Raji anbu
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அனல் 16
(பொருளடக்கம்)
மர்மங்களுள் மர்மமாம்!
மர்மங்களுக்கு தொடர்ச்சி உண்டாம்!
அதிர்ச்சியில் ஒரு கணம் உறைந்து போன மைதிலிக்கு.. அந்த ஒரு கணம் உயிர் போய்.. பின் திரும்பி வந்தது போல் இருந்தது. இத்தனை வருடங்களாக.. பைத்தியங்கள் போல்.. வெறி பிடித்தாற் போன்று.. கரடு முரடான மலைகளில் தேடிக் கொண்டிருந்தார்கள். ஆனால் அவர்கள் தேடிய பெட்டி.. அவர்களுடய வீட்டிலேயே தான் இருக்கிறதா!
இன்னும் தான் பார்த்ததை மைதிலியால் நம்ப முடியவில்லை. மெல்ல அதைத் தொட்டுப் பார்த்தாள். மங்கிய நிறத்துடன் இருந்த நகைகளில் ஒன்றை எடுத்தாள். அதன் கனம்.. அது இரண்டு கிலோ இருக்கும் என்றுத் தெரிந்தது. பெரிய பெரிய வேலைப்பாடுகளுடன் இருந்த நகைகளில் சிலது பாசிப் படித்தாற் போன்று இருந்தது. சிலவற்றில்.. மண் நன்றாக அப்பியிருந்தது. பெட்டியின் ஒரு பக்கமாக மெல்ல பார்வையை ஓட்டியவளின் கண்ணில் தங்கத்தால் ஆன சொம்பு ஒன்று பட்டது. நைய்ந்து போன துணியால் அதன் வாயை கட்டப்பட்டிருந்தது. அதை மெல்ல திறந்தாள். அதில் தங்க நாணயங்கள் இருந்தன. ஒரு அடி உயரத்தில் சாமி சிலைகளும் இருந்தன. ஆனால் இரண்டு அடி அகலமும் நீளமும் கொண்ட பெட்டியில் கால்வாசி அளவே தங்கங்கள் இருந்தன. காற்றில் கற்பூரம் கரைவது போல் தங்கமும்.. புழுதி பட்டு கரைந்து விட்டதோ என்றுத் தோன்றியது.
அப்பொழுது தான் கவனித்தாள். அந்த பெட்டியின் அருகில்.. இந்த காலத்தில் உபயோகிக்கும் ட்ரெலி அமைப்பு கொண்ட சூட்கேஸ் இருந்தது. இது எப்படி இங்கே.. என்றுத் திகைத்தவள், அதை ஆர்வத்துடன் திறந்தாள். அதிலும் தங்கங்கள் இருந்தன. ஆனால் சுத்தமாக இருந்தன. அவை பழங்கால நகைகள் தான் என்று அதன் வடிவமைப்பில் தெரிந்தது. இரண்டையும் மாறி மாறிப் பார்த்த மைதிலிக்கு புரிந்த விசயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த பெட்டியை அவள் முதலில் கண்டுப்பிடிக்கவில்லை. ஏற்கனவே இன்னொருவர் கண்டுப்பிடித்து.. மண் மற்றும் பாசி படிந்ததை கொஞ்சம் கொஞ்சமாக சுத்தம் செய்து.. இந்த பெட்டியில் சேகரித்துக் கொண்டிருந்திருக்கிறார்கள். அவர்கள் இங்கு தான் கண்டுப்பிடித்தார்களா.. அல்லது வேறு இடத்தில் கண்டுப்பிடித்து அதை இங்கு மறைத்து வைத்திருக்கிறார்களா என்றும் சந்தேகம் ஏற்பட்டது. மேலும் இன்னொரு சந்தேகமும் தோன்றியது. அதாவது அவர்கள் கண்டுப்பிடித்தாகி விட்டது. ஆனால் இன்னும் தேடுவது போல் பாசாங்கு செய்துக் கொண்டிருக்கிறார்கள். அது யார்?
மாறனின் ஆவியாக நடிக்கும் அந்த உருவமா!
அப்பாவா?
அத்தையா?
அந்த இன்னொரு கும்பலா?
சூர்யா சந்தேகப்படுவது போல்.. அவளது சித்தப்பாவா?
அல்லது சூர்யாவா?
என்று வரைக் கூட அவளது எண்ணங்கள் சென்றன.
வேண்டியதைக் கண்டுப்பிடித்த பின்பும்.. ஏன் இன்னும் தேடுவது போல் பாசாங்கு காட்டுகிறார்கள். மற்றவர்களுக்கு பங்கு கிடைக்க கூடாது என்றா.. என எண்ணமிடும் போதே.. மைதிலிக்கு என்னவோ உறுத்தியது. அது என்னவென்று யோசித்துப் பார்த்தவள், பரபரப்புடன் சுற்றிலும் பார்த்தாள்.
ஆம் இரண்டடி இரண்டு அங்குலத்தில் மொத்தம் நான்கு பெட்டிகளை திருடிக் கொண்டு சென்றார்கள். மற்றவை எங்கே? மைதிலிக்கு ஒன்றும் புரியவில்லை. ஒன்று மட்டும் எப்படிக் கிடைத்தது என்றுக் குழம்பினாள். ஒருவேளை மற்றவைகளை வேறு இடத்தில் மறைத்து வைத்திருக்கிறார்களோ.. என்று நன்றாக தேடிப் பார்த்தாள். அங்கிருந்த சிறு அலமாரிகளில் தேடினாள். இது போன்று வேறு பெட்டிகள் அதற்கு கீழ் இருக்கிறதா என்றுப் புரட்டிப் போட்டுப் பார்த்தாள். நன்றாக தேடிப் பார்த்தவளுக்கு.. இன்னொரு எண்ணம் தோன்றியது.
அவள் முதலில் சென்ற வழி வேறு.. இந்த கதவை மறைக்கும்படி.. மாட்டப்பட்டிருந்த துணி இவளது கையில் சிக்கவும், இங்கு வந்திருக்கிறாள். ஒருவேளை நேராக சென்றால்.. அங்கும் இது போல் அறை இருந்து.. அதில் மீதி பெட்டிகள் இருக்குமோ என்று நினைத்தவள், அங்கு சென்றுப் பார்க்க தீர்மானித்தாள்.
ஆராய ஆராய மனதில் இருந்த பயங்கள் அகல்வதை உணர்ந்தாள். அவளுக்கு சூர்யாவின் நினைவு வந்தது. அவனோடு இருந்த தைரியம் தன்னுடனும் ஒட்டிக் கொண்டாதோ.. என்றுப் புன்னகையுடன் எண்ணமிட்டபடி.. மீண்டும் பெட்டிகளை மூடி வைத்தவள், இந்த பெட்டிகள் கிடைத்ததும் சூா்யாவின் உதவியுடன் அவள் நினைத்ததை செயல்படுத்த வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள். பின் அங்கிருந்து வெளியே வந்தவள்.. மீண்டும் பழையபடி.. துணியால் அந்த கதவை மறைத்தாள். பின் பழையபடி தவழ்ந்து சென்றாள். சிறிது நேரத்திலேயே.. மேடு போல் பகுதியில் அவளது கால் தட்டுப்பட்டது. மெல்ல கையை நீட்டி முன் இருந்த மேட்டினை தடவிப் பார்த்தாள். அடுத்து ஒரு மேடு இருந்தது. அப்பொழுதே.. அது படிக்கட்டு என்றுத் தெரியவும்.. அதில் தவழ்ந்தவாறே ஏறத் துவங்கினாள்.
ஏனெனில்.. வெகுநேரம் காற்று உள்ளே புக முடியாதபடியான பகுதியில் இருந்ததால்.. அவளுக்கு லேசாக மூச்சு முட்டுவது போல் இருந்தது. இன்னும் சிறிது நேரத்தில் அவளுக்கு வெளிக் காற்று அவசியம் என்றும் அவளுக்கு புரிந்தது. ஆனால் இதுவரை வந்துவிட்டு.. செல்ல அவளுக்கு விருப்பமில்லை. ஓரத்தில் தடவியாறு மேலே ஏறினாள். ஏனெனில் அந்த அறையை போன்று எதாவது அறை தென்ப்படுகிறதா என்றுப் பார்க்கலானாள். போக போக.. அந்த பகுதி பெரிதாகுவது தெரிந்தது. அந்த படிக்கட்டும் ஓரு சுவற்றோடு நின்றது.
அப்பொழுது மனிதர்களின் பேச்சு குரல் கேட்டது. யாரோ வருகிறார்களோ என்று வந்த வழியே திரும்பி எட்டிப் பார்த்தாள். யாரும் வருவது போல் தெரியவில்லை. பின் வேறு எங்கே இருந்து வருகிறது என்றுப் பார்த்தாள். சுவற்றோரம் காதை வைத்த பொழுது.. பழைய கால ஓவியம் இருந்த இடத்தில் ரவீந்தரின் குரல் கேட்டது.
ரவீந்தர் “வீடு புல்லா தேடியாச்சு! அவளோட ரூமிலும் இல்ல. வெளியேயும் போகலை. இன்னும் இந்த இடம் மட்டும் தான் தேடிப் பார்க்கலை. ம்ம்! தேடுங்க.. நமக்கு நேரமில்லை. அவளை பலி கொடுத்தால் தான்.. நினைத்தது நடக்கும்.” என்றான்.
ஓவியத்தில் காதை வைத்துக் கேட்டுக் கொண்டிருந்த.. மைதிலி அதிர்ச்சியில் உறைந்துப் போனாள். அவளது அத்தை பெட்டிகளுக்காக அவளை பலி கொடுக்கும் வரை செல்லக் கூடுமா என்று அதிர்ச்சியாக இருந்தது. அப்பொழுது அவள் ஏறி வந்த வழியில் யாரோ வரும் சத்தம் கேட்டது. மைதிலி இன்னும் அதிர்ச்சியில் ஸ்தம்பித்து போனாள்.
அப்பொழுது அந்த பக்கம் இருந்து கதவு சாத்தப்படும் சத்தம் கேட்டது. இந்த பக்கம் யாரோ வரும் ஆராவார சத்தம் நெருங்கியது. இன்னும் ஒடுங்கியவளாய் சுவற்றோரம் ஒட்டிய பொழுது.. அவளது கையில் சிறு தாழ்பாள் தட்டுப்பட்டது. உடனே ஓசை எழுப்பாமல் மெல்ல திறந்தாள். அது அவர்கள் பழைய பொருட்களை போட்டு வைக்கும் அறை! இத்தனை வருடங்களாக இந்த அறைக்கு பலமுறை வந்திருக்கிறாள். இந்த அறையில் இருந்து இப்படியொரு.. கதவு இருப்பதை எவ்வாறு கவனிக்காமல் விட்டாள் என்று வியந்தாள்.
மேலும் அன்று தாத்தாவை கொல்ல மாறனும்… அவனுடைய நண்பர்களும் மாளிகைக்கு வந்து.. தாத்தாவின் காவலர்களிடம் இருந்து தப்பித்து.. எவ்வாறு பெட்டிகளை எடுத்து சென்றார்கள்.. என்றுத் தற்பொழுது புரிந்தது. ஆனால் அவர்களது கொள்ளு தாத்தா.. பழைய சாமான்களை போட்டு வைத்திருக்கும் இந்த அறை தான் கஜானா அறை என்றும்.. இதில் இருந்து பெட்டிகளை எடுத்துக் கொண்டு ஓடினார்கள் என்று பாதி உண்மையை மறைத்திருக்கிறார். இங்கு வந்து ஒளிந்துக் கொண்டவர்கள்.. இந்த கதவின் வழியாக சென்று அந்த சுரங்க பாதையை கடக்கையில்.. அங்கு இருந்த மறைவான இடத்தில் இருந்த நகைகளை களவாடிக் கொண்டு சென்றிருக்கிறார்கள். பல விசயங்கள் புரிந்ததில்.. மைதிலிக்கு தெளிவு பிறந்தது போன்று இருந்தது. அப்பொழுது சுரங்க பாதையின் கதவிடம் இருந்து சத்தம் வரவும், மைதிலி வேகமாக அங்கிருந்த பழைய மர அலமாரிக்கு பின்னால் மறைந்துக் கொண்டாள்.
முதலில் பெரிய கால் மட்டும் தெரிந்தது. பின் முழு உருவமும் உள்ளே நுழைந்தது.. அதைப் பார்த்த மைதலி.. அதிர்ச்சியில் உறைந்தாள். தொண்டையில் இருந்து வந்த அலறலை வாயில் கையை வைத்து.. அடக்கினாள்.
ஏனெனில் பெரிய உருவம் ஜடா முடியுடன் கருப்பாக ஏழடி உயரத்தில் நின்றுக் கொண்டிருந்தது. முதலில் மாறன் என்று அவள் பார்த்த பயந்த ஆத்மா.. தற்பொழுது.. பயமுறுத்தும் மனிதனாக தெரிந்தது. அவ்வளவு உயரத்தில் அவள் மனிதர்களை பார்த்தது இல்லை. திரும்பி.. அலமாரியில் சாய்ந்தவளின் இதயத்துடிப்பு பல மடங்கு அதிகரித்தது. உயர்ந்த நின்ற.. அந்த உருவத்திடம் தனியாக ஒரு அறையில் மாட்டிக் கொண்டிருப்பது உணரவும்.. தானே அவளைப் பயம் தோற்றிக் கொண்டது. பின் மெதுவாக எட்டிப் பார்த்தவளின் விழிகள் அதிர்ச்சியில் விரிந்தது. தனது கையில் இருந்த செல்ஃபோனில் ஏதோ எண்களை அழுத்திக் கொண்டிருந்தான் அவன்!
ஆம்! அவன் தான்!
அவளது பயம் தற்பொழுது முற்றிலும் அகன்றிருந்தது.
அடுத்த சில நிமிடங்களில்.. வீட்டிலிருந்து இந்த அறைக்கு வரும் கதவு திறக்கப்படும் சத்தம் கேட்டது. அவனும் மறைந்துக் கொள்ள நினைப்பான் என்று அவள் எண்ணினாள். ஆனால் அவனோ.. பதட்டமில்லாமல் நின்றிருந்தான்.
மைதிலி திகைப்புடன் பார்த்துக் கொண்டிருக்கையில்.. கற்பகம் கதவை திறந்துக் கொண்டு வந்தாள். பின் கதவை நன்றாக சாத்திவிட்டு.. அவனிடம் நேராக வந்தவள்..
சற்று மெல்லிய குரலில் “சிங்கு! மைதிலி இப்போ கீழே அவ அம்மா கூடத் தனியாக தான் இருக்கிறா! அவ புருஷன்காரன்.. மலைக்கு போயிருக்கான்.. என்ன நடக்குதுனு கண்டுப்பிடிக்க போறானாம். அவனை ஆதிகேச ஐயாவும் நம்ம ஆட்களும் பார்த்துப்பாங்க! போனவன் உசிரோட வீடு திரும்ப மாட்டான். புதுசா புருஷன் வந்ததில் இவ ரொம்ப ஆடற! பழைய பயம் போகுது போல தெரியுது. அதுனால அவளைப் பயமுறுத்த சொல்லியிருக்கார். அதைச் செய்யு..” என்றாள்.
அதற்கு அவன் “டிக்கே! டிக்கே! உன்கா கம்முரா டர்வாஜா பன்த் ஹெ னா! (அவங்க அறையின் சாத்தியிருப்பார்களே) எப்டி போவணும்? கதவை தட்டுணுமா?” என்றுக் கேட்டான்.
கற்பகம் “யோவ்! பஞ்சாப்பில் இருந்து நீ இங்கே வந்து எத்தனை வருஷம் ஆச்சு! இன்னும் முழுசா தமிழ் பேச மாட்டேன்கிறே! நீ ரூமுக்கு போக வேணாம், சன்னலோட கதவை திறந்து நில்லு போதும்..” என்றாள்.
இவற்றைக் கேட்டுக் கொண்டிருந்த மைதிலிக்கு திகைப்பாக இருந்தது. இத்தனை வருடங்களாக.. யாரோ அவர்களை ஏமாற்றிக் கொண்டிருந்திருக்கிறார்கள். அவளது கொள்ளு தாத்தா மாறனை கொன்றுவிட்டதால்.. அந்த ஆத்மா.. அவர்களைப் பழிக்கு பழி வாங்க அவர்களது குடும்பத்திற்கு விடாது கெடுதல்களை செய்துக் கொண்டிருக்கிறது.. என்று அவர்கள் நினைத்து கொண்டிருக்கிறார்கள். சிறு வயதில் இருந்தே அவளுக்கு அவ்வாறு சொல்லி தான் வளர்க்கப்பட்டாள். அவள் மட்டும் இல்லாது.. இதனால் அவளது குடும்பம் எத்தனை மனவுளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறது.
மாறனின் ஆத்மா என்பது கட்டுக்கதை.. அவ்வாறு அடிக்கடி அவர்கள் முன் தோன்றுவது ஒரு மனிதன் தான் என்று சூர்யா உடனே கண்டுப்பிடித்து விட்டான். இந்த விசயத்தை சித்தப்பாவிடம் கூற வேண்டும் கோபத்துடன் எண்ணினாள். அவளது தாத்தாவை பார்த்துக் கொள்ள வந்திருக்கும் கற்பகமும் இதற்கு உடந்தையாக இருப்பாள் என்று எண்ணிப் பார்க்கவில்லை. இன்னும் இதுபோல் உடன் இருந்து அவர்களுக்கு எத்தனைப் பேர் துரோகம் செய்கிறார்கள்.. அனைவரின் மேலும் சந்தேகப்பட்டாள். கற்பகம் ஆதிகேசன் என்று கூறவும், அவள் கூறிய ஆதிகேசன் யார் என்று யோசித்து பார்த்தாள்.
நான்கு வருடங்களுக்கு முன்.. அவர்களின் வீட்டிற்கு.. ஒரு ஜோசியக்காரன் அவனாக வந்து.. அவர்களது குலதெய்வம் அனுப்பியதாக குறி கூறி.. அந்த பெட்டிகளை கண்டுப்பிடித்தே ஆகணும் என்று ஆசையை ஏற்படுத்தி விட்டான். அவன்தான்.. இன்னொரு கும்பலின் தலைவனாக இருப்பான் என்றும் அவள் நினைத்துப் பார்க்கவில்லை. அந்த ஜோசியன் யாராக இருக்கும்.. என்று அவளது மனம் படபடத்தது. இப்பவே.. சூர்யாவை பார்க்க வேண்டும் போல் இருந்தது. ஏனெனில் அந்த ஜோசியக்காரன் ஆதிகேசன் தனது அடியாட்களுடன் சூர்யாவை கொல்ல திட்டமிட்டுக்கிறான். அதனால் சூர்யா மலைக்கு ஏறுவதற்குள்.. அவனைத் தடுக்க வேண்டும்.
கவனமாக நின்றிருந்தவள் அவர்கள் சென்றுவிட்டார்களா என்றுப் பார்க்க எட்டிப் பார்த்த பொழுது அவளது கரம் அவள் சாய்ந்து நின்றிருந்த.. பழைய அலமாரி கீழே பிடிமானம் உடைந்திருந்தால் அப்படியே சாய்ந்தது. அதனோடு விழுந்தவளை.. கற்பகமும், அந்த பஞ்சாப்காரனும் திடுக்கிட்டு பார்த்தார்கள். மைதிலியை அங்கு பார்த்ததும் கற்பகம் “நாம் பேசினதை கேட்டுட்டா.. அவளை பிடி! சரத்சிங்..” என்கவும், அந்த சரத்சிங்.. மைதிலியை நோக்கி வந்தான்.
அலமாரியோடு கீழே விழுந்த மைதிலி சுதாரித்து எழுந்த வேளையில் அந்த ஆஜபாகுவாய் இருந்தவன், அவளை நோக்கி வரவும், மைதிலி சட்டென்று திரும்பி வந்த வழியாக சென்று அதன் கதவைச் சாத்தி தாளிட்ட முயற்சித்தாள். அதற்குள் கதவை அடைந்திருந்தவன், கதவைத் திறக்க முயலவும், அவனது பலத்துடன் போராட முடியாது.. மைதிலி அந்த கும்மிருட்டு சுரங்க பாதையில் இறங்கினாள்.
வரும் பொழுது நிதானமாக படிக்கட்டில் ஏறி வந்தவள், சின்னதாக கட்டப்பட்டியிருந்த பழைய கால படிக்கட்டில் வேகமாக இறங்கியதால் கால் இடறி உருண்டாள். ஏழடி உயரமும் அதற்கு ஏற்றால் போன்ற பருமனும் கொண்டவன்.. அவ்வாறு விழுந்து விடக் கூடாது என்று சற்று நிதானமாக இறங்கி வந்தான். அதற்குள் கீழ் படிக்கட்டையும் தாண்டி உருண்டு வந்திருந்த மைதிலி.. தங்கங்கள் கொண்ட பெட்டி இருக்கும் சிறு அறையைத் தாண்டி விழுந்திருந்தாள். அந்த சரத்சிங்.. கையில் டார்ச் லைட்டுடன் பாதி படிக்கட்டு இறங்கி வந்துவிட்டதை பார்த்தவள், அந்த சிறு அறைக்குள் அவனிடம் மாட்டிக் கொள்வதை விட.. இங்கிருந்து தப்பித்து செல்வது மேல் என்று தொடர்ந்து சென்றாள்.
வலியும்.. அவனது கையில் கிடைத்து விடக் கூடாது என்ற அச்சமுமாக வேகமாக தவழ்ந்து சென்றுக் கொண்டிருந்த மைதிலி.. அவ்வப்போது.. திரும்பிப் பார்த்தாள். சற்று மேலே ஏறும் இடத்திற்கு வந்த பொழுது திரும்பிப் பார்த்தாள்.
அந்த சரத்சிங்.. கையில் டார்ச்சுடன் வேகமாக தவழ முடியாமல் தவழ்ந்து வந்துக் கொண்டிருந்தான். ஒரு கையில் டார்ச் வைத்துக் கொண்டு வேகமாக தவழ முடியாததால் அவனது கையில் இருந்து.. டார்ச் லைட்.. நழுவி கீழே விழுந்தது. அந்த தடுமாற்றத்தைப் பயன்படுத்திக் கொண்ட மைதிலி வேகமாக திரும்பி.. புதர்கள் வளர்ந்து இருந்ததை ஒதுக்கிவிட்டு வேகமாக ஏறி.. அந்த பாதையில் ஏறினாள். அங்கு படிக்கட்டுகள் போல்.. மரப்பலகைகள் இருப்பதைத் தடவிப் பார்த்தாள். அப்பொழுதே.. தான் வந்த பாதை இதுவல்ல என்றுப் புரிந்தது.
பஞ்சாப்காரன் எங்கு வருகிறான் என்றுப் பார்ப்பதற்காக திரும்பிப் பார்த்துவிட்டு, திரும்பிய பொழுது.. அவன் டார்ச்சை கீழே விட்டதால்.. இருள் சூழ்ந்துவிட்டது. அந்த இருட்டில் தான் முதலில் இங்கு வந்த பாதையில் புதர்கள் இல்லை என்றுக் கூட யோசிக்காமல்.. கிடைத்த வழியில் ஏறி வந்துவிட்டாள். தற்பொழுதே இது வேறு பாதை என்பதை உணர்ந்தாள்.
இந்த வேறு பாதை தன்னை எங்கு கொண்டு சேர்த்து விடுமோ என்று அச்சம் கொண்டாலும்.. திரும்பி செல்வதை விட.. துணிந்து முன்னேறி செல்ல முடிவெடுத்தாள். மரப்படிக்கட்டில் மெல்ல ஏறும் போது.. சிறு வெளிச்சம் தென்பட்டது. அந்த மரப்படிக்கட்டில் ஏறி முடிக்கவும், சற்று எம்பினாலும்.. அவளது தலை கூரையைத் தொட்டு விடக் கூடிய உயரத்திலும் இருவர் தாராளமாக போக கூடிய அகலமும் கொண்ட நீண்ட சுரங்கபாதை இருந்தது. ஒரிடத்தில் சிறு பேட்டரி லைட் எரிந்துக் கொண்டிருந்தது. அதைக் கண்டு.. மைதிலியின் விழிகள் விரிந்தன.
தலைக்கு மேல் உறுதியான மரப்பலகையால் ஆனா கூரையும்.. மண்கள் அரித்த தூண்கள் ஓரத்தில் வரிசையாக அமைந்திருக்க.. அதற்கு இடையில் பக்கவாட்டில் செங்கற்களால் ஆனா சுவர் உறுதியாக நின்றிருந்தது. பல வருடங்களுக்கு முன் கட்டியிருந்த சுரங்கபாதை என்பதால்.. மதியம் பெய்த மழையின் காரணமாக மழைநீர் சொட்டு சொட்டாக அந்த கூரையில் இருந்து சொட்டிக் கொண்டிருந்தது. குளிர் உடலையும் உள்ளத்தையும் ஊடுருவ குளிராலும்.. பயத்தாலும் சிறிது நடுங்கியவாறு அந்த பாதையில் சென்றுக் கொண்டிருந்தாள். அந்த பஞ்சாப்காரன் தன்னைத் துரத்திக் கொண்டு வருவானோ என்று பயந்து அவ்வவ்போது திரும்பிப் பார்த்தவாறு நடந்தாள்.
சிறிது தொலைவு சென்ற நிலையில் அங்கேயும்.. ஒரிடத்தில் பாதை இரண்டாக பிரிந்தது. எதில் செல்வது என்று ஒரு கணம் திணறியவள், வலது புறம் இருக்கும் பாதைக்குள் செல்ல முடிவெடுத்தாள்.
சிறிது நேரத்திலேயே சில்லென்ற காற்றை உணரவும், வேகமாக சென்றவள், அங்கும் இருபது படிக்கட்டுகள் இருந்தன. அதில் வேகமாக ஏறியவள், அங்கு ஓவியம் வரையப்பட்ட கதவு இருப்பதைப் பார்த்தாள். அதை ஆர்வத்துடன் திறந்து வெளியே வந்தவள், திகைத்தாள். அந்த சிறு அறையில் அவளுக்கு முன்.. சரியாக பராமரிக்கப்படாத அம்மன் சிலை இருந்தது. சுற்றிலும் பார்த்தவளுக்கு.. இது கோவிலின் கர்ப்பகிரகம் என்றுத் தெரிந்தது.
இது எந்த இடம் என்றுத் திகைத்தவாறு மீண்டும் சுற்றிலும் பார்த்தவள், அங்கு இருந்த சன்னலை திறந்து.. வெளியே தெரிந்த காட்சியை பார்த்து.. மேலும் திகைத்தாள்.
அவர்களது ஜமீன் மாளிகை நன்றாக தெரிந்தது. அப்பொழுதே இது எந்த இடம் என்று மைதிலிக்கு தெரிந்தது. அவளது கொள்ளு தாத்தா கட்டிய கோவில் அது! கோவில் கட்டித் தருவது போல் கட்டித் தந்து அவரது மாளிகையில் இருந்து வெளியேற சுரங்கப்பாதை அமைத்துள்ளார்.
(பொருளடக்கம்)
மர்மங்களுள் மர்மமாம்!
மர்மங்களுக்கு தொடர்ச்சி உண்டாம்!
அதிர்ச்சியில் ஒரு கணம் உறைந்து போன மைதிலிக்கு.. அந்த ஒரு கணம் உயிர் போய்.. பின் திரும்பி வந்தது போல் இருந்தது. இத்தனை வருடங்களாக.. பைத்தியங்கள் போல்.. வெறி பிடித்தாற் போன்று.. கரடு முரடான மலைகளில் தேடிக் கொண்டிருந்தார்கள். ஆனால் அவர்கள் தேடிய பெட்டி.. அவர்களுடய வீட்டிலேயே தான் இருக்கிறதா!
இன்னும் தான் பார்த்ததை மைதிலியால் நம்ப முடியவில்லை. மெல்ல அதைத் தொட்டுப் பார்த்தாள். மங்கிய நிறத்துடன் இருந்த நகைகளில் ஒன்றை எடுத்தாள். அதன் கனம்.. அது இரண்டு கிலோ இருக்கும் என்றுத் தெரிந்தது. பெரிய பெரிய வேலைப்பாடுகளுடன் இருந்த நகைகளில் சிலது பாசிப் படித்தாற் போன்று இருந்தது. சிலவற்றில்.. மண் நன்றாக அப்பியிருந்தது. பெட்டியின் ஒரு பக்கமாக மெல்ல பார்வையை ஓட்டியவளின் கண்ணில் தங்கத்தால் ஆன சொம்பு ஒன்று பட்டது. நைய்ந்து போன துணியால் அதன் வாயை கட்டப்பட்டிருந்தது. அதை மெல்ல திறந்தாள். அதில் தங்க நாணயங்கள் இருந்தன. ஒரு அடி உயரத்தில் சாமி சிலைகளும் இருந்தன. ஆனால் இரண்டு அடி அகலமும் நீளமும் கொண்ட பெட்டியில் கால்வாசி அளவே தங்கங்கள் இருந்தன. காற்றில் கற்பூரம் கரைவது போல் தங்கமும்.. புழுதி பட்டு கரைந்து விட்டதோ என்றுத் தோன்றியது.
அப்பொழுது தான் கவனித்தாள். அந்த பெட்டியின் அருகில்.. இந்த காலத்தில் உபயோகிக்கும் ட்ரெலி அமைப்பு கொண்ட சூட்கேஸ் இருந்தது. இது எப்படி இங்கே.. என்றுத் திகைத்தவள், அதை ஆர்வத்துடன் திறந்தாள். அதிலும் தங்கங்கள் இருந்தன. ஆனால் சுத்தமாக இருந்தன. அவை பழங்கால நகைகள் தான் என்று அதன் வடிவமைப்பில் தெரிந்தது. இரண்டையும் மாறி மாறிப் பார்த்த மைதிலிக்கு புரிந்த விசயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த பெட்டியை அவள் முதலில் கண்டுப்பிடிக்கவில்லை. ஏற்கனவே இன்னொருவர் கண்டுப்பிடித்து.. மண் மற்றும் பாசி படிந்ததை கொஞ்சம் கொஞ்சமாக சுத்தம் செய்து.. இந்த பெட்டியில் சேகரித்துக் கொண்டிருந்திருக்கிறார்கள். அவர்கள் இங்கு தான் கண்டுப்பிடித்தார்களா.. அல்லது வேறு இடத்தில் கண்டுப்பிடித்து அதை இங்கு மறைத்து வைத்திருக்கிறார்களா என்றும் சந்தேகம் ஏற்பட்டது. மேலும் இன்னொரு சந்தேகமும் தோன்றியது. அதாவது அவர்கள் கண்டுப்பிடித்தாகி விட்டது. ஆனால் இன்னும் தேடுவது போல் பாசாங்கு செய்துக் கொண்டிருக்கிறார்கள். அது யார்?
மாறனின் ஆவியாக நடிக்கும் அந்த உருவமா!
அப்பாவா?
அத்தையா?
அந்த இன்னொரு கும்பலா?
சூர்யா சந்தேகப்படுவது போல்.. அவளது சித்தப்பாவா?
அல்லது சூர்யாவா?
என்று வரைக் கூட அவளது எண்ணங்கள் சென்றன.
வேண்டியதைக் கண்டுப்பிடித்த பின்பும்.. ஏன் இன்னும் தேடுவது போல் பாசாங்கு காட்டுகிறார்கள். மற்றவர்களுக்கு பங்கு கிடைக்க கூடாது என்றா.. என எண்ணமிடும் போதே.. மைதிலிக்கு என்னவோ உறுத்தியது. அது என்னவென்று யோசித்துப் பார்த்தவள், பரபரப்புடன் சுற்றிலும் பார்த்தாள்.
ஆம் இரண்டடி இரண்டு அங்குலத்தில் மொத்தம் நான்கு பெட்டிகளை திருடிக் கொண்டு சென்றார்கள். மற்றவை எங்கே? மைதிலிக்கு ஒன்றும் புரியவில்லை. ஒன்று மட்டும் எப்படிக் கிடைத்தது என்றுக் குழம்பினாள். ஒருவேளை மற்றவைகளை வேறு இடத்தில் மறைத்து வைத்திருக்கிறார்களோ.. என்று நன்றாக தேடிப் பார்த்தாள். அங்கிருந்த சிறு அலமாரிகளில் தேடினாள். இது போன்று வேறு பெட்டிகள் அதற்கு கீழ் இருக்கிறதா என்றுப் புரட்டிப் போட்டுப் பார்த்தாள். நன்றாக தேடிப் பார்த்தவளுக்கு.. இன்னொரு எண்ணம் தோன்றியது.
அவள் முதலில் சென்ற வழி வேறு.. இந்த கதவை மறைக்கும்படி.. மாட்டப்பட்டிருந்த துணி இவளது கையில் சிக்கவும், இங்கு வந்திருக்கிறாள். ஒருவேளை நேராக சென்றால்.. அங்கும் இது போல் அறை இருந்து.. அதில் மீதி பெட்டிகள் இருக்குமோ என்று நினைத்தவள், அங்கு சென்றுப் பார்க்க தீர்மானித்தாள்.
ஆராய ஆராய மனதில் இருந்த பயங்கள் அகல்வதை உணர்ந்தாள். அவளுக்கு சூர்யாவின் நினைவு வந்தது. அவனோடு இருந்த தைரியம் தன்னுடனும் ஒட்டிக் கொண்டாதோ.. என்றுப் புன்னகையுடன் எண்ணமிட்டபடி.. மீண்டும் பெட்டிகளை மூடி வைத்தவள், இந்த பெட்டிகள் கிடைத்ததும் சூா்யாவின் உதவியுடன் அவள் நினைத்ததை செயல்படுத்த வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள். பின் அங்கிருந்து வெளியே வந்தவள்.. மீண்டும் பழையபடி.. துணியால் அந்த கதவை மறைத்தாள். பின் பழையபடி தவழ்ந்து சென்றாள். சிறிது நேரத்திலேயே.. மேடு போல் பகுதியில் அவளது கால் தட்டுப்பட்டது. மெல்ல கையை நீட்டி முன் இருந்த மேட்டினை தடவிப் பார்த்தாள். அடுத்து ஒரு மேடு இருந்தது. அப்பொழுதே.. அது படிக்கட்டு என்றுத் தெரியவும்.. அதில் தவழ்ந்தவாறே ஏறத் துவங்கினாள்.
ஏனெனில்.. வெகுநேரம் காற்று உள்ளே புக முடியாதபடியான பகுதியில் இருந்ததால்.. அவளுக்கு லேசாக மூச்சு முட்டுவது போல் இருந்தது. இன்னும் சிறிது நேரத்தில் அவளுக்கு வெளிக் காற்று அவசியம் என்றும் அவளுக்கு புரிந்தது. ஆனால் இதுவரை வந்துவிட்டு.. செல்ல அவளுக்கு விருப்பமில்லை. ஓரத்தில் தடவியாறு மேலே ஏறினாள். ஏனெனில் அந்த அறையை போன்று எதாவது அறை தென்ப்படுகிறதா என்றுப் பார்க்கலானாள். போக போக.. அந்த பகுதி பெரிதாகுவது தெரிந்தது. அந்த படிக்கட்டும் ஓரு சுவற்றோடு நின்றது.
அப்பொழுது மனிதர்களின் பேச்சு குரல் கேட்டது. யாரோ வருகிறார்களோ என்று வந்த வழியே திரும்பி எட்டிப் பார்த்தாள். யாரும் வருவது போல் தெரியவில்லை. பின் வேறு எங்கே இருந்து வருகிறது என்றுப் பார்த்தாள். சுவற்றோரம் காதை வைத்த பொழுது.. பழைய கால ஓவியம் இருந்த இடத்தில் ரவீந்தரின் குரல் கேட்டது.
ரவீந்தர் “வீடு புல்லா தேடியாச்சு! அவளோட ரூமிலும் இல்ல. வெளியேயும் போகலை. இன்னும் இந்த இடம் மட்டும் தான் தேடிப் பார்க்கலை. ம்ம்! தேடுங்க.. நமக்கு நேரமில்லை. அவளை பலி கொடுத்தால் தான்.. நினைத்தது நடக்கும்.” என்றான்.
ஓவியத்தில் காதை வைத்துக் கேட்டுக் கொண்டிருந்த.. மைதிலி அதிர்ச்சியில் உறைந்துப் போனாள். அவளது அத்தை பெட்டிகளுக்காக அவளை பலி கொடுக்கும் வரை செல்லக் கூடுமா என்று அதிர்ச்சியாக இருந்தது. அப்பொழுது அவள் ஏறி வந்த வழியில் யாரோ வரும் சத்தம் கேட்டது. மைதிலி இன்னும் அதிர்ச்சியில் ஸ்தம்பித்து போனாள்.
அப்பொழுது அந்த பக்கம் இருந்து கதவு சாத்தப்படும் சத்தம் கேட்டது. இந்த பக்கம் யாரோ வரும் ஆராவார சத்தம் நெருங்கியது. இன்னும் ஒடுங்கியவளாய் சுவற்றோரம் ஒட்டிய பொழுது.. அவளது கையில் சிறு தாழ்பாள் தட்டுப்பட்டது. உடனே ஓசை எழுப்பாமல் மெல்ல திறந்தாள். அது அவர்கள் பழைய பொருட்களை போட்டு வைக்கும் அறை! இத்தனை வருடங்களாக இந்த அறைக்கு பலமுறை வந்திருக்கிறாள். இந்த அறையில் இருந்து இப்படியொரு.. கதவு இருப்பதை எவ்வாறு கவனிக்காமல் விட்டாள் என்று வியந்தாள்.
மேலும் அன்று தாத்தாவை கொல்ல மாறனும்… அவனுடைய நண்பர்களும் மாளிகைக்கு வந்து.. தாத்தாவின் காவலர்களிடம் இருந்து தப்பித்து.. எவ்வாறு பெட்டிகளை எடுத்து சென்றார்கள்.. என்றுத் தற்பொழுது புரிந்தது. ஆனால் அவர்களது கொள்ளு தாத்தா.. பழைய சாமான்களை போட்டு வைத்திருக்கும் இந்த அறை தான் கஜானா அறை என்றும்.. இதில் இருந்து பெட்டிகளை எடுத்துக் கொண்டு ஓடினார்கள் என்று பாதி உண்மையை மறைத்திருக்கிறார். இங்கு வந்து ஒளிந்துக் கொண்டவர்கள்.. இந்த கதவின் வழியாக சென்று அந்த சுரங்க பாதையை கடக்கையில்.. அங்கு இருந்த மறைவான இடத்தில் இருந்த நகைகளை களவாடிக் கொண்டு சென்றிருக்கிறார்கள். பல விசயங்கள் புரிந்ததில்.. மைதிலிக்கு தெளிவு பிறந்தது போன்று இருந்தது. அப்பொழுது சுரங்க பாதையின் கதவிடம் இருந்து சத்தம் வரவும், மைதிலி வேகமாக அங்கிருந்த பழைய மர அலமாரிக்கு பின்னால் மறைந்துக் கொண்டாள்.
முதலில் பெரிய கால் மட்டும் தெரிந்தது. பின் முழு உருவமும் உள்ளே நுழைந்தது.. அதைப் பார்த்த மைதலி.. அதிர்ச்சியில் உறைந்தாள். தொண்டையில் இருந்து வந்த அலறலை வாயில் கையை வைத்து.. அடக்கினாள்.
ஏனெனில் பெரிய உருவம் ஜடா முடியுடன் கருப்பாக ஏழடி உயரத்தில் நின்றுக் கொண்டிருந்தது. முதலில் மாறன் என்று அவள் பார்த்த பயந்த ஆத்மா.. தற்பொழுது.. பயமுறுத்தும் மனிதனாக தெரிந்தது. அவ்வளவு உயரத்தில் அவள் மனிதர்களை பார்த்தது இல்லை. திரும்பி.. அலமாரியில் சாய்ந்தவளின் இதயத்துடிப்பு பல மடங்கு அதிகரித்தது. உயர்ந்த நின்ற.. அந்த உருவத்திடம் தனியாக ஒரு அறையில் மாட்டிக் கொண்டிருப்பது உணரவும்.. தானே அவளைப் பயம் தோற்றிக் கொண்டது. பின் மெதுவாக எட்டிப் பார்த்தவளின் விழிகள் அதிர்ச்சியில் விரிந்தது. தனது கையில் இருந்த செல்ஃபோனில் ஏதோ எண்களை அழுத்திக் கொண்டிருந்தான் அவன்!
ஆம்! அவன் தான்!
அவளது பயம் தற்பொழுது முற்றிலும் அகன்றிருந்தது.
அடுத்த சில நிமிடங்களில்.. வீட்டிலிருந்து இந்த அறைக்கு வரும் கதவு திறக்கப்படும் சத்தம் கேட்டது. அவனும் மறைந்துக் கொள்ள நினைப்பான் என்று அவள் எண்ணினாள். ஆனால் அவனோ.. பதட்டமில்லாமல் நின்றிருந்தான்.
மைதிலி திகைப்புடன் பார்த்துக் கொண்டிருக்கையில்.. கற்பகம் கதவை திறந்துக் கொண்டு வந்தாள். பின் கதவை நன்றாக சாத்திவிட்டு.. அவனிடம் நேராக வந்தவள்..
சற்று மெல்லிய குரலில் “சிங்கு! மைதிலி இப்போ கீழே அவ அம்மா கூடத் தனியாக தான் இருக்கிறா! அவ புருஷன்காரன்.. மலைக்கு போயிருக்கான்.. என்ன நடக்குதுனு கண்டுப்பிடிக்க போறானாம். அவனை ஆதிகேச ஐயாவும் நம்ம ஆட்களும் பார்த்துப்பாங்க! போனவன் உசிரோட வீடு திரும்ப மாட்டான். புதுசா புருஷன் வந்ததில் இவ ரொம்ப ஆடற! பழைய பயம் போகுது போல தெரியுது. அதுனால அவளைப் பயமுறுத்த சொல்லியிருக்கார். அதைச் செய்யு..” என்றாள்.
அதற்கு அவன் “டிக்கே! டிக்கே! உன்கா கம்முரா டர்வாஜா பன்த் ஹெ னா! (அவங்க அறையின் சாத்தியிருப்பார்களே) எப்டி போவணும்? கதவை தட்டுணுமா?” என்றுக் கேட்டான்.
கற்பகம் “யோவ்! பஞ்சாப்பில் இருந்து நீ இங்கே வந்து எத்தனை வருஷம் ஆச்சு! இன்னும் முழுசா தமிழ் பேச மாட்டேன்கிறே! நீ ரூமுக்கு போக வேணாம், சன்னலோட கதவை திறந்து நில்லு போதும்..” என்றாள்.
இவற்றைக் கேட்டுக் கொண்டிருந்த மைதிலிக்கு திகைப்பாக இருந்தது. இத்தனை வருடங்களாக.. யாரோ அவர்களை ஏமாற்றிக் கொண்டிருந்திருக்கிறார்கள். அவளது கொள்ளு தாத்தா மாறனை கொன்றுவிட்டதால்.. அந்த ஆத்மா.. அவர்களைப் பழிக்கு பழி வாங்க அவர்களது குடும்பத்திற்கு விடாது கெடுதல்களை செய்துக் கொண்டிருக்கிறது.. என்று அவர்கள் நினைத்து கொண்டிருக்கிறார்கள். சிறு வயதில் இருந்தே அவளுக்கு அவ்வாறு சொல்லி தான் வளர்க்கப்பட்டாள். அவள் மட்டும் இல்லாது.. இதனால் அவளது குடும்பம் எத்தனை மனவுளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறது.
மாறனின் ஆத்மா என்பது கட்டுக்கதை.. அவ்வாறு அடிக்கடி அவர்கள் முன் தோன்றுவது ஒரு மனிதன் தான் என்று சூர்யா உடனே கண்டுப்பிடித்து விட்டான். இந்த விசயத்தை சித்தப்பாவிடம் கூற வேண்டும் கோபத்துடன் எண்ணினாள். அவளது தாத்தாவை பார்த்துக் கொள்ள வந்திருக்கும் கற்பகமும் இதற்கு உடந்தையாக இருப்பாள் என்று எண்ணிப் பார்க்கவில்லை. இன்னும் இதுபோல் உடன் இருந்து அவர்களுக்கு எத்தனைப் பேர் துரோகம் செய்கிறார்கள்.. அனைவரின் மேலும் சந்தேகப்பட்டாள். கற்பகம் ஆதிகேசன் என்று கூறவும், அவள் கூறிய ஆதிகேசன் யார் என்று யோசித்து பார்த்தாள்.
நான்கு வருடங்களுக்கு முன்.. அவர்களின் வீட்டிற்கு.. ஒரு ஜோசியக்காரன் அவனாக வந்து.. அவர்களது குலதெய்வம் அனுப்பியதாக குறி கூறி.. அந்த பெட்டிகளை கண்டுப்பிடித்தே ஆகணும் என்று ஆசையை ஏற்படுத்தி விட்டான். அவன்தான்.. இன்னொரு கும்பலின் தலைவனாக இருப்பான் என்றும் அவள் நினைத்துப் பார்க்கவில்லை. அந்த ஜோசியன் யாராக இருக்கும்.. என்று அவளது மனம் படபடத்தது. இப்பவே.. சூர்யாவை பார்க்க வேண்டும் போல் இருந்தது. ஏனெனில் அந்த ஜோசியக்காரன் ஆதிகேசன் தனது அடியாட்களுடன் சூர்யாவை கொல்ல திட்டமிட்டுக்கிறான். அதனால் சூர்யா மலைக்கு ஏறுவதற்குள்.. அவனைத் தடுக்க வேண்டும்.
கவனமாக நின்றிருந்தவள் அவர்கள் சென்றுவிட்டார்களா என்றுப் பார்க்க எட்டிப் பார்த்த பொழுது அவளது கரம் அவள் சாய்ந்து நின்றிருந்த.. பழைய அலமாரி கீழே பிடிமானம் உடைந்திருந்தால் அப்படியே சாய்ந்தது. அதனோடு விழுந்தவளை.. கற்பகமும், அந்த பஞ்சாப்காரனும் திடுக்கிட்டு பார்த்தார்கள். மைதிலியை அங்கு பார்த்ததும் கற்பகம் “நாம் பேசினதை கேட்டுட்டா.. அவளை பிடி! சரத்சிங்..” என்கவும், அந்த சரத்சிங்.. மைதிலியை நோக்கி வந்தான்.
அலமாரியோடு கீழே விழுந்த மைதிலி சுதாரித்து எழுந்த வேளையில் அந்த ஆஜபாகுவாய் இருந்தவன், அவளை நோக்கி வரவும், மைதிலி சட்டென்று திரும்பி வந்த வழியாக சென்று அதன் கதவைச் சாத்தி தாளிட்ட முயற்சித்தாள். அதற்குள் கதவை அடைந்திருந்தவன், கதவைத் திறக்க முயலவும், அவனது பலத்துடன் போராட முடியாது.. மைதிலி அந்த கும்மிருட்டு சுரங்க பாதையில் இறங்கினாள்.
வரும் பொழுது நிதானமாக படிக்கட்டில் ஏறி வந்தவள், சின்னதாக கட்டப்பட்டியிருந்த பழைய கால படிக்கட்டில் வேகமாக இறங்கியதால் கால் இடறி உருண்டாள். ஏழடி உயரமும் அதற்கு ஏற்றால் போன்ற பருமனும் கொண்டவன்.. அவ்வாறு விழுந்து விடக் கூடாது என்று சற்று நிதானமாக இறங்கி வந்தான். அதற்குள் கீழ் படிக்கட்டையும் தாண்டி உருண்டு வந்திருந்த மைதிலி.. தங்கங்கள் கொண்ட பெட்டி இருக்கும் சிறு அறையைத் தாண்டி விழுந்திருந்தாள். அந்த சரத்சிங்.. கையில் டார்ச் லைட்டுடன் பாதி படிக்கட்டு இறங்கி வந்துவிட்டதை பார்த்தவள், அந்த சிறு அறைக்குள் அவனிடம் மாட்டிக் கொள்வதை விட.. இங்கிருந்து தப்பித்து செல்வது மேல் என்று தொடர்ந்து சென்றாள்.
வலியும்.. அவனது கையில் கிடைத்து விடக் கூடாது என்ற அச்சமுமாக வேகமாக தவழ்ந்து சென்றுக் கொண்டிருந்த மைதிலி.. அவ்வப்போது.. திரும்பிப் பார்த்தாள். சற்று மேலே ஏறும் இடத்திற்கு வந்த பொழுது திரும்பிப் பார்த்தாள்.
அந்த சரத்சிங்.. கையில் டார்ச்சுடன் வேகமாக தவழ முடியாமல் தவழ்ந்து வந்துக் கொண்டிருந்தான். ஒரு கையில் டார்ச் வைத்துக் கொண்டு வேகமாக தவழ முடியாததால் அவனது கையில் இருந்து.. டார்ச் லைட்.. நழுவி கீழே விழுந்தது. அந்த தடுமாற்றத்தைப் பயன்படுத்திக் கொண்ட மைதிலி வேகமாக திரும்பி.. புதர்கள் வளர்ந்து இருந்ததை ஒதுக்கிவிட்டு வேகமாக ஏறி.. அந்த பாதையில் ஏறினாள். அங்கு படிக்கட்டுகள் போல்.. மரப்பலகைகள் இருப்பதைத் தடவிப் பார்த்தாள். அப்பொழுதே.. தான் வந்த பாதை இதுவல்ல என்றுப் புரிந்தது.
பஞ்சாப்காரன் எங்கு வருகிறான் என்றுப் பார்ப்பதற்காக திரும்பிப் பார்த்துவிட்டு, திரும்பிய பொழுது.. அவன் டார்ச்சை கீழே விட்டதால்.. இருள் சூழ்ந்துவிட்டது. அந்த இருட்டில் தான் முதலில் இங்கு வந்த பாதையில் புதர்கள் இல்லை என்றுக் கூட யோசிக்காமல்.. கிடைத்த வழியில் ஏறி வந்துவிட்டாள். தற்பொழுதே இது வேறு பாதை என்பதை உணர்ந்தாள்.
இந்த வேறு பாதை தன்னை எங்கு கொண்டு சேர்த்து விடுமோ என்று அச்சம் கொண்டாலும்.. திரும்பி செல்வதை விட.. துணிந்து முன்னேறி செல்ல முடிவெடுத்தாள். மரப்படிக்கட்டில் மெல்ல ஏறும் போது.. சிறு வெளிச்சம் தென்பட்டது. அந்த மரப்படிக்கட்டில் ஏறி முடிக்கவும், சற்று எம்பினாலும்.. அவளது தலை கூரையைத் தொட்டு விடக் கூடிய உயரத்திலும் இருவர் தாராளமாக போக கூடிய அகலமும் கொண்ட நீண்ட சுரங்கபாதை இருந்தது. ஒரிடத்தில் சிறு பேட்டரி லைட் எரிந்துக் கொண்டிருந்தது. அதைக் கண்டு.. மைதிலியின் விழிகள் விரிந்தன.
தலைக்கு மேல் உறுதியான மரப்பலகையால் ஆனா கூரையும்.. மண்கள் அரித்த தூண்கள் ஓரத்தில் வரிசையாக அமைந்திருக்க.. அதற்கு இடையில் பக்கவாட்டில் செங்கற்களால் ஆனா சுவர் உறுதியாக நின்றிருந்தது. பல வருடங்களுக்கு முன் கட்டியிருந்த சுரங்கபாதை என்பதால்.. மதியம் பெய்த மழையின் காரணமாக மழைநீர் சொட்டு சொட்டாக அந்த கூரையில் இருந்து சொட்டிக் கொண்டிருந்தது. குளிர் உடலையும் உள்ளத்தையும் ஊடுருவ குளிராலும்.. பயத்தாலும் சிறிது நடுங்கியவாறு அந்த பாதையில் சென்றுக் கொண்டிருந்தாள். அந்த பஞ்சாப்காரன் தன்னைத் துரத்திக் கொண்டு வருவானோ என்று பயந்து அவ்வவ்போது திரும்பிப் பார்த்தவாறு நடந்தாள்.
சிறிது தொலைவு சென்ற நிலையில் அங்கேயும்.. ஒரிடத்தில் பாதை இரண்டாக பிரிந்தது. எதில் செல்வது என்று ஒரு கணம் திணறியவள், வலது புறம் இருக்கும் பாதைக்குள் செல்ல முடிவெடுத்தாள்.
சிறிது நேரத்திலேயே சில்லென்ற காற்றை உணரவும், வேகமாக சென்றவள், அங்கும் இருபது படிக்கட்டுகள் இருந்தன. அதில் வேகமாக ஏறியவள், அங்கு ஓவியம் வரையப்பட்ட கதவு இருப்பதைப் பார்த்தாள். அதை ஆர்வத்துடன் திறந்து வெளியே வந்தவள், திகைத்தாள். அந்த சிறு அறையில் அவளுக்கு முன்.. சரியாக பராமரிக்கப்படாத அம்மன் சிலை இருந்தது. சுற்றிலும் பார்த்தவளுக்கு.. இது கோவிலின் கர்ப்பகிரகம் என்றுத் தெரிந்தது.
இது எந்த இடம் என்றுத் திகைத்தவாறு மீண்டும் சுற்றிலும் பார்த்தவள், அங்கு இருந்த சன்னலை திறந்து.. வெளியே தெரிந்த காட்சியை பார்த்து.. மேலும் திகைத்தாள்.
அவர்களது ஜமீன் மாளிகை நன்றாக தெரிந்தது. அப்பொழுதே இது எந்த இடம் என்று மைதிலிக்கு தெரிந்தது. அவளது கொள்ளு தாத்தா கட்டிய கோவில் அது! கோவில் கட்டித் தருவது போல் கட்டித் தந்து அவரது மாளிகையில் இருந்து வெளியேற சுரங்கப்பாதை அமைத்துள்ளார்.