All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அஜ்வந்தியின் 'வண்ணங்களின் வசந்தம்' - கதை திரி

Status
Not open for further replies.

ஶ்ரீகலா

Administrator
ஹாய் பிரெண்ட்ஸ்,

இதோ நமது தோழிகள் ஐவர் இணைந்து எழுதும் கதையின் அறிமுகத்துடன் வந்துவிட்டேன்... எப்போதும் போல் ஐவருக்கும் உங்களது ஊக்கத்தினை அளித்து உற்சாகப்படுத்துங்கள்... நிறைகளைக் கூறி ஊக்குவித்து, குறைகளைச் சுட்டிக்காட்டினாலும் அவரது திறமையைத் தட்டி கொடுக்க மறந்துவிடாதீர்கள்... கதையைப் பற்றி அவர்களே வந்து கூறுவர்... நன்றி மக்களே...

அன்புடன்,
ஶ்ரீகலா :)
 

PAPPU PAPPU

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் தோழமைகளே அனைவருக்கும் இனிய மாலை வணக்கம்.நாங்கள்..நாங்களே.. நாங்கள் @Anupradeep (சக்தி) ,@Aadhiraa Ram ,@iin~lava(இஷானா) ,@Sonythiru (சுதிஷா) & @POP POP ஐவரும் இணைந்து எழுதும் எங்களது புதிய கதையின் முதல் எபியுடன் வந்துவிட்டோம் பிரண்ட்ஸ்.

கேட்ட உடன் திரி அமைத்து கொடுத்த ஸ்ரீ மாவிற்கு எங்களின் நன்றி.

படித்து விட்டு உங்கள் கருத்துக்களை கருத்து திரியில் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் பிரண்ட்ஸ்😍.
 

PAPPU PAPPU

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்


eipng1137188.png

வசந்தம் - 1

வண்ணங்களின் வசந்தம்…..
அத்தியாயம் -1
தமிழ்நாட்டின் தலைநகரம் சென்னை காலை பரபரப்புடன் எப்போதும் போல் இயங்கி கொண்டிருந்தது.அங்கு இருக்கும் இருபாலரும் படிக்கும் பிரபலமான மற்றும் கண்டிப்பான பள்ளியில்தான் நம் கதையின் நாயகிகள் படித்து கொண்டு இருக்கிறார்கள். (கண்டிப்புக்கு பேர் போன பள்ளியாம் நம்ம நாயகிகள் ஓவர் படிப்சா இருப்பாங்களோ வாங்க போய் பார்ப்போம்)

பிரமாண்டமான அந்த பள்ளி வளாகத்தினுள் நுழையும்போதே தெரிகிறது பள்ளியின் சுத்தமும் கண்டிப்பும்.“பா” வடிவில் சுற்றி உயரமான கட்டிடங்கள் அந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையை தெளிவாக காட்டுகிறது.நாயகிகள் கெத்தான புள்ளைங்கதான் போலா, எங்க அவங்க ச்ச. ….படிக்கற புள்ளைங்க கிளாஸ் இருப்பாங்க வாங்க போய் பார்க்கலாம்.

வகுப்பு நடந்துட்டு இருக்கு நம்ம புள்ளைங்களும் பொறுப்பா படிக்குங்குங்களோ!!!!..... என்ற யோசனையுடன் உள்ளே சென்றால், பாவம் ஒரு வகுப்பறை வாசலில் ஐந்து பிள்ளைகள் முட்டி போட்டு இருக்கிறார்களே யார் அது என்று நெருங்கி போய் பார்த்தால் நம்ம பஞ்சபாண்டவிகள் தான் முட்டி போட்டு இருக்காங்க.

நம்ம கதையோட ஹீரோயின்களை கெத்தா அறிமுகப்படுத்தலாம் என்று பார்த்தாள் இதுங்க பனிஷ்மென்ட் வாங்கி முட்டி போட்டு இருக்குங்க. பனிஷ்மென்ட் வாங்குனாலும் இதுங்கதான் நம்ம கதையோட நாயகிகள்.பாவம் முட்டி போட்டு கால் வலிக்கும்.

பனிஷ்மென்ட் வாங்கியும் அடங்காம ஏதோ பேசுதுங்களே என்னவா இருக்கும். போய் பார்ப்போம்.

அந்த ஐவரில் ஒருத்தி மற்றவளிடம் “ஏய் ஜேபி உன் பார்வையே சரி இல்லையே என்ன பார்த்து கொண்டு இருக்கிறாய்” என்று கேட்டாள்.

ஜேபி என்று அழைக்கப்படும் பூஜா “இல்ல கேபி இந்த பொசிஷன்ல இருந்து பார்த்தா என் ஆள் நல்லா தெரியுறான்.அதான் அவனை பார்த்து கொண்டு இருக்கிறேன்” என்றவள் மேலும் “பிஸியா இருக்கேன் டிஸ்டர்ப் பண்ணாத” என்றாள்.

ஜேபி சொல்வதை கேட்ட கேஎஸ் என்று அழைக்கப்படும் நம் மதுவந்தி “என்னது அவ மட்டும் தனியா சைட் அடிக்கிறாளா!!” என்று அதிர்ந்து பக்கத்தில் முட்டி போட்டு இருந்த கேபி என்று அழைக்கப்படும் அபியிடம் “அவளை கொஞ்சம் தள்ளி முட்டி போட சொல்லு நாமளும் சைட் அடிக்கலாம்” என்றாள் ஆர்வமாக.

மற்ற மூவரும் தங்களுக்குள் இப்படி பேசிக்கொண்டு இருக்க நான்காவது ஜீவன் வேறு ஏதோ யோசனையில் இருந்தது கடைசியாக முட்டி போட்டு இருந்தவள் மூவரையும் புருவம் சுருங்க ஆராய்ச்சியாக பார்த்து மனதில், “ஹையோ இவளுங்க பேசறதை பார்த்தாள் தேரை இழுத்து தெருவில் விட்டுருவாளுங்க போல இருக்கே” என்று மனதில் அரண்டு நான்காமானவளின் தோளை இடித்து “அந்த மூன்று வில்லங்கமும் என்ன பண்ணுதுன்னு கவனி” என்றாள்.

நாங்கமானவளின் பெயர் ஆர்எம் என்று அழைக்கப்படும் ப்ரீத்தி. அவளோ தீவிர முகபாவத்துடன் பக்கத்தில் இருந்த சூர்யா என்று பெயர் உடைய கேகேவிடம் “நானும் ரொம்ப நேரமா அதைத்தான் நோட் பண்ணிக்கிட்டு இருக்கேன் கேண்டீனில் சமோசா போட்டுட்டாங்க” என்றாள் கண்ணில் மின்னலுடன்.

ஆர்எம் சொன்னதைக் கேட்டு கடுப்பான கேகே.”அடியே ஏண்டி இப்புடி படுத்துற அவளுங்க என்ன பன்றாளுங்கன்னு பாருன்னா நீ சமோசா போட்டாச்சுன்னு சொல்ற. திங்கரதுலேயே இருக்காம அவளுங்கள கவனி” என்று சொல்ல அவளோ கேகே சொல்வதை காதில் வாங்காமல் சமோசாவுடன் ஐக்கியம் ஆகிவிட்டாள் கனவில்.

ஆர்எம்மின் முகத்தை வைத்தே அவள் இந்த உலகத்தில் இல்லை என்பதை உணர்ந்த கேகே அவளின் கைகளில் லேசாக கிள்ளி சுய உணர்வு வரவைத்தாள்.
“ஆ……..” என்று அலறியவளை கண்டுகொள்ளாமல் “நீ இந்தப் பக்கம் வா” என்றாள்.

கேகே கிள்ளிய கடுப்பில் இருந்த ஆர்எம்மோ “முடியாது, இங்க தான் சமோசா வாசனை நல்லா வருது நான் அங்க வர மாட்டேன் போ” என்று முறுக்கி கொண்டாள்.

கேகேவோ “இவள் கோவப்படற நேரத்தை பாரு” என்று மனதில் புலம்பி கொண்டே ஆர்எம்மிடம் “நோ நோ இங்கதான் நல்லா வாசம் வருது” என்று கூறி அவளை இழுத்து இந்தப்பக்கம் விட்டு அவள் இருந்த இடத்திற்கு முட்டி போட்டே மெதுவாக நகர்ந்து சென்றாள். மூவரும் ஒரே இடத்தை பார்த்து கொண்டிருப்பதை கவனித்து புருவ முடிச்சுடன் " என்ன தெரிகிறது " என்று கேட்டுக் கொண்டே இவளும் திரும்பினாள்.
திருப்பியவளுக்கு நெஞ்சு வலி வரும் போல் இருந்தது.”அடிப்பாவிங்களா இந்த வேலையை பார்த்ததற்கு தானே வெளியே முட்டி போட விட்டாங்க இதுல இங்க வந்தும் அதே வேலையை பார்க்குதுங்களே” என்று அவள் திட்டி கொண்டிருக்க அவர்களிடம் பதில் இல்லை.அவர்கள்தான் சைட் அடிக்கும் பணியை செவ்வனே செய்து கொண்டு இருக்கிறார்களே பிறகு எப்படி கேகேயின் புலம்பல் காதில் விழும்.

மூவரையும் பார்த்து மேலும் கடுப்பான கேகே தன் அருகில் இருந்த கேஎஸ்யின் தலையில் நங்கென்று கொட்டி அவளின் கவனத்தை தன் புறம் திருப்பினாள்.

தங்களைவிட பெரிய பையனை பார்த்து சுவாரஸ்யமாக ஜொள்ளுவிட்டு கொண்டு இருக்க அதில் இடையூறு ஏற்படுத்துவது போல் கேகே கொட்டவும் கடுப்பான கேஎஸ் “ஏண்டி என்னை கொட்டுன” என்றாள் ஆசிரியருக்கு கேட்ககூடாது என்று மெதுவான குரலில். அவளுக்கு பதில் சொல்வதற்கு கேகே வாய் திறக்க சரியாக அதே நேரம் அங்கு வந்து நின்றார் அவர்களின் ஆசிரியர்.

கேகேவும், கேஎஸ்வும் பேசுவதை பார்த்துதான் அவர்கள் அருகில் வந்திருந்தார்.இவர்களை பார்த்து முறைத்து கொண்டே “பனிஷ்மென்ட் வாங்கியும் திருந்தவில்லையா நீங்கள்” என்று திட்டி கொண்டு இருக்க அதே நேரம் அந்த வகுப்பு முடிந்ததர்கானா மணி அடித்தது. அதற்கு மேல் அங்கு நிற்காமல் சென்றுவிட்டார் அவர்.

ஆசிரியர் அந்த பக்கம் சென்றவுடன் ஐவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்து கொண்டே “திருந்திட்டாலும்” என்று கூறி “ஹய் பை” அடித்து கொண்டனர்.
கேஎஸ் மீண்டும் “எதற்கு கொட்டினாய்” என்று கேட்க அதற்கு கேகே பதில் சொல்வதற்குள் ஆர்எம்மே “அது பெரிய ரகசியம் பாரு வெளிய வந்தும் அடங்காம சைட் அடிச்சுட்டு இருக்கீங்கன்னுதான் கொட்டிருப்பா இது பெரிய விஷயமா வாங்க கேன்டீன் போலம், லேட்டா போனா சமோசா தீர்ந்துவிடும்” என்று சொல்ல ஐவரும் மற்றதை மறந்து கேன்டீன் விரைந்தனர்.

அவர்கள் கேன்டீன் செல்லட்டும் நாம் அவர்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
முதலாம் ஆனவள் ஆர்எம் என்று அவர்களால் அழைக்கப்பட்ட ப்ரீத்தி.. தந்தை ஐ ஏ எஸ் ஆபிஸர் மற்றும் தாய் ஒரு பொதுத்துறை வங்கியில் கிளை மேலாளராக பணிபுரிகிறார்.. அவர்களுக்கு ஒரே செல்ல பிள்ளை என்பதால் ப்ரீத்திக்கு அவர்களது வீட்டில் செல்லம் அதிகம், பொறுப்பும் அதிகம். இருவரும் வேலைக்கு செல்வதால் தனிமை கூட அவளுக்கு அதிகமாகத்தான் இருந்தது அதனாலேயே எப்பொழுதும் தனது நண்பர்கள் குழுவோடு ஒன்றியே இருப்பாள்.விளையாட்டு குணமாக இருந்தாலும் தனி பெண் என்பதால் பொறுப்பாக இருப்பாள். அவள் முடிவு தெளிவாகவும், சரியாகவும் இருக்கும் என்பதால் பெற்றோர் இருவரும் அவளது எந்த முடிவையும் மனமுவந்தே ஏற்பர். முக்கியமான விஷயம் என்னன்னா மேடம்கு ரொம்ப பிடித்த விஷயம் சாப்பாடு. நிறைய சாப்பிடமாட்டா ஆனா வெரைட்டியா நிறைய சாப்பிட நினைப்பா. அதனாலேயே அவ பிரண்ட்ஸ் ஹோட்டலில் இவள் ஆர்டர் செய்யும் உணவின் பேலன்ஸ் சாப்பிடுவதற்காக கம்மியாக தங்கள் ஆர்டரை கொடுப்பார்கள்.

அடுத்து கே பி என்று அழைக்கப்படும் அபி.. மருத்துவத்தை கனவாக கொண்டு வாழ்பவள் தனது தாயையே தன்னுடைய வழிகாட்டியாக எண்ணுபவள் . ஆம் அவளது தாயும் மருத்துவர். தந்தை ஐ பி எஸ் ஆபிஸர். வீட்டிற்கு ஒரே செல்ல பெண் அவளுக்கு எது வேண்டும் என்றாலும் கொட்டிக்கொடுக்கும் பாசமான தாய் தந்தையர்.அவர்களது சொந்த ஊர் வேறு,வேலை காரணமாக சென்னையில் செட்டில் ஆகிவிட்டனர். சொந்தபந்தங்கள் நிறைய பேர் இருக்க இங்கு தனியாக இருக்கின்றனர். இந்த பொண்ணுதான் இவங்க குரூப்லயே ரொம்ப தைரியம். அதே சமயம் ஆர்வ கோளாறும் கூட. யோசிக்காம எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செய்யும் டைப்.

மூன்றாம் ஆனவள் கேகே என்று அழைக்கப்படும் சூர்யா.. சென்னையில் ஒரு பிரபலமான கார்மெண்ட்ஸ் உரிமையாளரின் பெண்.. தாய் இல்லத்தரசி.. இவளுக்கு ஒரு தம்பியும் உண்டு. எதிலும் ஒரு நேர்த்தி இருக்கவேண்டும் என்று என்னும் குணம் உடையவள்.தனது அறை முதல் தனது வீடு வரை அனைத்தையும் நேர்த்தியாகவும் அழகாகவும் பராமரிப்பது அவளுடைய பொழுதுபோக்கு. அதேசமயம் வாழ்க்கையில் சில கட்டுப்பாடுகள் வைத்து வாழ்பவள்.அவள் கட்டுப்பாடுகள் அனைத்தும் தூள் தூளாகும் ஒரு இடம் என்றால் அது அவளது தோழிகள் குழுதான் எங்கே அவர்கள் இவள் சொன்னால் கேட்டால்தானே இவளும் அவர்களின் குணம் தெரிந்து கண்டுகொள்ளாமல் விட்டு விடுவாள்.அதே சமயம் அவர்கள் தவறு செய்தால் கண்டிக்கவும் தவற மாட்டாள். இவளின் சொற்பொழிவை கேட்க வேண்டும் என்ற காரணத்தாலேயே இவள் சொல்வதை உடனே செய்து விடுவார்கள் அவளது தோழிகள்.

அடுத்தவள் மது.. கூட்டுக் குடும்பத்தில் முதல் பெண் பிள்ளையாய் பிறந்தவள். அவளுக்கு நான்கு அண்ணன்கள். அதனாலேயே சின்னத்தம்பி குஷ்பூ போல அவளை பொத்திப் பொத்தி பாதுகாத்து வளர்த்தனர் பாதுகாப்பில் மட்டுமில்ல ஆளும் பார்க்க சற்று குஷ்பு போலதான் இருப்பாள். வீட்டுப் பெண்கள் அனைவரும் இல்லத்தரசியாக இருக்க ஆண்கள் ஒன்றாக இணைந்து மசாலா பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தை நிறுவியுள்ளனர். அதுவும் இந்தியா முழுவதும் பிரபலமான ஒரு மசாலா நிறுவனம் வெளிநாடு ஏற்றுமதிக்கான முயற்சிகளை மேற்கொள்ள ஆரம்பித்திருக்கின்றனர்.சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் அம்மணி தங்க கூண்டில் மாட்டி இருக்கும் கிளி.

கடைசியாக ஜேபி என்று அழைக்கப்படும் பூஜா. இவளும் வீட்டிற்கு ஒரே செல்ல பெண்தான். தாய் இல்லத்தரசியாக இருக்க தந்தை பெண்டன்ட் ஐடி சொல்யூஷன் என்று மிகப்பிரபலமான ஒரு மென்பொருள் நிறுவனத்தை நடத்திக் கொண்டிருக்கிறார். இவள் தந்தைக்கு தனக்கு அடுத்து பூஜாவே அவரது நிறுவனத்தை எடுத்து நடத்தவேண்டும் என்ற விருப்பம்.ஆனால் பூஜாவிற்கு அது துணியும் நாட்டமில்லை. வாழ்க்கையை திகட்ட திகட்ட தன் இஷ்டம் போல் அனுபவிக்கவேண்டும் என்ற எண்ணம் உடையவள். பட்டாம்பூச்சி போல் வாழ்க்கையை மகிழ்ச்சியாக அனுபவித்து வாழவேண்டும் என்ற எண்ணம். சுருங்கச்சொன்னால் ட்ராவல் எக்ஸ்பிளோரர்…

இப்படி ஒவ்வொரு குணம் உள்ள இந்த மணிகளை ஒன்றாக கோர்த்தது நட்பு என்னும் நூலே. பிளே ஸ்கூலில் ஆரம்பித்த இவர்களின் நட்பு இன்றும் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. சாதாரணமாக பெண்களின் நட்பு திருமணத்திற்கு பிறகு தொடர முடியாது என்று சொல்வார்கள். இவர்களின் நட்பை திருமணத்திற்கு பிறகும் காப்பாற்றி கொள்வார்களா என்பதை கதை போக்கில் தெரிந்து கொள்வோம்.

அப்பாடா ஒருவழியா இவர்களை பற்றி தெரிந்து கொண்டோம். இருங்க கேன்டீன்ல ஏதோ சத்தமா இருக்கு என்னனு போய் பார்ப்போம்.


அட நம்ம கே எஸ் தான் சமோசாவிற்கு சண்டை போட்டு கொண்டு இருக்கிறாள்.


கேன்டீனில் கேஎஸ்யின் சத்தம்தான் அதிகமாக கேட்டது.
“ஏன் அண்ணா நாங்கள் தான் சமோசா ரெகுலரா வாங்குகிறோம் என்று தெரியும் இல்லையா பின் எதற்காக எங்க பங்கை மத்தவங்க கொடுத்தீங்க “ என்று கேன்டீன்காரருடன் மல்லுக்கு நின்று கொண்டிருந்தாள்.

அவரோ இத்துநூண்டு இருக்குதுங்க இதுங்கள சமாளிக்க முடியலையே என்று தனக்குள் புலம்பி கொண்டு “இல்லாம இன்னைக்கு கம்மியாதான் சமோசா போட்டாங்க அதுதான் சீக்கிரம் தீர்ந்துவிட்டது.இனி எப்போதும் தனியாக உங்களுக்கு எடுத்து வைத்துவிடுகிறேன்மா” என்றார். அவர் பதிலில் கே எஸ் அவரை கெத்தாக ஒரு பார்வை பார்த்து " அந்த பயம் இருக்கட்டும் " என்று விட்டு வேறு என்ன வாங்கலாம் என நோட்டம் விட்டவளின் கண்ணில் பட்டது முட்டை போண்டா.

முட்டை போண்டாவை பார்த்தவுடன் நாவில் எச்சில் ஊற, அதை கபளீகரம் செய்யும் ஆவல் மனதிற்குள் தோன்றினாலும் அதை முயன்று மறைத்துவிட்டு கேன்டீன் ஓனரிடம் அசட்டையாக இங்க பாருங்க அண்ணா “ இன்று ஒரு நாள் மட்டும் போனா போகுது என்று இந்த முட்டை போண்டாவ எடுத்து போறேன்.நாளையிலிருந்து சமோசா இருக்கணும் இல்ல முட்ட போண்டாவில் முட்டைக்கு பதிலாக கரப்பான்பூச்சி இருக்குனு வதந்திய பரப்பி விட்டுருவோம் " என்று மிரட்டி விட்டு அரண்டு நிற்கும் அவரை கண்டு கொள்ளாமல் கையில் எவ்வளவு அள்ள முடியுமோ அவ்வளவு முட்டை போண்டாவை அள்ளி கொண்டு சென்றாள்.

கை கொள்ளா அளவு போண்டாவை எடுத்து செல்லும் கேஎஸ்ஸை பார்த்தவர் மனதில், “இதுங்க செஞ்சாலும் செய்யுங்க, புள்ளைங்கள பெத்துவிட சொன்னா ரவுடிகளை பெத்து விட்டிருக்காங்க” என்று நேரில் திட்ட முடியாமல் மனதில் திட்டி கொண்டார் அவர்களின் பெற்றோரை.

கை கொள்ளா அளவு முட்டை போண்டாவுடன் தன் தோழிகளின் அருகில் சென்று அமர்ந்தாள். தோழிகளுக்கு ஆளுக்கு ஒன்று என்று பிரித்து கொடுத்தவள் மீதி இருக்கும் அனைத்தையும் தனக்கே வைத்து கொண்டாள்.

கே எஸ்ஸின் செயலில் மற்ற நால்வரும் அவளை கொலை வெறியுடன் முறைக்க, அவர்களை கண்டு கொள்ளாமல் தன் பார்வையை சுழற்றியவள் கண்ணில் மின்னலுடனும், குரலில் குதூகலத்துடனும் “ஹே அங்க பாருங்கடி” என்று கத்தி இருந்தாள். முட்டை போண்டாவை மறந்து.

முட்டை போண்டாவை சாப்பிட போன அனைவரும் கேஎஸ்ஸின் சத்தத்தில் அதை சாப்பிடாமல் அப்படியே வைத்துவிட்டு,அவள் பார்வை போன இடத்திற்கு தங்கள் பார்வையையும் திருப்பினர்.அங்கு அவர்களைவிட பெரிய வகுப்பு படிக்கும் ஒரு மாணவன் உதட்டில் மெல்லிய சிரிப்புடனும், கண்ணில் மின்னலுடனும் வந்து கொண்டு இருந்தான்.

அவனை பார்த்த உடன் கேபியும் ஜேபியும் மற்றதை மறந்து அவனையே பார்க்க ஆரம்பித்தனர் என்றாள், கேகேவோ “அடியே நீங்க திருந்தவே மாட்டீங்களா” எங்க போனாலும் இவளுங்க அலும்பு தாங்க முடியலையே”என்று கூறி அவர்களை சைட் அடிக்க விடாமல் அவர்கள் பார்வையை வேறு பக்கம் திருப்பும் முயற்சியில் இறங்கினாள்.

நால்வரும் இப்படி தங்களுக்குள் ஒருவரை ஒருவர் தடுத்து கொண்டு குட்டி கலவரத்தில் இறங்கி இருக்க அந்த மாணவனோ இவர்களை ஒரு பார்வை பார்த்துவிட்டு கடந்து சென்றுவிட்டான்.அவன் போன பிறகே கேகேவிற்கு நிம்மதியாக இருந்தது, மூவரையும் பார்த்து முறைத்து கொண்டே “அடியேய் ஏண்டி இப்புடி படுத்துறீங்க ஒழுங்கா அங்க இங்க பார்க்காம வாங்க போண்டா சாப்பிடலாம் மீறி பார்வை எங்காவது திரும்புச்சு கிளாஸ்க்கு இழுத்துட்டு போய்டுவேன் போண்டாவும் கிடையாது ஒன்னும் கிடையாது“ என்று திட்டிவிட்டு திரும்ப அங்கு ஆர்எம்மோ அனைவரின் போண்டாவையும் காலி செய்து இருந்தாள்.

அனைவரும் அவளை முறைக்க ஆர்எம்மோ கூலாக " சாப்பிட வந்தா அந்த வேலையை பார்க்கணும் அதை விட்டுவிட்டு உங்களை யார் சைட் அடிக்க சொன்னது.ஏற்கனவே சமோசா தீர்ந்த கவலையில் இருந்ததினால் எல்லா போண்டாவையும் நானே சாப்பிட்டுவிட்டேன்டி " என்று பாவமாக முகத்தை வைத்து கொண்டு சொல்ல மற்றவர்கள் அவளை அடிக்க துரத்தினர். இவர்களின் இந்த விளையாட்டை ரசனையுடன் பார்த்து கொண்டு இருந்தது ஒரு ஜோடி விழிகள்.

ஒரு வழியாக ஆர்எம்மை பிடித்த அனைவரும் அவளை குமுறு குமுறு என்று குமுறிய பிறகே அமைதி ஆகினர். இந்த கலாட்டவுடனே அவர்களின் அன்றைய பொழுது செல்ல மாலை அனைவரும் தங்களது சைக்கிள் நிறுத்தும் இடத்திற்கு வந்தனர்.

வண்ணங்கள் தொடரும்....

கருத்து திரி :

 

PAPPU PAPPU

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அடுத்த பதிவில் இருந்து சில துளிகள்...

தனது வீட்டிற்குள் நுழைந்த பூஜா முன்னே அமர்ந்திருந்த தனது அப்பத்தாவை கண்டுகொள்ளாமல் தன் அறையை நோக்கி செல்ல முனைய அவரோ பேத்தி தன்னை கண்டு கொள்ளாமல் செல்லும் கடுப்பில் திட்ட ஆரம்பித்தார் “அடியே இதுதான் நீ ஸ்கூல் விட்டு வர நேரமா” என்று கேட்க அவளோ “இங்க பாரு கிழவி ஏதோ எங்க அப்பாவைப் பெற்ற ஒரே காரணத்துக்காகத்தான் உன்ன நா சும்மா விடறேன் இல்லை அவ்ளோதான் சொல்லிட்டேன்.என்கிட்ட சும்மா வம்பு இழுத்துக் கொண்டு இருக்காத” என்று அவரிடம் கோபமாக கத்தினாள் என்றாள் அவளை ஒரு பொருட்டாக கூட மதியாத அப்பத்தவோ அலட்டி கொள்ளாமல் “ உன் அப்பனை நான்தான் பெற்றேன் என்று தெரியுது இல்ல அதுக்கான மரியாதையை என்னைக்காவது நீ கொடுத்து இருக்கியா” என்று திரும்ப கேட்டார். அதற்கு அவளோ “நீ மரியாதை கொடுக்கிற மாதிரி என்னைக்காவது நடந்து இருக்கியா” என்று அவரையே திரும்பக் கேட்டாள்.

பேத்தியின் பேச்சை கேட்டு முகவாயை தோள்பட்டையில் இடித்து நொடித்து கொண்டவர் "அம்மணி மரியாதை தரணும்னா நான் எப்படி நடந்துக்கணும்னு சொன்னீங்கன்னா பெரிய மனுஷி சொல்றத கேட்டு நானும் அப்படியே நடந்துப்பேன்” என்று அவர் நக்கலாக கூறினார்.
 

PAPPU PAPPU

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
eiVTWF358323.jpg

வண்ணம் - 2 :

மது மட்டும் முகம் வாடி நின்று இருந்தாள் என்றால்,சூர்யாவோ யோசனையாக நின்று இருந்தாள்.

இருவரின் அமைதியை பார்த்த பூஜா மற்றவர்களிடம் கண்ணை காட்ட அவர்களும் இருவரையும் பார்த்து தலையை இட வலமாக ஆட்டினர். பின் அபி மதுவின் அருகில் சென்று அவளின் கையை பிடித்து கொண்டு பேச ஆரம்பித்தாள்.

“ஏன்டி இப்படி இருக்க டெய்லி சொல்லி சொல்லி எங்களுக்கே போர் அடிச்சுடுச்சு பிரீயா இரு.நீ மூஞ்ச ஜிஞ்சர் ஈட்டிங் மங்கி மாதிரி வச்சி இருந்தா உங்க அப்பா என்ன ஆச்சு ஏதாச்சு என்று எங்களை படுத்தி எடுத்துடுவார்.உனக்கு எங்ககூட சைக்கிள்ள வரதுதான் புடிச்சுருக்கு, நாங்களும் நெறைய தடவ உங்க வீட்ல பேசிட்டோம் ஆனா பதில் என்னமோ ", தனது கட்டை விரலை கீழ் நோக்கி காட்டி உதட்டை சுளித்தாள். மதுவிற்குமே இது தெரிந்த விஷயம் என்பதால் தன் மனதை தேற்றி கொண்டு “சரி லைட்டா பசிக்கற மாதிரி இருக்கு ஏதாவது சாப்பிடலாமா” என்று கேட்டாள்.

நீ சாப்பிடறதுலயே இரு.அது எல்லாம் வீட்ல போய் பாத்துக்கலாம் இப்போ கிளம்பற வேலைய பாக்கலாம் என்று இவர்கள் பேசிக்கொண்டு இருக்க ஏதேற்சியாக சூர்யாவை பார்த்த பூஜா. “உனக்கு என்னடா ஆச்சு ஏன் ஒரு மாதிரி இருக்க” என்று கேட்டாள்.

சூர்யாவோ “இன்னைக்கு மேம்கிட்ட பசங்களை பத்தி நாம பேசிகிட்டு இருந்தோம்னு மாட்டி விட்டது யாருனு நான் கண்டு பிடிச்சுட்டேன் , ஆனால் நம்மல போட்டு குடுக்கறதுல அவளுக்கு என்ன யூஸ் அதுதான் எனக்கு புரியல " என்று அப்போதும் குழம்பிய குரலில் கூறினாள்.

சூர்யா சொல்லி முடித்த அடுத்த நிமிடம் மற்ற நால்வரும் " யார் அது " என்று கோபமாக கேட்டனர். உடனே சூர்யா பூஜாவை நோக்கி கையை காட்டி "இதோ இவளோட நாத்தனார். அந்த ஓவர் ஆக்ட்டிங் யமுனாதான் " என்றாள்.

மற்ற நால்வரும் சூர்யா சொல்வதை கேட்டு அதிர்ந்து "அவளா" என்று பல்லைக் கடிக்க, அபி "அவளை பழி வாங்க ஏதாவது செஞ்சே ஆகனும்.என்ன செய்யலாம்" என்று யோசிக்க ஆரம்பித்திருந்தாள். பூஜாவோ கோபமாக "அவளை முதல் நாள் கிளாசில விட வரும்போதுதான் அவ அண்ணனை நான் பார்த்தேன். அந்த ஒரு காரணத்துக்காக தான் இவ்வளவு நாள் அவ போடற சீன் எல்லாம் பொறுத்துட்டு இருந்தேன். கடைசியில் அவ நம்மளையே போட்டு கொடுத்துட்டா. இனி அவள சும்மா விடக்கூடாது.நாளைக்கு அவளோட அண்ணாகிட்ட நான் மட்டும் போய் இந்த விஷயத்தைபற்றி பேசிவிட்டு வரேன் " என்று சொல்ல மற்ற நால்வரும் அவளை முறைத்துப் பார்த்தனர்.

தோழிகளின் முறைப்பை கண்ட பூஜா 'கண்டுபிடிச்சுட்டாங்களோ' என்று திருதிருவென விழித்தபடி நிற்க அபியோ" எதுக்கு நீ மட்டும் போறேன்னு சொல்றனு எங்களுக்கு தெரியும்.நீ ஒரு ஆணியும் புடுங்க வேணாம் " என்று அவளை அடக்கினாள்.

அவர்கள் அடுத்து என்ன செய்யலாம் என்று திட்டம் தீட்ட, பூஜா " வேணாம்டி. ஆயிரம் தான் இருந்தாலும் அவ எனக்கு வருங்கால நாத்தனார் " என்று அரண்ட குரலில் கூறினாள். அவளை பார்த்து மற்றவர்கள் முறைக்க அவள் வாய் தானாக மூடி கொண்டாள்.

வெகு நேர யோசனைக்கு பிறகு மது “நான் வேணும்னா அவ டிபன் பாக்ஸ காலி பண்ணிடவா” என்றாள். மற்ற நால்வரும் அவளை கேவலமாக பார்க்க, அவளோ “அவ ஒரு நேரம் சாப்பிடாம பட்டினி கிடப்பால்ல அதான் சொன்னேன்” என்றாள். அவள் சொல்வது ஒருவகையில் சரியாக பட சரி என்று தலையாட்டியவர்கள் அடுத்தடுத்து யார் என்ன செய்வது என்று தங்களுக்குள் பேசி ஒரு முடிவிற்கு வந்தனர்.

அபி எல்லோரையும் பார்த்து “சரி பிளான் பண்ணிட்டோம், நாளைக்கு அவளை வச்சு செய்யறோம்” என்று கண்ணடித்து கூறிவிட்டு, “சரி, சரி பிரச்சனை ஓவர் வாங்க போலாம் இன்னைக்கு சூர்யா அம்மா நமக்காக கேக் செய்யறேன்னு சொல்லிருக்காங்க” என்று கூறினாள். மற்ற நால்வரும் கூட ஆர்வமாக தலையாட்டி அபியின் கூற்றை ஆமோதித்து தங்களுடைய சைக்கிளை எடுத்து கொண்டு கிளம்பினர். அவர்கள் பள்ளியை விட்டு வெளி வருவதற்கும் ஒரு விலையுயர்ந்த லம்போகினி கார் அவர்கள் அருகில் வந்து நிற்பதற்கும் சரியாக இருந்தது .
காரை பார்த்தவுடனே அவர்களுக்கு புரிந்தது அது மது வீட்டு கார் என்றும், அவளது தந்தை தான் அழைத்து செல்ல வந்து இருக்கிறார் என்றும். உடனே பவ்யமாக முகத்தை மாற்றிக் கொண்டு ஐவரும் காரை பார்த்தனர். ஆனால் அதில் இருந்து இறங்கியது என்னவோ மதுவின் அண்ணன் தான்.

மதுவின் தந்தையை எதிர் பார்த்தவர்கள் அவள் அண்ணனை கண்டு சற்று திகைத்தாலும் தங்களை உடனே சரி செய்து கொண்டு முகத்தை அப்பாவிகள் போல் வைத்துக் கொண்டு நின்றனர். அபியோ அப்போதும் வாயை வைத்து கொண்டு சும்மா இராமல் " வந்துட்டாரு மூத்த சின்னத்தம்பி பிரதர் " என்று மற்ற நால்வரின் காதில் கேட்கும் வண்ணம் முணுமுணுக்க, அவளின் முணகலை கேட்ட நால்வரும் பக்கென்று சிரித்துவிட்டனர்..

ஐவரின் சேட்டைகளைப் பற்றி மதுவின் அண்ணனுக்கு ஏற்கனவே தெரியும் என்பதால் அவர்களை முறைத்துவிட்டு தன் தங்கையின் புறம் பார்வையை திருப்பினார். அண்ணனின் பார்வையிலேயே அவரது எண்ணத்தை புரிந்து கொண்ட மதுவும் நல்ல பிள்ளையாக காரில் ஏறி அமர்ந்து கொண்டாள்.

மதுவின் அண்ணனும் அவள் பின்னோடு சென்று காரை ஸ்டார்ட் பண்ணும் சமயம் மது வேகமாக “அண்ணா ஒரு நிமிஷம்” என்று அவனிடம் அனுமதி வேண்டியவள் காரின் கண்ணாடியை கீழே இறக்கி தனது தோழிகளை எட்டிப் பார்த்து “நாளைக்கு மேக்ஸ் டெஸ்டுக்கு படிக்க சூர்யா வீட்டுக்கு போகலாம்னு சொன்னிங்களே போகும்போது என்னையும் கூட்டி போங்க. எனக்கு அந்த பார்ட்ல நிறைய டவுட் இருக்கு” என்று கூறிவிட்டு தனது தோழிகளை பார்த்து கண்ணடித்து தலையை ஆட்டினாள்.

அவளது கூற்று முதலில் புரியாமல் முழித்தவர்கள் பின் தோழியின் கண்ணடிப்பில் புரிந்து கொண்டு “சரி” என்னும் விதமாக தலையை ஆட்டி அவளுக்கு விடை கொடுத்தனர்.

மதுவின் வீட்டு கார் கண்ணில் இருந்து மறையும் வரை அமைதியாக இருந்த ப்ரீத்தி குழப்பமான முகத்துடன் “நாம எப்போ மேக்ஸ் படிக்கப் போறோம்னு சொன்னோம், இவ என்ன உளறிட்டு போறா” என்று புரியாமல் கேட்டாள் . அவள் தலையில் தட்டி பூஜா “லூசு இன்னைக்கு ஈவ்னிங் நாம எல்லோரும் சூர்யா வீட்டிற்கு போறோம்ல, அத தான் சொல்றா., மது அவ வீட்ல போய் கேக் சாப்பிட பிரண்டு வீட்டுக்கு போறேன்னு சொன்னா விடுவாங்களா. அதனால மேக்ஸ் டெஸ்ட்னு பொய் சொல்லிட்டு நம்மகூட வரப்போறா. அதைதான் அண்ணா இருக்கவும் சிம்பாலிக்கா சொல்லிட்டு போறா. போதுமா.. இவளுக்கு விளக்கம் சொல்லியே ஒரு வழி ஆயிடுவேன் போல” என்று மற்ற இருவரையும் பார்த்து சலித்து கொண்டாள்.

பூஜா சொல்வதை கேட்ட ப்ரீத்தி அவளை பார்த்து அசட்டு சிரிப்பை உதிர்த்து “நான் மறந்துட்டேன்” என்றாள். அவளை சந்தேகமாக பார்த்த சூர்யா " நீசொல்றது நம்பற மாதிரி இல்லையே. சாப்பிடற விஷயத்தை நீ மறந்துட்ட.. அதை நாங்க நம்பனும் " என்று கிண்டலாக கேட்டாள். அதற்கு ப்ரீத்தியோ "ச்சி..ச்சி …….. நான் சாப்பிட போறதை மறப்பேனா ஆண்ட்டி எனக்கு புடிச்ச பிளேவர் கேக் செய்யறேன்னு சொல்லி இருக்காங்க," என்று சொன்னவள் " நான் மறந்தது மதுவை கூட்டி போகணுங்கறதை " என்று சொன்னாள்.

ப்ரீத்தி சொல்வதை கேட்ட மற்றவர்கள் அவளை முறைத்துவிட்டு பின் இவளை திருத்த முடியாது என்னும் வகையில் தலையை ஆட்டி பெருமூச்சுடன் " இவளைபற்றிதான் தெரியுமே சரி விடுங்க. நல்லவேளை அந்த மூத்த சின்ன தம்பி பிரதர் போன அப்புறம் கேட்டா. இல்லை நாளைக்கு மது வந்து உன்னை வச்சு செஞ்சுருப்பா " என்று கூறினாள். பின் "வாங்க கிளம்பலாம்" என்று சொல்ல, பூஜாவும் " ஆமாம் கிளம்பலாம். எங்க வீட்ல இருக்கற கிழவியை சமாளிச்சுட்டு வர நேரம் ஆகும். அதனால கிளம்பலாம் " என்று சொல்ல மற்றவர்களும் தங்களது வீடுகளை நோக்கி சென்றனர்.

தன் அண்ணனுடன் வீட்டிற்கு வந்த மது நேராக சென்றது டைனிங் அறைக்குதான்.அங்கு மாலை உணவாக அவளது பெரியம்மா செய்து வைத்திருந்த டிபனை சாப்பிட்ட பிறகே தனது அறையை நோக்கி சென்றாள்.

மது தனது அறைக்கு செல்ல அவளின் எதிரில் வந்து நின்றான் அவளின் சின்ன அண்ணன் ஆதர்ஷ். அவனை என்ன என்பது போல் பார்த்த மதுவிடம் “அது எப்புடி ஆண்டாளு வந்த உடனே கிட்சனிற்குதான் போற, இந்த மூஞ்சு கழுவறது, கை, கால் அலம்பரது இது மாதிரி பழக்கம் எல்லாம் உனக்கு இருக்காதா " என்று சலித்தவன் " அந்த ஸ்கூல் பேகையாவது உன்னோட ரூம்ல வச்சுட்டு வந்தியா அதுவும் இல்லை,இதை எல்லாம் செஞ்சிட்டு வர்றதுக்குள்ள யாரும் டேபிள் மேல் இருக்கும் டிபனை எடுத்து போயிடுவாங்களா என்ன " என்று சலிப்பது போல் வம்பிழுக்க ஆரம்பித்தான்.

அண்ணனின் பேச்சை கேட்ட மதுவோ “டேய் என்னை கெட்ட வார்த்தை சொல்லி கூட கூப்பிடு. ஆனா ஆண்டாளுனு இன்னொரு தடவை கூப்பிட்ட நீ சட்னிதான்” என்று முகம் சிவக்க பல்லை கடித்து கொண்டு சொல்ல அவளை கண்டு கொள்ளாத அவளது அண்ணன் அவளை வெறுப்பேற்றும் பொருட்டு “உன் பேர் அதுதானே ஆண்டாளு…. ஆண்டாளு… ஆண்டாளு” என்று சொல்லி கொண்டே அவளது ஜடையை பிடித்து இழுத்துவிட்டு ஓட அவனை துரத்தி கொண்டு ஓடினாள் மது.

“டேய் அண்ணா ஒழுங்கா நில்லுடா இல்லை நாளைக்கு உன்னோட சாப்பாட்டை நான் சாப்பிட்டுடுவேன்” என்று கத்தி கொண்டே வீட்டை சுற்றி ஓடும் அண்ணனை துரத்த ஆரம்பித்தாள்.

மது ஓடுவதை பார்த்த அவளது அம்மாவும், பெரியம்மாவும் " ஆண்டாளு பார்த்து மெதுவா போமா, டேய் ஏன்டா குழந்தைய ஓட விடற " என்று சொல்ல வாயில் கை வைத்துவிட்டு அமர்ந்துவிட்டான் ஆதர்ஷ்.

“எது அவ குழந்தையா குரங்கு குட்டிய போய் குழந்தைனு சொல்றீங்க. அவ பண்ற சேட்டை எல்லாம் ஸ்கூல்ல போய் கேளுங்க வண்டி வண்டியா சொல்லுவாங்க. இதுதான் இப்புடி இருக்குன்னா இது கூட சேர்ந்த அரை டிக்கெட்டுங்க அதுக்கு மேல. ஒவ்வொன்னும் ஒவ்வொரு டிசைன். எப்புடிதான் இப்புடி கும்பல் சேர்ந்ததுங்களோ தெரியல” என்று சொல்ல அவனது அம்மாவோ “போடா அரட்டை உனக்கு வேற வேலை இல்லை, எப்போ பாரு அவகிட்ட வம்பிழுத்துக்கிட்டே இருக்க, பாவம் தங்கமே களைச்சு போய் வந்துருக்கு. இதுல அவள நீ வேற ஓட விடுற. புள்ள சாப்பிட்டதெல்லாம் இதுலையே செரிச்சுருக்கும் " என்று அங்கலாய்த்தவர் மதுவை பார்த்து "ஆண்டாளு நீ உன்னோட ரூம்க்கு போமா " என்றார்.

பெரியன்னையின் பேச்சை கேட்ட மது முகத்தை சோகமாக மாற்றி கன்னத்தில் கை வைத்து அமர்ந்துவிட்டாள்.

என்னடா ஆளாளுக்கு ஆண்டாளுனு சொல்றாங்கனு பாக்குறீங்களா அம்மணி பேரு ஆண்டாள் அழகு நாச்சியார். அவங்க பாட்டியோட பேரு. எல்லோரும் வீட்ல ஆண்டாளுன்னு தான் கூப்பிடுவாங்க. ஆனா மேடம்க்கு அந்த பேர் பிடிக்காது. அதனாலேயே ஸ்கூல் சேர்க்கும்போதே மதுவந்தினுதான் பேர் கொடுக்க வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்க அதனாலேயே ஸ்கூலில் அந்த பேர்.பேரை மாற்றினாலும் வீட்டில் உள்ளவர்கள் ஆண்டாளு என்று கூப்பிடுவதை மட்டும் நிறுத்த முடியவில்லை. இவளும் சொல்லி சொல்லி பார்த்து சலித்து போய்விட்டாள். அதுவும் அவளது கடைசி அண்ணன் ஆதர்ஷ் அவளை வம்பிழுக்க என்றே ஆண்டாள் என்று கூப்பிடுவான். இதுதான் மது கன்னத்தில் கை வைத்து அமர்வதற்கான காரணம்.

" மதுவந்தினு கூப்பிடுங்க பெரியம்மா இல்லனா மதுனாவது கூப்பிடுங்க. ஆண்டாளுன்னு கூப்பிடாதிங்க " என்று பாவமாக கூற, அங்கு சரியாக ஆஜர் ஆனான் அவளது அண்ணன் ஆதர்ஷ். " ஆமாம் அம்மா மந்தினு கூப்பிடுங்க " என்று சொல்ல மது பல்லை கடித்து கொண்டு " டேய் அண்ணா " என்று கத்த, " மீ எஸ்கேப் " என்று ஓடி இருந்தான் அவன். இவர்களின் வம்பிழுக்கும் படலம் தினமும் நடக்கும் ஒன்று என்பதால் அதை பெரிதாக எடுத்து கொள்ளாமல் மதுவை பார்த்து " போடா உன்னோட ரூம்க்கு போ " என்று அவளது அறைக்கு போக சொல்லிவிட்டு அவர் கிச்சனை நோக்கி சென்றுவிட்டார்.

மதுவும் தனது அண்ணனை பழிவாங்க தனக்குள் ஒரு திட்டம் தீட்டி கொண்டே அறைக்கு சென்று ரெப்ரெஷ் செய்து விட்டு தனது அப்பத்தாவை பார்க்க சென்றாள்.

மதுவை கண்டவுடன் அவளது அப்பத்தவோ " வா ராசாத்தி ரொம்பக் களைச்சு போய் தெரிகிற ஏதாவது சாப்பிட்டாயா " என்று வாஞ்சையாக கேட்டார். இருக்காதா பின்னே மூன்று தலைமுறைக்கு பின் அவர்கள் குடும்பத்தில் பிறந்த முதல் பெண் வாரிசு அல்லவா அதனால் கவனிப்பும் அதிகம்தான்.

மதுவும் தன் அப்பத்தாவின் பாசத்தை புரிந்து கொண்டவள் அவர் மடியில் படுத்து கொண்டு " ஆமாம் அப்பத்தா ரொம்ப பசிச்சுது அதான் கொஞ்சமா சாப்பிட்டேன் " என்று செல்லம் கொஞ்சி கொண்டே சொன்னாள்.

பேத்தியின் தலையை மென்மையாக தடவி கொடுத்தவாரே “ஆமா உன்னோட பிரண்ட் வீட்டுக்கு போகவில்லையா.இன்னைக்கு என்ன கதை சொல்லி விட்டுப் போகப் போற” என்று கேட்க அவளோ "அட ஆமாயில்ல இந்த ஆதர்ஷ் அண்ணா பண்ண வேலையால அதை மறந்துட்டேனே" என்று தன் தலையில் தட்டி கொண்டவள், “அப்பத்தா இன்னைக்கு நம்ம சூர்யா அம்மா கேக் செஞ்சுதரேன் வாங்கணு சொல்லியிருக்காங்க. எல்லோரும் போகலாம்னு பிளான் பண்ணினோம்.நானும் போகணும் எப்படியாவது வீட்டில சமாளிச்சுகோ” என்று அவர் தாடையை பிடித்து ஆட்டி கொண்டே முகத்தை பாவமாக வைத்து கொண்டு கேட்டாள்.

அப்பத்தாவோ “இது என்ன எனக்கு புதுசா எப்பவும் பண்றது தானே நான் பார்த்துகிறேன் நீ கவலைப்படாம போ” என்று கூறிக்கொண்டிருக்கும்போதே அங்கு பிரசன்னமானார் மதுவின் பெரியம்மா வள்ளி.

மதுவின் பேச்சை கேட்டு கொண்டே வந்தவர் “எங்க போறதுக்கு பத்தி இப்ப பேசிக்கிட்டு இருக்கிங்க" என்று கேட்க, அவளோ “அது பெரியம்மா" என்று இழுத்தவள் " இன்னைக்கு மேக்ஸ் ரிவிஷன் பண்ண நம்ம கேகே" என்று சொன்னவள், பின் தன் நாக்கை கடித்துக்கொண்டு "நம்ம சூர்யா வீட்டுக்கு போலாம்னு இருக்கேன் பெரியம்மா” என்று கூற அவரோ “ஏன் நம்ம வீட்ல இருந்து படிச்சா ஆகாதா” என்று கேட்டார்.

அவரை இடையிட்ட அவளது அப்பத்தா “அப்படியே இங்க எல்லாம் கலெக்டருக்கு படிச்சுட்டிங்க உங்ககிட்ட சந்தேகம் வந்தா கேட்டு படிக்கறதுக்கு. நம்ம வீட்டு பொம்பளைங்க யாரும் பத்தாங்கிளாஸ் கூட தாண்டல. அந்த புள்ளையோட அம்மா நல்லா படிச்சவங்க. அங்க போய் தான் படிச்சுட்டு வரட்டுமே. தெரிஞ்ச வீடு நல்ல குடும்பம் உங்களுக்கு என்ன பிரச்சனை” என்று தனது மருமகளை பார்த்து கேட்க அவரும் மாமியாருக்கு அடங்கிய மருமகளாக " சரிமா பார்த்து போயிட்டு வா " என்று கூறி அந்த இடத்தில் இருந்து நகர்ந்துவிட்டார்.

வள்ளி அந்த பக்கம் சென்றதும் மது தனது அப்பத்தாவை கட்டிப் பிடித்து முத்தமிட்டவள் “தேங்க்ஸ் அப்பத்தா” என்று கூறிவிட்டு தனது தோழியின் இல்லம் நோக்கி சென்றாள்.

அங்கு பள்ளியில் இருந்து கிளம்பிய நால்வரில் முதலில் இருப்பது பூஜா வீடுதான்.அவள் தெருவிலேயே கடைசியில் தான் சூர்யா வீடும் இருக்கிறது. இவர்கள் இருக்கும் தெருவின் அடுத்த தெருவில்தான் அபி, ப்ரீத்தி வீடு.
ஒவ்வொருவராய் பிரிந்து அவர்கள் இல்லத்திற்கு செல்வர்.இன்றும் அதுபோல் முதலில் பூஜா மற்றவர்களிடம் விடை பெற்றுக்கொள்ள மற்றவர்களும் அவரவர் இல்லம் நோக்கி சென்றனர்.

தனது வீட்டிற்குள் நுழைந்த பூஜா முன்னே அமர்ந்திருந்த தனது அப்பத்தாவை கண்டுகொள்ளாமல் தன் அறையை நோக்கி செல்ல முனைய அவரோ பேத்தி தன்னை கண்டு கொள்ளாமல் செல்லும் கடுப்பில் திட்ட ஆரம்பித்து விட்டார். “அடியே இதுதான் நீ ஸ்கூல் விட்டு வர நேரமா” என்று கேட்க அவளோ “இங்க பாரு கிழவி ஏதோ எங்க அப்பாவ பெத்த ஒரே காரணத்துக்காகத்தான் உன்ன நா சும்மா விடறேன் இல்லை அவ்ளோதான் சொல்லிட்டேன்.என்கிட்ட சும்மா வம்பு இழுத்துக்கிட்டு இருக்காத” என்று அவரிடம் கோபமாக கத்தினாள். அவளை ஒரு பொருட்டாக கூட மதியாத அவளது அப்பத்தவோ “ உன் னஅப்பனை நான்தான் பெத்தேன்னு தெரியுதில்ல அதுக்கான மரியாதையை என்னைக்காவது நீ கொடுத்திருக்கியா” என்று திரும்ப கேட்டார். அதற்கு அவளோ “நீ மரியாதை கொடுக்கிற மாதிரி என்னைக்காவது நடந்து இருக்கியா” என்று அவரையே திரும்பக் கேட்டாள்.

பேத்தியின் பேச்சை கேட்டு முகவாயை தோள்பட்டையில் இடித்து கொண்டவர் "அம்மணிக்கு மரியாதையா நான் எப்படி நடந்துக்கணும்னு சொன்னீங்கன்னா பெரிய மனுஷி சொல்றத கேட்டு நானும் அப்படியே நடந்துப்பேன்” என்று நக்கலாக கூறினார்.

அப்பத்தாவின் நக்கலில் கடுப்பான பூஜாவும் “எங்க அப்பா எவ்வளவு பெரிய கம்பெனியோட எம்டி. அவரோட அம்மா மாதிரியா நீ நடந்துக்கிற. ஊர்வம்பு பேசுறது, வீட்டிற்கு வந்தவங்க கிட்ட வம்பிழுக்குறது, போன கதை வந்த கதைன்னு எல்லா கதையும் பேசறது. இப்படித்தான் நீ இருக்க. அது மட்டும் இல்லாம அப்பாவ மத்தவங்ககிட்ட மரியாதை இல்லாம அவன் இவன்னு சொல்லி வேற பேசுற” என்று பொறிந்து தள்ளிவிட்டாள் பூஜா.

பேத்தியின் புலம்பலை எல்லாம் அசால்ட்டாக ஊதி தள்ளிவரோ அவளை ஏற இறங்க பார்த்து “ஊருக்கு ராஜாவானாலும் பெத்தவளுக்கு பிள்ளைதான்டி. அது மாதிரி அவன் எவ்ளோ ஒசரத்துக்கு போனாலும் எனக்கு மகன்தான். அப்புடி இருக்கும்போது நான் எதுக்கு அவனுக்கு மரியாதை கொடுக்கணும். நாலு பேருக்கிட்ட பேசுனாதான் நாலு நல்ல விஷயம் தெரிஞ்சுக்க முடியும். உன்னை மாதிரி அந்த சின்ன செல்லு போனு டப்பாகுள்ள தலைய விட்டுட்டு இருக்க சொல்றியா. ஒன்னோட வயசுல நானு எங்க குடும்பத்துல இருக்க எல்லோருக்கும் சமைச்சு போட்டுட்டு வயலுக்கு வேலைக்கு போவேன். பெரியவங்க பேச்சுக்கு மறு பேச்சு பேசுனது இல்லை. ஆனா நீ இருக்கியே நீயி.. என்னைக்காவது ஒழுங்கா நடந்திருக்கியா இல்ல பாட்டினு மரியாதை கொடுத்திருக்கிறியா.ஒரு காப்பி தண்ணி போட தெரியுதா உனக்கு. நீயும் உன் கூட சேர்ந்து அந்த நாலு உருப்படாததுகளும் போடுற ஆட்டம் இருக்கே அப்பப்பா” என்று அங்கலாய்க்க பூஜாவோ “இந்த பாரு கிழவி என்னோட பிரெண்ட்ஸ் பத்தி ஏதாவது சொன்னா அவ்வளவுதான் பாத்துக்க” என்று கோபமாகக் கூறினாள். அவரோ “ஆமா பிரண்ட்ஸ் ஊரில் இல்லாத பிரண்ட்ஸ்.எப்ப பாரு எல்லாம் சேர்ந்து ஊர் சுத்திக்கிட்டே இருக்கறது. இரு உன் அப்பன்ட்ட இன்னைக்கு நீ பண்றதெல்லாம் சொல்றேன். ஊர்சுத்தி கழுத” என்று கோபமாகக் கூறினார்.

அவளோ “எனக்கு புடிச்சிருக்கு நான் சுத்துறேன் உனக்கு ஏன் கஷ்டமா இருக்கு.உன்னை சொல்லி தப்பு இல்லை என் தாத்தாவ சொல்லணும் ஊர்ல கிடைக்காத பொண்ணுனு உன்ன போய் கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்தாரு பார்த்தியா.அவர சொல்லணும். சரி கல்யாணம் பண்ணிக்கிட்டு தான் வந்தாரு அவர் போகும்போது உன்னையும் மேல கூட்டிட்டு போய் இருக்க கூடாது இப்படி என்னை படுத்தி எடுக்கவே உன்னை விட்டுட்டு போய் என்ன கஷ்டப்பட வச்சுட்டாரு” என்று தலையில் அடித்துக் கொள்ள அவரும் “அப்ப நீ என்னை மேல போக சொல்லி மறைமுகமா சொல்றியா” என்று ஆதங்கத்தோடு கேட்டார்.

பூஜாவோ அவளது அப்பத்தாவை நக்கலாக பார்த்து கொண்டு “இதுக்கு மேல நேரடியா சொல்லவே முடியாது உன்னை சீக்கிரம் மேல தான் போக சொல்றேன் சீக்கிரம் போ” என்று கூறிவிட்டு தனது அறைக்குச் சென்று விட்டாள்.

வண்ணங்கள் தொடரும்....🌈🌈🌈🌈🌈
 
Last edited:

Sonythiru

Suthisha
received_970714656714211.jpeg

வண்ணம் 3 :

தனது அறைக்கு வந்தவள் சூர்யா வீட்டிற்கு செல்வதற்காக ஆயத்தமாகி கீழே வரும் வரைகூட அவள் அப்பத்தா முதலில் அமர்ந்த இடத்தை விட்டு நகராமல் அமர்ந்து இருந்தவர் பேத்தி வெளியே செல்ல தயாராகி வருவதை பார்த்து தன் புலன்விசாரணையை ஆரம்பித்தார்..

“என்ன இப்பதான் வந்தே அதுக்குள்ள நகர்வலம் கிளம்பிட்டியா” என்று கேட்க அவரை முறைத்துப் பார்த்தவள், “சும்மா நான் எங்கு போகிறேன் எங்கே வருகிறேன் என்று கேள்வி கேட்டுட்டு இருந்த கல்லை தூக்கி தலையில போட்டுருவேன் பார்த்துக்க” என்று மிரட்ட அவரோ “ஏன்டி போட மாட்ட ஏன் போட மாட்ட. எல்லாருக்கும் மருமக தான் பிரச்சனையா இருக்கும் ஆனா எனக்கு வந்த மருமக தங்கம். ஆனா அவ பெத்தது எனக்கு மாமியாரா பொறந்து என்னை ஆட்டி படைக்கிது” என்று புகைய பூஜாவோ கூலாக “ஆமா நீ உன் மாமியாரை என்னவெல்லாம் கொடுமைப்படுத்தினியோ அதெல்லாம் நீ திரும்ப அனுபவிக்கனும்ல . எங்க அம்மாதான் சாது உன்ன சும்மா விட்டு வச்சு இருக்காங்க ஆனால் நான் அப்படி இல்லைபார்த்து இருந்துக்கோ” என்று கூறியவள் வீட்டை விட்டு வெளியே செல்ல, அவரோ “போ போ உன் அப்பன் வரட்டும் நான் பார்த்துக்கிறேன்” என்று செல்லும் பேத்தியின் முதுகை பார்த்து கத்தியவர் மகனுக்காக காத்திருக்க துவங்கினார். பாட்டியின் கத்தலை கெட்ட பூஜாவும் " உன்னால முடிஞ்சதை பாத்துக்க கிழவி " என்று கூறிவிட்டு சூர்யா வீடு நோக்கி சென்று விட்டாள்.

அடுத்து அபி, ப்ரீத்தி இருவரும் தங்கள் வீட்டுக்கு செல்ல அவர்களை வரவேற்றது என்னவோ வெறுமையான வீடே. இருவரின் பெற்றோரும் அரசாங்க வேலையில் இருப்பதால் இவர்கள் வரும் நேரம் வீடு வெறுமையாகத்தான் இருக்கிறது என்று நினைத்து கொண்டு பெருமூச்சை வெளியிட்டவர்கள் பின் தங்களை சரி செய்து கொண்டு சூர்யா வீட்டிற்கு செல்ல தயாராகி கிளம்பிவிட்டனர்.
பூஜா சூர்யா வீட்டிற்கு வர அங்கு அவளுக்காக காத்திருந்தனர் மற்ற மூவரும்.”ஏண்டி இந்தா ஒரு நாலு வீடு தள்ளி இருக்க உனக்கு வர்ற இவ்ளோ நேரமா அடுத்த தெருவில் இருந்து நாங்களே வந்துட்டோம்” என்று ப்ரீத்தி கத்த ஆரம்பிக்க பூஜாவோ “நீ ஏண்டி சொல்ல மாட்ட எங்க வீட்ல இருக்க கிழவிய சமாளிச்சுட்டு நான் வர்றதுக்குள்ள போதும் போதும்னு ஆகிவிட்டது” என்று சொன்னாள்.. அவளது பேச்சை கேட்ட ப்ரீத்தியோ “அப்படி ஒரு பாட்டி வீட்ல இருந்தா நல்லா இருக்கும்ல” என்றாள் ஏக்கமாக. ப்ரீத்தியின் பெற்றோர் காதல் மனம் புரிந்ததால் அவளுக்கு சொந்தம் என்று இல்லாமல் போய் விட்டனர். அதனாலேயே பாட்டி ஏக்கத்தில் ப்ரீத்தி சொல்ல அவளை கடுப்பாக பார்த்த பூஜா “வேணும்னா நான் எங்க வீட்டு கிழவியை தத்து கொடுக்கறேன் வாங்கிக்கோ” என்றாள்.அவளின் பேச்சை கேட்டு அலறிய ப்ரீத்தியோ “வேண்டாம் டி வேண்டாம் உங்க பாட்டி மட்டும் வேண்டாம்” என்றாள் வேகமாக.

இருவரின் பேச்சை கேட்ட மது " அடியே போதும் வாங்கடி உள்ள போகலாம் கேக் வாசம் வர ஆரம்பிச்சுருச்சு " என்று மற்றவர்களை இழுத்து கொண்டு சென்றாள்
நால்வரும் வீட்டிற்கு நுழையும்போதே.அவர்களை வரவேற்றார் சூர்யாவின் அம்மா “வந்துட்டீங்களா செல்ல குட்டிஸ் வாங்க வாங்க உங்களுக்காக என்ன பண்ணி இருக்கிறேன் பாருங்கள்" என்று கூறி உள்ளே சென்றார்.அவர் பின்னோடு நால்வரும் செல்ல ஆரம்பிக்க . ப்ரீத்தி வேகமாக மற்றவர்களை தள்ளிவிட்டு உள்ளே ஓடிவிட்டாள். அவளை பார்த்து சிரித்த சூர்யாவின் தாய் சுந்தரியும் அப்பொழுதுதான் அவனிலிருந்து சூடாக இறக்கிய கேக்கை காட்டி தன் புருவத்தை “எப்படி” என்பதுபோல் ஏற்றி இறக்க மற்ற அனைவரும் கேக்கை பார்த்து சப்பு கொட்டியவாறே " இதுக்காகத்தானே வந்திருக்கோம் " என்று கோரஸ் பாடி டைனிங் டேபிளில் அமர்ந்தனர்.

சூர்யாவோ தன் தாயை கிண்டல் செய்யும் பொருட்டு “ இருந்தாலும் உங்க சமையல் சாப்பிட அடிமைகள் கிடைத்துவிட்டார்கள் என்பதற்காக இவ்வளவு சந்தோஷ படக்கூடாது மாம்” என்று கூற மற்ற நால்வரும் அவளை பார்த்து முறைத்து “கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை.ஆன்ட்டி சமையலுக்கு முன்னாடி யாராவது நிற்க முடியுமா” என்று கூறி அவருக்கு ஐஸ் வைத்து சூர்யாவை கிண்டல் அடித்து கொண்டு இருந்தனர் அனைவரும்.

அவர்கள் கிண்டலில் பங்கெடுக்காத ப்ரீத்தி கேக் பசி அதிகமாக பிளேட்டை எடுத்து கையில் வைத்துக்கொண்டு “கேக் வேணும் கேக் வேணும்” என்று டேபிளில் தட்ட ஆரம்பித்தாள். அவளை பார்த்த மற்றவர்களும் ஆளுக்கு ஒரு பிளேட் எடுத்து கொண்டு அதே போல் டேபிளில் தட்டியபடி இருந்தனர். அதைக்கண்ட சூர்யாவின் தாய் “இருங்க இருங்க 2 மினிட்ஸ் கட் பண்ணி கொண்டு வந்துடுறேன் சூடு கொஞ்சம் ஆறட்டும்” என்று கூறி வேகமாக கேக்கை கட் செய்து அனைவருக்கும் பரிமாறினார்.

எல்லோரும் கேக்கை ரசித்து உண்ண மது மட்டும் “ஆன்ட்டி நான் உங்களுக்கு ஒரு டிப்ஸ் தரேன் அது மாதிரி பண்றீங்களா”.
மதுவின் சமையல் ஆர்வம் தெரிந்தவர் என்பதால் அவரும் “ஆம்” என்பது போல் தலையசைக்க, மற்ற நால்வரும் கேக்கை உள்ளே தள்ளியபடியே " பாருடா வந்துட்டாங்க செஃப் தாமு ஐடியா கொடுக்க "என்றனர்.
அவர்களை முறைத்துப் பார்த்தவள் " நீங்க சொன்னாலும் சொல்லல நாளும் ஒரு நாள் இல்லை ஒரு நாள் செஃப் தாமுக்கே சவால் விடற அளவு சமைப்பேன் அப்போ யாராவது வந்து என்கிட்ட அது செஞ்சு குடு இது செஞ்சு குடுனு சொல்லுங்க அப்போ இருக்கு உங்களுக்கு” என்றவள்.

சூர்யாவின் தாயிடம் “ஆன்ட்டி நீங்க இப்படி வெண்ணிலா கேக் செய்யறது விட்டுட்டு இந்த கலர் கலரா கேக் செய்கிறார்களே அது மாதிரி ஏன் பண்ண கூடாது எனக்கு புடிச்ச பட்டர்ஸ்காட்ச், நம்ம பூஜா க்கு புடிச்ச சாக்லேட் சூர்யாக்கு புடிச்ச வெண்ணிலா இப்படியே நீங்க ட்ரை பண்ணலாமே” என்று யோசனை கூறினாள்.

சூர்யாவின் தாய் “இது கூட நல்ல ஐடியாவா இருக்கு அடுத்த டைம் உங்க ஒவ்வொருக்கும் புடிச்ச ஃப்ளேவர்ல ஒரே கேக்காக செய்து தருகிறேன்”.

சூர்யாவோ வெளிப்படையாகவே தலையிலடித்துக் கொண்டவள் “எனக்குன்னு நல்லா வந்து சேர்ந்து இருக்கீங்க பாரு " என்றவள் கேக் சாப்பிட ஆரம்பித்து விட்டாள்.

அடுத்ததாக அனைவரும் சூர்யாவின்அறையில் கூடி “மிஷன் யமுனா” பற்றி தீவிரமாக ஆலோசித்து கொண்டிருக்க ப்ரீத்தியோ மனதினுள் “சமோசாவை கொட்ட சொல்றாங்களே பழிவாங்க யாராவது சாப்பிடற பொருளை வேஸ்ட் பண்ணுவாங்களா இதை சொன்னா எல்லோரும் நம்மைதான் திட்டுவாங்க சரி அமைதியாக இருப்போம் ஆனால் ஒரு சமோசாவாது கீழே விழாத மாதிரி பத்திரமா பாத்துக்கணும்” முடிவெடுத்துவிட்டு அப்பாவியாக அமர்ந்திருந்தாள்.

ஒருவழியாக அனைவரும் திட்டம் போட்டு முடித்துவிட்டு கொஞ்ச நேரம் வீடியோ கேம் விளையாடிவிட்டு அவரவர் வீட்டிற்கு கிளம்பினர்.

பூஜா வீட்டுக்குள் நுழைந்த நேரம் அவளது அப்பத்தா அவர் மகனிடமும், மருமகளிடமும் மாலை நடந்த நிகழ்வை அப்படியே ஒப்பித்து கொண்டு இருந்தார்.

பூஜாவின் தாய் மாமியாரின் பேச்சை கேட்டு மகளை முறைக்க அவளது தந்தையோ " விடுங்கம்மா சின்ன பொண்ணு பேசறதை போய் பெருசா எடுத்துக்கிட்டு.அவளை இவ்ளோ குறை சொல்ற நீங்கதான் அவளை பார்க்காம இருக்க முடியலன்னுதான் கிராமத்துல இருந்து இங்க வந்து இருக்கீங்க. அப்புறம் என்ன போங்க போய் ரெஸ்ட் எடுங்க " என்று சொல்லி அனுப்பிவிட்டார். பூஜாவோ நமுட்டு சிரிப்போடு அப்பத்தாவை பார்த்தவள் பெற்றோருக்கு தெரியாமல் அப்பத்தாவிற்கு பழிப்பு காட்டிவிட்டு தந்தையை கட்டி கொண்டாள். மற்றவர்களுக்கும் மீதி நாள் தங்கள் குடும்பத்தினருடன் சந்தோஷமாக சென்றது.
மறுநாள் காலை ஐவரும் சைக்கிள் நிறுத்தும் இடத்தில் யமுனாவிற்காக காத்திருந்தனர்.

யமுனா தன் சைக்கிளை அதன் இடத்தில் நிறுத்திவிட்டு வகுப்பை நோக்கி செல்ல அவள் சென்றதை உறுதிபடுத்தி கொண்ட ஐவரும் தங்கள் பிளானை நடைமுறைபடுத்த ஆரம்பித்தனர். அதன்படி அபி தன் தோழிகளை பார்த்து " நான் போய் ஊக்கு வைத்து குற்றி அவள் சைக்கிள் டயரை பஞ்சர் ஆக்குகிறேன். நாலு பேரும் கவர் பண்ணும் படி இந்தப்பக்கமும் அந்தப்பக்கமும் யாரும் வருகிறார்களா என்று பாருங்கள் " என்று சொல்லி சென்றவள் தன் பணியை செவ்வனே செய்து முடித்திருந்தாள்.

நெக்ஸ்ட் ஆபரேஷன் பிரேக் டைமில் மது, சூர்யா இருவரும் செய்ய வேண்டும். அதாவது பிரேக் டைமில் எல்லோரும் வெளியே சென்றவுடன் மது யமுனாவின் டிபனை காலி செய்ய வேண்டும் அதே போல் சூர்யா அவளின் நோட்டை கிழிக்க வேண்டும். மற்ற மூவரும் கிளாஸ்ஸிற்கு வெளியே நின்று யாரும் வருகிறார்களா என்று பார்க்க வேண்டும். வெற்றிகரமாக மூன்று ஆப்ரேசனை முடித்த திருப்த்தியில் ஐவரும் இப்போது கேன்டீன் சென்றனர்.

கேண்டினில் அவர்கள் அடுத்த பிளானை எக்ஸிகியூட் செய்ய ஆரம்பித்தனர் .

அடுத்த பிளான் ப்ரீத்தி சமோசா வாங்கி வரும்போது எதிரில் வரும் யமுனா மீது சமோசா சட்னியை கொட்ட வேண்டும் அதனால் அபி, ப்ரீத்தி , பூஜா மூவரும் சமோசா வாங்க கிளம்பினர்.சூர்யாவும் , மதுவும் அவர்கள் இடத்தில் அமர்ந்து நடப்பதை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தனர்.

மூவரும் சமோசா வாங்கி வரும்போது எதிரில் யமுனா வந்தாள்.அவளை பார்த்த உடனே அபி, ப்ரீத்தியிடம் " கரெக்டா அவ தலையில் கொட்டணும் புரியுதா " என்று முணுமுணுப்பாக சொல்லிக்கொண்டு வர ப்ரீத்தியோ கடைசி நிமிடம் சமோசா மேல் கொண்ட ஆசையால் " முடியாது " என்று இருந்தாள்.

ப்ரீத்தி முடியாது என்ற உடன் மற்ற இருவரும் " ஏன் " என்று கேட்க " சமோசா வேஸ்ட் ஆகிடும்ல " என்றாள்.

ப்ரீத்தியின் பதிலில் கடுப்பான அபி " இவ வேலைக்கு ஆக மாட்டா நாமே ஏதாவது செய்தால்தான் உண்டு " என்ற முடிவிற்கு வந்தவள் பூஜாவை பார்த்து கண் அசைத்தாள்.

அபியிம் கண் அசைவை புரிந்து கொண்ட பூஜாவும் யமுனா தங்கள் அருகில் நெருங்கி வரும்போது ப்ரீத்தியின் காலை வாரி விட்டாள்.கையில் சமோசாவுடன் தடுமாறிய ப்ரீத்தி யமுனா மீது விழுந்தாள்.

ப்ரீத்தி திடிரென்று இப்படி விழுவாள் என்று எதிர் பார்க்காத யமுனா அப்படியே விழ அவள் கையில் வைத்திருந்த சமோசா சட்னி அவள் முகத்தில் தெறித்தது என்றாள் ப்ரீத்தி வைத்திருந்த சட்னி அவள் தலையில் கொட்டி இருந்தது நொடி நேரத்தில் இவையாவும் நடந்து இருக்க யமுனாவும் சரி அங்கிருந்த மற்றவர்களும் சரி நடப்பதை அறிந்து கொள்ளும் முன் அபியும், பூஜாவும் ப்ரீத்தியை இழுத்து செல்ல ஆரம்பித்தனர்.ப்ரீத்தியோ " ஐயோ என் சமோசா " என்று கத்த அதை மற்ற இருவரும் கண்டுகொள்ளாமல் திரும்ப அங்கு யமுனாவின் தோழிகள் ஓடி வருவதை பார்த்து வேகமாக ப்ரீத்தியை இழுத்து கொண்டு அங்கிருந்து ஓடி இருந்தனர் .

யமுனாவின் அருகில் வந்த தோழிகள் அவளை பார்த்து " என்னாச்சுடி " என்று கேட்க அவளோ " ஒன்னும் இல்லை விழுந்துட்டேன் " என்று சொல்லி முகத்தில் பட்ட சட்னியை கழுவ சென்றுவிட்டாள்.

கடைசியாக பூஜாவின் முறை. அனைவரும் கிரவுண்டில் விளையாட சென்றனர். அப்போது யாருக்கும் தெரியாமல் பூஜா யமுனாவின் மேல் இங்க் அடிக்க வேண்டும்.

யமுனா தனியாக வரும் நேரத்திற்கு ஐவரும் காத்திருந்தனர்.இவர்களின் பொறுமையை வெகுநேரம் சோதித்த பிறகே அவள் ரெஸ்ட் ரூம் செல்ல தனியாக சென்றாள்.

நால்வரும் பூஜாக்கு கட்டை விரலை உயர்த்தி ஆல் த பெஸ்ட் சொல்லிவிட்டு மறைவாக நின்று கொண்டனர்.

பூஜாவும் யமுனாவின் பின்புறத்தில் இங்க் அடித்துவிட்டு மகிழ்ச்சியில் துள்ளி கொண்டு திரும்ப அங்கே அவளை முறைத்துக் கொண்டு நின்றிருந்தான் யமுனாவின் அண்ணன்.பூஜாவின் சைட்.அவனை பார்த்து ஷாக் ஆகி நின்றவள் திரும்பி தன் தோழிகளை தேட அவர்களோ முதலிலேயே ஓடி இருந்தனர்.

ஹையோ இப்போது என்ன செய்வது என்று யோசித்தவள் ஒரு யோசனையும் வராமல் போக அவனைப் பார்த்து கேவலமாக சிரித்துவிட்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தாள். இப்படியே இவர்கள் பள்ளி வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்று கொண்டு இருக்க, இவர்களை கலவரப்படுத்த என்றே அந்த நாளும் வந்து சேர்ந்தது.

வண்ணங்கள் தொடரும்....🌈🌈🌈🌈🌈
 
Last edited by a moderator:

PAPPU PAPPU

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
received_2700709040180735.jpeg
வண்ணம் 4 :

அன்று மதிய உணவு இடைவேளையின் போது ரெஸ்ட் ரூம் செல்வதாக சூர்யாவிடம் சொல்லிவிட்டு மற்ற நால்வரும் சென்றனர்.அவர்களின் எதிர் திசையில் வந்து கொண்டிருந்தான் அப்பள்ளியில் பதினோராம் வகுப்பு படித்து கொண்டிருக்கும் மாணவன் ஒருவன்.

எதேர்ச்சையாக அவர்களை பார்த்தவன், சினேக சிரிப்புடன் அவர்களின் அருகில் வர ஆரம்பித்தான். தங்களை பார்த்துதான் அந்த மாணவன் வருகிறான் என்பதை தெரிந்து கொண்ட மது “அவன் என்கிட்டதான் பேச வரான்” என்று சொல்ல அபியும், பூஜாவும் அவளை முறைத்து கொண்டே “இல்லை, இல்லை என்கிட்டதான் பேச வரான்” என்று ஒரே நேரத்தில் சொன்னார்கள்.இப்படி மூவரும் மாத்தி மாத்தி சண்டைபோட்டு கொண்டு இருக்கும் போது, இவர்கள் சண்டையை பார்த்த ப்ரீத்தியோ “சமோசாக்கு சண்டை போட்டாலும் பரவால்ல இவன்கிட்ட பேசறத்துக்கு போய் சண்டை போட்டுட்டு இருக்கீங்களே” என்று சொல்ல மூவரும் ஒரு சேர அவளை முறைத்தனர். அவர்களின் பார்வையில் கப்பென்று வாயை மூடி கொண்டு ' சமோசா அருமை தெரியாதவளுங்க ' என்று மனதுக்குள் கவுண்டர் அடித்து கொண்டாள்.

பின் ஒருவழியாக மூவரும் தங்களுக்குள் பேசி சமாதானமாகி ஒன்றாக “ஹாய்” சொல்லி பேச ஆரம்பிப்பது என்று முடிவெடுத்து கொண்டனர்.

இங்கு கேன்டீன் அருகில் தாங்கள் எப்போதும் சாப்பிடும் இடத்தில் அமர்ந்து தோழிகளுக்காக காத்திருந்த சூர்யாவிற்கு பசி அதிகமாக பொறுமை இழந்தவள், “ரெஸ்ட் ரூம் போயிட்டு வரேன்னு சொல்லிட்டு போனாங்க இன்னும் ஆளையே காணாம், இவ்ளோ நேரம் என்ன பண்ணிட்டு இருக்காங்கனு கடுப்பாகி அவர்களை திட்டி கொண்டே கிரௌன்ட்டிற்கு வந்துவிட்டாள்.

தோழிகளை தேடி வந்தவளின் கண்களை சுழல விட அவள் கண்கள் கண்ட காட்சியில் அதிர்ந்தாள்.உடனே வேகமாக அவர்களை நோக்கி ஓடியவளின் மனதில் இத்தனை நாளா, பசங்களை கலாய்க்கிறது, பாக்கறதுனு மட்டும் இருந்தாங்க இன்னைக்கு பேசவே போய்ட்டாங்க இதுங்கள என்னதான் பண்றதோ தெரியலையே என்ற புலம்பலுடன் அவர்களை நெருங்கினாள்.

அந்த பையன் இவர்கள் அருகில் வந்த அதே நேரம் சூர்யாவும் அங்கு ஆஜரானாள். அவளை பார்த்த மூவரும் “ஹய்யயோ”….. என்று மனதில் நினைத்து கொண்டு இருக்க அவர்களின் அருகில் வந்தவனின் கண்களோ அதிகமாக மின்னியது. அவனை கணக்கில் எடுத்து கொள்ளாத சூர்யா தோழிகளை முறைத்து கொண்டு நிற்க மற்றவர்களோ “இவ பாத்துட்டாளா இனி அட்வைஸ்பண்ணியே சாகடிப்பாளே” என்று நினைத்து கொண்டு இருந்தனர்.

அருகில் வந்த பையனோ சூர்யா தன்னை கவனிக்கவில்லை என்று உணர்ந்து கடுப்பாகி, அவனும் அவளை தவிர்த்து மற்றவர்களை பார்த்து நட்ப்பிற்கான அழைப்பாக“ஹாய் ” என்றான்.அவர்கள் மூவரும் பதில் கூறும் முன் சூர்யா முந்தி கொண்டு ப்ரீத்தியை பார்த்து “இன்னைக்கு ரக்சாபந்தன்ல ‘அண்ணாக்கு’ ராக்கி கட்டணும்னு சொன்னாங்களே அது இந்த அண்ணாதானே” என்று ‘அண்ணாவில்’ அழுத்தம் கொடுத்து ‘ஆமாம்னு’ சொல் என்ற கட்டளை குரலுடன் கேட்டாள்.அவளும் பேந்த பேந்த விழித்து கொண்டு ‘ஆமாம் ஆமாம்’ என்னும் விதமாக தலையை ஆட்டினாள். ப்ரீத்தியின் பதிலில் மற்ற மூவரையும் நக்கலாக பார்த்து சிரித்து கொண்டே தன் பிலோபாம் பாக்கெட்டில் இருந்து ராக்கி கயிறை வெளியில் எடுத்தாள்.

சூர்யா ராக்கி கயிறை வெளியில் எடுப்பதை பார்த்த மற்ற மூவரும் கண்கள் வெளியே தெறித்து விடும் அளவு அதிர்ச்சியாகி விழித்தனர். மனதிலோ “ஹய்யோ நம்ம சைட் மட்டும்தான் அடிச்சுட்டு இருந்தோம் இவ அதுக்கும் அண்ணான்னு சொல்லி ஆப்பு வச்சுடுவா போலையே” என்று ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டு நின்றனர்.

சூர்யாவின் பேச்சை கேட்ட அந்த மாணவனோ கடுப்பாகி “ராக்கி கட்டினாலும் இல்லை என்றாலும் அவர்கள் எனக்கு தங்கைதான்” என்றவன் ஒரு முழு நிமிடம் அவளின் கண்களை ஆழ்ந்து பார்த்து “அவங்க எனக்கு ராக்கி கட்டட்டும் உனக்கு நான் தாலி கட்டவா” என்று சொல்ல அவன் சொன்னதைக் கேட்டு அங்கிருந்த அனைவரும் அதிர்ந்து நின்றனர் என்றால், சூர்யாவோ முதலில் அதிர்ந்தவள் பின் அங்கேயே மடங்கி அமர்ந்து அழ ஆரம்பித்துவிட்டாள்.


சூர்யா அழுவதை பார்த்தவன் “அப்போதுதான் தன் வார்த்தைகள் வரம்பு மீறியதை உணர்ந்து தவிப்புடன் நின்றான். அவன் கூறியதை கேட்ட மற்றவர்கள் சூர்யா அழுகையில்தான் தங்கள் அதிர்ச்சியில் இருந்து மீண்டு தன்னிலை அடைந்தனர்.

அபி அவள் அழுவதை பார்த்து “அவன் தங்கச்சின்னு சொன்னதுக்கு நம்மதான் அழணும் இவ எதுக்கு அழறா” என்று கேட்க மற்ற இருவரும் ஒரு சேற “அதானே” என்றார்கள்.

அவள் தொடர்ந்து அழுவதை பார்த்த மது அபியிடம் “ஏன்டி இவ எதுக்கு இப்புடி அழுதுட்டு இருக்கா?“அழுகையை எப்போது நிப்பாட்டுவாள்? எனக்கு வேற பசிக்குது போய் முதல்ல சாப்பிடனும்” என்று அப்பாவியாக சொல்ல அவளை முறைத்தாள் அபி.

அவளின் முறைப்பை பார்த்த மது “ஏன்டி என்னை இவ்வளவு பாசமா பாக்குற” என்று புரியாமல் கேட்க அபியோ “இங்க இவ அழுதுட்டு இருக்கா உனக்கு பசிக்கிறதா” என்று பல்லை கடித்து முணுமுணுத்தவளின் பார்வை வட்டத்தில் விழுந்தார் அவர்களது விளையாட்டு ஆசிரியர்.

‘ஹய்யயோ’ “மிஸ் வர்றாங்க நம்ம இருக்கற பக்கம்தான் வர்றாங்க ஏய்…… சூர்யா எந்திரிடி என்றவள் அந்த மாணவனை பார்த்து " நீங்க போங்க "சீக்கிரம் என்று அவசரப்படுத்த அவனோ சூர்யா அழுவதையே தயக்கத்தோடு பார்த்து கொண்டு நின்றானே ஒழிய அந்த இடத்தை விட்டு நகரவில்லை.

' ஹய்யோ மிஸ் வர்றங்களே இவன் வேற நகரமாட்டிக்கிறானே ' என்று மனதில் தோன்றிய படபடப்புடன். " சூர்யா முதல்ல எந்திரிச்சு கண்ணை துடைத்து சாதாரணமாக இரு இல்லை கூண்டோடு மாட்டிக்கொள்வோம் "என்றாள் உதறலுடன்.

அபியின் பேச்சில் ஒருவாரு தன்னை சமாளித்த சூர்யா கண்களை நன்றாக துடைத்து கொண்டு பூஜாவின் அருகில் போய் நிற்பதற்கும் ஆசிரியர் அவர்களிடம் வருவதற்கும் சரியாக இருந்தது.

ஆசிரியர் அங்கு நின்றிருந்தவர்களை பார்த்து சாப்பிட போகாமல் " இங்கே என்ன செய்றீங்கள் " என்று பொதுவாக கேட்டார்.

ஆசிரியரின் கேள்வியில் அங்கிருந்தவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு " கோரசாக ஒன்னுமில்ல மிஸ் " என்று சொல்ல அந்த மாணவனுக்கோ மனம் படபடத்து போனது. விளையாட்டாகப் பேசப்போய் வார்த்தையில் ஏற்பட்ட திடீர் அதிர்வுகளால் உறைந்து நின்றிருந்தான்.

அவர்களின் திருட்டு முழியையும் சூர்யாவின் அழுது சிவந்த முகத்தையும் பார்த்தவருக்கு சந்தேகம் ஏற்பட அங்கு திரு திருவென்று விழித்து கொண்டு நின்றிருந்த ப்ரீத்தியை பார்த்தவர் மிரட்டும் தொனியில் " இங்கு என்ன நடந்தது சொல்லு " என்று அழுத்தமாகக் கேட்டார்.

ஆசிரியர் கேட்ட தொனியிலேயே பயந்துபோன ப்ரீத்தி தன் தோழிகளை திரும்பிப்பார்க்க அவர்கள் விழிகளை உருட்டி வேண்டாம் என்பது போல் சைகை செய்ய அது பயத்தில் இருந்த அவளுக்கு புரியாமல் போனது ப்ரீத்தியிடம் இருந்து பதில் வராமல் போக மீண்டும் ஒரு முறை அழுத்தமாக தன் குரலை உயர்த்தி " அங்கு என்ன பார்வை " என்று மிரட்டினார்.

' ஐயோ உளற போறாளே ' என்று அனைவரும் மனதில் அலறினர். பின் ஒருவழியாக மது மட்டும் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு " இல்ல மிஸ் " என்று சொல்ல வர அவளை கைநீட்டி தடுத்து ப்ரீத்தியை பார்த்து " நீ சொல்லு " என்றார். ' நம்மளை விட்டு தொலைய மாட்டேங்கிதே இந்த மிஸ்ஸு ' என்று மனதிற்குள் பயந்தவள் அனைத்தையும் உளறிக் கொட்ட கோவமான ஆசிரியர் அவர்கள் அனைவரையும் பிரின்ஸிபள் அறைக்கு வாங்க என்று அழைத்து சென்றார்.

ஆசிரியர் முன்னாள் செல்ல பின்னால் வந்த ஐவரில் பூஜா ப்ரீத்தியை பார்த்து " ஏன்டி உண்மைய சொன்ன " என்று முறைத்துக் கொண்டே கேட்க, அவளோ "ஒரு புலோல உண்மை வந்துருச்சுடி "என்றாள் பாவமாக.

அபியோ " உன் புலோவுல இடி விழ இப்போ பாரு எல்லோரும் மாட்ட போறோம் " என்றாள். அபியின் பேச்சை கேட்ட பூஜா " ஆமாம் டி அம்மா, அப்பாவ வீட்ல இருந்து கூட்டி வர சொல்ல போறாங்க. என்னோட அப்பாவைக்கூட சமாளிச்சுடுவேன் எங்க வீட்ல இருக்கே ஒரு கிழவி அதை நெனச்சாலே எனக்கு பக்கு பக்குங்குது " என்று சொல்ல மதுவோ " உங்க வீட்டுலையாச்சும் கிழவி தாண்டி என் வீட்டுல இருக்கே உடன்பிறப்புன்னு உறுப்புடாம போனது எப்போட சாக்கு என்ன மாட்டி விடலாம் நினைக்கும் இனி இதையே வருஷ பூரா சொல்லி காமிப்பானே " மாற்றி மாற்றி பேசிக்கொண்டே பிரின்சிபல் அறைக்கு வந்தனர். அவர்களை வெளியில் நிற்க சொல்லிவிட்டு ஆசிரியர் மட்டும் முதலில் உள்ளே சென்றார்.

பிரின்ஸிபல் அறைக்குள் சென்ற ஆசிரியர் அனைத்தையும் அவரிடம் கூறி இவர்கள் பெற்றோர்களை அழைத்து பேசலாம் என்று கூறினார்.உள்ளே வந்த 6 பேரையும் கூர்மையாக பார்த்த பிரின்சிபல் " என்ன உங்கள் பெற்றோரை வர சொல்லலாமா " என்று கேட்க அனைவரின் முகமும் பயத்தில் வெளுத்தது ஒருவனை தவிர, அதை கவனித்த பிரின்சிபல் அந்த மாணவனை அழுத்தமாக பார்க்க ஒரு நொடி தலை குனிந்தவன் பின் ஒரு முடிவிற்கு வந்தவனாக அவர்கள் அனைவருக்கும் முன் வந்து நின்று " சார் தவறு முழுவதும் என்னுடையதுதான் அவர்கள் மேல் தப்பு இல்லை எந்த பனிஷ்மென்டாக இருந்தாலும் எனக்கு கொடுங்கள் " என்று அவர் கண்ணை பார்த்து கூறினான்.

அந்த மாணவனின் கண்ணை கூர்ந்து பார்த்தவரின் அனுபவ அறிவு சொன்னது அவனது தவறை அவன் உணர்ந்துவிட்டான் என்று.சரி அவனிடம் தனியாக பேசி கொள்ளலாம் என்ற முடிவிற்கு வந்தவர் தன்னையே திகிலான பார்வை பார்த்து கொண்டு இருந்த ஐவரையும் பார்த்து வகுப்பிற்கு போக சொல்ல அவர்களும் ஜஸ்ட் மிஸ் நல்லவேளை காப்பாத்திட்டான். தப்பிச்சோம்டா சாமி என்று ஆளாளுக்கு ஒன்றை மனதுக்குள் நினைத்தவர்கள் விட்டால் போதும் என்று தங்களது வகுப்பிற்கு ஓடி இருந்தனர்.

அவர்கள் மேல் தப்பிருக்கிறதா இல்லையா என்று அவர்களுக்கே தெரியாத போது இப்போதைக்கு தப்பித்தால் போதும் என்ற மனநிலைதான் இருந்தது எட்டாம் வகுப்பு படிக்கும் அவர்களுக்கு. அன்றைய பொழுது திகிலாகவே செல்ல அடுத்த நாள் பள்ளி சென்றவர்களுக்கு இடியாக வந்தது அந்த செய்தி.

எப்போதும் குறும்போடும் குதூகலத்தோடும் பள்ளிக்கு செல்பவர்கள் அன்று ஏனோ அமைதியாக சென்றவர்கள் தாங்கள் எப்போதும் அமரும் இடத்தில் அமர்ந்திருக்க அவர்களை நோக்கி கோபமாக வந்தாள் யமுனா. அவளை யாரும் கவனிக்காமல் இருக்க அவர்கள் எதிரில் வந்து நின்றவள் சரமாரியாக திட்ட ஆரம்பித்தாள்.
“இப்போது உங்களுக்கு சந்தோஷமா?” என்று கேட்க . நால்வரும் இவள் எதற்கு இப்படி பேசுகிறாள் என்று புரியாமல் விழித்து கொண்டு இருந்தனர். யமுனா அவர்களின் புரியாத நிலை எல்லாம் கவனத்தில் கொள்ளாமல். “இப்படி அவனை டிசி வாங்கிட்டு போக வச்சிட்டீங்களே” என்று சொல்ல அப்போதுதான் அவர்களுக்கு புரிந்தது இவள் கத்துவது நேற்று நடந்த நிகழ்விற்காக என்று.

“என்ன அந்த பையன் டிசி வாங்கிட்டு போய்விட்டானா” என்று அனைவரும் அதிர்ந்து கேட்க. “சும்மா நடிக்காதிங்க அவன நீங்க எல்லோரும்தானே மிஸ்கிட்ட சொல்லி பிரின்சிபல் ரூம்க்கு அழைச்சுட்டு போனீங்க.அப்புறம் எப்புடி உங்களுக்கு தெரியாமல் இருக்கும்” என்று மேலும் மேலும் எகிறி கொண்டுவர, அவளின் கத்தலை பார்த்து கடுப்பான பூஜா “இங்க பாரு தேவை இல்லாம பேசாத அவங்க பண்ணுனது தப்பு அதனால நாங்க மிஸ்கிட்ட சொன்னோம்” என்று சொன்னாள்.

" அவன் பண்ணுனது தப்புதான் அதற்காக மிஸ்ட்ட சொல்லி மாட்டி வைப்பிங்களா உங்களாலதான் அவன் போனான் " என்று மீண்டும் சொன்னதையே திரும்ப சொல்ல அவளின் பேச்சை கை நீட்டி தடுத்த அபி " சொன்னதையே திருப்பி திருப்பி சொல்லிட்டு இருக்காதா அவங்க பண்ண தப்புக்கு மிஸ்க்கிட்ட சொன்னோம் அவளோதான் அவங்க டிசி வாங்கிட்டு போவாங்கனு நாங்களும் எதிர்ப்பார்க்கவில்லை " என்று சொல்லும்போதே சூர்யா கண்களில் இருந்து கண்ணீர் வர ஆரம்பித்து இருந்தது.

" அவங்க பண்ணுனது தப்புதான் அதுக்காக மிஸ்கிட்ட சொல்லுவீங்களா. யாரு தப்பு பண்ணினாலும் சொல்லுவீங்களா எங்க தைரியம் இருந்தா என்னை சொல்லுங்க பார்ப்போம் " என்று நக்கலாக கூற. அவளை கிண்டலாக பார்த்த ப்ரீத்தி "உன்னை கம்பளைண்ட் பண்ணுவதற்கான தைரியம் எங்களுக்கு இருக்கு இங்கயே நிற்க உனக்கு தைரியம் இருக்கா ஏன்னா உனக்கு பின்னாடி மிஸ் வர்றாங்க " என்று சொல்ல அதிர்ந்த யமுனா பின்னாடி திரும்பி பார்க்க அவர்களது பிஇடி ஆசிரியர் வந்து கொண்டிருந்தார். அவரை பார்த்து பயந்த யமுனா " உங்களை அப்புறம் கவனித்து கொள்கிறேன் " என்றவள் அடுத்த நிமிடம் சிட்டாக பறந்து இருந்தாள்.
“ஹேய் ரொம்ப தைரியமானவதானே நீ எங்க ஓடுற நில்லுடி. எங்களுக்கு தைரியம் இருக்கானு கேட்டுட்டு நீ எங்க ஓடுற” என்று ப்ரீத்தி கத்தியது காற்றோடு கலந்து போனது. “ விடுடி அவ ஒரு டம்மி பீஸ் அவகிட்ட போய் பேசிக்கிட்டு” என்று பூஜா சொல்ல, ப்ரீத்தியோ “அவகிட்ட பில்டிங் ஸ்ட்ரோங் பேஸ்மண்ட் வீக்” என்று சொல்லி இருவரும் “ஹைபை” அடித்து கொண்டனர்.

அபி யோசனையோடு இருக்க அப்போதுதான் தன் தந்தையுடன் காரில் இருந்து இறங்கி வந்தாள் மது.தோழிகள் அனைவரும் தாங்கள் எப்போதும் அமரும் இடத்தில் இருப்பதை பார்த்து தானும் அவர்களிடம் வந்தவள் “ஹேய் இங்க என்ன…. ..பன்……..என்று கேட்க வந்தவள் சூர்யாவின் முகம் வாடி கண்ணீர் வருவதை பார்த்து வேகமாக அவளிடம் சென்று “என்ன ஆச்சுடி எதுக்கு இப்போ அழற” என்று கேட்க அப்போதுதான் அனைவருமே அவளை கவனித்தனர்.

தங்களுக்குள் பேசிக்கொண்டு இருந்த பூஜா , ப்ரீத்தி இருவரும் அவளிடம் வந்தவர்கள் அவளை சமாதானபடுத்த முயற்சிக்க அவர்களின் எந்த பேச்சும் அவளிடம் எடுபடவில்லை.மது பொறுமை இழந்து மற்றவர்களிடம் “என்ன நடந்தது” என்று கேட்க அவர்கள் தாங்கள் பள்ளியின் உள்ளே வந்ததில் இருந்து யமுனா பேசி சென்றது வரை சொல்ல அவளுக்கும் கோபம்தான் வந்தது. “இவ எதுக்குடி அடிக்கடி நம்ம வழிலேயே வரா” என்று யோசனையோடு கேட்க, அபியும் அதையே யோசித்து கொண்டு இருந்தவள் மது கேட்கவும் “அதுதான் எனக்கும் யோசனையா இருக்கு. அன்னைக்கும் தேவையில்லாம நம்மை மிஸ்கிட்ட போட்டு கொடுத்து முட்டி போட வச்சா, இன்னைக்கும் வந்து திட்றா எதனாலையே இருக்கும்” என்று யோசிக்க ஆரம்பித்தனர்.
சூர்யா அழுது கொண்டு இருப்பது அபிக்கு கோபத்தை உருவாக்க “கொஞ்சம் அழாம இருக்கியா, நேத்து மாதிரி எதுவும் பிரச்சனையை இழுத்து வைக்காதே, அங்க பாரு மிஸ் வார்றாங்க” என்று சொல்ல கண்களை அழுத்தி துடைத்து கொண்ட சூர்யா எதுவும் சொல்லாமல் அவர்கள் எப்போதும் அமரும் இடத்தில் சென்று அமர்ந்துவிட்டாள். அவள் பின்னோடு வந்த அவளது தோழிகளும் “ச்ச. . தேவை இல்லாம யார் மேலோ இருக்கும் கோபத்தில் இவளை திட்டிடமே என்ற குற்ற உணர்ச்சி எழ சாரிடி டென்ஷன்ல….. என்று அபி மேலும் ஏதோ சொல்வதற்குள் அவள் பேச்சை தடுத்த சூர்யா “அதை விடுடி நான்தான் அந்த பையன் இங்கிருந்து போக காரணமா” என்று கேட்க அவளை அதிர்ச்சியாக பார்த்தனர் தோழிகள்.
வண்ணம் தொடரும்....
வண்ணம் 4 :

அன்று மதிய உணவு இடைவேளையின் போது ரெஸ்ட் ரூம் செல்வதாக சூர்யாவிடம் சொல்லிவிட்டு மற்ற நால்வரும் சென்றனர்.அவர்களின் எதிர் திசையில் வந்து கொண்டிருந்தான் அப்பள்ளியில் பதினோராம் வகுப்பு படித்து கொண்டிருக்கும் மாணவன் ஒருவன்.

எதேர்ச்சையாக அவர்களை பார்த்தவன், சினேக சிரிப்புடன் அவர்களின் அருகில் வர ஆரம்பித்தான். தங்களை பார்த்துதான் அந்த மாணவன் வருகிறான் என்பதை தெரிந்து கொண்ட மது “அவன் என்கிட்டதான் பேச வரான்” என்று சொல்ல அபியும், பூஜாவும் அவளை முறைத்து கொண்டே “இல்லை, இல்லை என்கிட்டதான் பேச வரான்” என்று ஒரே நேரத்தில் சொன்னார்கள்.இப்படி மூவரும் மாத்தி மாத்தி சண்டைபோட்டு கொண்டு இருக்கும் போது, இவர்கள் சண்டையை பார்த்த ப்ரீத்தியோ “சமோசாக்கு சண்டை போட்டாலும் பரவால்ல இவன்கிட்ட பேசறத்துக்கு போய் சண்டை போட்டுட்டு இருக்கீங்களே” என்று சொல்ல மூவரும் ஒரு சேர அவளை முறைத்தனர். அவர்களின் பார்வையில் கப்பென்று வாயை மூடி கொண்டு ' சமோசா அருமை தெரியாதவளுங்க ' என்று மனதுக்குள் கவுண்டர் அடித்து கொண்டாள்.

பின் ஒருவழியாக மூவரும் தங்களுக்குள் பேசி சமாதானமாகி ஒன்றாக “ஹாய்” சொல்லி பேச ஆரம்பிப்பது என்று முடிவெடுத்து கொண்டனர்.

இங்கு கேன்டீன் அருகில் தாங்கள் எப்போதும் சாப்பிடும் இடத்தில் அமர்ந்து தோழிகளுக்காக காத்திருந்த சூர்யாவிற்கு பசி அதிகமாக பொறுமை இழந்தவள், “ரெஸ்ட் ரூம் போயிட்டு வரேன்னு சொல்லிட்டு போனாங்க இன்னும் ஆளையே காணாம், இவ்ளோ நேரம் என்ன பண்ணிட்டு இருக்காங்கனு கடுப்பாகி அவர்களை திட்டி கொண்டே கிரௌன்ட்டிற்கு வந்துவிட்டாள்.

தோழிகளை தேடி வந்தவளின் கண்களை சுழல விட அவள் கண்கள் கண்ட காட்சியில் அதிர்ந்தாள்.உடனே வேகமாக அவர்களை நோக்கி ஓடியவளின் மனதில் இத்தனை நாளா, பசங்களை கலாய்க்கிறது, பாக்கறதுனு மட்டும் இருந்தாங்க இன்னைக்கு பேசவே போய்ட்டாங்க இதுங்கள என்னதான் பண்றதோ தெரியலையே என்ற புலம்பலுடன் அவர்களை நெருங்கினாள்.

அந்த பையன் இவர்கள் அருகில் வந்த அதே நேரம் சூர்யாவும் அங்கு ஆஜரானாள். அவளை பார்த்த மூவரும் “ஹய்யயோ”….. என்று மனதில் நினைத்து கொண்டு இருக்க அவர்களின் அருகில் வந்தவனின் கண்களோ அதிகமாக மின்னியது. அவனை கணக்கில் எடுத்து கொள்ளாத சூர்யா தோழிகளை முறைத்து கொண்டு நிற்க மற்றவர்களோ “இவ பாத்துட்டாளா இனி அட்வைஸ்பண்ணியே சாகடிப்பாளே” என்று நினைத்து கொண்டு இருந்தனர்.

அருகில் வந்த பையனோ சூர்யா தன்னை கவனிக்கவில்லை என்று உணர்ந்து கடுப்பாகி, அவனும் அவளை தவிர்த்து மற்றவர்களை பார்த்து நட்ப்பிற்கான அழைப்பாக“ஹாய் ” என்றான்.அவர்கள் மூவரும் பதில் கூறும் முன் சூர்யா முந்தி கொண்டு ப்ரீத்தியை பார்த்து “இன்னைக்கு ரக்சாபந்தன்ல ‘அண்ணாக்கு’ ராக்கி கட்டணும்னு சொன்னாங்களே அது இந்த அண்ணாதானே” என்று ‘அண்ணாவில்’ அழுத்தம் கொடுத்து ‘ஆமாம்னு’ சொல் என்ற கட்டளை குரலுடன் கேட்டாள்.அவளும் பேந்த பேந்த விழித்து கொண்டு ‘ஆமாம் ஆமாம்’ என்னும் விதமாக தலையை ஆட்டினாள். ப்ரீத்தியின் பதிலில் மற்ற மூவரையும் நக்கலாக பார்த்து சிரித்து கொண்டே தன் பிலோபாம் பாக்கெட்டில் இருந்து ராக்கி கயிறை வெளியில் எடுத்தாள்.

சூர்யா ராக்கி கயிறை வெளியில் எடுப்பதை பார்த்த மற்ற மூவரும் கண்கள் வெளியே தெறித்து விடும் அளவு அதிர்ச்சியாகி விழித்தனர். மனதிலோ “ஹய்யோ நம்ம சைட் மட்டும்தான் அடிச்சுட்டு இருந்தோம் இவ அதுக்கும் அண்ணான்னு சொல்லி ஆப்பு வச்சுடுவா போலையே” என்று ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டு நின்றனர்.

சூர்யாவின் பேச்சை கேட்ட அந்த மாணவனோ கடுப்பாகி “ராக்கி கட்டினாலும் இல்லை என்றாலும் அவர்கள் எனக்கு தங்கைதான்” என்றவன் ஒரு முழு நிமிடம் அவளின் கண்களை ஆழ்ந்து பார்த்து “அவங்க எனக்கு ராக்கி கட்டட்டும் உனக்கு நான் தாலி கட்டவா” என்று சொல்ல அவன் சொன்னதைக் கேட்டு அங்கிருந்த அனைவரும் அதிர்ந்து நின்றனர் என்றால், சூர்யாவோ முதலில் அதிர்ந்தவள் பின் அங்கேயே மடங்கி அமர்ந்து அழ ஆரம்பித்துவிட்டாள்.


சூர்யா அழுவதை பார்த்தவன் “அப்போதுதான் தன் வார்த்தைகள் வரம்பு மீறியதை உணர்ந்து தவிப்புடன் நின்றான். அவன் கூறியதை கேட்ட மற்றவர்கள் சூர்யா அழுகையில்தான் தங்கள் அதிர்ச்சியில் இருந்து மீண்டு தன்னிலை அடைந்தனர்.

அபி அவள் அழுவதை பார்த்து “அவன் தங்கச்சின்னு சொன்னதுக்கு நம்மதான் அழணும் இவ எதுக்கு அழறா” என்று கேட்க மற்ற இருவரும் ஒரு சேற “அதானே” என்றார்கள்.

அவள் தொடர்ந்து அழுவதை பார்த்த மது அபியிடம் “ஏன்டி இவ எதுக்கு இப்புடி அழுதுட்டு இருக்கா?“அழுகையை எப்போது நிப்பாட்டுவாள்? எனக்கு வேற பசிக்குது போய் முதல்ல சாப்பிடனும்” என்று அப்பாவியாக சொல்ல அவளை முறைத்தாள் அபி.

அவளின் முறைப்பை பார்த்த மது “ஏன்டி என்னை இவ்வளவு பாசமா பாக்குற” என்று புரியாமல் கேட்க அபியோ “இங்க இவ அழுதுட்டு இருக்கா உனக்கு பசிக்கிறதா” என்று பல்லை கடித்து முணுமுணுத்தவளின் பார்வை வட்டத்தில் விழுந்தார் அவர்களது விளையாட்டு ஆசிரியர்.

‘ஹய்யயோ’ “மிஸ் வர்றாங்க நம்ம இருக்கற பக்கம்தான் வர்றாங்க ஏய்…… சூர்யா எந்திரிடி என்றவள் அந்த மாணவனை பார்த்து " நீங்க போங்க "சீக்கிரம் என்று அவசரப்படுத்த அவனோ சூர்யா அழுவதையே தயக்கத்தோடு பார்த்து கொண்டு நின்றானே ஒழிய அந்த இடத்தை விட்டு நகரவில்லை.

' ஹய்யோ மிஸ் வர்றங்களே இவன் வேற நகரமாட்டிக்கிறானே ' என்று மனதில் தோன்றிய படபடப்புடன். " சூர்யா முதல்ல எந்திரிச்சு கண்ணை துடைத்து சாதாரணமாக இரு இல்லை கூண்டோடு மாட்டிக்கொள்வோம் "என்றாள் உதறலுடன்.

அபியின் பேச்சில் ஒருவாரு தன்னை சமாளித்த சூர்யா கண்களை நன்றாக துடைத்து கொண்டு பூஜாவின் அருகில் போய் நிற்பதற்கும் ஆசிரியர் அவர்களிடம் வருவதற்கும் சரியாக இருந்தது.

ஆசிரியர் அங்கு நின்றிருந்தவர்களை பார்த்து சாப்பிட போகாமல் " இங்கே என்ன செய்றீங்கள் " என்று பொதுவாக கேட்டார்.

ஆசிரியரின் கேள்வியில் அங்கிருந்தவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு " கோரசாக ஒன்னுமில்ல மிஸ் " என்று சொல்ல அந்த மாணவனுக்கோ மனம் படபடத்து போனது. விளையாட்டாகப் பேசப்போய் வார்த்தையில் ஏற்பட்ட திடீர் அதிர்வுகளால் உறைந்து நின்றிருந்தான்.

அவர்களின் திருட்டு முழியையும் சூர்யாவின் அழுது சிவந்த முகத்தையும் பார்த்தவருக்கு சந்தேகம் ஏற்பட அங்கு திரு திருவென்று விழித்து கொண்டு நின்றிருந்த ப்ரீத்தியை பார்த்தவர் மிரட்டும் தொனியில் " இங்கு என்ன நடந்தது சொல்லு " என்று அழுத்தமாகக் கேட்டார்.

ஆசிரியர் கேட்ட தொனியிலேயே பயந்துபோன ப்ரீத்தி தன் தோழிகளை திரும்பிப்பார்க்க அவர்கள் விழிகளை உருட்டி வேண்டாம் என்பது போல் சைகை செய்ய அது பயத்தில் இருந்த அவளுக்கு புரியாமல் போனது ப்ரீத்தியிடம் இருந்து பதில் வராமல் போக மீண்டும் ஒரு முறை அழுத்தமாக தன் குரலை உயர்த்தி " அங்கு என்ன பார்வை " என்று மிரட்டினார்.

' ஐயோ உளற போறாளே ' என்று அனைவரும் மனதில் அலறினர். பின் ஒருவழியாக மது மட்டும் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு " இல்ல மிஸ் " என்று சொல்ல வர அவளை கைநீட்டி தடுத்து ப்ரீத்தியை பார்த்து " நீ சொல்லு " என்றார். ' நம்மளை விட்டு தொலைய மாட்டேங்கிதே இந்த மிஸ்ஸு ' என்று மனதிற்குள் பயந்தவள் அனைத்தையும் உளறிக் கொட்ட கோவமான ஆசிரியர் அவர்கள் அனைவரையும் பிரின்ஸிபள் அறைக்கு வாங்க என்று அழைத்து சென்றார்.

ஆசிரியர் முன்னாள் செல்ல பின்னால் வந்த ஐவரில் பூஜா ப்ரீத்தியை பார்த்து " ஏன்டி உண்மைய சொன்ன " என்று முறைத்துக் கொண்டே கேட்க, அவளோ "ஒரு புலோல உண்மை வந்துருச்சுடி "என்றாள் பாவமாக.

அபியோ " உன் புலோவுல இடி விழ இப்போ பாரு எல்லோரும் மாட்ட போறோம் " என்றாள். அபியின் பேச்சை கேட்ட பூஜா " ஆமாம் டி அம்மா, அப்பாவ வீட்ல இருந்து கூட்டி வர சொல்ல போறாங்க. என்னோட அப்பாவைக்கூட சமாளிச்சுடுவேன் எங்க வீட்ல இருக்கே ஒரு கிழவி அதை நெனச்சாலே எனக்கு பக்கு பக்குங்குது " என்று சொல்ல மதுவோ " உங்க வீட்டுலையாச்சும் கிழவி தாண்டி என் வீட்டுல இருக்கே உடன்பிறப்புன்னு உறுப்புடாம போனது எப்போட சாக்கு என்ன மாட்டி விடலாம் நினைக்கும் இனி இதையே வருஷ பூரா சொல்லி காமிப்பானே " மாற்றி மாற்றி பேசிக்கொண்டே பிரின்சிபல் அறைக்கு வந்தனர். அவர்களை வெளியில் நிற்க சொல்லிவிட்டு ஆசிரியர் மட்டும் முதலில் உள்ளே சென்றார்.

பிரின்ஸிபல் அறைக்குள் சென்ற ஆசிரியர் அனைத்தையும் அவரிடம் கூறி இவர்கள் பெற்றோர்களை அழைத்து பேசலாம் என்று கூறினார்.உள்ளே வந்த 6 பேரையும் கூர்மையாக பார்த்த பிரின்சிபல் " என்ன உங்கள் பெற்றோரை வர சொல்லலாமா " என்று கேட்க அனைவரின் முகமும் பயத்தில் வெளுத்தது ஒருவனை தவிர, அதை கவனித்த பிரின்சிபல் அந்த மாணவனை அழுத்தமாக பார்க்க ஒரு நொடி தலை குனிந்தவன் பின் ஒரு முடிவிற்கு வந்தவனாக அவர்கள் அனைவருக்கும் முன் வந்து நின்று " சார் தவறு முழுவதும் என்னுடையதுதான் அவர்கள் மேல் தப்பு இல்லை எந்த பனிஷ்மென்டாக இருந்தாலும் எனக்கு கொடுங்கள் " என்று அவர் கண்ணை பார்த்து கூறினான்.

அந்த மாணவனின் கண்ணை கூர்ந்து பார்த்தவரின் அனுபவ அறிவு சொன்னது அவனது தவறை அவன் உணர்ந்துவிட்டான் என்று.சரி அவனிடம் தனியாக பேசி கொள்ளலாம் என்ற முடிவிற்கு வந்தவர் தன்னையே திகிலான பார்வை பார்த்து கொண்டு இருந்த ஐவரையும் பார்த்து வகுப்பிற்கு போக சொல்ல அவர்களும் ஜஸ்ட் மிஸ் நல்லவேளை காப்பாத்திட்டான். தப்பிச்சோம்டா சாமி என்று ஆளாளுக்கு ஒன்றை மனதுக்குள் நினைத்தவர்கள் விட்டால் போதும் என்று தங்களது வகுப்பிற்கு ஓடி இருந்தனர்.

அவர்கள் மேல் தப்பிருக்கிறதா இல்லையா என்று அவர்களுக்கே தெரியாத போது இப்போதைக்கு தப்பித்தால் போதும் என்ற மனநிலைதான் இருந்தது எட்டாம் வகுப்பு படிக்கும் அவர்களுக்கு. அன்றைய பொழுது திகிலாகவே செல்ல அடுத்த நாள் பள்ளி சென்றவர்களுக்கு இடியாக வந்தது அந்த செய்தி.

எப்போதும் குறும்போடும் குதூகலத்தோடும் பள்ளிக்கு செல்பவர்கள் அன்று ஏனோ அமைதியாக சென்றவர்கள் தாங்கள் எப்போதும் அமரும் இடத்தில் அமர்ந்திருக்க அவர்களை நோக்கி கோபமாக வந்தாள் யமுனா. அவளை யாரும் கவனிக்காமல் இருக்க அவர்கள் எதிரில் வந்து நின்றவள் சரமாரியாக திட்ட ஆரம்பித்தாள்.
“இப்போது உங்களுக்கு சந்தோஷமா?” என்று கேட்க . நால்வரும் இவள் எதற்கு இப்படி பேசுகிறாள் என்று புரியாமல் விழித்து கொண்டு இருந்தனர். யமுனா அவர்களின் புரியாத நிலை எல்லாம் கவனத்தில் கொள்ளாமல். “இப்படி அவனை டிசி வாங்கிட்டு போக வச்சிட்டீங்களே” என்று சொல்ல அப்போதுதான் அவர்களுக்கு புரிந்தது இவள் கத்துவது நேற்று நடந்த நிகழ்விற்காக என்று.

“என்ன அந்த பையன் டிசி வாங்கிட்டு போய்விட்டானா” என்று அனைவரும் அதிர்ந்து கேட்க. “சும்மா நடிக்காதிங்க அவன நீங்க எல்லோரும்தானே மிஸ்கிட்ட சொல்லி பிரின்சிபல் ரூம்க்கு அழைச்சுட்டு போனீங்க.அப்புறம் எப்புடி உங்களுக்கு தெரியாமல் இருக்கும்” என்று மேலும் மேலும் எகிறி கொண்டுவர, அவளின் கத்தலை பார்த்து கடுப்பான பூஜா “இங்க பாரு தேவை இல்லாம பேசாத அவங்க பண்ணுனது தப்பு அதனால நாங்க மிஸ்கிட்ட சொன்னோம்” என்று சொன்னாள்.

" அவன் பண்ணுனது தப்புதான் அதற்காக மிஸ்ட்ட சொல்லி மாட்டி வைப்பிங்களா உங்களாலதான் அவன் போனான் " என்று மீண்டும் சொன்னதையே திரும்ப சொல்ல அவளின் பேச்சை கை நீட்டி தடுத்த அபி " சொன்னதையே திருப்பி திருப்பி சொல்லிட்டு இருக்காதா அவங்க பண்ண தப்புக்கு மிஸ்க்கிட்ட சொன்னோம் அவளோதான் அவங்க டிசி வாங்கிட்டு போவாங்கனு நாங்களும் எதிர்ப்பார்க்கவில்லை " என்று சொல்லும்போதே சூர்யா கண்களில் இருந்து கண்ணீர் வர ஆரம்பித்து இருந்தது.

" அவங்க பண்ணுனது தப்புதான் அதுக்காக மிஸ்கிட்ட சொல்லுவீங்களா. யாரு தப்பு பண்ணினாலும் சொல்லுவீங்களா எங்க தைரியம் இருந்தா என்னை சொல்லுங்க பார்ப்போம் " என்று நக்கலாக கூற. அவளை கிண்டலாக பார்த்த ப்ரீத்தி "உன்னை கம்பளைண்ட் பண்ணுவதற்கான தைரியம் எங்களுக்கு இருக்கு இங்கயே நிற்க உனக்கு தைரியம் இருக்கா ஏன்னா உனக்கு பின்னாடி மிஸ் வர்றாங்க " என்று சொல்ல அதிர்ந்த யமுனா பின்னாடி திரும்பி பார்க்க அவர்களது பிஇடி ஆசிரியர் வந்து கொண்டிருந்தார். அவரை பார்த்து பயந்த யமுனா " உங்களை அப்புறம் கவனித்து கொள்கிறேன் " என்றவள் அடுத்த நிமிடம் சிட்டாக பறந்து இருந்தாள்.
“ஹேய் ரொம்ப தைரியமானவதானே நீ எங்க ஓடுற நில்லுடி. எங்களுக்கு தைரியம் இருக்கானு கேட்டுட்டு நீ எங்க ஓடுற” என்று ப்ரீத்தி கத்தியது காற்றோடு கலந்து போனது. “ விடுடி அவ ஒரு டம்மி பீஸ் அவகிட்ட போய் பேசிக்கிட்டு” என்று பூஜா சொல்ல, ப்ரீத்தியோ “அவகிட்ட பில்டிங் ஸ்ட்ரோங் பேஸ்மண்ட் வீக்” என்று சொல்லி இருவரும் “ஹைபை” அடித்து கொண்டனர்.

அபி யோசனையோடு இருக்க அப்போதுதான் தன் தந்தையுடன் காரில் இருந்து இறங்கி வந்தாள் மது.தோழிகள் அனைவரும் பள்ளி வாயிலிலேயே நிற்பதை பார்த்து அவர்களிடம் வந்தவள் “ஹேய் இங்க என்ன…. ..பன்……..என்று கேட்க வந்தவள் சூர்யாவின் முகம் வாடி கண்ணீர் வருவதை பார்த்து வேகமாக அவளிடம் சென்று “என்ன ஆச்சுடி எதுக்கு இப்போ அழற” என்று கேட்க அப்போதுதான் அனைவருமே அவளை கவனித்தனர்.

தங்களுக்குள் பேசிக்கொண்டு இருந்த பூஜா , ப்ரீத்தி இருவரும் அவளிடம் வந்தவர்கள் அவளை சமாதானபடுத்த முயற்சிக்க அவர்களின் எந்த பேச்சும் அவளிடம் எடுபடவில்லை.மது பொறுமை இழந்து மற்றவர்களிடம் “என்ன நடந்தது” என்று கேட்க அவர்கள் தாங்கள் பள்ளியின் உள்ளே வந்ததில் இருந்து யமுனா பேசி சென்றது வரை சொல்ல அவளுக்கும் கோபம்தான் வந்தது. “இவ எதுக்குடி அடிக்கடி நம்ம வழிலேயே வரா” என்று யோசனையோடு கேட்க, அபியும் அதையே யோசித்து கொண்டு இருந்தவள் மது கேட்கவும் “அதுதான் எனக்கும் யோசனையா இருக்கு. அன்னைக்கும் தேவையில்லாம நம்மை மிஸ்கிட்ட போட்டு கொடுத்து முட்டி போட வச்சா, இன்னைக்கும் வந்து திட்றா எதனாலையே இருக்கும்” என்று யோசிக்க ஆரம்பித்தனர்.
சூர்யா அழுது கொண்டு இருப்பது அபிக்கு கோபத்தை உருவாக்க “கொஞ்சம் அழாம இருக்கியா, நேத்து மாதிரி எதுவும் பிரச்சனையை இழுத்து வைக்காதே, அங்க பாரு மிஸ் வார்றாங்க” என்று சொல்ல கண்களை அழுத்தி துடைத்து கொண்ட சூர்யா எதுவும் பேசாமல் அமைதியாக அமர்ந்துவிட்டாள். அவள் பின்னோடு வந்த அவளது தோழிகளும் “ச்ச. . தேவை இல்லாம யார் மேலோ இருக்கும் கோபத்தில் இவளை திட்டிடமே என்ற குற்ற உணர்ச்சி எழ சாரிடி டென்ஷன்ல….. என்று அபி மேலும் ஏதோ சொல்வதற்குள் அவள் பேச்சை தடுத்த சூர்யா “அதை விடுடி நான்தான் அந்த பையன் இங்கிருந்து போக காரணமா” என்று கேட்க அவளை அதிர்ச்சியாக பார்த்தனர் தோழிகள்.


வண்ணம் தொடரும்....
 
Last edited by a moderator:

Sonythiru

Suthisha
வண்ணம் 5 :


அபி “ஹேய் லூசு கண்டதை யோசிக்காதே அந்த ஓணான் ஒரு ஆளுன்னு அவ சொல்றதுக்கு நீ பீல் பண்ணிக்கிட்டு இருப்பியா ? ”.
சூரியா “ அவ சொன்னானு இல்ல டா, எனக்கு தீடிரென அவன் அப்படி சொல்லவும் என்ன பண்றதுனு தெரியாமல் அழுகை வந்துவிட்டது, நான் அழுவதை பார்த்து தான் மிஸ் அங்கு வந்து அதனால பிரச்சினை ஆகிடுச்சோனு ஒரு குற்ற உணர்ச்சியா இருக்கு”.
சூரியா “இதுல உன்னோட மிஸ்டேக் எதுவும் இல்ல,ரொம்ப உன்ன நீயே கன்பியூஸ் பண்ணிக்காத, இப்போ வா கிளாஸ் போகலாம்” என்று சொல்லி,வகுப்பிற்கு கிளம்பினர்.
பிரீத்தி சூரியாவின் கையை ஆதரவாக பற்றி கொண்டு முன்னே செல்ல, மற்ற மூவரும் அவர்களை பின்தொடர்ந்தனர்.
கிளாஸிற்க்கு வந்த ஆசிரியை “நாளை ஈவினிங் டூர் கிளம்பப் போகிறோம் இல்லையா சோ நாளைக்கு உங்களுக்கு ஸ்கூல் கிடையாது,அதனால ஈவினிங் நேரா ஸ்கூலுக்கே வந்திடுங்க. நான் ஆல்ரெடி உங்களுக்கு லிஸ்ட் கொடுத்தபடி தேவையான திங்க்ஸ் எல்லாம் எடுத்துட்டு வந்துருங்க எதையும் மறந்துடாதீங்க கிளைமேட் கூலா இருக்கும். சோ பி பிரிப்பேர்ட்” என்று கூறி சென்றுவிட்டார்.

நேற்று நடந்த கலேபரத்தில் டூர் விஷயத்தையே மறந்தவர்களுக்கு ஆசிரியர் சொல்லவும்தான் அதன் நினைவு வந்தது இருந்தாலும் அனைவரும் அமைதியாகவே இருந்தனர். அன்று மதியம் உணவு இடைவேளையில் கேன்டீனில் அமர்ந்திருந்தவர்கள் உணவை அலைந்து கொண்டிருந்தார்களே தவிர சாப்பிடவுமில்லை, எதுவும் பேசவுமில்லை………

அங்குள்ள அமைதியைக் கலைக்கும் பொருட்டு, பிரீத்தி “நாளைக்கு என்னென்ன திங்ஸ் எடுத்துட்டு வரணும் எல்லாம் எடுத்து வச்சுட்டீங்களா” என்று கேட்டாள்.அவளின் கேள்விக்கு அப்போதும் பதில் அளிக்காமல் அனைவரும் யோசனையுடன் அமர்ந்திருந்தனர்.
சூர்யாவோ “இல்ல நான் டூர் வரல” என்று கூற அனைவரும் அவளை அதிர்ந்து பார்த்தனர்.
அபிதான் முதலில் தன்னை சமாளித்து கொண்டு “என்ன சொல்ற இது ஏற்கனவே பிளான் பண்ணது தானே இப்போ என்னாச்சு” என்று கேட்க, அவளோ “இல்ல எனக்கு மனசு சரியா அதனால நான் இந்த டூருக்கு வரல”என்று பிடிவாதமாக மறுத்தால்.

சூர்யாவின் பேச்சில் கோபமுற்ற பூஜா “ஓகே நீ வரலலல்ல சரி நாங்களும் போகல” என்று கூற மற்றவர்களும் “ஆமா நாங்களும் போகமாட்டோம். நீயே போகலனும் போது நாங்க மட்டும் ஏன் போக வேண்டும். உன்னை தனியாக விட்டுட்டு போக எங்களுக்கு விருப்பம் இல்லை” என்று கூறியவர்கள் குரலே சொன்னது நாங்கள் சொன்னதை செய்வோம் என்று.

சூர்யாவோ “ஏன்டி இப்புடி பண்றீங்க சீரியஸாவே எனக்கு மனசு சரியில்லை. ஒரு மாதிரி கில்டி பீலிங்கா இருக்கு. ஐ குடின்ட் கம் அவுட் ஆப் தட் இன்சிடென்ட். பாவம் அந்தப் பையன் என்னால ஸ்கூல விட்டு போய் இருக்கான் அது அவனுக்கு பிளாக் மார்க் தானே” என்று வருத்தத்தோடு கூறினாள்.

சூர்யா சொல்வதை கேட்டு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மனநிலை ஏற்பட்டது என்னவோ உண்மை. ஏதோ ஒரு ஆர்வ கோளாறில் செய்திருந்தாலும் இது போல் நடக்கும் என்று அவர்களும் எதிர் பார்க்காவில்லை அல்லவா. விளையாட்டு வினையானது இவர்கள் விஷயத்தில்.

பூஜா முதலில் தெளிந்தவளாக “லிசன் சூர்யா ஃபர்ஸ்ட் அந்த பையன் பண்ணது தப்பு ஸ்கூல் படிக்கிற டைம்ல லவ், ப்ரொபோஸ் இதெல்லாம் ஓவர். நம்ம பேரன்ட்ஸ் எவ்வளவு ஹோப் நம்ம மேல வச்சு இருப்பாங்க.அது மட்டும் இல்லாம ஸ்கூல் டைம் நம்ம என்ஜோய் பண்ற டைம்மே தவிர நம்ம லைப்ப நாமளே டிசைட் பண்ற வயசும் இல்லை, நமக்கு அந்த அளவுக்கு மெட்ச்சூரும் இல்லை. “ சி” நானும் சைட் அடிப்பேன் தான் ஆனாலும் இதுவரைக்கும் ப்ரோபோசல் லவ்வுன்னு பின்னாடி போய் இருக்கேனா” என்று கூற நடுவில் பூஜா பேச்சை இடைமறித்த மது “இல்ல நம்ம தான் அவளைப் போகவிட்டு இருக்கோமா” என்று சொல்ல அவளை முறைத்துப் பார்த்த பூஜா வாயை மூடு என்று சைகையில் செய்ய இது வழக்கம்தான் என்பது போல் அவளும் ஒரு தோள் குலுக்கலில் ஒதுக்கினாள்.

சூர்யாவின் முகம் அப்போதும் குழப்பத்திலேயே இருக்க, அபியை பார்த்த பூஜா 'நீ சொல்லு 'என்பது போல் கண்களாலேயே சைகை செய்ய,அதை புரிந்து கொண்ட அபியும் கண் மூடி திறந்து தனது சம்மதத்தை சொன்னவள் சூர்யாவிடம் “அவ சொல்வது சரிதானே சூர்யா இந்த வயசுல அவர் பண்ணதும் தப்புதானே. பனிஷ்மென்ட் கொஞ்சம் அதிகம்தான் அதுக்காக நீ பீல் பண்ண ஒன்னும் இல்லை.இன்னும் சொல்ல போனால் தவறு உன் மேல் இல்லை என்றுதான் சொல்லணும் அப்புறம் எதுக்கு கில்ட்டி பீலிங்.நீ யோசிக்கற மாதிரி யோசிச்சா தப்பு எங்க மேலதான் இருக்கு நாங்க என்னமோ நெனச்சு பண்ண போய் அங்க என்னென்னமோ நடந்து போச்சு. நாங்கள்தான் கில்ட்டி பீலில் இருக்கணும்” என்றால் வாட்டமான முகத்துடன்.

அபியின் பேச்சை கேட்ட சூர்யா “ஹேய் என்னடி சொல்ற எல்லோருமே சின்ன புள்ளைங்க,அவன் வருவதைப் பார்த்து ஏதோ ஒரு ஆர்வத்தில் பேச போனா ,அதை தப்பா பயன்படுத்தி கிட்டதனால தான் அவனுக்கு பிரச்சனை” என்று தோழிகளுக்காக அவர்களிடமே மல்லுக்கு நின்றாள்.

சூர்யாவின் பேச்சை கேட்ட ப்ரீத்தி “இப்போ புரியுதா நம்ம மேல எந்த தப்பும் இல்லை அதனால தேவையில்லாமல் யோசித்து உன்னுடைய குட்டி மூளை உருகும் முன்னாடி இப்போ எதுவும் நடக்கல ஜஸ்ட் ரிலாக்ஸ் என்று அதனிடம் சொல்லிவிடு” என்றாள் கிண்டலாக. அவளை முறைத்த சூர்யா “எப்பவும் விளையாட்டுதானாடி உனக்கு” என்று பல்லை கடிக்க, அவளோ “ஈஈஈ…….” என்று அசடு வழிந்தால்.

அப்போதும் சூர்யா ப்ரீத்தியை முறைத்து கொண்டு இருக்க இருவருக்கும் இடையில் வந்த பூஜா “அவளைபற்றி நமக்கு தெரிந்ததுதானே உன் டென்ஷனை டைவர்ட் பன்றளாம் அவளை விடுடி இப்போ டூர் விஷயத்துக்கு வா. , நம்ம ஸ்கூல்ல இப்போதான் நம்மல ஃபர்ஸ்ட் டைம் வெளியில கூட்டிட்டு போறாங்க. நம்ம ஏன் அதை மிஸ் பண்ணனும். எவ்வளவு ஹாப்பியா என்ஜாய் பண்ணனும்னு முதலில் பிளான் பண்ணுனமோ அவ்வளவு ஹாப்பியா என்ஜாய் பண்ணிட்டு வருவோம். இங்க வீடு ஸ்கூல் அந்த சர்க்கிள் குள்ள இருக்கிறது விட்டுட்டு லெட்ஸ் கோ அவுட் அண்ட் என்ஜாய்” என்று கூறி பட்டாம்பூச்சியாய் துள்ளி குதித்தாள்.

சூர்யாவை பாவமாக பார்த்த மதுவும் “ஆமாடி எங்க வீட்டிலேயே இப்பதான் ஃபர்ஸ்ட் டைம் வெளியில போக அலவ் பண்ணிருக்காங்க. ப்ளீஸ் டி நீ வரலைன்னா நான் கண்டிப்பா போக மாட்டேன்” என்று கூற மற்றவர்களும் அதையே அவளிடம் வலியுறுத்தினார்.

பின் சமாதானம் அடைந்த சூர்யா தனது நண்பர்களுக்காக “சரி போகலாம்” என்று கூறிவிட அவர்கள் அனைவரும் “ஹே” என்று கத்தினர். இவர்களின் கத்தலில் மொத்த கேன்டீனும் அவர்களை திரும்பி பார்க்க அதை எல்லாம் அவர்கள் கணக்கில் எடுத்துக்கொண்டால்தானே, ஆனால் அதே கேன்டீனில் இவர்களின் சந்தோஷத்தை பொறாமையுடன் பார்த்து கொண்டு இருந்தாள் யமுனா. “சிரிக்கறீங்களா சிரிங்க சிரிங்க எனக்கு ரொம்ப பிடித்த அண்ணாவை ஸ்கூல் விட்டு போக வச்சதுக்கு டூர்ல உங்களை நல்லா வச்சு செய்யறேன் வாங்க” என்று மனதுக்குள் கருவியவள் வேகமாக அங்கிருந்து சென்றிருந்தாள்.

மற்ற எதை பற்றியும் கவனிக்காத நம் பஞ்ச பாண்டாவிகள் குழு டூர்க்கான பிளானை ஆரம்பித்தது. முதலில் ப்ரீத்தி “அப்போ நாம நிறைய சாக்லேட்ஸ் வாங்கலாம், நான் அதை வச்சு வச்சு சாப்பிடுவேன்” என்று கூற மற்றவர்கள் அவளை முறைத்துப் பார்த்தனர். அவர்களின் பார்வையை அலட்சியம் செய்தவள் “அதுதான் போறதுன்னு முடிவாச்சு இல்ல அப்ப என்ன பொருள் எங்ககெங்க கிடைக்கும்னுதான் நாம யோசிக்கணும்” என்று கூற மது கூட “ஆமாம் செல்லம் என் இனமடா நீ என்று கூறி ஹைபை கொடுத்துக் கொண்டார்கள் .

அடுத்ததாக பூஜா “அப்பாடா ஒரு வழியா அடுத்த பிளான்க்கு வந்தாச்சு நாளைக்கு நான் அந்த எல்லோ டிஷர்ட் போட போறேன்” என்று சொல்ல மதுவோ “ஹே என்கிட்ட அந்த கலர் இல்லை” என்று ஆரம்பிக்க அடுத்த அரை மணி நேரமும் அவர்களின் உடை தேர்வு பற்றிய அலசலில் முடிந்தது. , அதன் பிறகு அன்றைய தினம் அவர்களுக்கு டூர் பிளானோடு முடிந்தது..

அடுத்த நாள் மாலை அனைவரும் பள்ளி வளாகத்திற்கு வந்திருக்க தோழிகள் நால்வரும் மது வருகைக்காக காத்திருந்தனர்.

அபி ப்ரீத்தியிடம் “என்னடி இன்னும் மதுவை காணோம்” என்று கேட்டுக்கொண்டிருக்க அவளோ “அவங்க வீடுதான் பெரிய குடும்பம் ஆச்சே போருக்கு போற மாதிரி எல்லோர் காலிலும் விழுந்து எழுந்து வீர திலகம் வச்சுட்டு, ஒவ்வொருத்தர் கிட்டயும் சொல்லிட்டு கிளம்பனும்ல அதுதான் லேட்டா இருக்கும் " என்று கூறினாள்.

அபியும் சிறு சிரிப்புடன் “ஆமா ஆமா இதுல அவயென்னவோ சின்ன குழந்தை மாதிரியும் எங்கேயாவது தொலைந்து போறமாதிரியும் கவனமாக இரு என்று சின்னத்தம்பி பிரதர்ஸ் அட்வைஸ் வேற பண்ணுவாங்க அது எல்லாத்தையும் கேட்டுட்டு பொறுமையா வருவா” என்று பேசிக் கொண்டிருக்கும்போது மது வீட்டு வேன் அந்த வளாகத்துக்குள் நுழைந்தது.

முதலில் வண்டியிலிருந்து இறங்கிய மதுவை கண்டு “ஹாய்” என கையை துக்கி நெருங்கியவர்கள், அவளின் பின்னால் இறங்கிய மொத்த குடும்பத்தையும் கண்டு அதிர்ந்து நின்றனர். இறங்கிய மொத்த குடும்பமும் மதுவை சூழ்ந்து கொண்டு மினி விக்ரமனின் படத்தையே ஓட்டிக் கொண்டிருந்தனர்.
அதை பார்த்த அபி ஆரம்பிச்சிட்டாங்கடா என்று சொல்ல அவள் அருகில் நின்ற பூஜா நாம இன்னைக்கு டூர் போகனும் என்று இன்னைக்கு என்ற வார்த்தையில் அழுத்தம் கொடுத்தாள். அதை கேட்ட பிரீத்தி “இங்கே நடக்கிறத பார்த்தால் வாய்ப்பில்லை ராஜா வாய்ப்பில்லை இன்னைக்கு நாம டூர் போறதுக்கு வாய்ப்பில்லை” என புலம்பினால்.
ஒரு வழியாக பாசை மழை பொழிந்து சின்னத்தம்பி பிரதர்ஸ் தங்கள் குடும்பத்தார்களை அழைத்துக் கொண்டு கிளம்ப, மது தன் தோழிகளை நோக்கி கையில் இரண்டு பேகுகளுடன் வந்தாள்.
மதுவின் கையில் இருந்த பைகளை குழப்பமாக பார்த்த சூர்யா “என்னடி இவ மூணு நாள் டூர்க்கு ரெண்டு பேக் எடுத்துட்டு வர்றா அதுவும் இவ்ளோ பெரிய பேக்” என்று யோசனையாக கேட்க அந்தப் பை எதற்கு என்று புரிந்துகொண்ட ப்ரீத்தி “எனக்கு புரிஞ்சு போச்சு எனக்கு புரிஞ்சு போச்சு” என்று குதுகல பட்டாள்.

ப்ரீத்தியின் குதுகலம் ஏன் என்று புரியாத மற்றவர்கள் குழப்பமாக பார்க்க அதற்குள் அவர்கள் அருகில் வந்து விட்ட மது “வாங்க வாங்க பஸ்ல ஏறலாம்” என்று கூறினாள். அவளைத் அடுத்த சூர்யா “எதுக்கு இந்த எக்ஸ்ட்ரா பேக்” என்று கேட்க அவளோ “எல்லாம் உன்னால தான் நீ மட்டும் முன்னாடியே நார்மலா இருந்திருந்தா நான் இன்னும் நிறைய வாங்கி இருப்பேன் இப்போ ப்ச்ச்ச்ச்…… எல்லாம் உன்னால தான்” என்று கூற சூர்யா என்னவென்று புரியாமல் விழித்தாள்.

மதுவின் பேச்சில் கடுப்பான அபி “அடியே எதுவா இருந்தாலும் கிளியரா சொல்லுடி குழப்பாதே” என்றாள். மதுவோ “ இல்லடி சூர்யா அப்செட்டா இருந்தாள் இல்லையா அதனால் டூருக்கு நான் அதிகம் ரெடி பண்ணலை. இவ ஓகே சொன்னதுக்கு அப்புறம் தான் நான் போயி கடை கடையாய் ஏறி ஸ்னாக்ஸ் வாங்கினேன் தெரியுமா அப்பவும் கூட இவ்வளவு தான் வாங்க முடிஞ்சது” என்று கையில் இருந்த பையை காட்ட அனைவருக்கும் அப்பொழுதுதான் ப்ரீத்தி ஏன் குதூகலப் பட்டாள் என்று புரிந்தது. தலையில் அடித்துக் கொண்டவர்கள் வந்து சேர் என்று கூறிவிட்டு பஸ்ஸில் ஏறினர்.

ப்ரீத்தி மதுவிடம் எல்லாத்தையும் வாங்கி இருக்கியா என்று கேட்க அவளும் எல்லாம் வாங்கி விட்டேன் என்று கூற இருவரும் சந்தோஷத்தோடு பஸ்ஸில் ஏறினார்.
மாலை சென்னையில் இருந்து கிளம்பியவர்கள் ஆட்டமும், பாட்டுமாகவே அடுத்த நாள் காலை ஆறு மணிக்கு மேட்டுப்பாளையம் வந்து சேர்ந்தனர்.அவர்களிடம் வந்த டூர் ஒருங்கிணைப்பாளர் “ஸ்டுடென்ட்ஸ் மேல ஊட்டிக்கு ஏற ஒன்பது பத்து மணி ஆகும்.யாருக்கும் பசியா இருந்தா போகும்போது சாப்பிட இங்க இருக்க ஹோட்டல்ல டிபன் வாங்கி வச்சுக்குங்க. இல்லை சாப்பிடுவதாக இருந்தாலும் சீக்கிரம் சாப்பிட்டு வந்துவிடுங்கள்” என்று கூறியவர் அனைவரையும் அங்கிருந்த ஒரு ஹோட்டலுக்கு அழைத்து சென்றார்.
சூர்யா மற்றும் பூஜா இருவரும் தங்களுக்கு புரோட்டா பார்சல் வாங்கி வாங்க என்க, அவர்களை பார்த்து ப்ரீத்தியும் மதுவும் “நைட் புல்லா டான்ஸ் ஆடிட்டு வந்தது பசிக்குது எங்களால் பசி தாங்க முடியாது நாங்கள் இப்போ சாப்பிடுறோம் அப்புறம் நீங்க சாப்பிடும்போது உங்களுக்கு கம்பெனி குடுக்க வேணா கொஞ்சம் சாப்பிடறோம்” என்று பெருந்தன்மையாக சொல்ல அவர்களைப் பார்த்து சிரித்த அபி “சரி எனக்கும் டீ குடிக்கணும் போல இருக்கு வாங்க போய் சாப்பிட்டு அவளுங்களுக்கும் வாங்கிட்டு வருவோம்” என்று மூவரும் பஸ்சைவிட்டு இறங்கி சென்றார்கள் .

ப்ரீத்தி , மது இருவரும் சாப்பிட இடம் பார்த்து அமர்ந்து கொண்டு அபியிடம் பூரி வாங்கி வர சொல்ல.அவளும் சரி என்றவள் தனக்கு டீயும் மற்ற இருவருக்கும் அவர்கள் கேட்டதையும் வாங்கிக்கொண்டு வந்து கொடுத்து தானும் அமர்ந்து டீ குடிக்க ஆரம்பித்தாள். அப்பொழுது அவர்கள் அருகில் அமர்ந்து காபி குடித்து கொண்டிருந்த யமுனா அவளது தோழிகளிடம் “சிலபேருக்கு எல்லாம் எப்படி தான் காலங்காத்தாலேயே சாப்பிட தோணுதோ அதுவும் ஆயில் ஃபுட் என்ன ஜென்மங்களோ” என்று இவர்களை ஜாடை பேச அபியோ மதுவிடம் “நல்லவங்களுக்கு தான் கல்லு கூட ஜீரணமாகும்னு உங்க பாட்டி ஒரு தடவை சொன்னாங்க இல்ல அது உண்மைதான். சில பேர் தண்ணி குடிச்சா கூட ஜீரணமாகாது. அதனாலதான் அது எல்லாம் ஓணான் மாதிரி சுத்திக்கிட்டு இருக்கு இதுல அடுத்தவங்களை கலாய்க்க வந்திடுது” என்று அபியும் திரும்பப் பதிலடி கொடுத்தால். .

அபியின் பேச்சில் கடுப்பான யமுனா “யாரப்பாத்து ஓணான்னு சொல்ற” என எகிறி கொண்டு வர, அவளை நக்கலாக பார்த்த அபி “நான் உன்னை ஒன்னும் சொல்லலையே ஏன் உனக்கு கோபம் வருது. ஒருவேளை நீ ஓணான் மாதிரி இருக்கேன்னு உனக்கே தெரியுது போல அதனாலதான் இப்படி வாலண்டியராக வந்து குதிச்சுட்டு இருக்க” என்று கேட்டவள் மதுவை பார்க்க அவளும் நக்கலாக யமுனாவை பார்த்து அதுதானே என்று கூறினாள்.அடுத்து வந்த ப்ரீத்தி அபியின் தோளில் கை போட்டு "வாடி தேவை இல்லாம பேசறவங்க கூட நமக்கு என்ன வேலை சூர்யாவும், பூஜாவும் நம்மல காணாம பஸ்ச விட்டு இறங்கி நிக்கறாளுங்க பாரு வாங்க பார்சல் வாங்கிட்டு போவோம் " என்று சொல்ல மற்ற இருவரும் வேறு எதுவும் பேசாமல் உணவை வாங்கிக் கொண்டு பஸ்ஸை நோக்கி சென்றனர்.

யமுனா கோபமாக அவர்கள் போவதையே பார்த்து கொண்டு இருக்க, அவளது தோழிகள் “விடுடி அவளுங்கள மேல போய் பாத்துக்கலாம் ரொம்ப ஓவராத்தான் ஆடுறாளுங்க” என்று சமாதானம் செய்ய யமுனாவும் “இந்த டூர் முடியறதுக்குள்ள இவங்கள ஏதாவது செய்யணும்” என்று மனதுக்குள்ளே வெஞ்சினம் கொண்டாள்.
ஊட்டி வந்து சேர்ந்தவர்களுக்கு பெரிய ஹோட்டல் ஒன்றை மாணவர்கள் தங்க ஏற்பாடு செய்திருந்தனர்.

ஆசிரியர்கள் அவர்கள் தங்குவதற்கான அறையை பிரித்து கொண்டு இருந்தனர். அப்போது நம் ஐவர் குழு தங்கள் அனைவருக்கும் ஒரே அறையை கேட்க ஆசிரியரும் அவர்கள் அனைவருக்கும் ஒரே அறையை ஒதுக்கினார்.ஐவரும் மகிழ்ச்சியுடன் துள்ளி குதித்து கொண்டு ஓடினர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அறைக்கு.

அறைக்குள் வந்தவர்கள் தங்களது உடமைகளை பத்திர படுத்திவிட்டு அப்படியே அங்கிருந்த படுக்கையில் “தொப்பென்று” விழுந்திருந்தனர்.

அவரவர் அறைக்கு சென்ற மற்ற மாணவர்கள் அனைவரும் தங்களை சுத்தம் செய்து கொண்டு ஆசிரியர்கள் சொன்ன நேரத்திற்கு பேருந்து அருகில் வந்தனர் . ஆனால் நமது ஐவர் குழு மட்டும் அங்கு ஆஜராகவில்லை..

அவர்களது அறையில் சூர்யா மற்ற நால்வர் இடமும் கிளம்ப சொல்லி போராடி கொண்டு இருந்தாள். “அடியே சீக்கிரம் கிளம்புங்க எல்லாரும் அங்கு வந்து இருப்பாங்க” என்று சத்தம் போட்டுக் கொண்டிருந்தாள். அப்பொழுதுதான் உறக்கம் கலைந்து அமர்ந்த பூஜா “அதுக்குள்ள கிளம்பனுமா” என்று புலம்பியவள் படுக்கையை விட்டு எழ மனம் இல்லாதவளாக மறுபடியும் குப்புறக் கவிழ்ந்து தூங்கப் போக அவளது இடுப்பில் எட்டி உதைத்தாள் சூர்யா.

கட்டிலிலிருந்து கீழே விழுந்த பூஜா “அடியே எதுக்குடி என்னை உதைச்ச” என்று கோபமாக கத்த சூர்யாவோ அவளை பார்த்து முறைத்துக்கொண்டே “இங்க ஒரு மனுஷி லேட்டாயிடுச்சுனு கத்திகிட்டு இருக்கேன் நீ தூங்க போறியா ஒழுங்கா எந்திரிச்சு போய் குளிச்சிட்டு வா என்று மிரட்ட பூஜாவோ “ஊட்டி குளிரில் யாராவது குளிப்பார்களா பத்து நிமிஷம். மேக்கப் மட்டும் போட்டு கிளம்பி வரேன் ” என்றவள் வேகமாக எழுந்து கிளம்ப சென்றுவிட அபி தயாராகி வந்து சூர்யா அருகில் அமர்ந்தாள்.

மது மற்றும் ப்ரீத்தி இருவரும் போகும் வழியில் தேவைப்படும் என்று தின்பண்டங்களை எடுத்து அடுக்கிக் கொண்டிருக்க ஒரு வழியாக அனைவரையும் சமாளித்து இழுத்துக்கொண்டு ஆசிரியர் சொன்ன இடத்திற்கு வந்து சேர்ந்தாள் சூர்யா.

வண்ணங்கள் தொடரும்....


கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் நட்புக்களே...........


 
Last edited by a moderator:

PAPPU PAPPU

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
eiY9USH52210.jpg

வண்ணம் 6 :

முதலில் அங்கு இருந்த ரோஸ் கார்டெனுக்கு சென்றனர். அனைவரும் சந்தோஷமாக சுற்றி பார்த்தார்கள். நமது ஐவர் குழு ஒவ்வொரு வண்ண ரோஜாக்கள் அருகிலும் சென்று செல்பி மற்றும் குரூப்பி எடுத்துக் கொண்டிருந்தனர் இதை யமுனா வஞ்சம் நிறைந்த விழிகளோடு பார்த்துக் கொண்டிருந்தாள்.பின் அவளது தோழிகளிடம் திரும்பியவள் “இங்க பாருங்கடி இவங்க எப்படி சுத்திக்கிட்டு இருக்காங்கனு, இவங்களை பழி வாங்கியே ஆகணும்” என்றாள் குரலில் கோபம் மின்ன.

யமுனாவின் பேச்சை கேட்ட அவளது தோழியோ “இங்க பாருடி மத்தவங்களாவது பரவால்ல அந்த அபி இருக்காளே அடிச்சாலும் அடிச்சுருவா அதனால இப்போதைக்கு பொறுமையா இரு நேரம் பார்த்து தான் அவங்களை பழி வாங்கணும்.மூணு நாள் முழுசா இருக்கு அப்போ நமக்கு சான்ஸ் கிடைக்காமலா போகும் பாத்துக்கலாம் விடு” என்று கூற அவளும் “இங்கிருந்து நாம கிளம்புறதுக்கு முன்னாடி அந்த குரூப்பையே கதரவிடணும் முக்கியமா அந்த சூர்யாவை” என்று கூறி அவர்களை முறைத்தவாறே மலர்களை பார்ப்பதில் கவனம் செலுத்த ஆரம்பித்தாள்.

மதியம்வரை அங்கே இருந்தவர்கள் அதற்குப் பிறகு பைக்காரா போட் ஹவுஸ் செல்லலாம் என்று முடிவு செய்து அங்கு சென்றனர். படகில் செல்ல விரும்புபவர்கள் அனைவரையும் தனியாக ஒரு வரிசையாக நிற்கவைத்து கொண்டு இருந்தார் அவர்களது ஆசிரியர்.

மது தோழிகளை பார்த்து “வாங்க நாமலும் போலாம்” என்று அழைக்க அவளை தடுத்த அபி “எனக்கு போட்டிங்ல இன்ட்ரெஸ்ட் இல்லை அதனால நீங்க போயிட்டு வாங்க” என்று கூறினாள்.

நால்வரும் அபியை பார்த்து ஒரே குரலாக “முடியாது” என்று சொல்லி அவளையும் இழுத்து கொண்டு செல்ல முனைய அவர்களை தடுத்து சமாளித்து அனுப்பிவைத்தாள்.

படகு சவாரிக்கு அபி வராததை பார்த்த ரம்யா யமுனாவிடம் “ஹேய் அங்க பாருடி அந்த அபி மேலேயே நிற்கிறா, மத்த நாலு பேரும்தான் உள்ள போயிருக்காங்க போல,” என கூற, யமுனாவும் சூர்யாவை கதறவிட இதுதான் நல்ல சான்ஸ் என்று நினைத்து “வாங்க நாமும் போகலாம்” என்றவள் தோழிகளுடன் படகில் ஏறினாள்.

மது குரூப்போ ஒருவருக்கொருவர் தங்களுக்குள் கேலி பேசி சிரித்துக் கொண்டிருந்தனர்.

சூர்யா சிரிப்பதை பார்த்த யமுனாவிற்கு கோபம் சுறுசுறுவென ஏறியது. அவளை காயப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் வெறியாக மாற அவர்களுக்கு அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்து. அவர்கள் காதில் கேட்க வேண்டும் என்றே சத்தமான குரலில் ரம்யாவிடம் “ ஏன்டி சில பேரு எல்லாம் சுத்தமா மனசாட்சி இல்லாதவங்க டி. தன்னால ஒரு பையன் ஸ்கூல்ல விட்டு போய் இருக்கான்னு ஒரு கில்ட்டி ஃபீலிங் கூட இல்லாம எப்படி சிரிச்சுக்கிட்டு இருக்காங்க பாத்தியா என்ன ஜென்மமோ. நம்ம சந்தோஷம் மட்டும் தான் முக்கியம் அடுத்தவங்க எப்படி போனா நமக்கு என்னனு எப்படித்தான் இப்படி எல்லாம் யோசிச்சுட்டு கூத்தடிக்க முடியுதோ தெரியல நம்மலா இருந்தா இப்படியா இருப்போம்” என்று கூற இங்கு சூர்யா கண்களில் நீர் வடிய ஆரம்பித்துவிட்டது.

யமுனாவின் பேச்சில் ப்ரீத்தி மற்றும் மது அதிர்ந்து போய் இருக்க, பூஜாவோ கோபமாக எழுந்து அவளை பார்த்து “ஏய் என்ன திமிரா அடிச்சு மூஞ்ச ஒடச்சுருவேன் பாத்துக்கோ” என்று பற்களை கடித்து சீறினாள்.

பூஜாவின் சீரளையோ, சூர்யாவின் கண்ணீரையோ கண்டு கொள்ளாத யமுனா அசட்டையான குரலில் “எதுக்கு என்ன பார்த்து கத்துற நான் என்ன உங்களை பற்றியா பேசினேன்.ச்ச…. ஜென்ரலா கூட இங்க பேச முடியாது போல என்று எகத்தாளமாக கூறிவிட்டு,வேறு இருக்கைக்கு சென்றுவிட்டாள். .

யமுனா போவதை பார்த்த பூஜா இவள….. என்று பல்லைக் கடிக்க அவள் தோளில் கைவைத்து சமாதானபடுத்திய மது கண்களாலேயே சூர்யாவை காட்டினாள். . சூர்யாவின் நிலையை உணர்ந்து கொண்டவர்கள் யமுனாவை பிறகு பார்த்து கொள்ளலாம் என்று முடிவெடுத்து அழுது கொண்டிருக்கும் சூர்யாவை சமாதானபடுத்த முயன்றனர். ஆனால் அப்போதும் சூர்யாவின் அழுகையை நிறுத்த முடியாமல் போக ப்ரீத்தித்தான் “நாம கறைக்கு போய் பார்த்துக்கொள்ளலாம்” என்று கூறினாள்.

படகில் ஏறும்போது இருந்த உற்சாகம் குறைந்து அனைவரும் அமைதியாகவே கறையில் இறங்கி அபியை நோக்கி சென்றனர்.

அபியின் அருகில் சென்றவர்கள் முகத்தை உர்ரென்று வைத்து கொண்டு “போகலாம்”என்று சொல்ல அவர்களை பார்த்த “அபி என்ன ஆச்சு ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க” என்று கேட்டாள்.

ப்ரீத்தியை பார்த்த மது “நீ சொல்” என்பது போல் சைகை செய்ய அவளும் சரி என்னும் விதமாக தலையாட்டிவிட்டு யமுனா பேசிய அனைத்தையும் அபியிடம் ஒப்பித்தாள்.
ப்ரீத்தி சொல்ல சொல்ல இங்கு அபியின் கோபம் அதிகமாகி கொண்டிருக்க மறுபுறம் சூர்யாவின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது.

“அவ வரட்டும் இன்னைக்கு அவளுக்கு இருக்கு. என்னதான் நெனச்சுக்கிட்டு இருக்கா நானும் பார்க்கிறேன், முதல்ல இருந்தே நம்மலதான் அவ டார்கெட் பண்ணிட்டு இருக்கா, இன்னைக்கு அவ பல்லை உடைச்சு அவ கையில குடுக்கல என் பேரு அபி இல்லை” என்று அவள் கூறிக்கொண்டிருக்கும் போதே யமுனாவும் வந்து கொண்டிருந்தாள்.

அபியின் கோபத்தை பார்த்து மற்றவர்களும் யமுனாவை முறைத்து கொண்டு இருந்தனர்.யமுனா இறங்கியதை பார்த்த அபி அவளை நோக்கி சென்று “என்ன நினைச்சுகிட்டு இருக்க நீ எதுக்கு சூர்யாகிட்ட அப்புடி பேசுன, தைரியமான ஆளா இருந்தா நான் இருக்கும்போது பேசி இருக்கணும்”என்று கத்த ஆரம்பித்தாள்.

யமுனாவோ அலட்சியமாக அவளை பார்த்து “நான் என்ன பொய்யா சொன்னேன் உண்மையத்தானே சொன்னேன்.அது மட்டும் இல்லாம உங்களைனு நான் மென்ஷன் பண்ணி சொல்லவே இல்லையே பொதுவாதானே பேசுனேன், குற்றமுள்ள நெஞ்சு அதான் உங்களுக்கு குறுகுறுக்குது” என்று திரும்ப பதில் பேச ஆத்திரம் கொண்ட அபி அவளை அடிக்க சென்றாள். அவளது தோழிகள் அவளை தடுக்க முனைய இவர்களது சத்தத்தைக் கேட்ட அவர்களது ஆசிரியர் அங்கு வந்துவிட்டார்

ஒருவருக்கு ஒருவர் சண்டை போட்டு கொண்டிருந்தவர்களை பார்த்த அவர்களது ஆசிரியர் பொது இடத்தில் என்ன இப்படி சத்தம் என்ற கோபம் எழ கடுமையான குரலில் “இங்க என்ன நடக்குது பப்ளிக் ப்ளேஸ்ல எப்புடி பிகேவ் பண்ணனும்னு தெரியாதா” என்று கேட்டார்.
ஆசிரியரின் கோபத்தில் இருக்கும் உண்மை புரிந்தாலும் தோழியை அழ வைத்தவளை விட முடியாத சூழ்நிலையில் அவரிடமே யமுனாவை பற்றி கூற ஆரம்பித்தாள் அபி ”சாரி மேம் இந்த யமுனாதான் சூர்யாவை ஹர்ட் பண்ற மாதிரி பேசினா என்று கூற யமுனாவோ “நோ மேம் நான் அப்படி எதுவும் பேசலை இவங்க எல்லோரும் வேண்டுமென்றே என்னை பிளேம் பன்றாங்க” என்று கூறினாள்.

ஆசிரியரோ இருவரையும் முறைத்து “பப்ளிக் ப்ளேஸ்ல நீங்க எல்லோரும் இப்படி பிஹேவ் பண்ணுனது தப்பு இப்ப ரெண்டு பேரும் அமைதியா போங்க இல்லை உங்க பேரன்ட்ஸ்கிட்ட இன்ஃபார்ம் பண்ண வேண்டியதா இருக்கும்” என்று கூறினார்.

ஆசிரியரின் பேச்சில் அதிர்ந்த மது அபியின் கைகளைப் பிடித்து கொண்டு “பிரச்சனை வேண்டாம்டி ப்ளீஸ் விடு வீட்ல இன்பார்ம் பண்ணுனாங்கன்னா இனி எப்பவும் எங்க வீட்ல என்னை வெளிய விட மாட்டாங்க” என்று அவளிடம் கண்களால் கெஞ்சினாள்.

அபியும் வேறு வழியில்லாமல் “ஓகே மேம்” என்று கூறிவிட்டு தனது தோழிகளுடன் அங்கிருந்து நகர்ந்து விட்டாள்.சண்டை வேண்டாம் என்று அழைத்து வந்து விட்டாலும் அனைவருக்குமே அந்த சம்பவம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. அதுவும் அபியை யாராலும் கட்டுப்படுத்தவே முடியவில்லை.

சூர்யா தன்னைதானே சமாளித்து கொண்டவள் “பரவால்ல விடுடி அவ பேசுறதெல்லாம் எல்லாம் பெருசா எடுத்துக்க கூடாது” என்று கூற அவளை முறைத்து பார்த்த மது “அப்புறம் ஏன் டி கண்ணு வேர்த்துச்சு” என்று நக்கலாக கேட்டாள். அதற்கு சூர்யாவோ அவ அப்புடி பேசும் போது மனசுக்கு கஷ்டமா இருக்காதா அது வலி வேற டிபார்ட்மென்ட் என்று சொல்ல மற்றவர்கள் அனைவரும் அவளை கேவலமாக பார்த்து ஒரே நேரத்தில் தூ…………. என்று துப்பினர்.

என்ன பீலிங்கா இல்ல பீலிங்காகனு கேக்குதும் , நீ வலி வேற டிபார்ட்மெண்ட்னு செல்றதும். நாங்க துப்பறதும் புதுசா என்ன……….. விட்றா விட்றா என்று ப்ரீத்தி கூற அதை கேட்டுஅனைவரையும் பாவமாக பார்த்து கொண்டிருந்த சூர்யாவின் தோள் மேல் கை போட்ட பூஜா “சரி விடு நமக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும்ல அப்போ அவளை வச்சு செஞ்சுக்கலாம்.அவ நம்ம கிட்ட சிக்காமலா போயிடுவா அப்படியே இல்லைனாலும் அவள் என்னுடைய நாத்தனாராக வந்துதானே ஆகணும் அப்ப வச்சுக்கிறேன் கச்சேரி” என்று கூற அவளை முறைத்துப் பார்த்த அபி “அந்த ஓணான்தான் உன்னோட நாத்தனார்னு நூறு தடவை ரிஜிஸ்தர் பண்ணிக்கிறியா வேண்டாம் அவள மாதிரி ஒரு ஆள்தான் நாத்தனார்ன, அவர் உனக்கு வேண்டாம் நீ அதுக்கு கல்யாணமே பண்ணிக்காம இருக்கலாம்” என்று கூறினாள்.

அபியின் பேச்சில் அலறிய பூஜா “அதெல்லாம் முடியாது நான் ஸ்கூல்ல கொடுத்த அதே பனிஷ்மென்ட் மாதிரி அவ சாப்பாட்டுல ஏதாவது கலந்து கொடுப்பேன், அவ பெட்ல இட்சிங் பவுடர் போட்டு வைப்பேன் இதெல்லாம் பண்ணனும்னா நான் அவங்க வீட்டுக்கு போகணும்” என்று கூற மற்றவர்களோ அவளை ஏகத்துக்கும் முறைத்து இப்போது பூஜாவை பார்த்து துப்பினர்.

அன்று இரவு அங்கு இருந்த ஹோட்டலில் தங்கியவர்கள் அடுத்தநாள் தொட்டபெட்டா பொட்டானிக்கல் கார்டன் மற்றும் அங்கிருக்கும் டீ பேக்டரி ஒன்றை பார்க்க செல்வது என்று முடிவெடுத்து இருந்தனர்.டீ பேக்டரி பார்த்த பிறகு நேரம் இருந்தாள் குன்னூரில் உள்ள சிம்ஸ் பார்க் போகலாம் என்றும் ஆசிரியர் கூறி இருக்க அனைவரும் அதற்கு ஏற்றார் போல் வேகமாக எல்லாம் பார்க்க வேண்டும் என்று எண்ணி கொண்டனர்.

இரவு அவர்கள் தங்கியிருந்த ஹோட்டலில் கேம்ப் ஃபயர் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்க அனைவரும் அந்த ஹோட்டலில் உள்ள கார்டன் ஏரியாவில் குழுமியிருந்தனர்.

ஆட்டம் பாட்டம் என்று அங்கு கலை கட்ட ஆரம்பிக்க அவர்கள் ஆசிரியரோ “ஒவ்வொருத்தரும் அவங்களோட தனித்திறமையை காமிங்க உங்களுக்குள்ள என்ன டேலண்ட் இருக்குன்னு எல்லோரும் தெரிந்து கொள்ளலாம் என்று கூற ஒவ்வொருவரும் தங்களுக்கு தெரிந்ததை செய்து காட்டிக் கொண்டிருந்தனர்.

நமது ஐவர் அணியின் முறை வர ஒவ்வொருவரும் “நீ போ நீ போ” என்று மற்றவரை தள்ளிக் கொண்டிருந்தனர் அதை கண்ட யமுனாவின் குழுவிலிருந்த அவளது நெருங்கிய தோழி “அந்த ப்ரீத்தியை அனுப்புங்கப்பா சாப்பிடுறது எல்லாம் எப்படினு சொல்லுவா” என்று கேலி பேச ப்ரீத்தியை சொல்லவும் மற்ற நால்வரும் கோபமாக “ஏய் வாய மூடு தேவையில்லாம பேசாதே” என்று சண்டைக்கு சென்றனர்.

அவர்களது பேச்சு சண்டைக்கு செல்வதை உணர்ந்த ஆசிரியர் “ஷட் அப்” என்றவர் ரம்யாவிடம் திரும்பி “இது போல் மற்றவர்களை கேலி செய்ய சொல்லிதான் உங்கள் வீட்டில் வளர்த்தார்களா கேலி, கிண்டல்ங்கறது லிமிட்ல இருக்கும் வரைக்கும்தான் விளையாட்டு, லிமிட் தாண்டிருச்சுனா மற்றவர்களை காயபடுத்தும். இப்போது நாம் வந்திருப்பது என்ஜோய் பண்ண ஒருவரை ஒருவர் காயப்படுத்த இல்லை சே சாரி டு ஹெர்” என்று சொல்ல, ரம்யாவோ தலை குனிந்து “சாரி ப்ரீத்தி” என்றாள்.

ஐவர் குழுவை பார்த்த ஆசிரியர் அவள்தான் மன்னிப்பு கேட்டுவிட்டாள் இல்லையா இப்போது சண்டை தேவை இல்லை. போங்கள் போய் உங்கள் இடத்தில் அமர்ந்து ஒவ்வொருவராக வந்து உங்கள் திறமையை காட்டுங்கள் என்று சொல்ல ஆசிரியர் சொல்லவும் வேறு வழியில்லாமல் ஐவரும் போய் முன்பு போல் அவர்கள் இடத்தில் அமர்ந்து கொண்டனர்.

முதலில் பூஜாவை பாடுவதற்காக அனுப்பியவர்கள் அடுத்து மற்றவர்கள் செல்லலாம் என்று பேசிக் கொண்டிருக்க பூஜாவும் எழுந்து அனைவர் நடுவில் சென்று நின்று பாட ஆரம்பித்த சில நொடியிலேயே யமுனாவின் குழுவில் இருந்தவர்கள் கழுதை போல் கத்த ஆரம்பித்தனர். அது பூஜாவிற்கு கோபத்தை கொடுத்தாலும் கண்டுகொள்ளாமல் பாடிக்கொண்டிருந்தாள் ஆனால் மற்ற நால்வரும் சும்மா இருப்பார்களா என்ன? உடனே எழுந்து நின்றது நான்கு வேங்கைகளும் வேகமாக பூஜாவின் அருகில் வந்தவர்கள் பூஜாவின் காதில் ஏதோ சொல்ல அவளும் சிரித்துக் கொண்டே “ஓகே பிரண்ட்ஸ் இதுவரைக்கும் நான் பாடியதை கேட்டீங்க இப்போ எங்களை மாதிரியே நம்ம ஸ்கூல்ல இருக்க வேற ஒரு கேங் பாடினால் எப்படி இருக்கும் என்று இப்போது பார்க்க போகிறோம் அது மட்டும் இல்லாம நாங்க பாடுவது தான் உங்களுக்கு தெரியுமே ஆல்ரெடி ஸ்கூல் பங்க்ஷன் எல்லாத்தையும் நாங்க டுரூப்பா பாடி இருக்கோம். சோ இன்னைக்கு புதுசா வேற ஒருத்தவங்கள இமிடேட் பண்ணி காண்பிக்கிறோம்” என்று கூறியவர்கள் யமுனாவையும் அவள் தோழிகளையும் பார்த்துக்கொண்டே
“ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா” என்ற பாடலை 7 ஜி ரெயின்போ காலனி படத்தில் பாடுவது போல் பாட அங்கிருந்த அனைவருமே விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்துவிட்டனர். அனைவருக்குமே இவர்கள் யாரை கேலி செய்கிறார்கள் என்பது நன்றாகவே புரிந்திருக்க யமுனாவின் குழுவினருக்கு விளக்கெண்ணெய் குடித்தது போல் முகம் அஷ்ட கோணலாக மாறியது.

அன்றைய நாள் இரவு வெளியில் சுற்றிய காரணத்தினாலும் அன்று இரவு போட்ட ஆட்டத்திலும் அனைவரும் களைப்பில் உறங்கிவிட ஒருத்தி மட்டும் பெட்டில் உருண்டு கொண்டு இருந்தாள்..யார் என்று பார்க்கிறீர்களா எல்லாம் நம்ம மதுதான்.”ஹய்யோ அப்பவே சொன்னேன் ரொம்ப டான்ஸ் ஆட வேண்டாண்டி அப்புறம் எனக்கு பசி எடுக்கும்னு எவ கேட்டா இப்போ எனக்கு பசிக்கிதே இவளுங்க எல்லாம் தூங்கறாளுங்களே” என்று புலம்பி கொண்டிருந்தாள்.

மது புலம்பல் கேட்டோ இல்லை எதார்த்தமாகவோ அவள் பக்கத்தில் படுத்திருந்த அபி பாத்ரூம் செல்ல எழுந்தவள் மது திரும்பி திரும்பி படுப்பதை பார்த்து அவள் போர்வையை இழுத்தாள். திடிரென்று போர்வை இழுக்கப்படவும் பயந்து போன மது “அய்யோ……. அம்மா பேய்” என்று அலற அவள் சத்தத்தில் மற்ற எல்லோரும் அலறி அடித்து கொண்டு எழுந்து “பேயா… …. “ என்று கத்தி மதுவின் பெட்டிலேயே அவளை நெருக்கி கொண்டு அமர்ந்தனர் . அவர்களின் செயலில் தலையில் அடித்து கொண்ட அபி “அடியேய் ஏன்டி? ஏன்? நீ பயப்படறதும் இல்லாம அவளுங்களையும் பயமுறுத்தி எழுப்பி விட்ட . என்ன டிசைன்டி நீ” என்று திட்ட ஆரம்பித்தாள்.
மதுவோ அப்போதும் பயம் நீங்காதவளாக “இல்லடி நிஜமாலுமே என்னோட போர்வையை யாரோ இழுத்தாங்க” என்று சொல்ல அவளை கேவலமாக பார்த்த அபி.”ஏன்டி என்னை பார்த்தா உனக்கு எப்புடி தெரியுது.பாவம் புள்ளை தூங்காம திரும்பி திரும்பி படுத்துட்டு இருக்கியேனு நான்தான் போர்வையை இழுத்தேன் என்ன ஆச்சுன்னு கேட்க” என்று சொல்லி வாய் மூடும் முன் மற்ற மூவரும் மது மேல் பாய்ந்திருந்தனர் அடிக்க கட்டிலில் உருண்டு பிரண்டு சண்டை போட்டு கொண்டு இருந்தவர்களை பார்த்த அபி தலையில் கை வைத்து அமர்ந்துவிட்டாள்.

நால்வரும் அடித்து முடித்து அவர்களே ஓய்ந்து போய் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கி கொண்டு அமர்ந்திருக்க அப்போதும் தலை எல்லாம் கலைந்த நிலையில் இருந்த மது “அதுதான் எல்லோரும் சேர்ந்து அடிச்சுடீங்களே இப்போ எனக்கு பசிக்குது ஒரு வழி சொல்லுங்க” என்று பிடிவாதமாகவும், பாவமாகவும் சொல்ல மற்ற அனைவரும் அவளை கொலைவெறியில் முறைத்து கொண்டு இருந்தனர்.

ப்ரீத்தி மட்டும் சத்தம் இல்லாமல் மது அருகில் அமர்ந்து “ஆமாம் எங்களுக்கும் பசிக்கும்ல” என்று சொல்ல மற்ற மூவரும் “ஒன்னு சேர்ந்துட்டாளுங்க இனி ஒன்னும் பண்ண முடியாது” என்று நினைத்தவர்கள் ஆளாளுக்கு தாங்கள் கொண்டு வந்த பையை நோண்ட ஆரம்பித்தனர். ஒருவழியாக ஒருவரிடம் பிரடும், ஜாமும் இருக்க அதை சாப்பிட்டுவிட்டு மேலும் சிறிது நேரம் அரட்டை அடித்து கொண்டிருந்துவிட்டே உறங்க ஆரம்பித்தனர்.

அடுத்த நாள் பொட்டானிக்கல் கார்டன் செல்வது என்று முடிவு செய்யப்பட்டிருந்தது.அதன்படி அனைவரும் ஆயத்தமாகி வர, சரியாக ஒன்பது மணிக்கு இவர்களின் பேருந்து பொட்டானிக்கல் கார்டன் முன் வந்து நின்றது.அனைவருக்கும் பாஸ் எடுத்துக் கொடுத்துவிட்டு ஆசிரியர் உள்ளே அனுப்ப நமது ஐவர் குழு ஒவ்வொரு செடியாக பார்த்து ஆச்சர்யப்பட்டு போயினர்.

கார்டனில் இருக்கும் விதவிதமான மலர்களை பார்த்து இதே போலான செடிகளை தங்கள் வீட்டிலும் வளர்க்க ஆசைபட்டவர்கள் அங்கிருக்கும் பார்மசியில் அவர்களுக்கு விருப்பப்பட்ட செடிகளையும், விதைகளையும் வாங்கி வளர்க்கும் முறைகளையும் கேட்டு அங்கிருந்தவர்களை ஒருவழி செய்துவிட்டுதான் கிளம்பினர்.கார்டெனின் வெளியில் இருக்கும் கடைகளில் தின்பண்டங்களையும், சிறுசிறு கைவினைப் பொருட்களையும் வாங்கி வைத்து கொண்டனர் .

அடுத்ததாக அவர்கள் சென்றது தொட்டபெட்டாவிற்கு அங்குள்ள மலை உச்சிக்கு சென்றவர்கள் கூட்டத்தை பொருட்படுத்தாமல் ஓடிப்பிடித்து விளையாடிக் கொண்டிருந்தனர் அவர்களை அடங்குவதற்குள் ஆசிரியர்களுக்கு தான் போதும் போதும் என்று ஆகிவிட்டது.

பின் மதியம் 3 மணிக்கு அங்கிருக்கும் டீ பேக்டரிக்கு சென்றனர். மது , ப்ரீத்தி இருவரும் “ஹய்யோ எங்களால நடக்க முடியல நீங்க மட்டும் போங்க. நாங்க இங்கு உட்கார்ந்து இருக்கறோம்” என்று அந்த பாக்டரியில் வெளியில் இருக்கும் தோட்டத்தில் அமர்ந்துவிட்டனர். அவர்கள் அருகில் வந்த சூர்யா “ஹேய் வாங்கடி உள்ள போலாம் உங்களுக்கு குடிக்க டீ தருவாங்க” என்று அவர்களின் வீக்னஸ் தெரிந்து அழைக்க அவர்களோ டீக்காக எல்லாம் உள்ள வர முடியாது கூட வறுக்கி தருவாங்களானு கேட்டு சொல்லு அப்போ வேணா வர டிரை பண்ணுறோம் என்று சொல்ல அவர்களை முறைத்தவள் மேலும் ஏதோ சொல்ல போக அபிதான் “சரி விடுடி அவளுங்கதான் நடக்க முடியலன்னு சொல்றாங்கல்ல நம்ம போகலாம் அவங்க இங்கயே ரெஸ்ட் எடுக்கட்டும்” என்று சொல்லி மற்ற இருவரையும் இழுத்து சென்றாள்.

அபி இழுத்த இழுப்பிற்கு சென்றாலும் மதுவை திரும்பி பார்த்த பூஜா இருவரையும் பார்த்து “உங்களுக்கு தராமையே டீ குடிக்கறோம் இருங்க” என்று கோபம் போல் சொல்லி செல்ல. அவளை பார்த்த ப்ரீத்தி “அடியே நீ குடிச்சுட்டு வரும்போது எங்களுக்கும் வாங்கிட்டு வா தனியா குடிச்சா வயிறு வலிக்குமாம் எனக்காக சொல்லலப்பா உனக்கு வயிறு வலி வரக்கூடாதேன்னுதான் சொல்றேன்” என்று அமர்த்தலாக கூறி தான் கையோடு வைத்திருந்த பையில் இருந்த பழத்தை சாப்பிட ஆரம்பித்தாள்.

ப்ரீத்தியின் வார்த்தையை கவனித்த மது அவளுடன் ஹைபை அடித்துக்கொள்ள அவர்களின் செயலில் கடுப்பான பூஜா ஆனாலும் உங்க வீட்டில் உங்களை ரொம்ப ஊட்டி வளத்துட்டாங்கடி எங்களால சமாளிக்க முடில என்று சலித்து கொண்டு மற்றவர்களை பார்த்து வாங்க நம்ம போலாம் அவளுங்க அவங்க வேலைய ஸ்டார்ட் பண்ணிட்டாங்க என்று பாக்டரியில் உள்ளே சென்றனர். அவர்கள் உள்ளே சென்று வெகு நேரமாகியும் வராமல் இருக்க கையில் இருந்த கொறிக்கும் பண்டங்களை இருவரும் காலி செய்திருக்க அடுத்ததாக அவர்களின் பார்வை அருகில் இருக்கும் ஸ்வீட் கார்ன் கடைக்கு சென்றது.

இருவரும் கண்களாலேயே பேசி கொண்டவர்கள் மீண்டும் ஒரு முறை பாக்டரியை திரும்பி பார்த்துவிட்டு அவர்கள் வரவில்லை என்றவுடன் கை கோர்த்து அந்த கடைக்கு சென்று ஆளுக்கு ஒன்று வாங்கி கொண்டு பழைய இடத்திலேயே சென்று அமர்ந்தனர். சாப்பிடும் ஆர்வத்தில் சுற்றி என்ன நடக்கிறது யார் இருக்கிறார்கள் என்று கவனிக்காத மது கப்பை பிரித்து ஒரு வாய் வைக்க போக அவள் கையில் இருந்த கப் பறிக்கப்பட்டது அங்கிருந்த குரங்கால்.

குரங்கை பார்த்தவுடன் ப்ரீத்தி அந்த பக்கம் நழுவி ஓடி கத்த ஆரம்பித்தாள். மதுவோ தீவிரமாக குரங்கின் கையில் இருக்கும் கப்பை புடுங்குவதில் குறியாக இருந்தாள்.அந்த பக்கம் சென்ற ப்ரீத்தியோ “ஹய்யோ குரங்கு. ..குரங்கு…… …குரங்கை காப்பாத்துங்க ச்சி.. .த்து…… ..என் பிரண்ட காப்பாத்துங்க” என்று கத்தி கொண்டு இருக்க அவள் சத்தம் கேட்டு அங்கு கூட்டம் சேர ஆரம்பித்தது.

ப்ரீத்தியின் கத்தல் எதையும் காதில் வாங்காத மதுவோ குரங்கிடம் இருந்து கப்பை தன் பக்கம் இழுக்க குரங்கு தன் பக்கம் இழுக்க என்று இருவருக்கும் இடையில் பெரிய போராட்டமே நடந்து கொண்டு இருந்தது.அவர்களின் சண்டையை பார்த்த அனைவருக்கும் ஆச்சர்யத்துடன் கூடிய சிரிப்புதான் வந்தது.

ப்ரீத்தியோ “அடியே விடுடி கடிச்சிட போகுது என்று அலற அதை மது காதில் வாங்கினால்தானே அவளின் கவனம் முழுவதும் குரங்கிடம் இருந்து தனது ஸ்வீட் கார்னை வாங்க வேண்டும் என்பதிலேயே இருக்க அதற்கான முயற்சியில் இறங்கி இருந்தாள்.

பாக்டரிக்குள் போனவர்கள் டீ இலையை எப்படி பதப்படுத்தி தூளாக தயார் செய்கிறார்கள் என்று ஆச்சர்யத்துடன் பார்த்து விட்டு மேலும் ஒரு சுற்று அந்த பாக்டரியை சுற்றிவிட்டு ஒரு வழியாக வேறு வேறு சுவைகளில் டீ தூள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும் இடத்திற்கு வந்தனர். அங்கு சாம்பிள்க்கு கொடுக்கும் டீயை வாங்கி குடித்தவர்கள் மற்ற இருவருக்கும் வாங்கி கொண்டு ஆளுக்கு ஒரு டீ தூள் பாக்கெட்டை பிடித்து கொண்டும் வாயிலிற்கு வர அவர்கள் கண்டது குரங்குடன் மல்லு கட்டி கொண்டிருந்த மதுவைத்தான்.

மூவரும் அதிர்ந்து கையில் இருந்த டீயை தவற விட்டனர்.அவர்கள் கையில் இருந்த கப் கீழே விழுந்ததை அந்த ரணகளத்திலும் கவனித்த ப்ரீத்தி “அய்யோ டீ போச்சே……ஏண்டி கீழ போட்டிங்க என்று கத்த ஆரம்பித்தாள். முதலில் சமாளித்து கொண்ட சூர்யா வேகமாக மது அமர்ந்திருக்கும் எதிர் புறம் சென்றவள் கத்தி அவளை திட்டி கப்பை விட சொல்ல அவளை அப்போதுதான் கவனித்த மது தோழியா கார்ன்னா என்று யோசித்து கார்ன்தான் என்ற முடிவிற்கு வந்த மறு நிமிடம் அவள் கையில் இருந்த கப் பிடுங்கப்பட்டது. மதுவின் நொடி நேர கவன சிதறலில் சுதாரித்த குரங்கு அவள் கையில் இருந்த ஸ்வீட் கார்ன் கப்பை பிடிங்கி கொண்டு ஓடியது.

ஒரு வழியாக இருவரின் போராட்டமும் முடிவிற்கு வர அங்கிருந்த கும்பலும் கலைந்து செல்ல ஆரம்பித்தனர். மதுவை கொலை வெறியில் முறைத்து கொண்டு நின்ற நால்வரையும் பாவமாக பார்த்தவள் “கப்பை பிடுங்கிட்டு போய்டுச்சுடி” என்று சொல்ல வேகமாக அவள் அருகில் வந்த ப்ரீத்தி “ஏன்டி நான் அவ்ளோ கத்து கத்தறேன் கொஞ்சமாவது காதில் வாங்கினாயா உன்னால இப்ப டீயும் போச்சு” என்று குனிய வைத்து குத்த ஆரம்பிக்க மற்றவர்களும் அவளுடன் சேர்ந்து மதுவை மொத்த துவங்கினர்.

அனைவரிடமும் அடி வாங்கி கொண்டு இருந்த மது வேகமாக நிமிர்ந்து ப்ரீத்தியின் கையில் இருந்த அவளுடைய ஸ்வீட் கார்ன் கப்பை பிடிங்கி கொண்டு ஓட துவங்க அவளை மற்றவர்கள் துரத்த ஆரம்பித்தனர். இந்த நிகழ்வுகள் அனைத்தையும் கண்ணில் கிண்டலுடனும் கொஞ்சமே கொஞ்சம் ரசனையுடனும் பார்த்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தது ஒரு ஜோடி விழிகள்.


வண்ணம் தொடரும்....


கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் தோழமைகளே!!..👇



 

PAPPU PAPPU

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
eiCP9DY31579.jpg


View attachment 7455


வண்ணங்கள் -7


அன்று இரவு குன்னூரிலேயே அவர்கள் தங்கிவிட அடுத்த நாள் காலையில் பிளாக் தண்டர் செல்வது என்று முடிவு செய்யப்பட்டிருந்ததால் விரைவில் தூங்க சென்றனர். மறுநாள் காலை 9 மணிக்கு பிளாக் தண்டர் வாயிலில் சென்று அனைவரும் நிற்க அவர்களது ஆசிரியர் ஒவ்வொருவருக்கும் அதன் பாசை கையில் கொடுத்து உள்ளே அனுப்பி வைக்க.பாசை கையில் வாங்கியவர்கள் ஆர்ப்பரித்துக் கொண்டு உள்ளே சென்றனர். முதலில் டிரை கேம்ஸ் விளையாட ஆரம்பித்தனர்.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு விளையாட்டிற்கு செல்ல நமது ஐவர் குழு முதலில் எந்த விளையாட்டிற்கு செல்லலாம் என்று குழம்பி கொண்டு இருக்க அபிதான் கொலம்பஸ் செல்லலாம் என்று கூறினாள். மற்றவர்களும் “சரி” என்று முன்னே செல்ல பூஜா மட்டும் பின் தங்கினாள். அனைவரும் தங்களது பாசை காமித்து விட்டு உள்ளே செல்ல முனையும் பொழுதுதான் பூஜா தங்களுடன் வராததை உணர்ந்தாள் சூர்யா.உடனே தன் அருகில் இருந்த அபியிடம் “எங்கடி பூஜாவ காணோம்”என்று கேட்க அனைவரும் அதன் பிறகுதான் பின்னால் திரும்பிப் பார்த்தனர்.

பூஜாவோ அவர்கள் எங்கு நின்று கொலம்பஸ் போகலாம் என்று முடிவெடுத்தார்களோ அங்கேயே கையை பிசைந்தபடி நின்றிருந்தாள். அவள் அருகே சென்ற மது “என்ன ஆச்சுடி ஏன் இங்கயே நிக்கற” என்று கேட்க, அவளோ “அது………..இல்லடி அது வந்து……வந்து. …………” என்று அவள் தயங்கிய படியே நின்றாள்.அவளின் தயக்கத்தை பார்த்த மது “எதுக்கு இப்புடி தயங்கறா” என்ற யோசனையோடு பார்க்க மற்றவர்களும் பூஜாவிடம் “அடியே என்னடி ஆச்சு சொன்னாதானே எங்களுக்கு தெரியும்” என்று கேட்க, ‘இவங்ககிட்ட சொல்லாமையும் இருக்கமுடியாது சொன்னாலும் இமேஜ டேமேஜ் பண்ணிடுவாங்க எப்புடி போனாலும் அடி கன்பார்ம் பேசாம சொல்லிடலாம்’ என்ற முடிவிற்கு வந்தவள் அவர்களை பார்த்து இப்போதும் தயக்கத்துடனே “இல்லடி எனக்கு கொலம்பஸ் ரைடிங்னா பயம் அது சீசா மாதிரி போயிட்டு வரும்போது வயிறு என்னமோ பண்ணும், நீங்க வேற கரெக்டா அதையே செலக்ட் பண்ணி விளையாட போனீங்களா எனக்குதான் பயமாச்சே அதான்……………” என்று கூற மற்றவர்கள் அனைவரும் ஒரு நிமிடம் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு பின் ‘கொல்’ என்று சிரித்தனர்.


தோழிகள் சிரிப்பதை கண்ட பூஜா “இப்ப எதுக்கு சிரிக்கிறீங்க” என்று கோபமாக கேட்டாள். “இல்ல இவ்வளவு பெரிய ஆளாகிட்ட இதுக்கு கூட பயமா” என்று ப்ரீத்தி கேலி பேச அவளை முறைத்த பூஜா “எனக்கெல்லாம் பயம் எதுவும் இல்லை வாங்க போகலாம்” என்று முறுக்கிக்கொண்டு முன்னே சென்றாள். அனைவரும் அவளை நக்கலாக பார்த்துக்கொண்டே சென்று அந்த கொலம்பசில் அமர அது மெதுவாக தனது இயக்கத்தை ஆரம்பித்தது.

முதலில் ஏனோ தானோ என்று அமர்ந்திருந்த பூஜா அதன் இயக்கம் அதிகம் ஆக ஆக அவளின் பயமும் அதிகமாகிக்கொண்டே இருந்தது ஒரு கட்டத்தில் அந்த கொலம்பஸ் முற்றிலும் தனது அசைவுகளை அதிகமாக்க பயந்தவள் “அபி …. அபி ” என கத்தினாள்.அபி அவளை கண்டுகொள்ளாமல் இருக்க பின்பு “சூர்யா......சூர்யா” என கத்தினாள். அருகில் இருந்த ப்ரீத்தி “என்னடி பயம் இல்லைனு சொல்லிட்டு இப்ப இந்த கத்து கத்துற காது வலிக்குதுடி அந்த பக்கம் திரும்பி கத்து என்று கிண்டல் செயதாள்.
பூஜாவோ “அடியே ஓவரா ஆடாதடி எனக்கும் ஒரு நேரம் வரும் அப்போ பத்துக்கறேன்டி உன்னை. அவஅவனுக்கு வந்தாதான் தெரியும் வயிற்று வலியும், தலை வலியும், என்ன கடுப்பு ஏத்தாம கம்முனு இருடி நானே என்னை பேலன்ஸ் பண்ணிக்க கத்தி கத்தி பயத்தை தள்ளி வைக்கிறேன் நீ வேற ஏன் நடுவுல வந்து டார்ச்சர் பண்ற”.

ப்ரீதியோ “என்னது பயத்தை கம்மி பண்ண கத்துரியா” என்று கூறியவள் அவளை ஒரு மார்க்கமாக பார்த்து “சரி சரி நீ கத்து” என்றுவிட்டு ரைடிங்கை ரசிக்க ஆரம்பித்தாள். பூஜா அனைவர் பெயரையும் ஏலம் விட்டுக் கொண்டே அந்த கொலம்பஸ் சவாரியை முடித்தாள் இறங்கிய பின் ஆசுவாசமாக கீழே வந்து மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கி நின்றவளை கண்ட மற்றவர்கள் “ஏண்டி இப்படி கத்துன” என்று கேட்க அவளோ தலையைத் தாங்கியபடி “கொஞ்ச நேரம் கம்முனு இருங்க எனக்கு தலையே சுத்துது” என்க, அருகில் இருந்த மது “ஏ அங்க பாரு உன்னோட ஆளு” என்றாள். உடனே பூஜா வேக வேகமாக திரும்பி “எங்க எங்க” என்று கேட்டாள்.

அவளை முறைத்துப் பார்த்த மது “இப்போ உன்னோட தலைசுத்தல் எல்லாம் எங்க போச்சு மரியாதையா வா” என்று அவளை இழுத்துக்கொண்டு ரோலர் கோஸ்டர் செல்ல அங்கு தேங்கி நிற்பது சூர்யா முறையானது. ஆனாலும் பூஜாவை சொன்னது போல் தான் தன்னையும் கேலி செய்வார்கள் என்று புரிந்து கொண்டவள் தனது பயத்தை மறைத்துக் கொண்டு ரோலர்கோஸ்டரில் ஏறி அமர அதுவும் படி படியாக வேகமெடுத்தது. அப்போதிலிருந்து அவள் கத்திய கத்து அனைவர் காதுகளையும் செவிடாக்கும் அளவு இருந்தது முக்கியமாக அவள் அருகில் அமர்ந்திருந்த ப்ரீத்தியின் காது அடைத்து விட்டது.
ரோலர் கோஸ்டர் நின்றவுடன் அனைவரும் கீழே வந்து அவளை முறைக்க ப்ரீத்தியோ பூஜாவை சுட்டி காட்டி அங்கதான் இவ கத்தி கத்தி ஒரு பக்க காதை பஞ்சர் ஆக்குனானு பாத்தா நீயும் ஏன்டி கத்தி என்னோட இன்னொரு பக்க காதையும் டேமேஜ் பண்ற . அய்யோ இங்க இருந்து போகற வரைக்கும் என்னோட காதிரெண்டையும் காப்பாத்திருடா புருஷோத்தமா என்று மேல் நோக்கி கும்பிட, சூர்யாவோ ப்ரீத்தி வேறு யாரையோ சொல்வது போல் வேறு பக்கம் திரும்பி வேடிக்கை பார்த்து கொண்டிருந்தாள்.
ரோலர்கோஸ்டர் பயணத்திற்காக காத்திருந்தவர்கள் அனைவருமே அவளை ஒரு மார்க்கமாக பார்த்தனர். இதை கவனித்த அவளின் தோழிகள் அனைவரும் ஒரே நேரத்தில் அவளை “தூ” என்று துப்பினார்கள்.

“அடுத்து எந்த ரெய்டுக்கு போகலாம்” என்று அபி கேட்க தனக்கு ஏதாவது ஆபத்து வந்து விடுமோ என்று பயந்த ப்ரீத்தி “நம்ம ஏன் அந்த 5டி தியேட்டருக்கு போக கூடாது” என்று கேட்க மற்றவர்களும் சரி அங்கேயே போலாம் என்று கூறினார்.

அனைவரும் அங்கே சென்று அமர அங்கு ரோலர் கோஸ்டர் பயணம் போல் காட்சி அமைப்பு இருந்தது. அதைக் கண்டு அனைவரும் சூர்யாவை பார்க்க அவளோ “இங்கே நான் கத்த மாட்டேன்” என்று வீம்பாக கூற மற்றவர்களோ அவளை கேலியாக பார்த்துவிட்டு பார்க்கத்தானே போகிறோம் என்று கூறிவிட்டு தங்களது சீட்டில் அமர்ந்தனர். பின் படம் ஓட ஆரம்பிக்க அந்த படத்திற்கு ஏற்றார் போல் இவர்களது சீட்டுகளும் அசைய ஆரம்பித்தது. மும்முரமாக அந்த காட்சியமைப்பு ஓடிக்கொண்டு இருக்க அனைவரும் அந்த காட்சியோடு ஒன்றி போய் பார்த்து கொண்டு இருந்தனர்.

திடிரென்று அவர்கள் அருகில் “ஐயோ அம்மா” என்று ஒரு சத்தம் கேட்டது. அபியோ கிண்டலான குரலில் “இந்த மது மறுபடியும் ஏதோ பண்ணி இருக்கா” என்று கூற சூர்யாவோ “அடியே நான் நல்லா தான் இருக்கேன் வேற யாரோ விழுந்து இருக்காங்க” என்று கோபமாகக் கூறினாள்.”நீ இல்லனா வேறு யாரு” என்று அவர்கள் திரும்புவதற்கும், மின் விளக்குகள் அனைத்தும் எரிய விடவும் சரியாக இருந்தது..

யார் சத்தம் போட்டது என்று அவர்கள் அனைவரும் திரும்பி பார்க்க அங்கே கீழே விழுந்து கிடந்தாள் மது. அவள் விழுந்து கிடந்ததை கண்ட உடன் அனைவரும் வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரிக்க ஆரம்பித்தனர். தோழிகள் சிரிப்பதை கண்டு கடுப்பான மது மெதுவாக எழுந்து அவர்களை முறைத்து கொண்டே “இப்ப எதுக்கு சிரிக்கிறீங்க” என்று கீழே விழுந்த வலியோடு கேட்க அவர்களும் அவளின் முக சுருக்கத்திலேயே வலியை உணர்ந்தவர்களாக தங்களது சிரிப்பை நிறுத்தி கொண்டு “ஆமா நீ எப்படி விழுந்த” என்று கேட்டனர்.

மதுவும் அதே குழப்பத்துடன் “தெரியலடி நானும் நன்றாகதான் பார்த்துட்டு இருந்தேன் ஆனா எப்படி விழுந்தேன் என்றே தெரியல” என்று கூறினாள் வலி நிறைந்த குரலில். அவளின் பேச்சை கவனித்த பிரீத்தி “ஆமா நீ பெல்ட் போட்டியா இல்லையா” என்று கேட்டாள். மதுவோ அவளின் கேள்வியில் திருதிருவென விழித்துவிட்டு பின் “பெல்டா அது எங்க இருக்கு” என்று கேட்க, தலையில் அடித்துக் கொண்டவர்கள் அருகிலிருந்த பெல்ட்டை எடுத்து காமிக்க அவளோ “எல்லாம் சரியா இருக்கான்னு பார்த்துட்டு இருக்கும்போதே ஆரம்பிச்சிருச்சு முன்னாடி இருந்த கம்பியைப் புடிச்சுக்கிட்டு பார்க்க ஆரம்பிச்சுட்டேன்.பெல்டு இருக்குன்னு யாராவது சொல்லி இருக்க வேண்டியதுதானே” என்று கேட்க தலையில் அடித்துக் கொண்டவர்கள் இன்னும் ரெண்டு பேர் தான் இருக்கோம்.டேமேஜ் ஆகாம நமக்கு என்ன வருதுன்னு பார்ப்போம் என்று கூறியபடி வெளியே வந்தாள் அபி.

அடுத்து அவர்கள் வேறு பக்கம் சுற்றி கொண்டு இருக்க அப்போது அவர்கள் கண்ணில்பட்டது ‘பப்பலோ டான்ஸ்’ கேம்.அதை பார்த்த ப்ரீத்தி “எனக்கு அதுல சுத்தணும்” என்று கூறினாள். மற்றவர்கள் அதன் அமைப்பிலேயே பயந்து “வேண்டாம்டி அது பார்க்கும் போதே பயமா இருக்கு வேண்டாம் சொன்னா கேளு” என்று அவர்கள் மறுத்தும் கேட்காமல் “இல்ல நான் ஒரே ஒரு தடவை சுற்றி பார்க்கறேன் முடிவு பண்ணிட்டேன் ப்ளீஸ்” என்று கெஞ்ச மற்றவர்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்து அடுத்து இவ டர்ன் தான் என்று நினைத்துக்கொண்டு சரி போ என்றனர். அவர்களின் நினைப்பை பொய்யாக்காமல் அந்த மாடு சுத்த ஆரம்பித்த பத்தாவது நொடியில் தூக்கி கீழே வீசப்பட்டு மல்லாக்க விழுந்து கிடந்தாள் ப்ரீத்தி.அதைப் பார்த்து அனைவரும் சிரிக்க, மெதுவாக எழுந்து வந்தவள் “இப்ப எதுக்கு சிரிக்கிறீங்க? இந்த கேம்ல எத்தனை பேர் விழுந்து இருக்காங்க நான் மட்டுமா விழுந்தேன்? சும்மா சிரிக்காம வாங்க” என்று வீம்பாக சொல்லிக்கொண்டு முன்னே செல்ல மற்றவர்களும் அவளை கேலியாக பார்த்தபடி பின்னே சென்றனர்.

அடுத்ததாக அவர்கள் சென்ற இடம் “கோஸ்ட் ஹவுஸ்”. உள்ளே செல்லும் முன்பே சூர்யா அனைவரின் கையை பிடித்து “அடியே வேண்டாண்டி எனக்கு பயமா இருக்கு நம்ம வேணா அந்த பக்கம் கண்ணாடி வீடு இருக்கு அங்க போகலாம்” என்று சொல்ல அவளை மேலும் கீழும் பார்த்தவர்கள்.பின் கிண்டலாக சிரித்து கொண்டு “நீதிடா.. நேர்மட….. நியாயம்டானு ….. எத்தன தடவ கருத்து சொல்லியே எங்க கழுத்தறுத்து சைட் அடிக்க விடாம பண்ணிருப்ப ஒழுங்கா உள்ள வா” என்று பூஜா இழுத்து செல்லும் போதுதான் அபி கவனித்தாள் தங்களின் பின்னால் யமுனாவின் குழு வருவதை. தோழிகளுக்கு அவர்கள் வருவதை கண்ணை காட்டி புருவம் ஏற்றி இறக்கி மௌனபாஷை பேச, அவள் சொல்ல வருவதை புரிந்து கொண்ட தோழிகளும் கட்டை விரலை உயர்த்தி சரி என்றவர்கள் வேகமாக பக்கத்தில் இருக்கும் கேன்டீன் உள்ளே சென்று சிலபல பொருட்களை வாங்கி கொண்டு பேய் வீட்டிற்குள் நுழைந்தனர்.

யமுனா பேய் வீட்டிற்குள் நுழைய போக அவளது தோழிகள் “உள்ளே போக வேண்டாம்” என்று தடுத்தனர். அவளோ “ஹேய் பேசாம இருங்கடி அந்த பஞ்ச பாண்டவிகள் இங்க போனதை பார்த்தேன் உள்ளே அவர்கள் பயப்படுவதை பார்த்து நான் கிண்டல் செய்ய வேண்டும். நான் ஓட்டுகிற ஓட்டில் அவர்கள் இந்த பள்ளியில் இருந்தே ஓட வேண்டும் அதற்கு நான் உள்ளே நடப்பதை தெரிந்து கொள்ள வேண்டும்” என்றவள் உள்ளே நுழைந்தாள். என்ன நடக்க போகிறதோ என்ற பயத்துடனே அவளது தோழிகளும் உள்ளே சென்றனர்.

முதலில் சென்ற ஐவர் குழு சில வேலைகளை செய்து விட்டு யமுனாவின் குழுவிற்காக காத்திருந்தனர். அவர்கள் உள்ளே நுழைந்த மறுநிமிடம் அங்கு முன்பக்கம் எரிந்து கொண்டிருந்த லைட்டை அணைத்தாள் சூர்யா.

திரும்பும் திசை எங்கும் இருள் சூழ்ந்திருக்க தன் பக்கத்தில் இருப்பவர்களின் முகம் கூட தெரியாத நிலை. யமுனாவிற்கு பயம் ஆரம்பித்தாலும் தோழிகளுக்கு காட்டாமல் மறைத்தவள் கெத்தாக உள்ளே செல்ல பூஜா மற்றும் மது இருவரும் தாங்கள் அணிந்திருந்த “ஷாலை” கோர்த்து இருவரும் இரு முனைகளை பிடித்து மறைவான இடத்தில் நின்று கொள்ள மேலே பார்த்து கொண்டு வந்த யமுனா குழு ஷாலில் தடுக்கி கீழே விழுந்தனர்.

கேன்டீனில் அவர்கள் வாங்கிய “டொமட்டோ ஷார்ஸை” அபி சரியாக அவர்கள் விழும் இடம் பார்த்து கொட்டி வைக்க அதிலேயே அனைவரும் விழுந்தார்கள் . முகம் முழுவதும் டொமெட்டோ சார்ஸ் ஒட்டி கொள்ள பிசுபிசுப்பாக இருப்பதை உணர்ந்தவர்கள் என்ன என்று தெரியாமலே ஓரளவு கைகளாலேயே துடைத்து கொண்டு மேலும் நடந்தனர்.

யமுனாவின் தோழி ரம்யா “அடியே இப்போக்கூட ஒன்னும் இல்ல வா அப்புடியே ஓடிடலாம்” என்க, பிடிவாதமாக அவர்களை உள்ளே இழுத்து சென்றாள் யமுனா.

அடுத்ததாக முடி அதிகம் வைத்திருக்கும் மதுவை ஒரு பக்கமாக திருப்பி நிற்க வைத்தவர்கள் அவள் முடியை பிரித்து இரு பக்கமும்விட்டு முகம் தெரியாத அளவுக்கு வைத்துவிட்டு மறைந்திருந்து நடப்பதை பார்த்து கொண்டிருந்தனர் . யமுனா மது நிற்கும் இடத்தை நோக்கி செல்ல ஆரம்பிக்க அவர்கள் அருகில் வருவதை உணர்ந்த மது சத்தமாக சிரித்து தலையை அசைத்து ரா…. ரா…..ரா….என்று பாட அவர்கள் அலறி அடித்து கொண்டு ஓடினர்.அதை பார்த்த ஐவர் குழு அவர்களுக்கு முன் வேறு வேறு திசைகளில் நின்று கொண்டு சிரிக்க ஆரம்பித்தனர் அவர்களின் சிரிப்பு “எக்கோ” போல் அங்கிருந்த சுவர்களில் எதிரொலிக்க யமுனா நடுங்கி போனாள்.

அடுத்ததாக அபி தன் கையில் இருக்கும் பவுடரை அவர்கள் இருக்கும் பக்கமாக ஊதிவிட்டாள். பயத்தில் இருந்தவர்கள் நல்ல வாசம் வருவதை உணர்ந்து மேலும் நடுங்கினர். அவளது தோழிகளில் ஒருத்தி “யமு ரஜினி சந்திரமுகி படத்துல பேய் வர்றதுக்கு முன் காத்துல மல்லிப்பூ வாசம் வரும்னு சொல்லிருக்காருடி அது மாதிரியே வாசம் வருதுடி “ என்று சொல்ல, ஏற்கனவே பயத்தில் இருந்த யமுனா “இப்போ நீ வாய மூடிட்டு வரல உன்னை இங்கயே விட்டுட்டு போயிடுவோம்” என்று கத்த அதற்கு மேல் அவள் வாயை திறக்கவில்லை.

யமுனாவின் பயந்த முகத்தை பார்த்த பூஜா “பாவம்டி போதும்” என்று சொல்ல மற்றவர்கள் அவளை முறைத்து “என்னடி உன் நாத்தனார காப்பாத்துறிய” என்றனர். உடனே பேச்சை மாற்றும் விதமாக “இங்க போதும்னு சொன்னேன். அடுத்து வேற இடத்தில் பார்த்து கொள்வோம்” என்று சொல்லி தப்பித்துக்கொள்ள மற்றவர்களும் ‘சரி’ என்று விட்டுவிட்டு வெளியே சென்று யமுனா குழு வர காத்திருந்தனர்.

ஒருவழியாக தட்டுத்தடுமாறி வெளியில் வந்தவர்களை பார்த்து ப்ரீத்தி வயிற்றை பிடித்து கொண்டு சிரிக்க, மற்றவர்களும் சிரிக்க ஆரம்பித்தனர். யமுனாவோ எதற்கு சிரிக்கிறார்கள் என்று புரியாமல் தன் தோழிகளை பார்க்க அப்போதுதான் புரிந்தது அவர்களின் சிரிப்பிற்கான காரணம்.

ஆம், அவர்கள் கீழே விழும்போது ஒட்டிய “டொமட்டோ ஷார்ஸ் “ முகத்தில் அங்கங்கு ஒட்டி இருக்க அபி ஊதிய பவுடர் முகத்தில் அலங்கோலமாக அப்பி இருந்தது.ஒருவரை ஒருவரை அப்போதுதான் பார்த்தவர்கள் ஆ.. .என்று கத்தி கொண்டு முகம் கழுவ ஓடினர்.

யமுனா ஓடுவதை பார்த்த அபி சூர்யாவிடம் “பார் உன்னை அழ வைத்த ஓணான் முழு பேயாக மாறி இருப்பதை பார்” என்று சொல்லி அனைவரும் சிரிக்க அந்த சிரிப்பில் தோழியை அழ வைத்தவர்களை தண்டித்து விட்டோம் என்ற நிம்மதி இருந்தது.”சரி வாங்க அடுத்த விளையாட்டுக்கு போவோம்” என்று இழுத்து சென்றாள் சூர்யா.

அடுத்து வாட்டர் கேம்தானே என்று ஆர்வமாக அபி கேட்க, அனைவரும் “ஆமாம்” என்று தலையாட்டி குதித்து கொண்டு ஓடினர்.

அங்கிருந்து சுவிம்மிங் பூல் அமைப்பு கொண்ட தொட்டியில் ஒருவர் மேல் ஒருவர் தண்ணிர் அடித்துக் கொண்டும் கத்திக் கொண்டும் விளையாடிக் கொண்டிருந்தனர்.வெகுநேரம் தண்ணீர் விளையாட்டுகளில் தங்கள் நேரத்தை இவர்கள் செலவழித்து கொண்டிருக்க பிரீத்தி ரெஸ்ட் ரூம் சென்று வருவதாக சொல்லி எழுந்து சென்றாள்.

மற்றவர்கள் நீரில் விளையாண்டு கொண்டிருக்க ரெஸ்ட் ரூமுக்கு சென்றவள் பதற்றத்தோடு இவர்கள் அருகே ஓடி வந்தாள்.அவள் வேகமாக வருவதை கண்டவர்கள் “என்னடி ஆச்சு ஏன் இப்படி ஓடி வர” என்று கேட்க அவளோ “இல்லடி நான் ரெஸ்ட் ரூம் போனப்ப ரெண்டு பேர் பேசிட்டு இருந்தாங்க.அதை கேட்டு உங்ககிட்ட சொல்லலாம்னுதான் வேகமா வந்தேன்” என்றாள்.

“அப்புடி எந்த ரகசியத்தை நீ கேட்ட சொல்லு கேட்போம்” என்றாள் பூஜா. “அது……………” என்று இழுத்து பின் முகத்தை ஒரு மாதிரி வைத்து கொண்டு “நிறைய பேர் இந்த தண்ணீரிலேயே சூ சூ போயிடுவாங்களாம்.அப்புறம் எப்புடி அதுல இறங்கி விளையாடுறது” அப்புடினு அந்த பொண்ணு அவ பிரண்டுக்கிட்ட பேசிட்டிருந்தாள்.

ப்ரீத்தி சொன்ன அடுத்த நிமிடம் சூர்யா வேகமாக தண்ணீரைவிட்டு எழுந்து வெளியேறவும், அவர்கள் பின்னால் இருந்து “உவ்வாக்” என்ற சத்தம் கேட்டது. மற்றவர்களுக்கு திரும்பாமலே புரிந்துவிட்டது அது அபி தான் என்று.ஏனென்றால் விளையாடும்போது அவள் வாயினுள் நீர் போய்விட்டது என்று சொன்னதும் நினைவில் வந்தது.அதனால் அவள்தான் அருவருப்பில் வாமிட் செய்து கொண்டு இருக்கிறாள் என்று முடிவு செய்து கொண்டனர்.

வேகமாக அபியிடம் சென்ற மது “சரி சரி ஒன்னும் இல்லை வா” என்று சொல்லி மேலே அழைத்து சென்றனர்.தண்ணீர் குடிக்க கொடுத்தும் “உவாக் ….உவாக் என்று அருவெறுப்பில் வாந்தி வருவது போல் செய்து கொண்டே இருக்க அவளின் செயலில் கடுப்பான சூர்யா ப்ரீத்தியை பார்த்து “அவ காதுல விழற மாதிரியாடி சொல்லுவ”.ப்ரீத்தியோ “இல்லடி நான் அவசரத்துல பொதுவா சொல்லிட்டேன். அவளுக்கு வாமிட் வரும்னு மறந்துட்டேன் என்று பாவமாக கூறினாள்.

மதுவோ “சரி சரி விடு அஞ்சாவது ஆளுக்கும் சம்பவம் நடந்துருச்சு வாங்க கிளம்பலாம் என்று கூறி அந்த இடத்தை விட்டு நகர்ந்தனர்.

அடுத்து எந்த கேம்க்கு போகலாம் என்று பூஜா கேட்க, டிராகன் வாயிலிருந்து சறுக்கி கொண்டு நீரில் விழுவது போல் இருக்கும் இடத்திற்கு சென்றனர். அதை பார்த்த ப்ரீத்தி “ஹேய் அதுல விளையாடலாம்” என்று சொல்ல சூர்யாவோ “ஏன்டி இப்போதான் தண்ணில எல்லாரும் என்ன பண்ணுறாங்கனு சொன்ன மறுபடியும் அங்கேயே குளிக்கலாம்னு சொல்ற? நோ நேர போய் டிரஸ் மாத்திட்டு வேற டிரை கேம் விளையாடலாம்” என்று சொல்ல அவளை மேலிருந்து கீழே பார்த்த அபி “அதுதான் முழுசா நெனஞ்சாச்சுல அப்புறம் முக்காடு எதுக்கு அது எல்லாம் முடியாது வா அதுல போய் விளையாடலாம் என்று கூப்பிட்டாள்.

“அடியே கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி வாமிட் வர மாதிரிதான் இருந்துச்சு இப்போ நிஜமா வந்துரும் என்று நக்கலாக சொல்ல கேட்க, அபியோ விடுறா… விடுறா…. அரசியல்ல இது எல்லாம் சகஜமப்பா என்று சொல்லி வரிசையில் நிற்க சென்றாள்.

சூர்யா மட்டும் போகாமல் அங்கேயே நிற்க மற்ற நால்வரும் அவளை கேள்வியாக பார்த்தனர். அவளோ “ச்சி…. ச்சி நான் வரலப்பா” என்று சொல்லிவிட மற்றவர்கள் தலையில் அடித்து கொண்டு சென்றனர்.

நால்வரும் அங்கு சென்று பார்க்க இவர்களுக்கு முன் யமுனா குழு நின்றிருந்தது இவர்களை பார்த்ததும் அவள் முகத்தை திருப்பி கொண்டு நின்றிருந்தாள். இவர்களும் எதுவும் பேசாமல் போய் வரிசையில் நின்று கொண்டனர். யமுனாவின் பின் மது அவளின் பின் பூஜா என்று நின்றிருந்தனர்.

ஒவ்வொருவராக இடைவெளி விட்டு சறுக்கலில் இறங்கினர். யமுனா முறை வந்து அவள் இறங்கும் போது அடுத்ததாக இருந்த மதுவை தள்ளிவிட்டாள் அபி . மது வேகமாக சறுக்கி கொண்டு சென்றவள் யமுனாவையும் தள்ளி கொண்டு விழ கீழ் இருக்கும் நீர் குளத்தில் “தொப்” என்று விழுந்தனர் இருவரும். மேல் இருந்து ஆர்வமாக எட்டி பார்த்து கொண்டு இருந்த மற்ற மூவரும் என்ன நடக்கிறது என்று பார்த்தனர். அங்கே யமுனா கீழ் இருக்க அவள் மேல் அமர்ந்திருந்தாள் மது.

“ஹய்யோ அம்மா ஏய் மது எந்திரி என்னமோ சோபால உட்க்கார்ந்து இருக்க மாதிரி உட்காந்து இருக்க” என்று என்று இருமி கொண்டே சொன்னாள். எதிர்பாராமல் மது வரவும் அவள் தண்ணீர் அடியில் சென்று மூக்கு, வாய் என்று நீர் சென்றிருந்தது அவளுக்கு அதனால் இருமி கொண்டு இருக்க மதுவோ பொறுமையாக “இருமா நான் என்னமோ ஆசைபட்டு உட்காந்து இருக்க மாதிரி சொல்ற பேலன்ஸ் பண்ணி எந்திரிக்கணும்ல” என்று சொல்லி வேண்டுமென்றே நன்றாக அவள் மேல் தன் பாரத்தை கொடுத்து எழுந்து “சாரி” என்று அப்பாவியாக சொல்லி விட்டு அந்த பக்கம் சென்றுவிட்டாள்.

யமுனாவோ “லூசு லூசு நமக்குன்னு எங்க இருந்துதான் வருதுங்களோ ச்சை”………….. என்று திட்டி கொண்டு நிற்க “தொப்” என்று அபி அடுத்து குதித்ததில் யமுனா முகத்தில் மீண்டும் நீராபிஷேகம் நடந்தது.யமுனாவோ “ச்ச…. குளோரின் வாட்டர் என் வாய்க்குள்ள போய்டுச்சு” என்று சொல்ல அபியோ “ஹேய் அது குளோரின் வாட்டர் இல்லை யூரின் வாட்டர்” என்று சொல்லி மதுவுடன் ஹைபை அடித்து கொண்டாள்.

யமுனாவோ “ச்சை…. . கருமம் த்து…… த்து… என்று துப்பிவிட்டு அபியை பார்த்து முறைக்க, அபியோ அவளை நக்கலாக பார்த்து சிரித்தவள் “நீ அந்த பக்கம் நகர்ந்திருக்கணும்ல, என் மேல் தப்பு இல்லை சீக்கிரம் அந்த பக்கம் போ அங்கு பார் அடுத்து ப்ரீத்தி வரா” என்று சொல்ல,மேலே நிமிர்ந்து பார்த்த யமுனா “ஹய்யயோ ஏற்கனவே மது என் மேல விழுந்து முதுகெலும்பு உடையர மாதிரி இருக்கு அடுத்து இவ விழுந்தா கன்பார்ம் நாம நெக்ஸ்ட் புத்தூர்தான் போகணும்” என்று மனதில் அலறியவள் வேகமாக அந்த இடத்தைவிட்டு நகர்ந்தாள். அவள் ஓடுவதை பார்த்த மற்றவர்கள் அனைவரும் வயிற்றை பிடித்து கொண்டு சிரித்தனர்.

அடுத்து “ரெயின் டான்ஸ்” செல்ல அங்கும் வர மாட்டேன் என்று அடம்பிடித்த சூர்யாவை இழுத்து கொண்டு சென்று மழை போல் வரும் இடத்தில் நின்று கொண்டு டான்ஸ் ஆடி ஒருவழியா டயர்ட் ஆகி நல்ல நீரில் குளித்து தங்களை சுத்தம் செய்து கொண்டு வேறு உடை அணிந்து கொண்டு பஸ் அருகில் வந்தனர். அதன் பின் அனைவரும் இரவு உணவை உண்டுவிட்டு சென்னையை நோக்கி தங்கள் பயணத்தை துவங்கினர்.

யமுனாவின் குழுவில் இருந்தவர்கள் “கோஸ்ட் ஹவுஸில்” ஏற்பட்ட அனுபவத்தால் இருட்டை பார்த்தாலே அலறி பஸ்சில் லைட்டை அணைக்க விடாமல் கொட்ட கொட்ட விழித்து கொண்டு வந்தனர். அவர்களை பார்த்து தங்களுக்குள் சிரித்து கொண்ட ஐவரும் ஆடிய களைப்பில் நிம்மதியாக உறங்கி போயினர்.


அடுத்த நாள் சென்னை வந்து சேர்ந்தவர்கள் பின் தங்களது இயல்பு வாழ்க்கையில் பொருந்தி விட்டனர்.

வாழ்க்கை அதுவும் சின்ன பிள்ளை வாழ்க்கை வரமானது அதனால்தான் இன்றளவும் நாம் அனைவரும் யோசிப்பது சின்ன பிள்ளையாகவே நாம் இருந்து இருக்கலாம் என்று. சிறு வயது எந்த பிரச்னையையும் சந்தித்துவிட்டு ஆற்று நீர் போல் அடுத்ததை நோக்கி ஓட ஆரம்பிக்கும். ஆனால் பெரியவர்கள் நடந்த நிகழ்வையே யோசித்து மனதில் அந்த கசப்பான நிகழ்வுகளை தேக்கிவைத்து மனதையே சாக்கடையாக மாற்றி வைத்திருப்பார்கள். இதே நிகழ்வுதான் இங்கும் நடந்தது கசப்பான சம்பவங்களை அவர்கள் மறந்து அடுத்து என்ன என்ற வாழ்க்கையின் ஓட்டத்தை பார்க்க ஐவரும் தயாராகிவிட்டனர்.

இப்படியே நாட்கள் நகர ஒருவாறு இவர்களது பள்ளிப்படிப்பு முடியும் நேரம் வந்தது. படிப்போடு சேர்ந்து கலையிலும் ஆர்வம் கொண்டவர்கள் என்பதால் ஆண்டுவிழாவில் கலந்து கொண்டு வருடா வருடம் தங்களது திறமைகளை காட்டினர். இவர்கள் சுட்டியாக இருந்தாலும் இவர்களது திறமையை அங்கிருந்த ஆசிரியர்கள் தட்டிக் கொடுக்க மறக்கவில்லை இதோ இவர்களது பள்ளி நாட்களும் இனிதாக நிறைவு பெற்றது....

- வசந்தம் வீசும்......
 
Status
Not open for further replies.
Top