All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் , “ நான் உன்கையில் நீர்த்திவலை❤️ ” - கருத்துத் திரி

marry

Bronze Winner
இந்த பதிவை படிக்கும் போது ராணியம்மாவின் மேல் உள்ள மரியாதை உட்சத்தை தொட்டது என்றே சொல்லவேண்டும் சிஸ்.
பின்னே 1980 களில் ஒரு பெண்மணி, பெண் குழந்தையோடு யாருடைய துணையுமின்றி தனித்து நின்று போராடி வாழ்க்கையில் ஜெயித்து காட்டியிருக்கிறார் என்றால் அது சாதாரண விஷயம் அல்லவே 😯😯
தன் உயிருக்கு உயிரான தோழியின் அண்ணன் என்ற ஒரே காரணத்திற்காக 18வயதிலேயே திருமண பந்தத்தில் அடியெடுத்து வைத்து, பின் அக்குடும்பத்தின் பொருளாதாரத்தை உயர்த்தும் பொருட்டு சொந்த தொழில் தொடங்கி வருமானத்தை பெருக்கி அவர்களின் பொருளாதாரத்தை உயர்த்தியிருக்கிறார். ஆனால் அதற்கு பரிசாக கிடைத்ததோ துரோகம் மட்டுமே 😔 தோழியை தவிர்த்து அனைவரும் பொய்த்து போயினர் அவர் வாழ்வில் 😪 ராணி அம்மா ராஜனை அறைந்தது 👌👏👏 தவறு செய்த மகனை தட்டி கேளாமல், மகனை அடித்த மருமகளை அல்லவா வசைபாடினர் 😠 மருமகள் வேண்டாம், ஆனால் அந்த மருமகள் தொடங்கிய உணவகம் மட்டும் வேண்டும் அவர்களுக்கு, நன்றி கெட்டவர்கள். 'கட்டியவனையே பிச்சையிட்டேன், இதையும் பிச்சையென எடுத்துக் கொள் ' அந்த இடத்தில் உங்களின் இந்த குறிப்பிடல் மிக அருமை 👌 பெற்றோரும் கைவிட, அந்த தொழில் இல்லையென்றால் என்ன இன்னொரு தொழிலில் காலூன்றி அதிலும் ஜெயித்து காட்டிவிட்டார் நம் ராணி 👌அவருக்கு பொருத்தமான பெயர் தான்.

பெண்களை பறவைகளோடு மிக அழகாக ஒப்பிட்டு காட்டியிருந்தீங்க சிஸ். நீங்கள் சொன்னது முற்றிலும் உண்மை, வெகு சில பெண்கள் தான் ராணி அம்மாவை போல் வாழ்வில் உயர்ந்து பறக்கிறார்கள். ஏராளமானோர் றெக்கைகள் ஒடுக்கப்பட்ட பறைவைகள் போலவே வாழ்வில் ஒடுங்கி போய்விடுகிறார்கள். பெண்களுக்கு மன உறுதி எவ்வளவு முக்கியமென அழகாக சொல்லிவிட்டீர்கள் 👌 நம் சமூகமும் மாற வேண்டும்.
விஷ்ணுவில் ராணியையும், ஹிரண்யா வில் கஜாவையும் கண்டு தோழிகள் தங்கள் வாழ்வை அவர்களுடன் கழிக்கிறார்கள்.

கஜாவின் மறைவு விஷ்ணு - ராணி இருவரையும் தான் பெரிதும் பாதித்திருக்கிறது. மன்னிப்பு கேட்கும் எண்ணம் இருந்தும் காலம் கடத்தி கொண்டே போகிறான் விஷ்ணு. காலம் கடந்து கேட்கும் மன்னிப்பு ஏற்கப்படுமா தெரியவில்லை 🤔 கஜா மேல் ராணி கொண்ட அன்பு காலம் தாழ்த்தியேனும் அவனது செயலை மன்னிக்காவிடிலும் மறக்கவாவது செய்யும் என நம்புகிறேன். ஹிரண்யா ஒவ்வொரு செயலையும் ஈஸ்வரிடம் கேட்டு செய்வது விஷ்ணுவிற்கு கடுப்பை கிளப்புகிறது 😃

அழகிய காலங்கள் ஒற்றை நொடியில்
கரைந்து போகுமா?
இல்லை கடந்து தான் போகுமா?
போனதே !!

👌👌👌
சிக்கி, சிதைந்து, சிலிர்க்கும் பார்வைகள் ஒரு வரம் என்றால்,
தவிர்த்து, தள்ளி நிறுத்தி, தகிக்க செய்யும் பார்வைகள் பெரு வரம்.

வரத்தின் துவக்கம் தவம்,
பெரு வரத்தின் துவக்கம் உயிர்ப்பு நிறைந்த உறவு.

அருமையான வரிகள் சிஸ் 👌👌👌😍😍😍

படப்பிடிப்பகம் 👏👌
காரைக்குடியில் அரண்மனைகள் இருப்பது பற்றி அறிந்தது எனக்கு புதிய தகவல் 🙏😍 அதை கண்ணை கவரும் படத்துடன் விளக்கியது இன்னும் அருமை 👌😍
வாவ் சூப்பர்👌👌👌👌
நீங்க எப்போ ஸ்டோரி எழுத போறீங்க🤔🤔🤔
 

marry

Bronze Winner
அம்முமா🌹🌹🌹🌹🌷🌷🌷🌷

அவரவர் நியாயங்கள் அவரவர்க்கு...

கோணங்கள் கொண்டே கோலங்கள் வரைகிறோம்...

கோணாலாகி போனாலும் நியாங்கள் சொல்கிறோம்...

சேறு என்று தெரிந்தாலும் பூசியவர் பொறுத்து

வாசனையாக மாறுகிறது...

ஏற்றுகொள்ளதவர்கள் தூற்றப்படுகிறார்...

கலசம் உச்சியில் தான் வீற்றிருக்கும்...

அண்ணாந்து பார்க்கும் பொழுது கழுத்து வலித்தால் ...

கலசத்தின் மீது குறை காண முடியுமா...

அதன் கர்வத்தினை கலங்கம் சொல்ல முடியுமா..

தலை. நிமர்ந்து நிற்பதெல்லாம் தலை கணமாகிடுமா...

தகிடுதத்தம் பண்ணி தான் தலை சாய்த்து விட முடியுமா...

உச்சியில் இருப்பதால் அதன் உச்சம் அறியாது போனது அதன் தவறா...

வகை வகையாக தூற்றிவிட்டால் அதன் மீது தூசு படிந்திடுமா...

யார் என்ன சொன்னலும் உச்சம் உச்சம் தான் ....

சொச்சம் மிச்சம் மீதி என்பது எல்லாம் கிடையாது...




பெற்றவர்கள் செய்யும் பாவம் பிள்ளைகளுக்காம்...

உன் இச்சையின் எச்சமாய் நான்...

பிச்சையாய் போனதில் மிச்சமாய்...

தவறே செய்யாமல் தண்டிக்கப்பட்டு ...

தன்னிலை கெட்டு வார்த்தை விட்டு...

குறுகலாய் மனமது மருகலாய்...

குமைகிறேன்...இமை மூடியே நனைகிறேன்..

ஆற்றுவார் தேற்றுவார் இன்றி...

கரை(க்)கிறேன்....கண்ணிருடன் காலத்தினையும்...

கரை சேர விறைகிறேன்...

காலம் கைக்கொடுக்காமா...!!!
தலைவிஇஇஇஇ😘😘😘😘💖💖💖💖
 

Shalini M

Bronze Winner
Enna meeeeeeee shaalu ma மாதிரி கேட்கிறீங்க.

அது அப்படியில்லை meeee, எத்தனை தடவை தமிழில் கருத்துப் பார்த்தாலும் இந்த வரிகள் வந்திடுது ☹☹☹
நீ சொல்லுற அப்டி இருக்கு ஸ்ரீ....... அதா மம்மியும் கேக்குறாங்க.......
 

Shalini M

Bronze Winner
பண்ணிட்டா போச்சு ஷாலு மா , meeeeee oodivaanga .எப்போ good news சொல்லுவீங்க 😯😯😯





Vaanga meeeee.. ungaluku thread pottu ,appadiye angaiye எங்களுக்கு idam pottu wait panroam.
Eppo வரீங்க
🤣🤣🤣🤣
நல்லா கேளு ஸ்ரீ எஸ்கேப் ஆகிற போறாங்க......😂😂😂😂
 

Shalini M

Bronze Winner
ஷாலு மா ❣

என்ன டா கருத்துத் திரி இவளோ மிரட்டலா இருக்கு 😍😍
😍

//ஸ்ரீ தொடக்கமே சூப்பர் 😘😘😘😘

அழகிய காலங்கள் ஒற்றை நொடியில் கரைந்து போகுமா ?
இல்லை கடந்துதான் போகுமா...?

போனதே....! ராணி அம்மாள் வாழ்வில் அனைத்தும் கடந்தும் கரைந்தும் போனதே......


என்னமா யோசிச்சு எழுதிருக்க....... ரொம்ப பிடிச்சிருக்கு ஸ்ரீ😍😍😘😘😘//


ஷாலு ,இதை நான் சொல்லியே தீருவேன்.தமிழில் கருத்துப் படிக்க அவளோ இன்பமா இருக்கு.அதுவும் பிடித்த வரிகள் எடுத்து எழுதி ,அதை போல்ட் செஞ்சு அவளோ திருத்தமா இருக்கு டா🥰🥰🥰

//ராணியம்மாள் கஜா ரெண்டு பேரும் சின்ன வயதில் இருந்து ப்ரெண்ட்ஸ் அஹ்ஹ் சூப்பர் சூப்பர் ஸ்ரீ......... கஜாவை அப்போ இருந்தே அரண பாதுகாத்து வந்துருக்கான்க செம்ம......//

எஸ் அவங்க ரெண்டு பேரும் பெஸ்ட் பிரெண்ட்ஸ். அதோட கஜாவின் அரண் ராணி 🧡



//ராணியம்மாள் ஓட குரலுக்கு அதிகாரி குரல் nu சொன்னது செம்ம .....🤩🤩🤩🤩🤩//

😍😍சிலருக்கு அப்படி இருக்கும் டா.அப்படி இருக்கவங்கள புரிஞ்சு வைத்திருப்பவர்கள் வெகு rare ☹☹


//ஸ்கூல் ல ரெண்டு பேரும் பாடின பாட்டு அப்டியே பள்ளி பருவத்தை அப்டியே கண்ணு முன்னாடி கொண்டு வந்துருச்சு ஸ்ரீ😘😘😘😘😘🥰🥰🥰❣❣❣❣❣//

இஸ் இட் ஷாலு மா 🥰🥰 மகிழ்ச்சி 😘😘😘


//ராஜன கஜா ஓட அண்ணா அப்டின்கிற ஒரே காரணத்துக்காக கல்யாணம் பண்ணினது கிரேட் இராணி மா.....//


ஆமா டா ,அந்த காரணத்தை முன்னிறுத்தி கல்யாணம் பண்ணிக்கிட் டாங்க.

//ராஜன்க்கு எப்டி ரானிமாக்கு துரோகம் பண்ண மனசு வந்துச்சு....... ராஜன் பண்ண தப்பா ஒருத்தரு கூட தட்டி கேட்காம விட்டது என்ன கொடுமை.........//

இப்படியும் சில மனிதர்கள் இருக்காங்க ஷாலு.தவறு என தெரிந்தாலும் அவங்க சார்ந்த பக்கத்தை தான் நியாய படுத்துவாங்க 😭

//ராஜன் ஓட அப்பா அம்மா க்கு கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சி இல்லாமல் ராணி மெஸ் பிடுங்கிக் கொண்டது அநியாயம்....... எவ்ளோ கஷ்ட பட்டு அவங்க அந்த ஹோட்டல் லா devalop பண்ணிருப்பாங்க......😭😭😭😭😭😭//


உண்மையாக உழைப்பவர்கள் எத்தனை முறை வீழ்ந்தாலும் எழுவார்கள் டா 🥰🥰🥰🥰


//பட் ராணி மா வாழ்க்கைய வே பிச்சையா போட்டாச்சு... இது எல்லாம் என்ன அப்டின்னு விட்டுட்டு போறது...... அல்டிமேட்.......//


எஸ் ஷாலு ,அவங்க என்னைக்கும் ராணி தான்😍😍😍


//கஜா அவங்களோட போகாதது தான் இவங்களோட பிரிவுக்கு காரணம் ஆயிருச்சு....😥😥😥😥//

ஆமா டா, நிமிஷத்துல நம்ம எடுக்கிற முடிவு ,நிறைய திருப்பததை தரும்.அதன் பின்னாது யாராவது சந்தித்து பேசி இருக்கலாம் ,இருந்தும் கஜா வீட்டோடு அடைந்து கொள்ள, ராணி அந்த வீட்டிற்கு செல்ல முடியாத நிலையில் இருந்தாங்க.


//வாழ்ந்து காட்டுவெனு போய் அவங்க உறவுகலும் ஏத்துக்களை நாளும் தனியா வாழ்ந்து ஜெயிச்சு காட்டிருக்காங்க...... அந்த காலகட்டதிலேய.......😘😘😘😍😍😍//


ஆமா டா ,எல்லாரும் நம்ம கூட எல்லா நேரமும் இருப்பாங்கணு சொல்ல முடியாது.நமக்கு தேவையான சூழலில் நம்ம முடங கி போயிட்டா , அதன்பின் வரும் நம்ம தோல்விக்கு நம்ம மட்டும் தான் காரணம்.


//கஜா விஷ்ணு ஓட உருவத்தில் ராணி, ராணியம்மா ஹிரண்ய ஓட உருவத்தில் கஜாவையும் பாத்து அவங்க வாழ்க்கைய ஒட்டிருக்காங்க.....😥😥//

🧡அன்பின் தேடல், அன்பின் இணைப்பு மற்றொரு உருவத்தில் ❤


//சிக்கி, சிதைந்து, சிலிர்க்கும் பார்வைகள் ஓர் வரம் என்றால்
தவிர்த்து, தள்ளி நிறுத்தி, தகிக்கத் செய்யும் பார்வைகள் பெருவரம்..

வரத்தின் துவக்கம் தவம்
பெருவரத்தின் துவக்கம் உயிர்ப்பு நிறைந்த உறவு...

செம்ம வரிகள் ஸ்ரீ
👌👌👌👌💓💓💓💞💞💞//

இவ்வரிகள் உன்னை கவர்ந்ததில் மிகுந்த மகிழ்ச்சி ஷாலு.



//எப்பவும் போல இணைப்பு தகவல் சூப்பர் ஸ்ரீ....❣❣❣❣//

மிக்க நன்றி ஷாலு மா 😍

எத்தனை நிறைவான கருத்து.கதையின் உணர்வோடு பயணித்து இப்படியொரு கருத்து, அதிலும் மேற்கோள் காட்டி எழுதியது அத்தனை நிறைவு தருகிறது ஷாலு.thank you sooooo much da🥰🥰
😘😘😘😘😘😘😘😘😘😘❣️❣️❣️❣️❣️❣️❣️💞💞💞💞💓💓💓💓💓💓💓💓
 

Shalini M

Bronze Winner
Enna prems muunjila தக்காளி சட்னி ya🙊🙊🙊🙊




Okay okay da 🥰





அதே அதே 🥰 எவளோ பெரிய கமென்ட் ,அதுவும் bold la panni 🙄🙄 thank you ஷாலு மா🥰😘
😍
Thank you ஸ்ரீ...... என்னோட கமென்ட் கூட புகல்றதுக்கு 😘😘😘😘
 

Shalini M

Bronze Winner
அம்முமா🌹🌹🌹🌹🌷🌷🌷🌷

அவரவர் நியாயங்கள் அவரவர்க்கு...

கோணங்கள் கொண்டே கோலங்கள் வரைகிறோம்...

கோணாலாகி போனாலும் நியாங்கள் சொல்கிறோம்...

சேறு என்று தெரிந்தாலும் பூசியவர் பொறுத்து

வாசனையாக மாறுகிறது...

ஏற்றுகொள்ளதவர்கள் தூற்றப்படுகிறார்...

கலசம் உச்சியில் தான் வீற்றிருக்கும்...

அண்ணாந்து பார்க்கும் பொழுது கழுத்து வலித்தால் ...

கலசத்தின் மீது குறை காண முடியுமா...

அதன் கர்வத்தினை கலங்கம் சொல்ல முடியுமா..

தலை. நிமர்ந்து நிற்பதெல்லாம் தலை கணமாகிடுமா...

தகிடுதத்தம் பண்ணி தான் தலை சாய்த்து விட முடியுமா...

உச்சியில் இருப்பதால் அதன் உச்சம் அறியாது போனது அதன் தவறா...

வகை வகையாக தூற்றிவிட்டால் அதன் மீது தூசு படிந்திடுமா...

யார் என்ன சொன்னலும் உச்சம் உச்சம் தான் ....

சொச்சம் மிச்சம் மீதி என்பது எல்லாம் கிடையாது...




பெற்றவர்கள் செய்யும் பாவம் பிள்ளைகளுக்காம்...

உன் இச்சையின் எச்சமாய் நான்...

பிச்சையாய் போனதில் மிச்சமாய்...

தவறே செய்யாமல் தண்டிக்கப்பட்டு ...

தன்னிலை கெட்டு வார்த்தை விட்டு...

குறுகலாய் மனமது மருகலாய்...

குமைகிறேன்...இமை மூடியே நனைகிறேன்..

ஆற்றுவார் தேற்றுவார் இன்றி...

கரை(க்)கிறேன்....கண்ணிருடன் காலத்தினையும்...

கரை சேர விறைகிறேன்...

காலம் கைக்கொடுக்காமா...!!!
செம்ம 👏👏👏👏👏
 
Top