MekalaArul
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 5...
ரயிலில் பயணித்துக்கொண்டிருந்த யாழினியும் வடிவழகியும் சிறிது நேரம் பேசிக்கொண்டே வந்தனர்...
"வடிவு... உங்க ஊர்ல திருவிழால்லாம் சினிமாவுல காட்டுற மாதிரி சூப்பரா இருக்குமா?" என்று வினவினாள் யாழினி...
"என்னடி இப்புடி கேட்டுப்புட்ட? எங்க ஊர்ல ஒரு வட்டம் திருவிழாவை பார்த்துட்டன்னு வெச்சிக்கோ... அப்புறம் எங்க ஊரைவிட்டு வாரதுக்கு உனக்கு மனசே வராது... ரெங்கராட்டினம், வெளையாட்டுப் போட்டி, பஞ்சு முட்டாயி, ஜவ்வு முட்டாயி, கலர் கலரா சேமியா ஐஸ், ஆளுங்க எல்லாம் விதவிதமா வேஷம் போட்டுக்கிட்டு சுத்துவாய்ங்க... உங்க சென்னையில இருக்கமாதிரி இல்லாம, பொண்ணுங்க எல்லாம், பாவாடை தாவணிதான் கட்டிக்கிட்டிருப்பாய்ங்க... இல்லயின்னா சீலை கட்டிக்கிட்டிருப்பாய்ங்க... தலை நெறைய மதுரை மல்லிய வெச்சிக்கிட்டு மொளப்பாரி தூக்கிக்கிட்டுப் போற அழகே தனிதேன்... பாக்க பாக்க அம்புட்டு அளழகா இருக்கும்... பொம்பளைங்க எல்லாருமா சேந்துக்கிட்டு குளவை போட்டு பாட்டு பாடுவாய்ங்க பாரு... அருமையா இருக்கும் கேக்கறதுக்கு... ஆம்பளைங்க மட்டும் என்ன சும்மாவா? ஜல்லிக்கட்டு, கபடின்னு நிறைய வெளையாட்டு வெளையாடுவாய்ங்க... சும்மா தூள் கௌப்பும் திருவிழாவே... அதுலயும் ஐயனாரு சாமி எறங்கி பூசாரி ஆடுவாரு பாரு... அந்த ஐயனாரே நேர்ல வந்த மாதிரி இருக்கும்..." என்று பேசிக்கொண்டே போனவளை, "அடியேய் வடிவு... கொஞ்சம் மூச்சு வாங்கிக்கோடி... ஊரைப் பத்தி பேச ஆரம்பிச்சதும் தலைகால் புரியாம பேசிக்கிட்டே போற... நான் எங்கேயும் ஓடிப் போயிட மாட்டேன்... இன்னும் பத்து நாளுக்கு உன்கூடதான் சுத்திக்கிட்டிருக்கப் போறேன்... ஒண்ணொண்ணா மெதுவா சொல்லுடி..." என்று கேலி செய்தாள் யாழினி...
அதைக் கேட்ட வடிவோ, "என்ன அம்மு நீ? இப்படி கேலி பேசுத என்னியப் பாத்து... ஆனா.. நீ சொன்னதும் உண்மைதாண்டி... எங்க ஊரப்பத்தி பேச ஆரம்பிச்சதும் சந்தோஷத்துல என்னையே மறந்துட்டேன்... அதுவும் திருவிழான்னா சொல்லவே வேணாம்... திருவிழா முடியற வரை ஊரே கலைகட்டும் ... ஆனா என்ன நம்ம ஊருல நேத்திக்கிதான் திருவிழா முடிஞ்சிது..." என்று ஆனந்தமாக ஆரம்பித்த வடிவு சிறிது மனத்தாங்கலுடன் முடித்தாள்...
அதைக்கேட்ட யாழினியோ சிறிது அதிர்ச்சியுடன், "ஐயோ... என்னடி சொல்ற?.திருவிழா முடிஞ்சிடுச்சா? திருவிழாக்கு கூட்டிக்கிட்டுப் போறன்னு சொல்லிதானே என்னை கூப்பிட்ட... இப்ப இப்படி சொல்ற?" என்று யாழினி கேட்டாள்...
"அடியேய்... அதுக்குள்ள 'டென்சன்' ஆகாத... எங்க ஊருக்குப் பக்கத்து ஊரு கிடாரிப்பட்டியில நாளைக்கு திருவிழா ஆரம்பிக்குது... நாம அங்கிட்டுப் போவலாம்... வெசனப்படாத... உன்னிய அப்புடி எல்லாம ஏமாத்திப்புடமாட்டேன்..." என்று வடிவு கூறி முடிக்கவும், "கிடாரிப்பட்டியா?" என சந்தோஷக்குரலில் கேட்டாள் யாழினி...
தன் தோழியின் குரலில் இருந்த குதூகலத்தில் சிறிது யோசித்த வடிவு, "ஏண்டி... ஏற்கனவே அந்த ஊருக்குப் போயிருக்கியா? இல்லயின்னா அந்த ஊருல யாரையாவது உனக்கு ஏற்கனவே தெரியுமா?" என சந்தேகமாகக் கேட்டாள் வடிவு...
தான் செய்த முட்டாள்தனத்தை எண்ணி தனக்குத் தானே மனதிற்குள் ஒரு குட்டு வைத்துக்கொண்டவள், தன் தோழியை சமாளிப்பதற்காக, "இல்லடி... ஊர் பேரு கேக்க கொஞ்சம் வித்தியாசமா இருந்துதா... அதான் அப்படி கேட்டேன்... வேற ஒண்ணுமில்ல...".என்று அசடு வழிந்தாள்...
தன் தோழியை நம்பாத பார்வை பார்த்த வடிவிடம், "என்னடி? என்னை நம்பலயில்ல நீ? போ... இனி உன் கூட பேசமாட்டேன்" என பொய்யாக கோபம் கொண்டு சிணுங்கிய யாழினியிடம், "என்ன புள்ள இப்புடி பேசிப்புட்ட? நான் உன்னிய நம்பாம வேற யாரை நம்பப்போறேன்... சரி நேரம் ஆச்சு... வா தூங்குவோம்... காலையில வெள்ளனே மதுரைக்குப் போய்ச் சேர்ந்துடும் வண்டி..." என்று தன் தோழியை படுக்க வைத்தாள் வடிவு..
"சரிடி... குட் நைட்..."என்று கூறிய யாழினிக்கோ, தன் தோழியிடம் உண்மையை மறைத்தது சிறிது உறுத்தவே செய்தது...
மறுநாள் விடியலில் வைகை ஆற்றின் நீரில் இளஞ்சூரியனின் பொற்கதிர்கள் விளையாடும் நேரம், ஆமை போல் ஊர்ந்து சென்று மதுரை ஜங்க்ஷனை அடைந்தது அவர்கள் பயணித்த பாண்டியன் எக்ஸ்பிரஸ்....
பத்து நிமிடங்களுக்கு முன்பாகவே உறக்கத்தில் இருந்து விழித்த வடிவு, யாழினியையும் எழுப்பிவிட்டாள்... இருவரும் தயாராகி, தங்களின் உடமைகளை எடுத்து வைப்பதற்கும், ரயில் நிலையத்தினுள் ரயில் நுழைவதற்கும் சரியாக இருந்தது...
உடமைகளை எடுத்துக்கொண்டு இறங்கியவர்கள், ஆழ்ந்த மூச்சை உள்ளிழுத்து சுத்தமான காற்றை சுவாசித்தனர்... ரயில் நிலைய வாசலில் அமைந்திருந்த விநாயகர் கோவிலை மூன்று முறை சுற்றி திருநீறு பெற்றுக்கொண்டார்கள்...
"பிள்ளையாரப்பா... என் காதல் மேல இருக்க தைரியத்துல இங்க கிளம்பி வந்துட்டேன்... நான் நினைச்ச காரியம் நல்லபடியா முடிய நீதான் எனக்கு பக்கத்துணையா இருக்கணும்... " என்று யாழினி கண் மூடி வேண்டவும், யாரோ ஒரு பெண்மணி கோயில்மணியை அடிக்கவும் சரியாக இருந்தது...
அதை நல்ல சகுனமாக நினைத்தவளின் மனதில் இன்பம் பெருக்கெடுத்தது...
அவளின் முகமாற்றங்களை பார்த்துக் கொண்டிருந்த வடிவோ தன் மனதினுள், 'இவ நம்ம கிட்ட இருந்து எதையோ மறைக்கிறா... என்னன்னுதான் தெரியல... ஹ்ம்ம்... எப்படியும் நம்மகிட்ட சொல்லிதானே ஆகணும்... அப்ப பார்த்துப்போம்...' என்று நினைத்தாள்...
சாமி கும்பிட்டு முடித்ததும் அங்கிருந்து பேருந்தில் ஏறி, வடிவின் பெரியம்மா வீட்டிற்கு பயணப்பட்டுக் கொண்டிருந்தார்கள்...
மஞ்சம்பட்டி...
கிராமத்திற்கே உரிய மண்வாசனையுடன் உள்ள ஊர்... புழுதியைக் கிளப்பிக்கொண்டு நிறுத்தத்தில் நின்றது பேருந்து... இறங்கிய இருவரையும் பார்த்த ஒரு பெரிய மூதாட்டி, "ராசாத்தி... வந்துட்டியா... நீ வெள்ளனே வந்துடுவன்னு உங்கண்ணேன் நேத்து ஃபோன்போட்டு சொன்னான்... அதான் தாயி... உனக்காக காத்துக்கெடக்கேன்... எப்படியிருக்கடி என் ராசாத்தி? பாத்து எம்புட்டு நாளாச்சி? கெறங்கி போயிட்டியேடியம்மா... ஒழுங்கா சாப்புட்றியா இல்லையா?" என கண்கள் கலங்க தன் பேத்தியின் கைகளை பற்றிக்கொண்டு ஆசையாகக் கேட்டார்...
"அப்பத்தா... நான் நல்லாதேன் இருக்கேன்... எனக்கு ஒரு கொறையுமில்ல... ஏன் இப்புடி கண்ணைக் கசக்கிக்கிட்டு கெடக்க? மொதல்ல அழுவுறத நிறுத்து... இப்பதேன் நான் வந்துட்டேன்ல... இனி மெட்ராஸ் பக்கம் போவ போறதில்ல... இனி இங்கனயேதான் இருக்க போறேன்... சரியா..." என்று தன் அப்பத்தாவை சமாதானம் செய்தவள், "இங்ஙன பாரு... நீ அழுததுல நான் என் ஃபிரெண்டை பத்தி மறந்து போயிட்டேன்... இவதான் யாழினி... பத்து நாளுக்கு நம்ம வீட்டுலதான் தங்கப் போறா... இப்படி அழுதுக்குட்டு கெடக்காம, அந்த புள்ளய ஒரு வார்த்தை 'வா'ன்னு கூப்புடு" என்றாள்...
இவர்கள் இருவரின் பேச்சில் இரசித்திருந்த யாழினியை, "வா தாயி... எப்புடி இருக்க? வீட்டுல எல்லாரும் சொகந்தானே? நான் வேற ஒரு கிறுக்கச்சி... வந்த புள்ளைங்கள வீட்டுக்கு கூட்டிப் போகாம பேசிக்கிட்டுக் கெடக்கேன்..." என்றவருக்கு, "எல்லாரும் நல்லாயிருக்கோம் பாட்டி" என்ற வார்த்தையோடு முடித்துக் கொண்டாள் யாழினி...
தன் பெற்றோர் எப்பொழுது இப்படி தன்னிடம் பாசமாக பேசுவார்கள் என்று எண்ணியவளுக்கு ஒரு பெருமூச்சு மட்டுமே விடையாக கிடைத்தது...
"அம்மு... இங்ஙன வீடு ஒண்ணும் அவ்ளோ வசதியா இருக்காது புள்ள... கொஞ்சம் அட்ஜெஸ்ட் பண்ணிக்கோடா... ப்ளீஸ்..." என்ற வடிவை முடிந்த மட்டும் முறைத்த யாழினி, "அடியேய் கொலைவெறி ஆக்காதடி... இந்த வார்த்தையை சென்னையில கௌம்பனதுல இருந்து இப்ப வரைக்கும் எப்படியும் நூறு முறை சொல்லியிருப்ப... என்னால முடியலடி... அழுதுடுவேன்..." என்று போலியாக சிணுங்கியவளை கட்டியணைத்துக் கொண்டவள், "சரிடி... சரிடி.... சாரி..." என்றாள்...
"என்ன ஆத்தா? பேத்தி வந்தாச்சா? கெடந்து தவியா தவிச்சிக்கிட்டு கெடந்தியே... இப்பவாச்சும் சந்தோசமா?" என்ற எதிரே வந்த ஒரு பெண்மணி, பாட்டியிடம் கேட்டுவிட்டு மற்ற இருவரையும் நலம் விசாரித்துவிட்டு சென்றார்... சில பல நல விசாரிப்புகளுடன் தன் பெரியம்மா வீட்டை அடைந்தாள் வடிவு...
தன் பெரியம்மாவுக்கு பிள்ளைகள் இல்லாததால் வடிவு என்றுமே அவர்களின் செல்லப்பிள்ளை...
"ஏ ஆத்தா வந்துட்டியா?" என்று விசாரித்த பெரியப்பனும் பெரியம்மாவும் தோழிகள் இருவருக்கும் காலை சிற்றுண்டியை கொடுத்துவிட்டு சிறிது நேரம் உறங்க சொன்னார்கள்...
வீடு பெரிய வீடாக இல்லாவிட்டாலும் ஒரு வரவேற்பரை, சமையலறை, ஒரு படுக்கையறை, வீட்டிற்கு வெளியே பின்புறம் ஒரு கிணறு, அதற்கு பக்கத்தில் குளியலறை, கழிப்பறை... வேலியுடன் கூடிய சிறு தோட்டம் என்று அழகான வீடாக இருந்தது...
"அடியேய் சொர்க்கம் மாதிரி இருக்கு இந்த வீடு.... அதுவும் அந்த கெணத்துக்குப் பக்கத்துல மாமரம்... அதுல நமக்காக ஊஞ்சல் வேற கட்டி வெச்சிருக்காங்க... இதையாடி அட்ஜெஸ்ட் பண்ணிக்கோ, அட்ஜெஸ்ட் பண்ணிக்கோன்னு உயிரை எடுத்த... லூசாடி நீ..." என்று தன் தோழியை முறைத்தவள், "செமையா இருக்குடி.. எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு" என்று கூறிவிட்டு காலை சிற்றுண்டியை முடித்துவிட்டு சிறு தூக்கம் போட்டவர்கள், மதிய உணவை முடித்துக்கொண்டு மாலை நான்கு மணி அளவில் கோயிலுக்கு கிளம்பினார்கள்...
கிடாரிப்பட்டி
கோயிலுக்கு போகும் வழியில் இருந்த கபடிப் போட்டி பலகைகளைப் பார்த்தவள், அதில் இருந்த ஒருவனின் புகைப்படத்தைக் கண்டதும் சிலையாக நின்றுவிட்டாள்...
அதைப் பார்த்த வடிவு, "அம்மு... இங்க இப்டிதான்... எல்லாத்துக்கும் 'பேனர்' வெப்பாய்ங்க... காது குத்துல இருந்து கருமாதி வரைக்கும்..." என்றவள், அந்த பேனரை சுட்டிக்காட்டி, "அம்மு... இதுல நடுவுல இருக்காருல்ல... அவிங்க பேரு செந்தூரப்பாண்டியன்...எல்லாரும் 'பாண்டி'ன்னு கூப்புடுவாய்ங்க..." என்று ஆரம்பித்தாள்...
யாரைப் பார்த்து சிலையாக நின்றாளோ, தன் தோழி அவனைப் பற்றியே பேச ஆரம்பிக்கவும் மிகவும் ஆர்வமாகக் கேட்க ஆரம்பித்தாள்... அவனுக்காகதானே இங்கே வந்தது... எப்படி? யாரிடம் ஆரம்பிப்பது என்று யோசித்தவளுக்கு, தானே தன் தோழி மூலம் அவனுடைய விவரங்கள் கிடைக்கப்பெற்றால் கசக்குமா என்ன?
"அவிங்கதான் இந்த கபடிக் குழுவுக்கு தலைவரு... சூப்பரா விளையாடுவாய்ங்க... எந்த போட்டியில கலந்துக்கிட்டாலும் அவிங்க 'டீம்' தான் மொதப் பரிசை செயிக்கும்... ரொம்ப நல்லவிங்க... அவங்க குடும்பந்தேன் இந்த ஊருக்கு பெரிய குடும்பம்... ஊர்ல எந்த நல்லது கெட்டது நடந்தாலும் அவிங்கள கேட்டுதேன் நடக்கும்... இதெல்லாம் பயத்துனால இல்ல... மரியாதையினால... ஊருல பாதிக்கு மேல வாய்க்கா வரப்பெல்லாம் அவிங்களோடதுதேன்... ஆனால் அந்த ஆடம்பரம் எதுவும் அவிங்க குடும்பத்துல யாருகிட்டயும் இருக்காது... ரொம்ப அடக்கமானவிங்க... ரொம்ப நல்லவிங்க... கோவில் செய்முறை எல்லாம் அவிங்க தலைமையிலதேன் நடக்கும்... பரிவட்டம் மரியாதை அவிங்களுக்குதேன் நடக்கும்..." என்று நீளமாய்ப் பேசியவள் சிறிது மூச்சு வாங்கினாள்...
"என்ன இருந்து என்னடி... இந்த பாண்டி அண்ணனுக்கு இன்னும் கல்யாணமாகல... மூணு வருசத்துக்கு முன்னாடி சென்னையிலதான் பொண்ணு பாத்தாய்ங்களாம்... கல்யாணம் வரைக்கும் போய் நின்னுடுச்சாம்... அதுல இருந்து அவரு கல்யாணமே வேணாம்னுட்டு கெடக்காராம்..." என்று பெருமூச்சுவிட்டாள்...
இதைக்கேட்டவளோ தன் மனதில், 'எனக்குத் தெரியும்டி... அதை சரி பண்ணத்தாண்டி இப்ப நான் இங்க வந்திருக்கேன்' என்று நினைத்தாள்...
வடிவு மேலும் சொன்ன வார்த்தையில் இதயம் கலங்கி நின்றாள் யாழினி...
"என்ன காரணும்னு தெரியலடி...யாராவது அவர "மாமா"ன்னு கூப்புட்டா கொலைவெறி ஆயிடுவாராம்... ஒரு தடவை அப்டிதேன் அவிங்க மாமா பையன் ஒருத்தன், இவரை தோப்புல வெச்சி, 'உங்கள அப்பா கூப்புடறாரு மாமா'ன்னு சொல்லியிருப்பாரு போல... மனுஷன் என்னடான்னா எளநி சீவ வெச்சிருந்த அருவாளை அந்தப் பையன் கழுத்தை நோக்கி வீச எடுத்துட்டாராம்... எல்லாரும் அலறிட்டாய்ங்களாம்... ஆனா நல்ல வேளை கையில எடுத்ததோட சரி, வீசல... அதனால அந்தப் பையன் தப்பிச்சான்... அதுக்கப்புறம்கூட ரெண்டு மூணு முறை இதை மாதிரி சம்பவம் நடந்திருக்கும்போல... அதுல இருந்து அவரை யாரும் 'மாமா'ன்னு கூப்புட கூடாதுன்னு எல்லார்கிட்டயும் சொல்லிவெச்சிட்டாரு... அத்தை மக, மாமன் மகளுங்க கூட 'அண்ணா'னுதான் கூப்பட்றாய்ங்கன்னு சொன்னாய்ங்க... பாவம்" என்று முடித்தாள் வடிவு...
இதைக் கேட்டவளின் மனதிலோ, 'இந்த அளவுக்கு 'மாமா'ன்ற வார்த்தையையே வெறுக்கறீங்களே... நான் எப்படி உங்களை மாத்துவேன்னு தெரியலியே... அந்த அளவுக்கு என்னை வெறுத்துட்டீங்களா மாமா... நான் பண்ணனு தப்புதான் மாமா... ஒத்துக்கறேன்...ஆனால் நீங்க இவ்வளவு தூரம் வெறுத்துடுவீங்கன்னு நான் கொஞ்சம் கூட நெனைக்கல மாமா... எது எப்படி இருந்தாலும் நான் உங்களை மாத்தி காட்டுவேன்... இந்த ஊருல இருந்து போகும்போது ஒண்ணு உங்க மனசை மாத்திட்டுப் போவேன்... இல்லயின்னா பொணமாத்தான் போவேன்...' என்று மனதினுள் சபதமெடுத்துக் கொண்டாள்...
தன் தோழியின் அமைதியைக் கண்ட வடிவு, "என்னடி என்ன ஆச்சு.? ஏதோ யோசனை பண்ற மாதிரியிருக்கு? எதுவும் பிரச்சினையா?" என்றாள்...
தன்னை சமன் செய்தவள் தன் தோழியைப் பார்த்து, "அதெல்லாம் ஒண்ணுமில்லடி... நீ சொன்ன கதை வித்தியாசமா இருந்துதா... அதான் யோசனை பண்ணிக்கிட்டிருந்தேன்... வேற ஒண்ணுமில்ல... வா போகலாம்..." என்று கூறிவிட்டு தன் தோழியுடன் நடக்கலானாள்...
இதைக் கண்ட வடிவுக்கோ, 'இவ எதையோ மறைக்கிறா... என்னன்னுதான் தெரியல... அவளே சொல்றாளான்னு வெயிட் பண்ணிப் பாப்போம்... இல்லயின்னா நாமளே களத்துல எறங்கி கேட்டுபுடுவோம்...' என்ற முடிவுடன் நடக்க ஆரம்பித்தாள்...
யாழினி செய்த தவறு என்ன?
தன் தோழியிடம் மனம் திறப்பாளா?
தன்னவனை கரம் சேர்ப்பாளா?
அடுத்த அத்தியாயத்தில் காண்போம்...
ரயிலில் பயணித்துக்கொண்டிருந்த யாழினியும் வடிவழகியும் சிறிது நேரம் பேசிக்கொண்டே வந்தனர்...
"வடிவு... உங்க ஊர்ல திருவிழால்லாம் சினிமாவுல காட்டுற மாதிரி சூப்பரா இருக்குமா?" என்று வினவினாள் யாழினி...
"என்னடி இப்புடி கேட்டுப்புட்ட? எங்க ஊர்ல ஒரு வட்டம் திருவிழாவை பார்த்துட்டன்னு வெச்சிக்கோ... அப்புறம் எங்க ஊரைவிட்டு வாரதுக்கு உனக்கு மனசே வராது... ரெங்கராட்டினம், வெளையாட்டுப் போட்டி, பஞ்சு முட்டாயி, ஜவ்வு முட்டாயி, கலர் கலரா சேமியா ஐஸ், ஆளுங்க எல்லாம் விதவிதமா வேஷம் போட்டுக்கிட்டு சுத்துவாய்ங்க... உங்க சென்னையில இருக்கமாதிரி இல்லாம, பொண்ணுங்க எல்லாம், பாவாடை தாவணிதான் கட்டிக்கிட்டிருப்பாய்ங்க... இல்லயின்னா சீலை கட்டிக்கிட்டிருப்பாய்ங்க... தலை நெறைய மதுரை மல்லிய வெச்சிக்கிட்டு மொளப்பாரி தூக்கிக்கிட்டுப் போற அழகே தனிதேன்... பாக்க பாக்க அம்புட்டு அளழகா இருக்கும்... பொம்பளைங்க எல்லாருமா சேந்துக்கிட்டு குளவை போட்டு பாட்டு பாடுவாய்ங்க பாரு... அருமையா இருக்கும் கேக்கறதுக்கு... ஆம்பளைங்க மட்டும் என்ன சும்மாவா? ஜல்லிக்கட்டு, கபடின்னு நிறைய வெளையாட்டு வெளையாடுவாய்ங்க... சும்மா தூள் கௌப்பும் திருவிழாவே... அதுலயும் ஐயனாரு சாமி எறங்கி பூசாரி ஆடுவாரு பாரு... அந்த ஐயனாரே நேர்ல வந்த மாதிரி இருக்கும்..." என்று பேசிக்கொண்டே போனவளை, "அடியேய் வடிவு... கொஞ்சம் மூச்சு வாங்கிக்கோடி... ஊரைப் பத்தி பேச ஆரம்பிச்சதும் தலைகால் புரியாம பேசிக்கிட்டே போற... நான் எங்கேயும் ஓடிப் போயிட மாட்டேன்... இன்னும் பத்து நாளுக்கு உன்கூடதான் சுத்திக்கிட்டிருக்கப் போறேன்... ஒண்ணொண்ணா மெதுவா சொல்லுடி..." என்று கேலி செய்தாள் யாழினி...
அதைக் கேட்ட வடிவோ, "என்ன அம்மு நீ? இப்படி கேலி பேசுத என்னியப் பாத்து... ஆனா.. நீ சொன்னதும் உண்மைதாண்டி... எங்க ஊரப்பத்தி பேச ஆரம்பிச்சதும் சந்தோஷத்துல என்னையே மறந்துட்டேன்... அதுவும் திருவிழான்னா சொல்லவே வேணாம்... திருவிழா முடியற வரை ஊரே கலைகட்டும் ... ஆனா என்ன நம்ம ஊருல நேத்திக்கிதான் திருவிழா முடிஞ்சிது..." என்று ஆனந்தமாக ஆரம்பித்த வடிவு சிறிது மனத்தாங்கலுடன் முடித்தாள்...
அதைக்கேட்ட யாழினியோ சிறிது அதிர்ச்சியுடன், "ஐயோ... என்னடி சொல்ற?.திருவிழா முடிஞ்சிடுச்சா? திருவிழாக்கு கூட்டிக்கிட்டுப் போறன்னு சொல்லிதானே என்னை கூப்பிட்ட... இப்ப இப்படி சொல்ற?" என்று யாழினி கேட்டாள்...
"அடியேய்... அதுக்குள்ள 'டென்சன்' ஆகாத... எங்க ஊருக்குப் பக்கத்து ஊரு கிடாரிப்பட்டியில நாளைக்கு திருவிழா ஆரம்பிக்குது... நாம அங்கிட்டுப் போவலாம்... வெசனப்படாத... உன்னிய அப்புடி எல்லாம ஏமாத்திப்புடமாட்டேன்..." என்று வடிவு கூறி முடிக்கவும், "கிடாரிப்பட்டியா?" என சந்தோஷக்குரலில் கேட்டாள் யாழினி...
தன் தோழியின் குரலில் இருந்த குதூகலத்தில் சிறிது யோசித்த வடிவு, "ஏண்டி... ஏற்கனவே அந்த ஊருக்குப் போயிருக்கியா? இல்லயின்னா அந்த ஊருல யாரையாவது உனக்கு ஏற்கனவே தெரியுமா?" என சந்தேகமாகக் கேட்டாள் வடிவு...
தான் செய்த முட்டாள்தனத்தை எண்ணி தனக்குத் தானே மனதிற்குள் ஒரு குட்டு வைத்துக்கொண்டவள், தன் தோழியை சமாளிப்பதற்காக, "இல்லடி... ஊர் பேரு கேக்க கொஞ்சம் வித்தியாசமா இருந்துதா... அதான் அப்படி கேட்டேன்... வேற ஒண்ணுமில்ல...".என்று அசடு வழிந்தாள்...
தன் தோழியை நம்பாத பார்வை பார்த்த வடிவிடம், "என்னடி? என்னை நம்பலயில்ல நீ? போ... இனி உன் கூட பேசமாட்டேன்" என பொய்யாக கோபம் கொண்டு சிணுங்கிய யாழினியிடம், "என்ன புள்ள இப்புடி பேசிப்புட்ட? நான் உன்னிய நம்பாம வேற யாரை நம்பப்போறேன்... சரி நேரம் ஆச்சு... வா தூங்குவோம்... காலையில வெள்ளனே மதுரைக்குப் போய்ச் சேர்ந்துடும் வண்டி..." என்று தன் தோழியை படுக்க வைத்தாள் வடிவு..
"சரிடி... குட் நைட்..."என்று கூறிய யாழினிக்கோ, தன் தோழியிடம் உண்மையை மறைத்தது சிறிது உறுத்தவே செய்தது...
மறுநாள் விடியலில் வைகை ஆற்றின் நீரில் இளஞ்சூரியனின் பொற்கதிர்கள் விளையாடும் நேரம், ஆமை போல் ஊர்ந்து சென்று மதுரை ஜங்க்ஷனை அடைந்தது அவர்கள் பயணித்த பாண்டியன் எக்ஸ்பிரஸ்....
பத்து நிமிடங்களுக்கு முன்பாகவே உறக்கத்தில் இருந்து விழித்த வடிவு, யாழினியையும் எழுப்பிவிட்டாள்... இருவரும் தயாராகி, தங்களின் உடமைகளை எடுத்து வைப்பதற்கும், ரயில் நிலையத்தினுள் ரயில் நுழைவதற்கும் சரியாக இருந்தது...
உடமைகளை எடுத்துக்கொண்டு இறங்கியவர்கள், ஆழ்ந்த மூச்சை உள்ளிழுத்து சுத்தமான காற்றை சுவாசித்தனர்... ரயில் நிலைய வாசலில் அமைந்திருந்த விநாயகர் கோவிலை மூன்று முறை சுற்றி திருநீறு பெற்றுக்கொண்டார்கள்...
"பிள்ளையாரப்பா... என் காதல் மேல இருக்க தைரியத்துல இங்க கிளம்பி வந்துட்டேன்... நான் நினைச்ச காரியம் நல்லபடியா முடிய நீதான் எனக்கு பக்கத்துணையா இருக்கணும்... " என்று யாழினி கண் மூடி வேண்டவும், யாரோ ஒரு பெண்மணி கோயில்மணியை அடிக்கவும் சரியாக இருந்தது...
அதை நல்ல சகுனமாக நினைத்தவளின் மனதில் இன்பம் பெருக்கெடுத்தது...
அவளின் முகமாற்றங்களை பார்த்துக் கொண்டிருந்த வடிவோ தன் மனதினுள், 'இவ நம்ம கிட்ட இருந்து எதையோ மறைக்கிறா... என்னன்னுதான் தெரியல... ஹ்ம்ம்... எப்படியும் நம்மகிட்ட சொல்லிதானே ஆகணும்... அப்ப பார்த்துப்போம்...' என்று நினைத்தாள்...
சாமி கும்பிட்டு முடித்ததும் அங்கிருந்து பேருந்தில் ஏறி, வடிவின் பெரியம்மா வீட்டிற்கு பயணப்பட்டுக் கொண்டிருந்தார்கள்...
மஞ்சம்பட்டி...
கிராமத்திற்கே உரிய மண்வாசனையுடன் உள்ள ஊர்... புழுதியைக் கிளப்பிக்கொண்டு நிறுத்தத்தில் நின்றது பேருந்து... இறங்கிய இருவரையும் பார்த்த ஒரு பெரிய மூதாட்டி, "ராசாத்தி... வந்துட்டியா... நீ வெள்ளனே வந்துடுவன்னு உங்கண்ணேன் நேத்து ஃபோன்போட்டு சொன்னான்... அதான் தாயி... உனக்காக காத்துக்கெடக்கேன்... எப்படியிருக்கடி என் ராசாத்தி? பாத்து எம்புட்டு நாளாச்சி? கெறங்கி போயிட்டியேடியம்மா... ஒழுங்கா சாப்புட்றியா இல்லையா?" என கண்கள் கலங்க தன் பேத்தியின் கைகளை பற்றிக்கொண்டு ஆசையாகக் கேட்டார்...
"அப்பத்தா... நான் நல்லாதேன் இருக்கேன்... எனக்கு ஒரு கொறையுமில்ல... ஏன் இப்புடி கண்ணைக் கசக்கிக்கிட்டு கெடக்க? மொதல்ல அழுவுறத நிறுத்து... இப்பதேன் நான் வந்துட்டேன்ல... இனி மெட்ராஸ் பக்கம் போவ போறதில்ல... இனி இங்கனயேதான் இருக்க போறேன்... சரியா..." என்று தன் அப்பத்தாவை சமாதானம் செய்தவள், "இங்ஙன பாரு... நீ அழுததுல நான் என் ஃபிரெண்டை பத்தி மறந்து போயிட்டேன்... இவதான் யாழினி... பத்து நாளுக்கு நம்ம வீட்டுலதான் தங்கப் போறா... இப்படி அழுதுக்குட்டு கெடக்காம, அந்த புள்ளய ஒரு வார்த்தை 'வா'ன்னு கூப்புடு" என்றாள்...
இவர்கள் இருவரின் பேச்சில் இரசித்திருந்த யாழினியை, "வா தாயி... எப்புடி இருக்க? வீட்டுல எல்லாரும் சொகந்தானே? நான் வேற ஒரு கிறுக்கச்சி... வந்த புள்ளைங்கள வீட்டுக்கு கூட்டிப் போகாம பேசிக்கிட்டுக் கெடக்கேன்..." என்றவருக்கு, "எல்லாரும் நல்லாயிருக்கோம் பாட்டி" என்ற வார்த்தையோடு முடித்துக் கொண்டாள் யாழினி...
தன் பெற்றோர் எப்பொழுது இப்படி தன்னிடம் பாசமாக பேசுவார்கள் என்று எண்ணியவளுக்கு ஒரு பெருமூச்சு மட்டுமே விடையாக கிடைத்தது...
"அம்மு... இங்ஙன வீடு ஒண்ணும் அவ்ளோ வசதியா இருக்காது புள்ள... கொஞ்சம் அட்ஜெஸ்ட் பண்ணிக்கோடா... ப்ளீஸ்..." என்ற வடிவை முடிந்த மட்டும் முறைத்த யாழினி, "அடியேய் கொலைவெறி ஆக்காதடி... இந்த வார்த்தையை சென்னையில கௌம்பனதுல இருந்து இப்ப வரைக்கும் எப்படியும் நூறு முறை சொல்லியிருப்ப... என்னால முடியலடி... அழுதுடுவேன்..." என்று போலியாக சிணுங்கியவளை கட்டியணைத்துக் கொண்டவள், "சரிடி... சரிடி.... சாரி..." என்றாள்...
"என்ன ஆத்தா? பேத்தி வந்தாச்சா? கெடந்து தவியா தவிச்சிக்கிட்டு கெடந்தியே... இப்பவாச்சும் சந்தோசமா?" என்ற எதிரே வந்த ஒரு பெண்மணி, பாட்டியிடம் கேட்டுவிட்டு மற்ற இருவரையும் நலம் விசாரித்துவிட்டு சென்றார்... சில பல நல விசாரிப்புகளுடன் தன் பெரியம்மா வீட்டை அடைந்தாள் வடிவு...
தன் பெரியம்மாவுக்கு பிள்ளைகள் இல்லாததால் வடிவு என்றுமே அவர்களின் செல்லப்பிள்ளை...
"ஏ ஆத்தா வந்துட்டியா?" என்று விசாரித்த பெரியப்பனும் பெரியம்மாவும் தோழிகள் இருவருக்கும் காலை சிற்றுண்டியை கொடுத்துவிட்டு சிறிது நேரம் உறங்க சொன்னார்கள்...
வீடு பெரிய வீடாக இல்லாவிட்டாலும் ஒரு வரவேற்பரை, சமையலறை, ஒரு படுக்கையறை, வீட்டிற்கு வெளியே பின்புறம் ஒரு கிணறு, அதற்கு பக்கத்தில் குளியலறை, கழிப்பறை... வேலியுடன் கூடிய சிறு தோட்டம் என்று அழகான வீடாக இருந்தது...
"அடியேய் சொர்க்கம் மாதிரி இருக்கு இந்த வீடு.... அதுவும் அந்த கெணத்துக்குப் பக்கத்துல மாமரம்... அதுல நமக்காக ஊஞ்சல் வேற கட்டி வெச்சிருக்காங்க... இதையாடி அட்ஜெஸ்ட் பண்ணிக்கோ, அட்ஜெஸ்ட் பண்ணிக்கோன்னு உயிரை எடுத்த... லூசாடி நீ..." என்று தன் தோழியை முறைத்தவள், "செமையா இருக்குடி.. எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு" என்று கூறிவிட்டு காலை சிற்றுண்டியை முடித்துவிட்டு சிறு தூக்கம் போட்டவர்கள், மதிய உணவை முடித்துக்கொண்டு மாலை நான்கு மணி அளவில் கோயிலுக்கு கிளம்பினார்கள்...
கிடாரிப்பட்டி
கோயிலுக்கு போகும் வழியில் இருந்த கபடிப் போட்டி பலகைகளைப் பார்த்தவள், அதில் இருந்த ஒருவனின் புகைப்படத்தைக் கண்டதும் சிலையாக நின்றுவிட்டாள்...
அதைப் பார்த்த வடிவு, "அம்மு... இங்க இப்டிதான்... எல்லாத்துக்கும் 'பேனர்' வெப்பாய்ங்க... காது குத்துல இருந்து கருமாதி வரைக்கும்..." என்றவள், அந்த பேனரை சுட்டிக்காட்டி, "அம்மு... இதுல நடுவுல இருக்காருல்ல... அவிங்க பேரு செந்தூரப்பாண்டியன்...எல்லாரும் 'பாண்டி'ன்னு கூப்புடுவாய்ங்க..." என்று ஆரம்பித்தாள்...
யாரைப் பார்த்து சிலையாக நின்றாளோ, தன் தோழி அவனைப் பற்றியே பேச ஆரம்பிக்கவும் மிகவும் ஆர்வமாகக் கேட்க ஆரம்பித்தாள்... அவனுக்காகதானே இங்கே வந்தது... எப்படி? யாரிடம் ஆரம்பிப்பது என்று யோசித்தவளுக்கு, தானே தன் தோழி மூலம் அவனுடைய விவரங்கள் கிடைக்கப்பெற்றால் கசக்குமா என்ன?
"அவிங்கதான் இந்த கபடிக் குழுவுக்கு தலைவரு... சூப்பரா விளையாடுவாய்ங்க... எந்த போட்டியில கலந்துக்கிட்டாலும் அவிங்க 'டீம்' தான் மொதப் பரிசை செயிக்கும்... ரொம்ப நல்லவிங்க... அவங்க குடும்பந்தேன் இந்த ஊருக்கு பெரிய குடும்பம்... ஊர்ல எந்த நல்லது கெட்டது நடந்தாலும் அவிங்கள கேட்டுதேன் நடக்கும்... இதெல்லாம் பயத்துனால இல்ல... மரியாதையினால... ஊருல பாதிக்கு மேல வாய்க்கா வரப்பெல்லாம் அவிங்களோடதுதேன்... ஆனால் அந்த ஆடம்பரம் எதுவும் அவிங்க குடும்பத்துல யாருகிட்டயும் இருக்காது... ரொம்ப அடக்கமானவிங்க... ரொம்ப நல்லவிங்க... கோவில் செய்முறை எல்லாம் அவிங்க தலைமையிலதேன் நடக்கும்... பரிவட்டம் மரியாதை அவிங்களுக்குதேன் நடக்கும்..." என்று நீளமாய்ப் பேசியவள் சிறிது மூச்சு வாங்கினாள்...
"என்ன இருந்து என்னடி... இந்த பாண்டி அண்ணனுக்கு இன்னும் கல்யாணமாகல... மூணு வருசத்துக்கு முன்னாடி சென்னையிலதான் பொண்ணு பாத்தாய்ங்களாம்... கல்யாணம் வரைக்கும் போய் நின்னுடுச்சாம்... அதுல இருந்து அவரு கல்யாணமே வேணாம்னுட்டு கெடக்காராம்..." என்று பெருமூச்சுவிட்டாள்...
இதைக்கேட்டவளோ தன் மனதில், 'எனக்குத் தெரியும்டி... அதை சரி பண்ணத்தாண்டி இப்ப நான் இங்க வந்திருக்கேன்' என்று நினைத்தாள்...
வடிவு மேலும் சொன்ன வார்த்தையில் இதயம் கலங்கி நின்றாள் யாழினி...
"என்ன காரணும்னு தெரியலடி...யாராவது அவர "மாமா"ன்னு கூப்புட்டா கொலைவெறி ஆயிடுவாராம்... ஒரு தடவை அப்டிதேன் அவிங்க மாமா பையன் ஒருத்தன், இவரை தோப்புல வெச்சி, 'உங்கள அப்பா கூப்புடறாரு மாமா'ன்னு சொல்லியிருப்பாரு போல... மனுஷன் என்னடான்னா எளநி சீவ வெச்சிருந்த அருவாளை அந்தப் பையன் கழுத்தை நோக்கி வீச எடுத்துட்டாராம்... எல்லாரும் அலறிட்டாய்ங்களாம்... ஆனா நல்ல வேளை கையில எடுத்ததோட சரி, வீசல... அதனால அந்தப் பையன் தப்பிச்சான்... அதுக்கப்புறம்கூட ரெண்டு மூணு முறை இதை மாதிரி சம்பவம் நடந்திருக்கும்போல... அதுல இருந்து அவரை யாரும் 'மாமா'ன்னு கூப்புட கூடாதுன்னு எல்லார்கிட்டயும் சொல்லிவெச்சிட்டாரு... அத்தை மக, மாமன் மகளுங்க கூட 'அண்ணா'னுதான் கூப்பட்றாய்ங்கன்னு சொன்னாய்ங்க... பாவம்" என்று முடித்தாள் வடிவு...
இதைக் கேட்டவளின் மனதிலோ, 'இந்த அளவுக்கு 'மாமா'ன்ற வார்த்தையையே வெறுக்கறீங்களே... நான் எப்படி உங்களை மாத்துவேன்னு தெரியலியே... அந்த அளவுக்கு என்னை வெறுத்துட்டீங்களா மாமா... நான் பண்ணனு தப்புதான் மாமா... ஒத்துக்கறேன்...ஆனால் நீங்க இவ்வளவு தூரம் வெறுத்துடுவீங்கன்னு நான் கொஞ்சம் கூட நெனைக்கல மாமா... எது எப்படி இருந்தாலும் நான் உங்களை மாத்தி காட்டுவேன்... இந்த ஊருல இருந்து போகும்போது ஒண்ணு உங்க மனசை மாத்திட்டுப் போவேன்... இல்லயின்னா பொணமாத்தான் போவேன்...' என்று மனதினுள் சபதமெடுத்துக் கொண்டாள்...
தன் தோழியின் அமைதியைக் கண்ட வடிவு, "என்னடி என்ன ஆச்சு.? ஏதோ யோசனை பண்ற மாதிரியிருக்கு? எதுவும் பிரச்சினையா?" என்றாள்...
தன்னை சமன் செய்தவள் தன் தோழியைப் பார்த்து, "அதெல்லாம் ஒண்ணுமில்லடி... நீ சொன்ன கதை வித்தியாசமா இருந்துதா... அதான் யோசனை பண்ணிக்கிட்டிருந்தேன்... வேற ஒண்ணுமில்ல... வா போகலாம்..." என்று கூறிவிட்டு தன் தோழியுடன் நடக்கலானாள்...
இதைக் கண்ட வடிவுக்கோ, 'இவ எதையோ மறைக்கிறா... என்னன்னுதான் தெரியல... அவளே சொல்றாளான்னு வெயிட் பண்ணிப் பாப்போம்... இல்லயின்னா நாமளே களத்துல எறங்கி கேட்டுபுடுவோம்...' என்ற முடிவுடன் நடக்க ஆரம்பித்தாள்...
யாழினி செய்த தவறு என்ன?
தன் தோழியிடம் மனம் திறப்பாளா?
தன்னவனை கரம் சேர்ப்பாளா?
அடுத்த அத்தியாயத்தில் காண்போம்...