Indhumathi.s
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மாயம் 10
நிச்சயம் முடிந்து, நாட்கள் புடவை எடுக்க, நகை எடுக்க என்று விரைவாகச் சென்று, இதோ கல்யாணத்திற்கு முதல் நாள் என்ற நிலையில் வந்து நின்றது..
இடையில் இருந்த பத்து நாட்களும் ராகவ், ரிதுவிடம் பேச எந்த முயற்சியும் எடுக்க வில்லை.. ரிதுவோ அதைப் பற்றி எந்தக் கவலையும் இல்லாதது போல் இருந்தாள்…
முதல் நாள் இரவே எல்லாரும் மண்டபத்திற்கு வந்தனர்... மண்டபத்திற்கு வந்ததில் இருந்து ஸ்வாதிக்கா ரிதுவின் அருகிலே இருந்தாள்... வெள்ளை மனதுடன் கலகலப்பாகப் பேசும் ஸ்வாதியின் பேச்சில் ரிதுவும் அவள் கவலை மறந்து சிரித்தாள்..
தியாவும் கல்யாணத்திற்கு இரண்டு நாள் முன்னாடியே வந்ததால் ரிதுவும் சிறிது உயிர்ப்போடு இருந்தாள்... அன்றிரவும் முடிய கல்யாண நாளும் அழகாக விடிந்தது…
அதிகாலையில் எழுந்த ரிது குளித்து ஊதா வண்ண பட்டு புடவையில் தயாராகி மேடையில் மூகூர்த்த சேலை வாங்க சென்று கொண்டிருந்தாள்…
மூகூர்த்த சேலை வாங்கியதும் மணமகள் அறைக்கு வந்த ரிது கல்யாண சேலையை உடுத்தி தயாராக ஆரம்பித்தாள்... அரக்கு வண்ண பட்டு உடுத்தி தயாராகிக் கொண்டிருந்த அதே நேரம் ராகவும் மணமகன் உடையாகிய பட்டு வேஷ்டி சட்டை வாங்கிக்கொண்டு மணமகன் அறையில் தயாராகச் சென்றான்...
மூகூர்த்த நேரம் நெருங்க ராகவின் கை பிடித்துத் தருண் மணமகன் அறையில் இருந்து வெளியே வந்த அதே நேரம், ஸ்வாதியும் ரிதுஷினி கையைப் பிடித்து மணமகள் அறையில் இருந்து வெளியே அழைத்து வந்தாள்...
இருவரின் பார்வை நேர்கோட்டில் சந்தித்துக் கொண்டது.. ராகவின் பார்வை வீச்சில் தன்னையறியாமல் நிலம் நோக்கிய ரிது மேடை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்...
மணமேடையில் இருவரும் உட்கார்ந்ததும், ஐயர் சண்டங்குகளை ஆரம்பிக்க இருவரும் ஐயர் சொல்லும் மந்திரத்தை உச்சரிக்க ஆரம்பித்தனர்.
மூகூர்த்த நேரம் நெருங்க ஐயர் கையில் தாலியை வாங்கிய ராகவ் ரிதுவின் கழுத்தில் கட்டி ரிதுவை அவனவள் ஆக்கிக் கொண்டான்...
ராகவின் கை கழுத்தில் பட்டதும் தன்னை அறியாமல் சிலிர்த்த ரிதுவை அவள் உடல் மொழியில் அறிந்து கொண்ட ராகவும் சந்தோஷம் அடைந்தான்…
ரிதுவோ ராகவின் கையில் தாலி வாங்கிய நொடி மனதில் 'இவருடனான என் வாழ்க்கை எந்த விதமான பிரச்சனை இன்றி நல்ல படியாகப் போக வேண்டும்' என்று இறைவனை வேண்டிக் கொண்டாள்...
தாலி கட்டி முடிந்ததும் நெற்றியில் குங்குமம் வைக்கக் குங்குமத்தை கையில் எடுத்த ராகவ் ரிதுவை அவன் கைவளைவில் அணைத்தாற் போல் குங்குமம் வைத்தான்…
ராகவின் செய்கையில் ஏனோ ரிதுவின் உடல் சிலிர்த்து அடங்கியது… படப்படப்பாக உணர்ந்த ரிதுஷினி பயத்தில் கண்களை மூடிக்கொண்டாள்…
நெற்றியில் குங்குமம் வைத்து முடிந்ததும் இருவரும் அக்னியை சுற்றி வலம் வர ஆரம்பித்தனர். சுற்றி வரும் போது ரிதுவின் கை ராகவின் கைகளில் கோர்த்திருந்த போது ரிதுவின் கைகளில் உள்ள ஈரத்தை உணர்ந்த ராகவ் அவளின் பயத்தையும் உணர்ந்து சிறிது வருத்தம் கொண்டான்…
அடுத்து இருவரும் பெரியவர்களின் கால்களில் விழுந்து வணங்கி அவர்களின் ஆசிகளைப் பெற்றுக் கொண்டனர். குணசேகரின் கால்களில் ரிது விழுந்தது ஆசிர்வாதம் பெற்றதும் அவளைத் தூக்கிய குணசேகர், ரிதுவை அணைத்து அவரின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்...
தந்தை மற்றும் தாயின் முகத்தில் தோன்றும் சந்தோஷத்தை பார்த்த ரிது, ‘இவர்களுக்காவது நான் இந்தப் புது வாழ்க்கையை ஏற்றுக்கொண்டாக வேண்டும்’ என மனதில் நினைத்துக் கொண்டாள்…
அடுத்து ராகவின் பெற்றவர்களின் கால்களில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டனர்… ராகவை அணைத்து அவனின் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய தருண், “ நீ நினைச்சதை முடிச்சிட்ட மாப்பிள்ளை காங்கிரட்ஸ்” என்றபடி அவன் காதில் கிசுகிசுத்தான்….
“தேங்க்ஸ் மச்சான், ரொம்பப் பொங்காத உன் தங்கச்சிக்கு தெரிஞ்சிட போகுது” என்றவாறு தருணை தன் பங்கிற்கு அணைத்து விடுத்தான்…
“காங்கிரட்ஸ் அண்ணி, இனிமேல் நீங்க தான் எங்க அண்ணாவை சமளிக்கணும்!!!” என்றவாறு ஆர்ப்பாட்டமாய் அணைத்த ஸ்வாதிக்காவிற்குப் பதில் எதுவும் கூறாமல் புன்சிரிப்பை மட்டும் உதிர்த்து அவளை அணைத்துக் கொண்டாள் ரிதுஷினி….
அண்ணியிடம் வாழ்த்துக்களைக் கூறிய ஸ்வாதி, அடுத்த ராகவின் கை குலுக்கி, “ காங்கிரஸ் டா அண்ணா, குடும்ப ஸ்திரன் (குடும்ப ஸ்திரிக்கு ஆண்பாலுங்கோ) வாழ்த்துக்கள்!!” என்றவாறு ராகவை அணைத்து அவளின் மகழ்ச்சியைத் தெரிவித்தாள்...
ஒருவாறு குடும்ப உறுப்பினர்களின் வாழ்த்துப் படலம் முடிய அடுத்து வெளி ஆட்களும், உறவினர்களின் வாழ்த்துப் படலம் ஆரம்பித்தது….
நிச்சயம் முடிந்து, நாட்கள் புடவை எடுக்க, நகை எடுக்க என்று விரைவாகச் சென்று, இதோ கல்யாணத்திற்கு முதல் நாள் என்ற நிலையில் வந்து நின்றது..
இடையில் இருந்த பத்து நாட்களும் ராகவ், ரிதுவிடம் பேச எந்த முயற்சியும் எடுக்க வில்லை.. ரிதுவோ அதைப் பற்றி எந்தக் கவலையும் இல்லாதது போல் இருந்தாள்…
முதல் நாள் இரவே எல்லாரும் மண்டபத்திற்கு வந்தனர்... மண்டபத்திற்கு வந்ததில் இருந்து ஸ்வாதிக்கா ரிதுவின் அருகிலே இருந்தாள்... வெள்ளை மனதுடன் கலகலப்பாகப் பேசும் ஸ்வாதியின் பேச்சில் ரிதுவும் அவள் கவலை மறந்து சிரித்தாள்..
தியாவும் கல்யாணத்திற்கு இரண்டு நாள் முன்னாடியே வந்ததால் ரிதுவும் சிறிது உயிர்ப்போடு இருந்தாள்... அன்றிரவும் முடிய கல்யாண நாளும் அழகாக விடிந்தது…
அதிகாலையில் எழுந்த ரிது குளித்து ஊதா வண்ண பட்டு புடவையில் தயாராகி மேடையில் மூகூர்த்த சேலை வாங்க சென்று கொண்டிருந்தாள்…
மூகூர்த்த சேலை வாங்கியதும் மணமகள் அறைக்கு வந்த ரிது கல்யாண சேலையை உடுத்தி தயாராக ஆரம்பித்தாள்... அரக்கு வண்ண பட்டு உடுத்தி தயாராகிக் கொண்டிருந்த அதே நேரம் ராகவும் மணமகன் உடையாகிய பட்டு வேஷ்டி சட்டை வாங்கிக்கொண்டு மணமகன் அறையில் தயாராகச் சென்றான்...
மூகூர்த்த நேரம் நெருங்க ராகவின் கை பிடித்துத் தருண் மணமகன் அறையில் இருந்து வெளியே வந்த அதே நேரம், ஸ்வாதியும் ரிதுஷினி கையைப் பிடித்து மணமகள் அறையில் இருந்து வெளியே அழைத்து வந்தாள்...
இருவரின் பார்வை நேர்கோட்டில் சந்தித்துக் கொண்டது.. ராகவின் பார்வை வீச்சில் தன்னையறியாமல் நிலம் நோக்கிய ரிது மேடை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்...
மணமேடையில் இருவரும் உட்கார்ந்ததும், ஐயர் சண்டங்குகளை ஆரம்பிக்க இருவரும் ஐயர் சொல்லும் மந்திரத்தை உச்சரிக்க ஆரம்பித்தனர்.
மூகூர்த்த நேரம் நெருங்க ஐயர் கையில் தாலியை வாங்கிய ராகவ் ரிதுவின் கழுத்தில் கட்டி ரிதுவை அவனவள் ஆக்கிக் கொண்டான்...
ராகவின் கை கழுத்தில் பட்டதும் தன்னை அறியாமல் சிலிர்த்த ரிதுவை அவள் உடல் மொழியில் அறிந்து கொண்ட ராகவும் சந்தோஷம் அடைந்தான்…
ரிதுவோ ராகவின் கையில் தாலி வாங்கிய நொடி மனதில் 'இவருடனான என் வாழ்க்கை எந்த விதமான பிரச்சனை இன்றி நல்ல படியாகப் போக வேண்டும்' என்று இறைவனை வேண்டிக் கொண்டாள்...
தாலி கட்டி முடிந்ததும் நெற்றியில் குங்குமம் வைக்கக் குங்குமத்தை கையில் எடுத்த ராகவ் ரிதுவை அவன் கைவளைவில் அணைத்தாற் போல் குங்குமம் வைத்தான்…
ராகவின் செய்கையில் ஏனோ ரிதுவின் உடல் சிலிர்த்து அடங்கியது… படப்படப்பாக உணர்ந்த ரிதுஷினி பயத்தில் கண்களை மூடிக்கொண்டாள்…
நெற்றியில் குங்குமம் வைத்து முடிந்ததும் இருவரும் அக்னியை சுற்றி வலம் வர ஆரம்பித்தனர். சுற்றி வரும் போது ரிதுவின் கை ராகவின் கைகளில் கோர்த்திருந்த போது ரிதுவின் கைகளில் உள்ள ஈரத்தை உணர்ந்த ராகவ் அவளின் பயத்தையும் உணர்ந்து சிறிது வருத்தம் கொண்டான்…
அடுத்து இருவரும் பெரியவர்களின் கால்களில் விழுந்து வணங்கி அவர்களின் ஆசிகளைப் பெற்றுக் கொண்டனர். குணசேகரின் கால்களில் ரிது விழுந்தது ஆசிர்வாதம் பெற்றதும் அவளைத் தூக்கிய குணசேகர், ரிதுவை அணைத்து அவரின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்...
தந்தை மற்றும் தாயின் முகத்தில் தோன்றும் சந்தோஷத்தை பார்த்த ரிது, ‘இவர்களுக்காவது நான் இந்தப் புது வாழ்க்கையை ஏற்றுக்கொண்டாக வேண்டும்’ என மனதில் நினைத்துக் கொண்டாள்…
அடுத்து ராகவின் பெற்றவர்களின் கால்களில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டனர்… ராகவை அணைத்து அவனின் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய தருண், “ நீ நினைச்சதை முடிச்சிட்ட மாப்பிள்ளை காங்கிரட்ஸ்” என்றபடி அவன் காதில் கிசுகிசுத்தான்….
“தேங்க்ஸ் மச்சான், ரொம்பப் பொங்காத உன் தங்கச்சிக்கு தெரிஞ்சிட போகுது” என்றவாறு தருணை தன் பங்கிற்கு அணைத்து விடுத்தான்…
“காங்கிரட்ஸ் அண்ணி, இனிமேல் நீங்க தான் எங்க அண்ணாவை சமளிக்கணும்!!!” என்றவாறு ஆர்ப்பாட்டமாய் அணைத்த ஸ்வாதிக்காவிற்குப் பதில் எதுவும் கூறாமல் புன்சிரிப்பை மட்டும் உதிர்த்து அவளை அணைத்துக் கொண்டாள் ரிதுஷினி….
அண்ணியிடம் வாழ்த்துக்களைக் கூறிய ஸ்வாதி, அடுத்த ராகவின் கை குலுக்கி, “ காங்கிரஸ் டா அண்ணா, குடும்ப ஸ்திரன் (குடும்ப ஸ்திரிக்கு ஆண்பாலுங்கோ) வாழ்த்துக்கள்!!” என்றவாறு ராகவை அணைத்து அவளின் மகழ்ச்சியைத் தெரிவித்தாள்...
ஒருவாறு குடும்ப உறுப்பினர்களின் வாழ்த்துப் படலம் முடிய அடுத்து வெளி ஆட்களும், உறவினர்களின் வாழ்த்துப் படலம் ஆரம்பித்தது….
Attachments
-
281.8 KB Views: 0