All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

Nayaki

Bronze Winner
என் பெயர் அபயவிதுலன் ...

எதற்கும் அஞ்சாத, எதற்கும் ஒப்புவமை இல்லாதவனாக இருக்கவேண்டும் என்று பெயர்வைத்தார்களோ... தெரியவில்லை. நான்கு வயதில் என் அன்னையை இழந்தேன். அவளை தேடி அழும்போதெல்லாம், நிலாவை காட்டி சோறூட்டிய என் சகோதரி தாயானாள். அவள் அன்பில் குளிர்காய்ந்தேன். அவளை அன்னையாய் வரிந்துகொண்டேன்.

சின்ன கூடு எனது. நான் அக்கா, என் தந்தை... நன்றாகத்தான் போனது எனது வாழ்க்கை. அவனை சந்திக்கும்வரை. எங்கிருந்தோ வந்தான். நண்பர் என்றார் என் தந்தை. பார்த்த கணத்தில் என் சகோதரியின் விழிகளில் விழுந்து இதயம் நுழைந்தான் அவன். என் சகோதரிக்கு பிடித்ததால், எனக்கும் பிடித்தது. ஏற்றுக்கொண்டேன், அக்காவின் கணவனாக. அவனுக்கு எடுபிடியானேன். ஏனோ என்னை கண்டால் அவனுக்கு ஆவதில்லை. துரத்துவதிலேயே கண்ணாய் நிற்பான். தாங்கிக் கொண்டேன் என் சகோதரிக்காக.

காலம்தான் எத்தனை கொடியது... என் பதினோராவது வயதில் தந்தையும் தொலைத்தேன். நானும் சகோதரியும் மட்டும் இவ் உலகில் தனியாய்... இல்லை இல்லை அவனும் வந்தான், நான் இருக்கிறேன் என்றான். என் சகோதரியை அணைத்தான். அவள் மேனியில் ஊறிய கரங்களை அப்போது நான் புரிந்துகொள்ளவில்லை. பாவம் என் சகோதரியும் அறிந்துகொள்ளவில்லை.

மணம் செய்கிறேன் என்றான். நம்பினோம். மணந்தான்... வெளியே சென்ற என் காதுகளில் என் சகோதரியின் அலறல்... பதறி துடித்து ஓடினேன். ஜன்னலுக்குள்ளால் சிறுவன் பார்க்க கூடாத காட்சி. பார்த்தேன்... எதற்க்காக என் சகோதரியை கொல்ல துடிக்கிறான்.. காப்பாற்ற முயன்றேன். முடியவில்லை. கதற மட்டுமே என்னால் முடிந்தது. அவன் போய் விட்டாங்க. ஊஞ்சலாடிய உயிரோடு, இரத்தம் வழிந்தோட என் சகோதரி படுக்கையில். என்ன செய்வேன்? ஏது செய்ய வேண்டும். கற்றுத்தர யார் இருக்கிறார்கள்.

மருத்துவமனை கூட எதிரியின் கூட்டமோ...? ஏழைகளின் சிறைச்சாலையோ? பணம் கிடைத்தால் மட்டுமே சிகிச்சை எனில், ஓட்டு வீட்டில் வாழும் நான் எங்கே போவேன்... பிச்சையெடுத்து பணம் போதவில்லையே.. எனக்கு தெரிந்த தொழில்தான் என்ன? எங்கே சென்று பணம் புரட்டுவேன். அனாதை பயலுக்கு பணம் கொடுக்க யாரு முன்னே வருவர்... கடவுளும் கண் திறந்தானோ, என் சிறுநீரகத்தின் விலை இரண்டரை இலட்சம். அடேகேப்பா இரண்டரை இலட்சம். எத்தனை சைபர்கள்.. அது கூட எண்ண தெரியவில்லை. விற்றேன்...

என் சகோதரி மீண்டு வந்துவிட்டாள்... ஆனால் அவள் தன்னை தொலைத்து விட்டாள்... மீட்டெடுக்க தெரியாமல், விழி பிதுங்கி நின்றேன். உயிரை மாய்க்க ஓடும் சகோதரியை இழுத்து காப்பது என் உயிரை இழுத்து எடுத்த வலி... அவள் இல்லை என்றால் அநாதை என்று முத்திரை குத்தப்படுவேன். அதிர்ஷ்டம் இல்லாதவன் என்று தூற்றப்படுவேன். என் எதிர்காலம், சாக்கடையில் குளிக்கும். எனக்கிருக்கும் ஒரே பற்றுக்கோடு அவள்... அவளை காப்பதே என் லட்சியம். முயன்றேன்... இரும்பு கம்பியால் அவளிடமிருந்து அடி வாங்கினேன். ஆனாலும் தளரவில்லை... என்னை அடித்தால், அவள் பிழைத்துக்கொள்வாள் என்றால், என்னை அடித்தால், அவள் மனம் தெளியும் என்றால், என்னை அடித்தால் அவள் உயிர் பெறுவாள் என்றால் அடிக்கட்டுமே.. .மகிழ்ச்சியாகவே கம்பியை கொடுத்து ஆடி வாங்கினேன். ஒவ்வொரு அடியும், அவனை பழி வாங்கும் வன்மமாக மாற்றிக்கொண்டேன்.



அதோடு தொல்லை விட்டதா, பள்ளிக்கு சென்று வீடு வரும்போது, ஆடைகளை அவிழ்த்து நின்ற என் சகோதரியை நெருங்கினான் ஒருவன். பதறிப்போனேன். அன்றும் அவன் அப்படித்தானே செய்தான்... சீறி பாய்ந்தேன்... கிடைத்த கம்பியால் அவனை விளாசி தள்ளினேன்... சமூகமே என் மீது சீறி பாய்ந்தது. அசரவில்லை நான். வந்தவனை எல்லாம், என் கோபம் தீர வீசி தள்ளினேன்.

அடடே... என் சகோதரியின் வயிறு எதற்கு இப்படி உப்பி வருகிறது... ஏதாவது தீராத வியாதியோ... இழுத்துக்கொண்டு சென்றேன்... ஆஹா... என் சகோதரிக்கு குழந்தையா? நம் குடும்பத்திற்கு, சின்னச்சிரிய குழந்தை வரப்போகிறதா... ம்ஹூம் இந்த இடம் பொருத்தமில்லை... அவளை இழுத்துக்கொண்டு வேறிடம் சென்றேன்... பணத்துக்கு எங்கே போவேன்... வேலைக்காக பிச்சை எடுத்தேன்... சாக்கடை அள்ளுவது கூட சொர்க்கமாக இருந்தது... தார் ஊற்றுவது கூட இன்பமாய் இருந்தது... அது காலில் கொட்டி வலித்தது கூட எனக்கு தெரியவில்லை. பணம் வருகிறதே...

இதோ... சிறிய தேவதை என் கரத்தில்... பன்னிரண்டு வயது ஆண்மகன் ஒரு தந்தையாய்... தாய் மட்டும்தானா கன்னித்தாயாக இருக்க முடியும். நானும் கன்னித்தந்தைதான்... என் சின்ன சீட்டு அம்முக்குட்டிக்கு. ஐயையோ... அவளை பார்த்துக்கொள்ள யார் இருக்கிறார்கள். என்னை விட்டால் வேறு யாரும் இல்லையே... பாடசாலை என்ன பாடசாலை... கல்வி எப்போதும் கற்கலாம், ஆனால் என் அம்முக்குட்டியை யார் பார்த்துக்கொள்வார்... தொலைத்தேன் பாடத்தை. மறந்தேன் பள்ளியை... என் அக்காவிற்குமாய், என் தேவதைக்குமாய் மட்டும் வாழ முயன்றேன்.

அய்யய்யோ... என் சகோதரியிடம் உதிறம் வருகிறதே... அவள் இறக்க போகிறாளோ... உடலில் குருதி வடியே ஓடினேன் அருகே உள்ள வீட்டிற்கு... வந்தார்கள். உதவினார்கள். மறுமாதமும் தொடர, ஓடினேன்... புரிந்து கொண்டேன், பெண்மைக்கு இருக்கும் இன்னலை. மீண்டும் ஓடி பரிதாபத்தை விட பணம் வென்றது. எங்கே செல்வேன் பணத்துக்கு... காரியத்தை என் கரத்தில் எடுத்தேன்...என்ன தப்பு? என் தாய்க்கு நான் செய்கிறேன்... என்னை அந்த சமூகம் செய்ய வைத்தது... எனக்கு அருவெறுக்கவில்லை. பதட்டம் மட்டுமே. அக்காவும் இறந்துவிட்டால், அந்த குழந்தையும், அவனும் தனியாக என்ன செய்வார்கள்.

ஐயோ... என் உடலில் மாற்றம்... என்ன அது... நான் வாலிபனாக மாறுகிறேனா... அந்த ஆண் பெண் உறவு... இனிக்கிறதே... துடித்து போனேன்... அப்போ, அன்று என் அக்காவிற்கு நடந்தது...? புரிந்த பொது என் ஆவியே தொலைந்தது... என் அக்காவிற்காக உள்ளம் துடித்தது... யாருமில்ல தனிமையில் கதறினேன்... இறுகினேன்... என்ன அக்காவை வலிக்க செய்தவனை , என் இளமையை தொலைக்க காரணமானவனை... பழி வாங்க துடித்தேன். அவனுக்கு தண்டனை மரணம். ஆம் மரணம்...

முடிவு செய்த தருணதில், அந்த காமுகனிடமிருந்து ஒரு கடிதம். என் சகோதரியை விபச்சாரி என்கிற உன்னத பட்டத்துடன். அன்று முடிவு செய்தேன்... என் சகோதரிக்கு அவன் பதில் கூற வேண்டும் என்று. எப்படி என்ன சகோதரியை வலிக்க செய்தானோ எத்தகைய வலியை நான் பட்டேனோ அதே வலியை அவள் படவேண்டும் என்று நான் முடிவெடுத்தேன்...

ஆம்... அவன் மக்களை அதே போல, வன்புணர்வு செய்ய முடிவெடுத்தேன்... அதே பதினாறில் அவளை தேடி சென்றேன்.. கண்டதும் என் விழியை நுழைந்து இதயத்தில் குடிபுகுந்து விட்டாள் . பதறி துடித்துபோனேன். இவளை எப்படி வலிக்க செய்வேன்... ஆனாலும் என் சகோதரிக்கு நியாயம் வேண்டும்... முடிவெடுத்தேன். மணந்தேன்... அவன் எப்படி என் சகோதரியை புணர்ந்தானோ அப்படி அவளை வலிக்க செய்ய முயன்றேன்... ஆனால்... காதல் கொண்ட மனது... அதற்க்கு ஒத்துப்போகவில்லையே.. என்ன செய்வேன்.. போதை எடுத்தும், மனம் இணங்காவில்லியே... தோற்றுப்போனேன்... முழுதாக தோற்றுப்போனேன்.. நினைத்த அளவு வலிக்க செய்ய முடியாமல் பயங்கரமாக தோற்றுப்போனேன்... அவள் முகத்தில் விழிக்கும் தைரியம் இல்லாமல் ஓடிப்போனேன்.
ஓடிப்போனதாகத்தான் நினைப்பார்கள்... ஆனால்...
நான் சமூகத்தில் தண்டிக்கப்பட்டேன். ஆண் என்கிற காரணத்தினால்... அவள் பெண் என்பதால், அவள் வலி போற்றப்பட்டது.. ஆண் என்பதால் என் வலி தூற்றப்பட்டது... வலிக்கு ஏது பாகுபாடு... துடிக்கிறேன்.. இந்தக்கணம் வரை துடிக்கிறேன்... என்னை ஆறுதல் படுத்த எனக்கு நான் மட்டுமே.. .தெளிந்து விடுவேன்.. .மீண்டு வந்து விடுவேன்... வலி என்ன புதுசா எனக்கு... பழகிய ஒன்றுதானே... மரணித்த எனக்கு எதற்கு இன்னொரு மரணம்... வேண்டியதில்ல... அதையும் வெல்வேன்.. ஏன் எனில் நான் அபயவிதுலன்
 
Last edited:

Meenalochini

Well-known member
images (2).jpeg
என் பெயர் அபயவிதுலன். பயம் இல்லாதவன். ஒப்பில்லாதவன்.

சின்னஞ் சிறு பருவத்தில், தவழும் வயதில் தாயை இழந்தேன். தவித்தேன். தமக்கை தாயாய் வந்தாள்.

தாவும் வயதில் தந்தையை இழந்தேன். சிரம் அனைத்து கரம் பிடித்தாள் தமக்கை.


கள்ளம் கபடம் அற்ற கண்களின் வழி காமம் கொண்ட மிருகம் கண்டேன்.

மிருகம் தின்ற தாயின் எச்சத்தை உச்சம் செய்ய, அனைத்தையும் துச்சம் செய்தேன்.

வேட்டையாட நாள் குறித்தேன்.
வேரறுக்க நான் விளைந்த போது, தூரில் முளைத்த துளிரை கண்டேன்.

வெட்டிய கோடாரி என் கழுத்தையே பதம் பார்த்தது. துளிர்த்த குருதியிலும் என் உறுதி குறையவில்லை.

பசித்த மிருகம் அன்று புசித்தது.
ரசித்த மிருகம் இன்று சிதைத்தது. தானும் சிதைந்தது.

மிளிர் என்ற தளிர் துளிர்க்கும் என வெட்டிய கோடாரி வேலை முடிந்ததும், தன்னை கூர் தீட்டிக் கொண்டது.

ஓடிய காலங்களில், கொடியோடு இருமலர் ஆடிய தளிரை கண்டு,
கொழுக் கொம்பென மாறியதாம் அந்தக் கோடாரி.

கூர் முனையில் சீர்கெட்ட அந்தக் கொடி, கோடாரியை நம்ப மறுத்ததாம்.

வெட்டிய வேகத்தில் ஆலமரத்தை சாய்க்கும் அந்த கோடாரிக்கு கொடியின் மனதை சாய்க்க வழி தெரியவில்லை.

கோடாரி தந்த காயங்களை வருடிக்கொடுக்கும் அந்தக் கொடி, அது தந்த அடையாளங்களை சுகமாய் எண்ணிக் களிக்கும் அந்தக் கொடி, கோடாரியின் கூர்முனை எண்ணி பயம் கொண்டதாம்.

பற்றவும் வேண்டும் விலக்கவும் வேண்டும். திரிசங்கு சொர்க்கத்தில் அந்தக் கொடி.

கொடியை தன்னோடு சேர்த்து அணைக்க, கொடிதான் அற்று விடுமோ? இல்லை தன் மீதுதான் பற்றுவிடுமோ?

குழப்பத்தில் கூர் மழுங்கிப் போனது அந்த கோடாரி.

பயமற்றவனுக்கு இன்று பயம்.
மரணத்தைக் கடந்தவனுக்கு இன்று ரணம்.

காயம்பட்ட ரத்தம் தோய்ந்த கோடரியை, கொடி நாடி செல்லுமா? காலம் வெல்லுமா? காதல் செல்லுமா?
 

தாமரை

தாமரை
OMG... Thamarai.. Wow just wow... No words to say... appadiye milirai kan munnaal konduvanthu vitteerkal. aamaam ovvoru sollum, ovvoru vasanankalum athai neenkal ezhutha kaiyaana paanku... appadiye pullarikkuthu.
2 விஷயம் ஒன்று 4 வருடங்கள். அப்புறம் அவன் ஆரம்பத்திலேயே காதலித்ததை சொல்லிவிட்டான். அவள்தான் நம்பவில்லை. அந்த நிலையில், தான் எதை சொன்னாலும் நம்ப மறுக்கிறவளிடம், தான் பெட்ரா தண்டனையை எப்படி சொல்வான். அவனாக சொல்ல முடியாதே... காரணம், அவன் காட்டுவதற்காக தன்னை காயப்படுத்த வில்லை. தனக்காக தண்டனை கொடுப்பதற்காக பண்ணியது. அதை காட்டுவது, அவனுக்குத்தான் அவமானம்.

மிளிராய் நீங்களா பேசிய ஒவ்வொரு வரியும்... தாமரை... என்ன சொல்ல, கண்ணெல்லாம் கலங்குதுப்பா. நீங்க வசனங்களை கோர்த்த விதமும், அது பயணப்படும் அழகும்... ஆஹா அருமை அருமை... ஆமாம் நீங்கள் சொல்வது 100% சரியானது. ஏற்றுக்கொள்ள வேண்டியது. வலிக்க செய்தபின் மன்னிப்பு வேண்டி பயனென்ன இருக்க போகிறது. அவள் உடலை வலிக்க செய்ததல்ல, எப்போது ஒருவரின் நம்பிக்கை பொய்த்து போகிறதோ, அந்த நம்பிக்கையை மீண்டும் கட்டி ஆழ, நிறைய சிரமப்பட வேண்டும். மிக மிக நன்றி. பாக்கலாம் அபயனுக்காக இப்படி யாரு பேசுறாங்கன்னு. :love::love::love::love:
குட்டீஸ்க்கு மூன்று வயதா😅😅😅😅😅 ஓகே நயனி மா.. சரி பண்ணிடுறேன்..

சூப்பர் நயனி மா.. ஆமா.. அவன் தண்டனை.. அவளுக்கு காட்டுவதற்காக அல்ல.. அவனை சித்திரவதை செய்யும் மனசாட்சியின் வாயை அடைக்க..

ஹா ஹா.. காதலித்தேன்னு சொல்லிட்டானா.. தியேட்டர்ல தானே.. ஆமா ஆமா சொன்னான்... ஓ.. அப்புறமும் இரண்டு தடவை சொல்ல ட்ரை
பண்ணான்.. 😜😜😜😜 எப்போ....அவ மயங்கி இருக்கும் போது... ஒன்னு மாத்திரை சாப்பிட்டு.. இன்னொனு.. அவன் தொடுகைல ... ம் ம்....

அத அவ நம்பனும்.. 😁😁😁😁😁


நம்பிக்கை... அழிப்பதற்கு ஒரு கணம்.. மீளக் கட்ட ..ஆயுளும் போதாது என்பதே கசக்கும் நிஜம்..
 

தாமரை

தாமரை
என் பெயர் அபயவிதுலன் ...

எதற்கும் அஞ்சாத, எதற்கும் ஒப்புவமை இல்லாதவனாக இருக்கவேண்டும் என்று பெயர்வைத்தார்களோ... தெரியவில்லை. நான்கு வயதில் என் அன்னையை இழந்தேன். அவளை தேடி அழும்போதெல்லாம், நிலாவை காட்டி சோறூட்டிய என் சகோதரி தாயானாள். அவள் அன்பில் குளிர்காய்ந்தேன். அவளை அன்னையாய் வரிந்துகொண்டேன்.

சின்ன கூடு எனது. நான் அக்கா, என் தந்தை... நன்றாகத்தான் போனது எனது வாழ்க்கை. அவனை சந்திக்கும்வரை. எங்கிருந்தோ வந்தான். நண்பர் என்றார் என் தந்தை. பார்த்த கணத்தில் என் சகோதரியின் விழிகளில் விழுந்து இதயம் நுழைந்தான் அவன். என் சகோதரிக்கு பிடித்ததால், எனக்கும் பிடித்தது. ஏற்றுக்கொண்டேன், அக்காவின் கணவனாக. அவனுக்கு எடுபிடியானேன். ஏனோ என்னை கண்டால் அவனுக்கு ஆவதில்லை. துரத்துவதிலேயே கண்ணாய் நிற்பான். தாங்கிக் கொண்டேன் என் சகோதரிக்காக.

காலம்தான் எத்தனை கொடியது... என் பதினோராவது வயதில் தந்தையும் தொலைத்தேன். நானும் சகோதரியும் மட்டும் இவ் உலகில் தனியாய்... இல்லை இல்லை அவனும் வந்தான், நான் இருக்கிறேன் என்றான். என் சகோதரியை அணைத்தான். அவள் மேனியில் ஊறிய கரங்களை அப்போது நான் புரிந்துகொள்ளவில்லை. பாவம் என் சகோதரியும் அறிந்துகொள்ளவில்லை.

மணம் செய்கிறேன் என்றான். நம்பினோம். மணந்தான்... வெளியே சென்ற என் காதுகளில் என் சகோதரியின் அலறல்... பதறி துடித்து ஓடினேன். ஜன்னலுக்குள்ளால் சிறுவன் பார்க்க கூடாத காட்சி. பார்த்தேன்... எதற்க்காக என் சகோதரியை கொல்ல துடிக்கிறான்.. காப்பாற்ற முயன்றேன். முடியவில்லை. கதற மட்டுமே என்னால் முடிந்தது. அவன் போய் விட்டாங்க. ஊஞ்சலாடிய உயிரோடு, இரத்தம் வழிந்தோட என் சகோதரி படுக்கையில். என்ன செய்வேன்? ஏது செய்ய வேண்டும். கற்றுத்தர யார் இருக்கிறார்கள்.

மருத்துவமனை கூட எதிரியின் கூட்டமோ...? ஏழைகளின் சிறைச்சாலையோ? பணம் கிடைத்தால் மட்டுமே சிகிச்சை எனில், ஓட்டு வீட்டில் வாழும் நான் எங்கே போவேன்... பிச்சையெடுத்து பணம் போதவில்லையே.. எனக்கு தெரிந்த தொழில்தான் என்ன? எங்கே சென்று பணம் புரட்டுவேன். அனாதை பயலுக்கு பணம் கொடுக்க யாரு முன்னே வருவர்... கடவுளும் கண் திறந்தானோ, என் சிறுநீரகத்தின் விலை இரண்டரை இலட்சம். அடேகேப்பா இரண்டரை இலட்சம். எத்தனை சைபர்கள்.. அது கூட எண்ண தெரியவில்லை. விற்றேன்...

என் சகோதரி மீண்டு வந்துவிட்டாள்... ஆனால் அவள் தன்னை தொலைத்து விட்டாள்... மீட்டெடுக்க தெரியாமல், விழி பிதுங்கி நின்றேன். உயிரை மாய்க்க ஓடும் சகோதரியை இழுத்து காப்பது என் உயிரை இழுத்து எடுத்த வலி... அவள் இல்லை என்றால் அநாதை என்று முத்திரை குத்தப்படுவேன். அதிர்ஷ்டம் இல்லாதவன் என்று தூற்றப்படுவேன். என் எதிர்காலம், சாக்கடையில் குளிக்கும். எனக்கிருக்கும் ஒரே பற்றுக்கோடு அவள்... அவளை காப்பதே என் லட்சியம். முயன்றேன்... இரும்பு கம்பியால் அவளிடமிருந்து அடி வாங்கினேன். ஆனாலும் தளரவில்லை... என்னை அடித்தால், அவள் பிழைத்துக்கொள்வாள் என்றால், என்னை அடித்தால், அவள் மனம் தெளியும் என்றால், என்னை அடித்தால் அவள் உயிர் பெறுவாள் என்றால் அடிக்கட்டுமே.. .மகிழ்ச்சியாகவே கம்பியை கொடுத்து ஆடி வாங்கினேன். ஒவ்வொரு அடியும், அவனை பழி வாங்கும் வன்மமாக மாற்றிக்கொண்டேன்.



அதோடு தொல்லை விட்டதா, பள்ளிக்கு சென்று வீடு வரும்போது, ஆடைகளை அவிழ்த்து நின்ற என் சகோதரியை நெருங்கினான் ஒருவன். பதறிப்போனேன். அன்றும் அவன் அப்படித்தானே செய்தான்... சீறி பாய்ந்தேன்... கிடைத்த கம்பியால் அவனை விளாசி தள்ளினேன்... சமூகமே என் மீது சீறி பாய்ந்தது. அசரவில்லை நான். வந்தவனை எல்லாம், என் கோபம் தீர வீசி தள்ளினேன்.

அடடே... என் சகோதரியின் வயிறு எதற்கு இப்படி உப்பி வருகிறது... ஏதாவது தீராத வியாதியோ... இழுத்துக்கொண்டு சென்றேன்... ஆஹா... என் சகோதரிக்கு குழந்தையா? நம் குடும்பத்திற்கு, சின்னச்சிரிய குழந்தை வரப்போகிறதா... ம்ஹூம் இந்த இடம் பொருத்தமில்லை... அவளை இழுத்துக்கொண்டு வேறிடம் சென்றேன்... பணத்துக்கு எங்கே போவேன்... வேலைக்காக பிச்சை எடுத்தேன்... சாக்கடை அள்ளுவது கூட சொர்க்கமாக இருந்தது... தார் ஊற்றுவது கூட இன்பமாய் இருந்தது... அது காலில் கொட்டி வலித்தது கூட எனக்கு தெரியவில்லை. பணம் வருகிறதே...

இதோ... சிறிய தேவதை என் கரத்தில்... பன்னிரண்டு வயது ஆண்மகன் ஒரு தந்தையாய்... தாய் மட்டும்தானா கன்னித்தாயாக இருக்க முடியும். நானும் கன்னித்தந்தைதான்... என் சின்ன சீட்டு அம்முக்குட்டிக்கு. ஐயையோ... அவளை பார்த்துக்கொள்ள யார் இருக்கிறார்கள். என்னை விட்டால் வேறு யாரும் இல்லையே... பாடசாலை என்ன பாடசாலை... கல்வி எப்போதும் கற்கலாம், ஆனால் என் அம்முக்குட்டியை யார் பார்த்துக்கொள்வார்... தொலைத்தேன் பாடத்தை. மறந்தேன் பள்ளியை... என் அக்காவிற்குமாய், என் தேவதைக்குமாய் மட்டும் வாழ முயன்றேன்.

அய்யய்யோ... என் சகோதரியிடம் உதிறம் வருகிறதே... அவள் இறக்க போகிறாளோ... உடலில் குருதி வடியே ஓடினேன் அருகே உள்ள வீட்டிற்கு... வந்தார்கள். உதவினார்கள். மறுமாதமும் தொடர, ஓடினேன்... புரிந்து கொண்டேன், பெண்மைக்கு இருக்கும் இன்னலை. மீண்டும் ஓடி பரிதாபத்தை விட பணம் வென்றது. எங்கே செல்வேன் பணத்துக்கு... காரியத்தை என் கரத்தில் எடுத்தேன்...என்ன தப்பு? என் தாய்க்கு நான் செய்கிறேன்... என்னை அந்த சமூகம் செய்ய வைத்தது... எனக்கு அருவெறுக்கவில்லை. பதட்டம் மட்டுமே. அக்காவும் இறந்துவிட்டால், அந்த குழந்தையும், அவனும் தனியாக என்ன செய்வார்கள்.

ஐயோ... என் உடலில் மாற்றம்... என்ன அது... நான் வாலிபனாக மாறுகிறேனா... அந்த ஆண் பெண் உறவு... இனிக்கிறதே... துடித்து போனேன்... அப்போ, அன்று என் அக்காவிற்கு நடந்தது...? புரிந்த பொது என் ஆவியே தொலைந்தது... என் அக்காவிற்காக உள்ளம் துடித்தது... யாருமில்ல தனிமையில் கதறினேன்... இறுகினேன்... என்ன அக்காவை வலிக்க செய்தவனை , என் இளமையை தொலைக்க காரணமானவனை... பழி வாங்க துடித்தேன். அவனுக்கு தண்டனை மரணம். ஆம் மரணம்...

முடிவு செய்த தருணதில், அந்த காமுகனிடமிருந்து ஒரு கடிதம். என் சகோதரியை விபச்சாரி என்கிற உன்னத பட்டத்துடன். அன்று முடிவு செய்தேன்... என் சகோதரிக்கு அவன் பதில் கூற வேண்டும் என்று. எப்படி என்ன சகோதரியை வலிக்க செய்தானோ எத்தகைய வலியை நான் பட்டேனோ அதே வலியை அவள் படவேண்டும் என்று நான் முடிவெடுத்தேன்...

ஆம்... அவன் மக்களை அதே போல, வன்புணர்வு செய்ய முடிவெடுத்தேன்... அதே பதினாறில் அவளை தேடி சென்றேன்.. கண்டதும் என் விழியை நுழைந்து இதயத்தில் குடிபுகுந்து விட்டாள் . பதறி துடித்துபோனேன். இவளை எப்படி வலிக்க செய்வேன்... ஆனாலும் என் சகோதரிக்கு நியாயம் வேண்டும்... முடிவெடுத்தேன். மணந்தேன்... அவன் எப்படி என் சகோதரியை புணர்ந்தானோ அப்படி அவளை வலிக்க செய்ய முயன்றேன்... ஆனால்... காதல் கொண்ட மனது... அதற்க்கு ஒத்துப்போகவில்லையே.. என்ன செய்வேன்.. போதை எடுத்தும், மனம் இணங்காவில்லியே... தோற்றுப்போனேன்... முழுதாக தோற்றுப்போனேன்.. நினைத்த அளவு வலிக்க செய்ய முடியாமல் பயங்கரமாக தோற்றுப்போனேன்... அவள் முகத்தில் விழிக்கும் தைரியம் இல்லாமல் ஓடிப்போனேன்.
ஓடிப்போனதாகத்தான் நினைப்பார்கள்... ஆனால்...
நான் சமூகத்தில் தண்டிக்கப்பட்டேன். ஆண் என்கிற காரணத்தினால்... அவள் பெண் என்பதால், அவள் வலி போற்றப்பட்டது.. ஆண் என்பதால் என் வலி தூற்றப்பட்டது... வலிக்கு ஏது பாகுபாடு... துடிக்கிறேன்.. இந்தக்கணம் வரை துடிக்கிறேன்... என்னை ஆறுதல் படுத்த எனக்கு நான் மட்டுமே.. .தெளிந்து விடுவேன்.. .மீண்டு வந்து விடுவேன்... வலி என்ன புதுசா எனக்கு... பழகிய ஒன்றுதானே... மரணித்த எனக்கு எதற்கு இன்னொரு மரணம்... வேண்டியதில்ல... அதையும் வெல்வேன்.. ஏன் எனில் நான் அபயவிதுலன்
அகத்துக்காரி வேணுமின்னா.. இந்த அகம் தொலைக்கனும் சாமி.....

சமூகம் தூற்றியதா.. எங்கே.. எப்போ.. பார்க்கலையே.. கனடாவின் மல்டி மில்லினர் ஆ தானே கௌரவமா இருக்காரு..

முள்ளில் விழுந்தது.. தூக்கி எறியப் பட்டது... சேலையில்ல.. ஒரு நம்பிக்கை.. சிறு பெண்ணின் மனது.. மானாவாரியா இழுக்க கூடாது..

கர்வம் அவன் தனி பெரும் சொத்தல்ல..

படைத்தவனும்.. அடைந்தவனும்... பொய்யாய் போன போதும்.. எழுந்து நின்றவளின்.. வலிமை..பெருமை கொள்ளத் தக்கது தான்.


புயலில் ஆலமரங்கள் சாயும்.. பூங்கொடி.. தப்பிப் பிழைத்து.. துளிர் விடும்..

அவ வேணும் னு நினைச்சா.. பொறுத்து தான் போகனும்.. நம்பிக்கை துளிர் விட காத்து நிற்கனும்..

வேறு வழியில்ல...
 

தாமரை

தாமரை
View attachment 9575
என் பெயர் அபயவிதுலன். பயம் இல்லாதவன். ஒப்பில்லாதவன்.

சின்னஞ் சிறு பருவத்தில், தவழும் வயதில் தாயை இழந்தேன். தவித்தேன். தமக்கை தாயாய் வந்தாள்.

தாவும் வயதில் தந்தையை இழந்தேன். சிரம் அனைத்து கரம் பிடித்தாள் தமக்கை.


கள்ளம் கபடம் அற்ற கண்களின் வழி காமம் கொண்ட மிருகம் கண்டேன்.

மிருகம் தின்ற தாயின் எச்சத்தை உச்சம் செய்ய, அனைத்தையும் துச்சம் செய்தேன்.

வேட்டையாட நாள் குறித்தேன்.
வேரறுக்க நான் விளைந்த போது, தூரில் முளைத்த துளிரை கண்டேன்.

வெட்டிய கோடாரி என் கழுத்தையே பதம் பார்த்தது. துளிர்த்த குருதியிலும் என் உறுதி குறையவில்லை.

பசித்த மிருகம் அன்று புசித்தது.
ரசித்த மிருகம் இன்று சிதைத்தது. தானும் சிதைந்தது.

மிளிர் என்ற தளிர் துளிர்க்கும் என வெட்டிய கோடாரி வேலை முடிந்ததும், தன்னை கூர் தீட்டிக் கொண்டது.

ஓடிய காலங்களில், கொடியோடு இருமலர் ஆடிய தளிரை கண்டு,
கொழுக் கொம்பென மாறியதாம் அந்தக் கோடாரி.

கூர் முனையில் சீர்கெட்ட அந்தக் கொடி, கோடாரியை நம்ப மறுத்ததாம்.

வெட்டிய வேகத்தில் ஆலமரத்தை சாய்க்கும் அந்த கோடாரிக்கு கொடியின் மனதை சாய்க்க வழி தெரியவில்லை.

கோடாரி தந்த காயங்களை வருடிக்கொடுக்கும் அந்தக் கொடி, அது தந்த அடையாளங்களை சுகமாய் எண்ணிக் களிக்கும் அந்தக் கொடி, கோடாரியின் கூர்முனை எண்ணி பயம் கொண்டதாம்.

பற்றவும் வேண்டும் விலக்கவும் வேண்டும். திரிசங்கு சொர்க்கத்தில் அந்தக் கொடி.

கொடியை தன்னோடு சேர்த்து அணைக்க, கொடிதான் அற்று விடுமோ? இல்லை தன் மீதுதான் பற்றுவிடுமோ?

குழப்பத்தில் கூர் மழுங்கிப் போனது அந்த கோடாரி.

பயமற்றவனுக்கு இன்று பயம்.
மரணத்தைக் கடந்தவனுக்கு இன்று ரணம்.

காயம்பட்ட ரத்தம் தோய்ந்த கோடரியை, கொடி நாடி செல்லுமா? காலம் வெல்லுமா? காதல் செல்லுமா?
சூப்பர் மீனா மா👏👏👏👏👏👏👏👏👏👏
 

Meenalochini

Well-known member
View attachment 9572

என் பெயர் ம்ளிர்…

ம்ளிர் ம்ருதை…

ஒளிரும் பூமி ன்னு பேர் வச்சவங்க.. என்னோட அம்மா தமயந்தி எட்டு வயசுலேயே இறந்திட்டாங்க..



அதற்கு அப்புறம் தாயுமானவரா நின்னு...எனை வளர்த்தவர் என் அப்பா.. பதினெட்டு வயது வரை.. அம்மா இல்லைங்குற குறையே தெரியாம வளர்த்தார்.


படிச்சுட்டு இருந்த எனக்கு.. திருமணம்னு சொன்னதும் வந்த கோபம் ..அவர்.. அந்த கனடாவின் கோமான் அபயவிதுலன.. புகைப்படத்தில் பார்த்ததும்… எங்கோ மறைந்து போயிடுசசு.. அவரை நேரில பார்த்ததும் மிச்ச செச்சம் இருந்த தயக்கமும் ஓடிப்போக.. கல்யாணம் பண்ணிக்கிட்டேன்… கண் நிறைய கனவுகளும்.. மனம் நிறைய ஆசைகளுமா..



முதல் இரவு...ஏதேதோ கற்பனைகளோட பள்ளியறை புகுந்த எனக்கு கிடைத்தது.. …………


உலக உயிர்கெளெல்லாம்.. இன்பம் னு சொல்லி கொண்டாடுற


காதல் …. அது கானல் நீர்.. ஆ மறைஞ்சு போச்சு.



கலவி அது… என்னைப் பொறுத்த வரை..

கொதிக்கும் கொப்பரை… வறுக்கப்பட்டு துவண்டு கிடந்த என் மீது வீசப்பட்டது விவாகரத்துப் பத்திரம்..


என் தந்தை.. ஒருபெண்ணிற்கு செய்த கொடூரத்திற்கு பதில்.. தண்டனை தான்… எனது இந்த ஒரு நாள் திருமணமும்.. சில மணிநேரஉயிர் வதையுமாம்..


இவ்வளவு நேரம் என் உடலின் உள்ளும் புறமுமாய் இருந்த தகிப்பு.. காந்தல்.. வலியை விட அதிகமா வலிச்சது.. என் பெற்றவர் சுய உருவம் கண்டு.. நான் பெற்ற என் மணாளனின்.. மணாளனா… ம்ஹூம் என் தந்தையை தண்டிக்க வந்த நீதி தேவனைக் கண்டு…


அஞ்சினேன்.அவன் முகம் காண.. தந்தேன் அவன் கேட்ட விவாக விடுதலை… தந்தையின் மரணம் .. என் நிலை கண்டா.. என் கேள்விகள் குத்திக் கிழித்தா.. நின்று கொன்ற நீதியாலா.. நான் அறியேன்…


வெளியேறினேன்… அவர் தந்த... கூட்டை விட்டு .. தொலைந்து போனது.. நம்பிக்கை .. வாழ்வு.. குன்றியிருந்த நேரத்தில்.. கடவுள் காட்டிய வெளிச்சமாய்.. வயிற்றுச் சிசுக்கள்.. காமக் கொடூரனின் மகளிற்கும் கடவுள் கருணை செய்துவிட்டார்.. பற்றிக் கொண்டேன்.. கொம்பற்ற கொடியாய்.. தரையில் புரண்டு கிடந்த எனக்கு.. படர ஒரு பந்தலே கிடைத்தது.. பற்றி எழுந்தேன்.. புது வாழ்வு.. அதை அமைக்க.. ஐந்து நெடிய ஆண்டுகள்..


தொழில் தேடிச் சென்ற இடத்தில்.. அவன்..அவர்…


அறிந்தது போல.. கண் இமை முடி கூட காட்டிக் கொள்ள வில்லை.. தொடர்நத கொடும் நாட்களில்.. குழந்தைகளை சொந்தம் கொண்டாடுகிறார்.. கோடிக்ணக்கில் செல்வம் என் பேரில் என்கிறார்..


மன்னிக்கவும் மறக்கவும் இருவருக்கும் முடியவில்லை.. தாமரை இலைத் தண்ணீர் என வாழ்வு.. ஒரு திங்களாக என் குழந்தைகளின் தகப்பனாக குறைவின்றி இருப்பவர்.. சில நாட்களாக.. எதை மறைக்கிறார்..


காயத்தை மறைப்பதும்.. காதலிக்கிறேன் என்பதும்.. எல்லாமே.. இன்னமும் விலக்கி நிறுத்துவதாய்..


இதை விட அன்போடு காதலோடு.. பார்த்து தானே கணையாழி தந்தார்.. மறுநாளே இல்லை... அது பழிக்கு அச்சாரம் என்று விட வில்லையா..


கணவனின்

சாபத்தினால் பாறையென உருமாறியவள் நான்.. இப்போது சிற்பமாகு என்றால் எப்படி ஆகுவது..


எனக்கு உயிர் வர என் கணவன் ராமன்.. என்று உணர வைக்க வேண்டும்.. அவனின் வலி எனக்கு அறிமுகம்.. காதல்..????????


எப்போது காட்டினான்..???


அவன் தந்த பணத்தில் என் குழந்தைகளுக்கு உடைகள் எடுக்க மறுத்தவள் நான்.. அவன் தந்த நகை வாங்கினால்.. அவன் பணத்திற்கு பல் காட்டியது ஆகாதா..


எந்த உரிமையில் எடுத்துக் கொள்வது.. மனைவி யா.. அவனின் குழந்தைகளுக்கு தாயா.. அவனின் சொத்துக்களுக்கு பினாமியாகவா..


இது என பெண்மைக்கு.. சுய மரியாதைக்கு.. அவமானம்…. என்றேனும் ஒரு நாள் விக்னேஷ்வரனின் மகள் தானேடி நீ... என்று விட்டால்.. என் உயிரை தொலைக்கும் நிலை வந்துவிடாது..!!!! எப்படிதொலைப்பேன் அந்த அடையாளத்தை… எதை மறப்பேன்.. எனக்கு ..நிகழ்ந்ததை..



வலியில் ஆண்.. பெண்.. கூட குறைய இருக்கிறதா..


கொடுமையில் உயர்வு.. தாழ்வு.. இருக்கிறதா...


உரிமையின்றி.. உறவின்றி வாழும் கொடுமை.. கொடும் பாலைத் தனிமை.. எப்படி நடப்பது.. அதை பரிசளித்தவனிடம்..



தாலியும் மோதிரமும்.. என் காதலின் அடையாளம்.. அதை எங்ஙனம் தொலைப்பேன்.. என் குழந்தைகளை தொலைப்பதற்கு சமமல்லவா அது…


நெருப்பாற்றில்… நீந்துகிறேன்.. வலி புரியாது உங்களுக்கு… கேலியும்.. தீப்பந்தங்களையும் எரியாமல் இருக்கலாமே...



அவனின் பத்து வருடக் காதல்..தெரியாது.. சொல்லவில்லை.. அவனின் காயம் என பொருட்டு அதும் தெரியாது…

அவணிடம் நகை வாங்கி கௌரவமும் காதலும் பெற்றால.. வேறு பெயர் கொடுத்துவிட மாட்டீர்கள்…

இதை மட்டும் பல்லிளித்துக் கொண்டு வாங்கிக் கொண்டாள் என்று சொல்லி விட மாட்டீர்கள்...


அது... அவமானம்.. அருவருப்பு.. இல்லையா..


அதைச் சொன்னால்.. ….. எவ்வளவு கல்லெறிகள்... சாபங்கள்.. ஹூம்… கடக்கிறேன்.. எவ்வளோ கடந்து விட்டேன்.. ஐந்து வருடங்களில்.. இதையும் கடக்கிறேன்…

பகலவனின் ஒளியில்
மின்மினிகள் ஒளிர்வதில்லை..

திருப்பப் பட்ட வெளிச்சத்தில்.. நிலவின் மறுபுறம் தெரிவதில்லை..

ஆணாதிக்க சமூகம்.. முதல் கல் விழுவது பெண்ணிற்கே..

இது இயல்புதானே..
மில்க்கி மாம்,
மிளிர் பல் இளித்து கொண்டு வாங்க வேண்டாம் . அது அவள் பெண்மைக்கு இழுக்கு.

நிந்தித்த தெய்வத்திற்கு தரும் காணிக்கையாக பெற்று கொள்ளலாமே !

கல் அடியே ஆனாலும் அவள் தன் பெண்மையே கேடயம்.
அவள் சொல்லடியே கூர் வாள்.

மென்மையான வைர மலரே !
உன்னை கொய்து பூஜிக்கும் வன்மையான வைர வாளை,
உனக்கு பாத பூஜை செய்ய வைத்தாய்.

கூர் வாளை கூர் விழியால் கூறு போட்டு, சேர்ந்து விடு. உன் துன்பத்தை தூர்ந்து விடு.
 
Top