All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் "உன்னை அமுதவிஷமென்பதா...!!!" - கருத்துத் திரி

Laknagam

New member
ஷௌரியா சொன்ன ஒரு வரியில் அனைத்து விடையையும் ஒளித்து வைத்து விட்டீர்கள். அவர்கள் செய்த தவறு மூலம் தான் நீயும் அஜ்ஜுவும் எனக்கு கிடைத்தீர்கள் இந்த ஒரு காரணத்திற்காகவே அவர்களை மன்னித்து விடலாம் ஆனால் தவறே செய்யாத நீ அனுபவித்த வலிகளுக்கு அவர்களுக்கு வட்டியும் முதலுமாக தண்டனை கொடுக்கப்பட்டது என கூறினானே இதிலிருந்தே அவள் அனுபவித்த வலிகளை அவன் புரிந்து அதற்கு தண்டனையும் கொடுத்து விட்டான்்.
அம்ரு அவள் மனதில் உள்ள அனைத்து கோபத்தையும் ஆதங்கத்தையும் கேட்டும் வெளிப்படுத்தியும் உள்ளாள். அதன் பிறகும் பல குழப்பங்களையும் கலக்கங்களையும் கடந்தே அவனை ஏற்றுக் கொண்டுள்ளாள்.
மிக அருமையான நிறைவான முடிவு.
அம்ருவையும் ஷௌரியாவையும் மிக அதிக அளவு இழக்க நேரிடும்.
அடுத்த கதையுடன் விரைவில் வாருங்கள் கவி அக்கா 👌👌👌👌👌👌
Yeah very very beautiful story
 

Hanza

Bronze Winner
வழமைப்போலவே முதலாம் பகுதியின் முடிவு வரை எம் மண்டையை காய வைத்து விட்டீர்கள்... அதுவே கதையில் எம்மை ஒன்றச்செய்கிறது... இதுவா அதுவா என்று எம்மை thinking mode லேயே வைப்பதில் உங்களுக்கு நிகர் நீங்கள் தான். 👏👏👏

SV ஆண்மையின் மொத்த உரு. ஆளுமையின் தலைவன். இவன் எது செய்தாலும் ரசிக்க வைக்கிறான். 😍😍 இவன் செயல் புயல். வாய் பேசாமலே body language இல் எம்மை கட்டியிழுக்கிறான். அம்ருவிற்கு நீச்சல் பழக்கி கொடுப்பது அவளுக்கு பிடித்த உடை வாங்கி கொடுப்பது சூர்யாவின் பிள்ளைக்கு நகை வாங்குவது என்று அடுக்கிக்கொண்டே போகலாம். ♥♥♥ முன் பாதியில் terror.... 🔥🔥🔥💥💥 பின் பாதியில் Lover boy 😍😍😍👍🏻👍🏻👍🏻👍🏻 அஜ்ஜுவுடனான இவனது பந்தமும் இவன் பொழியும் பாசமும் நெகிழ வைக்கிறது. தாயன்பை அம்ருவிடம் தேடுவதெல்லாம் மனதை கனக்க வைக்கிறது. அம்ரு சாரி சொல்லுமாறு கேட்கும் பொழுது இவன் அடிக்கும் counter தான் mass... 💥💥💥💥 ரொம்ப ரசித்து படித்தேன்.😍😍😍 RP இற்கு அடுத்து SV நாமத்தை எம் வாய் ஜெபிக்கும். 😍😍😍

அம்ரு ஒரு அப்பாவி... சாதாரண ஆசைகள் கொண்ட சராசரி பெண்.. முன் பாதியில் வெடவெடக்கும் கோழிக்குஞ்சாய் இருப்பவள்... பின் பாதியில் கழுகை துரத்தும் பெட்டை கோழியாய் உருமாறுகிறாள். இவளது மென்மையான அன்பான மனமே plus பாயிண்ட் 👌🏻👌🏻👌🏻 SV தடாலென காதலில் விழவும் இது தான் காரணம். தாதியாகட்டும் ஷ்யாம் ஆகட்டும் பாரபட்சம் பார்க்காது இவள் காட்டும் அக்கறை 👌🏻👌🏻👌🏻👌🏻ஷ்யாம் தனது மூத்த பிள்ளை என்று symbolic ஆக கூறும் தருணம் எல்லாம் clapping moments தான். 👏🏻👏🏻👏🏻

ஷ்யாம் ஷ்யாமளா என்ற இவர்களது பெயர் ஒற்றுமையிலேயே ஒரு suspense ஐ வைத்து எம்மை ஒரு வழி பண்ணிட்டீங்க... 😩😩😩😩

முகுந்த் ஒரு அருமையான well wisher. 👍🏻 அதிலும் வரு சிவா வை வைத்து again எம்மை சுத்த வைத்து விட்டீர்கள். 🤣🤣🤣🤣🤣

தாதி செம்ம bold... 💥💥🔥🔥 குறைவான இடத்தில் வந்தாலும் கனமான பாத்திரம். 👍🏻

சந்தீப், சஷாங், ஜாஷா எல்லாம் என்ன ஜென்மங்கள்... 😡😡😡😡 இவர்களுக்கான தண்டனை செம்ம.. 🔥🔥🔥

அருமையான அழுத்தமான காதல் கதை. 😍😍😍😍

வாழ்த்துக்கள் ராஜமாதா கவி மா...

💐💐💐
 
Top