All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அஜ்வந்தியின் 'வண்ணங்களின் வசந்தம்' - கதை திரி

Status
Not open for further replies.

Sonythiru

Suthisha
25738


அத்தியாயம்-27

அந்த பிரம்மாண்டமான திருமண மண்டபம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.அதை தேவலோகமாக மாற்றி இருந்தனர் மதுவந்தியின் அண்ணன்மார்கள். தந்தைமார்களோ அங்கும் இங்கும் பம்பரமாக சுற்றி மகளின் திருமணத்திற்கு வேலை செய்து கொண்டிருந்தனர்.ஆனால் அன்றைய நாயகியோ கன்னத்தில் கைவைத்து அமர்ந்திருந்தாள்.

தோழிகள் நால்வரில் ப்ரீத்தி புலம்பி கொண்டு இருந்தாள் “என்னடி புடவை இது என் இடுப்புல நிக்கவே மாட்டிக்கிது இறங்கி இறங்கி வருது, அப்படியே சுடிதார் பேண்ட் போட்டுக்கற மாதிரி இருந்தா நல்லா இருக்கும்”என்க மற்றவர்கள் அவளை பார்த்து சிரித்து கொண்டிருந்தனர்.

அபி, “உன்னோட புடவைக்கு எவனோ சூனியம் வச்சுட்டான் அதான் நிக்க மாட்டிக்கிது”

பூஜா, ப்ரீத்தியின் அருகில் சென்றவள் “யூ டூ டா மீக்கும் நிக்க மாட்டிக்கிது.இந்த புடவைய கண்டுபிடிச்சவன் கைல கிடைச்சான் செத்தான்.அவன்பாட்டுக்கு பொறுப்பில்லாம கண்டு பிடிச்சுட்டு போய்ட்டான் இங்க கஷ்டப்படறது யாரு எல்லாம் இந்த மந்தினாலதான்”என்று மதுவை திட்டி கொண்டிருந்தாள்.

ஆம், மதுவின் பிடிவாதத்தாலேயே நால்வரும் மெல்லிய சரிகை வைத்த புடவையை கட்டி இருந்தனர்.அழகான காக்ரா சோலி அணிந்து வந்தவர்களை பார்த்தவள் “நான் மட்டும் புடவை கட்டி இருக்கேன்ல நீங்களும் புடவை கட்டுங்கடி”என்று பிடிவாதம் பிடிக்க இன்றைய நாயகி அவள்தான் என்பதால் அவள் விருப்பப்படி தோழிகளும் புடவை அணிந்தனர்.
சூர்யா, அபி இருவருக்கும் புடவை பாந்தமாக பொருந்தி போக மற்ற இருவரும் சேர்ந்து மதுவை வசை பாடி கொண்டிருந்தனர்.

மது, “ஏன்டி நானே இங்க கவலையில இருக்கேன் நீங்க வேற என்னை திட்டுறீங்க நானே பாவம்”என்றாள்.

சூர்யாவோ வந்த சிரிப்பை கட்டுப்படுத்திக்கொண்டு “ஆமா இப்போ உனக்கு என்ன கவலை” என்று கேட்க, அபி, “ஆமாண்டி எவ்வளவு பிரம்மாண்டமா உனக்கு மேரேஜ் பண்றாங்க, மாப்பிள்ளையும் உனக்கு பிடிச்சவருதான்,வெளிய போய் பாரு மண்டபத்தை எவ்வளோ அழகா டெக்கரேட் பண்ணி இருக்காங்கன்னு” என்று சொல்ல,

மதுவந்தி, “அது எல்லாம் சரிதான், ஆனால் வெளிய இருக்க போர்டுல என்ன பேரு எழுதி இருக்காங்கனு பார்த்தீங்களா” என்று கேட்க,

துள்ளிக் குதித்து வந்த பூஜா கிண்டல் சிரிப்புடன் அவள் இரு கன்னத்தையும் வலித்து நெட்டி முறிப்பது போல் செய்து ‘ஆண்டாள் அழகு நாச்சியார்’ என்று சொல்ல,
மது காதில் கை வைத்து கொண்டு “சொல்லாதடி சொல்லாத இன்னொரு வாட்டி அந்த பேரை சொல்லாத, தலைப்பாடா அடிச்சுக்கிட்டேன் அந்த பேர பத்திரிக்கைல போடாதிங்கனு யார் கேட்டா,அதெல்லாம் முடியாது ஜாதகத்தில் இருக்க பேர் போட்டாதான் வாழ்வாங்கு வாழ்வனு சொல்லி இப்படி என்னை துக்கப்பட வச்சுட்டாங்களே” என்று புலம்ப அவளை பார்த்து பாவப்பட்ட ப்ரீத்தி “ஏன்டி நான் வேணா வெளிய போய் பொண்ணுக்கு கவலையா இருக்காம் கல்யாணத்தை நிப்பாட்டுங்கன்னு சொல்லிட்டு வரவா” என்க, அவள் தலையில் கொட்டிய சூர்யா “அபசகுனமா பேசாதடி” என்றாள்.

ப்ரீத்தி, “நல்லா சேர்ந்தாங்க பாரு ரெண்டு பேரும் சீனியருதான் தலைல கொட்டறாருனு பார்த்தா இவளும் கொட்டுறா” என்று மெலிதாக முனகியவள், “அவதானடி சொன்னா அதனால்தான் கேட்டேன்” என்றாள் சத்தமாக.

உடனே அபி “ரெண்டு பேரும் சண்டையை நிப்பாட்டுறீங்களா, அடியே மது மூஞ்ச கொஞ்சம் சிரிச்ச மாதிரி வச்சுக்கோ இல்லைனா நாங்கதான் ஏதோ சொல்லிட்டோம்ன்னு அந்த ஓல்டு லேடி எங்கள முறைக்கும்”என்றாள்.

ப்ரீத்தி, “நல்லாதான் இருக்குது பேரு ஆனா பெருசா இருக்கு ஆண்டாள் அழகு நாச்சியார்” என்க, கோபமான மது அங்கிருந்த ஒரு ஆப்பிளை எடுத்து கொண்டு அவளை அடிக்கத் துரத்தினாள்.

அந்த ரூமையே இருவரும் சுத்தி சுத்தி வந்து கொண்டிருக்க, மற்றவர்கள் அவர்களை பார்த்து சிரித்து கொண்டிருந்தனர்.அப்போது “பெண்ணை அழைச்சுட்டு வாங்கோ….” என்ற ஐயரின் குரலில் அப்படியே நின்றவள் அபியிடம் திரும்பி “எனக்கு பயமா இருக்குடி”என்று சொல்லும்போதே பிரபாவின் அக்கா அவளை அழைத்து செல்ல வந்துவிட தோழிகள் பட்டாளம் வேறு எதுவும் பேச முடியாமல் போனது.

பச்சைபட்டுடுத்தி மனதுக்கு பிடித்த மணாளனையே மணக்க போகிறோம் என்ற பூரிப்புடன் குனிந்த தலை நிமிராமல் தேவதையென வந்தவளின், வரவை எதிர் பார்த்து வழி மேல் விழி வைத்து அமர்ந்திருந்த பிரபா கண் இமைக்காமல் பார்த்திருந்தான்.

அவன் காதருகில் குனிந்த பூஜா “கண்ட்ரோல் பிரோ….. கண்ட்ரோல் சத்தியம்…. சத்தியம் அதை நியாபகம் வச்சுட்டு, நல்ல பையனா அந்த பக்கம் ஓபன் ஆகி இருக்க வாட்டர் பால்ஸ்ஸ கிளோஸ் பண்ணுங்க பார்ப்போம்” என்றாள்.

உடனே அவளை முறைத்தவன் “ஒரே வார்த்தையையே எதுக்கு ரெண்டு டைம் சொல்லிட்டு இருக்க அந்த பக்கம் தள்ளி போ, மத்ததுதான் கூடாது.என் பொண்டாட்டிய சைட் அடிக்க கூட கூடாதா அது எல்லாம் முடியாது ரொம்ப பேசுனா நைட்டே சத்தியம் சமாதி ஆகிடும் போ போ”என்று விட்டு தன் தேவதையையே பார்த்து ஜொள்ளுவிட்டு கொண்டிருந்தான்.

தன் அருகில் அமர்ந்தவளை இமைக்காமல் பார்த்தவன் அவளை நெருங்கி அமர போக அவன் தோளில் கை வைத்து தடுத்த பூஜா “சத்தியம் சத்தியம்”என்று மெதுவாக கூற, அது மற்றவர் பார்வைக்கு பிரபா தோளில் இருந்த தூசியை தட்டுவது போல்தான் இருந்தது.
உடனே பல்லை கடித்த பிரபா “உன்னை எல்லாம் ஸ்டேஜ்ல நிக்க சொல்லி யார் சொன்னா போ அங்க ஐஸ் கிரீம் தரங்களாம் போ”என்க, அவளோ கிண்டல் சிரிப்புடன் “சத்தமா சொல்லாதீங்க ப்ரோ உங்க ஆளுக்கு ஐஸ் கிரீம்னா உயிர், எந்திரிச்சு ஓடிட போறா”என்றாள்.

பூஜா சொன்ன பின்தான் மாலில் மது இரண்டு ஐஸ் கிரீமுடன் நின்றது நினைவு வர “அட கடவுளே என்னை ஏன் இந்த கும்பல்ல கோத்துவிட்ட”என்று வானத்தை பார்த்தவாறு மனதிற்குள் புலம்ப அவன் காதருகில் குனிந்த அபி “என்ன பண்றது ப்ரோ எல்லாம் விதி”என்றாள். அதில் அதிர்ந்த பிரபா “அவ்வளவு சத்தமாவ கேட்டுச்சு”என்க, அவளும் அப்பாவியான முகத்துடன் “ஆமாம்”என்று தலையசைத்தாள்.

இவை அனைத்தும் மற்றவர்கள் பார்வைக்கு மதுவிடம் குனிந்து பேசுவது போல் இருந்தாலும் வார்த்தை முழுவதும் பிரபாவிற்கு என்று அங்கிருந்தவர்களுக்கு மட்டுமே தெரியும்.

அபியின் பேச்சில் மது சிரிக்க அவளை முறைத்தவன் “சிரிக்காத” என்று சொல்ல அப்போதுதான் அவளுக்கு அதிகமாக சிரிப்பு வந்தது, அப்போது அவனை முறைத்த அபி “பொண்டாட்டி சிரிக்கறதை பார்த்து ரசிக்கணும் இப்படி திட்ட கூடாது”என்று சொல்ல,அவனோ என்ன பதில் சொல்வது அதுவும் மேடையில் இப்படி அமர்ந்து கொண்டு என்று யோசித்தவன் செய்வதறியாது விழிக்க ஆரம்பித்தான்.

அவனின் முக பாவனை மதுவிற்கு மேலும் சிரிப்பையே உருவாக்கியது. அதனால் தலையை குனிந்து கொண்டு உடல் குலுங்க சிரிக்க ஆரம்பித்தாள், அதை பார்த்த மதுவின் பாட்டி தன் மகனிடம் அங்க “பாருங்கடா ஆண்டாளு நம்ம விட்டு பிரிய போறோமேங்கற கவலைல அழுது”என்று சொல்லி அழ அந்த பாசக்கார தந்தையின் கண்களிலும் கண்ணீர் நிறைந்தது.

இப்படி பல கலாட்டாக்களுடன் மதுவின் கழுத்தில் மங்கள நாணை பூட்டி தன் வாழ்வின் சரி பாதியாக ஏற்று கொண்டான் பிரபா.அதன் பின் உறவுகளுடன் அவர்கள் நேரம் செல்ல மது தோழிகளை போட்டோ எடுக்க அழைக்க அவர்களோ “முடியவே முடியாது” என்றுவிட்டனர்.ஏன் என்று கேட்டவளின் அருகில் வந்த அபி “அதோ இருக்கு பாரு பாத்ரூம் அங்க நின்னு போட்டோ எடுத்தாலும் எடுப்போம், ஆனா ஆண்டாளுன்ற உன்னோட பேருக்கு முன்னாடி நிக்க மாட்டோம்”என்றாள்.

மற்றவர்களும் “ஆமாம்….ஆமாம்”என்க வேறு வழி இல்லாமல் மதுவின் அண்ணன்மார்கள் கையில் பூங்கொத்துக்களை வைத்து பேரை மறைத்து நிற்க பூக்களின் பின்னோடான பேக் ரவுண்டில் தோழிகள் வளைத்து வளைத்து போட்டோ எடுத்தனர்.

ஆதர்ஷ், “இவளுக்கு அண்ணனா பொறந்ததுக்கு பேசாம வாசல்ல இருக்க பன்னீர் பொம்மையா பொறந்துருக்கலாம்” என்று புலம்பி கொண்டு இருந்தான்.

ஒருவழியாக மதுவின் திருமணம் தோழிகளின் கிண்டல் கலாட்டாவினோடும்,மதுவின் பயத்தோடான வெட்கத்தோடும், பிரபாவின் ஜொல்லோடும் சிறப்பாக முடிய.அன்று மாலையே அவர்களுக்கான ரிசப்ஷன் தயார் செய்யப்பட்டிருந்தது.மதிய வேளையில் சற்று நேரம் ஓய்வு எடுத்தவர்கள் மீண்டும் மாலை தயாராக ஆரம்பித்தனர்.

மாலையும் மது தோழிகளை பிடிவாதம் பிடித்து சேரிகட்ட சொல்ல, இப்போவும் புடவையா என்ற முணுமுணுப்புடனே ஒரே போல் டிசைனர் சேலையை உடுத்தினர்.

அப்போது பூஜாவின் பிளவுசை பார்த்த அபி “ஏன்டி உங்க அப்பாதான் பெரிய பிசினஸ்மேன் ஆச்சே, ஒரு பிளவுஸ் துணி எடுக்க உனக்கு காசு இல்லையா, கஞ்சத்தனமா முதுகுல ஒரே ஒரு கயிறு மட்டும் தான் இருக்கு,கொஞ்சம் தாராளமா துணிவிட்டு தச்சாதான் என்ன”என்று கேட்டாள்.

உடனே அவளை முறைத்த பூஜா “அடியே நான் புடவை கட்டி இருக்கிறதே பெருசு இதுல அதை பண்ணு இதை பண்ணுனு ரூல்ஸ் பேசிட்டு இருந்த ஜீன்ஸ் எடுத்து மாட்டிட்டு வந்துடுவேன் பாத்துக்கோ”என்று சொல்லி கொண்டிருக்கும் பொழுதே அவள் போனுக்கு அர்ஜுனிடம் இருந்து அழைப்பு வந்தது.

அவள் போன் பேச ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே சூர்யாவை தவிர மற்ற மூவருக்கும் அவரவர் நாயகர்களிடம் இருந்து அழைப்பு வந்தது.

ஆதி அபியுடன் பேசிய அடுத்த நாளே அவனை தோழிகளின் முன் கொண்டு வந்து நிறுத்தி, முதல் நாள் நடந்ததில் சொல்லவேண்டியதை மட்டும் சொல்ல மற்றவர்களுக்கு ஆச்சரியமாக போனது.

சூர்யா, பூஜா இருவருக்கும் ஆதியை பற்றி தெரிந்ததால். “ஓகே” சொல்லிவிட ப்ரீத்தியும், மதுவும்தான் கோக்குமாக்கான கேள்வியை கேட்டு பின் “ஓகே” சொன்னார்கள்.சூர்யா மனத்தினுள்ளே “அந்த லூச கியூட் சார்மிங்னா சொல்ற இப்போ பாரு”என்று கருவி கொண்டவள் ஆதியை பார்த்து “அப்புறம் மாம்ஸ் எல்லா டெஸ்ட்லயும் செலக்ட் ஆகிட்டீங்க எப்போ ட்ரீட்”என்று கேட்க, அபியோ, “எது……மாம்ஸா…….” என்று அதிர, அவளும் “ஆமாம்” என்றுவிட்டு அத்துடன் பேச்சு முடிந்தது என்பது போல் ஆதியுடன் பேச ஆரம்பித்தாள்.
மற்றவர்களோ “இவ யாருகிட்டயும் இப்படி பேசலையே” என்று யோசிக்க, அபிக்கு அப்போதுதான் மண்டையில் பல்ப் எரிந்தது உடனே மூவரிடம் திரும்பியவள் மெதுவான குரலில் “ஹேய் திருனேஷ நான் கியூட் சார்மிங்ன்னு கூப்பிட்டன்ல, அதான் மேடம் என்னை வெறுப்பேத்த ஆதியை மாம்ஸ்னு கூப்பிடறா”என்க மற்றவர்களோ அவளை “அட அல்ப்பமே” என்பது போல் பார்த்து “நீ என்ன வெறுப்பேத்தினாலும் சீனியர் எங்களோட பர்ஸ்ட் சைட்தான்” என்ற பார்வையை சூர்யாவின் புறம் பார்க்க அவள் புரிந்தாலும் கண்டு கொள்ளாதவள் போல் திரும்பி கொண்டாள்..அதன் பின் அபியின் காதலும் அழகான நீரோடையாக சென்று கொண்டு இருக்க இப்போது மதுவின் திருமணத்திற்கு சென்றிருப்பவளை போனில் அழைத்து பேச ஆரம்பித்தான் ஆதி.
மூவரும் போனை எடுத்துக் கொண்டு அந்த அறையின் ஆளுக்கு ஒரு மூலையில் நின்று பேசிக்கொண்டு இருக்க, சூர்யாவோ தன் போனில் கேன்டி கிரஷ் விளையாடிக்கொண்டிருந்தாள். அப்போது அவள் எதிரில் வந்து நின்ற பூஜா “வெட்டியா தானே உட்கார்ந்து இருக்க இந்த போன புடி” என்று போனை அவள் கையில் திணித்து சற்று தள்ளி நின்று கொண்டு “இந்த சேரி எப்படி இருக்கு அஜூ எனக்கு நல்லா இருக்கா”என்று சுற்றிகாட்டி கேட்க,

போனில் தெரியும் தன்னவளின் பிம்பத்தை கண்கள் தெறித்து விடும் அளவிற்கு விழித்தவன் “அடியே என்னடி சேரி இது ஒழுங்கா எதாவது எடுத்து மூடுடி மூடு”என்று கத்த, தன்னை விளையாட விடவில்லை என்ற கடுப்பில் இருந்த சூர்யா “ம்… …அடுத்த ரூம்ல தேங்க கொட்டி வைக்கற கோணி இருக்கு அது எடுத்து தரவா”என்க, அவளை முறைத்தவன் பூஜாவின் புறம் கண்களை திரும்ப அவளோ முகம் வாடி நின்றிருந்தாள் உடனே அவளை சமாதானபடுத்த நினைத்தவன் “என்ன டியர் ஆச்சு” என்றான்.

பூஜா, “டேய் முட்ட கண்ணா என்னை டியர்னு கூப்பிடாதனு சொல்லிருக்கன்ல” என்று சொல்லி மல்லுக்கு நிற்க, அர்ஜுனோ “ஹப்பாடா முன்னாடி சொன்னதை மறந்துட்டா”என்று நிம்மதி பெரு மூச்சு விட்டவன், அவளை பார்த்து சிரித்துவிட்டு மேலும் உடையைபற்றி எதுவும் பேசாமல் “கிளம்பிட்டேன் இன்னும் ஹாஃப் அண்ட் ஹவர்ல அங்க இருப்பேன்”என்றுவிட்டு கட் செய்தான்.

அப்போது அவர்கள் அறை கதவை யாரோ தட்ட அனைவரும் தங்கள் போனை கட் செய்துவிட்டு யார் என்று பார்க்க மதுவின் பெரியம்மாதான் வந்திருந்தார். “அம்மா ஆண்டாளு உன்னோட அண்ணே, அந்த ஆதர்ஷ் பையன பாத்தியா, டெக்கரேட் பண்றதெல்லாம் நான் மேல் பார்வை பாக்கறேன்னு சொல்லிட்டு ஆளயே காணோம் உன்னோட பெரியப்பா திட்டிட்டே இருக்காரு இன்னும் கொஞ்ச நேரத்துல ரிசப்ஷன் ஆரம்பிச்சுடும் இந்தப் பையன் எங்க போனான்னு தெரியலையே” என்று புலம்பினார்.

சூர்யா, “நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்கம்மா, நாங்க எல்லாத்தையும் பாத்துக்கறோம்” என்று சொல்லி தோழிகளை பார்க்க அவர்களோ அவளை வெட்டவா… குத்தவா என்பது போல் முறைத்துக் கொண்டு இருந்தனர். “நீங்க எப்படிமா…….” என்று தயங்கியவரை “கவலைப்படாம போங்கம்மா நாங்க இருக்கோம்” என்று சொல்லி அனுப்பி வைத்தாள்.

அவர் வெளியே சென்றவுடன் சூர்யாவின் அருகில் வந்த பூஜா “என்னடி நினச்சிட்டு இருக்க, நானே ஒன் ஹவர் கஷ்டப்பட்டு மேக்கப் போட்டு இருக்கேன், ஓடியாடி வேலை செஞ்சா வேர்த்து மேக்கப் எல்லாம் கலஞ்சிடும் நான் அதெல்லாம் செய்ய மாட்டேன் என்றாள்.

ப்ரீத்தி, “ஆமா இவங்க வாசன் ஐ கேர்ல வேலை செய்யற டாக்டர் நாங்க இருக்கோம்னு உத்திரவாதம் குடுக்கறா, அவ அவ இந்த சேரில நடக்கறதே பெரிய சாதனையா நினைச்சுட்டு இருக்கா, இவ என்னனா என்னை வேலை செய்ய சொல்றா முடியாதுடா முடியாது முடியவே முடியாது,”.

சூர்யா, “நம்ம ஃபிரண்டு கல்யாணத்துல நாம தானடி வேலை செய்யணும்” என்று வியாக்கியானம் பேச அவர்கள் அருகில் வந்த அபி “ஐயோ போதும் நிறுத்துங்கடி உங்க பேச்சை”என்றுவிட்டு ப்ரீத்தியின் புறம் திரும்பியவள் “பேசாம வாங்கடி போய் வேலைய ஆரம்பிப்போம், இவ பேசுவதை கேக்கறதுக்கு பதிலா அந்த வேலையவே jசெஞ்சுடலாம்”என்று சொல்லி இருவரையும் இழுத்து கொண்டு வெளியில் சென்றாள்.

சூர்யா அவர்கள் செயலில் சிரித்தவள் தானும் சென்று சாப்பாட்டு அறையில் நின்று மேற் பார்வை பார்த்து கொண்டிருந்தாள்.

விருந்தாளிகள் அனைவரையும் சூர்யா உபசரித்துக் கொண்டிருக்க, மற்ற மூவரும் தங்களது பங்கிற்கு தோழியின் திருமணத்தில் அனைத்து வேலைகளையும் இழுத்துப் போட்டு செய்துகொண்டிருந்தனர்.இதை வெகுநேரமாக கவனித்துக்கொண்டிருந்த மதுவின் மாமியார் “மருமகளோட பிரண்ட்ஸே இவ்ளோ பொறுப்பா இருக்காங்கனா, நம்ம மருமகள் எவ்வளவு பொறுப்பாக இருப்பா”என்று மனதில் எண்ணிக் கொண்டவர் “சரி அவங்ககிட்ட பேசிப் பார்ப்போம்” என்று முடிவு செய்துகொண்டு செல்ல மதுவின் நல்ல நேரமோ இல்லை அவளது மாமியாரின் கெட்ட நேரமோ அவர் பேச சென்றது சூர்யாவிடம்.

விருந்தினர்களை சிரித்த முகமாக உபசரித்து கொண்டிருந்தவள் அருகில் சென்றவர், “அம்மாடி……” என்று அழைக்க, உடனே திரும்பியவள் அங்கு நின்றிருந்த பிரபாவின் தாய் சாரதாவை கண்டு “ஆன்ட்டி என்ன இங்க வந்து நிக்கிறீங்க, உட்காருங்களேன் பார்க்க ரொம்ப டயர்டா தெரியரீங்க,காபி, டீ எதாவது குடிக்கறீங்களா” என்று கேட்க அவரோ மனதுக்குள் குளிர்ந்து போனவர் “பரவாயில்லையே எல்லா பிள்ளைகளும் பொறுப்பான பிள்ளைகளாதான் இருக்கு,ஒரு பானை சோற்றுக்கு ஒரு பருக்கை பதம்னு சொல்லுவாங்க இந்த பொண்ணுட்ட பேசுனதுலையே தெரியுது தோழிகள் ஐவரும் எவளோ பொறுப்பானவங்கனு” என்று மகிழ்ந்தவர், அவளிடம் தனக்கு எதுவும் வேண்டாம் என்றும், தனது மாமியார் அறையில் இருப்பதாகவும் அவருக்கு உடம்பு முடியாமல் இருப்பதால், அறைக்கு உணவை கொண்டு சென்று கொடுத்துவிட்டு வர வேண்டும் என்று சொல்ல, சூர்யாவும் “சரி ஆண்ட்டி, நான் போய் குடுத்துட்டு வரேன்” என்றவள், சாப்பாட்டை எடுத்து கொண்டு பாட்டியின் அறை நோக்கி சென்றாள்.

அங்கு ‘குக்கூ…. குக்கூ.. .’ என்ற பாடலை யாரோ சத்தமாக வைத்து கேட்டு கொண்டிருந்தனர்.
சூர்யா, “என்னடா இது உடம்பு முடியாம இருக்கவங்கள வச்சுக்கிட்டு சத்தமாக பாட்டு கேட்டிட்டு இருக்காங்க வயசானவங்களுக்கு டிஸ்டர்பா இருக்கும்னு கொஞ்சம் கூட யோசிக்கவே மாட்டாங்க போல” என்று திட்டி கொண்டே அங்கிருந்த ஜன்னல் வழியாக எட்டி பார்க்க அங்கு கண்ட காட்சியில் அதிர்ச்சியில் அப்படியே உறைந்து போனாள்.

ஏனென்றால் அந்த பாட்டை போட்டு கைகளை அசைத்து ஆடிக்கொண்டிருந்தது சாட்சாத் பிரபாவின் பாட்டியேதான், வாயில் கை வைத்தவள் “அடப்பாவி கிழவி உடம்பு சரி இல்லனு எல்லார்ட்டையும் சொல்லிட்டு இப்போ குக்கூ கேக்குதா உனக்கு குக்கூ”என்று கருவியவள், வேகமாக தோழிகளையும் இழுத்து வந்து காட்ட பாட்டியின் நடனத்தை பார்த்து அதிர்ச்சியானர்கள்.

அபி, “நினச்சேன்டி நினைச்சேன் மதுவை பாக்க வரும்போதே இந்த கிழவி நல்லா தெளிவாதானே இருக்கு, அப்புறம் உடம்பு சரி இல்லைன்னு சொல்றாங்களே நினைச்சேன், அதே மாதிரி ஆயிடுச்சு பாத்தியா”

பூஜா, “அதான் பாருடி குக்கூவாமுல்ல குக்கூ”

இவர்கள் பாட்டியின் ஆட்டத்தை கண்டு காண்டாக, அவர்களை கண்டுகொள்ளாத பாட்டியோ “அல்லி மலர் கொடி அஞ்சுகமே…… .”என்று பாடி ஆடி கொண்டிருந்தவரையும் தன் கையில் இருந்த உணவையும் பார்த்த சூர்யா மற்றவர்கள் புறம் திரும்பி என்ன இருந்தாலும் நம்ம மதுவுக்காக விட்டுறலாம் ஆனா பொய் சொன்ன வாய்க்கு போஜனம் கிடையாதுன்னு பெரியவா சொல்லி இருக்காங்க அதனால கிழவிக்கு புவா லேது என்றுவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டனர்.

பின் ரிசப்ஷன் ஆரம்பித்துவிட, வேலைகளை முடித்த தோழிகள் நால்வரும் லேசான டச் அப் செய்துவிட்டு வந்தனர்,பிரபாவின் கண்களோ தன்னவளையே கள்ளுண்ட வண்டாக சுற்றி வந்து கொண்டிருந்தது.

மதுவிற்கு துணையாக நின்றிருந்தனர் தோழிகள்.அப்போது உள்ளே வந்த அர்ஜுனை பூஜா கை ஆட்டி அழைக்க,”யாரை இவ கூப்பிடறா” என்று திரும்பிய சூர்யா அர்ஜூனுடன் வந்த திருனேஷை கண்டு அதிர்ந்து முகத்தில் மண்டிய எரிச்சலோடு “இவன் எதுக்கு இங்க வந்திருக்கான்” என்று எண்ணிக் கொண்டே மதுவிடம் திரும்பியவள் “இவன எதுக்குடி வர சொன்ன” என்றாள்.

மதுவோ “இங்க பாருடி என்ன இருந்தாலும் அவன் எங்களோட பஸ்ட் சைட் அதனால அவனையும் கூப்பிட தான் செய்வேன்,எப்படி நீ ஏன் வந்தானு கேட்கலாம்” என்று கேட்டவள் மற்றவர்களை பார்த்து “என்னங்கடி” என்று கேட்க,அவர்களும் கிண்டல் சிரிப்புடன் “ஆமா……ஆமா…..கரெக்ட் தான்” என்றனர்.

அதில் மேலும் கோபமுற்ற சூர்யா “உங்களையெல்லாம் திருத்தவே முடியாது போங்கடி”என்றுவிட்டு கோபமாக அங்கிருந்து அகன்று விட, மற்றவர்கள் தங்களுக்குள் சிரித்தபடி அவள் செல்வதை பார்த்திருந்தனர்.

அழைத்த உறவினர்களும் நண்பர்களும் அனைவரும் வர ஆரம்பித்து விட, ஆதியும் மதுவின் அழைப்பின் பேரில் வந்திருந்தான்.அவ்வளவு நேரம் முகத்தை தூக்கி வைத்து கொண்டிருந்த சூர்யா ஆதியை பார்த்தவுடன் வேண்டுமென்றே “ஹாய் மாம்ஸ்”என்று பேச ஆரம்பிக்க அபிக்கோ இங்கு காதில் புகை வர ஆரம்பித்தது “பக்கி பய வந்த உடனே என்னை பார்க்கணும்னு தோணுச்சா அவகிட்ட என்ன பேச்சு”என்று கருவ, மறு பக்கம் திருவும் அதே கடுப்புடன்தான் நின்று கொண்டிருந்தான். அவனை கிண்டலாக பார்த்த அர்ஜுன் “என்னப்பா இங்க பயங்கரமா புகையற ஸ்மெல் வருது”என்க, அவனை முறைத்த திரு “அவளுக்கு கொழுப்ப பாருடா என்ன பார்த்த உடனே அந்த மூஞ்சுல்ல எள்ளும் கொள்ளும் வெடிச்சுது, இப்போ ஆதி ப்ரோகிட்ட மட்டும் பல்லை காட்டி பேசறா இவளை……”என்று பல்லை கடிக்க மட்டுமே அவனால் முடிந்தது.
ஆதியிடம் பேசி அபியை வெறுப்பேத்திய பிறகே ஓரளவு சமாதானம் ஆன சூர்யா பின் தோழிகளுடன் ஐக்கியமாகி கொண்டாள்.ஐவரும் சேர்ந்தால் ஏற்படும் கலகலப்பை சொல்ல வேண்டுமா என்ன, மற்றவர்களை கேலி கிண்டல் செய்து கொண்டும்,அங்கு வந்திருக்கும் தங்கள் இணைகளோடு நேரத்தை செலவழித்து கொண்டும் இருந்தனர்.

உணவிற்குப்பின் அர்ஜுன் பூஜாவிற்காக ஐஸ்கிரீம் வாங்கிக் கொண்டு வருவதாக சென்றுவிட,இங்கு ப்ரீத்தியோ “ஐஸ்கிரீம் வாங்கற இடத்துல எவ்வளவு கூட்டம் பாரேன்” என்று கூறி சோகமாக முகத்தை வைத்து கொண்டு அமர்ந்திருக்க அவள் முன் ஒரு ஐஸ் கிரீம் நீட்டப்பட்டது.

வேற யாரு நம்ம கிருஷ்தான் ப்ரீத்திக்காக ஐஸ் கிரீம் கொண்டு வந்து கொடுத்து பேச இழுத்து சென்றுவிட்டான்.(என்ன பேச போறானோ)அபி வேறு ஏற்கனவே ஆதியுடன் பேச சென்றுவிட இப்போது பூஜாவும் சூர்யாவும் மட்டுமே அங்கு அமர்ந்திருந்தனர்.

அர்ஜுன் ஐஸ்கிரீமுடன் பூஜாவின் அருகில் வருவதை கண்ட சூர்யா, திருனேஷினால் உண்டான கடுப்பில் அவனை வெறுப்பேற்ற நினைத்து பூஜாவிடம் “ஆனாலும் பூஜா திரு அழகுதான் இல்ல” என்க,அவளை ஏற இறங்க பார்த்த பூஜா “நீயா பேசியது நீயா பேசியது”என்று கேலியாக கேட்டவள், பின் சூர்யாவின் பின் நின்றிருந்த திருனேஷை பார்த்து நமுட்டு சிரிப்புடன் “ஆமாம் ஆமாம் அதுவும் உண்மைதான் ஆள் செம ஹாண்ட்சம்”என்று கூறியவள் தனக்கு பின் நின்றிருந்த அர்ஜுனை கவனிக்கவில்லை.

இரு தோழிகளின் பின்னும் அவரவர் இணைகள் நிற்க, அர்ஜுனை காண்டாக்க என்றே திருவைபற்றி சூர்யா பேச,இதை அறியாத பூஜா உண்மையாகவே அவனை பார்த்து சைட் அடித்து கொண்டிருந்தாள்.அவளின் உள் மனம் “இது தப்புடி அவன் உன்னோட பிரண்டோட ஆளு” என்று எடுத்து சொல்ல, அதை முறைத்தவள் “அழகை ரசிக்கலாம் தப்பில்ல பேசாம இரு”என்று அடக்கிவிட்டு தன் ஜொல்லுவிடும் வேலையை தொடர்ந்தாள்.

சூர்யா, “அவன் செம கலர் இல்லை” என்று கேட்க, பூஜாவும், “ஆமா…. ஆமா….” என்று அவளுக்கு ஒத்து ஊதினாள். “அவனோட லிப்ஸ் இருக்கே” என்று ஆரம்பித்தவள் அவனை தன் மனதிற்குள் எவ்வாறு ரசித்தாள் என்பதை அப்படியே பூஜாவிடம் புகழ்ந்து சொல்ல, பூஜாவும் “ஆமாம் சாமி…..”போட்டு கொண்டிருந்தாள்.

அர்ஜுன் அவர்கள் அருகில் வரும்போதே திருவை பற்றிதான் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டவன், சூர்யாவின் முகத்தில் இருந்த குரும்பை கண்டு கொண்டு “அடிப்பாவி என்ன வெறுப்பேத்தனு அவ பேசறானா இவளும் கூட ஆமா ஆமானு ஒத்து ஊதறாளே இவளை….. “என்று பல்லை கடித்தவன் “இதுக்கு என்னதான் எண்டுனு பார்க்கலாம்” என்று அவர்கள் பேசுவதை தொடர்ந்து கேட்க ஆர்பித்தான்.

பூஜா சொல்வதை எல்லாம் கேட்டு கடுப்பானவன் “என்ன பத்தி பேச சொன்னா கூட, இவ்ளோ ரசிச்சு சொல்ல மாட்டா போல, எல்லாம் என் தலை எழுத்து” தன் தலை எழுத்தை நொந்தபடி இருக்க,அவளோ இது மட்டும் இல்ல ராசா உன்னை டேமேஜ் பண்ண இன்னும் இருக்கு என்பது போல் பதில் சொல்லிக் கொண்டிருந்தாள் பூஜா.

சூர்யா, “ஆனாலும் அவன் அளவுக்கு உன் ஆள் கலர் இல்லை” என்று கூற, பூஜாவோ “இல்ல இல்ல அப்படி எல்லாம் இல்ல” என்று மறுத்தால் அதை கேட்ட அர்ஜுனோ “அப்பா நல்ல வேலை நம்மள டேமேஜ் பண்ண விடாம காப்பாத்திட்டா”என்று மனதிற்குள் நிம்மதிப் பெருமூச்சுவிட அந்த நிம்மதிக்கு காலம் வெகு சில நொடிகள்தான் என்பது போல் பூஜா “என்ன இருந்தாலும் அவன் பர்சனாலிடியோட கம்பேர்பண்ணும் போது என் ஆளு கொஞ்சம் கம்மிதான்.என் ஆளுங்கறத்துக்காக நான் பொய் எல்லாம் சொல்ல மாட்டேன்” என்றாள்.

அதில் காண்டான அர்ஜுன் சூர்யாவின் பின்னால் நின்ற திருவை முறைக்க, அவனோ அஜூவை பார்த்து வாயெல்லாம் பல்லாக சிரித்து கண்ணடித்தான்.அது ஏற்கனவே கடுப்பில் இருந்த அர்ஜுனை மேலும் கடுப்பாக்க வேகமாக பூஜாவின் அருகில் சென்றவன் அவளை முறைத்த படி நிற்க அவளோ அவனை அங்கு எதிர்பார்க்காததால் அசடு வழிய “ஈஈஈ…….. “ சிரித்தாள்.

அர்ஜுனோ தன்னை பார்த்தவுடன் சமாளிப்பதற்காகவாவது ‘சும்மா விளையாட்டுக்கு சொன்னேன் அஜூ’ என்று சொல்வாள் என அவன் எதிர் பார்க்க அவளோ அசடு வழிய சிரித்து வைத்தாள்.அதில் கடுப்பானவன் மனதினுள் “இவளை இப்படியே விட்டா வேலைக்கு ஆகாது.இனிமே அவ யாரையும் சைட் அடிக்க விட கூடாது” என்று முடிவெடுத்து கொண்டவன், முகத்தை கோபமாக வைத்துக் கொண்டு தன் கையில் இருந்த ஐஸ்கிரீமை சூர்யாவின் கையில் திணித்து விட்டு எதுவும் பேசாமல் விறு விறுவென்று வெளியே சென்றான்.அவன் பின்னோடு பதட்டமாக சென்ற பூஜா “அஜூ சொல்றதை கேளு சும்மா……”என்ற வார்த்தை காற்றோடுதான் கலந்துதான் போனது.

இது அனைத்தையும் பார்த்து சிரித்து கொண்டிருந்த சூர்யாவின் அருகில் வந்த அபி “என்ன நாரதா செயலை சிறப்பாக செய்து முடித்துவிட்டாய் போல” என்று கேட்க, அவளோ தோள்களை குலுக்கி உதட்டை பிதுக்கி காட்டியவள் “பின்ன என்னடி அந்த அர்ஜுன் வேணும்னே என்ன வெறுப்பேத்தறான் அதான் ஒரு சின்ன ஷாக் ட்ரீட்மண்ட் எப்புடி….. .”என்க.

அபியோ கிண்டலான குரலில் உனக்கு ஒரு ஷாக் டிரீட்மென்ட் தரட்டுமா என்க, அவளோ புரியாமல் “எனக்கா என்ன” என்று கேட்க அவளை லேசாக திருப்பிய அபி “அங்க பாரு செல்லக்குட்டி” என்றாள்.

“பின்னாடி என்ன” என்று கூறியபடி அசட்டையாக திரும்பியவள் அங்கு தன்னையே விழுங்குவது போல் பார்த்து கொண்டிருந்த திருவின் காதல் பார்வையில் கட்டுண்டு உறைந்து போனாள்.
 
Last edited:

Sonythiru

Suthisha
25841

அத்தியாயம்-28

மதுவின் திருமணம் முடிந்து ஒரு வாரம் முடிந்திருந்தது. தோழிகள் நால்வரும் வழக்கம்போல் கல்லூரிக்கு வந்துவிட்டனர்.

ப்ரீத்தி, “மது எப்போடி காலேஜ்க்கு வருவா.நானும் சீக்கிரம் கல்யாணம் பண்றேன் அதை சாக்கா வச்சு மூணு மாசம் காலேஜ்க்கு லீவ் போடறேன். மது எத்தனை நாள் லீவ் போட போறானு தெரிலயே என்னதான் பிரண்டா இருந்தாலும் பொறாமையா இருக்கு”.
பூஜா, கல்யாணம் பண்றது இருக்கட்டும் முதல்ல ஒழுங்கா சுடு தண்ணி வைக்க கத்துக்கோ அப்போதான் மேரேஜ்க்கான என்ட்ரன்ஸ் எக்ஸாம்ல பாஸ் ஆவ.
ப்ரீத்தி, “எது….இதுக்கும் எண்ட்ரன்ஸ் எக்ஸாமா, மது என்கிட்ட சொல்லவே இல்லையே”என்றவள் அலற அவளை பார்த்து மற்ற மூவரும் சிரிக்க ஆரம்பித்தனர்.

சூர்யா, “அடியே மானத்தை வாங்காதடி அதுக்கு எல்லாம் எண்ட்ரன்ஸ் எக்ஸாம் இல்ல அவதான் சும்மா சொல்றானா நீ வேற அதை நம்பிட்டு இருக்க.நேரம் ஆச்சு கிளாஸ்க்கு போடி, நீயும் வா அபி நாமளும் போலாம்”என்று அவளையும் சூர்யா இழுத்து சென்றுவிட ஒருவழியாக தோழிகள் அவரவர் வகுப்பிற்கு சென்றனர்.
தங்கள் வகுப்பிற்குள் நுழைந்த பூஜாவும்,ப்ரீத்தியும் கண்டது கன்னத்தில் கை வைத்து கொண்டு அமர்ந்திருந்த மதுவைதான்.ஆம், கல்யாண வைபோகம் எல்லாம் முடிந்து ஒரே வாரத்தில் கல்லூரிக்கு வந்திருந்தால் மதுவந்தி.

பூஜா அவளை ஆச்சர்யமாக பார்த்தாலும், “என்ன ஆச்சு”உடனே காலேஜ்க்கு வந்துட்டா”என்று தனக்குள்ளே கேட்டு கொண்டு யோசனையான முகத்துடன் சென்றாள்.

ப்ரீத்தி, “என்னடி ஏன் இன்னைக்கே வந்துட்ட குறைஞ்சது ரெண்டு மாசமாவது லீவ் போடுவன்னு நினைச்சேன்” என்ற கேள்வியை இருவரும் பல விதமாக கேட்டு பார்த்துவிட்டனர்.ஆனால், அவள் தந்த பதில் என்னவோ “முறைப்பு மட்டுமே” “எப்படியும் சொல்லிடுவா…. சொல்லித்தானே ஆகணும்….” என்ற முடிவிற்கு வந்தவர்கள் அதன்பின் அமைதியாகினர்.

மதிய உணவு இடைவேளையின்போது சூர்யாவும், அபியும் அவர்களின் ஃபேவரட்டான இடத்திற்கு வர அங்கே அவர்கள் கண்டது. ப்ரீத்தி நடுவில் அமர்ந்து திருதிருவென விழித்து கொண்டிருக்க அவளின் ஒரு பக்கம் பூஜாவும், மறு பக்கம் மதுவும் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தனர்.

மூவரையும் பார்த்து குழம்பிய இருவரும் ஒருவரை ஒருவர் ஆச்சர்யமாக பார்த்துக் கொண்டு அவர்களிடம் கேட்க நினைத்து அருகில் சென்றனர்.முதலில் பூஜாவிடம் “என்ன ஆச்சு”என்று கேட்க அவளோ சோகமான முகத்துடன் மதுவின் திருமணத்தில் நடந்ததை சொல்லி அன்றில் இருந்து அர்ஜுன் தன்னுடன் பேசவில்லை என்றாள்.

அபி உடனே கோபமாக சூர்யாவை முறைக்க அவளோ “ஈஈஈ…..” என்று இளித்தவள், என்ன பார்த்தது போதும் அங்க இன்னொருத்தி பஞ்சாயத்து என்னனு பாரு என்க, தலையில் அடித்து கொண்டவள் “உங்களுக்கு நாட்டாமை வேலை பண்ணியே என் வாழ்க்கை முடிஞ்சுடும் போல”என்று முணுமுணுத்தவாறே மதுவிடம் “என்னடி ஆச்சு” என்று கேட்டாள்.
உடனே மது தன் கன்னத்தில் கைவைத்து கொண்டு ஒன்றும் சொல்லாமல் முகத்தை திருப்பிக் கொண்டாள். அதில் கடுப்பான ப்ரீத்தி, “நல்லா கேளுடி நானும் காலைல இருந்து கேக்கறேன் முட்ட கண்ணை வச்சு முறைச்சு முறைச்சு பாக்குறா”என்றவள் மதுவிடம் திரும்பி “அடியே இப்ப நீ சொல்லப் போறியா இல்லையா” என்று கேட்க,

மதுவோ அதைவிட கடுப்பான குரலில் “சொல்றேன்டி சொல்றேன்…. என்னோட சொந்த கதை சோக கதைய சொல்றேன் காது குளிர கேளுங்க” என்றவள் திருமணத்தன்று நடந்ததை சொல்ல ஆரம்பித்தாள்.

திருமணத்தின் போதும் சரி, வரவேற்பின் போதும் சரி பிரபா கண்களாலேயே தன்னவளை ரசித்துக் கொண்டும் உரசி கொண்டும் இருந்தான்.இதனால் மதுவின் மனதில் பல கற்பனை கோட்டைகள் உருவாகின.மேலும் முதல் இரவின் போது அவளை தயார் செய்த நாத்தனார் முறையில் இருந்த பெண் வேறு அவளை கிண்டல் செய்து ஒரு வழி ஆக்கிவிட இவளோ அந்த பேச்சில் கண் முழி பிதுங்கி போனாள்.
இருந்தாலும் தன்னை சமாளித்து கொண்டவள் தன் குருப்பிலேயே தனக்குத்தான் முதலில் திருமணம் நடந்திருக்கிறது என்று பெருமை கொண்டவளாக, இனி பொறுப்பாக இருக்க டிரை பண்ணனும் என்று முடிவெடுத்து கொண்டாள்.பின் அவளது மாமியார் சாமி அறைக்கு அழைத்து சென்று விளக்கேற்றி சாமி கும்பிட சொல்லிய பிறகு பிரபா அறைக்கு செல்ல சொல்ல, அவளோ கொஞ்சம் பயந்துதான் போனாள்.

தன்னவனை முதன் முதலில் தனிமையில் சந்திக்கபோவதால் ஏற்படும் படபடப்புடனும் பல பல கனவுகளுடனும் பிரபாவின் அறையை திறந்து உள்ளே சென்றவள் அங்கு கண்ட காட்சியில் திகைத்து நின்றுவிட்டாள்.

ஆம், அறை முழுவதும் சுத்தமாக இருந்தது.படத்துல எல்லாம் பர்ஸ்ட் நைட் ரூம்ல பூ அலங்காரம் இருக்கும், பழம், ஸ்வீட் எல்லாம் வச்சிருப்பாங்க இங்க ஒன்னையும் காணோம்.ஒரு வேலை ரூம் மாறி வந்துட்டமோ” என்று நகத்தை கடித்துக் கொண்டு அவள் நிற்க, அங்கிருந்த மற்றொரு அறையில் இருந்து வந்தான் பிரபா.
சாதாரண ஷார்ட்ஸ் டி-ஷர்ட் சகிதம் வெளியில் வந்த பிரபாவை மது குழப்பத்துடன் பார்க்க அவள் அருகில் வந்தவன் “என்ன மது என்னாச்சு என்கிட்ட உனக்கு என்ன பயம், பயப்படாத கண்டிப்பா உன்னோட படிப்புக்கு நான் தடையா இருக்க மாட்டேன்”என்றான்.

அவன் பேச்சில் விழித்த மது “நான் எங்கடா பயந்தேன், சும்மா நிக்கறவளை போய் பயப்படாதான்னு சொல்றான். அப்புறம் எது……படிப்பா நான் படிக்கணும்னு இவன்கிட்ட எப்போ சொன்னேன் கொஞ்சம் ஜாலியா பிரண்டுங்க கூட இருக்கலாம்னுதான் நான் காலேஜே சேர்ந்தேன் இவன் என்னடானா படிக்க வைக்கறேன்னு சொல்றான் என்ன கொடுமை இது”என்று மனதில் புலம்பி கொண்டிருக்க,

பிரபாவோ “அந்த ரூம்லதான் உன்னோட லக்கேஜ் இருக்கு சாரீல இருக்கறது கம்பர்டபுள்ள இருக்காது போய் சேன்ஜ் பண்ணிக்கறதுனா பண்ணிக்கோ”என்று சொல்ல, அவளும் “ஹப்பாடா….. “என்ற உணர்வோடு சென்று உடை மாற்றி வந்தாள்.

வெளியே வந்தவள் அங்கு பெட்டில் அமர்ந்திருந்த பிரபாவை கண்டு மூச்சடைத்து போனாள்.ஆம், ஒன்றன் மீது ஒன்றாக புத்தகங்களை அடுக்கி வைத்து அதில் ஒன்றை எடுத்து புரட்டி கொண்டே அவளுக்காக காத்திருந்தான் அவள் கணவன்.

மது, “என்னடா இவன் இப்ப போயி புக்க வைச்சுட்டு உட்கார்ந்து இருக்கான்” என்று யோசித்தவாறு அவன் அருகில் சென்றாள்.அருகில் வந்து நிற்பவளை பார்த்து சிரித்தவன் “வா மதி உட்காரு, உனக்காகத்தான் இந்த புக்ஸ் எல்லாம் தேடி தேடி வாங்கினேன், நம்மோட மேரேஜ்க்கு நான் முதல் முதல்ல உனக்கு குடுக்கற கிப்ட் இந்த புக்ஸ்தான், உன்னோட பிரெண்ட்ஸ் சொன்னாங்க உனக்கு படிக்கறதுனா பிடிக்குமாமே அதான் வாங்கினேன். உனக்கு என்ன டவுட் இருந்தாலும் சொல்லு நான் அதை கிளியர் பண்றேன்” என்று அவன் ஆர்வமாக சொல்லி கொண்டிருக்க,

மதுவோ மனதிற்குள்ளேயே “எனக்கு படிக்க புடிக்கும்னு எந்த நாய் சொல்லுச்சுனு தெரிலயே, இவன் வேற இத்தனை புக் வாங்கி வச்சுருக்கான் படிக்காம விட மாட்டானோ அம்மா, அப்பாட்ட ஏமாத்துன மாதிரி ஏமாத்த முடியாதோ”என்று புலம்பி கொண்டு இருந்தாள்.
பிரபாவோ அவளின் முக பாவத்தில் குழம்பி“உன் முகமே ஏதோ சொல்லுதே என்ன அது ஹோ… . என்ன அரியர் வச்சிருக்கியா”என்று கிண்டலாக சிரித்து “பரவாயில்லை அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்ல, காலேஜ் லைஃப்ல அரியர் இல்லைனாதான் தப்பு” என்று சொல்லி “எத்தனை” என்று கேட்டு அவள் பதிலுக்காக முகத்தை பார்த்திருந்தான்.

அவ்வளோ “எப்படி சொல்வது” என்று விழித்தவள் பின் “சொல்லாமல் விட மாட்டான் எப்படியும் இனிமே அரியர் பீஸ் கட்ட போறது அவன்தானே சொல்லுவோம்” என்று முடிவெடுத்தவளாக தலை குனிந்து இதழ் கடித்து கொண்டே கையை மேலே தூக்கியவள் ஒரு விரலை நீட்ட, அவள் கணவனோ ஒன்னுதானே பாத்து…….. என்று சொல்லும்போதே அடுத்த விரலையும் நீட்ட, யோசனையான முகத்துடன் ரெண்டா”என்றான் அதற்கும் அவள் மறுப்பாக தலையசைத்து பத்து விரல்களையும் நீட்ட, நெஞ்சில் கைவைத்தவன் “அடியே மொத்தம் தேர்டு இயர்வரைக்கும் இருக்கறதே பத்து பேப்பரோ பன்னெண்டு பேப்பரோதானே” என்றுவிட்டு “உன்னோட பிரண்டு அபிகிட்ட உன்னை 70 பர்ஸன்டேஜ் மார்க் வாங்க வைக்கறேன்னு சபதம் போட்டேன், அப்போவே கிண்டலா சிரிச்சா அதுக்கான காரணம் அப்போ புரியல இப்போ உன்னோட அரியர் லிஸ்ட்ட கேட்ட பிறகு நல்லா புரியுது, எப்படி இருந்தாலும் சரி நான் உன்னை 60 பர்சென்ட்டேஜ்க்கு மேல் எடுக்க வச்சே தீருவேன், போ போய் புக்கை எடுத்து வா” என்று சொல்ல அவளோ தொங்கிப் போன முகத்துடன் புக்கை எடுத்து வந்தாள்.

இருப்பதிலேயே கடினமான சப்ஜெக்டான கணக்கை முதலில் எடுத்தவன் அதில் இருக்கும் ப்ரப்ளேம் அனைத்தையும் ஈசியாக சால்வ் பண்ண சொல்லி கொடுக்க, அவளோ “பாவி மனுஷா பர்ஸ்ட் நைட்ல பண்ற வேலையாடா இது, என்ன கணக்கு பண்ணுவன்னு பார்த்தா என்னையவே கணக்கு போட வச்சிட்டியேடா பாவி உனக்கு எல்லாம் கபீம் குபாம்தான் பார்த்துக்கோ ”என்று தூக்க கலக்கத்தினோடே திட்டி கொண்டு, தூங்கி தூங்கி விழுந்து கொண்டிருந்தாள். அதில் கடுப்பானவன் அவள் தலையில் நங்கென்று கொட்ட, “ஆஆஆ…” என்று அலறியவள் கொட்டிய இடத்தை தேய்த்து கொண்டே அவனை பாவமாக பார்க்க, அந்த பார்வையில் என்ன உணர்ந்தானோ “சரி போதும் போய் தூங்கு நாளைக்கு காலையில அஞ்சு மணிக்கு எழுந்து படிக்கணும் என்ன “ என்று மிரட்டுவது போல் சொல்ல அவளும் இப்போதைக்கு விட்டால் போதும் என்ற எண்ணத்துடன் வேகமாக சரியென்று தலையாட்டிவள் போய் படுத்து கொண்டாள்.

அடுத்த ஒரு வாரம் மட்டும் விருந்து கோவில் என்று அழைத்து சென்றவன் இதோ இன்று வீட்டில் இருக்கும் அனைவரையும் சமாளித்து கல்லூரியில் கொண்டு வந்து விட்டு சென்றுவிட்டான்” என்று சோகம் நிறைந்த குரலில் சொல்ல இங்கு தோழிகள் நால்வரும் வயிற்றை பிடித்து கொண்டு சிரிக்க ஆரம்பித்தனர்.

சூர்யா, பரவல்லையே ப்ரோவே சம் எல்லாம் சொல்லி குடுக்கறாரா செம்ம, இனி புரியல எழுதலனு சொல்ல முடியாது செல்லம்”என்க அவளை முறைத்தவள் “படிக்கறது எனக்கு புடிக்கும்னு எந்த நாய் அவருகிட்ட சொன்னுச்சு”என்று கேட்க, அவளை பார்த்து சிரித்த பூஜா “அந்த வரலாற்று சிறப்புமிக்க செயலை செஞ்சது நம்ம அபிதான்” என்றாள்.

அபி, “அது இல்லடி இனி நீ படிக்கறேங்கற பேர்ல ஜாலியா எங்ககூட ஃபிரியா சுத்தலாம்னு அப்படி சொன்னேன்” என்க, அவள் கூறுவதை கேட்டு மதுவின் முகம் போன போக்கை பார்த்து மற்றவர்களோ சிரித்து கொண்டிருந்தனர்.

மது, “ஏன்டி நானே படிக்க சொல்லிட்டாறேங்கற கவலைல இருக்கேன் நீங்க சிரிச்சுகிட்டே இருக்கீங்களா” என்று கேட்டு முகத்தை சோகமாக வைத்துக்கொள்ள அவளை சமாதானப்படுத்த சென்றனர் தோழிகள்.

அப்போது எதேச்சையாக திரும்பிய சூர்யா தூரத்தில் அர்ஜுன் உட்கார்ந்து இருப்பதை பார்த்து அபியிடம் “நீ இங்க பார்த்துக்கோ,எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு அதை முடிச்சிட்டு வரேன்” என்று சொல்லிவிட்டு அர்ஜுன் இருக்கும் இடத்தை நோக்கி சென்றாள். அவள் மனதிலோ மதுவின் திருமணத்தில் நடந்த நிகழ்வுகள் அனைத்தும் படம் போல் ஓடிக் கொண்டிருந்தது.

திருனேஷ் தன் பின்னால் நிற்பதை கண்டு முதலில் திகைத்த சூர்யா, அவன் முகத்தில் இருந்த மகிழ்ச்சியை கண்டு எரிச்சல் மேலிட எதுவும் பேசாமல் அங்கிருந்து செல்ல முனைய அவள் கையை பிடித்தவன் “எங்க போறீங்க பொண்டாட்டி, என்னை பிடிக்காம, லவ் பண்ணாமாதான் இப்படி ரசிச்சிருக்கீங்களா” என்று விஷம சிரிப்புடன் கேட்க, அதில் மேலும் கோபமானவள் அவன் கையை உதறிவிட்டு “ரொம்ப கனவு கானாத நான் அர்ஜுனை வெறுப்பேத்ததான் அப்படி பேசுனேன், வேற எந்த எண்ணமும் இல்லை, லூசு மாதிரி உளறாம போ போய் வேற வேலை இருந்தா பாரு, நல்லா நியாபகம் வச்சுக்கோ எனக்கு இந்த ரவுடி வேண்டாம்,.அதனால இன்னொரு டைம் பொண்டாட்டி போண்டா டினுட்டு வந்த கண்ணம் பழுத்துடும் ஜாக்கிரதை என்ன அன்னைக்கு வாங்குனத மறந்துட்டியா, போ போய் வேற பொண்ண பார்த்து செட்டில் ஆகற வழிய பாரு”என்றவள் அங்கிருந்து சென்றுவிட அவளையே பார்த்திருந்த திரு ஒரு முடிவுடன் அங்கிருந்து சென்றான்.அதன் பின் அவள் கண்ணில் அவன்படவே இல்லை.

அதை யோசித்து கொண்டே வந்தவள் அர்ஜுனின் எதிரில் அவனை முறைத்து கொண்டு நிற்க, அவனோ அவளை கண்டுகொள்ளாதவனாக மொபைலை நோண்டி கொண்டிருந்தான்.

சூர்யா, “அர்ஜுன் உனக்கு மனசுல என்ன மன்மதன்னு நினைப்போ, ஏன் பூஜாட்ட ஒரு வாரமா பேசல, ஏதோ போன போகுதேன்னு உனக்கு அவ வாழ்க்கை குடுத்தா ஓவரா போற, இப்போவே நீ போய் அவகிட்ட பேசற”.

அர்ஜுனும் திமிராக அவளிடம் “முடியாதுனா என்ன பண்ணுவ, அன்னைக்கு மண்டபத்துல உன் ஆளை ரசிக்க என்ன டேமேஜ் பண்ணுனல்ல, அவ வேற கூட சேர்ந்துட்டு ஆமாம் சாமி போட்டுட்டு இருந்தால்ல அதெல்லாம் பேச முடியாது போ”

சூர்யா, “டேய் ஓவரா போற அவன் என் ஆளுன்னு நான் சொன்னனா”என்றவள் அவன் அருகில் சென்று முடியை பிடித்து ஆட்ட, அவனும் அவள் முடியை பிடித்தவன் “பின்ன ஒரு பையனை ரசிச்சு வர்ணிச்சுட்டு இருந்தா அவன் உன் ஆள் இல்லாம வேற யாரு”என்று நண்பனின் காதலை அவளுக்கு புரிய வைக்க முயல அதை கண்டுகொள்ளாதவளோ “அர்ஜுன் வேண்டாம் தேவை இல்லாம பேசாத, அன்னைக்கு உன்னை வெறுப்பேத்ததான் அப்படி பேசுனேன்னு உனக்கே தெரியும், பூஜாவோட கேரக்ட்டர் என்னனும் உனக்கு தெரியும்.அப்புறம் எதுக்கு ஓவரா சீன் போடற, பாவம் அவ முகத்துல சிரிப்பே இல்ல, டல்லா சுத்திட்டு இருக்கா ஒழுங்கா போய் பேசு” என்று சொல்ல அவனும் முடியாது என்று சொல்ல இருவரும் அந்த இடத்திலேயே குடுமி பிடி சண்டை போட்டு கொண்டனர்.

சற்று நேரம் கடந்து அர்ஜுனின் கையை தட்டிவிட்ட சூர்யா “இப்போவே நீ போய் பேசற இல்லை,உன்ன விட வெள்ள பிகரா, உன்ன மாதிரி கஞ்சூஸ்ஸா இல்லாத ரிச் பிகரா பார்த்து பேசி அவளுக்கு கரெக்ட்பண்ணி விட்டுருவேன் பார்த்துக்கோ, வெளிய எதுக்கு போய் தேடணும் அதான் திருனேஷ் இருக்கானே அவனையே பூஜாவோட கோத்துவிட்டிருவேன், அவளுக்கு ஓகேவாதான் இருக்கும்.அப்புறம் நீதான் தாடி வச்சுட்டு தேவதாஸா சுத்தணும் யோசிச்சு முடிவெடு”என்று மிரட்டிவிட்டு சென்றவளின் இதழில் ஏனோ சிரிப்புதான் இருந்தது.

சூர்யா பேசியதை கேட்டு கொண்டிருந்த அர்ஜுனும் அவள் திரும்பியவுடன் சிரித்து கொண்டே “சரியான அராத்து”என்றான்.

சூர்யா அர்ஜூனுடன் பேசுவதை கவனித்த பூஜா அவள் அருகில் வந்தவுடன் “என் அஜூ பேபி என்னடி சொன்னான்”என்று கேட்க, அப்போது வேண்டுமென்றே முகத்தை சோகம் போல் வைத்து கொண்டவள் “அது ஒன்னும் இல்லடி பூஜா ரொம்ப நல்ல பொண்ணுங்க, ஏன் அவக்கூட பேச மாட்டிக்கிறீங்கன்னுதான்டி கேட்டேன், அதுக்கு போய் அவரு எவளோ பேசுறாரு, அவளா நல்ல பொண்ணு சரியான இம்சை, நானே எப்போடா அவளை கழட்டிவிடலாம்னு பார்த்துட்டு இருந்தேன் இப்போ அதுக்கான சான்ஸ் கிடைச்சுருக்கு அதை விடாம யூஸ் பண்ணிக்க போறேன், அவளை விட வெள்ள பிகரா, ரிச் கேர்ளா பார்த்து பேசி கரெக்ட் பண்ணி அவ முன்னாடியே வந்து நிக்கறேன் பாருன்னு……..சொன்னாரு” என்றவள் சொல்லி முடிக்கவும் அவள் பின் இருந்து “எது இதெல்லாம் நான் சொன்னேன்” என்ற அர்ஜுனின் குரல் கேட்கவும் சரியாக இருந்தது.

மாட்டி கொண்ட உணர்வில் முதலில் திருதிருவென விழித்தவள் அவனை பார்த்து அசட்டு சிரிப்பு சிரிக்க பூஜாவோ “அஜூ பேபி அப்படியா சொன்ன இனிமே யாரையும் நான் சைட் அடிக்க மாட்டேன் நல்ல பொண்ணா இருக்கேன்”என்றாள். அதை கேட்டு சூர்யா ஷாக்காக அவளை பார்க்க, அர்ஜுனோ ஆனந்தமாக பார்த்தான்.ஆனால் அந்த மகிழ்ச்சிக்கு ஆயுள் கம்மி என்பது போல் மேலும் தன் பேச்சை தொடர்ந்தாள் பூஜா “தூரமா இருந்து பார்த்து சைட் அடிச்சாதானே தப்பு இனி நேர போய் பேசி பிரண்டு புடிச்சிடறேன் அப்போ சைட் அடிக்க தேவை இல்லாம போய் பேசிடுவன்ல” என்க அர்ஜுனோ “இதுக்கு நீ சைட்டே அடிக்கலாம்” என்று நினைத்து தலையில் கை வைத்து கொண்டான் என்றால் .சூர்யாவோ அவனை நக்கல் சிரிப்புடன் பார்த்துவிட்டு ப்ரீத்தியிடம் சென்றாள்.

அதன்பின் அர்ஜுன் பூஜா இருவரும் ஒருவரை ஒருவர் அணைத்து கொண்டு ஒரு வாரம் பேசாமல் விட்டதை பேச ஆரம்பித்தனர்.

அங்கு சூர்யாவை அபி ஒரு மார்க்கமாக பார்த்து “நல்லா புரியுதுடி இப்போ நல்லா புரியுது” என்று சொல்ல, சூர்யா அவளை புரியாத பார்வை பார்த்தாள்.

அபி, “இல்ல நீ என்ன சொன்னாலும் நம்ப கூடாதுங்கறது நல்லா புரியுது”என்று சொல்ல மதுவும் ப்ரீத்தியும் கூட அவளுடன் ஹை பை அடித்து கொண்டனர்.அதில் கோபம் போல் நடித்த சூர்யா அவர்களை அடிக்க துரத்த அவர்களோ அவளுக்கு போக்கு காட்டி ஓடி கொண்டிருந்தனர்.இதை தூரத்தில் இருந்து பார்த்து கொண்டிருந்த திரு “உனக்கு இருக்குடி ஒரு நாள். அமைதியாவே இருந்துக்கிட்டு எவளோ சேட்டை பண்ற”என்று முணகியவன் சிறிது நேரம் அவளின் சேட்டையை ரசித்துவிட்டே அங்கிருந்து சென்றான்.

நாட்கள் அதன் போக்கில் செல்ல ஆரம்பித்தது.திரு சூர்யாவின் கண்ணில் படாமல் போக, அவனை ஏன் எதற்கு என்றே தெரியாமல் தன்னையும் அறியாமல் பார்வையால் தேட ஆரம்பித்தாள் சூர்யா.இதை கவனித்த அபி அவளை கிண்டல் பண்ண அவளோ அதை காதில் வாங்காதது போல் திரும்பி கொள்வாள்.அவனை வேண்டாம் என்பவள் தன்னை சுற்றி வருபவனை கண்டு எரிச்சல் படுபவள் ஒரு நாள் அவனை பார்க்க முடியவில்லை என்றாலும் அவளுள் தோன்றும் அவனுக்கான தேடல் எதனால் என்பதை அவள் புரிந்து கொண்டிருக்கலாம் விதி யாரைவிட்டது.

ஒருவழியாக அர்ஜுன், திருனேஷ் இருவரின் படிப்பும் முடிந்தது.அதற்குள் ஜனா அவர்கள் காலேஜ் ஷேர் ஹோல்டர்ஸிடம் பேசி அவர் மகனை சேர் மேன் ஆக்க முயற்சிக்க நண்பர்கள் இருவரும் அவனின் நரி தந்திரத்தை உணர்ந்து அவனுக்கான ஸ்கெட்ச்சை ரெடி செய்தனர்.

இருவரின் அதிரடியை ஜனா எப்படி சமாளிக்க போகிறான் என்பதை அடுத்த எபில பார்க்கலாம்.
 

Sonythiru

Suthisha
26461

அத்தியாயம்-29

தோழிகள் ஐவரின் வாழ்க்கையும் எப்போதும் போல் எந்த சலனமும் இல்லாமல் சென்று கொண்டிருந்தது. ஆனால் மதுதான் பிரபாவிடம் சிக்கி முழி பிதுங்கி போய் சுற்றி கொண்டிருந்தாள்.

ஆம், ஒவ்வொரு நாளும் பிரபா அவள் படிப்பில் முழு கவனம் செலுத்த வைத்தான்.தன் வீட்டில் படிப்பிற்கு முக்கியத்துவம் இல்லாமல் செல்லம் கொடுப்பத்தால் ஏதோ தோழிகளோடு இருக்க ஆசைப்பட்டு கல்லூரியில் சேர்ந்தவளுக்கு அவர்களை ஏமாற்றுவதும் எளிதாகவே இருந்தது.

ஆனால் பிரபா தினமும் மாலை ஹோட்டலில் இருந்து வருபவன் குடும்பத்தினரிடம் எப்போதும் போல் சிறிது நேரம் செலவழித்துவிட்டு, மதுவிடம் கல்லூரியில் நடந்த விஷயங்களை கேட்டு தெரிந்து கொண்டு படிக்க வைப்பது அசைமென்ட் எழுத வைப்பது என்று அவள் தோழிகளுக்கு வாக்களித்தது போல் பொறுப்பான கணவனாக நடந்து கொண்டான்.

மதுவோ “அட பாவி கொடுமைபடுத்தறானே, எழுது, படினு எவ்வளவு நேரம் நானும் இந்த புக் கூட போராடறது. இவனால யாரும் முகம் குடுத்து என்கூட பேசமாட்டிக்கிறாங்க, அங்கயாவது பாட்டி இருப்பாங்க ஏதாவது பேசி வாம்பிழுத்துக்கிட்டு சுத்துவேன் இங்க அதுவும் முடியாது, மாமியார் என்னடானா என்னை வில்லி மாதிரி பாக்குது மாமா கண்டுக்கரதே இல்லை அந்த பாட்டி மூஞ்ச திருப்பிக்கிட்டு போகுது” என்று பெரு மூச்சு விட்டாள்.
ஆம்,கல்யாணத்துக்கு பிறகும் பொம்பள புள்ளைக்கு எதுக்கு படிப்பு என்று முணுமுணுத்த தாயையும் குடும்பத்தினரையும் சமாளித்து தான் மதுவை கல்லூரிக்கு அனுப்பிக்கொண்டு இருக்கிறான் அவள் கணவன்.இதனாலேயே கோபம் கொண்ட அவன் தாய் பிரபா இல்லாத சமயம் அவளை திட்டி கொண்டும் ஜாடை பேசி கொண்டும் சுற்றுவார்.

இதுபோன்ற நிலைமையில் தான் ஒரு ஞாயிறு அன்று பிரபா தூங்குவதை கண்டு “ஹப்பாடா” என்ற உணர்வோடு டிவி பார்த்துக் கொண்டிருந்தாள் அப்போது அங்கு வந்த பிரபாவை பார்த்தவள் “ஹயையோ எழுந்துட்டாரா வந்தவுடனே பல்லு கூட விலக்காம அசைமென்ட்பத்தி கேப்பாறே அடியே மது அவரு பாக்கறதுக்கு முன்னாடி அப்படியே அலுங்காம ஓடிரு அதுதான் உனக்கு சேப்” என்று நினைத்தவள் எழுந்து ஓட முயற்சித்தாள்.

அப்போது அவளை நிறுத்திய பிரபா “எங்க போற போய் கிளம்பி வா வெளிய போகணும்” என்றான்.உடனே மது ஆர்வமாக “வெளியேவாங்க எங்க போறோம்”என்று கேட்க, அவளை முறைத்தவன் “எங்கன்னு சொன்னாதான் கிளம்பி வருவியா போ போய் சீக்கிரம் கிளம்பற வழிய பாரு நானும் ரெடி ஆகாறேன்”என்று சொல்லி சென்றுவிட்டான்.

மதுவோ “சரி எங்க போனா என்ன வெளிய போறோம் ஹையா ஜாலி” என்று குதித்து கொண்டு சென்றவள் புடவை கட்டி புல் மேக்கப்பில் வெளியே வர, அங்கு பிரபாவோ சாதாரண டி ஷர்ட், நைட் பேண்ட்டுடன் நின்றிருந்தான்.

மது, “என்னங்க வெளிய போலாம்னு சொல்லிட்டு இப்படி நிக்கிறீங்க. நானே கிளம்பிட்டேன் பாருங்க போங்க போய் கிளம்பிட்டு வாங்க” என்க, அவளை மேலும் கீழுமாக பார்த்த பிரபா “என்ன இது இப்போ நாம கல்யாணத்துக்கா போறோம் புல் மேக்கப்ல வந்துருக்க, போய் நார்மலா டிரஸ்பண்ணிட்டு வா இங்க பக்கத்துலதான் போறோம்”என்றான்.
மது, “என்னது பக்கத்துலயே இதை முன்னாடியே சொல்றதுக்கு என்ன கெளம்பி வானா இப்படிதான் கிளம்பி வருவாங்க” என்று முணுமுணுத்து கொண்டே சென்றவளின் குரலை கேட்ட பிரபாவின் இதழ்கள் சிரிப்பில் விரிந்தது.

சற்று நேரம் கடந்து ஜீன்ஸ் டாப் அணிந்து வந்தவளின் கண்களை மூடியவாறே வெளியே அழைத்து செல்ல, இவளோ “என்னங்க இது கண்ணை மூடினா நான் எப்படி நடக்கறது” என்க, அவனோ “நான் இருக்கேன்ல கூட்டி போறேன் வா” என்று வழி சொல்லி அழைத்து சென்றவனின் கரங்களின் மேல் தன் கரங்களை வைத்தவள் “ஏங்க அத்த பார்த்தா எதுவும் சொல்ல போறாங்கங்க நானே வரேன் விடுங்க” என்றாள் தயக்கத்தோடு.

பிரபா, “அவங்க எல்லாம் ஒன்னும் சொல்லமாட்டாங்க, அப்படியே சொன்னாலும் நான் பார்த்துக்கறேன் நீ வா” என்று அழைத்து சென்றவன் வாசலிற்கு அழைத்து சென்ற பின்பே கையை எடுத்தான்.
அங்கு வாசலில் புத்தம் புது ஸ்கூட்டி நின்றிருப்பதை கண்டவுடன் அவளுக்கு இன்ப அதிர்ச்சி ஆகிவிட்டது. முகம் விகசிக்க அந்த வண்டியை சுற்றி வந்தவள், தன் புகுந்த வீட்டு மக்கள் அனைவரும் அங்கு இருப்பதை மறந்து சந்தோஷமிகுதியில் கணவனை அணைத்துக் கொண்டவளின் இதழ்கள் “ரொம்ப தேங்க்ஸ்ங்க”என்ற வார்த்தையையே திரும்ப திரும்ப சொல்லி கொண்டிருந்தது.

பிரபா மாடியில் இருந்து வருவதைக் கண்ட ஹாலில் குழுமியிருந்த அவன் குடும்பத்தினர் அனைவருமே அவர்கள் பின்னோடு வெளியில் வந்திருந்தனர். குடும்பத்தினரின் பார்வை தங்களில் இருப்பதை உணர்ந்த பிரபா அவளைத் தள்ளி நிறுத்தி “காலேஜ்க்கு தனியா ஸ்கூட்டில போக ஆசைனு சொன்னல, இது உன்னோட வண்டி இந்தா சாவி” என்று சாவியை பாக்கெட்டில் இருந்து எடுத்து கொடுத்தவன் “சந்தோஷம்தானே வா வந்து ஓட்டு” என்று கூற அவள் மாமியாரோ “பொம்பள பிள்ளைக்கு எதுக்கு இப்ப இதெல்லாம் நம்ம வீட்ல இல்லாத காரா அதுல போயிட்டு வந்தா ஆகாதா”என்று சொல்ல, மதுவின் முகம் வாடி போனது. அதை கண்டவன் அவள் கைகளை ஆறுதலாக பற்றி சமாதானமாக கண்களை மூடி திறந்தவன் தாயின் புறம் திரும்பினான்.

பிரபா, “என்னம்மா இப்படி சொல்றீங்க இதெல்லாம் தெரிஞ்சுகிறது ஒரு அவசரத்துக்கு நல்லதுதானே அதுவுமில்லாம இது அவளுக்கு புடிச்சிருக்கு விடுங்க” என்று மனைவிக்கு சாதகமாக பேசியவன் “நீ வண்டிய ஓட்டு” என்று கூற அவளோ கைகளை பிசைந்தவாறு திருதிருவென விழித்தபடி நின்றாள்.

பிரபா, “என்ன முழிக்கிற போய் வண்டியை ஓட்டு” என்று மறுபடியும் கூற அவளோ தயங்கியபடியே “இல்லங்க எனக்கு வண்டி ஓட்ட தெரியாது” என்க,அங்கிருந்த அனைவரும் அவனை நக்கலாக பார்த்து “இதுக்குதான் புது வண்டியா” என்பதுபோல் நிற்க, அவனோ “சரி பரவால்ல பழகிக்கலாம் வா நான் உனக்கு சொல்லி தரேன்” என்று கூறியவன் அவளை அவர்கள் வீட்டின் பின்னால் இருந்த ஒரு பெரிய கிரவுண்டுக்கு அழைத்து சென்றான்.

பிரபா, “ஓகே நான் சொல்றதை கவனமா கேட்டுக்கோ,கையை ஆட்டாம, பயப்படாம ஒட்டு ” என்றவன் வண்டியில் அவளை உட்கார வைத்து பின் புறம் அவளை நெருங்கி அமர்ந்து சொல்லி தர, மதுதான் அவன் நெருங்கி அமர்ந்ததிலும், சூடானா மூச்சு காற்று தோளில் படவும் படபடப்பாக உணர்ந்து தடுமாறி போனாள்.

இதனால் கவனம் சிதறி சரியாக ஒட்டாமல் கீழே விழ போக உடனே பேலன்ஸ் செய்து வண்டியை தாங்கி பிடித்தவன் மதுவை பார்க்க அவளோ முகம் சிவந்து, கண்ணில் படபடப்புடன் நின்றிருந்தாள்.

அவள் முக சிவப்பை குழப்பமாக பார்த்தவன் “என்ன ஆச்சு”என்று கேட்க, அவளோ எதுவும் சொல்லாமல் கண்களில் அலைப்புறுதலுடன் நின்றிருக்க, விழி மொழியில் அவளின் தடுமாற்றத்தை கண்டு கொண்டவனிற்கு ஏனோ அவள் மீது கோபம்தான் வந்தது.

பிரபா, “என்ன மது இது வண்டி ஓட்டணும்னு ஆசை இருந்தால் மட்டும் போதாது கத்துக்கணும்ங்கற ஆர்வமும் இருக்கணும், அப்படி ஆர்வம் இருந்தால்தான் மற்ற எதுலயும் கவனம் போகாது” என்று கடிய.

மது, “டேய் ஓவர் பொறுப்பானவனே இப்படி பக்கத்துல வந்து ஒட்டி ஒரசிட்டு இருந்தா நான் எப்படிடா வண்டி ஓட்டறதுல கவனம் வைக்க முடியும் பண்றதையும் பண்ணிட்டு, பச்ச புள்ளைய எப்படி திட்டறான் பாரு” என்று மனதில் திட்டினாலும் வெளியில் அப்பாவி பிள்ளையாக முகத்தை வைத்திருக்க,அதை கவனித்த பிரபா “சரி சரி வா ஒழுங்கா வண்டி ஓட்டு யாரையும் எப்பவும் எதிர் பார்த்து இருக்கணும்னு நினைக்க கூடாது சரியா”என்றுவிட்டு மீண்டும் சொல்லி தர ஆரம்பிக்க மதுவும் “ஓகே கவனம் மது கவனம், ஒழுங்கா ஓட்டு. இவனை……” என்று பல்லை கடித்தவள் “கவலைபடாத மது ஒரு நாள் இல்லை ஒரு நாள் அவன் உன்கிட்ட சிக்குவான்ல அப்போ வச்சி செஞ்சுரு”என்று தனக்கு தானே சொல்லி கொண்டவள் அவனிடம் நல்ல பிள்ளையாக “சரி” என்று தலையாட்டினாள்.

அதன்பின் பிரபா சொல்லி தர தட்டுத்தடுமாறி ஓட்டியவளை தினமும் மாலை பொழுது ஒரு மணி நேரம், அல்லது ஞாயிற்று கிழமை அழைத்து சென்று சொல்லி தர போக போக ஓரளவு நன்றாக ஓட்ட கற்றுக்கொண்டார். அதைப்போல் அவன் உடனடியாக காரும் ஓட்ட கற்று தர வர, “ஹையையோ.. “ என்று அலறியவள் “என்னால் எல்லாம் இது ஓட்ட முடியாது” என்க,

அவள் கணவனோ “அது எல்லாம் முடியாது நீ ஓட்டிதான் ஆகணும்” என்று கட்டாயப்படுத்தி அவனுக்கும் அன்று விடுமுறை தினம் என்பதால் நாள் முழுக்க சொல்லி தர அவளும் முடிந்த அளவு அவன் கூறியவற்றை சரியாக கேட்டு கற்றுக் கொண்டவள் தனியாக ஓட்டும் அளவிற்கு முன்னேறி இருந்தாள்.

அவள் கார் ஓட்டி பழகிய பிறகு அவர்கள் இருவரும் எங்கு சென்றாலும் மதுவே காரை ஓட்டி சென்றாள்.இது அவளுள் பல நாட்களாக இருந்த ஏக்கத்தை சரி செய்தது போல் இருக்க மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்தவள் கணவனை அணைத்து “ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்ங்க”என்று விடுவிக்க, அவனோ மென்மையாக சிரித்து “பிராப்ளம் இல்ல வா” என்று வீட்டிற்கு அழைத்து வர அங்கு அவரது வீட்டினர் கோபமாக அமர்ந்து இருந்தனர்.

பிரபா, மது வீட்டிற்குள் வர குடும்பத்தினரின் முகத்தில் இருந்த கோபத்தை உணர்ந்தாலும் அதை சற்றும் கண்டு கொள்ளாமல் அறைக்கு செல்ல முயன்றவனை தடுத்த அவனது தாய் “என்னடா இது நீங்க பாட்டுக்கு போறீங்க வரீங்க இங்க என்ன தான் நடக்குது.அவ வீட்ல இருக்கறதே இல்ல பகல்ல படிக்கறேன்னு காலேஜ்க்கு போய்டறா, சாயந்தரம் ஆனா ரெண்டு பேரும் ஜோடி போட்டுக்கிட்டு போய் ஊர் சுத்திட்டு வர்றீங்க இப்படி இருந்தா அவ எப்போ நம்ம குடும்ப பழக்க வழக்கத்தை கத்துக்கறது” என்று கேட்க,அவனோ “என்னமா நீங்க அது எல்லாம் இப்போவே சொல்லி கொடுத்தாதானா அதை எல்லாம் எப்போவேணா கத்துக்கலாம், எது முதல்ல அவசியமோ அதைதான் சீக்கிரம் கத்துக்கணும், பாருங்க தினமும் யாரவது ஒருத்தர் மதுவை காலேஜ்ல கொண்டு போய் விட்டுட்டு வர வேண்டி இருக்கு ஆனா இப்போ அவளே தனியா போய்டுவா அது மட்டும் இல்லாம ஏதாவது அவசரம்னா வீட்ல இருக்க ஒருத்தற்கு கார் ஓட்ட தெரியறது அவசியம் இல்லையா அதான் அவளுக்கு கார் ஓட்ட சொல்லித்தர போயிருந்தேன் இதுல என்ன பிரச்சனை” என்று கேட்க,

அவன் தாயோ “இதுல என்ன பிரச்சனையா வீட்டு மருமக ஞாயிற்றுக்கிழமை கூட எந்த வேலையும் பாக்காம புருஷன் கூட ஊர் சுத்திக்கிட்டு இருந்தா என்ன அர்த்தம்” என்றார் கோபமாக.

பிரபா, “என் கூட தானே சுத்துனா இதுல என்ன உங்களுக்கு பிராப்ளம் அவளுக்கு பிடிச்ச விஷயத்தை செய்யறது கணவனா என்னோட கடமை அதைதான் நான் செய்யறேன் இதுல உங்களுக்கு என்ன கஷ்டமா இருக்கு” என்று எதிர்க்கேள்வி கேட்டான்.

மகனின் பதிலை கேட்டு அதிர்ச்சியான அவன் தாய்,இதுவரை தன்னை எதிர்த்து பேசாத தன் மகன் இவ்வாறு பேசவும் கோபம் வர பெற்றவராய் அவன் அருகில் சென்றவர் “உன் பொண்டாட்டி வந்ததுக்கப்புறம் நீ ரொம்ப மாறிட்டடா”என்று கூற,

அவனோ “நான் மாறலம்மா, என்னோட பொண்டாட்டியோட விருப்பத்தை நிறைவேத்தி வைக்கறேன்.அவளோட சந்தோஷமும் எனக்கு முக்கியம். யாரும் என்னை மாத்த முடியாது அப்படி மாத்த நான் ஒன்னும் சின்ன குழந்தையும் இல்லை.இவ்வளவு பெரிய பிசினஸ் பண்றேன் எது எப்ப பண்ணனும்னு எனக்கு தெரியாதா, மத்தவங்க சொல்லிதான் அதை நான் செய்வேனா அவள முதல்ல மருமகளா பார்க்கறத விட்டுட்டு உங்க மகள் மாதிரி பாருங்க அப்ப இதெல்லாம் தப்பா தெரியாது” என்று கூறியவன் அங்கு திகைத்து நின்று கொண்டிருந்த தன் மனைவியை இழுத்துக் கொண்டு தன் அறைக்கு செல்ல அவளோ அவன் இழுத்த இழுப்பில் சுயம் பெற்றவள் அவன் பின்னாலேயே சென்றாள்.

அறைக்குள் வந்தவன் அவளிடம் “சாரி மதுமா அவங்க கொஞ்சம் அப்படித்தான் வயசானவங்க இல்லையா”என்று கூற அவனை தாவி அணைத்துக் கொண்டவள் “சாரி எல்லாம் சொல்லாதீங்க பரவால்லை அத்தைதானே அவங்ககிட்ட எனக்கு பதிலா நீங்கதான் பதில் சொல்லிடீங்களே” என்றவள் மேலும் “ரொம்ப தேங்க்ஸ்ங்க எனக்காக உங்க வீட்ல இருக்கவங்ககிட்ட பேசி இருக்கீங்க”என்று கூற, அவள் பேச்சை இடை நிறுத்தியவன் “உங்க வீடு இல்ல,நம்ம வீடுனு சொல்லிப் பழகு,அவங்களுக்கு சொன்னதுதான் உனக்கும் நம்ம வீடுன்ற எண்ணம் உனக்கும் இருக்கணும் அப்புறம் என்னோட அம்மாவ உன்னோட அம்மாவா பார்க்கணும்” என்று சொல்ல அவளும் தலையை ஆட்டி கேட்டு கொண்டாள்.அதன்பின் மது தன் ஸ்கூட்டியிலேயே தனியாக கல்லூரிக்கு செல்ல துவங்க தோழிகள் அனைவருக்குமே அது மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த சூழ்நிலையில்தான் ஜனா திருனேஷ் படிப்பை முடித்த உடனேயே கல்லூரியின் பொறுப்பை எடுத்துக் கொள்வான் என்று அறிந்தவராக,அவன் படிப்பு முடிவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பாகவே மற்ற ஷேர் ஹோல்டர்களை சந்தித்து தன் பெயரில் அவர்களுடைய ஷேரை வாங்கும் வேலையில் இறங்கினான்.

ஜனாவின் செயல்களை அவன் அறியாமல் தன் கண் பார்வையிலேயே வைத்திருந்த திருனேஷ் அர்ஜுனுடன் சேர்ந்து தங்களது படிப்பு முடிவதற்கு முன்பாகவே அனைத்து ஷேர்களையும் தன் பெயருக்கு மாற்றும் முயற்சியில் இறங்கினர்.

இங்கு மதுவை அவளது மாமியார் இருவரையும் கோவிலுக்கு சென்று வர சொல்ல அவளும் “சரி” என்று தலை ஆட்டியவள் பிரபாவிற்கு அழைத்து கூற அவனோ வேலை இருப்பதாக கூறி அவளை கிளம்பி ஹோட்டலுக்கு வருமாரும் அங்கிருந்து இருவரும் கோவிலுக்கு செல்லலாம் என்றும் கூற,

அவளும் தன் மாமியாரிடம் இதை தெரிவித்தவள் வண்டியை எடுத்துக் கொண்டு ஹோட்டலை நோக்கி வண்டியை செலுத்தினாள்.

ஹோட்டலுக்கு வந்தவளை வரவேற்ற பிரபா “கொஞ்ச நேரம் வெயிட் பண்ணு வேலை இருக்கு அதை முடிச்சுட்டு போகலாம்” என்று சொல்ல அவளும் “சரி” என்றுவிட்டு வேடிக்கை பார்க்க ஆரம்பிக்க அப்போது அவள் முன்னாள் வந்து வைக்கப்பட்டது ஒரு ஐஸ்கிரீம். அதை எடுத்து ரசித்தவள் உண்டவள் மேலும் நேரம் ஆகவும் போர் அடிப்பது போல் உணர்ந்தவள் பிரபாவை பார்க்க அவனோ தீவிரமாக லேப்பை பார்த்து ஏதோ செய்து கொண்டு இருந்தான்.

அவனை டிஸ்டப் செய்ய விரும்பாதவள்,ஹோட்டலை சுற்றி பார்த்துவிட்டு வரலாம் என்று வெளியே வந்து அப்படியே ஒரு சுற்று சுற்றிவிட்டு கடைசியில் கிச்சனுக்கு வந்து சேர்ந்தாள்.அங்கு உணவுகள் தயாரிப்பதை பார்த்துக் கொண்டிருந்தவளின் மனதில் புதிதாக ஒரு டிஸ் தோன்ற அதை செய்ய நினைத்தவள் அங்கிருந்த ஷெப்பிடம் தான் ஒரு புது டிஸ் செய்வதற்கான அனுமதியைக் கேட்க அவரும் முதலாளி கேட்டு மறுப்பதா என்று விலகி நின்றார்.

எளிமையாகவும் சுவையாகவும் முட்டையை வைத்து மசாலா எல்லாம் சேர்த்து வித்தியாசமா சுவையில் செய்து அங்கிருந்தவர்களிடம் டேஸ்ட் செய்ய கொடுக்க அவர்கள் அனைவரும் அதை சாப்பிட்டு பார்த்து பிரமாதமாக வந்திருப்பதாக பாராட்டி கொண்டிருக்க, அது மனைவியை தேடி வந்த பிரபாவின் காதிலும் விழுந்தது.

மனைவியின் திறமையை அறிந்து கொண்டவன் அவளை மனதிலேயே மெச்சி கொண்டு “சோ மேடமுக்கு புட் லைன்லதான் இன்ட்ரஸ்ட் அதிகமா இருக்கு”என்று மனதில் குறித்து கொண்டவன், பின் எதுவும் அறியாதவன் போல் உள்ளே சென்று அவளை அழைத்துக் கொண்டு கோவிலுக்குச் கிளம்பினான்.


கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பர்களே......

 

Sonythiru

Suthisha
26536

அத்தியாயம்-30

பூஜா அர்ஜுன் காதல் எப்போதும் போல் செல்ல பூஜாதான் முகம் வாடி சுற்றி கொண்டிருந்தாள். “ஏன்” என்று கேட்ட தோழிகளிடம் “அர்ஜுன் காலேஜ் முடிஞ்சு போய்ட்டா இப்போ மாதிரி மீட்பண்ண முடியாதுல்ல அதான் ஒரே கவலையா இருக்கு” என்று சொல்ல உடனே அவளை கேவலமாக பார்த்தவர்கள் “வேணும்னா உடனே அர்ஜுனை கல்யாணம்பண்ணிக்க சொல்லு அப்போ நீங்க ரெண்டு பேரும் பிரியவே வேண்டாம்” என்று அபி கிண்டலாக சொல்ல,

அதை கண்கள் மின்ன கேட்டு கொண்டிருந்தவள் “வாவ் சூப்பர் ஐடியா அவன் எக்ஸாம் முடிஞ்ச உடனே கல்யாணம் வைக்க சொல்லலாமா” என்று கேட்க, அவளை முறைத்த சூர்யா “அடியே ஏன்டி இப்படி உளறுற, நீ ஒரு போன் பன்னுனா அடுத்த நிமிஷம் அர்ஜுன் இங்க வந்து நிக்க போறான் இதுக்கு எதுக்குடி இவ்ளோ ஃபீல் பண்ணிட்டு இருக்க போடி போ போய் படிக்கிற வேலையை பாரு.நீ படிச்சு முடிச்ச அப்புறம்தான் மேரேஜ்” என்றாள்.

பூஜா,”என்னது படிச்சு முடிக்கிற வரைக்குமா”என்று வருத்தமாக கேட்க,மற்றவர்களும் அவளை கிண்டலாக பார்த்து சிரித்து “ஆமாம்” என்றனர்.

அபி இவர்களின் பேச்சில் கலந்து கொண்டாலும் ஆதியின் மேல் பயங்கர கோபத்தில் இருந்தாள்.ஆம், கோபம்தான் மது திருமணத்தின் போது இருவரும் சந்தித்து கொண்டதுதான்.அதன்பிறகு அவனிடம் இருந்து அபிக்கு ஒரு போனும் இல்லை மெசேஜும் இல்லை‘வேலை வேலை’என்று ஓடிக் கொண்டிருந்தான்.

ஆதி அவளுடன் பேச நினைத்தாலும்,வேறு ஏதாவது ஒரு வேலை வந்துவிட பேச முடியாமலேயே போனது. இதையெல்லாம் நினைத்துக்கொண்டிருந்த அபிக்கு அவன் மேல் ஆத்திரம் ஆத்திரமாகதான் வந்தது. இருந்தாலும் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் தோழிகளுடன் பேசிக்கொண்டிருந்தாள்.

பூஜா, “ஆமா ப்ரீத்தி எங்கடி” என்று கேட்க.

அபி, “அந்த கொடுமையை ஏன்டி கேட்கிறே நம்ம குரூப்லயே ஒன்னும் தெரியாத பச்ச புள்ளைன்னு நாம நெனைச்சுக்கிட்டு இருந்தவ, இப்போ ஊர்ல இருக்க எல்லா ஏமாற்று வேலையும் தெரிஞ்சு வச்சிருக்காடி, இன்னைக்கு காலேஜ கட் அடிச்சுட்டு காம்பவுண்டு சுவர் எகிறி குதிச்சு போயி எனக்கு மெசேஜ் பண்றா. ‘என் ஆள் கூட படத்துக்கு போறேன் எனக்காக வெயிட் பண்ணாதீங்கனு” என்றாள் கடுப்பாக.

சூர்யா அதிர்ந்தவளாக “பிரீத்தியாடி காம்பவுண்டு சுவர் ஏறி குதிச்சு போனா,அடிப்பாவி அவளை ஒன்னும் தெரியாத பச்சப்புள்ளைனு இல்லடி நான் நெனச்சேன்” என்று சொல்ல மற்ற மூவரும் அவளை கிண்டலாக பார்த்து “நாங்களும் அப்படித்தான் நினைச்சோம்,ஆனா அவ எப்ப லவ் பண்ண ஆரம்பிச்சாளோ அப்பவே அந்த அந்த பச்ச புள்ளை காணாம போயி ரவுடி புள்ள வெளிய வந்துருச்சு” என்று சொல்ல மதுவோ “ஆனாலும் இந்த வேலைய நம்ம ஊர்ல மொள்ளமாறித்தனம்னு சொல்லுவாங்க நாம ரொம்ப டீசன்ட்ங்கறதால ரவுடி புள்ளன்னு சொல்றோம்”என்றாள்.
பூஜா, “அதை விடுங்கடி இந்நேரம் அந்த அப்பாவி இவகிட்ட மாட்டிகிட்டு என்ன பாடு பட்டுட்டு இருக்காரோ,பாவம் அந்த ஜீவன்” என்று சொல்ல தோழிகளும் உச்சுக்கொட்டி ‘ஆமாம்’ என்பது போல் தலையை அசைத்து கொண்டிருந்தனர்.

அதே நேரம் இங்கு தியேட்டரில் ப்ரீத்தியை அழைத்து வந்த கிருஷ்ணா அவளுடன் இருக்கும் நேரத்தை சந்தோஷமாக செலவிட்டான்.அவளோ “பாப்கார்ன் வாங்கிவா சிக்கன் ரோல் வாங்கி வா” என்று அனுப்ப, அவனும் காத்திருந்த காதல் கை சேர்ந்த மகிழ்ச்சியில் சலிக்காமல் அவள் கேட்டதை எல்லாம் வாங்கி கொடுத்து அவளுடனான தனிமையையும் அவள் சாப்பிடும் அழகையும் ரசித்து கொண்டிருந்தான்.

ப்ரீத்தி கிருஷ்ணாவிடம் சொன்னது போல் அவள் படிப்பு முடியும் வரை தெவிட்ட தெவிட்ட காதலிக்க துவங்கினர்.

மாலை கல்லூரி முடிந்த பிறகு அனைவரும் வீட்டிற்கு கிளம்ப தயாராகினர். அப்போது பூஜாவும், மதுவும் அப்படியே நிற்பதை கவனித்த சூர்யா “என்னடி ஆச்சு கிளம்பலாமா” என்று வண்டி நிறுத்தும் இடத்தை நோக்கி சென்றாள்.

மதுவோ “இல்லடி இன்னைக்கு நான் வண்டி எடுத்துட்டு வரல,நீ கவனிக்கலையா ஈவ்னிங் வெளிய போகலாம்னு பிரபா சொன்னாரு அதனால நான் அவருக்கு வெயிட் பண்றேன்” என்று சொல்ல அடுத்ததாக சூர்யாவின் பார்வை பூஜாவிடம் திரும்பியது அவளோ “ஈஈஈஈ….”என்று சிரித்தவள் “இல்லடி ஈவ்னிங் பீச்க்கு போலாம்னு அர்ஜுன் சொன்னான்” என்க,அடுத்து அபியை பார்த்தவள் “என்னம்மா மாம்ஸ் வரேன்னு சொன்னாரா” என்று கேட்க அவளை முறைத்த அபி “என்னடி அவர மட்டும் நீ மாம்ஸ்னு சொல்ற, அண்ணானு சொல்லுடி”என்க,

சூர்யாவோ “முடியாது முடியாது முடியாது மாம்ஸ்தான் சொல்லுவேன்.ஆதி மாம்ஸ் மாம்ஸ் மாம்ஸ்” என்று வெறுப்பேத்த,பல்லை கடித்த அபி “அடியே உன்னை.,…” என்று அவளை அடிக்க வர நாக்கை நீட்டி அவளுக்கு அலவம் காட்டியவள் “என்னடி வர்றியா இல்லையா” என்று கேட்க,

அவளோ “ம்க்கும் அப்படியே வந்துட்டாலும் வானம் இடிஞ்சி கீழ விழுந்திடும். ஏற்கனவே நான் காண்டுல இருக்கேன்.அவருக்கிட்ட பேசியே ரொம்ப நாள் ஆகுது” என்று சோகமாக சொன்னவளை பார்த்த மது “உன்னோட அதிரடி அவருக்கு தெரில போல, அதான் சுத்தல்ல விடறாரு” என்றாள்.

அபியும் அவள் சொல்வதைக் கேட்டு “இருக்குமோ” என்று யோசித்தவள் பின் “எவ்ளோவோ பண்ணிட்டோம் இதை பண்ண மாட்டோம்மா பண்ணுவோம் பண்ணுவோம்”என்று யோசித்தவளாக ”ஓகே நீங்க உங்க ஆள பாருங்க நாங்க கிளம்பறோம்” என்றுவிட்டு அபியும், சூர்யாவும் வீடு நோக்கி சென்றனர்.

மதுவும், பூஜாவும் மரத்தடியில் அமர்ந்து அவரவர் இணைக்காக காத்திருந்தனர்.சிறிது நேரத்தில் அர்ஜுன் அங்கு வந்துவிட மதுவை தனியாக விட்டு செல்ல மனம் இல்லாத பூஜா, அர்ஜுனிடம் “கொஞ்சம் வெய்ட்பண்ணு மதுவோட ஹஸ்பண்ட் வந்தவுடனே நாமும் கிளம்பலாம்” என்றாள்.

மது, “ஹேய் அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் நீங்க கிளம்புங்க இங்க பக்கத்துல வந்துட்டேன்னு மெசேஜ் பண்ணுனாரு அது மட்டும் இல்லாம நம்ம காலேஜ்ல என்ன பயம் நீங்க போங்க”என்க, அவளை முறைத்த பூஜா “நீ எவ்ளோ பெரிய தைரியசாலினு எனக்கு தெரியும் வாய மூடிட்டு உட்காரு, எப்போ போகணும்னு எனக்கு தெரியும்” என்க அதன் பின் மது வாயை திறக்கவில்லை.

சிறிது நேரத்திலேயே பிரபா வந்துவிட அவனுடன் சாம்பிராதாயமாக,ஒரு சில வார்த்தைகள் பேசிய பூஜா அவர்கள் கிளம்பும் சமயம் “ப்ரோ சத்தியம் சத்தியம் மறந்தாறாதீங்க”என்று சொல்லிய பிறகே அர்ஜுனுடன் சென்றாள்.

பிரபா அவளை பார்த்து சிரித்தவன் தலையை மட்டும் அசைத்து விடை பெற்று மதுவிடம் எங்கு செல்கிறோம் என்பதை கூட சொல்லாமல் அழைத்து சென்றான். எங்கு போகிறோம் என்று தெரியாமல் விழித்த மது சிறிது நேரம் பொறுமையாக இருந்தவள் அதன் பின்பு பொறுமையை கைவிட்டவாளாக “எங்கங்க போறோம்” என்று தோண தோணத்து கொண்டே இருந்தாள்.

பிரபா, “போனா உனக்கு தானாவே தெரிஞ்சுட போகுது அதுக்குள்ள என்ன அவசரம்”என்று கூறியவன் அவளை ஒரு ஹோட்டலிற்கு அழைத்துச் சென்றான்.மது ஒன்றும் புரியாமல் அவன் பின்னோடு சென்றாள்.

உள்ளே சென்ற பிரபா அங்கிருந்த ஒருவரிடம் கைகுலுக்கி ஏதோ கூற,அவரும் மதுவின் புறம் பார்வையை திருப்பியவர் “சரி” என்று தலையசைத்து பிரபாவிடம் பேசிக்கொண்டிருக்க .அவளோ இருவரையும் குழப்பத்தோடு பார்த்து கொண்டிருந்தாள்.

அந்த நபருடன் பேசி முடித்தவன் மனைவியை அருகில் வருமாறு கண் அசைக்க, அவர்கள் அருகில் சென்றவளை மென் சிரிப்புடன் பார்த்த பிரபா “இவர் செப் கார்த்திக் இன்னைல இருந்து இவருதான் உனக்கு குக்கிங்கபத்தி டீச் பண்ண போறாரு. இவருகிட்ட எல்லாத்தையும் கத்துட்டு உன்னோட டேலண்ட்ட வளத்துக்கோ,ஒரு ஹோட்டல்ல மேனேஜ் பண்ணறதிலிருந்து குக்கிங் வரைக்கும் எல்லாமே கற்று தருவார் வாரத்துல ரெண்டு நாள்தான் கிளாஸ் அதுவும் ரெண்டு மணி நேரம்தான்”
என்று சொல்ல,

அவன் சொல்வதை கேட்க, கேட்க அவளுக்கு கண்கள் கலங்க ஆரம்பித்தது, அவனையே பார்த்திருந்தவள் மனதில் “தானக்குள் இருக்கும் திறமையை கண்டு அதை வளர்க்க நினைக்கும் கணவனை பெருமையாகவும் காதலுடனும் பார்த்தவள் மனம் நிறைந்த மகிழ்ச்சியுடன் உதடுகள் துடிக்க “தேங்க்ஸ்” என்றாள்.

முகம் முழுவதும் பூரிப்புடன் நன்றி சொன்ன தன்னவளை அணைத்துக் கொண்டவன் “என்னோட வைப்க்கு நான் செய்யறதுக்கு நீ தேங்க்ஸ் சொல்லுவியா ” என்றவனின் கேள்வியில்,அவளோ மனம் நெகிழ்ந்து போனாள்.

மாலை வீட்டிற்கு வந்தவுடன் ரொம்ப “தேங்க்ஸ் கரு டியர்”என்று கூற, அவனோ புரியாமல் அவளை பார்த்து “கரு வா” என்க, “ஆம்” என்று தலையாட்டியவள்,பிரபாகரன்ங்கற பேர எல்லாரும் பிரபா கூப்பிடறாங்க, நானும் அது மாதிரி கூப்பிட முடியாதுல்ல அதான் கரன் சுருங்கி கரு டியர் ஆகிடுச்சு” என்று கூறியபடி அவன் அருகில் செல்ல,அவள் மறுபடியும் தன்னை கட்டிப் பிடிக்க தான் வருகிறாள் என்று கண்டு கொண்டவன் “போதும் போதும் நீ தள்ளியே இரு, எப்போ பாரு கட்டிப்பிடிச்சே தேங்க்ஸ் சொல்ற, தேங்க்ஸ்ங்கறத அப்படியே அங்கேயே நின்னு சொன்னால் போதும்.கட்டிப்பிடிச்சுதான் சொல்லனும்னு அவசியம் இல்லை” என்றான்.

மதுவோ முகத்தை சுளித்தவாறு “ரொம்ப பண்ணாதீங்க ஏதோ புருஷன் நமக்கு நல்லது பண்ணி இருக்காரேங்கற சந்தோஷத்துல கட்டிப்பிடிச்சா அதுக்கு போய் இப்படி சொல்றீங்க”என்று முறுக்கிக் கொள்ள அவனோ அவள் முகத்தை கைகளில் தாங்கி கண்களை பார்த்தவாரு “இங்க பாரு மதுமா எனக்கும் ஃபீலிங்ஸ் இருக்கு,ஆனா உன் படிப்பு கெடக்கூடாதுங்கற ஒரே காரணத்துக்காகதான் தள்ளி நிற்கிறேன்.கொஞ்சம் புரிஞ்சுக்கோமா நானும் இருக்க சாதாரண மனுஷன்தான் அதான் நீ பக்கத்துல வந்தாலே டெம்ப்ட் ஆகுது”என்று சொல்ல,

ஒரு நொடி அவன் கண்களையே பார்த்தவள் சட்டென்று அவன் எதிர்பார்க்கா நேரம் தன் இதழ்களை அவன் இதழோடு சேர்க்க அப்படியே அவன் திகைத்து நின்றுவிட்டான். உடனடியாக அவனிடமிருந்து பிரிந்தவள் “இந்த மாதிரி முத்தம் கொடுத்தா எல்லாம் ஒன்னும் படிப்பு கெட்டு போகாது அதனால அப்பப்ப இப்படி கொடுத்து பழகுங்கள் வரலைன்னா சொல்லுங்க நான் மறுபடி இன்னொரு தடவை சொல்லி தரேன்” என்றவள் அவன் அடுத்த வார்த்தை பேசுவதற்குள் அங்கிருந்து பறந்து விட்டாள்.

அவனும் சிறு புன்னகையோடு தன் மனைவியின் குறும்பை ரசித்தவன் அடுத்து அவளுக்கு என்ன செய்ய வேண்டும் என்று யோசிக்க ஆரம்பித்தான்.

இங்கு வீட்டுக்கு வந்த அபி மனதுள் ஆதியை வறுத்து எடுத்து கொண்டு இருந்தாள். அப்போது உள்ளே வந்த அவளது தந்தை அரவிந்த் மகள் முகத்தை தூக்கி வைத்து உட்கார்ந்து இருப்பதை பார்த்து அவள் பக்கத்தில் அமர்ந்தவர் “என்னமா என்ன ஆச்சு ஏன் டல்லா இருக்க” என்று கேட்க, அப்போதுதான் தந்தையை கவனித்தவளாக அவர் தோளில் சாய்ந்து கொண்டவள் “ஒன்னும் இல்லப்பா” என்றாள்.

அவரோ மர்ம சிரிப்புடன் “என்னம்மா மாப்பிள்ள போன் பண்ணலையா” என்று கேட்க, “அப்பா” என்றவள் திகைத்து விழிக்க,மகளின் தலையை செல்லமாக தடவியவர் “எனக்கு தெரியும்மா,பிறந்ததுல இருந்து உன்னை பார்க்கறேன் உன்னோட ஒவ்வொரு அசைவுக்கும் எனக்கு காரணம் தெரியும்.உன்னோட விருப்பம் தான் எங்களோட விருப்பம்னு தெரியாதாடா,அப்புறம் எதுக்கு இவ்ளோ ஃபீல் பண்ணிட்டு இருக்க.என்ன பிரச்சனை சொல்லு”என்றார்.

அபி, “தேங்க் யூப்பா” என்றவள் “அவர் சரியான பிராடுப்பா லவ் சொல்ற வரைக்கும் பின்னாடியே சுத்தறது, மிரட்டி வெளிய கூட்டி போறதுனு இருந்தாரு லவ் பண்ண ஆரம்பிச்சதுக்கப்புறம் ஒரு போன் இல்ல ஒரு மெசேஜ் இல்ல வேலை வேலைனு ஓடிட்டே இருக்காருப்பா, என்னை கண்டுக்கறதே இல்லை” என்றாள் கோபமாக.

மகள் சொல்வதை கேட்டவர் “அப்படியா இது சரி இல்லையே, சக்ரவர்த்தி சார் பையனை இப்படி பொறுப்பில்லாம வளர்த்திருக்காரே, என்ன பண்ணலாம்”என்று யோசனையாக இருந்தவர் புது ஐடியா கிடைத்த சந்தோஷத்தோடு “இப்படி பண்ணுனா என்னமா” என்று கேட்க,அவளும் ஆர்வமாக தந்தையை பார்த்தவள் “எப்படிப்பா” என்க,
அரவிந்த், “அவர் வீட்டுக்கே மாப்பிள்ளைய அவர் வீட்டுக்கே போய் மீட் பண்ணி, இந்த மாதிரி இந்த மாதிரி மாப்பிள்ளை.ஏன் என் மகளுக்கு இந்த மாதிரி இந்த மாதிரி மீட் பண்ண மாட்டேங்கறீங்க.இந்த மாதிரி இந்த மாதிரி போன் பண்ண மாட்டேங்கறீங்கனு நேரிலேயே பார்த்து பேசிட்டு வந்தா என்ன, நீ என்னம்மா சொல்ற” என்றவர் சொல்லி வாய் மூடுமுன் அவர்கள் காலடியில் விழுந்தது ஒரு கரண்டி வேறு யாருமில்லை அபியின் அம்மாதான்.
பிருந்தா, “என்ன நினைச்சுட்டு இருக்கீங்க.அவதான் ஏதோ புலம்பிகிட்டு இருக்கானா நீங்களும் அவளுக்கு சப்போர்ட் பண்ணி பேசிகிட்டு இருக்கீங்க. முதல் முதல்லா மாப்பிள்ள வீட்டுக்காரங்கதான் இங்க வரனும்.நாம அங்க போக கூடாது. அவரு இங்க வரட்டும் அப்புறம் நீங்க போங்க அதுக்கு முன்னாடி அப்பாவும் பொண்ணும் ஏதாவது பிளான் பண்ணுனீங்கன்னு தெரிஞ்சுது நடக்கறதே வேற”என்று சொல்ல அபியின் முகம் வாடிப்போனது.

மகளின் முக வாட்டத்தை பார்க்க சகிக்காத அரவிந்த் மனைவியிடம் “சரி சரி நாங்க மாப்பிள்ளை வீட்டுக்கு போகல புள்ள கவலையா தெரியுது பக்கத்துல இருக்க பார்க் வரைக்கும் போயிட்டு வரோம்”என்று சொல்ல,

கணவன் சொல்வதை கேட்டு அவர்களை சந்தேகமாக பார்த்தவர் “சீக்கிரம் போயிட்டு வாங்க” என்று விட்டு மீண்டும் தன் வேலையை பார்க்க ஆரம்பித்தார்.

அபியும் அவள் தந்தையும் வண்டியை எடுத்துக்கொண்டு நேராக ஆதியின் வீட்டிற்குச் செல்ல அங்கு தோட்டத்தில் நடந்து கொண்டிருந்தார் ராமச்சந்திரன் சக்கரவர்த்தி. இவர்களைப் பார்த்தவுடன் முகம் மலர வரவேற்றவர், அவர்களை அமர செய்து காபி கொடுத்து உபசரித்து சாதாரணமாக பேசிக் கொண்டிருந்தாலும் இவர்கள் என்ன விஷயமாக வந்திருப்பார்கள் என்று யோசித்து கொண்டிருந்தார்.

அரவிந்தும் ராமச்சந்திரனும் பேசிகொண்டிருந்தாலும் அபியின் கண்கள் ஆதியை தேடி வீடு முழுதும் சுற்றி வந்தது.இதை ராமச்சந்திரன் உணர்ந்து இருந்தாலும் எதுவும் அறியாதவர் போல் அபியின் தந்தையிடம் “என்ன கமிஷனர் சார் என்ன திடீர்னு இந்த பக்கம் வந்து இருக்கீங்க” என்றார்.

அவரோ தன் மீசையை முறுக்கியவரே “உங்க பையன் மேல ஒரு கம்ப்ளைன்ட் வந்து இருக்கு அதை விசாரிக்கதான் வந்துருக்கேன்” என்று சொல்ல,

உடனே ஆதியின் தந்தை என்னவாக இருக்கும் என்ற யோசனையான முகத்துடன் “என்ன கம்பிளைன் சார்” என்று சொல்ல அவரோ இலகுவான குரலில் “என் பொண்ண லவ் பண்ணு லவ் பண்ணுனு பின்னாடியே சுத்திட்டு லவ்க்கு ஓகே சொன்னா அப்புறம் ஒரு போன் பண்றது இல்ல ஒரு மெசேஜ் பண்றது இல்ல அவ்வளவு ஏன் சுத்தமா கண்டுக்கறதே இல்லனு கம்பிளைன்ட் வந்து இருக்கு” என்று சொல்ல,

இதை கேட்ட ராமச்சந்திரன் கடகடவென சிரித்தவர் “என்ன சார் பண்றது நானும் பல தடவை சொல்லிட்டேன் இவன் கேட்கவே மாட்டேன்ங்கறான் வேலை வேலைனு ஓடிட்டே இருக்கான்.அந்த கம்ப்ளைட்டோட என்னோட கம்ப்ளைனையும் சேர்த்து எழுதி அவனை புடிச்சு உள்ள போட்டு நல்லா கவனிங்க சார் அப்போவாவது திருந்தரானானு பார்க்கலாம்” என்று அவர் மாடியை பார்த்து “ஆதி ஆதி” என்று சத்தமாக கூப்பிட, அவனோ “முக்கியமான வேலை போயிட்டு இருக்குப்பா எதுவா இருந்தாலும் நைட் சாப்பிடும்போது பேசிக்கலாம்” என்றான் அங்கிருந்தாவாறே.

ராமச்சந்திரன்,”பாத்தீங்களா சார் துறையால இங்க வந்து கூட பேச முடியாதாம், அவரு அவ்வளவு பிஸியா இருக்காறாம். நானும் இந்த வீட்ல இருக்கேன்னுதான் பேரு ஆனா என்கிட்ட கூட ரெண்டு வார்த்த நின்னு பேச மாட்டான்” என்று சொல்ல,

கோபமான அபி “மறுபடியும் கூப்பிடுங்க அங்கிள்” என்று பல்லை கடித்தவாறு சொல்ல மீண்டும் அவர் “ஆதி இப்ப நீ வரலைன்னா உன் நிலைமை ரொம்ப கஷ்டமாக போய்டும் ஒழுங்கா கீழ வா” என்றார்.

இதை கேட்ட ஆதி எரிச்சலுடன் “என்னப்பா நீங்க இது எவளோ முக்கியமான வேலை தெரியுமா பாதில விட்டுட்டு வந்தா காண்பியூஸ் ஆகிடும்” என்று முணு முணுத்து கொண்டே வந்தவன் அங்கு அமர்ந்திருந்தவர்களை கண்டு ஆச்சர்யம் அடைந்தான்.

ஆதி, “ஹாய் அங்கிள் வாட் எ பிளாசன்ட் சர்ப்ரைஸ் எப்படி இருக்கீங்க எப்போ வந்தீங்க” என்று அபியை கண்டுகொள்ளாமல் அவரிடமே பேசிக்கொண்டிருக்க இங்க அபியோ முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க அமர்ந்திருந்தாள்.

அரவிந்தோ ஆதியின் கேள்விக்கு பதில் சொன்னாலும் “மருமகனே உங்க மேல ஏற்கனவே கம்ப்ளைண்ட் அதிகமா இருக்கு இதுல இங்க வந்த அப்புறமும் அவளைப் பார்க்காமல் பேசாமல் என்னிடமே பேசிட்டு இருக்கீங்களே, உங்க க்ரைம் ரேட் ஏறிக்கிட்டே போகுதே” என்று நினைத்துக் கொண்டிருந்தார்.

அவரிடம் பேசி முடித்த பின்புதான் அபியும் புறம் திரும்பி பார்மலாக பேசுவதுபோல “ஹாய்” என்று சொல்ல ராமச்சந்திரனோ “எப்பா சாமி இது உலக மகா நடிப்புடா” என்று நினைக்க அரவிந்தோ வந்த சிரிப்பை கட்டுப்படுத்திக்கொண்டு அமர்ந்திருந்தார்.

அபியோ அவன் சாம்பிரதாயமாக பேசவும் கடுப்பானவள் “பொறுத்தது போதும் பொங்கி எழு அபி” என்பது போல் கோபமாக எழுந்தவள் அவன் அருகில் நெருங்கி “என்னடா பெரிய இவனா நீ,லவ் பண்றேன் லவ் பன்றேன்னு பின்னாடியே சுத்திட்டு அதுக்கு அப்புறம் ஒரு போன் பண்ணி பேசுனியாவது பேசுனியா அட்லீஸ்ட் ஒரு மெசேஜ்ஜாவது பண்ணுனியா ஒரு குட்மார்னிங் குட் நைட்கூட இல்ல. உனக்கு நாம லவ் பன்றோம்ங்கறதாவது நியாபகம் இருக்கா. நான்தான் உன்ன நினைச்சுட்டே இருக்கேன், ஆனா நீ என் நியாபகமே இல்லாம எப்போ பாரு வேலை வேலைனு போயிட்டு இருக்க அதுக்கு நீ கம்பெனியவே லவ் பண்ணிருக்கலாமே எதுக்கு என் பின்னாடி வந்த” என்று அவனிடம் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க கோபமாக கேட்டாள்.

அவளின் கோபத்தில் தன் மேல் அவளுக்கு இருக்கும் கோபத்தை புரிந்து கொண்ட ஆதி “எதுக்கும்மா இவ்ளோ கோபம் திடீர்னு கொஞ்சம் வேலைல மாட்டிக்கிட்டேன் அதான் மெசேஜ் பண்ண முடியல இதுக்காக உன்னை மறந்துட்டேன்னு அர்த்தமா நீ என்னோட உயிர் உன்னை எப்படி நான் மறப்பேன்” என்று அவளை அனைத்தவரே அவன் சமாதானப்படுத்த அவன் அருகாமையில் ஓரளவு சமாதானமானவள் அப்போதுதான் தந்தையின் நினைவு வந்தவளாக அவனைவிட்டு விலகி திரும்ப இவர்கள் இருவரும் பேச ஆராம்பிக்கும்போதே இருவரின் தந்தையும் வெளி நடப்பு செய்திருந்தனர்.

இருவரும் தங்களை மறந்து பேசி கொண்டிருக்க நேரம் ஆவதை உணர்ந்த அபி “ஓகே ஆதி டைம் ஆகுது அம்மாட்ட பார்க்குக்கு போறோம்னுதான் சொல்லிட்டு வந்தோம் நாங்க கிளம்பறோம்” என்றவளை தடுத்தவன் “போகணுமா இங்கயே இருந்துறேன்” என்க, அவளோ அவனை செல்லமாக முறைத்தவள் “ரொம்பதான் ஒன்னு கண்டுக்கறதே இல்லை, அப்படி இல்லனா ஓவர்ரா உருகறது” என்றவள் கிளம்பி வெளியே சென்றாள்.

அவள் செல்வதையே கண்ணில் நிறைந்த காதலுடன் பார்த்திருந்தவன் “ஹேய் அபி நில்லு அப்படியே காபி ஷாப் போய் காபி குடிச்சுட்டு வரலாம்” என்று அவளுடன் இருக்கும் நேரத்தை அதிகரிக்க நினைத்தவனாக சொல்ல, அவளோ கெத்தாக அவனை பார்த்தவள் “ஹல்லோ என்ன நான் சொன்ன அப்புறம்தான் கூட்டி போகணும்னு தோணுதா இவ்வளவு நாள் கண்டுக்காம இருந்தீங்களா அப்புடியே இருங்க நான் போறேன்” என்றவளின் கரம் பற்றி தடுத்தவன் “ப்ளீஸ் அபி வேலைல மாட்டிக்கிட்டேன்னு சொல்றேன்ல புரிஞ்சுக்கோடா” என்று சொல்ல

அவனுக்கு பாவம் பார்த்து சொல்பவள் போல் சரி சரி நீங்க ரொம்ப கெஞ்சுறதால வர்றேன் ஆனா இன்னைக்கு இல்ல, நாளைக்கு என்ன தேடி வந்து கூட்டி போங்க” என்றாள்.

அவனும் அவள் மனநிலை புரிந்தவனாக “ஓகே நாளைக்கு ஈவினிங் உன்னை அவுட்டிங் கூட்டி போறேன் காலேஜ்லயே வெய்ட் பண்ணு நானே வந்து கூட்டிட்டு போறேன்” என்று சொல்ல அபி மகிழ்ந்தாலும் அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல் கெத்தாக முகத்தை வைத்துக்கொண்டவள் “ஓகே ஓகே பாக்கலாம் பாய்”என்று விட்டு சென்றாள்.


கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பர்களே.......


 
Last edited:

Aadhiraa Ram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம்-31

அடுத்த நாள் காலை வேகமாக கல்லூரிக்கு கிளம்பிய அபி தோழிகளுடன் பேசி சிரித்து கொண்டு இருந்தாலும், மாலை எப்போது வரும் என்று ஆதியுடன் நேரம் கழிக்க போகும் ஆர்வத்தில் நிமிடத்திற்கு ஒரு முறை மணியை பார்த்து கொண்டிருந்தாள்.

ஒருவாறு மாலை கல்லூரி முடிய தன் தோழிகளிடம் சொல்லிவிட்டு வேகமாக வெளியில் வந்தவள் ஆதித்யாவுக்காக காத்திருக்க, அப்போது அந்த வளாகத்திற்குள் நுழைந்தது ஒரு ரோல்ஸ்ராய்ஸ் கார். அனைவரின் பார்வையும் அந்த காரை நோக்கி திரும்ப, அபி நின்றிருந்த இடத்தின் அருகில் தன் காரை லாவகமாக நிறுத்தியவன், கதவை திறந்து கொண்டு வெளியில் வர,
அங்கிருந்த பல பெண்களின் பார்வை அவன் மீதுதான் இருந்தது.

கல்லூரியின் வாயில் அருகே நின்ற
அபியும் தன்னவனின் அழகை மெய் மறந்து ரசித்துகொண்டிருக்க, அவனோ தன் கூலர்ஸை கழட்டியவன் சுற்றி பார்வையை சுழல விட, தன்னையே மெய்மறந்து பார்த்துக்கொண்டிருந்த தன்னவளை கண்டுகொண்டான். சிறு புன்னகையோடு அவளை நோக்கி அவன் வர, அவளும் பதிலுக்கு புன்னகைத்தவள் அப்போதுதான் சுற்றி இருந்த மற்ற பெண்கள் அனைவரும் தன்னவனையே பார்த்து ரசித்து கொண்டிருப்பதை கவனித்தாள். அவர்களது பார்வையை கண்டு கடுப்பானவள் “இவனை யார் இவ்வளவு அழகாக பிறக்க சொன்னதோ தெரியல எல்லார் கண்ணும் இவன் மேல தான் இருக்கு” என்று முணு முணுத்து கொண்டே அவன் அருகில் சென்றாள்.
ஆதி அவளை 'வா' அழைத்தவன் மறுபக்கம் வந்து காரின் கதவை திறந்து விட,ஒரு ராணியின் தோரணையில் உள்ளே ஏறி அமர்ந்தவள் அங்கு அவனை ரசித்துக்கொண்டிருந்த அனைவரையும் நக்கலாக பார்த்து விட்டு திரும்பிக் கொள்ள அவனும் மறு பக்கம் சென்று அமர்ந்தவன் காரை இயக்கலானான்.

எங்கு போகிறோம் என்று சொல்லாமல் அவனும், எங்கு செல்கிறோம் என்று கேட்காமல் மற்றவரின் அருகாமையை ரசித்தபடியே வர, அவளும் சற்று நேரம் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டு வந்தவள் எப்பொழுதும் செல்லும் காபிடே கடையை அவன் தாண்டிய பிறகே எங்கு போகிறோம் என்ற கேள்வி மனதில் எழ அவனிடன் “ஆதி.. எங்க கூட்டிட்டு போறீங்க. காபி ஷாப் இங்க இருக்கே”என்று கூற, அவனோ “உனக்கு வேற சர்ப்ரைஸ் இருக்கு.. நான் ஆல்ரெடி என் மாமனார் கிட்ட நீ வர லேட் ஆகும்னு சொல்லிட்டேன் சோ, நோ பிராப்ளம் பேசாம வா”என்றவன் சற்று தொலைவில் இருந்த ஹார்லி டேவிட்சன் கடைக்கு அழைத்துச் சென்றான்.
அபி ஆச்சர்யமாக அவனை பார்க்க அவனோ அதை கண்டு கொள்ளாமல் உள்ளே அழைத்து சென்று அங்கிருந்த விற்பனையாளரிடம் ஏதோ கூற அவரும் உள்ளே சென்றவர் வரும்போது ஒரு சாவியை கொண்டு வந்து அவளிடம் நீட்ட அவளோ புரியாமல் அவனை பார்த்தாள்.

ஆதி கண்ணசைவில் வாங்கிக்கொள் என்று கூற,குழப்பத்தோடு அதை வாங்கியவளை வெளியில் அழைத்து வந்தவன் அங்கு புதிதாக நின்று கொண்டிருந்த புத்தம் புதிய ஹார்லி டேவிட்சன் இருசக்கர வாகனத்தின் அருகில் அழைத்து வந்தான். அவள் மேலும் ஆச்சரியமாக அவனையே பார்த்திருக்க, அவளிடம் இருந்த சாவியை வாங்கியவன் பைக்கில் ஏறி, பின்னாடி அவளை அமர சொல்லி சைகை செய்ய, அவளும் சிறு தயக்கத்தோடு பின்னே ஏறி அமர்ந்தாள்.

அபி பைக்கில் ஏறிய மறு நிமிடம் அவர்களது வண்டி காற்றை கிழித்துக் கொண்டு ஈசிஆர் ரோட்டில் செல்ல துவங்கியது.கூந்தல் காற்றில் பார்க்க தன்னவனுடனான பயணத்தை ரசித்தவள் அவன் காதருகில் குனிந்து “என்ன திடீர்னு டூவீலர்” என்று கேட்க அவன் தோளில் இருந்த அவளது கையை எடுத்து தன் இடையில் வைத்தவன் “ஆக்சுவலி எனக்கு ரொம்ப நாளா ஒரு ஆசை. அது என்னனா எனக்குனு ஒரு லவ்வர் இல்ல வைஃப் வந்ததுக்கு அப்புறம் அவ கூட லாங் டிரைவ் போகணும்னு,அதுவும் டூவீலர்ல. இவ்வளவு நாள் ஆள் கிடைக்காம இருந்தேன் ஆனா இப்போ தான் நீ இருக்கியே.. அதனாலதான் உடனடியாக ஆர்டர் கொடுத்து வாங்கிட்டேன்” என்று கூற, அவள் மனதில் சந்தோஷ மின்னல் வெட்டி சென்றது.

உடனே அவனை இறுக அணைத்துக் கொண்டவள் அவன் முதுகில் சாய்ந்து கொள்ள அவனும் தன் காதலியின் அருகாமையில் மனம் மயங்கி பின் பாதையில் கவனத்தைச் செலுத்த துவங்கினான். அடுத்த அரைமணி நேரத்தில் அவர்களது வாகனம் ஈசிஆரில் உள்ள தாஜ் ஹோட்டல் வந்து சேர்ந்தது.

அவளோ அவனை புருவம் உயர்த்தி “இங்க எதுக்கு” என்பது போல் பார்க்க, அவனோ சிறு புன்னகையோடு வண்டியை நிறுத்திவிட்டு சாவியை கையில் சுழற்றியபடி “உள்ள வா” என்று கூறியவாறு முன்னே செல்ல, அபியோ “இங்க எதுக்கு போறோம்” என்றாள்.

ஆதி, “இங்க தான் உனக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு” சொல்லி செல்ல, அவளும் அது என்னவாக இருக்கும் என்று யோசித்தபடியே அவனோடு உள்ளே நுழைந்தாள்.

உள்ளே அழைத்து சென்றவன் அங்கிருந்த பணியாளர் ஒருவரிடம் ஏதோ பேசிவிட்டு அந்த ஹோட்டலுக்கான தனிப்பட்ட பீச்சுக்கு செல்ல அவளும் அவன் பின்னே நடந்து சென்றாள். கடற்கரை மணலில் தன்னவளுடன் கைகோர்த்துக்கொண்டு நடக்க அந்த அனுபவமே அவனுக்கு புதிதாக இருந்தது.

பளிங்கு போல் மின்னும் கடல், சிலுசிலு காற்று அருகில் உயிராக காதலிக்கும் தன்னவள் அவர்கள் இருவருக்கும் மட்டுமேயான அந்த தனிமை இதற்குமேல் அவனுக்கு என்ன வேண்டும் மனமகிழ்வோடு நடந்தவன் கடற்கரை அருகே வந்தவுடன் அவளை அமர்த்தி விட்டு தானும் அருகே அமர்ந்து கடலை ரசித்து பார்த்துக் கொண்டிருந்தான். அபியும் அந்த ஏகாந்த நிலையை மிகவும் விரும்பி அனுபவித்தாள்.

சற்று நேரத்திற்கு பின் ஆதி, “அபி யூ நோ வாட் இப்போதைக்கு இந்த உலகத்துல ரொம்ப ஹேப்பியா இருக்க,ஒரே ஆள் நான்தான். என்னோட லைஃப் ஒரு மிஷின் மாதிரி பிஸ்னஸ் மீட்டிங்னு போய் கிட்டே இருந்தது. நீ எப்ப என் லைஃப்ல வந்தியோ அப்போதிலிருந்து என்னால ஹேப்பினஸ பீல் பண்ண முடியுது. என்னோட அம்மா இறந்ததுக்கு அப்புறம் நான் எந்த பொண்ணு கிட்டயும் இவ்வளவு க்ளோசா இருந்ததில்லை.யூ ஆர் த ஒன் ஆப்டர் மை மாம். ஐ ஃபீல் கம்ப்ளீட் நவ்.. வொர்க் வொர்க்னு அதையே பார்த்துகிட்டு இருந்த என்ன நீ மொத்தமா உன் பக்கம் இழுத்துட்ட. தேங்க்ஸ்.. தேங்க்ஸ் பார் எவ்ரிதிங்” என்க,

அபி சிறு புன்னகையோடு அவன் கைகளை பற்றிக்கொண்டாள்.அதே நேரத்தில் அங்கிருந்த ஒரு பணியாளர் அவன் அருகில் வந்து “சார் ரெடி” என்றுவிட்டு சென்றுவிட, உடனே வேகமாக எழுந்தவன் “கம் லெட்ஸ் கோ” என்று கூற,அவள் “மறுபடியும் எங்கே” என்று கேட்டாள்.

“வா சொல்றேன்” என்றவன் அங்கிருந்து சற்று தொலைவில் இருந்த ஒரு இடத்திற்கு அழைத்து செல்ல அங்கு அவள் கண்ட காட்சியில் திகைத்து விழி விரித்து நின்றாள்.

ஆம்,அங்கு கேண்டில் லைட் டின்னர்காக ஒரு டேபிள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.அந்த டேபிளின் அருகிலேயே ஒரு பெரிய பேனர் போன்ற அமைப்பில் அட்டையில் இதய வடிவம் வரையப்பட்டு ரோஜா மலர்களால் அலங்கரிக்கப்பட்டு அதன் நடுவில் “வில் யு மேரி மீ” என்ற எழுத்து இருக்க அவள் திகைத்த தோற்றம் மாறாமல் அப்படியே நின்றாள்.

அபி அப்படியே நிற்கவும் அவள் முன் வந்து நின்றவன் “ஜஸ்ட் மேக் மி கம்ப்ளீட்” என்று கூறி தன் கையை நீட்ட அவளோ அப்போதுதான் தன்னிலை உணர்ந்தவள் கண்ணீர் துளிர்விட தாவி அவனை அணைத்துக் கொண்டவள் “வி ஆர் கம்ப்ளீட்” என்று கூற அவனும் புன்னகையோடு அவளை இறுக அணைத்துக் கொண்டான்.அதன்பின் அவர்களுக்கான நேரம் அழகாகவும் காதலுடனும் சென்றது.

அடுத்த நாள் தோழிகளுடன் வெளியே எண்ணிய மது கணவனிடம் அதைப்பற்றி கேட்க நினைத்தவள், “கரன் இன்னைக்கு ஈவ்னிங் நான் என் பிரண்டுங்களோட வெளியில்
போகட்டுமா” என்று கேட்க, அவனும் “சரி போய்ட்டு வா ஆனா சீக்கிரம் வந்துடு” என்று கூற அவளும் “சரி” என்று சந்தோஷமாக தலையசைத்தவள் மற்ற நால்வரையும் காண சென்று விட்டாள்.

ஏற்கனவே அவர்களை சூர்யாவின் வீட்டிற்கு வர சொல்லவும், மது செல்லும் நேரம் அனைவரும் அங்கு சரியாக வந்திருந்தனர். கடைசியாக வந்தவளை கண்டு முறைத்த பூஜா “எதுக்குடி எல்லாரையும் உடனே வரச் சொன்ன” என்று கேட்க அவளோ அவர்களிடம் சந்தோஷமாக தன் கணவன் தனக்காக செய்த அனைத்தையும் கூற துவங்கினாள்.

தோழிகளும் பிரபாகரனின் செயலில் மகிழ்ந்தவர்கள் “வாவ்.. வி ஆர் ஹேப்பி பார் யூ’ என்று அனைவரும் அவளை அணைத்து மகிழ்ச்சியை தெரிவித்தனர். மேலும் அவர்களுடன் சற்று நேரம் பேசிக் கொண்டிருந்தவள், நேரமாகிவிட்டதால் தன் வீட்டிற்கு கிளம்ப, உள்ளே வந்தவள் அங்கு அமர்ந்திருந்த பிரபாவை கண்டு சிரித்தபடியே “ஹேய்.. கரன்.. வந்துட்டிங்களா” என்றாவாறு அருகில் வர, அவனோ கண்களாலேயே ‘வேண்டாம்’ என்பது போல் சைகை செய்தான் ஆனால் அதை எல்லாம் கண்டு கொள்ளாத மது “கரன்.. இன்னைக்கு” என்று மேலும் ஏதோ சொல்லவந்தவள் அப்போதுதான் கவனித்தாள் அவள் மாமியாரும் அங்கு அமர்ந்து அவளையே முறைத்து கொண்டிருப்பதை.

அவரை பார்த்தவுடன் வாயை மூடி கொண்ட மது திரு திருவென விழித்தவாறு நிற்க,
அவள் மாமியாரோ “என்னது கரனா. . அது என்ன கரன் கிரன்னு.. புருஷன ஒழுங்கா அத்தான்னு கூப்பிட மாட்டியா மரியாதை குடுத்து பேசணும்னே இந்த காலத்து புள்ளைங்களுக்கு தெரிய மாட்டிக்குது” என்று முணு முணுத்தவர் “எங்க போயிட்டு வர்ற” என்று கேட்க, பிரபாவோ “நான் தான் ஒரு வேலையா வெளிய அனுப்பியிருந்தேன்ம்மா” என்று தாய்க்கு பதில் அளித்தவன் “நீ வா” என்றவாறு மதுவை காப்பாற்றி அழைத்து செல்ல,மதுவும் பெருமூச்சோடு தப்பித்தோம் பிழைத்தோம் என்று தங்கள் அறைக்குள் கணவனோடு ஓடிவிட்டாள்.

அறைக்குள் நுழைந்தவுடனே ஏதோ வித்தியாசத்தை உணர்ந்த மது என்னவென்று அறையை சுற்றி பார்வையை சூழல விட்டவளின் கண்கள் ஓரிடத்தில் நிலை குத்தி நின்றது.

பிரபா அவள் தோளைத் தொட்ட பிறகு தன்னிலை அடைந்தவளின் கண்களில் கண்ணீர் பெருக “இது…..” என்றவள் அந்த அறையின் குறிப்பிட்ட இடத்தை காட்ட அவனும் “ஆமாம்” என்று புன்னகையோடு தலையசைத்தான்.

ஆம் அந்த அறையிலேயே சின்னதாக இடம் ஒதுக்கியவன் அவள் அனைத்து வகையான சமையல்களையும் செய்து பார்க்க அனைத்து வகையான பாத்திரங்களும், மசாலா பொருட்களையும் கொண்ட ஒரு மினி கிட்சன் போல் செட் செய்து வைத்திருந்தான்.அதை கண்டவள் தன் கணவனை அணைத்துக் கொண்டு “தாங்க்ஸ்… இதை நான் எகஸ்பெக்ட பண்ணவே இல்ல.. இதுக்கெல்லாம் நான் என்ன பண்ணப் போறேன்னு தெரியல, என்னோட ஒவ்வொரு ஆசையும் நீங்க பார்த்து பார்த்து செய்றீங்க.. யூ ஆர் மேக்கிங் மை ட்ரீம் ட்ரூ” என்று கூற அவள் முகத்தை கைகளில் தாங்கியவன் சிரிப்புடன் “இதே டயலாக்கை எத்தனை தடவைதான் என்னை சொல்ல வைப்பியோ தெரியல, இருந்தாலும் இப்பவும் சொல்றேன் நல்லா கேட்டுக்கோ என் வைப்க்கு நான் செய்யறேன்.. அவளோட சின்ன விருப்பத்தையும் நிறைவேத்தும்போது அவள் முகத்துல இருக்க சந்தோஷத்தை பார்க்கறதுக்காக என்ன வேணா பண்ணலாம்னு தோணும் அதைதான் நான் பண்ணுறேன்” என்றவனின் வார்த்தைகளை கேட்டவள் அவனுள் தொலைந்துதான் போனாள்.

தன் ஒவ்வொரு விருப்பத்தையும் தான் சொல்லாமலேயே அறிந்து நிறைவேற்றுபவனின் மேல் மதுவிற்கு அளவிட முடியாத காதல் பெருகத்தான் செய்தது. அவனையே புதிதாக பார்ப்பது போல் இமைசிமிட்டாது பார்த்துக் கொண்டிருந்தவளின் பார்வையில் பிரபாவும் தடுமாறித்தான் போனான். இருந்தாலும் உடனே வேறு புறம் திரும்பி தலை கோதி தன்னைசமாளித்து கொண்டவன் பேச்சை மாற்றும் விதமமாக “நீ அங்க கத்துக்கறது பெருசு இல்ல பிராக்டிகலா செஞ்சும் பார்க்கணும். ஆனா அது நம்ம கிச்சன்ல வாய்ப்பே இல்ல அதனால தான்” என்றவனின் மனதில் ஏற்கனவே நடந்த சம்பவம் நிழற் படமாக ஓடியது.

சில நாட்களுக்கு முன்புதான் மது யூடியூபில் பார்த்து புது வகை உணவை செய்ய செல்ல அவன் தாயோ
'பாரம்பரிய சமையலை தவிர வேறு எதுவும் சமைக்க கூடாது என்றும்,குடும்ப பழக்கவழக்கங்களை மாற்றதே' கோபமாக சொல்லி விட இவளும் அமைதியாக சென்றுவிட்டாள்.. அதை கவனித்துதான் பிரபா இந்த ஏற்பாடு செய்திருந்தான்.

பிரபா அதைப்பற்றி யோசித்து கொண்டிருக்கும் போதே அவனை நெருங்கி வந்த மது தன் கைகளை மாலையாக அவன் கழுத்தில் கோர்த்து டக்கென்று அவன் இதழோடு தன் இதழை பதித்து விலகியவள் “இனிமே நான் செய்ய போற எல்லா டிஷ்ஷையும் டேஸ்ட் பண்ண போற சோதனை எலி நீங்கதான் இப்போவே சொல்லிட்டேன் அத்து.. அப்புறம் எஸ்கேப் ஆகிட கூடாது” என்று சொன்னவாறு அவன் நெஞ்சில் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள்.

பிரபாவும் புன்னகையோடு தன் சம்மதத்தை சொன்னவன் “அது என்ன இப்போ அத்துனு கூப்பிடற” என்க அவளோ "அதான் அத்தை கரன்னு கூப்பிட கூடாதுன்னு சொல்லிட்டாங்கல்ல. . அதான் அத்தான் சுருங்கி அத்து ஆயிடுச்சு. நான் அப்படியே கூப்பிடறேன் இல்லைனா பழக்க தோஷத்துல எல்லா இடத்துலயும் கரன்னே வரும்” என்று சொல்ல அவனும் மனைவியை பார்த்து சிரித்தவன் பின் மென்மையாக அணைத்துக் கொண்டான்.

இப்படியே அவர்கள் நாட்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமாக செல்ல ஆரம்பித்தது. ப்ரீத்தி காதல் வாழ்க்கையை ரசிக்க, பூஜா கவலை இல்லா பட்டாம்பூச்சியாக சுற்றிவர, மது கணவன் அமைத்து கொடுத்த புது வழியில் அதிக நேரத்தை செலவிட்டு எதிர்கால வாழ்க்கைக்கு யாரையும் சாராமல் தனித்து தன் விருப்பப்படி வாழ முழு முயற்சியில் இருந்தவளின் மனதில் காதல் கணவனாக பிரபா ஆழமாக பதிந்து போனான்.

ஆதி அபி இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டும், அவனுக்கு நேரம் கிடைக்கும் போது வீட்டில் இருப்பவர்களின் அனுமதியோடு அந்த ஊரை சுற்றி வந்தனர். சூர்யாவோ எப்போதும் போல் திருனேஷை கண்டும் காணாமல் சுற்றி கொண்டிருந்தாள்.

இது போன்ற ஒரு சூழ்நிலையில்தான் ஜனா மற்ற ஷேர் ஹோல்டர்ஸ் அனைவரையும் சந்தித்து பேசி அவர்களின் ஷேரையும் வாங்கிவிட்டதாக திருனேஷ்க்கு தெரியவர, அர்ஜுனுடன் சேர்ந்து அவரை தூக்குவதற்கான திட்டத்தை வகுக்க ஆரம்பித்தான். ஜனா திருவைபற்றி தெரிந்ததால் எப்போதும் இல்லாத வகையில் தனக்கு புதிதாக பாடிகார்ட்ஸை பணித்து அவர்களை தன்னுடனேயே வைத்து கொண்டான்.

இதை அறிந்த இருவரும் தங்களுக்குள் பேசி ஒரு முடிவிற்கு வந்தனர்.அதன்படி முதலில் ஜனாவின் மகனை பிடித்து தங்கள் கஸ்டடியில் வைத்து கொள்வது என்றும் அவனை வைத்தே ஜனாவை தங்கள் இடத்திற்கு வர வைப்பது என்றும் முடிவு செய்தனர்.

அதன்படி மாதேஷ் எங்கு செல்கிறான் என்பதை கவனித்துக் கொண்டிருந்த நண்பர்கள் இருவரும், அவன் தனியாக ஒரு இடத்திற்கு செல்வதை கவனிக்க, திரு யாரும் அறியாவண்ணம் அவனை கடத்தியவர் “உனக்காக தானே உங்க அப்பன் இவ்வளவு வேலையும் பண்றான்.. உனக்கே இப்படின்னா இன்னும் நல்ல மகனை பெத்திருந்தாலும் உங்க அப்பனை கையில பிடிக்க முடியாது.. சாவுடா சாவு.. பொண்ணுங்கன்னா உனக்கு என்ன கிள்ளுக்கீரையா.. நேத்து ஒரு பொண்ணை பப்க்கு கூட்டி போனியாமே எங்கடா அந்த பொண்ணு.. என்ன பண்ணுனீங்க.. சொல்லுடா சொல்லு.." என்று அவனை சரமாரியாக அடித்தவன், "உன்ன வச்சி பல வேலை செய்ய வேண்டி இருக்கு.. எங்க இடத்துக்கு போலாம் வா” என்றவன் அவன் முகத்தில் மயக்க மருந்தை அடித்தான்.

அவன் மயங்கிய பின் தூக்கி தோளில் போட்டு கொண்டு திரும்ப, அங்கு கைகளைக் கட்டியவாறு அவனையே முறைத்துக் கொண்டு நின்றிருந்தாள் சூர்யா.

அவளை அங்கு எதிர்பார்த்திராத திருனேஷ் முதலில் அதிர்ந்தாலும் பின் தன்னை சமாளித்து கொண்டவனாக “என்ன பொண்டாட்டி நான் எங்க போனாலும் என் பின்னாடியே சுத்தறியா” என்று சாதாரணமாக பேச முயல அவனை வெறுப்பாக பார்த்தவள் “நீ எல்லாம் திருந்தவே மாட்டியாடா இப்பதான் ஒருத்தன ரத்தம் வர அளவு அடிச்சு கடத்திட்டு போகவும் ட்ரை பண்ணிட்டு இருக்க ஆனா என்ன பார்த்தவுடன் சாதாரணமா பேசற நீ எல்லாம்….. “ என்று அவனை திட்டி கொண்டிருந்தாள்.
திருவோ காதை குடைந்தவாறே “இவ வேற நொய் நொய்னு எப்போ பாரு கரெக்ட்டா தப்பான நேரத்திலேயே வர வேண்டியது அப்புறம் என்ன திட்ட வேண்டியது” என்று முணு முணுத்துவிட்டு திரும்பி அவளிடம் “ஒரு நிமிஷம் இங்கயே இரு இப்போ வரேன்”என்று சொல்லி தோளில் இருந்த மாதேஷை தன் காரில் படுக்க வைத்துவிட்டு வந்தான்.

கோபத்தில் முகம் சிவக்க நின்றிருந்தவளின் அருகில் வந்தவன் அவளையே பார்த்திருக்க, சூர்யாவோ “ஹேய் உண்மையாவே அவனை கடத்த போறியாடா.. ரவுடி.. ராட்சஷா” என்று திட்ட அவனோ அவளை நெருங்கி வந்து கொண்டிருந்தான்.

முதலில் அவனை கவனிக்காது திட்டி கொண்டிருந்தவள் பின்னே கவனித்தவளாக “டேய் எதுக்குடா பக்கத்துல வர்ற தள்ளி போடா” என்க, அவனோ முடியாது என்பது போல் தலையசைத்தவன் “அது எப்படி டி பொண்டாட்டி நான் எவனையாவது அடிக்கும்போது கரெக்ட்டா அங்க வந்துடுற.. மாமாவ பாலோ பண்றியா”என்று கேட்டவாறு அவள் கரத்தை பிடிக்க போக, உடனே தன் கையை பின் பக்கமாக இழுத்து கொண்டவள் “டேய் பிராடு யாரு யாருக்குடா மாமா.. வாய ஒடச்சுருவேன் பாத்துக்கோ.. நான் என் தம்பி கூட அவன் பிராஜெக்ட் சம்மந்தமான திங்ஸ் வாங்க வந்தேன் நீ போற இடத்துக்கு ஒன்னும் தேடி தேடி வரல.. மனசுல பெரிய மன்மதன்னு நினைப்பு.. போடா….” என்று மேலும் திட்ட வர, அவளை மேலும் நெருங்கியவன் “சரி ஓகே எப்படியும் நீ என்னை திட்டதானே வந்துருக்க அப்போ இதுக்கும் சேர்த்து திட்டிக்கோ" என்றவன், மறு நொடி அவள் இதழை அழுத்தமாக சிறைபிடித்திருந்தான்.

சூர்யா அப்படியே திகைத்து விழிக்க சற்று நேரம் கடந்தே அவளில் இருந்து விலகியவன் “ஓகே ஸ்டார்ட் த மியூசிக் இப்போ திட்டு எனர்ஜிய இருக்கு சந்தோஷமா கேக்கறேன்” என்றாவாறு அவள் முகத்தையே விழுங்குவது போல் அவன் பார்த்திருக்க, இவளோ அவன் மார்பில் கை வைத்து தள்ளிவிட்டு “போடா பிராடு” என்று கத்திவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டாள். அவனோ சிரிப்புடனே அவள் பின்னால் வந்தவன் “ஹேய் பொண்டாட்டி என்ன திட்டாம போற” என்று கத்த, அவளோ தன்னில் ஏற்பட்ட இனம் புரியா உணர்வை புரிந்து கொள்ள முடியாமல் குழம்பி போனாள்.

இனி இவர்கள் வாழ்வில் என்ன நடக்கும் என்பதை போக போக தெரிந்து கொள்ளலாம்.
கருத்துத் திரி

 

Sonythiru

Suthisha
26906

அத்தியாயம்-32

மாதேஷை கடத்தி காட்டு பகுதியில் இருக்க கூடிய ஒரு இடத்திற்கு கொண்டுவந்த திரு அவனை உள்ளே கட்டி வைக்க அங்கு வந்து சேர்ந்தான் அர்ஜுன். உள்ளே வந்தவன் கன்னம் வீங்கி நெற்றியில் ரத்தம் வழிய கட்டப்பட்டிருந்த மாதேஷை கண்டு திகைத்து “என்ன மச்சி இப்படி பண்ணிட்ட” என்றான்.

திரு, “என்ன பண்ணுனேன் மச்சி” என்று புரியாமல் கேட்க, அதற்கு அர்ஜுனோ “என்னடா நெத்தியில கன்னத்துல எல்லாம் காயம் இருக்கு” என்று கேட்டான். திருவோ “அடிச்சா காயம் ஆகதான் செய்யும் கடத்திட்டு வர்றதுன்னா காயம் இல்லாமலா இருக்கும். என்னடா லூசு மாதிரி பேசுற” என்றான்.

உடனே மாதேசின் முகத்தை கைகளில் பிடித்த அர்ஜுன் அவன் முகத்தை இருபக்கமும் திருப்பி பார்த்து “இவன் பண்ணுன்ன வேலைக்கு இதோ இந்த கண்ணை ஏதாவது பண்ணி இருக்கலாம்ல அத மிஸ் பண்ணிட்டியேனு சொல்ல வந்தேன்” என்று கூற திருவோ புன்னகைத்தான்.

மாதேஷ் அர்ஜுனை அதிர்ச்சியாக பார்க்க அதை கவனித்தவன் “என்னடா அப்படி பார்க்கிற உன்ன பாத்து பாவப்படுவேன்னு நினைச்சியா.நீ எல்லாம் அந்த அளவுக்கு வொர்த் இல்லை”என்று கூறியவன் “இந்த முழியாம் கண்ணனை ஏதாவது பண்ணனுமே”என்று சுற்றி நோட்டம் விட்டவன் பின் அசால்டாக “இவனுக்கு எதுக்கு வெப்பன் என் கையே வெப்பன்தான்” என்று கூறி அவன் கண்களை குத்தி விட அவன் வலியில் துடித்தான்.

திரு, “என்ன மச்சி சின்ன புள்ள மாதிரி விளையாடிக்கிட்டு இருக்க”.
அர்ஜுன், “ மச்சி இவனுக்கெல்லாம் சிம்பிள் ட்ரீட்மெண்ட் போதும்டா, பெருசாலாம் பிளான் பண்ணி நம்ம அலட்டிக்க கூடாது. கண்ணுல ஒரு குத்து கீழே ஒரு பஞ்சு டோட்டல் மேட்டர் க்ளோஸ்” என்று கூற, அவனை நமுட்டு சிரிப்புடன் பார்த்த திரு “டோட்டல் மேட்டரும் க்ளோசா” என்று கேட்க,

அர்ஜுனும் அவனை பார்த்து கண்ணடித்தவன் “அப்கோர்ஸ் மச்சி எல்லாத்தையும் க்ளோஸ் பண்ணிதானே ஆகணும்.அது நம்ம கடமை இல்லையா, சார் என்ன சாதாரண ஆளா,மன்மத ராசா ஆச்சே கண்ணுல பட்ட எந்த பொண்ணையும் விட மாட்டாரு” என்று அதுவரை கேலியாக பேசி கொண்டிருந்தவனின் முகம் மாற பல்லை கடித்தபடி “ சின்ன பொண்ணா இருந்தாலும் சரி பெரிய பொண்ணா இருந்தாலும் சரி வயசு வித்யாசம் பார்க்காம கை வைக்கிற இந்த மாதிரி நாய என்னவேணாலும் பண்ணலாம்” என்று கூறியவன் ஆத்திரம் அடங்காமல் அவன் மூக்கில் ஓங்கி குத்தினான்.

திரு, “மச்சி நீ சின்ன வயசுல வர்மக்கலை கத்துக்கிட்டு இருந்தியே,இன்னும் ஞாபகம் இருக்கா அதை ஏன் நீ சார் மேல பிராக்டிஸ் பண்ணி பார்க்க கூடாது” அர்ஜுனா, “ காமிகலாம் மச்சி ஆனா…… டச் விட்டு ரொம்ப நாளாச்சு எங்கேயாவது எசகு பிசகா குத்தி இவன் உயிர் போயிடுச்சுன்னா” என்று கேட்க, “என்னது உயிர் போய்டுமா” என்று பயத்தில் அலறிய மாதேஷ் “தயவு செஞ்சு என்னை விட்டுடுங்க உங்களுக்கு என்ன வேணுமோ தரேன்”என்க.

உடனே திரு அர்ஜுனிடம் கண் காட்டியவன் மாதேஷ் அருகில் வந்து “நீ ஒன்னும் பெருசா எங்களுக்கு தர தேவையில்லை என் காலேஜ் ஷேர் உங்ககிட்ட இருக்கு பாத்தியா அதாவது உன்னோட அந்த மானங்கெட்ட கேவலமான டாஸ் டாஸ் அப்பன் கிட்ட இருக்கு பாத்தியா அதை என் பேருக்கு மாத்தி எழுதி குடுக்க சொல்லு அவ்வளவுதான் சிம்பிள்” என்று கூற,

மாதேஷோ “அதெல்லாம் பண்ண முடியாது அது எங்க கைக்கு எவ்வளவு கஷ்டப்பட்டு வந்துச்சு தெரியுமா, அதுக்கு எவ்வளவு செலவு பண்ணி இருக்கோம் தெரியுமா” என்றான்.

அர்ஜுன், “நாங்க ஒன்னும் சும்மா கேட்கல பாஸ் அதுக்கு தகுந்த பணத்தை கொடுத்தடறோம் ஆனா உங்ககிட்ட இருக்க எல்லாரோட ஷேரும் எங்களுக்கு வேணும், உன்ன மாதிரி ஒரு கேடுகெட்ட பொறுக்கி கிட்டயும் உங்க அப்பன மாதிரி ஒரு ஆள் கிட்டயும் இந்த காலேஜ் இருந்தா அங்க ஒரு ஸ்டுடென்ட் கூட நிம்மதியா படிக்க முடியாது. சோ, நீ என்ன பண்ற உங்க அப்பன்கிட்ட சொல்லி எல்லாத்தையும் உடனே எழுதிக் கொண்டு வந்து தர சொல்ற என்ன சரியா”என்றவன் திருவின் புறம் திரும்பி “மச்சி போன குடு தம்பி நல்லவன் உயிருக்கு பயந்தவன் உடனே அவங்க அப்பாகிட்ட சொல்லி ஷேர்ர மாற்ற சொல்வான் பாரேன்” என்க,

மாதேஷோ “கண்டிப்பா அது மட்டும் நடக்காது எங்க அப்பாவோட மெயின் பிசினஸ் இப்ப இந்த காலேஜ்தான் அதனால முடியாது” என்றான்.

திரு, “மச்சான் இவன் சரிப்பட மாட்டான் நீ உன் வேலையை காட்டு” என்று சொல்ல, அர்ஜுனும் “ஓஓ……. தாராளமா பண்ணலாமே” என்று கூறியவன் தன் விரல்களை மடக்கி அவன் கையில் குத்த அவனுக்கு ஒரு பக்கம் கை அப்படியே இழுத்துக்கொண்டது. அதில் அதிர்ந்த மாதேஷ் உயிருக்கு பயந்து “நான் எங்க அப்பா கிட்ட பேசறேன் போனை குடுங்க, என்னை எதுவும் பண்ணிடாதீங்க” என்று கெஞ்சியவனிடம் போனை திணித்த அர்ஜுன் “உங்க அப்பா கிட்ட பேசு” என்று கூற,

மாதேஷும் உடனடியாக தன்னுடைய மற்றொரு கையால் தந்தைக்கு அழைத்து கதறிக்கொண்டே நடந்த விஷயத்தை கூற அவரோ பயந்து விட்டார்.ஆனாலும் தன்னுடைய நிலையில் இருந்து கீழே இறங்கி வர விரும்பாமல் “நான் போலீஸ் கிட்ட போறேன்” என்று சொல்ல,

அர்ஜுன் திரு இருவரும் சேர்ந்து ஒரு சேர கோரசாக “போ நாங்களும் போலீஸ் கிட்ட தான் போகப்போறோம்.உன் பையனோட மொள்ளமாரித்தனம் அத்தனைக்கும் ஆதாரம் எங்க கிட்ட இருக்கு. அதை எடுத்துக்கிட்டு அடுத்து நாங்க போக போறதே போலீஸ் கிட்ட தான்” என்றனர்.

மாதேஷ் தன் தந்தையிடம் “அப்பா ப்ளீஸ் இந்த ஒரு காலேஜ் போனா நமக்கு பல பிசினஸ்” என்று கதற அவரும் தனக்கு இருக்கும் ஒரே மகனின் உயிர் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால் திருவின் கூற்றுக்கு இறங்கி வந்தார்.

அடுத்த ஒரு மணி நேரத்தில் கல்லூரியின் அனைத்து ஷேர்களையும் திருவின் பெயரில் மாற்றி எழுதியவர் அதை எடுத்து கொண்டு அவர்கள் சொன்ன இடத்திற்கு சென்றார். அடுத்த பத்து நிமிடத்தில் அவர்கள் சொன்ன இடத்தில் நின்றவரை கண்ட திரு, “ஆனாலும் உன்னோட மகன் பாசத்தை நினைக்கும் போது கண்ணு வேர்க்குது மிஸ்டர் ஜனா என்ன பொம்பள பொறுக்கியா இல்லாம நல்ல பையனா வளர்த்துருக்கலாம்”என்றவன் அவர் மகனை காட்ட அவனோ ஒரு கை இயங்க முடியாமல் சேரில் அமர வைக்கப்பட்டிருந்தான்.

தன் மகனின் நிலையை கண்டவர் தந்தையாக கண்ணீர் வடித்து “நீங்க சொன்னதைதான் நான் செஞ்சுடனே, என் பையன் கைய சரி பண்ணி கொடுக்க கூடாதா” என்று கேட்க,

திரு, “இவன் எத்தனை பொண்ணுங்கள மானபங்கப்படுத்தி இருக்கான் அதுக்கு இந்த பனிஷ்மென்ட் கரெக்ட்தான்.இவனை போலீஸ்கிட்ட புடிச்சு குடுக்கலைன்னு சந்தோஷப்பட்டுட்டு அமைதியா போங்க” என்று கூற அவரும் கண்ணீரோடு அங்கிருந்து மகனை அழைத்து கொண்டு சென்றுவிட்டார்..

அவர்கள் சென்றபின் திரு அர்ஜுனிடம் “மச்சி நிஜமா அந்த கையை சரிபண்ண முடியாதா” என்று கேட்க,அவனோ “யாருக்கு தெரியும் குத்துமதிப்பா ஏதோ ஒரு இடத்தில தட்டுனேன், கை பொட்டுனு போயிருச்சு” என்றான்.

அவனை யோசனையாக பார்த்த திரு “அப்போ அந்த எவிடன்ஸ்” என்று கேட்க, “அது கண்டிப்பா போலீஸ்கிட்ட போகும் மச்சி யூ டோன்ட் வரி” என்று கூற அவனும் தன் நண்பனின் தோள்களில் கையை போட்டு “தேங்க்ஸ் டா” என்க,அவன் வயிற்றில் ஓங்கி குத்திய அர்ஜுன் “இதுக்கெல்லாம் எதுக்கு தேங்க்ஸ் மூடிட்டு வா” என்று கூற இருவரும் சிறு புன்னகையோடு அங்கிருந்து கிளம்பினர்.

அதன்பின் திரு எக்ஸாம் முடித்த பின் கல்லூரியின் பொறுப்பை எடுத்துக் கொள்ளலாம் என்று முடிவெடுத்தவன் தன் முழு கவனத்தையும் படிப்பில் செலுத்தினாலும் இடையில் சூர்யாவை தூரத்திலிருந்து பார்ப்பதையும் மறக்கவில்லை.நாட்கள் அதன் போக்கில் செல்ல திரு அர்ஜுன் இருவரின் எக்ஸாமும் முடிந்தது.

எக்ஸாம் முடிந்ததால் அர்ஜூனின் பிரிவால் பூஜா வாட,எதற்கு என்றே தெரியாமல் சூர்யாவின் மனமும் கவலையாக இருந்தது. இந்த உணர்வுக்கு என்ன பெயர் என்று புரியாமல் சூர்யா குழம்பித் தவித்தவள் அதை தோழிகளிடம் சொல்லவும் விருப்பமில்லாமல் தனக்குள்ளேயே வைத்துக் கொண்டாள்.

அன்று கல்லூரி மிகவும் பரபரப்பாக இருந்தது எதனால் என்று விழித்துக் கொண்டிருந்த தோழிகள் அருகில் இருக்கும் ஒருவனிடம் என்ன விஷயம் என்று கேட்க,அவனோ “இன்னைக்கு காலேஜோட புது கரஸ்பாண்டன்ட் வராங்க” என்று சொல்லி சென்றான். தோழிகள் ஐவரும் யார் அந்த புது கரஸ்பாண்டன்ட் என்று ஒருவரை ஒருவரை பார்த்து கொண்டவர்கள் பின் “சரி எப்படி இருந்தாலும் இன்னும் கொஞ்ச நேரத்துல தெரியதானே போகுது அப்ப பாத்துக்கலாம்” என்று விட்டு அவரவர் வகுப்பிற்கு சென்றனர்.

அபி சூர்யா இருவரும் மெடிக்கல் பில்டிங்கிற்கு செல்ல,அப்போது ஒரு உயர்தர கார் அந்த பில்டிங் அருகில் வந்து நின்றது இவர்கள் ஓரமாக நின்று யார் அந்த கரஸ்பாண்டன்ட் என்பது போல் பார்த்திருக்க காரில் இருந்து இறங்கியவனை கண்டு இருவரும் திகைத்து போயினர்.

ஆம், கல்லூரி மாணவன் என்ற தோற்றம் கலைந்து கோட்சர்ட் அணிந்து முடியை ஜெல் வைத்து அடக்கி, டிரிம் செய்யப்பட்ட தாடியும்,கண்ணில் கூலர்சுமாக காலேஜின் பொறுப்பான பணியில் இருப்பதற்கான தோற்றத்துடன் வந்திருந்தான் திருனேஷ்.

அவனை கண்டு இருவரும் அப்படியே நின்றிருக்க அருகில் கேட்ட பேச்சு குரலிலேயே இருக்கும் இடம் உணர்ந்தனர். ஆனால் அந்த பேச்சை கேட்ட சூர்யாவின் மனதோ முதலில் காரணம் அறியாமல் வாடி பின் கோபம் கொண்டது.
அப்படி என்ன பேசினர் என்றால் “டேய் மச்சி திருனேஷ் மாதேஷை கடத்தி அவங்கப்பாவ மிரட்டிதான் இந்த காலேஜ எழுதி வாங்குனாராம் தெரியுமா” என்க மற்றொருவனோ “காலேஜ்ல ரவுடிசம் இருக்க கூடாதுனு சொன்னவங்க ரவுடிக்கிட்ட காலேஜ் இருக்க கூடாதுனு சொல்லலயே அதான் ரவுடி காலேஜ் ஓனர் ஆகிட்டான். நமக்கெதுக்கு இது இன்னும் ஒரு வருஷத்துல படிப்ப முடிச்சுட்டு போயிட்டே இருக்க போறோம் அப்புறம் என்ன வாடா போலாம்”என்று தங்களுக்குள் பேசிக் கொண்டு சென்று விட்டனர் இதைக் கேட்டு தான் சூர்யாவின் முகம் கோபமானது.
திருனேஷ்பற்றி அறிந்திருந்த அபி சூர்யாவிடம் அவனுக்காக பேச செல்ல, அவளோ அபியை ஒரு பார்வை பார்த்தவள் பின் எதுவும் பேசாமல் வகுப்பை நோக்கி செல்லதுவங்கினாள். அபியும் திருனேஷிடம் என்ன நடந்தது என்பதை முழுவதுமாக பேசி தெரிந்துகொண்டு இவளிடம் பேசலாம் என்று முடிவெடுத்தவளாக அப்போதைக்கு அமைதியானாலும், பூஜாவின் போனிற்கு திருனேஷ் வந்ததையும்,மாணவர்கள் பேசியதையும் சுருக்கமாக கூறி, அர்ஜுனிடம் என்ன நடந்தது என்பதை விசாரிக்க சொல்லி ஒரு மெசேஜை தட்டிவிட்டு சென்றாள்.

பூஜாவும் அபியின் மெசேஜை பார்த்த உடனே அர்ஜுனிற்கு கால் செய்து வர சொல்ல அவனும் அடுத்த பத்து நிமிடத்தில் அவளின் எதிரில் நின்றான். அவனை முறைத்த பூஜா “என்ன அஜூ இது உன் பிரண்டு ரவுடி ஆகிட்டானா என்ன, கடத்தல் வேலை பிளாக்மெயில் பண்றதுனு எல்லா கெட்ட வேலையும் பார்க்க ஆரம்பிச்சிட்டாரு போல” என்க, அவனோ அவளை புரியாமல் பார்த்திருந்தான்.

பூஜா, “சும்மா நடிக்காத அஜூ எனக்கு எல்லாம் தெரியும்.இந்த வாய்ஸ் மெசேஜை கேளு” என்று அபி அனுப்பிய மெசேஜை காட்ட அர்ஜுனின் முகம் கோபத்தில் சிவந்தது.

அர்ஜுன், “நீங்க எல்லாம் என்ன நினைச்சுட்டு இருக்கீங்க.அவன் அப்படிப்பட்டவனானு யோசிக்கமாட்டிங்களா யார் என்ன சொன்னாலும் உடனே நம்பிடுவீங்களா, என்ன நடந்ததுனு தெரியாமல் மத்தவங்க சொல்றதைக் கேட்டு ஒரு முடிவுக்கு வராதீங்க” என்றவன் மாதேஷின் கேரக்டரையும் அவனுக்கு சப்போர்ட் செய்த அவன் தந்தையின் குணத்தையும் சொன்னவன் “அவங்ககிட்ட காலேஜ் போனுச்சுனா இங்க படிக்கிற பொண்ணுங்களுக்கு பாதுகாப்பு இல்லாம போய்டும் அதனால மட்டும்தான் திரு காலேஜ எழுதி வாங்கினான்.அதுவும் சும்மா வாங்கல அந்த ஷேர்க்கு எவ்ளோ அமௌன்ட்டோ அதை குடுத்துதான் வாங்கினான்.இது எல்லாம் எதுக்கு பண்ணுனான் அவங்க அப்பா ஆரம்பிச்ச காலேஜ்க்கு கெட்ட பேர் வரக்கூடாதுனுதான் பண்ணுனான்” என்று கூற,

பூஜாவும் அப்போதுதான் உண்மையை புரிந்து கொண்டவள் “அந்த மாதேஷ் அவ்ளோ பொறுக்கியா அஜூ,சாரி அஜூ பேபி அவங்க பேசுனது கேட்டவுடனே கோபம் ஆகிடுச்சு” என்று கொஞ்ச, அப்போதும் அர்ஜுன் முறுக்கி கொண்டு நிற்க,காதலானவனின் கோபத்தை குறைக்கும் வழி அறியாதவளா அவள், உடனே தன் கண்களை நாலா புறமும் சூழலவிட்டவள் யாரும் தங்களை சுற்றி இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு தன் மென் இதழால் அவன் முரட்டு இதழை சிறை செய்ய அவனோ தன்னவளின் இதழ் முத்தத்தில் கிறங்கி நின்றான்.சிறிது நேரத்தில் அவனிடம் இருந்து பிரிந்தவள் “இப்போ இந்த டோஸ் போதும்”என்றுவிட்டு அவன் சட்டை காலரை சரி செய்தவாறு “அதிகமா கோபப்பட்டா அவங்களுக்கு ட்வின் பேபியாதான் பிறக்குமாம், நான்தானே பாவம் அதான் சரி இப்போ நல்ல பையனா போய் வேலைய பாரு“ என்றவள் அங்கிருந்து சென்றுவிட,

தன்னவள் முதன் முறை அவளாகவே கொடுத்த முத்தத்தில் திளைத்து இருந்தவன் அவள் சென்ற பின் “இனி எங்க வேலைய பாக்கறது”என்று புலம்பி கொண்டே தான் பொறுப்பேற்று கொண்ட தங்கள் மால் நோக்கி சென்றான்.

மாலை தோழிகள் அனைவரும் சூர்யாவிடம் பேசி திருவின் செயலுக்கான காரணத்தை கூற முயல, அவளோ அவர்கள் சொல்வதை காதில் வாங்காதவளாக “நீங்க என்ன காரணம் சொன்னாலும் அவன் ரவுடிதான் என் கண்ணு முன்னாடிதான் அந்த மாதேஷ கடத்திட்டு போனான் அவனுக்கு சப்போர்ட்பண்ணி என்கிட்ட எதுவும் பேசாதீங்க”என்று பிடிவாத குரலில் சொன்னவள் அதன் பின் வேறு பேச துவங்க, இவள் செயலில் கோபம்கொண்ட தோழிகள் முதலில் அமைதியாக இருந்து தங்கள் கோபத்தை காட்டி பின் அவளின் குணம் அறிந்து “சரி போகப்போக உண்மையை புரிந்து கொள்வாள்” என்று அமைதியாகினர்.

அவர்களிடம் சூர்யா பிடிவாதமாக பேச வேண்டாம் என்று சொன்னாலும் அவள் மனதினுள் ஏனோ ஒரு வெற்றிடம் தோன்றியது உண்மை.

நாட்கள் அதன் போக்கிலேயே செல்ல துவங்கியது.நாட்கள் வாரங்களாகவும் வாரங்கள் மாதங்களாகவும்,மாதங்கள் வருடங்களாகவும் மாறியது. இதற்கிடையில் திருனேஷின் மேற்பார்வையில் காலேஜில் பல மாற்றங்கள் நடைபெற்றது.

பெண்கள் பாதுகாப்புக்கு என்று ஐவர் குழு ஒன்று அமைத்து,பெண் மாணவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை அவர்கள் மூலம் கலைவதற்கான நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்பட்டது.மேலும் ஷேர் ஹோல்டர்ஸ் என்று சொல்லிக்கொண்டு ரவுடிசம் செய்து கொண்டிருந்தவர்களை அடக்கி கல்லூரியையே தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருந்தான்.

மாணவர்களின் கோரிக்கைகள் குறைகள் எதையும் நேரடியாக தன் பார்வைக்கு கொண்டு வர தன் ஆபிஸ் அறையின் அருகிலேயே குறை களையும் பெட்டி ஒன்றை வைத்தான் மொத்தத்தில் கல்லூரியை சிறந்த முறையில் நடத்தி கொண்டிருந்தான்.

மாணவனாக இருந்து சூர்யாவிடம் அவன் செய்த சேட்டைகள் அனைத்தையும் அந்த கல்லூரியின் தலைவனாக மாறிய பிறகு ஒதுக்கி வைத்தான். தூரத்தில் இருந்து அவளை பார்ப்பவன் ரவுண்ட்ஸ் செல்லும்போது அவள் எதிரில் வந்தால் கூட கண்டு கொள்ளாமல் சென்றுவிடுவான்.

அவனின் நடவடிக்கைகளை கண்டு சூர்யா ஏன் என்று தெரியாமல் மனதுள் வருந்தினாள்.தோழிகளுடன் பேசினாலும் கண்களில் ஏதோ அழைப்புறுதலுடனும் எதையோ இழந்த உணர்வுடன் இருப்பவளை அவர்களது தோழிகள் கண்டு கொண்டாலும் இவளே புரிந்து கொள்ளட்டும் என்று அமைதியாக இருந்தனர்.

இதோ அதோ என்று இரண்டு வருடங்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் கடந்து போனது.பட்டாம்பூச்சியாய் சுற்றி வந்த மாணவ பருவம் முடிந்து வாழ்க்கையின் கோர முகத்தை பார்க்க தயாராகினர் தோழிகள்.

வாழ்க்கையின் அடுத்தகட்டத்தில் கால் எடுத்து வைப்பவர்கள் அது கொடுக்கும் கஷ்டத்தில் சுழன்று அடிக்கும்போது தோழிகள் ஒருவரை ஒருவர் கரம் பிடித்து எழுவார்களா இல்லை வீழ்வர்களா என்பதை அடுத்தடுத்த எபில பார்க்கலாம்.
 

Sonythiru

Suthisha
27044

அத்தியாயம்-33

இரண்டு வருடங்களுக்குப் பிறகு அர்ஜுன் நிர்வகித்துவரும் அவனது மாலின் ஆபீஸ் அறையில் அபியும் .ஆதியும் ஒரு சோபாவிலும், பிரபாவும் மற்றும் மதுவும் கவுச்சிலும் அமர்ந்திருக்க,மற்றொரு பக்கம் ப்ரீத்தியும் மற்றும் கிருஷ்ணாவும் நின்று கொண்டிருந்தனர் என்றால் அவர்கள் அருகில் சூர்யா பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு நின்றிருந்தாள்.
திருனேஷ் அப்பொழுதுதான் அந்த அறைக்குள் நுழைந்தவன் அனைவரும் ஒவ்வொரு முக பாவனையோடு அமர்ந்திருப்பதை கண்டு குழம்பி “இவங்களுக்கெல்லாம் என்ன ஆச்சு, ஏன் இப்படி உட்கார்ந்து இருக்காங்க” என்று எண்ணியபடி உள்ளே வந்தவன் கண்டது அந்த ஆபீஸ் அறையின் கீழே நடுநாயகமாக கன்னத்தில் கை வைத்து அமர்ந்திருந்த பூஜாவையும் அவளருகில் சம்மணமிட்டு அமர்ந்திருந்த அர்ஜுனையும்தான்.

அவனும் தன் தலையை கைகளில் தாங்கியபடி சோகமே உருவாக அமர்ந்திருக்க ஒன்றும் புரியாமல் “இங்க என்ன நடக்குது” என்றான்.

அவன் குரலில் நிமிர்ந்து பார்த்த பூஜா சோகமான குரலில் “திரு திரு இங்க வாயேன்” என்று கூற,அர்ஜுனோ சடாரென்று தலையை நிமிர்த்தி திருவை பார்த்து “வராத வராத” என்று கண்களாலேயே சைகை காட்ட திருவோ அதை புரிந்து கொள்ளாமல் “என்னடா ஏன் எல்லாரும் இப்படி உட்கார்ந்து இருக்கீங்க,” என்று கேட்டபடியே பூஜாவின் அருகில் முழங்காலிட்டு அமர்ந்தவனின் தோள் மேல் கை போட்டு “நான் நாளைக்கு பூனே கிளம்பபோறேன்,உங்களையெல்லாம் விட்டுட்டு நான் எப்படி இருக்க போறேன்னு தெரியலையே”என்று பழைய காலத்து பாட்டி போல் மூக்கை சிந்தி அழுதவாறே அவனை உலுக்கி எடுக்க,அவனோ நிலை தடுமாறிக் கீழே விழுந்தான்.

திரு, “ஹேய் எதுக்கு இப்போ என்ன கீழே தள்ளிவிட்ட”.

பூஜா, “என்னது தள்ளி விட்டன்னா, உன்னை எல்லாம் ஒரு ப்ரோவா மதிச்சு நான் என் வருத்தத்தை சொன்னா, எனக்கு ஆறுதல் சொல்றதை விட்டுட்டு,நீயே போய் கீழே விழுந்துட்டு நான் தள்ளி விட்டேன்னு சொல்றியே, இது உனக்கே நியாயமா இருக்கா……” என்று கேட்டவள் மேலும் “இங்க வா” என்று மறுபடியும் அவனை அருகில் இழுத்து அமர வைத்தவள் “இங்க பாரு இத்தனை பேர் என்னை சுத்தி இருக்காங்களே யாராவது எனக்காக பீல் பண்றாங்களா,அவங்கள விடு நான் பின்னாடி சுத்தி சுத்தி லவ் பண்ணுனனே அவனாவது பீல் பன்றானா பாரு லவ் பண்ற பொண்ணு ஊருக்குப் போறாளேன்ற சோகம் கொஞ்சமாவது அவன் கண்ணுல தெரியுதா பாரு திரு பாரு உன் ஃப்ரெண்ட் முகத்தை நல்லா பாரு. நீயாவது எனக்காக பீல் பண்ணு பாப்போம்” என்று கூறியவாறு மீண்டும் அவன் சட்டையைப் பிடித்து உலுக்கினாள்.

உடனே வேகமாக அவள் பிடியிலிருந்து தன் சட்டையை விடுவித்துக் கொண்டு பின்னால் நகர்ந்து கொண்ட திருனேஷ் “என்னடா அர்ஜுன் இது” என்று கேட்க,அர்ஜுனோ “உன்னை யாருடா அவ பக்கத்துல வர சொன்னா, ஒருத்தர விடாம எல்லாத்தையும் இப்படித்தான் அவ உலுக்கி எடுத்துட்டு இருக்கா, ஏதோ அவங்க மூணு பேரும் அண்ணாவா போயிட்டதால தப்பிச்சாங்க”என்று ஆதி, பிரபா, கிருஷை கை காட்டியவன் மேலும் “உனக்கெல்லாம் அவ்வளவு மரியாதை கொடுக்க மாட்டா இல்லையா அதான் உன்னை இந்தப் பாடு படுத்துறா”என்று கூற, அப்போதுதான் அவன் சுத்தி அமர்ந்திருக்கும் அனைவரின் முகத்தையும் பார்த்தான்.

அவர்கள் அனைவரும் சிரிப்பை அடக்கிக்கொண்டு அமர்ந்து இருப்பதும் எங்கே சிரித்துவிட்டால் பூஜா அதற்கும் ஒப்பாரி வைப்பாள் என்று பயந்தே அமைதியை கடைபிடிக்கிறார்கள் என்று உணர்ந்து கொண்டவன்.இப்போது பாவமாக அர்ஜுனை பார்க்க அவனோ தன் பக்கத்தில் இருக்கும் இடத்தை தட்டி “டேக் யுவர் சீட்”என்க, திருவோ அவனை முறைத்தான் அதை அலட்சியம் செய்த அர்ஜுன் “இப்போ வந்த உனக்கே இவ்ளோ காண்டாகுதே ரெண்டு மணி நேரமா நாங்க இப்படிதான் இருக்கோம் எங்கள பத்தி யோசிச்சியா பொங்காத வா….” என்று அருகில் அமர்த்தி கொண்டு மீண்டும் தன் பழைய நிலையிலேயே அமர்ந்து கொண்டான்.

திருவும் “எதுக்கு வம்பு எதாவது பேசுனா நம்மள போட்டு உளுக்கி எடுத்துடுவா அதனால நாமும் பேசாம உட்கார்ந்துகலாம்” என்று முடிவெடுத்தவன் கன்னத்தில் கை வைத்து அமர்ந்துகொண்டான்.

அனைவரின் அமைதியை கண்ட பூஜா “உண்மையாலுமே நான் பூனே போறது உங்களுக்கு கவலை இல்லையா,ஒரு சின்ன பிள்ளைய தனியா அவ்வளவு தூரம் அனுப்பறோமேங்கற கவலை உங்க முகத்துல கொஞ்சமாவது இருக்கா” என்று அனைவரையும் பார்த்து அழுதுகொண்டே புலம்ப, முதலில் பொறுமை இழந்த ஆதி “பூஜா நீ என்ன வேற எங்கேயோ வா போக போற இதோ இங்க இருக்கு பூனே அங்கதானே போற,அதுக்கு ஏன் இவ்வளவு பாடு படுத்துற, எல்லாத்தையும் பார்க்கணும்னு உனக்கு தோணுச்சுனா உடனே வந்து பார்த்துட்டு போலாமே”என்க.

பூஜா, “பாருங்க பாருங்க இப்போ கூட நீங்க யாரும் வந்து என்னை பார்க்கிறேன்னு சொல்ல மாட்டேங்கறீங்க.நானா தான் விருப்பப்பட்டா வந்து பார்க்கணும் அப்படித்தானே”

பிரபா, “பூஜா நீ எங்கள மிஸ் பண்றதா நினைச்சேனா ஒரே ஒரு போன் போடு நாங்க எல்லாரும் வந்து உன் கூட டைம் ஸ்பென்ட் பண்ணிட்டு வரோம். கவலைப்படாதே” என்று சொல்ல, அவளோ சந்தேக பார்வையோடு “சத்தியமா எல்லாரும் வருவீங்க தானே” என்று கேட்க,உடனே அனைவரும் அவள் தலையில் அடிக்காத குறையாக சத்தியம் செய்த பின்னரே அமைதியானாள்.

பூஜா, “சரி சரி பசிக்குது அழுது அழுது ரொம்ப டயர்டா ஆகிட்டேன் வாங்க போய் ஜூஸ் குடிக்கலாம்.அர்ஜுன் உங்களுடைய ஃபுட் கோர்ட்ல இருந்து கொஞ்சம் சாப்பாடு வர வைங்க” என்று கூற,அவனோ அவளை கடுப்பாக பார்த்து “ஏண்டி இவ்வளவு நேரம் இருக்கிறவங்கள எல்லாம் கொடுமை படுத்திட்டு உனக்கு டயர்டா இருக்கா, எங்களுக்குதான் டயர்டா இருக்கு உன்னையெல்லாம் வெச்சுகிட்டு” என்று தலையில் அடித்துக் கொண்டாலும் அவள் சொன்னது போல் புட் கொண்டு வர சொல்லி போன் செய்தான்.

அதன் பின் அன்று முழுவதும் அனைவரும் ஒன்றாக நேரத்தை செலவிட்டனர்.சூர்யா அப்பொழுதும் திருவை கண்டு கொள்ளாமல் இருந்தாள்.புனேவில் உள்ள ஒரு பெரிய கல்லூரியில் பூஜாவிற்கு எம்பிஏ படிக்க இடம் கிடைத்திருக்கிறது. அங்கு செல்வதற்காகவே அவள் இவ்வளவு அலப்பறையை கூட்டிக் கொண்டிருந்தாள்.

ஒருவாறு தோழிகள் ஐவரும் தங்கள் வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு போவதற்கான முதல் படியை பூஜா எடுத்து வைத்தாள்.அடுத்த நாள் அனைவரிடமும் பிரியா விடைபெற்று தன் படிப்பிற்காக பூனே கிளம்பினாள் பூஜா.


பூஜா அவர்களைப் பார்த்து கையசைத்து விட்டு விமான நிலையத்திற்குள் சென்று விட போகும் அவளையே பார்த்துக் கொண்டிருந்த அர்ஜூனின் கண்கள் அவள் கண்களை விட்டு மறைய மறைய கலங்க ஆரம்பித்தது.அதை முதலில் உணர்ந்து கொண்ட திரு அவன் தோளை ஆதரவாக பிடிக்க அர்ஜுன் வேகமாக தன் கண்களைத் துடைத்துக் கொண்டவன் “ஐ…..ஐ ஆம் ஓகே” என்க,

திருவோ அர்ஜுனிடம் “உனக்கே இவ்வளவு கஷ்டமா இருக்குமா சின்னதுல இருந்து ஒன்னா இருக்க அவளோட க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ் எப்படி இருப்பாங்க” என்று கேட்க, அப்பொழுதுதான் அர்ஜுன் அவர்களைப்பற்றி யோசித்தவனாக வேகமாக திரும்பி நால்வரையும் பார்க்க, அவர்களோ ஒருவர் கையை ஒருவர் ஆதரவாக கோர்த்து கொண்டும் ,கண்களை விட்டு வெளியேற துடிக்கும் கண்ணீரை கட்டுப்படுத்தி கொண்டும் நிற்பதை கண்ட ஆண்கள் தங்கள் இணைகளின் தோளை ஆதரவாகப் பற்றிக்கொண்டனர் என்றால், திருவோ சூர்யாவின் அருகில் செல்லாமல் கண்களாலேயே சமாதானம் கூறினான். அதை அவள் புரிந்து கொண்டாலும் அவன் மேல் இருக்கும் கோபத்தில் முகத்தை திருப்பி கொண்டாள்.

திருவும் ஒரு பெருமூச்சோடு “இவ என்னைக்கு தான் மாறப் போறாளோ தெரியல” என்று நினைத்துக் கொண்டான். அதன் பின் அனைவரும் அங்கிருந்து தங்களது இல்லம் நோக்கி சென்றனர்.

பூஜாவை விமானத்தில் ஏற்றி விட்டு தங்கள் வீட்டிற்கு வந்த பிரபாவும் மதுவும் தங்களுக்குள் ஏதோ பேசிய படியே உள்ளே நுழைய அங்கு ஹாலில் அமர்ந்திருந்த பிரபாவின் பெற்றோர்களும் வீட்டில் உறுப்பினர்களும் அவர்களை முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தனர்.பிரபா அதை சற்றும் கண்டுகொள்ளாமல் தன் அறை நோக்கி செல்ல முனைய, அவனை தடுத்து நிறுத்திய அவன் தந்தை “பிரபா என்ன இது நேரம் கெட்ட நேரத்தில் வெளியில போயிட்டு வரீங்க” என்று அதிகாரமாக கேட்டார்.

அதில் கோபம் வர பெற்றவனாய் “என்னப்பா இது நான் என்ன சின்ன பையனா எங்க போனாலும் உங்ககிட்ட சொல்லிட்டு போறத்துக்கு அது மட்டும் இல்லாம இந்த நேரத்தில் வெளியில போயிட்டு வந்தா என்ன கெட்டுப் போய்விடும். என்னோட பொண்டாட்டி கூட தானே போயிட்டு வரேன்.இதுல உங்களுக்கு என்ன பிரச்சனை”என்று கேட்க,

அவனது தாயோ ஆங்காரமாக “அதுதான் பிரச்சனையே.நேரம் கெட்ட நேரத்தில் பொம்பள பிள்ளைய எதுக்கு வெளில கூட்டிட்டு போயிட்டு வரனும்.நம்ம குடும்பத்துல இது மாதிரி என்னைக்கு நடந்திருக்கு”என்று தன் மருமகளை மறைமுகமாக சாடினார்.

பிரபாவோ அதில் மேலும் கோபம் கொண்டவன் “அம்மா சும்மா சும்மா அவளை ஏதாவது குறை சொல்ல காரணம் தேடிட்டே இருக்காதீங்க. புருஷன் பொண்டாட்டி வெளியில் போயிட்டு வர்றதுக்கு கூட இந்த வீட்டில் உரிமை இல்லையா” என்க,

அவனது தாயோ “இருக்குப்பா இருக்கு அதெல்லாம் இருக்கு ஆனா இது குடும்பம் நடத்துற இடம் உங்க இஷ்டத்துக்கு ஹோட்டல் மாதிரி வந்துட்டு போக கூடாது.இதோ நிற்கிறாளே உன் பொண்டாட்டி என்னைக்காவது இந்த வீட்டு மருமக மாதிரி நடந்து இருக்காளா. இதுக்கு முன்னாடிதான் படிச்சிகிட்டு இருந்தா இப்போ படிப்பும் முடிஞ்சிடுச்சு இல்ல இப்ப வீட்டு வேலை பார்த்துட்டு வீட்டோட அடக்கமா இருக்கிறாளா, ஒன்னு உன் கூட வெளியில சுத்தறா இல்ல அவளோட ஃப்ரெண்ட்ஸ் கூட வெளியில சுத்துறா, நானும் பார்த்தாலும் பார்த்தேன் இப்படி ஒரு மருமகள பார்த்ததே இல்லை.எதுக்கு இவளை கட்டி இங்க கூட்டிட்டு வந்தேனு கூட எனக்கு தெரியல” என்று அவனுக்கு மேல் கோபமாக கத்த, அதில் கடுப்பின் உச்சிக்கே சென்றான் பிரபா.

பிரபா, “போதும்மா எல்லாத்துக்கும் அவளையே குறை சொல்லிக்கிட்டு இருக்காத்தீங்க,நீங்க உங்க பொண்ணுங்கள நடத்துற மாதிரிதான் இவளையும் நடத்துறீங்களான்னு கொஞ்சம் யோசிங்க எல்லாரையும் ஒரே மாதிரி நீங்க முதல்ல பாருங்க அப்புறம் அடுத்தவங்கள சொல்லலாம்” என்றவன் மேலும் “இதுக்கு மேல என் வைப் பத்தி யாரும் கமென்ட் பண்ண கூடாது” என்று உறுதியாக கூறியவன் அவளை அழைத்துக்கொண்டு தங்கள் அறை நோக்கி சென்றான்.

மது ஏற்கனவே பூஜா பிரிந்துசென்றதால் கலங்கிப் போய் இருந்தவள் இப்போது வீட்டில் இருப்பவர்களும் தன்னையே குறை சொல்வதை கண்டு முகம் வாடி போனாள்.அதை கண்ட பிரபாவின் மனது மனைவிக்காக வருந்தியது.

முதலில் இந்த மாமியார் மருமகள் சண்டைக்கு ஏதாவது ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று யோசித்தவன் வெகுநேரம் சிந்தனைக்குப் பிறகு ஒரு முடிவெடுத்தான்.

அதன்படி அடுத்த நாள் தன்னுடைய அலுவலகத்தில் கிருஷ்ணாவை சந்தித்தவன் தான் எடுத்த முடிவு பற்றி கூற அவனும் சற்று நேரம் யோசித்தவன் “எனக்கு ஓகே தான் கண்டிப்பா நாம இதை பண்ணலாம்” என்று கூறிவிட பிரபாவுக்கு அப்பொழுது தான் நிம்மதி பிறந்தது. அதன்படி தான் செய்ய நினைத்த காரியத்திற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் பிரபா வேகமாக செய்ய ஆரம்பித்தான்.

அங்கு சூர்யா, அபி இருவரும் தங்களது ஐந்தாவது வருட மருத்துவ படிப்பில் காலெடுத்து வைத்திருந்தனர். ப்ரீத்தி மேற்படிப்பில் பெரிதாக ஆர்வம் இல்லை என்றுவிட ,அவளது வீட்டினரும் அதை பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. எப்படியும் வேறு வீட்டிற்கு வாழப் சென்று கஷ்டப்பட போகிறாள். அதுவரை தங்களுடைய வீட்டில் சந்தோஷமாக இருக்கட்டும் என்று விட்டுவிட்டனர்.அவளும் வீட்டில் முடங்கி இருப்பது கிருஷ்ணாவோடு வெளியில் சுற்றுவது என்று நேரத்தை கடத்திக் கொண்டு இருந்தாள்.

இப்படியே இரண்டு மாதங்கள் கழிந்தது. சூர்யா கல்லூரியின் மரத்தடியில் கன்னத்தில் கை வைத்தவாறு அமர்ந்து திருவின் செயல்களைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தாள். இப்பொழுது எல்லாம் திரு அவளை கண்டுகொள்வதே இல்லை அவள் எதிரில் வந்தாலும் நேராக பார்த்துக் கொண்டோ அல்லது தன் போனில் பேசிக் கொண்டோ சென்று விடுவான்.அவனின் அந்த செயல் அவளை மிகவும் தாக்கத்தான் செய்தது. அவன்தான் என் மனதில் இல்லை பிறகு ஏன் அவன் என்னை கண்டு கொள்ளாமல் சென்றாலும் எனக்கு வருத்தமாக இருக்கிறது என்று யோசித்துக் கொண்டிருந்தாள்.

அப்பொழுது அவள் அருகில் வந்த அபி சாதாரணமாக பேச துவங்கியவள் சூர்யாவிடம் இருந்து பதில்வராததை கவனித்து அவள் முகத்தை பார்க்க அவளோ ஏதோ யோசனையுடனும் கண்களில் அலைபுறுதலுடனும் இருப்பதையும் கண்ட அபி அவளின் நிலையை புரிந்து கொண்டாலும் வேண்டுமென்றே தெரியாதது போல் “என்ன ஆச்சுடி ஏன் உன் முகம் வாடி போய் இருக்கு” என்று கேட்க, அவளோ “இல்ல ஒன்னும் இல்லை” என்றாள் தடுமாற்றத்துடன்.அபியும் அவளை ஆழ்ந்து பார்த்தவள் பின் எதுவும் பேசாமல் விட்டுவிட்டாள்.

அதன் பின் சூர்யாவிற்கு எந்த மாற்றமும் இல்லாமல் நாட்கள் சாதாரணமாக சென்று கொண்டிருந்தது.ஒரு நாள் கல்லூரி முடிந்து வீட்டிற்குள் வந்தவள் அவளது வீட்டு உறுப்பினர் அனைவரும் ஒன்றாக அமர்ந்து தீவிரமாக பேசிக் கொண்டிருப்பதை பார்த்தவள் மனதில் “எதாவது முக்கியமான விஷயமா இல்லை பிரச்சனையா இருக்குமோ”என்று எண்ணியவள் அவர்களிடம் கேட்டுவிட எண்ணி “எல்லாரும் என்ன சீரியஸா பேசிட்டு இருக்கீங்க” என்றாள்.

ராஜ், “உட்காருமா உங்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும். உனக்காகதான் வெயிட்டிங்”என்று கூற,அவளோ புருவம் சுருங்க யோசித்தவள் “என்னப்பா என்ன விஷயம்” என்று கேட்க, அவரோ “இல்லமா ஒரு நல்ல வரன் வந்து இருக்கு,அதுதான் உடனே முடிச்சிடலாம் யோசிச்சுகிட்டு இருக்கோம் நீ என்ன சொல்ற”என்றார்.

தந்தையின் கேள்வியில் அதிர்ந்து போனவளின் மனதில் மின்னலென திருவின் முகம் வந்து சென்றது. இருந்தாலும் தன்னை சமாளித்து கொண்டவள் “அ…..அது அப்பா என்ன திடீர்னு”என்று திணறியபடி விழிக்க, அவரோ “இல்லம்மா நல்ல வரன் அதான் உடனே முடிச்சிடலாம்னு பார்க்கிறோம்” என்றார்.

சூர்யா, “இல்லப்பா இன்னும் ஒரு வருஷம் படிப்பு இருக்கு அதுதான் யோசிக்கிறேன்” என்று கூற,அவரோ உடனடியாக “அதெல்லாம் மாப்பிள வீட்ல பேசிட்டேன்மா அவங்க கல்யாணம் ஆனதுக்கு அப்புறம் படிக்கட்டும்ன்னு சொல்லிட்டாங்க” என்று மலர்ந்த முகத்தோடு கூற,இதற்கு மேல் எப்படி என்ன பேசுவது என்று தடுமாறியவளின் நினைவில் அன்று திரு பேசியது நினைவில் வர என்ன நினைத்தாளோ தன் சம்மதத்தை தந்தையிடம் தெரிவித்துவிட்டு வேகமாக தன் அறைக்குள் சென்று அடைந்து கொண்டாள்.

என்னதான் தந்தையிடம் சம்மதம் தெரிவித்துவிட்டு வந்தாலும்,அவள் மனம் மிகவும் பாரமாக இருந்தது. திருமணம் என்றாலே அவள் நினைவு திருவை நோக்கி செல்ல, தன் நினைவு செல்லும் பாதையை கண்டு குழம்பியவள் “எனக்கு ஏன் மனசு இவ்ளோ கஷ்டமா இருக்கு. திருமணம் என்று சொன்னவுடனே அவன் ஏன் என் கண் முன் வந்தான்” என்று பல கேள்விகளுடன் தலையை பிடித்துக் கொண்டு அமர்ந்து விட்டாள்.

ஆனால் இவ்வளவு நாட்களும் யாரை தான் விரும்பவில்லை, விரும்பவில்லை என்று சொல்லி கொண்டு இருந்தாளோ அவன் அவள் மனதில் எப்போதோ சிம்மாசனம் இட்டு அமர்ந்துவிட்டான் என்பதையும், தனக்குள் தோன்றிய இந்த உணர்வுக்கு பெயர்தான் காதல் என்பதையும் அறியாமல் போனதை என்னவென்று சொல்வது. அவளது காதலை எப்போது உணர்ந்து கொள்ள போகிறாளோ அதற்குள் திருவின் அதிரடி எப்படி இருக்க போகிறதோ விதியின் கையில் அனைத்தும்.

சூர்யாவின் நிலை இப்படி இருக்க அங்கு மதுவின் வீட்டில் குடும்பத்தினர் அனைவரையும் பிரபா வர சொல்ல,அனைவரும் “என்ன, ஏது” என்று புரியாமல் குழுமியிருந்தனர்.சரியாக எட்டு மணிக்கு உள்ளே நுழைந்தவன் கைகளில் ஒரு பைல் இருந்தது.

அனைவரும் “அது என்ன” என்பது போல் யோசனையாக பார்த்திருந்தனர்.பிரபா அந்த பைலை அவர்கள்முன் வைத்தவன் “இது நம்மளோட ரெஸ்டாரன்ட்டோட பிராஞ்ச சிங்கப்பூர்ல ஓபன் பண்றதுகான அப்ரூவல்” என்று கூற அனைவரும் இந்த செய்தியில் மிகவும் மகிழ்ந்தனர் .

மதுவும் இதை எதிர்பார்க்காதவள் தன் கணவனை எண்ணி பெருமைப்பட்டாள் ஆனால் அடுத்து அவன் சொன்ன செய்தி அனைவரையும் அதிர வைத்தது என்றால் மதுவோ என்ன கூறுவது என்று புரியாமல் திகைத்துப் போய் நின்றாள்.

அவர்களின் திகைப்பிற்கான காரணத்தை அடுத்த எபியில் பார்க்கலாம்…….
 
Status
Not open for further replies.
Top