்றை போட்டு விட்டு, செல்லும் முதலாளியை பார்த்தான்.

போர்ஸ்சே (porsche) சன் க்ளாஸை இடது கரத்தில் கழற்றி தன் சட்டையில் மாட்டிக் கொண்டே, வலது கரத்தில் ஜெல் தடவப்பட்ட அடர்ந்த சிகையை கோதியவாரு, மிக அலட்சியமாக அலுவலக தொழிலாளர்களின் காலை வணக்கத்தை சிறு தலை அசைப்புடன் ஏற்றுக் கொண்டு வேக எட்டுகளுடன் தனது அறையை அடைந்தான்.

ஆதி ஆறு அடி அங்குலம், மாநிறத்திற்கும் சுற்று கூடுதலான நிறம், தனது மேல் படிப்பிற்காக சென்ற வெளிநாட்டு வாசத்தின் உதவியில் இன்னும் சிவந்த மேனி நிறம், அழுத்தமான உதடுகள், இறுகிய தாடை, தீர்க்கமான கண்கள், உடற்பயிற்சியினால் முறுக்கேறிய கட்டுப்பாடான உடற்கட்டு, எடுப்பான மீசை என முழு ஆணழகனாக திகழ்ந்தான்.


அறைக்குள் நுழைந்தவுடன் ஆதியின் பி. ஏ ஷர்மிளா கதவை தட்டி அனுமதி பெற்றுக் கொண்டு நுழைந்தாள். உள்ளே சென்றவுடன் தன்னை நிமிர்ந்து பார்க்கவில்லை என்று உறுதிப்படுத்தி தன் அன்றாட பணியை தொடர்ந்தாள் ஆதியை சைட் அடிப்பதே முதல் முக்கிய பணி.

உள்ளே வந்து எதுவும் பேசவில்லை என்று ஓரிரு நிமிடங்கள் கழித்து கணினியில் இருந்து பார்வையை மட்டும் திருப்பி “என்ன” என்பது போல் ஒற்றை புருவத்தை ஏற இறங்க பார்த்தான். திடீரென்று தன்னை பார்ப்பான் என்று எதிர்பாராததால் விநாடி நேரத்தில் தன்னை நிலைப்படுத்தி “சார், நம்ம நியூ ப்ராஜெக்ட்டிற்கு வொர்கர்ஸ் வேணும்னு திருச்சியில் இருக்க மௌன்ட் காலேஜில் கேம்பஸ் இன்டர்வியு கன்டக்ட் பண்ணாலாம்னு சொல்லிருந்தோம். ஆனா இன்னும் நம்ம சைடு இருந்து எந்த கன்பர்மேஷனும் குடுக்கல. டுடே காலேஜில் இருந்து பேசுனாங்க. நீங்க செக் பண்ணிட்டா இன்றைக்கு நாம இன்பர்மேஷன் கொடுத்திரலாம்” என்று ஒரு வழியாக சொல்லி முடித்தாள்.

ஓரிரு விநாடிகள் நிதானித்து விட்டு,
“ஓகே நெக்ஸட் மன்த், ஃபர்ஸட் சேடெர்டே கன்டக்ட் பண்ணாலாம்னு கன்பர்மேஷன் மெயில் போட்டிருங்க. தென் நம்ம ஹெச்.ஆர் (HR) டிபார்ட்மன்ட்ல சொல்லி டென் ஸ்டாஃப்ஸ ரெடியா இருக்க சொல்லிங்க, நம்ம ப்ராஜெக்ட் ரொம்ப பெரியது அதனால நாம் ஹண்ரட் (100) ஸ்டூடண்ட்ஸ செலக்ட் பண்ணனும், அதற்கு ஏற்ற மாதிரி ப்ரிபேர் பண்ண சொல்லிடுங்க” பேச்சு முடிந்தது என்பது போல் கணினியில் பார்வையை திருப்பிக் கொண்டான். இவ்வளவு நேரம் இவன் தான் பேசினானா என்று அவன் செயல் இருந்தது.


------------------------------------------------------------

திருச்சி மௌன்ட் காலேஜ்:

(“Dear students,
Next Saturday campus drive will be conduct by ADS group of companies. Totally 100 candidates will be recruit by the company. Above 7.5 cgpa interested candidates will give your name to your class place the coordinator” )

“அன்புள்ள மாணவர்கள்,
அடுத்த சனிக்கிழமை ADS group of companies நடத்தும் வேலை வாய்ப்பில் 100 மாணவர்கள் நிறுவனத்தால் நியமனம் செய்யப்படுவார்கள். 7.5 cgpa மேல் ஆர்வமுள்ள மாணவர்கள் உங்கள் வகுப்பு ப்ளேஸ்மென்ட் ஒருங்கிணைப்பாளரிடம் பெயரை கொடுக்க வேண்டிய கடைசி நாள் வரும் புதன் கிழமை.”


காலேஜ் இறுதி ஆண்டு மாணவர்களின் ப்ளாக் நோட்டிஸ் போர்டில் தான் இந்த சர்க்குலர் போடப்பட்டிருந்தது. அனைத்து மாணவர்களும் தங்களுக்குள் சலசலத்த படி சென்றனர்.

“ஹேய், நம்மலும் ப்ரிபர் பண்ணனும் டி. வர போற கம்பெனி சாதாரணம் இல்ல, அந்த கரண்ட் எம்.டி யோட அப்பா முழு பொறுப்பையும் பார்த்துட்ட அப்ப கூட ஒரு சில ப்ராஜெக்ட் இவங்க கைய விட்டு போயிருக்கு. ஆனா இப்ப அவங்க ஸன் வந்த அப்புறம் எல்லாம் இவங்க தானாம். இவங்க விட்டு குடுத்தா தான் மத்தவங்களுக்கு ப்ராஜெக்ட் கிடைக்குமாம். இப்ப இருக்க நியூ எம்.டி சரியான சிடு மூஞ்சியாம் டி. ஆனா வேலை கிடைச்சா சொர்க்கம். அந்த சிடு மூஞ்சி மட்டும் வேலை குடுத்திட்டா, அந்த மகாராசன் பேர கேட்டு எங்க கோவில்ல கெடா வெட்டிரேன்“ என்று தீக்ஷாவின் நெருங்கிய தோழி யாழினி ஏக பெரு மூச்சுடன் தீக்ஷா மற்றும் அவர்கள் தோழிகளிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்.

“அந்த எம்.டி எப்படி இருந்தா நமக்கென்னடி, வேலை மட்டும் கிடச்சா போதும்” என்று தீக்ஷா அத்தோடு முடித்தாள். தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பாள். ஆனால் மிகவும் கலகலப்பானவள் தன் குடும்பம் மற்றும் நெருங்கிய வகுப்புத் தோழிகளிடம். அதன் பிறகு பேச்சு வேறு பக்கம் சென்றது.


---------------------------------------------------------------

“ஃபனா ஃபனா ஃபனா
யாக்கை திரி காதல் சுடர்

அன்பே அன்பே அன்பே அன்பே

ஜீவன் நதி காதல் கடல்

நெஞ்சே நெஞ்சே நெஞ்சே நெஞ்சே
பிறவி பிழை காதல் திருத்தம் நெஞ்சே

ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ

இருதயம் கல் காதல் சிற்பம் அன்பே

யாக்கை திரி காதல் சுடர்”

என காதை கிழிக்கும் அளவிற்கு மேல் தட்டு வர்க்க பிள்ளைகள் ஆண், பெண் பேதமின்றி ஆடிக் கொண்டிருந்தார்கள் சென்னையில் உள்ள ஆழ்வார்பேட்டை அடையார் பார்க்கில் இருக்கும் நைட்ஸ் அவுட் க்ளிப்பில். அதில் தன்
நண்பர்களுடன் டார்க் ப்ளு ஜீன்ஸ் பேண்ட், வொய்ட் காலர் இல்லாத டீசர்ட், டீசர்டில் ரேஃபான் சன் க்ளாஸை மாட்டி, ஜெல் தடவப்படாத தன்னைப் போலவே இருக்கும் அடங்காத சிகையை இடது கரத்தில் அழுந்த கோதியபடி, வலது கரத்தால் கோப்பையில் உள்ள மதுவை வாயில் சரித்துக் கொண்டே, உதட்டுல் எப்பொழுதும் இருக்கும் சிரிப்புமாக,சிரிக்கும் பொழுது விழும் கண்ணக் குழியுமாக வசிகரிக்கும் புன்னகையுடன் ஆடிக் கொண்டிருந்தான் தர்ஷன்.


“ஏன்டா மச்சி, அது எப்டிடா கரெக்டா கவர்மென்ட் ஜாப்ல வேலை பார்க்குற மாதிரியே ஷார்ப்பா ஏழு மணிக்கே கிளம்பி,உங்க அப்பாட்ட இருந்தும் எஸ் ஆகிட்டு நைன்க்கு எங்க கூட ஜாய்ன் பண்ணிடுற” என்று தர்ஷனின் உயிரை எடுக்கும் உயிர் தோழன் அஷ்வின் கேட்டான்.

“அது வந்து மச்சி, ஒன்னு எங்கையாது அதிர்ஷ்ட மச்சம் இருக்கனும், இல்ல சமாளிக்க மூளை வேணும். அதப் பத்தி ரொம்ப யோசிக்காம அங்க பாரு, ஒரு ப்யூட்டி என்ன லுக்கு விடுது, நீயும் போய் ஒரு பிகர கரெக்ட் பன்ன பாரு மச்சி போ… ” என்றவாறு தன்னை ஜொள்ளிய ஸவீட்டியைத் தேடிச் சென்றான். “ஹாய் ஸ்வீட்டி, டூ யு வான்ட் டு டான்ஸ் வித் மீ” என்று தன் வலது கரத்தினை நீட்டுனான் தர்ஷன்.

தன்னை ஒரு தரம் கடைக் கண் பார்வை பார்ப்பானா என்று நின்றுக் கொண்டிருந்தவளிற்கு தன்னுடன் நடனம் ஆட அழைத்தும் போகாமல் இருக்க அவள் என்ன லூசா. நீட்டிய தர்ஷனின் வலது கரத்தினை பற்றிக் கொண்டு சந்தோஷமாக சென்றாள்.

பின்ன அவளும் கிட்டத்தட்ட ஆறு மாதங்களாக அவனின் ஸ்டைல், தலையினை அவ்வப்போது கோதியவாரு பேசும் விதம், நண்பர்களை வாரி பேசும் பொழுது தன் வலது கண்ணை மட்டும் அடித்து மட்டும் பேசும் மேனரிஸம் என பார்த்து மயங்கிருத்தாள். தர்ஷனும் இவளின் பார்வையை, பார்த்தும் பார்க்காத படியும் இருந்ததால் தான் இன்று நடனம் ஆட அழைத்திருந்தான்.



என்ன தான் தன் மகன் இவ்வாறு பப் க்ளப் என்று சுத்துவதும், பெண்களிடம் பழகுவது பற்றி அறிந்திருந்தாலும், தன் எல்லைக் கோட்டினை தாண்டாமல் இருப்பது பற்றி தெரிந்ததினால் அவன் போக்கில் விட்டு விட்டார் தர்ஷனின் தந்தை ராஜன்.




“நீ உயர்ந்து மேலே செல்லச் செல்ல, இன்னும் கீழேயே இருப்பவர்களுக்கு நீ சிறியவனாய்த் தோன்றுவதில் வியப்பொன்றும் இல்லை. அதனால், அவர்கள் உன் முயற்சிகளைப் பற்றி எள்ளி நகையாடினால், கண்டு கொள்ளாதே. - Mark twain”


பூக்கும்.
 
Last edited:

revathyrey04

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் சிஸ்டர்ஸ்,

அடுத்த அப்டேட் உடன் வந்து விட்டேன். முடிந்த வரை பெரிய அப்டேட்டா தான் வந்துருக்கேன். ஏதாவது தவறுகள் இருந்தாய் கருத்துகளை பதிவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன். யாருமே கமெணட்ஸ் போட மாட்றீங்க ஒரு சிலர தவற. சின்ன பிள்ளைய அழ வைக்கலாமா மீ பாவம். கமெண்ட் பன்ன்லனா நா நல்ல எழுதளனு அழுதுருவேன் 😢😢😢😥

ரேவதியின் "ஒரு புன்னகைப் பூவே!!!" - கருத்துத் திரி


கருத்து நியாபகம் சிஸ்டர்ஸ்.


இப்படிக்கு

அன்புடன் உங்கள் ReY babyma 😍
 
Last edited:

revathyrey04

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
புன்னகை 3 :

“சொல்லுங்க மச்சான், எப்படி இருக்கீங்க…?” என்று தன் செல்ல தங்கையின் கணவரிடம் தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்தார் தீக்ஷாவின் தந்தை மூர்த்தி.

“..............”,

“அப்படியா, இல்லையே”,

“...............”,

“சரி சரி பாப்போம் மச்சான் சீக்கீரம்”

“...............”,

“ஆமா கண்டிப்பா”,

“................”,

“உங்க தங்கச்சி வேலையா இருக்கா, நீங்க பேசுனதா சொல்லிடுறேன், சரி மச்சான் அப்ப வச்சிடுறேன்”,

என்று அணைக்கப்படும் சமயம் மாடியில் இருந்து துள்ளலுடன், கருப்பு நிற லாங் ஸ்கர்ட்டும், பேபி நிற சிறிய அளவில் கை வைத்த டீசர்ட்டும், கருப்பு மற்றும் அதே பிங்க் நிற டிசைனால் ஆன ஸ்கார்பை கழுத்தைச் சுற்றி அணிந்து இறங்கி வந்தாள் தீக்ஷா.

பால் நிறத்தில், நீள் வடிவ முகமும், தலை குளித்திருந்ததால் விருத்து விடப்பட்ட முடியும், சிறிதும் ஒப்பனை இல்லாத முகத்தில், ஐலைனரால் வைக்கப் பட்ட சிறு பொட்டும், பிறை நெற்றியில் சிறு கீற்றென அடர் சிவப்பு நிற குங்குமம், கழுத்தில் சிறிய தங்க சங்கிலி அதில் இதய வடிவ டாலர் அணிந்து, வலது கையில் ப்ரேஸ்லட் என தன் அருகில் அமர்ந்த மகளை பார்த்தவரின் முகத்தில், இவள் என் மகள் என்கிற கர்வமும், பெருமையும் ஒருசேர எழுந்தது.


“குட் மார்னிங் டாட், என்ன இங்க இருந்து லவ்ஸ் போல, அம்மாவை லுக் விட்டுட்டு இருக்கீங்க” என்றவாறு நான்கு பேர் அமரும் ஷோபாவின் இடதுபுற ஓரத்தில், கையில் தொலைபேசியுடன் அமர்ந்திருந்த தந்தையின் வலது புறம் உட்கார்ந்தவள் தந்தையின் மடியில் படுத்துக் கொண்டாள்.

“என்னடா குட்டிமா, சீக்கிரம் எழுந்துட்ட எங்கையும் வெளில போறியாடா” என்று சிறு நக்கல் சிரிப்புடன் கேட்ட தந்தையை கொலைவெறியுடன் பார்த்தாள். பின்ன நடு பகல் பன்னிரென்டை தாண்டி எழுந்து கீழே வந்த மகளிடம் கேட்டால்??

“உங்கட்ட என்ன டாட் சொன்னேன் நேத்து நைட், நாளைக்கு நான் யாழி கூட வெளிய போகனும், சீக்கிரம் எழுப்பி விடுங்கன்னு. ஆனா நீங்க என்னன்னா ஹாயா இங்க உட்கார்ந்துட்டு உங்க வொய்ஃப சைட்டு அடிச்சுட்டு இருக்கீங்க” என்றவாறு கோபத்தில் சிலிர்த்தெழுந்தாள்.

கையில் உள்ள தொலைபேசியை அருகில் உள்ள மேசை மீது வைத்து விட்டு மகளின் புறம் திரும்பினார். “குட்டிமா, நீ சொல்லி அதை நான் செய்யாம இருப்பேனா, இரண்டு தடவை வந்து எழுப்புனேன், நீ எழுந்துக்கல. அதான் சரி சண்டே தான, ரெஸ்ட் எடுக்கட்டும்னு வந்துட்டேன்” என்று சமாதானப் படுத்தினார்.

மீண்டும் தன் மடியில் படுத்த மகளை செல்லம் கொஞ்சியவாறே “என்னடா குட்டிமா,பைனல் இயர் வந்துட்ட, நெக்ஸ்ட் என்ன பன்னலாம்னு ஐடியால இருக்க, டாட் கூட பிஸ்னஸ் பாக்க வர்றியா, இல்ல பி.ஜி அப்லை பண்றியாடா” என்று கேட்டார்.

“டாட் சொல்ல மறந்துட்டேன், அடுத்த சேடெர்டே ADS groups ல்ல இருந்து தான் கேம்ப்பஸ் இன்டர்வியு வராங்க. அதுல செலக்ட் ஆகிட்டா எனக்கும் ஒரு எக்ஸ்பீரியன்ஸ் கிடைக்கும்,அப்டியை கரஸ்ல மேனேஜ்மென்ட் படிக்கலாம்னு இருக்கேன், ஒரு டூ இயர்ஸ் வொர்க் பார்த்து நானும் கொஞ்சம் கத்துப்பேன்ல டேட்” என்று முடித்தாள். ஏதோ யோசித்தவராக “சரிடா, நீ டிசைட் பன்னிட்டா சரி” என்றார்.

சமையல் அறையில் இருந்து வெளியில் வந்த திவ்யா கணவரை முறைத்தவாரு “ரொம்ப நல்லா இருக்கு, இருபத்தியொரு வயசாகிருச்சு, இன்னும் சின்ன குழந்தை மாதிரி கொஞ்சிட்டு இருக்கீங்க, அவளும் இப்ப தான் விடிஞ்ச மாதிரி எழுந்திருச்சு வரா”, என மகளை பார்த்து கூறினார் பாரதி தீக்ஷாவின் அன்னை.

தன் மகளின் அழகு முழுவதும் தன் தாயிடம் இருந்து வந்தது தான் என்பது போல், முகத்தில் மஞ்சள் பூசி,வீட்டில் வேலை பார்ப்பதற்கு ஏற்ப பருத்தி சேலையின் முந்தானையை இடுப்பில் சொருகி, இந்த வயதிலும் தெய்வீக அழகும்,சாந்தமான முகமுமாக இருந்த மனைவியை விழி அகற்றாமல் பார்த்துக் கொண்டிருந்தார். கணவரின் பார்வையை கண்டு லஜ்ஜையுற்றவராக, மனதிற்குள் நொடித்துப்போய் பாரதி பார்வையை திருப்பிக் கொண்டார்.


“சரி பாரு, சாப்பாடு எடுத்து வை,சாப்டுட்டு குட்டிமா கிளம்பட்டும்” என்று சொல்லி் கொண்டே எழுந்தார்.

ஞாயிறு மட்டும் காலை,இரவு உணவு சேர்ந்து உண்பது வழக்கம். பேசிக் கொண்டே உண்டு முடித்து எழுந்தாள் தீக்ஷா. “பை டேட், பை மாம்” என்றபடி கீ, மொபைல், மற்றும் சைடு பேக்கை அணிந்து,தன் ஸ்கூட்டி பெப்பை உயிர்ப்பித்து நகர்ந்தாள்.

தீக்ஷா, யாழினி, ரேஷ்மா, வினய், தருண் எல்லோரும் பள்ளியில் இருந்து நெருங்கிய நண்பர்கள். இதில் ரேஷ்மா தருண் மருத்துவ படிப்பையும், வினய் திருச்சியில் வேறு கல்லூரியில் கணினிப் பொறியியல் படிப்பையும் தேர்வு செய்தனர். தீக்ஷா,யாழினி மட்டும் கட்டிடப் பொறியியல் துறையை தேர்வு செய்தனர்.

ஏற்கெனவே சினிமா சென்று அடுத்து ஹோட்டல் போகலாம் என்று முடிவு செய்திருந்தனர். இன்று தீக்ஷாவினால் மூவி செல்லாமல் ஹோட்டல் மட்டும் சென்றனர். நண்பர்களுடன் இருக்கும் பொழுது அரட்டைக்கு பஞ்சம் ஏது?
“என்ன தருண், உன் ஆள் எப்படி இருக்கா?? “ என்று வம்பை ஆரம்பித்தால் ரேஷ்மா என்று கண் சிமிட்டி விஷம புன்னகையுடன் வினவ, “பேச்சு, நாமலே சொல்லலாம்னு நினைச்சோம், அதுக்குள்ள ஆரம்பிச்சு விட்டுட்டாலே இந்த பக்கி”என தலையில் கை வைத்து உட்கார்ந்து விட்டான். ஏனெனில் இது வரை எதையும் நண்பர்களிடம் மறைத்ததில்லை. தனது காதலை பற்றி நேரில் சொல்லலாம் என்று ஏற்படுத்தப்பட்டதே இந்த கெட் டு கெதர்.


தருண் நினைப்பை பொய்யாக்காமல் தீக்ஷா தருணை ரொம்ப பாசமாக பார்த்துக் கொண்டிருந்தாள். “அது வந்து தீக்ஷா, இது நேர்ல சொல்லி ஒரு ஸ்வீட் சர்ப்ரைஸ் குடுக்கனும்னு தான்” என்று பாவம் போல் சொன்னான். கொஞ்சம் கெஞ்சி, கொஞ்சி சமாதானம் செய்தான். அப்புறம் பேச்சு வெவ்வேறு திசைகளில் திரும்பியது.

ஒரு வழியாக அனைவரும் ஹோட்டலை விட்டு வெளியேறி ஷாப்பிங் முடித்து வீடு திரும்பினர்.


--------------------------------------------------------------


“DR industries”

என்று மிகப் பெரிய நுழைவாயிலை தாண்டி சுமார் இரண்டிற்கும் மேற்பட்ட ஏக்கர்களை கொண்ட தன் சொந்த சாம்ராஜ்யத்தில் ராஜ தோரணையுடன் தனது பென்ஸ் காரில் இருந்து இறங்கினான் தர்ஷன்.

சென்னை சிட்டியில் இருந்து பல மயில் கடந்து, அரசாங்க ஒப்புதலில், மிகத் தகுந்த பாதுகாப்பும் தனது தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு, ஒரு வருட காலமாக உணவு,தூக்கம் என்பதை சரி நேரத்தில் எடுக்காமல், கர்ம சிரத்தையுடன் சொந்த முயற்சியால் உருவாக்கப்பட்ட சிமெண்ட் தயாரிக்கும் ஆலை. ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள். ஒவ்வொரு பிரிவிற்கும் மேற் பார்வைக்கு என அந்த துறையை சார்ந்த சிறந்த பொறியாளர்கள் என நியமிக்கப்பட்டு நடத்தி வருகிறான்.


தொழிலாளர்களிடம் வேலை வாங்கும் பாங்கு, அவனின் ஆளுமை, சிறு வயதிலேயே இமாலய வளர்ச்சி என அனைவரையும் பிரமிக்க வைக்கும் அவனின் தொழில் வளர்ச்சி. மார்க்கெட்டில் DR சிமெண்ட்டிற்கு எப்பொழுதும் டிமான்ட் தான். தரத்தில்,விலையில் என அனைத்திற்கும் பேர் போனது.

தர்ஷன் - எப்பொழுதும் ஃபார்மல்ஸ் அணிவது என்றால் வேப்பங்காய் தான். தவிர்க்க முடியாத தொழில் ஒப்பந்தத்திற்கு மட்டுமே நேர்த்தியான உடை. மற்ற நேரங்களில் ஜீன், கேஷூவல் சர்ட்டும் தான். இப்போதும் அதே போல் அடர் சிவப்பு நிற சர்ட்டும் அதில் மேல் சட்டை பட்டன் போடாமல் அதில் தன்னுடைய ரேஃபான் சன் க்ளாஸும், லைட் ப்ளூ நிற ஜீன், எப்பொழுதும் இருக்கும் அதே வசிகர புன்னகையுடன் தனது அலுவல் அறையை அடைந்தான்.



-------------------------------------------------------------
“சரி கம பத நி சொல்லித்தாரேன் ஒரு வாட்டி

சரியா கேட்டுட்டு பாடுவியா ஏ பாட்டி

கொடுக்கா புளிய பறிச்சு நா தொவையல் அரச்சு தாரேன்”

என தன் பாட்டி மற்றும் பக்கத்து வீட்டில் உள்ள பாட்டிகளை வீட்டு முற்றத்தில் உட்கார வைத்து அனைவரையும் பாடாய் படுத்திக் கொண்டிருந்தாள் வைதேகி பாட்டியின் மகன்வழிப் பேத்தி ஷாலினி, பாட்டிக்கு ஷா வராதனால சாலுக்கண்ணு, இந்த வீட்டின் முதல் பெண் வாரிசு. விஸ்வநாதன் மற்றும் சசி அவர்களின் சீமந்தபுத்திரி.


“ஏன்டி எங்கள இந்த பாடு படுத்துற, உன்ன ஒரு மகராசன் கைல பிடுச்சு குடுத்தா தான் உன்ன அடக்க முடியும்,அந்த மகராசந்தேன் எங்க இருக்கானோ”என வைதேகி பாட்டி நொடித்துக் கொண்டார்.

“இந்தா கெழவி, இனிமேட்டா பிறக்க போறான், எங்க இருக்கானோ, என் கண்ணுல சிக்குறவர அந்த மகராசன்,பாவம்,சந்தோசமா இருந்துட்டு போவட்டும்” என கனவு உலகிற்கு சென்று விட்டாள். “எத்தனை வருடம் அவனை பார்த்து. இந்த தடவையாவது ஊருக்கு வருவானா?? அப்டியே வந்தாலும் நம்மல தெரியுமா?? நம்மட்ட பேசுவானா???” என தனக்குள் முனுமுனுத்தப்படி உட்கார்ந்து விட்டாள்.



“நீ உன் சிறகை விரிக்கும் வரை நீ எட்டும் உயரம் யாரறிவார்?”


பூக்கும்




------------------------------------------------------------
 
Last edited:

revathyrey04

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் நட்பூஸ்,


அடுத்த அப்டேட் உடன் வந்து விட்டேன். படித்து விட்டு உங்கள் கருத்துகளை பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். சிலர் வெறும் லைக்ஸ் மட்டும் தான் போடுறிங்க. உங்களுடைய ஒவ்வொரு கருத்தும் தான் எங்களை ஊக்கப்படுத்தும். நிறைகள் தான் என்றில்லை குறைகளையும் பதிவு செய்யுங்கள்.

ரேவதியின் "ஒரு புன்னகைப் பூவே!!!" - கருத்துத் திரி

இப்படிக்கு

அன்புடன் உங்கள் ReY babyma ☺☺😍
 
Last edited:

revathyrey04

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
புன்னகை 4 :

தனக்குள் முனுமுனுத்தப்படி உட்கார்ந்து இருந்த பேத்தியை பார்த்து விட்டு,தான் சொன்னதால் தான் அமைதியாகி விட்டாள் என்று மிக சரியாக, தவறாக எண்ணி விட்டார் வைதேகி பாட்டி. பாவம் அவருக்கு எங்கு தெரியும், தன் பேத்தி அவளின் காதல் மன்னனுடன் கனவுலகிற்கு சென்று விட்டாள் என்று.

மற்ற பாட்டிகளிடம், “என் பேத்தி உங்க கூட கத்தி கத்தி தான் சோந்துருச்சு, எல்லாரும் போயி மத்த வேலை இருந்தா பாருங்க” என்று விரட்டி விட்டபடி பேத்தியின் அருகில் அமர்ந்து அவள் கையை எடுத்து தன் முதிய கரங்களிற்குள் வைத்துக் கொண்டு,


“சாலுக்கண்ணு, அப்பத்தா ஏதூம் உன்ன கஷ்டப்படுத்துற மாதிரி பேசிட்டேனாத்தா, முகம் சோந்துருச்சு” என்று குரலில் வருத்தம் பொங்க கேட்டார்.

கனவில் இருப்பவளை தொந்தரவு செய்த பாட்டியை கோபமாக பார்க்க முயன்று நிமிர்ந்து பார்த்து, பாட்டியின் முகத்தில் உள்ள கலக்கத்தை பார்த்து விட்டு, தற்காலிகமாக தனது கனவிற்கு தொடரும் போட்டவள், இன்னும் அருகில் நெருங்கி அமர்ந்தாள்.

“அய்யயோ பாட்டி, அப்பிடி எல்லாம் இல்ல, இங்க வர்ரதுக்கு உன் மகன் கிட்ட படாத பாடு பட வேண்டியதா போய்ருச்சு, அத தான் நெனச்சிட்டு இருந்தேன்” என்றாள்.


ஷாலினி நல்ல சிவந்த நிறம், பார்க்கும் யாவரும் திரும்பி பார்க்க வைக்கும் தோற்றம். இடை வரை வளர்ந்திருந்த அடர்ந்த கூந்தலை தளர பின்னி, பாட்டியின் கைங்கரியத்தால் நெருக்கி தொடுத்த தோட்டத்தில் உள்ள மல்லிகையை வலப்புற தோலில் தொங்க விட்டிருந்த விதம், அடர் நீல நிற சிறிய கோல்டன் நிற தங்க நிற ஜரிகை உள்ள பாவாடையில் மயில் கழுத்து நிற சிறு பூக்கள் டிசைன், மற்றும் அதே நிற ரவிக்கை, அதற்கு மேட்சிங்காக மயில் கழுத்து நிற தாவணி, கிராமத்து தேவதை என இருந்தாள்.


“ஏன்டி இப்ப என் மகன இழுக்குற, இங்க வாரதுக்கா உன்ன விட மாட்டேனு சொன்னான், நீ ஏதாது வம்பளந்துருப்ப, அதான் சொல்லிருப்பான்” என மகனுக்கு வக்காலத்து வாங்க வந்தார் பாட்டி. பின் தன் ஒரே மகனை சொன்னால் பொருத்துக் கொள்வாரா?

வடிவேல் - வைதேகி தம்பதியினருக்கு மூன்று பிள்ளைகள், மூத்த மகன் தான் ஷாலினியின் தந்தை விஸ்வநாதன், இரண்டாவது மகள் பிரபாவதி, மூன்றாவது மகள் கலையரசி. பிரபாவதியை சென்னையில் பெண் கொடுத்து தனது மகனிற்கு பெண் எடுத்தார். பிரபாவதியின் கணவர் ஊர் மெச்சும் மருமகன் மற்றும் மிகப் பெரிய தொழிலதிபர். வடிவேல் தாத்தாவும் ஏக போக சொத்துக்களின் சொந்தக்காரர். ஆனால் அந்த பந்தா இன்றி வாழ்பவர்.


பாட்டியிடம் பேசிக் கொண்டிருக்கும் போதே ஷாலினியன் எண்ணங்கள் எட்டு வருடத்திற்கு முன்னால் சென்றது, இதேபோல் பாட்டி வீட்டிற்கு வந்த பொழுது தன்னிடம் வம்பளந்த தன் அத்தை மகனை நினைத்து.

மதுரையில் திருமங்கலத்திற்கு செல்லும் வழியில் உள்ள நகரமும் அல்லாத, சத்த கிராமமும் அல்லாத கொளமங்களம் ஊரில் தான் வைதேகி பாட்டியின் வீடு உள்ளது. இப்போது போல் உயர்ந்த அதிக அளவில் கட்டிடங்கள் இல்லாது இருந்தாலும், அனைத்து அடிப்படை வசதிகளையும் கொண்டது.

திருவிழாவின் முதல் நாள் என்பதால் கோவிலில் கூட்டம் அலைமோதியது. இன்று தான் கொடி ஏற்றி பக்கர்கள் தங்களது விரதங்களை தொடங்குவர். அழகான சீரியல் பல்புகளினாலும், கிட்டத் தட்ட ஐந்நூறு பேருக்கும் மேல் நிற்க கூடிய மைதானத்தின் நடுவில் அமைந்திருந்தது பிரசித்திப் பெற்ற மாரியம்மன் கோயில். மைதானத்தின் கடைசியில் வரும் கோயில், இடப்புறம் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கு என மேடையும் அமைக்கப்பட்டிருந்தது. கோயில் வாசலில் அம்மனின் இடது புறம் சரஸ்வதி லட்சுமி என படங்கள் உள்ள சீரியல் லைட்டுகள் மாறி மாறியும், வலது புறம் தன் வாகனம் குதிரையில், கையில் சாட்டையுடன் கம்பீரமாக வீற்றிருக்கும் ஐய்யனாரும், தனது ஆயுதமான அரிவாளை கையில் ஏந்தியவாறு கருப்பனசாமியின் படங்களும் மாறி மாறி மின்னிக் கொண்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது அந்த கோயில்.

கோயிலில் இளைஞர்கள் அனைவரும் சைடு அடிப்பதற்காகவே வந்திருப்பவர்கள் ஒரு புறபமும், சிலர் பயபக்தியாக சாமி கும்பிடுவதற்காகவும், மற்றும் சிறுவ சிறுமியர்கள் பட்டாம் பூச்சிகளாய் சுற்றிக் கொண்டிருந்தனர். மாலையில் கோயிலின் கொடி மரத்தில் ஐய்யரின் மந்திரங்களுடன், மேள தாளங்கள் முழங்க கொடி ஏற்றி பக்கர்கள் காப்பு கட்டி தங்களின் விரதங்களை தொடங்கி வைத்தனர்.

ஷாலினி மற்றும் வைஷ்ணவி(வைதேகி பாட்டியின் இரண்டாவது மகள் கலையரசியின் மகள்), வைஷ்ணவியின் தம்பி அஷ்வின் மூவரும் சேர்ந்து கோயிலை சுற்றிக் கொண்டிருந்தனர். ஷாலினி வைஷ்ணவி ஒரே வயது தற்போதே எட்டாம் வகுப்பை முடிக்க இருக்கும் இளம் பெண் குழந்தைகள். அஷ்வின் அவர்களை விட இரண்டு வயது சிறியவன். இரு பெண்களும் ஒரே நிற பட்டு பாவாடை சட்டையில் அனைவரும் வியக்கும் வண்ணம் அழகாக தேவதையாக வலம் வந்தார்கள்.

இப்பொழுது தான் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கும் ஷாலினியின் அத்தை மகன் ராசு வந்திருந்தான். பார்ப்பபதற்கு மாநிறம் தான் ஆனால் தற்போது புதியதாக முளைத்திருக்க துவங்கும் மீசை, தாடியுமாக ஊரில் உள்ள இளம் பெண்களை வம்பிழுத்து கொண்டிருந்தான் கூடவே அவனைப் போல இருவர் வேறு. இவர்கள் தாத்தா வடிவேல் தான் ஊர் தலைவர் என்பதால் சிறு கெத்து காட்டி நின்றிருந்தான்.

கோயிலில் முன், இடது, வலது புறம் என மூன்று வாசல் உள்ளது. சற்றே பெரிய கோயில் என்பதால் ஒரு புறம் மட்டுமே சென்று வந்தால் சிரமம் ஏற்படும் என இந்த ஏற்பாடு. இதில் வலது புறம் வாசலில் தான் நம்ம சின்ன ஹீரோ நின்றிருந்தான். அப்பொழுது அவர்களை தாண்டி சென்ற ஒரு இளம் பெண் திருவிழா என்பதால் கூடுதல் சிரத்தையுடன் மேக்கப் செய்து தன் தோழிகளுடன் கோயிலை சுற்றிக் கொண்டிருந்தாள். அப்பெண்ணை ராசு வச்ச கண் எடுக்காமல் வயது கோளாரினால் பார்த்து கொண்டு எவ்வாறு நெருங்கி பேசிவது இவ்வளவு கூட்டத்தின் நடுவே என்று யோசித்து பலன் பூஜ்யம் தான். அப்பெண் அவ்வீட்டாருடன் சேர்ந்து சென்று விட்டாள்.

இன்று தான் முதல் நாள் என்பதால் இன்னும் பெரிய திருவிழா அடுத்த சனிக்கிழமை தான் என்று ராசுவும் கிளம்ப விட்டான்.

அப்படியே மற்ற நாட்களும் செல்ல அனைவரும் மறுபடியும் திருவிழாவிற்கு கூடினர். ஞாயிறு அன்று தான் பூக்குழி உச்சவம் என்பதால் பக்தர்கள் தீ மிதித்தல் போன்ற வேண்டுதலை செய்வர். ராசுவும் கிட்டத் தட்ட ஒரு மணி நேரமாக தேடி கண்டுபிடித்தான் அந்த பெண்ணை. கையில் சாக்லெட்டுடன் நின்றிருந்தான் ஹீரோயிசம் வேறு. ஆனால் எவ்வாறு நெருங்குவது என்று யோசித்து கடைசியில் தன் தங்கை வைஷூ மற்றும் அத்தை மகள் ஷாலினியை நாடினான்.

“வைஷூ, அதோ நிக்கிது பாரு அந்த கோல்டன் கலர் ஹாஃப் சாரி போட்ருக்க பொண்ணு, அவட்ட நான் குடுத்தேனு யாருக்கும் தெரியாம குடுத்துட்டு வர்றியா நீயும் ஷாலுவும், நான் போய் குடுத்தேனா தொலஞ்சேன்” என்று கெஞ்சிக் கொண்டிருந்தான். பாவம் அவளிற்கு தான் தன் அண்ணன் என்றால் உயிர் ஆயிற்றே.

ஆனால் ஷாலு தான் “அத்தான், யாரவது பார்த்துட்டா எங்கள தொலச்சுருவாங்க, நீங்க வேணா போய் குடுங்க, நம்ம வீட்ல யாரவது பார்த்துட்டா நீங்க அடி வாஙகுங்க” என ஓடுவதற்க்கு தயாரானால். ராசு ஒரு வழியாக கெஞ்சிக் கொஞ்சி கேட்பரி சாக்லெட்டுடன் அனுப்பி வைத்தான். ஷாலு மட்டும் திரும்பி திரும்பி பார்த்தவாறு சென்றாள். ஏதோ தன் அத்தை மகனை அந்த வயதிலும் யாருக்கும் விட்டு குடுக்க முடியவில்லை.

அந்த பெண்ணை இருவரும் நெருங்கி ராசுவை நோக்கி கை நீட்டியபடி ஏதோ சிறியவர்கள் பேச, அப்பெண் இவர்களையும் ராசுவையும் நன்றாக முறைத்தவாறு அகன்றாள். இதை எல்லாம் ராசுவும் பார்த்து கொண்டு தான் இருந்தான். அவள் சென்றவுடன் ஷாலு மற்றும் வைஷூவை நெருங்கி அவர்கள் கையில் உள்ள சாக்லெட்டை சாப்பிடுமாறு சொல்லிவிட்டு “அவளுக்கு குடுத்து வச்சது அவ்வளவு தான், அவர் இல்லனா என்ன, எனக்கு தான் என் அத்த மக ஷாலுக்குட்டி இருக்கால, என்ன அம்மு அத்தான கல்யாணம் பண்ணிப்ப தான? “ என்று சீண்டினான். ஆனால் அது தான் அவள் மனதில் வேரூன்றிது. ஏனெனில் வீட்டிலும் அடிக்கடி பேச கேட்டிருக்கிறாளே. “அம்முவ நம்ம ராசுவிற்கே கல்யாணம் பண்ணி வச்சுட்டோம்னா அவள நம்ம பிரிஞ்சு இருக்க வேணாம், அவளும் அவர் அத்த கூட கடைசி வர இருப்பா, சொந்தமும் விட்டு போகாதுல” என பெரியவர்கள் அடிக்கடி பேசும் பேச்சு, அந்த சிறு வயதிலும் அத்தான் என்றால் உயிர். கல்யாணம் என்றால் அர்த்தம் தெரியாத வயதிலும் அத்தான் கேட்டதற்காக “சரி” என்று மகிழ்வோடு தலை ஆட்டினால்.


வருடங்கள் ஏற ஏறவே தன் அத்தானின் வார்த்தைகள் பசுமரத்தானியாய் நெஞ்சில் பதிவாகியது. இதோ இந்த நிமிடம் வரை. ஆனால் அவன் யாருட்ட
ப்ளாட் ஆகிருக்கானோ????

--------------------------------------------------------


“குட் மார்னிங் டாட்”, என்று ஹாலின் சோஃபாவில் தினசரி நாளிதழை படித்து கொண்டிருந்த தந்தையின் பதிலுக்கு கூட காத்திராது “மாம், லன்ச் வேண்டாம் டுடே, கேன்டீன்ல சாப்டபோறோம்” என்று சமையல் அறை நோக்கி குரல் குடுத்தாள் தீக்ஷா. மகளின் குரலில் கையில் ஒரு டம்ளர் பாலினை கொண்டு வந்தவர் “இந்தா டா, இது மட்டும் குடிச்சிட்டு கிளம்பி, All the best “ என்று வாழ்த்து கூறினார். இன்று தான் கல்லூரியில் கேம்பஸ் இன்டர்வியு. அதற்கு தகுந்தாற் போல் மெல்லிய நீல நிற டாப் மற்றும் வெள்ளை நிற லெகின்ஸ், துப்பட்டா என அணிந்து, முன் உச்சி சில முடியை சிறிதாக பஃப் வைத்து, விருத்து விடப்படாமல் ஹார் பேண்ட் கொண்டு போனி டெய்ல் போட்டிருந்தாள் அவ்வளவே.

“ஆல் த பெஸ்ட் டா குட்டிமா” என்று கூறிய தந்தையின் வாழ்த்தை பெற்றக் கொண்டு தன் பெப்பை உயிர்ப்பித்து நகர்ந்தாள்.

--------------------------------------------------------

Mount college of engineering and technology:

மிக மிக பரபரப்புடன் இயங்கி கொண்டிருந்தது அந்த ஒரு ப்ளாக் மட்டும். சிலர் மிகுந்த சிரத்தையுடனும், சிலர் சிறிது பயத்துடனும், சிலர் வேலை கிடைக்க வேண்டுமே என்ற கவலையுடனும், மற்றும் சிலர் யாருக்கு வந்த விருந்தோ எனும் விதமாக இவ்வாறு தங்களை தயார் செய்து கொண்டிருந்தனர்.

தனது வழக்கமான புயல் வேகத்திலேயே ஜாகுவாரினை மிக அசட்டையாக கல்லூரியின் வாயில் முன் நிறுத்தி, சில மணி துளிகள் கழித்தே காரை விட்டு இறங்கினான் “ஆதி மேனேஜிங் டிரெக்ட்டர் அஃப் ADS Group of companies”. வெள்ளை முழு கை சட்டை, அடர் கருமை நிற பேன்ட்டும், அடர் சந்தன நிற கோர்ட்டும், கண்ணில் எப்பொழுதும் அணியும் போர்ஸ்சே (Porsche) சன் க்ளாஸும் அணிந்திருந்தான். இறங்கி சில நிமிடங்கள் கல்லூரி வளாகத்தில் தன் பார்வையை சுழற்றியவன் என்ன நினைத்தானோ, சட்டென்று தன்னை மீட்டுக் கொண்டு, தன்னை அழைக்க வந்த கல்லுாரி முதல்வரின் கையை குலுக்கினான். “வெள்கம் மிஸ்டர் ஆதி” என்றவரிற்கு மிக சிறு புன்னகையுடன் தலை அசைப்பை பதிலாக்கினான்.


கல்லூரி மாணவர்கள் மொத்தமும் வைத்த கண் பார்த்தவாறு அவனை அங்குலம் அங்குலமாக ரசித்துக் கொண்டிருந்தனர்.ஏனெனில் நேற்று தான் ஆதியே இன்று நேர்க்காணலிற்கு வருவதாக கல்லூரியில் கூறியிருந்தாள் ஷர்மிளா ஆதியின் பி.ஏ.

“ஆதி ஹியர், கம் டூ மை கேபின்” என்று கூறி அலைபேசியை வைத்த அடுத்த இரண்டு நிமிடத்தில் ஷர்மிளா அவனின் கேபினில் இருந்தாள். சிறு மெச்சுதலாக பார்த்தவன் மிக மெல்லிய நகையை உதட்டில் எட்டாதவாறு பேச தொடங்கினான். “மிஸ் ஷர்மிளா, டுமாரோ தான கேம்பஸ் இன்டர்வியு கன்டக்ட் பண்ணாலாம்னு இருக்கோம், ஒன் சேன்ஜஸ் ஆன் தட் ப்ளான். நானும் போக போறேனு காலேஜ்ல இன்பார்ம் பண்ணிடுங்க, ஏன்னா இது ரொம்ப பெரிய ப்ராஜெக்ட்னு அல்ரெடி சொல்லிருக்கேன்ல. சோ ஐ நீட் டு மானிட்டர் தி ஸ்டூடண்ட்ஸ பெரமார்மன்ஸ்” என்றால். ஷர்மிளாவிற்கு மயக்கம் வராத குறை தான், ஏனெனில் ஆதி தன்னிலை விளக்கம் சொல்வது இதுவே முதல் முறை. எந்த பதிலும் இல்லாது போகவே “என்ன” என்பது போல் தனது மேனரிஸமான வலது புற ஒற்றை புருவத்தை மட்டும் தூக்கினான். சடுதியில் தன்னை மீட்டு கொண்டவள் “காட் இட் சர், வில் இன்பார்ம் டு தி காலேஜ்” என்று வெளியேறியவள் உடனே தகவலும் குடுத்தாள் சிறு குழப்பத்தினூடே.


“ஹேய் தீக்ஷாஷாஷா” என்றாவாறே பிரசங்கமாள் யாழினி மூச்சு வாங்க..

“ஏன்டி இப்டி கத்துற,இந்தா தான இருக்கேன் நானு” என்றாள் கடுப்புடன். பின்னே எல்லோரும் இன்னும் சில மணி துளிகளில் நடக்கவிருக்கும் இன்டர்வியுவிற்கு படித்து கொண்டிருக்க இவள் மட்டும் சுத்தினால். “ஏன்டி, படிக்காம சுத்திட்டு வந்து என்னையும் உயிர வாங்குற, கொஞ்சமாச்சும் பொறுப்பு இருக்கா, ஆனா வேலை மட்டும் வேணும்னு கதறு, சொல்லி தொல எதுக்கு கூப்டனு” என ஏகத்துக்கும் பொரிந்தாள்.

“இல்ல டி, இன்னைக்கு இன்டர்வியூக்கு அந்த எம்.டி ஆதியே வந்துருக்காரு. என்ன ஹான்ட்சம் தெரியுமா, சும்மா ஹீரோ மாதிரி இருக்காரு,ஆனா ஆளுதான் சிடுமூஞ்சி போல, மருந்துக்கும் சிரிப்பு இல்ல, அங்க வேலை மட்டும் கிடச்சா போதும், லைஃப் செட்டில் ஆகிடும்” என்றாள்.

“அந்த மகராசன் ஆளு எப்படி இருந்தா நமக்கென்னடி, வேலை கிடைச்சிடனும்” என பெரு மூச்சு விட்டாள் தீக்ஷா. “ஏன்டி நாங்க தான் கவலைப்படனும், வேலை கிடைக்கனும்னு, நீ ஒரு வார்த்தை சொன்னா உங்க அப்பா உனக்குனு சொந்தமா கம்பெணி வச்சு குடுத்துருவாறு. நீயே நூறு பேருக்கு வேலை போட்டு குடுக்கலாம், நீ என்னனா எங்கள மாதிரி முட்டிட்டு படிச்சுட்டு இருக்க” என்று யாழினி கேட்டாள்.

ஆம், தீக்ஷாவின் தந்தை பெயர் சொல்லும் பெரிய பணக்காரர். பல கோடிகளுக்கு சொந்தக்காரர். மகளிடமும் பல முறை சொல்லி விட்டார் தன்னுடன் தொழிலை படிப்பு முடிந்தவுடன் பார்க்கும் படி. அவள் தான் படிப்பு முடிந்து இரண்டு வருடம் வேறு கம்பெணியில் வேலை பார்த்த அனுபவம் வேண்டும் என்று. ஏனெனில் அவளின் எண்ணப்படி தந்தையின் தொழிலில் இருந்தால் கண்டிப்பாக கற்றுக் கொள்ள முடியும் தான், ஆனால் அதை விட கடமை தான் இருக்கும். இதேது வேறு கம்பெணி என்றால் நிறைய கற்றுக் கொள்ள முடியும் அந்த சூழ்நிலையில் என்பதே அவளின் எண்ணம்.


“சரி டி, இன்னும் கொஞ்சம் நேரத்தில் எல்லாரையும் வி-1 லேப்(lab) அங்க வர சொல்லிருக்காங்க. போகலாம்” என்றவாறு ஐ.டி கார்டை மாட்டிக் கொண்டு நகர்ந்தனர்.


எல்லோரும் முதல் சுற்று திறனாய்விற்கு அம்ர்ந்திருந்தனர். மொத்தம் முந்நூறு மாணவர்களில் இருந்து இறுதி சுற்றில் நூறு பேர் மட்டுமே தேர்ந்தெடுக்கப் பட வேண்டும் என்று ஆதி முடிவு செய்திருந்தான். எனவே முதல் சுற்றில் 200 மாணவர்களும், இறுதி சுற்றில் நூறு மாணவர்களும் என பிரித்திருந்தான்.


கல்லூரியில் ஒரு ஹாலில் தேர்வும், மற்றொரு ஹாலில் ஆதி,கல்லூரி முதல்வர், மற்றும் சிலரும் இன்டர்வியுவை மானிட்டர் பன்னுவதற்கென்று ஏற்பாடு செய்திருந்தனர். ஏனெனில் ஆதி தான் அனைவரையும் நேரிடையாக மானிட்டர் பண்ண வேண்டும் என கூறியிருந்தான்.


முதல் சுற்றும் சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்று முடிவுகளும் உடனடியாக அறிவிக்கப்பட்டது. அதில் தீக்ஷா,யாழினி,ரோஹித் உட்பட தேர்வாகினர். அடுத்த சுற்று ஜி.டி-யில் இருபது மாணவர்கள் ஒரு குழு என பத்து குழுக்களாக பிரிக்கப்பட்டிருந்தனர். மொத்தம் ஐந்து தலைப்பு மாணவர்களிடமே குடுக்கப்பட்டு முடிவு செய்து பேச சொன்னனர். முதல் குழு இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி பற்றி
பேசினார்கள். அடுத்து குழுவில் தான் தீக்ஷா வந்தாள். முதலிலே அவளை ஆதி ஓரிரு நிமிடம் ஆழ்ந்து பார்த்து விட்டு பின்பு என்ன நினைத்தானோ சிறு உதட்டு சுழிப்புடன் பார்த்தவன். அவர்கள் குழு EQ or IQ என்ற தலைப்பை தேர்வு செய்து பேச தொடங்கினர். அடுத்ததாக தீக்ஷா பேச ஆரம்பித்தாள். முதலில் சாதாரணமாக பார்த்துக் கொண்டிருந்தவன் அவளின் தெளிவான ஆங்கில உச்சரிப்பு, சிறிதும் பயம் இன்றி, ஒரு வித நிமிர்வோடு அழகாக பேச பேச அவளின் பேச்சில் மூழ்க ஆரம்பித்து விட்டான் மற்றவர்கள் முன்பு எதையும் காட்டிக் கொல்லாதவாரு. அவள் பேசி முடித்ததும் ஏதோ நினைத்தவனாக உதட்டோரம் மிக சிறு மந்தகாச புன்னகை தோன்றியது. அழகாக அதை மற்றவர்களுக்கு காட்டாமல் மறைத்தவன் “இனி என் பக்கத்தில தான இருக்க போற, உன்ன அப்ப கவனிச்சுக்கிறேன் டி மை பேபி” என்று தனக்குள் கூறிக் கொண்டான்.
------------------------------------------------------------

“ஹாய் அண்ணா,எப்டி இருக்கீங்க, என்னைய சுத்தமா மறந்துட்டீங்கல்ல, நா உங்க மேல செம்ம போவத்துல இருக்கேன். ஆனா உங்களுக்கு தேவையான விஷயத்த மட்டும் கேட்டோனே டீல்ல விட்டுடீங்க” என்று விட்டார் அழுது விடுபவள் போல் அண்ணனிடம் பேசினாள் வைஷ்ணவி.

அவளிற்கு அவள் அண்ணன் ராசு என்றால் அவ்வளவு பிடித்தம். ஆனால் அவன் எப்ப பாரு வேலை வேலை என்று மட்டும் ஓடுபவன். ஆனாலும் வாரம் ஒரு முறையாவது தன் செல்ல தங்கையிடம் பேசி விடுவான். அடிக்கடி நேரில் பார்த்து விட்டும் வருபவன் சில காலமே நேரமின்றி ஓடுகிறான்.

“இல்ல வைஷூ குட்டி, உன்ன எப்டி டா மறப்பேன். லைட்டா பிஸிடா அதான்” என்றான். “சரி ண்ணா.. ஐஞ்சு வருஷம் மேல ஆச்சு நீங்க திருவிழாக்கு வந்து, இந்த தடவ கண்டிப்பா வரனும். ஊர்ல இருந்து நாங்க எல்லாரும் வெள்ளிக் கிழமை காலைல எல்லாம் வந்துருவோம். சோ நீங்களும் கண்டிப்பா வந்து எங்க கூட பத்து நாள் தங்கனும், எல்லாரும் வெளிய போய் ஜாலியா சுத்தலாம் ண்ணா” என்று கெஞ்சிக் மிரட்டினாள். “அவ்வளவு டேஸ் கஷ்டம் டா, பட் உனக்காக முயற்சி பண்றேன்” என்று கூறினான். “அப்பறம் அண்ணா, உங்க ஆளு எப்பவோ ஊருக்கு போய்ட்டா, இந்த தடவை ஆச்சும் வாங்க” என்று தொலைபேசியை அணைத்தாள்.

இங்கு ராசுவோ அவளின் அத்தை மகளினை பற்றிய கனவிற்கு சென்று விட்டான்.


“உன் அன்பின் தன்மைக்கு ஏற்றபடி, உன் செயல்கள் இருக்கும். உன் செயல்களுக்கு ஏற்றபடி, உன் வாழ்க்கை இருக்கும் -சாக்ரடீஸ்”


பூக்கும்.
 
Last edited:
Status
Not open for further replies.
Top