All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

உதயாவின் "பழிக்குப் பழி" - கதை திரி

Uthaya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ராமசாமி ரஞ்சனியின் அறைக்கு சென்ற போது ராஜா திட்டு வாங்கிக்கொண்டிருந்தான். அவர் உள்ளே நுழைந்த உடன் ராஜாவைப் பார்த்து முறைத்தவள், ஐ நீடு வித் இன் ஒன் ஹவர் என்றாள்.

ராமசாமி இதில கோபமா வேற இருக்காங்க போல என நினைத்தவர் ரஞ்சனிக்கு எதிரில் அமர்ந்தார். ராமசாமி ஒருவர் மட்டுமே ரஞ்சனியின் அறைக்கு அவள் கூப்பிடமலே செல்லும் உரிமை உள்ளவர். அது அவரது பணத்தாசை இல்லாத குணத்திற்கும், கடையில் வாடிக்கையாளருக்கு அவர் செய்யும் உதவிகளால் கிடைத்த சலுகை.

கடையில் எந்த சமயத்திலும் யாருக்கு என்ன உதவி தேவைப்பட்டாலும் ராமசாமி மூலமாகத்தான் ரஞ்சனி இடம் சொல்வார்கள். ரஞ்சனி கணினியை விட்டு கண்களை அகற்ற வில்லை, கைகள் வேகமாக தட்டச்சு செய்தது.

சொல்லுங்க ராமசாமி என்றாள் கண்களை திருப்பாமலேயே. அவருக்கோ மனதில் உங்களை சாப்பிட வைக்கத்தான் வந்தேன் என ஒரு முதலாளியைப் பார்த்து எப்படி சொல்வது ன தெரியாமல் அது ரஞ்சனி மா என்றார் வார்த்தைகள் கிடைக்காத தடுமாற்றத்தில்.

ஒரு நிமிடம் புருவத்தைச்சுருக்கி அவரை க்கூர்ந்தவள், என்ன?.. என்னாச்சு? என்றாள்.

அவர் தனக்குள் வார்த்தையை தேடிக்கொண்டிருக்கவும், கணினியை அணைத்தவள், சொல்லுங்க.. எதுவும் பெரிய பிரச்சனையா? என்றாள் ரஞ்சனி.

அவர் பதில் சொல்லாமல் பட்டென பிரைட் ரைசை மேசை மேல் எடுத்து வைக்கவும், அவரை கூர்ந்தவள், அம்மா பேசுனாங்களா? என்றாள்.

நீங்க சாப்பிடாம இருக்கீங்கனு, உங்களுக்கு இத குடுக்க சொன்னாங்க என்றார் சற்று திணறலாக.

பல்லை கடித்தவள், எதாவது முக்கியமான பிரச்சனைனு நினைச்சா, சோ டிஸ்கஸ்டிங், நீங்க போலாம், நான் சாப்டிப்பேன் என்றவள், கணினியை உயிர்ப்பித்தாள்.

அவர் அசையாமல் உட்காருந்திருக்கவும், கண்டும் காணமல் அவளது வேலைகளைச்செய்ய ஆரம்பித்தாள். சிலர் அவர்கள் வேலையை பெண்டிரைவில் கொடுத்தார்கள், சிலர் பைலில் கொடுத்தார்கள், சிலர் திட்டு வாங்கினார்கள், சிலர் ரஞ்சனியின் முறைப்பிற்கே அஞ்சி ஓடி தவறான வேலையை சரி செய்தார்கள். இப்படி வேடிக்கை பார்த்த வண்ணம் அவர் பொழுதை ரஞ்சனி அறையில் கழித்தார். மணி நான்கு என காட்டியது. ராமசாமியால் உட்கார முடியவில்லை. பசி மயக்கமே வந்துவிடும் அளவிற்கு கிறங்கினார்.

இதற்கு மேல் முடியாது என நினைத்தவர், ரஞ்சனி மா எனக்கு பசிக்குது , வாங்க ஒரு பத்தே நிமிடத்துல சாப்பிட்டு வேலை பார்க்கலாம் என்றார் பசி உந்தித் தள்ள.

நீங்க சாப்பிடலயா? என கண்களை உருட்டியவளை பார்த்தவர், ம்ம் என்றார் முணங்களாக.

எதுக்..கு? என்றாள் அழுத்தமாக, உங்கள சாப்பிட வைக்கணுமே அதுக்குத்தான், உங்களுக்கு பசிக்கலயா? என்றார் ராமசாமி.

இல்ல, நீங்க சாப்பிடுங்க, ம்.. உடனே என்று அதட்டினாள். அவரோ அசைந்தாரில்லை,

அப்போ உங்கள கட்டி போட்டு சாப்பாடு திணிக்க சொல்லீரு வேன், ம்.. சாப்பிடுங்க...என்றாள் ரஞ்சனி.

நீங்க எதுக்கு சாப்பிடமாட்றீங்க, என ரஞ்சனியைப் பார்த்து ராமசாமி கேள்வி எழுப்ப, நான் நீங்க சாப்பிடுறத பத்தி பேசுறேன் ராமசாமி, டோன்ட் ஆஸ்க் கொரிஸ் டூ மீ, எனக்கு வேலை இருக்கு..

நீங்க எங்கிட்ட பேசுன இந்நேரத்துக்கு சாப்பிட்ருக்கலாம் என அவர் குழந்தை தனமாக பேச, ரஞ்னியின் இதழில் மென் புன்னகை தோன்றியது.

இதுதான் சாக்கென, மடமட வென பிரைடு ரைசை திறந்து அவர்முன் வைத்தவர், ஸ்பூனை ரஞ்சனியின் கையில் திணித்தார்.

அவருடைய சாப்பாட்டையும் திறந்து ஒரு வாய் உண்டவர் அதன் பின் தான் ரஞ்சனியை நிமிர்ந்து பார்த்தார். ராமசாமியை அதிக நேரம் காக்கவைத்தது, அதுவும் அவர் தன்னால் சாப்பிடாமல் காத்திருந்ததை நினைத்தவள், சாப்பிட ஆரம்பித்தாள்.

கதவை திறந்து கொண்டு ஊழியர்கள் வர, இப்பத்தான் சாப்பிட ஆரமிச்சாங்க அதுக்குள்ளயா என நினைத்த ராமசாமி, சைகையால் அவர்களை தடுத்தவர், அவர்களை பத்துநிமிடம் கழித்து வரச்சொன்னார்.

ரஞ்சனிக்கு தெரியக்கூடாது, அவள் சாப்பிடும் வரை அவளை யாரும் தொந்தரவு செய்துவிடக்கூடாது என அவர் சத்தமே எழுப்பாமல் சைகையில் சொல்ல, ரஞ்சனியும் அதை சத்தமில்லாமல் கவனித்தாள்.

கடைசி மிடரில் அவளுக்கு பொறை யேற தண்ணீரைக்குடித்தவள், அடுத்த நொடி சிங்கில் அனைத்தையும் வாந்தி எடுத்துவிட்டாள்.

ரஞ்சனி பாத்ரூமிலிருந்து வெளிவர, அவளுக்கு தண்ணீர் கொடுத்த ராமசாமி என்னாச்சுமா, என்றார் அக்கறைக்குரலில்.

நத்திங், காலைல இருந்து சாப்பிடாம இப்ப சாப்டது ஒத்துக்கல, நத்திங், நீங்க சாப்பிட்டீங்கனா உங்க பிளோருக்கு போங்க, என்றாள் ரஞ்சனி.

ரஞ்சனி பசி இல்லை என்று சொன்னது, அவளின் மெலிவு, இப்போதைய வாந்தி, பவித்ரனின் போன மாத சந்திப்பு அனைத்தும் அவருக்கு வேறு செய்தியைக் கூறியது.

ரஞ்சனி மா கைய குட்ங்க என்று அவளது நாடியை பரிசோதித்தவருக்கு, சந்தேகம் உறுதியானது.

எனக்கு ஒன்னுமில்ல, என்றவளை கூர்ந்தவர், இருக்கு வயித்துல குழந்த என்றார்.

ரஞ்சனிக்கு இதயம் நின்று துடித்தது, அதைத்தொடந்து பவித்ரனின் ஞாபகங்கள் வர, சுகமாக உணர்ந்தாள். ரஞ்சனியின் முகத்தில் அதிர்ச்சிக்கு பதிலாக ஆனந்தம் தோன்றவும் ராமசாமி குழம்பினார்.
ராமசாமி, தேங்ஸ் என்றவள், அவள் டேபிளில் இருந்த சாக்லேட்டை எடுத்து அவரிடம் திணித்தாள். நீங்க யார்டயும் சொல்ல வேண்டாம், கல்யாணத்துக்கு இன்னும் மூனு நாள்தான் இருக்கு, என்ன இருந்தாலும் இது பிபோர் மேரேஜ், கல்யாணம் ஆன பின்னாடி எல்லாருக்கும் சொல்லிக்கலாம் என்று அவரை வழி அனுப்பி வைத்தாள்.

அவருக்கு இந்த கர்பம் திருமணத்திற்கு முன் தவறாகப்பட்டாலும், ரஞ்சனி முகத்திலிருந்த மகிழ்ச்சிக்காக, அவரது கருத்தை சொல்லாமலே விடை பெற்றார்.

ரஞ்சனி வேகமாக பவித்ரனுக்கு அழைத்தாள், அவளது பெயரை பார்த்தவன், போனை அணைத்துவிட்டான்.

மது பைலின் கையெழுத்திற்கு நிற்க, அவனது டேபிலில் இருந்த லேண்ட்லைன் ஒலித்தது. பேனை எடுத்ததும் ஹலோ பவி என்றாள்.

எதுவும் பேசாமல் போனை மதுவிடம் தந்தவன், தான் இல்லை என சொல்லும்படி சைகை செய்தான்.

மது ஹலோ எனவும், பவித்ரன் இருக்காரா? என்றார் ரஞ்சனி.

சார் இஸ்இன் மீட்டிங், நீங்க என்றாள் மது, பவித்ரனை பார்த்தபடியே

ஓ என ஒற்றைச்சொல்லில் தன் ஏமாற்றங்களை மறைத்துக்கொண்டு, நான் ரஞ்சனி, அவர் உட் பீ, வந்ததும் பேச சொல்லுங்க என்றவள் போனை வைத்துவிட்டாள்.

மதுவின் காது ரஞ்சனி என்ற வார்த்தையை எதிரெலிக்க, மடமடவென பைலை பவித்ரனமிருந்து வாங்கிக்கொண்டவள், அவளது இடத்திற்கு ஓட்டம் பிடித்தாள்.
 

Uthaya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
திருமணத்திற்கு முதல்நாள், ராஜன் சொந்த பந்தங்களுடன், மகள் திருமணத்திற்கு சென்றார். ரஞ்சனிக்கு மனதில் பவித்தன் எதற்காக இப்படி தன்னை புறக்கணிக்கிறார் என்ற எண்ணம் இருந்தும், ஒரு வேலை அன்று அவர் திருமணத்திற்கு முன் எல்லை மீறியதற்கு வெட்கப் படுகிறாரோ என அவளே ஒரு காரணம் தேடி சமாதானப்படுத்திக்கொண்டாள்.

கருவுற்றிருப்தையும் சொல்ல முடியவில்லை என நினைத்தவள், போனதும் நேரில் பார்த்து முதல் வேலையாக சொல்லவேண்டும் என நினைத்தாள்.

ஆலம் கரைத்து, சொந்த பந்தங்கள் புடைசூழ, வானவில் தரையிங்கியதுபோல், அனைவரின் அதிசய விழிகளைக் கடந்து வீட்டினுள் சென்றாள்.

பொண்ணு நான் பாக்கக்கூட போக முடியல, உடப்பு ஒத்துக்காதுன்னு சொன்னாங்க, அம்மா பிள்ள அழகு , அம்சம், தேடித்தேடி சலிஞ்சு எடுத்த மாதிரில்ல இருக்கு என வள்ளி ரஞ்சனியின் அழகை தனது கணவனிடம் புகழ்ந்து போசிக்கொண்டிருந்தாள்

ஆமா, ஆமா யார் முகத்துலயும் ஈயாடல, ராத்தரி ஒருதரம் நீ சுத்தி போட்டுடூ புள்ள என்றான் மருது.

சத்யதேவி, மருமகள் வீட்டினருக்கு வீட்டை சுற்றிக்காட்டும்படி, வள்ளியைப் பணித்தார்.

ஒவ்வொரு அறையாக சுற்றிப் பார்த்துக்கொண்டு வந்த ரஞ்சனி, பவித்ரன் அறை வரவும், மனதில் ஆசைகள் உந்தித் தள்ள நான் பாக்கலாமா என்றாள் வள்ளியிடம், என்ன சின்னம்மா நீங்க, இது உங்க வீடு, நீங்க சின்னையா ரூம சுத்தி பாருங்க, அவரு வேல முடிஞ்சு மண்டபத்துல சரி பாத்துட்டு ராத்திரிக்குத்தான் வருவாங்க என்றவள், மற்றவர்களுக்கு அடுத்த இடங்களை சுத்திப்பார்க்க கிளம்பினாள்.

லதாவிற்கு, இது சுத்தமாக பிடிக்கவில்லை, திருமணத்திற்கு முன் பவித்ரன் வீட்டுக்கு மகளை அழைத்துவரக்கூடாது, மண்டத்தில்தான் இருக்க வேண்டும் என சொன்னவர் அவர், ராஜன் தான், அப்படியானால் பவித்ரனை எதற்காக, நம் வீட்டுக்குள் விட்டாய், மாப்பிள்ளைனா ஒருமாதிரி, மருமகனா வேற ரூல்சா என எதை எதையோ பேசி மகளின் விருப்பத்தை நிறைவேற்றினார்.

ரஞ்சனி பவித்ரன் அறையை சுற்றிப்பார்க்க கேட்டவுடன், முறைத்த லதாவையும், பேசவிடாமல் அவர் கைபிடித்து அழைத்துச்சென்றார்.

ரஞ்சனி, எப்போதான் பவித்ரன் சார் உங்கள நேர்ல பாத்து விஷயத்த சொல்றது, என அவனது அறையில் இருந்த அவனது ஆளுயர புகைப்படத்துடன் பேசிக்கொண்டிருந்தாள். எங்க வீட்லதான், உங்க போட்ட பாத்தே பேசுனேன் இங்கேயுமா என நினைத்தவள், தனக்குள் சிரித்துக்கொண்டு, கட்டிலில் அமர்ந்து அறையை நோட்டம் விட்டாள்.

அந்த அறையில் பவித்ரனின் முகத்திரையைக்கிழிக்கும் இரண்டு அணுகுண்டு உள்ளது, ஒன்று அவளி காலடியில் பெட்டியில் இருக்கிறது, மற்றொன்னு பக்கவாட்டிலுள்ள டிராவில் உள்ளது.

எதை ரஞ்சனி முதலில் பார்ப்பாள், நாளை திருமணத்தை ஏற்பாளா?

பலியாவாளா? பலிகொடுப்பாளா?
 

Uthaya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பதிநான்காம் பாகம்..

பவித்ரனின் அறையில் ரஞ்சனி அமர்ந்து அறையிலுள்ள ஒவ்வொரு பொருளாக பார்ந்துக்கொண்டிருந்தாள். அதீத தூய்மை என்று சொல்லமுடியாது, அதற்காக எல்லாம் கலைந்தும் இருக்கவில்லை, அன்றாடம் உபயோகிக்கும் பொருட்கள் சற்று கலைந்திருந்தது, அதை டிரசிங்டேபிளில் சரி செய்தாள், எதிரில் உள்ள கண்ணாடி அவளின் முக பூரிப்பை அவளுக்கு காட்டிக்கொடுத்தது. இதழில் மென் புன்னகையுடன், எந்த வேலையோ, டென்சனோ இல்லாமல் , பவித்ரனின் நினைவில் மட்டுமே இருக்கும் இந்த ரஞ்சனி முகம் அவளுக்கே சற்று புதிதாய் தெரிந்தது, அழகாகவும், தான். கண்ணாடியில் தன்னைக்கண்டவள், அதனோடு சேர்ந்து, கட்டிலின் அடியில் இருந்த பெட்டியையும் கண்டாள்.

பவித்திரனைத்தான் காண முடியவில்லை, அன்று போட்டிருந்த ஜர்கினையாவது, பார்க்க வேண்டும் என நினைத்தவள், சந்தோசமாக பெட்டியைத்திறந்தாள், அத்துடன் தனது சந்தோசம் முடியப்போவது தெரியாமல். பெட்டியைத்திறந்தவள் ஜர்கினைத்தேட, அவளது மடியில் விழுந்தது, பேனாவடிவ அழகிய கண்ணாடி லைட்டர், உயர் ரக செல் போனுக்கு கொடுக்கப்பட்ட பெட்டி போன்று, அழகிய பட்டில் சுருட்டப்பட்டிருந்தது.

ரஞ்சனியின் இதயம் வேகமாகத்துடிக்க, இந்த உறை என நினைத்தவளின் கைகளில் அடுத்த ஆதாரமாக, அதில் பவித்ரனின் பெயரிட்ட பில் இருந்தது.

அன்று இதைப்பற்றி தனது சந்தேகத்தை கேட்கும்போது, அவன் வேடிக்கையாக பதில் சொல்லி தன்னை திசை திருப்பியது ஞாபகம் வந்தது, அந்த லைட்டர் பெட்டியை மட்டும் கைகளில் எடுத்துக்கொண்டவள், ஆனந்தன் யார் என்ற தனது அடுத்த கேள்விக்கான விடையை அவனது அறையில் தேட ஆரம்பித்தாள்.

ரஞ்சனியை நோக்கி வீசப்பட்ட அனைத்து சதியிலும், கோயம்பத்தூர் என்ற பெயரும், ஆனந்த் என்ற பெயருமே இடம்பெற்றது, இதில் ஒன்றிக்கு ஆதாரம் கிடைத்துவிட, மற்றதற்காக அலமாரியைத் திறந்தாள்.

துணிகளுக்கு இடையே நன்கு துளாவிக்கொண்டிருக்கும் போது, பட்டென கதவு திறந்தது. ரஞ்சனி சத்தம் கேட்டு திரும்பும் முன் பவித்ரன் அலமாரிக்குள் அவளைத் தள்ளினான். ரஞ்சனியின் இருபுறமும் அலமாரி கதவு இருக்க அவளின் முன்னால் பாதை அடைத்து நின்றான் பவித்ரன்.

யார் அந்த காட்சியைப் பார்த்தாலும், பவித்ரன் அலமாரியில் பெருட்களை எடுப்பது போல் தோன்றுமே ஒழிய, ரஞ்சனி நிற்பதே தெரியாது.
அவளது கையிலிருந்த லைட்டர் பெட்டியை பறித்தவன், யாரக்கேட்டு உள்ள வந்த, என்றான்,

ரஞ்சனி, யார் ஆனந்த் என்றாள் , அவருக்கும் உங்களுக்கும் என்ன உறவு, இல்லாட்டி என யோசித்தவள், நீங்கதான் ஆனந்தா? என்றாள்.

உனக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கில்லை, கெட் அவுட் என்றான் திமிராக...

ஐ ஆஸ்க், யார் ஆனந்த் என்றாள் அழுத்தமாக அவன் கண்களைப் பார்த்து..

ரஞ்சனி அன்னை அவளை தேடிக்கொண்டு பவித்ரனின் அறையைத் திறந்தார்.ரஞ்சனியை எதிர்பார்த்தவர், பவித்ரனைக்காணவும், சாரி மாப்ள ரஞ்சனி இருப்பானு நினச்சேன், அவ எங்க என்றார்.

லதாவின் குரல் கேட்டு ரஞ்சனி குரல் கொடுக்கும்முன், தெரியல ஆண்ட்டி, நான் அவள பாக்கவே இல்லியே என்றான். ரஞ்சனியால் பேச முடியாத படி அவனது கை ரஞ்சனியின் வாயை அடைத்திருந்தது.

ரஞ்சனி பவித்ரனின் அறையை துலாவியதில், பொருட்கள் கலைந்து கிடந்தது, வள்ளி வந்து ரூம சுத்தப்படுத்த சொல்லவா என்ற லதாவிடம், நான் ரெஸ்ட் எடுக்கனும் ஆண்ட்டி யாரும் கொஞ்ச நேரம் டிஸ்டர்ப் பண்ண வேண்டாமே எனக்கூறி லதாவை வெளியே அனுப்பி வைத்தான்.

லதா அறையை மூடிவிட்டு வெளியில் செல்ல, ரஞ்சனிபுறம் திரும்பியவன், அவள் வாயிலிருந்து கையை எடுக்க, அவனைப் பார்த்து முறைத்தவள், சொல்லுங்க யார் ஆனந்த் என்றாள்.

பவித்ரன், உன்னால் கொல்லப்பட்டவன் என்றான்,

வாட்,...?

உன்னால மனமுடைஞ்சு தற்கொலை செய்றதும், நீ யே உன்னோட கையால கொல்றதும் ஒன்னுதான். எவ்வளவு கலகலப்பானவன, உன்னோட வண்மமான பேச்சு கொன்னுடுச்சுனு தெரியுமா என பவித்ரன், கத்த, ரஞ்சனியோ, அப்போ அவன் உயிரோட இல்ல, அவனோட அக்கௌண்ட மிஸ் யூஸ் பண்ணது நீ, ரைட்? என்றாள்.

ரைட், அப்சல்யூட்லி, நீ இது வரைக்கும் கண்டுபிடிச்சிட்டியா, புத்திசாலிதான், பட் வலைக்குள்ள சிக்குன பிறகு மீனோட புத்திசாலித்தனம் எதுக்கும் உதவாது என்றவனை முறைத்தாள் ரஞ்சனி.

சொந்த பந்தங்களுடன் வந்து, நாளை திருமணம் என்ற நிலையில், வயிற்றில் கருவுடன் திருமணத்தை நிறுத்த முடியாது என்பதை ரஞ்சனி உணர்ந்தே இருந்தாள். அதை அவன் முன் ஒத்துக்கொள்ள மனமில்லை. வாழ்வில் அடுத்தது என்ன செய்யப்போகிறோம், இன்னும் எத்தனை கொடூரங்களை மறைத்து வைத்தள்ளானோ என நினைத்தாள் ரஞ்சனி

எதுக்காக, என்ன காதலிக்கிறேன் செல்லி ஏமாத்துனீங்க, நேருக்கு நேரா மோதாம ஒரு கோல மாதிரி, என்றாள் உச்ச கட்ட வெறுப்பில்,

தொழிலா இருந்தாலும் வாழ்க்கையா இருந்தாலும் எதிரிங்க நேரா சொல்லி அடிக்க மாட்டாங்க, மறைஞ்சுதான் அடிப்பாங்க, இது கூட தெரியாம, எப்படி தொழில் பண்ற என்றான் அவளை மட்டம் தட்டி.

ஓ, சரி தான், ரொம்பவும் சரிதான், தவ றான ஆளிடமிருந்து வரும் பொன்மொழி, கண்டிப்பாக, சரியாகத்தான் இருக்கும், என கேலிபோல அவள் கூற, பவித்ரன், தவறான ஆள், நானா?, பவித்ரன் பவி, பாஸ், இதற்கடுத்து இந்த புதிய பெயர், பிரமாதம், என்றவன்,

கடும் கோபத்தில் அவளது கழுத்தைப்பிடித்தான், இன்றைக்கு சம்பந்தமற்ற எதிரெதிரான பல உணர்வுகளைச்சுமந்தவள், பெய்த்துப் போன காதலால் மனது மிகவும் கலைத்திருக்க, கற்பத்தின் காரணமாக உடல் கலைத்திருக்க, அவன் கழுத்தைப்பிடித்ததும், அவள் அவனை எதிர்க்கவே இல்லை. இந்த திருமணத்தை இறந்தேனும் தடுக்கலாம் என நினைத்தாலோ என்னவோ, உடல் பலம் எப்போதும் குறைவாக உடையவள், மனமும் இன்று ஓய்ந்து போக, இரண்டு வினாடிகளூக்குள் தெம்பின்றி தொய்தாள்.

ஒரு சொல்லைக்கூட தாங்கிக்கொள்ளாமல், எதிர்த்து வாதிடுபவளின், இந்த சரணாகதியை, போராட்டமற்றகுணத்தை எதிர்பாராத பவித்ரன், சுதாரிப்பதற்க்குள் அவள் தரையில் விழுத்து கிடந்தாள்.

பவித்ரனின் இதயம் நான்கு இதயங்களின் மொத்தமான துடிப்பை முரசு கொட்டியது. அவளது தலையை ஏந்திக்கொண்டு ரஞ்சூ, ரஞ்சூ என அழைத்துப் பார்த்தான், சத்தமே இல்லாமல் கிடந்த நிலையில் அவள் கிடக்கவும், அவளை தூக்கி கட்டிலில் கிடத்தி, கண்ணத்தை தட்டினான்.

நீரை முகத்தில் தெளித்ததும், இருமியவாறு எழுந்தவளை கைகளுக்குள் அடக்கியவன், சாரி ரஞ்சு, ஆர் யூ ஆல்ரைட்? என தனது தோள்களில் சாய்த்துக்கேட்டான்.

பவித்ரனைப் பார்த்த ரஞ்சனிக்கு, பவித்தனின் பரிதவிப்பான முகம், தன்மேல் வெறுப்பை நெருப்பாக பொழியும் முகம், இவற்றை தனக்குள் கணக்கிட்டுக் கொண்டிருந்தாள்.

ரஞ்சனியை தோளில் முகம் புதைத்தவன், அங்கே முத்தமிடவும் திடுக்கிட்டு அவனை உதறித்தள்ளியவள், அவன் கண்ணத்தில் பளாரென அறை விட்டாள்.

அடியை வாங்கியவன் கேபப்படுவதற்கு பதிலாக, ஐ லவ்யூ மை டால் என்றான்.

அவன் கைகளை தட்டிவிட்டு கட்டிலில் இருந்து குதித்து இறங்கியவள், கல்யாணத்த நீங்களா நிப்பாட்டீருங்க, நீங்க அதுக்கு என்ன காரணம் சொன்னாலும் நான் ஏத்துப்பேன் என கூறியவள், அறைவாயிலை அடையும் முன், பவித்ரன் முன்னால் வந்து நின்றான்.

அவனைப் பார்த்து முறைத்தவளிடம், நான் நிறுத்த முடியாது. நீயா நிறுத்துனா நான் தடுக்கமாட்டேன் என்றவன், அவளுக்கு வழி விட்டான்.

பவித்ரன் அறையிலிருந்து எதிர்பட்ட மகளை கண்டு சிரித்த ராஜன், அம்மா ரொம்ப நேரம் தேடுறா, சீக்கிரம் போடா, அதுக்கு முன்னாடி முகம் கழுவீட்டு போ என்றவர், மகளின் கலைந்த தலையை வேறுவிதமாக எடுத்துக்கொண்டார்.

அவளுக்கென்று ஒதுக்கப்பட்டிருக்கும் அறைக்கு வந்து துணிகளை எடுத்து பெட்டினுள் வைக்கவும் அவள் போன் ஒலித்தது.
 

Uthaya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ராமசாமி ரஞ்சனியை அழைத்திருந்தார். எப்படி ரஞ்சனி மா இருக்கீங்க என்றார்.

அவள் குரல் சுரத்தே இல்லாமல் ம் பைன், சொல்லுங்க ராமசாமி என்றாள்.

அவளது குரலில் இருந்த கலைப்பை உணர்ந்தவர், அம்மா ஜூஸ் நிறைய குடிங்கம்மா, மயக்கம் வரும் வாந்தி வரும், உடம்ப நல்லா பாத்துகோங்க என்றார் அக்கரையில்.

ரஞ்சனிக்குபக்கென்றது, இதை எப்படி மறந்தேன், என யோசித்தவளை சிந்திக்கவிடாமல், ஹலோ, ஹலோ என்றார் ராமசாமி.

ம்.. சரி என்றவள் என்னவிசயம் என்றாள். ஒன்னுமில்லமா, எல்லாருக்கும் ஒரு மாத சம்பளம் குடுக்க சொன்னீங்களே சொல்லீட்டேன், நீங்க அடுத்தவாரம் வரும்போது, வரவேற்புக்கு கடைல எல்லாருக்கும் பத்திரிக்க குடுத்தாச்சு என்றார்.

சரி, நான் வர்ற வரைக்கும் பொறுப்பா பாத்துக்கோங்க ராமசாமி என்றாள்.

நீங்க எப்படிமா மறுபடியும் இங்க வர முடியும், அங்க தான இருப்பேன்னு சொன்னீங்க, என்றவரிடம், எதைச்சொல்வது என யோசித்தாள்.

அதற்கு அவர் பவிசார் நல்லா இருக்காரா? எனவும், பட்டென போனை அணைந்து கட்டிலில் வீசினாள்.

சம்பளம் குடுக்கச்சொன்னது, புதிய உதயமான தங்கள் குழந்தையின் வரவிற்காக, ஆனால் இன்றய நிலையிலோ திருமணத்தை நிறுத்தினாள், பிள்ளைக்கு அடையாளம்???? என யோசித்தவள் , வயிற்றில் கைவைக்க, கண்களில் ஆறாக நீர் பெருகியது.

தனக்கு அழுகை வரும் என்பதை கண்ணத்திலிருந்து மடியில் விழுந்த நீர் துளி அவளுக்கு உணர்த்திக்கொண்டிருந்தது. உள்ளே நுழைந்த லதா மகளின் உணர்ச்சியற்ற முகத்தையும் கண்களின் கண்ணீரையும் கண்டவர், பதறி வந்து அவளை அணைத்துக்கொண்டார். அன்னையின் அரவணைப்பில் கண்ணீர் பெருக ஒரு மூச்சு அழுதுவிட்டாள்.

மகள் அழுதே பாராதவர், என்னாச்சு மா என்ன எதுக்கு என புரியாமல் தவித்தார்.

ரஞ்சனியிடமிருந்து பதில் வராததால், சில வினாடி யோசித்தவர், அவளின் கண்களைத்துடைத்துவிட்டு அம்மா அப்பாவ பிரியனும்னு யோசிக்கிறயா? நீ சொன்னா அப்பா பிசினச எல்லாம் மாத்தீட்டு கூட இங்க வந்துடு வாங்க, அம்மாவும் தான், நீ கவலபடாத என தேற்றினார்.

ரஞ்சனி உண்மையை வாய் திறந்து சொல்லவில்லை, சொல்லவும் முடியவில்லை. அன்னையின் மடியில் முகம் புதைத்தாள்.

எக்ஸ் கியூஸ் மீ என்ற பவித்ரனின் குரலில் பட்டென எழுந்து அமர்ந்தாள்.

வாங்க மாப்பிள்ள என வரவேற்ற லதா, நீங்களே என்னனு கேளுங்க என மகளை சமாதானப் படுத்தும் பொறுப்பை பவித்ரனிடம் ஒப்படைத்துவிட்டு, சந்தோசமா இருக்கணும் ரஞ்சனி என மகளுக்கு அறிவுறை வழங்கினார்.

பவித்ரன் தன் அருகில் அமரவும் கடுப்பானவள், அன்னை அருகில் இருப்பதால் எதையும் சொல்லமுடியாமல் அமைதி காத்தாள்.

பவித்ரனுக்கு, அவளின் கண்ணீர்துளி நெஞ்சை பிசைந்தது, அவனும் லதா அருகில் இருப்பதால் எதையும் பேசவில்லை.

லதா விடைபெற்று வெளியேற, பட்டென அவளை இழுத்து அணைத்தவன், எதுக்கு டாலி அழற என்றான்.

ஐம், என அவள் கைகளை எடுத்தவன், நீயே அடி என அவளது கைகளை வைத்து அவனை அவனே அறைந்து கொண்டான்.

பவித்ரனிடமிருந்து கைகளை உருவிக்கொண்டவள், சுட்டு விரலை நீட்டி தொடாத, வெளிய போ என்றாள்.

பவித்ரன் அசையவில்லை, ஐ லவ் யூ சோ மச் டாலி என்றான் கண்களில் காதலைத்தேக்கி, இப்படி வேஷம் போட வேண்டாம். உங்க உண்மையான முகத்த பாத்த பின்னாடி இன்னும் உங்கள நம்பினா, ஐம் த ஃபூள் கெட் லாஸ்ட் என எழுந்து அட்டாச்சுடு பாத்ரூமிற்குள் சென்றுவிட்டாள்.
 

Uthaya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரஞ்சனிக்கும் பவித்ரனுக்கும் விமர்சியாக, திருமணம் நடந்தது. சத்யா தேவிக்கு அப்போதுதான் மூச்சு வந்தது. மகனின் குணத்தை உணர்ந்த அவர் அவனை ரஞ்சனியிடம் ஒப்படைத்துவிட்டு, இனிமே இவன நீ தான் பாத்துக்கணும், கண்டிசஷனா வச்சுக்கோ, என கேலிபோல் உறைத்துவிட்டு சென்றார்.

திருமணமானவர்களுக்கு, ஒவ்வொருவராக வாழ்த்து கூறிச்சென்றனர். சிலர் கேலி, சிலர் அறிவுறை என வழங்கிச்செல்ல, மெழுகு பொம்மையாக உணர்ச்சியைக் காட்டாத முகத்தில், கண்களை எட்டாத சிரிப்பில் இருவரும் ஏற்றுக்கொண்டனர்.

பவித்ரன் ஏன் ரஞ்சனி போலீசை அழைக்கவில்லை, குறைந்தது திருமணத்தையும் நிறுத்தவில்லை, ஏன்?? என்ற யோசனையில் நின்றான். அவளோ, எப்போதடா இந்த கூட்டம் ஒழியும் என்ற மனநிலையில், ஒன்றையும் முகத்தில் காட்டாமல் நின்றிருந்தாள். மருந்துக்கும் அவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளவில்லை.

திருமணம் முடிந்து, மறுவீட்டிற்கு அழைத்துவிட்டு விடை பெற்றனர், லதாவும், ராஜனும். அம்மா என்னையும் கூட்டீட்டு போங்க என அழுத ரஞ்சனி ராஜனுக்கு மிகவும் புதிது. அவர் என்னாச்சு ரஞ்சனி, எனி பிராப்ளம் எனவும், தன்னையறியாமல் தன் நாவிலிருந்து வந்த சொல்லை நினைத்து வெட்கினாள். எதையும் ஒரு கை பார்க்க வேண்டும் என தனக்குள் முடிவெடுத்தாள்.

லதா, மகளை தாங்கி பேசினார், என்னங்க அவ பாவம் புது இடத்துல இருக்கப்போறோமேனு ஒரு தவிப்புல சொல்லீட்டா, நீங்க உடனே சர்ஜ் மாதிரி என்ன பிரச்சனைனு கேட்டுட்டு, இப்பத்தான் கல்யாணமே ஆயிருக்கு, என கணவனிடம் கூறியவர், இருவருக்கும் பொதுவாக, ரஞ்சனி கல்யாணம்னு வந்துட்டா எந்த விசயமானாலும் நீங்க சேந்தே முடிவெடுக்கணும், உங்க இரண்டு பேருக்குள்ள இருக்குற எதுவும் வெளில தெரியக்கூடாது, நீங்க இரண்டு பேரும் வளர்ந்த சூழ்நிலை வேறவேற, சில விசயம் ஒருத்தருக்கு சரினு பட்டா மத்தவங்களுக்கு தப்பா தெரியும், நீதான் முதல்ல விட்டு கொடுக்கணும், அப்பறம் தன்னப்போல அவங்களும் விட்டு கொடுப்பாங்க, நல்ல படியா இருமா என மகளுக்கு அறிவுறை வழங்கினார்.

மகளின் தவிப்பான முகத்திலும், வார்த்தைகள் தடுமாற்றத்திலும், யோசித்த ராஜன்,மனைவியை காருக்கு அனுப்பிவிட்டு, மகளை தோள்களில் அரவணைத்தவர், என்னாச்சுடா, எதுனாலும் அப்பாட்ட சொல்லு எனமெதுவாய் கேட்டார்.

லதாவின், ஒரேவிசயம் ஒருவருக்கு சரியானதாகவும், மற்றவருக்கு தவறாகவும் படும் என்ற சொல்லை ஆராய்ந்து பார்த்தவள், பவித்ரனுடன் பேசித்தீர்ப்பது என்ற முடிவிற்கு வந்தவள், ராஜனின் கேள்விக்கு நத்தங் டேட் ஐம்பைன் நோ பிராப்ளம், ஐம் ரஞ்சனி, எந்த பிராப்ளமும் என்ன தொட முடியாது, என தெளிந்த மனதில் கூறினாள்.

இது தான் எனக்கு வேணும், இந்த தைரியந்தான் முக்கியம் என்றவர் லதாவுடன் விடை பெற்று கிளம்பினார்.

மனதில் உண்டான தைரியத்தில் முதலிரவு அறைக்கு பவித்ரனை எதிர் கொள்ளச் சென்றாள்.

பலியாவாளா? பலிகொடுப்பாளா?
 
Top