All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அஜ்வந்தியின் 'வண்ணங்களின் வசந்தம்' - கதை திரி

Status
Not open for further replies.

Sonythiru

Suthisha
23658


அத்தியாயம் -17

பூஜா தோழிகளிடம் கத்திவிட்டு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியபடி, முகத்தை உரென்று வைத்துக் கொண்டு அமர்ந்திருக்க,அவ்வளவு நேரமும் எதற்கு அவள் கத்துகிறாள் என்று தெரியாமல் பேந்த பேந்த விழித்துக்கொண்டிருந்த நால்வரும் “ஹப்பாடா முடிச்சுட்டா” என்ற நிம்மதி பெரு மூச்சுவிட்டனர்.

அபிதான் முதலில் பூஜாவிடம் "என்னாச்சுடி" என்று கேட்க,அவள் கேள்வியில் கடுப்பான பூஜா "ம்.........னொன்னாச்சு அந்த லூசுங்க இருக்காங்கல்ல,அதுங்க என்ன சொல்லுதுங்க தெரியுமா, அவங்க ரெண்டு பேரும் சூப்பர் பேராம், அவங்களுக்குள்ள இருக்க கெமிஸ்ட்ரி செம்மையா இருக்காம், அவங்க ஒரிஜினல் பேர் ஆனா கூட நல்லா இருக்கும்னு பேசிக்குதுங்க. டான்ஸ் ஒன்ன ஆடுறதுனால மட்டும் அர்ஜுனும், அந்த பொண்ணும் நல்ல பேர் ஆகிடுவாங்களா,எனக்கு வர கோவத்துக்கு .......” என்று பல்லை கடித்தவள் பின் “ஒன்னா டான்ஸ் ஆடறவங்கள எல்லாம் பேர்னா சொல்லுவாங்க, கூட ஆடறவங்கனு சொன்னா ஆகாதா" என்று கேட்க,மதுவோ "காலம் காலமா அப்படி தான்டி சொல்லிட்டு வராங்க" என்றாள்.

அவளை முறைத்த பூஜா "கூட டான்ஸ் ஆடுறவங்க பேர் இல்லை. நானும் அர்ஜுனும் தான் பேர்”என்று மிடுக்காக கூறினாள். உடனே ப்ரீத்தி “நீ எங்களோட பிரண்டுங்கரத்துக்காக எல்லாம் எங்காளால பொய் சொல்ல முடியாது. கூட ஆடறவங்கள பேர்னுதான் சொல்லுவாங்க,நீ நம்பலாட்டியும் அதான் நெசம்" என்று சொல்ல ,அபியும் “ஆமா ஆமா அவங்கதான் பேர்.என்னடி அப்படிதானே”என்று சூர்யாவிடம் கேட்டாள்.

இவர்களின் பேச்சு எதிலும் கலந்து கொள்ளாமல் திருவைபற்றி யோசித்து கொண்டிருந்த சூர்யா,அபி ஏதோ கேட்கவும் முதலில் விழித்தவள் பின் “ம்..... ஆ. ஆ.ஆமா..... ஆமா” என்று தலையாட்டி வைத்தாள்.

சூர்யாவின் பதிலிலேயே அவள் தங்களுடைய பேச்சை கவனிக்கவில்லை என்பதை புரிந்து கொண்ட அபி “என்னடி ஆச்சு ஏன் சோகமா இருக்க, நேத்துல இருந்தே நீ சரி இல்லையே ” என்று கேட்க அவளோ மலுப்பாலாக “இல்லைடி ஒன்னும் இல்ல” என்றாள். அவளை அனைவரும் நம்பாத பார்வை பார்க்க, பூஜாவோ “இல்லடி என்னமோ இருக்கு, இவ நம்மகிட்ட மறைக்கிறா.” என்றாள்.அவள் சொல்வதை கேட்டு சூர்யாவை யோசனையாக பார்த்த மது “சோ............... எங்ககிட்ட மறைக்கிற அளவுக்கு ஏதோ ஒரு பெரிய விஷயம் இருக்கு அப்படிதானே” என்று கேட்க, அவர்களின் பேச்சை இடை நிறுத்திய அபி,சூர்யாவை ஆராயும் பார்வை பார்த்தவள் “இப்போ உன்னால சொல்ல முடியுமா, முடியாதா” என்று அழுத்தமாக கேட்டாள்.அவள் கேள்வியில் தலை குனிந்தவள் பின் இதை மறைத்து பயனில்லை என்ற முடிவிற்கு வந்தவளாக, ஒரு பெரு மூச்சுடன்,திருனேஷ் பற்றிய அனைத்தையும் சொல்லிவிட்டாள். ஆனால்,ஏனோ லிப்டில் நடந்த விஷயத்தையும்,அவன் தான் ஸ்கூல் படிக்கும் போது காதலை சொன்னவன் என்பதையும் கவனமாக மறைத்துவிட்டாள்.

சூர்யா சொல்வதை கேட்ட அபி மற்றும் பூஜாவிற்கு கோபம் ஏகத்துக்கும் எகிறியது.
அபி, “எவன்டி அது.அவன் இவளோ பேசற வரை நீ அமைதியா கேட்டுட்டு இருந்தியா,அங்கேயே ஓங்கி ஒரு அரை அரைஞ்சுட்டு வரமாட்ட”என்று திட்ட,சூர்யாவோ ‘அவன் பக்கத்துல போனாலே படபடப்பாகி எனக்கு பேச்சே வர மாட்டேங்குது , இதுல எப்படி அறைய’என்று யோசித்து கொண்டு இருந்தாள்

அப்போது பூஜா, “இவ எங்க அடிக்க போறா இவ வீரம் எல்லாம் நம்மகிட்டதான், மத்தவங்ககிட்ட பேசினா வாயில இருக்க முத்து உதிர்ந்துடும் அப்படிதானே. ஏன்டி இதை முன்னாடியே எங்ககிட்ட சொல்றதுக்கு என்ன . இப்போவும் அபி அழுத்தி கேட்கவும் தான் சொல்லிருக்க”என்று திட்டி கொண்டிருக்கும்போதே, சரியாக அங்கு வந்து சேர்ந்தான் அர்ஜுன்.“ஹாய் என்ன எல்லோரும் சீரியசா பேசிட்டு இருக்கீங்க. ஏதாவது ப்ரோப்லம்மா” என்று கேட்க, பூஜாதான் அவனிடம் அனைத்தையும் தெரிவித்தாள்.

அவள் சொல்வதை யோசனையோடு கேட்ட அர்ஜுன் “யார் அவன்”என்று கேட்க, அனைவரும் இப்போது சூர்யாவை பார்த்தனர். ஏனென்றால் அவன் யாரென்று அவர்களுக்கும் சூர்யா சொல்லியிருக்கவில்லை .

தோழிகளின் பார்வையை உணர்ந்தவள். அவன் இங்குதான் இருக்கிறான் என்ற சூர்யாவின் உள் உணர்வு சொல்ல திருனேஷை அடையாளம் காட்ட எண்ணி கண்களை சுழலவிட்டாள். அவள் எண்ணத்தை பொய் ஆக்காமல் அவர்கள் அமர்ந்திருந்த இடத்தில் இருந்து சற்று தொலைவில் நின்று யாருடனோ பேசி கொண்டு இருந்தான் திருனேஷ்.

உடனே கைகளை உயர்த்தி “அதோ அந்த பிளாக் ஷர்ட்........... அவன்தான்” என்று சொல்ல, அனைவரின் பார்வையும் அவள் கை காட்டிய பக்கம் திரும்பியது.

அர்ஜுன் அங்கு நின்றிருந்த திருனேஷை வெறித்து பார்த்தபடி இருக்க,பூஜாவோ “போ அஜூ அன்னைக்கு என்னைய அசிங்கமா பேசுனவங்கள எப்படி வெளுத்து வாங்குனியோ அது மாதிரி அவனை புரட்டி எடு”என்று சொல்ல,அபியும்”ஆமா அர்ஜுன் நீங்க அடிக்கற அடில இனி அவன் சூர்யா இருக்கற பக்கம்கூட திரும்ப கூடாது”என்றாள். ஆனால் அவனோ மறுப்பாக தலையசைத்து “என்னால அவன்கிட்ட பேச முடியாது. நான் எதுவும் யார்கிட்டயும் கேட்க மாட்டேன்”என்றான். அதில் கடுப்பான சூர்யா “யாரும் எனக்காக பேச வேண்டாம். என் பிரச்சனையை , நானே பாத்துக்கறேன்” என்று கோபமாக சொல்லிவிட்டு அங்கிருந்து செல்ல, மற்றவர்கள் அனைவரும் அதிர்ந்து “ஹேய் சூர்யா”என்று அவள் பின்னோடு செல்ல முயற்சிக்க, அவர்களின் புறம் திரும்பியவள் “நான் கொஞ்சம் தனியா இருக்கணும் என்னை விடுங்க” என்றவள் அங்கிருந்து சென்றுவிட்டாள்.
அவள் செல்வதை பார்த்து கொண்டிருந்த அர்ஜுனை மற்ற மூவரும் முறைக்க அவர்களை சிறு சலிப்புடன் பார்த்தவன் பூஜாவை பார்க்க அவளும் அவனைதான் முறைத்து கொண்டிருந்தாள். அதில் மேலும் கடுப்பானவன் “ அவதான் உண்மை புரியாம கத்திட்டு போறானா நீங்களும் எதுக்கு என்னை முறைக்கிறீங்க”என்றான்.

அர்ஜுன் சொல்வதை புரியாமல் பார்த்த அபி “என்ன உண்மை”என்று கேட்க,அர்ஜுனோ, “சூர்யா சொன்ன திருனேஷ் யாரு தெரியுமா ஸ்கூல்ல அவளுக்கு ப்ரொபோஸ் பண்ணி, . அதில் பிரச்சனை ஆகி டீ சி வாங்கிட்டுபோனவன்”என்று சொல்ல நால்வரும் அதிர்ச்சிச்சியுடன் ஒரே நேரத்தில் “வாட்”என்று கத்தினர். அவர்களின் அதிர்ச்சியை பார்த்து வந்த சிரிப்பை அடக்கியவன்,’ஆமாம்’ என்னும் விதமாக தலையை மட்டும் ஆட்டினான்.

உடனே மது பேசிக்கொண்டிருந்த அனைத்தையும் மறந்தவளாக “அப்படினா நாம அவர்கிட்ட பேசியே ஆகணும் வாங்க போலாம்” என்று சொல்ல பூஜாவை தவிர்த்து மற்ற மூவரும் திருனேஷை சந்திக்க சென்றுவிட்டனர்.

பூஜா மட்டும் அர்ஜுனை முறைத்து கொண்டே “நீ சொல்றது உண்மைதானா,இது எப்படி உனக்கு தெரியும்.அது மட்டும் இல்லாம அவர்தான் அந்த பையன்னு நீ எப்படி கன்பார்மா சொல்ற ” என்று ஒரே கேள்வியையே வெவ்வேறு விதமாக கேட்க, அவனும் பெரு மூச்சுடன் பள்ளியில் நடந்ததை சொல்ல ஆரம்பித்தான்.

அர்ஜுன், “பாரு பேபி அவனும் நானும் சின்ன வயசுல இருந்தே பெஸ்ட் பிரண்ட்ஸ், எங்களுக்குள்ள எந்த ஒளிவு மறைவும் இருந்தது இல்லை, நாங்க லெவந்த் படிக்கும்போதுதான் அவன் சூர்யாவை லவ் பண்ண ஆரம்பிச்சான்.அதை என்கிட்டயும் சொன்னான். நான்தான் அதுக்கான வயசு உனக்கும் இல்லை அந்த பொண்ணுக்கும் இல்லை,இது ஒரு வேலை பாஸ்ஸிங் கிளவுட்ஸ் மாதிரி மறஞ்சு போகவும் வாய்ப்பிருக்கு, அதுவும் இல்லாம ஏய்த் படிக்கற குட்டி பொண்ணு அது . நீ போய் சொல்லி அதோட படிப்பும் வீணாக கூடாதுனு சொல்லி இருந்தேன். அப்போ எல்லாம் சரி சரினு மண்டைய ஆட்டிட்டு அப்புறம் வந்து ப்ரொபோசும் பண்ணிட்டு என்கிட்டே கூட சொல்லாம டீசி வாங்கிட்டே போய்ட்டான். அதுக்கு அப்புறம் எங்களுக்குள்ள எந்த காண்டாக்ட்டும் இல்லை. அவனை மீட் பண்ணலாம்னுதான் அவங்க காலேஜ்லையே சேர்ந்தேன். ஆனா நான் சொன்னதை கேக்கலையேனு ஒரு கோபம் அதான் பேசல. ஆனாலும் சின்ன வயசுல இருந்து இருக்க நட்பு, இப்போ இல்லைனு நினைக்கும்போது மனசு கஷ்டமா இருக்கு”என்றான் நண்பனை இழந்த உண்மையான கவலையோடு.

பூஜா, அவன் மனதை புரிந்து கொண்டு ஆறுதலாக அவன் கையை பற்றி“எல்லாம் சரியாகும். சீக்கிரமே ரெண்டு பேரும் முதல்ல மாதிரி ஒன்னா சுத்துவீங்க பாருங்க” என்று சமாதானமாக பேசியவள் பின் அவன் கவனத்தை திசை திருப்பும் பொருட்டு வேறு பேச்சு பேச ஆரம்பித்தாள். அர்ஜுனும் ஓரளவு தன்னை சமாளித்து கொண்டு அவள் பேச்சில் இணைந்து கொண்டான். நேரம் காலம் தெரியாமல் இளங்காதலர்கள் இருவரும் ஸ்வீட் நதிங்ஸ் பல பேசினர்..

அங்கு திருனேஷை சந்திக்க சென்றவர்கள், அவன் போனில் யாருடனோ பேசிக்கொண்டிருக்க, மூவரும் அவனை சுற்றி முறைத்து கொண்டு நின்றனர். அவர்களை பார்த்து சிறு சிரிப்புடன் போனை கட் செய்தவன். “என்ன ஆச்சு ஏன் என்னை முறைக்கிறீங்க”என்று கேட்க, முதலில் ப்ரீத்திதான் “ஏன் சீனியர் நீங்க என்கிட்ட சொல்லல, ஸ்கூல்ல பண்ணுனதுக்குதான் பழி வாங்க என்னை கொட்டுனீங்களா” என்றாள்.

ப்ரீத்தி சொல்வதை கேட்டவன் மற்ற இருவரையும் பார்த்து “ஒருவழியா உண்மை தெரிஞ்சுடுச்சு போல”என்று கேட்டான். மதுவும், அபியும் ஒரே மாதிரி தலையாட்ட அவர்களின் செயலில் சிரித்தவன் “அப்புறம் எங்க உங்க கும்பல்ல எண்ணிக்கை கம்மியா இருக்கு”என்று கேட்டான்.
அபியோ “நாங்க எதுக்கு வந்துருக்கோம்னு கேக்காம உங்க ஆளை காணோமேணு மட்டும் கேக்குறீங்க”என்று புருவம் உயர்த்தினாள்.

உடனே ஒரு அசட்டு சிரிப்பை உதிர்த்தவன் “ஓகே கேக்குறேன். எதுக்கு வந்தீங்கனு சொல்லுங்க”.

அபி, எங்களுக்கு சில டவுட் இருக்கு அது எல்லாம் கிளியர் பண்ணிக்கணும்.
திருனேஷ், “என்ன டவுட்.....”.
அபி,கேன்டீன்ல போய் பேசலாமே எவ்வளவு நேரம் இங்க நின்னுட்டே பேசறது”என்றவள் சொல்ல, ப்ரீத்தியும் “ஆமாம் ஆமாம் அங்க போனாதான் சாப்பிட்டுகிட்டே பேச முடியும்” என்று சொல்லியபடி முன்னால் சென்றாள்.

மற்றவர்களும் கேன்டீன் சென்று அங்கியிருந்த இருக்கையில் அமர்ந்தனர்.திருனேஷை ஆராய்ச்சியாக பார்த்த அபி, “நாங்க விளையாட்டா இருந்தாலும் தப்பு பண்ண மாட்டோம்,அதே மாதிரி பிரண்ட்ஸ விட்டு குடுக்கவும் மாட்டோம்.நீங்க சூர்யாகிட்ட சொன்னதை எங்ககிட்டயும் சொன்னாள், அது மட்டும் இல்லாம ஸ்கூல்ல பிரப்போஸ் பண்ணுனவரு நீங்கதான்னு எங்களுக்கு இப்போதான் தெரியும், உண்மையாலுமே நீங்க அவளை லவ் பண்றீங்களா இல்லை டைம் பாஸ்பண்ண அப்படி சொன்னீங்களா? எங்க பிரண்டு லைப் எங்களுக்கு முக்கியம்”என்றாள்.

மது, ஆமாம் உங்களால அவ ரொம்ப டிஸ்டர்ப் ஆகிட்டா,நேத்துல இருந்து அவ நார்மலாவே இல்லை என்று சொல்ல.ப்ரீத்தியும் “ஆமாம் சீனியர் நீங்க என்னை கொட்டுனாலும் பரவால்லை, இதை சொல்லியே தீருவேன் அவ ஜாலியா பேசுனாலும் சுத்துனாலும் சில பல விஷயங்கல்ல நீதிடா, நேர்மைடா, நியாயம்டானு சொல்றவ, இப்படித்தான் இருக்கணும்னு பெரிய ரூல்ஸ் லிஸ்ட்டே வச்சிருக்கா, அந்த லிஸ்ட்ல முதல்ல இருக்கறதே நோ லவ்தான். வீட்ல பார்க்கற பையன மேரேஜ் பண்ணிட்டு நிம்மதியா இருக்கணும்கராதுதான்.அதனால நீங்க டைம் பாஸ் பண்ண வேற பொண்ண பாத்துக்கோங்க என்றாள்.

மூவர் பேசுவதையும் பொறுமையாக கேட்ட திருனேஷ் “ம்..... பரவால்லை உங்களை சேட்டைபண்ற விளையாட்டுதனமான பொண்ணுங்கனுதான் நினைச்சேன். ஆனா பிரண்டு லைப் அப்புடின்னு வந்துட்டா ரொம்ப விவரமாதான் இருக்கீங்க. உங்க பேச்சு மேலோட்டமா பார்த்தா விளையாட்டுதனமா தெரிஞ்சாலும் அதுல முழுக்க முழுக்க உங்க பிரண்டு மேல இருக்க அக்கறைதான் எனக்கு தெரியுது. சூர்யாவ நான் லவ் பன்னினேன், பண்றேன், இதுக்கு அப்புறமும் பண்ணுவேன். அவ என்னோட வைப்”என்று சொல்ல, மற்ற மூவரும் அதிர்ந்து “வாட்”என்று கத்தி இருந்தனர்.

அவர்களின் அதிர்ச்சிச்சியான முகத்தை பார்த்த திரு சிரிப்புடன் “ஷாக்க குறைங்க.... ஷாக்க குறைங்க நீங்க எல்லாம் இல்லாமையா எங்க மேரேஜ் நடக்க போகுது. நான் ஸ்கூல்லயே முடிவு பண்ணிட்டேன் அவதான் என் பொண்டாட்டினு, அந்த நினைப்புலதான் நான் இன்னமும் இருக்கேன்” என்றான் அழுத்தமாகவும் தெளிவாகவும்.

திருவின் தெளிவான பேச்சு மூவருக்கும் அவன் மேல் நம்பிக்கையை ஏற்படுத்த முதலில் அபி “என்ன சீனியர் இப்படி வந்து மாட்டிக்கீட்டங்க அவளை லவ் பண்ண வைக்கறது ரொம்ப கஷ்டம் ஆச்சே என்ன பண்ண போறீங்க”என்றாள்.

மூவரையும் பாவமாக பார்த்த திரு அரசியல்வாதிகள் ஓட்டு கேட்க கும்பிடுவது போல் கைகளை தலைக்கு மேல் உயர்த்தி தெய்வமே நீங்கதான் எனக்கு உதவனும்”என்று சொல்ல, அவனை பார்த்து சிரித்த ப்ரீத்தி “ஹை நானும் உங்களுக்கு தெய்வமா சீனியர், சாமிய யாரும் கொட்ட கூடாது அப்போ இனிமே நீங்க என்னை கொட்ட மாட்டிங்கதானே சீனியர்”என்று கேட்க, திருவோ அபியையும், மதுவையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு ப்ரீத்தி அருகில் வந்தவன் அவள் தலையில் டபுள் கொட்டாக கொட்டிவிட்டு “உன்னாலதான் என்னோட லவ் ஸ்கூல்ல பிரிஞ்சுது அதனால உன்னோட கோட்டா வழக்கம்போல் உண்டு” என்றான் நக்கல் சிரிப்புடன்.

திருனேஷ் கொட்டியதால் உண்டான வலியில் முகம் சுருக்கி தலையை தேய்த்து கொண்டே “இது எல்லாம் அநியாயம் சீனியர் ஸ்கூல்ல நடந்தது ஸ்கூலோட முடிஞ்சு போச்சு.நான் வேணா உங்க லவ்க்கு ஹெல்ப் பண்றேன் எல்லா கோட்டையும் அழிங்க பர்ஸ்ட்ல இருந்து கோடு போடலாம் மீ பாவம் சீனியர்” என்று அப்பாவியாக முகத்தை வைத்துக்கொண்டு சொல்ல அவனும் சற்று நேரம் யோசித்தவன் “சரி போ இனி ஏதாவது லூசுதனமா செஞ்ச கோடாவது ஒன்னாவது அப்புறம் கொட்டுதான்“ என்றான்.

இவர்கள் பேசியதை சிரிப்புடன் பார்த்து கொண்டிருந்த மது திருவிடம் “எச்சுச்சுமி சீனியர் நல்ல யோசிச்சு சொல்லுங்க அந்த பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணுமா”என்று கேட்க, அவனும் அசடு வழிய சிரித்தவன் “ஆமாம்” என்னும் விதமாக தலையாட்ட “மூவரும் கோராசாக விதி வலியது”என்று சொல்ல,அதை கேட்டு பாவமாகவே அவர்களை பார்த்திருந்தான். பின் அபிதான் சரி விடுங்க சீனியர் எவளோவோ பண்ணிட்டோம் இதை பண்ண மாட்டோமா நாங்க ஹெல்ப் பன்றோம்” என்றுவிட்டு “சந்தேகத்தோட வந்தோம் இப்போ கிளியர் ஆகிடுச்சு சந்தோஷமா கிளம்பறோம் ”என்றவர்கள் அவனின் மொபைல் நம்பரை வாங்கி கொண்டு சென்றனர்.

திருவும் மூவரும் உதவுவதாக சொன்ன மகிழ்ச்சியில் முகம் முழுவதும் புன்னகையுடன் வகுப்பிற்கு சென்றான்.

அர்ஜுன் பூஜா இருவரும் பேசி கொண்டிருக்க அவ்விடம் வந்த மூவரையும் பார்த்து பூஜா “என்ன ஆச்சு”என்று கேட்க,அவர்களும் அங்கு நடந்த அனைத்தையும் கூறினர். பூஜாவும் சற்று நேரம் யோசித்தவள் “ஓகே அவருக்கு ஹெல்ப் பண்ணாம வேற யாருக்கு பண்ண போறோம் டன் டன்” என்றாள்.
அதன்பின் அர்ஜுன் அங்கிருந்து கிளம்பிவிட, அதன் பின் பூஜா அர்ஜுன் கூறிய அனைத்தையும் சொன்னாள்.உடனே அபி “விடுடி விடுடி நாமளும் பிரண்ட்ஸ் அது மாதிரி நமக்கு வர்றவங்களும் பிரண்டாதான் இருக்கணும் நாம அவர்களை சேர்த்து வைப்போம், இல்லை முடியாது அப்படினு அவங்க பிடிவாதமா இருந்தாங்கனா அவங்க நமக்கு தேவை இல்லை. நட்பு முக்கியம் பிகிலு........ நட்புக்காக தியாகம் பண்றது தப்பு இல்லை ” என்று சொல்ல, பூஜாவோ “ஹையையோ ஒருத்தி லவ்வுக்கு ஹெல்ப் பண்றேன்னு சொல்லிட்டு வந்துட்டு நம்ம லவ்க்கு சங்கு ஊதிட்டுவாங்க போலயே. தியாகமா.....அபசகுணமா பேசறாளுங்களே , உங்களுக்கு எல்லாம் எவனும் செட் ஆகலைங்கர தைரியத்துல தியாகம்னு சொல்லறீங்களேடி அது எனக்குதான்டி சோகம் ”என்று மனதில் புலம்பி கொண்டாள்.

மது,“ஆனாலும் வளச்சு வளச்சு சைட் அடிச்ச நமக்கு இல்லை சும்மா மிச்சர் சாப்பிட்டு இருந்த அவளுக்கு அமைஞ்சுருக்கு பாரு”என்று சூர்யாவை கிண்டல் செய்து அங்காலய்க்க மற்றவர்களும் “ஆமாம்” என்பது போல் தலையசைத்தனர். பின் பூஜாதான் “சரி வாங்கடி ஒருத்தி கோவமா போய் இருக்கா அவளை சமாதானப்படுத்தலாம்”என்க,
ப்ரீத்தியோ “அவ எங்கடி போய் இருப்பா” என்றாள்.
மதுவோ “கழுதை கெட்டா குட்டி சுவரு எங்க இருப்பா லைப்ரரிலதான் இருப்பா வாங்க”என்று சொல்ல நால்வரும் லைப்ரரி நோக்கி சென்றனர்.

அங்கு சூர்யாவோ புக்கை விரித்து வைத்துவிட்டு சுவரை வெறித்து கொண்டு அமர்ந்து இருந்தாள். மனதிலோ “அதுதான் இனி அவனைப்பத்தி யோசிக்க கூடாது பார்க்க கூடாதுனு முடிவு பண்ணியாச்சுல அப்புறம் ஏன் நான் அதையே நினைச்சுட்டு இருக்கேன். ச்ச.... அவன் பண்ணுன வேலைய என்னால எத்துக்க முடியல அதுதான் அவனை நினைக்க காரணம் மத்த படி லவ் என்னோட லைப்ல இல்லை, லவ்வா நானா நெவர்”என்று யோசித்து கொண்டு இருக்க, அவளுக்கு வெகு அருகில் சென்ற ப்ரீத்தி “என்ன தெரிகிறது”என்று கேட்க, அப்போதுதான் நினைவுலகத்துக்கு வந்தவள் அவர்களை “என்ன”என்பது போல் பார்த்தாள்.

அவளை முறைத்த அபி “என்னடி நீ பாட்டுக்கு பொறுப்பில்லாம இங்க வந்து உட்கார்ந்து இருக்க அங்க பூஜா எங்ககிட்ட அவ பாடறத்துக்கு பாட்டு செலக்ட் பண்ணி தர சொல்லி படுத்தி எடுத்திட்டு இருக்கா, ஒழுங்கா எந்திரிச்சு வெளிய வந்து இதுல இருந்து தப்பிக்க ஒரு வழி சொல்லு இல்லை மது அந்த ஹெட் செட்ட குடு இவ அந்த பாட்டை கேட்கட்டும்” என்று சொல்ல சூர்யாவோ பதறி போனவள் “வேண்டாம் வேண்டாம் வாங்க வெளிய போய் யோசிக்கலாம்”என்று வெளியே ஓடி.அவர்களின் பேவரட்டானா இடத்தில் அமர்ந்தனர். பின் நால்வரும் கலகலப்பாக பேசி சூர்யாவின் மன நிலையை மாற்றிய, பின் பூஜா முதலில் புலம்பியதை மீண்டும் ஒரு முறை புலம்பிவிட்டு, தனக்கு ஒரு பாடலை செலக்ட் செய்து தர சொல்ல, நால்வரும் தீவிரமாக யோசிக்க ஆரம்பித்தனர்.

யோசனையில் ஆழ்ந்திருந்த தோழிகளை மகிழ்ச்சி பொங்க பார்த்த பூஜா தான் பாடுவாதற்கான பாடலைதான் அவர்கள் யோசிக்கிறார்கள் என்று நினைக்க, ஆனால் அவர்களோ இவள் பாடுவதை தடுப்பதற்கான வழியை யோசித்து கொண்டு இருந்தனர்.

வெகுநேரமாக யோசித்த சூர்யா ஏதோயோசனை வந்தவளாக முகம் பளிச்சிட அபி மது மற்றும் ப்ரீத்தி மூவரையும் அருகில் இழுத்து அவர்கள் காதில் ஏதோ ஒன்று கூற முதலில் சாதாரணமாக இருந்த அவர்களது முகங்கள் பின் பிரகாசமாக மாறியது. அந்த சந்தோஷத்தில் நால்வரும் hi-fi கொடுத்துக்கொள்ள பூஜா அவர்களை புரியாமல் பார்த்து பின் முறைத்து கொண்டே “இங்க என்ன நடக்குது நாலு பேரும் என்னை விட்டுட்டு என்ன பேசுறீங்க என்று கேட்டாள்.

அவள் கேள்வியில் திரு திருவென விழித்த ப்ரீத்தி “ஒன்னும் இல்லையே, ஒன்னுமே இல்லையே” என்று சொல்ல, அவளை முறைத்த பூஜா “ஒழுங்கா சொல்லிருங்க என்ன?” என்று கேட்க,அபியோ தனக்கு வந்த சிரிப்பை அடக்கியபடி “அது ஒன்னுமில்லடி நீ பாடி எல்லாரையும் என்டெர்டைன் பண்றதுக்கு பதிலா அர்ஜூனோட ஆடி ஏன் என்டர்டைன் பண்ண கூடாது” கேட்டாள்.

அவள் சொல்வதை பற்றி சற்று நேரம் யோசித்த பூஜா “ஆடலாம் ஆனாலும் என்னோட பாட்டு திறமை இந்த காலேஜுக்கு தெரியாமல் போய்விடுமே” என்று சொல்ல, அதற்கு மதுவோ பதறியடித்துக்கொண்டு “அது தெரியாமல் போன போயிட்டு போது உனக்கு அர்ஜுன் வேணுமா வேண்டாமா” என்று கேட்க பூஜா வேகமாக “ஆமாம்” என்று தலையாட்டியவள்,”வேணும் வேணும் நான் டான்ஸே ஆடுறேன்” என்று அவள் சொன்ன பின்புதான் நால்வருக்கும் நிம்மதிப் பெருமூச்சு வந்தது.ஆனால் அந்த நிம்மதி வெகு நேரம் நீடிக்க விடாத பூஜா “ஆனால் எப்படி நான் அர்ஜுன்கூட பேர்ரா ஆடறது,அதுதான் வேற பொண்ணு ஆடுதே” என்று கேட்க, உடனே வேகமாக மதுவும், ப்ரீத்தியும் கோரசாக “அதை பத்தி நீ கவலைப்படாத அந்த பொண்ணு காலை ஒடச்சாவது, உன்ன ஆட வைக்கிறோம்,அது எங்க பொறுப்பு. நாங்க இருக்கோம். நீ சூப்பரா ஆடினா மட்டும் போதும்” என்று சொல்ல, அபியும் பூஜாவும் அவர்கள் சொல்வதை கேட்டு அதிர்ந்து நோக்கினர்.

பூஜாவோ பரவாலையே நம்ம பிரண்ட்ஸ்ங்க அர்ஜுன் கூட என்னை ஆட வைக்க எவளோ கஷ்ட படறாங்க என்று நினைத்து சந்தோஷத்தில் அவர்களை அணைத்து கொண்டு “நண்பேன்டா” என்றாள்.

தோழிகள் நால்வரும் பூஜாவை பாட விடாமல் செய்த சந்தோஷத்தில் மகிழ்ச்சியுடன் அவளை அணைத்து கொண்டனர். பின் அபியின் தலைமையில் அர்ஜுனுடன் ஆடும் பெண்ணின் காலை உடைப்பதர்க்கான பிளான் போடப்பட்டது.

இதை எல்லாம் பார்த்த சூர்யா பிளான் ஓகே இதை எப்போ எக்ஸிகியூட் பண்ண போறோம் என்று கேட்க, பூஜாவோ வேகமாக “ஒன்றே செய், நன்றே செய், அதையும் இன்றே செய்னு ஸ்கூல்ல படிச்சுருக்கோம்ல அதனால இன்னைக்கே உடைங்க நாளைக்கு நான்தான் அஜூக்கூட டான்ஸ் பிராக்டிஸ் பண்ணனும்” என்று சொல்ல மற்றவர்களும் வீராவேசமாக அந்த பெண் இருக்கும் இடத்தை நோக்கி சென்றனர்.

வீரமாக அந்த பெண் இருக்கும் இடத்திற்கு செல்லும் இந்த ரவுடிகளிடம் மாட்டி அந்த பெண் என்ன பாடு படபோகிறாளோ..... அதை அடுத்த எபில பார்க்கலாம்.......



கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பர்களே....


 

Sonythiru

Suthisha
23975

அத்தியாயம் -18

அந்த இருட்டு அறையில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் வாயில் துணியை கட்டி இருப்பதால்“இம்....இம்.... இம்....“ என்று அணத்திக்கொண்டு கொண்டும் “ச்ச எவன் பார்த்த வேலைடா இது டான்ஸ் பிரக்ட்டிஸ் முடிச்சுட்டு டயர்டா இருக்கேனு சேர்ல அப்புடியே தூங்குனா, இப்புடி கட்டி போட்டுட்டானுங்களே, அவன் மட்டும் என் கைல மாட்டுனான் கைமாதான்”என்று திட்டி கொண்டிருந்தாள் ராதா. அர்ஜுனுடன் ஜோடியாக ஆடும் பெண். அவள் புலம்பி கொண்டிருந்த அதே சமயம் அறையின் கதவை திறந்துகொண்டு உள்ளே வந்தனர் நால்வரும்.

சேரில் அமர்ந்திருந்தவளை பார்த்து தங்களுக்குள் பார்வையை பரிமாறி கொண்டவர்கள் பின் ஒரு முடிவுக்கு வந்தனர் அதன்படி முதலில் அபி ராதாவிடம் சென்று அவள் கண் கட்டை அவிழ்த்து விட்டாள்.

வெகுநேரமாக கண் கட்டி இருந்ததால் தன் எதிரில் இருக்கும் நால்வரின் உருவமும் மங்களாக தெரிய, கைகள் கட்டப்பட்ட நிலையில் கண்களை இறுக மூடி திறந்து பார்வையை சுருக்கி பார்த்தாள் ராதா. அவள் எதிரில் கைகளை கட்டியபடி அவளையே தீர்க்கமாக பார்த்துக்கொண்டு இருந்தனர் சூர்யா,அபி,மது,ப்ரீத்தி.

ராதா அவர்களை புரியாமல் பார்க்க அவளிடம் வந்த மது “இங்க பாருங்க சீனியர் இந்த முறை ஆன்வல் டேல அர்ஜுன் கூட நீங்க டான்ஸ் ஆட கூடாது.பூஜா தான் ஆடனும்,நீங்க உங்களுக்கு உடம்பு சரி இல்ல அப்படின்னு சொல்லிடுங்க”என்று கெஞ்சலாக சொல்ல,ராதாவோ அப்பொழுதும் “ம்..... ம்....” என்று மறுப்பாக தலையாட்டிக் கொண்டே இருந்தாள்.

அதில் மற்ற நால்வரும் கடுப்பாகினர். முதலில் சூர்யாதான் அபியை பார்த்து “என்னடி வாய தொறந்து ஒன்னுமே பேச மாட்டேங்குறா”என்க, அவளை பார்த்து தலையில் அடித்து கொண்ட அபி “ஏன்டி வாயில இருக்க கட்டை அவுத்தாதானே அவளால பேச முடியும்”என்றாள் உடனே ப்ரீத்தி “மண்ட மேல இருந்த கொண்டையை மறந்துட்டோமே” என்று சொல்ல சூர்யாவும் நாக்கை கடித்து கொண்டவள் அசட்டு சிரிப்பை சிரித்துவிட்டு ராதாவின் வாயில் இருக்கும் கட்டை அகற்றினாள்.
கட்டை அகற்றிய பின்தான் அவளை கவனித்த மது “ஏய் என்னடி இது மண்ட மேலேதானே கொண்ட இருக்கும் இங்க இவ கன்னத்துல இருக்கு”என்று அலற, அவள் சொல்வதை கேட்டு மற்றவர்கள் அதிர்ந்து போயினர் என்றால் ப்ரீத்தியோ திருதிருவென விழித்து கொண்டிருந்தாள்.

சூர்யா, “இவளை இங்க கொண்டு வரும்போது நல்லாதானே இருந்தா இப்போ என்ன ஆச்சு”என்று கேட்க, யோசனையுடன் திரும்பிய அபியின் பார்வையில் திருட்டு முழி முழித்து கொண்டு இருந்த ப்ரீத்தி பட உடனே அவளை சந்தேகமாக பார்த்தவள் கோபமாக “அவ வாயில என்னத்தடி வச்ச” என்றாள்.
அபியின் கேள்வியில் ஈஈஈஈ..... என்று இழித்த ப்ரீத்தி அசட்டு சிரிப்புடன் “அது ஒன்னும் இல்லடி நேத்து யூ டியூப்ல கோதுமை அல்வா பார்த்தேன். அதை ட்ரை பண்ணலாமேனு செஞ்சு உங்களுக்கு டேஸ்ட் பண்ண கொடுக்கலாம்னு எடுத்துட்டு வந்தேன். அப்போதான் இந்த பொண்ண தூக்கணும்னு சொன்னீங்களா, சரி ஒரு நல்ல விஷயம் முதல் முதல்ல பண்ணலாமேன்னு அந்த பொண்ணு வாயில ஸ்வீட் எடு கொண்டாடுனு கொஞ்சமா வச்சேன். ஆனாலும் அந்த பொண்ணு இவளோ நேரம் முழுங்காம வச்சு ரசிச்சு ருசிச்சுட்டு இருந்துருக்கு பாரேன் அப்படினா என்னோட அல்வா அவ்ளோ டேஸ்ட்டா இருக்குனுதானே அர்த்தம்” என்று பெருமை பேசிக் கொள்ள மற்ற மூவரும் அதிர்ந்து போயினர்.

முதலில் தன்னை சமாளித்து கொண்ட மது ராதாவின் காலைப் பிடித்துக்கொண்டு “எங்க உயிர காப்பாத்த வந்த காவல் தெய்வமே” என்று சொல்ல சூர்யாவோ அவளிடம் “அடியே இன்னும் கொஞ்ச நேரம் ஆனாலும் கொலை கேசுல நாம எல்லாம் உள்ள போயிடுவோம் முதல்ல அந்த கருமத்த வெளிய தள்ளனும்” என்றவள் அபியிடம் “நீ அந்த பக்க கன்னத்தை அழுத்து, நான் இந்த பக்கம் அழுத்தறேன்”என்றவள் “ரெடி ஸ்டார்ட் ஒன் டூ த்ரி”என்று சொல்லி தங்கள் பலம் மொத்தத்தையும் திரட்டி அழுத்த ‘தொபுக்கடிரென்று’ வந்து விழுந்தது ப்ரீத்தியால் அல்வா என்று சொல்லப்பட்ட மாவு பசை.

ராதா இருமிக்கொண்டே நன்றாக மூச்சை இழுத்து விட்டு தன்னை ஆசுவாசப்படுத்தி கொண்டிருந்தாள். அப்போது ப்ரீத்தி அவளின் செய்கை புரியாதவளாக “ஏன்டி அந்த பொண்ணு இப்படி மூச்சு வாங்குது, மூச்சு விட முடியாத அளவுக்கு நான் வாய அவளோ டைட்டா எல்லாம் கட்டலையே” என்று சொல்ல, மதுவோ “அடியே உனக்கு கொஞ்சமாவது மனசுல ஈரம் இருக்கா இப்படி சமையல்ங்கற பேர்ல கண்டதை குடுத்து அந்த பொண்ண போட்டு தள்ள பாத்துருக்க பக்கி, அவளுக்கு மட்டும் ஏதாவது ஆகி இருந்தா நீ கம்பி எண்றது மட்டும் இல்லாம உன்கூட சேர்ந்த பாவத்துக்கு நாங்களும் கம்பி எண்ணனும்” என்று கத்தி கொண்டு இருக்க அதற்குள் தன்னை தேற்றி இருந்தாள் ராதா.

சூர்யா ராதாவை கவனித்து கொண்டு இருந்தவள் அபியிடம் சைகை காட்ட ராதாவிடம் திரும்பியவள் “இங்க பாருமா பொண்ணு இந்த டைம் அர்ஜுனுடன் நீ ஆடக்கூடாது.எங்க பிரண்டு பூஜாதான் ஆடுவா சோ நல்ல புள்ளையா நீ என்ன பண்ற நாளைக்கு காலுல கட்டு போட்டுட்டு வந்து என்னால ஆட முடில காலுல அடி பட்டுருச்சுனு சொல்ற” என்று கெத்தாக மிரட்ட, அதில் கோபமான ராதா அவர்களைப் பார்த்து “நீங்க சொன்னா நான் கேட்கணுமா முடியாது.வருஷ வருஷம் நான் தான் ஆடுவேன் அதனால இந்த வருஷமும் நான்தான் ஆடுவேன்.நீங்க பண்ணற இந்த விஷயம் மட்டும் வேற யருக்காவது தெரிஞ்சா என்ன ஆகும் தெரியுமா, ஒழுங்கா கட்டை அவிழ்த்து விடுங்க” என்றவள் பின் எடுக்கறது பிச்சை இதுல மிரட்டல் வேற” என்று முணுமுணுத்தாள்.அதைக் கேட்ட சூர்யா “ஹோய் யார பார்த்து பிச்சை எடுக்கறாங்கன்னு சொல்ற உன்னோட நல்லதுக்கும் இந்த காலேஜ்ல இருக்கவங்களோட நல்லதுக்குதான் நாங்க சொல்றோம் தேவை இல்லாம பேசாத”என்று சொல்ல, அப்போதும் ராதா அவர்களை அலட்சியமாக பார்த்திருந்தாள். அதில் கடுப்பான ப்ரீத்தி “இங்க பாரு சீனியர் இந்த வருஷம் நீ ஆடாம விட்டேனா இந்த காலேஜ்ல இருக்க நாம எல்லாருமே தப்பிக்கலாம் இல்லைன்னா எல்லோருடைய உயிருக்கும் ஆபத்து காதுக்கும் ஆபத்து. அந்த ஆபத்தான கழுதை நம்மை நோக்கி தான் வந்து கொண்டு இருக்கிறது” என்று சொல்ல அவளை புரியாமல் பார்த்திருந்தால் ராதா.
அவள் பார்வையில் சலிப்படைந்த மது “எம்மா பரதேவதை அர்ஜுன் கூட ஆடுறதுனா மட்டும்தான் ஆடுவேன் இல்லைனா பாட்டு பாட போறேனு அங்க ஒருத்தி ஒத்த காலுல நிக்குறா அவ பாட்டுல இருந்து தப்பிக்க எங்களுக்கு உதவி பண்ணுங்க எங்களால முடில” என்று சொல்ல, அப்போதும் ராதாவோ “முடியாது.நான்தான் ஆடுவேன் டாட். என் கட்டை அவிழ்த்துவிடுங்க ” என்றாள் திமிராகவே. .

அவளின் பேச்சில் நால்வருக்கும் கோபம் வர,கண்களாலேயே மதுவுக்கு சைகை செய்தனர்.உடனே அவளும் தன் போனில் ஹெட்செட்டை கனெக்ட் செய்தவள் அதை ராதாவின் காதில் வைத்தாள். மதுவின் செய்கையை பார்த்து குழம்பி “இவ என்ன செய்றா” என பார்த்து கொண்டு இருந்தாள்.

அவளின் பார்வையை புரிந்துகொண்ட நால்வரும் கிண்டலான சிரிப்புடன் “அது ஒன்னும் இல்ல நாட்டிய நங்கையே எங்களோட காது எங்களுக்கு முக்கியம் நீங்கதானே நாங்க சொல்றதை கேக்காம ஆடனும்னு சொன்னிங்க அப்போ நீங்க மட்டும் அவ பாட்டை கேளுங்க”என்று சொல்லிவிட்டு பாடலை ப்ளே செய்தனர்.

மது போனில் பாடல் பிளே செய்யப்பட்ட இரண்டு நிமிடத்திலேயே “ஸ்டாப் த சாங் நிப்பாட்டுங்க”என்று கத்த ஆரம்பித்தாள் ராதா.நக்கல் சிரிப்புடன் அவளை பார்த்த நால்வரும் கோரசாக “தெரியுதா இப்போ தெரியுதா இதுக்காகதான் நாங்க சொன்னோம் நீ கேட்கல, அவளை பாட விடாமபண்ண எங்களுக்கு இதைவிட்டா வேற வழி தெரியல பேபிமா அனுபவிங்க அனுபவிங்க நல்லா அனுபவிங்க” என்று சொல்ல, ராதாவோ பூஜா பாடிய பாடலை கேட்டு கதறித் துடித்து கை கால்களை உதறிக் கொண்டே இருந்தாள்.ஓரளவுக்கு மேல் முடியாமல் கண்ணில் கண்ணீர் பெருக நொந்து போய் நால்வரையும் பார்த்துக் கொண்டிருந்தாள்.
முழு பாடலும் முடிந்த பிறகு அவள் காதில் இருந்த ஹெட்செட்டை எடுத்தாள் மது. அவர்களை பாவமாக பார்த்த ராதா “வை மேன் வை” என்க அபியோ கூலாக “நாங்கதான் எச்சரிக்கை செஞ்சோம் நீ கேக்கல, அதுக்கு நாங்க என்ன பண்ண முடியும்.சரி விடு நாலு பேரு நல்லா இருக்கணும்னா நீங்க ஒருவாட்டி அழுவறதில் தப்பே இல்லை. இப்போ சொல்லு நாங்க சொன்ன டீலுக்கு ஓகேவா இல்லையா இல்லைனா ஒன்னும் பிரச்சனை இல்லை மது அவ பாடுன அந்த தோசை அம்மா தோசை பாட்ட எடு இவளை கேட்க வைக்கலாம்” என்றாள்.
உடனே வேகமாக “வேண்டாம் வேண்டாம்”என்று அலறிய ராதா “நாளைக்கு நானே என்னோட காலுல பெரிய கட்டா கட்டிட்டு வந்து ஆட முடியாதுனு சொல்லிடறேன் போதுமா. நீங்களே உங்க பிரண்ட ஆட வையுங்கள் போதுமா. இன்னொரு டைம் அந்த பாட்ட மட்டும் என்னை கேட்க வச்சிராதீங்க மீ பாவம்”என்றாள் அப்பாவியாக.
அதை கேட்ட நால்வரும் சிறு சிரிப்புடன் “இது நல்ல பிள்ளைக்கு அழகு” என்றுவிட்டு கட்டை அவிழ்த்துவிட்டு கிளம்பிவிட்டனர். ராதாவும் அவர்களிடம் கையசைத்து விட்டு கிளம்பி விட, தோழிகள் நால்வரும் கடவுளுக்கு நன்றி சொல்லும் தொனியில் மேலே பார்த்து வணங்கினர். பின் ப்ரீத்தி மூவரையும் பார்த்து “அடியே அவ கால்ல விழுந்து சம்மதம் வாங்கிய விஷயம் பூஜாவுக்கு தெரியக்கூடாது கெத்து,கெத்து” என்று சொன்னாள்.

மூவரும் அவளை பார்த்து “சரி” என்று ஒப்புக்கொண்டானர். பின் பூஜாவிடம் வெற்றிகரமாக வேலையை முடித்து விட்டோம் என்று சொல்ல பூஜாவும் மகிழ்ச்சியுடன் அவர்களை “நண்பேன்டா” என்று சொல்லி அணைத்து கொண்டாள்.
அன்று மாலையே காலேஜிற்கு எதிரில் உள்ள பார்க்கில் அர்ஜுனையும் திருனேஷையும் சந்திக்க வைக்க வேண்டும் என்று நால்வரும் பிளான் செய்தனர்.எப்படியும் திருனேஷ்பற்றிய பேச்சு என்றால் சூர்யா கத்துவாள் என்று அதையும் இதையும் சொல்லி அவளை மட்டும் வீட்டிற்கு போக சொல்வதற்குள் தோழிகள் நால்வருக்கும் போதும் போதும் என்றானது.

முதலில் அர்ஜுனை பூஜா அந்த பார்க்கிற்கு வர சொன்னாள். அவளிடம் அபி “அடியே ஜொள்ளு நாங்க சொல்றதை நல்லா கேட்டுக்கோ அர்ஜுனும் திருனேஷும் பேசிக்கிட்டா மட்டும்தான் உன் ஆளு செலக்ட்டட் இல்லைனா ரிஜெக்ட்டெட்தான் பாத்துக்கோ. ஒழுங்கா கன்வின்ஸ்பண்ணி பேச வச்சுடு” என்று சொல்ல பூஜாவோ அதிர்ந்தவள் “அடி பாவிங்களா சுத்தி சுத்தி என் காதலுக்கு சூனியம் வைக்கறதுலையே இருக்காளுங்களே”என்று நொந்து கொண்டவள். அபியிடம் “ஏன் டி என்னைய மட்டும் சொல்லறீங்க திரு பேசலைனா என்ன பண்ணுவீங்க”என்று கேட்க மதுவோ “அதுக்கு வாய்ப்பே இல்லை சீனியர் சூர்யா மேல ரொம்ப லவ் வச்சுருக்காரு அவளுக்காக என்ன வேணா பண்ணுவேன்னு எங்ககிட்டையே சொன்னாரு சோ அவளுக்காக கண்டிப்பா அவரு பேசுவாரு. நீ உன் ஆள கரெக்ட் பண்ற வேலைய பாரு” என்றாள்.
அதே நேரம் அவர்கள் இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தான் அர்ஜுன்.அவனிடம் பேச சொல்லி பூஜாவுக்கு அபி சைகை செய்ய பூஜாவும் அவனை இழுத்துக் கொண்டு சென்றவள் அங்கிருந்த ஒரு கல் பெஞ்சில் அமர்ந்து “இங்க பாரு அஜூ எங்க பிரண்ட்ஸ் அஞ்சு பேரும் எப்படி ஒன்னா இருக்கமோ அதே மாதிரி நீங்களும் ஒன்னா இருக்கணும்னு நாங்க ஆசைப்படறோம். இப்போ உங்க பிரண்டு திருனேஷ வர சொல்லி இருக்கோம் நீங்க ரெண்டு பேரும் மறுபடியும் நல்லா பேசி பிரண்டா இருக்கனும். அவரை சூர்யாக்கூட சேர்த்து வைக்கலாம்னு நாங்க முடிவு பண்ணிட்டோம். நீங்களும் பேசிக்கிட்டாதான் நாங்க பிரியாம இருப்போம். லவ் மாதிரி எங்களோட பிரண்ட்ஷிப்பும் வாழ்க்கை முழுக்க வரணும்னு நாங்க ஆசைப்படறோம். எங்களோட லைப் பட்டனரும் பிரண்டா இருந்தாதான் அது சாத்தியமுன்னு முடிவு எடுத்துருக்கோம். உங்க பிடிவாதத்த விட்டுட்டு வந்து திருக்கூட பேசுறீங்க இல்லைனா நமக்குள்ள பிரேக் அப்தான்” என்று சொல்லி தோழிகள் இருக்கும் இடத்திற்கு சென்றுவிட்டாள்.

பூஜா சென்ற பின்னும் வெகு நேரம் யோசித்த அர்ஜுன் முகத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் அமைதியாக பூஜாவின் அருகில் வந்தான். அதே சமயம் திருனேஷும் வந்திருக்க அவனிடமும் அபி பூஜா சொன்ன அனைத்தையும் சொல்லியிருந்தாள்.

அர்ஜுன் திருனேஷ் இருவரும் எதிர் எதிராக நின்றிருக்க தோழிகள் நால்வரும் பேசுவார்களா மாட்டார்களா என்ற பதைபதைப்புடன் பார்த்து கொண்டிருந்தனர். அப்போதுதான் இருவரும் ஒரே நேரத்தில் “மச்சான்” என்று கத்தி கட்டிபிடித்து கொண்டனர். அவர்கள் செயலில் தோழிகள் அதிர்ந்து விழித்து கொண்டிருக்க அவர்களை எல்லாம் கணக்கில் எடுத்து கொள்ளாத நண்பர்கள் இருவரும் “என்னடா மச்சான் இளச்சுட்ட. சரி விடு இனி வார வாரம் நாம எப்பவும் போற பாய் கடை பிரியாணி சாப்பிட்டு தேத்திக்கலாம்”என்று அர்ஜுன் சொல்ல, ப்ரீத்தி மற்றும் மது இருவரும் “ஹை நம்ம மாதிரியே பிரியாணி வெறியன்ஸ்” என்றாள்.

அபியோ “என்னது பிரியாணியா என்னடி நமக்கு வர்றது எல்லாம் திங்கற டிக்கெட்டாவே வருது” என்று பூஜாவிடம் புலம்பினாள்.பூஜாவும் தலையை பாவமாக ஆட்டி கொண்டு இருந்தாள். திருவோ “நான் உன்கூட பேசலாம்னு நினைப்பேன்டா ஆனா என்னை சந்தேக பட்டுட்டியேனு கோபம் அதான் பேசல” என்று சொல்ல, அர்ஜுனும் நான்கூட உன்னோட பேசலாம்னுதான் உங்க காலேஜ்லையே சேர்ந்தேன் ஆனாலும் என்கிட்ட சொல்லாம போய்ட்டியேனு கோபம் அதன் பேசல ஆனா அங்க அங்க மறைஞ்சு நின்னு உன்னை பார்ப்பேன் தெரியுமா”என்று சொல்ல,இதை கேட்ட பூஜாவோ முகத்தை அஷ்ட கோணலாக மாற்றியவள் “ ஏது மறைஞ்சு நின்னு பார்ப்பாங்களா எல்லா இடத்துலயும் லவ்வர்ஸ்தானே மறைஞ்சு நின்னு பார்ப்பாங்க.அப்படி பார்த்தா அவன் என்னைதானே பார்க்கணும். இவனை எதுக்கு பார்க்கணும் உண்மையாவே இவங்க பிரண்ட்ஸ்தானா இல்லை.............” என்று இழுக்க, அவர்கள் இருவரும் ஒரே நேரம் பூஜாவை முறைத்தனர்.

அவர்களின் முறைப்பை பார்த்து பூஜா அசட்டு சிரிப்பு சிரிக்க அபியோ அவளிடம் “ஏன்டி உண்மையாலுமே இவங்களுக்குள்ள சண்டதானா இல்லை நம்மல வச்சு காமெடி பண்றாங்களா”என்று கேட்க, தோழர்கள் இருவரும் சிரித்து கொண்டே “சண்டதான் ஆனா சண்ட மாதிரி” என்றனர். தோழிகள் ஒன்றும் புரியாமல் நின்றிருக்க,ப்ரீத்தி, “சரி விடுங்க எப்படியோ ரெண்டு பேரும் சேர்ந்துட்டீங்க. நீங்க பேசலன உங்களை டிவெர்ஸ் பண்ணலாம்னு டிசைட் பண்ணி வச்சிருந்தோம்” என்று சொல்ல, அவள் அருகில் வேகமாக சென்ற திரு நங்கென்று கொட்டிவிட்டு “ஆரம்பத்துல இருந்தே நீ ராங்கா போயிட்டிருக்க இப்படியே பேசுன அப்புறம் கொட்டுதான். இன்னும் சேரவே இல்லை அதுக்குள்ள டிவெர்ஸ்ங்கர. ஸ்கூல்ல இருந்தே எனக்கு வில்லி நீ மட்டும்தான்”என்று சொல்ல ப்ரீத்தியோ “போங்க சீனியர் நினைச்சோம்னுதானே சொன்னேன் அப்புறம் ஏன் என்னை மட்டும் கொட்டிட்டு அவங்கள எல்லாம் கொட்டலை” என்று கேட்க, அபியோ “கோத்து விட்டுட்டா வாங்கடி எஸ்கேப் ஆகிடலாம்” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டனர். அவர்களின் குறும்புதனம்பற்றி தெரிந்த நண்பர்கள் இருவரும் சிரித்து கொண்டே அவர்களுக்கு “பாய்” சொல்லிவிட்டு நான்கு வருட கதையை பேசி கொண்டு இருந்தனர்.

அடுத்த நாள் காலை எப்போதும் போல் அனைவருக்கும் சிறப்பாக இருக்க பாவம் ராதாதான் தன் அடிப்படாத காலில் கட்டு கட்டி கொண்டு இருந்தாள். தோழிகள் ஐவரும் எப்போதும் போல் தங்களுடைய பேவரட்டான இடத்தில் அமர்ந்து ராதா இன்று எப்படி வருவாள் என்று பேசி கொண்டு இருந்தனர்.

அப்போது முகம் நிறைந்த புன்னகையுடன் அர்ஜுனும்,திருனேஷும் அவர்களிடம் வந்தனர். பூஜாவிடம் வந்த அஜூ அவளுடன் பேச ஆரம்பிக்க திருவோ சூர்யாவை ஒரு பார்வை பார்த்துவிட்டு திரும்பி கொண்டான்.
அபியிடம் திரும்பிய சூர்யா “இவன் எதுக்குடி இங்க வந்தான். அர்ஜுன்தான் பூஜாக்கூட பேச வந்துருக்கான், கூட ஒட்டு புல் மாதிரி இவன் எதுக்கு? போக சொல்லுடி”என்க.

அவளை முறைத்த அபி “அடியே எங்க கியூட் சார்மிங்கபத்தி ஏதாவது பேசுன கொலை பண்ணிடுவேன் ராஸ்கல். உன்னாலதான் ஸ்கூல்ல எங்களால அவன சைட் அடிக்க முடியாம போய்டுச்சு இப்போவும் ஏதாவது பண்ணுன எங்களுக்கு இப்படி ஒரு பிரண்டே தேவை இல்லனு உன்னை தல முழுகிடுவோம் பாத்துக்கோ, உனக்கு புடிக்கலன நீ பேசாத திரும்பிக்கோ ஆனா நாங்க பேசுவோம்” என்றுவிட்டு திருனேஷுடன் பேச ஆரம்பித்தாள்.

சூர்யாவோ முகத்தை திருப்பி கொண்டு அமர்ந்திருந்தவள் சிறிது நேரம் கடந்து ஓர கண்ணால் திருவை பார்க்க அவனோ இவளை கண்டுகொள்ளாமல் அபி, மது, ப்ரீத்தியுடன் பேசி கொண்டிருந்தான். அவன் தன்னை கண்டுகொள்ளவில்லை என்ற எண்ணம் ஏனோ அவளுக்கு ஏமாற்றமாகத்தான இருந்தது. அப்பொழுது வந்து குதித்த அவளின் மனசாட்சி எகத்தாளமாக பார்த்து “நீதான் அவனை மதிக்கவே மாட்டியே அப்புறம் அவன் உன்னை கவனிச்சா என்ன கவனிக்காட்டி என்ன” என்று கேட்க, இவளோ பேந்த பேந்த விழித்தவள் “அது.......... அது........ ஹான் அவன் என்னை பாக்கலைனு நான் பீல் பண்ணலை என்னோட பிரண்டுங்க பாக்கலைன்னுதான்………..” என்று இழுக்கும்போதே அவளை மேலும் கீழுமாக பார்த்த மனசாட்சி “நம்பிட்டேன் நம்பிட்டேன்” என்று நக்கலாக சொல்லிவிட்டு சென்றது.

சூர்யா அங்கு தனக்குள் பேசி கொண்டிருந்த நேரம் அர்ஜுன் பூஜாவிடம் சிறிது நேரம் மட்டும் பேசிவிட்டு “சரி பேபி நான் கிளம்பறேன் டான்ஸ் பிராக்டீஸ் பண்ணனும் ராதா வந்திருப்பா”என்று சொல்ல, பூஜாவுக்கோ காதில் புகை வராத குறைதான். “பாவி பயலே என்னோட பேசும் போது மட்டும்தான் உனக்கு பொறுப்பு நியாபகம் வரும், உன்கூட சுத்துற அல்லக்கை எவனாவது வந்து டிஸ்டர்ப் பண்ணுவான்.அவக்கூட ஆட போகும்போது மட்டும் எவனும் வர மாட்டான்” என்று மனதில் பொருமி கொண்டு இருந்தாலும் வெளியில் சிரித்து அனுப்பி வைத்தாள். அர்ஜுன் கிளம்பவும் திருனேஷும் மற்றவர்களிடம் சொல்லிவிட்டு சூர்யாவை பார்த்து நமுட்டு சிரிப்பு சிரித்துவிட்டு கிளம்விவிட்டான்.
அவன் தன்னை கண்டு கொள்ளாமல் சென்றது ஒரு பக்கம் மனதை உருத்தினாலும் அதை புறம் தள்ளியவள் பூஜாவிடம் “வாடி நாமும் ஆடிட்டோரியம் போலாம் அந்த ராதா வர்ராளா இல்லையானு பாக்கணும்” என்றாள்.

அபி , “இருங்கடி அர்ஜுன் இப்போதானே போனான் கொஞ்ச நேரம் கடந்து போலாம்”.

மது, “ஓகே சரி வாங்க அதுக்குள்ள கேன்டீன் போய் ஏதாவது சாப்பிட்டு வரலாம்” என்று சொல்லி சென்றனர். ஒரு வழியாக அர்ஜுன் சென்று அரை மணி நேரம் கடந்து இவர்கள் ஆடிட்டோரியம் செல்ல அங்கு அனைவரும் கூடி இருக்க மிகவும் டென்சனாக அர்ஜுன் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தான். என்ன நடந்திருக்கும் என்பதை ஓரளவு யூகித்த தோழிகள் ஒன்றும் தெரியாதது போல் அங்கு நின்றிருந்தவர்களிடம் விசாரிக்க அவர்கள் சொன்ன தகவலில் நால்வரும் மனதில் துள்ளி குதித்தனர்.

துள்ளி குதிக்கும் அளவிற்கு அப்படி என்ன சொன்னார்கள் என்றால் “டான்ஸ் பிராக்டிஸ் செய்ய ராதா இன்னும் வரவில்லை”என்றுதான்.அர்ஜுன் செய்கையில் கடுப்பில் இருந்த பூஜா, அதே கடுப்புடன் மதுவிடம் திரும்பியவள் “இவனுக்கு எவளோ கொழுப்பு பாருடி நான் வரலைனாகூட இவன் இவ்ளோ டென்ஷன் ஆக மாட்டான் போல அவ வரலைன்னு இப்படி குட்டி போட்ட பூனை மாதிரி சுத்தறான்”என்க, அவளோ “உன் கவலை உனக்கு பேசாம இருடி என்ன ஆகுதுனு பார்க்கலாம்” என்றாள்.

அப்போது காலில் பெரிய கட்டுடன் கால்களை விந்தி விந்தி நடந்து வந்து கொண்டிருந்தாள் ராதா. அவளை பார்த்து அனைவரும் அதிர்ந்து நிற்க, அர்ஜுனோ பதறியபடி வேகமாக அவளிடம் சென்று “ஐயயோ என்ன ஆச்சு ராதா”என்று கேட்க, அதற்கு ராதாவோ ஒன்னும் இல்லை ஒரு சின்ன அடி, பிராக்சர் ஆகிடுச்சு”என்றாள்.

உடனே அர்ஜுன் “பார்த்து கவனமா இருந்திருக்க வேண்டாமா” என்று சொல்ல, அதை பார்த்து பூஜாவோ வயிற்றெரிச்சலுடன் நின்றிருந்தாள். அப்போது அவள் அருகில் நின்ற ப்ரீத்தி அபியிடம் “ஏன்டி இங்க ஏதோ கருகுன வாசம் வரல”என்று கேட்க, பூஜா முறைத்த முறைப்பில் வாயை கப்பென்று மூடி கொண்டாள்.அப்போது அர்ஜுன் அருகில் வந்த கோகுல் “இப்போ என்னடா செய்றது, யாரு உன்கூட ஆடுவா,ப்ரோக்ராம்க்கு இன்னும் ஒரு வாரம்தானே இருக்கு” என்று கேட்க அதற்கு வழியும் ராதாவே சொன்னாள்.

ராதா “அர்ஜுன் கால் காயதோட என்னால ஆட முடியாது நீ ஏன் பூஜாக்கூட ஆடக்கூடாது”என்று கேட்க,அதில் கோபமான ஒருசிலர் என்ன ராதா உளறுற உங்க பேர்தான் சக்ஸஸான பேர். திடிர்னு வேற ஒருத்தர ஆட வைக்கலாம்னா எப்படி முடியும். அந்த பொண்ணு எப்படி ஆடும்னு நமக்கு தெரியாது. பிராக்டிஸ் வேற பண்ணல இன்னும் ஒரு வாரம்தான் இருக்கு அதுக்குள்ள எப்படி பிராக்டிஸ் பண்ணி ஆட முடியும்”என்று கேட்டனர். ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணம் சொல்லி கொண்டு இருக்க கொஞ்ச நேரத்தில் அந்த இடமே சந்தை கடை போல் ஆனது. பின் சூர்யாதான் அர்ஜுனை முறைத்தவாறே ஏககடுப்பில் “எனக்காக பேச மாட்டேன்னு சொன்ன இல்லை இருடா உனக்கு இருக்கு” என்று கறுவிவிட்டு சத்தமாக “ஹலோ யார பார்த்து ஆட தெரியுமான்னு கேக்குற எங்க ஸ்கூல்ல டான்ஸ் டாப்பர் எங்க பூஜாதான் உங்க ஹீரோக்கு தில் இருந்தா அவக்கூட ஆட சொல்லுங்க அப்புறம் தெரியும் யாரு கத்து குட்டின்னு” என்று சொல்ல அங்கிருந்த ஒரு சிலர் அதை ஆமோதித்தனர்.

ஆனாலும் அர்ஜுன் அருகில் இருப்பவர்களில் சிலர் அவனிடம் “நீ லவ் பண்ற பொண்ணுங்கரத்துக்காக அவக்கூட ஆடனும்னு நினைக்காத. நல்லா ஆடுனா மட்டும்தான் அந்த பொண்ணை ஆட அலோவ் பண்ணுவோம் இல்லைனா வேற பொண்ண செலக்ட் பண்ணி டே அண்ட் நைட் பிராக்டிஸ் குடுத்து ஆட வைப்போம்”என்றனர்.

தோழிகள் நால்வரும் பூஜாவை பார்க்க அவளோ கட்டை விரலை உயர்த்தி காட்டி கண்ணடித்து சிரித்தாள். அவளின் செயலை பார்த்த சூர்யாவோ தோழிகளிடம் “சரியா ஆடிருவாளாடி நான் வேற வாய விட்டுட்டேன்”என்று புலம்ப, ப்ரீத்தியோ அது எல்லாம் நல்லா ஆடிருவா பயப்படாதடி பாட்டு பிராக்டிஸ் பண்றேன்னு சொல்லி இங்க வந்து அர்ஜுன சைட் அடிச்சுட்டுதான் இருந்தா அதனால எல்லா ஸ்டெப்பும் மேடம்க்கு அத்துப்படி இப்போ பாரு அவ ஆட்டத்தை”என்றாள்.

பூஜா அர்ஜுன் இருவரும் மேடையில் நிற்க அவர்கள் ஆடுவதற்கான பாடல் பிளே செய்யப்பட்டது. இருவரும் தங்களை மறந்து அந்த பாடல் வரிகளுடன் இணைந்து “சல்சா”என்று சொல்லப்பட்ட நடனத்தை ஆட அந்த அரங்கமே நிசப்தத்தை தத்தெடுத்தது.

இருவரின் நடனம் எப்படி இருந்தது என்பதை அடுத்த எபியில் பார்க்கலாம்....


 

Sonythiru

Suthisha
24082

அத்தியாயம்-19

பூஜா அர்ஜூன் இருவரும் தங்களை மறந்து, பாடலுக்கு ஏற்றவாறு ஆடினர். பாடல் நின்றபின் தன்னிலை அடைந்து மற்றவர்களை பார்க்க, அதுவரை அவர்களையே மெய் மறந்து பார்த்து கொண்டிருந்தவர்களோ,அந்த ஆடிட்டோரியமே அதிரும் வண்ணம் கை தட்டி ஆர்ப்பரித்தனர்.

அதிலும் சில பெண்கள் ஓடிவந்து பூஜாவின் கையை பிடித்து குலுக்கி “சூப்பர் பூஜா சான்ஸே இல்லை, நீங்க ரெண்டு பேரும் செம்மையா ஆடுனீங்க, வாட் அ கெமிஸ்ட்ரி, வாட் அ பர்பாமென்ஸ் செம்ம போங்க, இன்னொரு விஷயம் தெரியுமா எப்பவும் பெர்பாமன்ஸ் பண்ணும்போது அர்ஜுனைதான் நாங்க சைட் அடிப்போம்.பட் பார் த பர்ஸ்ட் டைம் எங்களோட கவனத்தை புல்லா நீ மெஸ்மரைஸ் பண்ணிட்ட அவளோ அழகா ஆடுன” என்று சொல்ல தோழிகள் நால்வரும் பூஜாவை இரிடேட்பண்ணி பேசியவர்களை கெத்தாக பார்த்தனர். அவர்களோ முகம் கருக்க, அந்த இடத்தைவிட்டு சென்றனர்.

இங்கு பூஜாவோ அவர்களின் பாராட்டில் மென்மையாக சிரித்து அர்ஜுனை பார்க்க, அவனும் தன்னவளின் திறமையை எண்ணி முகத்தில் பெருமை பொங்க அவளைத்தான் பார்த்து கொண்டிருந்தான்.
பூஜாவின் பார்வை தன்னிடம் திரும்பிவிட்டது என்பதை உணர்ந்தவன் மற்றவர்கள் அறியா வண்ணம் இதழ் குவித்து ஒரு பறக்கும் முத்தத்தை கொடுக்க,அவளோ அதிர்ந்து மற்றவர்கள் பார்த்துவிட்டார்களா என்று கண்களை சுழலவிட்டாள்.

அப்போது அவர்கள் அருகில் வந்த அபி “நாங்க எதுவும் பார்க்கல” என்று சொல்ல, அர்ஜுனோ நமுட்டு சிரிப்புடன் “பார்க்கலைல சந்தோஷம்” என்றான்.
அவர்கள் அருகில் வந்த சூர்யாவோ அர்ஜுனை முறைத்து கொண்டே “நாலு சின்ன புள்ளைங்க இருக்க இடத்துல இப்படிதான் நடந்துக்கறதா கொஞ்சமாவது பொறுப்பு இருக்கா” என்றாள்.

அர்ஜுனோ கிண்டலான குரலில் “ஆமாம் ஆமாம் யாரும் இல்லாத லிப்ட்ல குடுக்கணும்ற பொறுப்பு எனக்கு இல்லைதான்”என்று சொல்ல, சூர்யாவோ பேந்த பேந்த விழித்துவிட்டு “இவனுக்கு எப்படி தெரிஞ்சுருக்கும்,ஒரு வேலை அந்த லூசு உளறி இருக்குமோ” என்று யோசிக்க, மற்றவர்கள் புரியாமல் நின்றிருந்தனர் என்றால், ப்ரீத்தியோ அவனிடமே “என்ன லிப்ட்” என்று கேட்டாள்.

அப்போது அர்ஜுன் பின்னாடி இருந்து வந்த திருனேஷ் “நான் வேணா உங்க டவுட் கிளியர் பண்ணவா” என்று கேட்க, அவனை பார்த்து அதிர்ந்த சூர்யா ப்ரீத்தியிடம் திரும்பி “ரொம்ப முக்கியம் வாடி போலாம்” என்று சொல்ல, அர்ஜுனோ சூர்யாவிடம் “இருமா டவுட் கேட்டா கிளியர் பண்ணணும்ல” என்று கிண்டலாக கூற,

சூர்யாவோ “ஒன்னும் தேவை இல்லை பிரைடே பங்ஷன்க்கு பிராக்டிஸ் பண்ற வேலைய பாருங்க” என்று மனதில் அரண்டலும் வெளியே கெத்தாக சொல்ல, அர்ஜுனும் சிறு தோள் குலுக்கலில் அந்த பேச்சை முடித்தவன் மீண்டும் பூஜாவுடன் ஆட ஆரம்பித்தான்.
மீண்டும் பாடல் பிளே செய்யப்பட அர்ஜுன் பூஜாவின் இடையை அழுத்தமாக பற்றி தன் முன்னால் கொண்டு வந்து சுழற்றி தன்னை நோக்கி இழுக்க, அவளும் ஆடும் ஆர்வத்தில் அவன் மார்பில் மோதி நின்றாள்.அப்போது நொடி நேரத்தில் அவளின் இதழை அவன் தீண்ட, ஆடும் ஆர்வத்தில் முதலில் கவனிக்காமல் இருந்த பூஜா அவன் இதழ் தீண்டலில்தான் தன்னிலை அடைந்து விழி விரித்து பார்க்க, அவனோ ஒன்றும் நடவாதது போல் ஆட ஆரம்பித்தான்.

அர்ஜுன் அவளின் விரிந்த விழிகளை பார்த்து கண்ணடித்து சிரித்தவன் அடுத்த சுற்றில் இடையில் இருந்த கரத்தின் அழுத்தத்தை கூட்டி தோள்களில் மின்னல் விரைவில் முத்தம் பதிக்க பூஜாதான் அவன் செயலில் நெளிய ஆரம்பித்தாள். பின் பற்களை கடித்து கொண்டே மெல்லிய குரலில் "அர்ஜுன் என்ன பண்ற " என்று கேட்க அவனோ அவளை பார்த்து அடக்கப்பட்ட சிரிப்புடன் டான்ஸ் ஆடறேன் பேபி” என்று சொல்லி மேலும் ஆடி கொண்டே அவனின் சேட்டையை தொடர பூஜாதான் ஆட முடியாமல் நெளிய ஆரம்பித்தாள்.

அவர்கள் ஆடுவதை கவனித்த ப்ரீத்தி "டேய் என்ன டா டான்ஸ் இது.இவ்வளவு நேரம் நல்லாதானே டா ஆடுனா இப்போ என்ன டா இப்படி ஆடுறா ... " என்று வாயை பிளந்தபடி கேட்டாள்.

அதே அதிர்ச்சியில் இருந்த அபியும் ப்ரீத்தியின் கண்களை மூடி வெளியில் இழுத்து வந்து "இதெல்லாம் சின்ன பிள்ளைங்க பார்க்க கூடாது.நீ வா அப்படியே வெளிய போகலாம் " என்று சொன்னாள்.

மதுவும் பூஜாவை பார்த்து கொண்டே"என்ன டா, அவ நெளியுற மாதிரி தெரியுது. என்னடா நடக்குது அங்க, இவங்கள ஆட விட்டது தப்பா போச்சே " என்றாள்.

சூர்யாவும் அபியும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டவர்கள் பின் மதுவை பார்த்து “பல் இருக்கவன் பக்கோடா சாப்பிடறான் உனக்கு என்ன கண்டுக்காதவிடு"என்றனர்.

ப்ரீத்தியோ அபியின் கையை விலக்கியவள் “ஏது கண்டுக்காதையா என்ன தான் இருந்தாலும் காலேஜே, பார்க்குது டா " என்று சொல்ல”, சூர்யாவோ “யாருவேணா பார்க்கட்டும் ஆனா, நீ பார்க்க கூடாது அவ்வளவுதான்" என்று வெளியில் இழுத்து சென்றுவிட்டாள். ஏனென்றால் திருனேஷ் அவர்கள் எதிரில் நின்று அவளைத்தான் பார்த்து கொண்டிருந்தான், அவனின் விழி வீச்சை எதிர் கொள்ள முடியாமல் சூர்யா அங்கிருந்து அனைவரையும் அழைத்து சென்றுவிட்டாள்.

இங்கு ஆடிட்டோரியத்தில் பூஜா நெளிந்து கொண்டே ஆட, அர்ஜுனோ "ப்ச் என்ன பூஜா ஸ்டெப் மிஸ் ஆகுது பாரு, நல்லா ஆடு, கான்செண்ட்ரேட், கான்செண்ட்ரேட்" என்று சொல்ல, அவளோ அவனை மனதினிலே திட்டினாலும் வெளியே ஒன்றும் சொல்ல முடியாமல், மீண்டும் மீண்டும் சொதப்பினாள்.

பூஜாவின் சொதப்பலை கண்டு கொள்ளாதவன்,ஒவ்வொரு முறையும் அவளது கழுத்திலும் தோள்களிலும் இதழ் பதித்து விலகினான். ஒருவழியாக அவர்கள் ஆடி முடித்த பின்,பூஜா செல்லும் போது, அவளை பிரிய மனமில்லாத அர்ஜுனோ அவளை நிறுத்தியவன், “இன்னும் சில ஸ்டெப்ஸ் பிராக்டிஸ் பண்ணனும் அதனால காலேஜ் முடிந்த பிறகு பிராக்டீஸ்க்கு வா” என்றான்.

அவன் சொல்வதை கேட்டு திகைத்த பூஜா “என்ன காலேஜ் முடிஞ்சு வரணுமா, இத்தனை பேர் இருக்கும் போதே இவ்வளவு சேட்ட பண்றான் யாரும் இல்லைன்னா, எவ்ளோ சேட்டை பண்ணுவானோ தெரியலையே,முட்ட கண்ணா, முட்ட கண்ணா” என்று வெட்கம் கலந்த செல்ல திட்டு திட்டி கொண்டே தோழிகளை தேடி சென்றாள்.
இவர்களின் டான்ஸ் பிராக்ட்டிஸ் பூஜாவின் திணறலிலும், அர்ஜுனின் சேட்டையிலும் செல்ல இதோ அதோ என்று கல்ச்சுரல்ஸ் நாளும் அழகாக வந்து சேர்ந்தது.

கல்ச்சுரல் தினத்தன்று அனைவரும் புடவையில் தயாராகி சென்றனர். அங்கு அர்ஜுன் மிகவும் பரபரப்பாக இருந்தான்.இன்ஜினியரிங் கல்லூரியில் படிக்கும் அனைத்து மாணவர்களும் வந்திருந்தனர், அவனுக்கு இதுதான் கடைசி வருடம் என்பதால் எப்போதும் போல் இந்த வருடமும் வெற்றி பெற்று பரிசைப் பெற வேண்டும் என்ற ஆவல் அவன் பர பரப்பில் தெரிந்தது.

அருகில் இருந்த திருனேஷிடம் “ஒன்னும் பிராப்ளம் இல்லையே பென்டிரைவ் எடுத்து வச்சாச்சா, சாங் செக் பண்ணியாச்சா, கடைசி நேரத்துல சொதப்பிட போகுது”என்று பேசி கொண்டே போக,அவன் பரபரப்பை பார்த்து மென்மையாக சிரித்த திரு “அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்லை, நீ டென்ஷன் ஆகாம கூலா இரு”என்று கூறி கொண்டிருந்த நேரம் பூஜாவும் வந்துவிட இருவரும் பேசட்டும் என்று திரு அவர்களுக்கு தனிமை கொடுத்து சென்றுவிட்டான்.

அர்ஜுனின் முகத்தை வைத்தே அவனின் மனதை புரிந்து கொண்ட பூஜா அவனை ஆசுவாசபடுத்த சிறிது நேரம் பேச நினைக்க அவனோ “பேபி கிஸ் மீ” என்க, அதில் அதிர்ந்த பூஜா “வாட்” என்று கத்த அவனோ “ஐ நீட் இட்” என்றான்.அவனின் அலைப்புறுதலை புரிந்து கொண்டாலும் தான் எப்படி என்ற வெட்கம் பிடிங்கி தின்ன கையை பிசைந்து கொண்டு நின்றிருந்தவள் பின் ஒரு முடிவிற்கு வந்தவளாக பெரு மூச்சை விட்டு“அஜூ இனி இப்படி கேட்க கூடாது, இதுதான் லாஸ்ட் அதுவும் கன்னத்துலதான்” என்று முகம் சிவக்க தடுமாற்றத்துடன் சொல்ல,அவ்வளவு நேரம் அவனுக்கிருந்த அலைப்புறுதல் மறைந்து பூஜாவின் வெட்கம் நிறைந்த குரலிலும் தடுமாற்றத்திலும் சுவாரசியம் ஏற்பட அவளையே குறுகுறுவென பார்த்து கொண்டிருந்தான்.

பூஜா கண்களை மூடி கொண்டே அவன் அருகில் சென்று கன்னத்தில் இதழ் பதிக்கும் நேரம் முகத்தை அர்ஜுன் திருப்ப சரியாக அந்த நேரம் பூஜாவின் இதழ் அவன் இதழோடு இணைந்தது.அதில் அவள் அதிர்ந்து விலக நினைக்க அதற்குள் அவளை தன் கரங்களில் இருக்கிய அர்ஜுன் அவளின் இதழில் அழுத்தமாக தன் முத்திரையை பதித்து பின்தான் விலக அனுமதித்தான். அவள் அவனை முறைக்க மாய கண்ணனாக சிரித்தவன் “தேங்க் யூ பேபி” என்று சொல்ல, பூஜாவோ “முட்டக்கண்ணா நீ சரியான பிராடுடா” என்று கூற அவனோ அவார்ட் கொடுத்தது போல் சிரிப்புடனே அவளை பார்த்திருந்தான்.அதற்கு பின் இருவருக்கும் பேச நேரமில்லாமல் பிராக்டீஸ், மேக்அப் என்று நேரம் செல்ல ஆரம்பித்தது.

இங்கு மெடிக்கல் காலேஜில் கிளாஸில் பேகை வைத்துவிட்டு, கிரவுண்டில் அமர்ந்திருந்த சூர்யா, அபி இருவரும் எந்த கேப்பில் இன்ஜினியரிங் காலேஜ் ஆடிட்டோரியத்திற்குள் செல்வது என்று யோசித்து கொண்டிருந்தனர்.

அப்போது என்ஜினீயரிங் காலேஜ் பெண்கள் அவர்களது காம்பௌண்டிற்குள் வர, அவர்களை சில மாணவர்கள் கிண்டல் செய்து வம்பிழுத்து கொண்டு இருந்தனர். அதை பார்த்து கோவப்பட்ட சூர்யா அந்த மாணவர்களிடம் சென்று “உங்களுக்கு கொஞ்சம் கூட அறிவில்லையா பொண்ணுங்ககிட்ட எப்படி பேசணும்னு தெரியாதா, ஒரு டாக்டரா இருந்துட்டு ரவுடிங்க மாதிரி பிஹேவ் பண்றீங்க”என்று திட்ட, அவளையும் கிண்டலாக பார்த்தவர்கள் “இதோடா வந்துட்டாங்க ஆபிசர் பொண்ணுங்களுக்கு ஆபத்துன உடனே பொங்கரங்க, போமா வேலைய பாத்துட்டு, டைம் இருக்கும்போது சொல்றோம் அப்போ வந்து டாக்டர் எப்படி நடந்துக்கணும்னு கிளாஸ் எடு, இப்போ கிளம்பு” என்றனர்.

அவர்களை பார்த்து முறைத்தவள் “உங்ககிட்ட எல்லாம் இப்படி பேச கூடாது இங்கயே இருங்கடா வறேன்”என்றுவிட்டு அபியிடம் சென்றவள் நடந்ததை சொல்ல, கோவமான அபி அந்த மாணவர்கள் இருக்கும் இடத்திற்கு வேகமாக சென்று அங்கு நடுநாயகமாக இருந்த மாணவனை ஓங்கி அறைந்து இருந்தாள்.

அதே நேரம் என்ஜினீயரிங் கல்லூரிக்கு சீப் கெஸ்ட்டாக அழைக்கப்பட்ட ஆதித்யன் தனக்கு கொடுக்கப்பட்ட வரவேற்பை ஏற்று கொண்டே பிரின்சிபல் அறை நோக்கி செல்ல, அவன் கண்ணில்பட்டாள் அந்த மாணவனை அறைந்த அபி.

அவளை ஒரு நிமிடம் ஆழ்ந்து பார்த்த ஆதி ‘இந்த பொண்ணு எப்போ பார்த்தாலும் யாருக்கிட்டையாவது வம்பிழுத்துட்டுதான் இருக்கும் போல, கொஞ்சம் கூட பொறுமையே இல்லை’ என்று மனதில் நினைத்து கொண்டே சென்றுவிட்டான்.

இங்கு அபியோ அங்கிருந்தவர்களை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கிவிட்டு கிடைத்த கேப்பில் பூஜாவின் டான்ஸை பார்க்க சென்றுவிட்டாள். அபி, சூர்யா இருவரும் ஆடிட்டோரியம் வருவதை பார்த்த மது அபியிடம் “ஹேய் உனக்கு ஒரு விஷயம் தெரியுமா, அன்னைக்கு மால்ல ஒருத்தர திட்டினல அவருதான் இன்னைக்கு சீப் கெஸ்ட்டா வந்துருக்காரு, பிரின்சிபல் ரூம்ல இருக்காங்க, இப்போ வர்ற டைம்தான் ” என்றாள்.

தோழிகள் நால்வரும் ஆதிக்காக காத்திருக்க சிறிது நேரத்தில் ஆடிட்டோரியத்தில் இருந்த அனைத்து விளக்குகளும் அணைக்கப்பட்டு ஒரு இடத்தில் மட்டும் போக்கஸ் லைட் ஆன் செய்யப்பட்டது. ப்ரீத்தி லைட் எரியும் பக்கம் திரும்பியவள் “வந்துட்டாரு போல அங்க பாருங்க” என்று சொல்ல அபி வேகமாக திரும்பியவள் “வாங்கடி இன்னைக்கு எப்படியாவது அவருகிட்ட மன்னிப்பு கேட்கணும்”என்று சொல்லி ஆதி வரும் பாதையை நோக்கி ஓடினாள்.

அந்த அரங்கத்தில் நுழைந்து கொண்டிருந்தவனை பார்த்ததும் இவ்வளவு நேரமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று துடித்து கொண்டிருந்த அபி நடப்பதை நிறுத்திவிட்டு அப்படியே தன்னை மறந்து ஆதியை பார்க்க ஆரம்பித்தாள்.

அவள் பின்னால் வந்த மதுவோ வேகவேகமாக வந்தவள் திடீரென்று சிலைபோல் நிற்பதை கண்டு அவளை சுய நினைவிற்கு கொண்டு வர அழைத்து அழைத்து பார்த்தவள் கடைசியில் பொறுமை போனவளாக அபியின் முதுகில் ஓங்கி ஒரு அடி போட்டாள்.அதில் சுயம் திரும்பிய அபி “இப்போ ஏண்டி என்னை அடிச்ச” என்று கோபமாக கேட்டாள்.

அவள் கேட்டதில் ஏகத்திற்கும் கடுப்பான மது அவளை முறைத்துக் கொண்டிருக்க,இவர்களுடன் வந்த ப்ரீத்தியும் சூர்யாவும் “ஆங்ங் இவ்வளவு நேரமா திறந்த வாய் மூடாம,வாய்க்குள்ள கொசு போறது கூட தெரியாம நின்னு சைட் அடிச்சிட்டு கேள்வியா கேட்கிற கேள்வி அடிங்ககொய்யால” என்று இருவரும் கோரசாக கூறினர்.

அபியோ மனதுக்குள் “அடச்சே இப்படி இவளுங்க ஓட்டுற அளவுக்கு அவனை வெறிக்க வெறிக்க பார்த்துட்டனே, இனி இவளுங்க இதை சொல்லி ஓட்டியே நம்மல கொன்னுடுவாங்கலே”என்று புலம்பியவள், பின் “அபி கெத்த மெயின்டன் பண்ணு கெத்த மெயின்டன் பண்ணு” என்று தனக்குள் கூறிக்கொண்டே அவர்களைப் பார்த்து “என்ன சும்மா ஆளாளுக்கு கிண்டல் பண்றீங்க, ஏதோ அன்னைக்கு தெரியாம திட்டிட்டமே எப்படி மன்னிப்பு கேட்கிறதுனு உள்ளுக்குள்ளேயே ஒரு ட்ரையல் பார்த்துட்டு இருந்தேன்” என்ற சமாளிப்பாக கூறினாள்.

உடனே அவளை கேவலமாக பார்த்த மூவரும் ஒரே குரலில் “ஹேஹேஹேஹே” என்று கத்தி “யாருகிட்ட கதை விடுற இதெல்லாம் புயல் காத்துல உட்கார்ந்து ஒருத்தன் பொரி சாப்பிடுவான் அவன்ட்ட போய் சொல்லு எங்க கிட்டேயேவா” என்றனர். அவர்கள் கூறியதை மறுக்க வாயைத் திறந்த அபியை பார்த்த சூர்யா “ஆதித்யாவோட பர்சனாலிட்டியை பார்த்ததும் கவுந்து அடிச்சு விழுந்துட்டு பேச்ச பாரு லொள்ள பாரு, எகத்தாளத்த பாரு” எனவும் சூர்யாவிற்கு hi-fi கொடுத்தனர்.

ப்ரீத்தி, “எங்க மன்னிப்பு கேட்க ட்ரையல் பார்த்த அந்த மூஞ்சிய கொஞ்சம் காமி, மொச பிடிக்கிற நாய மூஞ்சியை பார்த்தா தெரியாது” என்று கலாய்த்து சிரித்து கொண்டிருக்க, இவர்களின் கலகலப்பில் சத்தம் வந்த திசையை நோக்கி திரும்பிய ஆதித்யா அங்கு நின்று தன்னையே பார்த்து கொண்டிருந்த அபியை கண்டதும் தனக்குள் தோன்றிய எரிச்சலையும் கோபத்தையும் மற்றவர்கள் அறியாமல் எப்பொழுதும் போல் தனக்குள்ளேயே மறைத்துக்கொண்டு சென்றான்.

ஆதித்ய சக்ரவர்த்தி இதழ்களில் என்றும் இருக்கும் குருஞ்சிரிப்புடனும் தன் ஆறு அடி நீளத்திற்கு ஏற்ற உடல்கட்டுடனும் பார்ப்பவர் அனைவரையும் வசீகரிக்கும் அழகுடனும் இருப்பவன், தன் எதிரில் இருப்பவர்கள் எதிராளியாகவே இருந்தாலும் தன்னுடைய பேச்சை தட்ட முடியாத அளவிற்கு சாதுரியமான பேச்சு திறமை உடையவன்,கண்ணில் இருக்கும் கண்ணாடியை கழட்டி பார்க்கும்போது அவனின் கடைக்கண் பார்வைக்காக பெண்கள் அனைவரும் ஏங்கி நிற்பர். பெண்களே பொறாமை கொள்ளும் அளவிற்கு சிவந்த நிறத்தை உடையவன்.தன் அழகில் மட்டுமின்றி தன் ஆளுமையாலும் பிசினசை திறன்பட நடத்தி,பிஸ்னஸ் உலகில் சிம்ம சொப்பனமாக இருப்பவன்.கம்பெனியை அவன் பொறுப்பேற்று கொண்ட மூன்று வருடத்திலேயே சிறந்த தொழிலதிபருக்கான விருதை பெற்றிருப்பவன் சக்ரவர்த்தி குரூப் ஆப் கம்பெனியின் சி ஈ ஓ.

அவனை பார்த்த முதல் பார்வையிலேயே தன் மனதை பறிக்கொடுத்த அபி அவனையே விழி எடுக்காது பார்த்து கொண்டிருக்க, அதற்குள் மேடையில் ஆதியை வரவேற்று இந்த இளம் வயதில் பிஸ்னஸ் உலகில் அவன் செய்த சாதனைகளை வரிசைப்படுத்த ஆரம்பித்தனர்.அவர்கள் சொல்வது அனைத்தையும் கேட்ட அபியின் இதயத்தில் இரும்பு குண்டை வைத்ததை போன்ற பாரம் ஏறிக்கொண்டது.

தனக்கும் அவருக்கும் உள்ள ஸ்டேட்டஸ் வித்தியாசம் மற்றும் இருவருக்கும் இடையில் நடந்த சண்டையை நினைவு கூர்ந்தவள், தங்களுக்கிடையிலான உறவிற்கு சாத்தியமே இல்லை என்பதை உணர்ந்து கொண்டவளின் மனது கசந்து வழிந்தது.கசந்தாலும் நிதர்ஷனம் இதுதான் தான் என்ற முடிவிற்கு வந்தவளுக்கு அதற்கு மேலும் அங்கு நிற்பது மூச்சு முட்டுவதை போல இருக்க அந்த ஆடிட்டோரியத்தில் இருந்து வெளியேறினாள்.

மது, ப்ரீத்தி இருவரும் திடீரென்று அவள் செல்வதை புரியாமல் பார்க்க அவர்களை அமர சொன்ன சூர்யா தான் பார்த்துக்கொள்வதாக சொல்லிவிட்டு அபியின் பின்னோடு சென்றாள்.அங்கு அபியோ அந்தி மாலையில் தோன்றும் இள மஞ்சள் நிற வானை வெறித்து பார்த்துக்கொண்டே மனதில் “இதுநாள் வரை யாரை கண்டும் மயங்காத தன் மனம்,எட்டாத உயரத்தில் இருப்பவனை கண்டு மயங்கியது ஏன்?” என்ற கேள்வியை கேட்டு கொண்டது.

அதே நேரம் ஆடிட்டோரியத்தில் இருந்த ஆதிக்கு போன் வர அங்கிருந்தவர்களிடம் சொல்லிவிட்டு வெளியில் வந்தவன் போன் பேசி முடித்த உள்ளே செல்ல முயன்ற நேரம் ஒரு பெண்ணின் அழுகை குரல் காதில் விழ எதுவும் பிரச்சனையோ என்று எண்ணியவன் அந்த பெண் பேசுவதை கேட்க ஆரம்பித்தான்.
“என்னடி ஆச்சு மெடிக்கல் காலேஜ் காம்பௌண்ட் போயிட்டு வந்ததுல இருந்து ஒரு மாதிரி இருக்க” என்று ஒருவள் கேட்க, மற்றொருவளோ அங்கு நடந்த அனைத்தையும் சொல்லி, “நல்லா வேலை அவங்க ரெண்டு பேரும் வந்தாங்க இல்லைனா அந்த பசங்ககிட்ட நல்லா மாட்டி இருப்பேன், அதுவும் அந்த இன்னொரு பொண்ணு அவனை ஓங்கி ஒன்னு விட்டுச்சு பாரு அவனுங்க யார் மூஞ்சிலையும் ஈ ஆடல, அவங்ககிட்ட தேங்க்ஸ் சொல்லலாம்னு நினைச்சேன், ஆனா……. “ என்று சொல்லி கொண்டிருக்கும்போதே அபியை பார்த்தவர்கள்.”ஹேய் அவங்க ரெண்டு பேரும் நிக்கறாங்க வா போய் தேங்க்ஸ் சொல்லிட்டு வரலாம்” என்று அபி நின்றிருக்கும் இடத்தை நோக்கி ஓடினர்.

அபியோ மனதில் ஏற்பட்ட சஞ்சலத்தில் நின்றிருக்க, அவளிடம் வந்த சூர்யா “என்னடி ஆச்சு”என்று கேட்டு கொண்டிருக்கும்போதே அவர்கள் அருகில் வந்த பெண்கள் பேச ஆரம்பித்தனர்.

தொலைவில் இருந்து அந்த பெண்கள் அபியை பார்த்து செல்வதை பார்த்த ஆதி “ஹ்ம்ம் மேடம் பயங்கர தைரியமானவங்கதான் போல, நல்ல விஷயத்துக்குதான் அடிச்சுருக்கா,நாம நினைச்ச போல மோசம் இல்லை”என்று எண்ணியவனுக்கு அவளின் சோகமான முகம் மனதை உறுத்த, அவனையும் அறியாமல் ஒரு நிமிடம் வந்து போனது மாலில் மகிழ்ச்சியாக சுத்திய அபியின் முகம்.உடனே அவளை அணைத்து ஆறுதல் படுத்த துடித்த மனதை அடக்கியவன்.முடிகளை கோதி தன்னை சமன்படுத்தி கொண்டவன் “வெரி டேஞ்சரஸ் கேர்ள், இவளை பார்த்தாலே என் உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு வசியம் பண்ணிடறா, அன்னைக்கு மாலுலையும் அப்படிதான் என்னையும் அறியாமல், அவ பின்னாடி சுத்த வச்சா ஆனா அவளுக்கு என்ன நியாபகம் இருக்குமானே தெரிலயே” என்று பெரு மூச்சுவிட்டவன் ஆடிட்டோரியத்திற்குள் நுழைந்தான்.

அபியிடம் வந்த பெண்கள் நன்றி சொல்ல, அவர்களை பேசி சமாளித்து அனுப்பிவைத்தனர் இருவரும், பின் சூர்யா அபியிடம் “நம்ம காலேஜ் விட்டிருப்பாங்க வாடி போய் பேக் எடுத்துட்டு வந்திரலாம்” என்றாள்.

தன் காதல் சொல்லாமலே, உணர்ந்த நொடியிலேயே தோல்வி அடைந்துவிட்டது என்ற கவலையில் இருந்த அபி “இல்லடி எனக்கு தலை வலிக்குது, நீ போய் எடுத்துட்டு வா” என்று சொன்னவளின் மனது முடிவெடுத்திருந்தது ‘ஆதியிடம் மன்னிப்பை கேட்டுவிட்டு அவனிடம் இருந்து விலகி விட வேண்டும்’ என்று.

அபி முகம் சோர்ந்து இருப்பதை கவனித்த சூர்யாவும் “ஆதியை பார்த்ததுல இருந்து உன் முகமே சரி இல்லை,தேவை இல்லாம எதையாவது யோசிக்காத, நான் போய் பேக் எடுத்துட்டு வறேன்.அது வரை நீ தனியா இங்க நிற்க வேண்டாம் உள்ள போ” என்று சொல்ல, அபியும் சம்மதமாக தலையாட்டியவள் “நான் போறது இருக்கட்டும் நீ பத்திரமா போயிட்டு கவனம்” என்று சொல்லிவிட்டு உள்ளே போய்விட்டாள்.

சூர்யாவும் தோழிக்கு திடீரென்று என்ன ஆனது என்ற யோசனையுடனேயே தங்களது வகுப்பை நோக்கி சென்றாள். பேகை அவள் கையில் எடுத்த நேரம் பின்னிருந்து யாரோ அவளது வாயை மூடினர்.அதில் பயந்தவள் யார் என்று திரும்பி பார்க்க முனைந்து முடியாமல் போக கையை எடுக்க முயற்சிக்க அதற்குள் அவளது கையும் கட்டப்பட, அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் அவர்கள் இழுத்த இழுப்பிற்கு சென்றவளின் மனதிலோ பயம் கவ்வியது.

அவளை வேறு ஒரு வகுப்பிற்கு அழைத்து வந்தவன் வாயில் இருந்த கையை எடுத்துவிட்டு, கையில் இருந்த கட்டையும் கழட்டிவிட்டு சிரிப்புடன் நின்றிருந்தான் மாதேஷ்.

அவர்கள் படிக்கும் கல்லூரி பார்ட்னரின் மகன்.அவனை பார்த்தவுடன் வந்த எரிச்சலை முகத்தில் அப்படியே காட்டியவள் “லூசாடா நீ எதுக்குடா என்னை இங்க கூட்டிவந்த, கொஞ்சமாவது உனக்கு அறிவிருக்கா” என்று சரமாரியாக திட்டி கொண்டிருக்க அவனோ அது எதையும் காதில் வாங்காதவனாக “சில் ஸ்வீட்டி எதுக்கு இவ்ளோ கோப படற, நான் உன்கிட்ட என்னோட காதலை சொல்ல பல முறை ட்ரை பண்ணுனேன் ஆனா நீ எப்போ பாரு உன்னோட பிரண்டுங்க கூடவே சுத்திட்டு இருந்த, இன்னைக்குதான் தனியா மாட்டுன அதான் உன்னை தூக்கிட்டு வந்துட்டேன்” என்று பெருமையாக சொல்ல, அவனை கேவலமாக பார்த்தவள் “போடா லூசு லவ்வு ஜவ்வுனு இன்னொரு டைம் என் முன்னாடி வந்த கன்னம் பழுத்துடும் பார்த்துக்கோ,லவ் பண்ரானாம் லவ்வு போடா” என்றுவிட்டு செல்ல முனைய அவள் கையை பிடித்து தடுத்தவன் “இரு செல்லம் எங்க போற எனக்கொரு பதில் சொல்லிட்டு போ”என்க,அவன் பேச்சிலும், செயலிலும் கடுப்பான சூர்யா அவனை ஓங்கி அறைந்திருந்தாள்.

கோவமாக தன் கண்ணத்தை தடவிய மாதேஷ் “எல்லா பொண்ணுங்களையும் டீல் பண்றமாதிரியே உன்னையும் டீல் பண்ணி இருக்கணும் பேசிட்டு இருந்தது என்னோட தப்புதான்.லவ் சொல்லியாச்சு நெக்ஸ்ட் கிஸ்தான்” என்று சொல்லி கொண்டே அவளை நோக்கி குனிய அவளோ அவனை தள்ள முயற்சித்தாள். அவனின் கரங்கள் அவளை அசைய விடாமல் சுற்றி வளைத்திருக்க அவளால் அவனை நகர்த்த கூட முடியவில்லை.

அவன் தன்னை நெருங்கிவிட்டதை உணர்ந்த சூர்யா இனி அவ்வளவுதான் தன்னை காப்பாற்ற யாரும் வர போவது இல்லை என்ற எண்ணத்தில் அவள் கண்களில் இருந்து ஒரு சொட்டு நீர் உருண்டு கீழே விழுந்த நேரம்
அவன் சாற்றி வைத்திருந்த கதவை உடைத்து கொண்டு வந்திருந்தான் திருனேஷ்.

அவனை அங்கு எதிர்பார்க்காத மாதேஷ் அதிர்ந்து நின்றிருக்க, கோவமாக இருந்த .திருவோ சூர்யாவின் கலங்கிய முகத்தையும் மாதேஷின் எண்ணத்தையும் புரிந்து கொண்டவன். அவனை இழுத்து அடிக்க ஆரம்பித்தான். தனக்கு உதவ யாருமில்லை என்று சூர்யா நினைத்திருந்த நேரம் திருவை பார்த்தவுடன், அவளையும் அறியாமல் மனதில் ஒரு நிம்மதி ஏற்பட்டது.

அவனையே சூர்யா தன்னை மறந்து பார்த்துக்கொண்டு இருக்க, மாதேஷின் அலறல் சத்தத்தில் தன்னிலை அடைந்தவள்.திருனேஷின் அருகில் சென்று அவன் கையை பிடித்து தடுத்து “வேண்டாம் அவனை விடுங்க ஏதும் பிரச்சினையாகிட போகுது” என்று அவனிற்காக பயந்து சொல்ல, அவளை ஆக்ரோஷமாக பார்த்தவன் “என்ன பிரச்சனை வர போகுது எது வந்தாலும் நான் பார்த்துக்கறேன்.எவனாவது உன்னை தப்பா பார்த்தாலே அவனை வெளுத்து கட்டிடுவேன்.இவனுக்கு எவ்வளவு நெஞ்சழுத்தம் இருந்திருந்தா உன் மேல கை வச்சிருப்பான் இன்னைக்கு அவன் சாவு என் கையில் தான்” என்று சொல்லி அவனை கண்மூடிதனமாக அடிக்க ஆரம்பித்தான்.
சூர்யா அவன் கோபத்தை கட்டுப்படுத்தும் வகை அறியாமல் திணறித்தான் போனாள்.மாதேஷின் நிலையை கண்டு பயந்தவள் “பிளீஸ் அவனை அடிச்சது போதும்விடுங்க எதுவும் ஆகிட போகுது,வாங்க நாம போகலாம்” என்றவள் திருவின் கையை பிடித்து இழுக்க, அவளை ஒரு நிமிடம் ஆழ்ந்து பார்த்தவன் “நீ இங்க இருக்க வேண்டாம்,உனக்கு ஏதாவது பிரச்சினை ஆயிடும்.அதனால நீ முதல்ல கிளம்பு” என்று மாதேஷை அடித்துக்கொண்டே சொல்ல,அவளோ மறுப்பாகத் தலையை அசைத்து “முடியாது” என்றுவிட்டு, “உங்களுக்கும் எதுவும் பிரச்சினை ஆயிடும் நீங்களும் வாங்க சேர்ந்து போலாம், இல்லையென்றால் நானும் போக மாட்டேன்” என்று சொல்ல, திருவோ“இல்ல எனக்கு எந்த பிரச்சினை வந்தாலும் நான் பாத்துக்கிறேன். உன்னோட பேர் இந்த பிரச்சனைல வர்றது எனக்கு பிடிக்கலை, அதனால நீ போ” என்று அழுத்தம் கலந்த மிரட்டலுடன் சொல்ல,சூர்யா மனமே இல்லாமல், கண்ணீருடன் அங்கிருந்து சென்றாள்.

சூர்யா சென்ற சிறிது நேரத்திலேயே அந்த பக்கமாக வந்த அந்த கல்லூரியின் மேனேஜர் மற்றும் மாதேஷின் தந்தையும், பார்ட்னருமான ஜனகராஜ் இருவரும் பேசி கொண்டு வந்தனர்.அப்போது மாதேஷ் கத்தும் சத்தம் அருகில் இருக்கும் அறையில் இருந்து கேட்க இருவரும் அடித்து பிடித்து அந்த அறையை நோக்கி வேகமாக ஓடினர்.

அங்கு திருனேஷ் மாதேஷை அடிப்பதை பார்த்து பதறிய ஜனகராஜ் அவர்கள் அருகில் விரைவாக சென்று “டேய் என்னடா பண்ற, என் மகனா விடுடா” என்று சொல்லி இருவரையும் விலக்க முயற்சிக்க,அவரை ஒரு பொருட்டாக மதிக்காத திருவோ மேலும் மேலும் அவனை அடிப்பதிலேயே குறியாக இருந்தான்.
மாதேஷின் உதடு கிழிந்து வாயில் இருந்தும்,மூக்கில் இருந்தும் ரத்தம் வர, வலி தாங்க முடியாமல் மயக்க நிலைக்கு சென்று கொண்டிருந்தான். மகனின் நிலையை கண்டு அதிர்ந்த ஜனா மற்றும் மேனேஜர் இருவரும் முழு முயற்சி செய்து திருவை விலக்கி நிறுத்தினர்.அப்போதும் கோபம் அடங்காதவனாக நின்றிருந்தான் திருனேஷ்.

மகனின் நிலையை கண்டு வருந்தியவர், அவனை தூக்கி நிறுத்த முயற்சிக்க, அவனோ வாங்கிய அடியில் சுய நினைவின்றி தள்ளாட்டத்துடன் மயக்கத்திற்கு சென்று கொண்டிருந்தான். அதை கண்டு கோபம் கொண்டவர் திருவிடம் திரும்பி “உனக்கு எவ்வளவு திமிர் இருந்திருந்தா என் மகன் மேல கை வச்சிருப்ப, காலேஜ் கரஸ்பான்டன்ட் பையன்னா நீ என்ன வேணா செய்வியா, நானும் இந்த காலேஜ்ல ஒரு பார்ட்னர்தான் நியாபகம் வச்சிக்கோ.எதுக்குடா என் மகனை அடிச்ச” என்று கேட்டார்.

அவரை கிண்டலாக பார்த்த திரு ”ஹான் உன் மகன் போட்டுருந்த ஷர்ட் கலர் எனக்கு பிடிக்கல அதான் அடிச்சேன்” என்று சொல்ல அவனை முறைத்தவர் உன்னை எங்க சொல்லணுமோ அங்க சொல்றேன் என்க, அவரை எகத்தாளமாக பார்த்த திரு “சொல்லு சொல்லு எனக்கும் நல்லாவே தெரியும்.உன்னோட மகன் பண்ற வேலையும். அவனை காப்பாத்த நீ பண்ற தகிடுதத்தம் எல்லாமே தெரியும்.கூடிய சீக்கிரமே உங்க ரெண்டு பேருக்கும் ஒரு முடிவு எடுக்கறேன்” என்று சொல்லிவிட்டு வேகமாக அந்த அறையை விட்டு வெளியேற, செல்லும் அவனையே தற்போது எதுவும் செய்ய முடியாத கையாலாகாத தனத்துடன் பார்த்திருந்தார் ஜனகராஜ்.

ஆடிட்டோரியத்திற்கு வந்த சூர்யா அழுது சிவந்த முகத்துடன் இருக்க, அவளை பார்த்த அபி திகைத்து போனாள்.”அவளிடம் என்ன ஆனது” என்று கேட்க, அவளோ பிறகு சொல்வதாக சொல்லிவிட்டு பூஜா, அர்ஜுன் டான்ஸை பார்க்க ஆரம்பித்தாள்.ஆனால் அவர்களின் ஆடலில் மனம் லயிக்காமல் அங்கு திருவிற்கு என்ன ஆனதோ என்று கலங்கியவள், கண்ணில் வழிந்த நீரை யாரும் அறியாமல் துடைத்து கொண்டு அமர்ந்திருந்தாள் சூர்யா.

ஆனால் அவளின் கண்ணீரை கண்டும் காணாமல் அமர்ந்திருந்த அபி அங்கு வைத்து எதுவும் கேட்க முடியாததால் பர்பாமென்ஸ் முடிந்த உடனே அவளை தனியாக இழுத்து சென்று நடந்ததை விசாரித்து தெரிந்து கொண்டாள்.
உடனே தன் போனில் இருந்து திருவை அழைத்தவள் சூர்யா வந்த பிறகு என்ன நடந்தது என்பதை விசாரித்து தெரிந்து கொண்டவள்,அவளிடம் திரு கூறிய அனைத்தையும் கூறி, “இதை இப்படியே மறந்திடு, யாருக்கும் எதுவும் தெரிய வேண்டாம், இனிமே எல்லாம் திரு பார்த்துப்பாரு” என்று ஆறுதல்படுத்தினாள்.

அப்போது பர்பாமன்ஸ் முடித்து பூஜா,மது, ப்ரீத்தி மூவரும் ஆரவாரமாக வந்து சேர்ந்தனர்.இவர்களைப் பார்த்தவுடன் அபியும் சூர்யாவும் தங்களை சமாளித்து கொண்டவர்கள் சிறு சிரிப்புடன் அவர்களை பார்த்தனர்.

ப்ரீத்தி, நீங்க ரெண்டு பேரும் இங்க என்ன பண்றீங்க. நம்ம ஜொள்ளு இன்னைக்கு கலக்கிட்டா, அதனால இன்னைக்கு கண்டிப்பா ட்ரீட் வச்சே ஆகணும். வாங்க எல்லாரும் போலாம்.

மதுவும் “ஆமாம் ஆமாம் இன்னைக்கு ஹோல் காலேஜுக்கும் ஹெட் லைன்னே நம்ம பூஜாதான் அதனால இதை நாம செல்ப்ரேட் பண்ணியே ஆகணும்”என்று குதிக்க, அபியும் சூர்யாவும் தோழிகளுக்காக தங்களை சாதாரணமாக காட்டி கொண்டவர்கள் முழு முயற்சி செய்து அவர்களின் மகிழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

காலை மகிழ்ச்சியாக ஆரம்பித்த கல்ச்சுரல்ஸ் நாள் காதலில் மூழ்கி சோகத்தில் தத்தளித்து அடிதடியில் மூச்சு திணறி இதோ தோழிகளின் வழக்கமான சிரிப்பில் வந்து நிற்கிறது. இன்னும் ட்ரீட்ங்கற பேர்ல இவங்க என்ன அக்கப்போர் பண்ணபோறாங்கனு அடுத்த எபில பார்க்கலாம்.


கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் தோழமைகளே.......

 
Last edited:

Sonythiru

Suthisha
24172

அத்தியாயம் -20

தோழிகள் பேசியதை கேட்ட பூஜாவும் “கண்டிப்பா உங்களுக்கு இல்லாமையா, எனக்காக நீங்க எவ்வளவு பெரிய ரிஸ்க் எல்லாம் எடுத்து இருக்கீங்க, ‘நண்பேன்டா’” என்று வராத கண்ணீரை துடைத்தபடி கூறி கொண்டிருக்கும் போதே அங்கு வந்த அர்ஜுன் “இவங்க என்ன பண்ணுனாங்க” என்று கேட்டான்.உடனே திருதிருவென விழித்து “இல்ல இல்ல…….” என்று திணறியவள் பின் “உன் கூட டான்ஸ் ஆட, அவங்க தான் என்னை என்கரேஜ் பண்ணாங்க அதனாலதான்” என்று சமாளித்தாள்.

அர்ஜுனும் “ அப்படியா அப்ப ட்ரீட் குடுக்க வேண்டியதுதான்” என்றவன் பின் குறுஞ்சிரிப்புடன் பூஜாவை பார்த்து “ட்ரீட் உன் பிரண்டுங்களுக்கு மட்டும்தானா, எனக்கு ட்ரீட் இல்லையா” என்று அவள் இதழ்களை பார்த்து கொண்டே கேட்க, தன்னவனின் பார்வையில் சிவந்தவள் என்ன சொல்வது என்று தெரியாமல் விழிக்க,

மதுவோ, ம்கூம்…… ஆரம்பிச்சுட்டாங்களா ஒரு சின்ன கேப் கிடைச்சாலும் இதுங்க காதல் படகை ஓட்ட ஆரம்பிச்சுருதுங்க நாலு சின்ன புள்ளைங்க இருக்காங்கங்ற எண்ணம் கொஞ்சமாவது இருக்கா, என்று மனதில் நினைத்தவள் வேகமாக இருமி இருவரையும் நடப்பிற்கு கொண்டு வந்தாள் என்றால்,

ப்ரீத்தியோ, “நோ….. இது ஒன்லி கேர்ள்ஸ் ஹங்கவுட் பாய்ஸ் நாட் அளவுட்” என்ன அபி” என்றாள்.

அவள் கேட்டவுடன் மூவரின் பார்வையும் அபியை நோக்கி திரும்பியது, அவள் மெல்லிய சிரிப்புடன் “ஆமாம்” என்றதோடு முடித்துக்கொள்ள, அடுத்து அவர்களின் பார்வை சூர்யாவிடம் சென்றது.

அவளோ “எனக்கும் இங்கு நடப்பதற்கும் சம்மந்தம் இல்லை” என்ற நிலையில் இருந்தாள். அவளின் அமைதியை அனைவரும் சந்தேகமாக பார்க்க, அவள் காதருகே குனிந்த அபி, “நார்மலா இரு, உன்னை கவனிக்கறாங்க பாரு”என்றாள்.

அபியின் குரலில் மற்றவர்களை நிமிர்ந்து பார்த்தவள் அனைவரும் தன்னையே பார்ப்பதை உணர்ந்து கண்களை எட்டாத சிரிப்பை உதிர்த்து “ஆமாம்” என்னும் விதமாக தலையை ஆட்டி மட்டும் வைத்தாள்.

அர்ஜுனும் “சரி சரி பாத்து பத்திரமா போயிட்டு வாங்க” என்க, பூஜாவோ அவனிடம் கையை நீட்டியவள் “தா” என்பது போல் சைகை செய்ய அவனுக்கு புரிந்து விட்டது அவள் என்ன கேட்கிறாள் என்று. தலையிலடித்துக் கொண்டவன் “இதுக்கு மட்டும் வந்துரு” என்று கூறியபடி தனது பர்ஸில் இருந்து பணத்தை எடுக்க, அவளோ அப்படியே அதை பிடிங்கியவள் தனது கைப்பைக்குள் வைத்துக் கொண்டாள்.

பூஜாவின் செயலில் பதறியவன் “அடியே கொஞ்சமாவது, எனக்கு காசு கொடுத்துட்டு போ, எல்லாத்தையும் நீயே எடுத்துட்டு போயிட்டா, நான் என்ன பண்றது” என்று கேட்க, அவளோ சோகமாக முகத்தை மாற்றியவள் “அப்போ எனக்கு இந்த காசுல உரிமை கிடையாதா.நா யாரோ தானா” என்று கேட்டாள்.

சூர்யாவும் தோழிகளுக்காக யோசித்தவள் தன்னை சாதாரணமாக காட்ட எண்ணி எப்போதும் போல் அர்ஜுனிடம் வம்பிழுக்க ஆரம்பித்தாள் பூஜாவை பாவமாக பார்த்தவள் “இப்படி ஒரு கஞ்சூஸ்கிட்ட மாட்டிக்கிட்டியேடி” என்று வராத கண்ணீரை துடைப்பது போல் நடித்தவள் மேலும் “வானத்துல இருக்கும் மேகம் எங்க பூஜா மனசு முழுக்க சோகம்” என்று சோக கீதம் பாடினாள்.

அதில் கடுப்பான அர்ஜுன் “போதும்” என்பது போல் சைகை செய்தவன் “மொத்தமா பர்ஸை வேணாலும் வச்சுக்கோங்க ஆனா, தயவுசெஞ்சு இந்த மாதிரி டயலாக் எல்லாம் பேசி கொல்லாதீங்க” என்று கூறிக் கொண்டிருந்தான்.அப்போது அங்கு வந்து சேர்ந்தான் திருனேஷ்.

அவனை கண்டவுடன் சூர்யா கண்களில் அலைப்புறுதலுடன் அவனுக்கு ஏதும் அடி பட்டிருக்கிறதா என்று பார்த்து எதுவும் காயம் இல்லை என்ற பிறகுதான் நிம்மதி பெரு மூச்சு விட்டாள்.

இது எதுவும் தெரியாத பூஜா “அடடே நம்பர் டூ அடிமை வந்தாச்சு” என்று கூறியபடி அவனிடமும் கைநீட்டினாள்.திருனேஷ் ஒன்றும் புரியாமல் விழிக்க, அர்ஜுன்தான் “உன்னோட பர்ஸ்ச கேக்குறாங்க குடு என்றான்.திருவோ “நான் ஏன் கொடுக்கணும் அது எல்லாம் முடியாது” என்றான் .

உடனே அர்ஜுன் தயவு செஞ்சு அப்படி எல்லாம் சொல்லாத அப்புறம் டயலாக் சொல்றேன், பீல் பண்றேன்னு ஏதாவது மொக்கையா ஒரு டயலாக் சொல்லி நம்ம கழுத்த அறுப்பாங்க. அந்த கொடுமைய கேக்கறத்துக்கு நீ பர்ஸ்ச கொடுத்திட்டே போயிடலாம் என்று சொன்னான்.

அபியும் சூர்யாவை கண்காட்டி “எங்க ஹெல்ப் வேணும்னா பர்ஸ்சை குடுங்க,இல்லன்னா போயிட்டே இருங்க” என்றாள்.

திரு இவர்களுடன் பேசிக்கொண்டிருந்தாலும் கவனம் முழுதும் கண்களை எட்டா சிரிப்புடன் நின்றிருந்த சூர்யாவை வட்டமிட, தனது பர்ஸை எடுத்தவன் அதை கொடுக்கும் சாக்கில் அவள் அருகில் சென்று யாரும் அறியா வண்ணம் அவள் கைகளை அழுத்தி ஆறுதல் படுத்தியபின், பூஜாவின் கையில் பர்ஸை வைத்துவிட்டு நகர்ந்தான்.

திருவின் ஒற்றை ஆறுதலான தொடுகையே சூர்யாவின் அவ்வளவு நேர அலைப்புறுதலை சரி செய்ய போதுமானதாக இருந்தது.அவன் கையின் அழுத்தத்தில் மனதில் ஏற்பட்ட அமைதியுடன் அவள் பார்க்க அவனோ கண்களை மூடி திறந்து தான் பார்த்து கொள்வதாக சைகை செய்தான்.

அதன் பின் தோழிகள் அனைவரும் சிரித்தபடியே அங்கு அருகில் இருந்த ஒரு பெரிய ஹோட்டலுக்கு சென்றனர்.கல்லூரியை விட்டு வெளியே வந்த நேரம் அவர்களை ஆதி சென்ற கார் கடந்து சென்றது. அப்போது ஆதியின் கண்கள் தோழிகளுடன் சிரித்து பேசி கொண்டிருந்த அபியின் முகத்தை பார்த்த பின்தான் மனம் லேசானது போல் உணர்ந்தவன், அவளின் சிரித்த முகத்தை மனதில் பதித்து கொண்டு சென்றான்.

அனைவரும் அருகில் இருந்த ஒரு பிரபலமான உணவகத்திற்கு வந்து அமர்ந்து வெகுநேரமாகியும் ஆர்டர் எடுக்க யாரும் வராமல் இருக்க, கோபம் கொண்ட மது “என்னடி இது, சரியான டுபாக்கூர் ஹோட்டலா இருக்கும் போல, நாம வந்து பத்து நிமிஷம் ஆச்சு ஆனா ஆர்டர் எடுக்க எவனும் வரல.இதுக்கு காலேஜ் கேண்டீன்லயாவது ஏதாவது சாப்பிட்டு இருப்பேன்.இங்க வந்து சாப்பிடலாம்னு பார்த்தா எவனையும் காணோம், இப்ப எனக்கு பசிக்குது” என்று சொல்ல,
பூஜாவும் “அட இருடி ஹோட்டல் ஃபுல்லா இருக்கு அதான் டிலே ஆகுது, வருவாங்க வருவாங்க” என்றாள்.மதுவோ சலிப்பான குரலில் “என்னத்த வருவார்களோ போ” என்று திரும்ப ஹோட்டல் சமையல் அறையில் இருந்து ஒருவர் வருவதை பார்த்தவள் “இவங்க வர மாட்டாங்க நாமே களத்துல இறங்கிட வேண்டியதுதான்” என்று முடிவெடுத்தவள், சேரில் நன்றாக சாய்ந்து அமர்ந்து கொண்டு “டேய் தம்பி இங்க வாப்பா”என்றாள்.

அந்த நபரோ யாரை கூப்பிடறாங்க என்ற யோசனையுடன் திரும்பி திரும்பி பார்க்க மதுவோ “எப்பா தம்பி உன்னைதான்ப்பா ப்ளு ஷர்ட் இங்க வா” என்க.அவனும் அவர்கள் அருகில் சென்றான்.அவனை பார்த்த மதுவின் மனதுக்குள்ளோ “பரவாயில்லையே இந்த ஹோட்டல்ல சர்வர் எல்லாம் கூட அழகா இருக்காங்க” என்று எண்ணியபடியே “ஏம்பா தம்பி அதென்ன எல்லாத்துக்கும் ஆர்டர் எடுக்குறீங்க, எங்க டேபிளுக்கு மட்டும் வர மாட்டிக்கிறீங்க,அவங்க மட்டும் தான் பணம் குடுக்கறாங்களா, நாங்க குடுக்கலையா” என்று கேட்க

அந்த நபரோ “இல்ல மேடம்” என்று ஆரம்பிக்கும்போதே மது அவனைப் பேச விடாமல் தடுத்தவள் “பெரியவங்க பேசும்போது இடைல பேசக்கூடாதுனு உனக்கு தெரியாதா மேன், நீயே இப்படி இருக்கியே உன்னை வச்சு வேலை வாங்கற அந்த கூமுட்டை எப்படி இருப்பானோ போ, கொஞ்சம் கூட பொறுப்பே இல்ல, சீக்கிரமா ஆர்டர் எடுங்க உங்க ஹோட்டலுக்கு வந்தா இப்படி தான் சாப்பாடு போடாமல் கொடுமைபடுத்துவீங்க போல, நான் அப்பவே இவக்கிட்ட சொன்னேன் இது ஒரு டுபாக்கூர் ஹோட்டல் இங்க வேண்டான்னு கேட்டாளா, இங்கதான் நான் வெஜ் நல்லா இருக்கும்னு கூட்டிட்டு வந்துட்டா” என்று கூற,

அந்த நபரோ “சாரி பார் தே இன்கன்வெனியன்ஸ் மேடம்.நான் போய் சர்வர வர சொல்றேன்”என்று செல்ல முயல அவனை தடுத்தவள், அப்போ நீ சர்வர் இல்லையா, சூப்பர்வைசரா பரவால்லை சூப்பர்வைசரா இருந்தாலும் ஆர்டர் எடு மேன் எங்கள இவளோ நேரம் வெயிட் பண்ண வச்சல, போ மேன் போய் நோட் பேட் எடுத்துட்டு வந்து அக்கா சொல்றதெல்லாம் நோட் பண்ணிக்க பாப்போம்” என்று கூற அந்த நபரும் “சரி மேடம் உங்களுக்கு என்ன வேணும் சொல்லுங்க” என்றான்.

அப்போது வேகமாக அவனிடம் வந்த வேறு ஒரு சர்வர் “சார்….நீங்க போங்க நான் இந்த டேபிள்ள பார்த்துக்கிறேன்” என்று சொல்ல, அவனோ ஹோட்டல்க்கு வந்த கஸ்டமர இப்படிதான் வெயிட் பண்ண வைப்பீங்களா”என்று யாருக்கும் கேட்கா வண்ணம் கடிந்து கொள்ள, அவரோ “இல்ல சார் கும்பல் அதான்… “ என்றான்.பின் அவனே “நீங்க போங்க நானே இவங்கள பார்க்கிறேன்” என்று விட சர்வரோ பயத்துடனேயே அங்கிருந்து சென்றான்.

அந்த சர்வர் சென்ற பின் முதலாமானவனை பார்த்த மது அப்படி என்ன ரகசியம் பேசுனீங்க, சரி ஏதோ பேசுங்க எனக்கு சோறுதான் முக்கியம் எழுதிக்கோப்பா “ரெண்டு பிளைட் மட்டன் பிரியாணி” என்று ஆரம்பித்த உடனேயே, சூர்யா “ஏய் இன்னிக்கு வெள்ளி கிழமைடி உங்க வீட்ல இன்னைக்கு நான் வெஜ் சாப்பிட மாட்டீங்களே” என்று கூற,

அவளை முறைத்துப் பார்த்த மது “அது வீட்ல இது ஹோட்டல்ல இங்க நான் என்ன வேணா சாப்பிடுவேன் எவனும் என்னை எதுவும் கேட்க முடியாது.நீ கொஞ்சம் வாயை மூடு” என்று கூறியவள் அந்த நபரிடம் திரும்பி “என்ன சொன்னேன்” என்று கேட்க அந்த நபரோ “ரெண்டு மட்டன் பிரியாணி” என்று கூறினார்

“ஆமா…ஆமா அப்புறம் கிரில் சிக்கன் ஃபுல், சிக்கன் சுக்கா, மீன் வகைகள்ள பொரிச்சது இருக்கா” என்று கேட்க அந்த நபரும் “இருக்கு” என்பது போல தலையசைத்தான் “அப்ப அது ரெண்டு ப்ளேட் அப்புறம் பட்டர்ன் நான் அதுக்கு சைடிஸ் என்று இழுத்தவள் அவனிடமே ஆமா அதுக்கு எந்த சைடிஸ் உங்க ஹோட்டல்ல நல்லா இருக்கும்” என்று கேட்க அந்த நபரும் “பன்னீர் பட்டர் என்று ஆரம்பிக்கும் போதே வாயில் அடி வாய்ல அடி என்ன வெஜ் பேரு சொல்ற, நான் வெஜ் சொல்லு” என்று கேட்க அவனும் “பட்டர் சிக்கன் நல்லா இருக்கும்” என்றான்.

“ஓகே ரெண்டு நான், ஒரு பட்டர் சிக்கன் கூறியவள் வேற எதுவும் விட்டுட்டன” என்று யோசிக்க பூஜா “அந்த சவர்மா…”என்று இழுக்க, உடனே அவளை பார்த்து சிரித்தவள் “நண்பேன்டா நல்ல வேலை நியாபகபடுத்துன சவர்மா ரெண்டு போதும் அவ்வளவுதான்”என்க, இப்போது ப்ரீத்தி “அந்த முட்டை” என்று கூற “அட ஆமால்ல மறந்துட்டேன்” என்றவள் “தம்பி அந்த மட்டன் பிரியாணில இரண்டு முட்ட இருக்கணும் மறந்துடாத, ரெண்டு” என்று அழுத்திக் கூற அவனும் “மட்டன் முட்டை போடாதுங்க” என்று பொறுமையை இழுத்து பிடித்தபடி கூற, அவளோ அவனை முறைத்தவள் “இல்லனா பக்கத்துல கடன் வாங்கி வை மேன். பட் ஐ நீட் முட்டை” என்க, அவனும் “சரி” என்றுவிட்டு அங்கிருந்த நகர முனைய, அவனை சொடக்கிட்டு அழைத்தவள் “என்ன அவங்ககிட்ட எல்லாம் ஆர்டர் எடுக்காம போறே” என்று கேட்க,

அவனோ “நீங்கதான் எல்லாத்துக்கும் சொல்லிட்டீங்களே” என்று புரியாமல் கேட்க, அவனை நக்கலாக பார்த்த மது “தம்பி நான் சொன்னது எனக்கு மட்டும்தான்” இவங்க நாலு பேரும் என்ன பண்ணுவாங்க நான் சாப்பிடுவதையே பார்த்துட்டு இருப்பாங்களா, அவங்க கிட்டயும் கேளு பா, உன்னை சொல்லி தப்பில்லை உன்னை வேலைக்கு வச்சவன சொல்லணும்” என்று சொல்ல,

அவனோ அவளை முறைத்தவன் இது அத்தனையும் இந்த பொண்ணுக்கு மட்டுமா எவன் இந்த பொண்ண கட்ட போறானோ பாவம் அவன் சமைச்சுப்போட்டே அவன் வாழ்க்கை முடிஞ்சுடும்”என்று நினைத்துக் கொண்டவன் மற்றவர்களிடமும் அவர்களுக்கு தேவையானதை கேட்டுவிட்டு அங்கிருந்து சென்றான்.

உள்ளே சென்ற நேரம் அவன் எதிரில் பணிவாக வந்து நின்றான் ஒருவன் அவனை பார்த்து கோபம் கொண்டவன் “என்ன சரவணன் இது, அவங்க ரொம்ப நேரமா வெய்ட் பண்ணிட்டு இருந்திருக்காங்க, அதை பாக்கணும் உங்களுக்கு தோணலையா.என்னதான் பண்ணிக்கிட்டு இருக்கீங்க எல்லாரும், இப்படியே போனா,சீக்கிரம் இந்த ஹோட்டல்ல இழுத்து மூடிட்டு போக வேண்டியதுதான்” என்று கூற,

சரவணன் என்று சொல்லப்பட்டவனோ “சாரி சார் இனிமேல் இந்த மாதிரி நடக்காம பார்த்துக்கிறேன்”என்று கூற, அவனும் “சரி சரி அந்த டேபில்ல ஆர்டர் எடுத்துட்டேன் இந்தாங்க லிஸ்ட் எல்லாம் எடுத்து வைங்க நானே செர்வ் பண்றேன்.நீங்க அங்க போய் சாங் ப்ளே பண்ணுங்க” என்க,

அவரோ பதறி “சார் நீங்கள் எங்களுக்கு முதலாளி.நீங்க போயி” என்று தயங்க, அதற்கு முதலாமானவனோ சிறு சிரிப்புடன் “கஸ்டமர்ஸ்தான் இங்க முதலாளி அவங்களுக்கு தேவையானது உடனே கிடைச்சாலே போதும்,நம்ம பெயர் என்னைக்கும் நிலையாக நிற்கும் புரியுதா” என்றவன் அங்கிருந்து நகர, அவனையே வியப்பாக பார்த்துக் கொண்டிருந்தார் அந்த ஊழியர். அவன் பிரபாகரன்.அந்த ஹோட்டலின் உரிமையாளன். தமிழ்நாட்டின் பிரபலமான ‘சன்சயின் செயின் ஹோட்டலின்’ ஓனர்.

ஆர்டர் எடுத்தவன் சென்று அடுத்த நிமிடம் ப்ரீத்தியின் முன் குலாப் ஜாமுன் நிறைந்த கிண்ணம் வைக்கப்பட்டது.ஏற்கனவே பசியில் இருந்தவளும் யார் கொண்டு வந்தார்கள் என்பதை கூட பார்க்காமல்”ஹை குலாப்ஜாமுன்” என்று சொல்லி எடுத்து சாப்பிட ஆரம்பிக்க, அவள் சாப்பிடுவதையே ரசனையாக பார்த்திருந்தான் அவன்.

ப்ரீத்தி சாப்பிடுவதை பார்த்த மற்றவர்கள் இவளுக்கு மட்டும் எங்க இருந்து குலாப்ஜாமுன் வந்தது என்று அருகில் பார்க்க அங்கு ஒருவன் ப்ரீத்தி சாப்பிடுவதையேவைத்த கண் எடுக்காமல் ரசித்து பார்த்து கொண்டிருந்தான்.

அவனை கண்ட சூர்யா பூஜாவிடம் “என்னடி இந்த ஹோட்டல்ல இருக்கவங்க எல்லாம் ஒரு மார்க்கமா இருக்காங்க” என்று பேசி கொண்டிருக்கும்போதே ப்ரீத்தியை பார்த்த மது “ஹேய் அந்த குலாப்ஜாமுன இங்க குடு, இது ஃப்ரீதானே, இன்னொரு பிளேட் கொண்டு வா மேன்” என்று சொல்ல அவனும் தலையாட்டிவிட்டு சென்றுவிட்டான்.அவன்தான் கிருஷ்ணா சன் ஷைன் ஹோட்டலின் பார்ட்னர்.பிரபாகரனின் நண்பன்.

இப்படியே இவர்களின் ட்ரீட் மதுவின் பசியிலும் ப்ரீத்தியை பார்த்து கிருஷ்ணாவிட்ட ஜொல்லிலும் கலகலப்பாக முடிந்தது.

அடுத்தநாள் சனி கிழமை விடுமுறை என்று அனைவரும் அவரவர் வீட்டில் இருந்தனர்.அபியின் அம்மா அப்பாவிற்கு அன்று திருமண நாள் என்பதால் அனைவரும் கோவிலுக்கு கிளம்பினர்.

அபி மற்றும் அவளது தாய், தந்தை கோவிலுக்குள் சென்ற அதே நேரம் ஆதியும் அவனது தந்தை இராமச்சந்திரன் சக்ரவர்த்தியை அழைத்துக் கொண்டு வந்திருந்தான். அவனது தாயின் பிறந்த நாளான இன்று அவர் தற்போது இல்லாவிட்டாலும் எப்போதும் செய்வது, அன்னதானத்திற்கு ஏற்பாடு செய்திருந்தான்.

ஆதி தந்தையை மர நிழலில் அமர வைத்துவிட்டு,அன்னதானம் நடக்கும் இடத்தை பார்த்துவிட்டு வருவதாக சென்றான்.செல்லும் அவனை சாமி கும்பிட்டு கொண்டிருந்த அபி பார்த்துவிட, உடனே அவனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற எண்ணத்துடன் தந்தையிடம் சொல்லிவிட்டு ஓட, “அடியே நின்னு சாமி கும்பிட்டு போ” என்ற அவள் தாயின் குரல் காற்றில்தான் கரைந்து போனது.

ஆதியை தேடி ஓடியவள் அந்த கோவிலையே சுற்றி வர, அவனோ அன்னதானம் நடக்கும் இடத்திற்கு சென்று பார்த்து விட்டு, தந்தையை தேடி வந்த நேரம் அவர் யாருடனோ பேசுவதை கண்டு அருகில் சென்றான்.

இராமச்சந்திர சக்ரவர்த்தி, “என்ன அரவிந்தன் கோவிலுக்கு எல்லாம் வந்துருக்கீங்க, உங்கள காக்கி ட்ரெஸ்லயே பார்த்துட்டு இப்போதான் கலர் டிரஸ்ல பார்க்கறேன்”என்றார்.

அரவிந்த், “என்ன பண்ண சொல்லறீங்க சக்ரவர்த்தி சார், போலீஸையே அரெஸ்ட் பண்ணுன நாள் இன்னைக்குதான் அதனால வந்தே ஆகணும்னு என்னைய இழுத்துட்டு வந்துட்டாங்க” என்று சொல்லி சிரித்தவர் பின், இவங்கதான் என்னை அர்ரெஸ்ட் பண்ணுனவங்க” என்று சொல்லி அபியின் தாய் பிருந்தாவை அறிமுகபடுத்தியவரின் பார்வை மகளை தேடிவிட்டு காணாமல் சக்கரவர்த்தியிடம் பேச ஆரம்பித்தார்.
தந்தையின் அருகில் வந்த ஆதி “அப்பா”என்க, அவனை அருகில் அழைத்தவர் “இவன் என்னோட மகன் ஆதித்ய சக்கரவர்த்தி, இவன்தான் இப்போ கம்பெனியை பார்த்துட்டு இருக்கான்” என்று சொன்னவரின் குரலில் தன் மகனைபற்றிய பெருமிதம் அப்பட்டமாக தெரிந்தது.

ஆதியின் திறமையைப்பற்றி அறிந்த அரவிந்தும் வெற்றிகரமாக அவன் பிஸ்னஸ் செய்வதற்காக கை கொடுத்து தன் வாழ்த்தை சொன்னவர் பொதுவாக பேசி கொண்டிருந்தார்.இவர்கள் பேசட்டும் என்று நினைத்த ஆதி சாமி கும்பிட்டுவிட்டு வருவதாக சொல்லி சென்று பிரசாதமான குங்குமத்தை வாங்கி வந்து தந்தையின் நெற்றியில் வைத்தவன் சிறு பிள்ளை போல் அவரையே தனக்கும் வைக்க சொல்லிவிட்டு மீதியை அருகில் இருந்த தூணில் கொட்டி வைத்தான்.

அந்த தூணின் ஒரு புறம் ஆதி நின்றிருக்க, அவனை தேடி அலைந்த அபி ஆதியை காணாமல் வாடிய முகத்துடன் தந்தையிடம் வந்தாள்.

அவள் வருவதை பார்த்த அரவிந்தன், “இங்க வாம்மா இவ என்னோட பொண்ணு அபி” என்று அருகில் நின்ற சக்கரவர்த்தியிடம் அறிமுகபடுத்தியவர், அவளிடம் திரும்பி “என்னடா யாரையோ அவசரமா பார்க்க போனியே, அவங்கள பார்த்துட்டியா” என்று கேட்டார். அவளோ கவலையான குரலில் “இல்லப்பா அன்னைக்கு மாலுல ஒருத்தர தப்பா நினச்சு திட்டிட்டேன், அவரைதான் பார்த்தேன் சரி போய் மன்னிப்பு கேட்டுடலாம்னு போனா அவரை காணும்.ரொம்ப நாளா அவரை பார்க்க முடியல இன்னைக்காவது சாரி சொல்லிடலாம்னு பார்த்தேன் போய்ட்டாரு போலப்பா”என்றாள்.

அரவிந்த், “என்னமா நீ எத்தன முறை சொல்லி இருக்கேன், பொறுமையா இருனு.கோவம் வந்தா பொறுமை பல மயில் தூரம் போயிடுது” என்றார்.

அபி சொல்வதை கேட்ட ஆதிக்கு இந்த குரல் எங்கயோ கேட்ட மாதிரி இருக்கே என்ற எண்ணம் வர போனை பார்ப்பது போல் தூணின் பின் புறம் இருந்து லேசாக விலகி பார்த்தவனின் முகம் தவ்சன் வாட்ஸ் பல்பு போல் எரிய ஆரம்பித்தது அங்கு நின்றிருந்த அபியை கண்டு.

பச்சை நிற தாவணி பாவாடையில் கண்ணுக்கு பசுமையாக இருந்தவளை தன்னை மறந்து பார்க்க ஆரம்பித்தான்.அவளின் உச்சி வகிட்டில் இருந்து பிறை நெற்றி, அளவான புருவம், கயல்விழி கண்கள் என்று அணு அணுவாக ரசித்தவனின் பார்வை அவள் இதழ்களில் மையம் கொண்டது.ஒரு நிமிடம் அங்கேயே தேங்கி நின்ற அவனது பார்வை மேலும் கீழ் செல்ல முனைந்த சமயம் அரவிந்தனின் குரல் காதில் விழுந்து அவனை நடப்பிற்கு கொண்டு வந்தது.

உடனே தன் தலை முடியை சமன்படுத்தி கொண்டவன், “வசியக்காரி வாசியக்கரி என்ன கவுக்கவே அந்த கடவுள் இவளை அனுப்பிருக்காரு போல, “ச்ச….. இப்படியா இருக்க இடத்தை மறந்து பார்ப்பேன்” என்று ஒரு பக்க மனம் சொல்ல, மறு பக்க மனமோ “உன் மேல தப்பில்லடா பச்ச பசேல்னு பசுமையா வந்து நின்னா நீ என்ன பண்ணுவ” என்று வாதிட்டு கொண்டு இருந்தது.

அபியிடம் பேசிய அரவிந்த் சக்ரவர்த்தி குடும்பத்திடம் திரும்பி, “இவ என்னோட பொண்ணு அபி.மெடிக்கல் படிக்கறா, ரொம்ப நல்ல பொண்ணுதான் ஆனா கோபம் வந்துட்டா ரொம்ப ரொம்ப கெட்ட பொண்ணு யார இருந்தாலும் லெப்ட் ரைட் வாங்கிடுவா அதே சமயம் தப்பு பண்ணிட்டோம்ன்னு தெரிஞ்சா அவங்ககிட்ட மன்னிப்பு கேட்கற வரைக்கும் அவங்களையும் மறக்க மாட்டா, எங்களையும் நிம்மதியா விட மாட்டா புலம்பி புலம்பி ஒரு வழி ஆக்கிடுவா, இன்னைக்கு அந்த புண்ணியவான் கண்ணுல பட்டா நாங்க தப்பிச்சுடுவோம்னு நினைச்சேன் எங்க.இன்னைக்கும் இவ புலம்பல் கேட்கணும்னு இருக்கு” என்று சொல்ல, அபியோ முன்னால் நின்ற இராமச்சந்திரனை பார்த்து வணக்கம் சொன்னவள், தந்தை தன்னை கிண்டலடிப்பதை உணர்ந்து அவரை முறைக்க, அவரோ “இங்க பார்த்து ஒன்னும் ஆக போறது இல்லை போமா போ போய் அந்த ஜீவனை தேடு.தேடி சாரி சொல்லி இன்னைக்காவது எங்களுக்கு லீவு குடு” என்றார்.

இராமச்சந்திரனை பார்த்து அசடு வழிய சிரித்தவள் தந்தையை பார்த்து வாயிற்குள் முணுமுணுத்து கொண்டே மீண்டும் ஆதியை தேடி அந்த கோவிலை சுற்றி வர ஆரம்பித்தாள்.

அரவிந்த் சொல்வதை கேட்ட ஆதி “பார்த்து சாரி சொல்லிட்டா மறந்துடுவாளா இது என்ன புது நோயா இருக்கு, நான் மட்டும் அவளையே நினைச்சுட்டு இருக்க மாறி வசியம் பண்ணிட்டு இவ மட்டும் என்னை மறப்பாளா, எப்படி மறக்கறானு நானும் பார்க்கறேன் கண்ணுல சிக்குனாதானே” என்று நினைத்தவன் அபி அந்த பக்கம் சென்ற உடன் வராத போனை எடுத்து காதில் வைத்து “என்ன அப்படியா ஓகே அங்கேயே வெயிட் பண்ண சொல்லுங்க இன்னும் ஆப் அண்ட் ஹவர்ல நான் அங்க இருப்பேன்” என்று சொல்லி வைத்தவன் தந்தையிடம் திரும்பி “அப்பா நான் உடனே நம்ம ஆபிஸ்க்கு போகணும்”என்றவன் அபியின் தாய், தந்தையிடம் சொல்லிவிட்டு அவள் வருவதற்கு முன் செல்ல வேண்டும் என்று வேகமாக சென்று காரில் அமர்ந்து கொண்டான்.

அபி ஆதியை தேடி கண்களை சுழல விட்ட சமயம் மது அவளுக்கு போன் செய்திருந்தாள்.அவளின் எண்ணை கண்ட அபி போனை ஆன் செய்து காதில் வைத்தவள் “சொல்லுடி என்ன ஆச்சு” என்று கேட்க, அந்த பக்கம் மதுவோ பதட்டமான குரலில் “ஹேய் இப்போ தெளிவா பேச எனக்கு டைம் இல்லை.நம்ம பிரண்ட்ஸ் எல்லாரையும் கூட்டிட்டு சீக்கிரம் எங்க வீட்டுக்கு கிளம்பி வா.நான் வைக்கறேன்”என்று சொன்ன அடுத்த நிமிடம் போனை கட் செய்து இருந்தாள்.

மது போனை கட் செய்யவும் என்னவோ ஏதோ என்று பயந்த அபி தன் தந்தையிடம் மட்டும் சொல்லிவிட்டு வெளியே செல்ல முனைய அவள் தாயோ “பொறுமையே இருக்காதாடி உனக்கு கோவிலுக்கு வந்து நெத்தில குங்குமம் கூட வைக்கலை என்று சொல்ல அப்போது அருகில் இருந்த தூணில் யாரோ கொட்டி வைத்த குங்குமத்தை எடுத்து நெற்றியில் வைத்து கொண்டு “போதுமா ம்மா வச்சுட்டேன் கிளம்பறேன்” என்று சொல்லி ஓடிவிட்டாள்.

அபி வைத்த குங்குமம் சற்று நேரத்திற்கு முன்பு ஆதி கொட்டிய குங்குமம் என்று அறியாமல் போனாள்.இருவருக்குமான முடிச்சை அந்த கடவுளே போட்டுவிட்டார் இனி மனிதர்கள் என்ன செய்ய முடியும்.

மது எதனால் தோழிகளை வர சொல்லி இருப்பாள் அதை அடுத்த எபில பார்க்கலாம்.




அஜ்வந்தியின் 'வண்ணங்களின் வசந்தம்' - கருத்துத் திரி
 

Sonythiru

Suthisha
24277
அத்தியாயம் -21

காரில் ஏறிய ஆதிக்கு மீண்டும் ஒரு முறை தன்னை தேடி அலைப்புறும் அபியின் விழிகளை பார்க்க ஆசை வர, என்ன செய்யலாம் என்று யோசித்து கொண்டிருந்தான். அப்போது கோவிலின் உள்ளே இருந்தே மகனின் செயலை கவனித்து கொண்டிருந்த அவன் தந்தை கிண்டலான குரலில் “என்னப்பா வண்டி ஸ்டார்ட் ஆகலையா”என்று கேட்க, அவரின் கேள்வியில் கண்கள் மின்ன பார்த்தவன் “ஆமாம்” என்று சொல்லவந்துவிட்டு தந்தையின் முகத்தில் இருந்த கிண்டலை புரிந்து அசடு வழிய சிரித்தான்.மகனை மென் புன்னகையுடன் பார்த்தவர் வண்டியில் இருந்து இறங்கியவர் தன் மற்றொரு காரை எடுத்து வர சொல்லி டிரைவருக்கு அழைத்து சொன்னார்.

தந்தையின் செயலில் மகிழ்ந்தவன் “உங்க தெளிவுக்கு, மகன் மேல இருக்க அக்கறைக்கு, மருமகளை சீக்கிரம் பார்க்கணும்னு நினைக்கற அந்த மனசுக்கு டேக் அ பவ்” என்று சொல்லி கைகளை சுழற்றி தலையை குனிந்தவனை சிரிப்புடன் பார்த்த அவனது தந்தை நீ எப்பவும் சிரிச்சுட்டே இருந்தாலே போதும் என்றுவிட்டு மற்றொரு காருக்காக காத்திருக்க ஆரம்பித்தார்.

தந்தை கூறியதை கேட்டு சிரித்தவன் காரில் இருந்து இறங்க நினைத்த நேரம் அபி வேகமாக கோவிலில் இருந்து வெளியில் வருவதை பார்த்து அப்படியே அமர்ந்தான். வெளியில் வந்தவள் ஒரு ஆட்டோவை பிடித்து மதுவின் வீட்டை நோக்கி செல்ல ஆரம்பித்தாள்.

ஆட்டோவில் இருந்தவாறே தனது மற்ற தோழிகளுக்கு கான்பிரன்ஸ் கால் போட்டவள், எடுத்த எடுப்பிலேயே “ஹலோ நான் சொல்றதை நல்லா கேட்டுக்கோங்க, எல்லாரும் என்ன வேலை பார்த்துகிட்டு இருந்தாலும் அப்படியே விட்டுட்டு உடனே மது வீட்டுக்கு வாங்க. அவ ஏதோ எமர்ஜென்சினு போன் பண்ணி சொன்னா,என்னனு தெரியல” என்றாள்.
அப்பொழுதுதான் ஆசையாக ஒரு லட்டை எடுத்து வாயில் வைக்க போன ப்ரீத்தி எடுத்ததை கீழே வைக்கிறதா இல்லை வாய்க்குள்ள வைக்கிறதா என்று யோசித்தவள் அதை அபியிடமே கேட்க எண்ணி “அப்போ என் கையில இருக்க லட்டை அப்படியே வச்சா உதிர்ந்து போய்டுமே என்ன பண்ணலாம்” என்க,

அபியோ கோபமுற்றவள் “வந்தேன் வச்சுக்கோ சாப்பிட வாய் இல்லாம பண்ணிடுவேன் பாத்துக்கோ, நான் சீரியஸா பேசிக்கிட்டு இருக்கேன் நீ விளையாண்டுட்டு இருக்கியா” என்று திட்டினாள்.

பூஜா, “அடே சும்மாவே அவங்க வீட்ல நம்மள சேர்க்க மாட்டாங்க, இன்னைக்கு ஏதோ எமர்ஜென்சினு வேற சொல்ற, அவங்க நம்மள உள்ள விடாலனா என்ன பண்றது” என்று குழம்பியபடியே கேட்க.சற்று நேரம் அமைதியாக இருந்த அபி “அதெல்லாம் பாத்தா முடியுமா முதல்ல போவோம், அங்க போய் நிலமை என்னன்னு பார்த்துக்கலாம்” என்றாள்.
சூர்யா “சரிடி நான் இங்க பக்கத்துல ஒரு புக் ஷாப் வந்து இருக்கேன் அப்படியே வந்துடறேன்” என்றாள்.

அபி “எங்க இருக்க புக் ஷாப்” என்று கேட்டு தெரிந்து கொண்டவள் “சரிடி , நான் ஆட்டோல அந்த வழியாத்தான் வருவேன் கரெக்ட்டா அந்த ஷாப்கிட்ட இறங்கிக்கறேன்.நீ அங்கேயே நில்லு நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து போகலாம்” என்று கூற சூர்யாவும் “சரி” என்றவள் அபியின் வரவுக்காக காத்திருந்தாள்.
அபி வந்தவுடன் இருவரும் சூர்யாவின் ஸ்கூடியிலேயே மது வீட்டிற்கு வேகமாக சென்றனர்.அபி ஆட்டோவில் ஏறியதில் இருந்து பின் தொடர்ந்து வந்த ஆதியும் அவர்கள் வண்டியை பாலோ பண்ண ஆரம்பித்தான்.

அபி, சூர்யா இருவரும் மதுவிற்கு என்ன பிரச்சனையாக இருக்கும் என்ற யோசனையுடன் சென்று கொண்டிருக்கும்போது, இவர்கள் வாகனத்தின் அருகில் வந்த மற்றொரு வாகனத்தில் இருந்த இரு நபர்கள் இவர்களைக் கேலி செய்யும் விதமாகவும் அவர்கள் வாகனத்தை நடுவில் விட்டு பயமுறுத்தி கொண்டும், அவர்கள் அருகில் சென்று கத்தி கொண்டும் வந்தனர். இதில் ஏற்கனவே கடுப்பில் இருந்த அபிக்கு மேலும் கடுப்பை கிளப்ப, தற்போதைக்கு மதுவை காண்பதே முக்கியமானதாக நினைத்தவள் அவர்களை கண்டுகொள்ளாமல் வேகமாக கடந்து சென்று கொண்டிருந்தாள்.

இவர்கள் செல்லும் நேரம் அந்த சாலையில் சிக்னல் போட்டு விட வேறு வழி இல்லாமல் எரிச்சலோடு நின்று கொண்டிருந்தாள் அபி.

அப்போது இவர்கள் அருகில் வந்த அந்த பைக் நபர்களில் ஒருவன் பின்னால் அமர்ந்திருந்த சூரியாவின் காலை மிதித்து விட அவளோ வலியில் முகத்தை சுருக்கினாள்.இது ஏற்கனவே கடுப்பில் இருந்த அபிக்கு பெரும் கோபத்தை கிளப்ப “டேய் அறிவு இருக்கா உங்களுக்கு இப்படித்தான் வண்டி ஓட்டிவீங்களா, கொஞ்சம் கூட மேனர்ஸ்ங்கறது கிடையாது” என்று திட்ட அவனோ “பார்ரா மேடம் தாவணி கட்டின ஜான்சி ராணி சண்டைக்கு எல்லாம் வருது” என்று நக்கல் பேசினான்.

அதில் கோபம் கொண்ட அபி சூர்யாவிடம் வண்டியை பிடிக்க சொல்லிவிட்டு இறங்கியவள் வேகமாக முந்தானையை எடுத்து இடுப்பில் சொருகியபடி “என்னடா ஓவரா பேசிக்கிட்டு இருக்க, அப்படியே வாய்லயே குத்துவிட்டேன் வச்சுக்கோ, பல் எல்லாம் செதரிடும்” என்று கத்த ஆரம்பித்தாள்.

ஆதி ஆரம்பத்தில் இருந்தே அந்த இருவரின் செயலை கண்டு கோபத்தில் இருந்தவன்.அபி வண்டியை விட்டு இறங்குவதையும் அந்த இருவரும் அவளை கிண்டலாக பார்ப்பதையும் கண்டு கோபம் அதிகமாக தனது காரில் இருந்து இறங்கி வேகமாக அவர்கள் இருக்கும் இடம் நோக்கி சென்றான்.

அபி திட்டவும் கோபம் கொண்ட அந்த இருவரில் ஒருவன் வண்டியில் இருந்து இறங்கி அபியை பார்த்தவாறு வர, அவளும் அவனை எதிர் கொள்ள தைரியமாக நின்றாள்.ஆனால் வம்பிழுத்தவனின் பார்வை அபியின் பின்னால் உயரத்திற்கேற்ற உடல் கட்டுடன் ஒருவன் கோபமாக ஷர்ட்டின் கையை மடித்து விட்டபடியே வருவதை கண்டு அரண்டவன் அவன் தங்களை அடித்தால் அவ்வளவுதான் என்று எண்ணி அபி கத்திக் கொண்டிருப்பதை சற்றும் கவனிக்காமல் அங்கிருந்த வண்டியில் வேகமாக ஓடி ஏறி சிக்னல் விழுவதற்கு முன்னே கிளம்பிவிட்டான்.

ஆதி அவன் ஓடுவதை கண்டு இளக்காரமாக சிரிக்க, அபியோ “என்ன இவன் சும்மா பேசினதுக்கே பயந்து ஓடுறான்” என்று மனதிற்குள் எண்ணியவள், சூர்யாவை பார்த்து “எப்படி பயந்து ஓடுறாங்க பாத்தியா, நானும் இந்த ஏரியாவில ரவுடியா பார்ம் ஆகிட்டேன் போல” என்றாள்.

இதை கேட்ட ஆதி “எது உன்னை பார்த்து பயந்து ஓடுனாங்களா சரிதான் போ” என்று எண்ணி கொண்டிருக்கும்போதே, சூர்யா “அடியே அங்கு ஏதோ எமர்ஜென்சினு கால் பண்ணி சொல்லிட்டு இப்போ நீ இங்க ரவுடி ஆகிட்டேன்னு செலிபிரேட் பண்ணிட்டு இருக்கியா வா வா போகலாம்” என்க.

அப்பொழுதுதான் மதுவின் ஞாபகம் வர பெற்ற அபியும் அசடு வழிய சிரித்துவிட்டு வேகமாக ஸ்கூட்டியில் ஏறி அமர்ந்து கொண்டாள்.
அபி செல்வதை பார்த்த ஆதித்யா “ஹம் நம்ம ஆளுக்கு கையும் வாயும் நீளம்தான் போலயே”என்று பெருமூச்சு விட்டவன் பின் சிறு சிரிப்புடன் “பரவால்லை பரவால்லை சமாளிச்சுக்கலாம்” என்று முணுமுணுத்தபடியே அங்கிருந்து சென்றான்.

நால்வரும் சரியான நேரத்திற்கு மதுவின் வீட்டுக்கு வந்து சேர்ந்தனர். அங்கு வீட்டில் இருந்த அலங்காரங்களைக் கண்டு அனைவரும் திகைத்துப் போய் நின்றிருந்தனர்.

சூர்யா, “என்னடா இது வீட்டை இப்படி டெக்கரேட் பண்ணியிருக்காங்க என்ன விசேஷமா இருக்கும்” என்ற யோசனையோடு கேட்க,

ப்ரீத்தியோ,”ஒருவேளை அங்க இருந்த பழைய கிழவி செத்து போயிருச்சோ,அய்யய்யோ பாட்டி…” என்று கத்தியபடி உள்ளே செல்ல முனைய அவளை பிடித்து இழுத்த அபி அவள் தலையில் கொட்டி “யாராவது இறந்துட்டா உங்க ஊர்ல இப்படித்தான் டெக்கரேட் பண்ணுவாங்களா லூசு வேற ஏதோ பங்க்ஷன் போல அதுதான் இப்படி டெக்கரேட் பண்ணியிருக்காங்க” என்று யோசனையாக கூறி, “சரி வாங்க உள்ளே போகலாம்” என்று செல்ல முனையும் பொழுது நடுவில் வந்து குதித்தான் மதுவின் கடைசி அண்ணன் ஆதர்ஷ்.

நால்வரும் அவனை கோபமாக பார்க்க அவனோ “என்ன எல்லாரும் எங்க வந்து.இருக்கீங்க” என்று கேட்டான்.

அபி, “அண்ணா மதுவை பாக்கலாம்னு வந்தோம்” என்று கூற, அவளை கிண்டலாக பார்த்தவனோ “அதெல்லாம் பார்க்கமுடியாது கெளம்புங்க கெளம்புங்க”என்று திமிராக கூறினான்.

உடனே கோபம் கொண்ட நால்வரும் ஒரே குரலில் “ஏன் ஏன் பார்க்க கூடாது” என்று கேட்டனர்.
அபி, “ இங்க எதுக்கு இவ்வளவு டெக்கரேஷன், ஏதாவது பங்க்ஷனா”என்று கேட்டாள்.
ஆதர்ஷோ “அதை உங்ககிட்ட சொல்ல முடியாது.ஐ சே வெளியே ஜாவ் அவுட்” என்று எகத்தாளமாக கூற அவனை முறைத்துப் பார்த்த அபி “ஏன் சூர்யா அன்னைக்கு ஏதோ ஒரு மாலுக்கு போனோமே அது எந்த மால்” என்று கேட்க சூர்யாவும் ஏதோ யோசிப்பது போல் பாவனை செய்தாள்.

ஆதர்ஷ் அதுவரை திமிராக நின்று கொண்டு இருந்தவன், சூர்யா யோசித்து “ஹம்…. ஞாபகம் வந்திருச்சு பீனிக்ஸ் மால்” என்று சொன்ன அடுத்த நிமிடம் திகைத்துப் போய் நின்றான்.அத்தோடு நிறுத்தாமல் மேலும் “அதுவும் கார்னர் டேபிள்” என்று சூர்யா சொல்ல ஆதர்ஷ் கலவரமாக அவர்களை பார்க்க ஆரம்பித்துவிட்டான்.

பூஜா, “ஆமா அந்த மால்ல யாரோ ஒரு பிங்க் கலர் டிரஸ் போட்டு உட்கார்ந்து இருந்தாங்களே”என்று கூறி நிறுத்த நடுவில் வந்த ப்ரீத்தி “ஆமாடி நான் கூட பார்த்தேன் ரெண்டு பேரும் ரெண்டு ஜூஸ் வாங்கி குடிக்க மாட்டாங்க கஞ்ச பிசினாரி. ஜூஸ் வாங்க கூட துப்பில்லாம ஒரு ஜூஸ் வச்சி குடிச்சிட்டு இருந்துச்சுங்க ரெண்டும்” என்க,

ஆதர்ஷ் திருதிருவென விழிக்க ஆரம்பித்தான் பின் திணரியவாறே “அது அது வந்து” என்று இழுத்து கொண்டிருக்கும்போதே, அபி “அதான் வந்தாச்சே அப்புறம் சொல்லுங்க என்ன ஆச்சு” என்று கேட்டாள்.

பின் “இங்க பாருங்க அண்ணா என்ன இருந்தாலும் நீங்க மதுவுக்கு அண்ணனாகிட்டிங்க, மதுக்கு மட்டுமா நீங்க அண்ணன் எங்க எல்லாருக்கும் நீங்கதான் அண்ணன் அதனால எதையும் மறைக்காம எங்ககிட்ட சொல்லுங்க பார்க்கலாம்” என்று சூர்யா கிண்டலாக சொல்ல,

பூஜாவோ நக்கலான குரலில்“என்ன லவ்வா” என்றாள். அவனும் “ஆமாம்” என்று சிறு வெட்கத்தோடு கூற சூர்யாவோ தோழிகளுக்கு கண் காட்டியவாறே ஒன்றும் தெரியாதது போல், “அண்ணா அந்த பொண்ணு பெயரென்ன எத்தனை வருஷம் லவ்” என்று கேட்டாள்.

ஆதர்ஷும் அதுதான் எல்லாருக்கும் தெரிஞ்சுடுச்சு போலயே என்று அனைத்தையும் உளற ஆரம்பித்தான். “அவ பேரு ரோஷினி ரெண்டு வருஷமா லவ் பண்றோம்” என்று கூற,

“ஹேய்” என்று குதித்த அபி சூர்யாவை பார்த்து “நான் தான் சொன்னேன்ல அது பிங்க் கலர் சுடிதார்தான், ஷர்ட் இல்லைனு நீ நம்புனியா இப்ப பாரு அண்ணா வாயாலேயே ஒத்துக்கிட்டாரு” என்று சொன்னாள்.

அதில் அதிர்ந்தவன் “அப்போ நீங்க கண்டு பிடிக்கலையா நானாதான் ஒலரிட்டணா என்று கேட்க “எஸுஉ…… “ என்று கோரஸாக சொன்னவர்கள், இப்போது மிதப்பாக ஆதர்ஷை பார்த்து “இப்ப நாங்க உள்ளே போகலாமா” என்றனர்.

ஆதர்ஷ் சிறிது நேரம் விழித்தவன் பின் ஒரு முடிவிற்கு வந்தவனாக “முடியாது வெளியில போங்க” என்றான்.

அதில் கடுப்பான பூஜா தன் கையில் இருந்த மொபைலில் ரெகார்ட் செய்ததை பிளே செய்ய அதில் ஆதர்ஷ் பேசிய அனைத்தும் ரெகார்ட் ஆகி இருந்தது.”இப்போ சொல்லுங்க” என்று எகத்தாளமாக கேட்க தலையில் கை வைத்தவன் “ஏன்மா இப்படி பண்றீங்க.உங்களை உள்ள விட்டா, அவங்க என்ன வெளியில் தள்ளிடுவாங்க” என்று சோகமாக சொல்ல.

அதை கண்டுகொள்ளாத அபி “எங்கள உள்ள விட்டா கொஞ்ச நேரம் தான் நீங்க வெளிய நிப்பீங்க, உள்ள விடலனா லைஃப் புல்லா வெளியில் தான் இருப்பீங்க யோசிச்சு சொல்லுங்க”என்று கூற அவனோ சற்று யோசித்தவன் “சரி நீங்க இங்கேயே நில்லுங்க.நான் உள்ள போயிட்டு வந்துடறேன்” என்றான்.

அதை மறுத்த தோழிகள் “அதெல்லாம் முடியாது, நீ உள்ள போனா அப்படியே ஓடிப்போயிடுவ உன்னை எல்லாம் நம்ப முடியாது.அதனால உன் கூட நாங்களும் வருவோம்” என்று கூற அவனும் வேறு வழி இல்லாமல் நால்வரையும் உள்ளே அழைத்துச் சென்றான்.

ஆதர்ஷ் பயத்துடனேயே நால்வரையும் அழைத்துக்கொண்டு உள்ளே வர அவர்களை கண்ட அவனது பெற்றோர்கள் அதிர்ந்து போயினர்.முதலில் சுதாரித்த அவனது தந்தை “டேய் இங்க வாடா” என்று அவனை தனியாக இழுத்துச் சென்று “இவங்கள எதுக்கு இங்க கூட்டிட்டு வந்த” என்று கேட்க.

அவனோ “இல்லப்பா அது படிப்பு சம்பந்தமாக ஏதோ பேசணும்னு சொன்னாங்க அதனாலதான்” என்று நிறுத்தினான். அவரோ “லூசு லூசு எங்கிருந்து தான் உன்ன உங்க அம்மா பெத்தாளோ தெரில, ஒன்னுக்கும் துப்பில்ல, இவங்க வந்தா பங்க்ஷனையே கெடுத்துடுவாங்கன்னுதானே மறைச்சு மறைச்சு பண்றோம்.இப்ப அவங்களையே வெத்தல பாக்கு வச்சு அழைக்காத குறையா,உள்ள கூட்டிட்டு வந்திருக்க” என்று திட்டியவர் மனைவியிடம் திரும்பி “எப்படி பையன பெத்து வச்சிருக்கா பாரு” என்று சாட, அவனது அம்மாவோ அவனை முறைத்து “என்னடா இது” என்று கேட்டார்.

ஆதர்ஷோ மனத்தினுள்ளேயே “ஹ்ம்ம்….. நானா இதுங்கள வர சொன்னேன் அம்புட்டும் வால் இல்லா வானரங்கள், பாக்கெட்ல எவிடென்ஸ் வச்சுட்டு சுத்துதுங்க இதுல வெத்தலை பாக்கு ஒன்னுதான் குறை”என்றுவிட்டு மேலும் “என்னை பெத்ததுல இவருக்கு ஏதோ சம்மந்தமே இல்லாத மாதிரி பேசுறாரு” என்று சொல்லிக்கொண்டே தாயிடம் திரும்பியவன் “இல்லமா படிப்பு விஷயம் அதனாலதான்” என்று கூறியவன் மேலும் உடனடியாக யோசித்து “அது ஒன்னும் இல்லம்மா நம்ம மது பார்க்க சோகமா இருக்கா இல்லையா, அதான் இவங்க எல்லாம் வந்தா, கலகலப்பா இருப்பா அதான் கூட்டிட்டு வந்தேன்” என்று அப்பாவி போல் கூற அவரும் “ஆமாங்க ஆண்டாளும் நேத்துல இருந்து முகம் வாடி இருந்துச்சு.இப்போ இந்த புள்ளைங்கள பார்த்தா நம்ம புள்ள சந்தோசமா இருக்குங்க. நம்ம பையன் நல்லதுக்காகத்தான் பண்ணி இருக்கான் சும்மா அவனை திட்டிட்டே இருக்காதிங்க என்றார்.

உடனே அவர்கள் இருவரையும் முறைத்த மதுவின் தந்தை “உங்களுக்கு என்ன அறிவு கெட்டுப் போச்சா அதுங்க வந்தா விசேஷத்தை நடக்க விடாதுங்கனு சொல்றேன், நீங்க என்னனா உளறிட்டு இருக்கீங்க.முதல்ல போய் ஏதாவது சொல்லி அவங்கள அனுப்பற வழிய பாருங்க” என்று திட்ட,ஆதர்ஷ் விழிபிதுங்கி போய் நின்றான்.

அப்போது அங்கு வந்த மது “என்னப்பா இது வீட்டுக்கு வந்த என்னோட பிரண்ட்ஸ்ங்ககிட்ட இப்படிதான் பேசுவீங்களா.உங்க விருப்பத்துக்கு ஏத்த மாதிரி நான் பங்ஷனுக்கு ஒத்துக்கிட்டு ரெடி ஆகிட்டன்ல அது மாதிரி என்னோட ஃபங்ஷன்க்கு,என்னோட ஃப்ரெண்ட்ஸ்ங்க வந்திருக்காங்க” என்று சொல்லி விட்டு நால்வரையும் அவளது அறைக்கு அழைத்து சென்றாள்.

செல்ல மகள் சொல்லிய பிறகு மறு பேச்சு எடுக்காத மதுவின் தந்தை அமைதியாக ஹாலில் நின்றவர்களை ஒரு பார்வை பார்த்துவிட்டு சென்றனர்.

அறைக்குள் சென்ற தோழிகள் மதுவை பார்த்து கண்கள் தெறித்து விழும் அளவிற்கு விழித்தனர். ஏனென்றால் கோவிலில் இருக்கும் அம்மன் சிலையை போல் பட்டு புடவையும், நகைகளையும் அணிந்திருந்தாள்.

அவளை பார்த்து ஆச்சரியமான சூர்யா “என்னடி இது அலங்கார பொம்மையாட்டம்” என்று கேட்டாள்.

அபியும் யோசனையான முகத்துடன் “என்னடி இது இங்க என்ன நடக்குது.உங்க அப்பா ஏதோ பங்ஷன்னு சொல்லறாரு, நீ என்னடானா நகை கடை விளம்பரத்துக்கு நடிக்கற மாதிரி இவ்ளோ நகை போட்டுட்டு இருக்க” என்க.

பூஜா, “ஆமாடி என்ன ஆச்சு எதுக்காக எங்களை உடனே வரச்சொன்ன” என்று கேட்க,முகத்தை தூக்கி வைத்துக் கொண்டிருந்த மது “எங்கள் வீட்டில் எனக்கு தெரியாமல் கல்யாணம் நிச்சயம் பேசியிருக்கிறாங்க.பொண்ணு பாக்குற பங்ஷன் கூட இல்ல, நேரடியா இன்னைக்கு நிச்சயம் பண்ண வராங்க” என்று சொல்ல தோழிகள் அனைவரும் அதிர்ந்து போயினர்.

முதலில் அதிர்ச்சியில் இருந்து விலகிய ப்ரீத்தி “என்னடி இது அநியாயமா இருக்கு முதல்ல பொண்ணு பார்க்க வருவாங்க அப்ப டீ, கேசரி, பஜ்ஜி சொஜ்ஜி எல்லாம் தருவாங்க அதை சாப்பிட்டு அதுக்கப்புறம்தான் நிச்சயம் பண்ணுவாங்க.நீங்க என்னனா டைரக்ட்டா நிச்சியம்னு சொல்லறீங்க, அப்போ பஜ்ஜி சொஜ்ஜி எல்லாம் எனக்கு தர மாட்டீங்களா” என்று கேட்டாள்.

உடனே அவள் தலையில் கொட்டிய பூஜா “அடியே அவ எவ்ளோ சீரியஸா சொல்லிட்டு இருக்கா, நீ என்னடானா எப்ப பார்த்தாலும் விளையாண்டுட்டு பேசாம இரு” என்று அதட்டிவிட்டு மதுவிடம் திரும்பி “நிஜமா உனக்கு இன்னைக்கு நிச்சயன்ற விஷயம் தெரியாதா” என்று கேட்டாள்.

மதுவின் கண்கள் கலங்கி இருக்க ‘இல்லை’ என்று மறுப்பாக தலையசைத்தவள் “காலைல தான் இந்த சேலைய கொண்டு வந்து கொடுத்து இன்னைக்கு உனக்கு நிச்சயம் மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வராங்க கிளம்பி ரெடியா இருன்னு சொல்லிட்டு போய்ட்டாங்க.திடிர்னு சொல்லவும் எனக்கு என்ன பண்றதுனே தெரில, யாராவது ஒருத்தர் கூட இருந்துட்டே இருந்தாங்க பாத்ரூம்ல இருந்துதான் உனக்கே கால் பண்ணுனேன்” என்று சோகமாக கூற தோழிகள் அனைவருக்கும் ஒரு மாதிரி ஆகி போனது.

மேலும் மது கண்ணீர் குரலில் அபியின் கையை பிடித்து கொண்டு “எனக்கு இப்பவே கல்யாணம் பண்ணிக்க விருப்பம் இல்லடி, ஏற்கனவே இங்க தங்க கூண்டுல இருக்க கிளி மாதிரி வீட்டுக்குள்ளேயே இருக்க வைக்கறாங்க.

ஒரு சின்ன விஷயம் கூட போராடி வாங்க வேண்டியதா இருக்கு காலேஜ்ல மட்டும்தான் உங்க கூட ப்ரீயா என்ஜாய் பண்றேன்.

இந்த வீட்ல எனக்கு பாசம்ங்கற விலங்கை மாட்டி, சுயமா எதையும் செய்ய விடாம பண்ணிட்டாங்க எதிர்த்து பேசவும் முடியல, இப்ப கல்யாணம் பண்ணி அனுப்பிவிட்டாங்கனா அந்த வீட்ல இருக்கவங்க எப்படி இருப்பாங்கனு எனக்கு தெரியல.பிறந்து வளர்ந்த வீட்லயே என்னை யாரும் புரிஞ்சுக்கல அவங்க எப்படி இருப்பாங்கன்னு தெரியல,எனக்கு ரொம்ப பயமா இருக்குடி” என்று வருந்த அபிக்கு கோபமாக வந்தது உடனே வேகமாக மதுவின் தந்தையிடம் சென்றவள். “இது உங்களுக்கே நல்லா இருக்கா படிக்கிற பிள்ளைக்கு எதுக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறீங்க” என்று கேட்க அவரோ “என் பொண்ணுக்கு என்ன பண்ணனும் எனக்கு தெரியும் தேவையில்லாம இந்த விஷயத்தில் நீ தலையிடாதமா” என்றார்.

அபி மேலும் கோபமாக ஏதோ பேச போக அவள் கையை பிடித்து பேச வேண்டாம் என்று சைகை செய்த சூர்யா அவரிடம் “இல்லப்பா இவ்ளோ சின்ன வயசுலயே…..” என்று இழுத்தவள் பின் “அவளுக்கு கொஞ்சம் பொறுப்பு வரட்டுமேப்பா. அதுக்குள்ள என்ன அவசரம்” என்று பொறுமையாக கேட்க,

அவரோ “இல்லம்மா நீ சொன்னா புரிஞ்சுப்ப, எங்களுக்கு இருக்கறதே ஒரே பொண்ணு, அவ படிச்சு வேலைக்கு போய் எங்களுக்கு சம்பாதிச்சு கொடுக்கணும்னு என்ன அவசியம் இருக்கு.இப்போ வர்றவங்க ரொம்ப நல்ல குடும்பம் மாப்பிள்ளையும் தங்கமானவரு அது எல்லாம் விசாரிச்சுதான் நாங்க முடிவு பண்ணியிருக்கோம். அதுமட்டும் இல்லாம எங்க குடும்பத்தை பத்தி தெரிஞ்சு தானா வந்த சம்பந்தம் இது. இவங்க மதுவ ராணி மாதிரி பாத்துப்பாங்க” என்றார்.

பூஜா, “அப்பா அதுக்காக உடனே மேரேஜ் வேண்டாமே, இன்னும் ரெண்டு வருஷத்துல படிப்பு முடிஞ்சதுக்கு அப்புறம்….” என்று இழுக்க, அவளை அழுத்தமாக பார்த்தவர் “முடியாது” என்றுவிட்டார்.

தோழிகள் நால்வரும் மாறி மாறி பேசியும் கேட்காதவர் தனது கருத்தில் பிடிவாதமாக இருந்தார். முடிஞ்சா இங்க இருங்க இல்லை கிளம்பிட்டே இருங்க” என்று சொல்லியவரிடம் வேறு ஒன்றும் சொல்ல முடியாமல் தோழிகள் நால்வரும் வாடிய முகத்துடன் மதுவின் அறைக்கு வந்தனர்.

அறைக்குள் வந்த தோழிகளின் முகத்தை மது ஆவலாக பார்த்து “என்னடி அப்பா இந்த கல்யாணத்தை நிறுத்த ஒத்துக்கிட்டாரா” என்று கேட்க அவர்களோ வாடிய முகத்துடன் “இல்லை” என்று தலையாட்டி விட்டு உட்கார்ந்து விட்டனர்.மது கண்கள் கலங்கிய நிலையில் அமைதியாக அமர்ந்துவிட்டாள்..

அனைவரும் வெகுநேரம் வரை அமைதியாக அமர்ந்திருக்க அவர்களின் முகத்தையே மாற்றி மாற்றி பார்த்த ப்ரீத்தி “இன்னும் எவ்வளவு நேரம் இப்படியே உட்கார்ந்திருக்க போறீங்க” என்று கேட்க, அதில் முதலில் தன்னை சமாளித்துக் கொண்ட பூஜா “ஆமா ஆமா எப்படியும் இன்னைக்கு நிச்சயம் நடக்க போறது கன்பார்ம். இவ மட்டும் புடிக்கல புடிக்கலனு சொல்லிட்டு ஃபுல் மேக்கப்புல இருக்கா.நம்ம மட்டும் எப்படி இருக்கோம் பாரு” என்று சொல்ல.

பூஜாவின் பேச்சை ஆமோதிப்பது போல தலையை ஆட்டிய சூர்யா “ஆமா ஆமா பிசிகல் அப்பியரன்ஸ் ரொம்ப முக்கியம் அமைச்சரே” என்றாள்.

அபியோ அவளை முறைத்து “இவளுங்க கூட சேர்ந்து நீயும் கெட்டு போயிட்டடி.இவதான் கல்யாணம் பிடிக்கலன்னு சொல்லிட்டு இருக்கா நீங்க என்னடானா மேக் அப் பண்ணலாம்னு சொல்றீங்க” என்று கேட்க.

சூர்யாவோ “எது அவளுக்கு விருப்பம் இல்லையா” என்று கேட்டுக் கொண்டிருக்கும்போதே அவள் பேச்சை தடுத்த பூஜா “அடியே அவ தலையில இருந்து கீழே பாதம் வரைக்கும் நல்லா பாரு டி ஃபுல் மேக்கப்பில் இருக்கிறா இப்போ இவ பேசுன டயலாக் எல்லாம் யோசிச்சு பாரு படிக்க முடியலன்னு மேடம் பீல் பண்ணல ஜாலியா இருக்க முடியலைன்னுதான் பீல் பண்றா அதுக்கு நாம எல்லாரும் சேர்ந்து மாப்பிள்ளைக்கிட்ட பேசி ஒரு சமாதான உடன்படிக்கை செஞ்சுட்டா முடிஞ்சுது. ஒரு மண பொண்ணோட பிரண்டுங்க எப்படி இருக்கோம் பாரு, பிக்காளி மாதிரி வந்திருக்கிறோம்” என்றாள்.

பின் “நீ ஏன் சொல்லமாட்ட உங்க அம்மா அப்பா வெட்டிங் டே செலிப்ரேஷன்னு பக்காவா இருக்க. ஆனா நாங்க அப்படியா இருக்கோம். அதெல்லாம் முடியாது” என்று விட்டு மதுவிடம் திரும்பியவள் “ஏய் எங்கடி உன்னோட கபோர்ட் எனக்கு புடிச்ச டிரஸ் செலக்ட் பண்ணி எடுக்கறேன்” என்றவள் செல்ல அவளை தொடர்ந்து சூர்யாவும், ப்ரீத்தியும் சென்றனர்.

செல்லும் தோழிகளை பார்த்த மது “இவளுங்க மேக் அப் பண்ண போறதை பார்த்தா நமக்கு கல்யாணம் பண்ணி வச்சிட்டுதான் போவாளுங்க போலயே” என்று அதிர்ந்து போய் அமர்ந்திருந்தாள். மனதிலோ “வட்ட கருப்பட்டிய வாசமுள்ள ரோசாவாம் காலைலதான் நிச்சயமுன்னு சொன்னாங்க” என்று பாட ஆரம்பித்தாள்.
மூவரும் தங்களுக்கு பிடித்த உடையை அணிந்துகொண்டு வர அவர்களைப் பார்த்த அபிக்கு ஆச்சரியமாக இருந்தது.

பூஜாவின் அருகில் சென்றவள் மேல இருந்து கீழ வரைக்கும் கவர் பண்ணியே குமாரு மூட வேண்டியதை மூடுனியா” என்று அவள் அணிந்திருந்த லாங் பிராக்கில் கழுத்தடியில் இருந்த சிறிய ஹோலை காட்டி கேட்டாள்.

சூர்யாவும் சிறு சிரிப்புடனே “ஏன்டி டிரஸ் பின்னாடி தொங்கறதை முன்னாடி ஷால் மாதிரி போட்டா என்னடி” என்று கிண்டல் செய்ய அவளை முறைத்த பூஜா “அடியே இந்த ட்ரெஸ் மாடலே பின்னாடி அதை தொங்க விடறதுதான் அது மட்டும் இல்லாம இந்த டிரஸ் என்னோடது இல்ல எடுத்தவள கேளு” என்றாள்.

சூர்யாவும் தான் அணிந்திருந்த பாவாடை தாவணியை முன்னும் பின்னும் திருப்பி காட்டியவள் “எனக்கு எப்படி இருக்கு” என்று கேட்க அனைவரும் ஒரே குரலில் கேவலமா இருக்கு”என்று சொல்ல அதை தூசி போல் தட்டிவிட்டவள் தன் இரு கைகளில் பாவாடையை விரித்து பிடித்து குனிந்து “தான்குஉஉ” என்றாள்.

பின் மூவரும் போட்டிருந்த மேக்அப்பை பார்த்த அபி “அடியே உங்க மேக்அப் அதிகமா இருக்கு. உங்களோட நான் நின்னா டல்லா தெரிவேன்.நானும் கொஞ்சம் டச் அப் பண்றேன் நகருங்கடி” என்று செல்ல, இங்கு மதுவோ கன்னத்தில் கைவைத்து அமர்ந்துவிட்டாள்.

அப்போது சூர்யா “நீங்க எல்லாரும் பேசிட்டு இருங்க நான் போய் அண்ணாவை வெல்கம் பண்ணிட்டு வரேன்”என்று சொல்லி அறையை விட்டு வெளியே செல்ல முனைந்த நேரம் அபியின் குரல் ஆச்சர்யமாக ஒலித்தது “எது அண்ணனா” என்று. அவளை பார்த்த சூர்யா “ஆமாண்டி மதுவை கட்டிக்க போறவரு அண்ணன்தானே அதான்” என்று சொல்ல, ப்ரீத்தியோ “அவரு அண்ணாதானு முடிவே பண்ணிட்டியா” என்று கேட்க,

அவளோ “எஸ்ஸு” என்றுவிட்டு வெளியில் குதித்து கொண்டு திரும்ப இப்போது பூஜா அவளை தடுத்தாள்.”அப்புறம் ஏன்டி என்னோட அஜூ பேபிய மட்டும் அண்ணானு சொல்ல மாட்டிக்கிற” என்று கேட்டாள்.

அவளை முறைத்த சூர்யா “அந்த மங்கூஸ் மண்டையன எல்லாம் அண்ணானு சொல்ல முடியாது போடி” என்றுவிட்டு சென்றாள்.
சூர்யா சென்ற பிறகு இவர்கள் நால்வரும் பேசிக்கொண்டிருக்க, சிறிது நேரத்தில் மதுவின் வீட்டு வாயிலில் நாலைந்து கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டது.அதை கேட்ட உடனே மதுவின் இதய துடிப்பு அதிகமாக பதட்டமானாள்.

மாப்பிள்ளையை வரவேற்க வரவேற்பறையில் நின்றிருந்த சூர்யா வீட்டிற்குள் வந்த மாப்பிள்ளை பார்த்து அதிர்ந்து வேகமாக மதுவின் அறையை நோக்கி ஓடினாள்.

சூர்யாவின் அதிர்ச்சிக்கான காரணத்தை அடுத்த எபில பார்க்கலாம்….


கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பர்களே..........

 

Attachments

Last edited:

Sonythiru

Suthisha
24405

அத்தியாயம் -22

மாப்பிள்ளையை பார்த்து அதிர்ந்து உள்ளே ஓடிய சூர்யா மதுவிடம் சென்று “அடியே மாப்பிள்ளையா வந்துருக்கறது சர்வர்டி” என்க தோழிகள் நால்வரும் புரியாது விழித்தனர்.

அபி. “தெளிவா சொல்லுடி என்ன சர்வர்” என்று கேட்க சூர்யாவோ தலையில் கை வைத்தவள் “ஹய்யோ அடியே நேத்து ஹோட்டல்ல பார்த்த அதே சர்வர்தான் மாப்பிள்ளையா வந்துருக்காரு” என்று சொல்ல, அதில் பயந்த மது “என்னடி சொல்ற அந்த சர்வரேதானா நல்லா பாத்தியா” என்றாள்.

அவளை முறைத்த சூர்யா “ஏன் டி எனக்கு என்ன கண்ணு தெரியாதா நல்லா பாத்துட்டேன் அவருதான்” .

அபி, மது “உங்க வீட்டில மாப்பிள்ளை வேலைபத்தி நல்லா விசாரிச்சாங்களா இல்லையா, எங்ககிட்ட சொல்லும்போது கூட நல்ல குடும்பம்னுதான் சொன்னாரு” என்று யோசனையாக கேட்டாள்.
பூஜா “ஒரு வேலை இந்த படத்துல எல்லாம் கம்பெனி பொறுப்பு குடுக்கணும்னா வேற கம்பெனில வேலை பாருன்னு சொல்லுவாங்களே அது மாதிரியே அவங்க பேமிலில இருக்கற பெரிய தலை ஏதாவது சொல்லி இருக்குமோ” என்று கேட்டவள் மேலும் “இல்லடி நேத்து சூப்பர்வைசர்னுதானே சொன்னாரு” என்று இழுத்தாள்.

ப்ரீத்தி “ஹய் இனிமே அந்த ஹோட்டல்க்கு போனா நாம பில் கட்ட வேண்டாமா” என்று குதிக்க அவளை முறைத்த நால்வரும் “வாயை மூடு” என்பது போல் சைகை செய்ய அவளோ ஒரு தோள் குலுக்கலோடு அமைதியானாள். இப்படியே தோழிகள் நால்வரும் ஆளுக்கு ஒரு கருத்து சொல்ல இங்கு மதுவிற்கு பீதி ஆக ஆரம்பித்தது.

உடனே அவர்களை அரண்டு போய் பார்த்தவள் “நீங்க முதல்ல நகருங்கடி.நானே போய் பார்க்கிறேன்” என்று செல்ல முயல, அவள் கையை பிடித்து தடுத்த சூர்யா “என்ன அவசரம் பொறுமையா இரு உன்னை கூப்பிட யாரவது வருவாங்க அவங்ககூட போ, இப்போ நல்ல புள்ளையா, கல்யாண பொண்ணா அமைதியா உட்காரு”என்றாள்.

அபி, “ஆமா ஆமாம் கல்யாண பொண்ணு நீ அதனால அச்சம், மடம் அப்புறம் என்னடி” என்று கேட்க “நாணம் பயிர்ப்பு” என்று பூஜா எடுத்து கொடுக்க, அவளுக்கு ‘ஹை பை’ கொடுத்த அபி “ஹான் அதேதான் அதை எல்லாம் பேக் பண்ணி மொத்தமா வச்சுட்டு உட்காரு நாங்க தான் முதல்ல பாப்போம் ஏனா நாங்க கல்யாண பொண்ணு இல்லை” என்று சொல்லி கதவின் அருகே செல்ல, அவளுக்கு முன் ஓடிய ப்ரீத்தி “நான்தான் பஸ்ட் நான்தான் பஸ்டு” என்றாள்.

நால்வரும் ஒருவர் தலைமேல் ஒருவர் தலையாக அடுக்கடுக்காக வைத்து ஹாலில் நடப்பதை பார்க்க ஆரம்பித்தனர்.

பெண்ணை அழைத்து வர சொல்ல மதுவின் பாட்டி அவளை அழைத்து செல்ல வந்தார்.கதவருகே நின்ற தோழிகளை கண்டு முகத்தை திருப்பி கொண்டு அவர் செல்ல,
அதை கவனித்த பூஜா,”கிழவிக்கு குசும்ப பாத்தியா எப்படி திருப்பிட்டு போகுதுனு” என்றாள்.

அபி, “ஹம்ம்…. விடுடி விடுடி இந்த வீட்ல நம்மள ஒரு ஆளா மதிக்கிறது இந்தக் ஓல்ட் லேடி மட்டும்தான். இதுவே நம்ம கண்டுகலைனா, கண்டிப்பா இந்த கல்யாணத்துல இதுக்கும் சம்பந்தம் இருக்குனுதான் அர்த்தம். என்ன ஆனாலும் சரி எப்படியாவது மாப்பிள்ளை கிட்ட பேச டைம் கேட்டு, நம்மளோட கண்டிஷன சொல்லணும். அவரு அதுக்கு ஓகே சொல்லல,வேற ஏதாவது பண்ணி இந்த கல்யாணத்தை நிறுத்தறோம்” என்று தீவிரமாக பேசிக்கொண்டு இருந்தாள்.

அதற்குள் அந்த பாட்டியும் மதுவை அழைத்துக்கொண்டு கதவருகில் வந்திருந்தார்.தோழிகள் நால்வரும்அவளை சுற்றி நின்று கொண்டனர் முதலில் அபி “பயப்பாடாம போ, நம்மள மீறி எதுவும் நடக்காது” என்று சொல்லி கொண்டு இருக்க, அவர்களிடம் தலையாட்டிய மது தயக்கத்துடனே ஹாலில் நடுநாயகமாக அமர்ந்திருந்த மாப்பிளையை பார்த்தாள்.

பீச் நிற ஷர்ட் சந்தன நிற பேண்ட்டில் அம்சமாக இருந்தவனை பார்த்தவுடன் கண்கள் மின்ன அவனையே அவள் பார்த்திருக்க, அவளது பாட்டியோ “இப்போ இதுங்க நம்மல போக விடுங்களா விடாதுங்களா” என்பது போல் தோழிகள் நால்வரையும் முறைத்து கொண்டு இருந்தார்.

பூஜாவும் தன் பங்கிற்கு அவளுக்கு தைரியம் சொல்லி கொண்டு இருக்க, அதை எல்லாம் மது காதில் வாங்கினால்தானே மாப்பிள்ளையாக அமர்ந்திருந்த பிரபாகரனை பார்த்து ஜொள்ளுவிட்டு கொண்டு நிற்க, பூஜாதான் பேசி கொண்டே இருந்தாள். அப்போது அவளின் பேச்சை தடுத்த சூர்யா “ஹல்லோ நீ பேசறது வேஸ்டு மேடம் ஆல்ரெடி அவருகிட்ட விழுந்துட்டானு நினைக்கறேன்.உன்னை அவள் கண்டுக்கவே இல்லை” என்று சொல்ல, கடுப்பான பூஜா அவள் கையில் நறுக்கென்று கிள்ள அதில் முகம் சுழித்த மது அப்போதும் பிரபா மேல் இருந்த கண்ணை விலக்காமல் கொசு கடித்தது போல் தேய்க்க தோழிகள் நால்வரும் இவ அந்த விஷயத்துக்கு சரிப்பட்டு வர மாட்டா போலயே என்பது போல் பார்வையை பரிமாறி கொண்டனர்.
ஒரு வழியாக மதுவை பாட்டி ஹாலிற்கு அழைத்து சென்றார். அவர்களின் முறைப்படி நிச்சய வேலைகள் நடக்க ஆரம்பித்தது. ஆனால் மாப்பிள்ளை…….. அவர் நிலைமையும் படு மோசமாக இருந்தது. ஏனென்றால் அவரும் மதுவை மண பெண்ணாக எதிர் பார்க்கவில்லை.

மதுவை பார்த்த மறுநிமிடம் பிரபா மண்டையில் கொசுவர்த்தி சுருள் சுற்ற ஆரம்பித்தது.அதில் பிரபா நோட் பேடுடன் நிற்க அவன் எதிரில் நன்றாக சாய்ந்து அமர்ந்து மது உணவு வகைகளை லிஸ்ட் போட்ட காட்சி ஓடியது. இறுதியில் லிஸ்டை பார்த்து அலறியவன் “ இந்த பொண்ணை கட்டிக்க போற அப்பாவி ஜீவன் பாவம், அன்னைக்கு வேற மாலுல ரெண்டு ஐஸ் கிரீம் சாப்பிட்டா இப்ப இவ்ளோ ஐட்டம்ஸ் ஆர்டர் பண்ணி இருக்கா அதுவும் இவளுக்கு மட்டும் , அந்த ஜீவனுக்கு சமையல் கட்டுலையே வாழ்க்கை முடிஞ்சுரும் போலயே,இல்லைனா இவளுக்கு மட்டுமே ஹோட்டல் வச்சு நடத்தணும்” என்று கிண்டலாக நினைத்தது ஓட, மனதில் அலறியவன் கடைசில நான்தான் அந்த அப்பாவியா ஜீவனா என்று ப்ரீஸ் ஆகி அமர்ந்திருந்தான்.

பிரபாவின் அருகில் இருந்த அவனது பாட்டி பேரனின் முகத்தில் இருந்த கலவரத்தை கண்டு இரண்டு முறை இருமியவர் நலிவான குரலில் “என்னப்பா…… “ என்க, அவரை பார்த்து “ஒன்றும் இல்லை” என்று தலையாட்டியவன் அப்படியே ப்ரீஸ் நிலையிலேயே அமர்ந்திருந்தான்.

அதன் பின் வேலைகள் ஜரூராக நடக்க பெண், மாப்பிள்ளை இருவரும் நிச்சய மோதிரம் மாற்றிய பிறகு பெரியவர்கள் அனைவரும் பேசி கொண்டு இருந்தனர். அப்போதுதான் தோழிகள் அனைவருக்கும் தெரிந்தது அவர்களது குடும்ப தொழில் ஜவுளி கடல் வைத்திருப்பதாம், பிரபா தனது விருப்பத்தின் பேரில் ஹோட்டல் பிஸ்னஸ் நண்பனோடு சேர்ந்து நடத்தி கொண்டிருப்பதும் தெரிய வந்தது.

அவர்கள் சொன்ன தகவல்களை கேட்ட பின்புதான் தோழிகளுக்கு நிம்மதியாக இருந்தது.பூஜா, “நல்ல வேலை அவர் சர்வர் இல்லை” என்று சொல்ல .

ப்ரீத்தியோ “சர்வரா இருந்தா என்ன ஓனரா இருந்தா என்ன எப்படி பார்த்தாலும் ஹோட்டேல்க்கு போனா இனி நாம பில்லு கட்ட வேண்டாம்” என்று சொல்ல மூவரும் அவளை கேவலமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு திரும்பி கொண்டனர்.

பெரியவர்கள் அனைவரும் பேசி முடித்து சாப்பிட எழுந்து போக அப்போது அங்கு வந்த தோழிகள் “நாங்க மாப்பிள்ளைக்கிட்ட பேசணும்” என்றனர்.அதை கேட்ட இரண்டு குடும்பத்தாரும் முகத்தை சுளிக்க மதுவின் தந்தையோ ஆதர்ஷை முறைத்து கொண்டு இருந்தார்.

ஆதர்ஷோ “ரைட்டு நம்மள வீட்ட விட்டு துரத்த பிளான் பண்ணிடுச்சுங்க. டேய் ஆது மாப்பிளை வீட்டுக்காரங்க இருக்கும்போதே நீ வீட்ட விட்டு எஸ் ஆகிடு இல்லை மொத்த குடும்பமும் உனக்கு போட்டோ மாட்டி படையல் போட்ருவாங்க” என்று நினைத்து கொண்டவன் “உங்கள பார்த்தாதானே முறைப்பிங்க நான் நிமிரவே மாட்டேன்டா அப்போ என்ன பண்றீங்கன்னு பார்க்கறேன்” என்று குனிந்து போனை நோண்ட ஆரம்பித்தான்.

மற்றவர்களை விட இரு பக்கமும் இருந்த பாட்டிகளுக்கு இது சுத்தமாக பிடிக்கவில்லை என்று அவர்கள் முகமே காட்டியது.ஆனாலும் மதுவின் சுதந்திரமான வாழ்க்கைதான் முக்கியம் என்று நினைத்து கொண்டவர்கள்11QQ பிடிவாதமாக நின்றனர்.

உடனே மதுவின் பாட்டி “உங்க பிரண்டு மாப்பிள்ளைக்கிட்ட பேசணும் அவளோதானே” என்று சூசகமாக அவர்கள் பேசக்கூடாது என்பது போல் உறுத்து விழித்தார்.

அவர் மனதிலோ ‘பேத்தி மட்டும் என்றாள் கூட பரவாயில்லை அவளை சமாளித்துவிடலாம் ஆனால் இந்த மூணும் பயங்கர விவரம் ஏதாவது தில்லு முள்ளு பண்ணிடுங்க” என்று யோசித்து அவரே மது,பிரபா இருவரையும் தனியாக பேச அனுப்பினார்.

ப்ரீத்தியோ, “இந்த பாட்டிக்கு காது கேட்குமா கேட்காதா நாம பேசலாம்னு சொன்னா அவங்க ரெண்டும் பேரையும் அனுப்புது”.

பூஜா, “அது எல்லாம் கிழவிக்கு நல்லா ஷேமமா கேட்கும் வேணும்னேதான் பண்ணுது வாங்க நாமலும் போலாம்” என்று செல்ல மூவரின் குறுக்கே ஒரு கரம் நீட்டப்பட்டது “யார்” அது என்று அவர்கள் பார்க்க அங்கு கோபமாக பார்த்து கொண்டு நின்றிருந்தார் பிரபாவின் பாட்டி.

தோழிகள் அவரை புரியாமல் பார்க்க அவரோ “ எங்க போறீங்க” என்றார் கணீர் குரலில் .

சூர்யா, “ஏன் பாட்டி நாங்கதான் முன்னாடியே சொன்னோமே பேசணும்னு அதுக்குதான்” என்க, அவர்களை அலட்சியமாக பார்த்தவர் பொண்ணு மாப்பிள்ளை பேசறது போதும்.“மத்த வீட்ல எல்லாம் நிச்சயமானவங்க பேசவே சம்மதிக்கமாட்டாங்க நாங்க அனுப்பிட்டோம் அவங்களுக்குள்ள பேசி ஒரு முடிவுக்கு வரட்டும். வாழப்போறது அவங்கதானே” என்று முடித்து விட இவர்களுக்கு பக்கென்று இருந்தது.

சற்று நேரத்திற்கு முன்புதான் சொன்னாள் சுதந்திரமான வாழ்க்கை வாழ வேண்டும் என்று. ஆனால் இந்த பாட்டியின் கெடு பிடி பார்த்தாள்..... ‘கடவுளே’ என்று தோழியின் வாழ்க்கையை நினைத்து கலங்க ஆரம்பித்தனர்.

அப்போதைக்கு அந்த பாட்டியிடம் எதையும் பேசாமல் விலகிய தோழிகள் மதுவின் அறைக்கு சென்று ஆதர்ஷை எட்டிப் பார்த்தனர்.அப்போது அவனோ தன் குடும்பத்திற்கு பயந்து குனிந்த தலை நிமிராமல் போனை நோண்டி கொண்டிருந்தான்.

தன் போனை எடுத்த பூஜா ஆதர்ஷிற்கு அழைத்தாள்.தனக்கு போன் வரவும் யார் என்று பார்த்தவன் இந்த சில்லு வண்டா என்று நினைத்து “என்ன” என்பது போல் அவர்கள் நின்றிருந்த இடத்தை பார்க்க,அவர்களோ அவனை வெளிப்புறம் வர சொல்லி சைகை செய்தனர்.அவனோ ‘முடியாது’ என்னும் விதமாக தலையை மறுப்பாக ஆட்டினான்.

உடனே பூஜா தனது மொபைலை எடுத்து காட்ட தன் தலை எழுத்தை நொந்து கொண்டவன் எழுந்து மற்றவர் அறியா வண்ணம் வெளியே சென்றான். தோழிகளும் அவனை தொடர்ந்து சென்றனர்.

வீட்டின் தோட்டத்துப் பக்கம் சென்றவன் தோழிகளின் கும்பலை பார்த்து “எதுக்கு இப்ப என்ன வர சொன்னிங்க” என கடுகடுவென்று கேட்க. அவர்களோ அசராமல் அவன் தலையில் இடியை இறக்கினர். அது என்னவென்றால் “நாங்கள் இப்போ மது இருக்கும் இடத்திற்கு போகனும்” என்றனர். அவனோ அதிர்ந்து அப்படியே அமர்ந்துவிட்டான்.

அபி, “இப்படியே வெட்டியா உட்கார்ந்திருந்தா என்ன அர்த்தம் நாங்க போயி பேசிட்டு வரணும். சீக்கிரம் ஒரு ஐடியா சொல்லுங்க அந்த கிழவிங்க ரெண்டும் வந்துர போகுதுங்க” என்று சொல்ல அவர்களை இழுத்து சென்றவன் அங்கிருந்த காம்பௌண்ட் அருகில் நிறுத்தி “இந்த சுவர் ஏறி குதிச்சா மாடிப்படி வரும் அந்த படியில் ஏறி போனீங்கன்னா மொட்டை மாடியில் அவங்க ரெண்டு பேரும் இருப்பாங்க போங்க போய் நீங்க பேசுனாலும் சரி இல்லை அவங்க பேசறதை வேடிக்கை பார்த்தாலும் சரி என்னமோ பண்ணுங்க நான் போறேன்” என்க,

சூர்யாவும் அபியும் கட்டி இருந்த தாவணியை தூக்கி சொருகி காம்பௌண்டில் ஏறி அந்த பக்கம் குதிக்க, பூஜாவும் லாங் பிராக்கை தூக்கி சொருகி ஒரே தாவில் அந்த பக்கம் ஏறி இருந்தாள். ப்ரீத்தி சுடி போட்டிருந்ததால் ஒரே தாவில் மறு பக்கம் சென்றனர்.இதை பார்த்து வாயை பிளந்த ஆதர்ஷ் “உங்களை எல்லாம் பார்த்து இப்போதான் பொண்ணுங்க மாதிரி இருக்குதுங்கனு நினைச்சேன். ஆனா அந்த குரங்கு சேட்டை மட்டும் மாறவே இல்லை என்ன டிரஸ் போட்டாலும் குரங்கு குரங்கு தான் என்க,
தோழிகள் அனைவரும் ஒரு சேர அவனை முறைக்க அவனோ அவர்களை கண்டு கொள்ளாமல் அப்படியே எஸ்கேப் ஆகி வீட்டை விட்டே வெளியே ஓடிவிட்டான்.

தோழியின் வாழ்க்கையை எண்ணி பயந்து அலறி அடித்து வந்தவர்கள் அங்கு மதுவையும் பிரபாவையும் பார்த்து திகைத்தனர்.ஏனென்றால் பிரபா மதுவின் தோளில் கை போட்டு இருக்க இருவரும் சேர்ந்து செல்பி எடுத்து கொண்டு இருந்தனர்.

சூர்யா, நான்தான் அப்பவே சொன்னேன்ல பயபுள்ள முதல்லயே அவருகிட்ட விழுந்துட்டான்னு யாராவது நம்புனீங்களா இப்போ பாருங்க” என்று சொல்ல, பூஜாவோ, “ துரோகி பச்ச புள்ளை மாதிரி முகத்தை வச்சு நம்மையும் ஏமாத்திட்டாளே இவளை……. “ என்று கோபமாக அவர்கள் அருகில் செல்ல அதற்குள் அடுத்த போஸ்க்கு மாறி இருந்தனர் இருவரும்.

அவர்கள் அருகில் சென்ற நால்வரும் இடுப்பில் கைவைத்து முறைத்து கொண்டு இருக்க மதுவோ “பிரபு இந்த பக்கம் திருப்புங்க பின்னாடி ஏதோ ஒரு டிஸ்டர்பன்ஸ் நிக்குது போல அதோட தலை தெரியுது” என்றாள்.பிரபாவும் யார் என்று திரும்பி பார்க்க தோழிகள் நால்வரையும் கண்டு. ‘இவர்களா’ என்னும் தோரணையில் நின்றான்.மதுவோ அவனில் இருந்து கண்களை எங்கும் நகர்த்தவில்லை.

அபி “எது பிரபுவா பேரையே சுருக்கியாச்சா” என்று கேட்டாள். அவளை கவனிக்காத மதுவும் “ஆமாம் மத்தவங்க கூப்பிடற மாதிரி…… “ என்று இழுத்தவள் பின் “இந்த குரலை எங்கயோ கேட்ட மாதிரி இருக்கே யார் அது” என்று சொல்லி கொண்டே திரும்ப அங்கே உக்கிரமாக அவளை முறைத்து கொண்டு நின்றிருந்தனர்.

அவர்களை பார்த்து அசடு வழிய “ஈஈஈ....” என்று சிரித்தவள் “அது அபி……அது.. வந்து......” என்று இழுத்தவள் மேலும் என்ன பேசுவது என்று தெரியாமல் விழிக்க அவளை கேவலமாக பார்த்த தோழிகள் பிரபுவிடம் திரும்பி “நாங்க உங்ககிட்ட பேசணும்” என்றனர். அவனும் மாடியில் இருக்கும் கை பிடி சுவரில் சாய்ந்தவாறு நின்று கொண்டு “பேசலாமே” என்று சொன்ன மறு நிமிடம் அவனின் போன் அலறியது.

போனை எடுத்தவன் “அப்படியா சரி பாட்டி” என்றுவிட்டு , “கீழ வர சொல்றாங்க கிளம்பனுமாம் அவங்களுக்கு ஏற்கனவே உடம்பு சரி இல்லை, ரொம்ப நேரம் வெய்ட் பண்ண வைக்க முடியாது அதனால இப்போ நான் கிளம்பறேன்” என்று சொல்லி மதுவை பார்க்க அவளும் அவனைதான் பார்த்து கொண்டிருந்தாள்.
பிரபா கிளம்புகிறேன் என்று சொல்லவும் கடுப்பான அபி “அந்த ஓல்ட் லேடிய பார்த்தா உடம்பு சரி இல்லாத மாதிரியா தெரியுது நல்லா நாலு பிளேட் பிரியாணிய தனியா சாப்பிடற மாதிரி இருக்கு.அதுக்கு உடம்பு சரியில்லையா.இந்த லூசு வேணும்னே பன்றானோ” என்று அருகில் இருந்த சூர்யா காதில் கேட்க அவளும் அதே எண்ணத்தோடுதான் யோசித்து கொண்டு இருந்தாள்.

பிரபா கிளம்புவதற்கு முன் மதுவிடம் பேச எண்ணியவன் அவள் அருகில் செல்ல உடனே அவளை தன் பின்னே இழுத்து நிறுத்தி கொண்ட அபி “கிளம்புங்க ப்ரோ உங்களுக்குதான் டைம் இல்லையே ஆனா எப்போ பேச டைம் இருக்கும்னு சொல்லுங்க நாங்க கண்டிப்பா பேசணும்” என்று அழுத்தமாக சொன்னாள்.

உடனே மது “விடுங்கடி அவரு கிளம்பட்டும் அதான் போன் நம்பர் என்கிட்ட குடுத்துருக்காரே கால் பண்ணி கேட்டுக்கலாம்.நீங்க கிளம்புங்க டாடா பாய்” என்று கை ஆட்டி அவனை கிளம்ப சொன்னாள் .

பிரபாவோ மனைவி ஆக போகிறவளிடம் அபி பேச விட வில்லை என்ற கடுப்பில் இருந்தவன், மதுவின் பேச்சால் மேலும் கடுப்பாகி அவர்களை முறைத்து கொண்டே அங்கிருந்து சென்றான்.

செல்லும் அவனையே அலட்சியமாக பார்த்த அபி “ஒரு செல்பி எடுத்துட்டா நீ பெரிய ஆளா கிளம்பு கிளம்பு” என்னும் தோரணையில் நின்றிருந்தாள்.

தோழிகள் அனைவரும் இப்போது எதுவும் பேச வேண்டாம் என்று முடிவு எடுத்தவர்கள் கீழே வந்த வழியே சென்று யாருக்கும் சந்தேகம் வராத படி மது ரூமில் உட்கார்ந்து இருந்தனர்.பிரபா குடும்பம் சாப்பிட்டு கிளம்பிவிட்டனர்.

அவர்கள் கிளம்பிய பின் கனவு லோகத்தில் மிதந்தவாறே வந்த மதுவை கோழி அமுக்குவது போல் நாளா புறமும் அணை கட்டியவர்கள் முறைத்து கொண்டு நின்றனர். அவளோ அதை கூட உணராமல் ப்ரீத்தி மேல் மோதிய பிறகுதான் சுய நினைவிற்கு வந்தாள்.

மது தன் மேல் மோதவும் கீழே விழுந்த ப்ரீத்தி “ஐயோ அம்மா கொலை….கொலை…கொலை….. என்ன இடிச்சே கொல்ல பாக்குறா, என்னை காப்பாத்துங்க” என்று கத்த ஆரம்பித்தாள்.மது கையை பிசைந்தவாறே பேந்த பேந்த விழித்து கொண்டு இருக்க வேகமாக ப்ரீத்தி அருகில் சென்ற பூஜா அவள் வாயை மூடி “அடியே ஓவர் ஆக்ட்டிங் உடம்புக்கு ஆகாதுடி பேசாம இரு.இல்ல இவங்க குடும்பம் மொத்தமும் இங்க வந்துரும்” என்று சொல்லி அடக்கினாள்.ப்ரீத்தியும் உடனே வாயை கப்பென்று மூடி கொண்டாள்.

பின் மதுவை ஓர கண்ணால் பார்த்து கொண்டே சூர்யா “ஏன் டி அபி யாரோ ஒரு மானஸ்தி எனக்கு கல்யாணம் வேண்டாம் நீங்கதான் வேணும் ப்ரீடம்தான் முக்கியம்னு பேசிட்டு இருந்தாளே அவளை பார்த்தியா” என்று கேட்க.

அபியோ மதுவை முறைத்து கொண்டே “அந்த மானஸ்தியதான் நானும் தேடுறேன் அவ மட்டும் கைல மாட்டட்டும் இன்னைக்கு சட்னிதான்” என்றாள் முந்தானையை எடுத்து இடுப்பில் சொருகியவாறே. அவர்களை பீதியோடு பார்த்த மது “இங்க பாருங்கடி எதா இருந்தாலும் பேசி தீத்துக்கலாம்.நான் சொல்றதை முதல்ல கேளுங்க” என்றாள்.

அவளை முறைத்த பூஜா “முதல்ல சொல்லு அப்புறம் நாங்க தீக்கறதா இல்லையானு சொல்றோம்” என்றாள்.

மது உடனே பிரபா தன்னிடம் பேசியதை சொல்ல ஆரம்பித்தாள். அவர்கள் மாடிக்கு சென்று வெகுநேரம் வரை அமைதியாகவே நின்றிருந்தனர்.மது என்ன பேசுவது, என்ன சொல்வது என்று புரியாமல் கையை பிசைந்து கொண்டு பதட்டமாக நின்றிருந்தாள். அவளின் உணர்வை புரிந்து கொண்டவன் போல் அவனே முதலில் பேச்சை ஆரம்பித்தான்.அதுவும் எடுத்த எடுப்பிலேயே “என்னை உனக்கு புடிச்சிருக்கா, இந்த கல்யாணத்துல உனக்கு சம்மதம்தானே” என்று கேட்க அவளோ என்ன சொல்வது என்று புரியாமல் விழிக்க ஆரம்பித்தாள்.

முதலில் இந்த பெண்ணா என்று அலறிய பிரபா அவளின் இந்த இன்னொசென்ட் பார்வையில் தலைகீழாகவே விழுந்தான்.அவள் பதில் சொல்ல எடுத்து கொண்ட நேரத்தில் அவளை அவளே அறியாமல் ரசிக்க ஆரம்பித்தான்.

சற்று பூசினார் போன்ற உடல்வாகுதான் ஆனால் அதுதான் அவள் அழகை அதிகமாக்கியது போல் இருந்தது. அவளின் கண்கள் புருவம், கண்கள் என்று அலைந்து புசு புசுவென்றிருந்த கண்ணத்தை பார்த்து ‘கண்ணம் அது பன்னு மாதிரி’ என்ற பாடலை அவனே அறியாமல் முணுமுணுக்க ஆரம்பித்திருந்தான்.மேலும் அவனின் பார்வை இதழை தீண்டி கீழே செல்ல முனைய உடனே வேறு பக்கம் திரும்பி கொண்டவன் “அடே பிரபா என்ன காரியம் பண்ற நீ என்ன இருந்தாலும் கல்யாணத்துக்கு முன்னடி ஒரு பொண்ண அந்த மாதிரி பார்ப்பது தவறு என்று தன்னை தானே கடிந்து கொண்டு. மூச்சை நன்றாக இழுத்துவிட்டவனின் மனசாட்சி “கல்யாணம் வேண்டாம் கல்யாணம் வேண்டாம்னு வீட்ல அவளோ சீன் போட்டுட்டு கடைசில உன் பாட்டிகாகதான் இந்த கல்யாணம்னு சொல்லிட்டு வந்துட்டு இப்போ நீ பண்ற காரியம் என்ன” என்று அவன் மனசாட்சி காரிதுப்ப அசடு வழிய அதை பார்த்தவன் “சரி சரி நான் என்ன பண்ணட்டும். நல்லா கோழி குண்டு மாதிரி கண்ணை உருட்டிகிட்டு அப்பாவியா ஒரு பொண்ணு கும்முனு நின்னா நான் என்ன பண்றது. முதல்ல நீ இங்க இருந்து கிளம்பு ஹஸ்பண்ட் அண்ட் வய்ப்குள்ள ஆயிரம் இருக்கும் நீ எதுக்கு இடைல கிளம்பு கிளம்பு”என்று விரட்டியவனை பார்த்த அவன் மனசாட்சி “என்னை விரற்றது இருக்கட்டும் ராசா அவ ஒன்னும் சொல்லாம இருக்கா அதை பாரு” என்றுவிட்டு சென்றது.

அதன் பின்தான் மதுவின் நினைவு வந்தவன் அவளை பார்க்க.அவள் முகம் குழப்பத்தை தத்தெடுத்திருந்தது அதை கவனித்தவன் யோசனையான முக பாவத்துடன் “ ஆண்டாள் அழகு நாச்சியார் உனக்கு என்னை பிடிக்கலையா, ” என்று ஒரு தவிப்புடன் கேட்டான்.

மதுவோ “என் பேரு மதுவந்தி ஆண்டாள் இல்லை” என்று அதுதான் முக்கியம் என்பது போல் சொன்னாள்.அவனோ “நாம என்ன கேக்கறோம் இவ என்ன சொல்றா” என்பதை போல் பார்த்து பின் சிறு சிரிப்புடன் “சரி மது” என்று சொல்லி முதலில் கேட்ட கேள்வியையே கேட்க.அவளோ வேகமாக “நான் எப்போ பிடிக்கலைனு சொன்னேன்” என்றாள்.”அப்போ பிடிச்சுருக்கு இல்லையா” என்று உல்லாசம் நிறைந்த குரலில் கேட்க உடனே தலையை குனிந்து கொண்டவள் “ம்ம்….” என்று சொல்லி ‘ஆமாம்’ என்னும்விதமாக தலையை மட்டும் ஆட்டினாள்.

“என்னதான் குடும்பத்துக்காக இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டு இருந்தாலும் உன் சம்மதம் இல்லாம இந்த கல்யாணம் நடக்காது அதான் கேட்டேன். உனக்கு ஏதாவது என்கிட்ட கேட்கணுமா” என்று அவன் கேட்டதற்கு “இல்லை” என்று மறுப்பாக தலையசைத்தாள்.

“சரி இது என்னோட பர்சனல் நம்பர் எப்போ வேணா நீ என்கிட்ட பேசலாம்” என்று சொல்லி தன் கார்டு ஒன்றை எடுத்து கொடுத்தவன் தயக்கத்துடன் “என்னோட பிரண்டு கிருஷ்ணா அவனும் நானும்தான் பிஸ்னஸ் பன்றோம் வீட்ல கொஞ்சம் ஸ்ட்ரிட் அதனால அவன் இங்க வரலை நாளைக்கு ஹோட்டல் போனா உன்னோட போட்டோ கேட்பான்.நாம ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு செல்பி எடுத்துக்குவோமா” என்று கேட்க அவளும் சம்மதிக்க அப்போதுதான் தோழிகள் இவர்களை பார்த்தது.

மது சொல்லி முடித்தவுடன் அவளை சுற்றி இருந்த நால்வரும் அவளை குனிய வைத்து மொத்த ஆரம்பித்தனர்.

அபி, ”ஏன் டி அறிவுகெட்டவளே அவருதான் ஏதாவது என்கிட்ட கேட்கணுமானாருல அப்போவே நான் படிக்கணும்னு சொல்ல வேண்டியதுதானேடி என்று திட்ட,
பூஜாவோ “ஆமாடி நான் போய் நிக்கறேன் பிரபு போனை திருப்புங்க டிஸ்டபன்ஸ் நிக்குதாம் இவளுக்கு எவளோ ஏத்தம் இருக்கும்” என்க, சூர்யாவும் தன் பங்குக்கு “அவரை பார்த்து ஜொள்ளுவிட்டுக்கிட்டே எல்லாத்தையும் மறந்துட்டு இங்க வந்து நாய்க்கு லொள்ள பாரு, எகத்தாளத்த பாரு” என்று மொத்தினாள்.

ப்ரீத்தி, “உங்க ஹோட்டல ஓசில சாப்பிடலாம்னு நினச்சதுக்கு என் மேல மோதி கொலை பண்ண பாக்குற” என்று அடிக்க ஆரம்பித்தாள்.
குனிந்து அடி வாங்கி கொண்டு இருந்தவள் ஒரு கட்டத்துக்கு மேல் முடியாமல் அவர்களை தள்ளிவிட்டு அவள் ரூமை சுற்றி ஓட ஆரம்பிக்க மற்ற நால்வரும் அவளை துரத்த தொடங்கினர்.

மது இவர்களிடம் இருந்து தப்பிக்க என்ன செய்ய போகிறாள்…..அதை அடுத்த எபில பார்க்கலாம்.


கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பர்களே.....

 

Sonythiru

Suthisha
24627

அத்தியாயம் -23

ஹோட்டலில் பிரபாவின் ஆபிஸ் அறையில் தோழிகள் நால்வரும் அமர்ந்திருந்தனர்.அபி மற்றும் சூர்யா இருவரும் பிரபாவிடம் எப்படி பேச்சை ஆரம்பிப்பது என்ற யோசனையோடு இருக்க,ப்ரீத்தியோ யாரும் பேசாமல் அமைதியாக இருக்கவும் தூங்கி தூங்கி விழுந்து கொண்டிருந்தாள். இவர்கள் மூவரும் இப்படி ஒரு பக்கம் இருக்க, மதுவோ தன்னவனுடன் கண்களாலேயே பேசி கொண்டு இருந்தாள்.
இதை எல்லாம் பார்த்து காண்டான பூஜா “ஹ்ம்ம் இதுங்க ஜொள்ளு விடறத பார்க்கவா இவளுங்க கூட்டிட்டு வந்தாளுங்க, அந்த மனுஷன் என்னடானா கண்ணால பேசறேன்னு என்ன கன்றாவியோ பண்ணிட்டு இருக்காரு, நீங்க ஓகே சொன்னாதாண்டி அவர்கூட பேசுவேன்னு சொன்னவ இப்போ கண்டுக்கவே மாட்டிக்கிறா, பேசாம நான் என்னோட அஜூ பேபிகூடவாவது லாங் டிரைவ் போய் இருப்பேன், இவளுங்க கூட வந்தேன் பாரு என்னைய பழைய செருப்பாலையே அடிச்சுக்கணும்” என்று சலித்து கொண்டவள் தன் பக்கத்தில் அமர்ந்திருந்த சூர்யா காலை ஓங்கி மிதித்தாள்.


“அம்மா காலு” என்று சூர்யா அலற, அவளை கிண்டலாக பார்த்த பூஜா “அம்மா காலா,அப்போ உன் கால் இல்லையா” என்று கேட்டாள்.அவளை முறைத்த சூர்யா “பாவி…..கிராதகி நான் உனக்கு என்னடி கெடுதல் செஞ்சேன், எதுக்குடி என் காலை இப்படி மிதிச்ச”என்றாள்.

அவளை முறைத்த பூஜா “அதை நான் கேட்கணும்னுடி உனக்கு நான் என்ன கெடுதல்டி செஞ்சேன் இன்னைக்கு கிளாஸ் கட் அடிக்கலாம்னு நீங்க சொல்லவும் என் அஜூ பேபிகூட டைம் ஸ்பென்ட் பண்ணலாம்னு நினைச்சேன். ஆனா, மதுக்காக பேசணும் வாடினு இழுத்துட்டு வந்துட்டு பேசாம உட்கார்ந்து இருக்கீங்க ஒருத்தி என்னனா தூங்கி விழறா இன்னொருத்தி கண்டுக்கவே மாட்டிக்கிறா மரியாதையா வந்த வேலைய பாருங்க நானும் எவ்வளவு நேரம்தான் வலிக்காத மாதிரியே நடிக்கறது” என்று வராத கண்ணீரை துடைத்தாள்.
பூஜா சொல்வது புரியாமல் சூர்யா விழிக்க அவளை நக்கலாக பார்த்தவள் “நீ ஒரு மங்குனி அமைச்சர் என்பதை நொடிக்கு ஒருதரம் நிரூபிக்கிறாய்” என்றுவிட்டு அவள் தலையை பிரபாவை நோக்கி திரும்பி “அங்க பாரு வாட்டர் பால்ஸ” என்றாள்.

அப்போதுதான் மது, பிரபா இருவரையும் கவனித்த சூர்யா தலையில் அடித்து கொண்டவள் பூஜாவிடம் அசட்டு சிரிப்பை உதிர்த்துவிட்டு “இப்போ பாரு என்னோட பர்பாமென்ஸ” என்றவள் அபியின் கையில் கிள்ளி வைத்தாள்.”ஆஆ…” என்று கத்திய அபி, “இதுதான் உன் பர்பாமென்ஸா” என்று பூஜா இருவரும் ஒரு சேர சூர்யாவை முறைத்தனர்.

சூர்யாவோ “என்னை பார்த்தது போதும் பேச ஆரம்பி” என்றாள், அபியோ “இவ ஒரு விஷ பூச்சி டைம் கிடைக்கும்போது எல்லாம் விஷ வேலை ஏதாவது செஞ்சு வச்சுர்றா” என்று புலம்பி கொண்டே பிரபாவிடம் திரும்பியவள் “இங்க பாருங்க ப்ரோ” என்க, அவனோ அவர்களை கொஞ்சமும் கண்டுகொள்ளாதவனாக மதுவிடம் கண்களாலேயே பேசி கொண்டிருந்தான்.

இரண்டு மூன்று முறை “ஹலோ நாங்க உங்ககிட்ட பேசணும்னு சொன்னோம்” என்று சொல்ல அது அவன் காதில் விழவே இல்லை. “ஹலோ ஹலோ…..” என்று மேஜையில் அபி தட்ட அப்போதும் அவன் கண்டு கொள்ளவில்லை.

பொறுமை இழந்த அபி மதுவுக்கும் பிரபாவிற்கும் இடையில் வந்து நிற்க, “ம்ப்ச்…. “ என்ற சத்தத்துடன் அவளை முறைத்துக் கொண்டே “என்ன”என்று கேட்க, அவளோ “என்ன ப்ரோ கிண்டலா, நாங்க உங்ககிட்ட பேசணும் நாலு பேரும் வரோம் நீங்க எப்போ ப்ரீனு சொல்லுங்கன்னு கேட்டா, டைம் இல்லைங்கறீங்க, அஞ்சு பேரா வாரோம்னு சொன்னதுக்கு அப்புறம் தான், உடனே கிளம்பி வாங்கனு சொல்றீங்க, எங்கள பத்தி என்ன நினைச்சுட்டு இருக்கீங்க” என்று கேட்டாள்.

அபியின் பேச்சு அவனுக்கு சிரிப்பை உண்டாக்கினாலும் அவளை வேண்டுமென்றே சீண்ட நினைத்து முகத்தை இறுக்கமாக வைத்து கொண்டு “உங்களை எல்லாம் பார்த்தா எனக்கு சிரிப்பு வர வைக்கற காமெடி பீஸ்ங்கங்கற மாதிரி இருக்கு”என்று நினைத்து கொண்டவன், வெளியே “சரி என்ன பேசணுமோ பேசுங்க”என்றான்.

தோழிகளிடம் ‘பேசுங்கள்’ என்று சொல்லி விட்டானே ஒழிய பார்வை முழுவதும் மதுவிடமே இருந்தது. அவன் செயலில் கடுப்பான சூர்யா ப்ரீத்தி, மது இருவரையும் அறையின் வெளியே காத்திருக்க சொல்ல.அதில் தன் தோழிகளை அதிர்ச்சியாக பார்த்த மதுவை அவர்கள் முறைத்து கொண்டு அமர்ந்திருக்கவும் “ஹய்யயோ வழக்கம் போல ஜொள்ளு விட்டுகிட்டு இவளுங்கள கண்டுக்காம விட்டுட்டேனே, இப்போ பாசமா வேற பாக்குறாங்களே, அடியே மது இப்போவே வெளிய கிளம்பிடு அதுதான் உனக்கு சேப்”என்று தனக்குள் சொல்லி கொண்டவள்.மனமே இல்லாமல் பிரபாவை திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டே அந்த அறையை விட்டு வெளியே சென்றாள்.

மது வெளியே சென்றவுடன் “இந்த விளையாட்டு பிள்ளைகள் அப்படி என்ன நம்மக்கிட்ட பேச போறாங்க” என்று அவர்களை கவனிக்க ஆரம்பித்தான்.

பூஜாவும் தன் தோழியை பற்றியும், அவளின் ஆசையைப் பற்றியும் கூறினாள்.

அபி,“பாசம்ங்கறது அளவோட இருக்கணும் ப்ரோ, அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சுனு சொல்லுவாங்க அப்படி இருக்கும் போது பாசம் எம்மாத்திரம், கல்யாணத்துக்கு அப்புறம் அவளை நீங்க ரொம்ப கண்ட்ரோல் பண்ண கூடாது.அவளோட ஆசைக்கும் முக்கியத்துவம் குடுக்கணும் அவளுக்கு பெரிய ஆசை எல்லாம் இல்லை.வண்டி ஓட்ட கத்துக்கணும், யாருகிட்டயும் விளக்கம் சொல்லாம ஜாலியா தனியா கோவிலுக்காவது போகணும் இது மாதிரி சின்ன சின்ன விஷயங்கள்தான் அவளோட ஆசை அவளையும் அவளோட ஆசையையும் நீங்க மதிக்கணும்,அப்புறம் அவளை படிக்க வைக்க வேண்டும்” என்றாள்.

என்ன பேச போகிறார்கள் என்று அசால்ட்டாக அவர்களை பார்த்திருந்த பிரபாவிற்கு பின்புதான் தெரிந்தது. தோழிகள் மீது ஒருவருக்கு ஒருவர் வைத்திருக்கும் பாசம் அதை உணர்ந்து கொண்டவன் ஒரு மெச்சும் பார்வை பார்த்துவிட்டு திரும்ப அங்கு மது கண்ணாடி தடுப்பின் பின் ப்ரீத்தியுடன் பேசி சிரிக்க, அவனின் பார்வை அவளில் நிலைத்தது.
அதன் பின் பூஜா, அபி இருவரும் பேசியது எதுவும் அவன் காதில் ஏறவில்லை.வெகு நேரம் பேசியவர்கள் அவனிடம் பதில் இல்லை என்றவுடன் அவன் முகத்தை பார்க்க அவனோ வெளியில் பேசி சிரித்து கொண்டிருந்த மதுவை பார்த்து கொண்டிருந்தான்.அதில் கடுப்பான சூர்யா “ஹல்லோ ப்ரோ உங்ககிட்டதான் நாங்க பேசறோம் எதாவது புரிஞ்சுதா” என்றாள். அவனோ அப்போதும் அவர்களை பார்க்காமல் தலையை மட்டும் புரிந்தது என்பதை போல் ஆட்டி வைத்தான்.
அபி கோபமாக பேச போக அவளின் பேச்சை தடுக்கும் விதமாக பூஜா “விடுடி பிஸ்னஸ் மேன்னா அப்படிதான் இருப்பாங்க அவங்க கவனம் நாளா புறமும் இருக்கணும் இல்லைனா ஏமாத்திடுவாங்க”என்று சொல்ல அவளை முறைத்த மற்ற இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து தங்களுக்குள் கண்களால் பேசி கொண்டவர்கள், அவளை பிடித்து இழுத்து பிரபாவின் முன் நிற்க வைத்தனர்.

பிரபா பூஜா இருவரும் ஒன்றும் புரியாமல் விழிக்க அவன் கையை எடுத்த அபி பூஜா தலையில் வைக்க, சூர்யாவோ “ஓகே ப்ரோ பூஜா மேல சத்தியம் பண்ணிட்டாரு மீறினா பூஜா பே…………. “ என்று கழுத்தை கை கொண்டு வெட்டுவது போல் சைகை செய்தாள்.

இருவரின் செயலில் அதிர்ந்த பிரபா “அட கேடிங்களா அசந்த நேரத்துல சத்தியம் வாங்கிடுச்சுங்களே”என்று அரண்டவன் “ஏம்மா அது என்ன சத்தியம் எதுக்கு சத்தியம்னு நீங்களே சொல்லிடுங்க”என்க, பூஜாவோ கையை நெஞ்சில் வைத்து கொண்டாள் “அட பாவி ப்ரோ அப்போ இவளுங்க பேசுனதை நீங்க கவனிக்கவே இல்லையா, உங்கள போய் ரொம்ப நல்லவருனு நெனச்சு சப்போர்ட் பண்ணுனேன் பாருங்க என்ன சொல்லணும், அடியே என்ன சாத்தியம்டி அது வில்லங்கமா ஒன்னும் இல்லையே பாத்து பதமா சொல்லுங்கடி நானே என் அஜூ பேபிக்கு ஒரே ஒரு லவ்வர்” என்றாள்.

அவளை கிண்டலாக பார்த்த சூர்யா “என்னோட கால மிதிச்சதும் இல்லாம அவருக்கு சப்போர்ட்டா பண்ற இப்போ பாரு”என்று நினைத்தவள் “அது ஒன்னும் இல்லை செல்லக்குட்டி மது படிப்ப முடிக்கற வரைக்கும் அவரு மதுவை டச் பண்ண கூடாதுனுதான் இந்த சத்தியம்” என்று சொல்லி அபியுடன் ஹைபை அடித்து கொண்டாள்.

சூர்யாவின் பேச்சை கேட்ட பிரபா பதறி பூஜாவின் தலையில் இருந்து கையை எடுக்க முயற்சிக்க ஆனால் அது முடிந்தால்தானே அபிதான் அவன் கையை எடுக்க முடியாத அளவிற்கு பிடித்திருக்கிறாளே.

அபி, “என்ன அவசரம் ப்ரோ நாங்க சொன்னதுக்கு ஓகேனு சொல்லி சத்தியம் அப்படிங்கற வார்த்தையையும் சொல்லிடுங்க உங்க கைய விடறேன்”.
பூஜா, “எது தொடக்கூடாதா…… அடி பாவிங்களா காலைல கேன்டீன்ல நீங்க கேட்டது எல்லாம் வாங்கி குடுத்து கூப்பிட்ட உடனே ஏன், எதுக்குன்னு கேட்காம உங்க கூட வந்ததுக்கு என்ன பண்ண முடியுமோ அதை சிறப்பா பண்ணிடீங்க” என்று புலம்பியவள் பிரபாவை பார்க்க அவனோ திரு திருவென விழித்து கொண்டு மதுவையும் பூஜாவையும் மாறி மாறி பார்த்து கொண்டிருந்தான்.

அபி, “சீக்கிரம் சொல்லுங்க ப்ரோ அப்போதான் உங்களை நாங்க செலக்ட் பண்ணுவோம் நாங்க ஓகே சொன்னாதான் மது ஓகே சொல்லுவா”என்றவளை பிரபா நக்கலாக பார்க்க அவன் பார்வையின் அர்த்தத்தை புரிந்து கொண்ட அபி சூர்யாவிற்கு கண் காட்ட அவள் மொபைலில் இருந்து மதுவை அழைத்தவள் ஸ்பீக்கரில் போட்டுவிட்டு “அடியே மது நீ கேட்டுட்டே இருப்பியே எங்க சீனியர இண்ட்ரோடியூஸ் பண்ணி வைக்க சொல்லி, இன்னைக்கு ஈவினிங் மீட் பண்ணும்போது இண்ட்ரோடியூஸ் பண்ணி வைக்கறோம் ஓகேவா” என்றாள்.

மது, “ஹே சூப்பர் டி எனக்கு ஓகே எனக்கு ஓகே” என்று குதித்து கொண்டு சொல்ல அதில் பயந்த பிரபா சூர்யா சொன்ன வார்த்தைகள் அனைத்தையும் ஒன்றுவிடாமல் சொல்லி சத்தியம்”என்க, பூஜா அதிர்ச்சியில் பேச்சின்றி நின்றாள்.

பூஜா, “அட பாவி பலி குடுத்துட்டாளுங்களே இந்த மனுஷன் இப்பவே அவளை திங்கற மாதிரி பாக்குறாரு இதுல லைசென்ஸ் கிடைச்சதுக்கு அப்புறம் சும்மாவா இருக்க போறாரு, ஹையோ என் நிலைமை இப்படி ஆகி போய்டுச்சே” என்று அலறினாள் .

பிரபாவுமே அபியின் பேச்சில் மதுவின் நிலையை புரிந்து கொண்டவன் அவள் விருப்பப்படி பார்த்து கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்திருந்ததால் அந்த சத்தியத்தை முழு மனத்துடனேயே செய்தான்.

பிரபா, ஓகே உங்க விருப்பபடி சத்தியம் பண்ணிட்டேன்ல இப்போ மதுவை பாட்டி பாக்கணும்னு சொன்னாங்க அவளை விட்டுட்டு போங்க நானே காலேஜ்ல கொண்டு வந்து விட்டுட்டு போறேன்” என்றான்.உடனே அபி வேகமாக “நோ… நோ… பர்ஸ்ட் படிப்பு நாங்க இப்போ காலேஜ்கு போக போறோம் வேணும்னா அவங்க வீட்ல பேசிட்டு ஈவினிங் வந்து நீங்க உங்க பாட்டிய பார்க்க கூட்டி போங்க இப்போ நல்ல பையனா எங்களுக்கு டாடா பாய் பாய் சொல்றீங்க” என்றவள் மதுவை உள்ளே வர சொல்லி சைகை செய்தாள்.
அப்போது பூஜா “ப்ரோ பாட்டிய பாத்துட்டு உடனே கொண்டு போய் அவளை அவங்க வீட்ல விட்ருங்க நோ டச்சிங் டச்சிங் ஓகேவா” என்று அதிகாரமாக சொன்னவள் பின் பாவமான குரலில் “என் உயிரு எனக்கு முக்கியம் ப்ரோ கொஞ்சம் கன்சிடர் பண்ணுங்க”என்று சொல்லி கொண்டிருக்கும்போதே மதுவும் உள்ளே வந்தாள்.

சூர்யா, “ஓகே ப்ரோ நாங்க கிளம்பறோம்” என்று சொல்ல, சரியாக அப்போது பிரபாவின் அறை கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தான் கிருஷ்ணா.
அபி அவனை பார்த்து “உங்களுக்கு கண்ணு தெரியாதுதானே, அன்னைக்கு ப்ரீத்திகூட ரோடு கிராஸ் பண்ணி விட்டாளே” என்க,சூர்யாவோ “என்னடி உளறுற நாம சாப்பிட வந்தப்ப இவர்தானே குலாப் ஜாமுன் செர்வ் பண்ணாரு இவரு சர்வர்டி” என்றாள்.

தோழிகள் இப்படி பேசியதை கேட்ட ப்ரீத்தி கிருஷை ஆராய்ச்சியாக பார்க்க, கிருஷோ “ஹையோ இவ ஒரு மார்க்கமா பாக்குறாளே சண்டை போடுவாளோ”என்று விழித்து கொண்டிருக்க, ப்ரீத்தியோ யாரும் எதிர் பார்க்காத ஒரு கேள்வியை கிருஷை பார்த்து கேட்டாள்.

அந்த கேள்வியில் திகைத்து நின்ற கிருஷ் பின் அவள் தோழிகளிடம் ரெண்டு நிமிஷம் என்பது போல் சைகை செய்தவன் ப்ரீத்தியின் கையை பற்றி அந்த ஹோட்டலில் இருந்த கார்னர் டேபிள் நோக்கி இழுத்து சென்றான்.

ப்ரீத்தி அப்படி என்ன கேள்வி கேட்டுருப்பா அதை அடுத்த எபில பார்க்கலாம்.


கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பர்களே.......

 

Sonythiru

Suthisha
24741
அத்தியாயம் -24

கிருஷ் ப்ரீத்தியை அழைத்து வந்துவிட்டானே ஒழிய எப்படி பேச்சை ஆரம்பிப்பது என்ற பதட்டத்தில் இருந்தான்.அவனை பார்த்து கொண்டிருந்த ப்ரீத்தியோ “இப்போ நான் என்ன கேட்டுட்டேன்னு இப்படி ரெஸ்ட் லெஸ்ஸா இருக்காரு” என்று யோசித்து கொண்டிருந்தாள்.

அப்படி என்ன கேட்டிருப்பானு பாக்குறீங்களா அதையும் நாம தெரிஞ்சுப்போமே.பிரபாவின் அறையில் தோழிகள் பேச கிருஷ் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் முழித்து கொண்டிருந்தான் அதை பார்த்த ப்ரீத்தி “இருங்கடி நீங்க இவ்ளோ கேட்டும் அவர் அமைதியா இருக்காருன்னா என்ன அர்த்தம். அவருக்கு கண்ணு எல்லாம் நல்லாதான் தெரியுது, வாய்தான் பேச வராது போல சாரி சார் நீங்க ஊமைனு தெரியாம பேசிட்டாளுங்க” என்று சொல்ல அதை கேட்ட பிரபா அதிர்ந்தான் என்றால் கிருஷோ நொந்தே போய்விட்டான்.

கிருஷோ “என்ன எனக்கு வாய் பேச வராதா என்ன கொடும கடுவுளே இது இவளை லவ் பண்ணுன பாவத்துக்கு கண்ணு தெரியாதுனா சரி அறியா புள்ள தெரியாம பேசுதுன்னு நினச்சு விட்டுட்டேன், அடுத்து சர்வர்னு சொன்னாங்க சரி போனா போறாங்க தெரியாம சொல்லிடுச்சுங்க சின்ன புள்ளைங்கன்னு விட்டேன். இப்போ என்னனா கடைசி கடைசிக்கு ஊமையானு கேக்குறாளே இதுக்கு மேல முடியாது”என்று நினைத்தவன் அங்கிருந்த டேபிளிற்கு இழுத்து போய் அமர்ந்துவிட்டான்.

அறையில் அபியோ பிரபாவிடம் சண்டை பிடித்து கொண்டு இருந்தாள்.”ஹல்லோ என்ன ப்ரோ இது உங்க பிரண்டு பாட்டுக்கு அவளை இழுத்துட்டு போறாரு உங்க பிரண்டுனா நீங்க என்ன வேணா பண்ணுவீங்களா என்று கத்தி கொண்டிருக்க, பிரபாவும் யோசனையான முகத்துடன் செல்லும் நண்பனைதான் பார்த்து கொண்டிருந்தான்.பின் ஒரு முடிவிற்கு வந்தவனாக மதுவிடம் பார்வையை திருப்பினான்.

பிரபாவின் பார்வை மறுபடியும் மதுவிடம் செல்வதை பார்த்து கோபமான அபி மேலும் திட்ட, பிரபாவோ “இந்த கொசு தொல்லை தாங்க முடியலையே” என்று நினைத்தவனாக கை நீட்டி அவள் பேச்சை தடுத்துவிட்டு கிருஷின் காதல் கதையை கூற ஆரம்பித்தான்.

ஆறு வருடத்திற்கு முன்பு கிருஷ், பிரபா இருவரும் ஊட்டி சென்றிருந்தனர்.அப்போது அங்கிருந்த ஒரு டீ பேக்டரியின் வெளியில் இரண்டு தோழிகள் ஸ்வீட் கார்ன்க்காக அடித்து கொண்டனர் அதில் ஒரு பெண்ணை அப்போதில் இருந்தே அவன் விரும்ப ஆரம்பித்துவிட்டான்.அண்ட் அந்த பெண்……….
“ப்ரீத்தி” என்றனர் தோழிகள் அனைவரும் ஒரே குரலில் திகைப்பாக.
“ஆம்” என்னும்விதமாக தலையாட்டியவன்.கொஞ்சம் உட்காருங்க அவன் பேசிட்டு வருவான்.என்ன மாதிரி அவனும் நல்லவன்தான் நீங்க நம்பலாம்.

அபியோ நக்கலான குரலில் !நல்லவன் சரி அது என்ன தொடுப்பு உங்கள மாதிரி” என்று கேட்டாலும் அமைதியாக அமர்ந்துவிட்டாள்.

கிருஷ் தனது காதலை இன்றே சொல்லிவிடலாம் என்று எண்ணி அழைத்து வந்துவிட்டானே தவிர எப்படி பேச்சை ஆரம்பிப்பது என்று திணறி போனான்.ப்ரீத்தியும் அவனை தடுமாற்றத்தை பார்த்து கொண்டே அமர்ந்திருந்தாள்.

“அ… …அது…… வந்து…. .வந்துங்க…… ஹம்….. முதல்ல ஸ்வீட் சாப்பிட்டுக்கிட்டே பேசலாமா” என்றான்.அவனின் தவிப்பை புரிந்து கொண்ட ப்ரீத்தி மர்மமான சிரிப்புடன் அவனையே பார்த்தவள் “சரி” என்னும் விதமாக தலையாட்டினாள்.

“ஹப்பாடா கேப் கிடைச்சுடுச்சு” என்று சந்தோஷப்பட்டவன் குலாப் ஜாமுன் ஆர்டர் பண்ணிவிட்டு அவளை எப்படி அணுகுவது என்ற யோசனையில் இருக்கும்போதே, ஆர்டர் செய்த குலாப் ஜாமுன் வந்தது ப்ரீத்தி சாப்பிட ஆரம்பிக்க மீண்டும் பேச முயச்சித்தான்.அவன் பேச ஆரம்பிக்கவும் ப்ரீத்தி அவனை விழி உயர்த்தி பார்க்க அந்த பார்வையில் தடுமாறியவன் வார்த்தை வெளி வராமல் இருக்கவும் தொண்டையை செருமி “அதுங்க ஜமுனோட ஐஸ் கிரீம் கலந்து சாப்பிடுங்க அது செம்ம டேஸ்டா இருக்கும் எங்க ஹோட்டல் ஸ்பெஷலே இதுதான்” என்று சமாளித்து பேசி வைத்தான்.

கிருஷ்ணா, “ஆறு வருட காதல் தூரத்தில் இருந்தே பார்த்து ரசித்தவளை அருகில் பார்த்து பேசலாம் என்றால் குரலே வெளி வரமாட்டிக்கிதே”என்று மனதுக்குள் புலம்பி கொண்டவன் செய்வதறியாது அமர்ந்திருக்க, அதற்குள் ஜாமுன் சாப்பிட்டு முடித்திருந்த ப்ரீத்தி “என்ன பேசணும் சீக்கிரம் சொல்லுங்க நான் போகணும்” என்றாள்.

கிருஷோ தன் இயலாமையை நொந்து கொண்டவனாக “சரி நீங்க கிளம்புங்க,நாம இன்னொரு நாள் பேசலாம்”என்றான்.அவளோ, “இதை சாப்பிடத்தான் கூட்டி வந்தீங்களா” என்றாள் அடக்கப்பட்ட சிரிப்புடன். அவனும் பெரு மூச்சுடன் “ஆமாம்” என்று சொல்லி பார்வையை வேறு பக்கம் வைத்து கொண்டான்.
ப்ரீத்தி, “ஓகே பாய் நான் கிளம்பறேன்” என்று சொல்லி சென்றாள், அவள் தன்னை கடந்து செல்வதை உணர்ந்த கிருஷ் தலையில் கை வைத்து அமர்ந்துவிட்டான்.

பிரபாவின் அறை வரை சென்ற ப்ரீத்தி திரும்பி ஓடி வந்து அவன் கன்னத்தில் மென்மையாக இதழ் ஒற்றி எடுத்து “ஐ லவ் யூ டா பயந்தாங்கொள்ளி” என்று சொல்லி,அவன் அதிர்ந்து அமர்ந்திருப்பதை கண்டுகொள்ளாமல் “நீ சொல்ற வேகத்தை பார்த்து நான் வியக்கேன், லூசு பயலே இப்படியே திணறிக்கிட்டு இருந்தா, எப்ப ப்ரொபோஸ் பண்ணுவ, நானும் நீ சொல்லுவ சொல்லுவனு வெயிட் பண்ணி பார்த்தா சொல்ற மாதிரியே தெரியல இப்படியே போனா நமக்கு அறுபதாம் கல்யாணம்தான் நடக்குமம் அதான் நானே சொல்லிட்டேன்”என்றுவிட்டு ஓடிவிட்டாள்.
ப்ரீத்தி அங்கிருந்து சென்ற பின் தன் நிலை உணர்ந்த கிருஷ் “இவ இப்ப என்ன சொன்னா, நான் சரியாதான் கேட்டேனா இல்ல,என் காதுல தப்பா விழுந்துடுச்சா” என்று யோசித்தவன் கைகளால் காதை நன்றாக குடைந்து கொண்டே ப்ரீத்தியின் பின்னால் ஓடினான்.

ப்ரீத்தி சென்று வெகுநேரம் ஆகவும் அவளை காணாமல் தவித்த அபி மீண்டும் பிரபாவிடம் புலம்ப ஆரம்பித்தாள், “எங்க குரூப்லயே மெச்சுர் இல்லாம, சின்ன புள்ளைங்க மாதிரி இருக்கறது மதுவும், ப்ரீத்தியும்தான் அதனாலதான் இவங்கள நாங்க தனியாகூட விடமாட்டோம்.அவ கிட்ட போய் லவ் ஜவ்வுனு சொன்னாளே அழ ஆரம்பிச்சுடுவா.உங்க பிரண்டு என்னனா அவளையே லவ் பன்றாருனு சொல்லறீங்க, எப்படி அவளை சமாளிக்க போறேன்னு தெரியல” என்ற நேரம் சரியாக உள்ளே வந்தாள் ப்ரீத்தி.

ப்ரீத்தி உள்ளே வருவதை கண்டு நிம்மதி பெரு மூச்சு விட்ட பிரபா “ஹப்பாடா வந்துட்டியா மா,என்றுவிட்டு அபியை பார்த்து மகராசி வாய தொறந்தா மூடவே மாட்டிக்கிது”என்று நினைத்து கொண்டிருக்க, அப்போது வேகமாக அறை கதவை திறந்து கொண்டு உள்ளே ஓடி வந்தான் கிருஷ்.

“இவன் எதுக்கு இப்புடி ஓடிவரான்” என்று அங்கிருந்த அனைவரும் பார்த்திருக்க, அவனோ மற்ற யாரையும் கண்டுகொள்ளாமல் நேராக ப்ரீத்தியிடம் சென்று “ஏங்க நீங்க இப்ப என்ன சொன்னீங்க ஐ லவ் யூவா சொன்னீங்க, இல்ல என் காதுலதான் தப்பா விழுந்துடுச்சா” என்று கேட்க, இப்போது தோழிகள் அனைவரும் ப்ரீத்தியை அதிர்ச்சியாக பார்த்தனர்.அவர்களை பார்த்து திரு திருவென விழித்த ப்ரீத்தி “அ….. அது…..வந்துடி இவரு அங்கங்க தூரத்துல நின்னே பார்ப்பாரு அப்போவே எனக்கு பிடிச்சிருந்துச்சு அவரா வந்து பேசுவாருனு பார்த்தேன் பேசவே இல்லை, அதான் நானே சொல்லிட்டேன்”என்று அசடுவழிய சொல்ல தோழிகள் நால்வரும் திகைத்து போயினர்.

பிரபாவோ “இவங்கதான் சின்ன புள்ளையா” என்பது போல் அபியை பார்க்க அவளோ “அடி பாவி உன்னை போய் நல்லவன்னு சொன்னேன் பாரு என்ன பழைய செருப்பாலையே அடிச்சுக்கணும்” என்றாள் கடுப்பாக.அதை கேட்ட பிரபா “சாரி ஸ்டாக் இல்ல” என்றான் அடக்கப்பட்ட சிரிப்புடன், அதில் இன்னும் கடுப்பான அபி “எது…” என்று கேட்க, அவனோ கப்பென்று வாயை மூடி கொண்டு ஒன்னும் இல்லை என்னும் விதமாக தலையை ஆட்டிவிட்டான்.
சூர்யா,”இனிமே எவளையும் நம்ப கூடாதுடி” என்று சொல்ல அவளை ஏற இறங்க பார்த்தவள் “உன்னையும் நம்ப மாட்டேன் போடா” என்றாள் அதை கேட்ட சூர்யா பேந்த பேந்த விழிக்க ஆரம்பித்தாள்.அவளை சந்தேகமாக பார்த்தவள் “அடியே உன் பார்வையே சரி இல்லையே, எதையாவது என்கிட்ட மறைக்கிறியா உண்மைய சொல்லு” என்றாள்.
சூர்யாவோ முதலில் விழித்தவள் பின் “ச்ச லூசாடி நீ அதெல்லாம் ஒன்னும் இல்லை காலேஜ்க்கு லேட் ஆகுது வாங்க கிளம்பலாம்”என்று முன்னால் சென்றாள்.மற்றவர்களும் அவளை தொடர்ந்து வெளியே சென்றனர்.மது கிளம்பவும் பிரபாவும் பின்னாடியே சென்றுவிட கிருஷ் மட்டும் தன் காதல் கை கூடிய மகிழ்ச்சியில் அங்கிருந்த சேரில் அமர்ந்து கனவு காண ஆரம்பித்தான்.

ப்ரீத்தி திரும்பி வந்தவள் அவனிடம் “ஹலோ ஓகே சொல்லிட்டேன்னு அப்படியே கண்டுக்காம இருக்க கூடாது, நாம ரெண்டு பேரும் நல்லா ஊர் சுத்தனும், நிறைய லவ் பண்ணனும், முதல்ல பழகணும் ஓகேவா” என்க, அவனும் கண்ணில் மின்னலுடன் “ஹோ…….. பழகலாமே” என்றவன் “வா போலாம்” என்றான்.அவளோ “அட ஆர்வ கோளாறே”என்று தலையில் அடித்து கொண்டவள்,”இப்போ காலேஜ் போறேன், லீவு நாளுல பிளான் பண்ணு” என்றுவிட்டு ஓடிவிட்டாள்.

ஒரு வழியாக தோழிகள் நால்வரும் கல்லூரிக்கு வந்து சேர்ந்தனர். அப்போது பார்த்து சரியாக எதிரில் அர்ஜுன் வர அவனை பார்த்த பூஜா முகம் நிறைந்த சிரிப்புடன் “அஜூ பேபி” என்க. சூர்யாவோ அவளது சுடி ஷாலை பிடித்து இழுத்து “முதல்ல கிளாஸ்கு போ, படிப்புதான் பர்ஸ்ட்” என்றுவிட்டு அர்ஜுனின் கடுப்பான முகத்தை ஓர கண்ணால் பார்த்து சிரித்து கொண்டே சென்றுவிட்டாள்.

மாலை கல்லூரி முடிந்த பின் அனைவரும் கிளம்பும் சமயம் மதுவிற்கு அவர்களது வீட்டில் இருந்து அழைப்பு வந்தது.என்ன என்று கேட்டவளிடம் மாப்பிள்ளையோட பாட்டி அவளை பார்க்க வேண்டும் என்று சொன்னதாகவும் இன்னும் சற்று நேரத்தில் பிரபா அவளை அழைத்து செல்ல வருவதாகவும் அங்கேயே வெயிட்பண்ணுமாறும் கூற தோழிகள் அனைவரும் அவர்களது பேவரட்டான இடத்தில் அமர்ந்து பிரபாவிற்காக காத்திருக்க ஆரம்பித்தனர்.

அப்போது அவர்கள் அமர்ந்திருந்த இடத்தை நோக்கி அபியின் சீனியர்களான தருண், ஆகாஷ், சந்தோஷ் மூவரும் வந்து கொண்டிருந்தனர்.அதில் சந்தோஷின் கண்களில் அபியை பார்த்து ரசனை வழிந்தது.

அதே நேரம் அர்ஜுனும் திருனேஷுடன் பூஜாவை பார்க்க அங்கு வந்தான்.ஆனால் அங்கு நின்றிருந்த மூவரையும் கண்டு “இவர்களுடன் அவர்களுக்கு என்ன வேலை” என்ற யோசனையுடன் தூரத்தில் இருந்தே அவர்களை பார்க்க ஆரம்பித்தனர்.

இங்கு, ஆபிசில் ஆதி தலையில் கை வைத்து அமர்ந்திருந்தான்.எந்த வேலை செய்தாலும் அபியின் முகமே அவனுள் மின்னி மறைய செய்வதறியாது வெகுநேரமாக அமர்ந்திருந்தவன் பின் ஒரு முடிவிற்கு வந்தவனாக “இன்னைக்கு அவளை பார்த்தே ஆகணும், இல்லைனா கண்டிப்பா முடியாது.ராட்சசி என்னை படுத்தி எடுக்கறா” என்று செல்லமாக வைத்தவன்.”வரேண்டி என் சண்டி ராணி, வந்து உன் கண்ணுலபட்டுட்டு வரேன், அப்போதானே என்னையே நினைச்சுட்டு இருப்ப” என்று நினைத்தவன் தன்னவளை பார்க்கும் ஆர்வத்துடன் கல்லூரிக்கு கிளம்பினான்.

பிரபா மதுவுடன் தனியாக நேரம் செலவழிக்க விரும்பியவன் அவன் பாட்டியை தாஜா செய்து மதுவின் வீட்டில் பேச வைத்து இதோ அவளை சந்திக்க கிளம்பியவனுடன் கிரிஷும் தொத்தி கொண்டு வந்துவிட்டான்.
ஒரே நேரத்தில் கிரவுண்டில் ஐந்து நாயகர்களும் தன் இணையை பார்க்க ஆசையாக வர, ஆனால் அவர்களோ இது எதையும் உணராது சீனியர்களுடன் பேசி கொண்டிருந்தனர்.

சந்தோஷ் ரசனையான பார்வையுடன் அபியின் அருகில் அமர்ந்து பேச ஆரம்பித்தான். ஆகாஷும் அவன் கூடவே வந்தவன் சூர்யா அருகில் அமர்ந்து அவளை சைட் அடிக்க ஆரம்பிக்க, அவர்களுடன் இருக்கும் தருனை பார்த்து ஜொள்ளு விட்ட பூஜா, அவனிடம் சென்று “ஹாய் சீனியர்” என்று பேச்சை ஆரம்பித்தாள்.

மது சூர்யாவிடம் வந்தவள் அவள் தோளை இடித்து “அடியே சீனியர இன்னைக்கு இண்ட்ரோடியூஸ் பண்ணி வைக்கிறேன்னு சொன்னல்ல பண்ணி வை டி”என்று சொல்ல, சூர்யாவும் ஆகாஷ், சந்தோஷ் இருவருக்கும் மதுவை அறிமுகபடுத்தி வைத்தாள்.பின் மது அவர்களுடன் தோழமையாக பேச துவங்கினாள்.

மது சந்தோஷிடம் இருந்த ஸ்டெதஸ்க்கோப்பை எடுத்து “சீனியர் இதை எப்படி யூஸ் பண்றது” என்று கேட்க அவள் அருகில் வந்த தருண் “அதை நான் சொல்றேன்” என்றவன் ஸ்டெதஸ்க்கோப்பை எடுத்து தன் மார்பில் வைத்து அவன் இதய துடிப்பின் ஓசையை கேட்க வைக்க, அவளோ குழந்தையின் குதூகலத்துடன் கேட்டு சிரித்தாள்.பின் பூஜா “நானும் நானும்” என்று ஓடி வந்து ஸ்டெத்தை காதில் வைத்தாள்.

இதை கவனித்த 5 ஆண்களின் காதுகளிலும் புகை வர ஆரம்பித்தது. பூஜா அந்த சீனியரின் ஸ்டெதஸ்கோப்பை எடுப்பதை பார்த்த அர்ஜுன் கோபமாக “இவளை என்னத்தான் பண்றதோ தெரில, எவனையாவது பார்த்தா உடனே சைட் அடிக்க ஆரம்பிச்சிடறது,சுத்தி என்ன நடக்குதுன்னு கூட கவனிக்கறது இல்லை, இதை சொன்னா பெண் உரிமை அது இதுனு சம்பந்தமே இல்லாம சண்டை போட வேண்டியது” என்று திருனேஷுடம் புலம்ப, அவனோ எகத்தாளமான குரலில் “அதுக்குதான் லவ்வர எப்படி டீல் பண்ணனுமோ அப்படி டீல் பண்ணனும், அங்க பாரு என் ஆளை சமத்தா அபிக்கூட பேசிட்டு இருக்கா”என்றவனின் கண்கள் சூர்யாவில் நிலைத்தது.

நண்பன் சொல்வதை கேட்டு அவனை நக்கலாக பார்த்த அர்ஜுன் “எப்படி நீ லிப்ட்ல டீல் பண்ணுனியே அது மாதிரியா” என்று கேட்க, அவனை அதிர்ச்சியுடன் பார்த்த திருனேஷ் “உனக்கு தெரியுமா”என்க, அவனோ “தெரியும் தெரியும் அதுவும் தெரியும் அன்னைக்கு அந்த பார்க்கிங் ஏரியால ரெண்டு பேரும் அப்படியே பாத்துட்டு நின்னீங்களே அதுவும் தெரியும், உனக்கு இன்னொரு விஷயம் சொல்லவா அன்னைக்கு ஹார்ன் அடிச்சு உங்களை கலச்சுவிட்டதே,நான் தான்டா”என்று கண்ணடித்து கூறியவன், “நாம பேசிக்கலனாலும் ஒருத்தர ஒருத்தர் கவனிச்சுட்டுதானே இருந்தோம்” என்று சொல்ல அவனை அசடு வழிய பார்த்த திரு “சரி விடுடா விடுடா,நீ அபி முன்னாடியும் என் ஆளு முன்னாடியும் பண்ணாததா” என்று கேட்க, அர்ஜுன் ஒரு நிமிடம் என்ன சொல்வது என்று விழித்தவன் பின் வலிசலான சிரிப்புடன் “நாம ஒருத்தர ஒருத்தர் வாருனது போதும், அங்க என்ன நடக்குதுனு பார்க்கலாமா” என்று கேட்க, அவனும் “சரி” என்றான்.

அப்போது அங்கு ஓரமாக நின்றிருந்த பிரபாவையும் கிருஷ்ணாவையும் பார்த்த திரு “இவங்க ரெண்டு பேரும் யாரு”என்றான் யோசனையாக.
திரு பார்வை சென்ற இடத்திற்கே, தன் பார்வையையும் திருப்பிய அர்ஜுன் உடனே அவர்கள் யார் என்று புரிந்து கொண்டான்.

பூஜாதான் அனைத்தையும் அவனிடம் ஒப்பித்திருந்தாளே.”அது மதுவிற்கு பார்த்த மாப்பிள்ளை கூட இருப்பவர் ப்ரீத்தியின் ஆளாம்”என்று சொல்ல திருவோ “எது ப்ரீத்தி லவ் பண்ணுதா நான் நம்ப மாட்டேன் அது சின்ன புள்ளடா”என்க, அவனை நக்கலாக பார்த்த அஜூ “ஹோ மேடம் சின்ன புள்ளன்னா அவக்கூட படிக்கறவங்களும் சின்ன புள்ளைதான் அதனால சார் லவ் ட்ரோப் பண்ணிடறீங்களா”என்று கேட்க, அவனை முறைத்தவன் ”டேய்……. “என்று பல்லை கடிக்க, அவனை பார்த்து சிரித்த அஜூ காலையில் ஹோட்டலில் நடந்ததாக பூஜா சொன்னதை அப்படியே ஒன்றுவிடாமல் சொல்ல வாயில் கை வைத்து அதிர்ச்சியானவன் “இந்த திருஷ்டி பொம்மையாடா ப்ரொபோஸ் பண்ணுனது நம்ப முடியலையேடா” என்க,
அர்ஜுனோ ”ரொம்ப முக்கியம் அங்க பாரு அந்த உயர்ந்த மனிதன் காதுலையும் புகை வருது”என்றவன் “நம்மை போல் ஒரு அப்பாவி”என்றான்.

பிரபாவோ மதுவின் செயலில் கடுப்பாகி அவளை முறைத்து கொண்டிருந்தான், அதை பார்த்த கிருஷ்ணா வேண்டுமென்றே வெறுப்பேற்ற நினைத்து “அங்க பார்ரா என் ஆள எவ்வளவு அமைதியா உட்கார்ந்து இருக்கா” என்று சொல்லி வாய் மூடும் முன் “நானும் கேக்கறேன்” என்று குதித்த ப்ரீத்தி அபியின் ஸ்டெதஸ்கோப்பை வாங்கப்போக, அவளோ ப்ரீத்தியின் மீது கோபத்தில் இருந்ததால் “ஒழுங்கா ஓடி போய்டு ஏற்கனவே உன் மேல் கொல காண்டுல இருக்கேன்,பக்கத்துல வந்த கடிச்சு வச்சுடுவேன் ஸ்டெத் எல்லாம் தரமுடியாது போடி” என்றுவிட்டாள். உடனே ப்ரீத்தி முகம் வாடி நிற்க அவளை பார்த்து பாவப்பட்ட ஆகாஷ் சூர்யாவின் தோளில் கிடந்த ஸ்டெதஸ்கோப்பை அவள் அனுமதி இல்லாமல் எடுத்து ப்ரீத்தியிடம் கொடுத்து தன்னில் வைத்து செக்பண்ணி பார்க்க சொல்ல, அதில் கிருஷ் கடுப்பானான் என்றால் பிரபா கிண்டலாக சிரிக்க ஆரம்பித்தான்.

ஆகாஷின் உரிமையான செயலில் சூர்யா அதிர்ந்து போக, திருவோ கோபமாக கைகளை முறுக்கினான். அதை பார்த்து சிரித்த அர்ஜுன் “எகத்தாளமாவா பேசற அனுபவி ராசா அனுபவி”என்றுவிட்டு திரும்பியவன் ஆச்சர்ய குரலில் “அங்க பாருடா புது என்ட்ரிய” என்றான்.

“என் ஆளு மேல எப்படி அவன் கை வைக்கலாம்” என்று பல்லைக் கடித்துக் கொண்டு இருந்த திரு அங்கு வந்த ஆதித்யாவை கண்டு ஆச்சரியம் ஆனான்.”ஹே இவரு ஆதித்யாதானே லாஸ்ட் டைம் கூட சிறந்த தொழிலதிபருக்கான அவார்ட் வாங்கினாரே அதனாலதான் அப்பா இவரை காலேஜ் சீப் கெஸ்ட்டா வர வச்சாரு இப்போ இவரு எதுக்கு வந்துருக்காரு” என்று பார்க்க ஆதியின் பார்வையும் தோழிகள் இருக்கும் பக்கமே இருந்தது.
அவனையே கூர்ந்து பார்த்த திரு ஆதியின் கண்ணில் அப்பட்டமாக மின்னிய பொறாமையை கண்டு கொண்டவன் அது எதனால் என்று புரிந்து கொண்டு “ஹே…. “என்று குதித்தான்.

திரு “டேய் அஜூ அந்த குரூப்ல இன்னும் சிங்கிளா இருக்கிறது அபி மட்டும் தான்டா, அவளுக்கும் ஆளு வந்துருச்சு போல, அங்க பாரு ஆதி பார்வை அவ மேலதான் இருக்கு” என்று சொல்லி சிரிக்க அர்ஜுனும் அப்போதுதான் கவனித்தவன் “ஆமாடா”என்றான்.

இங்கு அபியை பார்க்க கல்லூரிக்கு வந்த ஆதி எப்படி உள்ளே போவது, எங்கு அவளை தேடுவது, காலேஜ் வேறு முடிந்துவிட்டதே வீட்டிற்கு கிளம்பியிருப்பாளோ” என்று பல கேள்விகள் தனக்குள் கேட்டு கொண்டவன்பின் ஒரு முடிவெடுத்தவனாக “சரி வந்தாச்சு அப்படியே கிரவுண்ட் பக்கம் போய் பாத்துட்டு வரலாம்”என்று சென்றவன் அங்கு நின்றிருந்த கிருஷ்ணாவை கண்டு அவனுடன் பேச சென்றான்.

கிருஷ்ணாவின் தந்தையும் ஐடி ஃபீல்டில் இருப்பதால் இருவருக்கும் தொழில்முறை நட்பு இருந்தது. அதனாலேயே அவனுடன் பேச வந்தான்.அவர்களின் அருகில் வரும்போதுதான் மதுவை பற்றியும் ப்ரீத்தியை பற்றியும் பிரபாவும், கிருஷ்ணாவும் பேசிக்கொண்டிருந்தனர்.அவர்கள் பின் நின்று தோழிகளின் செயலை பார்த்தவன் சிரித்துவிட்டு அபியை பார்க்க அவளோ சந்தோஷிடம் சிரித்து பேசி கொண்டிருந்தாள் அதை பார்த்தவன் “அடி பாவி மறக்க மாட்டன்னு நினச்சா மறந்துருப்பா போலயே.டேய் ஆதி இனிமே உனக்கு டைம் இல்ல, ஹெவி காம்பிடிசன் இருக்கும் போல, எவ்ளோ சீக்கிரம் முடியுமோ அவ்ளோ சீக்கிரம் உன் ஆளுக்கிட்ட ப்ரொபோஸ் பண்ணிடு” என்று முடிவெடுத்து கொண்டவன். கிருஷ்ணாவிடம் அவனைபற்றியும் அவனது தந்தையின் நலம் பற்றியும் விசாரித்துவிட்டு பின் மர்ம சிரிப்புடன் “சீக்கிரமே உங்களோட குரூப்ல நானும் சேர்ந்து விடுவேன்” என்று சொல்லி சென்றான்.

கிரிஷிடன் பேசிவிட்டு செல்லும்போது மீண்டும் ஒருமுறை ஆதி அபியை திரும்பி பார்க்க அவளோ சந்தோஷுடன் ஆர்வமாக பேசிக் கொண்டிருந்தாள் அதை பார்த்து மேலும் பொறாமைப்பட்டவன் வேகமாக காரை அறைந்து சாத்திவிட்டு “அடியே சண்டைக்காரி சீக்கிரமே உன்கிட்ட பேசறேன், என்னுடையவள ஆக்கறேன்” என்று சொல்லிக்கொண்டு சென்றுவிட்டான்.

ஆதியை அங்கு பார்த்தது கிரிஷிக்குமே ஆச்சர்யமாகதான் இருந்தது. அதுவும் இவன் ஆதியின் கேள்விக்கு பதில் சொல்வதற்கு கூட இடம் கொடுக்காமல் பேசிவிட்டு சென்றிருந்தான்.இதனால் தலையை பிடித்துக் கொண்டவன்,”என்னடா இவருபாட்டுக்கு வந்தாரு,பேசினாரு அது மட்டும் இல்லாம நம்ம குரூப்ல வேற சேர வாய்ப்பிருக்குனு சொல்லிட்டு போறாரு”என்க.
பிரபாவோ அவனை பார்த்து சிரித்து “டேய் அந்த குரூப்ல யாரோ ஒரு ஆள இவர் பிக்கப்பண்ண ட்ரை பண்றாரு போலடா அதனாலதான் அவரோட பார்வை அந்த குரூப் மேலயே இருந்தது” என்று சொல்ல, அவனை கேள்வியாக பார்த்த கிருஷ் “இருக்குமோ”என்று கேட்க, பிரபாவும் “இருக்கும் முதல்ல வாடா போலாம்” என்று அவனை இழுத்துக் கொண்டு மதுவிடம் சென்றான்.

மது அவ்வளவு நேரம் தருணிடம் பேசி கொண்டிருந்தவள் பார்வை பிரபா வருவதை உணர்ந்து திரும்ப அவள் கண்களில் தன்னவனுக்கான காதல் வழிந்தது.

பிரபாவோ தூரத்தில் இருக்கும்போதே மதுவின் கண்களில் வழிந்த காதலை உணர்ந்து கொண்டான். இவ்வளவு நேரம் அவள் தருனிடம் பேசி சிரித்து கொண்டிருந்தாலும் கண்ணில் தோழமை உணர்வு மட்டுமே இருந்ததையும், இவனை பார்க்கும் போது மட்டும் காதல் இருந்ததையும் உணர்ந்தவன், அவளது வெள்ளந்தி சிரிப்பிலும் காதலிலும் முழுவதுமாக விழுந்தான்.

தோழிகளிடம் சென்ற பிரபா அவர்களிடம் பேசி, மதுவை அழைத்துக் கொண்டு செல்ல, கிருஷ்ணாவோ ப்ரீத்தியை பார்த்து கண்ணடித்துவிட்டு சென்றான்.
காரில் மூவரும் எதுவும் பேசாமல் இருக்க, அவர்களின் மூச்சு சத்தம் மட்டுமே கேட்டு கொண்டிருந்தது.

கிருஷ்ணா ப்ரீத்தியுடன் கனவில் மிதந்து கொண்டிருந்தான் என்றால், காரை ஓட்டி கொண்டிருந்த பிரபாவோ தன்னவள் தன் மீது கொண்ட காதலை எண்ணி மகிழ்ந்து கொண்டிருந்தான்.

வெகுநேரம் அமைதியாக இருந்து பழக்கம் இல்லாத மது என்ன செய்வது என்று தெரியாமல் தன் போனை நோண்ட ஆரம்பித்தாள். அப்போது யாரும் இல்லாத இடத்தில் ஓரமாக காரை நிறுத்தியவன் கிருஷ்ணாவிடம் திரும்பி “டேய் டயர்ல காத்திருக்கா பாரு”என்க, அவனை முறைத்த கிருஷ்ணா “இதுக்கு நீ வண்டில இருந்து இறங்கி போடானு சொல்லி இருக்கலாம், இல்ல நான் தெரியாமத்தான் கேக்குறேன் காத்து இல்லாத வண்டிலயா இவ்ளோ நேரம் வந்தோம்” என்று கிண்டலாக கேட்டாலும் காரில் இருந்து இறங்கிக்கொண்டான்.
கிருஷ்ணா அந்த பக்கம் சென்றுவிட்டான் என்பதை தெளிவு செய்து கொண்ட பிரபா அருகில் இருந்த மதுவை பார்த்து “கல்யாணத்துக்கு முன்னாடி தப்புதான் இருந்தாலும் என்னோட சந்தோஷத்த எப்படி வெளிப்படுத்தறதுனு தெரில, இப்போ மட்டும்தான் இனி இப்படி பண்ண மாட்டேன் ஓகேவா”என்றவன் அவள் என்ன ஏது என்று உணரும் முன் அவள் இதழ்களை மென்மையாக தீண்டி விலகினான்.

மென்மையான தீண்டலாக இருந்தாலும் எதிர்ப்பாராத பிரபாவின் இந்த செயலில் திகைத்தவள் அப்படியே அமர்ந்துவிட்டாள்.

வெளியில் நின்ற கிருஷ் தன்னவளை எங்கு அழைத்து செல்லலாம் என்று யோசித்தவன் அதன் படி சில பல முடிவெடுத்துவிட்டு காரில் ஏற கார் மீண்டும் பிரபா வீட்டை நோக்கி செல்ல ஆரம்பித்தது.

கிருஷ், “டேய் பிரபா போற வழில நம்ம ஹோட்டல என்னை இறக்கி விடு உங்க வீட்டுக்கு வந்த அந்த பாட்டி பேசறதை கேக்க முடியாது”என்க, பிரபாவும் “சரி”என்று தலையாட்டிவிட்டு காரை ஹோட்டல் பக்கம் செலுத்தினான்.
கிருஷின் பிளான் என்னவாக இருக்கும் அது சொதப்பலாகுமா இல்லை அவன் காதலை வளர்க்குமா என்பதை அடுத்த எபில பார்க்கலாம்.

கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பர்களே.....

 

Sonythiru

Suthisha
24917

அத்தியாயம் -25

கிருஷ் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு அமர்ந்திருக்க, அவனை கண்டுகொள்ளாதவர்களாக மருமகளை பார்க்க போகிறோம் என்ற சந்தோஷமாக அரக்க பரக்க கிளம்பிக்கொண்டு இருந்தனர்.அவன் தாயும், தந்தையும்.“ஏங்க முதல் முதல்ல மருமகள பார்க்க போறோம் நம்ம தோட்டத்து பூவை பறிச்சுட்டு போலாமா”என்று கேட்க, அவரோ “இது என்னம்மா கேள்வி அப்படியே அவங்க பிரண்டுங்களுக்கும் சேர்த்து எடுத்துக்கோ நம்ம மருமகளுக்கு மட்டும் குடுத்தா நல்லா இருக்காது” என்றார்.

“சரிங்க நான் எல்லாருக்கும் சேர்த்துதான் எடுத்திருக்கேன்” என்றவர் “வாங்க கிளம்பலாம்” என்று வெளியே செல்ல, கிருஷோ “குடும்பத்தோட லவ் பண்ற பொண்ணோட அவுட்டிங் போன முதல் ஆள் நானாதான் இருப்பேன்”என்று புலம்பி கொண்டிருந்தவன், அருகில் வந்த அவன் தந்தை “இப்படியே நின்னுட்டு இருக்க போறியாடா, கிளம்புடா லவ் பண்ற பொண்ணுகூட டைம் ஸ்பென்ட்பண்ணக்கூட நாங்கதான் கிளப்பனும் போல, ஸ்கூல்க்கு கிளப்புன மாதிரி” என்று திட்ட அவனோ “எல்லாம் என் தலை எழுத்து”என்று புலம்பிக் கொண்டிருந்தவன் தோளில் தட்டிய அவன் தாய் “எங்களுக்கு வரக்கூடிய மருமகளை நாங்க பாக்க கூடாதா நீ மட்டும் போய் பார்த்துட்டு வறேனு சொல்ற எவ்ளோ நேரம் உனக்காக வெயிட்பண்றது சும்மா புலம்பாம வாடா”என்று சொல்லி இழுத்து சென்றார்.

அவனோ “பாருங்க பாருங்க நல்லா பாருங்க ஆனா இன்னொரு நாள் பாருங்கன்னுதானே சொல்றேன்,ஆனா அதை எங்க கேக்குறீங்க” என்று சொல்லி கொண்டே வந்தவன், அங்கு வண்டியின் மீது ஸ்டைலாக சாய்ந்து நின்றிருந்த பிரபாவை பார்த்து நெஞ்சில் கைவைத்து கொண்டான்.

கிருஷ், “நீ எங்கடா…..” என்க.
பிரபாவோ சீரியஸான முகத்துடன் “அது ஒன்னும் இல்ல மச்சி உனக்கு கோவிலுக்கு போக வழி தெரியலனா நடு தெருல நின்னு கஷ்டப்படக்கூடாது இல்ல, அதான் உனக்கு வழிகாட்ட……”என்றான்.

கிருஷோ அவனை மேலும் கீழும் பார்த்தவன் நக்கலான குரலில் “ஏன்டா இத்தன வருஷம் இங்கேயே பிறந்து வளர்ந்தவனுக்கு கோயிலுக்கு போக வழி தெரியாதுனு நீ வந்திருக்க, அதை நான் நம்பனும் போடா டேய் போடா, உன் ஆள பார்க்க வரேன்னு தெளிவா சொல்லித் தொலைடா பக்கி பக்கி ஏறு ஏறி தொலை என்னோட முதல் அவுட்டிங்கே உங்க புண்ணியத்துல அமோகமா அமைஞ்சிருக்கு” என்றவன் அலுத்து கொண்டே தன் டாடா சுமோவை எடுத்துக் கொண்டு கோவிலை நோக்கி செலுத்தினான்.

இங்கு கோவிலுக்கு போகும் பாதையில் அபி ப்ரீத்தியை திட்டி கொண்டு இருந்தாள்.ஏனென்றால் என்றும் இல்லாத திருநாளாக இன்று அபியை வண்டி எடுக்க விடாமல் தன் வண்டியில் போலாம் என்று ப்ரீத்தி அடம்பிடிக்க வேறு வழி இல்லாமல் அபியும் சம்மதித்துவிட்டாள். அவள் வண்டியை எடுத்து கொண்டு ஐவரும் கிளம்பினர்.ஆனால், கோவிலுக்கு இன்னும் பத்து கிலோமீட்டர் பக்கம் போக வேண்டிய இடத்தில் அவளின் வண்டி பெட்ரோல் இல்லாமல் நின்றுவிட்டதாலேயே இந்த திட்டு.

“அடியே லூசு என்னோட வண்டில போலாம்னு சொன்னா மட்டும் போதாது அந்த வண்டிக்கு பெட்ரோலும் போடணும், உன்னை நம்பி வந்தேன் பாரு என்னை பிஞ்ச செருப்பாலையே அடிச்சுக்கணும், இங்க இருக்க பெட்ரோல் பங்குக்கு போனுனாலும் மூணு கிலோமீட்டர் நடக்கணும் ஏண்டி உயிரை எடுக்குற” என்று திட்டிக் கொண்டிருக்க அப்போது அவர்கள் அருகில் வந்து நின்றது ஒரு சுமோ.

பூஜா தன் கண்ணில் அணிந்திருந்த கண்ணாடியை எடுத்து ஸ்டைலாக தலையில் வைத்தவள், அவள் வண்டியில் சாய்ந்து கொண்டே “இவளே ஒரு அரைவேக்காடு இவளை நம்பி வந்த பாரு”என்று சொல்லிக்கொண்டிருந்தவள் அங்கு வந்து நின்ற சுமோவை பார்த்து “எவன் அவன்.....”என்ற ரேஞ்சில் திரும்ப காரிலிருந்து ஸ்டைலாக இறங்கினான் கிருஷ்.

அவனை பார்த்து ஆச்சர்யப்பட்ட பூஜா “இவன் இங்க என்ன பண்றான்” என்று யோசித்தவளின் பார்வை ப்ரீத்தியில் படிய அவளோ கிருஷையே வைத்த விழி வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள்.கிரிஷும் அவளை பார்த்து கண்ணடித்தவன் உடனே மற்றவர்களை பார்த்து எதாவது பிரச்சனையா” என்றான்.

அவர்களின் சம்பாஷணையை புரிந்து கொண்ட பூஜா“ரைட்டு இதுங்க ரெண்டும் சேர்ந்துதான் ஏதோ பிளான் பண்ணி இருக்குங்க, நடத்துங்கடா நடத்துங்க”என்று நடப்பதை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள்.

தோழிகள் நால்வரும் என்ன செய்யலாம் என்று யோசிக்கும்போதே பின்பக்கம் இருக்கும் கதவை திறந்துகொண்டு இறங்கிய கிருஷின் தாய் ப்ரீத்தியிடம் “என்னம்மா என்ன ஆச்சு” என்று கேட்டார். ப்ரீத்தியும் அப்பாவியான முகத்துடன் “ஒன்னும் இல்ல ஆண்ட்டி கோவிலுக்கு போகலாம்னு கிளம்பினோம் ஆனா வண்டியில பெட்ரோல் போட மறந்துட்டோம் அதான்,எப்படி கோயிலுக்கு போறதுன்னு..........” என்று அப்பாவி போல் இழுத்தாள்.

அவள் பேசியதை கேட்ட பூஜா “இது உலக மகா நடிப்புடா சாமி”என்க அவரோ “வாங்க நம்ம வண்டியில போலாம்” என்றவர் ப்ரீத்திக்கு நேரமே தராமல் தான் அமர்ந்திருந்த சீட்டில் அவளை உட்கார வைத்து தானும் அமர்ந்து கொண்டார். அவளின் ஒரு புறம் கிருஷின் அப்பாவும் மறுபுறம் அவனது அம்மாவும் இருக்க நடுவில் திரு திருவென விழித்தபடி அமர்ந்திருந்தாள் ப்ரீத்தி.

மற்ற தோழிகள் நால்வரும் வேறு வழி இல்லாமல் ப்ரீத்தியை திட்டி கொண்டே பின் பக்கம் இருந்த சீட்டில் அமர்ந்து கொண்டனர். மதுவின் பக்கத்தில் உட்கார முடியவில்லை என்று பிரபாவும், ப்ரீத்தியுடன் அமர முடியவில்லையே என்று கிரிஷும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்.

பின் ஒரு முடிவிற்கு வந்தவனாக பிரபா வேகமாக சென்று மது பக்கத்தில் அமர்ந்திருந்த அபியை பார்த்தான்.அவளோ அவனைக் கண்டு முகத்தை திருப்பிக்கொள்ள, சூர்யாவை பார்த்தான்.அவளும் அவனை கண்டுகொள்ளாமல் இருந்தாள். இதற்கு மேலும் பொறுமையாக இருந்தால் வேலைக்கு ஆகாது என்ற முடிவிற்கு வந்தவன் அபியிடம் “ஹாய் சிஸ் முன்னாடி போயி உட்காருறீங்களா நான் என் ஆளு கூட உட்காரறேன்” என்றான்.

உடனே பூஜா வேகமாக “நோ….” என்று அலறி“ஹலோ ப்ரோ படிப்பு முடியற வரைக்கும் நோ டச்சிங் டச்சிங்” என்றவள் பின் “என் உயிர் எனக்கு முக்கியம்” என்றாள் பிடிவாதமாக.அவளை முறைத்த பிரபா “அந்த சத்தியம் எல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம்தான் முன்னாடி இல்ல அதனால நான் இங்க தான் உட்காருவேன்” என்று அவனும் பிடிவாதமாகவே நின்றிருந்தான்.

அபியோ அவனை கண்டுகொள்ளாமல் யாருக்கு வந்த விருந்தோ என்று அமர்ந்திருந்தாள். அவனைப் பார்த்து பாவப்பட்ட சூர்யாதான் “சரி நீங்களே உங்க ஆள் பக்கத்துல உட்காருங்க ஆனா ஒரு கண்டிஷன் நாங்கதான் வண்டியை ஓட்டுவோம் ஓகேவா” என்று கேட்க,பிரபாவோ சம்மதமாக தலையை ஆட்டினான் என்றால், கிருஷ்ணாவோ “என்ன….”என்று நெஞ்சில் கை வைத்து விட்டான்.

பிறகு அருகில் நின்றிருந்த பிரபாவின் காதருகில் குனிந்தவன் “உனக்கு ஏன்டா இந்த கொலவெறி வருஷ கணக்கா காத்திருந்த லவ் இப்போதான் கைகூடியிருக்குனு நானே இப்போதான் சந்தோஷத்துல இருக்கேன்.அது பொறுக்கலையா, இவங்ககிட்ட போய் காரை குடுக்க சொல்ற, என்னோட உயிர் எனக்கு முக்கியம் என்றான்.பிறகு பிரபா தான் அவனிடம் கெஞ்சி சமாளித்து சாவியை வாங்கி சூர்யாவிடம் கொடுத்தான்.

கார் கீயை வாங்கிய அபியும் சூர்யாவும் “ஹே. ….” என்று கத்தி கொண்டே குதித்து முன்னால் ஓடினர்.

அபி, “போகும் போது நீ, வரும்போது நான் ஓகேவா”என்க, சூர்யாவும் “டீல்” என்று சொல்லி ஏறிக்கொண்டாள்.கிரிஷும் தன் தலைவிதியை நொந்தபடி பூஜாவின் அருகில் அமர்ந்தான்.

கிருஷின் தாய் கொண்டு வந்த பூவை தோழிகளிடம் கொடுத்தார். அனைவரும் பூவை வைத்துக்கொள்ள மதுவிடம் கொடுத்த பூவை பிரபா கையில் வாங்கி கண்களாலேயே “தான் வைக்கட்டுமா”, என்பதுபோல் சைகை செய்ய அவளும் வெட்கப்பட்டு சம்மதமாக தலை அசைத்தாள்.

இதை பார்த்து கடுப்பான பூஜா “ஆமா இவங்க ரெண்டு பேர் மனசுல அம்பிகா,கமல்னு நினைப்பு, ‘பூவெடுத்து வச்சு விடவா பின்னாடினு’ பாட்டு பாடிக்கிட்டு இருக்காங்க என்று முணுமுணுத்துக்கொண்டே, அவர்களை பார்க்காதது போல் கண்ணை மூடி சாய்ந்து கொண்டாள்.

அவள் பக்கத்தில் அமர்ந்திருந்த கிருஷ் ப்ரீத்தியின் தோளை தொட கையை கொண்டு செல்ல அவன் கை தன்னை கடந்து செல்வதை கண்ட பூஜா ஒற்றைக் கண்ணை திறந்து “என்னப்பா தம்பி கை எங்க போகுது, அப்படியே விரலை ஒடைச்சுடுவேன் பார்த்துக்கோ”என்றாள்.

அவள் பேச்சில் அதிர்ந்த கிருஷ் “அண்ணன்மா” என்று பாவமாக சொல்ல, அவளோ “அண்ணன்னா என்ன வெண்ணென்ன என்ன பேசாம உட்காருடா நொண்ண உன்னாலதான் எங்க பிளான் ஊத்திக்கிச்சுன்னு, எனக்கு நல்லாவே தெரியும் அதனாலதான் உன்னோட பிளானும் டோடல் பிளாப்”என்று நக்கலாக சொல்ல, கிருஷோ “நல்ல மரியாதை தெரிஞ்ச கும்பலா இருக்குது இது” என்றுவிட்டு தலையில் கைவைத்து அமர்ந்து கொண்டான்.

அதன் பின் அனைவரும் எந்த பிரச்சனையும் இல்லாமல் கோவிலுக்கு சென்றனர்.செல்லும் போதும் சரி திரும்பி வரும்போதும் சரி கிருஷின் தாய் தந்தை இருவரும் ப்ரீத்தியை பார்த்து கண் கலங்குவதும், அவள் தலையை வருடுவதுமாக இருந்தனர்.

கண்ணாடியில் அவர்களின் செய்கையை பார்த்த அபியின் புருவம் யோசனையில் சுருங்கியது. பின் அதை சூர்யாவிடம் கண்களால் காட்ட.அதை பார்த்து அவளும் ஆச்சர்யப்பட்டுதான் போனாள். பின் இருவரையும் கவனிக்க வேண்டும் என்று அபி, சூர்யா இருவருமே தங்களுக்குள் முடிவெடுத்து கொண்டனர்.

கோவில் பயணம் கிருஷை தவிர அனைவருக்கும் சிறப்பாக முடிந்தது. இப்படியே நாட்கள் சிறப்பாக சென்று கொண்டிருக்க, அடுத்த நிகழ்வாக பூஜாவின் பிறந்த நாள் வந்தது.

அர்ஜுன் பூஜாவின் பிறந்தநாளிற்க்கு சர்ப்ரைஸ் கொடுக்க நினைத்தவன் அவளது தோழிகளை பிடித்து தாஜா செய்து பூஜாவை எப்படியாவது இரவு 12 மணி போல் அழைத்து வரச்சொல்லியிருந்தான். நடுரோட்டில் கடல் காற்று முகத்தில் மோத யாரும் இல்லாத அந்த ஏகாந்த அமைதியை ரசித்தவாறு கேக் வெட்டி செலப்ரேட் செய்ய பிளான் செய்திருந்தான்.

அர்ஜுனின் பிளான் படி பூஜாவை அவர்கள் வீட்டிலிருந்து அழைத்து வர காரை எடுத்துக் கொண்டு நால்வரும் கிளம்பினர்.சூர்யா காரை ஓட்டிக்கொண்டே தோழிகள் புறம் திரும்பியவள் “அபி நாம ரெண்டு பேரும் போயி பூஜாவை தூக்கிட்டு வரலாம் இவங்க ரெண்டு பேரையும் நம்ப முடியாது” என்றாள்.

உடனே வேகமாக துள்ளி குதித்த மது “அதெல்லாம் முடியாது நானும் பெரிய பொண்ணு ஆயிட்டேன், ஓட்டுப் போடுற வயசு வந்துடுச்சு, அதுமட்டுமில்லாம எங்க வீட்ல எனக்கு கல்யாணம் பண்ணி வைக்கப் போறாங்க, சோ நான் பொறுப்பானவள்தான்.இன்னைக்கு அத உங்ககிட்ட நான் புரூப் பண்றேன்” என்றாள்.

அதை கேட்டு சூர்யா அபி இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்.

அபி, “அடியே உன்னோட பொறுப்பு எல்லாம் எங்களுக்கு தெரியும். பேசாம இரு, ஏதோ போனா போகுதுன்னு உங்க அண்ணன் அடிமை ஆதர்ஷ்கிட்ட சொல்லி வீட்டுல யாருக்கும் தெரியாம உன்ன இந்த நைட்டு கூட்டிட்டு வந்து இருக்கோம்,அதுக்கு ஏத்தாப்ல கொஞ்சம் அடக்கி வாசி நாங்க போய் பூஜாவை தூக்கிட்டு வரோம்” என்று சொல்லி கொண்டிருந்தாள் அதை மது மறுக்க அவர்களின் வாக்குவாதத்தினோடே கார் பூஜாவின் வீட்டு வாசலில் நின்றது.

கார் நின்றவுடன் மதுவும் ப்ரீத்தியும் கீழே இறங்கியவர்கள் “நாங்க போய் அவளை தூக்கிட்டு வரோம்.அப்புறம் பாருங்க எங்க பொறுப்பை”என்று ஓடிவிட்டனர்.உள்ளே சென்றவர்கள் 10 நிமிடத்திலேயே போர்வையால் சுற்றிய ஒரு உருவத்தை தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு வந்தனர்.அவர்களை பார்த்த அபி “என்னடி இது, இப்படி தூக்கிட்டு வர்றீங்க” என்று கேட்க, ப்ரீத்தியோ, “கேள்வி கேட்டது போதும்,முதல்ல வந்து ஒரு கைப்பிடிங்கடி செம்ம வெயிட்டா இருக்கா”என்றாள்.

உடனே மற்ற இருவரும் வேகமாக வந்து பிடிக்க ஒருவழியாக, நால்வரும் சேர்ந்து அவளை காரில் தூக்கிப் போட்டுகொண்டு ஈசிஆர் ரோட்டை நோக்கி சென்றனர்.

அர்ஜுன் நடு ரோட்டில் பூக்களாலேயே அலங்காரம் செய்து ஒரு மேடையை உருவாக்கி இருந்தான். அந்த மேடையின் நடுவில் ‘ஹாப்பி பர்த்டே மை லவ்’ என்று பூவிலேயே எழுதி வைக்கப்பட்டு இருந்தது. இந்த அலங்காரத்தை பார்த்த தோழிகள் நால்வரும் ஆச்சரியத்தில் புருவத்தை உயர்த்தினர்.

அவர்களின் ஆச்சரியத்தை பார்த்து சிரித்த அர்ஜுன் “இப்படியே நிக்காம சீக்கிரம் போய் பூஜாவை கூட்டிட்டு வாங்க”என்றான்.அதைக்கேட்டு திகைத்தவர்கள் பின் அவர்களுக்குள்ளேயே “நீ போய் எழுப்பு, நீ போய் எழுப்பு”என்று சண்டை போட்டுக் கொண்டு இருந்தனர்.அதைப் பார்த்து கடுப்பான அர்ஜுன் “அவளை எழுப்ப எதுக்கு இதுங்க சண்ட போடுதுங்க”என்று நினைத்தாலும் வெளியே “சீக்கிரம் யாரவது ஒருத்தர் போய் கூட்டிட்டு வாங்க 12 மணி ஆக போகுது”என்றான்.

அதை கேட்டு திருதிருவென விழித்தவர்கள் வேறு வழியில்லாமல் பூஜா கேக் வெட்டும் போது வெடிக்க வேண்டும் என்று அர்ஜுன் வாங்கி வைத்த அலங்கார வெடியை எடுத்து கொண்டு காரின் அருகில் சென்று திருகினர்.

அதை திருகிய மறு நிமிடம் “ஐயோ அம்மா எங்க வீட்ல பாம் வச்சுட்டாங்க, வீட்டை காணோம்” என்று சுற்றி முற்றி பார்த்து கத்தி கொண்டே காரில் இருந்து துள்ளி குதித்து இறங்கினாள் பூஜா.

காரில் இருந்து இறங்கியளை கண்டு அங்கு நின்றிருந்த ஐவருமே கண்கள் தெரித்துவிடும் அளவிற்கு அதிர்ந்து வாயில் கைவைத்து பார்த்திருந்தனர். ஏனென்றால் நம்ம பூஜா டிரஸ் அப்படி, முட்டி வரை இருக்க கூடிய ஸ்லீவ்லஸ் இரவு உடையை அணிந்திருந்தாள்.

முதலில் தன்னை சமாளித்துக் கொண்ட சூர்யா வேகமாக அர்ஜுன் அருகில் சென்று, அவன் கண்ணை மூடிவிட்டு அபியிடம் பூஜாவை கண் காட்டி “மூடுடி மூடுடி….”என்று சொல்ல, அவளோ “அதான் பார்த்தாச்சுல இனிமே எங்க மூடுறது”என்றாள்.
அர்ஜுன் வேகமாக சூர்யாவின் கையை எடுத்துவிட்டவன் அவளை முறைத்துவிட்டு பூஜாவிடம் திரும்பி கோபமாக “என்னடி டிரஸ் இது”என்று கேட்க அவளோ கிண்டலான குரலில் “ஏன் பார்த்தா தெரியல நைட் டிரஸ்”என்க, பிறந்தநாள் அதுவுமாக தன்னவளை திட்ட விரும்பாதவன் ப்ரீத்தி தோளில் போட்டிருந்த ஸ்டோலை பிடிங்கி பூஜாவின் தோளை சுற்றி போட்டவன் “இப்படியே இரு இனி வீட்டுக்குள்ள கூட இது மாதிரி குட்டி டிரஸ் போட்டு தூங்காத”என்றான்.
பூஜாவோ அதை பிறகு பார்த்து கொள்ளலாம் என்னும் தோரணையில் நின்றாள்.அதன் பின் அனைவரும் பிறந்தநாள் பாடல் பாட பூஜா மனம் நிறைந்த காதலுடன் தன்னவனுடன் பிறந்தநாளை கொண்டாடினாள்.

பூஜா அர்ஜுனுக்கு கேக் ஊட்டும் போது அதை தனது போனில் போட்டோ எடுக்க வந்த ப்ரீத்தியிடம் “முழு பிக்சர் வேண்டாம் ஆப் எடு போதும்”என்று பூஜாவின் உடையை கருத்தில் கொண்டு அவன் சொல்ல, ஏற்கனவே தன்னுடைய ஸ்டோலை அர்ஜுன் பிடிங்கிவிட்டான் என்ற கடுப்பில் இருந்த ப்ரீத்தி“அதெல்லாம் முடியாது நான் புல்லா தான் எடுப்பேன்”என்றாள்.

பூஜாவும் “ஆமா ஆமா எனக்கு ஃபுல் போட்டோ தான் வேணும்” என்றாள். அதைக்கேட்டு கோபமான அர்ஜுன் ப்ரீத்தியின் பேண்ட்டை நக்கலாக பார்த்தான், அவன் பார்வையின் அர்த்தம் புரியாமல் விழித்த ப்ரீத்தி பின் அவன் பார்வை சென்ற இடத்தை கண்டு அதிர்ந்து “நோ….நோ……. நோ…… இது தவறான விஷயம்” என்று சொல்லி ஆப் போட்டோவே எடுத்தாள்.

தோழிகள் அனைவரும் அவரவர் வைத்திருந்த கிப்டை எடுத்து பூஜாவிடம் கொடுக்க அவளும் அதை மகிழ்ச்சியோடு வாங்கிக் கொண்டாள்.அர்ஜுனும் தன்னவளுக்கு என்று தான் வாங்கிய கிப்டை கொடுக்க அதைப் பார்த்து பூஜா ஆனந்த அதிர்ச்சி அடைந்தாள். ஏனென்றால் அது லேட்டஸ்ட் மாடல் ஆப்பிள் ஐபோன்.அதை பார்த்த சந்தோஷத்தில் உடனே அவனை அணைத்து விடுவித்தவள் “தேங்க் யூ சோ மச் பேபி”என்றாள்.சிறு சிரிப்புடன் அவளை பார்த்த அஜூ இடை வரை குனிந்து “யூ ஆர் ஆல்வேஸ் வெல்கம் மேடம்”என்று கண்ணடித்து கூறியவன் தன்னவளையே விழி எடுக்காது ரசனையுடன் பார்த்திருந்தான். அப்போது அங்கு வந்த மது “கிளம்பலாம்டி பாட்டி ரூம்க்கு என்ன பார்க்கணும்னு வந்தாங்கன்னா பிரச்சனை ஆகிடும்” என்று சொல்ல பூஜாவும் சம்மதமாக தலையை அசைத்து கிளம்பினாள்.
அர்ஜுனிடம் கண்களாலேயே விடைபெற்று பூஜா தோழிகளோடு கார் வரை சென்றவள் திரும்பி ஓடிவந்து அவனை இறுக அணைத்து அவன் முரட்டு இதழில் மென்மையாக தன் இதழை பொருத்தி எடுத்தவள் “இந்த மாதிரி அமைதியான இடத்துல மனசுக்கு நெருக்கமான உங்ககூட இருக்கணும்னு நான் எப்பவோ சொன்னதை நியாபகம் வச்சு இப்போ அதை செஞ்சதுக்கு தேங்க்யூ அண்ட் ஐ லவ் யூ”என்றுவிட்டு அவள் தீண்டலில் திகைத்து நிற்பவனை கண்டு கொள்ளாமல் காரில் ஏறி சென்றுவிட்டாள்.

பூஜாவை முதலில் அவர்கள் வீட்டு வாசலில் இறக்கி விட்ட சூர்யா அவளிடம் “ஓகே பாய் மறுபடியும் நாளை மறுநாள் மீட்பண்ணலாம்” என்று சொல்ல மற்றவர்களும் அதை ஆமோதித்தனர்.ஆனால் அவர்களை முறைத்த பூஜா“என்னடி விளையாடுறீங்களா ஒழுங்கா நாளைக்கு வீட்ல நடக்கப்போற பர்த்டே பார்ட்டிக்கு வாங்க”என்று சொல்ல, அபியோ “அம்மா தாயே ஆள விடு உங்க வீட்டு பங்ஷனுக்கு நிறைய விஐபிங்க வருவாங்க, நாங்க வரல நீ அவங்க கூட டைம் ஸ்பென்ட்பண்ணு” என்றாள்.

அவர்களை முறைத்த பூஜா அபியிடம்“நீ சாரி சொல்லனும்னு சொல்லுவியே ஆதித்யா அவரும் வருவாரு, வந்தன்னா சாரி கேட்டுரலாம்”என்று அவள் வீக் பாயிண்ட் தெரிந்து சொல்ல, சற்று நேரம் யோசித்தவள் “சரிடி நான் வரேன் முதல்ல அவருகிட்ட சாரி கேட்கணும், அவரால என் தூக்கமே போச்சு” என்றாள். மற்றவர்களும் “சரி நாங்களும் வரோம்” என்றனர்.

அடுத்தநாள் பூஜாவின் வீடே விழாக்கோலம் பூண்டிருந்தது.தோழிகள் அனைவரும் ஒரே நிறத்தில் உடை அணிந்து வந்திருந்தனர்.பூஜா அந்த உடையில் தேவதையாக கிளம்பியிருந்தாள்.

கீழே அனைவரும் அவள் வரவுக்காக காத்திருக்க அவளோ “பேபி இந்த டிரஸ்ல நான் எப்படி இருக்கேன், ஜிவெல்ஸ் எல்லாம் ஓகேவா”என்று வீடியோ காலில் அர்ஜூனுடன் பேசி கொண்டு இருந்தாள்.

அவளுக்காக காத்திருந்து காத்திருந்து கடுப்பான அவள் பாட்டி தோழிகளிடம் “ஏன்டிமா உங்க சிநேகிதி இன்னைக்கு கேக் வெட்ட வருவாளா இல்ல நாளைக்குதான் பொறந்த நாள்னு நெனச்சுட்டு இருக்காளா”என்று கேட்க, அவர்களோ என்ன பதில் சொல்வது என்று விழித்து கொண்டிருந்தனர்.
ப்ரீத்தி, “அடியே மேல போய் அவ என்ன பண்றான்னு பாத்து கூட்டிட்டு வாங்கடி ஐபாகோ கேக் உருகிட போகுது நானும் எவளோ நேரம்தான் நல்லவ மாதிரியே நடிக்கறது” என்றாள்.

அபி ஆதியை தேடி கொண்டு இருப்பதால் தன்னால் போக முடியாது என்றுவிட்டு மதுவிடம் திரும்ப அவளோ அங்கிருந்த சோபாவில் கால் நீட்டி அமர்ந்து “கால் பயங்கரமா வலிக்கிதுடி” என்க, அவளை முறைத்தவள் இப்போது சூர்யாவை பார்க்க அவளோ “என்ன இப்போ நான் போய் அவளை கூட்டி வரணும் அதானே போறேன்”என்றவள் வேகமாக பூஜா அறையை நோக்கி சென்றாள்.

ஆதி ஆபிசில் ஒரு முக்கியமான டீலை சைன் செய்ய வேண்டி இருந்ததால் பார்ட்டிக்கு லேட்டாக வந்தான்.

பூஜாவின் தந்தையும், ஆதியின் தந்தையும் நெருங்கிய நண்பர்கள் என்பதால் இருவர் வீட்டு விசேஷத்தில் அனைவருமே கலந்து கொள்வர்.

உள்ளே வேகமாக வந்தவனின் கண்ணில் முதலில் பட்டது அபிதான் கோல்டன் நிற லெஹங்காவில் இருந்தவளின் அழகு அவனை சுனாமியாய் சுருட்டியது.அப்படியே நின்றிருந்தவனின் அருகில் வந்த மற்றொரு நபர் அவனிடம் பேச்சு கொடுக்க அவனும் அவருடன் பேசி கொண்டு அங்கிருந்து சென்றான்.

மதுவிடம் அபி பேசி கொண்டிருந்த இடைவெளியில் இவன் வந்ததால் அவள் கவனிக்கவில்லை.

ஆதி ஓரமாக ஒரு இடத்தில் அமர்ந்து மற்றவர்களுடன் பேசினாலும் பார்வை முழுவதும் அபியிடமே இருந்தது.அவள் கண்களில் இருந்த அலைப்புறுதலை கண்டவன் யாரையோ அவள் எதிர் பார்க்கிறாள் என்பதை மட்டும் உணர்ந்து கொண்டான்.ஆனால் இப்படி தேடும் அளவிற்கு யார் அவளுக்கு முக்கியமானவர்கள் என்று யோசித்தவன் பின் ஒரு முடிவிற்கு வந்தவனாக எழுந்து வேண்டுமென்றே அவள் பார்வை படும் இடத்தில் நின்று, அவள் பார்வை தன்னில் நிலைப்பதை உணர்ந்த மறு நிமிடம் அருகில் இருந்த கும்பலில் கலந்து மறைந்து நின்று கொண்டான்.

ஆதியை பார்த்தவுடன் அபியின் கண்களில் அவளையும் அறியாமல் ஒரு மின்னல் தோன்றி மறைந்தது. அவனிடம் அவள் செல்வதற்குள் வேறு எங்கோ சென்றிருந்தான்.
அபி, “இப்பதானே இங்க பார்த்தோம் அதுக்குள்ள எங்க போனாரு”என்று தேட ஆரம்பித்தாள்.இவ்வளவு நேரம் தன்னைதான் அவள் தேடியிருக்கிறாள் என்பதை அறிந்து கொண்டவனின் மனதில் இதம் பரவியது.

அதன் பின் அங்கு மறைந்து நின்று கொண்டு,அபியின் ஒவ்வொரு செயல்களையும் அணு அணுவாக ரசித்துக்கொண்டிருந்தான்.

இங்கு மாடிக்கு வந்த சூர்யாவோ பூஜாவை பார்க்க அவள் அர்ஜுனுடன் பேசிக்கொண்டு இருந்தால் அதைப் பார்த்து கடுப்பானவள், போனை வாங்கி கட் செய்தாள், அவளை பார்க்க அவளோ “ஈஈஈ……” என்று இளித்து வைத்தாள்.” பிறந்த நாள் அதுவுமா திட்டக்கூடாதுங்கறத்துக்காக திட்டல, இல்ல நடக்கறதே வேற பாத்துக்கோ கீழே உனக்காக எல்லாரும் காத்திட்டிருக்காங்க, நீ என்னனா வெட்டியா பேசிட்டு இருக்க வா போலாம்”என்று சொல்ல, பூஜாவும் கீழே சென்றாள்.

அதன்பின் கேக் வெட்டும் நேரத்திலும், உணவு உண்ணும் நேரத்திலும் கூட அபி தோழியின் பிறந்த நாளில் கவனத்தை செலுத்தாமல் ஆதியையே தேடிக்கொண்டிருந்தாள்.அவளை அதற்கு மேலும் சோதிக்க விரும்பாதவன் அவள் கண்முன் அதிரடியாக ஆஜரானான்.

அவனது திடீர் வருகை எதிர்பாராத அபி அதிர்ந்து போய் நின்றாள். அவனைக் கண்டவுடன் அவள் மனதில் பலவித உணர்வுகள் போட்டிபோட ஆரம்பித்தது. எந்தக் காதல் உணர்வை அவனிடம் காட்டக்கூடாது என்று எண்ணியிருந்தாளோ, அது அவளையும் மீறி கண்கள் காட்டிவிட்டது, அதை புரிந்து கொண்டவன் மாய கண்ணனாக புன்னகைக்க,அந்த புன்னகையில் விரும்பியே வீழ்ந்து போனாள் அபி.

அப்பொழுது எதேர்ச்சியாக திரும்பிய சூர்யா அபியிடம் பேச வர, அவளின் கவனம் அங்கு இல்லாததை கண்டு கொண்டவள், “இவ எதுக்கு இப்படி நிக்கறா”என்று யோசித்து பார்வையை சுழல விட்டவளின் கண்ணில்பட்டான் ஆதி.உடனே “ஹேய் அபி அங்க பாரு அவர் நிற்கிறார் போ போய் பேசு”என்க, அவளோ ஆதியையே வைத்த விழி எடுக்காமல் பார்த்து கொண்டிருந்தாள்.

அபி அப்படியே நிற்பதை பார்த்து குழம்பிய சூர்யா “என்ன இப்படி பார்த்துட்டு நிக்கிறா”என்று யோசித்து, அவள் தோளை பிடித்து ஆட்ட, அப்பொழுதுதான் சுயநினைவுக்கு வந்தவள் ஒன்றும் புரியாமல் விழித்து கொண்டு இருக்க, அதை கவனிக்காத சூர்யா “போய் சாரி கேளு” என்றாள்.

அவளும் “ஆமா வாங்க போலாம்” என்று அழைக்க ப்ரீத்தியோ “அதெல்லாம் முடியாது, திட்டுனது நீங்கதானே, நீங்களே போய் மன்னிப்பு கேட்டுட்டு வாங்க. நான் இங்க கேக்குக்கு பாதுகாப்பா நிக்கறேன்”. என்றாள்.

அதைக் கேட்ட மது “ஆமா கும்பலா இருக்கு கேக்க யாராவது எடுத்துக்கிட்டாங்கனா என்ன ஆகறது, ப்ரீத்தி நீ அந்தப் பக்கம் பாத்துக்கோ நான் இந்த பக்கம் பாத்துக்கறேன்” என்க மற்ற மூவரும் அவர்களை முறைத்தனர்.

மது, “உடனே பாசமா பார்க்க ஆரம்பிச்சுருங்களே, ஒரு கேக்க நிம்மதியா சாப்பிடவிடறாளுங்களா” என்று மனதில் புலம்பியவள் மற்றவர்களிடம்“சரி சரி பார்த்தது போதும் வாங்க போலாம்”என்று ப்ரீத்தியின் கையை பிடித்து இழுத்துக்கொண்டு சென்றனர்.

தோழிகள் ஐந்து பேரும் அவன் முன்னே சென்று நிற்க அவனது பார்வையோ அபியை தவிர வேறு எங்கும் நகரவில்லை.அவளின் பார்வையும் அவன் மீதே நிலை குத்தி இருந்தது.

சூர்யா பக்கத்தில் இருந்த மதுவிடம் “நீ கேளு…” என்று கூற அவளோ பக்கத்திலிருந்த பூஜாவை இடித்து “நீ கேளு” என்று கூறினாள்.அவர்களின் செய்கையை பார்த்து உள்ளுக்குள் சிரித்தவன் “என்ன வேணும்” என்று கேட்டான்.

சூர்யா,”அது வந்து சார், அன்னைக்கு தெரியாம உங்க கிட்ட சண்டை போட்டுடோம்.அதன் சாரி கேட்கலாம்னு…..” என்று இழுக்க, அவளை பார்வையாலேயே தடுத்தவன் “அன்னைக்கு நீங்க மட்டுமா திட்டுனீங்க”என்று அபியின் மீது பார்வையை நிறுத்தி கேட்டான்.

சூர்யா அவனின் பார்வையை கவனித்தவள் பேச்சு நம்மகிட்ட இருக்கு, ஆனா பார்வை வேற பக்கம் இருக்கே என்று யோசித்தவள், பின் சொல்றவங்க சொன்னாதான் ஏத்துக்குவாங்க போல இருக்கு முடிவெடுத்து கொண்டு அபியை இடித்து “நீதான் சாரி கேக்கணுமாம் கேளு”என்றவள் மற்ற தோழிகளிடம் திரும்பி அவங்களா நம்ம தொரத்துரத்துக்குள்ள நாமே போய்டலாம்”என்றுவிட்டு கிளம்பினர்.

அபியோ அதன் பின்னும் அதே உறைந்த நிலையில் நின்றாள். அவள் அருகில் நெருங்கி வந்தவன் “உனக்கு ஐஸ்கிரீம் பிடிக்குமா” என்று தன் கையில் வைத்திருந்த ஐஸ்கிரீமை பார்த்து கேட்க,அவளோ சாவி கொடுத்த பொம்மை போல் “பிடிக்கும்” என்று தலை ஆட்டினாள்.

ஆதி, “குட்.. “என்று கூறியவன், ஒரு ஸ்பூன் ஐஸ்கிரீமை அதில் இருந்த செர்ரி பழத்தோடு எடுத்து வாயில் வைத்தபடி அவள் அருகில் வர, அவனது நெருக்கத்திலும் அவன் மேல் இருந்து வந்த பர்ப்யும் வாசனையிலும் கிறங்கிப் போய் நின்றவளின் காதருகே குனிந்தவன் “பேபி டால்.. ஐஸ்கிரீம் சாப்பிடுறியா” என்று கேட்க,அவனது கிசுகிசுப்பான குரலில் தன்னிலை இழந்தவள் என்ன கூறுவது என்று தெரியாமல் விழி விரித்து நின்றாள். அவள் முகத்தையே ஆராய்ச்சி பார்வை பார்த்தவன் “ஐ லவ் யூ மிஸஸ் ஆதித்யா….“என்று கூறியவன் அவள் இதழ்களில் தனது இதழ்களைப் பதித்து விட்டான்.

அவளோ அவனின் இந்த எதிர்பாராத செயலில் உறைந்து போய் நின்றுவிட்டாள்.அவள் இதழ் தேனை சுவைத்தவன் விருப்பமே இல்லாமல் விலகும் நேரம் அவன் வாயில் இருந்த செர்ரி அவள் வாய்க்கு கடத்தப்பட்டிருந்தது.

திகைப்பான அவள் பார்வையை பார்த்துக்கொண்டே “ஐ நோ யூ லவ் மீ.. சோ எந்த ரீசனும் சொல்லாம என்ன லவ் பண்ண ரெடியாயிரு” என்று சிறு புன்னகையோடு கூறி சென்றுவிட, அவளோ என்ன நடந்தது என்று புரியாத நிலையில் அப்படியே திகைப்புடன் நின்றிருந்தாள்.



 
Last edited:

Sonythiru

Suthisha
25680

அத்தியாயம்-26

ஆதியின் செயலில் விழிகள் தெறித்து விடும் அளவிற்கு அபி திகைத்து நின்று கொண்டு இருக்க,அப்போது அங்கு வந்து சேர்ந்தனர் தோழிகள் நால்வரும்.

அபி ப்ரீஸாகி நிற்பதை கண்ட பூஜா அவள் தோளை பிடித்து அசைத்து “என்னடி ஆச்சு, ஏன் இப்படி பேய் அடிச்ச மாதிரி இருக்க, அவரு உன்னை ரொம்ப திட்டிட்டாரா” என்று கேட்க, மற்றவர்களும் அதே கேள்வியை கண்ணில் தாங்கியவாறு அவளையே கவலையுடன் பார்த்திருந்தனர். பூஜாவின் கேள்வி புரியாதவளாக முதலில் விழித்த அபி பின் தோழிகளின் முகத்தில் இருந்த கவலையை கண்டு “இங்கு நடந்ததை எப்படி இவர்களிடம் சொல்வது”என்று தடுமாறியவாரே அவர்களை சமாளிக்கும்விதமாக “ஒன்றுமில்லை” என்றுவிட்டாள்.

ஆனாலும் எதையோ மறைக்கிறாள் என்று அவள் முகமே காட்டிக் கொடுக்க பூஜாவும் சூர்யாவும் யோசனையாக ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டவர்கள் “ஆர் யூ ஷ்யூர்” என்று சந்தேகமாகவே கேட்க,அபியும் மையமாக தலை ஆட்டி வைத்தாள். அப்போது சரியாக பூஜாவின் தந்தை அவளை அழைக்க தோழிகளிடம் “இருங்கடி வரேன்”என்று சொல்லி சென்றாள்.

மது ப்ரீத்தியிடம் “ஹேய் இங்க எல்லாம் ஓல்ட்டிஷ்ஷா இருக்காங்க வாடி அந்த பக்கம் போய் சைட் அடிச்சுட்டு அப்படியே ஐஸ் கிரீம் சாப்பிட்டு வரலாம்”என்று சொல்ல, அபியோ “எது ஐஸ் கிரீமா……” என்று அலறினாள். அவளை ஏற இறங்க பார்த்த ப்ரீத்தி “ஐஸ் கிரீம்னு சொன்ன உடனே கத்தறதை பாரு உனக்கும் எடுத்துட்டு வரேன், அமைதியா இங்கயே உட்கார்ந்து வேடிக்கை பாருங்க கும்பல்ல தொலைஞ்சு போய்டாதீங்க” என்று கெத்தாக சொல்ல. சூர்யா, அபி இருவரும் கடுப்பாகி “அடியே…..”என்று பல்லை கடிக்க, மதுவோ “விடு ஜூட்” என்று சொல்லி ப்ரீத்தியை இழுத்து கொண்டு ஓடிவிட்டாள். அவர்களின் செயலில் சிரித்த அபி “இவளுங்களை சமாளிக்கவே தனியா ஸ்ட்ரென்த் நமக்கு வேணும்”என்றாள்.

அபி சொல்வதை கேட்டு சூர்யா சிரித்தாலும், அவளையே குறுகுறுவென்று பார்த்துக் கொண்டிருந்தாள்.அவளின் பார்வையில் திணறியவள் “என்னடி எதுக்கு இப்படி பாக்குற” என்க.

சூர்யா, “இப்பயாவது உண்மைய சொல்லு, உன் பார்வையே சரி இல்லையே, என்ன நடந்துச்சு மறைக்காம சொல்லு” என்று கேட்க, அபி சிறிது நேரம் சொல்வோமா வேண்டாமா என்று யோசித்தவள் பின் ஒரு முடிவெடுத்தவளாக சற்று முன்பு நடந்த அனைத்தையும் சொல்ல, வாயில் கை வைத்தவள்“அடப்பாவிகளா சைக்கிள் கேப்ல பிளைட்டே விட்டுருக்கீங்களே”

அபி, “நான் ஒன்னும் பண்ணல அவருதான்.. “என்று தடுமாறியவள் “உங்க எல்லாரையும் சமாளிச்சுட்டேன்னு நினைச்சேன் ஆனா நீ எப்படிடி கண்டுபிடிச்ச”.

சூர்யா, “அதுவா அன்னைக்கு மால்ல நான் முழிச்சுட்டு இருந்த மாதிரியே நீ முழிச்ச அதான்……..”என்று கூறியவள், பின்பே உளறியதை அறிந்து நாக்கை கடித்தவாறு அபியை பார்க்க அவளோ இடுப்பில் கை வைத்து உக்கிரமாக முறைத்து கொண்டிருந்தாள். “ஈஈஈ…….” என்று இளித்து வைத்தவள் “வாடி போலாம் அங்க பாரு பூஜா கூப்பிடறா”என்று சொல்லி செல்ல முனைய அவள் கையை பிடித்து தடுத்த அபி தீர்க்கமாக பார்த்து “என்ன நீ முழிச்ச மாதிரி….. உண்மையை சொல்லு” என்று கேட்க,அகப்பட்டு கொண்ட முகபாவத்துடன் நின்றிருந்தவள் அபியின் பார்வையிலேயே தான் சொல்லாமல் விடமாட்டாள் என்பதை புரிந்து கொண்டு மால் சென்ற அன்று திருனேஷ் தன்னிடம் நடந்துகொண்டதை கூறியவள் பின் “அந்த கோபத்தில் வரும்போதுதான் அந்த மைதா மாவை..”என்று இழுத்தவள் அபியின் முறைப்பை கண்டு உன் ஆளை திட்டிட்டேன்” என்றாள் பாவமான முகத்துடன்.

உடனே வாயில் கைவைத்த அபி “அடிப்பாவி இவ்ளோ நாள் இதை மறைச்சுட்டியே ஊமை குசும்பி, நான் உன்னை நம்ப மாட்டேன்னு சொன்னதுக்கு காரணம் இப்போ புரிஞ்சுதா”என்க, உடனே அவள் பேச்சை தடுத்த சூர்யா “என்னடி பேசுற அந்த லூசு பண்ணுனதுக்கு நான் என்ன பண்ண முடியும்.என்ன பத்தி உனக்கு தெரியாதா, அதுக்கு அப்புறம் அவன்கிட்ட இருந்து நான் விலகித்தான் இருக்கேன்.வேற எதுவும் இல்லை” என்று சொல்ல அவளை மேலும் கீழும் கேவலமாக பார்த்த அபி “நம்பமாட்டேன்டி நம்பவே மாட்டேன் நீ என்ன சொன்னாலும் உன்னை நம்ப மாட்டேன்”என்று சொல்ல,இதற்கு மேல் உன் விருப்பம் என்பது போல் தோள்களை அசைத்தவள் “சரி இப்பவாவது வா பூஜாட்ட போகலாம்” என்று சொல்லி செல்ல அப்போது ப்ரீத்தியும் மதுவும் ஐஸ் கிரீமுடன் இணைந்து கொண்டனர்.
அதன் பிறகு அனைவரும் இணைந்து பூஜாவின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடிவிட்டு, வழக்கம் போல் கல்லூரிக்கும் செல்ல ஆரம்பித்தனர்.
எப்போதும் போல் காதல் கலாட்டா என்று அவர்கள் அனைவருக்கும் கல்லூரி வாழ்க்கை சென்று கொண்டிருந்தாலும் அடுத்து வரவிருக்கும் மதுவின் திருமணத்திற்கான வேலைகளிலும் ஆர்ப்பாட்டமாக செயல்பட்டனர்.

தோழிகள் இங்கு மகிழ்ச்சியாக இருக்க இவர்களின் மகிழ்ச்சியை அழிக்கும் நோக்கத்துடன் ஒருவன் கூண்டு புலியாக நடந்து கொண்டிருந்தான் அது வேறு யாருமல்ல சூர்யாவிடம் காதலை சொல்கிறேன் பேர்வழி என்று அவளிடம் வம்பிழுத்து திருனேஷிடம் அடிவாங்கிய மாதேஷ்தான்.

மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனா இரண்டே நாளில் தன் அல்லக்கைகளுடன் சேர்ந்து தன்னை அடித்த திருனேஷை எப்படி பழிவாங்குவது என்று திட்டமிட்டு கொண்டிருந்தான்.”அவனுக்கு எவ்ளோ தைரியம் இருந்தா என் மேல கை வச்சிருப்பான் அவனை ஏதாவது பண்ணனும் டா, என்ன ரெண்டு மாசம் ஹாஸ்பிடல்ல படுத்த படுக்கையா இருக்க வச்சு வலில எப்படி கத்த வச்சானோ அதைவிட அதிகமா அவன் துடிக்கணும். அதுக்கு முதல்ல அவள தூக்கணும் அன்னைக்கு கூட அவ மேல கை வைப்பியான்னு சொல்லி சொல்லி அடிச்சான்.அவளை எதாவது பண்ணினோம்னா கண்டிப்பா அந்த வலி அவன் வாழ்க்கை முழுக்க இருக்கும்” என்றவன் அவளை கடத்துவதற்கான திட்டத்தை தீட்ட ஆரம்பித்தான்.

இங்கு ஆதி அபியிடம் பேச பலமுறை முயற்சி செய்ய, அவளோ அவனை கண்டு கொள்வதாக இல்லை.போன் போட்டாலும் அட்டென் பண்ணாமல் கட் பண்ணிவிடவும் கோபம் கொண்டவன் காரை எடுத்துக்கொண்டு அவர்கள் கல்லூரிக்கே வந்துவிட்டான். அங்கிருந்தவாறே மீண்டும் அபியை போனில் அழைத்தான்.அபியோ அப்போதுதான் பாட வேலை முடிந்து ஆசிரியர் சென்றிருந்ததால் தூக்ககலக்கத்தில் இருந்தவள் போன் வரவும் யார் என்று கூட பார்க்காமல் ஆன் செய்து காதில் வைத்தாள்.

“ஹலோ ……” என்று சிறு கொட்டாவியுடனேயே சொல்ல, ஆதியோ மனதில்“உன்னால நான் நிம்மதி இல்லாம சுத்திட்டு இருக்கேன் நீ கிளாஸ்ல உக்காந்துட்டு தூங்கறியா” என்று நினைத்தவன் வெளியில் அழுத்தமான கோபம் நிறைந்த குரலில் “இன்னும் அஞ்சு நிமிஷத்துல நீ காலேஜுக்கு வெளிய வர” என்றுவிட்டு அவள் பதிலுக்கு கூட காத்திராமல் துண்டித்துவிட்டான்.அவன் குரலை கேட்ட மறுநிமிடமே தூக்கம் கண்ணைவிட்டு ஓடிவிட அடுத்தடுத்து அவன் சொன்னதை கேட்டு அபி திகைத்துதான் போனாள்.

ஆதி காதலை சொல்லி இருந்தாலும் இருவருக்கும் இடையில் இருக்கும் உயரத்தை எண்ணி விலகி இருக்க வேண்டும் என்று காலை அட்டென்ட் பண்ணாமல் இருந்தாள் .ஆனால் இப்போது அவன் கல்லூரிக்கே வரவும் என்ன செய்வது என்று தடுமாறியவள்.இதை பேசி தான் சரி செய்ய வேண்டும் என்ற முடிவுக்கு வந்தவளாக சூர்யாவிடம் சொல்லிவிட்டு வெளியே சென்றாள்.

கல்லூரியின் வெளியே வந்தவள் தேட இடம் தராமல் அங்கேயே அருகில் இருந்த மரத்தின் கீழ் தன் காரை நிறுத்திவிட்டு நீல நிற ஷர்ட்டும் கருப்பு நிற ஜீன்ஸ்ஷுடன் கண்ணில் கூலர்ஸ் அணிந்து காரின் பேனட்டில் ஒரு காலை வைத்து கொண்டும் தரையில் ஒரு காலை வைத்து கொண்டும் வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தான்.

அவன் நிற்கும் அழகில் மயங்கிய அபி எப்போதும் போல் தூரத்தில் நின்றே சைட் அடித்துவிட்டு ஒரு பெரு மூச்சுடன் அவன் அருகில் போய் நின்றாள்.அவளை பார்த்தவன் “ஏறு…..”என்றுவிட்டு வேறு எதுவும் பேசாமல் காரில் ஏறி அமர்ந்துவிட்டான்.

ஆதி காரை ஸ்டார்ட் செய்யவும் திகைத்த அபி “என்ன இவர்பாட்டுக்கு வான்றாரு, ஏறுன்றாரு இங்கயே பேசுவாருனு பார்த்தா எங்கயோ கூப்பிடறாரு இப்போ இவர்கூட போலாமா வேண்டாமா”என்றவள் யோசித்து கொண்டு இருக்க அதற்குள் ஆதி காரை ஸ்டார்ட் செய்துவிட்டான். ஆனாலும் அவள் ஏறாததை கண்டு கடுப்பானவன் காரை உறும விட அந்த சத்தத்திலும் அவன் முகத்தில் இருந்த கடுமையிலும் பயந்தவள் வேகமாக முன் கதவை திறந்து அமர்ந்து கொண்டாள்.தன் அருகில் அமர்ந்தவளை திரும்பி ஒரு பார்வை பார்த்தவன் பீச்சை நோக்கி வண்டியைச் செலுத்தினான்.

கடற்கரை ஓரமாக வண்டியை நிறுத்தியவன் காரிலேயே அமர்ந்து கடலை வெறித்து பார்த்துகொண்டு இருந்தான். சற்று நேரம் அமைதியாக இருந்த அபி அவன் புறம் திரும்பி “இ …….இங்க பாருங்க ஆ………”ஆதி என்று சொல்ல வந்தவள் தன்னை சமாளித்து சார் என்று திருத்தி கொண்டு “ம்கூம்…… சார் நம்ம ரெண்டு பேருக்கும் லைப் ஸ்டைல் வேற வேற நமக்குள்ள கண்டிப்பா செட்……”என்று சொல்லவந்தவளின் இதழை சிறை செய்திருந்தான் ஆதி.

வெகுநேரம் நீடித்த இந்த இதழ் அணைப்பில் அபி மூச்சு விட தடுமாறவும் மனமே இல்லாமல் அவளிடம் இருந்து விலகியவன் கோபமாக “என்ன சரி வராது இல்ல என்ன சரிவராதுனு கேக்குறேன் உனக்கு என்னை புடிக்கும்னு எனக்கு நல்லாவே தெரியும்”என்க,அவளோ எப்படி தெரியும் என்பது போல் கேள்வியாக அவனை பார்த்தாள்.

ஆதி,”பிடிக்காமையா அன்னைக்கு காலேஜ் பங்க்ஷன்ல, அப்புறம் பூஜா பர்த் டே பார்ட்டில இதோ இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கேட்டுக்கிட்ட இப்படி கேப் கிடைக்கும் போது எல்லாம் நின்னு சைட் அடிச்சுட்டு இருந்த” என்று கேட்டான். அவன் இதை எல்லாம் கவனித்திருக்கிறான் என்பதை அறிந்தவளுக்கு வெட்கத்தில் முகம் சிவந்துதான் போனது.ஆனாலும் அவனை சமாளிக்கும் விதமாக சைட் அடிக்கறவங்கள எல்லாம் லவ் பண்ண முடியுமா நான் சும்மா.. …”என்று சொல்லும் போதே “இனஃப்”என்று சீரியவன்.

ஆதி, “என்ன பார்த்தா உனக்கு எப்படி தெரியுது சும்மா ப்ரொபோஸ் பண்ற பொண்ணுங்கள எல்லாம் கிஸ் பண்ற ரோட் சைட் ரோமியோ மாதிரியா இருக்கு, உன்னை என்னோட வாழ்க்கைல ஒரு அங்கமா நினைக்கல உயிரா நினைக்கறேன்.அதே மாதிரி உன்னோட கண்ணுலையும் எனக்கான நேசத்தையும் பார்த்ததுனாலதான்கிஸ் பண்ணுனேன்.இதுக்கு மேல தேவை இல்லாம எதாவது பேசி என்னை கோபபடுத்தாத” என்க, அப்போதும் அபி “இல்ல நீங்க பெரிய பிஸ்னஸ் மேன்....”என்று இழுக்க, அவளை முறைத்தவன் பிஸ்னஸ் பண்றவங்கனா அவங்களுக்கு காதல் வர கூடாதா, நாங்களும் சாதாரண மனுஷங்கதான் ஏன் எனக்கு தனியா தலைல ரெண்டு கொம்பு இருக்கு” என்றவன் மேலும் அவள் கண்கள் காட்டும் பாவனையில் மயங்கியவனாக இந்த கண்ணுல எப்பவும் எனக்கான காதல் பார்வையை மட்டும்தான் நான் பார்க்கணும், தயக்கத்தோட தடுமாறுற இந்த பார்வை எனக்கு பிடிக்கல, எதுக்கு உனக்கு இந்த தயக்கம் பணத்தைவிட குணம்தான் முக்கியம்னு நினைக்கற பேமிலி நாங்க அதனால கண்டதையும் யோசிக்காம எனக்கு ஓகே சொல்லு, உன்னோட தைரியம், எது வந்தாலும் பார்த்துக்கலாம்ங்கற உன்னோட தெளிவு இது எல்லாம்தான் உன்கிட்ட பிடிச்சது இப்படி பயந்துட்டு இருக்கறது இல்லை என்றான்.

ஆதியின் பேச்சில் முகம் தெளிவுற சிரித்த அபியை பார்த்தவன் “ஹப்பாடா…. சிரிச்சுட்டியா, என்னடா இப்படி இருக்காளே, டீன் ஏஜ் பசங்க மாதிரி பின்னாடி சுத்தவிடுருவியோனு நினைச்சேன்” என்றான் மனதில் தோன்றிய மகிழ்ச்சியோடு.

அபியோ கூலாக “நான் இன்னும் ஓகே சொல்லவே இல்லையே, நீங்க ஒரு இன்டெர்வியூ அட்டென்ட் பண்ணனும் அதுல பாஸ் ஆகி செலக்ட் ஆனா மட்டும்தான், நான் ஓகே சொல்லுவேன்”என்று சிரித்தாள்.

ஆதி,“என்னது கம்பெனி எம் டிகே இன்டெர்வியூவா” என்று அலற அபியும் தோழிகளின் வழக்கம் என்றும் அர்ஜுன், திருனேஷ், பிரபா என்று அனைவருடனும் பேசியதை கூற, அதை கேட்டவன் “இந்த லிஸ்ட்ல இன்னொரு ஆள்கிட்ட நீங்க பேசல போலையே அப்போ அவரு மட்டும் என்ன பெரிய ஆளா” என்று கேட்க,அவளோ “அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை அவரை பார்த்த உடனே எங்களுக்கு புரிஞ்சுடுச்சு அவருதான் ப்ரீத்திட்ட மாட்ட போற பலிகடானு சோ அவரை ஒரு ஆளா நாங்க லிஸ்ட்ல சேர்க்கவே இல்ல” என்றாள்.

அவள் சொல்வதை கேட்டு சிரித்தவன் “ஹேய் அவரும் பெரிய பிஸ்னஸ் மேன்தான் அவங்க அப்பா ஐடி பீல்டு, இவரு பிரண்டு கூட சேர்ந்து ஹோட்டல் பிஸ்னஸ்பண்றாரு இப்படி இருக்கவர போய் டம்மி பீஸ் ஆக்கிட்டீங்களே என்றவன், பின் தன் காதலுக்கு சம்மதம் வாங்கிய மகிழ்ச்சியில் நேரம் போவது தெரியாமல் பேசிக்கொண்டு இருந்தான்.

அங்கு காலேஜில் தனக்கு வர போகும் அதிர்ச்சியைப்பற்றி அறியாமல் என்ஜினீயரிங் பில்டிங்கிற்கு தனியாக சென்று கொண்டிருந்தாள் சூர்யா.அவள் பின்னோடு வந்த மாதேஷின் ஆட்களில் ஒருவன் அவள் மேல் கை வைக்க போக அதே நேரம் சரியாக அங்கு வந்து சேர்ந்த திருனேஷ் வாயை மூடி பின் பக்கமாக இழுத்து சென்று அவன் தலையை திருப்பி கழுத்தை உடைத்துவிட்டு வேகமாக அடுத்து நிற்பவனிடம் சென்றான் கீழே விழுந்தவனோ வலி தாங்க முடியாமல் அப்படியே மயங்கி போனான்.

என்ஜினீயரிங் பில்டிங் செல்லும் வழி முழுவதும் பெரிய பெரிய மரங்கள் இருக்க அதன் பின்னால் ஒவ்வொருவனையும் இழுத்து சென்ற திரு, சூர்யா பின்னோடு வருபவர்களை வாயை மூடி இழுத்து சென்று அடி வெளுத்துவிட்டான். பின்னால் ஏதோ சத்தம் கேட்டு திரும்பி பார்த்தவள். அங்கு யாரும் இல்லாமல் போக “ஹய்யயோ இங்க பேய் ஏது இருக்குமோ ஏதோ சத்தம் கேட்டுட்டே இருக்கே”என்று மனதில் அலறியவள் வேகமாக செல்ல அவள் ஷால் அங்கிருந்த மரத்தில் மாட்டி இழுத்தது யாரோ இழுக்கிறார்கள் என்று பயந்தவள் தைரியத்தை வரவழைத்து கொண்டு திரும்ப அங்கு அவள் கண்ட காட்சியில் அதிர்ந்து அப்படியே சிலையாகி போனாள் ஏனென்றால் அங்கு திரு ஒருவனின் முகத்திலேயே ஓங்கி குத்த அவனது உதடு கிழிந்து ரத்தம் வர ஆரம்பித்திருந்தது. அப்போதும் அவனை விடாதவன் ஆக்ரோஷமாக மூக்கிலேயே குத்த ரத்தம் பொல பொலவென்று கொட்ட ஆரம்பித்தது திருவின் முகத்தில் இருந்த கோபத்தை கண்ட சூர்யா பயந்துதான் போனாள்.

எப்படி வந்தோம் என்றே தெரியாத நிலையில் அவள் கால்கள் எப்போதும் அவர்கள் உட்காரும் இடத்திற்கு அழைத்து செல்ல,அங்கு அப்படியே தலையில் கை வைத்து அமர்ந்துவிட்டாள்.மற்ற மூவருக்கும் வகுப்பு நேரம் முடிந்தும் பேராசிரியர் அவர்களை உட்கார வைத்து ரம்பம் போட்டு கொண்டு இருக்க, தனியாக இருந்த சூர்யாவினுள் பல குழப்பங்கள் உருவானது.

குழப்பத்தோடு இருந்தவளின் அருகில் நிழல் ஆடவும் யாரென்று சூர்யா திரும்ப, அங்கு அவளை பார்த்து வசீகரமாக சிரித்து கொண்டிருந்தான் திருனேஷ் .

திரு, “என்ன பொண்டாட்டி தனியா உட்கார்ந்து இருக்க ‘ஹோ….’எல்லாரும் அவங்கவங்க ஆள் கூட போய்ட்டாங்களா, நீ மட்டும் ஏன் தனியா இருக்க வா நாமளும் அப்படியே ஜாலியா பீச் போயிட்டு வரலாம்” என்க, சூர்யாவிற்கோ கோபம் ஏகத்துக்கும் எகிறியது இருந்தாலும் அவனிடம் பேச விருப்பபடாதவள் “இங்கிருந்தால் இவன் உளறுவதை கேட்கணும் பேசாமல் கேன்டீனாவது செல்லலாம்” என்று முடிவெடுத்து செல்ல முனைய அவள் கையை பிடித்தவன் “எங்க போற உட்காரு பேசிட்டு இருக்கலாம்”என்று சொல்ல அவளோ அவனை முறைத்தாள், உடனே அவன் உன்னோட பிரண்டுங்க வர்ற வரைக்கும்தான்மா” என்றவனின் பார்வை அந்த கிரவுண்டையே சுற்றி வந்தது.

இனியும் சூர்யாவை தனியாகவிட்டாள் மாதேஷின் ஆட்கள் வந்துவிடுவர்களோ என்ற கவலையில்தான் அவன் அவளை அமர சொன்னது.அவனுடன் பேச விருப்பம் இல்லாதவள் அவன் பேச்சை காதில் வாங்காமல் செல்ல முனைய அவளுக்கு முன் வந்து நின்றவன் “என்ன மேடம் நான் சொன்ன பேச்சு கேக்கலைனா என்ன பனிஷ்மென்ட் குடுப்பேங்கறது மறந்து போச்சா வேணும்னா இப்போ நியாபகபடுத்தவா” என்றவன் அவளை நெருங்க அதுவரை இழுத்து பிடித்து வைத்திருந்த அவள் பொறுமை காற்றில் பறக்க அவனை ஓங்கி அறைந்து “நீ எல்லாம் மனுஷனாடா மிருகம், ராட்சஷன் அங்க ஒருத்தனை ரத்தம் வர அடிச்சுட்டு இங்க வந்து ரொமான்ஸ் பன்றியா உனக்கெல்லாம் கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லையா, இன்னொரு டைம் என் பின்னாடி வந்த எங்க அப்பாட்ட சொல்லி கை காலை உடைக்க சொல்லிடுவேன் பார்த்துக்கோ, உன்னை மாதிரி ஒரு ரவுடி என்னோட வாழ்க்கைக்கு வேண்டாம் நீ எனக்கு வேண்டாம்..வேண்டாம் வேண்டாம்……” என்று திட்டியவள் அவன் அதிர்ந்த முகத்தைகூட கண்டுகொள்ளாமல் பார்க்கிங் ஏரியாவை நோக்கி சென்றாள். ஆனாலும் அவள் மனதில் காரணமே இல்லாமல் பாரம் ஏறிய உணர்வு கூடவே எதற்காக யாருக்காக என்று தெரியாமல் கண்ணில் இருந்து கண்ணீரும் வந்து கொண்டிருந்தது.

சூர்யாவின் பேச்சில் அதிர்ந்து நின்றிருந்த திருவின் தோளை அர்ஜுன் தொட அப்போதுதான் சுய நினைவிற்கு வந்தவனின் கண்கள் கலங்கி இருந்தது.தன்னவள் முதன் முறை நீளமாக தன்னிடம் பேசியிருக்கிறாள் ஆனால் அந்த பேச்சும் தன்னை வேண்டாம் என்பற்காக என்று.

திருவின் மனதை உணர்ந்த அர்ஜுன் அவனை அணைத்து “பீல் பண்ணாதடா நான் அவகிட்ட பேசறேன்” என்று சொல்ல அதை தலையாட்டி மறுத்தவன் “நானே பாத்துக்கிறேன்” என்றான்.
அவனை கோபமாக முறைத்த அர்ஜுன்“என்ன பாத்துக்குவ இப்படியே அமைதியா நின்னுட்டு என்னத்த பாத்துப்ப, எவ்ளோ பெரிய ஆபத்தில் இருந்து அவளை காப்பாற்றி இருக்க அதை கூட புரிஞ்சுக்காம பேசிட்டு போறா நீயும் அப்படியே அமைதியா நிக்கற எப்படி எப்படா பேசுவ”என்றான்.

அவனை ஆழ்ந்து பார்த்த திரு சிபாரிசுனால காதல் வரக்கூடாதுடா. அவ மனசுல நான் இருக்கேன் அது எனக்கு நல்லாவே தெரியும் ஆனா அவளுக்குத்தான் தெரியல விடு பார்த்துக்கலாம் என்று உயிர்ப்பே இல்லாமல் சிரித்த நண்பனை பார்த்த அர்ஜுனுக்கு கவலையாக இருந்தது. இருந்தாலும் பேச்சை மாற்றும் விதமாக “சரி அவ கிட்ட பேசல ஆனா இவ்ளோ பெரிய பிரச்சனை நடந்து இருக்கு என்கிட்ட நீ சொல்லவே இல்லையே ஏன்? உன் காலேஜ் எனக்கு சம்பந்தம் இல்லைனு நினைக்கறியா’ என்று கேட்க,

திருவோ, “ச்ச… ச்ச….அப்படி எல்லாம் இல்லடா நம்ம படிப்பு இன்னும் ரெண்டு மாசத்துல முடிஞ்சுடும் நான் காலேஜ் டேக் ஓவர் பண்ணிட்டு அப்புறம் எல்லாத்தையும் சரி பண்ணலாம்னு பார்த்தேன், அந்த மாதேஷ்...” என்று பல்லை கடித்தவன் “அதுக்குள்ள அந்த பிளடி என் பொண்டாட்டி மேலயே கை வைக்க வந்துட்டான் இதுக்கு அப்புறமும் அமைதியா இருந்தா சரி வராது சீக்கிரமே இவனுக்கு ஒரு முடிவு கட்டணும், பல பொண்ணுங்க மேல கை வச்சுருக்கான் ஆனா அது பெரிய இஷ்ஷு ஆகாம அவனோட அப்பா காப்பாத்திட்டு இருந்தாரு,ஆனா அன்னைக்கு அவனை நான் அடிச்சதுத்துல கோபமான அவனோட அப்பா மத்த ஷேர் ஹோல்டர்ஸ்ட்ட பேசி அவன் மகனையே சேர் மேன் ஆக்க பாக்குறான்.

அவன் கைக்கு காலேஜ் போனா இங்க பொண்ணுங்களுக்கு பாதுகாப்பு இல்லாத மாதிரி ஆகிடும் இவ்வளவு நாள் அப்பா சேர்த்து வச்ச நல்ல பேரு எல்லாம் ஒன்னும் இல்லாம போய்டும்”என்க அதை கேட்ட அர்ஜுன் “தோள் கொடுப்பான் தோழன்னு சொல்லுவாங்க அதுக்கேத்த மாதிரி நான் இருக்கேன் உனக்கு இனி அப்பன் மகன் ரெண்டு பேரோட குடுமி நம்ம கைல, அவங்கள எப்படி டீல் பண்ணனும்னு ஸ்கெட்ச் போட்டறலாம் தட்றோம் துக்கறோம் கவலைபடாத” என்று சொல்ல அவனை பார்த்து சிரித்தவன் சரி உன் ஆள் வருது பாரு போ போய் அவங்க பிரண்டு கிளம்பிட்டானு சொல்லு சும்மா வெயிட் பண்ணிட்டு இருக்க போறாங்க” என்றவன் தன் பைக்கை எடுத்து கொண்டு கிளம்பிவிட்டான்

அர்ஜுன், திருனேஷ் இருவரின் அதிரடியை மாதேஷ் ஜனகராஜ் இருவரும் எப்படி சமாளிக்க போகிறார்கள் என்பதை அடுத்த எபில பார்க்கலாம்.



கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பர்களே............

 
Status
Not open for further replies.
Top