All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் , “ நான் உன்கையில் நீர்த்திவலை❤️ ” - கருத்துத் திரி

Hanza

Bronze Winner
Hanza ma ❣

//Wow... Nice epi daa😍😍😍😍//


நன்றிகள்🥰

//Rani pen singam 🦁//



//Last epi...🙈🙈🙈🙈🙈 Aduthathu romance a????? 😜😜😜😜//

Liteah 🤭 eppadi varum nu theriyala ..appuram naan solli ,appadi ethum இல்லைனு நீங்க சொல்லிட்டா 🙈 அதான் இப்போ நான் theriyalainea solidrean 🏃‍♀️🏃‍♀️

//(Vishnu moonjikki romance vanduttaaalum...🤣🤣🤣🤣 GEM tane avan.)//


Enna oru அவமானம்.வெட்கம் ..வேதனை..துக்கம்..

நல்லவேளை இதெல்லாம் விஷ்ணு - க்கு தான் நமக்கு இல்லை 🙈🙈🏃‍♀️
🏃‍♀️🏃‍♀️
Adane namakku eppo athellam irunthirukkum🤣🤣🤣🤣
 

Chitrasaraswathi

Well-known member
ஏன் விஷ்ணு, அவன் அண்ணனும் ராணியம்மாவின் நியாயத்தை புரிந்துக் கொள்ளாமல் இருக்கிறார்கள். அவர்கள் அவ்வளவு முட்டாள்களா. ஊர் உலகத்தில் என்ன நடந்தது என்றுகூட தெரியாமல் வளர்ந்திருக்கிறார்களா?. ராணியம்மா கணவரை இரண்டாம் திருமணம் செய்த அம்மா, அவர் ஆரம்பித்த மெஸ் அவர்களால் பிடுங்கப்பட்டது, எதுவும் தெரியாத முட்டாள்களாக வளர்ந்திருக்கிறார்களா? திரும்ப திரும்ப எங்க அம்மாவை சொன்னதால்தானு சொல்றானுகளே, அந்த அம்மாவை நடுத்தெருவில் நிறுத்தியது தெரியாதா? போங்கமா எனக்கு ராணியம்மா, ஈஸ்வரை தவிர யாரையும் பிடிக்கலை.
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றி விட்ட கணக்காகிவிட்டதே
எதை சொல்றீங்க இந்து மா..புரியவில்லை🤔🤔🤔

என்னவா இருக்கும் 🙄🙄
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஏன் விஷ்ணு, அவன் அண்ணனும் ராணியம்மாவின் நியாயத்தை புரிந்துக் கொள்ளாமல் இருக்கிறார்கள். அவர்கள் அவ்வளவு முட்டாள்களா. ஊர் உலகத்தில் என்ன நடந்தது என்றுகூட தெரியாமல் வளர்ந்திருக்கிறார்களா?. ராணியம்மா கணவரை இரண்டாம் திருமணம் செய்த அம்மா, அவர் ஆரம்பித்த மெஸ் அவர்களால் பிடுங்கப்பட்டது, எதுவும் தெரியாத முட்டாள்களாக வளர்ந்திருக்கிறார்களா? திரும்ப திரும்ப எங்க அம்மாவை சொன்னதால்தானு சொல்றானுகளே, அந்த அம்மாவை நடுத்தெருவில் நிறுத்தியது தெரியாதா? போங்கமா எனக்கு ராணியம்மா, ஈஸ்வரை தவிர யாரையும் பிடிக்கலை.

சித்ரா மா ❣️

//ஏன் விஷ்ணு, அவன் அண்ணனும் ராணியம்மாவின் நியாயத்தை புரிந்துக் கொள்ளாமல் இருக்கிறார்கள். அவர்கள் அவ்வளவு முட்டாள்களா. ஊர் உலகத்தில் என்ன நடந்தது என்றுகூட தெரியாமல் வளர்ந்திருக்கிறார்களா?. //

கண்டிப்பா தெரியாம இல்லை.முன்பே குறிப்பிட்டு இருந்தேன்.ஈஸ்வர் இந்த விஷயத்தை எடுத்துக் கொள்வதற்கும்,விஷ்ணு இந்த விஷயத்தை எடுத்துக் கொள்வதற்கும் உள்ள வித்தியாசத்தை.அப்படியிருக்க , வர்ணா விட்டு செல்கையில் தான் விஷ்ணுவே அவரது வலியை உணர்ந்தான்.நான் சொல்ல வந்ததும் இது தான்.

இங்கு யாரும் அவரவர் வலி தாண்டி மற்றவர் இடததில் நின்று யோசிப்பது இல்லை.அவரவர் சரி மட்டும் தான் அவர்களுக்கு..

தெரியாமல் இல்லை, தெரிந்து அவர்களால் மாற்றிக் கொள்ள முடியாது இருக்கிறார்கள்.இப்பொழுது தான் விஷ்ணு உணர்ந்து உள்ளான்.நாட்கள் கடந்தால் வேந்தன் உணரலாம்.




//ராணியம்மா கணவரை இரண்டாம் திருமணம் செய்த அம்மா, அவர் ஆரம்பித்த மெஸ் அவர்களால் பிடுங்கப்பட்டது, எதுவும் தெரியாத முட்டாள்களாக வளர்ந்திருக்கிறார்களா? திரும்ப திரும்ப எங்க அம்மாவை சொன்னதால்தானு சொல்றானுகளே, அந்த அம்மாவை நடுத்தெருவில் நிறுத்தியது தெரியாதா? //

மா ! நம்ம கதையை ராணி அம்மா கோணத்தில் பார்க்கிறோம்.விஷ்ணு - வேந்தனுக்கு உண்மை தெரிந்தாலும் ,அவங்க அம்மா - அவங்க அப்பா என்ற எண்ணம் விட்டு போயிடுமா ? அதே போல் விஷ்ணுவுக்கு அவர் மீது என்றும் மதிப்பு உண்டு. கஜாவை பார்க்க வராதத்தில் உண்டான கோபம்,அவரது வார்த்தையில் மிகுந்து எழுந்தது.

எந்த பையனா இருந்தாலும் அவங்க அம்மாவை சொன்னா ,தப்பு சரி தாண்டி முதல்ல கோபப் படதான் செய்வாங்க.அதோட ராணியை அவங்க சாதாரணமாக கடக்கலை. வர்ணா என்ன சொன்னாலும் அவங்க மேல மதிப்பும்,அவங்க கடந்த காலத்து மேல மரியாதையும் இருந்தனால தான் அவனுக்கு நடப்பது அனைத்தையும் ஏற்றுக் கொண்டான்.

இதையெல்லாம் நான் நியாய படுதத சொல்லல மா.நான் கதாப்பததிரம் முடிவு செய்யும் போதே, இவர்கள் இப்படி தான் ,இப்பொழுது உணர்வார்கள்,எப்பொழுது கடப்பார்கள் என்று யோசித்து தான் எழுதினேன்.

ஆக,உங்கள் கேள்வியும் கோபமும் நியாயமானது.அதோடு நான் எழுதிய காட்சி அதே போல் உங்களை சேர்ந்ததில் மகிழ்ச்சி மா🥰🥰😍



//போங்கமா எனக்கு ராணியம்மா, ஈஸ்வரை தவிர யாரையும் பிடிக்கலை.//

மிக்க நன்றி மா😍❣️.ரொம்ப பிடித்து எழுதிய கேரக்டர் ராணி.அது உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி 🥰
 

Kirthika Balan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sri 💚..

Finally ranimma and vishnu engal veetu ellam days karthihai padiyachu ❤❤
( ha ha rani and vishnu combo nale enaku hema panuna comedy than mindla coming 🤣🤣🤣🤣 )....

Wow alagaana epi sri... ❤❤

Enaku vishnu marriage ku first othukama irukavum ( me mind voice - adei kidacha chance vitruratha daww sandaiyaalam apuram pathukoe nu than)😯😯😯

Neraya idathula romba alagaana varikal sollirukeenga....
" Vali thantha vanga kita than marunthu irukum " and " naama anba thinikka koodathu , al hvng their own space'nu "... " Ella manitharkalukum thaviria tharungal iruku "
All power ful dailogues from ranimmma ❤❤❤....
Ennna lady daw rani... She s self made sri ❣❣
Marraige date vara fixing poyachu... La la la..Moment paa varna ku.... ❤❤
Avaloda ekkangaal thavam niravera pora aluthathula avalala react kooda pana mudiyama otrai neerthavalaiyaa velipaduthra... ( Na inga sariya solala.. but u varanjutaya alaga ❣️❣️ )

So next is blusing epi ya jriIiiiii 🙈🙈🙈🙈.... He he type paniteengaala 🙈🙈🙈..

Vishnu ranimma va kajamma wish nu seat la utkara sona place la kannu kalangiduchu sri ❤❤
Alaga maded sri... Sema 💚💚..
Odiyanga next epi voda ❤❤🤣🤓
 

Ramyasridhar

Bronze Winner
ஈஸ்வர் விஷ்ணுவின் முன் அவனது வர்ணா மா மீதான உரிமையை காட்டுவது சிறுபிள்ளைகள் செயல் போல் இருந்தாலும் அதில் அவனது அன்பும், அக்கறையும், உரிமையுணர்வும் நிறைந்து தெரிகிறது 😍

அவர்கள் இருவரையும் ஒன்றாக கண்ட ராணி அம்மாவுக்கு வருத்தம் தானென்றாலும் பேத்தியின் எதிர்காலத்தை முன்னிட்டு அவளிடம் அவள் மனநிலையை அறிந்து கொள்ள பேசுகிறார். அதில் விஷ்ணு மேல் அவள் கொண்ட காதலையும் அதை தனக்காக அவள் விட்டுக்கொடுக்க நினைப்பதையும் எண்ணி வருந்துகிறார். என்னதான் அவள் கண்களை மூடி கொண்டு உணர்வுகளை மறைத்தாலும் அவர் செல்லப் பேத்தியின் மனதை படித்து விட்டார்.

கஜா வை போல் இவள் வாழ்க்கையும் ஆகிவிடுமோ என அச்சம் கொள்கிறார். சின்னவர்கள் மூலம் தங்கள் தோழியை பெரியர்வர்கள் கண்டார்கள் என்றால் வர்ணா தன் பாட்டியின் குணத்தை தன் அய்த்தானிடமும், தன் அத்தையின் குணத்தை வர்ணாவின் மீது விஷ்ணுவும் கண்டு காதல் கொண்டுள்ளனர். இங்கே ஈஸ்வருக்கும் ராணி அம்மாவுக்கும் விஷ்ணுவை பிடிக்கிறதோ இல்லையோ அவர்களின் வர்ணாமாவிற்காக யோசிக்க தொடங்கி விட்டார்கள் 🤩

அந்த எண்ணம் தான் அவரை ராணி மெஸ்ஸுக்கும் அழைத்து செல்கிறது.கடையை ஆராய்ந்தவர் விஷ்ணுக்கு மனதினில் ஒரு சபாஷ் சொல்லிவிட்டார் 👏இருவருக்குமே பேசுவதில் தயக்கம் தான். பொதுவான விஷயத்தை விஷ்ணு ஆரம்பித்தாலும், ராணி அம்மாள் அதற்கும் அவனுக்கு வேண்டிய அறிவுரை வழங்கிவிட்டு நேரிடையாக பேச தயாராகி விட்டார்.

விஷ்ணு அவரை ஒருமையில் அழைக்க சொன்ன போதும் ராணி அம்மாள் மரியாதையுடனே தான் அழைக்கிறார். இந்த இடத்தை சரியாக கொண்டு சென்றிருக்கிறீர்கள்👏👏

விஷ்ணு வர்ணாவை குறித்து அவரிடம் புகார் வாசிப்பது போல் அவன் மனதில் உள்ளதையெல்லாம் அவரிடம் கொட்டுவதும், அதற்கு அவர் வாழ்க்கை பாடத்தை கற்று தருவது போல் பதிலளிப்பது எல்லாம் 👌

'அவளுக்கே புரியல உங்களுக்கு மட்டும் எப்படி புரியும் ' என அவன் மனதில் உள்ளதையெல்லாம் அவரிடம் கொட்டிவிட்டான். அந்த இரு பத்திகளிலும் அவன் மனகாயங்களையும், அதற்கு ஆறுதல் தேட கூட ஆளில்லாமல் அவன் தவிப்பதையும் மிக அழகாக உணர்த்திவிட்டடீர்கள் 👌😍 அப்போது கூட ஈஸ்வருக்கு அவன் வர்ணா மா செய்த காரியத்தை விட இவன் அவள் மீது குற்றப்பத்திரிக்கை வாசிப்பது தான் பிடிக்கவில்லை 😄என்னவொரு அன்பு அவள் மீது 😍 ராணி அம்மாளோ தனக்கு அவன் சொல்வது புரிந்தாலும் உங்கள் பிரச்சனையை நீங்கள் தான் பேசி தீர்த்துக்கொள்ள வேண்டுமென தெளிவாக உறைத்துவிட்டு, வேந்தனை தன்னை வந்து பார்க்க சொல்லுமாறு அடுத்தக் கட்ட நடவடிக்கைக்கு தயாராகிறார்.

விஷ்ணுவின் புலம்பல் அப்போதும் நின்ற பாடில்லை அதற்கும் அவர் சரியான விடையை சொல்லிவிட்டு தான் செல்கிறார் 👌

கடையை விட்டு அவர் கிளம்பும் சமயம் தன் அத்தையின் கடைசி ஆசையை அவன் கூறும்போது, அவர் அதை மறுத்து, அதற்கு தக்க காரணம் கூறுவது 👌👌 கஜாவை பார்க்க வரமால் போனதற்கான அவரது விளக்கம், பின் "என்னைக்காவது மனசார உங்களோட ஒட்ட முடியும்னு எனக்கு தோணுச்சுனா கண்டிப்பா இந்த ஆசையை நிறைவேத்துவேன், கஜாக்காக இல்லை உங்களுக்காக " - ராணி அம்மாள் தன் ஒவ்வொரு சொல்லிலும் செயலிலும் தான் ராணி என்பதை நமக்கு உணர்த்திக்கொண்டே தான் இருக்கிறார்👌👌👌👌

வேந்தன் இவர்களை சந்திக்க வந்த பின் கல்யாண வேலையெல்லாம் விரைவாக நடக்கிறது. தேவகிக்கு மகள் வாழ்வு மலர போவதை நினைத்து மகிழ்ச்சி. அவர்கள் சென்றவுடன் ராணி அம்மாவின் மடியில் வர்ணா புதைந்து கொள்வதும், அவர் அவளை அணைத்து முத்தமிடுவதும் மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது 😍

பேச்சற்ற மௌனம், வார்த்தையில் அடங்கா நன்றிக்கடன், மனம் உரைக்கும் கண்ணீர், ஆறுதல் சொல்லும் தழுவல், இந்த நொடி பேரின்பம் என்று நிமிடங்கள் வார்த்தைகள் தேவையில்லா புரிதலின் உச்சமாக கழிய 👌👌👌👌👌

தவித்திடும் நொடிகளிடம் சொல்லிவிடு
நான் இனி உனதென !
தகித்திடும் இளமையிடம் சொல்லிவிடு
நீ இனி எனதென !
ஏக்கங்கள் ஏகாந்தமாக
முழுதாய் நான் உன்னில் சேர, காதல்
பித்தத்தின் மோட்சத்தில் வாழ்ந்திடுவோம் ஒரு பெருவாழ்வு !

👌👌👌👌🥰🥰🥰🥰🥰🥰

தன் ஆயாவின் சம்மதம் கிடைத்தவுடன் தான் தன் அய்த்தானை காண வந்திருக்கிறாள். அவள் வரவு அவன் கோவத்தை போக்குமா என பார்க்கலாம்.

மிக அருமையான பதிவு சிஸ். எல்லா வரிகளையும் குறிப்பிட்டு சொல்லவேண்டும். அவ்வளவு அற்புதமாக கொடுத்திருக்கீங்க, எல்லா வரிகளையும் குறிப்பிட்டு சொல்ல முடியாத போதும் முடிந்தவரை சொல்லியிருக்கிறேன். மொத்தத்தில் வாவ் சொல்ல வைக்கும் பதிவு 👌👌👌👏👏👏👏🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
 
Top