Raji anbu
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அனல் 8
(பொருளடக்கம்)
மங்கையவளின் சொரூபம் காண்பீர்!
காற்றாய் போனவனின் அருவம் காண்பீர்!
சூர்யா கூறியதைக் கேட்ட.. மைதிலி அவனது கழுத்தில் இருந்த கத்தியை மெல்ல அகற்றிவிட்டு “என் மேலே பாவப்பட்டு.. என்னோட பிளனுக்கு ஒத்துழைப்பே என்றுத்தான்.. என் தாத்தா, பாட்டி செய்த கொடுமைகள், இன்னும் என் குடும்பத்தில் இருக்கிறவங்க.. அந்த பெட்டிக்காக அடிச்சுக்கிறதை அப்படியே சொன்னேன். ஆனா நீ அதை வச்சே.. நானும் அவங்கள்ல ஒருத்தி தான் என்பதைக் கண்டுப்பிடிச்சுட்டியா! ஸ்மார்ட் தான்..” என்றாள்.
சூர்யா “ஸ்மார்ட்டா! படு முட்டாள் நான்! இல்லைன்னா எனக்கு நானே.. இப்படியொரு புதைக்குழி தோண்டியிருப்பேனா..” என்று அவனது பார்வை அவளது கழுத்தில் கட்டியிருந்த மாங்கல்யத்திடம் சென்றது.
மைதிலி “புதைக்குழியா! புதையல்குள்ள தான் விழுந்திருக்கே! உனக்கு கொஞ்சம் பங்கு வாங்காம போவியா என்ன?” என்றவள், தொடர்ந்து “முதல் நாள் உன்னைப் பார்த்த போது.. எனக்கு சரியா அடையாளம் தெரியலை. ஆனா அடுத்த நாள் வந்து பக்கத்தில் உட்கார்ந்தே பார்! நான் பிரமிச்சுட்டேன். அந்த மாறன் மாதிரியே இருந்தே! நீ யாருனு எனக்கு பெரிய டவுட் வந்திருச்சு! ஆனா நீ ஜாலியா பேசிட்டு போகவும், எனக்கு சொத்தென்று ஆகிருச்சு! நீ வேற ஆள் தான் என்றுத் தெரிஞ்சுருச்சு! ஆனா மாறன் மாதிரி இருக்கிற உன்னை விட மனசில்லை. பிரெண்ட்லியா வந்து பேசினே.. அதை நானே கெடுத்துட்டேனோ என்று இருந்தது. அதுதான் பின்னால் வந்தேன். ஆனா நீ.. நான் உன் மேலே பிளர்ட் ஆகிட்டேன்.. என்றுப் பேசினதும்.. என்ன தான் மாறன் மாதிரி இருந்தாலும் தெரியாத ஆம்பிளை கூட பழக்கம் வச்சுக்கிறது நல்லதில்லை.. என்றுப் போயிட்டேன். ஆனா எனக்கு உன் நினைப்பாக தான் இருந்துச்சு! அடுத்த நாள் கீழே காபி ஷாப்பில் இருந்தே! உன்னைப் பார்த்ததும்.. என்னால் உன் மேலே இருந்து கண்களை எடுக்க முடியலை. நீ அந்த மாறனாக இருந்திருக்க கூடாதா.. அட்லீஸ்ட் அந்த மாறன் வம்ச வழியாக இருந்திருக்க கூடாதா என்று இருந்துச்சு! அந்த கொஞ்ச நிமிடங்களில் நீ எனக்கு அந்த மாறனாகவே தெரிந்தே! அதுதான் என்னையும் அறியாம அப்படிப் பார்த்துட்டு இருந்தேன்னு நினைக்கிறேன்.” என்றாள்.
சூர்யா “ம்ம்! அன்னைக்கு உன்னோட பார்வைக்கு அர்த்தம் புரியலை. அர்த்தம் புரிந்திருந்தா நல்லாயிருந்திருக்கும்.” என்றான்.
அதற்கு மைதிலி “நல்லவேளை உனக்கு புரியலை.” என்றுவிட்டு தொடர்ந்து “கண்ணுக்கு முன்னே.. மாறனை மாதிரி இருக்கிற உன்கிட்ட அதைச் சொல்ல முடியலை. பிகாஸ் உனக்கும் அவனுக்கும் உருவ ஒற்றுமையை தவிர வேற எந்த சம்பந்தமும்.. இல்லை. அதனால் வீணாக அதையெல்லாம் சொல்லி.. உன்னோட பணத்தாசையை கிளப்பிவிட்டுட்டா என்ன செய்ய.. அதனால் அப்படியே விட்டுருலாம் என்று நினைச்சேன். ஆனால் நீ போயிட்டா.. உன் மூலம் எதாவது காரியம் ஆகலாம். உன்னை மிஸ் செய்துட்டு கிடைச்ச சான்ஸை மிஸ் செய்திருவேனோனு.. என்ன முடிவு எடுக்கிறதுனு திணறிட்டு இருந்தேன். அப்போ தான் நீயே வந்து என் பார்வைக்கு அர்த்தம் என்னவென்று கேட்டே.. ஐயம் இம்பிரஸ்ட்டு! ஆனா எதையும் சொல்ல முடியலை. ஆனால் நீ வேற மாதிரி.. லவ் என்றுப் பேச்சை கொண்டு போகவும், உன்னை கத்தரித்து அனுப்பறது தான் சரி என்று அப்படியெல்லாம் இல்லைனு அனுப்பிட்டேன். ஆனா.. அப்பவும் பெரியதா கிடைத்த சான்ஸை மிஸ் செய்துட்டேனோனு மனசுக்குள்ள ஓரமா உறுத்திட்டே இருந்துச்சு! அப்போ தான் நீ திரும்பியும் வந்தே! எனக்கும்.. நீ எனக்கு கிடைத்த மிக பெரிய சான்ஸ் என்றுப் புரிந்தது. அதனால தான்.. நீ லவ் என்றுச் சொன்னதும் ஒத்துக்கிற மாதிரி பேசினேன். உன்னை என் கூட தக்க வச்சுக்க.. கல்யாணம் செய்துக்கலாம் என்றுச் சொல்லி அவசரமா கல்யாணமும் செய்துட்டேன். அப்பவும்.. நீ மாறன் மாதிரி இருப்பதால்.. அவனோட பேரன்.. அப்படி வாரிசோ என்று டவுட்டா இருந்துச்சு! ஆனா வரும்போது.. நீ உன் பேமலியை பற்றிப் பேசினதில்.. உனக்கும் மாறனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றுத் தெரிந்தது. இப்போ எங்களோட வலைக்குள்ள மாட்டிக்கிட்டே.. நான் சொன்னதைச் செய்துத் தான் ஆகணும்.” என்றாள்.
எதையோ சொல்ல வாயைத் திறந்த சூர்யா.. பின் தலையசைத்துவிட்டு “முதலில் நான் ஒத்துக்கணும்.” என்றான்.
மைதிலி “நீ ஒத்துக்கலைன்னா என்ன நடக்கும் என்றுச் சொல்லிட்டேன். கேட்க நத்திங் மாதிரி தெரிந்தாலும்.. நடக்கும் போது.. பயங்கரமா இருக்கும். நீதான் மாறனோட வாரிசு என்றுப் பொய் சொன்னேன் என்று வை.. என் அப்பா உன்னைக் கூட்டிட்டு போய் சித்திரவதை செய்வார். இல்லைன்னா.. மாறனோட ஆவி உன் மேலே ஏறிடுச்சுனு பொய்யா கதை பரப்பி விட்டுருவேன். அப்பறம் ஊர் சனங்க கிட்ட இருந்து நீ தப்ப முடியாது.” என்று மிரட்டினாள்.
அதற்கு சூர்யா “உன்னோட டப்பா பிளன் அதை விட பயங்கரமா இருக்கு..” என்றுச் சிரித்தவன், தொடர்ந்து “அந்த ஆவி.. அவனை மாதிரியே நான் இருக்கிறதாலே.. அந்த புதையல் எங்கேனு சொல்லுமா..” என்று மேலும் சிரித்தான்.
மைதிலி “உன்கிட்ட வந்து சொல்லுமா இல்லையானு எனக்கு தெரியாது. ஆனா.. மாறன் மாதிரி இருக்கிற ஆள் என்கிட்ட வச்சுக்க நினைத்தேன். மாறனோட வைஃப்.. உயிருடன் தான் தப்பித்து ஓடியிருக்காங்க! உன்னைக் காட்டித் தான் அவங்களை வரவழைக்கணும். அப்பறம் ஆல்மோஸ்ட் நாங்க நெருங்கிட்டோம். இன்னும் நான்கு மலை தான் இருக்கு.. மற்ற மலைகள்ல நாங்களும்.. என் அப்பாவோட ஆட்களும் ஒருத்தருக்கு தெரியாமல் ஒருத்தர் தேடிப் பார்த்தாச்சு! நான் ஏன் இவ்வளவு அவசரப்பட்டேன் என்றால்.. எங்க பேமலியை தவிர.. இன்னொரு கும்பலும் தேடிட்டு இருக்காங்க!” என்கையில் சூர்யா மெல்ல சிரித்து “உன்னுடன் இருக்கும் இன்னொரு கூட்டாளி யாரு..” என்றுக் கேட்டான்.
மைதிலி சிரித்துவிட்டு “நான் இத்தனை சொல்றேன். ஆனா நீ நான் பேசியதை வச்சு துருவி துருவி கேட்டு என் வாயில் இருந்து ஒவ்வொரு விசயமாக கறந்துட்டு இருக்கே! ஒகே சொல்றேன். உனக்கு தெரிந்து தான் ஆகணும். நானும் என் கடைசி சித்தப்பா.. சோமேஸ்வரனும் நாலு வருஷமா தேடிட்டு இருக்கோம்.” என்றாள்.
சூர்யா “ம்ம்! உன் சித்தப்பா.. இறந்து போனதா நம்ப வச்சு.. அவர் ஆட்டத்தில் இல்லை என்பது போல காட்டியிருக்கீங்க! அதுவும் உன் சொந்த அப்பாவுக்கு தெரியாம செய்யறே! வாவ்..” என்றான்.
மைதிலி அசட்டையுடன் “ஆமா! அவர் கிட்ட இருந்து சீதனம் எதிர்பார்க்காத பெரிய இடத்து சம்மதம் வந்தா.. அவங்க கிட்ட என்னை கல்யாணம் பண்ணி கொடுத்துட்டு.. அவரோட பாழா போன மகனுக்கு தான் எல்லாம் கொடுக்க போகிறாராம். அவன் கல்யாணம் பண்ணிட்டு வந்தது.. பெரிய.. அரசியல்வாதியோட பொண்ணு! இங்கே இருக்கிற நிலைமையைப் பார்த்து அவ விட்டுட்டு போயிட்டா! அவளோட அப்பா.. என் அப்பா மேலேயும், கார்த்திகேயன் மேலேயும் கோபமா இருக்கிறாங்க! அதனால அந்த பொண்ணை மறுபடியும் வரவழைக்க.. இந்த பெட்டிகளைக் கண்டுப்பிடிச்சு கார்த்தி கூட சேர்த்து வைக்க போகிறாராம். என் அத்தை மட்டும் என்னவாம்.. அவங்களும் எதோ பிளன் போட்டு வச்சுருக்காங்க!” என்றாள்.
அதைக் கேட்ட சூர்யா “வாவ்! ஒருத்தருக்கு ஒருத்தர் குறைஞ்சவங்க இல்லை. எல்லாரும் உங்களோட பரம்பரை சொத்துக்காக போட்டிப் போடறீங்க..” என்றதும், மைதிலி “இதுல தப்பு என்ன இருக்கு..” என்றாள்.
அடுத்து என்ன நடந்தது என்று அவள் உணரும் முன்.. அவளது கையில் இருந்த கத்தி தற்பொழுது சூர்யாவின் கைக்கு இடமாறியிருக்க.. அந்த கத்தி.. அவளின் கழுத்தை பதம் பார்க்க தயாராக இருந்தது.
சூர்யா “இதுல என்ன தப்பா! எல்லாமே தப்பு! இத்தனை அக்கிரமங்களையும் செய்துட்டு.. எங்க சொத்துனு.. வெறி பிடிச்ச நாய் மாதிரி சுத்தறீங்க! ஒருத்தன் உங்களோட சொத்தை திருடினதுக்கு.. எத்தனை கொலை எத்தனை வெறி! எத்தனை கோபம்! ஆனா உங்க பரம்பரை.. இந்த மக்களுக்கு செய்ததிற்கு.. அவங்க உங்களை வச்சு செய்யாம எப்படி இருக்கிறாங்க..” என்று இறுகிய குரலில் கேட்டான்.
சூர்யாவின் குரலில் இருந்த இறுக்கம் மைதிலிக்கு திகிலை ஏற்படுத்தியது.
மைதிலி “அதுதான் நாங்க அழிஞ்சுட்டோமே! சுத்தியும் பாரு.. இது எப்படி இருந்த அரண்மனை தெரியுமா! ரிப்பேர் ஆனா ஃபேனை ரிப்பேர் செய்ய கூட வழியில்லாம உட்கார்ந்திருக்கோம். பேருக்கு தான் பெரிய வீடு! இப்போதைக்கு வீட்டுக்கா பின்னாடி இருக்கிற நிலத்தில் இருந்து வரும் குத்தகை பணம் வரும் அதில் தான்.. இந்த வீடு நடக்குதுன்னா.. நம்புவியா! மற்ற செலவுக்கு எல்லாம்.. இந்த வீட்டில் இருந்து எதாவது ஒரு பொருள் அடகு கடைக்கு போகும். இப்போ நான் கோவை வந்த செலவு கூட.. உன் அம்மா நாலு மாசமா சேர்த்தி வச்ச பணத்தில் தான்! இனி என் அம்மா மறுபடியும் சேர்த்தணும். நாங்க கொஞ்சம் கொஞ்சமா ஒண்ணும் இல்லாத நிலைக்கு வந்துட்டு இருக்கோம். பணம் மட்டுமில்ல மரியாதை, மதிப்பு, அதிகாரம், பாசம், அன்பு, உறவு என்று ஒண்ணும் இல்லாத நிலைக்கு போயிட்டு இருக்கோம். இதைப் பார்த்துட்டு எப்படி என்னால் கையைக் கட்டிட்டு உட்கார்ந்திருக்க முடியும்.” என்றவளின் கண்களில் இருந்து தானே கண்ணீர் வழிந்தது.
பின் “பணம் இருந்தா தான் மதிப்பு! அந்த பெட்டியில் எங்களோட பரம்பரை சொத்தும் இருக்கு! அது வந்த பிறகு எங்களோட நிலைமை எப்படி மாறும் என்றுப் பாரு..” என்றாள்.
அதற்கு சூர்யா “ஒண்ணும் இல்லைன்னா உழைச்சு சாப்பிடுங்க.. யார் வேண்டானு சொன்னாங்க! எல்லாத்தோட கை கால் எல்லாம் நல்லா தானே இருக்கு! நீ படிச்சுருக்கே தானே!” என்றுக் கேட்டான்.
அதற்கு மைதிலி “எனக்கு மற்றவங்க கிட்ட வேலை செய்யது ஒண்ணும் பிராப்ளம் இல்லை. ஆனா எங்களுக்கு கிடைக்க வேண்டியது.. இப்படி அநியாயமா மண்ணோடு மண்ணா கிடக்குது. அதை ஏன் விடணும். மற்றவங்க எங்களுக்கு தான் வேணுமினு நினைக்கிறது, பேராசை.. ஆனா நானும் என் சித்தப்பா நினைக்கிறது எங்களோட உரிமை! நாங்க ஏன் அதை விட்டுத் தரணும். அதற்காக என்ன வேண்டுமென்றாலும் செய்வோம்.” என்றதும் சூர்யா “உனக்கு எதுக்கு அந்த சிரமம்! அதை நானே செய்கிறேன்.” என்று அழுத்துபவன் போல்.. கையை கொண்டு போனவன், அவளது பயந்த விழிகளைப் பார்த்து கத்தியை வீசிவிட்டு.. அங்கிருந்த நாற்காலியில் உட்கார்ந்தவன், “ஒரு பைத்தியக்கார கும்பல்ல வந்து மாட்டிக்கிட்டேன்.” என்றுச் சிகையை கையால் கோதினான்.
மைதிலி “எங்களோட கஷ்டமும்.. அதுக்கு நாங்க படற பாடும் உனக்கு பைத்தியக்காரத்தனமாக தான் தெரியும். ஒகே மக்களை ஏமாத்தி.. கொடுமை செய்தததிற்கு தான்.. எங்க வம்சத்தில் யாருமே சரியா வாழலையே! தண்டனை தான் அனுபவிச்சாச்சே! அந்த ஆவியோ ஆத்மாவோ.. இன்னும் எங்களை ஆட்டி வச்சுட்டு இருக்கு! நீ நம்பலைன்னாலும்.. இதுதான் உண்மை. என் சித்தப்பா சில ஆட்களோட போன போது.. யாரோ தள்ளற மாதிரியும், முதுகில் அடிக்கிற மாதிரியும் உணர்ந்திருக்காங்க! என் சித்தப்பா ஏழடி உயரத்தில் கருப்பா உருவத்தை பார்த்திருக்கார். அவர் பொய் சொல்லுலை. எங்களை இன்னும் துரத்திட்டு தான் இருக்கு! அந்த ஆத்மா துரத்த துரத்த தான்.. அங்கே போகணும் என்று என் சித்தப்பா போறார். நான் இன்னும் பார்த்தது இல்லை. ஆனா சில சமயம் எனக்கு பின்னாடி யாரோ நின்று உறுமும் சத்தத்தைக் கேட்டுக்கேன். நான் திரும்பியும் கூடப் பாா்க்காம வியர்க்க விறுவிறுக்க ஓடி வந்திருக்கேன். இப்படிக் கிட்டத்தட்ட எழுபது வருஷமா எங்களை துன்புறத்திட்டு இருக்கு! இந்த ஊர் சனங்க.. எங்களை இளக்காரமா பார்த்துட்டு இருக்காங்க! இதை விட என்ன தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று நினைக்கிறே..” என்று மூச்சு வாங்க பேசினாள். அவளது படபடப்பான பேச்சிற்கு தகுந்த போன்று காற்று பலமாக வீசியது. சன்னல் மற்றும் பால்கனியின் மூலம் நுழைந்த காற்று.. அவளது ஆடைகளையும் சிகையையும் கலைத்தது.
மைதிலி காற்றில் பறந்த தனது கூந்தலை ஒதுக்கிவிட்டு சூர்யாவை பார்த்தாள். மெல்ல நிமிர்ந்து அவளைப் பார்த்த சூர்யா “ஒகே! ஒகே! போதும்.. எனக்கு தலை வலிக்குது. ஒரே நெகட்டிவ் வைப்ஸ்..” என்றுச் சுற்றிலும் பார்த்தான்.
அதற்கு சிரித்த மைதிலி “இப்போ புரியுதா எங்க கஷ்டம்! நாங்க இங்கேயே தான் இருக்கோம். சில சமயம் தலையே வெடிச்சுரும் போல இருக்கும். ஆனா ஒண்ணை ஒத்துக்கிறேன். இதுவரை யார் கிட்டயும் பார்க்காத பாஸிட்டிவ் வைப் உன்கிட்ட எனக்கு கிடைச்சுது. நீ மட்டும் எனக்கு ஹெல்ப் செய்தால்..” என்றாள்.
சூர்யா “சரி இந்த விசயம் பேசியது போதும். நம்ம விசயம் பேசலாமா..” என்றுக் கேட்டான்.
மைதிலி “நீ எத்தனைத் தரம் கேட்டாலும் என் பதில் அதே தான் சூர்யா! உன்னால் இங்கே இருந்து போக முடியாது. அட்லீஸ்ட் எங்க காரியம் முடியும் வரை! அப்படிப் போக நினைத்தால்.. உன் பெரெண்ட்ஸ் வீட்டிலும் உன்னால் நிம்மதியா இருக்க முடியாது. அதுக்கு நான் சொல்கிறபடி நடந்துட்டு நிம்மதியா இருந்துட்டு வரலாம்.” என்றாள்.
அதற்கு சூர்யா “நான் நம்ம விசயம் என்றுச் சொன்னேன்.” என்றான்.
மைதிலி “என்ன வி..வி..விசயம்?” என்றுக் கேட்டவளுக்கு.. பின்பே விசயம் புரிய.. “இந்த கல்யாணத்தை ஒன்றும் இல்லாததாக செய்யவும் முடியும். அதனால் டொன்ட் வெர்ரி! நான் உன்னை இந்த ரிலேஷன்ல பிடிச்சு வைக்க மாட்டேன். உன்னை இங்கு கூட்டிட்டு வர வேற வழியில்லாமல்.. தான் மேரேஜ்ஜை யுஸ் செய்துட்டேன். நீ எங்களுக்கு ஹெல்ப் செய்வதாக பிராமிஸ் செய்தால்.. நீ எனக்கு நல்ல பிரெண்டாக இருக்கலாம். காரியம் முடிந்ததும் உனக்கு கொடுக்க வேண்டிய பங்கு தரப்படும்.” என்றாள்.
அதைக் கேட்ட சூர்யா அழுத்த தனது சிகையை கோதிவிட்டு எழுந்தான். பின் “என்ன பேசி முடிச்சுட்டியா! இனி நான் பேசட்டுமா! ஒகே நான் இங்கே இருக்கேன். நானும் தேட ஹெல்ப் செய்கிறேன். அப்படி அந்த ஆவி என்று அங்கே என்ன செய்கிறது என்பதையும் பார்க்கிறேன். ஆனா நீ என் மனைவியாக தான் இருக்கணும். இந்த ரிலேஷனில் இருந்து கழன்று விடலானு நினைக்க கூடாது. நான் உன் ஹஸ்பென்ட் நீ என்னோட வைஃப் இதை மாத்த கூடாது, மாற்றவும் முடியாது. எனக்கு என் வைஃப் வேண்டும்.” என்றுக் கூறியவாறு எட்டுக்களை வைத்து நெருங்கியவன், கடைசி வார்த்தை கூறிய பொழுது.. தனது வலது கரம் கொண்டு அவனது முதுகில் கரம் வைத்து இழுத்து.. தன்னுடன் இறுக்கினான்.
சூர்யா அவள் நினைத்ததிற்கு மாறாக பேசுவதை விழியகல கேட்டுக் கொண்டிருந்த மைதிலி.. சட்டென்று அவனோடு தன்னை இறுக்கவும், அதிர்ந்தவளாய்.. அவனது மார்பில் கரத்தை வைத்து தள்ள முயன்றபடி.. “சூர்யா! என்னதிது? என்ன செய்யறீங்க?” என்றுப் பதறினாள்.
சூர்யா “பிகாஸ்! ஐ லவ் யு..” என்றுவிட்டு கரத்தை எடுத்துக் கொள்ள நினைத்தான். அப்பொழுது.. படார் என்று அவளது சன்னல் கதவு காற்றுக்கு அடிக்கும் சத்தம் கேட்கவும், சட்டென்று அவளது முகம் பற்றி குனிந்தவன், அவளது இதழை முரட்டுத்தனமாக ஆக்கிரமித்தான்.
(பொருளடக்கம்)
மங்கையவளின் சொரூபம் காண்பீர்!
காற்றாய் போனவனின் அருவம் காண்பீர்!
சூர்யா கூறியதைக் கேட்ட.. மைதிலி அவனது கழுத்தில் இருந்த கத்தியை மெல்ல அகற்றிவிட்டு “என் மேலே பாவப்பட்டு.. என்னோட பிளனுக்கு ஒத்துழைப்பே என்றுத்தான்.. என் தாத்தா, பாட்டி செய்த கொடுமைகள், இன்னும் என் குடும்பத்தில் இருக்கிறவங்க.. அந்த பெட்டிக்காக அடிச்சுக்கிறதை அப்படியே சொன்னேன். ஆனா நீ அதை வச்சே.. நானும் அவங்கள்ல ஒருத்தி தான் என்பதைக் கண்டுப்பிடிச்சுட்டியா! ஸ்மார்ட் தான்..” என்றாள்.
சூர்யா “ஸ்மார்ட்டா! படு முட்டாள் நான்! இல்லைன்னா எனக்கு நானே.. இப்படியொரு புதைக்குழி தோண்டியிருப்பேனா..” என்று அவனது பார்வை அவளது கழுத்தில் கட்டியிருந்த மாங்கல்யத்திடம் சென்றது.
மைதிலி “புதைக்குழியா! புதையல்குள்ள தான் விழுந்திருக்கே! உனக்கு கொஞ்சம் பங்கு வாங்காம போவியா என்ன?” என்றவள், தொடர்ந்து “முதல் நாள் உன்னைப் பார்த்த போது.. எனக்கு சரியா அடையாளம் தெரியலை. ஆனா அடுத்த நாள் வந்து பக்கத்தில் உட்கார்ந்தே பார்! நான் பிரமிச்சுட்டேன். அந்த மாறன் மாதிரியே இருந்தே! நீ யாருனு எனக்கு பெரிய டவுட் வந்திருச்சு! ஆனா நீ ஜாலியா பேசிட்டு போகவும், எனக்கு சொத்தென்று ஆகிருச்சு! நீ வேற ஆள் தான் என்றுத் தெரிஞ்சுருச்சு! ஆனா மாறன் மாதிரி இருக்கிற உன்னை விட மனசில்லை. பிரெண்ட்லியா வந்து பேசினே.. அதை நானே கெடுத்துட்டேனோ என்று இருந்தது. அதுதான் பின்னால் வந்தேன். ஆனா நீ.. நான் உன் மேலே பிளர்ட் ஆகிட்டேன்.. என்றுப் பேசினதும்.. என்ன தான் மாறன் மாதிரி இருந்தாலும் தெரியாத ஆம்பிளை கூட பழக்கம் வச்சுக்கிறது நல்லதில்லை.. என்றுப் போயிட்டேன். ஆனா எனக்கு உன் நினைப்பாக தான் இருந்துச்சு! அடுத்த நாள் கீழே காபி ஷாப்பில் இருந்தே! உன்னைப் பார்த்ததும்.. என்னால் உன் மேலே இருந்து கண்களை எடுக்க முடியலை. நீ அந்த மாறனாக இருந்திருக்க கூடாதா.. அட்லீஸ்ட் அந்த மாறன் வம்ச வழியாக இருந்திருக்க கூடாதா என்று இருந்துச்சு! அந்த கொஞ்ச நிமிடங்களில் நீ எனக்கு அந்த மாறனாகவே தெரிந்தே! அதுதான் என்னையும் அறியாம அப்படிப் பார்த்துட்டு இருந்தேன்னு நினைக்கிறேன்.” என்றாள்.
சூர்யா “ம்ம்! அன்னைக்கு உன்னோட பார்வைக்கு அர்த்தம் புரியலை. அர்த்தம் புரிந்திருந்தா நல்லாயிருந்திருக்கும்.” என்றான்.
அதற்கு மைதிலி “நல்லவேளை உனக்கு புரியலை.” என்றுவிட்டு தொடர்ந்து “கண்ணுக்கு முன்னே.. மாறனை மாதிரி இருக்கிற உன்கிட்ட அதைச் சொல்ல முடியலை. பிகாஸ் உனக்கும் அவனுக்கும் உருவ ஒற்றுமையை தவிர வேற எந்த சம்பந்தமும்.. இல்லை. அதனால் வீணாக அதையெல்லாம் சொல்லி.. உன்னோட பணத்தாசையை கிளப்பிவிட்டுட்டா என்ன செய்ய.. அதனால் அப்படியே விட்டுருலாம் என்று நினைச்சேன். ஆனால் நீ போயிட்டா.. உன் மூலம் எதாவது காரியம் ஆகலாம். உன்னை மிஸ் செய்துட்டு கிடைச்ச சான்ஸை மிஸ் செய்திருவேனோனு.. என்ன முடிவு எடுக்கிறதுனு திணறிட்டு இருந்தேன். அப்போ தான் நீயே வந்து என் பார்வைக்கு அர்த்தம் என்னவென்று கேட்டே.. ஐயம் இம்பிரஸ்ட்டு! ஆனா எதையும் சொல்ல முடியலை. ஆனால் நீ வேற மாதிரி.. லவ் என்றுப் பேச்சை கொண்டு போகவும், உன்னை கத்தரித்து அனுப்பறது தான் சரி என்று அப்படியெல்லாம் இல்லைனு அனுப்பிட்டேன். ஆனா.. அப்பவும் பெரியதா கிடைத்த சான்ஸை மிஸ் செய்துட்டேனோனு மனசுக்குள்ள ஓரமா உறுத்திட்டே இருந்துச்சு! அப்போ தான் நீ திரும்பியும் வந்தே! எனக்கும்.. நீ எனக்கு கிடைத்த மிக பெரிய சான்ஸ் என்றுப் புரிந்தது. அதனால தான்.. நீ லவ் என்றுச் சொன்னதும் ஒத்துக்கிற மாதிரி பேசினேன். உன்னை என் கூட தக்க வச்சுக்க.. கல்யாணம் செய்துக்கலாம் என்றுச் சொல்லி அவசரமா கல்யாணமும் செய்துட்டேன். அப்பவும்.. நீ மாறன் மாதிரி இருப்பதால்.. அவனோட பேரன்.. அப்படி வாரிசோ என்று டவுட்டா இருந்துச்சு! ஆனா வரும்போது.. நீ உன் பேமலியை பற்றிப் பேசினதில்.. உனக்கும் மாறனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றுத் தெரிந்தது. இப்போ எங்களோட வலைக்குள்ள மாட்டிக்கிட்டே.. நான் சொன்னதைச் செய்துத் தான் ஆகணும்.” என்றாள்.
எதையோ சொல்ல வாயைத் திறந்த சூர்யா.. பின் தலையசைத்துவிட்டு “முதலில் நான் ஒத்துக்கணும்.” என்றான்.
மைதிலி “நீ ஒத்துக்கலைன்னா என்ன நடக்கும் என்றுச் சொல்லிட்டேன். கேட்க நத்திங் மாதிரி தெரிந்தாலும்.. நடக்கும் போது.. பயங்கரமா இருக்கும். நீதான் மாறனோட வாரிசு என்றுப் பொய் சொன்னேன் என்று வை.. என் அப்பா உன்னைக் கூட்டிட்டு போய் சித்திரவதை செய்வார். இல்லைன்னா.. மாறனோட ஆவி உன் மேலே ஏறிடுச்சுனு பொய்யா கதை பரப்பி விட்டுருவேன். அப்பறம் ஊர் சனங்க கிட்ட இருந்து நீ தப்ப முடியாது.” என்று மிரட்டினாள்.
அதற்கு சூர்யா “உன்னோட டப்பா பிளன் அதை விட பயங்கரமா இருக்கு..” என்றுச் சிரித்தவன், தொடர்ந்து “அந்த ஆவி.. அவனை மாதிரியே நான் இருக்கிறதாலே.. அந்த புதையல் எங்கேனு சொல்லுமா..” என்று மேலும் சிரித்தான்.
மைதிலி “உன்கிட்ட வந்து சொல்லுமா இல்லையானு எனக்கு தெரியாது. ஆனா.. மாறன் மாதிரி இருக்கிற ஆள் என்கிட்ட வச்சுக்க நினைத்தேன். மாறனோட வைஃப்.. உயிருடன் தான் தப்பித்து ஓடியிருக்காங்க! உன்னைக் காட்டித் தான் அவங்களை வரவழைக்கணும். அப்பறம் ஆல்மோஸ்ட் நாங்க நெருங்கிட்டோம். இன்னும் நான்கு மலை தான் இருக்கு.. மற்ற மலைகள்ல நாங்களும்.. என் அப்பாவோட ஆட்களும் ஒருத்தருக்கு தெரியாமல் ஒருத்தர் தேடிப் பார்த்தாச்சு! நான் ஏன் இவ்வளவு அவசரப்பட்டேன் என்றால்.. எங்க பேமலியை தவிர.. இன்னொரு கும்பலும் தேடிட்டு இருக்காங்க!” என்கையில் சூர்யா மெல்ல சிரித்து “உன்னுடன் இருக்கும் இன்னொரு கூட்டாளி யாரு..” என்றுக் கேட்டான்.
மைதிலி சிரித்துவிட்டு “நான் இத்தனை சொல்றேன். ஆனா நீ நான் பேசியதை வச்சு துருவி துருவி கேட்டு என் வாயில் இருந்து ஒவ்வொரு விசயமாக கறந்துட்டு இருக்கே! ஒகே சொல்றேன். உனக்கு தெரிந்து தான் ஆகணும். நானும் என் கடைசி சித்தப்பா.. சோமேஸ்வரனும் நாலு வருஷமா தேடிட்டு இருக்கோம்.” என்றாள்.
சூர்யா “ம்ம்! உன் சித்தப்பா.. இறந்து போனதா நம்ப வச்சு.. அவர் ஆட்டத்தில் இல்லை என்பது போல காட்டியிருக்கீங்க! அதுவும் உன் சொந்த அப்பாவுக்கு தெரியாம செய்யறே! வாவ்..” என்றான்.
மைதிலி அசட்டையுடன் “ஆமா! அவர் கிட்ட இருந்து சீதனம் எதிர்பார்க்காத பெரிய இடத்து சம்மதம் வந்தா.. அவங்க கிட்ட என்னை கல்யாணம் பண்ணி கொடுத்துட்டு.. அவரோட பாழா போன மகனுக்கு தான் எல்லாம் கொடுக்க போகிறாராம். அவன் கல்யாணம் பண்ணிட்டு வந்தது.. பெரிய.. அரசியல்வாதியோட பொண்ணு! இங்கே இருக்கிற நிலைமையைப் பார்த்து அவ விட்டுட்டு போயிட்டா! அவளோட அப்பா.. என் அப்பா மேலேயும், கார்த்திகேயன் மேலேயும் கோபமா இருக்கிறாங்க! அதனால அந்த பொண்ணை மறுபடியும் வரவழைக்க.. இந்த பெட்டிகளைக் கண்டுப்பிடிச்சு கார்த்தி கூட சேர்த்து வைக்க போகிறாராம். என் அத்தை மட்டும் என்னவாம்.. அவங்களும் எதோ பிளன் போட்டு வச்சுருக்காங்க!” என்றாள்.
அதைக் கேட்ட சூர்யா “வாவ்! ஒருத்தருக்கு ஒருத்தர் குறைஞ்சவங்க இல்லை. எல்லாரும் உங்களோட பரம்பரை சொத்துக்காக போட்டிப் போடறீங்க..” என்றதும், மைதிலி “இதுல தப்பு என்ன இருக்கு..” என்றாள்.
அடுத்து என்ன நடந்தது என்று அவள் உணரும் முன்.. அவளது கையில் இருந்த கத்தி தற்பொழுது சூர்யாவின் கைக்கு இடமாறியிருக்க.. அந்த கத்தி.. அவளின் கழுத்தை பதம் பார்க்க தயாராக இருந்தது.
சூர்யா “இதுல என்ன தப்பா! எல்லாமே தப்பு! இத்தனை அக்கிரமங்களையும் செய்துட்டு.. எங்க சொத்துனு.. வெறி பிடிச்ச நாய் மாதிரி சுத்தறீங்க! ஒருத்தன் உங்களோட சொத்தை திருடினதுக்கு.. எத்தனை கொலை எத்தனை வெறி! எத்தனை கோபம்! ஆனா உங்க பரம்பரை.. இந்த மக்களுக்கு செய்ததிற்கு.. அவங்க உங்களை வச்சு செய்யாம எப்படி இருக்கிறாங்க..” என்று இறுகிய குரலில் கேட்டான்.
சூர்யாவின் குரலில் இருந்த இறுக்கம் மைதிலிக்கு திகிலை ஏற்படுத்தியது.
மைதிலி “அதுதான் நாங்க அழிஞ்சுட்டோமே! சுத்தியும் பாரு.. இது எப்படி இருந்த அரண்மனை தெரியுமா! ரிப்பேர் ஆனா ஃபேனை ரிப்பேர் செய்ய கூட வழியில்லாம உட்கார்ந்திருக்கோம். பேருக்கு தான் பெரிய வீடு! இப்போதைக்கு வீட்டுக்கா பின்னாடி இருக்கிற நிலத்தில் இருந்து வரும் குத்தகை பணம் வரும் அதில் தான்.. இந்த வீடு நடக்குதுன்னா.. நம்புவியா! மற்ற செலவுக்கு எல்லாம்.. இந்த வீட்டில் இருந்து எதாவது ஒரு பொருள் அடகு கடைக்கு போகும். இப்போ நான் கோவை வந்த செலவு கூட.. உன் அம்மா நாலு மாசமா சேர்த்தி வச்ச பணத்தில் தான்! இனி என் அம்மா மறுபடியும் சேர்த்தணும். நாங்க கொஞ்சம் கொஞ்சமா ஒண்ணும் இல்லாத நிலைக்கு வந்துட்டு இருக்கோம். பணம் மட்டுமில்ல மரியாதை, மதிப்பு, அதிகாரம், பாசம், அன்பு, உறவு என்று ஒண்ணும் இல்லாத நிலைக்கு போயிட்டு இருக்கோம். இதைப் பார்த்துட்டு எப்படி என்னால் கையைக் கட்டிட்டு உட்கார்ந்திருக்க முடியும்.” என்றவளின் கண்களில் இருந்து தானே கண்ணீர் வழிந்தது.
பின் “பணம் இருந்தா தான் மதிப்பு! அந்த பெட்டியில் எங்களோட பரம்பரை சொத்தும் இருக்கு! அது வந்த பிறகு எங்களோட நிலைமை எப்படி மாறும் என்றுப் பாரு..” என்றாள்.
அதற்கு சூர்யா “ஒண்ணும் இல்லைன்னா உழைச்சு சாப்பிடுங்க.. யார் வேண்டானு சொன்னாங்க! எல்லாத்தோட கை கால் எல்லாம் நல்லா தானே இருக்கு! நீ படிச்சுருக்கே தானே!” என்றுக் கேட்டான்.
அதற்கு மைதிலி “எனக்கு மற்றவங்க கிட்ட வேலை செய்யது ஒண்ணும் பிராப்ளம் இல்லை. ஆனா எங்களுக்கு கிடைக்க வேண்டியது.. இப்படி அநியாயமா மண்ணோடு மண்ணா கிடக்குது. அதை ஏன் விடணும். மற்றவங்க எங்களுக்கு தான் வேணுமினு நினைக்கிறது, பேராசை.. ஆனா நானும் என் சித்தப்பா நினைக்கிறது எங்களோட உரிமை! நாங்க ஏன் அதை விட்டுத் தரணும். அதற்காக என்ன வேண்டுமென்றாலும் செய்வோம்.” என்றதும் சூர்யா “உனக்கு எதுக்கு அந்த சிரமம்! அதை நானே செய்கிறேன்.” என்று அழுத்துபவன் போல்.. கையை கொண்டு போனவன், அவளது பயந்த விழிகளைப் பார்த்து கத்தியை வீசிவிட்டு.. அங்கிருந்த நாற்காலியில் உட்கார்ந்தவன், “ஒரு பைத்தியக்கார கும்பல்ல வந்து மாட்டிக்கிட்டேன்.” என்றுச் சிகையை கையால் கோதினான்.
மைதிலி “எங்களோட கஷ்டமும்.. அதுக்கு நாங்க படற பாடும் உனக்கு பைத்தியக்காரத்தனமாக தான் தெரியும். ஒகே மக்களை ஏமாத்தி.. கொடுமை செய்தததிற்கு தான்.. எங்க வம்சத்தில் யாருமே சரியா வாழலையே! தண்டனை தான் அனுபவிச்சாச்சே! அந்த ஆவியோ ஆத்மாவோ.. இன்னும் எங்களை ஆட்டி வச்சுட்டு இருக்கு! நீ நம்பலைன்னாலும்.. இதுதான் உண்மை. என் சித்தப்பா சில ஆட்களோட போன போது.. யாரோ தள்ளற மாதிரியும், முதுகில் அடிக்கிற மாதிரியும் உணர்ந்திருக்காங்க! என் சித்தப்பா ஏழடி உயரத்தில் கருப்பா உருவத்தை பார்த்திருக்கார். அவர் பொய் சொல்லுலை. எங்களை இன்னும் துரத்திட்டு தான் இருக்கு! அந்த ஆத்மா துரத்த துரத்த தான்.. அங்கே போகணும் என்று என் சித்தப்பா போறார். நான் இன்னும் பார்த்தது இல்லை. ஆனா சில சமயம் எனக்கு பின்னாடி யாரோ நின்று உறுமும் சத்தத்தைக் கேட்டுக்கேன். நான் திரும்பியும் கூடப் பாா்க்காம வியர்க்க விறுவிறுக்க ஓடி வந்திருக்கேன். இப்படிக் கிட்டத்தட்ட எழுபது வருஷமா எங்களை துன்புறத்திட்டு இருக்கு! இந்த ஊர் சனங்க.. எங்களை இளக்காரமா பார்த்துட்டு இருக்காங்க! இதை விட என்ன தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று நினைக்கிறே..” என்று மூச்சு வாங்க பேசினாள். அவளது படபடப்பான பேச்சிற்கு தகுந்த போன்று காற்று பலமாக வீசியது. சன்னல் மற்றும் பால்கனியின் மூலம் நுழைந்த காற்று.. அவளது ஆடைகளையும் சிகையையும் கலைத்தது.
மைதிலி காற்றில் பறந்த தனது கூந்தலை ஒதுக்கிவிட்டு சூர்யாவை பார்த்தாள். மெல்ல நிமிர்ந்து அவளைப் பார்த்த சூர்யா “ஒகே! ஒகே! போதும்.. எனக்கு தலை வலிக்குது. ஒரே நெகட்டிவ் வைப்ஸ்..” என்றுச் சுற்றிலும் பார்த்தான்.
அதற்கு சிரித்த மைதிலி “இப்போ புரியுதா எங்க கஷ்டம்! நாங்க இங்கேயே தான் இருக்கோம். சில சமயம் தலையே வெடிச்சுரும் போல இருக்கும். ஆனா ஒண்ணை ஒத்துக்கிறேன். இதுவரை யார் கிட்டயும் பார்க்காத பாஸிட்டிவ் வைப் உன்கிட்ட எனக்கு கிடைச்சுது. நீ மட்டும் எனக்கு ஹெல்ப் செய்தால்..” என்றாள்.
சூர்யா “சரி இந்த விசயம் பேசியது போதும். நம்ம விசயம் பேசலாமா..” என்றுக் கேட்டான்.
மைதிலி “நீ எத்தனைத் தரம் கேட்டாலும் என் பதில் அதே தான் சூர்யா! உன்னால் இங்கே இருந்து போக முடியாது. அட்லீஸ்ட் எங்க காரியம் முடியும் வரை! அப்படிப் போக நினைத்தால்.. உன் பெரெண்ட்ஸ் வீட்டிலும் உன்னால் நிம்மதியா இருக்க முடியாது. அதுக்கு நான் சொல்கிறபடி நடந்துட்டு நிம்மதியா இருந்துட்டு வரலாம்.” என்றாள்.
அதற்கு சூர்யா “நான் நம்ம விசயம் என்றுச் சொன்னேன்.” என்றான்.
மைதிலி “என்ன வி..வி..விசயம்?” என்றுக் கேட்டவளுக்கு.. பின்பே விசயம் புரிய.. “இந்த கல்யாணத்தை ஒன்றும் இல்லாததாக செய்யவும் முடியும். அதனால் டொன்ட் வெர்ரி! நான் உன்னை இந்த ரிலேஷன்ல பிடிச்சு வைக்க மாட்டேன். உன்னை இங்கு கூட்டிட்டு வர வேற வழியில்லாமல்.. தான் மேரேஜ்ஜை யுஸ் செய்துட்டேன். நீ எங்களுக்கு ஹெல்ப் செய்வதாக பிராமிஸ் செய்தால்.. நீ எனக்கு நல்ல பிரெண்டாக இருக்கலாம். காரியம் முடிந்ததும் உனக்கு கொடுக்க வேண்டிய பங்கு தரப்படும்.” என்றாள்.
அதைக் கேட்ட சூர்யா அழுத்த தனது சிகையை கோதிவிட்டு எழுந்தான். பின் “என்ன பேசி முடிச்சுட்டியா! இனி நான் பேசட்டுமா! ஒகே நான் இங்கே இருக்கேன். நானும் தேட ஹெல்ப் செய்கிறேன். அப்படி அந்த ஆவி என்று அங்கே என்ன செய்கிறது என்பதையும் பார்க்கிறேன். ஆனா நீ என் மனைவியாக தான் இருக்கணும். இந்த ரிலேஷனில் இருந்து கழன்று விடலானு நினைக்க கூடாது. நான் உன் ஹஸ்பென்ட் நீ என்னோட வைஃப் இதை மாத்த கூடாது, மாற்றவும் முடியாது. எனக்கு என் வைஃப் வேண்டும்.” என்றுக் கூறியவாறு எட்டுக்களை வைத்து நெருங்கியவன், கடைசி வார்த்தை கூறிய பொழுது.. தனது வலது கரம் கொண்டு அவனது முதுகில் கரம் வைத்து இழுத்து.. தன்னுடன் இறுக்கினான்.
சூர்யா அவள் நினைத்ததிற்கு மாறாக பேசுவதை விழியகல கேட்டுக் கொண்டிருந்த மைதிலி.. சட்டென்று அவனோடு தன்னை இறுக்கவும், அதிர்ந்தவளாய்.. அவனது மார்பில் கரத்தை வைத்து தள்ள முயன்றபடி.. “சூர்யா! என்னதிது? என்ன செய்யறீங்க?” என்றுப் பதறினாள்.
சூர்யா “பிகாஸ்! ஐ லவ் யு..” என்றுவிட்டு கரத்தை எடுத்துக் கொள்ள நினைத்தான். அப்பொழுது.. படார் என்று அவளது சன்னல் கதவு காற்றுக்கு அடிக்கும் சத்தம் கேட்கவும், சட்டென்று அவளது முகம் பற்றி குனிந்தவன், அவளது இதழை முரட்டுத்தனமாக ஆக்கிரமித்தான்.