All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

sivanayani

விஜயமலர்
பெத்துக்க செஞ்ச பாவம் பிள்ளைகள் அனுபவிக்க வேண்டும்.மிளிர் உங்க அப்பா செஞ்ச பாவம் உன் முன்னால் நிற்கிறது.என்ன செய்வா இப்போது அபயனை ஏற்றுக் கொள்வாள்.
koncham time edukum eththuppaa... udane eththukkirathu kashtamla... :love::love::love:
 

sivanayani

விஜயமலர்
hai malar, super. romba manathai varuntha azhutham kodutha ud. heavy aga iruthathu. ud patithavudan konja neram ethuvum seiya thonamal appatiye iruthuvitten. romba emotional . thank you. with regards from rajinrm
wow.. thank you so much Raji. romba santhoshamaa irukku. I am blessed. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
நீதி வேறு.. உண்மை வேறு..உணர்வு வேறு..
அதைத்தான்..

ஆறாது வடுன்னு சொல்றது...



அபயனின் வலி .. அவன் செய்த அனைத்து அனர்த்தங்களையும் புரிந்து கொள்ளும் நீங்கள்..மன்னிக்க தயாரா இருக்கும் நீங்க மிளிரின் நிலையை .. அவ துன்பங்களை வலிகளை மறந்து விடுறீங்க....



சிம்பிள் ஒரு வரி.. நீங்க.. தமயந்தியின் ஆன்மா..

ம்ளிரின் தாயின் ஆன்மாவா நின்னு.. பாருங்க.. அப்பவும் இதே தான் சொல்லுவீங்களா....

விக்னேஸ்வரன்.. திட்டமிட்ட குற்றம்..பாவம்... அதே போல
அபயன் செய்தது திட்டமிட்ட குற்றமே..



தென்னைமரத்தில் தேள் கொட்ட பனைமரத்தில் நெறி கட்டிய நிலை..

அவளுக்கு ஒரே நாளில்... தகப்பன் கணவன் இரு உறவுகளும் பொய்த்துப் போச்சு.. அவ யாரை நம்புவா..

ஒரு கேள்வி கேட்டா.. என் அப்பா அப்படியான்னு.. அது கூட பொறுக்க முடியலை.. யாராலையும்..

அவ எப்படி அவனை நம்புவா.. பதினெட்டு வருடம் பார்த்து வளர்த்த உறவே பொய்த்துப் போச்சு.. இரு நாள் பார்த்த.. ஆசை பட்டு.. மரண அடி வாங்கி..நான்கு நாட்களில் எப்படி நம்பிக்கை வரும்.

அபயன் எனும் மஞ்சள் கண்ணாடியை கழற்றிட்டு பாருங்க அவளின் மனது புரியும்.


நீதித்தட்டில் அவன் தட்டு தாழ்ந்ததா... திரும்ப திரும்ப சொல்றேன்... விக்னேஸ்வரன் குற்றங்களை ம்ளிரை சுமக்க சொல்ல எந்த நீதி புத்தகத்திலும் இல்லை.. ம்ளிர் என்ன தப்பு.. குற்றம் செய்தா.. அவ தான்.. விக்னேஸ்வரன் மகளா பிற்க்கனும் னு கேட்டு பிறந்த மாதிரி .. எப்படி இப்டி சொல்ல முடியுது..

அதே விக்னேஸ்வரின் மகள் தான் ஆராதனா.. அபயன் அவளுக்கும் தண்டனை வழங்குவானா.. மாட்டான் அவ அம்முக்குட்டி செல்லக் கட்டி.. அப்போ..
தமயந்தி மகளா பிறந்தது தான் ம்ளிரின் குற்றறமா..


இதில எங்கே நீதி வந்தது.. அவன் மன்னிப்பு கேட்டான் அவ மன்னிக்கல ன்னு நிலை வந்தது..



தாலி அவ சுமக்கலாம்.. அதற்கான மரியாதை அவனிடம் இல்லைன்னு தான் அவன் புரிய வச்சுருக்கான்.. அவன் பிள்ளைகளுக்காக வா ன்னு தான் கூடடிட்டு போனான்..

நீ என் மனைவி..ன்னு உணர வைக்கல.. தூங்க போதும் மயக்கத்தில இருக்கும் போதும தான் அவன்.. அன்பு.. காதல்.. பரிகிவ் மீ புலம்பல் பண்ணிருக்கான்.. அவளுக்கு எப்படி தெரியும் அதெல்லாம்..

தெரிஞ்சாலும்........ நம்ப காலம் எடுக்க தான செய்யும்...

பச்சைமரத்தில் அடித்த ஆணியை பிடுங்கி விடலாம் காலப் போக்கில் அது ஆறி மறைந்தும் போகலாம்.. ஆனால் ஓட்டை விழுந்தது.. மாற்ற முடியாதே..




தொலைத்த இடத்தில் தான தேடனும்..


ம்ஹூம்.. கடலில் தொலைத்த ஊசியை... தேடி எடுக்க முடியுமா..

பழிவெறியில் ஏதேதோ செய்த ஒருவனிடம் காதல் பாசம்.. வாழ்வை தேட முடியுமா..


அவளுக்கு அவனின் வலி.. அவனின் வாழ்வு இப்போதான் அறிமுகம...


அவனின் காதல்.. உணர காலம் எடுக்கும்...

வெட்டிய மரம் துளிர்க்கலாம்.. பூ கொண்டு .. காய் வந்து...கனி நிறைய.. காத்திருக்க தான் வேணும்..


அவள் கட்டியது கூடே.. குஞ்சுகளைக் காக்க.. தனக்கு நிழலாய் ஒரு கூடு..

குடும்பத்திற்கு அஸ்திவாரம்.. அன்பும் அறனும்... அது வரனும்.. அதை அடியயோடு துடைத்து உடைத்து.. எடுத்தவன் அவன்.. திரும்ப அவளுக்கு அசையாத நம்பிக்கை தோன்ற சில காலம் பிடி க்கும்...

அவசரப்படாதீங்க...
மிக மிக அழகா சொல்லி இருக்கீங்க... நிச்சயமா அவளால் உடனே அவனை சரின்னு ஏத்துக்க முடியாது. அவளுக்கு காலம் வேண்டும். அந்த காலத்தை அபயனும் கொடுத்திட்டான்... நீ உணரும்வரை காத்திருப்பேன்னு... ஆனா ஒன்னு தாமரை,

"அதே விக்னேஸ்வரின் மகள் தான் ஆராதனா.. அபயன் அவளுக்கும் தண்டனை வழங்குவானா.. மாட்டான் அவ அம்முக்குட்டி செல்லக் கட்டி.. அப்போ.. தமயந்தி மகளா பிறந்தது தான் ம்ளிரின் குற்றறமா.." என்று சொல்லி இருந்தீங்க... இதில எனக்கு உடன்பாடு இல்ல, ஏன்னா, தமயந்திக்கும், விக்னேஸ்வரனுக்கு காதலால் பிறந்தவள் அவள். மகாராணி. ஆனா ஆராதனா அப்படி அல்ல. காமத்துக்கும் காதலுக்கும் கொடூரமான கற்பழிப்பின் மூலம் பிறந்தவள். அவளுக்கு தந்தையாக மாறி காத்துக்கொண்டவன் அவன்... அவள் வேறு இவள் வேறு.

எந்த நீதி நூலில் இல்லா விட்டாலும், தாய் தந்தையின் சொத்து குழந்தைக்கு போவது போல, அவர்கள் செய்த நன்மை தீமையும் குழந்தைகளுக்கு போகும். இதை யாரும் மறுக்க முடியாது. அதுதான் உண்மையும் கூட... மிளிர் விக்னேஸ்வரனுக்கு மகளாக பிறந்ததே அவள் செய்த பாவம். ஆராதனா காந்திமதிக்கு மகளாக பிறந்தது அவள் செய்த புண்ணியம்.

நீங்கள் சொல்வதை முழுமனதோடு ஏற்றுக்கொள்கிறேன். மிளிரின் காயம் மிக பலமானது. அதை எளிதில் தூக்கி எரிந்து விடமுடியாது. இதையே அபயனும் உணருகிறான். இருவரை இணைக்கும் பாலம். காதல். அவன் காதல் மெய் காதல் என்பதை இவள் புரிந்தால், தன மனதில் உள்ள வழிகளை ஒதுக்கிவிட்டு அவன் பால் சாய்வாள்... ஆனால் எப்போது என்பதுதான் கேள்வி.

அருமை அருமை தாமரை. :love::love::love::love:
 
Top