All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் , “ நான் உன்கையில் நீர்த்திவலை❤️ ” - கருத்துத் திரி

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
புஷ்பா - இந்த புஷ்பாவிற்கு என்ன இப்படியொரு ஆங்காரம். அவள் ஈஸ்வருடன் பாசமோடு பழகுவதை தவறாக புரிந்து கொண்டு அவர்களுக்குள் திருமணம் செய்து வைக்க ஆசை கொண்டதில் தவறில்லை. ஆனால் அதற்கு இன்னும் ராணி அம்மாள், தேவகி, வர்ணா என யாருமே இதுவரை எந்த உறுதியும் அளிக்கவில்லை. முதலில் இவர் ஈஸ்வரிடமே இதை குறித்து பேசவில்லை. அதற்குள் என்னென்ன காரியம் செய்துவிட்டார். தன் சகோதரனின் மகள் என்றும் நினைக்கவில்லை, அந்த முதியவரை பற்றியும் எண்ணவில்லை ( அவர் வருவதற்குள் பஞ்சாயத்தை கூட்ட எவ்வளவு முனைப்பாக செயல்படுகிறார் ) குறைந்த பட்சம் ஒரு பெண்பிள்ளையை இப்படி ஊரார் முன்னிலையில் அவமான படுத்துகிறோம் என்றாவது எண்ணிப்பார்த்திருக்கலாம். என்னவொரு வஞ்சம் 😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡

ஈஸ்வர் - வர்ணா பஞ்சாயத்து நடக்கும் இடத்தில் நிற்கிறாள் என்று நினைத்து அவளை அங்கிருந்து கிளம்ப சொல்கிறான். அம்மாவுக்கு மகனுக்கு மலைக்கும் மடுவுக்கும் உள்ளளவு வித்தியாசம். அவன் அம்மாவின் பேச்சைக் கேட்டு அவனால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. தன் கையில் திணிக்கப்பட்ட தாலிக் கயிறை அவளுக்கு நேராக கொண்டு சென்றவன் அதை தூக்கி எறிந்து மனமுடைய பேசுவதெல்லாம் நம்மை கண் கலங்க வைத்து விட்டது😭
அவளை என்னோட வெச்சுக்க விரும்பல, எனக்குள்ள வெச்சிருக்கேன். எங்களோட உறவை அசிங்கப்படுத்தாதீங்க 😓 இதற்கு மேல் எப்படி புரிய வைக்க முடியும் அவர்கள் உறவை👏அவளை நல்ல இடத்தில் திருமணம் முடித்த பின்னர் தான், தன் திருமணம் பற்றி எண்ண நினைத்திருக்கிறான். அவளை அசிங்கப்படுத்த நினைத்த அவன் அன்னையையே இனி அவன் வாழ்வில் செல்லா காசு என்றுவிட்டான். எத்தகைய தூய்மையான அன்பு இது😍😍 அதே போல் தாலியை கொண்டு வந்த போது விஷ்ணு வந்து அவளை தாங்கும் முன் இவன் தான் அவன் தோல் தாங்கினான் 🤩🤩🤩🤩 ஆனால் வர்ணா சொன்ன செய்தி அவன் தலையில் இடியையல்லவா இறக்கியிருக்கிறது. இந்த கனத்தை எவ்வாறு தாங்குவானோ 😲 ஏற்கனவே புஷ்பா செய்த காரியத்தில் மனமுடைந்திருக்கிறான், இப்போது அவனின் வர்ணா மா 😭

வர்ணா - பஞ்சாயத்தில் நிற்க வைத்து கேள்வி கேட்டபோது என்னவொரு நம்பிக்கை ஈஸ்வர் மேல்👌அவள் நம்பிக்கையை அவன் காப்பாற்றியதோடல்லாமல் அவளைக் காத்தும் விட்டான். ஆனால் அவளோ தன் மீது பேரன்பை வைத்திருக்கும் இரு ஜீவன்களை நிலைகுலைய செய்து விட்டாள். அதுவும் இப்படியொரு சந்தர்ப்பத்தில் அவர்களுக்கு தெரிவிக்கும்படி ஆனதை விதியின் விளையாட்டு என்று தான் சொல்ல வேண்டும். ஈஸ்வரிடம் எதையும் மறைக்காதவள் தன் வாழ்க்கையில் நிகழ்ந்த முக்கியமான நிகழ்வை மறைத்துவிட்டாள். தான் நேசிக்கும் இருவரிடமும் மறைத்த கனம் தாங்காமல் கதறி அழுகிறாள் 😭😭😭 அவளின் நிலையும் பாவமாக உள்ளது. என்ன சொல்லி அவர்கள் இருவரையும் அவளால் சமாதானப் படுத்த முடியும்.

ராணி அம்மாள் - பேத்தியை காணாமல் தேடி வந்தவர், தன் கண்களையும் காதுகளையும் நம்பமுடியாமல் மயங்கி சரிந்து விட்டார். அவர் நினைத்தே பார்க்காத துரோகம் 😭 இந்த தாக்கத்தில் இருந்து எப்படி இயல்பாக போகிறாரோ, தெரியவில்லை.

விஷ்ணு -.இப்படியொரு சூழலில் கூட தன்னை குறித்து சொல்லாமல் இருப்பவளை கண்டு பெருஞ்சினம் எழுகிறது. ஆயினும் நிலைமை கைமீறி போகும் வேலையில் அவள் சொல்லாவிடிலும் தான் சென்று சொல்லிவிட வேண்டும் என்று நினைத்தும், அதை செயல்படுத்தவும் எத்தனித்தான். இப்போது அவளை முற்றிலும் தாங்க வேண்டிய நிலை அவனுக்கு. அதேபோல் கலங்கியிருப்பவர்களை சரி செய்யும் பொறுப்பும் சேர்ந்திருக்கிறது. அவர்களை எப்படி கையாள போகிறானோ 😲 யார் மனதையும் புண்படுத்தாமல் நிலைமையை சரி செய்ய வேண்டும், கடினமான செயல் தான், ஆனால் அதை விஷ்ணு தான் செய்தாக வேண்டும்.

ஸ்ரீ சிஸ் - இது உங்களுக்கானது 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
மிகவும் உருக்கமான பதிவிது. அதை எந்த இடத்திலும் பிசகாமல் அவ்வளவு சிறப்பாக கொடுத்திருக்கீங்க 👌👌👌😍😍😍🌷🌷🌷🌷🌷 இனி எப்படி அனைவரையும் இணைக்க போகிறீர்கள் என்பதை தெரிந்து கொள்ள ஆவலாக காத்திருக்கிறேன் 😍

Ramya sis ❣️

//புஷ்பா - இந்த புஷ்பாவிற்கு என்ன இப்படியொரு ஆங்காரம். அவள் ஈஸ்வருடன் பாசமோடு பழகுவதை தவறாக புரிந்து கொண்டு அவர்களுக்குள் திருமணம் செய்து வைக்க ஆசை கொண்டதில் தவறில்லை. ஆனால் அதற்கு இன்னும் ராணி அம்மாள், தேவகி, வர்ணா என யாருமே இதுவரை எந்த உறுதியும் அளிக்கவில்லை. முதலில் இவர் ஈஸ்வரிடமே இதை குறித்து பேசவில்லை. அதற்குள் என்னென்ன காரியம் செய்துவிட்டார்.//

இங்க அவங்கவங்க எண்ணங்கள் அதற்கான இலக்குகள் தான் முக்கியம்னு நினைப்பவர்களில் ஒருவர் தான் புஷ்பா .அவரை பொறுத்தவரை வர்ணா அவர்களை நம்ப வைத்து ஏமாற்றி விட்டாள்.அதான் காரணம்☹️☹️☹️


//தன் சகோதரனின் மகள் என்றும் நினைக்கவில்லை, அந்த முதியவரை பற்றியும் எண்ணவில்லை ( அவர் வருவதற்குள் பஞ்சாயத்தை கூட்ட எவ்வளவு முனைப்பாக செயல்படுகிறார் ) குறைந்த பட்சம் ஒரு பெண்பிள்ளையை இப்படி ஊரார் முன்னிலையில் அவமான படுத்துகிறோம் என்றாவது எண்ணிப்பார்த்திருக்கலாம். என்னவொரு வஞ்சம் 😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡//


அதே தான் ரம்யா sis..இத்தனை உறவு தான் ஒருவரை அசிங்கபடுத்த அத்தனை ஆர்வம் என்றால் அவரது எண்ணங்கள் அவ்வளவு தான்.எண்ணங்கள் சரியாக இல்லாத போது,அண்ணன் என்ன தம்பி என்ன ! அவருக்கு அவர் தான் முதலில்.




//ஈஸ்வர் - வர்ணா பஞ்சாயத்து நடக்கும் இடத்தில் நிற்கிறாள் என்று நினைத்து அவளை அங்கிருந்து கிளம்ப சொல்கிறான். அம்மாவுக்கு மகனுக்கு மலைக்கும் மடுவுக்கும் உள்ளளவு வித்தியாசம். //


❤️ இப்படியும் சிலர் ,தாயின் பாவத்தை ஒருவன் சுமக்க,தாயின் செயலை கண்டிக்கும் ஒருவன் ❤️


//அவன் அம்மாவின் பேச்சைக் கேட்டு அவனால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. தன் கையில் திணிக்கப்பட்ட தாலிக் கயிறை அவளுக்கு நேராக கொண்டு சென்றவன் அதை தூக்கி எறிந்து மனமுடைய பேசுவதெல்லாம் நம்மை கண் கலங்க வைத்து விட்டது😭
அவளை என்னோட வெச்சுக்க விரும்பல, எனக்குள்ள வெச்சிருக்கேன். எங்களோட உறவை அசிங்கப்படுத்தாதீங்க 😓 இதற்கு மேல் எப்படி புரிய வைக்க முடியும் அவர்கள் உறவை👏அவளை நல்ல இடத்தில் திருமணம் முடித்த பின்னர் தான், தன் திருமணம் பற்றி எண்ண நினைத்திருக்கிறான். அவளை அசிங்கப்படுத்த நினைத்த அவன் அன்னையையே இனி அவன் வாழ்வில் செல்லா காசு என்றுவிட்டான். எத்தகைய தூய்மையான அன்பு இது😍😍//

🥰🥰 அன்பு ,அதுவும் தூய்மையான அன்பு கிடைக்க பெற்றவர்கள் வரம் பெற்றவர்கள்.அவ்வகையில் வர்ணாவும் வரம் பெற்றவள் தான் போல 🥰🥰


// அதே போல் தாலியை கொண்டு வந்த போது விஷ்ணு வந்து அவளை தாங்கும் முன் இவன் தான் அவன் தோல் தாங்கினான் 🤩🤩🤩🤩 ஆனால் வர்ணா சொன்ன செய்தி அவன் தலையில் இடியையல்லவா இறக்கியிருக்கிறது. இந்த கனத்தை எவ்வாறு தாங்குவானோ 😲 ஏற்கனவே புஷ்பா செய்த காரியத்தில் மனமுடைந்திருக்கிறான், இப்போது அவனின் வர்ணா மா 😭//


அவனுக்கு மிக கடினமான சூழல் தான்.நம்ப முடியாத காரியம்,அதுவும் அவனதுவர்ணாமா மூலம் என்பது அவனுக்கு பெரிதாக வலிக்க தானே செய்யும்.


//வர்ணா - பஞ்சாயத்தில் நிற்க வைத்து கேள்வி கேட்டபோது என்னவொரு நம்பிக்கை ஈஸ்வர் மேல்👌அவள் நம்பிக்கையை அவன் காப்பாற்றியதோடல்லாமல் அவளைக் காத்தும் விட்டான். //


❤️அன்பின் நிமிர்வு
அன்பு தந்தவன் மேல் கொண்ட
நம்பிக்கை ❤️


//ஆனால், அவளோ தன் மீது பேரன்பை வைத்திருக்கும் இரு ஜீவன்களை நிலைகுலைய செய்து விட்டாள். அதுவும் இப்படியொரு சந்தர்ப்பத்தில் அவர்களுக்கு தெரிவிக்கும்படி ஆனதை விதியின் விளையாட்டு என்று தான் சொல்ல வேண்டும். ஈஸ்வரிடம் எதையும் மறைக்காதவள் தன் வாழ்க்கையில் நிகழ்ந்த முக்கியமான நிகழ்வை மறைத்துவிட்டாள். தான் நேசிக்கும் இருவரிடமும் மறைத்த கனம் தாங்காமல் கதறி அழுகிறாள் 😭😭😭 அவளின் நிலையும் பாவமாக உள்ளது. என்ன சொல்லி அவர்கள் இருவரையும் அவளால் சமாதானப் படுத்த முடியும்.//


கஷ்டம் தான்.ஆனால்,கடந்து தான் வர வேண்டும்.அனைத்திற்கும் தேவையானது நேரம் மட்டும் சுய அலசல் தான்.இவை நடந்தால் அனைவருக்கும் நலம் தான்.நலமே அவர்கள் வாழ்வாகும் விரைவில் 🥰🥰


//ராணி அம்மாள் - பேத்தியை காணாமல் தேடி வந்தவர், தன் கண்களையும் காதுகளையும் நம்பமுடியாமல் மயங்கி சரிந்து விட்டார். அவர் நினைத்தே பார்க்காத துரோகம் 😭 இந்த தாக்கத்தில் இருந்து எப்படி இயல்பாக போகிறாரோ, தெரியவில்லை.//

அவர் ராணி என்பதே அவரது மீட்சியின் வழியாக இருக்கும் 😍🥰
இன்னும் ஐந்து அத்தியாயம் தான் ,விரைவில் நலம் உண்டாகும் sis😍



//விஷ்ணு -.இப்படியொரு சூழலில் கூட தன்னை குறித்து சொல்லாமல் இருப்பவளை கண்டு பெருஞ்சினம் எழுகிறது. ஆயினும் நிலைமை கைமீறி போகும் வேலையில் அவள் சொல்லாவிடிலும் தான் சென்று சொல்லிவிட வேண்டும் என்று நினைத்தும், அதை செயல்படுத்தவும் எத்தனித்தான். இப்போது அவளை முற்றிலும் தாங்க வேண்டிய நிலை அவனுக்கு. அதேபோல் கலங்கியிருப்பவர்களை சரி செய்யும் பொறுப்பும் சேர்ந்திருக்கிறது. அவர்களை எப்படி கையாள போகிறானோ 😲 யார் மனதையும் புண்படுத்தாமல் நிலைமையை சரி செய்ய வேண்டும், கடினமான செயல் தான், ஆனால் அதை விஷ்ணு தான் செய்தாக வேண்டும்.//


மிக சரி..அவள் தன்னை விட்டு தருகிறாள் என்பதற்காக அவனும் விட்டு தந்தால் அங்கு காதல் என்ற விஷயம் மிக பெரிதாய் அடிப்பட்டு போகும்.அவளது வருதததில் அவனில்லாது வேறு yaaru துணை நிற்க முடியும் என்பதை அவன் அனைவருக்கும் உணர்த்த வேண்டிய தருணமிது 😊😊😊


//ஸ்ரீ சிஸ் - இது உங்களுக்கானது 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
மிகவும் உருக்கமான பதிவிது. அதை எந்த இடத்திலும் பிசகாமல் அவ்வளவு சிறப்பாக கொடுத்திருக்கீங்க 👌👌👌😍😍😍🌷🌷🌷🌷🌷 இனி எப்படி அனைவரையும் இணைக்க போகிறீர்கள் என்பதை தெரிந்து கொள்ள ஆவலாக காத்திருக்கிறேன் 😍//



மிக்க நன்றி Ramya sis 🥰🥰 intha காட்சி உங்களுக்கு பிடித்ததில் மகிழ்ச்சி.

இத்தனை திருத்தமான கருத்துகள வரும் பொழுது ,அதைக் கொண்டு கதையும் சரியாக தர வேண்டுமென்ற எண்ணமே என்னை நகர்த்தி செல்கிறது.

திருத்தமான தெளிவான கருத்து
நிறைவான பதிவு.

மொத்தத்தில் அருமை Ramya sis 😍❣️ மிக்க நன்றி 🥰🥰
🥰
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மிக மிக அழகான, எதார்த்தமான பதிவுகள்.படிக்க அருமையாக இருந்தது.அடுத்த பதிவுக்கு காத்திருக்கிறேன்.
மிக்க நன்றி தமிழ்செல்வி மா.உங்களுக்கு பிடித்ததில் மிகுந்த மகிழ்ச்சி 😍❣️ விரைவில் அடுத்த அத்தியாயம் பதிகிறேன் 🥰🥰
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
புஷ்பாவின் இந்த கொடூரமான திட்டம் பழித்து விட்டதே சகோ
😡😡😡😡😡😡😡
ஆமா sis..கடிமான சூழல் தான் அனைவருக்கும்.கடந்து வருவார்கள்.

நன்றி sis 😍❣️
 

Vija

Well-known member
அருமையான பதிவு நன்றி சகோதரி வாழ்த்துக்கள்:):):)
 
Top