All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் , “ நான் உன்கையில் நீர்த்திவலை❤️ ” - கருத்துத் திரி

Srisamyuktha

Bronze Winner
Hi sri ma....
Again sorry ma intha time romba late😔😔
Rend epiku cmt pandra ma....
Ranima varathala vishnuku rba kovam vanthuruchu.... kajava patha ah ava ranima nu sollitu iruka...
Vishnu kaja kita sonn lines romba pidichathu... 💓💓💓💓💓💓💓
Athuku apram ore sad ma... romba paavama irunthchu... ranima vala kajava last minutes la paka mudiyala....
Eshwar kuda vishnu va pathu kalangitan...
Vishnu kuzhantha mathiri azhukaran... athu romba kashtama iruku..... 😥😥😥😥😥
Devagiyum rajanum pesikaranga....
Ranima kajava pathu paadi azhukarathu romba kanama iruthuchu😥😥😥😥😥😥
Antha song ketta ah enaku ennoda school days niyabagam varuthu sri ma...
Apram angeyum sanda varuthu veetuku vanthutanga... avanga fb start agiruchu.... ranimavum kajavum childhood frds💕💕💕💕semma frds.... ranima apave romba azhumaiya iruthurukanga.... semma getha ah...... kajavoda anna kirakaga mrg pannikitanga.... ipo varaikum super tha..... paavamm ranima intha rajan ehuku tha ipdi pannan... intha world la gens thappu panna mattum ladies atha adjust pannitu vazhanum nu expect pandranga.... but ranima great thani azhaga vazhnthu katti irukanga❣️❣️❣️❣️.... enaku romba kashtama iruku ranimavum kajavum pirichathu😢😢😢😢😢.......
Kajavoda athma santhi adaiyattum ava pona katasila tha ranima vanthu pathu irukanga avaluku athuve podhum nu tha ninaipa.... thozhi vanthutale....
Sri ma epavum pola extra information super...
Antha palas romba super ma💕💕💕💕💕💕... Thank you sri maaaaa💞💞💞💞💞💞💞
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இந்த பதிவை படிக்கும் போது ராணியம்மாவின் மேல் உள்ள மரியாதை உட்சத்தை தொட்டது என்றே சொல்லவேண்டும் சிஸ்.
பின்னே 1980 களில் ஒரு பெண்மணி, பெண் குழந்தையோடு யாருடைய துணையுமின்றி தனித்து நின்று போராடி வாழ்க்கையில் ஜெயித்து காட்டியிருக்கிறார் என்றால் அது சாதாரண விஷயம் அல்லவே 😯😯
தன் உயிருக்கு உயிரான தோழியின் அண்ணன் என்ற ஒரே காரணத்திற்காக 18வயதிலேயே திருமண பந்தத்தில் அடியெடுத்து வைத்து, பின் அக்குடும்பத்தின் பொருளாதாரத்தை உயர்த்தும் பொருட்டு சொந்த தொழில் தொடங்கி வருமானத்தை பெருக்கி அவர்களின் பொருளாதாரத்தை உயர்த்தியிருக்கிறார். ஆனால் அதற்கு பரிசாக கிடைத்ததோ துரோகம் மட்டுமே 😔 தோழியை தவிர்த்து அனைவரும் பொய்த்து போயினர் அவர் வாழ்வில் 😪 ராணி அம்மா ராஜனை அறைந்தது 👌👏👏 தவறு செய்த மகனை தட்டி கேளாமல், மகனை அடித்த மருமகளை அல்லவா வசைபாடினர் 😠 மருமகள் வேண்டாம், ஆனால் அந்த மருமகள் தொடங்கிய உணவகம் மட்டும் வேண்டும் அவர்களுக்கு, நன்றி கெட்டவர்கள். 'கட்டியவனையே பிச்சையிட்டேன், இதையும் பிச்சையென எடுத்துக் கொள் ' அந்த இடத்தில் உங்களின் இந்த குறிப்பிடல் மிக அருமை 👌 பெற்றோரும் கைவிட, அந்த தொழில் இல்லையென்றால் என்ன இன்னொரு தொழிலில் காலூன்றி அதிலும் ஜெயித்து காட்டிவிட்டார் நம் ராணி 👌அவருக்கு பொருத்தமான பெயர் தான்.

பெண்களை பறவைகளோடு மிக அழகாக ஒப்பிட்டு காட்டியிருந்தீங்க சிஸ். நீங்கள் சொன்னது முற்றிலும் உண்மை, வெகு சில பெண்கள் தான் ராணி அம்மாவை போல் வாழ்வில் உயர்ந்து பறக்கிறார்கள். ஏராளமானோர் றெக்கைகள் ஒடுக்கப்பட்ட பறைவைகள் போலவே வாழ்வில் ஒடுங்கி போய்விடுகிறார்கள். பெண்களுக்கு மன உறுதி எவ்வளவு முக்கியமென அழகாக சொல்லிவிட்டீர்கள் 👌 நம் சமூகமும் மாற வேண்டும்.
விஷ்ணுவில் ராணியையும், ஹிரண்யா வில் கஜாவையும் கண்டு தோழிகள் தங்கள் வாழ்வை அவர்களுடன் கழிக்கிறார்கள்.

கஜாவின் மறைவு விஷ்ணு - ராணி இருவரையும் தான் பெரிதும் பாதித்திருக்கிறது. மன்னிப்பு கேட்கும் எண்ணம் இருந்தும் காலம் கடத்தி கொண்டே போகிறான் விஷ்ணு. காலம் கடந்து கேட்கும் மன்னிப்பு ஏற்கப்படுமா தெரியவில்லை 🤔 கஜா மேல் ராணி கொண்ட அன்பு காலம் தாழ்த்தியேனும் அவனது செயலை மன்னிக்காவிடிலும் மறக்கவாவது செய்யும் என நம்புகிறேன். ஹிரண்யா ஒவ்வொரு செயலையும் ஈஸ்வரிடம் கேட்டு செய்வது விஷ்ணுவிற்கு கடுப்பை கிளப்புகிறது 😃

அழகிய காலங்கள் ஒற்றை நொடியில்
கரைந்து போகுமா?
இல்லை கடந்து தான் போகுமா?
போனதே !!

👌👌👌
சிக்கி, சிதைந்து, சிலிர்க்கும் பார்வைகள் ஒரு வரம் என்றால்,
தவிர்த்து, தள்ளி நிறுத்தி, தகிக்க செய்யும் பார்வைகள் பெரு வரம்.

வரத்தின் துவக்கம் தவம்,
பெரு வரத்தின் துவக்கம் உயிர்ப்பு நிறைந்த உறவு.

அருமையான வரிகள் சிஸ் 👌👌👌😍😍😍

படப்பிடிப்பகம் 👏👌
காரைக்குடியில் அரண்மனைகள் இருப்பது பற்றி அறிந்தது எனக்கு புதிய தகவல் 🙏😍 அதை கண்ணை கவரும் படத்துடன் விளக்கியது இன்னும் அருமை 👌😍



ரம்யா sis ❣️

//இந்த பதிவை படிக்கும் போது ராணியம்மாவின் மேல் உள்ள மரியாதை உட்சத்தை தொட்டது என்றே சொல்லவேண்டும் சிஸ்.
பின்னே 1980 களில் ஒரு பெண்மணி, பெண் குழந்தையோடு யாருடைய துணையுமின்றி தனித்து நின்று போராடி வாழ்க்கையில் ஜெயித்து காட்டியிருக்கிறார் என்றால் அது சாதாரண விஷயம் அல்லவே 😯😯//


ஆமா ரம்யா sis, அதனால் தான் முதல் அத்தியாயத்தில் ஒரு வரி வரும்.அவர் ராணி தான்.மனதால் ,எண்ணத்தால் அவர் என்றும் ராணி என்று ஒரு வரிவரும்.அது அவர் வாழ்ந்த வாழ்க்கையைக் கொண்டு தான் எழுதியது.🥰🥰🥰



//தன் உயிருக்கு உயிரான தோழியின் அண்ணன் என்ற ஒரே காரணத்திற்காக 18வயதிலேயே திருமண பந்தத்தில் அடியெடுத்து வைத்து, பின் அக்குடும்பத்தின் பொருளாதாரத்தை உயர்த்தும் பொருட்டு சொந்த தொழில் தொடங்கி வருமானத்தை பெருக்கி அவர்களின் பொருளாதாரத்தை உயர்த்தியிருக்கிறார். //

பாசத்தில் நாம் மற்றவர்களுக்காக செய்யும் போது அந்த உழைப்பை பெரிதாக கொள்ள மாட்டோம்.ஒருவேளை ராணி கடமையாக தொழிலை கையெலுடுத்து இருந்தால் வெற்றி பெறாது போயிருப்பார்.ஆனால், அவரது உழைப்பு கடமைக்காக அல்லாது பாசததால் நிறைந்து வழிந்தது.அதனால் வெற்றி சாத்தியமாயிற்று 🥰🥰🥰



//ஆனால் அதற்கு பரிசாக கிடைத்ததோ துரோகம் மட்டுமே 😔 //


💔💔


//தோழியை தவிர்த்து அனைவரும் பொய்த்து போயினர் அவர் வாழ்வில் 😪 ராணி அம்மா ராஜனை அறைந்தது 👌👏👏 //

அதான, அவர் செஞ்சதுக்கு இதுக் கூட தரலைனா நல்லா இருக்காதுல ,அதான் தயஙகாம தந்திட்டாங்க ராணி மா 🥰🥰🥰


//தவறு செய்த மகனை தட்டி கேளாமல், மகனை அடித்த மருமகளை அல்லவா வசைபாடினர் 😠 //

பெரும்பாலும் பெற்றோர்கள் அன்று துவங்கி இன்று வரை அப்படி தான் இருக்கிறார்கள் sis ☹️☹️☹️



//மருமகள் வேண்டாம், ஆனால் அந்த மருமகள் தொடங்கிய உணவகம் மட்டும் வேண்டும் அவர்களுக்கு, நன்றி கெட்டவர்கள்.//

அதே அதே..நன்றி கெட்டவர்கள்.😦



// 'கட்டியவனையே பிச்சையிட்டேன், இதையும் பிச்சையென எடுத்துக் கொள் ' அந்த இடத்தில் உங்களின் இந்த குறிப்பிடல் மிக அருமை 👌 //


நன்றி ரம்யா sis 😍

//பெற்றோரும் கைவிட, அந்த தொழில் இல்லையென்றால் என்ன இன்னொரு தொழிலில் காலூன்றி அதிலும் ஜெயித்து காட்டிவிட்டார் நம் ராணி 👌அவருக்கு பொருத்தமான பெயர் தான்.//

😍😍🥰🥰 ஆமா ரம்யா sis 😍


//பெண்களை பறவைகளோடு மிக அழகாக ஒப்பிட்டு காட்டியிருந்தீங்க சிஸ். நீங்கள் சொன்னது முற்றிலும் உண்மை, வெகு சில பெண்கள் தான் ராணி அம்மாவை போல் வாழ்வில் உயர்ந்து பறக்கிறார்கள். ஏராளமானோர் றெக்கைகள் ஒடுக்கப்பட்ட பறைவைகள் போலவே வாழ்வில் ஒடுங்கி போய்விடுகிறார்கள். பெண்களுக்கு மன உறுதி எவ்வளவு முக்கியமென அழகாக சொல்லிவிட்டீர்கள் 👌 நம் சமூகமும் மாற வேண்டும்.//


அந்த பத்தி உங்களுக்கு பிடித்ததில் மிகுந்த மகிழ்ச்சி ரம்யா sis 😍 உண்மை தானே மன உறுதி தான் இங்கு அனைவருக்கும் தடையாகி போகிறது.நிச்சயமாக மனதால் பெண்களுக்கு நல்ல மாற்றம் வேண்டும்❤️

//விஷ்ணுவில் ராணியையும், ஹிரண்யா வில் கஜாவையும் கண்டு தோழிகள் தங்கள் வாழ்வை அவர்களுடன் கழிக்கிறார்கள்.//

🥰🥰🥰 அன்பு நிறைந்த தேடலை சமன் செய்ய ஒரு உறவு. அவ்வுறவையே தொலைத்த உறவாக பதித்துக் கொள்ளும் மனித மனம்.சற்று விந்தை தான்.😯


//கஜாவின் மறைவு விஷ்ணு - ராணி இருவரையும் தான் பெரிதும் பாதித்திருக்கிறது. மன்னிப்பு கேட்கும் எண்ணம் இருந்தும் காலம் கடத்தி கொண்டே போகிறான் விஷ்ணு. காலம் கடந்து கேட்கும் மன்னிப்பு ஏற்கப்படுமா தெரியவில்லை 🤔//

அவர் ராணி தான் .., இந்த விஷயத்திலும் ராணி என நிருப்பிப்பார் என நம்புகிறேன் 🥰🥰



// கஜா மேல் ராணி கொண்ட அன்பு காலம் தாழ்த்தியேனும் அவனது செயலை மன்னிக்காவிடிலும் மறக்கவாவது செய்யும் என நம்புகிறேன். ஹிரண்யா ஒவ்வொரு செயலையும் ஈஸ்வரிடம் கேட்டு செய்வது விஷ்ணுவிற்கு கடுப்பை கிளப்புகிறது 😃//

மன்னிப்பதை வெகு உயர்ந்தது மறப்பது.ஆனால் உள்ளத்து உணர்வுகள் ஒன்று சேர்க்கையில் அனைத்தும் அத்தனை சுலபத்தில் நடப்பது இல்லையே.காணலாம் ..,

//அழகிய காலங்கள் ஒற்றை நொடியில்
கரைந்து போகுமா?
இல்லை கடந்து தான் போகுமா?
போனதே !!

👌👌👌
சிக்கி, சிதைந்து, சிலிர்க்கும் பார்வைகள் ஒரு வரம் என்றால்,
தவிர்த்து, தள்ளி நிறுத்தி, தகிக்க செய்யும் பார்வைகள் பெரு வரம்.

வரத்தின் துவக்கம் தவம்,
பெரு வரத்தின் துவக்கம் உயிர்ப்பு நிறைந்த உறவு.

அருமையான வரிகள் சிஸ் 👌👌👌😍😍😍//


மிக்க நன்றி ரம்யா sis.உங்களுக்கு பிடித்ததில் மகிழ்ச்சி ❤️


//படப்பிடிப்பகம் 👏👌
காரைக்குடியில் அரண்மனைகள் இருப்பது பற்றி அறிந்தது எனக்கு புதிய தகவல் 🙏😍 அதை கண்ணை கவரும் படத்துடன் விளக்கியது இன்னும் அருமை 👌😍//

ஆமா ரம்யா அது ரொம்ப ரொம்ப famous.video பாருங்க utube la..கண்டுக் கொண்டேன் மூவி ல கூட varumla.

காரைக்குடி அரண்மனை மிக பிரபலம் மற்றும் சிறப்பு வாய்ந்தது.நேரம் கிடைத்தால் இணையத்தில் காணுங்கள்🥰🥰

மிக்க நன்றி ரம்யா sis 😍❣️

திருத்தமான கருத்து.கதையோடு பயணித்து ஒவ்வொரு முறை நீங்கள் அனைவரும் தரும் கருத்துகளே என்னை முன்னேற்றி செல்கிறது.

🙏🙏 மனம் நிறைந்த அன்புகள் ரம்யா sis 😍
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நான் இவர்கள் உறவை கணித்தது சரியாகவே அமைந்தது சிஸ். எனக்கு ஒரு சந்தேகம், அத்தை அல்லது மாமன் மகனை அத்தான் என அழைப்பார்கள், இங்கே விஷ்ணு ஹிரண்யா வுக்கு மாமன் முறை தானே வருகிறது ஆனால் அவள் அய்த்தான் என்று தானே அழைக்கிறாள். ஒரு சிலர் வழக்கங்களில் அப்படியும் அழைப்பார்களோ, கொஞ்சம் தெளிவுபடுத்துங்கள் சிஸ்.


மிக சரியாக கேட்டு இருக்கீங்க ரம்யா sis 😍

அத்தை அல்லது மாமன் மகனை தான் அய்த்தான் என அழைப்பார்கள்.அதே போல கட்டிக்க போறவங்களையும் அப்படி அழைப்பாங்க.


அதோட ரெண்டாவது டீசரில் ஹிரண்யா , " மாமா " என்று தான் அழைப்பாள்.

அடுத்த அத்தியாயம் மற்றும் இதுவரை வந்த அத்தியாயத்திலும் அவளது மனதின் அழைப்பு தான் வெளிய முணுமுணுக்கும்.




அவள் ஏன் அப்படி அழைக்க வேண்டும் ! அவளது மனதோடு ஏன் அப்படி பதிய வேண்டும் ?
அவளுக்கு யார் அப்படி சொல்லி தந்தது ! அவளுக்கு ஏன் அவனிடம் அத்தனை உரிமை என்பதை இனி வரும் அத்தியாயங்களில காணலாம் ரம்யா sis 😍❣️

சரியான சந்தேகம் தான் ரம்யா sis ,விடை விரைவில் ❤️❤️
 

Shalini M

Bronze Winner
Hi sri ma....
Again sorry ma intha time romba late😔😔
Rend epiku cmt pandra ma....
Ranima varathala vishnuku rba kovam vanthuruchu.... kajava patha ah ava ranima nu sollitu iruka...
Vishnu kaja kita sonn lines romba pidichathu... 💓💓💓💓💓💓💓
Athuku apram ore sad ma... romba paavama irunthchu... ranima vala kajava last minutes la paka mudiyala....
Eshwar kuda vishnu va pathu kalangitan...
Vishnu kuzhantha mathiri azhukaran... athu romba kashtama iruku..... 😥😥😥😥😥
Devagiyum rajanum pesikaranga....
Ranima kajava pathu paadi azhukarathu romba kanama iruthuchu😥😥😥😥😥😥
Antha song ketta ah enaku ennoda school days niyabagam varuthu sri ma...
Apram angeyum sanda varuthu veetuku vanthutanga... avanga fb start agiruchu.... ranimavum kajavum childhood frds💕💕💕💕semma frds.... ranima apave romba azhumaiya iruthurukanga.... semma getha ah...... kajavoda anna kirakaga mrg pannikitanga.... ipo varaikum super tha..... paavamm ranima intha rajan ehuku tha ipdi pannan... intha world la gens thappu panna mattum ladies atha adjust pannitu vazhanum nu expect pandranga.... but ranima great thani azhaga vazhnthu katti irukanga❣❣❣❣.... enaku romba kashtama iruku ranimavum kajavum pirichathu😢😢😢😢😢.......
Kajavoda athma santhi adaiyattum ava pona katasila tha ranima vanthu pathu irukanga avaluku athuve podhum nu tha ninaipa.... thozhi vanthutale....
Sri ma epavum pola extra information super...
Antha palas romba super ma💕💕💕💕💕💕... Thank you sri maaaaa💞💞💞💞💞💞💞
கமென்ட் சூப்பர் உதி........ 💓💓💓💓💓

எங்க டி போய்ட்டா ஆளையே காணோம் உன்ன...........😾😾😾😾
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அம்முமா🌹🌹🌹🌹🌷🌷🌷🌷

அவரவர் நியாயங்கள் அவரவர்க்கு...

கோணங்கள் கொண்டே கோலங்கள் வரைகிறோம்...

கோணாலாகி போனாலும் நியாங்கள் சொல்கிறோம்...

சேறு என்று தெரிந்தாலும் பூசியவர் பொறுத்து

வாசனையாக மாறுகிறது...

ஏற்றுகொள்ளதவர்கள் தூற்றப்படுகிறார்...

கலசம் உச்சியில் தான் வீற்றிருக்கும்...

அண்ணாந்து பார்க்கும் பொழுது கழுத்து வலித்தால் ...

கலசத்தின் மீது குறை காண முடியுமா...

அதன் கர்வத்தினை கலங்கம் சொல்ல முடியுமா..

தலை. நிமர்ந்து நிற்பதெல்லாம் தலை கணமாகிடுமா...

தகிடுதத்தம் பண்ணி தான் தலை சாய்த்து விட முடியுமா...

உச்சியில் இருப்பதால் அதன் உச்சம் அறியாது போனது அதன் தவறா...

வகை வகையாக தூற்றிவிட்டால் அதன் மீது தூசு படிந்திடுமா...

யார் என்ன சொன்னலும் உச்சம் உச்சம் தான் ....

சொச்சம் மிச்சம் மீதி என்பது எல்லாம் கிடையாது...




பெற்றவர்கள் செய்யும் பாவம் பிள்ளைகளுக்காம்...

உன் இச்சையின் எச்சமாய் நான்...

பிச்சையாய் போனதில் மிச்சமாய்...

தவறே செய்யாமல் தண்டிக்கப்பட்டு ...

தன்னிலை கெட்டு வார்த்தை விட்டு...

குறுகலாய் மனமது மருகலாய்...

குமைகிறேன்...இமை மூடியே நனைகிறேன்..

ஆற்றுவார் தேற்றுவார் இன்றி...

கரை(க்)கிறேன்....கண்ணிருடன் காலத்தினையும்...

கரை சேர விறைகிறேன்...

காலம் கைக்கொடுக்காமா...!!!


வாசு மா ❣️

மிரட்டில் பதிவு.ரசித்து ,லயித்து , அதிசயத்து பார்க்கிறேன் 🥰 உங்களது தமிழுக்கு முதல் வணக்கம் 🙏



//அம்முமா🌹🌹🌹🌹🌷🌷🌷🌷

அவரவர் நியாயங்கள் அவரவர்க்கு...

கோணங்கள் கொண்டே கோலங்கள் வரைகிறோம்...

கோணாலாகி போனாலும் நியாங்கள் சொல்கிறோம்...//


எவளோ அருமையா சொல்லி இருக்கீங்க. " கோணலாகி போனாலும் நியாயஙகள் சொல்கிறோம் ". - மனித மனம் காரணம் சொல்லி பழகி விட்டது. அதன் விளைவு இவ்வாக்கிய நிதர்சனம் 🥰🥰



//சேறு என்று தெரிந்தாலும் பூசியவர் பொறுத்து

வாசனையாக மாறுகிறது...//

இக்கால நியாய தர்மங்கள் விருப்பு வெறுப்பு கொண்டே கணக்கிட படுகிறது☹️☹️☹️



//ஏற்றுகொள்ளதவர்கள் தூற்றப்படுகிறார்...//


😦😦 ஆமா வாசு மா😭

//கலசம் உச்சியில் தான் வீற்றிருக்கும்...

அண்ணாந்து பார்க்கும் பொழுது கழுத்து வலித்தால் ...

கலசத்தின் மீது குறை காண முடியுமா...

அதன் கர்வத்தினை கலங்கம் சொல்ல முடியுமா..

தலை. நிமர்ந்து நிற்பதெல்லாம் தலை கணமாகிடுமா...

தகிடுதத்தம் பண்ணி தான் தலை சாய்த்து விட முடியுமா...

உச்சியில் இருப்பதால் அதன் உச்சம் அறியாது போனது அதன் தவறா...

வகை வகையாக தூற்றிவிட்டால் அதன் மீது தூசு படிந்திடுமா...

யார் என்ன சொன்னலும் உச்சம் உச்சம் தான் ....

சொச்சம் மிச்சம் மீதி என்பது எல்லாம் கிடையாது...//



அம்மாடி.. எவளோ அருமையான ஒப்பீடு.அதற்கான வார்த்தை அமைப்பு.இது வேற லெவல் வாக்கியம் .சிலிர்க்கும் கணஙகள் இவை எனக்கு. எனது எழுத்துகள கதாபாத்திரத்துக்கு உயிரும் ,உணர்வும் தருகிறது என்றால் உங்களது கருத்துகள உயிர்ப்பை தருகிறது.உள்ளிருந்து உணர செய்கிறது.நீங்கள் உணர்ந்ததை சொல்கிறது.மிக்க நன்றி வாசு மா




//பெற்றவர்கள் செய்யும் பாவம் பிள்ளைகளுக்காம்...

உன் இச்சையின் எச்சமாய் நான்...

பிச்சையாய் போனதில் மிச்சமாய்...

தவறே செய்யாமல் தண்டிக்கப்பட்டு ...

தன்னிலை கெட்டு வார்த்தை விட்டு...

குறுகலாய் மனமது மருகலாய்...

குமைகிறேன்...இமை மூடியே நனைகிறேன்..

ஆற்றுவார் தேற்றுவார் இன்றி...

கரை(க்)கிறேன்....கண்ணிருடன் காலத்தினையும்...

கரை சேர விறைகிறேன்...

காலம் கைக்கொடுக்காமா...!!!//


விஷ்ணுவிற்கான வரிகள் . அவனே பேசுற மாதிரி இருக்கு .எத்தனை எதுகை மோனை உபயோகிப்பு🥰🥰
காலம் கைக் கொடுக்கும்.காலத்தில் அவனது பாதியும் இடம் தரும்.இருந்தும் சற்று காலமெடுக்கும்,அதுவே சற்று காலத்தை நகர்த்தும்.விரைவில் அடுத்தடுத்து காணலாம் வாசு மா.


மெர்சலாகிட்டேன் வாசு மா 😍❣️ மனம் நிறைந்த நன்றி. எழுதிய உணர்வு உங்களை சேர்ந்ததில் மகிழ்ச்சி ❤️
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எந்த காலமாக இருந்தாலும் மனிதர்களின் மனம் மாறுபடும் என்பதற்கு உதாரணமாக ராணி இருக்கிறார் சகோ

ராணி சமுதாயத்தின் பேச்சுகளைப் பற்றி கவலைப்படாமல் தன் வாழ்க்கை தரத்தை உயர்த்தியது அதும் அந்த காலத்தில் என்றால் போற்ற வேண்டிய விஷயம் சகோ
😲😲😲😲😲😲😲😲

ராணியின் பாத்திரம் உங்களுக்கு பிடித்ததில் மிகுந்த மகிழ்ச்சி கவிதா sis 😍

மிக்க நன்றி sis 😍❣️
 
Top