All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அஜ்வந்தியின் 'வண்ணங்களின் வசந்தம்' - கதை திரி

Status
Not open for further replies.

Sonythiru

Suthisha
20520

வண்ணம் -8

பணக்காரர்கள் மட்டுமே வாசிக்க கூடிய அந்த அடுக்கு மாடி கட்டிடத்தில் இளம் காலை வேளையை தனது பால்கனியில் இருந்து ரசித்து கொண்டிருந்தாள் அவள்.இயந்திர பறவையின் சத்தத்தில் வானத்தை நிமிர்ந்து பார்த்தவளின் மேல் சூரிய கதிர்கள் பட்டதில் அன்றலர்ந்த மலரைப் போல் இருந்த அவளின் முகத்தில் சிறு புன்னகை கீற்று தோன்றியது.அவளை பார்ப்பவர்களுக்கு அவளின் புன்னகை ஒட்டிக்கொள்ளும் விழிகளில் தீர்க்கமும் முகத்தில் சினேக பாவத்துடன் இருக்கும் அவள்தான் அபி.

அபியின் ரசனையை தடை செய்யும் விதமாக அமைந்தது அவள் தந்தையின் அழைப்பு.தந்தையின் குரலில் முகத்தில் தோன்றிய புன்னகை மாறாமல் அவரிடம் சென்று நின்றாள்.

மகளை வாஞ்சையாக பார்த்த அவளது தந்தை “என்னோட அம்முக்கு இன்னைக்கு முதல் நாள் காலேஜ் ஆச்சே நான் வேணா இன்னைக்கு மட்டும் உங்களை ட்ராப் பண்ணவா” என்றார்

அப்பொழுது சமையலறையில் இருந்துஎட்டி பார்த்த அபியின் தாய் “என்ன டிஎஸ்பி சார் உங்க பொண்ண ராகிங்கில இருந்து காப்பாத்தறீங்களா, இல்ல இந்த வானரங்கள் கிட்ட இருந்து மத்தவங்கள காப்பாத்த பாக்குறீங்களா” என்று இருவரையும் கலாய்த்த படி வந்து அமர்ந்தார்.

தன் தாயின் கிண்டலை காதில் வாங்காததது போல் இருந்த அபி சிறு சிரிப்புடன் “டாட் உங்களுக்கு கருகின வாசம் வருதா”என்றாள் நக்கலாக. மகளின் பேச்சு புரியாமல் இருவரும் முழிக்க தந்தையை பார்த்து கண்ணடித்தவள் “அது ஒன்னும் இல்ல டாட் நீங்க எங்கள ட்ராப் பண்ண வந்தா காலேஜில இருக்க பொண்ணுங்க எல்லாம் உங்க அழகுல மயங்கி அவங்களுக்கு போட்டியா யாரும் வந்துருவாங்களோனு பயந்து எங்களை கலாய்க்கிற மாதிரி உங்கள போக விடாம தடுக்கறாங்க” என்று சொல்லி ஓட தயாராக நின்றவளை பார்த்த,அவளின் தாய் “அடி கழுதை” என்று அடிக்க வர அவரிடம் சிக்காமல் நழுவி வாயிற்புறம் சென்றவள் “நான் ப்ரீத்தி ரெடியானு பாக்க போறேன்” என்று கத்தி கொண்டே நில்லாமல் தோழியின் வீட்டிற்கு ஓடிவிட்டாள்.

ப்ரீத்தியை பார்க்க வந்த அபியை வரவேற்றது என்னமோ ப்ரீத்தி தாயின் கோபக் குரல் தான்.

மனைவியின் கத்தலுக்கும் தனக்கும் சம்பந்தமும் இல்லை என்பது போல் ஹாலில் அமர்ந்து ஹாயாக பேப்பர் படித்துக் கொண்டிருந்தார் ப்ரீத்தியின் தந்தை.அவர் அருகில் சென்ற அபி “அங்கிள் எதுக்கு ஆன்ட்டி திட்டிட்டு இருக்காங்க” என்று கேட்க, அதற்கு அவரோ “எப்பயும் போலத்தான் உன் ஆன்ட்டி சுப்ரபாதத்தை ஆரம்பிச்சுட்டா.பேங்க் மேனேஜர் மத்தவங்களைதான் லோன்க்கு நாயா அலைய விடுவாங்க இங்க என்னடானா கட்டுன புருஷனுக்கு ஒரு வாய் காபி குடுக்காம அலைய விடறா, எங்கம்மா அப்பையே சொன்னாங்க பேங்க் மேனேஜர் பொண்ணு வேணான்டானு எங்க கேட்டேன்………”என்று இழுத்தவரின் பேச்சு அங்கு இடுப்பில் கை வைத்து முறைத்து கொண்டு இருந்த மனைவியை பார்த்து கப்பென்று நின்றது.

ப்ரீத்தியின் தாய் முறைப்பையும் அவள் தந்தையின் திரு திருவென்ற முழியையும் நமுட்டு சிரிப்புடன் பார்த்த அபி

“ஆன்ட்டி இங்க பாருங்க அங்கிள் என்னமோ அவங்க அம்மா சொன்னதா சொல்றாரு என்னனு கேளுங்க” என்று போட்டுக் கொடுத்து அவர் முறைப்பதை பார்த்து மேலும் தூபம் போடும் விதமாக “விடாதிங்க ஆன்ட்டி நீங்க அங்கிள என்னன்னு கேளுங்க நான் ப்ரீத்தியை என்னென்ன பார்க்கிறேன்” என்று கூறியவள் தன்னையே பாவமாக பார்த்த ப்ரீத்தியின் தந்தையை பார்த்து “என்ஜாய் அங்கிள் என்ஜாய்”! என்று கண்ணடித்துவிட்டு தன் தோழியின் அறைக்கு நுழைந்தாள்.

அறைக்குள் ப்ரீத்தியோ அபியின் மொத்த பிபியும் ஏற்றும் வகையில் தலையணையை முகத்தின் மேல் போட்டு கொண்டு அழகிய ஓவியமாக ஆழ்ந்த நித்திரையில் இருந்தாள்.”ம்கூம்………வெளிய ஒரு போரே நடக்குது அதுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லைங்கற மாதிரி எப்புடி தூங்கறா பாரு” என்ற கடுப்பில் அவள் முகத்தை மூடி இருந்த தலையணையை எடுத்த அபி தன் தோழி இருந்த நிலையைக் கண்டு பக்கென்று சிரித்து அவள் உறங்கிக்கொண்டிருந்த நிலையை தன் செல்லில் படம் எடுத்து சேமித்து கொண்டாள்.

ப்ரீத்தி இதை எதையும் உணராமல் தன் வாயில் ஒரு விரல் போதாது என்று இரு விரல்களையும் வைத்து கொண்டு உறங்கி கொண்டு இருந்தாள்.அவளை பார்ப்பவர்களுக்கு பார்க்க தெவிட்டாது. கண்களில் மட்டும் இல்லாது முகத்திலும் குறும்பும் புன்னகையும் போட்டி போட்டுக் கொண்டு இருக்கும். டீனேஜ் பருவத்தில் அடியெடுத்து வைத்தாலும் மனதிலும் அகத்திலும் அவள் குழந்தையே. ( போதும் அந்த குழந்தையை முதல்ல எழுப்புவோம் இல்ல அபி இருக்கிற கடுப்புல நம்மள நாலு சாத்து சாத்திடுவா ) தன் மொபைலை பத்திரப்படுத்திய அபி தான் விட்ட பணியினை ( அதுதாங்க அடிக்கிறது ) சாரி சாரி எழுப்பும் வேலையில் தொடர்ந்தாள். .

“அடியே எந்திரிடி லீவுல தான் எந்திரிக்காம உயிரை வாங்குனனு பாத்தா, இன்னைக்கும் இப்புடி பண்ணிட்டு இருக்க. இன்னைக்கு ஃபர்ஸ்ட் டே காலேஜ் போகணும்னு கொஞ்சமாவது நியாபகம் இருக்கா, நேரம் ஆச்சு கிளம்பாம தூங்கிட்டு இருக்க எந்திரிச்சு தொலைடி இன்னும் கொஞ்சம் லேட் பண்ணுனாலும் சூர்யா கிட்ட வேற திட்டு வாங்க முடியாது” என்று அவளை மானாவாரியாக திட்டிக்கொண்டும் பாரபட்சமின்றி தலையணையால் தாக்கி கொண்டும் இருந்தாள்.

வலி தாங்க முடியாமல் தன் தாய் தான் அடிக்கிறாரோ என்று நினைத்து கொண்ட ப்ரீத்தி " ஐயோ அம்மா ஏன்மா ஒரு பச்ச மண்ண இப்படி போட்டு அடிக்கிற” என்று புலம்பி கொண்டே எழுந்தவளின் முன் இடுப்பில் கைகளை வைத்துக்கொண்டு முறைத்து கொண்டிருந்தாள் அபி.அவளை பார்த்து ஜெர்க்கான ப்ரீத்தி அய்யோ நேத்தே சொல்லிதானே அனுப்புனா சீக்கிரம் எந்திரினு வழக்கம்போல தூங்கிட்டேன் போலவே என்று தனக்குள் பேசிக்கொண்டவள் வெளியே அபியை பார்த்து இஈஈ என்று அசடு வலிய சிரித்து அதுக்குள்ள விடிஞ்சிருச்சா என்றாள்.

ப்ரீத்தியின் மேல் காண்டில் இருந்த அபிக்கு அவளது கேள்வி கொலை காண்டை உண்டாக்க உன்னை போட்டு தள்ளுவதற்குள்ள ஒழுங்கா ரெடியாயிடு இல்ல இன்னிக்கு ஒரு கொல கன்ஃபார்ம் என்று மிரட்ட அவளின் கோவத்தின் அளவை தெரிந்த தோழியும் “இதோ” என்று சிட்டாக பறந்துவிட்டாள் கிளம்ப.

கல்லூரிக்கு கிளம்பிய இருவரும் அவரவர் பெற்றோர்களிடம் ஆசி பெற்று, ஸ்கூட்டியில் ஏறி சூர்யாவின் வீடு நோக்கி சென்றனர்.

இயற்கை எழில் கொஞ்சும் அந்த பங்களாவில் நம்மை வரவேற்றது சுப்ரபாதத்தின் ஒலியே,உள்ளே ஒரு கையில் மணியுடனும் மற்றொரு கையில் தீபஆராதனை தட்டுடனும் பூஜை செய்து கொண்டு இருந்த பாவை அவளின் முகத்தில் தீபத்தின் ஒளிப்பட்டு செப்பு சிலை போல் மிளிர்ந்தவளின் இதழோரம் சிரிப்பில் விரிந்திருக்க கண்களை மூடி வேண்டிக்கொண்டவள் தெய்வீக அழகுடன் இருந்தாள் சூர்யா முதல் நாள் கல்லூரிக்கு செல்லும் ஆர்வத்தில் கடவுளை துதித்தவள் தன் தாயை தேடி சென்றாள். அங்கு அவளின் தம்பி தாயிடம் “ஏன்மா அப்படியே அப்பா மாதிரியே இவளையும் பர்ஃபெக்ட்டா பெத்த எதையெடுத்தாலும் லக்சர் கொடுக்கிறா பங்ச்சுவாலடி, ப்ராபர்ட்டினு” ‘ஆ…. .’என்று கொட்டாவி விட்டவன் “எனக்கு தூக்கம் தூக்கமா வருது”….. என்றுகூறி கொண்டிருந்த அதே நேரம் அவன் மண்டையில் ஒரு கொட்டு விழுந்தது. கொட்டியது யாரென்று தெரிந்தமையால் வலி எடுத்த தலையை தேய்த்துக்கொண்டே கொட்டிய ஆளை முறைத்து “ எதுக்கு இப்ப கொட்டின” என்று கடுப்புடன் கேட்டான்.

தன்னை கிண்டல் செய்த தம்பியை கொட்டியவள் கேலியான குரலில் “பிளஸ்-1 படிக்கிற சுண்டைக்காய் பையன் காலேஜ் போற என்ன அவ இவனா பேசுற, ஒழுங்கா மரியாதையா பேசு இல்லைனா ஈவினிங் மேத்ஸ் டெஸ்ட் வச்சுடுவேன்.பாத்துக்கோ என்று வெறுப்பேத்தியவள் தன் தாயின் புறம் திரும்பினாள்.

சூர்யாவின் தாய் சுந்தரியோ வந்துட்டாளா ஓவரா பேசுவாளே என்று மனதில் நினைக்க, அவர் எண்ணத்திற்கு ஏற்றார் போல் சூர்யாவும் “ஏன்மா அவன்தான் படிக்காம இங்க உட்கார்ந்து கதை அடிச்சுகிட்டு இருக்கான்னா அவன போய் படினு சொல்லாமல், வாய் அடிக்கிறதை கேட்டுட்டு இருக்கீங்களா எப்போ தான் உங்களுக்கு பொறுப்பு வரப்போகுதோ” என்று சூர்யா திட்டியதை கேட்டுக்கொண்டே படிகளில் இறங்கி வந்து கொண்டிருந்தார் அவளின் தந்தை வரதராஜ் .
.தன் மகளின் செயலில் எப்போதும் போல் கர்வம் கொண்டவர், அவளின் தலையை வாஞ்சையுடன் தடவி மனைவியை வம்பிழுக்கும் பொருட்டு “பொறுப்பா உங்க அம்மாவுக்கா அது எந்த கடைல விக்கும்னு கேப்பா, இல்லாததை எதுக்குடா அவகிட்ட கேட்டு உன்னோட எனர்ஜிய வேஸ்ட் பண்ற” என்று சிறு சிரிப்போடு கேட்க அவள் தாயோ இருவரையும் முறைத்து விட்டு “ஆமாம் …ஆமாம் நீங்க ரெண்டு பேரும் ரொம்ப பொறுப்பானவங்கதான் வீட்ல ரெண்டு பேர் பொறுப்பா இருக்கறது போதும்” என்றவர் முகத்தை தோள்பட்டையில் இடித்து கொண்டு மகனுடன் சேர்ந்து நின்று கொண்டார்..

மனைவியின் பேச்சு காதில் விழாதது போல் திரும்பி கொண்ட ராஜ் மகளின் கன்னம் தட்டி “என்னடா காலேஜ்க்கு ரெடி ஆகிட்டியா” என்று கேட்டார்.

தந்தையின் கேள்விக்கு சூர்யா பதிலளிக்கும் முன் அவள் கொட்டிய கடுப்பில் இருந்த அவளின் தம்பி அகிலன் “அவதான் காலையில போற காலேஜ்க்கு நைட்டே ரெடியாகிட்டாளே” என்று கலாய்க்கவும் அவர்கள் வீட்டு வாசலில் வண்டி ஹாரன் சவுண்ட் விடாமல் கேட்கவும் சரியாக இருந்தது.

ஹார்ன் அடிப்பதை கவனித்த அகிலன் “இதோ வந்துட்டாங்கல்ல பஞ்சபாண்டவிகளில் இரண்டு பாண்டவிகள்.இன்னைக்கு அந்த காலேஜ்ல எத்தன பேர் உங்ககிட்ட மாட்டிட்டு முழிக்க போறாங்களோ” என்றவன் சூர்யாவை பார்த்து “கிளம்பு கிளம்பு காத்து வரட்டும்” என்று நக்கலாக கூறினான்.

தன்னை கிண்டல் அடித்த தம்பியை பார்த்து சூர்யா பல்லை கடித்தாலும் நேரமாவதை உணர்ந்து பெற்றோரிடம் சொல்லி கொண்டு செல்ல போனவள் ஓடிபோய் அகிலனின் தலையில் கொட்டிவிட்டு “சீக்கிரம் கெளம்புடா காலேஜ் போற நானே சீக்கிரம் ரெடியாயிட்டேன். ஸ்கூலுக்கு போற நீ இன்னும் குளிக்க கூட இல்லை போ போ வெட்டியா நின்னு வாய பாக்காம கிளம்பற வழிய பாரு” என்று விரட்டி விட்டு தன் ஸ்கூட்டியை எடுத்து கொண்டு தோழிகளின் அருகில் சென்று நிறுத்தினாள்.

வாசலில் தனக்காக காத்திருந்த தோழிகளை முறைத்தவள் “எவ்வளவு நேரம் உங்களுக்காக வெயிட் பண்றது. பூஜாவ வேற நாம போய்தான் கிளம்ப வைக்கனும் சீக்கிரம் கிளம்பி வாங்கணு நைட்டே அத்தனை டைம் சொன்னேன் காதுல வாங்குனீங்களா” என்று ஆரம்பிக்க அவளது பேச்சை இடையிட்டு நிறுத்திய அபி “இப்படியே நீ பேசிட்டு இருந்தா கண்டிப்பா நாம சீக்கிரம் காலேஜ் போக முடியாது.ஏற்கனவே லேட் இதுல நீ வேற ஏன்டி கதா காலட்சேபம் பண்ற போதும் கிளம்பு” என்றவளை முறைத்த சூர்யா “கடைசியா என்ன சொல்லிடுவிங்கிளே ‘ஓகே ஓகே’ வாங்க கிளம்பலாம்” என்று கூற மூவரும் பூஜாவின் வீடு நோக்கி சென்றனர்

பூஜாவின் வீட்டிற்கு செல்லும் வழியில் மூவரும் திரும்ப அங்கு வெயில் தன்மேல் படாமல் இருக்க தனது வண்டியை ஒரு பூ மரத்தின் நிழலில் நிறுத்தி ஒரு காலைத் தரையிலும் மற்றொரு காலை வண்டியிலும் வைத்து இரு கைகளையும் கோர்த்து தன் மதி முகத்தை அதில் தாங்கி அல்ட்ரா மாடர்ன் போல கிளம்பி இருந்தவளின் அழகு பார்ப்பவர் அனைவரையும் அசர அடித்து மனதை கொள்ளை கொள்ள வைக்கும்.

தோழிகள் வருவதை பார்த்த பூஜா தன் முத்துப் பற்கள் தெரிய புன்னகை சிந்த கல்லூரிக்கு தயாராகி நின்ற தோழியை பார்த்த மூவருக்கும் மயக்கம் வராத குறையாகியது என்றால் மிகையில்லை. ஏனென்றால் பூஜா அவள் பாட்டியிடம் வம்பு வளர்த்துக் கொண்டு இருப்பாள் நாம் போய்தான் அவளை ரெடியாக சொல்ல வேண்டும் என்று அனைவரும் நினைத்திருக்க இவளோ தயாராகி இருப்பதை பார்த்து முதலில் திகைத்தாலும் பின் சுதாரித்து கொண்ட அபி “எங்கேயோ இடிக்குதே” என்று சந்தேகமாக கூறினாள்.

சூர்யாவும் மண்டையை ஆட்டி தனக்கும் அதே சந்தேகம்தான் என்பது போல் பார்க்க இருவரையும் முறைத்த ப்ரீத்தி “போலீஸ்காரன் பொண்ணுனா எப்பவும் சந்தேகப்படனுமா” என்று கேட்க அபியின் பாச பார்வையில் கப்பென்று வாயை மூடிக்கொண்டாள்.பின் சமாளிக்கும் விதமாக அவளே “சரி சரி சும்மா எதுக்கு டைம் வேஸ்ட் பண்றீங்க வாங்க வாங்க மது வர்றதுக்குள்ள நாம அங்க போய் வெயிட் பண்ணணும்ல” என்று கூற, அவளை முறைத்து கொண்டே இருவரும் பூஜாவின் அருகில் சென்றனர்.

தோழிகள் தன் அருகில் வந்தவுடன் அவர்களை முறைத்த பூஜா“ஏன்டி உங்களுக்கு கொஞ்சம் கூட டீ, டிகாஷனே இல்லையா, பர்ஸ்ட் டே காலேஜ்க்கு இவ்ளோ லேட்டாதான் வருவீங்களா” என்று படபடவென கேள்வி கேட்டவளை பார்த்த ப்ரீத்தியோ “உன்னோட டீ டிகாஷன் எல்லாம் நிறுத்து. முதல்ல என் கேள்விக்கு பதிலை சொல்லு ஸ்கூல் போகும்போதே கிளம்பாம உன்னோட பாட்டிக்கிட்ட பஞ்சாயத்து வச்சுக்கிட்டு நாங்க வர வரைக்கும் கிளம்பாம இருப்ப, இப்போ என்ன புதுசா எங்களுக்கு முன்ன சீக்கிரம் கிளம்பி இருக்க” என்றாள் நக்கல் குரலில்.அதற்கு பூஜாவோ வெட்கபடும் பாவனையில் கை விரலை வாயில் வைத்து கொண்டு கால் பெரு விரலால் தரையில் கோலமிட்டு கொண்டே “அது. ……..அது” என்று இழுத்து “அங்க நெறைய பசங்க இருப்பாங்க என்ஜினீயர், டாக்டர்னு பாரபட்சம் இல்லாம எல்லாரையும் சைட் அடிக்கலாம்ல அதான்” என்று சொன்னாள். அவள் பேச்சில் அதிர்ந்த ப்ரீத்தி சூர்யாவை வேகமாக திரும்பி பார்த்து இவ இருக்கும்போது சொல்லிட்டாளே இனி இவ வேற படிக்கத்தான் காலேஜ் போறோம்னு கருத்து சொல்ல ஆரம்பிச்சுருவாளே என்று மனதில் புலம்பினாள்.

பூஜாவின் பாவனையை பார்த்த அபியோ “அடியே நீ சைட் அடிக்கறதுனா எவ்ளோ வேணாலும் அடிச்சுக்கோ அதுக்கு வெட்கங்கற பேர்ல நீ ஏதோ பன்றியே அதை தயவு செஞ்சு நிறுத்து, பார்க்க சகிக்கல என்று சொல்ல, சூர்யாவோ பூஜாவை பார்த்து கண்ணடித்து “தப்பு இல்ல தப்பு இல்ல சைட் அடிச்சுக்கலாம்” என்று சொல்ல தோழிகள் மூவரும் அவளை அதிர்ச்சியோடு பார்த்து “நீயாடி இதை சொல்றது, எப்பவும் படிக்கற வேலைய பர்ப்போம்னு அட்வைஸ் பண்ணுவ” என்று கோரசாக கேட்க, அதற்கு அவளோ “நாங்களும் வளந்துட்டோம்ல காலேஜ் வந்துட்டோம் அது மட்டும் இல்லாம அழக ரசிக்கறதுல தப்பு இல்லையே” என்று சொல்லி தோழிகளை பார்க்க அவர்கள் அப்போதும் அதிர்ச்சி விலகாமல் சூர்யாவைதான் பார்த்து கொண்டு இருந்தனர். அவர்களின் அதிர்ந்த முகத்தை பார்த்த சூர்யா “ஷாக்க கொறைங்க ஷாக்க கொறைங்க” என்றவள் பின் “வாங்க கிளம்பலாம் நேரமாச்சு” என்று சொல்ல அவள் பேச்சில் தன்னிலை அடைந்த தோழிகள் அவளிடம் “புல் பார்ம்லதான் இருக்க வா போலாம்” என்று மதுவிடம் தாங்கள் காத்திருப்பதாக சொன்ன இடத்திற்கு கிளம்பினர்.

மதுவந்தி அங்கு தன் இல்லத்தில் முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தாள். மகள் கோபத்தில் சாப்பிடாமல் சென்றுவிடுவாளோ என்ற பயத்தில் அவளின் பெரிய அன்னை உணவை ஊட்ட ஆரம்பிக்க, வேண்டா வெறுப்பாக சாப்பிடுவது போல் உணவை ஒரு கட்டு கட்டிக் கொண்டு இருந்தாள்.

தங்கையின் செய்கையை பார்த்த அண்ணன்கள் சிரித்துக் கொண்டிருக்க அதற்கு நேர்மாறாக முகத்தை உர்ரென்று வைத்து அமர்ந்திருந்தனர் அவளின் தந்தையும் பெரிய தந்தையும்.அவர்களின் அன்னையோ யாரையும் கண்டுகொள்ளாமல் தன் பேத்தியின் அருகில் சென்று கோவிலில் இருந்து கொண்டு வந்திருந்த பிரசாதத்தை நெற்றியில் பூசிவிட்டு “நீ கிளம்பு டா செல்லம் உனக்கு நேரமாகுது” என்றார்.

பாட்டி கூறியதைக் கேட்டு மது வேகமாக எழ அவளின் தந்தைமார்களும் தமையன் மார்களும் ஒருசேர எழுந்து கிளம்ப ஆயத்தமாகினர். அதைக்கண்ட மதுவின் கண்கள் கலங்க துவங்கியது.

அழகு ஓவியமாக தங்கள் எதிரில் நிற்கும் மதுவை பார்த்த அனைவருக்கும் மனதில் தோன்றிய ஒரே விஷயம் “தங்கள் வீட்டு இளவரசியை துணையின்றி தனியாக கல்லூரிக்கு அனுப்புவதா, முடியாது, நாங்களும் உடன் சென்றே தீருவோம்” என்பதே.

மதுவின் அண்ணன்கள் தாங்கள் படிக்கும் கல்லூரியில் தங்கையை சேர்த்துவிட முயற்சிக்க அவளோ தன் தோழிகள் சேரும் கல்லூரியில் தான் சேர்வேன் என்று உண்ணாவிரதப் போராட்டம் எல்லாம் நடத்தி சம்மதம் வாங்கினாள்”.அப்பாடா” என்று சந்தோஷமாக கல்லூரிக்கு கிளம்பியவளுக்கு அடுத்த சோதனையாக யார் அவளை கல்லூரியில் விட்டு அழைத்து வருவது என்று,அண்ணன்களும், அப்பாக்களும் அடித்துக் கொள்ளவும் நொந்தே போனாள்.

கல்லூரியிலாவது தன் சிறகை விரித்து பறக்கலாம் என்ற அவளின் எண்ணத்தில் இவர்கள் ஒரு லோடு மணலை அள்ளிப் போட்டார்கள்

தன் பேத்தியின் கண்கள் கலங்குவதை கண்ட மதுவின் பாட்டி “நீங்க யாரும் அவ கூட போக போறது இல்லை நம்ம டிரைவர் பாரி கூட தான் கார்ல போயிட்டு வரப்போறா, இல்ல, நாங்க தான் கூட்டிட்டு போவோம்னு அவ பின்னாடியே யாராவது போனீங்கனு தெரிஞ்சது காலேஜ் பஸ்ல அனுப்பிடுவேன் பாத்துக்கோங்க” என்று மிரட்டவும், அவர் கடைசியாக சொன்னதைக் கேட்டு பயந்து தங்களின் இளவரசியை மனதே இல்லாமல் தனியாக அனுப்ப அனைவரும் ஒப்புகொண்டனர்.

அனைவரும் தான் தனியாக செல்ல சம்மதித்த சந்தோசத்தில் தன் பாட்டியை அணைத்து முத்தமிட்ட மது, தன் குடும்பத்தினரின் வாடிய முகங்களைப் பார்க்க பொறுக்காமல் அவர்களையும் தன் முத்தத்தால் திக்குமுக்காட செய்து “ஐ லவ் யூ ஆல்” என்று சொல்லி அனைவரும் முகத்தில் இருக்கும் புன்னகை மாறுவதற்குள் ஒரே ஓட்டமாக ஓடியவள் யாரும் அறியாமல் தன் பாட்டியிடம் மட்டும் கட்டை விரலை உயர்த்தி “தேங்க்யூ பாட்டி” என்று வாயசைத்து, காரில் ஏரியவள் தன் பாட்டியிடன் கூறியதுபோல் கல்லூரிக்கு செல்லும் பாதிவழியில் தனக்காக காத்திருக்கும் தன் தோழிகளின் அருகில் இறங்கினாள்.

“அடே அப்பா சீக்கிரம் சிங்கிளா வந்துட்ட போருக்கு போற மாதிரி மொத்த குடும்பமும் வரும்னு பார்த்தனே” என்று மதுவை ப்ரீத்தி கிண்டல் செய்ய சூர்யாவோ “அது எல்லாம் காலேஜ்ல போய் பேசலாம் வாங்க போகலாம்” என்று சொல்ல மது வேகமாக பூஜா வண்டியில் அமர சென்றாள்.

மது தன் அருகில் வரவும் அலறிய பூஜா “என்ன ஆனாலும் இன்னைக்கு நான் சோலோ பர்பாமன்ஸ்தான் ப்ளீஸ்…….ப்ளீஸ்…. ப்ளீஸ்” என்றவள் “அபி வண்டில வாடி” என்று சொல்ல அபியோ “ஹேய் இன்னைக்கு மட்டும்தான் ப்ரீத்தி வண்டி எடுத்துட்டு வருவா, நாளைல இருந்து நாங்க ரெண்டு பேரும் என்னோட வண்டிலதான் வருவோம்.அதனால உங்க ரெண்டு பேருல ஒருத்தர்தான் அவளை கூட்டிட்டு வரணும் அது யாருனு நீங்களே முடிவு பண்ணிக்கோங்க இப்போ கிளம்பலாம் நேரமாகுது” என்று கூறி மதுவை தன் வண்டியில் ஏற்றி கொண்டவள் கல்லூரியை நோக்கி கிளம்பினாள் மற்றவர்களும் அவளை பின் தொடர்ந்து சென்றனர்.


கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பர்களே.............. .


 
Last edited:

Sonythiru

Suthisha
20839

அத்தியாயம் -9

ஐவரும், கல்லூரியின் வளாகத்திற்குள் நுழையும் சமயம் ப்ரீத்தி “ ஹேய் வண்டிய நிறுத்துங்கடி” என்று கத்தவும், மற்ற மூவரும் தங்கள் வண்டியை நிறுத்தினர், பின் அவளை பார்த்து “இப்போ எதுக்குடி வாசலிலேயே வண்டிய நிறுத்த சொல்ற” என்று அபி கேட்க அதற்கு ப்ரீத்தியோ “முதல் முதல்ல காலேஜ்குள்ள போறோம் வலது கால் எடுத்து வச்சு போலாம் , அப்பதானே வருஷமெல்லாம் நல்லது நடக்கும்” என சொன்னாள். “ஒகே” என்ற ஐவரும் தங்கள் ஸ்கூட்டியை ஓரமாக நிறுத்தினர்.பின் “அப்போ சரி வாங்க எல்லாரும் அட் அ டைம் ல ஒன்னா உள்ள போலாம்” என்று சொல்ல மற்றவர்களும் “ஓகே” என்று விட்டு, ஒருவர் தோளில் ஒருவர் கை போட்டு வலது காலை தூக்கவும் ,”அப்படியே அஞ்சு பேரும் இங்கே வாங்க” என்று அங்கு ரேகிங் செய்து கொண்டு இருந்த சீனியர்ஸ் கூப்பிடவும் சரியாக இருந்தது.அங்கு நின்றிருந்த சீனியர்களில் நின்றிருந்த ஒருவனை பார்த்து தோழிகள் அனைவரும் அதிர்ந்து பூஜாவை பார்க்க அவளோ திரு திருவென்று விழித்து கொண்டு இருந்தாள்.

“அடியே இதுதான் காலைல நீ சீக்கிரம் கிளம்பி இருந்ததுக்கு காரணமா” என்ற சூர்யா கேட்க, அபியும், மதுவும் ஒரே நேரத்தில் ‘இதுக்குதான் காலைலயே எலி எட்டு மொழம் வேட்டி கட்டுச்சா’ என்று நினைத்து கொண்டு பூஜாவை பார்க்க,ப்ரீத்தியும் அதே கேள்வியை கண்களில் தேக்கி பூஜாவை பார்த்தனர்.அவளோ ஈஈஈ……… என்று இளித்தாள்.

ஆம், அங்கு சீனியர்கள் கும்பலில் ஆறடி உயரமும், உடலுக்கு ஏற்ற ஜிம் பாடியுமாக கண்ணில் குறுப்புடனும் இதழில் வசீகர சிரிப்புடன் நடுநாயகமாக நின்றிருந்தான். அக்கல்லூரி மாணவிகள் அனைவரின் கனவு நாயகன் பூஜாவின் சைட் அர்ஜுன்.

“அவளை மொறைக்கறதெல்லாம் அப்புறம் வச்சுக்கலாம்.இப்போ ராகிங் பண்ண சீனியர்ஸ் கூப்படறாங்க அவங்ககிட்ட இருந்து எப்புடி எஸ்கேப் ஆகரதுனு வழிய மொதல்ல பாப்போம்” என்றாள் மது.அப்போது அந்த கூட்டத்தில் இருந்த சீனியர் மாணவர்களில் ஒருவன் உங்கள கூப்பிட்டு எவ்ளோ நேரம் ஆச்சு அங்க என்ன உங்களுக்குள்ள பேசிட்டு இருக்கீங்க கொஞ்சம் கூட சீனியர்னு மரியாதை வேணாம் என்று மிரட்டலாக கேட்டான்.

அப்போது பூஜா “வாங்கடி என்னதான் பண்றாங்கனு பாப்போம்” என்று சொல்லி வீராவேசமாக முன்னே சென்றவள்தன் தோழிகள் தன்னை தொடர்ந்து வராததை கவனித்து திரும்பி பார்க்க அவளை முறைத்த மற்ற நால்வரும் “அடியே உன்னோட ஆர்வம் எதுக்குன்னு எங்களுக்கு தெரியாதா, உன் போதைக்கு நாங்க ஊறுகாயா” என்று புலம்பிக்கொண்டே அவள் பின்னோடு சென்றனர்.

பூஜா, மது, ப்ரீத்தி மூவரும் முன் சென்று நிற்க, சூர்யாவும், அபியும் அவர்களின் பின் பக்கம் தனியாக ஒதுங்கி நின்றிருந்தனர்.

ஐவரையும் பார்த்த அர்ஜுன் அவர்களை தெரியாதது போல் முகத்தை திருப்பி கொள்ள, அவர்களில் ஒருவன் முதலில் ப்ரீத்தியை கூப்பிட்டு “சீனியர்ஸ் எது குடுத்தாலும் சாப்பிடணும் சாப்புடுவியா” என்றனர் கிண்டலாக, அவளும் சாப்பிடறதுதானே என்று வேகமாக “ம்ம்ம்ம்ம். .” என்று தலையாட்டினாள். உடனே சீனியர்கள் சிரித்து கொண்டு அவளிடம் “நாங்கள் சொல்வதை நீ சாப்பிடனும் ” என கூற, ப்ரீத்தியும் முகத்தை சிரிப்புடன் வைத்து கொண்டு “அவ்வளவு தானா இத நானும் மதுவும் நல்லா பண்ணுவோமே” என சொன்னாள்.

ப்ரீத்தி சொல்வதை “அப்படியா” என்று ஆச்சர்யம் போல் காட்டி கொண்ட சீனியர்களில் ஒருவன் மற்ற நால்வரிடம் திரும்பி “யாரு அந்த மது வா இங்க, நீயும் உன் பிரண்ட் கூட சேர்ந்து சாப்பிடு” என சொல்ல, மதுவோ “அவ மட்டும் தனியா சாப்ட்ருவாளோனு நெனைச்சேன், நல்ல வேலை என்னையும் கூப்பிட்டுட்டா ‘நண்பிடா’” என்று தனக்குள் சொல்லி கொண்டு ப்ரீத்தியின் அருகில் சிரிப்புடன் போய் நின்றாள். இருவரும் சாப்பிடும் ஆர்வத்தை கண்ணில் தேக்கி அவர்களை பார்த்துக்கொண்டு நின்றனர்.

சீனியர் மாணவர்களில் ஒருவன் “என்ன சாப்பிட பிடிக்கும்” என்றான். இருவரும் ஒரே நேரத்தில் “நான் சொல்றேன்,இல்ல இல்ல நான் சொல்றேன் இல்ல, இல்ல நான்தான் சொல்வேன்” என்று அடித்து கொண்டு இருக்க சீனியர்கள் “நம்ம இவங்கள கலாய்க்கறோமா இல்ல இவங்க நம்ம கலாய்க்கரங்களா” என்று குழம்பி போயினர்.

ஒரு வழியாக இருவரும் தங்களுக்குள் பேசி ஒரு முடிவுக்கு வந்தவர்களாக சேர்ந்து சொல்ல ஆரம்பித்தனர். “மட்டன் பிரியாணி சீனியர் அதுவும் மேல இருக்கறது வேண்டாம், ஓவர் மசாலா இருக்கும். கீழ இருக்கறதும் வேண்டாம், சுத்தமா மசாலா இல்லாம, அடி பிடிச்ச மாதிரி இருந்தாலும் இருக்கும், ‘சோ’ அதுவும் வேண்டாம். இடைல இருக்க லேயர்ல இருக்கும் பாருங்க அதுதான் டேஸ்ட். நடுவுல இருக்க லேயர்தான் ரொம்ப டேஸ்ட்டா இருக்கும் அதனால நாங்க சொல்ற மாதிரி வாங்கிட்டு வாங்க.அது மட்டும் இல்லாம சூடா இருந்தாதான் இவளுக்கு புடிக்கும் என்று மதுவை காட்ட அவளும் வேகமாக ‘ஆமாம் ஆமாம்’ என்று தலையாட்டினாள். எனக்கு ரொம்ப சூடா வேண்டாம் ரொம்ப ஆறி போனதும் வேண்டாம் நார்மல் சூடு போதும் அப்புறம் கூட சிக்கன் 65, அப்புறம் முட்டை, அவ்ளோதான்” என்று ப்ரீத்தி சொல்ல “அடியே தயிர் மறந்துட்ட” என்று எடுத்து கொடுத்தாள் மது. “ஷ்…. சாரிடி மறந்துட்டேன்” என்றவள் “கூட தயிரும் சீனியர் ப்ளீஸ் இல்லனா டேஸ்ட் தெரியாது” என்று சொன்னாள்.

இருவரின் பிரியாணி ஆர்டரை கேட்ட அர்ஜுனின் அருகில் நின்றவன் “டேய், நீ சொன்னன்னுதானே இந்த அஞ்சு பேரையும் கூப்பிட்டோம். இவங்க பண்றத பார்த்தா நம்மல இவங்க ராகிங் பண்ற மாதிரி இருக்கு” என்று சொல்ல அர்ஜுனோ “வாய மூடிட்டு, அந்த பொண்ணுங்ககிட்ட சொல்ல நெனச்சத சொல்லி முடிடா” என்று அவர்களுக்கு கேட்காதவாறு முணுமுணுத்து வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான். “ஆமாடா ரொம்ப முக்கியம் அங்க பாரு உண்மையாவே பிரியாணி வாங்கி குடுக்க போற மாதிரி வெயிட் பண்ணுதுங்க.இதுங்க வீட்ல சாப்பாடு போட்டு இருக்க மாட்டங்களோ, என்னவோ போ” என்று புலம்பிவிட்டு அவர்களை பார்த்து திரும்பினான்.
“ஓகே ஆர்டர் முடிஞ்சுதுல, ம்…. சாப்பிட ஆரம்பிங்க” என்று சொன்னான். ப்ரீத்தியும், மதுவும் புரியாமல் “இங்க எதுவுமே இல்ல எத சாப்பிட சீனியர்” என்று கேட்க, அவனோ “இங்க இலையில இருக்கு பாருங்க அத தான் சாப்பிடனும்” என்றான்.

இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து கொண்டு “இலை எங்க இருக்கு சீனியர் காணுமே” என்றனர் குழப்பமாக. உடனே அவன் “இருப்பதாக நெனச்சுட்டு சாப்பிட்டு காமிங்க” என நமட்டு சிரிப்புடன் கூறினான். அதில் இருவரும் உள்ளுக்குள் காண்டானாலும் வெளியில் “ஈஈஈஈஈஈ” என்று சிரித்துவிட்டு “ஒகே சீனியர்” என்றவர்கள் அங்கேயே சாப்பிட ஏதுவாக சம்மணமிட்டு அமர்ந்து தங்களுக்குள் கண்ணடித்து கொண்டு “நீ சாப்பிடுடி,நீ சாப்பிடுடி என இருவரும் மாறி மாறி சொல்லிக்கொண்டு இருந்தனர்.

அவர்களின் சேட்டையை பார்த்த அர்ஜுன் “இந்த படம் எல்லாம் நாங்க ஏற்கனவே பாத்துட்டோம் இப்ப நாங்க சொல்றத செய்ங்க”என்றான் கடுப்பாக.

அர்ஜுன் கூறியதை கேட்ட பூஜா “இல்ல சீனியர்” என்று ஏதோ கூற ஆரம்பிக்க அவள் பேச்சை தடுத்த மற்றொருவன் “அவங்களுக்கு நீ என்ன எடுப்பா” என்று கடுப்பாக மொழிந்துவிட்டு “முதலில் நீ இங்க வா” என்றான் .

பூஜாவோ அர்ஜுனிற்கு நேராக போய் நின்றவள் அவனையே விழி எடுக்காது பார்த்து கொண்டு இருந்தாள். அவளை பார்த்த மது, ப்ரீத்தியிடம் “அங்க பாருடி, நம்ம மண் சோறு சாப்பிட வச்சுட்டு இவ கண்ணுலையே அவ ஆளை சாப்பிடறா” என்று சொல்ல, ப்ரீத்தியோ “அடியே, பேசாம இரு நானே பிரியாணின்னு சொல்லி ஏமாத்திட்டாங்களேன்னு கடுப்புல இருக்கேன்” என்று பொறுப்பாக கீழே குனிந்து சாப்பிடுவது போல் பாவலா செய்து கொண்டு இருந்தாள். மதுவோ பிரியாணியை நினைத்து பெரு மூச்சு விட்டவள் பூஜாவை பார்த்து கொண்டே சாப்பிடுவது போல் பாவலா செய்து கொண்டு இருந்தாள்.

சூர்யாவும் அபியிடம் மது கேட்ட கேள்வியையே வேறு மாதிரி கேட்டாள். “என்னடி ராகிங் பண்ண அவனுங்க கூப்பிட்டா, இவ என்னமோ அவனுங்க அவார்ட் குடுக்க போற மாதிரி ‘ஈஈஈஈனு’ பல்ல காட்டிட்டு நிக்கறா” என்று சொல்ல, அபியோ “அவ ஆளை பாக்கறத விட வேற அவார்ட் அவளுக்கு எதுக்குடி வேடிக்கை மட்டும் பாரு” என்று சொல்ல சூர்யாவோ “ஆனாலும் இந்த கும்பல்ல அர்ஜுனை தவற வேற எவனும் பாக்கற மாதிரி இல்லை” என்று சொல்ல அபியும் “ஆமாம்டி, இந்த காலேஜ்ல எல்லாரும் இவங்க மாதிரியே இருந்துட்டா நம்ம நிலைமை என்ன ஆகறது” என்று புலம்ப ஆரம்பித்தாள்.

அர்ஜுன் அருகில் நின்ற கோகுல் “ஹேய் நான் கூப்பிட்டா, நீ அவன்கிட்ட போய் நிக்குற” என்று அதட்டினான்.அவன் அதட்டலில் பயந்த பூஜா பாவமாக முகத்தை வைத்து கொண்டு அவன் அருகில் போய் நின்றாள். “அது” என்பது போல் அவளை ஒரு பார்வை பார்த்தவன்.அர்ஜுனின் மறு பக்கம் நின்றிருந்தவனை கை காட்டி “அவன் பேரு ரகு. நீ இப்போ என்ன பண்ற அவன்கிட்ட போய் ‘ஐ லவ் யூ’ சொல்ற” என்று சொனான். அதை கேட்ட பூஜா அதிர்ந்து அர்ஜுனை பார்த்து “இவர்களிடம் இருந்து காப்பத்தேன்” என்பது போல் விழிகளால் கெஞ்ச அவனோ அவளை கண்டு கொள்ளாமல் நின்றிருந்தான். அவனின் செயலில் கடுப்பான பூஜா தன் தோழிகளை திரும்பி பார்த்தாள்.இவள் பார்ப்பதை உணர்ந்த மது ப்ரீத்தி தோளில் தட்டி “பிரியாணி நான் சொன்ன பதத்துல இருக்குடி, ரொம்ப டேஸ்டா இருக்கு, ஆனா சூடா இருக்கு” என்று பூஜாவை பார்த்து கண்ணடித்து கொண்டே சொல்ல பூஜா புரிந்து கொண்டாள் தோழிகள் அவர்கள் சேட்டையை ஆரம்பித்தவிட்டார்கள் என்று.

உடனே இவளும் ரகுவின் அருகில் போய் நின்றாள். பூஜா ரகுவிடம் போய் நிற்கவுமே உடல் விரைத்து நின்றிருந்தான் அர்ஜுன்.அவள் சொல்ல மாட்டாள் என்று அசால்டான முகபாவத்துடன் நின்றிருந்தவன் “சொல்லிடுவாளோ” என்று மனதினுள் ஜெர்க் ஆனான்.

ரகுவிடம் போய் நின்ற பூஜா அர்ஜுனை ஓர கண்ணால் பார்த்து கொண்டே “‘ஐ லவ் யூ…………….”என்று இழுத்து “ரகு அண்ணா’” என்று கத்திவிட்டு ஓட ஆரம்பித்தாள்.அவள் ஓடுவதை பார்த்த மற்றவர்கள் “டேய் அந்த பொண்ணு ஓடிடுச்சுடா” என்று சொல்ல இங்கு அர்ஜுனோ “நல்ல வேல அண்ணா சொன்னா” என்று சந்தோஷப்பட்டு கொண்டான்.அந்த பொண்ணு போனா போகட்டும் அங்க பாரு ரெண்டு பேரு நிக்கறத என்று மற்றொருவன் சொன்னான்.

அடுத்து அபியையும், சூர்யாவையும் பார்த்து “நீங்க ரெண்டு பேரும் இங்க வாங்க” என்று சொல்ல அவர்களோ “சாரி சீனியர் நாங்க உங்க ஜூனியர் இல்லை. நாங்க ‘மெடிக்கல் லைன்’ சோ உங்க ராகிங் எல்லாம் உங்க ஜூனியர்ங்ககிட்ட வச்சுக்கோங்க என்று அபி சொல்லி கொண்டு இருக்கும்போதே சூர்யா அபியின் கையை பிடித்து கொண்டு ஓட ஆரம்பித்தாள்.

சூர்யாவும் அபியை இழுத்து கொண்டு ஓட அவர்கள் ஓடுவதை அப்போதுதான் கவனித்த ப்ரீத்தி.என்ன இவளுங்கபாட்டுக்கு ஓடிட்டாளுங்க ரொம்ப உண்மையா நடந்துக்கிட்டமோ என்று யோசித்தவள் தானும் எழுந்து ஓட முயற்சிக்க அதற்குள் அவள் தோளில் கை வைத்து அழுத்தி தான் முதலில் எழுந்த மது அவள் ஒரு பக்கம் ஓட ஆரம்பித்தாள்.

மது ஓடவும் சுதாரித்த கோகுல் ப்ரீத்தி முன் வந்து தன் கால்களை அகட்டி வைத்து நின்று கொண்டு ஓட முடியாமல் தடுக்க முயற்சித்தான், மது தோளில் அழுத்தி எழவும் எழுந்தவள் மீண்டும் பழைய மாதிரியே அமர்ந்த ப்ரீத்தி திரு திருவென்று விழித்து கொண்டிருந்தாள்.

ஓடி கொண்டிருந்த மது ப்ரீத்தியை திரும்பி பார்த்து “டேய் செவ்வாழை தாவுடா தாவு” என்று கத்த அவளின் குரலில் தன்னை சுதாரித்து கொண்ட ப்ரீத்தி கோகுலின் கால் இடைவெளியில் புகுந்து ஓடிவிட்டாள். அங்கு நின்றிருந்தவர்கள் யாரை பிடிப்பது யாரை விடுவது என்று தெரியாமல் விழித்து கொண்டு இருக்க, இவர்களின் சேட்டை தெரிந்தே அவர்களை அழைத்திருந்த அர்ஜுனிற்கோ இதழோரம் புன்னகை மலர்ந்தது.

கோகுல் அர்ஜுனிடம் “என்னடா அவங்க எல்லாரும் நம்மல ஏமாத்திட்டு ஓடிட்டாங்க, நீ என்னனா சிரிச்சுட்டு இருக்க” என்று கடுப்பாக கேட்க.
அர்ஜுன் ”விடுடா எங்க போக போறாங்க நாளைக்கு இல்லை அதுக்கு அடுத்த நாள் எப்புடியும் ஒரு நாள் நம்மக்கிட்ட மாட்டத்தான் போறாங்க அப்போ பாத்துக்கலாம். இப்போ வாங்க கிளாஸ்க்கு போகலாம்” என்று மற்றவர்களை இழுத்து சென்றான். ஓர பார்வையில் கேட் அருகே இருக்கும் புதர் போன்ற செடியை மர்ம சிரிப்புடன் பார்த்து கொண்டே.

அர்ஜுன் கும்பல் அந்த இடத்தில் இருந்து நகர்ந்த பின் அந்த புதர் செடியின் பின் புறம் இருந்து முதலில் வெளி வந்த பூஜா “ஹப்பாடா வாங்கடி போய் வண்டிய எடுத்துட்டு உள்ள வரலாம் அவங்க எல்லோரும் போய்ட்டாங்க” என்று சொல்ல, அடுத்து வெளி வந்த சூர்யா ப்ரீத்தியை பார்த்து “இதுக்கு பேருதான் நல்லதா” என்று கேட்க, அவளை அசட்டு சிரிப்புடன் பார்த்த ப்ரீத்தி “அது இல்லடி வலது கால் எடுத்து வச்சி வந்தா நல்ல சகுனம்னு சொன்னாங்க, அதை நம்பி நான் ஏமாந்துட்டேன்” என்று அப்பாவியாக சொல்ல, அவளை முறைத்த அபி “ஆமாண்டி காலைலயே ஓட்ட பந்தயத்துல ஓடற மாதிரி ஓடுனோமே, இதுதான் நல்ல சகுனமா” என்றாள். அதற்கு ப்ரீத்தியோ “விடுடா விடுடா வாழ்க்கைனா சில அடிகள் விழதான் செய்யும்” என்று சொல்ல தோழிகள் அனைவரும் அவளை முறைத்தனர். பின் மதுதான் “இவளை அப்புறம் பார்த்துக்கலாம், இப்போ வாங்க வண்டி எடுத்துட்டு கிளாஸ்க்கு போற வழிய பார்க்கலாம்” என்று சொல்ல மற்றவர்களும் வகுப்பிற்கு நேரம் ஆவதை உணர்ந்து கிளம்பினர்

தோழிகள் ஐவரும் ஒருவழியாக பார்க்கிங் ஏரியாவில் வண்டியை விட்டவர்கள் கல்லூரி முடிந்த பின் மீண்டும் இங்கயே சந்திக்கலாம் என்று பேசி முடிவெடுத்தவர்கள் அவரவர் பில்டிங் நோக்கி சென்றனர்.
அபி மற்றும் சூர்யா மெடிக்கல் காலேஜ் அருகில் வந்த பின்.அபி ‘நல்ல வேல அவங்ககிட்ட தப்பிசுட்டோம்’ என்றாள், சூர்யாவும் “ஆமா ஆமா” என்று கூறியவள் “வா வா சீக்கிரம் கிளாஸ்க்கு போலாம். நமக்கும் டைம் ஆயிடுச்சு” என்று கூற இருவரும் வேகமாக தங்களது வகுப்பறையை நோக்கி சென்றனர்.
பேருந்து நிறுத்தி இருக்கும் இடத்தை அவர்கள் கடந்து செல்லும்போது இரண்டு பேருந்துக்கும் இடையில் இருவர் மறைவாக நின்று பேசி கொண்டு இருந்தனர்.

பேச்சு சத்தம் கேட்ட சூர்யா ‘இதுக்குள்ள என்ன பன்றாங்க’ என்று யோசித்த படி அங்கு சென்று எட்டி பார்த்தாள். அவள் பின்னோடு பார்த்த அபிக்கு அங்கு என்ன நடக்கிறது என்று புரிந்து போக தலையில் அடித்துக்கொண்டவள் சூர்யாவின் சுடிதார் காலரை பிடித்து இழுத்துக்கொண்டே “இதை எல்லாம் நீ பாக்க கூடாது வா கிளாஸ்க்கு போலாம்” என்று இழுத்து சென்றாள்.

அபியின் இழுப்பிற்கு சென்றாலும் அவங்க ரெண்டு பேரும் அங்க என்னடி பன்றாங்க என்று கேட்க கடுப்பில் இருந்த அபியோ ம்………….நாட்டு நடப்பை அலசி ஆராயராங்க போதுமா வாடி என்றவள் தோழியை வகுப்பறையை நோக்கி இழுத்து சென்றாள்.

வகுப்பறையை தேடி வந்தவர்கள் ஒரு இடத்தை பிடித்து அமரும் நேரம் கல்லூரி பியூன் வகுப்பிற்குள் வந்தார். “எல்லோருக்கும் வரவேற்பு கூட்டம் வச்சிருக்காங்க செமினார் ஹாலுக்கு வாங்க” என்று சொல்லி செல்ல அனைவரும் செமினார் ஹால் நோக்கி சென்றனர். அங்கு அவர்களுடைய காலேஜ் டீன் மாணவர்களுக்கு அறிவுரைகள் அள்ளி வழங்கி கொண்டிருந்தார், அவர் பேசி முடித்த பின் விரிவுரையாளர் பேச ஆரம்பிக்க, இங்கு அபிக்கோ அவர்களது பேச்சை கேட்டு தூக்கம் தூக்கமாக வர அப்படியே அவள் தூங்கி போனாள்.

சூர்யா முதலில் ஆர்வமாக அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்தாலும், போக போக அவளுக்கும் தூக்கம் வர ஆரம்பித்தது, தூங்கினால் மாட்டிக்கொள்வோமோ என்று பயந்தவள் அருகிலிருந்த அபியின் தோளை தட்டி “ஏய் அபி” என்று எழுப்பினாள். அபியோ நன்றாக உறங்கிக் கொண்டிருந்தவள், மீட்டிங் முடிந்ததால் சூர்யா தன்னை எழுப்புகிறாள் என்று நினைத்துக்கொண்டு வேகமாக எழுந்து “சரி வா கிளம்பலாம்” என்றாள்.

சூர்யா தலையில் கை வைத்து குனிந்து கொண்டிருப்பதை பார்த்தவள் அப்போதுதான் கவனித்தாள், அந்த இடமே நிசப்தமாக இருப்பதை, உடனே தனது பார்வையை சுழல விட அனைவருமே அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தனர். அதுவரை பேசிக்கொண்டிருந்த அந்த விரிவுரையாளரும் அவள் தூங்குவதை பார்த்து கொண்டுதான் இருந்தார், அது ஏற்கனவே அவருக்கு கோபத்தைக் கிளப்பி இருக்க இப்பொழுது எழுந்து நின்றது வேறு அவரது கோபத்திற்கு மேலும் எண்ணெய் ஊற்றுவது போல் இருந்தது.

உடனே அவர் அபியை பார்த்து “ வாட்” என்று கோபமாக கேட்க.அபியோ முதலில் திருதிருவென விழித்தவள் பின் “உங்கள மாதிரி பெரிய டாக்டர் ஆகணும்னா என்ன சார் பண்ணனும்” என்று கேட்க, அதற்கு அவரோ “முதல்ல காலேஜில் படிக்கனும் அதுவும் தூங்காம” என்று கூற, அவளும் “அப்படியா சார் ஓகே ஓகே” என்று பவ்யமாக கூறி விட்டு அமர்ந்து கொண்டாள். பின் மேலும் இரண்டு மூன்று பேராசிரியர்கள் பேசி பேசியே மொத்த மாணவர்களையும் டயர்ட் ஆக்கி, அந்த மீட்டிங்கை முடித்தனர்.

மீட்டிங் முடிந்து வெளியில் வந்த சூர்யா “ஏய் லூசு மாதிரி ஏன்டி எழுந்திருச்ச” என்று கேட்க அவளோ “உன்னை யாரு தூக்கத்துல இருக்கறவள எழுப்ப சொன்னது, நான் கூட மீட்டிங் முடிஞ்சிருச்சுனு நினைச்சுதான் எழுந்துட்டேன்”என்றாள்.

சூர்யாவோ அபியை பார்த்து, “ஆனாலும் கொஞ்சம் இல்ல ரொம்ப மொக்கையா தான் இருந்துச்சு, முடியலடா சாமி” என்று கூற, அபியோ “ஆமா வந்த அன்னைக்கே ஏசி போட்டு தாலாட்டு பாடினா தூக்கம் வராமல் என்ன வரும்” என்றவள் பின் சிறு சிரிப்புடன் “ஆனாலும் முதல் நாளே நல்ல சகுனம் செம தூக்கம்” என்று கூறி சிரிக்க சூர்யாவும் அவளோடு hi-fi கொடுத்து கொண்டாள்.

இவர்கள் பேசுவது அனைத்தையும் இவர்கள் பின்னால் கேட்டுக்கொண்டே வந்த இளைஞர்கள் இருவர் சற்று சத்தமாகவே சிரித்துவிட, அவர்களின் சிரிப்பு சத்தத்தில் இருவரும் “எவன் அவன்” என்பது போல் திரும்பி பார்த்தனர். அவர்கள் தங்களை திரும்பிப் பார்ப்பதை உணர்ந்த அந்த சீனியரில் ஒருவன் “வந்த அன்னைக்கே காலேஜ் பேமஸ் ஆயிட்டீங்க போல” என்று கண்களில் ரசனையுடன் அபியை பார்த்து கேட்டான், என்றால் மற்றவனின் பார்வையோ மிக ஆர்வமாக சூர்யாவின் மீது பதிந்தது. தோழிகள் இருவரும் ‘இது யார்’ என்பது போல் பார்த்தனர். அவர்களோ நாங்க உங்களோட சீரியர்ஸ்தான் என்று கூறினர்.வாவ் இவ்ளோ சார்மிங்கான சீனியர்ஸா என்று ஜொள்ளு விட்டாலும் யோசனையாக நின்று இருந்தனர்.

அபி இருவரின் முகங்களையும் ஆராய்ச்சியாக பார்த்தாள். அவர்கள் ராகிங் செய்வதற்கான அறிகுறி எதுவும் இல்லை என்பதை புரிந்து கொண்டவர்கள், அப்போதுதான் ஓரளவு பயம் தெளிந்த தோழிகளும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டவர்கள் “ஹாய் சீனியர்” என்று ஒரு சேர கூறினர். அவர்களோ “உங்க பேர் என்ன?” என்று கேட்க “நான் சூர்யா இவ அபி” என்று கூறினாள்.

அவர்களை பார்த்து சிரித்த இருவரில் ஒருவன் “நான் சந்தோஷ் இது என் பிரண்ட் ஆகாஷ்” என்று கூறி,அறிமுகமானவர்கள் சற்று நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு, “சரி அப்புறம் மீட் பண்ணலாம் எங்களுக்கு டைம் ஆச்சு” என்று கூறியபடி அங்கிருந்து சென்றனர்.தோழிகளும் அவர்கள் வகுப்பறை நோக்கி சென்றனர்.

இவர்கள் பேசி கொண்டு இருப்பதை தூரத்தில் இருந்து பார்த்த ஒரு ஜோடி கண்கள் மகிழ்ச்சியை வெளிபடுத்தி செல்லும் இருவரையும் பார்த்து கொண்டு இருந்தது.இருவரில் ஒருவளின் மேல் பதிந்த அவன் பார்வை விலகவே இல்லை.


வசந்தமாகும்.................

கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பர்களே 😍😍😍😍



 
Last edited by a moderator:

Sonythiru

Suthisha
21117
அத்தியாயம்- 10

இன்ஜினியரிங் காலேஜில் முதலாம் ஆண்டு வகுப்பு எங்கு இருக்கிறது என்று தெரியாமல் மூவரும் விழித்து கொண்டு நிற்க. பூஜாதான் முதலில் “நம்ம யார்கிட்டயாவது கேட்கலாமா” என்று கேட்டாள். ஆனால் ப்ரீத்தியோ “நோ… நோ…. அடுத்தவங்க கிட்ட போய் வழி கேட்டா நம்ம பிரஷ்டீஜ் என்ன ஆகறது, நம்மளா தேடி கண்டு பிடிக்கலாம்” என்று கூற அவளை முறைத்துப் பார்த்த பூஜா “ஏன்டா” என்று கேட்க அவளோ “வாடா” என்று கூறியபடி மதுவையும் பூஜாவையும் உள்ளே அழைத்துச் சென்றாள்.இவர்கள் மூவரும் ஒவ்வொரு ஃப்ளோராக அவர்கள் வகுப்பை தேட, கண்டுபிடிக்க முடியவில்லை.

மூன்று மாடி ஏறிய பிறகும் அவர்கள் வகுப்பு எங்கிருக்கிறது என்று தெரியாமல் இருக்க, பூஜாவிற்கு நா வறண்டு தாகம் எடுக்க ஆரம்பித்துவிட்டது.இதற்கு மேல் தண்ணீர் குடிக்காமல் நடக்க முடியாது என்ற முடிவிற்கு வந்தவள் தோழிகளை பார்த்து “ரொம்ப தாகமா இருக்குடி” என்று கூற ப்ரீத்தியோ “இரு பார்க்கலாம்” என்று சுற்றி பார்க்க அங்கு ஒரு டேப் இருந்தது.அதை சுட்டிக் காட்டியவள் “வாங்க அங்க போலாம்” என்று கூறியபடி இருவரையும் அழைத்துச் செல்ல, அந்த டேப்பில் காற்றைத் தவிர தண்ணீர் ஒரு சொட்டுக் கூட வரவில்லை.

மூவரும் தலையில் கை வைத்தபடி நிற்க அங்கு வந்தார் ஒரு அட்டெண்டர். இவர்கள் மூவரையும் கண்டவர் “என்னமா என்ன வேணும்” என்று கேட்க, பூஜா “சார் குடிக்க தண்ணி வேணும் இந்த பைப்ல தண்ணி வரல” என்று கூற, அவரோ “தண்ணி இங்க வரலமா. பைப் ரிப்பேர் கீழே ஃபர்ஸ்ட் ஃப்ளோர்ல வரும் அங்க போய் குடிங்க” என்று கூற, பூஜா “தேங்க்ஸ் சார்” என்றாள்.

மது அவரிடம் “சார் இங்க ஃபர்ஸ்ட் இயர் கிளாஸ் எங்க இருக்கு” என்று கேட்க, மதுவை முறைத்த ப்ரீத்தி “நம்மலே பார்த்துக்கலாம்” என்று மெல்லிய குரலில் கூறினாள். ஆனால் பூஜாவோ “நீ கொஞ்சம் வாய மூடு” என்று முணுமுணுத்து விட்டு, அந்த அட்டெண்டர் முகத்தையே கேள்வியாக பார்த்து கொண்டிருக்க, அவரோ “அது கிரவுண்ட் ப்ளோரில் இருக்கு, நீங்க பாக்கலையா” என்று கேட்டார்.

அவர் கூறியதை கேட்டு இருவரும் அதிர்ந்து, அவருக்கு “நன்றி” கூறி விட்டு, அவர் அந்த பக்கம் சென்றதும், இருவரும் “ஏன்டி கீழயே கேட்கலாம்னு சொன்னதுக்கு, பிரெஸ்டிஜ் அது இதுனு சொல்லி வீணா மூணு ஃப்ளோர் ஏற விட்டுட்டியேடி கிராதகி,என்று ப்ரீத்தியை குனிய வைத்து குத்தினர். பின் கிரவுண்ட் ஃப்ளோருக்கு வரும் வழி முழுவதும் ப்ரீத்தியை வசை பாடிக் கொண்டே வந்தனர்.

ப்ரீத்தி பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு “நான் என்ன தெரிஞ்சா பண்ணுனேன்” என்றவள் அத்தோடு நில்லாமல் “மூணு மாடி தானேடி ஏறுனீங்க அதுக்கு இப்படி கோபப்பட்டா எப்படி” என்று வாய் விட்டாள்.

பூஜா கடுப்பான இருவரும் சேர்ந்தார் போல் “அடிங்க நாயே” என்று கூறியபடி ப்ரீத்தியை துரத்த அவளோ “ஐயோ காப்பாத்துங்க, காப்பாத்துங்க…” என்றபடி ஓட ஆரம்பித்தாள்.

இருவரும் துரத்திய படியே ஓடிக்கொண்டிருக்க அப்பொழுது எதிரே கூட்டமாக வந்தனர் அர்ஜுனும், அவனது நண்பர்கள்.அவர்களை கண்டு கொண்ட பூஜா “’ரகு அண்ணா அவளை புடிங்க” என்று கூற, அவர்களோ இவங்க மூணு பேரா என்று அதிர்ந்து போய் பார்த்தனர்.அவர்கள் திரு திருவென விழித்தபடி நிற்பதை கண்ட பூஜா “லவ் யூ சொல்ல சொன்ன அண்ணா சீக்கிரம் அவளை பிடிங்க” என்று கூற, அப்பொழுதும் அதிர்ச்சி மாறாமல் இவர்களையே பார்த்துக்கொண்டிருந்தவர்களை இடித்து தள்ளிவிட்டு அங்கிருந்து ஓடி விட்டாள் ப்ரீத்தி.

தோழி ஓடிவிட்டதை கண்ட பூஜா வேகமாக அவர்கள் அருகில் வந்து “ஐ லவ் யூ சொல்லுனு சொல்ல தெரியுது பிடிக்க சொன்னா பிடிக்க தெரியாதா” என்று கூறியவள் அர்ஜுனிடம் திரும்பி “நீ தான் வேலைக்கு ஆக மாட்டேன்னு பார்த்தா, உன் கூட இருக்கிறவங்களும் அப்படித்தான் இருக்காங்க” என்று கூறியபடி ப்ரீத்தியை துரத்திக் கொண்டு செல்ல அப்பொழுதுதான் அதிர்ச்சியில் இருந்து மீண்ட அர்ஜுனின் நண்பர்கள் அர்ஜுனை முறைத்துப் பார்க்க அவனோ “மீ எஸ்கேப்” என்று கூறியபடி அங்கிருந்து ஓடிவிட்டான்.

அர்ஜுனை ஓடிவந்து பிடித்த அவனது நண்பர்கள், அவனை சுற்றி நின்றபடி “உண்மைய சொல்லு, உனக்கு அந்த கும்பலை தெரியுமா? தெரியாதா?” என்று கேட்க அவனும் விஷமமாக சிரித்து “தெரியும்” என்று கூறினான்..
“அடப்பாவி அப்புறம் ஏண்டா, அதுங்ககிட்ட எங்கள மொக்கை வாங்க வச்ச” என்று கேட்க, அவனோ “சும்மா ஒரு என்டர்டைன்மென்ட்” என்று இழுக்க அவன் தோழர்களோ அவனை முறைத்து “ஏது அவங்க நமக்கு எண்டர்டைன்மெண்ட்டா அவங்களுக்குதான் நாம எண்டர்டைன்மெண்ட் ஆகிருக்கோம், சீனியர்ங்கர மரியாதை போச்சு அவங்களால நமக்கு” என்று புலம்பியவன் அர்ஜுனை பார்த்து “பிரெண்ட்ஸ்னு கூட பார்க்காம நீ இப்படி எங்களுக்கு துரோகம் பண்ணி இருக்க கூடாது” என்று வழக்கம்போல் ரகு கூற அர்ஜுனோ புன்னகைத்தவாறு நின்றுகொண்டிருந்தான்.

நண்பனின் சிரிப்பை யோசனையாக பார்த்த கோகுல் “ஆமா அவங்கள உனக்கு எப்படி தெரியும்” என்று கேட்க, அர்ஜுனோ “அவங்க அஞ்சு பேரும் என்னுடைய ஸ்கூல் ஜூனியர்ஸ்” என்று கூற ரகுவோ சந்தேகமாக நண்பனை பார்த்து “ஜூனியர்ஸ் மட்டும்தானா” என்று கேட்க அர்ஜுன் புன்னகை முகம் மாறாமல் “ஜூனியர்ஸ் மட்டும்தான்” என்று கூறியபடி நகர்ந்தான்.

ரகுவோ நண்பர்களுடன் சேர்ந்து சிரித்தவன் “இவன் நம்ம காலேஜ்ல எந்த பொண்ணுங்க கூடவும் பேசாம முகத்தைத் திருப்பிக்கிட்டு போகும் போதே சந்தேகப்பட்டு இருக்கணும் மச்சான், ஸ்கூல்லையே ஒரு பொண்ண உஷார் பண்ணிட்டு தான் வந்து இருக்கான்” என்று சொல்ல, அவன் சொல்வது காதில் விழுந்தாலும் கேட்காத மாதிரி முன்னே நடந்து சென்றான்.

ப்ரீத்தியை துரத்திக்கொண்டு வந்தவர்களோ வகுப்பிற்கு நேரம் ஆகி விட்டதை உணர்ந்து அவளை முறைத்துக்கொண்டே “உன்ன அப்புறம் பார்த்துக்குறோம் முதல்ல கிளாசுக்கு போகலாம் வா” என்று கூறியபடி தங்களது வகுப்பை தேடி அமர்ந்தனர். சிறிது நேரத்தில் அவர்களின் பேராசிரியர் வந்துவிட, வந்த முதல் நாள் என்று கூட பாராமல் அவர் வகுப்பை எடுக்க ஆரம்பித்துவிட்டார்.

ப்ரீத்திக்கு அவர் ஏதோ புரியாத மொழி பேசுவது போலவே கண்ணை கட்ட இதற்கு மேல் முடியாது என்னும் பாவனையில் அருகில் இருந்த மதுவை திரும்பிப் பார்த்தாள்.அவளோ அவர்களது பேராசிரியர் சொல்வதை கேட்டு பொறுப்பாக எழுதி கொண்டு இருந்தாள். இவளை கண்டு கொள்ளாமல் தீவிரமாக எழுதிக் கொண்டிருந்தாள்.

மது எழுதுவதை பார்த்த ப்ரீத்தி நல்லவேலை இவ எழுதறா நம்ம இவளைப் பார்த்து காப்பி அடிக்கலாம் என்று நினைத்து கொண்டு எழுதுவதை எட்டி பார்க்க, அவளோ வெறும் கையில் பேனா மூடியையே கழட்டாமல் எழுதுவது போல் பாவ்லா செய்து கொண்டிருந்தாள். அதைக் கண்ட ப்ரீத்தி “என்னடி இது பித்தலாட்டமா இருக்கு” என்று கேட்க அவளோ பின்ன என்னடி நம்ம எவ்ளோ கஷ்டப்பட்டு எழுதறோம் அதுக்காகவாது கொஞ்சம் டைம் கொடுக்க வேண்டாம், அவர்பாட்டுக்கு ப்ரொஜெக்டர்ல ஸ்லைட மாத்தி போட்டுகிட்டே இருக்குறாரு, எழுதுறதா, வேண்டாமா என்று நொந்து கொள்ள ப்ரீத்தியும் “ஆமாண்டி இவங்களையும் ஸ்கூல்ல போர்ட்ல எழுதற மாதிரி, எழுத விட்டிருந்தா சரியா இருந்திருக்கும். சரி விடு அது தான் நம்ம பக்கத்துல ஒரு அடிமை இருக்குதே, அவ எழுதுவா நம்ம அப்புறமே அவளைப் பார்த்து காப்பி அடிக்கலாம்” என்று கூற பூஜா அவர்கள் இருவரையும் முறைத்துப் பார்த்தாள் மதுவோ “எங்களப் பார்த்தது போதும், அங்க யாரு பெத்த புள்ளையோ ரொம்ப நேரமா தனியா பேசுது அத நீயாவது கவனிச்சு சீக்கிரம் எழுது உன்ன பார்த்து எழுதலாம்னுதான் நாங்க வெயிட்டிங்ல இருக்கோம். வேடிக்கை பார்க்காம டக்கு டக்குனு எழுது”என்று திட்ட பூஜாவோ தலையில் அடித்துக்கொண்டு “உங்க கூட வந்ததற்கு அவங்க ரெண்டு பேர் கூடவாவது போயிருக்கலாம், எல்லாம் என் நேரம்” என்று கூறியபடியே தனது நோட்ஸ்ஸை எழுத ஆரம்பித்தாள். அப்படியே அவர்களின் அன்றைய நாள் நிறைவுபெற அனைவரும் தங்கள் வகுப்பை விட்டு வெளியில் வந்தனர்.
மூவரும் தாங்கள் வண்டி நிறுத்தி இருக்கும் இடத்திற்கு வர அங்கே ஏற்கனவே அபி, சூர்யா இருவரும் அவர்களுக்காக காத்திருந்தனர்.

அபி முதல் முறை வகுப்பு நேரத்தில் பிரிந்து இருந்த தோழிகளை பார்த்தவள் “ஹாய் இன்னைக்கு கிளாஸ் எப்புடி போச்சு” என்று ஆர்வமாக கேட்க, ப்ரீத்தி மது இருவரும் “அந்த கொடுமைய ஏன் கேக்கற, ஏதோ போச்சு” என்று சுரத்தே இல்லாத குரலில் சொன்னவர்கள் பின் “ரொம்ப பசிக்குது ஏதாவது சாப்பிட்டு போகலாம்” என்றனர் கோரசாக.
அபியோ தலையில் அடித்து கொண்டவள் “சரி அங்க எதுதாப்புல ஒரு பேக்கரி இருக்கு அங்க போகலாமா” என்று கேட்க, இருவரும் வேகமாக “சரி” என்று கூறி தலையாட்டி தங்களது வண்டியை எடுக்க சென்றனர். அப்போது மது “ஹேய் இருங்கடி நான் டிரைவர் அண்ணாக்கு போன் பண்ணி, வர பத்து நிமிஷம் லேட் ஆகும்னு, சொல்லிட்டு வறேன், இல்லனா என்ன காணம்னு பயப்படுவரு” என்று கூற மற்றவர்களும் சரி என்று கூறியபடி, கல்லூரியில் இருந்து வெளியில் வந்து ரோட்டை கடப்பதற்காக காத்திருந்தனர். அப்பொழுது அவர்கள் பின் பக்கம் இருந்து “ஹேய் இங்க வாங்க” என்ற குரல் வர, அனைவருமே ஒரு சேர “எவன்டா அவன்” என்பதுபோல் திரும்பிப் பார்க்க அங்கு அர்ஜுன் மற்றும் அவனது நண்பர்கள் குழு இருப்பதை கண்டு அதிர்ந்து போயினர்.

பூஜா அர்ஜுனை சைட் அடித்த படியே “இதோ வரேன்” என்று முன்னே செல்ல அவள் கையைப் பிடித்து தடுத்த சூர்யா “அடியே நீ கொஞ்சம் அடங்கு” என்று கூற, அபியோ அவளை முறைத்து கொண்டே “உனக்கு என்ன அவார்டா கொடுக்கறாங்க, வேகமா முன்னாடி போற காலையில் நம்ம பண்ணதுக்கு ஏதாவது செய்யப் போறாங்க” என்றாள், பூஜாவோ “அதெல்லாம் எதுவும் ஆகாது, பயப்படாம வாங்க நான் இருக்கேன்” என்றாள் கெத்தாக.

ப்ரீத்தி, மது இருவரும் அவளை முறைத்துப் பார்த்து “நீ இருப்ப நாங்க இருப்போமா” என்று அவர்களுக்குள் முணுமுணுத்து கொண்டு இருக்க அதற்குள் கோகுலோ “அங்க என்ன பேச்சு இங்க வாங்க” என்றான்.

“இவனுங்களுக்கு வேற வேலை இல்ல போல” என்று புலம்பி கொண்டே அவர்கள் அருகில் அனைவரும் செல்ல, சூர்யா, அபி இருவரும் பின்னாடி தனியாக ஒதுங்கி நின்று கொண்டனர். அவர்களை பார்த்த ரகு “உங்களுக்கு தனியா வெத்தலை பாக்கு வெச்சு அழைக்கனுமா” என்று கேட்க அவர்களோ “நாங்க மெடிசன்” என்றனர். “மெடிசனா இருந்தா என்ன? எல்லாம் ஒரே மேனேஜ்மெண்ட்தானே அப்போ தப்பு இல்ல இங்க வாங்க” என்று கூற அபி சூர்யா காதில் “ஹப்பாடா காலைல இருந்து எவனும் நம்ம ராகிங் பண்ணல, இந்த வெண்ணைங்களாவது கூப்டுதுங்களே வா சுருதி…. ச்சி… .ச்சி சூர்யா போலாம்” என்று சொல்ல, சூர்யாவோ “காலைல அசிங்கபட்டது பத்தலனு, இப்போ வான்டடா கூப்டு அசிங்க பட போறானுங்க போல இன்னைக்கு என்டெர்டைன்மெண்ட் இன்னும் இருக்கு வாடி” என்று தங்களுக்குள் பேசி கொண்டே தோழிகளுடன் நிற்க சென்றனர்.

அப்பொழுது அவர்கள் அருகில் “எனி ப்ராப்ளம்” என்று ஒரு குரல் கேட்க, அபியும், சூர்யாவும் எங்கேயோ கேட்ட குரல் என்று திரும்ப, அங்கே சந்தோஷ் மற்றும் ஆகாஷ் இருவரும் நின்று கொண்டு இருந்தனர். அதுவரை அர்ஜுனை பார்த்துகொண்டிருந்த பூஜா புதிதாக அங்கு வந்த இருவரையும் பார்த்து ஜொள்ளு விட ஆரம்பித்தாள்.

சூர்யாவோ பூஜாவை கண்டு கொண்டவள் “அபி அங்க பாரு பூஜாவ இவங்க ரெண்டு பேரையும் பாத்து இவ விடற ஜொல்லுல டிரஸ் நெனைய போகுது மேல தூக்கிக்கோடி” என்று கிண்டலாக அவள் காதில் கூற, அபியோ நக்கலான குரலில் “பூஜாவ பாத்தியே அவளுக்கு பின்னாடி இருக்க அர்ஜுனை முகத்தில் பாப் கார்ன் வெடிக்கிதே அதை பார்த்தியா” என்று கேட்டபடி சிரிக்க சூர்யாவும் அப்போதுதான் அர்ஜுனை திரும்பி பார்த்தவள் பக்கென்று சிரித்துவிட்டாள்.அபி சொல்வது போல் அவன் முகம் கோபத்தில் சிவந்து இருந்தது.
ஆம் பூஜா தன்னையே பார்த்துக் கொண்டிருந்ததை உணர்ந்து இருந்தவன், கண்டும் காணாமல் அவளின் பார்வையை மனதில் ரசித்து கொண்டு இருக்க, அவளோ புதிதாக இரண்டு பேர் வந்தவுடன் அவனை மறந்து விட்டு வந்த இருவரையும் சைட் அடித்துக் கொண்டிருப்பதை பார்த்து உள்ளுக்குள் கோபம் கனன்று கொண்டு வந்தது.அவனது பொறாமை முகத்தில் அப்பட்டமாக தெரிய அதை பார்த்துவிட்டுதான் சூர்யா, அபி சிரித்தனர்.

பூஜா அர்ஜுனை கொஞ்சமும் கண்டுகொள்ளாமல், அவர்களையே சைட் அடித்து கொண்டிருப்பதை கண்ட அர்ஜுனுக்கு கோபம் எல்லையை கடக்க தன் கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல், அருகில் இருந்த ரகுவரன் கால்களை ஓங்கி மிதித்தான். அவனோ வலியில் “ஆ………டேய் அர்ஜூ ஏன்டா என் காலை மிதிச்ச” என்று கேட்க , இந்த கலவரம் எதையும் கண்டு கொள்ளாதவன் பூஜாவையே முறைத்து பார்த்து கொண்டு இருந்தான்.

அங்கு அவ்வளவு நடந்த பிறகும் சந்தோஷ் தனது பதிலுக்காக காத்துக் கொண்டிருப்பதை கண்ட அபி, “சீனியர்” என்று கூப்பிட அவனோ “சீனியர் வேண்டாம் சந்தோஷ் கூப்பிடு” என்று சொல்ல, அபியோ அவர்களை ஆராய்ச்சியாக பார்த்தாள். அவள் பார்வையை உணர்ந்த சந்தோஷ் “பிரண்ட்ஸ்” என்று கையை நீட்ட அதற்குள் அங்கு வேகமாக ஓடி வந்த பூஜா அவன் கையை பிடித்து போர் அடிப்பது போல் ஆட்டி கொண்டே “ஹாய் ஐ அம் பூஜா” என்றாள்.

சந்தோஷோ பூஜாவை “யார்” என்பது போல் பார்த்து கொண்டிருக்க, அபி அவனிடம் “இவங்க எல்லாம் என்னோட பிரெண்ட்ஸ், நாங்க எல்லாம் ஒரே டீம்” என்றாள்.

அப்பொழுதும் சந்தோஷின் பார்வை பூஜாவை அளவிட, அவளும் அவனை பார்த்து சிரித்தபடியே “என்கிட்ட பிரண்டானாலே அவங்களும் உங்களுக்கு பிரண்டான மாதிரிதான்”என்று கூற, அபி மற்றும் சூர்யா இருவரும் “அட அல்ப” என்பது போல் பார்த்து வைத்தனர்.

சந்தோஷ் அருகில் நின்ற ஆகாஷோ சூர்யாவை தனது பார்வையால் விழுங்கி கொண்டிருக்க, ஆகாஷின் பார்வையை தூரத்தில் இருந்தே கண்டு கொண்ட ஒரு ஜோடி கண்களில் கோபம் கொப்பளிக்க ஆரம்பித்தது.

சந்தோஷ் அபியிடம் திரும்பியவன் மீண்டும் “எனி ஹெல்ப்” என்று கேட்க, அவளோ “இல்ல சும்மாதான் பேசிட்டு இருந்தோம், எந்த ப்ராப்ளமும் இல்லை” என்று கூறினாள்.அவள் சொல்வதை தான் நம்பவில்லை என்பது போல் சந்தோஷ் பார்த்திருந்தான்.
ஆனால் அவ்வளவு நேரமும் பூஜா தன்னைக் கண்டு கொள்ளாத கோபத்தில் இருந்த அர்ஜுன் பார்க்கிங் ஏரியாவிற்கு வேகமாக போனவன், தனது பைக்கை உதைத்து இயக்கினான், அப்போதுகூட பூஜா அவன் பக்கம் திரும்பாமல் இருக்க,அவனோ தனது மொத்த கோபத்தையும் பைக்கில் காமித்து உறும விட்டு அங்கிருந்து கிளம்பினான்.

பைக்கின் உறுமலில் யார் என்று பூஜா திரும்பி பார்க்க அங்கு யாரும் இல்லாமல் காலி இடமாக இருந்தது.பின் என்ன நினைத்தாளோ அர்ஜுன் நின்ற இடத்தை பார்க்க அது காலியாக இருந்தது.”இவன் அதுக்குள்ள எங்க போனான்” என்று யோசித்தவள் பின் ஒரு தோள் குலுக்கலில் ஒதுக்கி மீண்டும் தன் ஜொள்ளு விடும் பணியை தொடர்ந்தாள்.

அர்ஜுன் கிளம்பவும் அவனது நண்பர்கள் இதுக்கு மேல இவங்க கூட பேசுனா ஏதும் பிரச்சனைதான் வரும், ஏற்கனவே அவங்களுக்கும் நமக்கும் வாய்க்கால் தகராறு தலையே கிளம்பிடுச்சு நமக்கு என்ன வேலை வாங்கடா நாமும் போகலாம் என்று தங்களுக்குள் பேசி கொண்டவர்கள் அங்கிருந்து சென்றனர் .
அதன்பின் மதுதான் பசி பசி என்று சொல்லி அனைவரையும் அங்கிருந்த பேக்கரிக்கு இழுத்து சென்றாள்.அங்கு ஏழு பேரும் பேசிக்கொண்டே மாலை சிற்றுண்டியை உண்டவர்கள், அந்த பில்லையும் சந்தோஷ் மற்றும் ஆகாஷ் தலையில் கட்டி விட்டு அங்கிருந்து கிளம்பி விட்டனர்.

வீட்டிற்கு கோபமாக வந்த அர்ஜுன். வேக எட்டு வைத்து தன் அறைக்கு செல்ல போனவனை தடுத்தது, ஹாலில் அமர்ந்து இருந்த அவனது தாய் வசுந்தராவின் குரல் “என்ன அர்ஜுன் வீட்டுக்கு வர இவ்ளோ நேரமா, காலேஜ் விடற நேரத்த விட அரை மணி நேரம் லேட் ஆயிடுச்சு” என்று முறைத்தபடி கேட்க, அவனோ “அம்மா ஒரு அரை மணி நேரம்தானே லேட் ஆச்சு காலேஜ்ல கொஞ்சம் வேலை இருந்தது அதான் லேட்” என்றான்.”அப்படி என்ன வேலை” என்று மேலும் துருவியவரை பார்த்தவனுக்கு ஏனோ எரிச்சல் மேலோங்கியது.இருந்தாலும் தன்னை சமாளித்து கொண்டு கண்ணை மூடி திறந்தவன், தாயை பார்த்து “ரகு பேப்பர் பிரசன் பண்ணப் போறான் அதுக்கு ஹெல்ப் பண்ணிட்டு வந்தேன்” என்று கூற அவரோ அதை ஆட்சேபித்தவராக “எல்லாத்துக்கும் நீதான் போகணுமா அவன் பாத்துக்க மாட்டானா. ஏதோ ஊர்ல இல்லாத பிரண்ட்ஸ் மாதிரி, எப்ப பார்த்தாலும் அவங்களுக்கு ஏதாவது பண்ணிட்டே இருக்க, எல்லோரும் உன்னை நல்லா யூஸ் பண்ணிக்கறாங்கனு உனக்கு புரியுதா இல்லையா, அவனுங்க எல்லாம் உன்னோட தயவாள முன்னேறிட்டு இருக்காங்க நீதான் பின்னாடி போக போற, இதுவே முதலும் கடைசியுமா இருக்கட்டும் பாத்துக்கோ” என்றார்.

தாயின் கூற்றில் கடுப்பான அர்ஜுன் “அம்மா அவங்க என் ஃப்ரெண்ட்ஸ் இந்த ஹெல்ப் கூட நான் செய்யக்கூடாதா அரை மணி நேரம் தானே லேட் ஆச்சு அதுக்கு ஏன் இவ்வளவு ஆர்கியூமெண்ட்ஸ்” என்று சொல்லி கொண்டு இருக்கும்போதே அங்கு வந்தனர் அவனது அக்காக்கள் அனிதா மற்றும் வைஜெயந்தி , தாய் மற்றும் தம்பியின் வாக்குவாதத்தை பார்த்துக்கொண்டே வந்தவர்கள் தம்பியிடம் “என்ன தம்பி அம்மாவை எதிர்த்து பேசிகிட்டு இருக்க. நேரத்துக்கு வீட்டுக்கு வரணும்னு தானே அவங்க சொல்றாங்க.இதுல என்ன தப்பு,அவன் வேலைய அவனுக்கு பார்த்துக்க தெரியாதா” என்று கேட்க அங்கு வந்த அக்காக்களின் கணவன்மார்களும் “ஆமா அர்ஜுன் அத்தை உன் நல்லதுக்காக தான சொல்றாங்க, ஏன் இப்படி பிஹேவ் பண்ணுற” என்று கேட்க அவனுக்கு எங்கேயாவது போய் முட்டி கொள்ளலாம் போல் இருந்தது. பின் இவர்களிடம் பேச்சு கொடுத்து மீள முடியாது என்பதை உணர்ந்து கொண்டவனாக பேச்சை முடிவிற்கு கொண்டு வரும் பொருட்டு “சரி நான் பாத்துக்கறேன்” என்று கூறிவிட்டு வேகமாக தனது அறைக்குள் வந்தவனுக்கு ஏதோ ஜெயிலில் அடைபட்ட உணர்வு ஏற்பட்டது.

ஒரு பெரு மூச்சுடன் குளியலறை சென்று தன்னை சுத்தம் செய்து கொண்டு வந்து படுக்கையில் படுத்தவனின் கண் முன் பூஜாவின் நினைவு வந்து செல்ல, அதுவரை முகத்தில் இருந்த இறுக்கம் தளர்ந்து சிறு புன்னகை வந்து அமர்ந்தது அவன் இதழில்.


அர்ஜுனின் தந்தை வினாயக் தாய் வசுந்தரா இருவரும் சென்னையில் பிரபலமான வணிக வளாகத்தின் உரிமையாளர்கள். அது மட்டும் இல்லாமல், ஒரு நட்சத்திர விடுதியும் இவர்களுக்கு சொந்தமானதாக இருக்கிறது.இந்த தம்பதியினருக்கு 3 பிள்ளைகள் முதலில் அனிதா பின்பு வைஜெயந்தி கடைக்குட்டி அர்ஜுன்.

அர்ஜுனின் தந்தை தொழில்களை கவனித்துக்கொள்ள அவனது தாய் தான் வீட்டு நிர்வாகம், குழந்தைகள் வளர்ப்பு என அனைத்தையும் கவனித்துக்கொள்வார். வசுந்தரா மிகவும் கண்டிப்பானவர் அவரது சொல் பேச்சை தான் அனைவரும் கேட்க வேண்டும். தன்னை மீறி வீட்டில் எதுவும் நடக்கக் கூடாது என்ற அகங்கார எண்ணம் உடையவர். தன் வீட்டில் உள்ள அனைவரையும் அவர் பேச்சுக்கு ஆட்டிவைப்பார்.

அனிதா மற்றும் வைஜெயந்தி இருவரும் திருமணமான பின்பும் தனது தாயின் பேச்சை கேட்டு தான் ஒவ்வொரு விஷயத்தையும் செய்வார்கள் ஏன் அவர்களது கணவன்மார்கள் கூட நன்றாக மாமியாருக்கு சின்-சக் அடிப்பார்கள். ஆனால் அவரது இந்த அடக்குமுறை பிடிக்காத ஒரே ஆள் அர்ஜுன் மட்டும் தான். அவனுக்கு அந்த வீட்டிற்குள் வந்தாலே மூச்சு முட்டுவது போல் இருக்கும். ஹிட்லர் போல் ரூல் பண்ணுவது அவனுக்கு பிடிக்காது.தாயின் பேச்சை மீறி அவன் ஏதாவது கேட்டாலும் அவனது தந்தை மட்டும் இல்லாமல் அக்காக்களும் அவனைத்தான் பணிந்து போக சொல்வார்களே தவிர அவர்களது தாயை எதிர்த்து ஒரு வார்த்தை கூட பேச மாட்டார்கள்.

அர்ஜுனும் வேறு வழி இல்லாமல் சலிப்புடனே அங்கிருந்து நகர்ந்து விடுவான். வீட்டிற்கு வந்தால் ஏதோ சிறையில் இருப்பது போன்ற எண்ணம் அவனுக்கு வர பெரும்பாலும் நண்பர்கள் உடனேயே நேரத்தை செலவழிக்க விரும்புவான், ஆனால் அதுவும் அவனது தாய்க்கு பிடிக்காது நண்பர்கள் எல்லாம் வீட்டுக்கு வெளியில் தான் வீட்டிற்குள் நண்பர்கள் யாரும் அனுமதிக்கமாட்டேன் என்று அவர் கண்டிப்புடன் கூறியிருக்க, இங்கே நண்பர்களே உலகம் என்று இருக்கும் பூஜாவிற்கு அந்தக் குடும்பம் ஏற்றதாக இருக்குமா????............



கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பர்களே..............


 
Last edited by a moderator:

Sonythiru

Suthisha
21579

அத்தியாயம் -11

மாலை பூஜாவை அவளது அப்பத்தா எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்க, ஆனால் வீட்டிற்குள் வந்தவளோ, அவரை கண்டு கொள்ளாமல் தனது அறைக்கு செல்ல முயன்றாள்,வேகமாக அவள் முன்னே வந்து தடுத்தவர் “அடியே இங்க ஒரு பெரிய மனுஷி குத்துக்கல்லாட்டம் உட்கார்ந்து இருக்கேன், என்ன ஏதுனு கண்டுக்காம நீ பாட்டுக்கு போனா என்ன அர்த்தம்” என்று கேட்க அவளோ “கல்லு கிட்ட எல்லாம் எவனும் பேச மாட்டான்னு அர்த்தம்” என்றாள் நக்கலாக.

அவரோ முகத்தை தோள்பட்டையில் இடித்தபடி “இந்த எகத்தாள பேச்சுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை” என்று நொடித்து கொண்டு,“ஆமா காலையில நான் கோயிலுக்கு போயிட்டு வர்றதுக்குள்ள, நீ ஏன் கிளம்பிப் போன” என்று கூற அவளோ “அது உன் புருசன் கட்டி வச்ச காலேஜ் நீ ஆடி அசஞ்சு வர வரைக்கும் காலேஜ் கதவை திறந்து வச்சுட்டு இருப்பாங்க பாரு”என்று கேட்க அவளை மேலும் கீழும் பார்த்து நக்கலாக சிரித்தவர் “என்னது நேரத்துக்கு கிளம்பனுமா. அப்படினா உனக்கு என்னனு தெரியுமா. ஸ்கூலுக்கு போற அப்ப என்னைக்காவது நீ சரியான நேரத்துக்கு கிளம்பி இருக்கிறியா. படாதபாடுபட்டு இல்ல நாங்க உன்ன கிளம்புவோம், இப்ப என்ன புதுசா உனக்கு ஞானோதயம் வந்துடுச்சு” என்று கேட்டார்.

பாட்டியின் பேச்சில் கடுப்பானவளோ, “இப்போ உனக்கு என்னதான் பிரச்சனை. என்னை ஏதாவது குறை சொல்லிகிட்டே இருப்பியா, இவ்வளவு நாள் எழுந்துக்கலன்னு திட்டின இன்னைக்கு ஏன் எழுந்தேன்னு திட்டுற என்ன ஏதாவது குறை சொல்லிட்டே இருக்கணுமா” என்று கேட்க அவரோ “உன்னை குறை எல்லாம் சொல்லல மொத நாளு சாமி பிரசாதம் வச்சுக்கிட்டு போனா நல்லதுனு நினைச்சேன், அதுதான் சொன்னேன்” என்றவர் அப்பொழுதுதான் அவளது உடையை கவனித்தார் உடனே “என்னடி இது, டொம்ப கூத்தாடி மாதிரி இருக்க இந்த சட்டய போட்டுக்கிட்டா நீ காலேஜுக்கு போன, நாய் தூரத்தில” என்று கேட்க அப்பொழுது அங்கு வந்த அவளது தாய் பார்வதியும் “நல்லா கேளுங்க அத்தை. காலையிலேயே தலபாடா அடிச்சு கிட்டேன்,கேட்டா தானே இந்த கிழிஞ்சு போன பேண்ட்டையும், நஞ்சு போன சட்டையையும் போட்டுட்டு போயிட்டா, பொண்ணா அடக்க ஒடுக்கமா ஒரு சுடிதார் போட்டுட்டு போகணும்னு தோணுதா இவளுக்கு” என்று புலம்ப ஆரம்பிக்க, அவரது மாமியாரும் “அதான பொண்ணு மாதிரியா இருக்கா இவ. ஏன் பாப்பு என்னோட பையன் தான் அவ்வளவு சம்பாதிக்கிறானே, நீ கிழியாத சட்டையா
வாங்கி போட்டா என்ன?”என்று அங்கலாய்த்து கொண்டார்.

இருவரின் பேச்சில் கோபமான பூஜா “கிளவி பார்த்து பேசு, இப்போ இதுதான் ட்ரெண்டு, நான் போட்டுருக்க ஜீன்ஸ் மட்டும் 8000 என்றாள்.”என்ன அம்புட்டா………அடியாத்தி” என்று அவர் வாயில் கை வைத்தபடி நிற்க, அப்போது அங்கு வந்து சேர்ந்தார் அவரின் மகன் ராமச்சந்திரன்.

தாய், மனைவி, மகள் என்று மூவரும் ஒன்றாக ஹாலில் நிற்பதை பார்த்தவர், “இன்னைக்கு என்ன பஞ்சாயத்து ஓடிக்கிட்டு இருக்கு” என்று கேட்டு கொண்டே உள்ளே வந்து, தன் கழுத்தில் இருக்கும் டையை கழட்டியவாறே அங்கிருந்த சோபாவில் அமர்ந்தார்.

பூஜா “அப்பா” என்று துள்ளி குதித்து அவர் அருகில் சென்று “இங்க பாருங்கப்பா, என்னோட ஜீன்ஸ பாத்து அப்பத்தா கிழிஞ்சு போனது சொல்றாங்க, அம்மாவும் அதுக்கு ஒத்து ஊதறாங்க, என்னன்னு கேளுங்க” என்று சிணுங்கலாக சொல்ல, அப்பத்தாவும் விடாமல் மகனிடம் குற்ற பத்திரிகை வாசிக்க ஆரம்பித்தார் “டேய் மகனே, உன் பொண்ண பாருடா இதெல்லாம் ஒரு துணினு இத போட்டுட்டு காலேஜ் போயிருக்கா” என்க. அவரோ தாயின் பேச்சில் உண்டான சிரிப்புடன் “அம்மா நம்ம ஆபிஸ்க்கு வந்து பாருங்க, எல்லாம் எப்படி துணி போட்டு வராங்கன்னு தெரியும். அப்ப சொல்லுவீங்க நம்ம பொண்ணு போட்டுட்டு போற டிரெஸ் எவ்வளவோ பரவால்லனு, போடட்டும் விடுங்க” என்று கூற பார்வதியோ “ நீங்க கொடுக்கற இடம் தான் இவ இந்த ஆட்டம் ஆடிக்கிட்டு இருக்கா” என்று குறைபட்டுக் கொள்ள அவரோ “நீங்க மாமியார்-மருமகள் ஒன்னு சேந்துட்டா என் பொண்ண ஒரு வழி ஆக்காம விட மாட்டீங்களே” என்றார் மனைவியை வம்பிழுக்கும் பொருட்டு, பூஜாவும் அவரோடு சேர்ந்து கொண்டவள் “ஆமா அப்பா எல்லா வீட்டுலயும் மாமியார் மருமகள் சண்டை போடுற மாதிரி இவங்க ரெண்டு பேரும் சண்டை போட்டா எவ்வளவு ஜாலியா இருக்கும் என்று குறைபட்டுக் கொள்ள அவளது அப்பத்தாவோ “உங்க கண்ணே எங்க மேல பட்டுடும் போல, ராத்திரியே எனக்கும் என் மருமகளுக்கு சுத்தி போடணும்” என்னும் போதே தன் தந்தையிடம் இருந்து எழுந்த பூஜா “கிழவி மண்டைய போடுற காலத்துல உனக்கு சுத்தி போடணுமா,இரு இரு ஒரு நாள் இல்ல ஒரு நாள் நீ தூங்கும்போது தலைல கல்லை தூக்கி போடறேன்” என்றவள் தனது அறைக்கு ஓடி விட, அவளின் பேச்சை கேட்ட பார்வதியும் அப்பத்தாவும் இது எல்லாம் எங்க திருந்த போகுது” என்று தலையில் அடித்துக் கொண்டே அடுத்த வேலையை கவனிக்கச் சென்று விட்டனர்.

முதல் நாள் அனுபவத்தை பற்றி அனைவரும் அவர்கள் குடும்பத்தாருடன் பகிர்ந்து கொள்ள அன்றைய நாள் அப்படியே முடிந்தது. நாட்கள் அதன் போக்கில் நகர ஆரம்பிக்க தோழிகள் தங்கள் கல்லூரி காலத்தை சந்தோஷமாக கடத்தி கொண்டு இருந்தனர்.

இப்படிபட்ட ஒரு நாளில்தான் தொலைவில் இருந்தே சூர்யாவை ரசித்து கொண்டு இருந்த ஒரு ஜோடி கண்களுக்கு சொந்தக்காரன் அவள் முன் வந்து நின்றான்.

தோழிகள் அனைவரும் எப்போதும் போல் கல்லூரிக்கு வந்தவர்கள் வாகனத்தை நிறுத்திவிட்டு வகுப்பு ஆரம்பிக்க நேரம் இருப்பதை உணர்ந்து மரத்தின் அடியில் அமர்ந்து பேசி கொண்டிருந்தனர். அப்போதுதான் சூர்யாவிற்கு தான் ஐடி கார்டை எடுத்து வராதது நினைவு வர தலையிலடித்துக் கொண்டவள் “ஹேய் நான் என்னோட ஐடி கார்ட வண்டிலேயே வெச்சுட்டு வந்துட்டேன், போய் எடுத்துட்டு வந்தர்றேன்” என்று சொல்ல, அபியோ “நானும் கூட வரட்டுமா” என்று கேட்டாள்.

“வேண்டாம்டி நானே போய் வந்துடுறேன், நீங்க இங்கயே இருங்க” என்றுவிட்டு பார்க்கிங் ஏரியா நோக்கி சென்றாள்.

வகுப்பு ஆரம்பித்துவிடும் என்ற அவசரத்தில் வேகமாக வண்டியிலிருந்து ஐடி கார்டை எடுத்துக்கொண்டு திரும்பியவள்,அவளுக்கு வெகு அருகில் நின்று கொண்டு இருந்தவனின் மார்பில் மோதி தடுமாறி விழ போவதை உணர்ந்து தன்னை நிலை நிறுத்தி கொள்ள அவனின் ஷர்ட்டையே பிடித்து கொண்டாள் “பக்கி எப்புடி நிக்கிறான் பாரு” என்று நினைத்து கொண்டே அவனை திட்ட கோபமாக நிமிர்ந்தவளின் பார்வை அவன் இதழ்களை பார்த்த பின் ரசனையாக மாறியது.

குழந்தைகளினதை போல பிங்க் நிறத்தில் இருக்கும் இதழ்களை பார்த்தவள் “வாவ் என்னா உதடு, என்ன கலரு இவ்ளோ பிங்கியா இருக்குதே தம்மே அடிக்க மாட்டானோ” என்று யோசித்தவளின் பார்வை அவனது நேர்த்தியான நாசி கடந்து தீட்சன்யமான கண்களில் கட்டுண்டு கரைந்துதான் போனது, அவனோ தன்னவளை அருகில் பார்க்க எண்ணி வந்தவன், எதிர்பாரா இந்த தீண்டலில் மெய் மறந்து நின்றிருந்தான்.

எவ்வளவு நேரம் இருவரும் அப்படியே நின்றிருந்தனரோ வண்டியை நிறுத்த வந்த ஒருவனின் ஹார்ன் சத்தத்தை கேட்ட பிறகே இருவரும் நடப்பிற்கு வந்தனர்.

சூர்யாவோ “அடியே இப்படியாடி அவனை வெறிச்சு பார்ப்ப” என்று தன்னையே நொந்து கொண்டவள் பின் தனது முகத்தை கெத்தாக வைத்து கொண்டு “ஹலோ இப்படிதான் பின்னாடி வந்து சைலண்ட்டா நிப்பிங்களா, யார் நீங்க, எதுக்கு இங்க நிக்குறீங்க” என்று கேட்க அவனோ தன்னவளின் முதல் ஸ்பரிசத்தில் நிலைகுலைந்து நின்றதால் அவளின் ரசனை பார்வையை கவனிக்க தவறி, கோபமாக பேசுபவளிடம் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் விழித்து கொண்டு இருந்தான்.

தன்னுடைய எந்த கேள்விக்கும் பதில் அளிக்காமல் நின்றிருந்தவனை கண்டு சலித்து கொண்டவளின் பார்வை அவனது வெள்ளை நிற சட்டையில் ஒட்டி இருந்த குங்குமத்தை கண்டு அதிர்ந்துதான் போனாள். உடனே அவன் நெஞ்சில் கை வைத்து தள்ளியவள் நொடி நேரத்தில் அங்கிருந்து சிட்டாக பறந்துவிட்டாள். .

சூர்யா ஓடுவதை பார்த்து புன்னகைத்து கொண்டே ,தன்னவளின் ஸ்பரிசம் பட்ட இடத்தில் கை வைக்க போனவன் இன்பமாக அதிர்ந்தான்,ஆம் அங்கு தன்னவளின் குங்குமம் சிறு கீற்றாக இருந்ததை கண்டுதான் இந்த இன்ப அதிர்வு. மீண்டும் தன்னவளை பார்க்கும் ஆவல் அவனுள் ஏற்பட அவள் சென்ற திசையில் இவனும் சென்றான்.

சூர்யா வேகமாக தோழிகள் இருக்கும் இடம் நோக்கி மூச்சு வாங்க ஓடி வர, அவளை பார்த்த மது “ஏன்டி இப்படி ஓடிவர நாய் தொரத்துதா என்ன” என்று கேட்க, அவளை முறைத்து விட்டு, தன் ஆட்காட்டி விரலை வாயில் வைத்து நகத்தை கடித்து கொண்டே, கால் பெரு விரலால் கோலம் போட்டுக்கொண்டு தலை குனிந்து நின்றாள்.

தோழியின் செயலை விசித்திரமாக பார்த்த பூஜா “என்ன கருமம்டி இது” என்று கேட்க சூர்யாவோ “இதுக்கு பேர் வெட்கம்டி, நான் வெட்க படறேன்” என்றாள். அபியோ “ஏதே வெட்க படுறியா” என்று முகத்தை அஷ்ட கோணலாக்கி “ஆனா ஒன்னுடி காலேஜ்க்கு வந்ததுக்கு அப்புறம்தான் உங்களுக்கு எல்லாம் வெட்கம் வரும்னே எனக்கு தெரியுது, அன்னைக்கு பூஜா, இன்னைக்கு நீ” என்று சொல்லி கொண்டு இருக்கும்போதே ப்ரீத்தி “அப்போ அடுத்ததா எனக்கு வெட்கம் வருமா” என்று துள்ளி குதித்து கேட்க மதுவோ அவளிடம் “உனக்கு வெட்கம் வராது பசிதான் வரும்” என்று சொல்ல பூஜாவும் மதுவும் ‘ஹை பை’ அடித்து கொண்டனர்.

அவர்களின் சேட்டையை பார்த்த அபி சூர்யாவிடம் “அடியே நீ தரையை நோண்டி தண்ணி வர வச்சது போதும், நீ வெட்க படற அளவுக்கு அப்படி என்ன நடந்துச்சுனு சொல்லு” என்று கேட்க சூர்யா பார்க்கிங் ஏரியாவில் நடந்ததை சொல்ல ஆரம்பித்தாள்.

“நான் பார்க்கிங் ஏரியால, ஒரு பையன பாத்தேன், செம ஹாண்ட்சமா பாக்கவே எப்படி இருந்தான் தெரியுமா, அவனோட ஒரு பார்வைலயே எல்லாரும் மயங்கிடுவோம்,அதுவும் அவன் லிப்ஸ் இருக்கே எக்ஸ்ட்ராடினரி ஆண்களின் உதட்டையும் ரசிக்க முடியுங்கரத்துக்கு அவன்தான் சிறந்த உதாரணம் என்று அவனைபற்றி கனவுலகத்தில் இருப்பது போல் ரசனையாக சொல்லி கொண்டு இருக்க, அவளின் பேச்சை இடை நிறுத்திய பூஜா “அடி பாவி இதுக்காகதான் தனியா போனியா” என்று கோபமாக கேட்க அவளோ “இன்னும் முடியல இருடி” என்று பூஜாவின் பேச்சை நிறுத்திவிட்டு அங்கு நடந்த அனைத்தையும் சொல்லி முடித்தாள்.

சூர்யா சொன்னதை கேட்ட மது கோவமாக எழுந்தவள் நேராக பூஜாவிடம் சென்று “அடியே நீ எல்லாம் என்னடி ரவுடி, ஸ்கூல்ல இருந்து பாத்துட்டு இருக்கற பாத்துட்டு மட்டும்தான் இருக்க.இங்க பாரு இவளை கமுக்கமா இருந்துக்கிட்டு நெத்தில இருந்த பொட்டையே டிரான்ஸ்பர் பண்ணிட்டு வந்துட்டா” என்று சொல்ல, பூஜாவோ பாவமாக முகத்தை வைத்து கொண்டு “அடியே நானும் ரவுடிதான் இன்னைக்கு பாருங்க என்னோட பர்பாமென்ஸ்ஸ” என்றாள், அபியோ சூர்யாவை “மித்ர துரோகி” என்று சொல்லி திட்ட ஆரம்பிக்க மூவரும் கூட்டணி போட்டு திட்டி கொண்டிருந்தாள்.

அனைவரும் வஞ்சனையின்றி திட்டி கொண்டு இருக்கவும் என்ன செய்வது என்று திரு திருவென விழித்தவள் ப்ரீத்தியை பார்க்க அவளோ இவர்களின் பேச்சுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என்னும் வகையில் கையில் இருந்த மிக்ஸரை ரசித்து உண்டு கொண்டிருந்தாள். அவளை முறைத்த சூர்யா “அடியே இவங்க என்ன ரவுண்டு கட்டி கொடும படுத்தறாங்க நீ என்னடானா எனக்கென்னன்னு மிக்சர் தின்னுட்டு இருக்கியா மிக்ஸர் வாயா” என்று மனதுக்குள் திட்டி கொண்டிருந்த, நேரம் மது பேச ஆரம்பித்தாள் “உன்கூட நாங்களும் வந்துருப்போம்ல இப்படி நீ மட்டும் போய் சைட் அடிச்சுட்டு வந்துருக்க” என்று சொல்லி “நா ஆரோ தான….. “ என்று இழுக்கவும் வகுப்பு ஆரம்பிப்பதற்கான மணி அடிக்கவும் சரியாக இருந்தது.

“அப்பாடா தப்பிச்சோம்” என்று நிம்மதி பெரு மூச்சு விட்ட சூர்யா “பெல் அடிச்சுடுச்சு வாங்கடி போலாம் நேரம் ஆகுது” என்று சொல்லி அபியை இழுத்து கொண்டு அவர்கள் பில்டிங் நோக்கி ஓடிவிட்டாள்.

தோழிகளிடம் சூர்யா யாரை பற்றி பேசி கொண்டு இருந்தாளோ அவனே அவள் பேசிய அனைத்தையும் கேட்டு, சந்தோஷத்தில் துள்ளி குதித்து, தன் சட்டையில் ஒட்டி இருந்த குங்குமத்தை தடவி அவள் சென்ற திசையையே வெட்க சிரிப்புடன் பார்த்தவன் பின் தன் வகுப்பை நோக்கி சென்றான்..

அன்றைய நாள் கல்லூரி முடிந்த பின் மாலை அனைவரும் பைக் ஸ்டாண்டில் வந்து குழுமி இருந்தனர்.பூஜா அபி மற்றும் சூர்யாவிடம் “ஆமா நம்ம பிரண்ட்ஸ்ங்க எங்க” என்று கேட்க அவர்களோ “நம்ம பிரண்ட்ஸ்ஸா, அதான் நம்ம எல்லாரும் இங்க இருக்கமே வேற யார கேக்கற” என்று குழம்பியபடி கேட்க அவளோ “அதுதான் நம்ம சீனியர்ஸ்,அவங்க நேத்துல இருந்து நம்ம ஃப்ரெண்ட்ஸ் ஆச்சே, அவங்கள தான் கேட்கறேன்” என்று கூற இருவருமே அவளை முறைத்துப் பார்த்து “என்னது நம்ம சீனியர்சா ஹலோ மிஸ் பூஜா ஃபார் யுவர் கைண்ட் இன்ஃபர்மேஷன் அவங்க எங்களுக்கு தான் சீனியர்.உனக்கு கிடையாது” என்று கூறினர்.

பூஜாவோ “ஏன்டா உன்னது என்னதுன்னு பிரிச்சு பாக்குற நம்மளோடதுன்னு சொல்லி பழகு” என்க. சூர்யாவோ “அடியே நீ எல்லாம் திருந்தவே மாட்டியா” என்று கேட்க, பூஜாவோ “நான் ஏன் திருந்தனும், நானாவது பரவால்ல எல்லாரும் இருக்கும் போதுதான் சைட் அடிக்கிறேன்.ஆனா நீ தனியா போய் பொட்டையே இடம் மாத்திட்டு வந்துட்ட எங்களுக்கு எல்லாம் அந்த பையன கண்ல கூட நீ காட்டல துரோகி” என்று திட்ட.

சூர்யாவோ வேகமாக தன் பக்கத்தில் இருந்த மற்ற தோழிகளை பார்த்தவள் அவர்கள் யாரும் தங்களை கவனிக்கவில்லை என்று நிம்மதி கொண்டவள் பேச்சை திசை திருப்பும் பொருட்டு “ஹேய் அங்க பாரேன் ஒரு பையன் செமையா இருக்கான்” என்று கூற, பூஜாவும் சூர்யாவிடம் பேசிக்கொண்டிருந்த விஷயத்தை மறந்து “எங்க எங்க” என்று திரும்பிப் பார்த்து தேட ஆரம்பித்தாள்.சூர்யாவோ “அதோ அங்க பாரு” என்று ஏதோ ஒரு பக்கம் கை காட்ட அதே நேரம் ஒரு பையன் அந்த பக்கம் வந்து கொண்டிருந்தான் அதில் ஆர்வமான பூஜா தன் சைட் அடிக்கும் வேலையை பார்க்க ஆரம்பித்தாள்.

பூஜாவின் கவனம் அந்த பையனில் பதிந்ததில் ஆசுவாசம் அடைந்த சூர்யா “ஹப்பாடா நல்ல வேல இவ பேச்சை மாத்தி டைவர்ட் பண்ணுனோம், இல்லை மறுபடியும் எல்லோரும் முதல்ல இருந்து ஆரம்பிச்சிருப்பாளுங்க” என்று நிம்மதி அடைந்த அதே நேரம்,சூர்யாவை காலையில் பார்த்த பையன் திரும்பவும் அவளை காணும் ஆவலில் அந்த இடத்திற்கு வந்து அவள் பார்வை படும் இடத்தில் நின்று கொண்டான்.

சூர்யாவோ அவனை கிஞ்சிதமும் கண்டுகொள்ளாமல் தூரத்தில் இருந்த மற்றொரு பையனை பார்த்து சூப்பரா இருக்கான், செம ஹாண்ட்சம் என்று இவனுக்கு கூறிய அதே வார்த்தைகளை பூஜாவின் கவனத்தை திருப்ப அவனுக்கும் கூற, தன்னை கண்டு கொள்ளாமல் இன்னொருவனை அவள் பார்த்தது அவனுக்குள் கோபக் கனலை உண்டாக்க அவளை முறைத்தவாறு அங்கிருந்து அகன்று விட்டான்.

பின் அனைவரும் கிளம்பலாம் என்று தங்களது வண்டியை எடுக்க பூஜாவின் கண்களோ யாரையோ தேடி கொண்டே இருந்தது. ஆனால் அவள் தேடியது கண்களில் சிக்காமல் போக முகம் சுருங்க நின்றிருக்க, அவள் வண்டியில் ஏற வந்த மது “என்னடி ஏன் உன் மூஞ்சி இவ்வளவு டல்லா இருக்கு” என்றாள், அதற்கு பூஜாவோ “ஒன்னும் இல்லடி நீ ஏறு நம்ம போகலாம்” என்று கூற, மது அவளைப் பார்த்து கேலியாக சிரித்து “நீ ஒன்னும் இல்லைன்னு சொல்லும்போதே தெரியுது ஏதோ இருக்குன்னு. சரி சரி பிரண்டா போயிட்ட அதனால உனக்கு ஹெல்ப் பண்றேன் பொழச்சு போ”என்றவள் “நீ தேடுற ஆளு அதோ அந்த மரத்துக்கு பின்னாடி தான் நிக்கிறாங்க” என்று கூற பூஜா அதிர்ந்து “என்னது” என்று கேட்டவள், வேகமாக திரும்பிப் பார்க்க அதுவரை அவளை மறைந்திருந்து பார்த்துக் கொண்டிருந்த அர்ஜுன் அவள் கண்களில் பட்டான்.

முந்தையநாள் பூஜா தன்னை கண்டு கொள்ளாமல் சென்றதால் கோபம்கொண்ட அர்ஜுன் அன்று அவள் முன் வராமல், மறைந்திருந்து பார்த்துக் கொண்டிருக்க அவள் கண்கள் தன்னை தேடுவதை கண்டு உள்ளுக்குள் குதூகலித்து போனான். ஆனால் இப்போது திடீரென்று தன்னைக் கண்டு கொள்வாள் என்று நினைக்காதவன் அப்படியே செய்வதறியாது நின்றான்.ஆனால் பூஜா கண்களிலோ அவனை கண்டுவிட்ட மகிழ்ச்சி தாண்டவமாடியது. உடனே அவனைப் பார்த்து கண்ணடித்து ஒரு பறக்கும் முத்தத்தையும் கொடுத்துவிட்டு திரும்ப அங்கு அவளது தோழிகள் நால்வரும் இடுப்பில் கை வைத்து அவளை முறைத்து கொண்டிருந்தனர்.அவர்களை கெத்தாக ஒரு பார்வை பார்த்தவள் மதுவிடம் “நானும் ரவுடிதான்” என்று சுடிதாரில் இல்லாத காலரை இழுத்துவிட்டு கொள்ள மற்ற அனைவரும் தலையில் அடித்து கொண்டு வீட்டிற்கு கிளம்பினர்.
அர்ஜுன் பூஜாவின் செயலில் முதலில் திகைத்தாலும் பின் செல்ல கோபத்தோடு “இவ அடங்கவே மாட்டா” என்று முணு முணுத்துவிட்டு புன்னகையுடன் திரும்ப அங்கு அவனை முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தனர் அவனது நண்பர்கள்.

அவனோமுதலில் அவர்களைக் கண்டு திருதிருவென விழித்தாலும் பின் சுதாரித்து “என்ன எல்லாரும் அப்படி பார்க்குறீங்க” என்று கேட்க அவர்களோ “இல்லை யாரோ ஜஸ்ட் ஜூனியர் அப்படின்னு சொல்லிக்கிட்டு இருந்தாங்க, இப்போ அது மாதிரி தெரியலையே” என்று கேட்க அவனோ “இப்பவும் அவங்க நமக்கு ஜூனியர் தானே வேற என்ன” என்று ஒன்றும் தெரியாதவன் போல் கேட்க அவன் அருகில் வந்த ரகு மற்றும் கோகுல் “உன்ன பத்தி எங்களுக்கு தெரியும், மொசை பிடிக்கிற நாயே மூஞ்சியை பார்த்தா தெரியாது,அது மாதிரி நீ அந்த பொண்ணை சைட் அடிக்கிறது அப்பட்டமாவே தெரியுது” என்க, அவனோ “கண்டது உளறாம வாங்கடா போலாம்”, என்று சொல்லி அங்கிருந்து நழுவப் பார்க்க அவனை பிடித்து நிறுத்திய இருவரும் “இந்த டகால்டி வேலையெல்லாம் எங்ககிட்ட வேண்டாம் உண்மைய சொல்லு” என்று கேட்க. அவனோ “ஜூனியர் மட்டும்தான்” என்று கூறியவன் “இதுக்குமேல ஏதாவது கேட்டிங்க உங்க ரெண்டு பேருக்கும் அசைன்மென்ட் முடிச்சு தரமாட்டேன்” என்று அவர்கள் எதை சொன்னால் அமைதி ஆவார்கள் என்று தெரிந்து சொல்ல அவன் எதிர் பார்த்தது போலவே அவர்களும் அர்ஜுனை மேலும் கீழும் பார்த்தவர்கள் போடா என்றுவிட்டு செல்ல, இவனும் தப்பித்தால் போதும் என்று நினைத்தவன் அங்கிருந்து கிளம்பிவிட்டான்.

இவர்கள் கல்லூரி ஆரம்பித்து 6 மாதங்கள் ஆன நிலையில் அவர்களுக்கு முதல் செமஸ்டரில் செய்முறை தேர்வுகள் நடைபெற்றுக்கொண்டிருந்தது.

ப்ரீத்தி மற்றும் மதுவிற்கு காலையில் செய்முறை தேர்வு இருந்ததால் அவர்கள் கிளம்பி விட பூஜாவிற்கு மதியம் தேர்வு என்பதால் தனியாக சென்றிருந்தள் தேர்வை சீக்கிரமாக முடித்தவள் வெளியில் ரெக்கார்ட் நோட் வருவதற்காக சற்று தள்ளி இருந்த ஒரு படிக்கட்டில் அமர்ந்து இருந்தாள்.

சற்று நேரம் சுற்றி வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தவள் தூரத்தில் வந்து கொண்டிருந்த ஒரு பையனை பார்த்து “வாவ் சூப்பரா இருக்கானே,எப்படி இவ்வளவு நாள் நம்ம கண்ணுல படாம போனான்” என்று அவனையே பார்த்து இவள் யோசித்து கொண்டிருக்க, அப்பொழுது அங்கு வந்த இரண்டாம் ஆண்டு மாணவர்கள் சிலர் இவள் அந்த பையனைப் பார்த்துக் கொண்டிருப்பதை கண்டு “இங்க பாருங்கட போன வாரம் நான் அவகிட்ட பேச போனேன் என்னமோ கண்ணகிக்கு கசின் சிஸ்டர் மாதிரி பார்வையிலேயே விலக்கி வச்சா இப்போ அந்த பையன எப்புடி பாக்குறா பாரு, வாங்க மேடத்த கொஞ்சம் கவனிச்சுட்டு வரலாம்” என்று அவள் அருகில் சென்று “என்ன பேபி அந்த பையன பாத்துட்டு இருக்க, ஒரு பொண்ணு இப்புடி பாக்கலாமா” என்று ஒருவன் கேட்க மற்றவனோ “அது எல்லாம் இவங்ககிட்ட கேக்க கூடாதுடா அப்புறம் ஆணும் பெண்ணும் சமம், நீங்க பண்ற எல்லாமே நாங்களும் பண்ணுவோம்னு பெமினிசம் பேச ஆரம்பிச்சுடுவாங்க” என்றான் நக்கலாக அதில் கடுப்பான பூஜா “ஹலோ தேவை இல்லாம பேசாதீங்க.நான் என்ன பண்ணுனா உங்களுக்கு என்ன போங்க போய் உங்க வேலைய பாருங்க அதுமட்டும் இல்லாம பாக்கறது ஒன்னும் தப்பு இல்ல” என்று கூற அவர்களோ “பாக்கறது தப்பு இல்லையா, அப்ப நாங்களும் பாக்கறோம்” என்று சொன்னவர்கள், அவள் அருகில் வர அதிர்ந்து போன பூஜா தனக்கு உதவ யாராவது வர மாட்டார்களா என்று சுற்றி முற்றி பார்க்க, அந்த இடத்தில் யாரும் இல்லை, அதில் பயந்தவள் “இங்க பாருங்க……….”என்று பேச போக, அவர்களின் பார்வை சென்ற இடத்தை கண்டு உடல் கூசி போனாள்.

கண்களில் கண்ணீர் வர ஆரம்பித்துவிட, அதற்கு மேல் ஒரு நொடி கூட அங்கு இருக்க விருப்பாதவள் அவர்களை தள்ளிவிட்டு எழுந்து ஓடிவிட்டாள்.அழுது கொண்டே அவள் வந்து நின்ற இடம் பைக் பார்க்கிங் ஏரியாதான்.அங்கு அப்படியே மடங்கி அமர்ந்தவள் கரங்களால் வாயை மூடி சத்தம் வராமல் தேமி தேமி அழுது கொண்டிருக்க, அவள் தோளை ஒரு கரம் பற்றியது.

வேறு யாரோ வண்டி எடுக்க வந்தவர்கள், தான் அழுவதை பார்த்து வந்துவிட்டார்களோ என்று பதறி, வேகமாக தன் கண்களை துடைத்து முகத்தை சாதரணமாக வைக்க முயன்றவாறு திரும்பி பார்க்க அங்கு அபியும் சூர்யாவும் நின்றிருந்தனர். தோழிகளை பார்த்தவுடன் மீண்டும் கண்ணீர் உடைப்பெடுக்க இருவரையும் தாவி அணைத்துக்கொண்டாள்.
பூஜா சாதாரணமாக அழக்கூடியவள் இல்லை. எப்போதும் பட்டாம்பூச்சியாய் சந்தோஷமாக சுற்றி வருபவள், யார் என்ன சொன்னாலும் காதில் வாங்காமல் என் வாழ்க்கை என் முடிவு என்று வாழ்பவள், மற்றவர் முன் தன் சோகத்தை கூட காட்ட விரும்பாதவள், இன்று அழவும் தோழிகள் இருவரும் பதறிதான் போயினர்.

முதலில் சுதாரித்த சூர்யா “பூஜா என்ன ஆச்சு, எதுக்காக அழற” என்று கேட்க, அவளோ பதில் சொல்லாமல் அழுதுக்கொண்டே இருந்தாள்.தாங்கள் கேட்டும் பதில் சொல்லாமல் அழும் பூஜாவை பார்த்து கடுப்பான அபி தன்னில் இருந்து அவளை பிரித்து கூர் பார்வையுடன் “என்ன ஆச்சு” என்று அழுத்தமாக கேட்டாள். அவள் கேள்வியே இதற்கு நீ பதில் சொல்லிதான் ஆக வேண்டும் என்ற பொருளோடு இருக்க ஒருவழியாக தன்னை சமாளித்து கொண்ட பூஜா விம்மியபடியே சற்று நேரத்திற்கு முன்பு நடந்த அனைத்தையும் சொல்ல தோழிகள் இருவருக்கும் கோபத்தில் முகம் சிவந்து போனது.

பூஜாவின் கையை பிடித்த அபி “என்கூட வா எவன் அப்புடி பேசுனதுனு சொல்லு, அவன இன்னைக்கு உண்டு இல்லைனு ஆக்கிடறேன்” என்றவள், பூஜாவை இழுத்து செல்ல சூர்யாவும் அவர்கள் பின்னே ஓடினாள்.

தோழி அமர்ந்திருந்த இடத்திற்கு சென்றவள் “யாருன்னு சொல்லு” என்று கேட்க பூஜா தூரத்தில் நின்று பேசிக்கொண்டிருந்த மூவரை காண்பித்தாள்.

அபி வேகமாக அவர்கள் அருகில் செல்லும் போதே அந்த மூவரில் ஒருவன் மூக்கில் குத்து விழ இரத்தம் கொட்ட ஆரம்பித்தது.யார் அவனை அடித்தது என்று தோழியர் மூவரும் அதிர்ந்து போய் நிற்க, அங்கிருந்த அனைவரையும் புரட்டி எடுத்துக் கொண்டிருந்தான் அர்ஜுன்.


மறக்காமல் உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள் நண்பர்களே........

 
Last edited by a moderator:

Sonythiru

Suthisha
21924

அத்தியாயம் -12

அர்ஜுன் அந்த மூவரையும் அடித்துக் கொண்டிருப்பதை கண்ட தோழிகள் அதிர்ந்து நின்றனர் என்றால், பூஜாவோ விழி விரித்து அர்ஜுனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.இவர்கள் சண்டை போட்டு கொண்டிருந்த அதே நேரம் விரிவுரையாளர் ஒருவர் அங்கு வந்துவிட அவரை கண்டு அனைவரும் மரியாதை நிமித்தம் பிரிந்து நின்றனர்.

மாணவர்களுக்குள் அடித்து கொள்கிறார்கள் என்ற தகவல் கிடைத்துதான் அவர் வந்திருந்ததால் கோபமாக அனைவரையும் பார்த்து “இங்க என்ன நடக்குது” என்றவர் அர்ஜுனிடம் திரும்பி “எதுக்கு இவங்கள அடிச்ச” என்று கேட்க அவனோ இவங்க மூணு பேரும் அந்த பொண்ண அப்யூஸ் பண்ற மாதிரி பேசினாங்க அதனாலதான் அடிச்சேன் என்று நிமிர்வாகவே பதில் அளித்தான். அவரும் பூஜாவை திரும்பிப் பார்த்து “இவன் சொல்வது உண்மையா” என்று கேட்க,அவளோ அதிர்ச்சியில் இருந்து மீளாமல் சிலைபோல் நின்றிருந்தாள்.அதை கண்டு கோபம் கொண்ட அர்ஜுன் “அதுதான் கேட்கிறார் இல்ல பதில் சொல்லு” என்று அதட்ட அப்போதுதான் தன்னிலை மீண்டவள் “ஆமா சார் இவங்க மூணு பேரும் என்ன தப்பா பேசினாங்க” என்று கூற அவரோ “மூணு பேரும் பிரின்ஸ்பல் ரூமுக்கு வாங்க” என்றுவிட்டு,அர்ஜுனிடம் திரும்பியவர் “இந்த மாதிரி ஏதாவது பிரச்சனைனா ஸ்டாப் கிட்ட கொண்டு போகணும், நீங்களே அடிதடியில் இறங்க கூடாது புரிஞ்சுதா இதுதான் பர்ஸ்ட் அண்ட் லாஸ்ட் வார்னிங்”என்று எச்சரித்துவிட்டு செல்ல அவனும் சரி என்பது போல் தலை அசைத்தாள்.


அவர் அந்த மாணவர்களுடன் அங்கிருந்து அகன்ற பின் பூஜாவும் அவளது தோழிகளும் என்ன செய்வது என்று தெரியாமல் கையை பிசைந்து கொண்டு நின்றிருக்க, பூஜாவை முறைத்து பார்த்த அர்ஜுன் வேகமாக அங்கிருந்து கிளம்பி விட்டான்.அவன் சென்ற பின்தான் அவனிடம் ஒரு நன்றி கூட சொல்லவில்லை என்பது பூஜாவிற்கு உரைத்தது.உடனே சூர்யா, அபியிடம் சென்றவள் நான் அவர்கிட்ட போய் தேங்க்ஸ் சொல்லிட்டு வரேன், நீங்க இங்கயே வெயிட் பண்ணுங்க என்றவள் பாய்ந்து ஓட அபியும் சூர்யாவும் தாங்களும் வருவதாக கூறிய வார்த்தைகள் காற்றில் கலந்து போனது.

அர்ஜுன் நேராக கல்லூரியின் கிரவுண்டிற்கு வந்தவன் அங்கிருந்த மரத்தை உதைத்து தன்னுடைய கோபத்தை கட்டுப்படுத்த முயன்று கொண்டிருந்தவன் மனதில் .“எவ்வளவு தைரியம் இருந்தா இப்படி பேசி இருப்பாங்க அங்கேயே அவங்கள ஒரு அரை விடாம அழுதுட்டு போறா லூசு” என்று அவளையும் சேர்த்து திட்டிக்கொண்டிருந்த நேரம் அங்கு வந்து சேர்ந்தாள் பூஜா.

மூச்சிரைக்க தன்முன் ஓடிவந்து நின்றவளை கண்டவன் முறைத்துப் பார்க்க அவளோ அதை சற்றும் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் “ரொம்ப தேங்க்ஸ்” என்றாள்.அவனோ “எதற்கு” என்பது போல் பார்க்க, “எனக்காக அவங்கள அடிச்சிங்க இல்லை அதான்” என்று சொல்ல அவனோ கோபமாக அவளை நெருங்கிய “என்னடி தேங்க்ஸ் இல்லை என்ன தேங்க்ஸ்னு கேட்கறேன், கொஞ்சமாவது புத்தி வேணா சைட் அடிக்கிறது எல்லாருக்கும் தெரியற மாதிரி தான் அடிப்பியா மத்தவங்க எல்லாம் உன்னை என்ன சொல்லுவாங்கனு கொஞ்சமாவது யோசிக்க மாட்டியா, ஆள் வளர்ந்த அளவுக்கு கொஞ்சம் கூட அறிவு வளரல, உனக்கு தான் அறிவு இல்லை உன் கூட இருக்க நாளுக்குமா இல்ல, இனிமேல் எவனையாவது நீ பார்த்து சைட் அடி அப்ப இருக்கு உனக்கு” என்று அதட்ட “என்ன ரொம்ப ஓவரா பேசுறீங்க நீங்க சைட் அடிச்சது இல்லை” என்று அவளும் எகிறினாள்.

பூஜாவின் எதிர் கேள்வியில் கடுப்பானவன் “சைட் அடிக்கிறது தப்புனு சொல்லல, ஆனா பட்டிக்காட்டான் முட்டாய் கடையை பாக்கறது போல் பார்க்க கூடாது.இப்போ பிரச்சனை யாருக்கு உனக்குதானே, நான் அங்க இருந்ததுனாலஆச்சு இல்லைனா என்ன ஆகியிருக்கும்” என்று கோபமாக பேச அவளோ அலட்சியமாக “ஒன்னும் ஆகிருக்காது, இன்னும் அஞ்சு நிமிஷம் இருந்து இருந்தா அபி வந்துருப்பா அவளோதான்” என்று சொல்ல, அவனோ “இப்ப கூட தப்ப ஒத்துக்காம பேசிட்டு இருக்க பாத்தியா” என்று மேலும் கடிந்து கொள்ள அவளோ “போனா போயிட்டு போகுதுன்னு தேங்க்ஸ் சொல்ல வந்தால் ரொம்ப தான் பேசிகிட்டு இருக்கீங்க,என்ன கண்ட்ரோல் பண்ண நீங்கயாரு” என்று வீம்பாக கூறியபடி அங்கிருந்து நகர முனைய அவள் கைகளை பிடித்து தடுத்தான் அர்ஜுன்.

கைகளை பிடிப்பான் என்று எதிர் பார்க்காத பூஜா அவனை கேள்வியாக பார்க்க அவனோ அவளை நெருங்கி “நான் யாரா.. ஏன் நான் யாருனு உனக்கு தெரியாதா” என்று அவள் கண்களை தீர்க்கமாக பார்த்து கேட்க, அவளோ திணறியவாறே அவன் கண்களை சந்திக்க இயலாமல் பார்வையை அங்கும் இங்கும் திருப்பினாள்.அவளின் செயலை புரிந்து கொண்டவனோ அவள் கன்னங்களை பிடித்து நிமிர்த்தி தன் கண்களோடு அவள் கண்களை உறவாட விட்டு ஓகே லெட் மி கிளியர் இட். நானே இந்த கண்ணாமூச்சி ஆட்டத்துக்கு முடிவு கட்டறேன். “ஐ லவ் யூ. யூ ஆர் மைன்” இப்ப உன்னை கண்ட்ரோல் பண்ணற முழு உரிமை எனக்கு இருக்கு தானே” என்று கேட்க அவளோ அவன் காதலிப்பதாக கூறியதிலேயே அதிர்ந்து நின்றவள் “என்னது லவ்வா” என்று வெளியில் கேட்டாலும் உள்ளுக்குள் தர லோக்கலாக இறங்கி குத்து பாட்டுக்கு ஆடி கொண்டு இருந்தாள்.அவனோ பூஜாவின் முகத்தில் இருக்கும் மகிழ்ச்சியை கண்டு கொண்டாலும் “என்னதான் சொல்கிறாள் பார்ப்போமே” என்று நினைத்தவன் அவளது கேள்விக்கு பதில் அளிக்கும் விதமாக “லவ் தான் லவ்வே தான் ஏன் லவ் இல்லாமையா ஸ்கூல்ல இருந்து என் பின்னாடி சுத்தி சுத்தி வந்த, கண்ணடிச்ச ஃப்ளையிங் கிஸ் கொடுத்த, அப்புறம் என்றவன் ஓர கண்ணில் அவளது முகத்தில் வந்து போகும் பாவத்தை ரசித்தவாறே “என்ன வெறுப்பேத்த இன்னொருத்தன் கிட்ட ஐ லவ் யூ அண்ணானு சொல்லிட்டு நான் என்ன ரியாக்சன் குடுக்குறேன்னு பார்த்த” என்று கேட்க அவளோ திருதிருவென விழித்தவள் “பய புள்ள எல்லாத்தையும் நோட் பண்ணிருக்கு ஆனா வேணும்னே கண்டுக்காம விட்டுருக்கு இருந்தாலும் பூஜா உடனே ஒத்துக்கிட்டா நம்ம கெத்து என்னத்துக்கு ஆகறது கொஞ்சம் பில்டப் குடுப்போம்” என்று முடிவெடுத்தவள் அவனிடம் “அதெல்லாம் லவ்வா என்ன” என்று அவனையே திரும்பி கேட்க, அவனோ அவளின் நடிப்பில் அசந்து தான் போய் விட்டான்.

“அடிபாவி என்னா நடிப்பு” என்று நினைத்தவன் ஏனோ அதை ரசிக்கவே செய்தான். அவள் போக்கிலேயே பதிலளிக்க விரும்பி “அப்ப இன்னும் நீ லவ்வ ரியலைஸ் பண்ணவே இல்ல அப்படிதானே.ஓகே நோ ப்ராப்ளம் இல்லை இனிமேல் அதை லவ் ஆங்கில்ல பாரு” என்று கூற அவளோ “இல்ல எனக்கு கொஞ்சம் டைம் வேணும் உடனே எப்படி சொல்ல”என்று கேட்க அவனும் சற்று யோசித்தவன் “ஓகே டேக் யுவர் டைம்” என்றவன் பின் என்ன நினைத்தானோ “உன்ன நம்ப முடியாது வேற எவனாவது அழகா இருக்கான்னு அவன சைட் அடிச்சுட்டு சுத்திகிட்டு இருப்ப அதனால ‘டு மேக் மை லவ் ஸ்ட்ராங்’” என்று கூறி அவள் அருகில் அடி மேல் அடி வைத்து போக அவளோ “இவன் எதுக்கு இவ்வளவு பக்கத்துல வரான்” என்று யோசித்தபடி நின்றாள்.தன் மூச்சு காற்று அவள் முகத்தில் படும் அளவு நெருங்கியவன் பட படக்கும் அவளது கண்களை ஒரு நொடி பார்த்துவிட்டு தன் இதழை அவள் இதழோடு இணைத்தான். .

அர்ஜுன் இப்படி செய்வான் என்று எதிர்ப்பார்க்காதவளின் மூளையோ வேலை நிறுத்தம் செய்ய,அவனை தள்ளிவிடு கூட முடியாமல் நின்றிருந்தாள் பூஜா.தோழியை தேடி வந்த அபி, சூர்யாவின் கண்களிலும் இந்த காட்சி பட அவர்களும் திகைத்து போய் நின்றனர்.

அர்ஜுன் அவர்களை கடந்து செல்லும் முன் “டேக் கேர் ஆஃப் மை புரோபர்டி” என்று நகர அப்போதுதான் தன்னிலை அடைந்த சூர்யா நெஞ்சில் கை வைத்தவாறு “பெருமாளே” என்று கத்த அதே நேரம் அபி அவளை பார்த்து “இந்த சம்பவம் நம்ம வாழ்க்கைல எப்படா நடக்கும்” என்று ஏக்கமாக கேட்டாள். அதற்கு சூர்யாவோ “ரொம்ப முக்கியம் அங்க ஒருத்தி மந்திருச்சு விட்ட மாதிரி இருக்கா வா போய் அவளை பாக்கலாம்” என்று சொல்ல பாவமாக முகத்தை வைத்து கொண்ட அபி “உனக்கும் சேர்த்துதானே கேட்டேன்” என்று வெளியில் சொன்னாலும் மனதுக்குள் “இவ கூட கூட்டு சேர்ந்ததுக்கு பதிலா மூணு எருமையை மேச்சு இருக்கலாம்” என்று புலம்பி கொண்டே கொண்டே பூஜாவின் அருகில் சென்றாள்.

எதிர்பாராத நிகழ்வால் அதிர்ந்திருந்த தோழியின் அருகில் சென்ற அபி “அவளை பாத்தா மந்திருச்சுவிட்ட மாதிரி தெரியல என்ஜாய் பண்ற மாதிரிதான் தெரியுது” என்றவாறே அவளின் தோளை பிடித்து உலுக்கினாள்.

தோழியின் தொடுகையில் தன்னிலை அடைந்த பூஜா அபியை பார்த்து “நீ எப்போடி வந்த எல்லாத்தையும் பாத்துட்டியா” என்று திகைத்து கேட்க, மறு புறம் நின்றிருந்த சூர்யாவோ “ஏன்டி அவன் பண்ணிட்டு போன வேல உனக்கு அதிர்ச்சிய கொடுக்கல நாங்க பாத்ததுதான் அதிர்ச்சியா இருக்கா” என்று கேட்டு அவளது கையில் இருந்த புக்கால் அடி போட, பூஜாவோ அவள் அடித்ததால் ஏற்பட்ட வலியில் முகத்தை சுருக்கியவாறே “உங்களுக்கெல்லாம் கிடைக்கலன்னு பொறாமடி”,என்க, சூர்யாவோ “ஆமா இதுலதான் பொறாமை போடி” என, அபியோ “லைட்டா”என்றாள். அதற்கு பூஜாவோ “நான் என்னமோ வேணும்னே குடுத்த மாதிரி பேசுறீங்க. அவன்தானே குடுத்தான்” என்று அப்பாவியாக சொன்னவள் “நானே பாவம் கடல்ல இருக்கும் மீனு கண்ணீருல இருக்கேன் நானு” என்று சொல்ல அவள் முகத்தை தன்னை பார்த்து திருப்பிய அபி “ஏது இந்த மூஞ்சி கண்ணீருல மிதக்குதா தூஊஊஊ”என்று துப்பினாள்.

அப்போது சூர்யா “அடியே இது நமக்குள்ளேயே இருக்கட்டும் அவங்க ரெண்டு பேருக்கும் தெரிய வேண்டாம்” என்று சொல்ல அபியோ “அது எப்படி அவங்களுக்கு சொல்லாம இருக்க முடியும். நான் சொல்லுவேன்” என்று பிடிவாதமாக சொல்ல அவளோ “டேய் வேணாண்டா, அவங்க ரெண்டு பேருக்கும் அவ்ளோ மெச்சுர் இல்ல ” என்று சொல்ல,சிறிது நேரம் யோசித்தவர்கள் பின் சம்மதமாக தலையசைத்தனர்.
“சரி வாங்க போலாம்” என்று மூவரும் கிளம்பும் சமையம் சூர்யாவின் மேல் விழுந்தது ஒரு பூ.அந்த பூவை கையில் எடுத்தவள் அதனை யோசனையோடு பார்த்து கொண்டிருக்க, அப்போது அவள் அருகில் வந்த அபி “என்னடி ஆச்சு” என்றாள்.சூர்யாவோ கையில் இருந்த பூவை காட்டி நடந்ததை சொல்ல, காதல் மயக்கத்தில் இருந்த பூஜாவோ “பூ தானேடி மரத்துல இருந்து விழுந்துருக்கும்” என்க, அவள் தலையில் கொட்டிய அபி “இந்த மரத்துல இருந்து ரோஸ் விழுதா, ஓவரா போரடி நீ, கனவு உலகத்துல இருந்து வெளிய வா” என்று கூறியவள், சூர்யா கையில் இருந்த பூவை பிடிங்கி தூக்கி போட்டுவிட்டு “வேற யாரு மேலையாவது போட்டு இருப்பாங்க அது உன் மேல தெரியாம விழுந்துருக்கும் இதுக்கு போய் இப்படி யோசிச்சுட்டு இருக்க வாடி போலாம்” என்று இழுத்து செல்ல,சூர்யாவும் ஒரு தோள் குலுக்கலில் பூ விஷயத்தை ஒதுக்கி தள்ளியவள் தோழிகளுடன் வீட்டிற்கு கிளம்பிவிட்டாள்.

தோழிகள் மூவரும் அங்கிருந்து கிளம்பிய மறு நிமிடம் மரத்தின் பின் மறைந்து நின்றிருந்தவன் வெளியில் வந்து, அபியின் செயலில் உண்டான கோபத்தில் அவளை வெறுப்புடனும், சூர்யாவை காதலுடனும் பார்த்து விட்டு அங்கிருந்து சென்றுவிட்டான்.

அவ்வளவு நேரமும் அங்கு நடந்த அனைத்தையும் பார்த்து கொண்டிருந்தான் திருனேஷ். இவன்தான் பள்ளியில் சூர்யாவிடம் காதலை சொன்னது, முதல் நாள் தங்களுடைய காலேஜிலேயே அவள் சேர்ந்திருப்பதை பார்த்து மகிழ்ந்து, அவளை பக்கத்தில் பார்க்கும் ஆவலில் வண்டி நிறுத்தும் இடத்தில் அருகில் சென்றது. பின் அவள் தோழிகளிடம் தன்னைப்பற்றி சொல்வதை கேட்டு சந்தோஷத்தில் வானத்தில் பறந்தது. இப்படி தன்னவளின் ஒவ்வொரு செயலையும் உடன் இருந்து பார்ப்பவனுக்கு தெரியாதா அந்த பூ எங்கிருந்து வந்தது என்று.அவன் மனதில் கோபம் எரிமலையின் சீற்றமென பொங்க அதை அடக்கும் வழி அறியாது கைகளை முறுக்கியவனின் முகம் சிவந்துதான் போனது.

செல்லும் அவனையே பார்த்து கொண்டிருந்தவன் மனதில் “இத்தனை வருஷமா என்னோட வாழ்க்கையே அவதானு நினச்சு வாழ்ந்துட்டு இருக்கேன். அவ நிழலை கூட யாரும் தொட கூடாதுனு யோசிக்கறவன் நான், உனக்கு எவ்ளோ தைரியம் இருந்தா அவ மேல பூ போடுவ, யாருக்காகவும் அவள நான் விட்டு குடுக்க மாட்டேன் டா, அவ எனக்குதான் எனக்கு மட்டும்தான் இது அவளே நினைச்சாலும் மாத்த முடியாது. அவளுக்காக கூட என்னால அவளை விட்டுகொடுக்க முடியாது, இதை நான் ஸ்கூல்லயே முடிவு பண்ணிட்டேன்” என்றவனின் கால்களில் மிதி பட்டது அந்த பூ.
 
Last edited by a moderator:

Sonythiru

Suthisha
22886
அத்தியாயம் -13

நாட்கள் அதன் போக்கில் செல்ல அவர்கள் கல்லூரியில் சேர்ந்து இத்தோடு ஒன்றரை வருடம் முடிந்திருந்தது. இதற்கிடையில் அர்ஜுன் மற்றும் பூஜாவின் காதலும் அவர்களது படிப்போடு வளர்ந்து கொண்டிருந்தது.

ஒருநாள் மதிய நேரம் பூஜா தங்களது கேன்டீனில் சோகமாக அமர்ந்து இருக்க அவளை கண்ட மது “என்னடி சோகமா உட்கார்ந்து இருக்க” என்று கேட்டாள். அவளை பாவமாக பார்த்த பூஜா “இன்னிக்கு கிளாஸ் அட்டென்ட் பண்ணவே, எனக்கு பிடிக்கல டி, பயங்கர மொக்கையா இருக்கு என்று கூறியவள், பின் கண்கள் மின்ன வெளில எங்கயாவது போகலாமா என்று கேட்க, ப்ரீத்தியோ “போலாம்” என்றவள் “ஆனால்……” என்று இழுத்து “அபியும், சூர்யாவும் அவங்க காலேஜில இருகராங்களே” என்று சொல்ல, பூஜாவோ “ஒன்னும் பிரச்சனை இல்ல நான் உடனே அபிக்கு கூப்பிடுறேன்” என்றவள் தனது கைப்பேசியில் அபிக்கு அழைத்தாள்.
அபி தன் போன் அடிக்கவும் யாருக்கும் தெரியாமல் எடுத்தவள் “ சொல்லுடி” என்று தூக்க கலக்கத்திலேயே கேட்க, பூஜாவோ அவள் குரலை வைத்தே தோழியின் நிலையை புரிந்து கொண்டவளாக “சேம் பிளாட், அங்க நிலவரம் என்ன” என்று கேட்க.

அபி, “இப்போதான் ஒரு மொக்க கிளாஸ் முடிஞ்சுது அடுத்து ஒரு பெரிய ரம்பம் வரும் அது என்ன மொழி பேசுதுன்னு எனக்கும் புரியாது மத்தவங்களுக்கும் புரியாது அதுக்கே புரியுமானுதான் எங்களுக்கு தெரியல” என்று புலம்ப அந்த பக்கம் இருந்த பூஜாவிற்கோ குதூகலமாகி போனது.

பூஜா, “ஹை ஜாலி இங்கயும் அதே நிலைதான் நாம எல்லாரும் எங்கேயாவது வெளில போயி சுத்திட்டு வரலாமா.காலேஜ் வந்தும் கட் அடிக்காம இருந்தா நாளைக்கு வரலாறு நம்ம தப்பா பேசும்” என்று கூற, அபியும் “அடுத்த ரம்பத்துல இருந்து எப்படி தப்பிக்க போறோம்ன்ற கவலைல இருந்தேன். நல்ல வேலை நீ கால் பண்ணுன, எல்லாரும் இப்ப எங்க இருக்கீங்க” என்று கேட்க பூஜா கேன்டீனில் இருப்பதாக சொன்னாள்.உடனே அபி “சரி அங்கேயே இருங்க, நாங்க ரெண்டு பேரும் அங்க வரோம்” என்றவள் சூர்யாவை பார்க்க அவளோ பொறுப்பாக அடுத்த வகுப்பில் லெக்சரர் எடுக்க போகும் புக்கை புரட்டி கொண்டு இருந்தாள்.

சூர்யாவின் செயலை பார்த்து தலையில் அடித்து கொண்ட அபி “இவ கடமை கண்ணியம் கட்டுப்பாடுனு ஓவரா பேசுவாளே”, என்று யோசித்தவள் பின் “எவ்வளவோ சமாளிச்சுட்டோம் இவளை சமாளிக்க மாட்டோமா”என்று தனக்கு தானே சொல்லி கொண்டவள், அவள் அருகில் சென்று கையை பிடித்து கேன்டீன் நோக்கி தர தரவென இழுத்து சென்றாள்.

சூர்யா, “அடியே என்ன பண்ற கைய விடுடி, ஏற்கனவே அந்த அம்மா நடத்தறது ஒன்னும் புரியாதுனுதான் என்ன டாபிக்னாவது பார்த்து வைக்கலாம்னு பாத்துட்டு இருக்கேன், அதைக்கூட செய்ய விடாம எங்கடி இழுத்துட்டு போற”என்று கத்தியவளை கண்டுகொள்ளாதவள் கேன்டீன் வந்துதான் கையை விட்டாள்.

அங்கு பூஜா, மது, ப்ரீத்தி மூவரும் இருப்பதை பார்த்தவள் “இவங்க ஏன் கிளாஸ்க்கு போகாம இங்க இருக்காங்க” என்று கேட்டு கொண்டிருக்கும்போதே அவர்கள் அருகில் வந்த ப்ரீத்தி “ஹேய் நாம எல்லாம் சீனியர் ஆகிட்டோம் காலேஜ் கட் அடிக்க போறோம் வெளிய சுத்த போறோம்” என்று குதித்து கொண்டு சொல்ல, அபியை முறைத்த சூர்யா அங்கேயே இதை சொல்றத்துக்கு என்னடி”என்று விட்டு ஆர்வமாக “எங்க போறோம்” என்றாள்.

தோழியை ஆச்சர்யமாக பார்த்த அபி “ஏன்டி பொறுப்பு பொறுப்புன்னு கருத்து கந்தசாமியா பேசுவியே இப்போ என்ன ஆச்சு”என்று சொல்ல, சூர்யாவோ அசட்டு சிரிப்புடன் “அந்த கிளாஸ்ல இருந்து தப்பிக்கத்தான் நானும் யோசிச்சுட்டு இருந்தேன்” என்று சொல்ல அவளை அணைத்து கொண்ட பூஜா “நீ என் இனமடா” என்றாள்.

மதுவோ அவர்கள் இருவரையும் பிரித்து நிறுத்தியவள், “ஆமா பெரிய அயல் நாட்டு அதிபர்கள் ஒப்பந்தம் பேசறாங்க கட்டி பிடிச்சு சம்மதம் தெரிவிக்கறாங்க, ஓவரா பண்ணாம எங்க போறோம்னு சொல்லுங்க” என்க, பூஜா வேகமாக “பக்கத்துல இருக்க மாலுக்கு ஏன் போகக்கூடாது” என்று கேட்டாள்”.

அபியும் “ஆமா இல்ல, இந்த மால் நியாபகமே இல்லை, சரி அங்கேயே போகலாம்”, என்று சொல்ல அதே நேரம் ப்ரீத்தி “நோ…..” என்று கத்தினாள்.அபி,”என்னடி இப்போ உனக்கு என்ன, எதுக்கு கத்தின”.

ப்ரீத்தி, “எனக்கு ‘சூசூ’ வருது நான் போயிட்டு வந்துடறேன் அப்புறம் எங்க வேணா போலாம்”என்றவள் துணைக்கு வர மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்த மதுவையும் சேர்ந்து இழுத்து கொண்டு சென்றாள்.மது அவளுடன் செல்லும் வழி எல்லாம் அவளை திட்டிக்கொண்டே வந்தாள்.”ஏன்டி இப்படி பண்ற குழந்தை மாதிரி பயந்துட்டு,எப்போ பாரு யாராவது துணைக்கு வரணும்னு நீ எல்லாம் காலேஜ் படிக்கறன்னு வெளிய சொல்லிடாத” என்று கத்த, உடனே ரோஷம் வந்த ப்ரீத்தி “அடியே யாருக்கு பயம்னு சொல்ற எனக்கு எவ்ளோ தைரியம்னு இப்போ காட்டறேன், இப்போவே ஒரு ஜூனியர் பையன கூப்பிட்டு ராகிங் பண்றேன் எனக்கு அவன் எப்படி பயப்படறானு மட்டும் பாரு” என்றவள் கிரவுண்டை சுற்றி கண்களை சுழற்றினாள்.

மது, “இந்த வாய்க்கு மட்டும் குறைச்சல் இல்லை.வாய் இல்லனா உன்னை நாய் தூக்கிட்டு போய்டும்” என்ற தோழியின் பேச்சை காதில் வாங்காமல் கண்களை சுழற்றியவள் “ஹுர்ரே.. …”என்று கத்தி கொண்டே “ஒரு அடிமை சிக்கிடுச்சு” என்று குதித்தவள், “டேய் தம்பி இங்கவா” என்றாள் சத்தமாக.

மதுவோ அந்த பையனை பார்த்து பயந்தவளாய் “அடியே பேசாம இருடி அவன பார்த்தா ஜூனியர் மாதிரி தெரில,அது மட்டும் இல்லாம நம்ம தைரியத்தோட அளவை யோசிச்சு முடிவெடு” என்றாள்.

ப்ரீத்தி, “பயந்து சாகாதடி வெள்ளை சட்டை போட்ட பசங்க ரொம்ப சைலன்ட் டைப்பா இருப்பாங்க, அங்க பாரு நான் கூப்பிடவும் பயந்துட்டு சுத்தி முத்தி பாக்குறான்.ஹே வைட் சர்ட் உன்னைதான் வா இங்க” என்று கெத்தாக இவள் கூப்பிட அந்த வெள்ளை சட்டைகாரனும் ஒருவிதமான முக பாவனையுடன் அவளிடம் வந்தான். அவன் வருவதை பார்த்த மது அலுங்காமல் அந்த பக்கம் ஓடி விட தனியாக நின்ற ப்ரீத்தி “என்ன தம்பி சீனியர்ங்கற மரியாதை இல்லையே உன்கிட்ட, கூப்பிட்ட உடனே வேகமா சொல்லுங்க சீனியர்னு ஓடி வர வேண்டாமா” என்று அதட்ட அவனோ அவளை சிறு சிரிப்புடன் பார்த்திருந்தான். “சரி சரி சின்ன பையன்னு இந்த ஒரு டைம் விடறேன், நீச்சல் அடிக்க தெரியுமா? தரைல அடிச்சுக்காட்டு பாக்கலாம்” என்று சொல்ல அவனோ கிண்டலான குரலில் “எத்தனை வருஷத்துக்குதான் இதையே பண்ண சொல்லுவீங்க சீனியர், ‘ஐ வாண்ட் மோர் எமோஷன்’ என்றான்.

அவனின் சிரிப்பையும், கிண்டலான பேச்சை கவனித்த ப்ரீத்தி “நம்ம டம்மி பீஸ்னு இவனுக்கு தெரிஞ்சுருக்குமோ நக்கலா சிரிக்கறான்” என்று யோசித்தவள், அருகில் நின்ற தோழியை தேட அவள்தான் எப்பவோ ஓடி இருந்தாளே, “ஐயோ இவ எங்க போனா” என்று ப்ரீத்தி திகைத்து நின்று கொண்டு இருக்கும்போதே அந்த பக்கம் வந்த நான்காம் ஆண்டு பையன் ஒருவன் அந்த வெள்ளை சட்டை போட்டவனிடம் சென்று “என்ன ஆச்சு சீனியர் எதுவும் பிரச்சனையா” என்று கேட்க, அவனோ “ஒன்றும் இல்லை” என்று சொல்லி அந்த பையனை அனுப்பிவிட்டு ப்ரீத்தியை பார்க்க அவளோ திரு திருவென்று விழித்து கொண்டிருந்தாள்.
“ஹய்யோ அந்த பனை மரமே பைனல் இயர், அவன் இவனை சீனியர்னு சொல்றான் அப்போ இவன் என்ன படிக்கறான்னு தெரிலயே” என்று ப்ரீத்தி யோசித்து கொண்டு இருக்க, அவளின் என்ன ஓட்டத்தை தெரிந்து கொண்டவனாக “நான் எம்.பி.ஏ” என்று சொல்ல, அவளோ திகைத்து விழித்தாள்.அவளின் முகத்தில் தெரிந்த திகைப்பை பார்த்தவன் சிறு சிரிப்புடன் “நீச்சல் அடிக்கணுமா” என்று நக்கலாக கேட்டு ப்ரீத்தியின் அருகில் வந்தவன் அவள் தலையில் நங்கென்று ஒரு கொட்டு கொட்ட, அவளோ “ஆ. ………”என்று கத்தி கொண்டே கொட்டிய இடத்தை தேய்த்தாள், அதை எல்லாம் கண்டு கொள்ளாதவன் அவளை முறைத்து பார்த்து “இனி நான் என்ன சொல்றனோ அதைதான் நீ செய்யணும்” என்று கட்டளையாக சொல்ல, அவளும் பூம் பூம் மாடு போல் பயத்துடன் தலையாட்டினாள். “கிளாஸ்க்கு போகாம இந்த டைம்ல இங்க என்ன பண்ற” என்றான்.

ப்ரீத்தி அவனின் கேள்வியில் கடுப்பானவள் “இவனும்தான் கிளாஸ்க்கு போகாம இங்க நிக்கறான்.நான் ஏதாவது கேட்டனா வந்துட்டான் என்கிட்டே கேள்வி கேட்க” என்று நினைத்தவள் அவனுக்கு பதில் சொல்லாமல் இருக்க,இவனும் விடாமல் “இங்க என்ன பண்ற இந்த நேரத்தில்” என்று அழுத்தி அதட்டி கேட்கவும், வழக்கம்போல் பயந்தவள் தோழிகளின் பிளானை சொல்ல அவன் முகத்தில் மகிழ்ச்சி ரேகை பரவியது.உடனே தன்னை சமாளித்து கொண்டு “சரி சரி நீ போ” என்று கூறி விட்டு, சென்றான் திருனேஷ்.

அவன் சென்ற பிறகும் வலித்த தன் தலையை தேய்த்து கொண்டு இருந்தவளின் அருகில் வந்த மது ஒன்றும் தெரியாதது போல் “என்னடி ஆச்சு” என்று கேட்க அவளோ உடனே தலையில் இருந்து கையை எடுத்துவிட்டு “ஒன்னும் இல்லை நான் மிரட்டுனதுல பையன் மிரண்டு போய்ட்டான், என்ன விட்டுருங்க அக்கானு ஒரே அழுகை அதான் அவன போக சொல்லிட்டேன்” என்று கெத்தாக சொல்ல மதுவோ கிண்டலான குரலில் “பார்த்தேன் பார்த்தேன் அவன் பயந்து அழுததையும் பார்த்தேன்,நீ தலையில் கை வச்சிட்டு இருப்பதற்கான காரணத்தையும் பார்த்தேன்” என்க.

ப்ரீத்தியோ “ரொம்ப முக்கியம் தனியா விட்டுட்டு ஓடிபோய்ட்டு பேச்சாடி பேசுற பேச்சு உனக்கு ஒரு ஒரு நாள் இருக்கு”என்று திட்டி கொண்டிருக்க மதுவோ “சரி சரி வா வந்த வேலைய முடிப்போம்.அப்புறம் மாலுக்கு போக லேட் ஆகிடும்” என்று பேச்சை மாற்ற, ப்ரீத்தியும் நடந்த அனைத்தையும் மறந்தவளாக “ஆமாம்டி” என்றவள் வேகமாக பாத்ரூம் நோக்கி ஓடினாள்.

ஒரு வழியாக இருவரும் மற்றவர்கள் இருந்த இடத்திற்கு வர அவர்களை பார்த்த அபி “ஏன்டி இங்க இருக்க பாத்ரூம் போயிட்டு வர எவளோ நேரம்” என்று திட்ட மது அங்கு நடந்த அனைத்தையும் சொல்ல ஆரம்பித்தாள்.அவள் சொல்ல சொல்ல மூவரும் வயிற்றை பிடித்து கொண்டு சிரிக்க ஆரம்பித்தனர்.

ப்ரீத்தி, “பாக்கல பாக்கலைனு சொல்லி மொத்தத்தையும் பாத்துட்டு மொத்துனதையும் பார்த்து சொல்லிட்டாளே”.

பூஜா, “ஏன்டி உனக்கு இந்த வேண்டாத வேலை நாமதான் புல் தடுக்கி பயில்வான் ஆச்சே நமக்கு இது எல்லாம் தேவையா” என்க, சூர்யாவோ “எது வைட் ஷர்ட் போட்டவங்க சைலன்ட்டா இருப்பாங்களா, என்னடா இது புது புரளியா இருக்கு என்று சொல்லி சிரித்தாள்.

அவர்கள் சிரிப்பதை பாவமாக பார்த்த ப்ரீத்தி ஒரு அளவுக்கு மேல் முடியாமல் “போதும் வாங்கடி போலாம் அப்புறம் ரவுண்ட்ஸ்க்கு வர்ற பிரின்சி இங்க என்ன பண்றீங்கன்னு கேட்டு கிளாஸ்க்கு போக சொல்லிட போறாரு” என்று சொல்ல மற்றவர்கள் அனைவரும் தெறித்து ஓட ஆரம்பித்தனர், அவர்கள் வண்டியை நிறுத்தி வைத்திருக்கும் பார்க்கிங் ஏரியா நோக்கி.அவரவர் வண்டியிடம் வந்து தங்கள் ஓட்டத்தை நிறுத்தியவர்கள் மாலை நோக்கி வண்டியை செலுத்தினர்.

இங்கு ப்ரீத்தியிடம் இருந்து தனக்கு தேவையான தகவலை பெற்று கொண்ட திருனேஷ் “இங்க ஒருத்தன் வருஷ கணக்கா உனக்காக காத்துட்டு இருக்கேன், நீ என்னடானா என்ன கண்டுக்காம வேற ஒருத்தனையா சைட் அடிக்கற வரேன்,நானும் மாலுக்கு வரேன், இன்னைக்கு நீ மட்டும் என்கிட்டே தனியா மாட்டு நான் யாருனு உனக்கு காட்டுறேன்.நான் பண்ற வேலைல இனி எவனையும் நீ பாக்க கூடாது” என்று தனக்குள் பேசி கொண்டவன் தன் வண்டியையும் மாலை நோக்கி செலுத்தினான்.

தோழிகள் ஐவரும் மாலிற்கு வந்து தங்களது வாகனத்தை பார்க் செய்து விட்டு திரும்ப, அங்கு அவர்களை வரவேற்கும் விதமாக நின்று கொண்டிருந்தவனை கண்டு அதிர்ந்தவர்கள் பூஜாவை பார்க்க, அவளோ அசட்டு சிரிப்போடு தோழிகளை பார்த்தாள்.

‘ஆம்’ அங்கு தனது உயர்ரக ஆர் எக்ஸ் 100 வகை வண்டியில் சாய்ந்து நின்றபடி பூஜாவையே விழுங்குவது போல் பார்த்துக் கொண்டிருந்தான் அர்ஜுன். அபி, “என்னடி இது? இங்க என்ன நடக்குது” என்று கேட்க மற்றவர்களும் அதே கேள்வியுடன்தான் அவர்கள் இருவரையும் பார்த்திருந்தனர். ஆனால் பூஜா இவர்கள் யாரையும் கவனிக்காமல் அர்ஜுனையே வைத்த விழி எடுக்காது பார்த்து கொண்டு இருக்க, அதை பார்த்த தோழிகள் அனைவரும் ஒரு சேர அவளை முறைத்து கொண்டு நின்றனர்.

அனைவரும் தன்னை முறைப்பது தெரிந்தாலும் அதைக் கண்டு கொள்ளாதவளாக அர்ஜுனை பார்த்து கையாட்டி அருகில் அழைக்க, அவனும் தன்னவளை பார்த்து விரிந்த சிரிப்புடன் அவர்கள் அருகில் சென்று, பூஜாவிடம் “படத்துக்கு டைமாச்சு கிளம்பலாமா” என்று கேட்க அனைவருமே அவளை வாய்பிளந்து பார்த்து “என்னது படத்துக்கு டைம் ஆச்சா” என்று கேட்க, அர்ஜுனும் “ஆமா மதியம் படத்துக்கு போலாம்னு சொன்னா, அதனாலதான் நான் முன்னாடியே வந்துட்டேன்” என்று கூற, மதுவோ தோழியை முறைத்து “அடிப்பாவி முன்னாடியே எல்லா முடிவும் எடுத்துட்டு தான் எங்ககிட்ட அப்படி நடிச்சியா, நான் கூட உண்மையாவே உனக்கு கிளாசுக்கு போக பிடிக்காமதான் சொல்றியோ நெனச்சுட்டமே, இப்போல்ல தெரியுது, நீ போட்ட கோடுக்கு நான் ரோடு போட்டு வச்சிருக்கேன்னு” என்று புலம்ப.
அபியும் தன் பங்குக்கு “உங்க போதைக்கு எங்களை ஊறுகா ஆக்கிட்டீங்களே” என்க, பூஜாவோ அப்பாவியாக முகத்தை வைத்து கொண்டவள் தோழிகளை பார்த்து “அது ஒன்னும் இல்லடி பழகி பார்த்தா தானே லவ் பண்றதா வேண்டாமானு முடிவெடுக்க முடியும் அதுக்கு தான்….” என்று இழுக்க அவள் காதை பிடித்து திருகிய சூர்யா “இந்த நடிப்பெல்லாம் எங்ககிட்ட வேணாம் ராசாத்தி, இவங்க பழகிப் பார்த்து லவ் பண்றதா வேண்டாமான்னு முடிவெடுப்பாங்களாம்,இத நாங்க நம்பனும், அர்ஜுன் மாதிரி ஒரு பையன் போனாலே இவன் என் ஆளு மாதிரியே இருக்கானுலனு சொல்லி சைட் அடிப்பா, அந்த அர்ஜுனே கிடைச்சதுக்கு அப்புறம் பழகி பார்த்து நீ லவ் பண்ண போற இத நாங்க நம்பனும்” என்று கேட்டாள்.

பூஜாவோ வலிக்காத காதை வேண்டுமென்றே வலித்த மாதிரி தேய்த்து கொண்டு பாவமாக பார்த்திருக்க பின் சூர்யாவே “ சரி சரி போய் தொல” என்று சொன்ன அடுத்த நிமிடம் அர்ஜுன் பூஜாவின் கையை பிடித்தவன் “சரி வா டைம் ஆச்சு” என்று இழுத்து செல்ல பார்க்க, அதற்குள் இருவரையும் தடுத்த அபி “ஹலோ நீங்க பாட்டுக்கு எங்க போறீங்க எங்களுக்கு கொடுக்குறத கொடுத்துட்டு கிளம்புங்க” என்று கூற, அர்ஜுனோ குழம்பி போனவனாக “ஏது கொடுக்கிறது கொடுக்கனுமா என்ன குடுக்கணும்” என்றான்.

அர்ஜுன் கேள்வியில் கடுப்பாகி அவர்கள் முன்னால் வந்து நின்ற ப்ரீத்தி “என்ன பாஸ் ஒன்னும் தெரியாத மாதிரி கேக்குறீங்க நீங்க பாட்டுக்கு உங்க ஆள் கூட படத்துக்கு போயிடுவீங்க எங்களுக்கு என்டர்டைன்மென்ட் வேணும்ல, அது மட்டும் இல்லாம இவ்ளோ பெரிய மால்ல சும்மா சுத்தி வந்தா நல்லாவா இருக்கும்,ஐஸ்கிரீம் சாப்பிட தோணும் அப்புறம் புட்கோர்ட் இருக்கு பிரியாணி சாப்பிட தோணும், பக்கத்துலயே கே.எப்.சி இருக்கு இப்படி சில பல செலவுகள் இருக்கு, நாங்க வாய மட்டும்தான் எடுத்துட்டு வந்தோம், அதுவும் உங்க ஆள நம்பி, இப்போ நீங்க பொறுப்பில்லாம அவளை கூட்டி போன என்ன அர்த்தம், இல்லை என்ன அர்த்தம்னு கேக்குறேன், இப்போ இவ்ளோ நேரம் உங்க கூட பேசுனதுக்கே நான் டயர்ட் ஆகிட்டேன் அதுக்கே நீங்க பாதம் பால் வாங்கி தரணும்” என்று கூறி, பின் “வள வளன்னு பேசாம சீக்கிரம் பணத்தை எடுத்து வச்சிட்டு கிளம்புங்க படம் போட்டுற போறான்” என்றாள் கிண்டலாக.

அர்ஜுன் பேந்த பேந்த விழித்தபடி பூஜாவை பார்க்க, அவளோ அவனது பேண்ட் பாக்கெட்டில் கையை விட்டாள், அவள் செயலில் பதறி போனவன்“அடியே என்னடி பண்ற” என்று கேட்டு துள்ளி குதித்து நகர, அதற்குள் அவனது பர்ஸை எடுத்திருந்தவள், அதிலிருந்த 2000 ரூபாய் நோட்டு சிலவற்றை எடுத்து தனது தோழிகளிடம் கொடுத்து “என்ஜாய் பண்ணுங்க” என்று கூற, தோழியை அணைத்து கொண்ட அபி “இது அல்லவா நட்பு ஒத்தையா கொடுக்காமல் கத்தையா குடுத்துட்டாளே” என்க, பூஜாவும் அவள் அணைப்பில் இருந்து விலகிய பின் தோளில் கை போட்டு “நண்பேண்டா”என்று சொல்ல மற்றவர்களும் ஓடி வந்து அவர்கள் அருகில் ஒருவர் தோள் மேல் ஒருவர் கை போட்டு நின்றவாறே மீண்டும் ஒரு முறை “நண்பேன்டா” என்று கத்தினர்.இது அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த அர்ஜுன் “காலியானது என் பர்ஸ்டா” என்று மனதில் நினைத்து தலையில் அடித்தபடியே பூஜாவை அழைத்துச் சென்றான்.


கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பர்களே.............

 

Attachments

Last edited by a moderator:

Sonythiru

Suthisha
அத்தியாயம் -14

அர்ஜுனும் பூஜாவும் அந்த மாலில் இருந்த சினிமா தியேட்டர்க்கு செல்ல மற்ற நால்வரும் ‘விண்டோ ஷாப்பிங்’ என்ற பெயரில் அந்த மால் முழுக்க சுற்றி வந்து கொண்டிருந்தனர்.அப்போது அங்கிருக்கும் புத்தக கடையை பார்த்த சூர்யா “ஹேய் அங்க பாருங்க புக் ஷாப் இருக்கு, ரொம்ப நாளா ஒரு புக் தேடிட்டு இருக்கேன் அங்க இருக்கானு போய் பாத்துட்டு வரலாம் வாங்கடி” என்று கூப்பிட, ப்ரீத்தியோ “எது படிக்கற பக்கமா” என்று அலற மதுவும் “இங்க பாருடி என்னை கெட்ட வார்த்தைல வேணாலும் ரெண்டு என்ன நாலு திட்டுக்கூட திட்டிக்க ஆனா புக் பக்கம் கூப்பிடாத நானே வீட்ல இருந்தா போர் அடிக்கும்தான் காலேஜ்க்கு வரேன் இவ என்னடானா சுத்த வந்த இடத்துல கூட படிக்க கூப்பிடறா” என்று சொல்லி வர முடியாது என்றுவிட்டாள். .

சூர்யாவின் பாவமான முகத்தை பார்த்த அபி, “சரி வா நாம போய் வாங்கிட்டு வரலாம்” என்று அழைக்க அவளை அதிர்ச்சியாக பார்த்த சூர்யா “என்ன……. இவங்க ரெண்டு பேரையும் தனியா விடறதா,ரெண்டும் பச்ச மண்ணுங்க டா…...இவங்கள தனியா அனுப்பறதும் நாமே போய் பிரச்சனைய விலை கொடுத்து வாங்குவதும் ஒன்னு, அதனால நான் மட்டும் போய் கூட புக் வாங்கிட்டு வரேன்.நீ இவங்களோட இரு தனியா விட்டறாத” என்று எச்சரித்துவிட்டு புக் ஷாப்பை நோக்கி சென்றாள்.

அபியும் சூர்யா சொல்வது உண்மைதான் என்பதை புரிந்து கொண்டவளாக “சரி ஐந்தாவது ஃப்ளோரில் இருக்கும் புட் கோர்ட்டில் நாங்க வெய்ட் பன்றோம் நீ புக் வாங்கிட்டு அங்க வந்துடு என்றவள் மதுவுடனும், ப்ரீத்தியுடனும் லிப்ட் இருக்கும் பக்கம் சென்றாள்.

சூர்யாவும் அவளுக்கு தலையாட்டிவிட்டு புக் ஷாப் சென்று வெகுநாட்களாக வாங்க நினைத்த புக்கை தேடி பிடித்து வாங்கியவள், அடுத்ததாக தோழிகள் காத்திருப்பதாக சொன்ன புட் கோர்ட்டிற்கு செல்ல லிப்ட் அருகில் வந்து காத்துக் கொண்டிருந்தாள்.

சற்று நேரத்திற்கு பின்பு லிப்டு அங்கு வந்து திறந்தது. ஆனால் உள்ளே யாரும் இல்லை. “ஹய்யயோ லிப்ட்ல யாருமே இல்லையே தனியா இதுல போகணுமா” என்று யோசனையோடு விழித்துக் கொண்டு நின்றிருந்தவளை, அவள் சுதாரித்து என்ன ஏது என்று உணரும் முன்பே லிப்டின் உள்ளே தள்ளி,சிறை செய்வது போல் இரு பக்கமும் கை வைத்து நெருங்கி நின்றான் திருனேஷ்.

கனநேரத்தில் நடந்த இந்த அதிரடி செயலில் பயந்த சூர்யா “யார் சார் நீங்க எதுக்கு என்னை உள்ள இழுத்துட்டு வந்திங்க” என்று கேட்டு கொண்டே நிமிர்ந்து அவன் முகத்தை பார்த்தவளின் முகம் யோசனையை தத்தெடுத்தது, “இவனை எங்கயோ பார்த்த மாதிரி இருக்கே எங்க” என்று, பின் நினைவு வந்தவளாக “இவன் அன்னைக்கு காலேஜ்ல பார்த்தோமே அவன்தானேஆனா எதுக்கு இப்போ நம்மல உள்ள தள்ளுனான்” என்று மனதில் நினைக்க, அவளையே பார்த்து கொண்டு இருந்தவன், அவள் மனதை படித்தவனாக சிறு சிரிப்புடன் “என்ன நான் யாருனு கண்டுபிச்சிட்டியா” என்று கேட்டு, பின் தீவிரமான குரலில்.”நீ என்னை காலேஜ்ல பார்த்ததுதான் நியாபகம் வருதா, இல்ல அதுக்கு முன்னாடியே உனக்கு என்னை தெரியும், எனக்கும் உன்னை நல்லாவே தெரியும் என்று சொல்ல அவளோ குழப்பத்துடன் அவனை பார்த்தாள்.

அவளின் குழப்பாமான பார்வையிலேயே மனதை அறிந்தவனாக “என்ன நான் யாருனு இன்னும் நியாபகம் வரலையா நல்லா யோசி” என்று சொன்னான்.

என்ன யோசித்தும் அவன் யார் என்று அவளுக்கு சுத்தமாக தெரியாமல் போக ‘இல்லை’ என்று தலையாட்டிவள்,”நீ முதல்ல தள்ளி நில்லு” என்றாள் கோபமாக.

அவனோ “முடியாது இதுக்கு மேல என்னால உன்னைவிட்டு தள்ளி இருக்க முடியாது.இவ்வளவு நாள் உனக்காகத்தான் தள்ளி இருந்தேன், இப்பவும் உனக்காகதான் தள்ளி இருக்க முடியாம நெருங்கி வந்தேன்” என்றவன் அவளை மேலும் நெருங்கி நின்றான்.

அவள் திகைத்து விழித்து கொண்டிருக்க அவளையே பார்த்தவன் “முதல் காதலையும் முதல் புரொபசலையும் யாரும் மறக்க மாட்டாங்க நீயும் மறந்துருக்க மாட்டேன்னு நினைக்கறேன். நீ மறக்க கூடாதுன்னுதான் அப்படி பண்ணுனேன். என்ன இப்பவாவது நான் யாருனு தெரியுதா.எஸ் ஸ்கூல் படிக்கும்போதே உனக்கு மஞ்ச கயிறு கட்டி பொண்டாட்டியாக்கிக்கவானு கேட்டது நான்தான்” என்று சொல்ல இவளோ அதிர்ச்சியில் விழி விரித்து நின்றாள்.

மனதிலோ “ஸ்கூல்ல காதலை சொன்னவருக்கு என்ன ஆச்சோனு தெரியாம பயந்துட்டு இருந்தோம், தேங்க் காட்” என்றவள், இவ்வளவு நாள் அவளே அறியாமல் மனதை அழுத்திய பாரம் விலகியதை உணர்ந்தாள்.

சூர்யாவின் விரிந்த விழிகளை கண்டவன் சிறு சிரிப்புடன் தன் நெற்றியால் அவள் நெற்றியை முட்டி “பார்த்து பார்த்து மெதுவா கண்ண விரி, இல்லனா கரு விழி தனியா கலண்டு விழுந்தர போகுது” என்று கிண்டல் அடித்து “உன்னை கல்யாணம் பண்ணிக்க கேட்ட அன்னைல இருந்து இப்போ இந்த நிமிஷம் வரைக்கும் நான் உன்னையேதான் நினைச்சிட்டு இருக்கேன். ஆனா நீ நான் உன் பின்னாடி வர்றது கூட கவனிக்காம வேற ஒருத்தன பார்த்துட்டு இருக்க” என்றான் கோபத்துடன்.

அதற்குள் ஓரளவு தன்னை சமாளித்து கொண்ட சூர்யா “நீங்க நினைச்சுட்டு இருந்தா, அதுக்கு நான் என்ன பண்ண முடியும் முதல்ல என்னைவிட்டு தள்ளி நில்லுங்க” என்று தடுமாற்றத்துடன் சொல்ல, அதை எல்லாம் காதில் வாங்காதவன் “முடியாது இனி நானும் தள்ளி போக மாட்டேன்.உன்னையும் என்கிட்டே இருந்து தள்ளி போக விட மாட்டேன். உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா என் காது படவே இன்னொரு பையன பத்தி பேசுவ”என்று முறைத்து கொண்டு கேட்க,அதில் கடுப்பானவள்“நான் யார வேணா சைட் அடிப்பேன், அழகா இருக்கான்னு சொல்லுவேன் அதை கேட்க நீ யார்” என்று கத்தினாள், உடனே சுவற்றில் இருந்த ஒருகையை எடுத்து அவளின் கழுத்தை பற்றியவன் “நீ என்னோட பொண்டாட்டி, லவ்வரும் இல்லை பிரண்டும் இல்லை, ஸ்கூல் படிக்கற வயசுலயே கல்யாணம் பண்ணிக்கதானே கேட்டேன், அந்த அறியாத வயசுலயும் என்னை காதலிக்கிறியான்னு நான் கேட்கலையே, கல்யாணம் பண்ணிக்கலாமான்னுதான் கேட்டேன். அப்போல இருந்தே நீ மட்டும்தான் என்னோட பொண்டாட்டின்னு நான் வாழ்ந்துட்டு இருக்கேன்.என் பொண்டாட்டி என்னை தவிர வேற ஒருத்தன பாக்கறதையும், அவன் அழகைப்பற்றி விளையாட்டா பேசுறதையும் என்னால ஏத்துக்க முடியாது.நான் உன்னை யாருக்கும், யாருக்காகவும் விட்டு குடுக்கமாட்டேன், உனக்காகவும் கூட என்று அழுத்தமாக சொல்ல, இவளோ கோபமாக“நீ சொன்னா நான் கேட்கணுமா முடியாது, நான் அப்படிதான் சைட் அடிப்பேன் முதல்ல தள்ளி போடா” என்று முரண்டு பிடித்து அவனை விலக்க முயல அவள் வார்த்தையில் கோபம் கொண்டவன் கழுத்தை பிடித்த கரங்களால் அப்படியே அவள் பிடரி முடியை பற்றி அசைய விடாமல் செய்து,மற்றொரு கரத்தால் இடையை சுற்றி வளைத்தவன் அவளின் இதழை அழுத்தமாக சிறை செய்தான். அவளோ இவனது திடீர் செய்கையில் உறைந்து போய் நின்றிருந்தாள்.

வெகுநேரம் வரை தொடர்ந்த முத்தத்தில் அவளே அறியாமல் அவனிடம் கிரங்கி தான் போனாள் அந்த பேதை, அவள் உடல் மொழியில் அதை புரிந்து கொண்டவன், தாங்கள் இருக்கும் சூழ்நிலை உணர்ந்து பிரிய மனமே இல்லாமல் பிரிந்த திருனேஷ் சிறு சிரிப்புடன் அவளிடமிருந்து விலகி, “இன்னைக்கு சொல்றேன் நல்லா நினைவு வச்சுக்கோ விளையாட்டுக்கு கூட இனிமே நீ வேற ஒருத்தன பத்தி பேசக்கூடாது. அன்னைக்கும் உன்னுடைய பிரண்ட டைவர்ட் பண்ணதான் பேசினனு எனக்குத் தெரியும்.ஆனா விளையாட்டுக்கு கூட நீ வேற ஒருத்தன பாக்கறது என்னால ஏத்துக்க முடில என்று சொல்ல அவளோ அப்போதும் அதிர்ச்சியில் இருந்து மீளாதவளாக நின்றிருந்தாள்.

அவள் அதிர்ந்து நிற்பதை பார்த்தவன் குறும்பு சிரிப்புடன்,”இதுக்கே இப்படி நின்னா என்னடி செல்லம்பண்றது, இன்னும் எவளோ இருக்கே,சரி அதை எல்லாம் விடு இனி நீ வேற ஒருத்தன பார்த்தாலும், அவன்கிட்ட பேசுனாலும் உனக்கு இதே பனிஷ்மென்ட்தான் கிடைக்கும்.இந்த பனிஷ்மென்ட் எனக்கு ரொம்ப புடிச்சுருக்கு, உனக்கும் பிடிச்சிருந்தா சைட் அடி” என்று தீவிரமான குரலில் சொல்லவும் அவள் இறங்க வேண்டிய தளம் வரவும் சரியாக இருந்தது. அவளையும் லிப்டின் வெளியில் அழைத்து வந்தவன் “பாய் பொண்டாட்டி” என்று இன்னும் திகைப்பு மாறாமல் நின்றவளின் கன்னத்தை தட்டிவிட்டு சென்றுவிட்டான்.

அவன் சென்று எவ்வளவு நேரம் அப்படியே நின்றாளோ,அவளுடைய போன் அடிக்கவும் தன்னிலை அடைந்தவள், அப்போதுதான் நினைவு வந்தவளாக “இவன் இப்போ என்ன பண்ணிட்டு போனான்,எ…..எ….. என்னை கிஸ் பண்ணிட்டுதானே போனான் ராஸ்கல், எவ்ளோ தைரியம் இருந்தா இப்படி பண்ணிருப்பான்.நீ சொன்னா நான் கேட்கணுமா முடியாது போடா, நான் அசந்த நேரத்தில் என்ன வேலை பண்ணுன இனி என் முன்னாடி வா, இந்த சூர்யா யாருனு உனக்கு காட்டுறேன்” என்றவள் தோழிகள் இருக்கும் புட் கோர்ட்டிற்கு சென்றாள். அதுவரை அங்கிருந்த தூணின் பின் புறம் மறைந்து அவளையே பார்த்து கொண்டிருந்த திருனேஷ்,சிரிப்புடன் அவள் பின்னோடு சென்றான்.

தன் தோழிகளை புட் கோர்ட்டில் தேடி கண்டு பிடித்த சூர்யா அவர்கள் அருகில் சென்று அமைதியாக அமர்ந்தாள். வெளியில் பார்க்க அமைதியாக இருந்தாலும் மனதில் திருனேஷை வறுத்து எடுத்து கொண்டு இருந்தாள். அவளின் முகம் ஒரு மாதிரி இருப்பதை பார்த்த தோழிகள் என்னவென்று விசாரிக்க இவளோ என்ன சொல்வது, நடந்ததை எப்படி சொல்வது என்று விழித்தவள் தலைவலி என்று சொல்லி சமாளிக்க.

அபியோ, சரி கொஞ்சம் நேரம் பொறுத்துக்கோ பூஜா வந்தவுடனே கிளம்பிடலாம் என்றாள்.அவளும் அப்போதைக்கு அவளிடம் தலை ஆட்டி வைத்தாலும், ஓரளவு அந்த நிகழ்வில் இருந்து வெளி வர முயன்று கொண்டிருந்தாள்.

மூவரும் சள சளவென்று பேசி கொண்டு இருந்தனர்.அப்போது ப்ரீத்தி “ஹேய் பசிக்கற மாதிரி இருக்கு ஏதாவது சாப்பிடலாம்” என்று சொல்ல மதுவும் ப்ரீத்தி சொல்வதற்கு தலையாட்டினாள். அதே நேரம் படம் முடிந்து பூஜாவும் அவர்களுடன் வந்து சேர்ந்து கொண்டாள்.

அபி, “என்னடி இவ்ளோ சீக்கிரம் வந்துட்ட”,

பூஜா, பிராஜெக்ட் சம்மந்தமா ஒரு இடத்துக்கு போகணும்னு அந்த கோகுல் கரடி போன் பண்ணுனது இவரும் போகணும்னு சொன்னாரு அதான் வந்துட்டோம்.

பூஜாவை சந்தேகமாக பார்த்த மது “இல்லையே படிப்புதான் முக்கியம் நீ போ அப்படினு உடனே பொறுப்பா போக சொல்ற ஆள் நீ இல்லையே” என்க, அவளை பார்த்து அசடு வழிந்த பூஜா “டென் மினிட்ஸ் டா,போயிட்டு வந்ததுக்கு அப்புறம் இங்கயே வெயிட்பண்ணு, லாங் டிரைவ் போகலாம்னு சொன்னாரு அதான் நானும் ஓகே சொல்லிட்டேன்” என்றாள். உடனே ப்ரீத்தி “அதானே பார்த்தேன்” என்று கிண்டல் அடிக்க, சூர்யா மட்டும் அமைதியாக இருப்பதை பார்த்த பூஜா “இவ ஏன் இப்படி இருக்கா, இந்த நேரத்துக்கு எனக்கு ஒரு பாடமே எடுத்துருப்பாளே” என்று சொல்ல,
ப்ரீத்தியும் “ஆமா புக் வாங்க போயிட்டு வந்ததுல இருந்து இவ பேய் அடிச்ச மாதிரிதான் உட்காந்து இருக்கா” என்று சொல்ல, மதுவோ அதுதான் முக்கியம் என்பது போல் “மால்ல கூட பேய் இருக்குமா என்ன” என்று கேட்டாள்.

பின் அபிதான் “அவளுக்கு தலைவலி அதான் அப்படி இருக்கா, சாப்பிட்டு ரிலாக்ஸ் ஆனாலே அவளுக்கு தலைவலி கொஞ்சம் பரவால்லையா இருக்கும், யாருக்கு என்ன வேணும், ஆர்டர் பண்ணுங்க”சீக்கிரம் சாப்பிட்டு கிளம்பிடலாம்” என்று சொல்ல எல்லோரும் ஒரு ஒரு ஐட்டம் ஆர்டர் செய்து சேர்ந்து சாப்பிடலாம் என்று முடிவெடுத்து அதன்படி ஆர்டர் செய்துவிட்டு காத்திருந்தனர்.

காத்திருந்த நேரத்தில் தன் பார்வையை சுழலவிட்ட ப்ரீத்தியின் கண்ணில் விழுந்தான் திருனேஷ்.அவனும் சூர்யாவைதான் பார்த்து கொண்டிருந்ததால் ப்ரீத்தி தன்னை கண்டு கொண்டாள் என்பதை அறிந்து சைகையாலேயே “திரும்பு இல்ல கொட்டிடுவேன்” என்று சொல்ல, இவளோ “ஹய்யோ சீனியர் வந்து கொட்டு வாங்கிட்டு போனு சொல்றாரு போலயே பேசாம அந்த பக்கம் பாக்காமலேயே இருந்துருக்கலாம், இப்பயும் ஒன்னும் கெட்டு போகல, பாக்காத மாதிரி திரும்பிக்கலாம்” என்று வேறு பக்கம் திரும்பியவள் ஓர கண்ணால் திருனேஷ் இருக்கும் பக்கம் பார்க்க, இவளின் சேட்டையை அறிந்தவன்,”இந்த பக்கம் பார்த்த எல்லோரும் பார்க்கற மாதிரி இந்த மால்லையே கொட்டுவேன்” என்று சைகை செய்ய, இதையும் தவறாக புரிந்து கொண்ட ப்ரீத்தி “ஹையோ வந்து கொட்டு வாங்கிட்டு போ இல்லைனா இங்க வந்து எல்லோரும் பார்க்க கொட்டுவேன்னு சொல்றாரே, ஏன்டி ப்ரீத்தி இது உனக்கு தேவையா பேசாம பயந்தவனு மதுக்கிட்ட ஒத்துட்டு இருந்திருக்கலாம், தைரியம் ராகிங் அது இதுனு சொல்லி இப்போ வினையை விலை கொடுத்து வாங்குனவன் மாதிரி ஆகிடுச்சு உன் நிலமை என்று தனக்குள் புலம்பியவள் “சரி யாரும் பார்க்கறதுக்கு முன்னாடி போய் கொட்டு வாங்கிட்டு வந்துரலாம்” என்று முடிவெடுத்தவள் தன் தோழிகளிடம் “ஒரு நிமிஷம் இருங்க இதோ வரேன்” என்றவள் திருனேஷ் அமர்ந்திருந்த மேஜையை நோக்கி சென்றாள்.

ப்ரீத்தி தன்னிடம் வருவதை பார்த்தவன், “இந்த திருஷ்டிபொம்மை எதுக்கு இங்க வருது”,என்று யோசிக்கும்போதே வேகமாக அவன் அருகில் சென்ற ப்ரீத்தி “இங்க பாருங்க சீனியர் ஒரு நாளைக்கு ஒரு கொட்டுங்கறதுதான் பேச்சு, இன்னிய கோட்டாக்கு காலேஜ்ஜிலேயே கொட்டிட்டிங்கள்ல, அப்புறம் எதுக்கு இப்பவும் கொட்ட வர சொல்லறீங்க, இதுவே குட்டி தலை, வலி தாங்காது சீனியர் கொஞ்சம் பார்த்து பண்ணுங்க, இன்னைக்குத்தான் முதல் நாள்ங்கறதால போனா போகுதுனு ரெண்டாவது கொட்டுக்கு ஒத்துக்கறேன் ம்…. சீக்கிரம் கொட்டுங்க எசமான் கொட்டுங்க என்னோட பிரண்ட்ஸ் பார்க்கறதுக்குள்ள கொட்டுங்க” என்று சொல்ல, அவனோ “ஸ்கூல்ல இருந்து பார்த்தும், இந்த லூச பத்தி தெரிஞ்சும் சைகைல பேசுனேன் பாரு எனக்கு இது தேவைதான்” என்று தலையில் அடித்து கொண்டவன் திரும்ப அங்கு இவர்களைத்தான் கண்களால் எரித்து கொண்டு இருந்தாள் சூர்யா.

தன்னவளின் பார்வையிலேயே அவளின் கோபத்தை அறிந்த திரு “இன்னைக்கு நான் கொட்ட மாட்டேன் ஆனா உனக்கு கொட்டு கன்பார்ம்” என்றவன் நமுட்டு சிரிப்புடன் அங்கிருந்து சென்றுவிட, ப்ரீத்தியோ அவன் சொல்வது புரியாமல் திருதிருவென விழித்துவிட்டு பின் “ஹப்பாடா கொட்டு இல்லாம தப்பிச்சாச்சு” என்ற குதூகலத்துடன் தோழிகளிடம் சென்றாள்.

ப்ரீத்தியையே பார்த்து கொண்டிருந்த சூர்யா அவள் அருகில் வந்தவுடன் “யாருடி அவன்” என்று கேட்க, அதுவரை தங்களுக்குள் சுவாரசியமாக பேசிக்கொண்டிருந்த மற்ற மூவரும் கேள்வியாக ப்ரீத்தியை பார்க்க அவளோ பேந்த பேந்த விழித்தவள் ஒன்றும் சொல்லாமல் இருக்க, சூர்யா மீண்டும் அழுத்தி கேட்டாள். வழக்கம் போல் பயந்த ப்ரீத்தி, காலேஜ்ஜில் நடந்தது, இப்போது நடந்தது என அனைத்தையும் தோழிகளிடம் ஒப்பித்தாள்.

ப்ரீத்தி சொல்வதை கேட்ட சூர்யா மனதிற்குள் “அந்த கடங்காரன் இங்க வர நீதான் காரணமா, அவன்கிட்ட டீடெயில் சொல்றியா…. டீடெயில், இப்போ பாரு என்ன பண்றேன்னு” என்று மனதில் கருவியவள். வெளியே “ஏன்டி யார் யாரோ உன்னை கொட்டுறாங்க கூடவே இத்தனை வருஷம் இருக்கேன், எனக்கு அந்த கொட்டுற உரிமை கிடையாதா”என்று கேட்க மற்ற மூவரும் கூட ஒரே நேரத்தில் “அதானே” என்று கோரஸ் பாடினார்.

தோழிகளுக்கு என்ன பதில் சொல்வது என்று ப்ரீத்தி யோசித்து கொண்டு இருக்கும்போதே அவள் அருகில் வந்த மது “நான்தான் பர்ஸ்ட்” என்று சொல்லி முதல் கொட்டு கொட்ட அடுத்தடுத்து மற்றவர்களும் கொட்ட சூர்யாவோ நங்கென்று டபுள் கொட்டு கொட்டிவிட்டு, நக்கல் சிரிப்புடன் “சரி வாங்க சாப்பிடலாம்” என்று அமர்ந்து கொள்ள மற்றவர்களும் சிரிப்புடனேயே ப்ரீத்தியை பார்த்தனர்.அவளோ பிரியாணியை பார்த்த உடன் வலி மறந்தவளாக “கொட்டியாச்சா வாங்க சாப்பிடலாம் வாங்குனது எல்லாம் அப்படியே ஆறுது” என்றவள் சாப்பிட ஆரம்பித்தாள்.

“இவ என்ன டிசைன்டி” என்ற கேள்வியுடன் மற்றவர்களும் சாப்பிட்ட ஆரம்பித்தனர்.அப்போது அபி “சீக்கிரம் சாப்பிட்டு வீட்டுக்கே கிளம்பலாம்” என்று சொல்ல, அலறிய மது “ஹேய் வேண்டாம்டி வீட்டுக்கு இப்போ போக வேண்டாம், காலேஜ் முடிய இன்னும் டைம் இருக்கு முன்னாடியே டிரைவர்க்கு போன் பண்ணி வர சொன்னா வீட்ல பெரிய விசாரணை கமிஷனே வச்சுடுவாங்கடி”என்க.

சற்று நேரம் யோசித்த அபி,”ஓகே அப்போ இப்படி பண்ணலாம் சூர்யா வேற தலை வலிக்குது சொல்றா கொஞ்ச நேரம் வெயிட் பண்ணி அர்ஜுன் வந்தவுடன் பூஜாவை விட்டுட்டு நாம திரும்பவும் காலேஜ்கே போகலாம்,அங்க நம்ம பேவரட்டான மரத்தடில கொஞ்ச நேரம் உட்கார்ந்து இருந்துட்டு அப்புறம் எப்போவும் போல காலேஜ் முடிஞ்சதும் கிளம்பலாம்” என்று சொல்ல மற்றவர்களும் அதற்கு ஒத்துக்கொண்டனர்.

சூர்யா ஏனோ இந்த எந்த பேச்சிலும் கலந்து கொள்ளாமல் மனதில் திருனேஷ் மேல் பயங்கர கோபத்தில் கொதித்து கொண்டு இருந்தாள். இப்போது யாராவது மாட்ட மாட்டார்களா அவர்களை வெளுத்து வாங்க மாட்டோமா என்ற கடுப்பில் அமர்ந்திருக்க யார் மீது அவள் கோபம் பாய போகிறதோ பொறுத்திருந்து பார்ப்போம்.

கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பர்களே..........


 
Last edited by a moderator:

Sonythiru

Suthisha
அத்தியாயம்-15

தோழிகள் அனைவரும் சாப்பிட்டுவிட்டு அர்ஜுனிற்காக அங்கேயே காத்திருந்தனர். அப்போது அபி “எவ்வளவு நேரம் இங்கேயே இருக்கறது அர்ஜுன் போய் ஒன் ஹவர் ஆயிடுச்சு வாங்க அப்படியே ஷாப்பிங் பண்ணிட்டே கிளம்பலாம்”.

மது,”என்ன ஷாப்பிங்கா டப்பு லேதுமா லேது” என்க,அவள் தலையில் தட்டிய அபி “ நான் சொன்னது விண்டோ ஷாப்பிங் டி,வா போகலாம்” என்றவள் முன்னால் நடக்க ஆரம்பிக்க,மற்றவர்களும் அவளை தொடர்ந்து சென்றனர்.
ஒவ்வொரு ஷாப்பாக பார்த்து கொண்டு சென்ற பூஜாவின் கவனத்தை ஈர்த்தது , கிப்ட் ஷாப்பில் மண்ணில் செய்தது போல் கலை நயமாக செம்மண் நிறத்தில் இருந்த மணியை பார்த்தவள்,”இதை அர்ஜுனுக்கு பரிசளிக்கலாம், இது சத்தம் வரும்போது எல்லாம் என்னோட நியாபகம் வரும்” என்று நினைத்தவள் அதைப் பார்த்தபடி நின்றுவிட்டாள்.

மற்ற நால்வரும் அவள் நின்றது தெரியாமல் முன்னே சென்று கொண்டிருந்தனர்.பூஜா மணியை வாங்குவோமா, வேண்டாமா என்ற யோசனையில் தோழிகளையும் அந்த ஷாப்பையும் மாறி மாறி பார்த்து கொண்டு இருந்தாள். அப்பொழுது ஒரு வளைவில் அபி திரும்பும் நேரம் வேகமாக வந்த ஒரு இளைஞன் அவளை இடித்துவிட்டு நிற்காமல் சென்றுவிட்டான்.

நொடி நேரத்தில் நடந்த இந்த நிகழ்வில் அனைவரும் அதிர்ந்து நின்றிருக்க, கீழே விழாமல் முதலில் தன்னை சமாளித்து கொண்ட அபி யார் தன்னை இடித்தது என்று திரும்பி பார்க்க அங்கு நல்ல உயரமாகவும் உயரத்திற்கு ஏற்ற உடல் கட்டுடனும் ஒருவன் சென்று கொண்டிருந்தான். அவன் தான் தன்னை இடித்திருக்க வேண்டும் என்று முடிவெடுத்து கோபமாக அவன் முன்னால் சென்று “என்னடா ஒரு அழகான பொண்ண பார்த்தா உடனே இடிக்கணுமா, உனக்கு கண்ணு தெரியாது நீ பாட்டுக்கு இடிச்சுட்டு போற, யாரு என்ன கேக்க போறாங்கங்கற தைரியமா போலீஸ்ல புடிச்சுக் கொடுத்திடுவேன் ஜாக்கிரதை” என்று திட்டி கொண்டு இருக்கும்போதே, அவர்கள் அருகில் வந்த சூர்யாவும் தனக்குள் இருக்கும் கோபத்தில் அவனை திட்ட ஆரம்பித்தாள். “இதுக்காகவே மாலுக்கு வருவாங்க போல, இவனுக மாறி ஆளுங்கள எல்லாம் சும்மா விட கூடாது” என்று திட்டி கொண்டிருக்க அந்த இளைஞனின் முகம் கோபத்தில் சிவந்து கொண்டிருந்தது.

அவனின் கோபத்தை கவனித்த அபி “தப்பு பண்ணிட்டு உனக்கு என்னடா கோபம் பிளடி ராஸ்கல்” என்று மேலும் திட்ட போக, அதற்குள் அவள் அருகில் ஓடி வந்த பூஜா, அபி கத்துவதை தடுக்கும் விதமாக அவளின் கையை பிடித்து “என்னடி இது இங்க என்ன நடக்குது” என்றாள்.

அபியோ கோபம் குறையாதவளாக “அந்த ராஸ்கல் என்னை இடிச்சதும் இல்லாம எப்படி மொரச்சுட்டு இருக்கான் பாருடி.இவனை எல்லாம் சும்மா விடக்கூடாது” என்று அவள் சொல்லி கொண்டு இருக்கும்போதே, அவன் அபியை முறைத்து “இடியட்” என்று திட்டிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டான்.

அபி சொல்வதை கேட்டு தன் தலையில் அடித்துக்கொண்ட பூஜா “லூசு உன்ன இடிச்சது அவரு இல்ல, வேற ஒருத்தன் அவன் உன்ன இடிச்சுட்டு வேகமா போயிட்டான். நீ தப்பான ஆள திட்டிட்டு இருக்க” என்று கூற, அபியோ “இல்லடி இவன்தான் இந்த பக்கமா வந்தான் அப்போ கண்டிப்பா இவனாதான் இருக்கும்” என்றாள்.

அபி பேச்சில் கடுப்பான பூஜா “லூசு தூரத்தில் இருந்து நான் பார்த்து கொண்டுதான் இருந்தேன். எனக்கு நல்லாவே தெரியும் உன்னை இடிச்சது அவரு கிடையாது. இன்னொன்னையும் தெரிஞ்சுக்கோ, இப்போ திட்டிட்டு இருந்தியே அவரு எங்க அப்பாவோட பிரண்ட் பையன். எனக்கு இவர முன்னாடியே தெரியும், ரொம்ப நல்லவரு,இவர போய் திட்டிட்டியேடி” என்றாள்.

பூஜா சொல்வதை கேட்டு அனைவரும் அதிர்ந்து நிற்க. அபியின் அருகில் வந்த ப்ரீத்தி “ஆமா நானும் பார்த்தேன் அவரு உன்ன இடிக்கல உன்ன இடிச்சவன் அதோ அந்த ஷாப்க்குள்ள போய்ட்டான்” என்று சொல்ல அவளை நால்வரும் முறைத்தனர்.

சூர்யா,“லூசு அவர திட்டுறதுக்கு முன்னாடியே இதை சொல்றத்துக்கு என்ன.ஹையோ நான் வேற இவர திட்டிட்டேனே பெருமாளே பெருமாளே என்ன மன்னிச்சுடு ” என்று புலம்ப அவள் காதருகில் குனிந்த ப்ரீத்தி “அவரை அதிகமா திட்டுன மெயின் அக்யூஸ்ட்டே அமைதியா அங்க நிக்குது. கொஞ்சமா மசாலா தூவுன நீ ஏன் இவளோ பில்டப் குடுக்கற.சரி விடு, நாளைக்கு நாலு நல்லவங்களுக்கு பிரியாணி வாங்கி குடுத்து அந்த பாவத்தை போக்கிக்கோ” என்றாள் சிரிக்காமல். அவளை முறைத்த சூர்யா “சண்டைல கூட மசாலானு திங்கற ஐட்டத்த சேக்குற பாரு அங்க நிக்குறடி நீ” என்றவள் “அந்த நாலு பேரு யாரு”என்று கேட்டாள், அவளை மிதப்பாக பார்த்த ப்ரீத்தி “வேற யாரு நாங்க நாலு பேரும்தான் என்றாள். அதில் கடுப்பான சூர்யா ஓர கண்ணால் அபியை பார்த்தவரே நமுட்டு சிரிப்புடன் “நீதான் தைரியமான ஆள் ஆச்சே எங்க என்கிட்ட சொன்னதை அப்படியே சத்தமா சொல்லு பாக்கலாம்” என்று சொல்ல ப்ரீத்தியோ திருத்திருவென விழித்தவள் “ஏன் டி உனக்கு இந்த கொலை வெறி இன்னைய கோட்டாக்கு நான் வாங்குன கொட்டு போதும் இதுக்கு மேல மண்டை தாங்காது” என்று தலையில் கைவைத்து சொல்ல, அவளை சிரிப்புடன் பார்த்தவள் “மண்ட பத்திரம்” என்றாள்.

உடனே சூர்யாவை முறைத்த ப்ரீத்தி நகர்ந்து நின்று கொண்டு “நாளைக்கும் ஒரு பிரியாணிக்கு ஆசைப்பட்டா பயபுள்ள நம்மள இல்ல பிரியாணி போட பாக்குது சிறுத்தைத் சிக்கும் சில் வண்டு சிக்காதுன்னு இவங்களுக்கு எல்லாம் தெரியல”என்று மனதில் நினைத்துகொண்டாள்.

இவர்கள் இங்கு பேசிக்கொண்டு இருக்கும்போதே பூஜாவிடம் அபி “நீ நிஜமாத்தான் சொல்லுறியாடி” என்று கேட்டாள். பூஜாவும் “சத்தியமா சொல்றேன் உன்னை இடிச்சது அவரும் கிடையாது அவர் அந்த மாதிரி ஆளும் கிடையாது இப்படி பண்ணிட்டியேடி.பப்ளிக் பிளேஸ்ல இப்படிதான் அவர திட்டுவியா, கொஞ்சம் யோசிச்சு பாரு தப்பே பண்ணாம இவ்ளோ பேர் முன்னாடி நீ பேசுனது அவருக்கு எவ்ளோ அசிங்கமா இருக்கும். இதே வேற யாரவது இருந்திருந்தா நீங்க பேசுன பேச்சுக்கு என்ன நடந்திருக்குமோ ஏதோ அவருங்கரதால அமைதியா போய்ட்டாரு. ஏன்டி இப்படி பண்ணுனீங்க” என்று கேட்டாள்.

மது, ஆமா பூஜா நல்லா சொல்லுடி ஒரு சூப்பரான ஆளு இடிச்சத நினைச்சு சந்தோஷபடாம திட்டுறாளுங்ளேன்னு எனக்கு கவலையா இருந்துச்சு தெரியுமா.அது மட்டும் இல்லாம சைக்கிள் கேப்புல இவளை இவளே அழகான பொண்ணுன்னு வேற சொல்லிக்கறா இந்த கொடுமைய நான் எங்க போய் சொல்ல.

அபி, இல்லடி நான் பாக்கும்போது அவருதான் அந்த பக்கம் போனாரு அதான் அவருனு நெனச்சு திட்டிட்டேன். “ச்ச........பாக்க அமுல் பேபி மாதிரி இருக்கும்போதே நினைச்சேன் இந்த வில்லத்தனமான வேலைய செஞ்சது இந்த மூஞ்சா இருக்காதுன்னு இருந்தாலும் முகத்தை பார்த்து எதுவும் முடிவு பண்ணக்கூடாதுனு திட்டிட்டேன்”என்று தலையில் கையை வைத்து நின்றவள் வருத்தமான குரலில் “நான் வேணா போய் மன்னிப்பு கேட்டுட்டு வரட்டுமா இப்போ ரொம்ப கில்ட்டியா இருக்கு, அவரு வேற போய்ட்டாரு. நீங்க எல்லாரும் இங்கயே வைட் பண்ணுங்கடி. நான் அவரை தேடி கண்டுபிடிச்சு மன்னிப்பு கேட்கறேன். அப்போதான் எனக்கு நிம்மதியா இருக்கும்” என்றாள்.

பூஜா “அதெல்லாம் எதுவும் வேணாம் இந்த இடத்துல வேற ஏதாவது பிரச்சனை வர்றதுக்கு முன்னாடி வாங்க இங்கிருந்து கிளம்பலாம்” என்றாள்.

அபி,சூர்யா இருவரும் “தப்பே செய்யாதவரை திட்டிட்டமே” என்று புலம்பி கொண்டு வர, அப்போது மது “ஆமா டி தேவை இல்லாம திட்டியிருக்கவே கூடாது.அதுவும் தப்பு செய்யாதவரை திட்டி இருக்கவே கூடாது. நீங்க திட்டி இப்போ வருத்தப்பட்டுனு எல்லோருக்கும் மைண்ட் அப்செட் ஆகிடுச்சு, அதனால எல்லோரும் ஐஸ் கிரீம் சாப்பிட்டு மைண்ட கூல் பண்ணிக்கலாமா” என்று கேட்க. அவளை முறைத்த பூஜா “இது இப்ப ரொம்ப முக்கியமா” என்று கேட்டாள். ப்ரீத்தியும் மதுவுடன் சேர்ந்து கொண்டவள் “ஆமா ஆமா ஐஸ் கிரீம் சாப்பிட்டே ஆகணும், மைண்ட ரிலாக்ஸ் பண்ணியே ஆகணும் ” என்று சொல்ல, அபி தனக்குள் இருந்த வருத்தத்தை மறைத்தவளாக பூஜாவிடம் “சரி போய் வாங்கிட்டு வாடி. இல்லைனா இவளுங்க இந்த இடத்தைவிட்டு நகர மாட்டாங்க” என்றாள்.

பூஜாவும், மதுவும் சென்று ஐவருக்கும் ஐஸ் கிரீம் வாங்கி வந்தனர். அதில் மது மட்டும் இரண்டு ஐஸ் கிரீம் கையில் வைத்து சாப்பிட்டு கொண்டு இருக்க அதை பார்த்த ப்ரீத்தி “உனக்கு மட்டும் ரெண்டு ஐஸ் கிரீமா,எனக்கு ஒன்னு குடுடி”என்று கேட்க, மதுவோ கையில் இருந்த இரண்டு ஐஸ் கிரீமிலும் துப்புவது போல் செய்து “வேணுமா” என்று கேட்க முகத்தை அஷ்டகோணலாக மாற்றிய ப்ரீத்தி பூஜாவை பாவமாக பார்க்க அவள் பார்வையில் கடுப்பானவள் “நிப்பாட்டு நிப்பாட்டு இந்த பச்ச புள்ள லுக் எல்லாம் விடாத நீ யாருனு எனக்கு நல்லாவே தெரியும் இப்ப என்ன ஐஸ் கிரீம் வேணும் அவளோ தானே போறேன் போய் வாங்கிட்டு வந்து தொலையறேன், தயவு செஞ்சு மூஞ்ச இப்படி வச்சுக்காத பார்க்க சகிக்கல” என்றவள் எழுந்து சென்றுவிட்டாள்.

ப்ரீத்தியின் அப்பாவி முகத்தை பார்த்து மற்றவர்கள் சிரிக்க, ப்ரீத்தியோ அவர்களை கண்டுகொள்ளாமல் பூஜா எப்போது வருவாள் என்று பார்த்து கொண்டிருக்க,மதுவோ அவளிடம் “வேணுமா வேணுமா” என்று கேட்டே இரண்டு ஐஸ் கிரீமையும் பலிப்பு காட்டி சாப்பிட்டு கொண்டு இருந்தாள்.பின் பூஜா வரவும் ப்ரீத்தி அவளிடம் இருந்த ஐஸ் கிரீமை வாங்கியவள் “நான் தான் பர்ஸ்ட் போவேன்” என்று வெளியில் ஓடினாள்.

மதுவை புட்கோர்ட்டில் இருந்தே பார்த்து கொண்டிருந்த ஒருவன், இப்போது ஐஸ் கிரீம் சாப்பிட்டு செய்யும் சேட்டையையும் பார்த்து சிரித்து கொண்டே“ப்பா..... என்ன சாப்பாடு சாப்புடுது இந்த பொண்ணு.இவ சாப்பிடவே ஒரு ஹோட்டல் கட்டணும் போல இருக்கே. இந்த பொண்ண கட்டிக்க போற அப்பாவி எவனோ தெரிலயே பாவம் அந்த ஜீவன் (எப்பா மகராசா நீதான் அந்த அப்பாவி ஜீவன்) என்று சொல்லி கிண்டலாக சிரித்து கொண்டிருந்தவனை “பிரபா” என்ற அழைப்போடு நெருங்கினான் அவன் நண்பன் கிருஷ்ணா.

கிருஷ், என்னடா தனியா சிரிச்சிட்டு இருக்க.

பிரபா, “தனியாவா கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி இங்க நடந்தத நீ பார்த்திருந்தினா இப்படி சொல்ல மாட்ட” என்றவன் சென்று கொண்டிருந்தவர்களில் மதுவை கை காட்டி முன்பு மது நடந்து கொண்டதை சொன்னவன் மேலும் சிரித்தான்.

பிரபா கை காட்டிய பக்கம் சென்று கொண்டிருந்தவர்களை கண்கள் மின்ன பார்த்தவன் “இவங்க இங்க இருந்தா அப்போ என்னோட ஆளும் இங்கதானே இருப்பா” என்று நினைத்தவன் பிரபா அழைப்பதை கூட கவனத்தில் கொள்ளாமல் “கொஞ்ச நேரம் வெயிட் பண்ணுடா இப்ப வரேன் “ என்று விட்டு அவர்கள் பின்னோடு ஓடினான்.அவன் ஓடுவதை பார்த்த பிரபா “இவன் ஏன் இப்படி ஓடறான்”என்று யோசித்தவன் பின் ஒரு தோள் குலுக்களுடன் ஒதுக்கிவிட்டு அருகில் இருந்த ஷாப்பிற்குள் நுழைந்தான்.

கிருஷ் நினைத்தது போலவே அவன் ஆளான ப்ரீத்தி கையில் இருந்த ஐஸ் கிரீமை ரசித்து சாப்பிட்டு கொண்டு இருக்க இவனும் அவளது செய்கையை ரசித்து பார்த்து கொண்டிருந்தான்.
தோழிகள் அனைவரும் ஐஸ் கிரீம் சாப்பிட்டு முடித்து மாலைவிட்டு வெளியே வருவதற்கும் அர்ஜுன் அங்கு வருவதற்கும் சரியாக இருந்தது.

பூஜாவை பார்த்த அர்ஜுன் “என்ன ஷாப்பிங் எல்லாம் முடிச்சாச்சா” என்று கேட்க அவளோ “இல்ல கிளம்பலாம்னு டிசைட் பண்ணிட்டோம்” என்றாள். “கிளம்பலாம்னு முடிவு பண்ணிட்டிங்களா” என்று பூஜாவை அவன் முறைக்க. அபியோ “ஹலோ நாங்க மட்டும்தான் கிளம்பறோம், நீங்க உங்க ஆள கூட்டிட்டு போங்க எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை” என்று கூற,அவளை பார்த்து மெலிதாகப் சிரித்த அர்ஜுன் “ஓகே பாய் நாங்களும் கிளம்பறோம், நீங்க பத்திரமா போங்க வீட்டுக்கு போயிட்டு அவளுக்கு போன் பண்ணி சொல்லிடுங்க சரியா” என்று கூற, மதுவோ வேகமாக “ஹலோ நாங்க வீட்டுக்கு போகல காலேஜ்க்குதான் போறோம்.உங்க ஆளோட ஸ்கூட்டி இங்கயே விட்டுட்டு போறோம்.உங்க அல்லகை ஒருத்தனை அனுப்பி வண்டிய காலேஜ்ல கொண்டுவந்து விட சொல்லுங்க. அப்புறம் முக்கியமான விஷயம் உங்க ஆளையும் டைம்க்கு கொண்டு வந்து விடுங்க, இல்லைனா இன்னும் ஒரு வருஷத்துக்கு எங்களுக்கு நீங்கதான் ஸ்பான்சர் ” என்று சொல்ல, அவனோ “ஒரு வருஷத்துக்கா”என்று மிரண்டு விழித்தவன் “அம்மா தாயே கோகுல அனுப்பி இவ வண்டிய காலேஜ்ல நிப்பாட்ட சொல்றேன், நானும் உங்க பிரண்ட டைம்க்கு கொண்டு வந்து விடறேன் போதுமா,இந்த கும்பல்ல வந்து என்னை கோத்துவிட்டியே கடவுளே நான் என்ன பாவம் செஞ்சேன்” என்று சொன்னவனின் பைக் பூஜாவுடன் ஈ சி ஆர் நோக்கி சென்றது.

அவர்கள் கிளம்பியா பின் அபி சூர்யாவிடம் “நீ ப்ரீத்திய ஏத்திக்கோ, நான் மதுவ கூட்டிட்டு வரேன்”என்று சொல்ல, அவளும் “சரி” என்றவள் ப்ரீத்தியிடம் “நீ இந்த படிக்கிட்டயே நில்லு நாங்க போய் வண்டி எடுத்துட்டு வரோம். வேற எங்கயும் போய் பிரச்சனைய விலை கொடுத்து வாங்காத“ என்று சொல்லி சென்றாள். ப்ரீத்தியும் அவளிடம் நல்ல பிள்ளையாக தலையாட்டியவள் வேடிக்கை பார்த்து கொண்டு நின்றாள்.

கிருஷ் தன்னவள் தனியாக இருப்பதை பார்த்து மகிழ்ந்து“ஆஹா நம்ம ஆளு தனியா நிக்குது இதுதான் நல்லா டைம் போய் பேசிட வேண்டியதுதான் இப்பவிட்டா இனி இவளை தனியா பாக்க முடியாது” என்று முடிவெடுத்தவன் தன்னுடைய கூலர்சை எடுத்து ஸ்டைலாக மாட்டி கொண்டு அவள் அருகில் சென்று “ஹலோ” என்றான்.

யாரோ தன்னை அழைப்பதை உணர்ந்து திரும்பி பார்த்த ப்ரீத்தி கிருஷ் நின்றிருப்பதை கண்டு “அய்யோ பாவம்.என்ன சார் ரோடு கிராஸ் பண்ணி விடணுமா, சீக்கிரம் வாங்க சிக்னல் விழுந்துடுச்சு” என்றவள் அவனை பேச கூட விடாமல் வேக வேகமாக இழுத்து கொண்டு சென்று ரோட்டின் அந்த பக்கம் நிறுத்தியவள் அதோடு நிறுத்தாமல் அங்கு நின்றிருந்தவர்களிடம் “எக்ஸ்க்யூஸ்மி சார் இவருக்கு கண்ணு தெரியாது பஸ் மாறி ஏறிட போறாரு கொஞ்சம் பாத்துக்கோங்க “ என்றாள்.இங்கு என்ன நடக்கிறது என்று கிருஷ் உணரும் முன், சூர்யா ப்ரீத்தியை அழைக்க அவளும் “இதோ வந்துட்டேன்” என்றுவிட்டு கிருஷிடம் “பாத்து பத்திரமா போங்க சார். நான் கிளம்பறேன்” என்று விட்டு சிட்டாக பறந்துவிட்டாள்.

ப்ரீத்தி “கண்ணு தெரியாதா” என்று கேட்டதில் இருந்து அதிர்ந்து இருந்தவன் அவள் சென்ற பிறகே தன்னிலை அடைந்தான். “எது எனக்கு கண்ணு தெரியாதா, ஸ்டைலா இருக்குமேனு கூலர்ஸ் போட்டது ஒரு தப்பா இப்படி அசிங்கபடுத்திட்டு போய்ட்டாளே” என்று புலம்பி கொண்டு இருக்க, பக்கத்தில் நின்றிருந்த நபர் அவனை ஒரு மார்க்கமாக பார்த்தார். அவரின் பார்வையை கவனித்த கிருஷ் “ஆத்தி இந்த மனுஷன் ஒரு மாதிரி பாக்குறாரே இப்படி சிக்க வச்சிட்டியே சிட்டு, இப்போ கண்ணு தெரியும்னு போனா நம்மல பத்தி கேவலமா நினைப்பாங்க, இப்படியேவும் மெயின்டென் பண்ண முடியாது, நம்ம இப்படி புலம்ப வச்சுட்டு போய்ட்டாளே”.

சூர்யா ப்ரீத்தியிடம் “கொஞ்ச நேரம் இங்க நிக்க சொன்னா எங்கடி போன“ என்று கேட்க,ப்ரீத்தியோ “அடியே இன்னைக்கு நான் ஒரு சமூக சேவை செஞ்சுட்டு வரேன் தெரியுமா” என்று சொல்ல, அவள் சொல்வதை கேட்ட அபி “அப்படி என்னை சேவை மேடம் பண்ணுனீங்க”என்று கேட்டாள்.

அபியை கண்ணில் பெருமை பொங்க பார்த்தவள் “அதோ அங்க நிக்கறாரு பாரு அவருக்கு கண்ணு தெரியாதாம் அதான் ரோடு கிராஸ் பண்ணி விட்டுட்டு வரேன்”என்றாள்.

அவளை கிண்டலாக பார்த்த மது “என் அறிவு கொழுந்தே நல்லா கேட்டியா அந்த பக்கம் இருந்து இந்த பக்கம் வந்தவரா இருக்க போறாரு. கஷ்டபட்டு இந்த பக்கம் வந்தவரை நீ மறுபடியும் அவரு கிளம்புன இடத்துலயே விட்டுட்டு வந்துட்டியா” என்று கேட்க, அவளை முறைத்த ப்ரீத்தி “போடி நானே இன்னைக்கு ஒரு நல்ல விஷயம் பண்ணிருக்கனேனு சந்தோஷமா இருக்கேன். அதை கெடுக்கறாப்புல ஏதாவது உளறாத. ஹப்பாடா இன்னைக்கு நைட் நிம்மதியா தூங்குவேன்“ என்றவள் சூர்யாவுடன் வண்டியில் அமர்ந்து கொண்டாள். அவள் சொல்வதை கேட்ட மற்ற மூவரும் சிரிக்க, அந்த சிரிப்புடனே காலேஜை நோக்கி வண்டியை செலுத்த ஆரம்பித்தனர்.

பூஜா அர்ஜுனுடன் பைக்கில் சென்று கொண்டிருந்தாலும் ஏதோ யோசனையிலேயே அமர்ந்திருக்க, அவள் ஏதாவது பேசுவாள் என்று எதிர் பார்த்து ஏமாந்து போன அர்ஜுன் “ஓகே நாம காலேஜ்க்கே போகலாமா, வண்டிய திருப்பவா” என்று கேட்க அவளோ புருவ முடிச்சுடன் “ஏன் இப்போவே கிளம்பலாம்னு சொல்லறீங்க லாங் டிரைவ் போகலாம்னு முடிவு பண்ணி இருந்தேன்” என்றாள் புரியாமல்.
அர்ஜுன், “ஆமா நீ தான் எதுவும் பேசாமல், ஏதோ யோசிச்சுட்டு இருக்க அப்புறம் ட்ரைவ் போய் என்ன யூஸ் அதுக்கு பேசாம உன்னோட பிரண்ட்ஸ் கூடவாவது இருப்பல்ல அதான்”என்று முகத்தை தூக்கி வைத்து கொண்டு சொல்ல, அவனின் பேச்சில் உண்டான சிறு சிரிப்புடன் “சாரிப்பா அங்க மாலுல ஒரு பிரச்சனை ஆகிடுச்சு, அதைபத்திதான் யோசிச்சுட்டு இருந்தேன்” என்றவள், மாலில் நடந்த அனைத்தையும் அர்ஜுனிடம் கூற அவனும் “கொஞ்சம் பொறுமையா இருந்திருக்கலாம்.சரி முடிஞ்சதபத்தி பேசி நோ யூஸ். அதுதான் முடிஞ்சுருச்சு இல்ல இன்னும் அதை பத்தி என்ன யோசனை. இங்க பாரு பூஜா நமக்கான நேரத்துல நம்மல பத்தி மட்டும் யோசி. உங்க பிரண்ட்ஸ்கான நேரத்துல நான் வர மாட்டேன் அதே மாதிரி நமக்கான நேரத்துல அவங்க வர கூடாது” என்றவன் முகத்தை தூக்கி வைத்து கொண்டு இருந்தான்.

அர்ஜுனின் மன நிலையை புரிந்து கொண்ட பூஜாவும்,தன்னவனுடனான தனிமையை இழக்க விரும்பாதவளாக “சாரி அஜூ இனி நம்மபத்தி மட்டும் பேசறேன் இப்போ சிரி”
என்று சொல்ல,அவன்
அமைதியாக வண்டி ஓட்டி
கொண்டிருந்தான்.
பூஜா அவனை சமாதானப்படுத்த கெஞ்சி, கொஞ்சி முயன்றும் முடியாமல் போக, சோர்ந்தவள் மனதுக்குள் “ஆனாலும் இவனுக்கு இவ்வளவு கோபம் ஆகாது.ஒரு பொண்ண எவ்ளோ கெஞ்சவிடறான் பாரு கல் நெஞ்சக்காரன்” என்று பும்பியவளின் மூளையில் டக்கென்று அந்த பல்ப் எரிந்தது.

உடனே “யுரேகா” என்று தனக்குள் சொல்லி கொண்டவள் வண்டியில் அமர்ந்தப்படியே அவன் தோள்களைபற்றி எக்கி அவன் கன்னத்தில் மென்மையாக முதல் முத்தம் பதித்தாள்.தன்னவளின் முதல் இதழ் ஸ்பரிசத்தில் அர்ஜுனின் கோபம் காற்றில் வைத்த கற்பூரமாய் கரைந்துதான் போனது. இருந்தாலும் மனதில் தோன்றிய ஒருவித எதிர்பார்ப்புடன் முகத்தில் எந்த உணர்வையும் காட்டாமல் “செல்லாது செல்லாது இது போங்காட்டம் நான் ஒத்துக்க மாட்டேன்”என்று சொல்லி கொண்டிருக்கும்போதே அவனின் அடுத்த கன்னத்திலும் மென் முத்தம் பதித்து “திருடா போதும் ஓவர் ஆக்ட்டிங் உடம்புக்கு ஆகாது. உன்னோட கோபம் போய்டுச்சுனு எனக்கு தெரியும். லெட்ஸ் செலப்ரேட் அவர் டைம்” என்று சொல்லி அவனை அணைத்துக்கொண்டாள்.

அர்ஜுனும் மனம் நிறைந்த மகிழ்ச்சி முகத்தில் பிரதிபலிக்க புண் சிரிப்புடன் வண்டியை செலுத்தி
கொண்டிருந்தான்.ஈ சி ஆர்
ரோட்டில் அடிக்கும் கடல் காற்றில் அவளின் கூந்தல் பறக்க,
தங்களுக்கே தங்களுக்கான அந்த ஏகந்த பொழுதை இருவரும் ரசிக்க ஆரம்பித்தனர் .



கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பர்களே.....

 

Aadhiraa Ram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
IMG-20201222-WA0001.jpg

அத்தியாயம் -16
தோழிகள் நால்வரும் கல்லூரிக்கு சென்று அவர்களின் பேவரட்டானா மரத்தடியில் அமர்ந்து அரட்டை அடித்து கொண்டிருநந்தனர். அப்பொழுது சூர்யா எதேர்ச்சியாக திரும்ப அங்கு இவர்கள் அமர்ந்திருக்கும் இடத்தில் இருந்து சற்று தொலைவில் இருந்த மரத்தில் சாய்ந்து நின்று கொண்டிருந்த திருனேஷ் இவளைதான் பார்த்து கொண்டிருந்தான்.உடனே லிப்டில் அவன் பேசிய வார்த்தைகள் நினைவு வர,அவனை மனதில் திட்ட ஆரம்பித்தாள். “நீ சொன்னா நான் கேட்கணுமா , நீ என்னடா சொல்றது நான் என்னடா கேக்குறது” என்று நினைத்தவள் மேலும் “இவன் சொல்றதை நான் கேட்க மாட்டேன்னு நிருபிக்கணுமே என்ன பண்ணலாம்” என்று கண்களை சுழல விட்டவளின் பார்வை வட்டத்தில் விழுந்தான் அவர்களின் வகுப்பு மாணவன் முரளி. உடனே அவனை வைத்து சில பல திட்டங்களை மனதினுள்ளே போட்டவள் தோழிகளின் புறம் திரும்பினாள்.

சூர்யா, “அபி நம்ம கிளாஸ் முரளி அங்க உட்கார்ந்து இருக்கான் அவன்கிட்ட போய் இன்னைக்கு என்ன நடத்துனாங்கனு கேட்டுட்டு வரலாம் வாடி”.

அபி, “போடி மாலுல அலைஞ்சதே டயர்டா இருக்கு, நான் வரல நீ வேணும்னா போய் கேளு, இல்லையா விடு நாளைக்கு கேட்டுக்கலாம்” என்றாள்.
சூர்யா “இவ வேற நேரம் பார்த்து கால வாருறாளே. சரி சமாளிப்போம். இன்னைக்கு எப்படியா இருந்தாலும் அவனுக்கு நோஸ் கட் குடுத்தே ஆகணும் எவ்ளோ தைரியம் இருந்தா அப்படி பண்ணிருப்பான்” என்று நினைத்தவள் அபியிடம் “அப்போ நான் போய் கேட்டுட்டு வரேன்” என்றவள் திருனேஷை மிதப்பாக பார்த்துக்கொண்டே சென்றாள்.

சூர்யாவின் பார்வையை வைத்தே தன்னை கடுப்பேற்றும் விதமாக ஏதோ செய்ய போகிறாள் என்பதை புரிந்து கொண்ட திருனேஷ் அவளையே பார்த்திருந்தான். அவனது எண்ணத்தை பொய்யாக்காமல் ஒருவனின் அருகில் செல்ல,அவளது செயலை புரிந்து கொண்டவனாக, அவளை பார்த்துக்கொண்டே தனது இதழை நாவினால் வருடி காமித்தான். அதை கண்டு மனதில் மிரண்டாலும் வெளியே கெத்தாக காட்டி கொண்டவள் அந்த மாணவனின் அருகில் சென்று, அழைக்க போன சமயம் திருவின் பார்வை கூர்மையுடன் அவள் இதழில் படிந்தது.அவன் பார்வையின் வீரியத்தில் பயந்து போனவள் “என்னது பப்ளிக் ப்ளேஸ்ல இப்படி பாக்குறான், இப்போ பேசினா சொன்ன மாதிரி பனிஷ்மென்ட்ங்கர பேர்ல ஏதாவது ஏடா கூடமா பண்ணிடுவானோ” என்று எண்ணி அவள் பயந்து கொண்டு இருந்தாள்.

அதே சமயம் தன் அருகில் நிழலாடவும் திரும்பிய முரளி சூர்யா அங்கு நிற்பதை கண்டு ஆச்சர்யம் அடைந்தான். இருக்காதா பின்னே, பல முறை அவன் அவளிடம் பேச முயன்றாலும், அளவோடு பேசுபவள் இப்போது தன் அருகில் வந்து நின்றாள் என்றால் ஆச்சர்யம் வரத்தானே செய்யும்.
அதே ஆச்சர்யம் நிறைந்த குரலில் “சொல்லு சூர்யா என்கிட்ட ஏதாவது கேட்கணுமா” என்று கேட்க,அவளோ ஓரக்கண்ணால் திருவை பார்த்தாள். அவன் அவளது இதழ்களை கூர் பார்வை பார்த்துக்கொண்டே,தனது இதழ்களை வருடி காமிக்க,அதில் பயந்தவள் முரளியிடம் “ஒன்னும் இல்ல ப்ரோ இன்னிக்கு கிளாஸ்ல என்ன நடந்துச்சுன்னு கேக்கத்தான் வந்தேன்.வேற எதுவும் இல்லை” என்று பம்மினாள்.

இதை கவனித்த திரு அவளை நக்கலாக பார்த்து “அது” என்ற முணுமுணுப்புடன் அங்கிருந்து அகன்று விட்டான். இங்கு முரளியோ சூர்யா ப்ரோ என்றதில் முகம் அஷ்டகோணலாக நின்றிருந்தான்.

திரு சென்றவுடன் தன்னை நினைத்தே மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டவள் “என்ன இது இவன வெறுப்பேத்தலாம்னு பார்த்தா நம்ம தான் பல்பு வாங்குறோம் இனிமே இவன பத்தி நினைக்கவே கூடாது” என்று எண்ணியவள் முரளியிடம் சில தகவல்களை பெற்று கொண்டே தோழிகளிடம் சென்றாள்.

பூஜாவும் இவள் செல்லும்போது வந்திருந்திருக்க அவளிடம் அனைவரும் பேசி கொண்டிருந்தனர். அப்போது வாடிய முகத்துடன் அவர்கள் அருகில் அமர்ந்தாள் சூர்யா. அபி அவளிடம் “என்ன சின்சியர் சிகாமணி கிளாஸ்ல நடந்தத கேட்டுட்டு வந்துட்டியா” என்றவள், அவளின் வாடிய முகத்தை கண்டு “அதுதான் கேட்டுட்டு வந்துட்டியே அப்புறம் ஏன் உன் முகம் பியூஸ் போன பல்ப் மாதிரி இருக்கு” என்று கேட்க, பூஜாவோ வேற எதுக்கா இருக்கும், நாம இல்லாம பாடம் நடத்திட்டாங்களேன்னுதான் இருக்கும். இவளோட கடமை உணச்சி நமக்கு தெரிஞ்சதுதானே,” என்று சொல்ல ப்ரீத்தி ஓடி வந்து அவளுடன் ஹை பை அடித்து கொண்டாள்.

சூர்யா தான் பல்ப் வாங்கிய விஷயத்தை எப்படி சொல்வது என்று விழித்து கொண்டு இருக்கும்போதே, மது “ஹேய் என்னங்கடி நீங்க.அவதான் மால்ல இருக்கும்போதே தலைவலின்னு சொன்னாள்ள வாங்க வீட்டுக்கு கிளம்பலாம்” என்று சொல்லி கிளம்ப ஆயத்தமாக சூர்யாவிற்குதான் ஒரு மாதிரி ஆகி போனது.

இது வரை எந்த விஷயத்தையும் ஐவரும் இது நாள் வரை ஒருவருக்கு ஒருவர் மறைத்தது இல்லை, ஆனால் இன்று நடந்த சம்பவத்தை அவர்களிடம் முதன் முறையாக மறைத்துவிட்டாள். இதை சொல்லவும் ஏனோ அவளுக்கு தயக்கமாகவே இருந்தது.
பின் “இது தேவை இல்லா விஷயம், அவனை இனி பாக்கவும் கூடாது, நினைக்கவும் கூடாது” என்று முடிவெடுத்தவள் சாதாரணமாக மாறி, பேசிக்கொண்டே தோழிகளோடு வீட்டிற்கு கிளம்பி விட்டாள்.

வீட்டிலும் அப்பா, தம்பி என்று அனைவருடன் பேசினாலும் மனதினுள் ஆழமாக பதிந்து போன திருவின் செய்கையை மட்டும் என்ன முயன்றும் அவளால் மறக்க முடியவில்லை.அடிக்கடி அவன் நினைவே வந்து அவளை இம்சை செய்து கொண்டு இருந்தது. அதில் கடுப்பானவள் “இது வேலைக்கு ஆகாது” என்று எண்ணியவள் இரவு தூங்குவதற்கு முன் “எப்பா பெருமாளே அவன் என்னை ரொம்ப டிஸ்டர்ப் பண்றான்,எப்படியாவது அவன்கிட்ட இருந்து என்ன காப்பாத்துப்பா” என்று வேண்டிக்கொண்டவள்,தூங்க ஆரம்பித்தாள்.

நன்றாக உறங்கி கொண்டிருந்த சூர்யா “ஐயோ அம்மா” என்று அலறி அடித்து கொண்டு எழுந்தாள். மகள் கத்திய சத்தத்தில் பெற்றோர்கள் இருவரும் பதறியடித்துக்கொண்டு வந்து “என்ன ஆச்சு சூர்யா,ஏன் கத்தின” என்று கேட்க,அவளோ திருதிருவென விழித்தவள் பின் “ஒன்னுல்ல அம்மா” என்றாள் வெளிறிய முகத்துடன்.

அவள் அருகில் வந்த தாய் சுந்தரியோ கெட்ட கனவு ஏதும் கண்டியா சூர்யா என்று கேட்க, உடனே “ஆமாம்” என்னும் விதமாக தலையை வேகமாக ஆட்டினாள். “சரி சரி....... இந்தா தண்ணீ இதை குடி எதுவும் இல்லை” என்று கூறி மடியில் படுக்க வைத்தவர் அவளை ஆசுவாசபடுத்தினார்.

அமைதியாக சிறிது நேரம் கண்மூடி படுத்திருந்தவளை பார்த்த அவளது தாய் “தைரியசாலி மாதிரி பேய் படம் பார்க்காதனு சொன்னா கேக்குறது இல்ல,அப்புறம் நடு ராத்திரி கனவு கண்டு பயந்து கத்த வேண்டியது. எதையும் யோசிக்காம அமைதியா தூங்கு” என்று கூறியவர் அங்கிருந்து சென்றுவிட்டார்.
தாய் சென்றுவிட்டார் என்பதை உறுதிபடுத்தி கொண்ட சூர்யா நெஞ்சில் கை வைத்து கொண்டு மணியை பார்க்க அது அதி காலை நான்கு மணி என்றது. “பெருமாளே இப்படியா எனக்கு கனவு வரணும், என்று முன கியவள்,தனக்கு வந்த கனவை நினைத்து பார்த்தாள்.

சூர்யாவும் திருவும் மீண்டும் அதே லிப்டில் சிக்கி இருக்க இந்த முறை அவள் “என்னையா டா கிஸ் பண்ண இப்ப நான் கொடுக்கிற கிஸ்ல நீ ஐயோ அம்மானு அலறி அடிச்சுட்டு ஓடல என் பேரு சூர்யா இல்ல” என்று கூறியவள் மெல்ல அவனை நெருங்க அவனோ “இல்ல வேண்டாம் என்னை விட்டுடு” என்று கூறியபடி பின்னே நகர்ந்தான்.

திரு பின்னே செல்ல செல்ல அவனை நெருங்கியவள் அவன் இதழ்களை தனது இரு விரல் கொண்டு பிடித்து “ஆமா நீ என்ன பிக்பாஸ் பாலாஜி மாதிரி லிப்ஸ்டிக் போடறவனா நீ,அது எப்படிடா உன்னோட லிப்ஸ் மட்டும் இவளோ ரெட்டிஷா இருக்கு. ஏற்கனவே உன்னோட லிப்ஸ் மேல எனக்கு ஒரு கண்ணு இருந்துச்சு. இதுல நீ வேற என்னை வெறுப்பேத்தி கடுப்பாகிட்ட அதனால இன்னிக்கு அதை என்ன செய்யறேன் பாரு” என்று கூறியவள் அவனது இதழ்களை கடித்து வைக்க அவனோ “ஐயோ என்னை யாராவது இவகிட்ட இருந்து காப்பாத்துங்களேன், ராட்சசி வலிக்குது விடுடி என்னை” என்று கத்த அவளோ “கத்து கத்து எவ்வளவு வேணா கத்து உன்னை யாரும் காப்பாத்த வரமாட்டங்க “ என்றவள் அவன் இதழ்களை கடித்து குதறுவதிலேயே குறியாக இருந்தாள். வலி தாங்க முடியாதவன் அவள் இடையில் கிள்ளிவிட அதனால் ஏற்பட்ட வலியில்தான் “அம்மா” என்று கத்தி திடுக்கிட்டு தூக்கத்தில் இருந்து எழுந்தாள்.

கனவை நினைவு கூர்ந்தவளோ “அச்சச்சோ பெருமாளே அபச்சாரம் அபச்சாரம் இப்படியா எனக்கு கனவு வரும்,அதுவும் விடிய காலைல.இந்த நேரத்துல வர்ற கனவு பலிக்கும்னு வேற சொல்லுவாங்களே பெருமாளே இது என்ன எனக்கு வந்த சோதனை” என்று புலம்பியவள் பின் “எல்லாத்துக்கும் அவன்தான் காரணம் அவனை நான் சும்மா விட மாட்டேன்,நாளைக்கு அவன ஒரு கை பார்க்காம விடறது இல்ல”என்ற முடிவெடுத்தவள் அதன் பின்னும் தூங்காமல் கொட்ட கொட்ட விழித்திருந்துவிட்டு, காலை எப்போதையும் விட சீக்கிரமாகவே கிளம்பி தோழிகளுடன் இணைந்துகொண்டாள் .

காலேஜிற்கு வந்தவள் கண்களை சுழலவிட்டவாறே வண்டியை நிறுத்தி கொண்டிருந்தாள். அவள் நினைத்தது போலவே அங்கிருந்த பெஞ்சில் அமர்ந்து படித்து கொண்டிருந்தான் திருனேஷ்.அவனை பார்த்தவுடன் கோபம் சுறுசுறுவென ஏற, தோழிகளின் புறம் திரும்பியவள் “நீங்க எல்லாம் முன்னாடி போங்க, எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு அதை முடிச்சிட்டு வரேன்” என்றாள். அதை கேட்ட அனைவரும் குழப்பமான பார்வையுடன் “என்ன முக்கியமான வேலை அதுவும் எங்கள விட்டுட்டு” என்று கேட்க, அவர்களை பார்த்து திருத்திருவென விழித்தவள் மனதினுள் “இவளுங்க நம்மள விட மாட்டாங்க போலயே, இப்போ என்ன சொல்லி தப்பிக்கலாம்” என்று யோசித்தவள் பின் நினைவுவந்தவளாக ப்ரீத்தியை பார்த்து “லைப்ரரி போறேன் வர்றீங்களா” என்று கேட்க மற்ற நால்வரும் அலறியடித்துக்கொண்டு “அம்மா தாயே நீயே போ, நாங்க அதுவரை கேண்டீன்ல இருக்கோம் சீக்கிரம் வா”என்றுவிட்டு சென்றனர்.

சூர்யாவும் அவர்களிடம் நல்ல பிள்ளையாக “சரி”என்னும் விதமாக தலையாட்டியவள். பின் நேராக திருவிடம் சென்று மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க, முறைத்துக்கொண்டு நின்றாள்.

தன் அருகில் யாரோ நிற்பது போல் இருக்கவும் புக்கில் இருந்து தன் பார்வையை நிமிர்த்திய திருனேஷ், சூர்யா கோபமாக நிற்பதை கண்டு “ஏன்” என்று புரியாமல் குழம்பி பின் “என்ன”என்பது போல் பார்த்தான்.

அவன் பார்வையில் கடுப்பானவள் “செய்யறதையும் செஞ்சுட்டு முழிக்கறதை பாரு பச்சபுள்ளையாட்டம்” என்று மனதில் திட்டியவள் வெளியில் அவனிடம் “ஹலோ மிஸ்டர் நீங்க பண்றது கொஞ்சம் கூட சரியில்லை.உங்க மனசுல என்ன நினைச்சிக்கிட்டு இருக்கீங்க”என்று கேட்டாள்.

அவனோ கூலாக அவளது இதழ்களை கூர்ந்து பார்த்தபடி “நேத்து கொடுத்த பூஸ்ட் கொஞ்சம் கம்மியா இருக்கு இன்னும் கொஞ்சம் அதிகமா கெடச்சா நல்லா இருக்கும்னு நினைக்கிறேன் கிடைக்குமா” என்றான்.
திருவின் பேச்சிலும் பார்வையிலும் அதிர்ந்தவள் எச்சிலை கூட்டி விழுங்கி திணறியவாறே “என்ன சொன்னீங்க” என்று கேட்க, வசிகரமாக சிரித்தவன் அவள் கண்களை பார்த்து “இன்னும் கொஞ்சம் கிடைக்குமான்னு கேட்டேன்” என்று சொல்ல,அதில் அதிர்ந்தவள் “இங்க பாருங்க இந்த மாதிரி பேசற வேலையெல்லாம் என்கிட்ட வெச்சுக்காதீங்க” என்று கூற,திருவோ “சரி பேசல செயல்ல காட்டட்டுமா” என்று கேட்டபடி அவள் அருகில் நெருங்கி செல்ல, இவளோ “ஐயோ பெருமாளே” என்று கத்தி பதறியடித்துக்கொண்டு அங்கிருந்து ஓடினாள்.

அவள் ஓடுவதைப் பார்த்து திரு சிரித்துக் கொண்டே “ஹேய் பொண்டாட்டி “ என்று கூப்பிட, அந்த அழைப்பில் அதிர்ந்தவள் வேறு யாரும் கவனித்துவிட்டார்களா என்று பயத்துடன் சுற்றி முற்றி பார்க்க, அவனோ கேட்டிருக்காது, கேட்டிருக்காது உன்னை தவிர வேற யாருக்கும் கேட்டிருக்காது” என்றவன், அவள் அருகில் சென்று “சும்மா என்னை வெறுப்பேத்த எதுவும் பண்ணாத அப்படி பண்ணுனா கண்டிப்பா நான் சொன்னதை செய்வேன்”என்றான்.


சூர்யா அவனை விழி விரித்து பார்த்தவள், பின் அங்கிருந்து வேகமாக தனது தோழிகளிடம் ஓடிவிட்டாள்.அவள் ஓடி வருவதை பார்த்த அவர்கள் “என்னடி இப்படி ஓடி வர” என்ன ஆச்சு என்று கேட்டனர்.

திகைத்து அமர்ந்திருந்த சூர்யா அவர்களின் கேள்வியில் என்ன சொல்வது என்று விழித்துவிட்டு பின் “ஒன்னும் இல்லையே சும்மா” என்று மழுப்பலாக கூறினாள்.

அபியோ,”இல்லையே என்னவோ சரி இல்லையே ஒன்னும் இல்லைனா எதுக்கு இவ்ளோ பதட்டமா இருக்க, அப்போ ஏதோ ஒன்னு இருக்கு ஒழுங்கா சொல்லு என்ன ஆச்சு, லைப்ரரி தானே போன அப்புறம் ஏன் இவ்வளவு படபடப்பு” என்று அவளை ஆராய்ச்சிச்சியாக பார்த்தபடி கேட்டாள்.

அப்போது பூஜாவும் “ஆமாடி இவ முழியே சரி இல்லை ஏதோ தப்பா இருக்கு, இந்த மாதிரி ரியாக்ஷன் லவ் பண்றவங்களுக்கு மட்டும்தான் வரும் உண்மைய சொல்லு என்ன ஆச்சு......... சொல்லு..... என்ன ஆச்சு சொல்லு........ “ என்று பாஷா பட ஸ்டைலில் கேட்டாள்.

மதுவும் அப்போது “எனக்கும் சந்தேகமா இருக்கு”என்று கூற, மூவரும் ஒரே நேரம் சூர்யாவை ஆராய்ச்சிச்சியாக பார்த்தனர். அப்போது ப்ரீத்தி “கிண்டலாக சிரித்தவள்,யாரு இவளாவது லவ்வு பண்றதாவது உங்களுக்கெல்லாம் கொஞ்சமாவது மனசாட்சி இருக்கா இவளே கருத்து கந்தசாமி.

உடனே பூஜா “இல்ல இல்ல அஸ் அ கமிட்டட் பர்சன் எனக்கு இவ மேல டவுடாவே இருக்கு.உண்மைய சொல்லு குற்றம் நடந்தது என்ன” என்று சூர்யாவை துருவித் துருவி கேள்வி மேல் கேள்வியாக கேட்க, அவளோ “முதலில் திணறியவள் மனதிற்குள் “நேத்து நடந்த விஷயத்தையே உங்ககிட்ட சொல்ல முடியாம ஏதோ என்னை தடுக்குது, சரி அவன்கிட்டயாவது போய் பேசி தெளிவுபடுத்திக்கலாம்னு பார்த்தா, அவன் பக்கத்துல போனாலே என்னையும் அறியாமல் ஒரே தடுமாற்றமா இருக்கு. இது என்ன உணர்வுனு எனக்கே தெரியாத போது உங்ககிட்ட என்னனு சொல்லுவேன்” என்று புலம்பியவள். அவர்களிடம் “ஒன்னும் இல்லடி என்னப்பத்திய ஆராய்ச்சி போதும், இப்போ ஒரு குட் நியூஸ் உங்களுக்கு சொல்ல போறேன் இன்னும் டென் டேஸ்ல கல்ச்சுரல்ஸ் வருதாம், நாமளும் கலந்துக்கலாமா “என்றாள் பேச்சை மாற்றும் விதமாக.

உடனே அபி இப்போதைக்கு பார்ட்டிஸிபன்ட்டா கலந்துக்க இன்ட்ரெஸ்ட், இல்லை ஆடியன்ஸ்ஸா இருக்கதான் பிடிக்குது” என்று சொல்ல மற்றவர்களும் அவள் சொல்வதை ஆமோதித்தனர்.

பூஜாவோ, “அப்போ சரி நாம எல்லாரும் கலந்துக்கலாம்னு பார்த்தேன். நீங்க கலந்துக்கலைனு சொல்றீங்க. இப்போ நான் மட்டும் சிங்கிங் காம்பெடிஷன்ல கலந்துக்க போறேன்”என்று கூற, மற்றவர்களோ ஹார்ட் அட்டாக் வராத குறையாக ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து கொண்டிருக்க, முதலில் தன்னை சமாளித்து கொண்ட ,ப்ரீத்தி பூஜா கூறியது காதில் விழாதது போல் “வாங்க எல்லாரும் கிளாஸ்க்கு போலாம் டைம் ஆச்சு”என்று கூற அனைவரும் அங்கிருந்து கிளம்பிவிட்டனர்.

மதியம் உணவு இடைவேளையின் போது சாப்பிட்டுவிட்டு பூஜா “சிங்கிங் காம்பிடிசன்க்கு பேர் குடுத்துட்டு வரேன்” என்று செல்ல முனைய, அவளை தடுத்த சூர்யா “நல்லா யோசிச்சுட்டியாடி இதுதான் உன்னோட முடிவா, எதுக்கும் இன்னும் கொஞ்சம் பொறுமையா பேர் குடுத்துக்கலாமே” என்று கேட்டாள்.


அதை கேட்டு கடுப்பான பூஜா “என்னடி பேசற.என்னோட திறமையபத்தி தெரிஞ்சும் நீ இப்படி சொல்லலாமா, வேணும்னா ஒரு பாட்டு உங்ககிட்ட பாடி காட்டட்டுமா”என்று கேட்க, அவள் சொல்வதை கேட்டு அலறிய அபி “உன்னோட திறமை எங்களுக்கு தெரியாதா நீ சூப்பரா பாடுவாடி, அருமையா இருக்கும் உன்னோட வாய்ஸ், இங்க நின்னு டைம் வேஸ்ட் பண்ணாம போய் சீக்கிரம் பேர் குடுத்துட்டு வா”என்றாள்.

அபி சொல்வதை கேட்டு பெருமையாக தன் சுடிதாரில் இல்லாத காலரை தூக்கிவிட்டு கொண்டவள் “என்னோட அருமை உனக்குதான்டி தெரியுது இவளுங்களும் இருக்களுங்களே” என்று சொல்லி தலையில் அடித்து கொண்டவள் “சரி நான் போய் பேர் குடுத்துட்டு வரேன்” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டாள்.

பூஜா சென்றவுடன் அபியை நால்வரும் சேர்ந்து மொத்த ஆரம்பித்தனர். அப்போது மது “ஏன் டி இப்படி பண்ணுன, அவ எப்படி பாடுவானு தெரிஞ்சும் நீப்பாட்டுக்கு அவளை உசுப்பேத்தி அனுப்பிருக்கியே உனக்கு ஏன் இந்த கொலை வெறி”என்று கேட்க, அபியை பாவமாக பார்த்த ப்ரீத்தி “என்னை பார்த்தா பாவமா தெரியலையாடி,எந்த தைரியத்துலடி அவ வாய்ஸ் சூப்பரா இருக்குனு சொன்ன”என்று கேட்டவாறே மொத்த அவர்களை தடுத்த அபி “நிறுத்துங்கடி நான் அப்படி சொல்லலைனா நம்மகிட்ட பாடி காமிச்சுருப்பா, அதை கேட்குற தைரியம் உங்களுக்கு இருக்கா “என்றாள்.
அபி சொல்வதை கேட்ட சூர்யா “பெருமாளே” என்று கத்தியப்படி காதில் கைவைக்க அதை பார்த்த அபி “முடியாது இல்லை. இவளை பாட விடாம ஸ்கூல்ல இருந்து எல்லோரையும் காப்பாத்திட்டு வரோம், இப்போவும் ஏதாவது வழி கிடைக்காமையா போகும், விடுங்கடி பார்த்துத்துக்கலாம். அவளை பாட விடாம பன்றோம் இங்க இருக்கவங்களையும் காப்பாத்துறோம். டன் “என்று கட்டை விரலை உயர்த்தி கேட்க மற்றவர்களும் அவளுடன் தங்களது கட்டை விரலை உயர்த்தி “டன்” என்று இணைந்து கொண்டனர்.

பூஜா சென்ற திசையை பார்த்த ஐவரும் ஒரே குரலில் “இந்த வியாதிக்கு மருந்தே இல்லையா, கடவுளே இது என்ன சோதனை”என்று புலம்பிவிட்டு, அவள் பாடுவதை தடுக்க என்ன செய்யலாம் என்று ஆளாளுக்கு ஒரு யோசனையில் மூழ்கினர்.

அப்போது பேர் குடுக்க சென்ற பூஜா போய் பத்து நிமிடத்தில், முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க திரும்பி வந்தவள் தோழிகளிடம் பொறிய ஆரம்பித்தாள்.

பூஜா கோபத்திர்க்கான காரணத்தை நெக்ஸ்ட் எபில பார்க்கலாம்..........




கருத்துத் திரி

 
Status
Not open for further replies.
Top